
நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்
பக்தி என்பதை எதிலும் பொருதலாம். நான் கறி (மட்டன்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் கறி மேல் பக்தி இருக்கின்றது. ஆனால் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன் என்றால் அதன் மேல் பக்தி வருகின்றது. எதை விரும்பிச் சாப்பிடுகிறோமோ அதன் வழி அந்த பக்தி வருகிறது.
இதைப் போன்று தான்
1.ஞானிகளால் காட்டப்பட்டது தான் பக்தி என்பது.
2.அதாவது மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலை ஞானிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.
அரசன் மதங்களாக உருவாக்கினாலும் அதில் பக்தி நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்கச் செய்கின்றது.
பெண்கள் கோலமிடுகின்றார்கள் என்றால் தன் உணர்வைச் செலுத்தி… தவறு இல்லாதபடி எத்தனையோ அழகாக அதைப் போடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கிறார்கள் என்று ஆண்கள் நாம் செய்ய முடியுமா…?
ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொன்றையும் இணைத்து எப்படி அதை அழகுபடுத்துகின்றோமோ அதைப் போல்
1.மனிதனின் வாழ்க்கையில் ஒரு புள்ளி…! ஒரு கோபம் ஒரு வெறுப்பு ஒரு சாந்தம் என்ற நிலையில் எத்தனையோ புள்ளிகள் உண்டு.
2.இதை அனைத்தையும் இணைத்து அலங்காரமாக எடுத்துப் போடுவதற்கு…
3.அதாவது மனதைச் சாந்தப்படுத்திப் பொறுமைப்படுத்தி பக்தி கொண்டு கோலமிடுவது என்ற அந்த நிலை.
அதே போல்… பொதுவாக மார்கழி மாதம் எடுத்துக் கொண்டால் அதிகாலையில் சூரிய ஒளிக்கு முன் எழுந்து உடலைத் தூய்மைப்படுத்தி
1.வீட்டு வாசலை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம்.
2.ஆக… வீட்டையும் அதன் வாசலையும் மட்டும் தூய்மை செய்வதல்ல
3.நமது வீடு உடல்… நமது வாசல் என்பது ஆன்மா…!
4.இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்… இது பக்தி…!
உடலைத் தூய்மைப்படுத்துவது போல நம் உணர்வுகளை எண்ணங்களை மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
வீட்டு வாசலைத் தூய்மைப்படுத்துவது போன்று
1.மற்றவர்கள் தீமையான செயல்களை நமக்குச் செய்தாலும்
2.அந்தத் தீமை தனக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.நம் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4.பக்தி என்பது இது தான்…!
ஏனென்றால் இதை எல்லாம் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இது தான்.
அதனால் தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி (ஆன்மாவைச் சுத்தம்) செய்யச் சொல்கிறோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.