
அருள் வாழ்க்கை வாழ்வீர்கள்
சில உடல்களில் சில ஆன்மாக்கள் இருக்கும்… எதிர் நிலையாக அது இயங்கும். தியானத்தில் அமர்ந்தால் செய்ய விடாது. இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகளை அந்த ஆன்மாக்களுக்கு இணைக்கப்படும் பொழுது நன்மை செய்யும் சக்தியாக மாறும்.
ஆனால்
1.அப்படியே விட்டுவிட்டால் குடும்பப் பற்றை இழக்கச் செய்து விடும்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.
2.குடும்பப் பற்றை இழந்த ஆன்மாக்கள் தான் இன்னொரு உடலுக்குள் வந்தால் அதே உணர்வை இயக்கும்.
எந்த உடலிலிருந்து இயக்கியதோ அவர்களைக் குற்றவாளியாக ஆக்கிடாது குற்றத்திலிருந்து மாற்றிட அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தொடர்ந்து எடுக்க எடுக்க அந்த ஆன்மாக்களுக்கு அது கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்க… அந்தத் தீமைகளிலிருந்து நாம் விடுபடலாம்.
அந்த ஒரு பக்குவத்திற்கு வர வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அருள் வாழ்க்கை வாழ்வீர்கள். அனைவரையும் அருள் வாழ்க்கை வாழச் செய்யும் அந்தச் சக்தி உங்களிடம் பெருகும். உங்கள் பார்வையால் அனைவரும் நலம் பெறுவார்கள்.
1.அனைவரும் ஆனந்தப்படும் அந்த நிலையை நீங்களும் கண்டு உங்கள் உடலில் ஆனந்தம் என்ற பேரானந்த நிலையைப் பெறுங்கள்.
2.பல நிலையில் ஆனந்தப்படும் பொழுது பேரானந்தம் வருகின்றது.
3.ஒருவர் என்ற நிலையில் ஆனந்தம் வருகின்றது… அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றால் பேரானந்தமாகின்றது
4.உங்கள் பார்வையில் அனைவரும் நலம் பெற வேண்டும்
5.அதை கண்டு நீங்கள் பேரானந்தப்படும் நிலைக்கு வர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நோயாக இருக்கிறது என்று என்னிடம் கேட்காதீர்கள். என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் அந்த அருள் வேண்டும் தொழில்கள் வளம் பெற வேண்டும் எங்களுக்கு வரவேண்டிய பாக்கி வர வேண்டும்… அதற்கு அந்த அருள் வேண்டும் என்று இப்படிக் கேட்டுப் பாருங்கள்.
இந்த உயர்ந்த நிலைகள் வர வர தன்னாலே அந்தப் பணங்கள் வந்து சேரும். பார்க்கலாம். உங்கள் எண்ணம் அவர்களை உயர்த்தும்… வருவாயை உயர்த்தும். பணத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஊட்டும்.
சிறிது கால தாமதமாகும்.
ஆனால் அவசரப்பட்டு ஆத்திரப்பட்டோம் என்றால் வருவதையும் தடுத்து நிறுத்திவிடும். சங்கடப்பட்டால் அவர்களுக்கும் அதே நிலையினை இயக்கி விடும். அவர்களுக்கும் வருமானம் வராது… நமக்கும் வராது.
ஏனென்றால் கொடுக்க முடியவில்லை என்று எண்ணும் போது அங்கே சங்கடம்
இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அவர்களுக்கு வரவு வரும் நமக்கு கொடுப்பார்கள் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நொடியிலும் பிறருடைய குறைகளை எண்ணாது அவர்கள் நிறைவு பெறுவர் நமக்கு வருமானம் வரும் என்று
1.நிறைவான உணர்வை எடுத்தால் நிறைவான உணர்வாக வழி அமைக்கின்றது.
2.நம் சொல்லைக் கேட்போர் நிலைகள் நிறைவான மனங்களாக வருகின்றது.
3.வாழ்க்கையில் மகிழும் உணர்வுகளே அங்கே இயக்கத் தொடங்குகிறது.
ஆகவே அருள் வாழ்க்கை வாழ்வோம். பேரானந்தம் பெற்று ஏகாந்த நிலை என்று ஏகாதசி என்ற பத்தாவது நிலைகளை நாம் அடைவோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான் சிஷ்யன்”
மனிதனின் நெற்றியும்… நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்… சிருஷ்டியையே… சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு “அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்…!”
“மகரிஷிகளின் சர்வோதய சக்தி” வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்… தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது… உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் “கர்ம தியாகம்” என்ற சூட்சமம் உள்ளது.
சூரியனை எண்ணி ஈர்த்திடும்… “ஓர் ஜெப மந்திரம் – கர்ண முறை வழி” என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.
3.இருந்தாலும் “இதை வெளியில் உரைத்திடாதே…!” என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.
ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை “உலகறிய உரைத்தான்…”
ஆசான் கனன்று எழுந்து… அடா… என்ன காரியம் செய்தாய்…! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே… ஏன்…? என்று கேட்கின்றார்.
சீடனோ… “கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்” என உரைத்த ஆசானே…!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்…
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் “ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்…” என்ற எண்ணத்தை
3.இதோ…! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் “கர்ம தியாகம்” உள்ளன்புடன் உவந்த எனக்கு “என் நிலை செய்வதாகிலும் ஆகுக…! என்றே உரைத்திட்டான்.
அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.
அதே சமயத்தில்… மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே…!
நுணுகி ஆய்வு செய்திடும் சிந்தனையின் வளர்ச்சி… பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு “மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்…”
நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் “கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே…!” என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்… வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்… பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.
1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்
இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.
இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.
ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.
நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.
வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.
ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.
நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.
அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)
மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.
அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”
கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.
தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.
அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.
கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.
அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்குத் தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது
1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.
இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம்… காய்கறிகளை எல்லாம் வேக வைக்கின்றோம் வேக வைத்துத் தான் உணவாக உட்கொள்கிறோம். வேக வைத்து விட்டால் அந்தக் காய்கள் மீண்டும் முளைப்பதில்லை.
இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் தீமைகள் வந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடனடியாகச் சேர்த்து
2.அந்தத் தீமைகளைப் பலவீனப்படுத்திப் பழகுதல் வேண்டும்
இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான்…! என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
எத்தனையோ கோபம் ஆத்திரம் குரோதம் வெறுப்பு பயம் வேதனை இவைகளெல்லாம் நாம் அன்றாடம் சந்திக்க நேர்கிறது. இதற்கு வாலி என்று பெயர்.
அத்தகைய குணங்கள் நமக்குள் வந்த பின் அதனுடைய வலிமையைக் காட்டிவிடும்… அப்போது நம் நல்ல குணங்கள் செயல் இழந்துவிடும்.
எப்படி…?
சந்தோஷமாகத் தான் நாம் இருப்போம்… ஆனால் வேதனைப்படும் செயல்களைப் பார்த்து விட்டால் அந்தச் சந்தோஷம் அங்கே இழக்கப்படுகின்றது.
அதே போல் ஒரு கோபப்படுவரைப் பார்த்தவுடன் அந்தச் சந்தோஷம் மாறி அது வாலியாகி அதனின் உணர்வாக நம்மை மாற்றிவிடுகிறது.
இராமன் குகை மேல் இருக்கக்கூடிய பாறையை அம்பால் எய்து அந்த வாலி வெளியே வராதபடி அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான். அப்போது வாலியின் செயல்கள் தடுக்கப்படுகின்றது.
ஆகவே… நம் வாழ்க்கையில் தீமை வந்தால்
1.நமது எண்ணத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து தீமையான உணர்வை அடைத்துப் பழகுதல் வேண்டும்.
உயிரிலே பட்டால் தான் இயக்கும்.
உதாரணமாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்… காற்றடிகிறது. தவறிப்போய் அந்த நெருப்பிலே ஒரு மிளகாய் விழுந்தால் என்ன செய்யும்…?
1.நெருப்பிலே பட்டபின் நெடி வரத்தான் செய்யும்
2.நம்மை அறியாமலே தும்மலும் வரத்தான் செய்யும்.
அதைப் போன்றுதான்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டால் அது அதனின் உணர்ச்சிகளை ஊட்டியேவிடும்.
2.தீமையான உணர்வுகள் பட்டால் அதை உயிர் இயக்கிவிடும்…
3.தெரியாமல் பட்டாலும் அதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டுமா இல்லையா…?
அதற்குத்தான் அவ்வப்பொழுது உங்களுக்குத் தியானப் பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.
தீமை என்று பார்த்தாலும் நாம் அதை நுகர்கின்றோம்… நுகர்ந்த பின் அதை அறியவும் முடிகின்றது. அறிந்தாலும் உயிரிலே பட்டு உடலுக்குள் சென்றால் கடுமையாகும்.
குழம்பிலே அளவுடன் மிளகாயைப் போட்டால் ருசியாக இருக்கின்றது காரம் அதிகமாகி விட்டால் அதனுடைய உணர்ச்சிகளைத் தூண்டுகிறது… எரிச்சலாகிறது.
இதைப் போன்று தான் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் கோபமோ குரோதமோ வெறுப்போ பயமோ வேதனையோ உயிரிலே பட்ட பின் அறிந்து கொள்கின்றோம்.
அறிந்தாலும்…
1.உடனே அடுத்த கணம் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இடைமறித்து அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.
3.புருவ மத்தி வழி கூடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இழுக்க வேண்டும்… உயிர் வழி…! (இது முக்கியமானது),
இவ்வாறு தீமைகளை அடைத்துப் பழகுதல் வேண்டும் ஏனென்றால் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டுத் தான் இந்த உணர்ச்சிகள் உடலுக்குள் செல்லும்.
ஆனால் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து… உயிருடன் ஒன்றி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதன் வழி இழுத்தால்
2.அங்கே புருவ மத்தியில் வலு கூடுகின்றது
3.அடுத்து அதே நினைவினைக் கண்களை மூடி உடலுக்குள் செலுத்தினால் மிகவும் ஆற்றல்மிக்கதாக மாறுகிறது.
கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் நாம் செலுத்த வேண்டியது:-
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
2.எங்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும்
3.எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
4.எங்கள் நரம்புகள் முழுவதிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள்ளும் ஊனை உருவாக்கிய அணுக்களுக்குள்ளும்ம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று
6.”ஒரு நொடிக்குள்…” இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி விட்டால்
7.நாம் நுகர்ந்தறிந்த தீமை உடலுக்குள் அணுவாக உருவாவதற்கு முன் இது மாற்றிக் கொண்டு வருகிறது.
நண்பனாகப் பழகுகிறோம்…! இருந்தாலும் சந்தர்ப்பத்தில் பகைமையாகி விடுகிறது. திடீரென்று அந்த நண்பன் நினைவு வந்தது என்றால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் “துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் உருப்பட மாட்டன்,,,!” என்று நம் கண்ணின் நினைவைப் பாய்ச்சினால் அது உடனடியாகப் போய் அவனைத் தாக்குகிறது.
அதே போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எண்ணி எடுத்து
2.நம் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் அதைப் பாய்ச்சி விட்டால்
3.அதாவது தீமையை நுகர்ந்த அந்தச் சந்தர்ப்பத்திலேயே இதைப் பெருக்கி விட்டால்
4.விஷமான உணர்வுகளையோ தீமையான உணர்வுகளையோ வெளியிலிருந்து அது இழுக்கும் சக்தி குறையும்
5.உடலுக்குள் அத்தகைய அணுக்கள் இருந்தாலும் அதற்குண்டான ஆகாரம் கிடைக்காதபடி தடையாகும்
6.புறத்திலே குழம்பை நாம் சுவையாக்கிக் கொண்டு வந்தது போன்று சுவை மிக்க உணர்வாக நமக்குள் படைக்க முடியும்.
செய்து பாருங்கள்…!


புருவ மத்தியில் உயர்ஞான நற்குணங்கள் மோதினால் “மனிதன் சிருஷ்டிக்கும் பிரம்மன்”
சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்
1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்…
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.
உலகோதய நிலை நாடிடும் மனிதன்… நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து… சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது… சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் “ஓம்” பொருள் என்னும்… ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் “தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை…”
வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்… அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் “சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்…” தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.
பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்… “பிரம்மாவைச் சிறை பிடித்தான்…!” என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.
நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்… அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட… அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.
1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி “உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்…”
அத்தகைய சிருஷ்டி அன்றி “சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட…” உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே “நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்…”
1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்…!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட “நீல வண்ணம்” காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.
பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.
சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு “சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக”
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.
பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை… சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி… உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.
அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2.”சூல்” என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.
ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்… “அறுகோணங்கள்” உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் “பிறப்பின் இரகசியங்கள்” எனவும்… அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.
அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு… வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்… அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்… பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்… உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.
ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே… உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் “அதுவும் தியானம் கொண்டே…”
சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் “இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு… பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்… முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என…” – சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் “சித்தர்களால் கட்டப்பட்டதே…”
ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்… ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு “சோமாஸ் ஸ்கந்தன்” (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.
சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி… அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை… ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது…
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி… சுடர்தலால் “மனிதனே சிருஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்…”

பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மை பெற முடியும்
அகஸ்தியன் தன் வாழ்நாளில் தாய் கருவிலே வளரும் பொழுதே நஞ்சினை வென்றிடும் உணர்வினைப் பெற்று… பிறந்து வளரும் பொழுது அதே ஆற்றலை வளர்த்து அவன் வாழ்நாளில் அனைத்து அறிவினையும் அறிந்திடும் உணர்வு பெற்றவன்.
1.அகஸ்தியன் அவனது வாழ்க்கையில் சர்வ ஞானமும் பெற்று
2.அதன் வழி கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் துருவனாகி துருவ மகரிஷியான அந்த உணர்வுகள் அனைத்தும் எதை உற்று நோக்கியதோ
3.அந்த உணர்வின் துணை கொண்டு அங்கே நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்த்தும் வளர்ந்து கொண்டுள்ளான்.
அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் உணர்வுகளை நுகர்ந்தவர்கள் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
நாம் நமது வாழ்க்கையில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த உணர்வுகள் நம் உடலில் கலந்து இருப்பினும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உடலுக்குள் செலுத்தி அந்த நஞ்சான உணர்வை மாற்றி
2.அனைத்தையும் அறிந்திடும் அறிவென்ற உணர்வினை நமக்குள் வளர்த்து
3.இந்த வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வந்தாலும் அதனைச் சமப்படுத்தி
4.நமது உடலில் ஒளி உணர்வைக் கூட்டும் சக்தி பெறச் செய்யும் நிலையே நாம் எடுக்கும் தியானம்.
27 நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் சக்திகள்… ஒரு நட்சத்திரத்திற்கும் ஒரு நட்சத்திரத்திற்கும் எதிர்மறையாக மோதும் பொழுது தான் மின்னல்கள் வருகின்றது.
இந்த மின்னல் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அந்த மின் அலைகள் வெகு தூரம் பரவுகின்றது.
1.அப்படி வரக்கூடிய உணர்வுகளை அகஸ்தியன் நுகர்ந்தறிந்து தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஒளிமயமாக ஆக்கிக் கொண்டான்.
2.அதன் வழி தான் விண்ணுலகை உற்று நோக்கி உணர்வை ஒளியாக மாற்றி
3.துருவத்தின் வழி வரும் உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது.
அந்த உணர்வை நமக்குள் பெற்றால் இந்த 27 நட்சத்திரங்களும் எதிர்நிலை கொண்டு அது மின்னலாக மாறும்பொழுது ஒளிக் கற்றைகள் பரவுவதை…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு நமக்குள் இருப்பதனால்
2.அதை எளிதில் நம் உடலுக்குள் கலந்து எல்லா அணுக்களுக்கும் அதைக் கொடுக்க முடிகின்றது.
உதாரணமாக… வேதனைப்பட்ட ஒரு மனிதனின் உணர்வை நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்தால் அவன் நினைவு வரும் பொழுதெல்லாம் அதே வேதனை உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
இதைப் போன்று 27 நட்சத்திரங்களும் இந்தப் பிரபஞ்சத்திற்குப் பல உணர்வுகளை இயக்கக்கூடிய சக்தி பெற்றது. 27 நட்சத்திரங்களின் இணை சேர்த்த உணர்வு கொண்டுதான் ஒவ்வொரு உயிரும் அந்த உணர்வினை அணுக்களுக்குள் சேர்த்தது தான் அணுத் துகள்களும்.
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு நமது வாழ்நாளில் அதைத் தியானித்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த வலுவை நமக்குள் பெற்ற பின்
1.உடலை விட்டுச் சென்றால் அங்கே அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் தான் நமது உயிரான்மா நிலைகொள்ளும்.
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விட்டு என்றும் நிலையான சரீரமாக முழுமை பெறும்.
இந்தச் சூரிய குடும்பமே… சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் அனைத்தும் என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு வேகா நிலை அடைந்தது.
1.அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றி அகண்ட பேரண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லும் உணர்வின் சக்தி வருகின்றது
2.சூரியன் அழிந்து விட்டால் அதனின் பிடிப்பை அறுத்து ஏகாந்த நிலை கொண்டு
3.எதனையும் இருந்த இடத்திலிருந்து கவர்வதும் பேரண்டத்தில் எங்கும் சுழலும் தன்மையும் பெற முடியும்.
இப்படிப்பட்ட சூரியக் குடும்பங்கள் பேரண்டத்தில் எண்ணிலடங்காது உண்டு.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.
1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.
வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்துக் கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.
நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.
கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.
எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.
பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.
கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.
அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.
நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.
துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.
அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.
எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”
நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.
ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.
அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.
நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.
உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது
நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.
எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.
ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.
இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். வெறும் ஞான வித்து அல்ல… அருள் ஞான வித்து…!
இருளை நீக்கும் அருள் ஞான வித்தை… இருளை நீக்கிட்ட அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். உங்கள் மனதில் தான் இனி அதை வளர்த்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது,
1.இந்த உலகில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது…
2.எந்த நிமிடத்தில் இனி எது வேண்டுமென்றாலும் நிகழலாம்
3.உலகம் எப்படி இருக்கும்…! என்றும் சொல்ல முடியாது
4.மனிதன் சிந்தனையுடன் இருப்பானா என்பது கேள்விக்குறிதான்…!
5.அதற்குள் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வழி வாழ வேண்டும் என்று உங்கள் மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
6.எந்த நிமிடம் எதுவானாலும் உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ்வோம்.
7.”பிறவி இல்லா நிலை அடைவோம்…!” என்ற உணர்வுகளுக்கு நீங்கள் திரும்பி ஆக வேண்டும்.
8.ஆகவே உடல் பற்று வைக்காதீர்கள்.
9.யாம் சொல்லும் உணர்வின் தன்மையை உயிரிலே வளர்க்கப்படும் போது உடலைக் காக்கும் உணர்வுகள் தன்னிச்சையாக வரும்
10.அது இல்லை என்றால் உடலை காக்க முடியாது…!
11.காப்பதாக எண்ணுவோம்… ஆனால் வேதனை கொண்டு உடலை அழித்துக் கொண்டுதான் இருப்போம்
12.தன்னைப் பாதுகாக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்
ஆகையினால் இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மெய் ஞானத்தை வளர்க்கும் அருள் சக்தியைப் பெறுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.
எங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக ஆக வேண்டும். என் கணவர் உயர்ந்தவராக வரவேண்டும்… என் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்திடும் பண்புகள் வளர வேண்டும்… அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அறியாது சேர்ந்த பகைமைகளை மாற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்.
நீங்கள் எண்ணியவுடனே அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரை இதை ஞான வித்தாகப் பதிவாக்குகின்றோம்.
காரணம்…
1.படிக்காதபடி ஒன்றும் செய்ய முடியாது…
2.ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் தானே எடுக்க முடியும்
3.ஆசிரியர் சொல்லத் தவறி விட்டால் தவறாகத்தான் போய்விடும்.
நம் குருநாதர் நமக்குத் தெளிவாக காட்டிய வழிப்படித் தான் உங்களுக்கு இதை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு). உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை ஆலயமாக மதிக்கின்றேன். மனித உடலை உருவாக்கிய அரும் பெரும் சக்தி கொண்ட ஞான சக்தியான தெய்வங்களை மதிக்கின்றேன். உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.
என்றுமே இந்த உணர்வுகளை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியது இறையாகி… இறையின் உணர்வு செயலாகும் போது… அதுவே உங்களில் தெய்வமாகிறது.
ஆகவே…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் இறையாகி அதனின் உணர்வு தெய்வமாகி
2.இருளை நீக்கிடும் சக்தியாக உணர்வின் ஒளியாகி பிறவி இல்லா நிலை அடைவீர்கள்…!


நம் குலதெய்வங்கள் “சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து விட்டார்களா…?” என்று சந்தேகப்பட வேண்டியதில்லை
கூட்டுத் தியானத்தின் மூலம் அவரவர்கள் குடும்பத்தைச் சார்ந்த குலதெய்வங்களை உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களை இன்று விண் செலுத்தினோம்…
1.அவர்கள் அனைவரும் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து விட்டார்கள்.
2.ஆனால் இணைந்து விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் சந்தேகப்பட வேண்டாம்.
துருவ தியானம் முடிந்தபின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெருவீடு பெருநிலை என்ற நிலை அடைந்திட வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
1.அந்த ஆன்மாக்கள் ஒளியின் சரீரமாக “சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்ததை” நீங்களும் காணலாம்.
2.ஒரு 48 நாட்களுக்குத் தொடர்ந்து இதைச் சீராகச் செய்து வாருங்கள்.
3.சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் பேரருளைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
அவர்கள் முன் செல்ல அந்த உணர்வின் தன்மை நமக்குள் இணைந்து வருகின்றது.
சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட்டால் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடுகின்றது. கரைந்து விட்டால் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து மாற்றிவிடும்.
உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவுகள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் இணைந்ததால்
1.அதிலிருந்து வரும் உணர்வினை உணவாக உட்கொண்டு
2.ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் வாழத் தொடங்குகின்றனர் நம் முன்னோர்கள்.
ஆகவே நாம் இதை முழுமைப்படுத்தி உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைதல் வேண்டும். நம்முடைய முன்னோர்களை இப்படி அனுப்பினால் நமக்கும் நலம் பெறும் சக்தி கிடைக்கும்.
நண்பர்கள் உடலைப் விட்டுப் பிரிந்திருந்தால் துருவ தியானத்தில் இருந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை முதலில் நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
அவர் உடலில் நோயோ மற்ற துன்பங்கள் இருப்பினும் இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருந்தால் அது நமக்குள் வளராது தடுக்கக் காலை துருவ தியானங்களில் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விட வேண்டும் என்று எண்ணினால்
2.அவருடைய உணர்வுகள் நமக்குள் வளராது அவர்களும் சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றனர்.
3.அவர்களும் பிறவி இல்லாத நிலை அடைகின்றனர்.
மனிதர்கள் நாம் தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.

உயிராத்மாவில் பேதங்கள் நீங்கிட வேண்டும்
“சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்” வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்… சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் “காளியின் தாசன்” ஆயினர்.
1.”ஓர் தாயின் இரு குழந்தைகள்” என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.
எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று… அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.
மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்…
1.”சுவாச கதியினால்”
2.இந்த பூமியில் மாத்திரமன்று…! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.
தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது… ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்… தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.
வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை… அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.
வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட… மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.
வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்… கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட… பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.
பின் அவன் வினா எழுப்பினான்…
1.அம்மணி…! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று… தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட “அகப்பொருளைக் காக்கின்றது…”
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்… தன் உணர்வும் கொண்டு… “மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது…”
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் “இடை புகுவோர் பெறுவது என்ன…?”
திரை மறைவில் “ஆ…!” என்ற குரல் எழுந்தது.
வேதாந்த நாதன்… தோழிப் பெண்ணே…! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்… ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.
நிலைமையின் நிகழ்வு… விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து… பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.
ஒரு பொருள் நிறைந்த அங்காடி… அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக… அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்… அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்… “செயல் ஒன்றே…”
1.அங்காடியே – இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் – ஆத்ம நிலை…
3.உணர்வுகளின் வழி – உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் – செயல் கொண்டிடும் குணங்கள்.
ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்…! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.
வேதாந்த நாதன்…
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் “ஆத்மாவும்… உயிரும்” சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு “தாய் என்று கூறுவது – பேரருள் சூட்சமம்” என்றான்.
உடனே விசாலவதி தேவி… மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ… அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.
ஞானம் இடை புகுந்தவர் யார்…? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.
அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி… ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு – உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.
இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். “மங்கள நாண்” பூட்டிடும் விழா எழுந்தது.
தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.
அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி… நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே “காளிதாசனாக” வழி காட்டினான்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு நெருப்பில் நாம் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அந்த மணம் தான் வரும். நறுமணம் உள்ளதை நெருப்பிலே போட்டால்… அதை நுகர்ந்தால் நமக்கு ஆனந்தம் வரும்.
1.நாம் உடுத்திய உடையை அந்த நெருப்பிலே போட்டால்
2.“மனித உணர்வுடன் கலந்து…” இந்தக் கருகிய மணம் வரும்.
ஒரு மனிதன் சட்டையைப் போட்டிருக்கும் போது அவன் நல்ல மனிதனாக இருந்தால் அதைக் கழட்டி நெருப்பில் போட்டுப் பாருங்கள்.
1.கெட்ட நெடி… அந்தக் கருகிய வாசனை வராது
2.நல்ல வாசனைகள் தான் வரும்.
சந்தேகம் இருந்தால் ஒன்றை நீங்கள் பரீட்சித்துப் பார்க்கலாம்.
ஒரு மணி நேரம் நீங்கள் கோபமாக இருந்து பாருங்கள். அதற்குப் பின் நீங்கள் அணிந்திருக்கும் சட்டையை நீங்களே முகர்ந்து பாருங்கள் அதில் நெடி நிச்சயம் வரும்.
1.ஏனென்றால் நாம் எதை நுகர்கின்றோமோ
2.அதுவே உள் நின்று… அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.
உதாரணமாக… மிளகாயை நெருப்பிலே போட்டால் என்ன செய்கின்றது…?
இத்தனை பேர் இங்கே கூடி இருக்கின்றோம் பக்கத்திலே சிறிது தூரத்தில் மிளகாயை அடுப்பிலே போட்டு வறுக்கிறார்கள் என்றால்… அந்தக் காற்று இந்தப் பக்கமாக அடித்தால் அது நம் அனைவரையுமே இரும வைத்துவிடும்.
நெருப்பிலே படும் இந்த உணர்வுகள் எதுவோ அதுதான் நம்மை இயக்கும்.
ஆனால் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நாம் ஏன் இரும வேண்டும்…?
1.எவ்வளவு பெரிய பக்திமானாக இருந்தாலும்
2.எவ்வளவு சக்திசாலியாக இருந்தாலும்
3.பிறருக்குத் தர்மத்தை செய்தாலும்
4.நல்ல உடல் வலிமை பெற்றவராக இருந்தாலும்
5.இந்த நெடி அந்த வலு உள்ளவர்களையும் இயக்கிவிடும்… அவர்களால் அதைத் தாங்க முடியாது.
அப்பொழுது இதை யார் இயக்குவது…? நமது உயிர்…!
அதனால் தான் நாம் அறிந்து கொள்வதற்கு உடலான அரங்கத்திற்குள் நம் உயிரிலே மோதினால் “அரங்கநாதன்…” என்று ஞானிகள் காட்டியுள்ளனர்.
1.எதன் உணர்வுகள் உயிரிலே படுகின்றதோ…
2.உணர்ச்சிகள் நம் உடலிலே பரவப்படும் பொழுது அரங்கநாதனாக மாறுகின்றது.
மிளகாய்த் தூளை நெருப்பில் போட்டால்… நீங்கள் அதை நுகர்ந்தால் உங்களை எது ஆட்சி புரிகின்றது…? அந்த நெடிதான் உங்களை ஆட்சி புரிகின்றது.
இதைப் போன்று தான் நீங்கள் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டால் அரங்கநாதன்… அந்தக் குணத்திற்குத்தக்க நாதங்கள் உருவாகி இந்த உணர்ச்சிகள் இந்த உடலை ஆளுகின்றது… ஆண்டாள்…!
யார் ஆள்வது…? நீங்கள் நுகர்ந்த உணர்ச்சிகள் தான் உங்களை ஆளுகின்றது. இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் சொன்ன முறைப்படி இமயமலையிலே நான் (ஞானகுரு) சென்று கொண்டிருந்தேன். அங்கே பனிப்பாறையைக் கடந்து செல்லும் பொழுது அந்தப் பாதை திடீரென்று இடிந்து விழுந்து விட்டது.
அந்த நேரத்தில் குருநாதர் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சொல்லிக் கொடுத்த அத்தனையும் மறந்து விட்டேன். மரணம் அடையும் நிலையே ஏற்பட்டு விட்டது. என் மனைவி மக்களை எல்லாம் எண்னத் தொடங்கிவிட்டேன்.
குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…
1.பனிப்பாறைகள் நொறுங்கிய பின் திரும்ப எப்படிப் போவது…? என்று பயந்தாய்…
2.உனக்குள் புயலே வந்து விட்டது… தலை சுற்ற ஆரம்பித்து விட்டது
3.உன்னுடன் இணைந்த மனைவி மக்கள் எல்லோரையும் எண்ணத் தொடங்கி விட்டாய்.
அவர்களை எண்ணும்போது இந்தப் பனியின் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை நீ மரணம் அடையும் நிலைக்கு வந்து விட்டாய்… இப்போது நீ யாரைக் காக்கப் போகின்றாய்…? என்று கேட்டார் குருநாதர்.
ஆகவே மனமே இனியாகிலும் மயங்காதே…! இந்த மனித வாழ்க்கையில் நீ தயங்காதே..
1.இந்த உடல் ஆசையை நீ வைக்காதே
2.எது நடக்க வேண்டுமோ அது நடக்கும்
3.ஆனால் நடக்காது தடுப்பதற்கு உனக்குள் சக்தி கொடுத்துள்ளேன்.
அதை எண்ணி எடுக்காதபடி… இந்த உடல் இச்சையை நீ பட்டு விட்டால்… “என் குழந்தை… என் பிள்ளைகள்… என் மனைவி…!” என்று நீ எண்ணினால் இந்த உணர்வின் இச்சைப்பட்டு… உடலை விட்டு நீ கீழே வந்து விடுகின்றாய்.
உன் குழந்தையின் ஈர்ப்பிற்குள் போகின்றாய்… அல்லது மனைவியின் ஈர்ப்புக்குள் தான் செல்ல முடியும். அந்தக் குழந்தையையும் மனைவியையும் நிம்மதியாக இருக்க வைக்க முடியுமா…?
“நீ இறந்து விடுகின்றாய்…” என்று வைத்துக் கொள்வோம். தன்னைக் காத்தவர் என்று ஆசையுடன் அவர்கள் ஏங்கி இருக்கப்படும் பொழுது அவர் உடலுக்குள் எளிதில் புகுந்து அவர்களையும் திருந்தி வாழ முடியாத நிலைகள் கொண்டு அனாதையாக்கி… நோயாக்கி விடுகின்றாய்.
1.உன்னை நம்பிய அனைவருக்கும் நீ பட்ட வேதனைகளை உருவாக்கி
2.துரித நிலையில் அவர்களும் மடியும் தன்மையை நீ உருவாக்குகின்றாய்.
3.அந்த வேதனையைத்தான் உன்னால் அங்கே உருவாக்க முடியும் அவர்களைக் காக்க முடியாது.
ஆகவே நீ எண்ணிய உணர்வுகள் அவர்கள் உணர்வுடன் நீ மடிந்தாலும் அவர்கள் உடலுக்குள் தான் செல்கின்றாய். அவர்களையும் அழித்து விடுகின்றாய்.
அந்த உடலுக்குப் பின் எந்த வேதனையும் துயரத்தையும் பட்டாயோ இந்த உயிர் அதற்குத்தக்க உடலுக்குள் அழைத்துச் சென்றுவிடும். இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்… அடுத்து நீ எங்கே போகின்றாய்…? என்று தெரியுமா…!
நீ எந்த வேதனை என்ற உணர்வை எடுத்தாயோ… அந்த விஷத்தையே தனக்குள் ஜீரணித்துத் தன் உடலைப் பாதுகாக்கும் கொள்ளும் அத்தகைய உயிரினங்களுக்குள் அழைத்துச் சென்று உயிர் அதற்குத் தக்க உடலை அங்கே உருவாக்கிவிடும்.
இதனை அனுபவபூர்வமாகக் காட்சியாகவே குருநாதர் காட்டுகின்றார்.
அதற்குப் பின் அங்கிருந்து டெல்லி வந்து… சென்னைக்கு விமானத்தில் திரும்பும் போது… குருநாதர் இன்னொரு அனுபவத்தையும் கொடுக்கின்றார்.
விமானத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று எதிர்மறையான காற்று மண்டலத்திற்குள் செல்லும் போது “விமானம் கவிழும்…” சந்தர்ப்பம் ஏற்பட்டது.
விமானி முதற்கொண்டு மற்றவர்கள் எல்லாருமே பயந்து கதிகலங்கி விட்டார்கள். நான் மட்டும் அசையாமல் உட்கார்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தேன்.
குருநாதர் அங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றார்.
மற்றவர்கள் எல்லாம் பயந்தார்கள்… நீ ஏன் பயப்படவில்லை…?
1.உடலின் இச்சையை நீ படவில்லை… நீ உயிரின் இச்சைப்பட்டாய்.
2.உயிர் ஒளியானது.. அறிவின் தன்மை ஆனது.
3.அதே அறிவின் தன்மை நீ அச்சமில்லாது இருப்பதனால் உனது சக்தியும் சேரலாம் என்று சொல்கிறார்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு நொடிக்குள் எடுத்து அங்கே செலுத்துகின்றாய்… அவர்களையும் காக்கின்றாய்… உன்னையும் காத்துக் கொண்டாய்…!
அத்தனை பேரிலும் ஒருவன் நீ எண்ணிச் செயல்பட்டதால் “இது உனக்குள் இருக்கக்கூடிய வலு…” என்று சொல்கின்றார். இப்படிக் காக்கப்பட்ட விமானங்கள் எத்தனையோ…! என்று விமானத்தில் வைத்து குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.
இருந்தாலும்… எல்லோரும் ஒரு நாள் இந்த உடலை விட்டுச் செல்பவர்கள் தான்…! இதிலே யாரும் தப்புவதில்லை.
இன்று நாட்டுக்கே அரசனாக இருந்தாலும் சரி… மகான் என்று மக்கள் மத்தியிலே அவரைப் போற்றிக் கொண்டிருந்தாலும் சரி…
1.இந்த உடலின் விதி முடிந்து விட்டால்..
2.எதனுடைய அழுத்தம் அதிகமாகின்றதோ இந்த உடல் போய்த்தான் ஆகும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் அதிகரித்து விட்டால் இந்த மனித உடல் என்ற இச்சையிலிருந்து விடுபட்டு… உணர்வுகள் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறுகின்றது.


குலதெய்வங்களை வழிபடும் முறை
மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் நிலை பெறுவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வுகளை அடிக்கடி உங்களைச் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
1.அப்படிச் சேர்த்துக் கொண்டால் வினைக்கு நாயகனாக ஆகி இயக்கி கணங்களுக்கு அதிபதியாகி
2.நஞ்சினை வென்றிட்ட அருள் உணர்வுகள் அவ்வழியில் கணங்களுக்கு அதிபதியாகும் (உடலுக்குள்).
அதிகாலையில் இத்தகைய ஆற்றலைப் பெறும்படி… அந்த உணர்வை நுகரும்படி… அந்த எண்ணங்களை நமக்குள் ஊட்டும்படி… “ஒரு பழக்கம்” வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்குத்தான் உருவ நிலைகளை ஆலயங்களிலே அமைத்து அருவ நிலையில் உயர்ந்த சக்திகளைப் பெற வழி காட்டினார்கள் ஞானிகள்.
இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று ஞானிகள் காட்டிய அந்த வழியினை நாம் எடுத்தால் அந்த உணர்வுகள் ஓ என்று ஜீவணுவாக உருவாகி நம் உடலுக்குள் அதுவே தெய்வமாகின்றது.
1.அந்த உயர்ந்த குணங்கள் நமக்குள் கடவுளாக நின்று பகைமை உணர்வுகளை மாற்றுகின்றது.
2.தெளிந்திடும் மனமும் மகிழ்ந்திடும் உணர்வையும் ஊட்டுகின்றது.
ஒவ்வொரு நொடியிலும் வரும் தீமைகளை நாம் இந்த வாழ்க்கையில் அதை அகற்றிக் கொண்டே வருதல் வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அடிக்கடி வலு சேர்க்க வேண்டும்.
அதிகாலையில் இருந்தே இது போன்ற உணர்வுகளை வரிசையாக எடுத்து எங்கள் தாய் தந்தையருக்கும் முன்னோர்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.எனக்காகப் பட்ட துன்பங்களிலிருந்து என் தாய் தந்தையர் விடுபட வேண்டும்.
2.அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்
3.அவர்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவ வேண்டும்
4.நஞ்சினை வென்றிடும் ஆற்றல் என் தாய் தந்தையர் பெற வேண்டும்.
5.மகரிஷிகளின் அருள் வட்டத்திலே என் தாய் தந்தை இணைந்து வாழ வேண்டும்
6.தெளிந்த மனமும் மகிழ்ந்திடும் மனமும் என் தாய் தந்தையர் பெற வேண்டும் என்று அவரவர்கள் இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
அதற்குப்பின் நம் மூதாதையர்களுக்கு நாம் உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சுதல் வேண்டும். ஏனென்றல் அவர்கள் குல வழியில் தான் நாம் உருவாகி இருக்கின்றோம். மனிதனாக உருவாகியதற்கு காரணமே அவர்கள் தான்.
வீட்டில் பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும்.
1.எங்கள் அன்னை தந்தையையும் எங்களையும் காத்திட எத்தனையோ துன்பங்கள் பட்ட அந்த உணர்வுகள் எல்லாம் அவர்களிடமிருந்து நீங்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என் பாட்டன் பாட்டி வாழ வேண்டும்
3.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்துதல் வேண்டும்.
அவருடைய உணர்வுகள் குல வழியில் நமக்குள் இருக்கப்படும் பொழுது சந்தர்ப்பத்திலே உடலை விட்டு அவர்கள் பிரிய நேர்ந்தால்… அடுத்த கணமே எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்தோமோ அதனின் வலுக் கொண்டு… எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் குலங்களின் தெய்வங்களான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய வேண்டும் என்று அந்த சூட்சும சரீரம் பெற்ற உயிரான்மாக்களை அங்கே அனுப்புதல் வேண்டும்.
நஞ்சு கலந்த உடலை குறுக்கச் செய்து வேதனை என்ற உணர்வுகள் கலந்து அந்த ஆன்மாக்கள் வெளியே சென்றால்… இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்த உணர்வுக்குத் தக்க உடலாக உருவாக்கிவிடும் உயிர்.
இதைப் போன்ற நிலையில் இருந்து அவர்களை மீட்டிட உடலை விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையரின் ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்கச் செய்தால்
1.உடல் பெறும் நஞ்சினைக் கரைத்து விடுகின்றது.
2.நம்மை வாழ வைத்த அந்த உயர்ந்த சக்திகள்… அந்த உயிர்கள் அங்கே நிலைத்திருக்கின்றது.
நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்திடமிருந்து வெளிப்படும் உணர்வைக் கொண்டு அந்த ஆன்மாக்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்த பின் அந்த உணர்வின் துணை கொண்டு அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விடுகின்றது. மூதாதையர்களை அங்கே சேர்த்தல் வேண்டும்.
அவர்கள் முன் சென்றால்… ஒளியின் சரீரமாக ஆன பிற்பாடு அவர் அருளை எளிதில் பெறலாம். நமக்குள் வரும் இருளை அகற்றி ஒளியின் சரீரம் பெறுவது மிகவும் எளிது.
1.அகஸ்தியன் கண்ட அந்த உண்மையின் வழியிலே நாமும் சென்றோம் என்றால்
2.அந்த அருள் வழியைப் பெற்று பேரருளைப் பேரொளியாக மாற்றிவிடும். உடலில் இருக்கும் அனைத்து அணுக்களையும் பேரொளியாக மாற்றிவிடும்.
நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் ஒளியின் தன்மை அடைகின்றது. உயிருடன் ஒன்றி நிலையான ஒளிச்சரீரம் அடைகின்றது.
மனிதன் தான் இதை எல்லாம் செயல்படுத்த முடியும்.

சின் முத்திரை விளக்கம்
வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”
மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா… ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”
1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு…!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.
கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு… வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.
1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.
தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி… “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”
1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க… அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.
மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.
கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி…! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.
மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்… கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து… ஆட்கொண்டிட்டார்.
1.ஒரு கை ஓசையே – பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் – “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்…”
3.“நான்” – என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே – “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து… அந்தப் பொருளை முத்திரையாக… சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.
என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்…! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உயிரியல் தத்துவத்தில் நமது உயிர் நுகர்ந்த உணர்வை அணுக்களாக மாற்றுகிறது. அணுவின் மலம் நம் உடலாகி உணர்வின் அறிவாக நம்மை இயக்கச் செய்கின்றது.
உயிரணுவாகத் தோன்றியதிலிருந்து எத்தனையோ உடல்களைக் கடந்து மனிதனாக வந்த நாம் இன்று விஷத்தன்மை கொண்ட உலகில் வாழ்ந்து கொண்டுள்ளோம்.
1.இந்தப் பிரபஞ்சமே இந்தச் சூரியனே விஷத்தன்மையால்… விஞ்ஞானத்தின் கதிரியக்கத் தன்மையால்
2.சீக்கிரம் அழியப் போகின்றது… திசை மாறப் போகின்றது.
3.வாழும் இந்தக் குறுகிய காலத்தில்… சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்…
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களுக்குள் நல்ல சிந்தனைகள் வரும்
5.கஷ்டங்களை எண்ணாதீர்கள்… உடலில் வேதனையோ நோயோ இருந்தால் அதை மறந்து விடுங்கள்
6.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்று இந்த ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.
வீட்டிலே பூஜை அறையிலையோ அல்லது இருக்கும் மற்ற இடங்களிலோ இது போன்று செயல்படுத்திப் பாருங்கள்.
உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்வதற்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களைக் கேட்டும் படித்தும் வாருங்கள். அடிக்கடி அதை ஞாபகப்படுத்திக் கொண்டே வாருங்கள். அருள் சக்திகள் உங்களுக்குள் நல்ல முறையில் வளர்ச்சி பெறும். தீமைகளை அகற்ற முடியும்.
கஷ்டம் என்ற வார்த்தையைத் தூக்கி எறிந்து விடுங்கள்…!
1.“யார்…” எந்த நிலையில் இருந்தாலும் கூட இந்த உடலுடன் இருப்பவர் யாரும் இல்லை
2.உடலுக்காக வேண்டி வேதனைப் பட வேண்டிய அவசியமும் இல்லை.
3.இந்த உடலிலிருந்து வேதனையை நீக்கிவிட்டு வேதனை நீக்கிடும் அருள் சக்தியைப் பெற்றால் தான்
4.உலகில் வரக்கக்கூடிய விஷத்தன்மைகளை நீக்க முடியும்.
பாம்பு தன் விஷத்தைப் பாய்ச்சிப் பல உயிரினங்களை உணவாக உட்கொண்டு அதிலுள்ள விஷத்தையும் சேர்த்து எப்படி நாகரத்தினமாக மாற்றுகின்றதோ அதே போன்று தான் அகஸ்தியன் அகண்ட அண்டத்தில் வரும் இருளை வென்று… உணர்வை ஒளியாக மாற்றி… ஒளிச் சரீரமாக ஆனான்.
அந்த அகஸ்தியனின் உணர்வுகளை எடுத்து நம் உடலில் வளர்ப்போம்.
1.இனி நமக்கு இந்த உடல் தேவை இல்லை
2.உணர்வின் ஒளியே போதுமானது
3.உயிருடன் ஒன்றி… அவனுடன் அவனாக வாழ்வதே கடைசி நிலை.
அகண்ட அண்டத்தில் எத்தகைய பிரளயங்கள் வந்தாலும் துருவ நட்சத்திரமும் அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் சப்தரிஷி மண்டலமும் அழிவதில்லை.
சூரியன் ஒரு காலம் அழியலாம்… அப்படி அழியும் காலம் வந்துவிட்டது. அழிந்து… இந்தப் பிரபஞ்சத்தில் விஷத்தின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது பூமியில் வாழும் மனிதனின் நிலையும் செயலற்றாக மாறிவிடும்.
“அதற்கு முன் நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைய வேண்டும்…!”

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்… உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்…! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்…
2.உங்களால் நிச்சயம் முடியும்.
நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்… மன வலிமையும் பெறுகின்றீர்கள்… அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.
ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்… அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீகி எப்படிக் கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாகச் சென்று விட்டது தான்.
அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்… சிந்தனைகளை இழக்கச் செய்வதும்… மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.
அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் – காற்றிலே அது உள்ளது.
டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்… அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.
அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.
திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.
அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.
விவேகமும் கிடைக்கும்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.


துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும்
பிறருடன் பற்று கொண்டு தான் நாம் வாழுகின்றோம். ஆனால் அவருடைய சந்தர்ப்பம் நோயாகி விட்டால் அதை நாம் நுகர்ந்து நமக்குள் ஜீவன் கொடுக்காதபடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அருள் வழியைக் கூட்டிப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் யாருடன் அவ்வாறு பழகினோமோ வாழ்க்கையில் அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் சும்மா இருக்க முடியுமா…? மாமனாரோ மாமியாரோ உடல் சரியில்லை என்றால் சும்மா இருக்க முடியுமா…?
1.அந்த உணர்வை நுகர்ந்தே அறிய வேண்டியதிருக்கும்.
2.உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளைத் துடைப்பதற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.
துயரமான நிலைகளைக் கேட்க நேர்ந்தால்
1.அந்தக் கணத்திலேயே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
2.அப்போதே அந்த உடலில் உள்ள நோய் நீங்க வேண்டும் என்று தீமை புகாதபடி செயல்படுத்த வேண்டும்.
இதைத்தான் வாசல் படி மீது அமர்ந்து நர நாராயணன் மடி மீது இரண்யனை வைத்துப் பிளந்தான் என்று சொல்வது.
ஆகவே ஞானிகள் கூறியபடி நினைவை விண்ணிலே செலுத்தி மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுதல் வேண்டும்.
ஏனென்றால் அவன் மனிதனில் தீமைகளை எல்லாம் வென்ற அகஸ்தியன் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
1.அவனிடமிருந்து வெளிப்பட்ட உணர்வுகளைத் தான் பின் வந்தோர் கவர்ந்து
2.நாமெல்லாம் இந்த நிலைகளை அறியும்படி செய்கின்றார்கள் சப்தரிஷிகள்
3.சப்தரிஷி மண்டலங்களாக அவர்கள் வாழ்கின்றார்கள்.
அதையெல்லாம் உணர்த்தும் நிலை தான் விநாயகர் தத்துவம்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மனதில் பதிவாக்கி நினைவை உயிருடன் ஒன்றிப் புருவ மத்தியிலே வைத்து நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிரான ஈசன் அவன் உருவாக்குகின்றான். கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஏங்கித் தியானத்தில் வேண்டும்.
வட மேற்காகத்தான் விநாயகரை வைத்திருப்பார்கள் வடகிழக்காக நாம் அங்கே பார்க்கின்றோம்.
1.வட கிழக்காக நாம் நினைவைச் செலுத்தினால்…
2.துருவ நட்சத்திரத்தின் எல்லை அந்தத் திசையில் இருப்பதால்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்தியினை அந்த பாதையில் பூமி கவர்ந்து வரும் நிலையில் நாம் நுகர்ந்து
4.நமக்குள் இந்த உணர்வினை பதிந்து உடல் உள்ள தீமைகளை அகற்றும் அந்த நிலையை நமக்குள் உருவாக்குகின்றார்கள் ஞானிகள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் பதிவாக்கி… உடலுக்குள் செலுத்தும் படி செய்கின்றார்கள்.
கண்ணிலே உற்று நோக்கி துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி அதைப் பெற வேண்டும் என்று ஏங்கும் பொழுது
1.அதே உணர்வின் தன்மையைப் புருவ மத்தியில் எண்ணி கண்ணின் நினைவை மீண்டும் உடலுக்குள் செலுத்தி
2.உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வினை நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் ஊட்டுதல் வேண்டும்.
கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று இதைத் தெளிவாக்குகின்றார்கள்.
இதையெல்லாம் ஒரு பழக்கமாக நாம் வைத்து அவ்வப்பொழுது வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் எப்பொழுதும் இணைந்திருக்கும்படி
2.நாம் ஒரு பயிற்சியாக செயல்படுத்திக் கொள்தல் வேண்டும்.

காற்றோலம்… வாயோலம்…!
காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.
காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் அன்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.
அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.
நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.
மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”
1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”
ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.
சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.
கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.
இப்பொழுது…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.
சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்
அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை… ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.
ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்… அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ… கேட்கின்றோமோ… அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை… ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்…
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்… பேரருளையும் பெற முடியும்…!
நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்… எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.
இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று… காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.
இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.
வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை… குறைகளைக் காண வேண்டியதில்லை.
சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.
இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.
உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.
யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.
ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.
சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.
துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புது விதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.
துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.


கணவன் மனைவி என்ற நிலை இல்லாது ரிஷித் தன்மை அடைய முடியாது
பூரண நிலவாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்.
1.ஏனென்றால் அதிலே எதுவும் இருள் சூழாது… எதுவும் அதை அடக்கிட முடியாது.
2.எத்தகைய விஷத்தன்மை வந்தாலும் அது ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டே இருக்கும்.
அதன் அரவணைப்பில் வந்த ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்ற சப்தரிஷி மண்டலம்… அதைக் கவர்ந்து உணவாக எடுத்து என்றும் பதினாறாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
மனிதன் ஆன பின் கடைசி நிலை பூரண நிலா என்ற நிலைகள் கொண்டு பூரண ஒளிச்சுடராக மாறுவது என்பது… மனிதன் எண்ணத்தால் கவர்ந்து உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் நிலை. அந்த நிலையை நாம் பெறுதல் வேண்டும்… அனைவரும் அதைப் பெற முடியும்…!
அகண்ட அண்டத்தில் எல்லையே இல்லாத இடத்தில் விரிவடைந்த நிலையில் ஏகாந்த நிலைகள் கொண்டு எதனையும் அடக்கி உணர்வினை மகிழ்ந்து செயல்படும் நிலையாக நாம் பெற முடியும்.
அது தான் ஏகாதசி என்பது. ஏகாந்த நிலைகள் கொண்டு பத்தாவது நிலை என்ற ஒளியின் உணர்வாக நிலையான சரீரமாக நாம் இருக்க முடியும்.
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் போன்று நாமும் வாழ முடியும். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி எல்லாம் தன் மனைவிக்குக் கொடுப்பதும்… மனைவி அதனை ஏற்று கணவன் வழி நடப்பதும்… கணவனால் பெற்ற சக்தி மீண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும்… கணவன் மேலும் உயர வேண்டும் என்று அது ஏங்குகின்றது.
1.எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும்… அந்த உணர்வின் ஒளியை உருவாக்க வேண்டும் என்று இருவருமே இணைந்த நிலையில் செயல்பட்டார்கள்.
2.ஏனென்றால் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தவன் அவன் (ஆகஸ்தியன்). அது இல்லை என்றால் எதுவும் உருப்பெறாது என்ற உண்மையை உணர்ந்தவன்.
கல்லானாலும் தாவர இனங்கள் ஆனாலும் ஆண் நட்சத்திரத்தின் இயக்கமும் பெண் நட்சத்திரத்தின் இயக்கமும் இணைந்தால் தான் உருப் பெற முடியும் என்று இதையெல்லாம் அகஸ்தியன் உணர்ந்தவன்.
1.கணவன் மனைவியும் இரண்டறக் கலக்க வேண்டும்… பேரொளியைத் தனக்குள் பெற வேண்டும் என்று
2.27 நட்சத்திரங்களின் மின்னலின் சக்தியைத் தனக்குள் கூட்டி
3.மின்னல் தாக்கப்படும் பொழுது எப்படி இருள்கள் மாய்கின்றதோ ஒளியின் மின் அணுக்களாகப் பரவுகின்றதோ இதைப் போல
4.உடலின் உணர்வுகள் அனைத்தையும் அவன் தனக்கும் தன் மனைவிக்கும் சேர்த்து
5.இந்த உணர்வினை ஒன்றாக இணைத்து “மின்னணுக்களாக உடலில் உள்ள அணுக்களை மாற்றிடும் சக்தி பெற்றான்…”
6.துருவத்தை உற்று நோக்கித் தனக்குள் அந்த உணர்வுகளை நுகர்ந்து
7.மின் அணுக்களைத் தனக்குள் மாற்றி துருவ மகரிஷி ஆனான். தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டான்.
ஆனால் கணவன் மனைவி ஒன்று சேராது தனித்த நிலையில் கடும் தவம் இருந்து சக்தி பெறுவேன் என்றால் முனி என்ற நிலையைத் தான் அடைய முடியும்… மனைவி என்ற நிலை இல்லாது ரிஷி என்ற நிலைக்கு வர முடியாது.
திருமணமாகாத பெண்களும் கடும் தவம் இருக்கிறேன் என்று சொன்னால் உருப் பெறும் தன்மையைக் கருவாக உருவாக்க முடியாது.
1.கணவன் மனைவி எவர் ஒருவர் ஒன்று சேர்ந்து இந்த அருள் உணர்வுகளைப் பெருக்குகிறார்களோ
2.அவர்களே ஒளித் தன்மையாக உருவாக்க முடியும்.
உயிர் எப்படி உருவானதோ… அதே போல தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் உயிரைப் போன்றே உணர்வின் ஒளியாக அது மடியாது… தனக்குள் ஒளியாக மாற்றிடும் தன்மை பெற முடியும்.
அந்த நிலையை நாம் ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

“புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி
அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.
அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.
நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.
சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.
நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.
அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.
நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.
இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.
“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?
இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!
பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”
மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”
இனி உயர் ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?
அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.
பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.
அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே – நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!
தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.
கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!
பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.
இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது
ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.
இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.
உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.
ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.
இதற்கு பயிற்சி அவசியம் தேவை.
ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?
எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.
வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.
இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.
“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை…”
யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.
தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது
எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.
தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.
உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.
ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.
இது தான் மனிதனின் கடைசி நிலை.
அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது…?
ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.
அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.
இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.
இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி… இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது…”
ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.
புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.
நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.
ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்…” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.
ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?
தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.
உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் – ருத்ர தாண்டவம் ஆடுகிறான்…” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா…!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்… அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆனால் வேதனை என்பதே விஷம்.
நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது…?
காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.
அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்…” என்ற வேக உணர்வு வருகின்றது.
வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது… சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.
நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.
நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.
இப்படி… நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்…
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்…
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்… “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்…”
இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது… தீமைகளாக விளைகின்றது.
இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!


இந்த உபதேசம் எளிதானதல்ல…!
பூமிக்குள் உருவாகும் தாவர இனங்கள் அனைத்திற்கும் உணவு எங்கிருந்து எப்படிக் கிடைக்கிறது…? என்பதை அறிய முற்படுகின்றான் அகஸ்தியன். அப்பொழுதுதான் பூமி துருவத்தின் வழியாக அதைக் கவர்கிறது என்று உணர்ச்சியால் அறிகின்றான்.
1.துருவத்தினை நோக்கி உணர்வினைச் செலுத்துகின்றான்
2.அது தாவர இனங்களுக்குப் போவதற்கு முன் இவன் நேரடியாக நுகரும் தன்மை வருகிறது.
3.இவனுக்குள் இருக்கும் சக்தியின் தன்மை அதை மாற்றி அமைக்கின்றான்.
மற்ற மண்டலங்களிலிருந்து வருவதை நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலமாக மாற்றி அதிலிருந்து வரும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது மின்னல்களாக மாறி ஒளிக்கற்றைகளாகப் பரவி மற்றதுடன் இணைந்து விடுகின்றது… பல மாற்றங்கள் ஆகின்றது.
1.அகஸ்தியன் துருவத்தை உற்று நோக்கும் பொழுது அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பார்க்க நேருகின்றது.
2.அதை அவன் நுகர நேர்கின்றது. அவன் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் பெருக நேர்கின்றது.
கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியும் ரேவதி நட்சத்திரத்தின் சக்தியும் அதிலிருந்து வரக்கூடிய துகள்கள் தூசியாக வரப்படும் பொழுது… வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய கதிரியக்கமும் சந்திக்கும் பொழுது… அதைக் கண்ட பின் தாக்கி ஓடும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து மோதி… அதிலே சிக்குண்ட நிலைகள் கொண்டு தான் துடிப்பு என்ற நிலையில் “ஒரு உயிரணு உண்டாகிறது…”
இந்த நட்சத்திரத்தின் இயக்கத்தில் தான் உயிர் உருவாகின்றது.
1.மின்னணு போன்று அது துடித்துக் கொண்டே இருக்கும் நமது உயிர்.
2.நுகரும் உணர்வைத் தான் அதே துடிப்பின் நிலை கொண்டு உடலாக மாற்றுகின்றது.
ஏனென்றால் எல்லாவற்றிலும்… செடி கொடிகள் அனைத்திலும் நட்சத்திரங்களின் இயக்கங்கள் உண்டு நட்சத்திரங்கள் இல்லாது எதுவும் இல்லை கல்லானாலும் மண்ணானாலும் அதிலே அது உண்டு.
கார்த்திகை நட்சத்திரம் ஆண்பால்… ரேவதி நட்சத்திரம் பெண்பால். ரேவதி நட்சத்திரத்தின் சக்தி அதிகமாகப் பெற்றிருந்தால் அந்த பாறைகள் வளரும் பெண்பால் என்று அந்தப் பாறைகள் வளர்ச்சியாகும்.
கார்த்திகை நட்சத்திரம் என்ற ஆண்பால் உணர்வுகள் பெற்றிருந்தால் அதனின் வளர்ச்சி குன்றியே தான் இருக்கும். செடிகளிலும் ஆண் செடி பெண் செடி என்ற நிலையில் உருவாகின்றது.
நமது உயிருக்குள்ளும் அத்தகைய நிலை உண்டு. கார்த்திகை நட்சத்திரம் ஆண் பால் என்றால் ரேவதி நட்சத்திரம் பெண்பால் ரேவதி நட்சத்திரத்தின் துகள்கள் அதிகமாக இருந்தால் பெண்ணாக உருவாக்கி மற்றொன்றைத் தன் இனத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
கார்த்திகை நட்சத்திரம் என்றால் அதில் ஆண் என்ற நிலையில் தான் இருக்கும். இவ்வாறு நட்சத்திரங்களின் உணர்வு கொண்டு ஆண் பெண் என்ற உணர்வுகள் உருப்பெறுகிறது. பெண்ணாக இருந்தால் கருவாக்கி தன் இனத்தை அதன் ரூபமாக உருவாக்கும் நிலை பெறுகின்றது.
இவையெல்லாம் இயற்கையின் நியதிகள் என்று நமது குருநாதர் தெளிவாக்குகின்றார்.
1.உங்களுக்குச் சுருங்கச் சொல்கின்றேன் பார்த்த நிலையோ ஏராளம்.
2.அதையெல்லாம் வடித்து உங்களிடம் சொல்ல வேண்டும் என்றால் உங்களுக்குப் பொறுமை பத்தாது…
3.அவ்வளவு காலம் உங்களால் உட்கார்ந்து இருக்கவும் முடியாது.
கேட்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். அதே சமயத்தில் சிலருக்கு உடல் வலியும் இருக்கும்.
1.ஆனாலும் இதையெல்லாம் கேட்டு நுகரப்படும் பொழுது அவருடைய உடல் வேதனைகள் குறையும்.
2.முதலில் உட்கார முடியவில்லை என்று நினைத்திருப்பார்கள். இதை நுகர நுகர அந்த உடலில் இருக்கக்கூடிய வலிகள் நீங்குவதைக் காண முடியும்.
3.இருதய ஓட்டத்தின் துடிப்பு அதிலே அடைப்புகள் இருந்தால் இந்த உபதேசத்தைக் கேட்கக் கேட்க
4.இருதய ஓட்டத்தின் அடைப்புகளும் நீங்கும்… இதயம் சீராக இயங்கும்.
இந்த உபதேசம் எளிதானதல்ல…!
அகஸ்தியன் கண்டதை நமது குருநாதர் காட்டிய நிலையில் அதைக் கவர்ந்து உணர்வின் ஒலியாக வெளிப்படுத்தும் போது கேட்போர் செவிகளில் பட்டு இந்த உணர்வைக் கவர வேண்டும் என்று கண்ணின் பார்வையைச் செலுத்தப்படும் பொழுது நுகர்ந்து உயிரிலே பட்டு தான் உணர்வின் தன்மையே வருகின்றது.
அந்த உணர்வுகள் உங்கள் உடலில் சேர்க்கப்படும் பொழுது உடல் முழுவதும் சுழல்கின்றது. இதைச் சுழலச் செய்து
1.ஆதியும் அண்டத்தையும் அறிந்த அகஸ்தியன் உணர்வுகளை நீங்கள் எப்படியும் பெற வேண்டும்.
2.நஞ்சினை வென்று ஒளியின் சரீரமாக அவன் எப்படிப் பெற்றானோ அந்த நிலை நீங்கள் அடைய வேண்டும் என்பதற்குத்தான்
3.இதை உங்களிடம் உபதேசித்துக் கொண்டே இருக்கின்றேன் அடிக்கடி.
ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில வித்தியாசம் இருக்கும் முழுமையும் சொல்ல முடியாது.
1.இன்று சொன்னதை நாளை அதனுடன் சிறிதளவே இணைத்து அதைச் சேர்க்க முடியும்.
2.கண்ட உண்மையின் உணர்வினை அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு தான் உபதேசிக்க முடியும்… உங்களை நுகரச் செய்ய முடியும்
3.உயிர் உங்களுக்குள் ஜீவணுவாக மாற்றும் திறன் எதுவோ அதன் அளவு அங்கே மாறும்.
அகஸ்தியன் அருளாற்றலைப் பெற செய்வதற்குத் தான் இதைச் செய்வது.

அருள் வழியில் என்றும் வாழ்ந்திட அத்திரி மாமகரிஷியின் ஆசிகள்
“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது… “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.
“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).
மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”
எப்படி…?
“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.
போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே “முயற்சி வழி…”
ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.
ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!
அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?
“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்…”
உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த ஒளி பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.
இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.
நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.
இதுதான் கடைசி நிலை…!
குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு – பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.
இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.
இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.
இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை… உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்
இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்…?
1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்…
2.இப்படித் தவறு செய்கின்றானே…! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.
அதாவது… தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்… வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.
ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்… தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.
பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.
அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்… திட்டினான்… என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.
அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே…” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா…! என்று கோபமாகப் பேசும்படி வரும்… ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.
என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்…? என்று அவர்கள் நினைப்பார்கள்.
வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து… அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.
ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.
இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.
காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.
ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது… இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி…
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது…
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்…
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.
இது எல்லாம் எதனால் வருகிறது…? சந்தர்ப்பம்…!
இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது…?
சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்…
1.அடுத்த கணம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி…
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.
நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.


“அகஸ்தியனின் முழு ஆற்றலையும்… நீங்கள் பெறும் சந்தர்ப்பம்”
27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி தூசிகளாகக் கலந்து வரப்படும் பொழுது உராயும் நிலையில் அதிர்வுகளாகி மற்றதோடு கலந்து தூசிகளாக மாற்றி விடுகின்றது.
பல பல வர்ணங்களும் பல பல நிலைகளை உருவாக்கும் துகள்களாக மாற்றி விடுகின்றது.
1.அதைச் சூரியன் எவ்வாறு எடுத்து வைத்துக் கொள்கின்றது என்பதையும்
2.அதை அகஸ்தியன் எப்படி கண்டான் என்பதையும் “நீ உற்றுப் பார்” என்றார் குருநாதர்.
அடிக்கடி மின்னலைப் பார் என்று சொல்வார்… பார்த்தால் கண் போய்விடுமே என்று எனக்கும் அவருக்கும் சண்டை வரும். பின் அந்த மின் அதிர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது மற்றதுடன் எப்படி ஊடுருகின்றது…? என்பதனை அறிந்தேன்.
முதலிலே பயந்தேன்…
1.பின் அவர் சொன்ன முறைப்படி எடுக்கப்படும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
2.உன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் எப்படி அதைப் பெறுகின்றது…? அதைப் பெறக்கூடிய தகுதி நாளடைவில் வரும் பொழுது
3.நீ அதை பெற முடிகின்றது என்று குருநாதர் உணர்த்துகின்றார்.
துருவ நட்சத்திரமாக இருப்பதும் இதன் வழி தான்.
பல மின்னலின் ஒளிக்கற்றைகளைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி உயிரின் துடிப்பு எப்படி மின்னலால் நட்சத்திரங்களால் உருவானதோ அதைப் போன்று
1.பல நட்சத்திரங்களின் உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக் கதிர்களாக மாற்றிய அகஸ்தியன்
2.உயிருடன் ஒன்றி அவன் நிலை கொண்டு உள்ளான் துருவ நட்சத்திரமாக.
அந்த எல்லை அடைய வேண்டும் என்றால் அகஸ்தியன் தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் அவன் எவ்வாறு பெற்றான்…? அதன் வழியில் எப்படி வளர்ந்தான்…? என்ற நிலையைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றார்.
ஏனென்றால் தாவர இனங்கள் மாறுவதும் உடலான பிற்பாடு வளர்ச்சிகள் எப்படி வருகிறது…? என்பதையும் ஒவ்வொரு இடங்களுக்கும் அது அழைத்துச் சென்று அந்த உணர்வைக் காணும்படி செய்தார்.
விஷத்தை ஒடுக்கும் சக்தி உடல் பெற்ற பின் தாவர இனங்களுக்குக் கிடைத்து அதே தாவர இனம் மனிதனைக் காக்கும் நிலை வருகின்றது மனிதனை காக்கும் நிலையானாலும் அந்த உணர்வுக்குள் நுகர்ந்தது அனைத்தும் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குக் (அகஸ்தியனுக்கு) கிடைக்கின்றது.
1.உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன் என்றால் எனக்கு குருநாதர் இதையெல்லாம் காட்சியாகக் காட்டினார்.
2.நாம் இப்போது சொன்னதை நீங்கள் எடுத்துக் கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நீங்களும் காண முடியும். அது விளையும் போது பிறவி இல்லா நிலையும் அடையலாம்.
அதற்கே உங்களுக்குள் இதைப் பதிவாக்குகின்றேன்
நீங்கள் நினைவு கொண்டு அதனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைப் பெற்று மனிதனுக்கு பின் பிறவியில்லா நிலை அடைந்த அருள் மகரிஷியின் உணர்வை நுகர்ந்து அதை உருவாக்குதல் வேண்டும்.
அகஸ்தியன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது இவன் உற்றுப் பார்த்த நிலையில் அந்த நட்சத்திரங்களில் வெளிப்படும் மின்னல்கள் ஒன்றுடன் ஒன்று தாக்கும் பொழுது
1.அந்த ஒளிக் கதிர்களை இந்தக் குழந்தையும் பார்க்கின்றது நுகர்கின்றது
2.உடல்களிலே சேர்த்துச் சேர்த்து அந்த அணுக்களின் தன்மை விஷத்தை ஒடுக்கிடும் அணுக்களாக மாறுகின்றது.
அந்த வழியில் வளர்ந்தவன் தான் மூன்று வயதாகும் பொழுது காட்டிற்குள் நடந்து சென்றாலே இவன் பின் ஒரு கூட்டமே செல்கின்றது. அவன் எண்ணத்தால் செல்லும் பொழுது இளமைப் பருவத்தில் பாம்போ தேளோ மற்ற விஷ ஜந்துகளோ யானைகளோ, புலிகளோ மற்ற கொடூர மிருகங்களோ இவனைக் கண்ட பின் அப்படியே நின்று விடுகின்றது.
ஏனென்றால் அதில் உள்ள விஷத்தின் இயக்கம் தடைப்படுவதனால் செயலற்ற நிலையாகின்றது.
1.அகஸ்தியன் உடலிலிருந்து வரக்கூடிய விஷத்தை ஒடுக்கிடும் மணங்களை நுகர்ந்தால் அந்த மிருகங்களின் அணுக்கள் ஒடுங்கி
2.இவனைத் தாக்குவதிலிருந்து தன்னைப் பாதுகாக்கும் நிலைகளிலேயே அமிழ்ந்து விடுகின்றது.
3.இவன் அங்கிருந்து சென்ற பின் சிறிது நேரம் கழித்துத் தான் மூச்சுகளை எடுத்து… பின் செல்கின்றது என்பதனை
4.அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் எப்படி நடந்து கொண்டான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
நமது குரு இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்தார். பின் எனக்குள் அதைப் பாய்ச்சி நீ எதைச் செய்ய வேண்டும் என்று எம்மைத் தெளிவாக்கிக் கொண்டே வருகின்றார்.
அகஸ்தியன் சென்ற பாதைகளில் அவன் பாத நிலைகள் கீழே படிந்துள்ளது…
1.அந்த உணர்வுகளைப் பூமியில் இழுத்து வைத்துள்ளது.
2.அவன் எந்தெந்தப் பாதையில் எப்பொழுது சென்றானோ
3.அந்தப் பாதையில் செல்வோருடைய நிலைகளிலும் சிலருக்கு அந்த அற்புத சக்திகளும் கிடைத்துள்ளது.
4.அதன் உணர்வை நீ நுகர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது
5.அகஸ்தியன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் எந்த நிலையில் இருக்கின்றதோ
6.அதே உணர்வுடன் நீ செல்லப்படும் பொழுது அந்த அருளை நீ பெறலாம்.
இப்படி அகஸ்தியன் சென்ற காட்டுப் பகுதிகளுக்கு எல்லாம் என்னை அலையும்படி செய்தார் குருநாதர்.
ஒரு கம்ப்யூட்டருக்குள் இயக்கத்தை ஊட்டியபின் அதனுடைய அலை வரிசையில் சென்ற பின் அதனுடன் தொடர்பு கொண்ட இயந்திரங்களை எப்படி எல்லாம் இயக்குகின்றதோ இதைப் போல குரு காட்டிய அருள் வழியில் என் உடலுக்குள் பதிவான பின் அகஸ்தியன் சென்ற பாதையில் என்னை அதே பாதையில் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி என்னை அங்கே போகும்படி செயல்படுத்துகின்றார்.
அந்த பகுதிகளுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அகஸ்தியன் எதை எதையெல்லாம் செய்தான் என்று காட்டுகின்றார் குருநாதர்

“பால் கடல் அமுது” எனும் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி
உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).
பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.
மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.
மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.
அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு வேதனை என்ற உணர்வு வந்த பிற்பாடு அது நோயாக மாறிவிட்டால் என்ன ஆகிறது…?
குழந்தைக்கு ஒரு நல்ல துணிமணியை எடுத்துக் கொடுக்கட்டும். நோயாளியாகக் கட்டிலிலே தந்தை படுத்திருக்கும் பொழுது எடுத்துக் கொடுத்த பட்டுச் சேலையைக் கொண்டு நீங்கள் வந்து காண்பியுங்கள்.
அதைக் காண்பிக்கும் பொழுது “எவ்வளவு கோபம் வருகிறது…?” என்று பாருங்கள்.
தன் பிள்ளைக்கு அதைக் கொடுக்க வேண்டும்.. இதைக் கொடுக்க வேண்டும்… நல்ல துணிகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ஆனால் தந்தை மிகவும் நோயாக இருக்கும் போது இந்தச் சேலை எப்படி இருக்கிறது…? என்று கேட்டால் என்ன ஆகும்…?
நான் இருக்கிற நிலைமையில் இதைக் கொண்டு வந்து காண்பிக்கின்றாயே…! வந்ததா வினை…!
பிள்ளைக்கு நல்ல துணி வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார். வாங்கிச் சென்று போய் விட்டால் பரவாயில்லை.
அப்பாவிடம் காட்டி விட்டு அதன் பின் கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்தால்…
1.இங்கே அவர் படும் வேதனையில் இந்த நல்ல துணியைப் பார்க்கும் போது எதிர்ப்பு உணர்வு வரும்… நெகட்டிவ்… பாசிட்டிவ்…!
2.மனதில் என்ன செய்யும்…? துணியைக் கொடுத்த பின் வாங்கிச் செல்ல வேண்டியது தானே.
3.நான் உடம்புச் சரியில்லாத போது என்னிடம் இதை காட்டி வேதனைப்படுத்துகின்றீர்களே…!
தன்னாலே இத்தகைய உணர்வு வரும்.
பாசத்தால் சொல்கிறார். ஆனால் உடலில் உள்ள உணர்வுகள் எதிர்க்கிறது. நம் மீது சிறிதளவு கூட அக்கறை இல்லையே என்று குழந்தை மீது வெறுப்பு வந்து விடுகிறது.
துணி வாங்கிக் கொடுத்தால் துணியை எண்ணி அந்த ஆசை தான் வருகின்றதே தவிர என்னைக் கவனிக்கவில்லையே.
சந்தர்ப்பம் எப்படி எண்ண வைக்கின்றது என்று பாருங்கள்…! ஆனால் தவறு நாம் செய்யவில்லை.
அப்பா தான் வாங்கி கொடுத்தார். அப்பாவிடம் காண்பிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகின்றேன். அவர் உடலில் நோயினால் வேதனைப்படும்பொழுது அது எதிர்மறை ஆகிறது. நான் இருக்கும் நிலையில் சிறிதளவு கூட இந்தப் பெண்ணுக்கு வருத்தமில்லையே…!
சரிப்பா… சேலையை நான் எடுத்துக் கொண்டேன் என்று சொன்னால் நன்றாக இரு அம்மா…! என்ற வாக்கு தந்தையிடமிருந்து வரும்.
ஆனால் காண்பித்தால் என்ன செய்யும்…? கூடக் கொஞ்சம் எரிச்சல் வரும். இந்த உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
1.அது மாறாகப் (தவறாக) போய் விடுகிறது.
2.குழந்தைக்கு அவர் தான் வாங்கிக் கொடுத்திருந்தாலும் அந்தச் சந்தோஷம் இழக்கப்படுகிறது… வெறுப்பும் வந்து விடுகிறது.
தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் இதையெல்லாம் மாற்ற வேண்டும்.
சந்தர்ப்பங்கள் இது போன்று வந்தாலும் ”அப்பா சொல்லிவிட்டார்… நான் எடுத்துக் கொண்டேன். பரவாயில்லை… நல்ல சேலையாகத் தான் இருக்கின்றது அப்பா என்று சொல்லலாம். இல்லை என்றால் “நீங்கள் நன்றாக ஆன பிற்பாடு எடுத்துக் கொள்கிறேன் அப்பா…” என்றும் சொல்லலாம்.
இந்த உணர்ச்சிகள் அங்கே தந்தைக்கு ஒரு சந்தோசத்தை ஊட்டும். ஏனென்றால் ஒரு உணர்வின் உணர்ச்சிகள் மனிதனை எப்படி எல்லாம் மாற்றுகின்றது…? என்று உங்களுக்குச் சொல்கின்றேன்.
மனிதனின் வாழ்க்கையில் எந்த மாதிரி நிலைகள் வந்தாலும் நாம் விழித்திருக்க வேண்டும்.
விழித்திருக்க வேண்டும் என்றால் எப்படி…?
1.புதுச் சேலையைக் காட்டி அந்த மகிழ்ச்சியைச் சொன்னால் அவர் மனம் புண்படும்
2.அந்த உணர்வை எடுத்தால் நாமும் சங்கடப்படுவோம் என்று விழித்திருத்தல் வேண்டும்.
அப்போது என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்ட வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
எந்தக் காரணத்தினால் இது நிகழ்ந்ததோ… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் அவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு என் தந்தை உடல் முழுவதும் படர வேண்டும் மகிழ்ந்த நிலை வர வேண்டும் என்று இதைப் போன்ற உணர்வுகளை எடுத்தோம் என்றால் வேதனை யாருக்கும் வராது.
சில பேர் என்ன செய்வார்கள்…?
அப்பா உடல் நோயாக இருக்கும் போது இந்தத் துணியை எடுத்துக் கொள் என்று பிள்ளையிடம் சொல்வார்கள்.
ஆனால் பெண்ணோ… அப்பாவுக்கு இப்படி நோயாக இருக்கின்றதே… வேதனைப்படுகின்றாரே… துணியை எடுத்துக் கொள்ளச் சொல்கிறாரே…! என்று எண்ணி அழுகத் தொடங்கும்.
தகப்பனுக்கு முன்னாடி அழுதால் எப்படி இருக்கும்…? சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறது அல்லவா.
ரியாக்ஷன் ஆகி… “வேண்டாம்…” என்று சொன்னாலும் அப்பாவுக்கு வேதனையாக இருக்கின்றது. அந்த வேதனை எடுத்துச் சமைக்கும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றோம்… கண்களிலே நீர் வருகின்றது.
தகப்பனார் இதைப் பார்த்தால் “நான் இருக்கும் நிலையில் இப்படி அழுகின்றார்களே…!” என்று அவருக்கு அந்த வேதனை அதிகமாகும். ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நிலைக்கொப்ப அந்த வேலையைச் செய்யும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்துப் பல பொருள்களைப் போட்டுச் சமைத்தாலும்… அதிலே பக்குவம் தவறி விட்டால் சுவை கெட்டு விடுகின்றது.
ஆகவே ஆயுள் கால மெம்பர்கள் எப்படி இருக்க வேண்டும்…?
1.நம் ஆயுளைத் துருவ நட்சத்திரத்தோடு ஒப்படைத்து விட வேண்டும்.
2.நம் பற்று அதன் மீது வரவேண்டும்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சிக்கல்களை நிவர்த்தி செய்ய முடியும்.
குடும்பத்தில் ஒருவர் மட்டும் செய்தால் பத்தாது. கணவன் மனைவி குழந்தைகள் எல்லோரும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழக வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.
அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.
பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.
ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.
இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.
அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.
இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.
நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.
என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.
அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.
அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.
சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.
ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.
ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.
வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.
இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.
எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.


இரத்தத்தை உறிஞ்சும் கொடிகள்
காடுகளுக்குள் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று பல உண்மை நிலைகளை அறியும்படி செய்தார்.
புலி கொடூரமாக பல மான்களை அடித்து உட்கொள்கின்றது ஆனால் மானையே அதிகமாக அந்தப் புலி உட்கொண்டிருந்தால் அதனுடைய முதுமைப் பருவத்திலே உடலை விட்டுப் பிரியும் சமயம் அந்த உயிரான்மா மானினுடைய ஈர்ப்புக்குள் செல்வதையும் காட்டுகின்றார்.
அதே சமயத்தில்… புலி இறந்த பின்
1.புலியின் உடலை வளர்த்த அணுக்கள் அந்த உடலையே உட்கொள்கின்றது.
2.எதை எதையெல்லாம் இந்தப் புலி கொன்று விழுங்கியதோ அதனதன் அணுக்களின் தன்மையாக
3.உடல் உறுப்புகளில் உள்ள நிலைகள் அந்தப் புழுக்கள் அந்த உடலைச் சாப்பிடுகின்றது.
பின் இதிலிருந்து வரக்கூடிய உணர்வின் தன்மை நாற்றம் ஆகின்றது. அது ஆவியாக மாறுகின்றது… சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்கின்றது… அலைகளாகச் செல்கின்றது.
பல தாவர இனங்களை புசித்த உயிரினங்களின் உடல்களை இது உட்கொண்டதால் அத்தகைய உணர்வின் தன்மை கொண்ட
1.அந்தப் புலியின் உடலிலிருந்து வெளிவரும் வாசனைகளைச் சூரியன் கவர்ந்து கொண்ட பின்
2.இதே போல இன்னொரு பாம்பு மடிந்திருந்து அதனுடைய உணர்வின் அலைகள் வெளி வருவதைக் (அந்த மணத்தை) கண்டபின்
3.அது வலுவான நிலையாக இருப்பதால் புலியின் உணர்வலைகள் அஞ்சி ஓடுகின்றது.
4.அது ஓடும் பாதையிலே ஒரு விஷச் செடியிலிருந்து வெளிப்படும் மணத்துடன் இது மோதினால்
5.கிறு…கிறு… என்று சுழற்சியின் தன்மை அடைகின்றது.
சுழற்சியின் தன்மை அடைந்தபின் மூன்றும் இரண்டறக் கலந்து அது ஒரு ஒரு தாவர இன வித்தாக… கொடியாக மாறுகின்றது. பூமியின் ஈர்ப்பிலே பட்டப்பின் கொடியின் தன்மை அடைகின்றது.
அந்தக் கொடி மூன்று உணர்வும் (புலி+பாம்பு+விஷச்செடி) கலந்து உருவானது. அந்தந்த உடலில் இருந்து வெளிப்படக்கூடிய அழுகிய மணங்களைச் சூரியன் எடுத்துக் கொண்ட எந்த உணர்வின் தன்மை பெற்றதோ “அந்த மணத்தின் தன்மை கொண்டு கொடியின் தன்மை அடைகின்றது…”
உடல்கள் இறந்த பின் பெற்ற உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வலைகளைச் சூரியன் எப்படிக் கவர்ந்து வைத்துள்ளது…? நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டுகின்றார்.
1.அதைப் பார்ப்பதற்குண்டான சக்தியை கொடுத்தார். அனுபவரீதியிலே தெரிந்து கொண்டது.
2.இதை எல்லாம் புத்தகங்களிலே பார்ப்பது மிகவும் கடினம்.
அப்படிக் கொடியாக வளர்ந்த நிலையில் ஜீவனுள்ள உயிரினங்கள் இதன் அருகில் வந்தால் அலுங்காமல் அது நகர்ந்து வரும்.
1.பாம்பு விழுங்குவது போன்று அந்தக் கொடி சுற்றிவிடும்…
2.உடலில் இருக்கும் சத்தை எல்லாம் உறிஞ்சி விடும்… பின் மரணம் தான்.
சந்தன மகாலிங்கம் என்ற குகைப் பகுதிகளில்… அங்கே புலியினங்களும் பாம்பினங்களும் ஜாஸ்தி உண்டு. அத்தகைய கொடிகள் உண்டு பெரிய விலங்குகள் இறந்த பின் பச்சிலை மூலிகைகளும் பல நிலைகள் உண்டு அஸ்ஸாம் காடுகளிலும் இதைப் போன்று உண்டு.
மிருகங்களும் மற்ற உயிரினங்களும் இதைப் போன்று மடிந்த நிலைகள் கொண்டு சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் வெளியே செல்லும் பொழுது அதற்கு ஒத்த மற்ற உடலுக்குள் செல்கின்றது… உடல் பெறுகின்றது.
ஆனால் இறந்த உடலில் இருந்து கெட்ட மணம் வெளி வந்த பின் சூரியன் எடுத்துக் கொண்டால் அவைகள் கலந்து கொடியின் தன்மைகளாக செடியின் தன்மைகள் எப்படி மாறுகிறது…? அந்தச் செடி கொடிகள் இரத்தத்தை உறிஞ்சும் தன்மை எப்படிப் பெறுகின்றது…? என்பதை அங்கே காட்டுகின்றார்.

தீமை வருகின்றதே…! என்று சங்கடப்படக் கூடாது
1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)
அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலையினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.
உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.
ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.
உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.
உலகோதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.
அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?
அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… “நச்சுப்புற்றாக வளர்ந்து விடுகிறது…!”
ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.
1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.
நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்….!
இதனை உணர்ந்து நீ நட…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம்முடைய பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன நினைக்கின்றோம்…? இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்… எதிர்காலத்தில் என்ன ஆகப் போகின்றானோ…! என்று வேதனைப்படுவோம்.
வேதனையாக எண்ண… எண்ண… கை கால் குடைச்சல் ஆகின்றது. சிந்திக்கும் தன்மை இழந்து பையனை உதைக்கும் நிலைக்கு வருகின்றது. கடைசியில் நாசமாகப் போடா…! என்று சொல்கின்றோம்.
பையனால் இப்படி வேதனை ஆகிவிட்டது என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் இறந்தால் எங்கே போகிறோம்…?
1.பையன் உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்.
2.பையன் உடலுக்குள் சென்ற பின் வேதனையை அங்கே கூட்டி அவனைக் கெடுத்து அவனையும் வாழ விடாது செய்யும்.
சம்பாதித்த சொத்தைக் காக்க ஞானம் வேண்டுமா இல்லையா…! ஞானம் இல்லை என்றால் சொத்தைக் காக்க முடியுமா…?
அதே போன்று வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஆண்கள் வெளியிலே போய்விட்டு வந்தபின் வெறுப்பாக இருப்பார்கள்.
அப்போது வீட்டிர்குள் வந்த பின் பெண்கள் எதாவது கேட்டால் பதில் வெறுப்பாக வரும்.
எப்பொழுது பார்த்தாலும் என் வீட்டுக்காரர் எரிந்து எரிந்து விழுகின்றார். கொஞ்சம் சாந்தமாகத் தான் சொன்னால் என்ன…! என்று கேட்பார்கள்.
நானா கோபமாகப் பேசுகின்றேன்…! நீ தான் என்னைக் கோபமாகப் பேசத் தூண்டுகிறாய்…! என்று மீண்டும் அங்கே சண்டை உருவாகும்.
சண்டை போட்ட பின் என்ன செய்வார்கள்…? சரி… கணவர் கோபமாக இருக்கின்றார்… “கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யலாம்…” என்று செய்யப் போனால்…
1.கணவர் எண்ணிய வேகத்திற்குச் செய்யவில்லை என்றால்
2.ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று மீண்டும் சண்டை வரும்
இது எல்லாம் உணர்வுகளின் இயக்கம்.
இப்படிச் சண்டையிட்ட உணர்வுகள் கலவை ஆன பின் அடுத்து சம்பாதிக்க வெளியிலே சென்றாலும்… எடுத்துக் கொண்ட உணர்வுகள் அங்கே வியாபாரத்தைத் தடைப்படுத்தும்… குழந்தைகளிடம் வெறுப்பாகப் பேசச் சொல்லும்… நண்பர்களாக இருந்தாலும் பகைமையாக்கிவிடும்…!
ஆக… சம்பாதிக்கக்கூடிய நிலையை நாம் தெளிவாக வைத்திருக்கிறோமா…?
இதெல்லாம் சந்தர்ப்பம்…
1.மோதலின் உராய்வினால் வரக்கூடிய உணர்வுகள்
2.நம்மை இப்படி எல்லாம் மாற்றி அமைக்கின்றது.
நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்..! எல்லா நல்லதும் செய்து இப்படி ஆகிவிட்டது.. “எனக்குக் குடும்பத்தில் நிம்மதியே இல்லை…!” என்று தொழிலை விட்டுவிடுவார்கள். சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லாது போய் வெளியிலேயும் வெறுப்பு… வீட்டிலும் வெறுப்பு…!
இது எதனால் வருகின்றது…?
1.கோபத்தையும் வெறுப்பையும் தனக்குள் விளைய வைக்கின்றோம்…
2.பொறுமை இல்லாது பொறுப்பை இழந்து இங்கே பேசப்படும் பொழுது தொழிலும் மட்டமாகின்றது
3.வேலை பார்க்கும் இடங்களில் மேலதிகாரியிடம் கெட்ட பேர் வருகின்றது.
குடும்பப் பற்றுடன் வாழ்ந்து வந்தாலும் ஒருவர் இப்படி உணர்ச்சி வசப்பட்டுச் செய்தார் என்றால் அந்தக் குடும்பம் முழுவதும் வெறுப்பு வளர்கின்றது.
அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?
நாம் வேகமாகச் சமையல் செய்ய வேண்டும் என்று அடுப்பிலே நெருப்பைக் கூட்டினால் என்ன ஆகும்…?
அடியில் இருப்பது கருகிவிடும் நடுப்பகுதியில் இருப்பது ஒரு மாதிரி வேகும்… குழைந்து போகும். மேலே இருப்பது சுத்தமாகவே வேகாது போய்விடும். இந்த மூன்று நிலையில் வரும்.
ஆகவே கோபம் வருகிறது என்றால்…
1.அது எதனால் வருகின்றது என்று தியானத்தைச் சீராக கடைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்
2.அதை மடக்கித் திருப்பி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லும்
3.இது உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் முழுமையாகத் தெரியாதபடி “நானும் தியானம் தான் செய்கிறேன்…” என்று சொல்லிக் கொண்டு
1.எதைச் செய்தாலும் வீட்டிலே தொல்லைகள் வருகின்றது
2.எப்பொழுது பார்த்தாலும் சண்டை வருகின்றது
3.யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் என்று இப்படிச் சொல்பவர்களும் உண்டு.
காரணம் இது எல்லாம் பூர்வ புண்ணியத்தில் வருவது. பூர்வ புண்ணியத்தின் வழியில் வந்தாலும் அதை மாற்றுவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இந்த உணர்வைக் கூட்டினால் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
அறியாது இயக்கும் இது போன்ற தொல்லைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறக்கூடிய சக்தியை” உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
ஆனால் செய்து பார்த்தேன்… முடியவில்லை என்று விட்டு விட்டால் என்ன ஆகும்…! ஆகவே நாம் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
காட்சிகளையும் சக்திகளையும் யாம் (ஞானகுரு) கொடுத்தால் பெரியவர்களே பல தவறுகள் செய்கின்றார்கள். காரணம்…
1.“சாமி எனக்குத் தான் சக்தி கொடுத்திருக்கிறார்…!” என்ற நிலையில்
2.உண்மைகளை அறிவதற்கு மாறாகத் தவறு செய்கின்ற நிலைகளிலேயே சென்று விட்டார்கள்.
அதற்குப் பின் தான் இதையெல்லாம் நிறுத்தியது.
நீங்கள் உயர்ந்த பண்புகளை வளர்த்துக் காட்டினால் நீங்கள்தான் சாமி. உங்கள் நிலை கொண்டுதான் இங்கு சாமியின் நிலைக்கு மதிப்பு.
என் சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும்… உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்… எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம்.
ஆகவே நாம் அனைவரும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டும் அருள் வழியினைக் கடைபிடிக்க வேண்டும். அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.
1.அவருடைய நிலையைப் பிறர் பார்க்கும் போது பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்த பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது என்று நம் நிலைகளுக்குத் தெரியாது.
அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்… என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லி இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள்.
ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலைவிட்டுச் சென்றாலும் அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.
அதன் வழியில்…
1.தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்
2.நம் குருநாதர் காட்டிய அருள் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்
3.அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் நமக்கு மெய்வழி காணும் நிலைகள் கிடைக்கும்.
முந்தி வந்தவர்களுக்கெல்லாம் நோயைப் போக்க வேண்டும் என்று பெரும்பகுதி யாம் செயல்படுத்தினோம். இப்பொழுதும் நோய் போகும் என்று சொன்னால் போகத்தான் செய்கின்றது.
1.ஆனால் சாமி மீது தான் நம்பிக்கை வருகின்றது.
2.சாமி கொடுக்கும் சக்தியை நாம் பெற முடியும்… நோயை நீக்க முடியும்… என்ற நம்பிக்கை வருவதில்லை
இதை எல்லாம் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது நன்றாக ஆவது போன்று… உங்கள் பார்வையால் உங்கள் சொல்லால் அனைத்தும் நல்லதாக்க வேண்டும்.
தீமைகள் புகாதபடி தடுத்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தான் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றோம்.
நீங்கள் எடுத்துக் கொண்ட சக்தியை உயிர் விளைவிக்கின்றது உடலாக மாற்றுகின்றது. எதை எண்ணுகின்றீர்களோ அதையே தான் உயிர் உருவாக்குகிறது.
திட்டியவனைப் பதிவு செய்து கொண்ட பின் “அவன் நாசமாகப் போக வேண்டும்…” என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அவனையும் கெடுக்கின்றது… இங்கே நம்மையும் கெடச் செய்கிறது.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ வேதனையோ எது வந்தாலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அதை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள். உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி இங்கே அதிகமாகி விட்டால் வேதனைப்படும் உணர்வுகள் உள்புகாதபடி அதைத் தடுத்துவிடும்… விலக்கி விட்டுவிடும். அருள் ஞான சக்தியும் உங்களுக்குள் பெருகும்.
இந்த இரண்டு வேலையும் செய்யும்.
அதனால்தான் உங்கள் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…? என்று மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
இந்த உடலில் இருக்கும் போழுதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல எண்ணுதல் வேண்டும்.
1.துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றடைவோம்
2.பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.


உயிரே கடவுள்
காலயிலிருந்து இரவு வரை
1.நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமா எதையெல்லாம் நுகர்கின்றோமோ
2.இவை அனைத்தையும் நமது உயிர் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று
3.நாம் எண்ணிய உணர்வுகளை அணுவாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.
ஏனென்றால் நமது உயிர் நம் உடலில் இயக்கச் சக்தியாக இருக்கின்றது நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுத்தன்மை பெறும் இயக்கமாக மாற்றி ம்… என்று உடலாக மாற்றி விடுகின்றது.
நாம் எண்ணும் எண்ணங்கள் எதுவோ அது ஈசனாக இருந்து உருவாக்குவதும் நாம் எண்ணும் குணங்களை இரையாக்குவதும் இறையின் உணர்வுகள் செயலாக்குவதும் என்ற நிலையில் நமது உயிரின் இயக்கங்கள் உண்டு.
நம்மை ஆள்வது யார்…?
1.நமது உயிரே ஆண்டவனாக இருந்து ஆளுகின்றது.
2.ஈசனாக இருந்து எண்ணியதை உருவாக்குகின்றது.
3.எண்ணியதை இயக்குவதும் உருவாக்குவதும் அதை ஆள்வதும் ஆண்டவனாக இருப்பதும் நமது உயிரே.
4.ஈசன் என்பதும் உயிரே
5.ஆண்டவன் என்பதும் உயிரே
6.இறைவன் என்பது நாம் எண்ணும் உணர்வுகளை இறையாக்குவதும் உயிரே.
இறை என்றால் எதன் குணத்தை எடுக்கின்றோமோ அதை இறையாக்கி உணர்வின் செயல் ஆகும் பொழுது அக்குணமே தெய்வமாகின்றது என்பதனை ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
உயிரின் இயக்கம் ஈசன் என்றாலும் இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் விஷ்ணு… இயக்கத்தால் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்று காரணப் பெயர் வைத்து நாமெல்லாம் அறிந்து கொள்வதற்கு இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள் ஞானிகள்.
இருந்தாலும் இன்று விஞ்ஞான உலகில் வாழுகின்றோம் ஆனாலும் அஞ்ஞான வாழ்க்கையே வாழ்கின்றோம் பக்தி என்ற நல்ல ஒழுக்கத்தில் வாழுகின்றோம் ஆனால் பக்தி என்றால் எதுவென்று அறியாத நிலையில் அஞ்ஞான வாழ்க்கை வாழ்கின்றோம்.
இயற்கை நியதிகள் எதுவோ அதன் வழி தான் என்று நாம் வாழுகின்றோம். இயற்கையின் சீற்றத்தில் இருந்து காக்கும் உணர்வுகள் பெற்ற மனிதன் ஆறாவது அறிவை நாம் சீராகச் செயல்படுத்தாது மீண்டும் தேய்பிறை என்ற நிலையில் வாழ்கின்றோம்.
அதை எல்லாம் மாற்றிடும் நிலையாக
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகளின் உணர்வுகளைச் சுவாசித்து
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி அழியாத நிலை பெற வேண்டும்.

வரும் வினைக்காக அஞ்சினால் அதிலே தான் சிக்குவோம்… மீளுவோம் என்ற நம்பிக்கை தான் வேண்டும்
வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்
1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”
எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.
அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?
மழை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?
வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.
சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே…!
உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”
முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான “வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை…”
“அகப்பேழையைத் திறந்து பார்…” என்று உரைத்த வேதாள மகரிஷி கூற்று கூற்றுபவன் எனக் கால வெள்ளத்தைத் தேக்கிக் காட்டிய முறையே சித்துக்களின் வளர்ப்பின் பலன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்… நீங்கள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன். அதே போல் எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்களும் தியானியுங்கள்.
எல்லோரும் நல்ல நிலை பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வருகின்றது. ஒன்றுபட்ட நிலைகள் கொண்டு இவ்வாறு செய்தோம் என்றால் நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் தெருவிலும் ஊரிலும் படர்கின்றது.
கொடுமையான நோய்களோ சில விஷத்தன்மை வாய்ந்த நிலைகளோ இங்கே வராது நாம் எளிதில் தடுத்து நிறுத்த முடியும். தெருவில் வசிக்கும் மக்களையும் நாம் மகிழ்ந்து வாழச் செய்ய முடியும். குடும்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் நிலையினை உருவாக்க முடியும்.
ஆகவே…
1.இனி எந்த நிலை வந்தாலும் குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன்..
2.என் உடல் முழுவதும் அதைப் பரவச் செய்வேன்.
3.பேச்சால் மூச்சால் இந்த ஊர் முழுவதும் நல்லதாக்கச் செய்வேன் என்று பிரார்த்தனை செய்து
4.அதன் வழியில் இந்த ஊர் நன்றாக இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்டு வாருங்கள்.
ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்றாலும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அவரை நிற்கச் செய்து… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு அதே உணர்வை அவரையும் எண்ணி எடுக்கும்படி செய்யுங்கள்.
சக்கரத்திற்கு முன்னாடியே இதைப் போன்று செய்து பழகுங்கள். அதே பிரகாரம் அந்த நோய்களும் நீங்கும்… தீமைகளும் அகலும்.
இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
இப்படி நம்முடைய சக்திகளைப் பரப்பப்படும் பொழுது நாம் பாய்ச்சிய உணர்வுகள் அங்கே வேலை செய்வதைப் பார்க்கலாம்.
எப்படி…?
ஒருவன் நம்மைத் திட்டுகிறான் என்றால் அவன் திட்டிய உணர்வு நமக்குள் வந்து நம்மைத் தவறான வழிகளுக்கு அது இயக்குகின்றதல்லவா…?
இதைப் போன்று தான் நீங்கள் எங்கிருந்தாலும்
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
3.தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் மாற்றிப் பழக வேண்டும் என்று அருளைப் பாய்ச்சுகின்றேன்.
எப்படித்தான் இருந்தாலும் இந்த உடலில் சிறிது காலம் தான் இருக்கின்றோம். அந்த நேரத்திற்குள் நாம் எதை எடுத்து வளர்க்க வேண்டும்…?
அருள் சக்திகளைப் பெற்று இருளை அகற்றிடும் நிலை பெற வேண்டும். அப்போது நம் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது.
ஆனால் விஷத் தன்மையானால் உடல் குறுகுகின்றது… விஷத்தின் இயக்கமாகவே மாற்றுகின்றது.
ஒளியா… இருளா…?
1.இருள் என்ற நிலைக்கு வரும் பொழுது மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்
2.ஒளி என்ற நிலையினை வளர்க்கும் போது பேரொளியாக மாறுகின்றது.
இந்த நிலையை நாம் பின்பற்ற வேண்டும்.
ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் அங்கத்தினராக இருக்க வேண்டும் ஆயுள் மெம்பராக இருக்க வேண்டும். அதனுடன் இணைந்து என்றுமே நாம் பிறவி இல்லா நிலை அடையும் அந்த மார்க்கத்திற்குச் செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில்… வரும் தீமைகளை நீக்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம். எல்லோரும் அருள் உணவு பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கோபப்படுபட்டுச் சண்டையிடுவோரைப் பார்க்க நேர்ந்தது என்றால் உடனே ஈஸ்வரா…! என்று சொல்லி உள்ளே புகாதபடி நிறுத்திப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்தி விட்டு
1.சண்டை போட்ட இருவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் திறன் அவர்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இப்படி எண்ணினால் அவர்கள் சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நல்லதாக மாற்றிக் கொள்கின்றோம்.
அவர்களும் இதே பிரகாரம் எண்ணினால் சரியாக இருக்கும்.
இருந்தாலும்… சண்டை போடுபவர்களிடம் சென்று புத்தி சொன்னால் கேட்பார்களா…!
இரண்டு பேரும் சண்டை இடுகிறார்கள். ஒருவரிடம் சென்று “நீ கொஞ்சம் பொறுத்துப் போ…! என்று சொன்னால் நீ அவனுக்குத் தான் சாதகமாகப் பேசுகின்றாய் என்று இவன் நம்மிடம் சண்டைக்கு வருவான்.
சமாதானப்படுத்த முடியுமா…?
ஆனால் அடுத்தவனை பார்த்துப் நீ பொறுத்து போப்பா…! என்று சொன்னால் “நீ அவனுக்குச் சாதகமாக பேசுகிறாய்…” என்று சொல்வான். ஆக இப்படித்தான் வரும்.
1.அவர்கள் உணர்வுக்குத் தக்க நாம் ஒத்துக் கொள்ளவில்லை என்றால்
2.நம்மைத்தான் அவர்கள் குற்றவாளியாக ஆக்கிவிடுவார்கள்.
அதை நாம் நுகர வேண்டியதில்லை…!
இது போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனே ஆத்ம சுத்தி செய்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.
அவர்கள் இருவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்… ஒன்றுபட்டு வாழ வேண்டும்… என்ற உணர்வுகளை நாம் வளர்க்க வேண்டும்.
அவர்கள் சாந்தமடைந்த பிற்பாடு நாம் என்ன செய்ய வேண்டும்…?
இருவரும் சண்டையிட்டதால் கஷ்டமானது. அதனின் விளைவுகள் இப்படி ஆனது. ஆகவே நீங்கள் இப்படிச் செய்து பாருங்கள்…! என்று
1.நமக்குள் வளர்த்திருக்கும் நல்ல உணர்வுகளை அவர்களைக் கேட்க வைத்து
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்கும்படி செய்யலாம்.
இப்படித் தான் நாம் அவர்களைத் தெளிவாக்க வேண்டும். அட என்னப்பா… நீ தானே சண்டை போட்டாய்…! என்று சொல்லக்கூடாது.
உங்கள் சந்தர்ப்பம்…
1.உணர்ச்சி வசப்பட்டுச் சண்டை போட்டீர்கள்.
2.அதனால் நீங்கள் இருவரும் அன்பைக் கெடுத்துக் கொண்டீர்கள் என்ற
3.”உணர்வின் ஞானத்துடன் சொன்னால்” நாம் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரும்.
அந்த ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அவர்களை நல்லதாக்க முடியாது.
சண்டையிட்டீர்கள்… இரண்டு பேருடைய வாழ்க்கையும் இந்த மாதிரி ஆனது. இது உங்களுக்குள் நோயாக மாறுகின்றது சிந்திக்கும் தன்மையை இழக்கின்றீர்கள்.
ஆகையினால் நீங்கள் பொறுப்புடன் இருந்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அதற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள்… உங்கள் உடலில் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தெளிந்த மனம் வர வேண்டும் என்று எண்ணுங்கள் என்று இரண்டு பேரிடமும் இந்த மாதிரிச் சொல்லிப் பழகுதல் வேண்டும்.
அப்பொழுது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருகின்றது… சிறிதளவு கேட்பார்கள். கேட்டால் உள்ளுக்குள் செல்லும். சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.
ஆக மொத்தம் இந்த முறைப்படி அருள் உணர்வை நாம் சேர்த்துக் கொண்டால் அவர்களுடைய சண்டை நமக்குள் விளைவதில்லை அருள் உணர்வுடன் நாம் எடுத்துச் சொல்லப்படும் பொழுது அவர்களும் மாறுகின்றார்கள்.
ஆகவே…
1.தியானம் என்பது வாழ்க்கையில் தீமைகள் நமக்குள் வராதபடி
2.அருள் உணர்வுகளைச் சமைத்து அந்த மெய் ஞானத்தினை நமக்குள் வளர்ப்பது தான்.
எல்லோருக்கும் தெளிந்த மனம் வருகிறது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளைகின்றது. இதைச் சொல்லிக் கொண்டே வந்தால் கோடிக்கரையில் இருந்து நாம் தனுஷ்கோடியாக பிறவி இல்லா நிலை அடைகின்றோம். சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் இணைகின்றோம்.


நாம் ஒவ்வொருவரும் தினசரி பழக்கப்படுத்த வேண்டியது
1.தினசரி காலை துருவ தியானத்தில் நேரடியாகத் துருவ நட்சத்திரத்திற்கே உங்களை அழைத்துச் சென்றது.
2.நீங்கள் நுகர்ந்தது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய என்று உங்கள் இரத்த நாளங்களில் கலக்கின்றது.
3.இதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தினால் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை
4.உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் உணவாக உட்கொள்ளும் சக்தி பெறுகின்றது.
துருவ நட்சத்திரம் மற்ற நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடிய கதிரியக்கங்களை “ஒளியாக” மாற்றிக் கொள்கின்றது. அந்த நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்தால் மின்னலாக மாறி மற்றொன்றைக் கருக்கி விடுகின்றது.
ஆனால் துருவ நட்சத்திரமோ ஒளி அலைகளாக மாற்றுகின்றது
1.அதை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி விட்டால்
2.அத்தகைய மின்னலையும் உணவாக உட்கொண்டு
3.ஒளியின் நிலையாக உருவாக்கும் உடலாக நம்மைத் துருவ நட்சத்திரம் மாற்றிவிடும்.
நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் செயலாக உருவாக்குகின்றது… அதையே செயல் ஆக்குகின்றது நமது உயிர்… அதையே உடலாக்குகின்றது… அந்த உணர்வே நம்மை வாழ வைக்கிறது.
தெரிந்து கொள்ளுங்கள்… மனிதன் ஒருவன் தான் இதை உருவாக்க முடியும்…!
மற்ற உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட உணர்வைச் சுவாசித்து அந்த வலுவான உணர்வு வரும் பொழுது இந்த உடலில் உள்ள எளிமையான அணுக்கள் மடிந்து வலுவான உணர்வுகள் விளைந்து… உடலை விட்டுச் சென்ற பின் அதைப் போன்ற கொடூர மிருகங்களாக மாற்றி விடுகின்றது.
பல கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்ட பின் இதை அறிந்து உணர்ந்து வென்றவன் அகஸ்தியன் துருவனாகி… கணவனும் மனைவியும் இரு மனம் ஒன்றென இணைந்து இரு உணர்வும் ஒன்றென இணைந்து பேரருளைத் தனக்குள் உருவாக்கி (எல்லாவற்றையும் இயக்குவது தான் பேரருள் என்பது) பேரொளி என்ற உணர்வினை உருவாக்கினான். தன் உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தையும் ஒளியாக உருவாக்கினான் அகஸ்தியன்.
1.துருவ நட்சத்திரமோ 27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக் கதிர்களை எடுத்து ஒளியாக மாற்றிக் கொள்கிறது
2.அதிலிருந்து வரக்கூடியதை நாமும் எடுத்தால் மின்னல்கள் பலவாறு பரவினாலும் அதனைச் சிறுகச் சிறுக நமக்குள் சேர்த்து
3.வாழ்க்கையில் இன்னொரு உடல் பெறாதபடி உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறுகின்றோம்.
ஒவ்வொருவரும் இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எதை எண்ணி ஏங்குகின்றீர்களோ அதை உருவாக்கும் பொறுப்பு உங்களுடைய உயிருடையதாகும். உருவாக்கிய பின் மீண்டும் அதற்கொப்ப அடுத்த உடலை உருவாக்குவதும் உயிருடைய வேலை
ஆகவே நாம் பேரருள் பேரொளி என்ற அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்குவோம்… பிறவியில்லா நிலையை அடைவோம்.

நஞ்சை அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே “நீலி…”
உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட… அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.
கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.
வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்… சுவாச செயலாக நின்று…
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்…
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”
இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.
சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.
நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே…!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்… விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”
மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனைக் கைக்கொள்வோர் மிக அரிது.
மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்…
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்… சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.
நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!
விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)
மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.
ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.
டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.
இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.
அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.
“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.
அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.
பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.
அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.
ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.
ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.
துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.
அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”
உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.
அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
விறகுக் கட்டை இருக்கின்றது அதை எரித்தால் ஒளியாக (வெளிச்சம்) மாறுகின்றது… நன்மை செய்கின்றது.
அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் தீமை என்ற உணர்வுகள் நம் மீது மோதினாலும்… அருள் ஒளி என்ற உணர்வை எடுத்துக் கலந்து அதை ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
எப்படி…?
தீமை என்றாலும்…
1.அதிலே தொக்கி உள்ள விஷம் தான் அதனின் இயக்கத்திற்கு வருகிறது.
2.ஆக அதற்குள் மகரிஷிகளின் உணர்வை இணைத்து இயக்கப்படும் பொழுது “ஒளி…” என்ற உணர்வாக மாறுகின்றது.
அதாவது… கட்டையை எரித்தால் அது கருகுகின்றது… ஆனால் “வெளிச்சம்…” கொடுக்கின்றது. அந்த “வெப்பத்தால்…” மற்றொன்றைச் சமைக்க முடிகின்றது
இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் வரும் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் எல்லாம் கதிரியக்கப் பொறிகளால் (அதற்குள் இருக்கும்) தான் இயக்கப்படுகின்றது.
ஆனால் அதே சமயத்தில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை அதற்குள் சேர்த்து
2.நல்ல முறையில் அதை இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வுகளை நீக்கிவிடுகிறது.
3.அப்போது நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் உணர்வைப் பக்குவப்படுத்தும் வலிமையும் கிட்டும்.
இதை நாம் செய்து பழகுதல் வேண்டும்.
குருநாதர் காட்டிய அருள் வழியில் இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் தியானிக்கும் போது அதிலிருந்து வெளிச்சம் வரும்… உங்களுக்கு நல் வழி காட்டும்… நல்ல சிந்தனைகள் வரும்.
அதிலே ஆசைகளை மட்டும் அதிலே கூட்டி விடாதீர்கள்.
ஆசை என்றால் அது எதுவாக இருக்க வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற இந்த ஒரு ஆசையை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள். உடல் ஆசையைக் கூட்டி இருக்க வேண்டாம். எல்லாம் செய்து… எனக்கு இப்படி வருகிறது…! என்று வேதனையை மட்டும் எடுத்து விடாதீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும்
1.என் செயல் நல்லதாக இருக்க வேண்டும்… மற்றவர்களைப் புனிதப்படுத்தும் சக்தியாக அது வரவேண்டும்
2.குழந்தைகள் நல்ல பண்புள்ளவர்களாக வாழ வேண்டும்… உயர்ந்த நிலை பெற வேண்டும்
3.கணவனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்… மனைவிக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.நாங்கள் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்று
5.இது போன்று செய்து வாருங்கள்… உங்களை அது பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.
உயிருடன் ஒன்றுகின்றோம் உணர்வில் கலந்த இருளை அகற்றுகின்றோம்… ஒளியாக நாம் வளர்கின்றோம். என்றுமே நாம் அழியாது ஒன்று சேர்த்து மகிழ்ந்து வாழும் நிலை பெறுகின்றோம்.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள். நான் (ஞானகுரு) உங்களுக்கு அருளைப் பாய்ச்சுகின்றேன்… நீங்கள் எனக்கு அருளைப் பாய்ச்சுகின்றீர்கள்.
இந்த உணர்வு ஒன்றாகி ஒளியின் உணர்வுகளாக வலுப் பெறும் போது இருளை அகற்றும் வலிமை பெறுகின்றது. என்றும் அழியாத அந்த ஒளியின் சக்தியைப் பெறுகின்றோம்.
அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.
ஆகவே ஆயுள் மெம்பர்கள் ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த அருள் வழிகளை நமக்குக் காட்டினார்.
1.அவர் காட்டிய நெறிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்
2.அவருடன் ஒன்ற வேண்டும்.
3.அவருடைய ஒளி பட இருள் நீங்கும்
4.அருள் பெற நமக்குள் இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறலாம்.
அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும். ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தியானம் இருக்கும் பொழுது என் (ஞானகுரு) நெற்றியைப் பார்க்கச் சொல்கின்றேன். அதிலிருந்து நமது குருநாதரின் அருளை நீங்கள் பெற முடியும்.
1.குருநாதர் எனக்கு இப்படித்தான் செயல்படுத்தினார்
2.அவர் நெற்றியைப் பார்க்கும் பொழுது அவர் கண்ட உண்மை எல்லாம் எனக்குத் தெரிய வந்தது… அதே போன்று நீங்களும் காண வேண்டும்.
குருநாதர் நமக்குக் காட்டியது துருவ நட்சத்திரம். அதிலிருந்து ஒளி அலைகள் இங்கே வருகின்றது. அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள். துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்க்க வளர்க்க உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெருகப் பெருகப் பேரருள் என்ற நிலைகளில் இருளை நீக்க கூடிய சக்தியாக நீங்கள் பெறுகின்றீர்கள்
ஆகவே புருவ மத்தியை எண்ணுங்கள். ஓ…ம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும் போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த உணர்வின் சக்தியை நீங்கள் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
1.நமது குருநாதர் காட்டிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நான் நுகர்கின்றேன்
2.நுகர்ந்த உணர்வை நீங்கள் கவரக்கூடிய சக்தி பெறுகின்றீர்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி என் புருவ மத்தியைப் பாருங்கள்.
என் உயிரான ஈசனை வேண்டி… குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் அருளும்… அவன் துருவனான அந்த அருள் உணர்வும்… துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.
அதன் வழி நீங்கள் ஏங்கும் போது அந்த உணர்வுகள் ஒளி அலைகள் இங்கே வந்து.. உங்கள் உடல்களில் உணர்ச்சிகள் பரவி அந்தப் பேரருளைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.
நாம் அனைவரும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.


அகஸ்தியன் பெற்ற தீமைகளைக் கருக்கும் ஆற்றல்
ஒரு புழுவை எடுத்து வந்து குளவி தன் விஷத்தை அதன் மீது பாய்ச்சினால்… விஷம் புழுவின் உடலில் பரவி… புழுவின் உயிர் இந்த விஷத்தின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது. ஆனால் அது குளவியாக அடுத்து மாறுகிறது.
புழுவின் உடலுக்குள் சென்று அந்தப் புழு குளவியாக மாறிய பின் அதே உணர்ச்சியின் தன்மை அதற்கு வருகின்றது. முதல் குளவி எதைச் செய்ததோ இதுவும் அதே வேலையைச் செய்கின்றது. இதைப் போன்று தான்
1.தாய் கருவிலே விளைந்த அகஸ்தியன்
2.தன் உடலிலே கடும் விஷத்தின் தன்மையையும் அடக்கிடும் வல்லமை பெறுகின்றான்.
இயற்கையில் விளையும் சத்தினை வேக வைத்து உணவாக உட்கொள்ளும் பயிரினங்களையும் உருவாக்குகின்றான் ஐந்தாவது வயதிலேயே…!
இன்றும் பார்க்கலாம்…! தத்துவஞானியின் உணர்வைப் பெற்ற பின் தாய் கருவிலே கர்ப்பமாக இருக்கப்படும் போது அந்தத் தத்துவத்தை நுகர்ந்தறிந்தால் அந்த குழந்தையாகப் பிறந்த பின் இளமையிலிருந்து அவன் அறியாதபடி பல வேதங்களையும் பாடுகின்றான் படிக்கின்றான் தத்துவத்தை எடுத்துச் சொல்கின்றான்.
கணக்கிடும் பொழுது ஒரு கம்ப்யூட்டர் கணக்குகளைச் செய்து முடிப்பதற்கு முன் ஒரு நொடிக்குள் இவன் விடைகளைச் சொல்லி விடுகிறான் என்று பார்க்கலாம்.
உலகில் நடக்கக்கூடிய இதைப் போன்ற சம்பவங்களைப் பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்படிப் பெரிய மேதையானவர்களும் உண்டு. இது எல்லாம் “தாய் கருவிலே பெற்ற நிலைகளைக்கொப்பத் தான்” உருப்பெறுகின்றது.
இயற்கையின் நிலைகள்
1.இந்த உயிர் எதை நுகர்கின்றதோ அதை அணுவாக மாற்றுகின்றது என்பதை
2.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அகஸ்தியன் ஐந்தாவது வயது ஆகும்பொழுது தாவர இனங்களுக்கு எங்கிருந்து எவ்வாறு உணவு கிடைக்கின்றது…? எதன் வழி கிடைக்கின்றது…? என்பதனைச் சிந்திக்கும் தன்மை பெறுகின்றான்.
விண்ணை நோக்கிப் பார்க்கின்றான்… பிரபஞ்சத்தில் உருவாகும் பல நிலைகளையும்…!
1.இந்த பிரபஞ்சத்திற்குச் சக்திகளை நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதையும்
2.பால்வெளி மண்டலங்களாக அதை அமைப்பதையும் தூசிகளாகப் பரவுவதையும்
3.ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் எதிர்மறை ஆகும் பொழுது ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது
4.மின் கதிர்களாகப் பரவுவதையும் ஒலி அலைகள் பரவுவதையும் மற்றதோடு இணைவதையும்
5.அது எவ்வாறு…? என்பதனை அகஸ்தியன் அறிகின்றான்.
இப்படி அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை தான் மின்னல்கள் எவ்வாறு உருப்பெறுகிறது என்று உணரும் போது
1.தன் இளமைப்பருவத்திலேயே அந்த நட்சத்திரத்தின் உணர்வுகளை அவன் நுகர்ந்ததினால்
2.அவன் உடலுக்குள் அந்த மின் அணுக்களின் நிலை உருவாக்குவதும்
3.ஒன்றை உற்று நோக்கினால் பகைமை உணர்வுகளை… தீய உணர்வுகளைக் கருக்கிடும் சக்தியைப் பெறுகின்றான் அகஸ்தியன்.
4.அவன் பெற்ற அந்த ஆற்றல்களை நாமும் பெறுதல் வேண்டும்.

“வேதாள மாமகரிஷி”
அன்று பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பெற்ற பெருநகரில் செல்வத்தின் அதிபதியாக வாழ்ந்து வந்தவர் திருச்சாடனார்.
வாழ்க்கைத் துணை நலம் நன்கு அமையப் பெற்றும் பன்னெடும் காலமாக மக்கள் செல்வம் அமைந்திடாமல் கணவனும் மனைவியும் குழந்தைப் பாக்கியப் பேறு வேண்டி அன்னதானங்கள் இட்டு… அது மிகப்பெரிய சாமாராதனையாக (இறைவனின் அடியார்களுக்குச் செய்யும் சேவை) அனுதினமும் நடைபெற்று வந்தது.
ஒரு பெண் மகவை ஈன்ற பின் துணைவியார் இயற்கை நிலை எய்துகின்றார். அந்தக் குழந்தையைப் பேணும் பொறுப்பை திருச்சாடனார் ஒரு தவமாய்ச் செய்து வந்தார்.
குழந்தையின் மங்கைப் பருவத்தில் உபேந்திரன் என்கின்ற தவநெறிச் செல்வனுக்கு மணமுடித்து திருச்சாடனார் முழுமையாகத் தவ வாழ்க்கையில் ஈடுபட்டார்.
பூமியில் சில விசேஷ அலைத்தன்மைகள் பாயப்பெறும் காலகட்டம்… இரு சம்பவங்கள் அப்பொழுது நடந்தேறியது.
செல்வச் சீமான் திருச்சாடனார் உள்ளத்தால் துறவறத்தை மேற்கொண்டார். காட்டு வழிப் பயணம் செல்கின்ற காலத்தில் செல்வ நிலையைக் குறிக்கோளாக வைத்த ஊரின் எல்லையில் வாழ்ந்து வந்த மந்திரவாதி ஒருவன் திருச்சாடனாரை அழித்திடும் நோக்கம் கொண்டு வேதை (தாக்குபவன்) என்பவனை ஏவி விடுகின்றான்.
வேதையும் ஓர் அம்பை ஏவியது.
1.பகலை இரவாக்கிட்ட கடும் மழைக்காலம் ஞானத்தின் சூட்சுமத்தில் “மகரிஷிகளால் ஆட்கொள்ளப்படுகின்ற செயலும் உண்டு…”
2.“நில் என்றால் உடனே நிற்கும்…” ஞானக்காவலுடன் சூட்சும மகரிஷிகள் உடன் இருக்க
3.அச்செயல் தடுக்க… முதலில் எய்த அம்பு திருச்சாடனாரின் மார்பைத் துளைத்தது.
4.பின் மீண்டும் தொடுத்த அம்பு பாயும் முன் திருச்சாடனார் வாயிலிருந்து “நில்…” என்றே ஒலித்த ஒலியின் தொனியினால்
5.வினை… சுவரில் எறியப்பட்ட பந்து போல் எய்த இடமே திரும்பச் சென்றது.
“நில்” என்ற வெளிப்பட்ட தொனியின் அதிர்ச்சியினால் வேதை என்பவன் மயங்கி உயிர் துறந்தான்.
“சூரிய மண்டல தேவன் அங்கே சூட்சமமாக திருச்சாடனார் சரீர நிலையில் செயல் கொண்டு” முன்னிலும் பிரகாசமான தேஜசுடன் சரீர துன்பங்கள் நீக்கம் பெற்று…
1.“வேதம்” என்ற மறைபொருளை ஒலியின் தன்மைகளை ஆளுகின்ற செயலினால்
2.”வேதாள மாமகரிஷியாக” அவர் இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.
வேதாள மகரிஷி உரைப்பான்…! மனமாகிய கிணற்றில் குறுக்கே சுவரெடுத்தால் நீர் இறைத்திடும் செயல் தடைப்படுகிறது. ஆனால் மனக்கிணறோ பழுதுராத் தன்மையில் நலம் பெற விழைகின்றது.
ஜெப நீர் (தியானத்தில் எடுக்கும் சக்தி) பெற்றுத் உயிராத்ம சக்தியைக் காத்திட முனைவோர்… மனக்கிணற்றின் ஜெப நீர் பெற்றிட குறுக்கே எழுந்திட்ட தடைகள் அது சூட்சமமாக இருந்தால் “அதைத் தகர்த்து விடவேண்டும்…” என்ற மன எண்ணத்தின் உயர்வைக் கூட்டிடல் வேண்டும்.
பின் ஜெபநீர் அருந்திடத் தடை ஏது…? இந்நிலையின் பொருள்கள் விளக்கி
1.எது தீமை தந்திட விளைந்ததோ அதையே நன்மையாக்கிடும் நல் நிலைகள் காட்டி
2.அஷ்டமாசித்துக்கள் பெற வைத்துக் காத்திட்ட வேதாள மகரிஷியின் செயல்கள் பல உண்டு.
புறக்கண்ணால் நோக்கிடும் செயல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பிற்கே தவிர்க்கப்பட்டாலும்… கொண்ட சேமிப்பைக் குறைவாக்குவது
1.உலகோதய வாழ்க்கையில் வந்திடும் மோதல் காலங்களில்
2.உற்று உறுத்துக் கேட்டல்… அதிசயித்து எச்செயலையும் விழிப்பார்வை கொண்டு பார்த்தல்…
3.இந்த இரண்டு வகையான காரியங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.
திருச்சாடனார் சூட்சும அவதார நிலையின் நோக்கமே… மனித சரீரத்தின் உயிர்களுக்கு ஊறு விளைவித்திடும் கபாலிகர்கள் வசம் இருந்து அவைகளைக் காத்திடத் தான்.
அதற்காக… தனது உருவை விகார வடிவம் அமைத்து… வேதாளம் என்ற பெயரும் படைத்திட்டுப் புனித பூமியை மாசு படுத்திடும் அவர்களை விரட்டிட வேதாள வடிவம் தாங்கித் தன்னை அச்சுறுத்தும் தோற்றமாகக் காட்டினார்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?
எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.
நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.
ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.
உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.
அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.
ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?
ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.
ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.
இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.
இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.
நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?
நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.
அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது
1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.
இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.
இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!
அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.
எதன் வழி கொண்டு…!
குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது
தன்னால் எப்படி வருகின்றது…?
அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.
துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.


“வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?
1.மனிதனாகப் பிறந்த நாம் “பிறர் மகிழ்ந்து வாழ வேண்டும்” என்று எண்ணினால்
2.அந்த மன மகிழ்ச்சியால் செல்வம் அதுபாட்டுக்குத் தன்னிச்சையாக நமக்குள் பெருகும். செல்வம் குமியும்… செல்வாக்குடன் இருக்கலாம்…!
எல்லாச் செல்வத்தையும் வைத்துக் கொண்டு மனதில் நிம்மதி இல்ளாமல் என்னை இப்படி பேசுகின்றார்களே…! என்று வேதனையை எடுத்தால் நோய் தான் அதிகமாகும்.
வைத்தியரிடம் சென்று பணத்தைக் கொடுக்க வேண்டியது வரும். சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கும் நிலை அற்றுப் போய் விடுகின்றது. வேதனையினால் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
இதை விடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்…?
மனிதனாகப் பிறந்தோம் என்றால்
1.அருள் ஞானிகள் காட்டிய வழியிலே நடக்க வேண்டும். நம்மை அறியாது வரும் இருள்களிலிருந்து நாம் மீள வேண்டும்.
2.மெய்ஞானிகள் உணர்வு நமக்குள் வளர்க்கப்பட வேண்டும். அதைப் பற்றுடன் பற்றிடல் வேண்டும்
3.எல்லோரையும் அந்த ஞானத்தின் வழியைப் பற்றிடச் செய்தல் வேண்டும்.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொன்னது.
தயவு செய்து என்னை யாரும் கோபித்து விடாதீர்கள் ஞானிகள் சொன்னதைச் சொல்கின்றேன் குருநாதர் என்னைச் சாக்கடை அருகே அமர வைத்து தான் இந்த உபதேசத்தை எல்லாம் கொடுத்தார்.
நாம் என்ன செய்கின்றோம்…?
சங்கடம் சலிப்புடன் உட்கார்ந்திருக்கிறோம். என் குடும்பத்தில் இப்படி இருக்கின்றது அப்படி இருக்கின்றது… என்று சாமியிடம் சென்று துன்பத்தையும் வேதனையும் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி அதைத்தான் கேட்கின்றீர்களே தவிர “வேதனையை நீக்க வேண்டும்” என்று யாராவது கேட்கின்றீர்களா…?
அப்படி நினைப்பது இல்லை.
ஏனென்றால் இந்த மாதிரி உணர்வுகள் தான் (நமக்குள் இருக்கும் சங்கட உணவுகள்) நல்ல குணங்கள் இருந்தாலும் அந்த நல்லதைப் பேசவிடாது தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
நாம் தவறு செய்யவில்லை. இந்த உணர்வுகள் நம்மை எவ்வாறு இயக்கி விடுகின்றது.
1.அதை நீக்குவதற்குத் தான் அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும்படி சொல்கின்றோம்.
2.அதன் வழியில் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிர் அவ்வாறு இயக்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.
4.அதன் வழிப்படி உயிர் இயக்கப்படும் பொழுது கண் அதே வழியைக் காட்டும்… உடலை மகிழச் செய்யும்.
இதைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
கோவிலுக்கு போகும் பொழுது அந்தத் தெய்வ குணங்களைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
அந்த ஆலயத்திலே தனக்கு முன் நிற்பவருக்கெல்லாம் அந்தத் தெய்வ குணம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இந்த எண்ணத்தோடு செய்தால் யாரையும் நீங்கள் முண்டியடித்துத் தள்ள மாட்டீர்கள்.
1.நீங்கள் அந்த உயர்ந்த குணமாக அதுவாக ஆகின்றீர்கள்
2.உங்கள் சொல் அவர்களை நல்லதாக்குகின்றது.
3.கோவிலில் எந்தத் தெய்வத்தை வைத்திருக்கிறார்களோ அந்தத் தெய்வமாக நீங்கள் ஆகின்றீர்கள்.
உங்களிடம் இருக்கும் நல்ல குணத்தைத் தெய்வமாக மாற்றுவதற்குத் தான் இதையெல்லாம் சொன்னார்கள். மற்றவர்களைத் தள்ளிவிட்டு சாமியின் சக்தியைப் பெற வேண்டும் என்று சொன்னால் தள்ளும் குணம் தான் வரும். நல்ல குணங்களை நம்மிடமிருந்து தள்ளி விட்டு விடும்.
இதை எல்லாம் நாம் அறிந்து கொள்வதற்குத் தான் ஆலயத்தை கட்டி அதில் தெய்வத்தை வைத்து நம் மனதைத் தூய்மைப்படுத்தும் வழிகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

உயிருடன் ஒன்றுபவனுக்கு “எந்த நிலையிலும்… எதிலும் பாதிப்பு ஏற்படாது”
ஆதி சக்தியின் செயல்:-
1.ஒன்றுடன் ஒன்று மோதிடும் எதிர் மோதல் குணங்கள் தன் குணத்தின் சுவைக்கொப்ப
2.ஆகர்ஷன சக்தியால் வான்வெளியில் பூதி என்று அழைக்கப்படும் பெருவெளியில் கலந்து
3.எதிர் மோதல் தன்மைகளில் “எந்தக் குணம் அமிலம் வீரிய நிலை பெறுகின்றதோ”
4.அவைகளில் கலந்திடும் அணுக்களின் குணங்களுக்கு ஒப்ப வீரிய நிலை பெற்றிடும் அந்த அமிலத்தன்மைகள்
5.தனக்கொத்த நிலைகளை எல்லாம் “உயர் மின் நுண்காந்த சக்தியாக வளர்க்க”
6.எதிர் மோதல் குணத்தன்மையாக “எரிபொருள் சக்தி அக்கினி என்ற வெப்ப சக்தியாக” செயல் உருவாக உருக்கோலம் கொண்டு
7.தன் சக்தியின் பரிமாணத்தை வளர்ச்சி நிலை கொள்ளும் செயலாக மென்மேலும் ஈர்த்துக் கொண்டு
8.சுழற்சியின் வேகத்தால் “ஓங்கார நாதத்தைக் கூட்டி” பால் வெளியில் சுழன்று ஓடிக்கொண்டே அமைவு பெறும் தன்மையாக
9.தனது செயலின் வீரியம் வலுக்கொண்ட சக்தியாக கன பரிமாணம் கொண்ட திடமாய் உருவாகும் முன் தன்னுள்ளே பூதியை உருவாக்கி
10.எப்படி அக்கினியால் எரிக்கப்பட்ட பொருள்கள் காற்றில் கலந்து செயல்படும் தன்மையைப் பெறுகின்றதோ அவைகள் போன்றே
11.தூசு படலங்களும்… படர்வு நிலையில் மறைபொருளாகும் அத்தன்மைகள் ஜீவன் கொண்டிட்டு
12.”தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளும்” நிலை பெறுகின்ற செயல் ஒன்று
13.ஜீவ அணுக்களாகப் பின் வளர்ச்சியில் எண்ணிறந்த கோளங்களாக நட்சத்திரங்களாக சூரியன்களாக வளர்ச்சி நிலை பெற்று
14.ஈர்த்துக் கொண்டிடும் ஈர்ப்பு நிலைக்கொப்ப விசேஷ தனித்துவ சக்தியாக வளர்க்க
15.உறை பொருள் சிவமாக… இயங்கும் இயக்கச் செயல் ஈர்ப்பு சக்தியாக இணைந்து கொண்டிடும் “சிவ சக்தியாக”
16.ஆதி சக்தியின் செயல் உருவாய்… ஓடிக்கொண்டே உள்ளது.
நம் பூமியின் சுழற்சியின் வேகத்தில் பௌர்ணமி காலங்களிலும் அமாவாசை காலங்களிலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிட்ட கோள்களின் ஈர்ப்பின் தொடர்பினால் நீர் சக்தியின் மாறுதல்களை… இந்நிலையிலும் உயர் நாதத்தை ஈர்த்துக் கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் “மறைபொருளை விளக்குவார்கள்…”
சப்த மாதர்கள் என்று வணங்குகின்றாய். ஒருவர் குரல் போல் மற்றவருக்கு இருப்பதில்லை. கோடான கோடி சப்தஸ்வர நாதங்கள் “கண்டத்தில் (தொண்டையில்) எழும் ஆகாயக் கூறு” காட்டும் நிலை தான் என்ன…?
சப்த நாதங்களில் செயல்படும் சப்தரிஷிகள்
1.ஆதி சக்தியின் அம்சமாக வழி நடத்தும் அரிய உண்மைகளை
2.தியானத்தைக் கூட்டுவதன் மூலம் நீ அறிந்து கொள்ளலாம்.
சப்தரிஷி மண்டலங்கள் இயக்கிடும் நவக் கோள்கள்… வான் இயல் மையக் கோள் என்ற பால் வெளியின் உண்மை நிலைகளை அறிந்து வளர வேண்டுமப்பா.
பஞ்சபூதங்களான… ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் பரவெளியில் ஜீவ மின் நுண்காந்த சக்தியாக அனைத்திலும் பரவிப் படர்ந்துள்ளதை “பராசக்தி… என்றும் பரமார்த்த சக்தி…” என்றும் பெயரிட்டு மகரிஷிகளால் அழைக்கப்படுகின்றது.
பால்வெளியில் உதித்திடும் உயிரணுக்கள் கோடான கோடி நிறம் மணம் குணம் என்ற முத்தொடர் சூட்சுமத்தின்
1.நீரமில சக்தியுடன் கலந்து உதிக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொண்ட சுழற்சியாய்
2.எண்ணம் கொண்ட உயிரணுக்கள் எண்ணம் கொண்ட ஆத்மாவாக ஜீவன் பெற்றே பிறப்பிற்கு வருகின்றது.
மனிதன் கூறுகின்றான் வயதான காலத்தில் அவன் ஞானம் பெற வேண்டும் என்று. எப்படிப்பா இருக்கின்றது இது…? காலம் கடந்து ஞானம் வருவது எங்கே…?
நாம் கூற முற்படுவதில் தேகம் கொண்டே…
1.”தேகம் கடந்த ஞானம் பெற்றிடல் வேண்டும்”
2.பெற்று உயர்ந்து வளர்ந்திடல் வேண்டும்… என்று உணர்த்தியும் வந்துள்ளோம்.
எமது சித்தின் நிலையை வெளிப்படையாக உரைத்து விட்டால் மாத்திரம் நீ சக்தியைப் பெற்றிட முடிந்திடுமா…?
1.தன் நிலையைத் தான் வளர்க்க
2.அந்நிலையில் நன்நிலையாக வளர்த்துக் காட்டிட வேண்டுமப்பா.
உலோதய வாழ்க்கை நடைமுறையில் ஞானத்தின் போர்வையைப் போர்த்திக் கொண்டு… உண்மை நிலையை உரைக்க வந்ததாகப் பாஷாண்டகமிடும் செயலை… உண்மை நிலையை “நான்” என்றிட்ட அகங்கார ஆணவ மாயை என்றிட்ட அனைத்துக் காரியார்த்த செயல்களை “யார் தான் வென்றிடுவார்கள்…?”
1.சகலத்திலும் சகலமாக ஈஸ்வரரின் அருள் நிறைந்திருக்க…
2.தனித்துவ காரண காரியங்களுக்குச் செயல் கொண்டு – சகலத்திலும் ஈஸ்வரரின் அருள் என்ற பேரின்ப சாயுஜ்ய (உயிருடன் ஒன்றும் நிலை) லயத்தைக் கொள்பவனுக்கு
3.எந்த நிலையிலும் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட்டுவிடாது… “சகல மகரிஷிகளினாலும் காக்கப் பெறும் நிலை உண்டு…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.
ஆக… வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி…? என்ன…? ஏது…? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.
அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.
ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.
இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்… எதை… எக்காலத்தில்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.
விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.
ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.
ஆகவே குரு காட்டிய அருள் வழியில்…
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… கண்ணாடியில் எழுத்துக்களை எழுதும் பொழுது பக்குவமாகச் செயல்படுத்தவில்லை என்றால் கண்ணாடி உடைந்துவிடும். நமது மனதும் ஒரு கண்ணாடி போன்றது தான்…!
1.நமக்கு அனைத்துமே தெரிந்திருக்கலாம்
2.இருந்தாலும் அடுத்தவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி சமமாகப் பதிவாக்கவில்லை என்றால் அவரின் மனம் நொறுங்கிவிடும்.
“நன்மையாகவே இருந்தாலும்” அழுத்தத்தின் தன்மை கொண்டு பக்குவம் தவறி மற்றவர்களுக்குச் சொல்லால் சொல்லப்படும் போது மனது கண்ணாடி போன்று உடைந்து விடுகிறது.
மனம் உடைந்து விட்டால் திரும்பச் சரி செய்வதே கடினம். பக்குவ நிலைகளை இழந்தால் நம் மனம் நொறுங்கி விடுகின்றது ஆகவே அதைப் போன்று சிதறுண்டு போகாதபடி பக்குவ நிலைகள் கொண்டு நாம் வாழ்தல் வேண்டும்.
1.காரியம் வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தத்தின் தன்மை கொண்டு
2.கோப உணர்வையோ வேக உணர்வையோ எடுத்தால் சாந்த உணர்வுகள் சுக்கு நூறாகத் தெறித்து விடுகின்றது.
3.அன்பு கொண்டு அரவணைக்கும் மற்றவர்களின் நல்ல மனதையும் நமது சொல் சிதறச் செய்து விடுகின்றது.
வாழ்க்கையில் பரிபக்குவம் கொண்டு வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
அருள் வழியைப் பெறுதல் வேண்டும். இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும்.
நம் குரு காட்டிய வழியினை வெறும் “சொல்லால் மட்டும் சொல்லிவிட்டுப் போகாதபடி…” காலத்தை அறிந்து பக்குவ நிலை கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
1.அருள் ஒளியின் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்தப் பக்குவம் தன்னாலே வரும்
2.அருள் சக்திகளை நுகர மறந்தால் பக்குவம் தவறி விடுகின்றது.
பலகாரம் செய்கிறோம் என்றால் அதிலே எண்ணை காயும் பருவத்தை அறிந்து எந்தப் பொருளை இணைக்கின்றோமோ அதற்குத் தக்க அதிலே சுவையின் தன்மை வருகின்றது.
வடையைச் சுடுகிறோம் என்றால் எண்ணை காய்ந்திருக்க வேண்டும் அது காய்ந்திருக்கின்றதா…? என்றும் நாம் முதலில் சரி பார்த்தல் வேண்டும்.
பார்த்தபின் மாவைத் தட்டிப் போட்டால் வடை சுவையாக இருக்கும். என்னை காயாதபடி வடையைச் சுட்டால் எண்ணையை அதிகமாக ஈர்த்துவிடும்… சுவை கெட்டுவிடும்.
1.ஆகவே அடுத்தவரிடம் நாம் பேசும் பொழுது பக்குவம் பார்த்துச் சொன்னோம் என்றால்
2.இணைந்து வாழும் தன்மையும் அவர்களைத் திருத்தும் நிலையும் தன்னுடன் அரவணைக்கும் தன்மையும் வருகின்றது.
அதைத் தான் இராமன் அம்பை எய்தான் என்றால் அதைத் திரும்ப வாங்கிக் கொள்வான் என்று சொல்வது.
1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ… அதுவே பதிலாக நமக்குள் வரும்.
2.ஒன்றி வாழ்வதும்… இணைந்து வாழ்வதும்… பிரிந்து வாழ்வதும்… எல்லாமே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் இணக்கத்திற்குள் தான் உண்டு.
3.நான் உங்களை மகிழச் செய்யும் நிலைகள் கொண்டு வந்தால்… அதே மகிழ்ச்சி என்ற நிலைகளை எனக்குக் கொடுக்கின்றீர்கள்.
ஆகவே அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பாய்ச்சினோம் என்றால் கல்யாணராமன் ஆகின்றோம்.
நீங்கள் மகிழ வேண்டுமென்ற எண்ணம் கொண்டு நான் சொன்னால் உங்களுடைய உணர்வு எனக்குள் இணைந்து வாழும் தன்மையாக வருகின்றது. என் சொல்லும் உங்களுடன் இணைந்து வாழ்கின்றது. மகிழ்ச்சி பெறும் தன்மை கொண்டு மகிழச் செய்யும் உணர்ச்சியாக இயக்குகிறது.
எண்ணங்களின் இணக்கமும்… எண்ணத்தின் உணர்ச்சியும்… நமக்குள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று எண்ணத்தால் இயக்கும் நிலைகளை விஷ்ணுவின் மறு அவதாரம் இராமன் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
வெப்பத்தின் உணர்வு கொண்டு ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும் நிலையாக அது எவ்வாறு இயக்குகிறது…? என்று சூரியனின் இயக்கத் தொடர்களைக் காட்டி உணர்வின் இயக்கங்களை நமக்கு ஞானிகள் காட்டினார்கள்.
உணர்வின் இயக்கம் தனக்குள் வலுவாகப் படும்பொழுது உணர்த்த வேண்டும்… உணர வேண்டும்… பார்க்க வேண்டும்… என்ற நிலையாக “எண்ணத்தால் தான் கண்கள் உருவானது…” என்று தெளிவாகக் காட்டுகின்றனர்.
ஞானிகள் நமக்குக் காட்டிய நிலைகளை எல்லாம் நாம் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கையாக வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.


மகரிஷிகள் மீது பற்று கொண்டு அவர்கள் வழியினைப் பின்பற்றுவோம்
1.நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ உயிர் அதை இயக்குகின்றது
2.எதை எண்ணுகின்றீர்களோ அதை உடலாக்குகின்றது உயிர்
3.எதனை எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கின்றது.
4.வளர்ந்த உணர்வின் தன்மையை தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.
5.இந்த உடலை விட்டு நாம் அகன்றால் நாம் எதை எண்ணினோமோ அந்த உணர்வின் செயலாக அடுத்த உடலாக நம்மை உருவாக்குகின்றது.
6.ஞானிகள் உணர்வை நமக்குள் இணைப்போம் என்றால் அவர் ஒளியின் சரீரம் ஆனது போன்று நமது உயிர் நம் உடலில் இதை உருவாக்கும்.
நமக்குள் இருக்கும் உயிரை ஈசனாக மதித்து… ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைச் சிவம் என்று உணர்ந்து… நமக்குள் ஒவ்வொரு உறுப்புகளை உருவாக்கிய நிலைகள் காந்தம் மகாலட்சுமி சர்வ நிலைகளை வளர்த்து நமக்குள் உருவாக்கிய நிலைகள் மகாலட்சுமி உண்டு என்பதை உணர்தல் வேண்டும்.
அது கவர்ந்த உணர்வின் மணங்கள் மகா ஞானம் சரஸ்வதி அனைத்தையும் அறிந்திடும் ஞானமாக நம் உடலில் உண்டு. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் இணைந்த உணர்வின் நிலைகள் ஒருக்கிணைந்து அனைத்தையும் உருவாக்கும் வெப்பத்தின் நிலைகள் பராசக்தியாக நமக்குள் உண்டு… அனைத்தையும் உருவாக்கிடும் ஆற்றல் நமக்குள் உண்டு.
அனைத்தையும் அறிந்திடும் உணர்ந்திடும் நிலையும்… தீமையை நீக்கிடும் உணர்வின் சக்தியாக ஆறாவது அறிவு முருகா என்ற நிலையும் நமக்குள் உண்டு. அதனின் துணை கொண்டே நாம் செயல்படுத்த முடியும்.
எண்ணியதை வழிகாட்டும் கண்ணின் நிலைகள் இருந்தாலும் எண்ணியதைத்தான் அது வழி காட்டுகின்றது. எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது.
ஆனால் இவை அனைத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை முருகன் என்று பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் என்றும் நமக்குள் ஆறாவது அறிவு உருப் பெறும் சக்தியாக நமக்குள் அடக்கி அதனின் நிலைகள் இருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.அவர்கள் உணர்வை நாம் பின்பற்றி
2.அவர்கள் மீது பற்று கொண்டு
3.அதன் வழிகளில் நாம் பெற வேண்டும்.
இந்த உடலைச் சிவனாக மதித்து சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் நமக்குள் உண்டு மகா சரஸ்வதியாக. சர்வத்தையும் கவர்ந்திடும் சக்தி மகாலட்சுமி உண்டு சர்வத்தையும் உருவாக்கிடும் அந்த வேகத் துடிப்பான பராசக்தி நமக்குள் உண்டு.
நமது கண்கள் கண்ணனாக இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நமக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அர்ஜுனனாக இருக்கின்றது. எதனின் வலிமையைக் கொண்டோமோ அதனின் வலிமையின் தன்மையாக நாம் எண்ணியது சாரதியாக நின்று கண் வழிகாட்டுகின்றது.
1.ஞானிகள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் அதுவே சாரதியாக அமைந்து
2.ஞானிகள் சென்ற பாதையில் நம்மை அழைத்துச் செல்லும்.
அது தான் கண்ணின் நிலைகள் நமக்குள் இவ்வாறு இருக்கிறது…? என்று கீதையில் தத்துவங்களைக் கூறியுள்ளார்கள். அந்த அருள் ஞானிகள் சொன்ன நிலைகளை நாம் பின்பற்றுவோம்.
நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் மனிதனை உருவாக்கியது விநாயகா. உயிரின் தன்மை நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த வினைக்கு நாயகனாக உணர்வின் செயலாக இயக்கப்பட்டு அந்த உணர்வின் தசைகளாக அங்கங்கள் அமைக்கப்பட்டது.
ஆக நமக்குள் அனைத்துத் தத்துவங்களும் உண்டு..!
பேரண்டம் இந்த பிண்டத்திற்குள் எவ்வாறு இயங்குகிறது…? என்றும்… பேரண்டத்தில் தனித்து இயக்கம் மற்ற கோள்கள் தன் தன் உணர்வின் சக்தி கொண்டு இயக்கினாலும்… அதனில் இணைந்த உணர்வு கொண்டு தாவர இனங்களாக மாற்றினாலும்
1.அதனின் தன்மை கொண்டு உயிர் தனக்குள் இணைத்து
2.ஒருக்கிணைந்த நிலையாக உணர்வின் சக்தியாக ஒருக்கிணைந்து நமக்குள் எவ்வாறு இயக்குகிறது…? என்பதை
3.அண்டம் பிண்டத்திற்குள் எவ்வாறு உணவின் செயலாக ஒன்றி வாழுகின்றது…?
4.ஒன்றிய வலுவின் துணை கொண்டு நம்மை எவ்வாறு இயக்குகின்றது என்ற தத்துவ ஞானிகள் கொடுத்த
5.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை நாம் பின்பற்றுவோம்
6.அவர்களின் வழியிலே நாம் செல்வோம்
7.மனிதன் என்ற நிலைகள் புனிதம் பெறுவோம் முழுமையின் நிலைகள் பெறுவோம்.
8.நமது உணர்வுகள் உயிருடன் ஒன்றிய ஒளியாக நிலைத்திருப்போம்.
9.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும் அதைப் பெறுவோம்
10.அருள் ஞானம் பெறுவோம்… ஒளியின் உணர்வாக வளர்வோம்
11.இருளைப் போக்கும் நிலையை நாம் பெறுவோம்… ஒளியின் சிகரமாக உயிருடன் ஒன்றியே நிலைத்திருப்போம்.

நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் “அன்பு சித்தர்கள் முனிவர்கள் மாமகரிஷிகள்”
கரிய நிழல் மாயை கால் சதங்கைதான் அசைக்க
அறியப்பெறும் எண்ணம் அசைத்த ஒலியின் கண் நின்றசைய
மாமுதல்வன் ஆர் அறிய வந்திட்ட உயிரணுவே
ஆவெனும் மாயப்பசு இயல் குணத்தின் சுவை மாற்றும்
வாரணன் கோடி வாதிட்ட வன்மை நிலை போலும்
இது ஒரு சிருஷ்டி… உலக நடைமுறையின் இயக்கம், வந்த வினை கண்ட உயிரின் பரிணாம வளர்ச்சியின் “தாத்பரியம்…”
திசை யானைகள் இழுக்கும் சிவமாக (பூமி) நீ அமைந்தாய். சுவை குணம் விளக்க… மாயை தன் நிலையில் எண்ணத்திற்கொப்ப செயலுறுத்தும் நிலையை விளங்கிக் கொள்.
1.வினையால்… பசுக்களாகிய உயிரணுக்கள் (உடலில் உருவான அணுக்கள்) தன் நிலையில் தான் ஏக…
2.அந்த வினையின் தொடர் வலுப்பெற
3.எண்ணம் கதியாகி… கதியுறும் எண்ணம் வினையாகி
4.வினையின் தொடர் நீண்டு விதி செயலுற
5.கொண்டிட்ட எண்ணங்களே சகலத்திலும் வழி நடத்திடும் இயக்கமப்பா.
மறுவினைப் பயன் காட்டும் ஜெபமாம் ஆகுதி (நெருப்பு – வெப்பம்) கொண்ட எண்ணத்தின் உயர்வைக் கூட்டி (தியானத்தில் எடுக்கும் சக்தி)… மனிதன் தெய்வநிலை பெற்றிட சகலத்தையும் தம்முள் உணர்த்தும்… சகலமும் காந்தமாகச் செயல்படும் நிலை அறிவாய்.
தீவினையாகிய உயிரணுக்கள் கொண்ட எண்ணத்தின் மாறுபாட்டால் தாக்குறும் நிலையே “மாயப்பசு” (தீமை செய்யும் அணுக்கள்). அந்நிலையை மாற்ற வேண்டும் என்றால்
1.ஈஸ்வர தியானமே ஆகுதியாக… நல்ல நிலை உணர்த்தும் யாகமாக
2.தன்னைத்தான் உயர்த்தி… நற்சுவாசத்தால் நல்ல அணுக்களைக் கூட்டி,
3.உயிரான்மாவின் பரிமாணத்தைக் காத்துக் கொண்டு எது நல்நிலையோ அந்நிலைக்கு உயர்த்துவது
4.சகலத்திற்கும் சகலமாய்க் கலந்துள்ள “ஈஸ்வரர் அருள் (வேகா நிலை பெற்ற மகரிஷிகளின் சக்தி) என்ற பேரருள் சூட்சுமம்…”
“கல்ஆல்” என்பதே உலகோதய நிலையைக் குறிக்கின்றதப்பா. அதன் கீழ் வாழும் நாம்
1.அந்த உலகோதய நிலையை மறந்து எடுக்கின்ற நற்சுவாசம்
2.தியானத்தின் வழியாக சதா சர்வ காலமும் நின்று நிலை பெற்றிருக்கும் அது “உன்னத நித்திய பரிபூரண ஆனந்த லயம்…”
3.அதுவே ஊன்றி உயர வேண்டிய நல் நிலைகள்.
மனிதன் என்ற ஜீவிதத்தின் தொடக்கமே பரமார்த்த நிலை (மனிதப் பிறவி தான் முழுமுதல் கடவுள்). அன்றி வேறு எந்தப் பிறவியாலும் மெய்யை அறியப்படுகின்ற செயல் கூறுகள்… எந்த விதத்திலும் சாத்தியமில்லை…! என்பதே மகரிஷிகள் காட்டிய உண்மை நிலை.
கரும்பின் சாறு சிதறி விடாமல் காக்கின்ற “கரும்பின் கணுக்கள் போல்…” நாம் கூட்டிக் கொள்ளும் ஆத்ம பலத்தின் நிறைவுகளைக் காக்கின்றவர்கள் யார்…?
1.அன்பு சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் மாமகரிஷிகள் சப்தரிஷிகள் சூட்சுமமாகச் செயல்பட்டு
2.ஆதி சக்தியின் சூட்சும மூலத்தின் மூலமாக… நம் மீது அருள் ஒளிபாய்ச்சி
3.நம்மைக் காத்திடும் ஔஷதங்களாகச் செயல்படுபவர்கள் அவர்கள் தான்.
மனிதன் பெற வேண்டிய பேறு என்னப்பா…? திசை யானைகளாகக் காட்டிய கல் யானைகள் கரும்பு அருந்தியதாகத் திருவிளையாடல் புராணம் விளக்கம் கேட்கின்றாய்.
கல் யானை… “கரும்பு அருந்தியது” என்பதன் மெய்ப்பொருள் என்னப்பா..? “பேரருள் செல்வம்” தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் பேரானந்த நிலையைச் சித்தரிக்கும் ஆனந்த நிலையப்பா அது.
கரும்பின் இயல்பான குணத்தன்மைகள் தன் சுவையை… சுவையின் குணத்தை ஈர்த்திட்டே வளர்ச்சியின் வளர்ப்பாகப் பலன் என்று உருவாவதைப் போல்… ஞானத்தின் பங்கு அந்த நிலை பெற… காத்திடும் மகரிஷிகள் செயல் கொண்டிட… சூட்சுமமாய் ஜோதியில் கலந்திடவே அந்த நிலைகள் கூறப்பட்டன.
சிவலிங்கம் என்பது இந்த உலகம் தான். பால்வெளி சூட்சுமத்தில் செயல்படும் நிலைகள் பேரண்ட இருளாக அனைத்திலும் காந்தத்தின் புலமாய் எங்கும் பரவிப் படர்ந்ததைப் “பராசக்தி” என்று கூறிய உண்மை நிலை என்ன…?
சகலமும் ஆவி தான்…! ஆவியின் அமில நிலைகள் தான். எரிகின்ற நெருப்பு அதனுள் இருந்து வெளிப்படுத்தும் புகைத்தன்மை போன்ற மெல்லிய படலங்கள் கண பரிமாணம் கொண்டு… தன் குண நிலைகளுக்கொப்ப “திடக்கோளம்” கொள்கின்ற சூட்சுமத்தின் உண்மைகளை உணர்ந்து பார்.
மறைபொருள் எப்படி உறை பொருள் ஆகிறது…?
1.அனைத்திலும் ஆவியான அமில குணத்தன்மைகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி
2.தத்தமக்குரிய குணங்கள், அதனுடன் இணையும் அமில குணங்களுடன் இணைந்து கொண்டிட்டு
3.ஒவ்வொன்றின் குணத்தன்மைகளுக்கொப்ப மேகங்களாக மாறி
4.அந்த அமில மேகங்கள் மூலத்தின் மூலங்களின் தன்மைகளைத் திரவநிலை கொண்டிடும் அமில நிலைகளாகவும்
5.உருவாக்கும் செயல் தன்மைகள் பிறிதொன்றில் மோதி தன் நிலை மாற்றி மற்றொன்றாக உருவாக்கிடும் செயலில் செயல்பட்டு
6.அதன் செயல்பாட்டில் தன் குண நிலைகளை மாற்றிக் கொண்டு செயலுக்குச் செயல்படும் குணங்கள் கொண்டும்
7.அவைகள் உயிரணுக்கள் செயலுக்கு நிறம் மணம் குணம் என்றே கோடான கோடியாகப் பல்கி பெருகி
8.உதிக்கின்ற உயிரணுக்கள் பூதியின் தூசுப்படலம் என்கின்ற தன்மையாக நெருங்கிச் சேர்ந்து
9.ஒவ்வொன்றின் ஈர்ப்பில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உருவாகும் நிலையே உறை பொருள் தன்மை (ஆவியாக இருப்பது நீராகி பொருளாகி கோளாகி நட்சத்திரமாகி சூரியனாகி பிரபஞ்சமாகும் நிலை).
கோடான கோடி நிறங்கள் மணங்கள் குணங்கள் என்றே பால்வெளியில் படர்ந்து… காந்தத்தின் புலமாக… உறை பொருளில் உருவாகும் நீரமில சக்தியில் ஒன்றுடன் ஒன்று கலந்து… செயலுறும் தன்மைகள் எத்தனை எத்தனையோ நடைபெற்றுக் கொண்டிருக்கும் “இயற்கையின் சக்தியே பேரானந்தப் பெருநிலை…”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த உபதேச வாயிலாக உங்களைத் துருவ நட்சத்திரத்திற்கு அழைத்துச் செல்கின்றேன் (ஞானகுரு). அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஒரு கருத்தன்மையாக உருவாக்கச் செய்கின்றேன்.
1.ஒரு கம்ப்யூட்டரில் சேமித்து வைத்தது போன்று உங்களுக்குள் பதிவு செய்து விட்டேன்
2.எப்போழுது தீமை வருகிறதோ அந்த நேரத்தில் யாம் சொன்ன உபதேசங்களை நினைவுபடுத்தினால்
3.தவறை நீக்கக்கூடிய உபாயம் வரும்.
சந்தர்ப்பத்தில் வேதனையான நிலைகள் வந்தாலும் உடனடியாக ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திந் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வரும்.
1.அந்த இடத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்…?
2.நாம் எப்படி வாழ வேண்டும்…?
3.இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற நல்ல சிந்தனைகள் வரும்.
ஆனால் இன்று பெரும்பகுதி… ஒருவன் தவறு செய்கிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் அவனை எப்படி மடக்க வேண்டும்…? என்று உணர்வு தான் வரும்.
அந்த உணர்வைச் சேர்த்த பின் அவனை இங்கே தட்டலாமா…? அங்கே தட்டலாமா…? என்று கால்குலேசன் பண்ணுவோம்.
பணம் இருப்பதால் தானே எவ்வாறு செய்கின்றான். பணம் வராமல் தடுத்தால் நம்மை எதிர்க்க மாட்டான் அல்லவா… கஷ்டப்படுவான் அல்லவா…! என்று இந்தச் சிந்தனைகள் ஓடுகின்றது.
ஆக… கம்ப்யூட்டரில் ஆணைகள் இடப்பட்ட பின் அது தன்னிச்சையாக இயக்குவது போல் நமது உயிர் எலக்ட்ரிக்காக இருக்கின்றது. நம் நுகர்வதை எலக்ட்ரானிக்காக மாற்றி
1.ஊழ்வினை என்ற வித்தாக்குகிறது
2.எல்லா ரெக்கார்டையும் சேர்த்து வைக்கிறது.
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக வளர்ந்து சர்வத்தையும் உருவாக்கும் மனித உடலுக்குள் ஊனாக மாறிவிடுகிறது.
எந்த அணுவின் தன்மை வந்தாலும் அதன் கருத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்… எலும்புக்குள் இருக்கும் ஊன் என்ற வித்து…!
ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வளர்த்து அடுத்துப் பிறவியில்லா நிலையை அடையுங்கள்.
1.நாம் தேடிய சொத்து எதுவும் நம்முடன் வரப்போவதில்லை.
2.உடலையே காக்க முடியாது போகிறது… பின் தேடி வைத்த சொத்தைக் காக்க முடியுமா…?
3.செல்வம் கூடக் கூட வேதனைகள் கூடிக் கொண்டே வரும்
4.வேதனை கூடக் கூட எந்த செல்வத்தைப் பெற முடியும்…? வேதனை என்ற அழுக்குச் செல்வத்தை தான் தேட முடியும்.
ஒரு மிருகமாக ஆகிவிட்டால் செல்வத்தைப் பார்க்க முடியுமா…? அதை பார்த்தாலும் மிதித்து விட்டுத் தான் செல்லும். அதே போலத் தான் வேதனை என்ற உணர்வு அதிகரித்து விட்டால் நாம் மிருக உடலிற்குத் தயாராகி விடுகிறோம் என்று அர்த்தம்.
கடுமையான வேதனைக்கு உள்ளாகும் போது அழகான துணிகளையோ நகை நட்டுகளைப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் வரும். நோயுடன் நீங்கள் படுத்திருக்கும் பொழுது அப்படி அலங்காரம் செய்ய வேண்டும் இப்படி அலங்காரம் செய்ய வேண்டும் என்று யாராவது சொன்னாலே நமக்கு எரிச்சலாகும்.
அட… கொஞ்ச நேரமாவது நல்ல சட்டையைப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்…? போட வேண்டும் என்று சொன்னவர் மீது வெறுப்பு தான் வரும்.
மிருகம் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுத் தான் போகும். ஆகவே இந்த உணர்வின் தன்மை மிருக உடலுக்குத் தான் தயாராகின்றது.
அதைத் தான் சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரம் காட்டுகிறது. ஒரு மனிதனுடைய தவறான நிலையைப் பார்க்கும் பொழுது சித்திரம். அவன் வெளிப்படுத்தும் உணர்வினை நமக்குள் சேர்த்த பின் புத்திரன். உடலில் அணுவாக உருவாகிறது.
புத்திரன் ஆன பிற்பாடு…
1.எந்த உடலில் இருந்து வந்ததோ அதே குணத்தை எடுத்து உடலுக்குள் கொடுத்து நாம் வளர்க்கின்றோம்
2.இதையே வழியாக அமைத்துக் கொண்டு அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு வரும்பொழுது
3.எந்தக் குணத்தை எடுத்தோமோ அதுவே பாசக் கயிறாக மாறுகின்றது.
எமன் எது மேலே வருகின்றான்…? எருமை மீது…! சிந்தனையற்ற நிலைகள் ஆகும் போது எடுத்துக் கொண்ட பாசக் கயிறு அந்த உணர்வுக்குத் தக்கவாறு எமன் நரகலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றான் என்று தெளிவாகவே நமக்குக் காட்டுகின்றார்கள்.
அப்பொழுதாவது இந்த உண்மையை உணர்கின்றோமா என்றால் இல்லை.
“மார்க்கண்டேயன்…” என்றும் பதினாறாக சிவலிங்கத்தை… உயிரைக் கட்டிப்பிடித்துக் கொள்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
1.உயிரை கட்டிப்பிடித்தால் என்ன செய்யும்…?
2.எமனால் அவனை இழுக்க முடியவில்லை…
அதாவது…
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை ஒளியாக ஆக்கப்படும் பொழுது
2.எவரும் இழுக்க முடியாது என்று அதையும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
துருவ நட்சத்திரமும் சரி சப்தரிஷி மண்டலங்களும் சரி அது என்றும் பதினாறாக அழியாத நிலைகள் கொண்டது. அந்த எல்லையை நாம் அடைய வேண்டும்.
வாழ்க்கையில் எத்தனை சந்தோஷங்களை நாம் அனுபவிக்கின்றோமோ என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு பெற முடியும். இருளை அகற்றி மகிழ்ச்சி என்ற ஒரு கோட்டையாக அது அமைக்கும்.
1.இந்த உடலில் சந்தோஷம் எப்படி இருக்கிறதோ
2.அதே மாதிரி உணர்வு உயிருடன் ஒன்றிய ஒளியின் நிலையாக மாறும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தீமையை நீக்கும் எண்ணங்கள் வரும் பொழுது தான் இராமன் சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான் என்று காவியம் காட்டுகிறது.
1.தாக்கும் உணர்வு வந்தால்… எதிர்த்துத் தாக்கும் உணர்வே வருகின்றது
2.ஆனால் அரவணைக்கும் உணர்வின் தன்மை இருந்தால்… தன்னுடன் இணைந்து வாழும் நிலை வருகின்றது.
அது தான் “கல்யாணராமா…”
அரவணைக்கும் தன்மை கொண்டு நாம் நண்பனை இணைத்தால்… இந்த உடலுக்குள் தன்னுடன் இணைந்து வாழும் சக்தியாக அது எவ்வாறு கொடுக்கிறது என்று இராமாயணக் காவியம் தெளிவாகக் கூறுகின்றது.
அதை நாம் சிந்தித்தோமா…? என்றால் இல்லை.
மூலக்கூறுகளை விடுத்து விட்டு அவரவர்கள் உணர்வுக்கொப்ப காரியங்களைத் தீட்டிக் கருத்தினை மாற்றி மனிதன் வாழ்க்கைக்குண்டான போர் முறைகளைக் கையாண்டு “ஏமாற்றுவதும்… ஏமாற்றி வாழ்வதே சரி…” என்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டனர்.
இராமன் மிகவும் வலிமை கொண்டவன் என்று காட்டுகின்றனர். அன்று விசுவாமித்திரர் தான் யாகம் செய்யும் போது அசுரர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக இளம் பிராயத்தவர்களான இராமனையும் இலட்சுமணனையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.
பல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து எனக்குப் பாதுகாப்பாக இருங்கள் என்று சொல்கிறார். அதன்படி அசுரர்கள் தாக்குதலில் இருந்து இராமன் விசுவாமித்திரனைக் காக்கின்றான்.
ஆனால் விசுவாமித்திரனோ மிகவும் கொடூரமானவன்… கோபக்காரன்… பல அரசாட்சிகளைப் பிடித்தவன்… யாகத்தை வளர்த்தவன்… வலிமை பெற்றவன் தான்.
இவ்வளவும் இருந்தும் மீண்டும் வலிமை பெற வேண்டும் என்ற ஆசையின் உணர்வு உண்டு உலகை அடக்க வேண்டும்… உலகை அடிமையாக்க வேண்டும் என்று உணர்வின் வேகம் கொண்டு யாக வேள்விகளை நடத்த விரும்புகின்றான்.
யாக வேள்விகள் நடத்தப்படும் பொழுது எதிர்கொண்டு தாக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக இராம இலட்சுமணர்களை அழைத்துச் செல்கின்றான். அந்த யாக வேள்வியும் நிறைவடைகின்றது.
ஆனால் அப்பேர்ப்பட்ட நிலையில்…
1.மற்றவர்களைக் காக்கும் நிலையாக அசுரர்களைக் கொல்லும் திறன் பெற்றவன்…
2.அசுரர்களின் செயலாக்கங்களை அறிந்து அவர்களை வீழ்த்தக்கூடிய திறன் பெற்றவன்…
3.மிக வல்லமை பெற்றவன் இராமன் என்று இருந்தாலும் தன் மனைவியுடன் காட்டிற்குள் செல்லும் போது என்ன நடக்கிறது…?
காட்டிற்குள் செல்லப்படும் பொழுது சூட்சம நிலைகள் கொண்டு அசுரனான இராவணன் சீதாவைக் கடத்திச் செல்கின்றான்.
ஆனால் வலுக் கொண்ட இராமன் அதைக் கேள்விப்படும் போது “தன் மனைவி போய் விட்டதே என்று மயங்கி விழுகிறான்…!” என்றால்
1.அப்பொழுது இராமனின் செயல் என்ன…?
2.இதை ஏன் காவியத்தில் இவ்வாறு சித்தரித்துக் காட்டுகின்றார்கள்…? என்று சற்று சிந்தித்தல் வேண்டும்.
வலிமை கொண்டவன் “தன் மனைவி போய் விட்டதே” என்று எண்ணும் பொழுது இதைப் போல் பிறிதொரு மனிதன் வெளிப்படுத்திய வேதனையைத் தனக்குள் நுகரப்படும் பொழுது… அந்த வாலியின் தன்மையே (நல்ல உணர்வின் வலிமை குறையும்) இங்கே வரும்.
கோதண்டத்தை முறித்து வேதனைகளை நீக்கிச் சீதாவை திருமணம் செய்து கொண்டவன்… கல்யாணராமன் என்று சுயம்வரத்தில் வென்றவன்… சீதாவைக் காணவில்லை என்று
1.“அந்த வேதனையான உணர்வை… விஷத்தின் தன்மையைக் கொடுத்தால்…”
2.இவனுடைய எண்ணத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்…? என்பதைத்தான் இராமாயணக் காவியம் தெளிவாகக் காட்டுகிறது.
இதையெல்லாம் அவர்கள் உணர்வுகளுக்கொப்ப காவியங்களைத் தீட்டி உண்மையின் உணர்வை அறியாதபடி தீமையின் விளைவுகளுக்கே பயன்படும்படி செய்து விட்டார்கள்.
நீங்கள் அந்த மூலக்கூறுகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).


மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் “செருகேற்றிக் கொள்ள வேண்டும்”
நம் எண்ணத்தின் வலுவான நிலைகள் கொண்டு மகரிஷிகளைப் பற்ற வேண்டும் என்றால் நம்முடைய எண்ணத்தை அது அழித்து விடும்.
1.மகரிஷிகளை நுகர்ந்தெடுப்பது மிகவும் கடினம்.
2.தனித்து இருந்து மகரிஷியின் ஒளியைப் பெறுவேன் என்றால் அது முடியாத நிலைகள்.
தனித்துப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
பல கயிறுகளை எடுத்து ஒரு கயிறாகத் திரித்து வலுவாக்குவதைப் போன்று
1.நமது எண்ணங்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஒருக்கிணைந்த வலுவின் துணை கொண்டு நாம் ஏங்கி எடுப்போம் என்றால்
3.நமக்கு முன் படர்ந்திருக்கும் அவருடைய உணர்வுகள் நமக்குள் பலவாகி அவருடன் சமமாகி
4.அந்த உணர்வின் நிலைகள் நாம் எண்ணி ஏங்கும் பொழுது நம் ஆன்மாவிலே கலக்கிறது.
5.பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் உறையும் தன்மையாக நினைவின் ஆற்றலை
6.மகரிஷியின் அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் என்று எண்ணி உள் செலுத்தும் பொழுது நமக்குள் ஊடுருவுகின்றது.
7.அப்பொழுது அந்த உணர்வின் சத்து மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது கருவுற்று “உணர்வின் வித்தாக உருப்பெறுகின்றது…”
நமக்காக எத்தனையோ வேதனைகள் பட்டு நம்மைக் காக்க நம்முடைய மூதாதையர்கள் அனுபவித்த நிலைகள் அவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் அந்த உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும்.
கூட்டுத் தியானம் இருந்து வலுவேற்றிய உணர்வு கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை ஏகோபித்த நிலைகள் கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.
அவர்கள் மீண்டும் உடல் பெறாத நிலைகளில் உடல் பெற்ற உணர்வினை அங்கே கரைத்துப் பஸ்பமாக்கி
1.உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை
2.அறிந்திடும் ஆற்றலின் இயக்கத்தின் தன்மை கொண்ட அந்த உணர்வின் நினைவலைகள் உயிருடன் ஒன்ற அங்கே செயல்படுத்த வேண்டும்.
3.அங்கே ஒளிக் கடலிலே கலக்கப்பட்டு உடல் பெறும் தன்மை அங்கே கருக்க வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அங்கே நிலைக்கச் செய்தல் வேண்டும்.
அப்போது அந்த ஒளி பெற்ற உணர்வின் தன்மை “அந்த ஞானியின் உணர்வுகள் இவர்களுக்குள் உணவாகச் சேருகின்றது…” ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் நிலைத்திருப்பார்கள்.
அதுதான் பெருவீடு பெரு நிலை என்ற நிலை…!
அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வை நாமும் பின்பற்றி அதைப் போல நாமும் ஒருங்கிணைந்து அருள் ஞானிகள் ஆற்றலைப் பெற வேண்டும் என்று ஏங்கினோம் என்றால்… அந்த உணர்வின் ஆற்றல் நமக்குள் பட்டு நம்மை அறியாது வந்த இருளை அகற்றும் நிலையும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் அவர்கள் உணர்வு கொண்டு நாமும் அங்கே விண் செல்லலாம்.
ஆகவே தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானியின் உணர்வின் வலுக் கொண்டு அதனை நாம் நுகர்ந்தோம் என்றால் அதைப் பற்றி அதனின் நிலைகள் கொண்டு பிறவா நிலையும் ஒளியின் சரீரமாகவும் ஒளியின் சிகரமாகவும் நாம் வாழ்ந்திட முடியும்.
என்றும் பதினாறு என்று நிலை…!
ஒளியின் சிகரம் வளர வளர அது என்றும் 16 என்ற பருவத்தையே அடைந்திருக்கும்… நிலையான நிலைகள் பெற்றிருக்கும்… இன்னொரு உடல் பெறாது இருளை அது கவராது.
ஒரு வைரம் ஒளியின் சுடராக இருக்கின்றது. அது சுக்கு நூறாகத் தெறித்தாலும் அது மங்குவதில்லை.
1.அந்த வைரத்தை வைத்து ஒரு பொருளை கோடிட்டால் அதைக் கீறி விடும் இதைக் கீற முடியாது.
2.இதனை ஒத்த அதே வைரத்தின் தன்மையை இதனுடன் இணைத்தால்
3.உராயும் தன்மை கொண்டு அதனின் நிலைகளைச் செருகேற்றலாம்… ஒளியின் தன்மை மின்னச் செய்யலாம்.
இதைப் போலத்தான்
1.அந்த அருள் ஞானிகளின் உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் எடுத்துச் செருகேற்றி
2.நமக்குள் இருக்கும் குணங்களை மின்னச் செய்யலாம்.
3.மின்னும் நிலை கொண்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வின் ஆற்றலும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் தன்மையும் நமக்குள் வருகின்றது.
ஆகவே அந்த மகரிஷிகளின் அருளாற்றலை நாம் அனைவரும் பருகுவோம்.

கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக மாறினாலும் அதை அறிய வேண்டுமல்லவா…!
ஜீவன் பெற்று உடல் கொண்டு வாழும் மனிதன்
1.இயற்கையின் கதி குணங்களுக்கொப்ப எண்ணுகின்ற எண்ணத்தின் காந்தப்புல ஈர்ப்பு நிலைகளில்
2.சுவாசம் எனும் காற்று கொண்டு… பிடர்தல் (உந்துதல்) குண எந்த எண்ணமோ
3.அந்த எண்ணத்தின் வலு வீரிய காந்த ஈர்ப்பில் பிடர்தல் குணத்தன்மைகள் போல்
4.காற்றில் உலாவி ஓடிடும் படர்தல் குண கோடானு கோடி விசேஷத் தன்மைகளில்… “ஒத்த நிலையை ஈர்த்துக் கொண்டு”
5.சுவாசக் காற்றாக ஈர்க்கப்பட்ட ஒத்த குணங்களின் வலு வீரியத்தில்… “எக்குணம் பிடர்தல் கொண்டு வலுவாக்கப்பட்டதோ”
6.அந்த வலுவின் வலுவிற்கே வலு கூட்டிக் கொண்டிடும் ஜீவனாக… “அதே குணங்கள் மென்மேலும் ஈர்க்கப்பட்டு”
7.இரத்தத்தில் கருவுற்று அணுக்களாக உருப்பெற்று… அது தசைகளில் சேர்க்கப்பட்டு
8.எண்ணுகின்ற எண்ணம் தெய்வீக குணங்களற்ற… மாற்று நிலை (மீண்டும் பிறவிக்கு வரும்) கொள்ளப்படும் குணங்களாக இருந்திட்டால்
9.அந்தக் குணங்களுக்கொப்ப சேர்க்கப்படும் அமிலங்கள்… தியானம் கொண்டு நல்ல அணுக்களாக மாற்றம் செய்யப்படவில்லை என்றால்
10.உறைதல் குணம் கொண்டிட்டே (உடல் உறுப்புகளில் மாற்றமாகி) சரீரத்தையே நலிவுறச் செய்திடும் கதியாகி
11.பின் வினையாகி… பின் செயலுறும் வினைப் பயனாகி…
12.பின் விதியாக்கிடும் நிலைபெறும் செயல் கூறுகள் கொள்ளுகின்ற
13.கொள்ளப்படுகின்ற (விதிப்படி எடுக்கப்படும்) எண்ணத்தையே செயல் நடத்திடும் உயிர் கடவுளை இயக்கிடும் உணர்வலைகள்
14.உயிராத்மாவாகப் பதிவு பெற்றிடும் ஆத்ம சூட்சுமத்தில்
15.நாம் கூறிடும் இந்த எளிய தியானத்தின் வழியாகப் பெறப்பட வேண்டியது “ஆத்ம பலம் ஒன்றே…”
இயற்கையின் கதியால் சுவாச நாடிகளில் ஓடிடும் காற்று… பரிசுத்தமாக அமையப் பெற்றிட உன் முயற்சி இருந்திட்டால் மாற்று நிலை அமிலக் கூறுகளின் அணுக்கள் உடலுக்குள் உறையும் நிலை தடுக்கப்படும்.
மேல் நோக்கிய சுவாச நிலைகள் மாறு கொண்டிட்டால்… “கனம் கொண்ட” சுவாச அலைகள் (கோபம் பயம் துன்பம் பொறாமை குரோதம்) சரீர நாடிகளில் ஓடிடும் பொழுது அதனால் தடை ஏற்பட்டு… சரீரத்தின் வெப்ப கதியும்… நீர் அமில சக்தியில் கலந்திட்ட மாற்றமில குணத் தன்மையையும் சுவாச நாடிகளில் “நற்சுவாசத் தடங்கல்கள்” ஏற்பட்டுவிடும்.
அத்தகைய காலத்தில்…
1.வெப்பமும்… நீர் சக்தியுடன் கலந்திட்ட அமில குணங்களும் சுவாச நாடிகளில் நற்சுவாசத் தொடர்பின்றி
2.நற்சுவாசக் காற்றின் தொடர்பும் வெப்ப சக்தியில் கலந்துறும் சூரிய சக்தியும் நீர் அமில சக்தியுடன் கலந்து… தீவினைப் பயனுறும் செயலாக மாறி
3.விசேஷ செயல் உறாமல் (நல்லது ஏற்படாது) காற்றின் சூட்சுமம் தடைப்பட்டே… ஒன்றுடன் ஒன்று நெருங்கிக் கொண்டிட்ட தன்மையாக
4.காற்றின் மூலத்தைத் தாக்கிடும் செயலாக… தசைகளில் வேதனையாகி சுவாச சமைப்பால் அங்கு (உடலில் ஆங்காங்கு ஏற்படும் வலி) அறிந்து கொள்கின்றோம்.
உறையும் நிலை இங்கு அதிமுக்கியம். நற் சுவாச குணங்கள் எடுக்கப்படும் போது அதனால் காக்கப் பெறுவது சரீரம் மாத்திரம் அன்று… ஆத்மாவும் தான் காக்கப்படுகிறது.
வேதனையைச் சரீர உணர்வுகள் காட்டுகின்றன… அதுவே ஆத்மாவின் பதிவாகச் சேரும் நிலையை உணர்ந்தாயா…?
சரீரம் கொண்டு தன்னைக் காத்துக் கொண்டிடும் செயல் கூறுகள் இந்த மனிதனுக்கு மாத்திரம் தான் உண்டு என்று எண்ணிடலாகாது. இயற்கையில் ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் இத்தகைய நிலை உண்டு.
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் வந்து நீ கண்டிருப்பாய். ஆகாய நீர் உரிக்க அறிந்தவனப்பா நீ. புலர் காலைப் பொழுதில் புல் பூண்டு செடி கொடிகளின் மீது பனித்திவலைகள் முத்து முத்துக்களாக உரு கொண்ட நிலையைப் பார்த்திருக்கின்றாய். அது எவ்வாறு உருப்பெறுகின்றது…?
பருவ காலமான பனிக்காலத்தில் பெய்கின்ற பனி அப்படி உருப்பெறுகின்றது என்று நீ நினைக்கின்றாய். ஞான விழிப்பு தந்தாயிற்றே… சொல் பார்க்கலாம்…!
அறிந்ததைத் தெளிவதே ஞானியருக்கு அழகு.
நண்பகலில் சூரியனின் வெப்ப அலைகளைச் சமைத்திடும் பூமி… தன் சமைப்பில் வெளிப்படுத்திடும் வெப்பத்தின் அலைகள்… உணர்வலைகள் கொண்டு வெப்ப கதியாகப் படரும் செயல் பகல் பொழுதிலும்… அதே வெப்ப அலைகளைப் பெற்றிடும் சகல தாவரங்களும் ஜடப் பொருள்களும் ஏன் மனிதனும் கூட உணர்ந்து கொண்டிடும் அச்செயல் சூரிய அஸ்தமன செயலுக்குப்பின் இரவிலே வெப்பத்தின் நிலை என்ன…?
பூமி சமைத்து வெளித்தள்ளும் சுவாசகதியாக
1.அதி வெப்ப நிலைகள் பூமியின் சுவாச உணர்வலைகளால் சமைப்பின் பின் வெளிப்படும் நிலையே
2.மேல் நோக்கித் தள்ளப்படும் வெப்பக் காற்று சென்று…
3.பின் அந்த இடத்தை நோக்கி குவியப் பெறும் பருவ காலத்தின் நீர் அமிலக் காற்று… கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.
தாவரத்தை எடுத்துக் கொள். வெப்பத்தைப் பெற்றிருக்கும் பகல் பொழுதில் பூமியின் சுவாச அதி வெப்பம் தணிவுறும் இரவின் போது… தான் பெற்றுக் கொண்டிட்ட வெப்ப அமில நிலைகளை வெளிப்படுத்திடும் பொழுதே… காற்றில் படர்வு நிலை பெறும் குளிர்வு நிலை நீர் அமில சக்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்திடும் பொழுதே… ஈர்த்திடும் கிரியைகள் மிக மிக நுண் நீர் அமிலக் கூறுகள், ஈர்ப்பில் படர்வு பெற்றே… இரவுக் காலம் முழுவதும் நடைபெறும் அந்தச் செயலால் உருப் பெற்றிடும் திவலையாக… துளிகளாகக் காண முடிகின்றது (VAPORISATION AND CONDENSATION).
இதையே உன் சரீர செயலில் கண்டு கொள்.
ஜடப்பொருளான எத்தனையோ பொருள்கள் மேஜை சுவர்கள் எங்கிலும் நடைபெற்றிடும் செயலில் ஜீவன் கொண்ட தன்மைகளில் அந்த செயல் ஜடப் பொருள்களில் அறியவொண்ணாதது.
உறைபடு செயல்கள்… மறைபடு பொருள்கள்…! அதாவது…
1.கண்ணுக்குப் புலப்படாதது கண்ணுக்குப் புலப்படுவதாக உறைந்தாலும்
2.உடலுக்குள் ஆகப்படும் போது அது மறை பொருள் தான்.
3.அதை அறிய வேண்டியது மிகவும் அவசியம் அல்லவா…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.
ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.
ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.
அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.
“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.
நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.
காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.
அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?
எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.
மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.
இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.
என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.
நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.
சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.
காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.
இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.
ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.
பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.
என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.
சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.
இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.
“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.
உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.
பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!
நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?
உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.
உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!
உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.
விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.
ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…?
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?
அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.
உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.
நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்
.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்…?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்… செல்வாக்கு வர வேண்டும்… என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்
ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?
காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது… செய்வது வேறாக இருக்கிறது.
பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்…?
ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.
ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்…?
1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.
கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது – அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.
அதாவது… காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்… அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.
அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.
ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை… கிடைக்கவில்லை… என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே… இப்படியே நடக்கின்றதே…! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.
சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.


நாம் எண்ணும் எண்ணங்களும்… பித்த சுரப்பியின் இயக்கங்களும்
இந்த வாழ்க்கையில் அடிக்கடி நம்மை அறியாமல் வேதனைப்பட்டோம்… பயந்தோம்… என்றால் அத்தகைய உணர்வுகளினால் உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள் சுரக்கும் சுரப்பும்” அதிகரித்துவிடும்.
பாம்பு கடுமையான தன் விஷத்தின் தன்மை கொண்டு அதனுடைய தலை சிறிதாக இருப்பினும் பெரிய உயிரினங்களைக் கூட விழுங்க முயற்சிக்கும். அந்த உயிரினத்தைப் பிடித்து விட்டால் தன் உடலில் உருவான விஷத்தின் தன்மைய கொண்டு அந்த உயிரினத்திலே பாய்ச்சி அதைப் பலவீனப்படுத்தி… உடலுக்குள் செல்லச் செல்ல அந்த உயிரினம் கரையும் தன்மை அடைகின்றது.
அதைப்போல மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் நாம் உணவாக உட்கொண்டாலும் நமக்குள் இருக்கும் பித்த சுரபி அதுவும் நஞ்சு தான்.
1.பித்த சுரப்பி எந்த அளவிற்கு உமிழ்த்துகின்றதோ
2.அது உணவுடன் கலக்கப்படும் பொழுது உணவைக் கரைத்து விடுகின்றது.
அடிக்கடி நாம் கடினமான உணவுப் பொருளை உட்கொள்கிறோம் என்றால் “பித்த சுரப்பிகள் அதிகமாக இயக்கப்பட்டு” அந்தக் கடினப் பொருளைச் சீக்கிரமே அது கரைத்து விடச் செய்யும்.
ஆனால் அடுத்த சமயங்களில் இந்த கடின பொருளை நாம் உட்கொள்ளவில்லை என்றால்
1.பித்த சுரப்பி உமிழ்த்திய வேகத்தில் நஞ்சு அதிகமாகி குடலுக்குள் அரிப்பும்
2.பசி கொடூரமாக இருந்தாலும் உணவு உட்கொள்ள முடியாதபடி தடைப்படுத்தும்.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது உடலின் உணர்வின் செல்கள் சீராக இயங்காது.
4.அப்போது உணவாக உட்கொள்வதில் சுவையை அறிய முடியாத நிலை ஏற்படுகின்றது.
5.சுவை அறியவில்லை என்றால் உணவை உள்ளே ஈர்க்கும் திறன் அது தடைப்படுகின்றது.
6.பித்தத்தில் கசப்பின் தன்மை அதிகரிக்கப்படும் பொழுது உணவை உள்ளே செல்ல விடாதபடி வெளிப்படுத்தும் சக்தியாக மாற்றி விடுகின்றது.
உதாரணமாக… ஒருவர் பலகாரம் சுடுகிறார் என்றால் தண்ணீரைத் தெளிப்பார்… எண்ணெய் எந்த அளவுக்குக் காய்ந்திருக்கிறது…? என்று பரீட்சித்துப் பார்ப்பார். வடையைத் தட்டிப் போடும் பொழுது அதில் எழும் நாதத்தின் ஒலி கொண்டு வெப்பத்தின் தணனலைக் கண்டு கொள்கிறார்.
வெப்பம் சரியாக இருந்தால் வடை நன்றாக வேகின்றது… சுவையாகவும் இருக்கின்றது. ஆனால் வெப்பம் சரியாக இல்லை என்றால் வடையைத் தட்டிப் போட்டால் அது லேசாக இருக்கும் பொழுது எண்ணெய் ஊடுருவி விடும்… வடை சுவை அற்றுப் போய்விடும்.
ஆக
1.வெப்பத்திற்குத் தக்கவாறு வடையில் அந்த மாவின் சத்தைச் சுவை கொண்டதாக மாற்றுவது போன்று
2.நமது உணர்வின் இயக்கச் சக்தி எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதைப் போன்றே ஜீரணிக்கும் சக்தி பித்த சுரபிகளுக்கு வருகின்றது.
3.பித்தம் அதிகரித்து விட்டால் மற்ற உறுப்புகளை இயக்கும் தன்மையும் குறைந்து விடுகின்றது உணவாக உட்கொள்ளும் நிலையும் மறைகின்றது.
ஏனென்றால் சாதாரணமாகத் தான் நாம் எண்ணினோம் கோபப்பட்டோம் வேதனைப்பட்டோம் எல்லாம் வேடிக்கை தானே பார்த்தோம் என்று நாம் இருக்கலாம்.
அந்தக் கோபித்த உணர்வின் செயல்கள் நம் உடலில் எவ்வாறு விளைந்து மாறுகிறது என்ற நிலையை தத்துவ ஞானிகள் இப்படித் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
1.ஆகவே நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் இயக்கும் மனித உணர்வுகள் அனைத்தையும்
2.தெரிந்திடும் நிலையும் தெளிந்து செயல்படும் நிலையும் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.
அதற்குத்தான் இதை எல்லாம் உங்களுக்குள் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

வழி நடத்த நான் இருக்கின்றேன்… சங்கடத்தை விட்டிடப்பா…!
கடலில் சதா சர்வ காலமும் கரைதனில் அலை வீசி மீண்டும் அதன் செயல் நடைபெறுதல் போலவே… சூட்சும நுண் அலைகள் நீல வண்ணம் காட்டிடும் அன்பாகக் கருணை என்னும் நிலையில்… நீ அன்பு என்னும் அலைக்கரத்தை நீட்டியே மெய் வழி அறிவாய்…!
யாம் சொல்லும் தியானத்தின் மூலம் எடுக்கும் நுண் மின் காந்த அலைகளால் இருளான இந்த உடலுக்குள் “ஒளி பெற்றிடும் உயிரணுக்கள் தோன்றிடும்…”
1.அப்படி ஒளி மண்டலமாகும் ஆக்கத்தில் திகழும் மூலக்கனல் பெறும் கந்தன்
2.தாய் மூச்சு நாடியின் (குறுதெலும்பு பாகம்) துணையுடன் மேல் எழுந்தே ஆறு ஆதார நிலைகளில்
3.நன்மை என்னும் உறுதி மலை மேல் ஏறி… ஆகாயக் கூறு என்றே அழைக்கப் பெற்றிடும் சிரசின் உச்சியில்
4.ஒளி பொருந்திய வேல் போல் தோற்றம் தந்திடும் அமைப்பினில் கிளர்ந்து எழுகின்ற பொழுது…
5.தாய் மூச்சு நாடியின்… சக்தி ஒளி மண்டல சுவாச அலைகளை
6.கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரைதனையில் வந்து மோதுவதைப் போல்
7.சிரசினில் மோதிடும் இடைவிடா காந்தப்புலன் மெய் ஒலி/ஒளி காட்டித் தடைப்படாத ஆனந்தத்தை உமக்கு அளித்திட… இனி தடை ஏது…?
ஆகவே… எத்தகைய சங்கட அலைகளையும் எண்ணியே ஈர்த்துக் கொண்டிடுதல் “இனி உன் நிலைக்குத் தகாதப்பா…”
சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு இயற்கையில் பூத்திடும் புஷ்பங்கள் அனைத்துமா விரிந்து மனம் வீசுகின்றது…? பக்குவப்பட்ட மலர்களையே கதிரவனின் கதிர் ஒளி அரவணைத்துப் பூக்கச் செய்கின்ற அன்பினை உணர்ந்து கொண்டாயா…?
1.ஓர் முறை வழி நடந்த என் பயணத்தில் என் தலைச்சுமையை இறக்கி வைத்து… இளைப்பாற்றி…
2.மேல் உத்தரியத்தினால் காற்றினை வீசி அரவணைத்த உனது உள்ளம் தான் இன்னும் உன்னை நாடியே வந்தடையச் செய்கின்றது.
3.சிவத்தின் தன்மை சிவாயத்துள் உன் மனநிலையை அறிந்து கொண்டிடவே தொடங்கிய பயணம் தொடர்கின்றது.
சகடம் போல் சுற்றுகின்ற வாழ்க்கைதான்… எண்ணத் தேர் மனமாம் மனதில்… அசைந்து அசைந்து ஏறுகின்ற செயலிலும் சகடம் சுழல்கின்றது.
தேரின் மையம் எது தெரியுமா…?
“தனித்துவ சக்தி” செயலுறுகின்ற மூகமோ (மௌனம்) அன்றி நிதானமோ…
1.சுழலுகின்ற சகடத்தையும் அந்தச் சுழற்சியின் ஓட்டத்தில் சுழலச் செய்யும் நிலை பெற்ற தேரின் அமைப்பை
2.அந்நிலையில் நிலைக்கச் செய்து… சாஸ்வதக் காட்சியாக வெளித் தோன்றாது.
சிறு பாகமான “அச்சாணி” விசை சேர்த்துக் கொள்கின்ற மையமாம் தனி சக்தி விசையாக்கும்.
1.வாழ்வினுக்கும் வழித் துணை என்றாலும்
2.செலுத்துபவனாய் நாமிருக்க… பஞ்சபூதங்கள் அமைவு பெறும் அனைத்தும் ஆகாயம் என்ற பால் வெளி.
வேதாள மாமகரிஷி அன்று உரைத்த “இந்த உரையில்” மறைபொருள் இரகசியங்கள் பல உண்டு.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஏற்கனவே சொன்னது போன்று அருணகிரிநாதரைக் காக்க வேண்டும் என்று அவருடைய சகோதரி
1.தீமைகளை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளாதபடி திருமூலர் உணர்வுகளைத் தனக்குள் ஏற்று
2.தன் சகோதரன் அவன் திருந்த வேண்டும் என்று அவனுக்குள் சென்று அவனையும் திருத்தி
3.மெய் உணர்வுகளைப் பெறச் செய்து இந்த உடலுக்கு பின் சகோதரனும் ஒளியானது… தானும் ஒளியானது.
திருமூல மந்திரம் என்பது சாதாரணமானதல்ல…!
இந்த உலகம் தோன்றிய நிலையிலிருந்து சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? பிரபஞ்சத்தில் இருந்து உயிரணுக்கள் எப்படி உருவானது…? மனித உடலுக்குப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற தத்துவத்தை அன்று அகஸ்தியன் கண்ட உண்மைகள் அனைத்தையும் திருமூலர் கண்டார்.
அதே காலத்தில் தான் வியாசகர் கண்டார் அதே காலத்தில் தான் வான்மீகியும் கண்டார். ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
1.உலகில் ஒரு சோதனை என்று வரப்படும் பொழுது
2.அறிந்திடும் ஆற்றலைப் பெற்ற அந்த அருள் ஞானிகள் தான்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மை எல்லாவற்றையும் அறிந்து
4.மக்களுக்கு அதை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்தனர்.
அந்த அருள் ஞானிகள் அகஸ்தியன் பெற்றதைத் தங்களுக்குள் வளர்க்கப்பட்டு வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லாம் நமக்குள் இனி இயங்கத் தொடங்க வேண்டும்.
விஞ்ஞானத்தால் வரும் பேரழிவிலிருந்து நம்மை காக்க வேண்டும். காரணம் விஞ்ஞானத்தின் அழிவு எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது.
காற்று மண்டலம் நாளுக்கு நாள் விஷத்தன்மையாக மாறினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைய வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது விஞ்ஞானத்தால் வந்த விஷத்தின் தன்மை நம்மைத் தாக்காது. இந்த உடலுக்குப் பின் ஒளி என்ற நிலையை அடைய முடியும்.
என்றும் மாறாத நிலையாக நாம் பெறுவதற்கு வலிமையான உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும் அதற்குத் தான் இங்கே அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுத்துத் தியான பயிற்சியையும் கொடுக்கின்றோம்.
நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞானச் சக்கரத்தைத் தெய்வீக நிலையாக குரு காட்டிய அருள் வழியில் பேரின்ப நிலை என்ற நிலையில் அருள் சக்கரமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதன் முன் அமர்ந்து தியானித்தாலே உயர்ந்த சக்திகள் கிடைக்கும் கவலையுடனும் சஞ்சலத்துடனும் இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.சக்கரத்தில் இருந்து உயர்ந்த உணர்வு வரும்…
2.நம்மைத் தெளிவாக்கும்… தெளிவான மனம் கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்…
3.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்ற உணர்வும் வரும்
4.பிறருடைய தீமைகள் நம்மை இயக்காதபடி தடைப்படுத்தி வாழவும் முடியும்
5.இந்த உடலுக்குப் பின் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்
6.மகிழ்ந்து வாழ முடியும்… மன நிறைவும் கிடைக்கும்.
ஆனால் வேதனை என்ற உணர்வு வளர்க்கப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் அதே வேதனையைத் தான் வளர்க்க முடியும். மனிதனல்லாத உருவாக மாற்றிவிடும் உயிர். இது போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் வழி வாழ்வோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்.
1.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடைய
2.வாழ்க்கையில் தொழில் வளம் பெருகவும் மன அமைதி பெறவும் அருள் வழி வாழவும்
3.அருள் வழி வாழச் செய்யும் அருள் சக்தி பெறவும் இது உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.
அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.
நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.
ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.
ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.
1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.
சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?
அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.
அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.
இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.
கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.
இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.
நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.
அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.
இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.
ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.
காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?
அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.
மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.
ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.


கோபம் அதிகமானால் விளையும் தீமைகள்
சந்தர்ப்பவசத்தால் “கோப உணர்வுகளை” அதிகமாக… தொடர்ச்சியாக நுகர நேர்ந்தால் இந்தக் கார உணர்ச்சிகள் நம் இரத்தங்களிலே உந்தப்படும் போது இரத்தத்தில் இருக்கும் நீரின் சக்தியை வடிக்கப்பட்டு அது காணாது போய் விடுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்பு உள்ளோருக்கு அடிக்கடி ஆவேச உணர்வுகளும் தாகமும் வரும். இந்த உணர்வுகள் படரப்படும் பொழுது அந்த உணர்ச்சியின் வேகங்களாகும் பொழுது சிறு மூளையின் இயக்கத்திற்குச் சென்ற உடனே அதன் உணர்வைத் தாங்காது அது அதிகரித்துவிட்டால் கைகால் நரம்புகளை வேகமாக இறுக்கி மடக்கிவிடும்.
1.நாம் எவ்வாறு “ஆ…!” என்று அலறப்படும் பொழுது வாயின் தன்மை தன்னிச்சையாக அந்த உணர்ச்சிகள் இயக்கச் செய்கின்றதோ
2.இதைப்போன்று தான் இந்தக் கார உணர்வின் சத்து நமக்குள் இப்படி இயக்கமாக மாறிவிடுகிறது.
3.“ஆ…!” என்று அலறுவது போல நம் இரத்தத்திற்குள் இருக்கும் நீர் சத்து நிலைகள் மடிந்து விடுகின்றது அல்லது வேர்வையாகக் கொட்டி விடுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்பு உள்ளவருக்கு நடக்கும் பொழுது தலைசுற்றல் கிறுகிறுப்பு இத்தனையும் வரும். அடுத்து ஒரு காரியத்தை எண்ணினார்கள் என்றால் அதைச் செயல்படுத்தும் போது உணர்ச்சியின் வேகங்கள் உந்தப்பட்டு
1.உடனே மயக்கத்தின் நிலைகள் “ஹோமா ஸ்டேஜிக்கும்” சென்றுவிடும்.
2.சிந்தனையற்ற நிலைகளும் நரம்பியல்களை இயக்காதபடி இருதய வால்வுகளைச் சரியாக இயக்காத நிலைகள் ஆகி விடுகின்றது.
காரணம் இந்த உணர்வின் வேகம் அதிகரித்து விட்டால் இரத்தத்தில் கார உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது இரத்த வால்வுகளிலே கார உணர்ச்சிகள் ஆனபின் அந்த வால்வின் நுழைவாயிலில் அதிக வீக்கம் ஆகிவிடுகிறது.
உற்பத்தியான இரத்தத்தை உள்ளுக்குள் இழுத்து வடிகட்டும் நிலையாக ஈர்க்கப்படும் பொழுது வராது. அப்பொழுது கடினமாக இழுக்கப்படும் பொழுது அந்த ஒரு பாகத்தில் எரிச்சலும் அடுத்த பாகம் இழுக்கும் நிலைகள் மின் அதிர்வைப் போன்று பளீர்….ர்ர்… என்று மின்னிவிடும்.
இப்படி மின்னினாலும் இதன் தொடர் வரிசை தனக்குள் வரவில்லை என்றால் ஆவேச உணர்வு கொண்டு பதட்டமும் பயமும் நடுக்கமும் ஏற்பட்டு விடுகின்றது.
நடுக்கமும் பயமும் உருவானால் அது அதி துரிதமாக இயங்கப்படும் பொழுது… நம் எண்ணங்கள் அப்பொழுது எதுவாகின்றதோ…
1.நாளை இந்தக் குடும்பம்… தன் குழந்தைகள் என்ன ஆவார்கள்…?
2.தொழில் என்னவாகும்…? பணம் கொடுக்கல் வாங்கல் என்ன ஆகும்…? என்று அதனால் பலவாறு சோர்வடையும் நிலைகளும்
3.உணர்ச்சியின் வேகம் பயம் அதிகரித்து நடுக்கத்தில் கொண்டு போய் விடுகின்றது.
4.இவ்வாறு ஒரு சமயம் இரண்டு சமயம் ஆனால் இந்த உணர்வுகள் இயக்கி “ஹார்ட் ஃபெயிலியர்…!”
இருதய வால்வுகள் சீராக இயங்காது ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகச் செல்லாது. அப்போது ரத்தத்தின் அழுத்தம் உள்ளே அதிகமாகி விட்டால் கை கால்களைச் சுண்டிவிடும்.
பயமும் நடுக்கமும் அதிகரிக்கப்படும் பொழுது இருதயம் வேகமாகத் துடிக்கும் நிலை வரும் பொழுது அதற்கு வேண்டிய இரத்தம் சரியாக வரவில்லை என்றால் பட்…! என்று நின்று விடும்.
ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் இதைச் சொல்வார்கள்.

சதிபதி
ஆயகலைகள் அறுபத்தி நான்கு என்றால் வாழ்க்கை நடைமுறையில் புறச்செயல்படும் காரியங்கள் குறிக்கின்ற கலைகள் என்றே எண்ணமிடுகின்றாய்.
வீரம் விவேகம் நளினம் முதற்கொண்டு நாம் காரியங்கள் நிகழ்த்தும் கலைகளும் உண்டு. மகரிஷிகள் உணர்த்திச் செயலுற வந்த மெய்ஞ்ஞானச் சுடராக்கும் கலைகள் அறுபத்தி நான்கினையே இங்கே உரைத்திட வந்தோம்.
எண்ணத்தின் தெளிவு…
1.இக்கணம் நீ என்ன “எண்ண நினைவில் இருக்கின்றாய்…?” என்று வினவினால்
2.“நான் இதை நினைத்தேன்…” என்று கூறுமளவிற்கு மனத்தின் தூய்மை வலுப்பெற்றிருத்தல் வேண்டும்.
3.அந்நிலை வலு கொண்டு விட்டால் கலைகள் தொடக்கம் அச்சரம் ஐம்பதில் தொடங்கும்.
ஓங்காரப் பொருள் காட்டும்
1.“பிரணவம்” என்றே அழைக்கப் பெறும் ஓம்…!
2.அதனுள் மூன்று நிலைகளாக கலைகள் (1)ஈர்த்து (2)சமைத்து (3)அமைதல் என்கின்ற விதமாக கலைகள் ஐம்பது.
3.அதாவது உயிரிலே ஈர்க்கப்பட்டு சமைத்து – ஓ; உடலாக அமைவது – ம்
ஈர்ப்பின் அகரம் பத்தாக… ஈர்த்த பின் செயல் வரும் உகரமாக பதினான்கு செயல் கொண்டு… அமைவு பெறும் மகரம் இருபத்தி ஆறாக ஓம் என்ற பிரணவ கலைகள் ஐம்பது நாற்பூத செயல்பாடலாய் விந்து கலைகள் நான்கு… நாதக்கலைகள் பத்தாக ஆக “அந்த அறுபத்தி நான்கு கலைகளையே சரீரத்தில் கண்டனர் மகரிஷிகள்…!”
இதற்கும் மேல் ஒளியாகும் நிலை ஒன்று சிரசின் உச்சியில் ஈஸ்வர ஜோதி…! ஒளி நிலை பெற மகரிஷிகள் காட்டிட்ட அனிமாது சித்துகளை (அஷ்டமாசித்து) அடைந்து விட்டாலும்
1.அடக்கத்தின் திரு உருவாக ஒளி மண்டலத்தில் உறையும் மனமாகக் காரியமாற்றி… காரணத்துடன் வாழ்வான்
2.அதனின் நிலைக்கு வேறு எந்த நிலையும் நாம் எண்ணிடல் ஆகாது.
இச்சரீர வாழ்க்கையிலும் சிவசக்தி (சதி+பதி) சமேதராகச் சக்தி நிலை பெற்றிடவே உணர்ந்து கொண்டிட வேண்டிய பயன் தரும் நிலை காணுவோம். தாகம் எடுக்கின்றது தாகத்தைத் தணிக்க நீர் அருந்த வேண்டும் என்று மனம் நாடுகின்றது.
இது “சதியானவள்…” (வேகா நிலை) கொள்கின்ற செயலுறும் எண்ணத்தின் நிலையே கோபுரம் போல் உயர்ந்து விளங்குகின்றது. அதுவும் மலையின் மீது அமைந்த கோபுரம்.
“பதியானவன்…” மோகத்தின் வழிப்பாதை பயணமுற்று… அந்த வழிப் பாதையின் தொடரில் பன்மாடங்கள் இளைப்பாரி… நீக்கமுறாத் துயில் வசம் ஆட்படுகின்றான் (பல பிறவி எடுத்த நிலை).
அறிவின் சுடர்தல் தொடங்கி மெய்ஞான விழிப்பு ஏற்படுத்தும் கருத்தினுள் ஒன்றியவுடன் பதியானவன் விழித்துக் கொள்கின்றான்.
விழிப்பு நிலை பெற்றவுடன் வழித்தடங்கல் நிலையினை எண்ணியே செல்லும்
1.வேகத்திற்கு மேல் வேகமாக எண்ணத்தைச் செலுத்தி
2.கோபுரம் வாழ்கின்ற தன் பாகமாம் “சதியின் துணை நாடி…”
3.சதிபதி சிவசக்தி கூடும் நிலைகாட்டி…
4.இரு புறத்தூய்மையும் அகத்தின் வசம் எழ…
5.ஒளிநிலைப் பிரவாக மெய்ஞானச் சுடராக நிலை பெற்றிருக்கும் சூட்சுமம் செயல் கொள்கிறது.
மோகத்தின் நிலை மாற்றும் “இரகசியக் குறிப்புகளை” இங்கே காட்டி விட்டோம். சித்துக்களைப் பற்றியும் கூறி விட்டோம். கலைகளின் வகை இரு நிலைப்படும் நிலையைக் காட்டி “ஆய்வை” உனக்குள்ளே தூண்டி இருக்கின்றோம்.
செயலில் “வேகம்” வேண்டும்.. வேகத்தின் பிரதானம் “நிதானமும்” வேண்டும். எண்ணத்தில் ஆட்டுகின்ற கருத்தே சொல்லியவன் சுருதி கணபதியாக வரல் வேண்டும்.
சகல நிலைகளையும் உணர்த்தி ஏற்றுக் கொண்டிடும் பக்குவத்திற்காகப் பண்படுத்தி விதைத்திருக்கின்றோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதன் ஆன பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் அதுதான் கடைசி நிலை. அதை விடுத்து விட்டு… “சாமியைப் (ஞானகுரு) பார்த்தேன் தொழில் நனறாக நடக்க வேண்டும்…” என்று எண்ணினால் தொழில் எல்லாம் உங்களிடம் தான் இருக்கின்றது.
காரணம் அதற்குண்டான மன வலு பெற வேண்டும். மன வலிமை பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும்.
1.சாமியை நம்பி வந்தேன்… தியானம் செய்தேன்…
2.“எனக்கு அது கிடைக்கவில்லை… இது கிடைக்கவில்லை…” என்று சொன்னால் உங்களை நீங்கள் நம்பவில்லை என்று தான் பொருள்.
கடலிலே ஒரு படகிலே செல்கிறோம் என்றால் அது கடந்து செல்லப்படும் பொழுது அலைகள் வந்து மோதும். அப்பொழுது அந்த அலைகள் இருந்து தப்பி நாம் அடைய வேண்டிய எல்லையை அடைய… துடுப்பை வைத்து மாற்றிக் கொள்கின்றோம்.
இதைப் போன்று தான் மனிதன் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலை வரும் பொழுது பாச அலை வெறுப்பு அலை வேதனை அலை சங்கட இலை என்று இந்தப் பூமியில் எத்தனையோ அலைகள் நம் மீது மோதுகின்றது.
அதிலிருந்து கடந்து செல்ல வேண்டும் அல்லவா…!
ஆகவே நமது எல்லை எது…? அந்தத் துருவ நட்சத்திரம்தான் என்ற உறுதி கொண்டு அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் பிறவி இல்லாத நிலை அடைகின்றோம்.
ஆகவே ஒவ்வொரு நாளும் எதை எண்ண வேண்டும்…? நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
எல்லோருக்கும் யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். இருந்தாலும்..
1.சாமி சொன்னார்…! நான் தியானம்தான் செய்கின்றேன் எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வருகின்றது…?
2.தியானத்தைச் “செய்து கொண்டே இருக்கின்றேன் அல்லவா…” எனக்கு ஏன் நோய் வருகின்றது…” என்றால்
3.துடுப்பைக் கையிலே கொடுத்த பின் கடலிலே எல்லையை நோக்கிப் போகாதபடி “இப்படி அலைகள் வந்து கொண்டே இருக்கிறது…!” என்றால்
4.அலைகளில் மோதி எந்த உணர்வின் தன்மையோ அதில் தான் மூழ்க நேரும்.
அன்றாட மனித வாழ்க்கையில் எத்தனையோ அலைகள் மோதிக் கொண்டே தான் இருக்கின்றது. நமது எல்லை பிறவி இல்லா நிலை தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தினால் சிந்திக்கும் ஆற்றலும் உணர்வின் வலுவும் நமக்குள் வரும்.
குருநாதர் என்னைப் பல இன்னல்களைப் படச் செய்தார்.
1.எது உன்னை என்ன செய்கின்றது…?
2.எதன் உணர்வு உனக்குள் என்ன செய்கின்றது…? என்பதை உணர்த்தினார்.
இந்தப் பச்சிலை பேசுமாடா…? என்று குருநாதர் அடிக்கடி என்னிடம் கேட்பார்.
அவர் சொன்னபடி நுகர்ந்த பின் கசப்பு என்றால் ஐய்யய்ய…! என்றும் காரமாக இருந்தால் ஸ்ஸ்… ஆ… என்பேன். அப்பொழுது எது பேசுகின்றது என்று கேட்பார்.
1.நீ பேசவில்லை…
2.உன் உயிரின் உணர்வுக்குள் அந்த உணர்வின் சத்து
3.அதில் பட்ட சுவையின் உணர்ச்சிகள் தான் உன்னை இயக்குகின்றது
4.எதன் சுவையின் உணர்வை நுகர்கின்றாயோ அந்த உணர்வின் வழியே உன்னை இயக்குகின்றது
5.அது நீ அல்ல…!
6.நுகரும் உணர்வே இயக்கமாகின்றது… அதன் உணர்வே உடலாக மாறுகின்றது…
7.அதன் வழி (தன்னை) அதை வளர்க்க அது உடலுக்குள் உருவாகின்றது.
ஆகவே தீமைகளை நீக்க நீ என்ன செய்ய வேண்டும்…?
தீமை என்ற நிலையோ… அதீத ஆசை என்ற நிலையோ… இருளான நிலைகள் வரப்படும் பொழுது அதை எல்லாம் அப்பொழுதே தவிர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும்…? என்று நம் உள்ளே வரும் உணர்வுகளுக்குத் தக்கச் சரியான உபாயத்தை அது காட்டும்.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்து ஆயுள்கால மெம்பராகி அமைதிப்படுத்தி ஞானத்தின் நிலைகள் சிந்தித்து செயல்படும் நிலைகளும் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும் என்றால் உண்மையின் உணர்வை அறிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து உடலுக்குள் அதைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்
அடிக்கடி இதைச் செய்தோம் என்றால் தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போன்று நமக்குள் வரும் கலக்கமோ வேகமா ஆசையோ அனைத்தையும் அது மாற்றி அமைக்கும்.
ஏனென்றால்
1.ஆசையினால் வருவது தான் அனைத்துமே
2.ஆசையின் உணர்வுகள் தடைபட்டால் வேதனை.
3.வேதனை என்று வரும் பொழுது சிந்தனை குறைந்தால் கோபம்
4.கோபம் என்று வந்துவிட்டால் அடித்து நொறுக்கும் உணர்வாக வெறி கொண்டு தாக்கும் உணர்வு வரும்.
5.இது என்ன…? என்று உதறித் தள்ளும் உணர்வைத் தான் நமக்குள் உருவாக்கும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் வேதனை என்று வரும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்து தன் உணர்வின் இயக்கத்தையே மாற்றி விடுகின்றது.
இதை போல் உலகெங்கிலும் தீவிரவாதங்கள் நுழைந்து ரேடியோ டிவி என்ற நிலையில் விஷத்தன்மை பரவி இருப்பதால் அதையெல்லாம் நாமும் பதிவாக்கி இருப்பதினால் ஒவ்வொரு சந்தர்ப்பமும் அந்தத் தீமையின் நிலைகளுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றேன்
2.எப்பொழுதெல்லாம் உணர்ச்சிகள் மாறுகின்றதோ… உணர்வுகள் மாறுகின்றதோ… செயல்கள் மாறுகின்றதோ… அது நமக்கே தெரிய ஆரம்பிக்கும்.
அந்த மாற்றத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
1.இதன் வழி செய்தால் நமக்குள் ஏற்பட்ட கலக்க உணர்வுகளை மாற்றும்
2.நாளை எப்படி அதை வழி நடத்த வேண்டும்…? என்ற நல்ல சிந்தனை வரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.
ஏன் சாமி…? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்…! என்று நான் அவரிடம் கேட்டேன்.
நீ தான்டா கேட்டாய்…! வேறு யாரும் கேட்கவில்லை…!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்… என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு…! என்று காட்டினார்.
உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.
தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்…!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்…
3.என்னுடன் இணைந்து வா…! என்றார்.
தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது…? தாவர இனம் பேசுமா…! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.
பேசாது…! என்று நான் சொன்னேன்.
அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்… நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர… நாம் அல்ல…!
எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ… அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்… அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.
காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை… பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.
அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்…?
ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி… அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.
அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.
அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.
ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று… ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்…!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).


“மகரிஷிகள் வாழும் இடத்திற்கு” நாம் செல்ல வேண்டும்
பிறர் படும் துயரத்தைத் துடைக்க உற்று நோக்கி அவர் உணர்வை நுகர்ந்தறிந்த நிலைகள் கொண்டு அவர்கள் தீமைகளை அகற்றப் பொருள் உதவியோ உடல் உதவியோ மற்றதைச் செய்கின்றோம்.
அப்படிச் செய்தாலும்
1.நாம் கண்டுணர்ந்த கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்த உணர்வின் செயல் நமக்குள் வந்திடாது அது இணைந்திடாது
2.அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் பற்றி நமக்குள் செலுத்தி
3.தீமையை தனக்குள் பற்றிடாது பற்றற்றதாக்கி
4,யார் உடலில் அந்த தீமைகள் பற்றிக் கொண்டதோ அதைப் பற்றற்றாக்க வேண்டும்.
அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் நமக்குள் அது வராது துடைத்து அந்தத் தீமைகள் பட்டோருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் அங்கே நஞ்சுகள் நீங்க வேண்டும்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியால் தீமைகளை அகற்றி மெய் ஒளி காணும் நிலை அவர்கள் பெற வேண்டும் என்று
2.இப்படி நாம் எண்ண வேண்டும். இதனைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.
வேதனையை நாம் கண் கொண்டு நினைக்கப்படும் பொழுது அந்தக் கண் அவர்கள் படும் வேதனையை உணர்த்துகின்றது. இந்த வேதனை உணர்வுடன் நாமும் அவருடன் ஒன்றி விட்டால் நாம் அதுவாகத்தான் ஆகின்றோம்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று உணர்வினை விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் படர வேண்டும் என்று
1.மகரிஷிகளுடன் ஒன்றி அந்த உணர்வின் சக்தியை வலுவாக்கி அதைப் பற்றிக் கொண்டு
2.தனக்குள் கேட்டறிந்ததைப் பற்றற்றதாக நீக்கிவிட்டு அது நமக்குள் பற்றிடாது பற்றற்றதாக மாற்ற வேண்டும்.
பின்… அவர்களை அறியாது இயக்கிய அந்த உணர்வுகளில் இருந்து தீமைகள் பற்றிடாது பற்றற்றதாக ஆக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலிலே படர்ந்து தீமைகள் அங்கே அகன்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவருடைய நினைவலைகள் பற்றிட வேண்டும் என்று இப்படி நாம் எண்ணுவோம் என்றால்
1.நாம் எண்ணியதை நம் உயிர் வலுவாக ஏற்று
2.மகரிஷிகள் வாழும் இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
எப்படி எளிமையான உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் வலுகொண்ட மிருகங்களின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து அதனிடமிருந்து காத்திடும் உணர்வுகள் விளைந்து விளைந்து அதனின் துணை கொண்டு அதனின் வலு கொண்டு அந்த உடலுக்குள் சென்று அதநின் உருவாகப் பெற்றதோ இதைப் போன்று
1.ஞானிகள் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி விண்ணுலகில் ஒளிச் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும்
2.அவர்களின் உணர்வை நாம் பற்றுதல் வேண்டும்.
அதை அடிக்கடி நாம் பற்றி நமது வாழ்க்கையில் கண்டறிந்த கோபமோ விரோதமோ வேதனையோ அவசரமோ ஆத்திரமோ போன்ற உணர்வுகள் தனக்குள் பற்றிடாது அருள் ஞானிகள் உணர்வைப் பற்றிக் கொண்டு… கேட்டறிந்த பார்த்துணர்ந்த உணர்வு தனக்குள் பற்றிடாது செய்தல் வேண்டும்.
அதே சமயத்தில் யார் உடலில் பற்றியிருந்தாலும் மகரிஷிகள் உணர்வை அவர்கள் பெற வேண்டும் என்று “அவர்களையும் அங்கே பற்ற வைத்தல் வேண்டும்…”
அந்தப் பற்றுடன் அவர்கள் வளர்ந்திடும் நிலைகள் நம் எண்ணத்தால் நாம் செயல்படும் பொழுது அந்த உணர்வின் வலுவாக நமது ஆன்மா வளர்கின்றது. நமது பிறவிக் கடனை நீக்கிட நாம் எண்ணிய நிலைகளை இந்த உயிரே தனக்குள் சமைக்கின்றது… அதை வளர்க்கின்றது.
மனிதன் முழுமை பெற வேண்டிய மார்க்கங்கள் இவை…!

“உலகுக்கு வழிகாட்டிகளாக” உங்களை உருவாக்கிடவே இதை உபதேசிக்கின்றோம்
இங்கே யாம் உபதேசமாக உரைத்திட வந்திட்ட… ஒளி நிலை பெறச் செய்யும் ஒளி மண்டல தியானம்… “உணர்வுடன் கூடியதாகும்…”
1.ஈர்ப்பின் நிலை உணர்வுடன் பெறுதலால் புறக்கண் பார்வையை அகக்கண்ணால் அகழ்ந்து நோக்கின்
2.ஊர்த்துவ (மேலான) சக்தியாக மேல் எழும் கந்தன் தோன்றிடுவான் என்கின்ற சூட்சுமம்
3.ஒவ்வொரு மனித ஆத்மாக்களும் பெற்று உயர்ந்திட வேண்டும்.
அத்தகைய நன்நெறி நன்நோக்கத்தால் உங்களைப் போதினியாக (உலகுக்கு வழிகாட்டிகளாக) உருவாக்கிடவே இதை உரைக்கின்றோம்.
போதனைப் படுத்திடும் உயர் வழி நெறியைக் கற்றே… கற்றதைத் தன் வழி நின்று… கொண்ட கொள்கையை தகமைசால் (தெய்வீகப் பண்பு) நன்றே…! என அறிந்து… பின்பற்ற விரும்புவோர் இதை முயலட்டும்.
போதனை பெற்றிடும் இந்தச் சூட்சும வழியினைக் கடைப்பிடிக்கும் எளிமையும்… உணர்ந்து கொண்டால் அருமையும்… அத்தகைய இனிமை உணர்வு கூட்ட… உன்னுள்ளே கந்தன் (முருகன்) தோன்றுவது எப்படி…?
1.தியானத்தில் மகரிஷிகளின் ஒளியான நுண் மின்காந்த அலைகளை ஈர்க்கின்றாய்
2.ஈர்க்கின்ற செயல் உனது புருவ மத்தியில் கார்த்திகை (வெளிச்சம்) விளங்கிடும் சுடருள் பாய்ச்சி
3.ஈர்க்கப்படுகின்ற நிலை எங்கெல்லாம் செல்கின்றது தெரியுமா…?
சரீரத்தில் ஓடிடும் சகல சுவாச நாடிகளையும் அறிந்து கொண்டவனப்பா நீ. நீ ஈர்த்துக் கொண்டிட்ட ஒளி நுண் மின்காந்த அலைகள் சுவாச கதியின் சமைப்பின் சமைப்பாக சிரசைக் கடந்து கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதார அக்கினியில் அது செலுத்தப்படுகின்றது.
கந்தன் சிவன் நெற்றிக்கண்ணில் தோன்றினார் என்று புராணம் உரைக்கின்றது…!
மூலாதாரத்தில் பாய்ந்த நெற்றிக்கண்ணின் ஒளி சக்தி…
1.ஆங்கே கனல் விளைந்த ஒளியாக சுழுமுனை நாடியில் எழும்பொழுது (உயிர் வழி சுவாசம்)
2.புருவ மத்தியில் ஆறு ஆதார நிலைகள் அதே நிலை கொண்ட ஜோதி ஸ்வரூபமாக எழுந்து
3.மீண்டும் ஆகாயக்கூறு எனும் சிரசின் உச்சியில் சிவசக்தி நாடிகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்ட சிரசைக் கடந்து
4.எழுந்து நிற்கின்ற அந்த வடிவே கந்தன்,
பேரின்ப நிலை கிடைக்கப் பெறுகின்றது என அனு தினமும் பகர்கின்றாய். அந்தப் பேரின்ப லயத்தை நாடிட்ட மனம் வேறொன்றையும் நாடிடாது.
இத்தகைய பேரின்ப நிலை உனக்கு உரைத்த போதனையை நீயே வளர்ப்பாக்கி நீயே வளர்த்து… கண்டு கொண்டிட்டது தான்…!
1.இங்கே பயிலும் மெய்ஞானச் சுடர் ஆக்கும் தியானத்தின் வழி நின்றிடும் உன் மன உறுதியின் செயலை
2.அனைவரும் பெற்றிட வேண்டும் என்றே எண்ணத்தால் ஆசிர்வதித்து மென்மேலும் வளர்ச்சிப்படுத்திட்டு
3.வளர்நிலையின் ஜொலிப்பை எமக்குக் காட்டு.
வேதிக்கும் நிலையே (மெய்யை அறியும் குணம்) இடைவிடாத உன் மன உறுதி…! வாதிக்கும் நிலையே நம் உணர்வில் உந்துதலால் செயல் கொள்ளும் புறக்காரியங்கள்.
மெய்ஞானச் சுடராக்கும் வழிப் பயணத்தைக் காட்டிவிட்டோம். அறிவின் ஒளி இயல்பாக மஞ்சள் வண்ணம் எனில் தெய்வ வடிவைப் பெற்றிடும் குணம்… அன்பின் வழி வண்ணம் நீலம்…!
1.சாற்றும் வழி போற்றுவான் (மெய்யை உணர்ந்தவன்)
2.கடைப்பிடிப்பவன் மெய்ஞானி ஆகின்றான்
காட்சி:-
மிகப்பெரிய வட்டம் தோன்றுதல் ஒளி நுண் மின் அலைகள் காந்தத்தின் புலனாக அசைதல் சிரசின் உச்சியில் குவிதல்
நெற்றிக்கண் திறந்திடும் சூட்சுமம் மெய்ஞான விழிப்பு
நெற்றிக்கண் திறந்த பின்பு ஜீவன் சிவனாகத் தான் விளங்க
நெற்றிக்கண் ஒலி மூல ஆதாரத்தைத் தான் நோக்க…
கண்டம் இருதயம் நாபி வழி ஓடி மூலாதாரக் கனல் கிளம்பி முதுகுத்தண்டு வழி ஓடி
சுழுமுனை நாடியுள் அக்கினிப் பிரவாகம் பெருக்கெடுத்து சிரசின் உச்சியில் எழுந்து நிற்றல்…!
சந்திர கலைகள் செயல்படுங்கால்… ஆறு ஆதாரங்களும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட… “கந்தன் என்ற ஞானவேல் தோன்றுவான்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையும் சூரியன் தன் பாதரசத்தால் மோதி வெப்பம் காந்தமாக உருவாக்கப்பட்டு விஷம் தனித்துப் பிரிந்து ஓடுகின்றது.
ஆனால் அந்த விஷத்தை வெப்பகாந்தம் மறுபடியும் எடுத்து அணுக்களாகச் சேர்த்து “எலக்ட்ரிக் எலக்ட்ரான்…” என்ற நிலையில் மற்ற பொருளை எடுத்துச் செல்கிறது.
அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடியது ஒரு அழுத்தமான உணர்வுகள் கொண்டது… அது மிகவும் வலுவானது. அது நேராகச் சூரியனுடைய ஈர்ப்புக்கு வரும்போது…
1.வரும் பாதையில் பார்த்தோம் என்றால் மற்ற நுண்ணிய அணுக்கள் எல்லாம் அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்
2.அப்போது அதனுடைய அழுத்த நிலைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைக் கண்டறிந்து
3.நியூட்ரான் என்று அதற்கு விஞ்ஞானிகள் பேரை வைக்கின்றார்கள்.
அது “நியூட்ரானாக…” எப்படி மாற்றமடைகின்றதோ அதே போல நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையுமே “நல்லதாக” மாற்ற முடியும்.
எதை வைத்து…?
27 நட்சத்திரங்களிலிருந்து வருவது வலுவான நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்தால் மோதுகின்றது. ஆனால் நம் குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கச் சொல்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.இதனுடைய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
4.எத்தகைய தீமையையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உருவாகின்றது.
மாடு ஆடுகள் இவைகள் எல்லாம் இயற்கையில் வந்ததை உணவாக உட்கொண்டு அதனுடைய உணர்ச்சிக்குத் தக்க தான் இயங்குகின்றது. ஆனால் மனிதன் இயற்கையிலே விளைந்ததை வேக வைக்கும் போது அந்தச் சந்தர்ப்பம் அதனுடைய சக்தி இழக்கப்படுகிறது.
நெருப்பிலே பாத்திரத்தை வைத்து மற்ற பொருள்களைச் சேர்த்து எதன் எதன் அளவுகோல் கொண்டு அதற்குள் போடுகின்றோமோ அதை ருசியாக மாற்றுகின்றோம்.
இயந்திரத்தையோ மற்ற கருவிகளையோ உருவாக்க… உலோகத் தன்மைகளையும் இதே மாதிரித் தான் செயல்படுத்துகின்றோம்.
பல விதமான நோய்களை நீக்க அதற்குண்டான மருந்தினைக் கலவையாக உருவாக்கி அதை மருந்தாகக் கொடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்… நோய்களையும் தணிக்கின்றோம்.
அதே போல் தான்
1.தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அடுத்த கணமே அதிலே இணைத்து விட்டால் அதனுடைய செயலை இழக்கச் செய்துவிடும்.
3.அப்போது தீமைகளை இழுக்கும் சக்தி குறைகின்றது.
ஏனென்றால் துருவ நட்சத்திரம் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்த உணர்வினை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எப்படி வலுவாக வருகின்றதோ (நியூட்ரான் போல்)
2.அது போன்று அழுத்த நிலைகளில் துருவ நட்சத்திரம் தீமையினுடைய செயலை இழக்கச் செய்கின்றது.
சில பேருக்குத் தன்னை அறியாமலே பதட்டங்கள் வரும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் அந்தப் பதட்டம் வராதபடி மன வலிமையைக் கொடுக்கும். பதட்டமான உணர்ச்சிகள் நம்மை இயக்காதபடி தடுக்கலாம்.
மன வலிமை கூடிய பின் சிந்திக்கும் ஆற்றல் கூடுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எப்படிச் செய்யலாம்…? என்று அதற்குத் தக்க உபாயங்களும் வருகின்றது.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.
ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்…!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.
சாமியம்மாவும் “பாவிப்பயல்…! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்…” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா…! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது…? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.
இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.
குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு… கிடு… என்று நடுங்குகின்றது.
அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.
நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.
அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா… நைனா… என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.
அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு… கிடு… என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்…” என்று இருதயமே விரைக்கின்றது.
அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்…?
அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.
அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு…” என்று அங்கே உபதேசிக்கின்றார்.
அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.
ஏனென்றால்… இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு…? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.
அதாவது… அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே…” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது…?
இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.
இந்தச் சூழ்நிலையில்… இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்…!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.
பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது…?
அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்…? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.
ஆக…
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது… நல்லதை எண்ண முடியவில்லை.
சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்… தன் பிள்ளை…” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.
ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது…? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.
யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி… அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.
இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே…!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.
காரணம்… சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.
எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்…” என்று சொல்கின்றார்கள்.
இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்…” நடந்த நிகழ்ச்சிகள்.


உடலின் கடைசி முடிவு
மகாபாரதத்தில் திரௌபதி என்பது உயிர் (உணர்வின் உணர்ச்சி) பஞ்ச பாண்டவர்கள் (புலனறிவு ஐந்து) நுகரப்படும் பொழுது இந்த ஐந்து பேருடைய உணர்வுகள் கொண்டு அதை இயக்குகின்றனர்.
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் நுகரும் சத்தும் அதன் உணர்வின் தன்மை மணமும் சேர்த்துப் புலனறிவு ஐந்து என்று
1.இந்த உணர்வின் தன்மை நாம் எக்குணத்தை நுகர்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்குகின்றது.
2.கண்ணனின் சகோதரி திரௌபதி. தன்னுடன் இணைந்து உணர்வினைக் கண் காட்டுகின்றது உடலிலே.
3.சகோதரியாக உடலுக்குள் தன் உணர்வின் நிலையாக உணர்த்துகின்றது… கண்ணன்.
4.ஆக எதை எண்ணுகின்றானோ அந்த உணர்வின் தன்மை அது உள்முகமாக எவ்வாறு ஊட்டுகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள்.
ஆனால் பிறரை அடிமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்வதைக் ”கௌரவர்கள்” என்று காட்டுகின்றார்கள்.
1.உண்மையின் உணர்வை நுகர்ந்தால் பஞ்ச பாண்டவர்களை சூதின் நிலைகள் கொண்டு திசை திருப்புகின்றனர்.
2.தன் உணர்வின் வலிமை கொண்டு உள் புகாது நன்மையினைப் பெறாது கௌரவர்கள் தடைப்படுத்துகின்றார்கள்.
ஆக… கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருக்கும் போர் முறை என்று காட்டுகின்றார்கள்.
உணர்வின் வலுவைக் காட்டப்படும் போது நாம் எண்ணும் உணர்வுகள் அர்ஜுனன் என்றும்… அவன் உணர்வின் தன்மை கொண்டே நம்மை மாற்றுகின்றான் என்றும் இதே உணர்வின் செயலாக அதனின் செயலாக்கங்களும்… “அதுவே வலுவாகிறது என்றும்”
1.உணர்வின் உணர்வுகள் நமக்குள் எடுக்கும் போது – ஆன்மா எதனின் உணர்வோ அது…!
2.அதாவது கெடுமதியோ அல்லது கெடுமதியை நீக்கும் உணர்வுகள் வரப்படும் பொழுது “பீமன்” அது வலுக் கொண்ட உணர்வின் ஆன்மாவாகின்றது.
ஆன்மாவிற்குள் அதனின் வலிமை பெறுகின்றது என்ற உண்மையைக் காட்டுகின்றனர்.
பாண்டவர்கள் வலுக் கொண்டாலும் உள் நின்று புகாது தடுக்கும் நிலையே கௌரவர்கள். பல நிலைகள் கொண்டு மகாபாரதப் போர் நடந்தாலும் தீமை என்ற உணர்வுகள் வளரப்படும் பொழுது இவர்கள் (பாண்டவர்கள்) ஜெயித்தாலும் கண்ணன் மடிகின்றான். அதற்கு முன் பலராமன் மடிகின்றான்… “கடைசி முடிவு…”
1.நாம் நுகரும் உணர்வுகள் எண்ணம்…
2.எண்ணத்தின் நிலை கொண்டே கண்.
3.கண்ணின் நிலை கொண்டே பல உணர்வுகள் அதிலிருந்து பல எண்ணங்கள்
4.அதன் வழி கொண்டே உணர்கின்றோம் வளர்கின்றோம் என்ற நிலை தெளிவாக்கப்படுகின்றது.
கண்ணனின் சகோதரன் பலராமன் மூத்தவன் என்று கொண்டு வருகின்றார்கள். பலராமன் மடியப்படும் போது கண்ணனுக்கும் செயலில்லை… அவனும் மடிகின்றான். பின் ஈர்க்கும் வலுவின் தன்மை இல்லை என்றால் பீமனும் மடிகின்றான்
நகுலன் சகாதேவன்… உணர்வைக் கவர்ந்தால் தான் நகுலனும் இயக்க முடியும் நன்மை தீமை என்பதை அறியும் நிலை அவர்களால் தான் அங்கே இருக்கின்றது… அப்போது அவர்களும் செயலை இழந்து விடுகின்றார்கள்.
அனைத்து வலிமை கொண்டு தீமைகள் புகாது தடுக்கும் அர்ஜுனனும் வலுவை இழக்கின்றான்,,, மடிகின்றான். வீரிய உணர்வுகளை இழந்த பின் அவன் கண்ணுக்கு முன்னாடியே திருடர்கள் திருடுகின்றார்கள் மாடுகளை ஓட்டிச் செல்கின்றார்கள்.
காண்டீபத்தை எடுத்து மந்திரத்தைச் சொல்லி ஏவுகின்றான்… ஆனால்.
1.மற்ற சகோதரகள் செயல் இழந்த பின் அது ஒன்று சேர முடியவில்லை.
2.இவனுடைய ஆயுதங்கள் அங்கே பாய முடியவில்லை. திருடர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
3.தான் வீழ்ந்து விட்டோமே என்ற உணர்வுகள் வருகின்றது.
ஏனென்றால் கண்களால் கவர்ந்த உணர்வுகள் வலுவை இங்கே ஊட்டித்தான் “அந்த வலுவால் இயக்குகின்றது” என்பதை இங்கே காட்டுகின்றார்கள்.
உடலுக்குள் உணர்வுகள் எவ்வாறு இயக்குகின்றது கண்ணன் மடிந்த பின் மற்ற நிலைகள் மடிந்த பின் எப்படி உடலுக்குள் செயல்கள் மடிகின்றது என்பதை மகாபாரதத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.
நாம் நுகரும் உணர்வுகள் எண்ணங்கள் வேதனை என்று நுகர்ந்தால் வாலி… கோபம் என்றால் காளி…!
நாம் நுகரும் உணர்வு உயிரில் பட்ட பின் இந்த உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது…? இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் அறிந்திடல் வேண்டும்.
1.நமக்குள் புகுந்த பிறிதொரு உணர்வுகள் நல்லதைப் புகவிடாமல் தடுக்கும் நிலையினை எவ்வாறு தடுக்க வேண்டும்…?
2.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழி வகைகளை ஞானிகள் காட்டுகின்றார்கள் மகாபாரதத்தில்.

“ஈஸ்வர ஜோதி”
பால்வெளி சூட்சுமம் சதா அசைவு பெறும் ஒளி மண்டல சூட்சும அணுக்கள் நிறத்தின் தன்மைக்கொப்ப மணமும்… மணத்தின் வீரிய அடர்வு செயல்பாட்டில் குணமும்… குணத்தின் அமைப்பு எண்ணத்தின் கருவாகும்… கருவின் ஒரு ஆத்ம ஒலி ஒளி விந்து கலைகள் இணைந்து செயல் கொண்டிடும்… ஜீவ பிம்ப சரீர நிலை பெற்றிடும்… ஜீவாத்மாவாகப் பயிர் கொண்ட நிலைகள் வளர்ப்பு ஜீவத் துடிப்பலைகள் வரும்,
அலை வீசாக் கடல் எனும் பால்வெளி சூட்சுமத்தில் உயிர் கொள்ளும் உயிராத்மா…
1.மனிதன் என்ற பிறப்பு எடுத்து மாயத்திரை போர்த்திக் கொண்ட செயலை விலக்கி
2.இச்சரீரம் கொண்ட வினையின் நாயகன் உயிர் சக்தி
3.ஆத்ம நிலை உருவாக்கிடும் செயல் கொள்ளும் அமைவு எப்படி உருவாகின்றது…?
“உன் முயற்சி தான் ஏற்பு… திரை விலக்கிடும் முயற்சியே தியானம்…!” (நல்லதைப் பெற வேண்டும் என்ற முயற்சியுடன்… உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… அதை வைத்து இருளை விலக்கிட வேண்டும். அதுவே தியானம்)
வேதாள மகரிஷி வலியுறுத்தி உரைத்திட்ட ஒலி நாதங்கள் இன்றும் ஒலி அலைகளாக ஓடிக்கொண்டிருக்கும் கருத்தின் ஆழம் கொண்ட “இந்த உபதேசங்களைப் படிப்பதே மாபெரும் பாக்கியமப்பா…!”
பார்க்காமல் வருகின்றவன் சிந்தனா சக்தியின் துரிதமற்ற நிலையில் ஓர் குளத்தில் வந்து விழுந்து விடுகின்றான். வேரோ அன்றி விழுதோ பிடித்துக்
1.கரையேறுகின்ற முயற்சியையும் நீக்கிவிட்டு
2.குளத்தின் நீர் வற்றிய பிறகு வெளியேறிச் செல்லலாம்…! என்பது என்ன பேதைமை…?
சிந்தனையற்று அந்தக் குளத்தினுள் இறங்கியவன் சிந்திக்கின்றான்… நீர் வற்ற வேண்டும் என்று…! (நீர் வற்றுமா…? மனிதனின் இன்றைய சிந்தனை அப்படித்தான் உள்ளது) அப்படி இருந்தால்
1.மாமகரிஷிகள் மனிதர்களுக்கு உவட்டாமல் (திகட்டாத சுவையாக) ஊட்ட வந்த
2.ஒளி காந்த நிலைபெறும் ஒளி மார்க்க சிந்தனை செயல்படுவது எங்கே…?
உன் முயற்சி தான் ஏற்பு.
1.உலகோதய நிலை வாழ்க்கை என்பது தான் “குளம்”
2.ஜீவன் கரையேற முயற்சிக்கும் முயற்சி “அறிவின் தூண்டுதலால் ஈஸ்வர அனுபூதி”
3.கரையேறாத நிலையில் உள் உடைந்து கிடத்தல் – “தொடர் பிறப்பின் சூட்சுமத்தில் சுழன்று கொண்டே இருக்கின்ற” மனிதனின் சிந்தனையின் செயல்பாடு
4.வேரும் விழுதுகளும் “வழிகாட்டிடும் மார்க்கங்கள்”
5.அன்றி சுயத்தின் முயற்சியாக நின்று வெளி போதல் சுயசக்தியின் வளர்ப்பாக்கும் “ஒளிகாந்த ஒளி மண்டல சிந்தனாலயம்…”
கரையேறும் நிலையாகத் தன் முயற்சி கொண்டிடும் நிலைக்கே
1.அக்ஷி என்ற நிலைகாட்டி அகக்கண்ணால் உள்நோக்கின்
2.பிடரிக்கண் என்று உரைத்திட்ட பார்வையின் தன்மை “மூலாதார அக்கினியை உற்று நோக்கும்…”
3.அகக்கண்ணின் சிந்தனா சக்தி அங்கு செலுத்தப்பட்டால்
4.சரீர செயல்பாட்டில் உணர்ந்து அறியத்தக்க ஒளி அலைகள் பாய்ந்து
5.ஒளி கலந்த புலமாக்கும் ஈஸ்வர ஜோதி சிரசில் தோன்றுவதே
6.சிவம் என்றிட்ட ஈஸ்வரனும்… சக்தியின் நிலையும்
7.ஒன்று கலந்த பேரின்பப் புணர்ச்சி… எண்ணத்தால் ஆட்டி உதயத்தில் காட்டும்…!
8..பிறவி என்ற இன்னலிலிருந்து விடுபட்டு… என்றுமே ஏகாந்தமாக… பேரானந்த நிலை கொண்டு வாழச் செய்யும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ பேரை நாம் தினசரி சந்திக்கின்றோம். வேதனைப்படுபவரையோ கோபப்படுவோரையோ வெறுப்படைவரையோ பார்க்காமல் நாம் இருக்க முடியாது.
ஆனால் அந்த வேதனை கோபம் வெறுப்பு உள்ளுக்கே போகாதபடி தடுப்பதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா. அதற்குத் தான் இதை உபதேசிக்கிறோம்.
தீமை நீக்கும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டீர்கள் என்றால் உங்களுக்குள் வரும் தீமைகளை நீங்களே போக்கிக் கொள்ள முடியும்.
பிள்ளை மேலே பாசமாக இருக்கின்றோம்… ஒரு மார்க் குறைந்து விட்டால் போதும் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…? பிள்ளைக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் எவ்வளவு வேதனைப்படுகின்றீர்கள்…?
நீங்கள் சமப்படுத்த வேண்டும் அல்லவா.
1.ஆனால் வேதனையை எடுத்துச் சமப்படுத்த விரும்புகின்றீர்கள்
2.இந்த உணர்வுகள் நமக்குள் வந்து மீண்டும் சிவ தனுசாக மாறுகின்றது… வேதனைக்கொப்ப உடலாக (வேதனைப்படும் உடலாக) மாறுகின்றது.
அதனால் தான் பிரகலாதன் கதையிலே நாராயணனுக்கும் இரணியனுக்கும் இரண்டு பேருக்கும் அங்கே கேட்கின்றார்கள்.
பிரகலாதன் என்றால் இதிலே பிறக்காதவன். அதாவது
1.எதிலுமே பிறக்காதவன் தான் பிரகலாதன் என்று காட்டுகின்றார்கள்.
2.சூரியனிலிருந்து ஒவ்வொரு இயக்க அணுக்களும் வருகிறது அல்லவா…!
என்னால் தான் பிறந்தது என்கிறான். சூரியனால் தான் இயக்கப்படுகின்றான் என்கிறான். என்னால் தான் பிறந்தது என்னால் தான் உருவானது என்று இயக்க அணுவைப் பற்றிப் பிரகாலதன் கதையிலே காட்டுகின்றார்கள்.
ஹரி ஓம் நமோ நாராயணா…! சூரியனின் இயக்கமாகத்தான் நம் உடல் எல்லாம் இருக்கின்றது என்று பிரகலாதன் சொல்கிறான்.
அவன் எங்கே இருக்கின்றான் என்று இரண்யன் கேட்கின்றான்…?
உன்னிலும் இருக்கின்றான்… என்னிலும் இருக்கின்றான்… எல்லாவற்றிலும் இருக்கின்றான்.
அவனைக் காட்டு…! என்கிறான்.
தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் என்று காட்டுகின்றான்.
அவனை அழித்து (தூணை உடைத்து) அந்த உணர்வின் வேகத்தைப் பார்க்கப்படும் பொழுது அதிலிருந்து அந்த உண்மையை உணர்த்திக் காட்டுகின்றது
1.தன் உடலுக்குள் இருக்கும் தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை தான் வருகின்றதே தவிர
2.உன்னால் அழிக்க முடியும்… உணர முடியாது
3.அதை ஈர்க்க முடியும்… ஆனால் வளர்க்க முடியாது.
4.தீமையைத்தான் வளர்க்க முடியும்…! என்று பிரகலாதன் கதையில் அதைக் காட்டுகின்றார்கள்
எவ்வளவு பெரிய உண்மையைக் காட்டுகின்றார்கள்.
வெறும் கதையாக நினைக்கின்றோம். மக்கள் நாம் புரிந்து கொள்வதற்கு இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா.
ஆகவே… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று இப்படி நல்ல குணத்தில் அதை வலுவாக்க வேண்டும்.
அந்தச் சக்தி வலுவான பின் வேதனையான உணர்வுகள் இங்கே வருகிறது அல்லவா… அதை உள்ளிருந்து பிளந்து விடுகின்றது.
இது தான் மடி மீது இரணியனை (நஞ்சான உணர்வுகள்) வைத்து நமக்குள் வரும் தீமைகளை வாசல்படி மீது அமர்ந்து நரநாராயணன் இந்த ஆறாவது அறிவால் இதைப் பிளந்து பழகுதல் வேண்டும்.
இப்பொழுது நாம் ஒன்பதாவது நிலையிலிருக்கின்றோம். அதைப் பிளந்தால் “பத்தாவது” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
யாம் (ஞானகுரு) அகஸ்தியனைப் பற்றித் தொடர்ந்து உபதேசிக்கின்றோம். காரணம் ஆயுள் கால மெம்பர்கள் இதை எல்லாம் தெரிந்து கொண்டால் தான் அந்த அகஸ்தியன் பெற்ற சக்திகளை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது.
முந்தி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு வந்தோம். மெம்பர்களுக்கு எப்படியும் முழுமையாகச் சொல்லித் தான் ஆகவேண்டும். அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சித் தான் ஆக வேண்டும் என்பதற்கே பரிபூரணமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
அருள் ஞானச் சக்கரத்தைச் “சும்மா வாங்கிக் கொண்டு போய்…” நானும் பூஜை செய்தேன் எனக்குக் கிடைத்தது என்று அதைச் செய்வதில் பலன் இல்லை.
1.சக்கரத்திற்கு முன்னாடி நீங்கள் நின்றாலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்…
2.அதற்குத் தான் சக்கரத்தைக் கொடுப்பது
3.குருபீடத்திற்கு அடியில் தான் அந்தச் சக்கரங்களை எல்லாம் வைத்து
4.அதிலே எல்லாச் சக்திகளையும் பரப்பி இப்போது உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
அகஸ்தியன் தாயின் கருவிலிருக்கும் போது பெற்றது தான் அனைத்து நஞ்சினை வெல்லும் சக்திகளும். தாய் சுவாசித்த நஞ்சை வெல்லும் பல பல தாவர இனங்களின் மணங்களை இரத்தத்தின் வழி நுகர்ந்து அகஸ்தியன் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றான்.
அதை எல்லாம் பெற்றுப் பிறந்த பிற்பாடு கொசுவோ பாம்போ தேளோ அவன் அருகில் வருவதில்லை. அதைப் பார்க்கும் போது சுற்றி இருப்பவர்கள் அவனைக் “கடவுளின் பிள்ளை” என்று போற்றும் நிலை வருகிறது.
அகஸ்தியன் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைய அடைய…
1.மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைக் கண்டாலே ஒடுங்கி நிற்கிறது.
2.செடி கொடிகளும் இவன் மணம் பட்டாலே இரைச்சலாகி ஒடுங்குகிறது
3.அப்போது அதன் குணங்களை முழுமையாக அறிகின்றான்.
வேப்பிலையைப் பச்சையாக நான்கு நாளைக்குச் சாப்பிட்டால் நம் உடலிலிருந்து வேப்பிலை வாசனை வரும். கத்திரிக்காயை இரண்டு நாள் சாப்பிட்டால் மூன்றாவது நாள் அந்த மணம் வரும்.
வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட்டால் அடுத்த நிமிடமே அந்த வாசனை வரும். சாப்பிட்டு அந்த அணுக்களில் சேர்ந்த பின் அந்த வாசனை வருகிறது.
இதை எல்லாம் அன்று அகஸ்தியன் அறிந்து முதலில் வேக வைக்கும் பழக்கத்தைக் கண்டுபிடிக்கிறான். இயற்கையில் விளைந்ததை வேக வைத்துவிட்டு அதனுடன் பல நல்ல பொருள்களைச் சேர்த்து ருசியாகச் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டு வருகின்றான்.
அதே சமயத்தில் மனிதனுக்குகந்த தாவரங்களைப் புதிதாக உற்பத்தி செய்கிறான். தன் மூன்றாவது வயதில் இதைச் செய்கிறான். இன்று நாமும் பத்திரிக்கையில் படிக்கின்றோம் அல்லவா… மூன்று வயதுக் குழந்தை என்னென்னமோ செயல்படுத்துகின்றது என்று.
தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகரும் உணர்வுகள் மூலம் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் இவை எல்லாம். சில சந்தர்ப்பங்களில் அபூர்வமான எத்தனையோ செயல்கள் அதனால் வந்துவிடுகிறது.
அகஸ்தியன் இதை எல்லாம் கண்டுணர்ந்து புதிய புதிய பயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றான்.
1.இயற்கையில் உருவான கனிகளைக் கூட
2.வேக வைத்துத் தான் அகஸ்தியன் சாப்பிட்டான்.
இன்று நாம் கனிகளைப் பச்சையாகச் சாப்பிடுகின்றோம். ஆனால் அதை வேக வைத்துவிட்டால் அதில் உள்ள மற்ற அணுக்கள் செத்து விடுகிறது. அதனின் ருசி வேறாக இருக்கும். அதைச் சாப்பிடலாம்.
இது அகஸ்தியனால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே… வேகா நிலை பெற்ற அந்த அகஸ்தியனின் உணர்வுகளை நாம் நுகர்ந்து பழகினால் அவனைப் போன்றே நாம் மெய் ஞானியாகலாம்.


கூர்படு சிந்தை கொள்
அன்பு அறிவாக நிலைகொள் என்றால் என்ன…?
“அன்பின் வடிவாக நிலை பெற்றிருப்பாய்…! என்று ஆசி வழங்கிடும் முதியோர் சொல்…” அறிவு மனம் குணம் மூன்றும் எண்ணத்தின் செயல் வழி என்றாலும் தான் எடுத்துக் கொள்ளும் குணங்கள் நிலைக்கொப்பத்தான் வாசனையால் ஆளப்படும்.
வான்மீகி கூறிய நீல வண்ணராமன்… தெய்வீக வடிவு…! என்பதெல்லாம் அறிந்த சொல்… ஆனால் அது மறைக்கப்பட்ட பொருள்.
அன்பு என்ற சொல்லின் கொள்ளப்படும் நிலை குணம் அக்குணங்களின் வாசனையாகிய மணம் அது வெளிக்காட்டும் ஒளியாக (நிறம்).
அன்பின் நிறம் என்ன தெரியுமா…?
அன்பின் அறிவு நீக்கமற நிலை கொள்ளும் செயலுறும் இயக்க சூட்சுமம். அன்பு தான் வான்மீகி மாமகரிஷி காட்டிய “நீல வண்ணம்…”
1.வீரம் விளைவித்த சாந்தமாக கண்ணின் ஒளி நீல வண்ணம் காட்டி
2.ஆத்ம சுடர் பிரகாசித்து… காண்பவரையும் உயர் ஞான வழி வரும் செயலாக ஆக்கும்.
சூரிய கிரகண கால நிகழ்வில்… கதிரவன் ஒளி கிரகணங்கள் பூமியில் பாய்ந்திடாத குறுகிய அந்தக் கால நேரத்தில் நீரில் நிறைந்திடும் நுண்ணிய விஷ அணுக்கள்… சூட்சும செயல் மென்மேலும் பல்கிப் பெருகி… நீர் சம்பந்தமான கடுமையான நோயாக… இந்த உலகம் எதிர் கொள்ளத்தான் போகின்றது.
கடுமையான விஷ மணத்தின் செயலில் உயிரையே உண்டுவிடும் நடைமுறை சாத்தியமும் உண்டு, அதற்காக அஞ்சிட வேண்டாம்…!
சூரியப் பிரகாசத்தினை எண்ணி ஈர்த்திடும் பக்குவ நிலை பெற்றிருக்கும் சரீரத்தில் எலும்பையே ஊடுருவி ஒளி அருளால் உள் செலுத்திப் பாதுகாப்புக் கவசமாக…
1.சகலமான ஒளி மண்டலவாசிகள் எனும் மகரிஷிகள் வழி வழியாக வந்திடும் ஞானச் செல்வங்கள்…
2.இந்த உலகத்தையே இரட்சித்துக் காத்திடும் செயலுக்கு “மாமருந்தாய்” அளித்துள்ளனரப்பா.
“சிவ சக்தியான ஒலி ஒளி” நீக்கமறச் செயல் கொண்டிடும் திறத்தில்… ஒலி கொண்ட சக்தி ஒளியுறும் சிவமாகக் கலந்திடும் கலப்பு… சிவ சக்தியின் இணையான நிலை விளக்க முறை செயல்படுத்திடும் நடைமுறையில் ஒலி கொண்ட சக்தி ஒளியாம் நிலை சிவத்துள் ஐக்கியமாகச் செயல்படும் தொழிலில்… “அறிவு சிவமாக அதனுள் இட்ட ஒளி சக்தியாகப் பரிணமிக்கிறது…”
மெய்ஞானச் சுடர்தல் வேதாள மாமகரிஷி அருளிச் செய்த சுடர் விளக்கமாக…
1.நீரை இறைப்பது ஏற்றம்
2.நீண்ட நெடு வயல்கள் என்பதே உலகம்
3.வயலில் விளைகின்ற பயிர்கள் அவைகளே ஞானம்… ஞானப்பயிர்.
கிணற்றில் நீர் நிறைந்திருக்கின்றது… அதுவே மனத்தின் பாங்கு அருள்.
1.ஜீவன் தந்திடும் ஒளிக் கதிர்கள் “நீர் ஒன்று இல்லாவிடில்…”
2.ஜீவன் என்றாலும் செயல் கொள்ளா நிலையில் உருவாக்கிடும் சக்தியின் பாங்கில்
3.அநித்தியமான சூடு மறைபொருளாக விளங்கி… பிரம்மம் (சிருஷ்டி) என்ற நிலை காட்டாது.
நீர் இறைத்து நெடுவயல் நீர் பாய்ச்சிச் செயல்படுத்திட ஓர் உபகரணம் தேவை. அதுவே “தியானம்” என்ற பெயர் பெறும் ஏற்றம்.
முயற்சி செயல் கொள்ளும் பொழுது ஏற்றத்தில் நீர் இறைக்கின்றாய். அந்தச் செயலின்றி நெற் பயிர் எப்படி விளையும்…?
தென்னை ஊன்றினாய் என்றால் தென்னை தான் விளைவாகும். அது போல் ஞானப் பயிர் வளர்த்திடும் கருவின் வலுவிற்கு வீரிய நல்வித்துக்களை ஊன்றிட வேண்டும்.
அந்தச் செயலுக்கே மாற்று அலை நிலைகள் திசை மாறிச் செலுத்திடத் துடிதுடிக்கும் எண்ணத்தின் பாங்குகள் வந்தாலும்…
1.ஞானியற்கு மேலாம் உயர்வெண்ண செயலில் செயல் கொண்டு
2.திட நிலை சங்கல்பம் பெற வைத்திட்டது எது…?
சிந்தை என்ற சொல் பெரும் பொருள் அறிவுறுத்தும் நிலையன்று… “கூர்படு சிந்தை கொள்” என்றே உரைத்திட்டோம்.
உறை பொருள்… மறைபொருள்… உட்பொருள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது
உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.
இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?
நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.
அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.
அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.
பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.
உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.
இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.
இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.
இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.
நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”
எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.
இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.
உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.
சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக… வேகமாக ஒருவர் நம்மை திட்டி விட்டார் என்றால்… “இப்படித் திட்டினான்…” என்று அதை வலுவாகப் பிடித்துக் கொள்கின்றோம்.
ஒரு நல்ல காரியத்தைச் சாந்தமாகச் சொல்லி இருந்தால் அது சந்தோஷத்தை ஊட்டக்கூடியது தான்.
1.இருந்தாலும் அது நினைவில் இருக்காது… கெட்டது நினைவில் இருக்கும்
2.நல்லதைச் சாந்தமாக சொன்னால் இது உடனே மறந்துவிடும்
3.நறுமணம் அதுதான்… அதில் விஷம் பட்டால் அது மறந்து விடுகின்றது… அதனுடைய செயலை இழக்கச் செய்து விடுகின்றது
நாம் நல்ல குணம் கொண்டிருக்கின்றோம். ஒருவர் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினால்…
1.அதை நாம் கேட்டறிந்தால் நம் நல்ல குணங்களை இது மூடி விடுகின்றது
2.நல்லது செய்வதை மறந்து விடுவதற்கு காரணமே அது தான்
3.இந்த விஷம் எப்பொழுதுமே அதனுடைய வேகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.
ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் அந்த ஒரு குடம் பாலும் பாழாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூறு குடம் பாலை அதிலே விட்டால்
1.அந்தப் பாலிலே இந்த விஷம் குறைந்து அந்தப் பாலுக்கே ஒரு வீரிய சக்தி உண்டாக்கக்கூடிய சக்தி வருகிறது
2.அதாவது விஷம் அதிகமானால் கொல்கிறது… “விஷம் சிறுத்தால் வீரிய சக்தி உண்டாக்குகின்றது” (முக்கியமானது)
ஏனென்றால் நாம் எப்படி வாழ்கின்றோம்…? எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூடுமானவரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்… “ஆயுள் கால மெம்பராக இருப்பதால்…”
உயிர் தீயிலே பட்டால் அழிவதில்லை. ஆகவே உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றுவது தான் நம்முடைய குறிக்கோள். ஆகையினால்
1.உயிரோடு சேர்த்து அவன் ஒளியாக இருப்பது போல் ஆயுள் கால மெம்பராக அவனுடன் இணைந்து
2.அந்த உயிரின் இயக்கமாக நாம் மாறுவதுதான் மெம்பராக இருப்பதனுடைய நோக்கம்.
நமக்குள் இருக்கும் இயக்கத்தை… இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நமக்குள் நாம் அறிந்தாக வேண்டும்.
உதாரணமாக… கெமிக்கல் கலந்த நாடாவில் ஒலி.. ஒளி… என்று பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதை இயக்கிச் சுழல விடும்பொழுது அந்த உணர்வுகள் வெளி வருகின்றது.
அதே போன்றுதான் இந்த உபதேசக் கருத்துக்களை நீங்கள் இப்பொழுது கூர்ந்து கவனிக்கும் பொழுது… கருவிழி ருக்மணி “ஊழ் வினை” என்ற வித்தாக உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் பதிவாக்குகிறது.
பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவு அதைக் கவர்ந்து அதன் அறிவாக இயக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி மீண்டும் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குகின்றது
இந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அதை நுகர்ந்தோர் உணர்வுகளையும் அதே உணர்ச்சிகள் இயக்கத் தொடங்குகிறது. இதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.
அதன் வழியிலே தான் அந்த அருள் ஞான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றேன். எனக்கு குருநாதர் எப்படி உருவாக்கினார்களோ அந்த ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன்.
நமது குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ தியானத்தில் அதற்குண்டான சத்தைக் கூட்டிக் கொண்டே வந்தால்
2.அருள் ஞானச் சொத்தாக அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே வரும்.
அகஸ்தியன் எப்படிப் பெற்றானோ அதே மாதிரி நாமும் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும் அதற்குத்தான் அருள் ஞான வித்தைக் கருவிழி ருக்மணி மூலம் பதிவாக்குகின்றேன்.
1.நான் (ஞானகுரு) சொன்ன அருள் ஞான உணர்வுகள் இங்கே படர்கிறது.
2.உங்களுக்குள் பதிவாகின்றது… அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது.


உபதேசக் கருத்துக்களை உற்று நோக்கி ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்
மனிதன் தன் எண்ணத்தின் வலிமை கொண்டு ஆயிரம் டன் எடையுள்ள இராக்கெட்டை விண்ணிலே அனுப்புகின்றான். எண்ணத்தின் வலிமை கொண்டு அண்டத்தை அறிகின்றான்… அதன் உணர்வின் இயக்கத்தை அறிகின்றான் விஞ்ஞான அறிவு கொண்டு.
ஆனால்
1.அன்று மெய் ஞானி அலஸ்தியன் தன் உணர்வின் தன்மை பதிவாகி அகண்ட அண்டத்தில் எண்ணத்தை வீசினான்.
2.அதன் உணர்வைத் தன் உடலுக்குள் கவர்ந்தான். அதன் உணர்வின் அறிவினைக் கண்டான்
3.தீமைகளை அகற்றும் வழியும் கண்டான் அகஸ்தியன்.
அவன் பெற்ற உணர்வின் தன்மை அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் நம் பூமியில் கலந்தே உள்ளது. அதை நாம் எளிதில் பெற முடியும்.
1.இப்போது உங்களுக்குள் செவி வழி இந்த உணர்ச்சிகளைத் தூண்டும் படி செய்து
2.சொல்லும் உணர்வைக் கண் வழி ஈர்த்து மூக்கு வழி சுவாசித்து
3.உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் பதிவாக்கப்படும் பொழுது
4.உணர்ச்சியின் தன்மை அமைதி கொண்டு பார்த்துத் தனக்குள் சேர்க்கச் செய்கின்றது.
ஆனால் உபதேசிக்கும் பொழுது வீட்டுக்குப் போக வேண்டும்… தொழிலுக்கு நேரமாகிவிட்டது அங்கே சொல்லாமல் வந்து விட்டேன்… என்று நினைவினைக் கூட்டினால் இங்கே உபதேசிக்கும் உணர்வுகள் அவர்களுக்கு உபயோகமாகாது.
உணர்வின் நிலை எதுவோ அங்கே அழைத்துச் சென்று அந்த வாழ்க்கையின் நிலையையே ஊட்டும். “வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுவது மிகவும் கடினம்…”
உற்று நோக்கிய உணர்வின் தன்மை எதைப் பெறுகின்றோமோ அதன் நிலையே பெறுகின்றது. ஆகவே
1.யாம் உபதேசிக்கும் போது கண்களால் உற்று நோக்கி
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
அதற்குப் பின்… கண்ணின் நினைவை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த அருள் சக்திகளைப் பெருக்கி இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கண் வழி கலக்கச் செய்து ஜீவான்மா ஜீவணுக்களைப் பெறச் செய்தல் வேண்டும்.
கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…!
1.கண்கள் ஊடுருவி அந்த உணர்வலைகளைக் கொண்டு வருகின்றது.
2.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தப்படும் பொழுது எட்டா தூரத்தில் இருந்தாலும்
3.அதிலிருந்து வரும் உணர்வை நம்மை நுகரும்படி செய்கின்றது.
அந்த உணர்வலைகளை உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்ச்சிகளை உந்தப்படும் பொழுது உணர்வுகளை அதற்குள் செலுத்துகின்றது.
நோயாளியை உற்றுப் பார்த்து அந்த உணர்வை நுகர்ந்தால் இரத்த நாளங்களிலே அது கலந்து சுழன்று அணுக்கள் பெறாது தடைப்படுத்த
1.இந்த வழியில் அருள் ஒளியை நாம் நுகர்ந்து
2.நேரடியாகக் கண்ணின் நினைவு கொண்டு உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வினை உந்தி விட்டால்
3.இந்த வலிமை கொண்ட பின் தீமை என்ற உணர்வை நுகராது தடுக்கும்.
அதே சமயத்தில் கிட்னி ரத்தத்தைச் சுத்திகரிக்கும் சக்தி பெற்றது விஷத்தன்மைகள் அதிலே பட்டால் கிட்னி சீராக இயங்கவில்லை என்றால் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் நிலை இழந்து விடுகின்றது.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் வலிமை பெறுகின்றது.
1.தீமை என்ற நிலை வராது உடனடியாக தடுத்து நிறுத்தப்படுகின்றது.
2.கிட்னி சீராக இயங்குகின்றது.
அதே சமயத்தில்… கல்லீரல் நுரையீரல் உணர்ச்சியின் வேகத்துடிப்பானால் விஷத்தின் உணர்வுகளை உந்தினால் உறுப்புகள் சுருங்கி வேதனைப்படும் நிலை வரும்.
அத்தகைய வேதனையை உருவாக்கும் முன் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அருள் ஒளி என்ற உணர்வினைச் செலுத்தப்படும் பொழுது அது வீரியமடைந்து அந்த உறுப்புகளைத் தாக்காதபடி இந்த உணர்வுகள் பாதுகாத்துக் கொள்ளும்.
இந்த உணர்வை உடலுக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால் பேர்ருள் பேரொளியின் அலைகளாக மாறுகின்றது. தீமை வரும் பொழுது அந்த இருளை மாய்க்கின்றது.
இந்த வழியில் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று தான்
1.இயற்கையின் உண்மை நிலைகளைக் கண்டுணர்ந்த அகஸ்தியர் தன் இனத்தை வளர்க்கும் முறையை நமக்கு வகுத்துக் கொடுத்தார்.
2.அதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம்
அதீத செயல்பாடுகள் சக்தியின் வளர்ப்பாகக் கண்டு கொண்ட மகரிஷிகள் சரீரத்தினுள் அந்தச் செயல்பாட்டை அறிந்து கொண்டு… (தெய்வ குணங்களை) ஒவ்வொரு நிலையாகச் செயல்பாடுகள் கலைகளாய்… அவைகள் செயலுறும் நாதவிந்துவாக தெய்வீக உருவங்களாகப் பெயர் நாமப்படுத்தி… விநாயகர் சிவன் சக்தி கந்தன் என்று சூட்சுமப்படுத்தி அருளினார்கள்.
நாத விந்துகள் கலைகள் செயல் கொண்டிடும் நிலைகளும் நாவின் அடிப்பாகம் பிரணவம் (உமிழ் நீர் சுரக்கும் இடம்) என்று செப்பிய சூட்சும நிலைகளின் அகழ்வுகள்… நாவின்படி தொடங்கி தொண்டைப் பகுதியினுள் செயல்படும் ஆகாய இருள் மாயை.
1.உள்நாக்குக்கு மேல் சிரசின் உச்சி வரை என்றுமே அணைந்திடாத அக்கினிக் குண்டம் உண்டு (சுவாசம் உள் சென்று வெளி வரும் போது சூடாக இருக்கிறதல்லவா)
2.ஈஸ்வர ஜோதி எனும் சிவத்தை அறிந்து கொண்டிடும் ஜீவன்களுக்கு அந்த நிலை தமக்குள் உணர்த்தும்
3.உயிராத்ம சக்தியின் வலுவாக்கும் செயலுக்கு தெய்வீக வடிவ நீல வண்ணம் காட்டி
4.உயிர் ஆத்மா (உயிரும் அதனுடன் ஒன்றும் ஒளியான உணர்வுகளும்) ஐக்கிய நிலையே “சீதை அக்கினி குண்டத்தில் இறங்கினாள்…” என்று
5.சூட்சும சொல்லால் பொருள் காட்டி உரைத்தாரப்பா வான்மீகி மாமகரிஷி.
தட்டாது ஒதுக்கும் நிலையே நமக்கு வேண்டியது.
வேதாள மாமகரிஷி உலகியல் தன்மையில் “தேகி” எங்ஙனம் செயல் கொள்வார்…? என்றே நயம்பட உரைத்த உரை… கட்புலன்களால் (கண் பார்வை) பௌதீக மாயப் பொருள்கள் அனைத்தையும் ஒளி கொண்டு நோக்கி அறிதலும்… அறிந்ததை அறிந்ததாகப் பொருளின் குறிப்பைத் தெளிவாக உணர்தல் என்றே அறிந்த பின் தெளிந்து உணர்ந்து கொள்கின்றோம்.
அறிந்து கொண்ட செயலை நடைமுறைப்படுத்திடும் வழி வகைக்கே செயல் கொண்டாலும்
1.கட்டுப்படாத தன்மைகளையும் அதே உணர்வின் எண்ணம் உணர்த்தியும் தெளிதல் போல்
2.அந்த நிலையிலும்… ஈர்த்துக் கொண்டிட்ட வாசனைக்கொப்ப அறிந்திடாத் தன்மைகளும் செயல்கொள்ளும் விதத்தை
3.மேலாம் அறிவு உரைத்த நன்மைதனை நாளும் பொருள் விளக்கம் பெறுவது எப்படி…?
கடும் மழைக்காலத்தில் புள்ளினங்கள் (பறவைகள்) மழை நீரால் நனைந்து “குளிர் தன்மையாக விதிர்விதிர்ப்ப” அந்தப் பறவை இனங்கள் சிலிர்த்துச் சிறகினை வீசி அத்தன்மை படாது ஒதுக்கும்.
அதைப் போல்
1.எந்த நிலையாகினும் அந்நிலையின் அலைகள் நம்மைச் சாடிடாத வண்ணம்
2.புள்ளினங்கள் தன் மீது படாது ஒதுக்குவதைப் போல் ஞானச் செல்வங்கள் பிரகாசித்திடும் விழிப்பார்வையின்
3.சீதை குளித்திட்ட அக்கினிக் குண்டம் மறைபொருளாகக் குளிர்ந்து எழுந்த குளிர்கனல் மேல் நிலை காட்டும்.
அவ்வாறு ஈர்த்துக் கொண்டிடும் உயிர் சக்தி… ஆத்ம நிலைக்கே ஊட்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.
குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்…
2.இந்த லயன் இந்த லைன்…! என்று சொல்லிக் கொண்டே வருவார்.
இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ…! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்…! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.
டேய்… மிளகாய் ஒரு லட்சம்…! கோடி… கோடி… என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.
நான் என்ன சொல்வேன்…? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி…! என்பேன் (தெலுங்கிலே).
அந்தக் கோடி இல்லைடா… “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி… அது… இது… என்று என்னென்னமோ கோடி… கோடி… என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.
இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது…!
அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது…?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
3.எதன் செயலை மாற்றுகின்றது…? – அப்படி என்றால் அந்த லயன்…!
அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது…?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.
முதலிலே சொல்லிவிடுவார்… பின் புரிய வைப்பார்.
அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.
சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.
காரணம்… தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.
உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை… குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.
இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்… இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்… மக்களையும் காக்கின்றீர்கள்… இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.
இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.
குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்… வளரும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?
டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா…! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.
நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.
குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.
இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.
ஆனால்“நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.
ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?
1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.
யார்..? ஆண்டவனுக்கு.
சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.
எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.
இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.
உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.
“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.
இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.
ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.
இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.
வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.
என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.
1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.
இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.
ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.


துருவ நட்சத்திர முகப்பு எல்லையில் நாம் இருக்கின்றோம்…!
விநாயகர் பக்கம் அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் வைத்துள்ளார்கள். அரச மரம் என்பது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரம் ஆனது… “அது அரசு…”
இந்தப் பிரபஞ்சத்திற்குள் வரும் அனைத்தையும் ஒளிச்சுடராக மாற்றி எத்தகைய இருளையும் வெல்லும் வல்லமை பெற்றது.
1.அதனை எந்த விஷமும் தாக்காது
2.அப்படித் தாக்கினால் அந்த விஷம் அதற்குள் ஒளியாக மாறும்.
விஷத்தின் தாக்குதலால் தான் சூரியனும் ஒளியாகின்றது விஷத்தின் தாக்குதலால் தான் உயிரும் துடிப்பாகின்றது… வெப்பமாகின்றது… உணர்வின் அறிவாக இயக்குகின்றது.
விஷம் இல்லை என்றால் இயக்கம் எதிலும் இல்லை. விஷம் இல்லை என்றால் ஒரு பொருளின் தன்மை உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டாது.
வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்தால்… விஷம் அதிகரித்தால் மனிதனை நினைவிழக்கச் செய்கின்றது. ஆக… உணர்வின் தன்மை எதைப் பகுந்து எடுக்கின்றோமோ அந்த உணர்வின் இயக்கமாக நமது உயிர் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக்கினர் ஞானிகள்.
நீர் நிலை இருக்கும் பக்கம் வட மேற்காக விநாயகரை வைத்து வட கிழக்காக வணங்கும்படி செய்கின்றார்கள் காலையில் நான்கிலிருந்து ஆறுக்குள் உடல் அழுக்கைப் போக்கிவிட்டு
1.ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தினை எண்ணி… அந்தச் சக்தியைப் பெறும்படி செய்கின்றார்கள்.
2.துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளை அதிகாலை உதயமாகும் சூரியன் கவர்கிறது.
3.காரணம் அதனுடைய கதிரியக்கங்கள் அதிலே படுகின்றது
4.அப்போது துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாக இந்தப் பிரபஞ்சத்திற்குள் சுழலச் செய்கின்றது.
5.நாம் துருவத்தின் அதாவது துருவ நட்சத்திரத்தின் முகப்பு எல்லையில் இருப்பதால்
5.நமது பூமி கவரும் பொழுது துருவத்தின் வழியாக முதலில் நம்மிடம் கவர்ந்து வருகின்றது.
6.மனிதனாகத் தோன்றி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற அந்த உணர்வுகள் பூமிக்குள் படர்ந்துள்ளது… பிரபஞ்சத்திலும் பரவி உள்ளது.
அதனை நுகரும் பருவம்… மனிதன் தன் எண்ணத்தால் தனக்குள் பதிவு செய்து அந்த உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தும் நிலையாக… தீவினைகளை அகற்றும் அந்த வினையை நமக்குள் வினைக்கு நாயகனாக “கணங்களுக்கு அதிபதியாக்கும் முறையை” நமக்குத் தெளிவாக்கினார்கள்.
அதனை நாம் பின்பற்றினால் அருள் ஒளி பெறலாம் இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றலாம்
1.அகஸ்தியன் கண்ட பாதையில் பேரருள் பேரொளி என்ற நிலையில் இங்கே வாழலாம்… பேரொளியாக மாற்றும் தன்மையும் பெறுகின்றோம்.
2.அதனைப் பெறச் செய்வதற்குத் தான் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதை நுகரும்படி நமக்கு வழிப்படுத்தினார்கள் அன்றைய ஞானிகள்.

“அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே” வழி நடத்திச் செல்கின்றனர் மகரிஷிகள்
விஸ்வேஸ்வர மாமகரிஷி அன்னபூரணியின் தாய்மை அருள் நெறியில் மகிழ்ந்து… தன் நிலையில் தான் இயங்கி… வானவியல் மண்டல கோள் அமைவு சூட்சமம்
1.“முக்கண் என்றே காட்டிடும் அக்ஷி நிலை கண்டு…” அனுபவித்து… மகிழ்ச்சியுடன் அளிக்க
2.”பிடரிக் கண்” சூட்சும நிலைதனை திருமூலர் மரபு தென்னாட்டிலே உரைக்க வந்தது.
ஒன்றிலிருந்து ஒன்று வளர்ப்பாக்கும் வளர்ச்சி நிலை பெறுவதைப் போல் உபதேசிக மூலகாரண நிலை ஒன்று (ஓவ்வொன்றுக்கும்) முன்பே உண்டு.
மறைபொருள் தன்மைகளை ஈர்த்துக் கொண்டிடும் செயலில்… உன்னுள் செயலுறுகின்ற ஆக்கம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் படைப்பின் படைப்பு என உத்வேக ஊர்த்துவம்… (மேல் நோக்கிய) உயர்வெண்ணச் செயலில் “சிருஷ்டியின் எதிர்ச்சொல்லான… முக்தி…” என்ற பேரருள் சூட்சும நிலையைப் பெற்றிடலாம்.
யானை உண்டது விளாங்கனி. விளாங்கனியை உண்ணுகின்ற யானை தீனியின் செரிமானம் பிண்டி (எச்சம்) என்னும் கழிவாக வெளிப்படுத்துதலில்… வெளிப்படும் விளாங்கனியின் ஓட்டை உடைத்துப் பார்… அங்கே ஊண் இருப்பதில்லை.
இச்செயல் எப்படி நடந்தது…?
1.ஒன்றிலிருந்து ஒன்று உருவாக்கிடும் சிருஷ்டியின் காரண மூலம்
2.ஈர்த்துக் கொண்டிடும் நல்லணுக்கள் வலுவின் வலு வீரியம் என்பைத் (எலும்பை) துளைக்கும் ஒளி என்ற காரியம் பற்றியே
3.தன்னுள் உட்கொண்ட விளாங்கனியைச் செரிமானப்படுத்தும் தன்மையில்
4.அந்தக் கனியில் ஓர் சிருஷ்டியே யானை ஈர்த்திடும் வீரியத் தொடர்பாக
5.கனிக்குள் அணுக்கள் தோன்றி அந்தக் கனியை உண்டு விளத்தின் ஓட்டுடன் ஐக்கியப்படுத்துகின்றன.
சிருஷ்டியின் ஓர் நிலை அங்கு செயலுற்று வெளிவரும் அக்கனி சூரியனின் வெப்ப சக்தி கொண்டு “உருவான உயிரணுக்கள்” மண் தன்மையினுள் கலந்து பிருத்வி (பூமிக்குள்) கண்டு அண்டத்தில் நுழைகின்றன.
ஒளிமார்க்கச் செயலில் நாம் செயல்பட வேண்டியது எப்படி…?
மகரிஷிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒளி மண்டல ஒளி அணுக்களாகச் செயல் கொண்டு
1.மனித வித்துக்களை வளர்ப்பின் பயிர் பலனாக்கும் சிருஷ்டியையே
2.ஊர்த்துவ நிலையால் முக்தி என்ற பெயர் நாமத்தில் அழைத்திடும்
3.அழியாத ஒளிச் சரீரம் பெற்றிடவே வழி நடத்திச் செல்கின்றனர்.
அந்த மகரிஷிகள் நடத்துகின்ற செயலில் தேகம் கண்டு கொண்ட தேகி… “தன்னுள்ளேதான் தலைமை எது…?” என்று அறிதல் வேண்டும்.
உயிர் அணுக்களின் தலைமை ஒளி தானப்பா…!
அந்த நிலையை உணர்ந்து செயல்படுகின்ற ஒவ்வொருவரும் சூட்சுமத்தில் வழி நடத்திடும் ஒளி அன்பர்களின்… குரு பரம்பரை வழி வரும் சீடர்களப்பா. அந்தச் சீடர்களே கனகம் (பொன்னான உரையை) உரைப்பவர்கள்.
கார்காலம் மிகுந்து விடுகின்றது. வீட்டின் முற்றத்தில் பாதுகாப்பு என மனிதன் இட்ட மணல் மேட்டினையே மழை நீர் கரைத்து விடுகின்றது. மணல் கரைத்த விசுப்பதன் (வேகமாக வரும்) நீர்… மனைக்குள் உள்ளே வராது இருக்க வழி காணல் வேண்டும் என்று உரைத்தவரப்பா வேதாள மாமகரிஷி.
“முறைகோலுகின்ற வழியது காண்” என்று ஆணையிட்டே உரைத்த உரை பொருள் அறிந்து கொள்வதோடு மட்டுமின்றி… அதைக் கடைபிடித்திடும் நல் பாக்கியத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.
எந்த நிலையிலும் இந்த நிலையை அறுதியிட்டு
1.உறுதியாகக் கடைப்பிடிக்கின்ற ஞானச் செல்வங்கள் மனக்கோளம் உருப்பெறும் கோளமாக அமைவுற்று
2.படைப்பின் படைப்பாக்கும் செயல் திறத்தினை வலுக் கொள்ளுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது மனிதனின் ஆறாவது அறிவு. ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்…?
வாஸ்து சாஸ்திரத்தைப் பார்க்கின்றோம்… ஜோதிடம் பார்க்கின்றோம்.. நல்ல நேரம் வந்ததா…? கெட்ட நேரம் வந்ததா…? என்று பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தவறாக நினைக்காதீர்கள்… நம்மை அறியாது எந்தெந்த அளவுக்கெல்லாம் நம்மை இழுத்துச் சென்று இருக்கின்றது…? என்று கவனித்துப் பார்த்தால் தெரியும்.
“வாஸ்து சாஸ்திரம் பார்ப்பவர்கள்…”
1.உங்கள் வீட்டு வாசல் கொஞ்சம் ஒதுங்கி இருக்கின்றது
2.இதை இடித்துவிட்டு “வாஸ்துப்படி…” நேராக இப்படி வையுங்கள் என்பார்கள்.
3.கஷ்டம் வந்ததற்கு காரணமே இதுதான்…! ஆகவே கட்டிடத்தை இடித்து விட்டு இப்படி மாற்றி வையுங்கள் என்று
4.அவர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுத்துவோம். ஒரு ஓரத்தில் கொஞ்சம் இப்படி மாற்றினாலே… மறைத்து விட்டால் அது நல்லது என்பார்கள்.
அவர் சொல்வதை எல்லாம் நாம் பதிவு செய்து கொள்கின்றோம். அதை ஏற்றுக் கொள்கின்றோம். காசைச் செலவழித்து எல்லாவற்றையும் செய்து வைக்கின்றோம். “இது தான் வாஸ்து சாஸ்திரம்…”
ஆனால் அதற்கு பின் என்ன நடக்கிறது…?
குடும்பத்தில் குழந்தைகள்… உடன் பிறந்தவர்கள் என்று ஏழு பேர் எட்டுப் பேர் இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் அன்பாகப் பண்பாக உதவி செய்பவர்கள் தான் நாம்.
இருந்தாலும் சந்தர்ப்பம்… ரோட்டிலே நடந்து செல்கிறோம். அப்பொழுது ஒரு விபத்தாகி ஒரு வாகனம் வேறொருவர் மீது ஏறி விடுகின்றது.
பார்த்த்தும் “ஆ….ஆ…” என்று அலறி விடுகின்றோம். அதனால் பிரமை பிடித்த மாதிரி ஆகி விடுகின்றது. பிரமையானால் என்ன ஆகும்…?
1.இந்த அழுத்தம் கவன நரம்புகளை வீங்கச் செய்து விடுகின்றது.
2.விரிவடைந்த பின் அது பழையபடி அடங்குவதில்லை.
இதைச் சரி செய்ய எத்தனையோ வைத்தியங்கள் நாம் பார்க்கின்றோம் ஆனால் மற்றவர்கள் பாசமாக இருப்பவர்கள் இங்கே வந்துவிடுவார்கள். ஐயோ… என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே… அல்லது என் தம்பிக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று எல்லோரும் எண்ணுவார்கள்.
தொழில் செய்யும் நிலைகளில் தான் இந்தக் குடும்பம் இருக்கின்றது. இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சிக்குப் பின் தொழிலைச் சரியாக அல்லது சீராகக் கவனிக்க முடியுமா…?
இல்லை.
சங்கடமான உணர்வுகள் இங்கே பரவப்படும் பொழுது நன்றாக இருந்த வியாபாரம் இந்தச் சங்கடத்தினால் மந்தமாகும். உடனே நாம் என்ன நினைப்போம்…?
கெட்ட காலம் வாருங்கள்…! ஒரு விபத்து ஆனது எல்லாம் இப்படி ஆகிவிட்டது. வரிசையிலே இப்படியே தொழில் எல்லாம் கெட ஆரம்பிக்கும்.
கஷ்டமாக இருக்கும் அந்தச் சூழ்நிலையில் நாம் கடன் கொடுத்தவர்களிடம் கூடப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பா…! என்று கேட்டால் நான் தான் தருகிறேன் என்று சொன்னேனே அதற்குள் என்ன…? என்பார்கள்.
1.இல்லை… இங்கே குடும்பத்தில் நோயாகி விட்டது என்று சொன்னால்…
2.எங்களுக்கும் தெரியும்…! பணம் வந்தால் தானே கொடுக்க முடியும்…! என்று அந்த நேரத்திலே “எதிர்ப்புகள்…” வரும்.
அப்போது இந்த வாஸ்து சாஸ்திரம் எங்கே போகும்…?
ஆனால் இந்தக் குடும்பம் முதலிலே நன்றாக இருந்தது தான். ஆனால் இது போன்று சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதனால் குடும்பத்தில் தொழில் நஷ்டம் எல்லாம் வந்து விடுகின்றது.
வாஸ்து சாஸ்திரம் செய்த பின் இப்படி வந்தால் இதையெல்லாம் யார் சரி செய்வது…? அந்தச் சாஸ்திரம் நமக்கு உதவி செய்யுமா…?
ஆகவே… திருத்தி அமைக்க வேண்டும் என்றால் எப்படி…?
வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் ஒரு அதிர்ச்சியான நிகழ்வு வந்தால் அதை மாற்றிடும் நிலையாக எப்படிச் செயல்பட வேண்டும்… என்ற நிலையில் அதிர்ச்சியை மாற்றி அமைக்கும் “அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால்” இந்த நிலை வராது.
அதை விட்டு விட்டு வீட்டின் வாசல் தெற்கே இருக்கின்றது… வடக்கே இருக்கின்றது… என்று துருவத்தைப் பார்த்து எத்தனையோ சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
1.ஏனென்றால் நமக்குத் துருவம் (திசை) நாம் சுவாசிப்பது (வாசி – வாஸ்து) தான்
2.அதன் வழி நுகரப்படும் பொழுது அத வழிதான் இந்த வாழ்க்கையில் எல்லாமே செயல்படுத்துகின்றது.
3.அதை (சுவாசிப்பதை) எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்…!
நியூமராலஜி என்று அதையும் சொல்வார்கள். கடையில் நஷ்டமாகின்றது குடும்பத்தில் சிக்கல் வருகிறது என்றால் உங்கள் பெயரில் உள்ள எழுத்தை இப்படி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்… இது இராசியாக இருக்கும் என்பார்கள்.
அவர் சொல்வதை நம்பிச் செய்தால் நான்கு நாளைக்கு நன்றாக இருக்கும். இப்போது பரவாயில்லையா…? என்று கேட்பார்கள்
அடுத்தாற்போல்
1.நண்பர்கள் யாராவது சங்கடப்பட்டு வந்தால் இந்த உணர்வுகளை நுகர்ந்த பின்
2.கடை சரியாக நடக்கவில்லை என்றால் இந்த நியூமராலஜி எங்கே செல்லும்…?
இது எல்லாம் மனிதர்கள் நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தமே தவிர
1.இயற்கையின் உண்மையிலிருந்து
2.நாம் தப்ப முடியாத நிலைகள் கொண்டு தான் வாழ்கின்றோம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்துள்ளது. அதை எடுத்து நான் (ஞானகுரு) மட்டும் பேசுவதில்லை
1.நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்… “தெரிந்து கொள்ள வேண்டும்”
2.தெரிந்தால் தான் இந்த நாட்டையும் மக்களையும் விஞ்ஞானத்தின் விஷத்தன்மையிலிருந்து காக்க முடியும்
3.காலத்தால் மறைந்து விட்டது… மறைந்த நிலைகளை மீண்டும் கொண்டு வந்து நாம் தப்ப வேண்டும்.
காரணம் சூரியன் அழியும் தருணம் வந்துவிட்டது… சூரியன் அழிவதற்கு முன் பூமிக்குள் உயிரினங்களில் மாற்றங்கள் அதிகரிக்கும்.
மனிதர்களாக இருக்கும் நாம் இன்று நல்ல நினைவு இருக்கும் பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டு… உடலை விட்டுச் செல்லும் போது பிறவியில்லா நிலை அடைந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.
இனம் இனத்தைத் தான் வளர்க்கும். நமது குரு உயர்ந்த உணர்வைப் பெற்றார். அந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
1.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.குரு வழியில் அருள் ஒளியை நாம் எல்லாம் சேர்க்கப்படும் பொழுது இது பெரும் கூட்டமைப்பாக மாறுகின்றது.
மனித உருவாக ஆன பின் அடுத்து அந்த இறந்த உடலைப் புதைத்தால் அது கரைக்கப்படுகின்றது மீண்டும் மற்றொன்றுக்குத் தான் அது இரையாகின்றது.
அது போல் தான் நம் சூரியனும் தன் செயலை இழந்தால் கரைந்து விடும். மற்றதுக்கு இரையாகிவிடும்.
ஏனென்றால் நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக… ஒவ்வொரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது. மற்ற ஏனைய நட்சத்திரங்களும் இவ்வாறு சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.
நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கின்றது. அதனால் இது முதுமை அடைந்து விட்டது.
1.27 நட்சத்திரங்களுக்குள் சரி பகுதி தனிச் சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரையில்லை.
2.அப்போது சுழற்சியின் தன்மை சூரியனின் ஈர்ப்பு வட்டம் குறையும்.
3.இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய நமது பூமியோ அந்தச் சுழலுக்குள் சென்று இதுவும் கரைந்துவிடும்… ஆவியாக மாறும்.
4.27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவான நிலைகளுக்குள் இது உணவாகி இதுவும் மாறிவிடும்
2000 சூரியக் குடும்பங்கள் சேர்ந்து ஓர் குடும்பமாக மாறுகின்றது. நமது பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரிய குடும்பமாக மாறினால் இது ஒரு அண்டமாகின்றது… பேரண்டமாகிறது.
இதைப் போன்று வளர்ச்சியின் நிலைகள் மாறி மாறித்தான் தனது பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்து வந்தது.
இதை எல்லாம் நான் வெறுமனே சொல்லவில்லை. படிக்காதவன் தான் இதைச் சொல்கின்றேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.
குருநாதர் கொடுத்த அருள் உணர்வின் தன்மையை நினைவு கொண்டு வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.பதிவு செய்தை எண்ணி அந்த உணர்வுகளை நுகர்ந்து நீங்களும் அண்டத்தை அறிய முடியும்
2.உடலான பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.
உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும் அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).


நன்மை செய்வதை… நாம் நிலையானதாக இருக்கச் செய்ய வேண்டுமல்லவா…!
நமது கண்கள் நமக்கு நல்ல முறையில் உதவி செய்கின்றது… நம்மைப் பாதுகாக்கின்றது. அதற்குப் பெயர் இடையன் என்று வைத்துள்ளார்கள்.
ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே எதிர்பாராது ஒரு மாடு மிரண்டு வருகின்றது. கண்ணின் கருவிழி அந்த மாட்டினை நமக்குள் பதிவாக்கி விடுகின்றது ருக்மணி.
மாடு மிரண்டு வரும் வேகத்தினை… அந்த உணர்வு வெளிப்படுவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்கிறது. அதன் உணர்வை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ கவர்கின்றது… நம்மை நுகரச் செய்கின்றது.
இந்த உணர்வுகள் மோதும் பொழுது அதனால் விபத்து ஏற்படும் என்ற உணர்வினைக் கூட்டிப் பாதுகாக்கும் உணர்வுகளைத் தூண்டி அந்த இடத்தை விட்டு நகரும்படி செய்கின்றது.
1.அப்பொழுது நம்மை மேய்ப்பது யார்…? நமது கண்களே…!
2.அந்தத் தீமையில் இருந்து விடுபட உணர்த்துகின்றது.
3.ஆனால் நமது உயிரோ அந்த உணர்வின் வலிமையை நமக்குள் அணுவாக உருவாக்கி விடுகின்றது.
4.அந்த அணுவை நாம் மாற்றும் திறன் வருதல் வேண்டும்.
ஈஸ்வரா…! என்று அடுத்த கணமே அந்தப் பயத்தால் நுகர்ந்த உணர்வு தனக்குள் அதிகரிக்காது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற உணர்வினைக் கலந்து… இதை ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
ஆனால் காக்கப்பட்டோம். இருந்தாலும்
1.பயத்தின் உணர்வு அந்த வேகத்தின் தன்மை அணுக்களாக விளைந்தால் உடலில் இருக்கக்கூடிய சாந்த குணங்கள் இதைக் கண்ட பின் நடுங்கும்.
2.உடலிலே அடிக்கடி பதட்ட நிலை வருவதைக் காணலாம். ஏன் பதறுகின்றோம்…? பதட்டம் வருவது ஏன்…? என்ற நிலையே நமக்குத் தெரியாது.
3.நுகர்ந்த உணர்வின் இயக்கம் நம் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. அந்த உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது.
இதைப் போன்ற கொடுமையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.
அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்தல் வேண்டும். நன்மைகள் பல செய்யத் துணிவானாலும் நன்மை செய்த துணிவின் தன்மை கொண்டு அருள் ஒளி என்ற பேரருளை நமக்குள் கூட்டி… “அந்த நன்மை செய்ததை நிலையானதாக்க வேண்டும்…”
தீமையைக் கண்டுணர்ந்து தான் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றோம். ஆனால்… அப்படிக் கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருப்பெறாது தடைப்படுத்த வேண்டும்.
அந்த வழியினைப் பெறச் செய்வதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அவ்வப்பொழுது எடுக்கும் பழக்கம் வருவதற்காக இங்கே பயிற்சி கொடுக்கின்றேன் (ஞானகுரு).

“ஊர்த்துவம்” – கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது
மகான்கள் இறை (தன்னை) உணரும்படியாக வழி காட்டியதில் மூன்று உண்டு.
1.உருவம் கொண்டு அறியும்… வழிபடுகின்ற நெறி ஒன்று
2.உயிருதய கமலாயத்தில் ஜெபிக்கின்ற தியான வழி இரண்டு
“ஆரம்ப நிலை” தியான வழி ஞானச் செல்வங்கள் அறிந்து கொண்டது இந்த இரண்டு தான்……
உயர் நிலை என்னும் ஒளி நிலை பெற்ற மாமகரிஷிகள்… தம்மை எண்ணிடும் உருவம் கொண்ட ஜீவன்களை சதாக்கியமாக (சதா சர்வ காலத்திலும்) இயங்கி வழி நடத்துவர். (ஜீவன் என்றால் உயிர்)
அந்த ஒளி நிலையை உணர்ந்து கொண்டிடும் வழியாக அனுபவ ஞான லயமாக… சத்தியத்தின் சக்தியாக இங்கே போதனையாகத் தந்ததை,
1.எது பேருண்மை பொருந்திய நாத விந்துக் கலை என்ற முத்தொடரோ…
2.சூரிய சந்திர ஆத்ம ஒளி நிலையோ (காற்று நூல் – சுவாச நாடிகளின் இயக்கமாக)
3.அதனுள் சிவன் நடிக்கும் நடனம் ஜீவனுள் சிவமாக
4.ஈஸ்வர ஜோதியாக வளர வழிகாட்ட வந்த செயலில்… அதைப் பெற்று வழி காண முயல்வோர் முயலட்டும் (மூன்றாவது வழி)
பஞ்ச பூத ஒளிவண்ண ஈர்ப்பில் தேகம் பெறுகின்றவன் அப்படி மனிதன் எனும் குணச் செயலாக வந்துற்ற ஆத்மாக்கள் அனைவரும் “தேகி” (உயிருடன் ஒன்றுதல்) என்ற பெயர் நாமம் பூண்டு விட இயலாது.
சதா ஒலி அணுக்கள் அசைந்திடும் உராய்வின் ஒலி நாதமாக
1.வான இயல் தத்துவம் அறிந்து கொள்ள முயல்வோருக்கு
2.யாம் சுட்டிக் காட்டும் ஒளி மண்டல தியானமாக
3.சிரசின் உச்சியில் எண்ணி (புருவ மத்தி – பிடர் வழி) எடுத்திடும் ஞான திருஷ்டியின் நோக்கால் தன்னுள்ளே சகலத்தையும் காணலாம்.
ஒளி அணுக்கள் அசைந்திடும் ஒளி நுண் மின்காந்த அலைகள் போல்… தனக்குள்ளும் அசைந்திடும் ஒளி அணுக்களின் செயலைச் செயல் கொள்ள…
1.வான் தொடர்பாகக் கொண்டிடும் நினைவோட்ட ஒளி மார்க்க எண்ண அம்பு வீசிடும் செயலாக (கண்ணின் ஆண்டென்னா சக்தி)
2.குவியும் குவிப்பு ஆகாய ஒளி அணுக்களின் உராய்வில் தன் உயர்வு எண்ண அணுக்களும் உராய்ந்து
3.சகலமும் சகலமாகப் படர்ந்துள்ள பால்வெளியில் நிறைந்ததை… நிறைந்த பொருளை…
4.அறிந்ததை அறிவால் அறிந்துணர்ந்து ஈர்த்தலே “ஞானத்தின் திருஷ்டி நோக்கு…”
தேகம் கொண்டவன் தேகி என்று தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் பஞ்சபூதங்கள் அமைப்புப் பெற்ற தேகத்தில்… அந்தத் தேகத்தையே தாங்கிச் செயல் புரிந்திடும் ஜீவன் – தன்னுள் அமைவு கொண்டிட்ட ஒளியே ஆத்மா என்பது.
தேகத்தை உணர்ந்து கொண்டவருக்கு ஜீவனும் ஒளி தான். ஜீவனால் அமைவு கொண்ட ஆத்மா பேரானந்தப் பிரகாசம் தான்.
அதனுள் சிவ நடனம் காட்டிடும் ஜீவன் சிவன் கலந்த ஜீவஜோதியின் அசைவாம் நடனம் காட்டி அனுபவிக்கச் செய்திடும் செயலை எடுத்துரைக்க முடியுமோ…?
அகம் கனன்ற கனல் சிவ நடனம் கண்ட ஜீவன் தன்னை மாற்று நிலைத் தன்மைகள் நெருங்கிட முடிந்திடாது.
ஏன்…? என்ற வினா எழும்பலாம்
ஜீவன் அந்த மனப்பரியை (கட்டுக்கடங்காத எண்ண ஓட்டங்கள்) அடக்குகின்றதே…! கடினமான ஒரு பாட நிலை தான்.
மனம் கீழ் நிலைக்குச் சென்றிடும் பொழுது… விந்து நீக்கம் பெற்றே ஜீவனைச் சூழ்ந்து கொண்டிடும் துர்க்குணங்கள்… எண்ணத்தின் ஈர்ப்பலையாகத் தன்னைத்தான் கேடுறுத்தும் செயலை… “வேதாள மாமகரிஷி” உரைத்ததன் நிலை என்ன…?
யானைக்கு மதம் பிடிக்கின்றது அது தன் அகன்ற காதுகளை அசைத்து விரைந்து ஓடி வருகின்றது… கடுவாய் கொண்ட சிங்கமானது சீறிச் சினந்து ஓடி வருகின்றது.
அவைகள் கொண்டிட்ட வீரியத் தன்மைகள்… குணங்களில் கொடூரமும்… உணர்வையே மறக்கச் செய்திடும் ஆவேசமும்… எந்த நிலையாகினும்…
1.எரிகின்ற நெருப்பினைத் தன் அருகே கண்டு விட்டால்
2.உணர்வையே மறக்கச் செய்த தன் நிலையில்
3.உணர்வின் மாறுதல் கொண்டு அந்த இடத்தை நெருங்கிடாது.
நமக்கும் இதைப் போன்ற தீய குணங்களிலிருந்து மீண்டு பயணம் செய்திட ஒரு வாகனம் உண்டு.
1.அது “ஊர்த்துவம்” (மேல் நோக்கிய… அதாவது கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி விண்ணிலே செலுத்துவது) என்ற பெயர் நாமத்தில்
2.விந்து ஒளி நிலையாக மேலெழும் செயலாக… சிரசினுள் நாத விந்துவாக விளங்கிட
3.மனப்புரவி (கல்கியின் உருவம்) என்றும் நீக்கமற உண்டு.
தான் தணலாக (நெருப்பாக) ஆகுங்கால் மாற்றொத்த நிலைத் தன்மைகள் (நஞ்சுகள்) நெருங்கிடாத் தன்மையாக… ஜீவன் சிவ நடனம் (பேரானந்தப் பெரு நிலை) காணும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகஸ்தியன் நஞ்சினை வென்றான் இருளை அகற்றினான்… மெய் உணர்வைக் காணும் அருள் சக்தி பெற்றான். அவனில் விளைந்த உணர்வு இந்தப் பூமியில் படர்ந்துள்ளது.
அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வினைப் பெற நாம் ஏங்கித் தியானிப்போம். அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்குங்கள்.
கண்களை மூடி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உயிரான ஈசனிடம் “இந்த உணர்வை இயக்குங்கள்… அதை நுகருங்கள்…”
2.நுகர்ந்த உணர்வை… அந்த அகஸ்தியன் பெற்ற அரும் பெரும் சக்தியை உணவாக உட்கொள்ளும் அணுவாக உங்கள் உயிர் உருவாக்கும்
3.ஓ… என்று ஜீவ அணுவாக உருவாக்கும் கருத்தன்மை அடையச் செய்யுங்கள்.
உங்கள் உடலுக்குள் அந்த அகஸ்தியனின் அணுக்கருக்கள் பெருகும். அணுக்களாக வளர்ச்சி பெற்ற பின் அகஸ்தியன் உணர்வுகளை உட்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை உந்தும்.
அப்போது அந்த உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது பகைமை உணர்வுகள் நீங்குகிறது… நஞ்சினை நீக்கி… இருளை அகற்றி… மெய்ப்பொருள் காணும் அந்த அருள் சக்தியைப் பெறும் தகுதி நாம் பெறுகின்றோம்.
துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அந்தப் பேரருளை உங்களுக்குள் உருவாக்குங்கள்
2.பேரொளி பெரும் கரு உலகமாக… உங்கள் புருவ மத்தியில் அந்த அருள் உலகமாக
3.அணுக் கருக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைப் புருவ மத்தியிலே உணரலாம்.
ஒரு நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது… அந்த உணர்வுகள் “மின் கற்றைகளாக… மின்னல்களாக எப்படி வெளி வருகின்றதோ…” இதைப் போன்று உங்கள் உடலுக்குள் அந்த உணர்வலைகள் பரவி இருளினை அகற்றி உடலுக்குள் ஒளியின் நிலையாக உருவாகும்.
1.உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் தீமைகள் புகாது தடுக்கும்
2.இருளை அகற்றும் அருள் ஒளி என்ற உணர்வுகள் உங்கள் ஆன்மாவிலே பெருகும்.
ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று எடுக்க இப்படிப் பழகிக் கொள்ளுங்கள்.
“டக்… என்று அந்த ஞாபகம் வரும்… நோய் வராது தடுக்க முடியும்
இதற்கு முன்னாடி நோய்கள் இருந்தாலும் அடுத்தடுத்து வேதனை வரும் பொழுது இதைக் கலந்து எடுத்துக் கொண்டே வாருங்கள்.
1.நல்ல உணர்வுகளுக்குள் மற்ற கஷ்டம் என்ற உணர்வுகளைக் கேட்டறிந்த பின் அந்த நல்ல உணர்வை அது எப்படிக் கெடுக்கின்றதோ
2.அதே போன்று தீய உணர்வுகளை அழித்த அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொண்டு வாருங்கள்.
3.அந்த உணர்வுகள் மாறும்.
ஆகவே துருவ நட்சத்திரத்தினைப் பற்றுடன் பற்றும் ஒரு பழக்கம் வரவேண்டும்… வாழ்க்கையில் வரும் நிலைகளை பற்றதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
அத்தகைய ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்று ஆசையில் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).
செவிகளில் கேட்கின்றீர்கள்… கூர்ந்து கவனிக்கின்றீர்கள்… நுகர்கின்றீர்கள் இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலில் அணுக் கருவாக மாறுகின்றது கருவானால் உங்களுக்குள் அது விளையத் தொடங்கும்.
உதாரணமாக…
1.கோழி அடைகாக்கத் தவறினால் அந்த முட்டை குஞ்சாகப் பொரிக்காது.
2.அது போல் தீமையான உணர்வுகளை மீண்டும் மீண்டும் எண்ணாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த எண்ணத்தை அங்கே இணைத்தால்
4.அந்த பேரருள் என்ற உணர்வின் தன்மை அணுத் தன்மையாக உங்களுக்குள் விளையும்
5.தீமைகள் விளையாது தடுக்கப்படுகிறது… உங்கள் எண்ணமே உங்களைக் காக்கும்.
தொடர்ந்து இதைச் செயல்படுத்துதல் வேண்டும். மனிதனான பின் பிறவி இல்லா நிலை தான் நாம் அடைதல் வேண்டும்.
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ…நிலையில்லா இந்த உலகம் உனக்குச் சதமாமோ…? பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல மறைவதைப் பாராய்…! ஏன்று குருநாதர் பாடியது போன்று
1.செல்வத்தை எவ்வளவு தேடிச் சென்றாலும்… அதன் வழி சம்பாரித்து வைத்திருந்தாலும்…
2.அந்தச் சொத்தைக் குழந்தைகள் சீராக அமைக்கின்றனரா…? பாதுகாக்க முடியவில்லை.
3.எத்தனையோ அரசுகளை அரசர்கள் ஆண்டார்கள்… சாம்ராஜ்யத்தை ஆண்ட அந்த அரசர்கள் இருக்கின்றார்களா…? அவருடைய சொத்துக்கள் இருக்கின்றதா… “இல்லை…”
4.இல்லாததற்கு நாம் ஏன் இந்த மன உறுதியைக் கொண்டு வர வேண்டும்…?
5.என்றும் நிலையானதாக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
எப்படி அணுவாகிச் சூரியன் ஆனதோ பிரபஞ்சமான பின் உயிரணு ஆக ஆனால் அது என்றுமே அழிவதில்லை. தீயில் குதித்தால் உயிர் வேகுவதில்லை… உணர்வுகள் கருகுகின்றது.
எதிலும் அழியாத உயிரை… அந்த உயிரைப் போன்றே ஒளியான அணுக்களின் தன்மையாக நாம் பெருக்குதல் வேண்டும். அதற்குத் தான் இந்த உபதேசம்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
என் இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்… உன் அருளைப் பெற்றிடவே என் நினைவைத் தந்துவிட்டேன் உன்னிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணிப் பாடலைப் பாடுகின்றோம்.
அதனின் உட்பொருளே…
1.“உயிரான ஈசன்” நீ எப்படி ஒளியாக இருந்து எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ…
2.இருளை அகற்றி நீ எப்படி என்றுமே ஒளியாக இருக்கின்றாயோ…
3.அதன் உணர்வாக என்னை நீ இயக்குதல் வேண்டும்.
4.அதன் வழியே நான் வாழ வேண்டும்…
5.பொருளறிந்து செயல்படும் தன்மை நான் பெற வேண்டும்
6.இருளை அகற்றிடும் அந்த அருள் சக்தி எனக்கு வேண்டும்.
ஒளி பட்டால் இருள் எப்படி நீங்குகின்றதோ இதைப்போல எனக்குள் இருளை நீக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும். ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த உடலான சிவம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
உயிரால் இயக்கப்பட்ட நிலையும்… உணர்வால் என்னை உருவாக்கிய நிலையும்… மகிழ்ச்சி என்ற உணர்வின் சக்தியை நான் எண்ணும் பொழுது என் இசையில் நீ இயக்குகின்றாய்
1.என் நினைவில் நீ எப்பொழுதும் வர வேண்டும்.
2.”நீ இருக்கின்றாய்…” என்ற நிலையில் அந்தப் பயம் எனக்குள் வரவேண்டும்.
3.தவறு என்ற உணர்வு எனக்குள் வராது தடுத்து நிறுத்தும் அந்த ஆற்றல் பெற வேண்டும் ஈஸ்வரா.
என் நினைவை எங்கெங்கோ அலையவிட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்… என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா…! என்று உயிரே வேண்டுகிறோம்.
ஆனாலும்… அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் இப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கின்றோம்.
1.அந்த ஆசையினால் நமக்குள் தீமை என்ற உணர்வுகள் வந்து சேர்ந்து விடுகின்றது.
2.தீமை என்ற உணர்வு வரப்படும் பொழுது நம்மை நாம் மறந்து விடுகிறோம்
3.இந்த உடலின் ஆசைதான் நமக்குள் வருகின்றது
4.”உயிரான ஈசன் இருக்கின்றான்…” என்ற நிலை மறந்துவிடுகின்றது.
வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடலில் கடும் வேதனை உருவாகின்றது. அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலான கோவிலில் “அசுத்தத்தைத் தான் நிரப்புகின்றோமே தவிர…” ஈசனான நிலையை நாம் வணங்க மறுக்கின்றோம். அவன் அறிவை நாம் தெளிவாக்கும் நிலையையும் இழந்து விடுகின்றோம்.
ஆகவே இந்த உடலின் இச்சைக்கு நாம் செல்லாதபடி அருள் ஒளி பெற்று இருளை அகற்றிடும் சக்தி பெற்று… உடலில் இருக்கும் அணுக்கள் அனைத்தும் ஒளி நிலை பெற வேண்டும். இருளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.
உயிர் எவ்வாறோ… நீ எப்படி இருக்கின்றாயோ என் உணர்வுகள் அனைத்தும் ஒளிமயமாக மாறுதல் வேண்டும்
தீமையைப் பிளக்கும் நரசிம்மா என்ற நிலையில் வரும் தீமைகளை மாற்றி விட்டால் கல்கி. இந்த உயிர் ஒளியாக உள்ளது. அதைப் போல் நம் உணர்வின் தன்மை பத்தாவது நிலை ஆகும் போது தான் கல்கி.
1.பூமியின் ஈர்ப்பை விடுத்து விண்ணுலகம் செல்கிறது…
2.எதுவுமே தன்னை ஈர்த்து விடாது பறந்து செல்கின்றது.
3.குதிரை மேல் பறந்து சென்று வாளை வீசித் தப்பிச் செல்வதாக உருவம் அமைத்து
4.அருவ நிலையில் நாம் உயர்ந்த சக்திகளை எப்படிப் பெற வேண்டும்…? என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
வான் வீதியில் தோன்றிய “உயிர்” மனிதனான பின் இனி பிறவி இல்லா நிலை அடைவது தான் கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் “துருவ நட்சத்திரம்…”


ஞான வித்து
பிறரின் நோயைப் பற்றி நாம் அறிந்து உதவி செய்தாலும் அந்த நோயின் அணுக்கள் நம் நல்ல குணத்துடன் இணைந்து அதைப் பாழாக்கிடாதபடி நாம் தடுத்துப் பழகுதல் வேண்டும்.
அதைத் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து உன் செயலை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்…?” என்று காட்டுகின்றது தத்துவங்கள்.
நோயின் தன்மை உயிரான மூலாதாரத்தில் மோதுகின்றது. அந்த உணர்வினை அறிகின்றோம்.
1.அப்போது நாம் எதைச் செய்ய வேண்டும்…? நாம் நுகர வேண்டியது எது…?
2.அந்த தீமையைக் கண்டு நுகர்ந்த பின் நாம் செய்ய வேண்டிய பக்குவம் எப்படி இருக்க வேண்டும்…? என்பதைத்தான் இங்கே காட்டுகின்றார்கள்.
இதை வென்றவன் அருள் மகரிஷி துருவ நட்சத்திரம் என்பதை உணர்ந்து இருக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
1.ஏனென்றால் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்த பின் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது
2.இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவுகின்றது இரத்தத்தின் துணை கொண்டு.
3.இந்த உடலில் வளரும் நல்ல அணுக்கள் விஷத்தைக் கண்டபின் தன் உணர்வு கிடைக்காததனால் சோர்வடைகின்றது… நல்லதாக உருப் பெறுவதில்லை.
அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று வேதனை உணர்வு அந்த நல்ல அணுக்களுக்குள் சேர்வதற்கு முன் அதனைத் தடுக்க வேண்டும்.
கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்.
1.தீமை என்ற உணர்வு இங்கே வருகின்றது
2.அது வருவதற்கு முன் நீ உன்னை காத்துக் கொள்ளும் நினைவினைக் கண்ணின் நினைவு கொண்டு
3.உடலில் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வினை வலுவாக்கினால்
4.இதன் அருகிலே வரப்படும் பொழுது அந்த உணர்வினை அகற்றிவிடும் அல்லது மாய்த்துவிடும்.
அதனால் தான் கண்ணுக்குப் பெயர் இடையன் என்று வைத்தார்கள்.
கண்ணின் கருவிழி நோயாளியை உற்று நோக்குகின்றது. அவன் வேதனைப்படுகிறான் என்று உயிரோடு உணர்த்துகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்று ஆறாவது அறிவு கொண்டு நாம் செயல்படுகின்றோம்.
ஆனால் அந்த உணர்வு நமக்குள் வந்தபின் நம் உடலுக்குள் தீமை புகாது அந்த அணுக்கள் உட்கொள்ளாது அருள் மகரிஷியின் உணர்வுகளை இங்கே கண் கொண்டு உயிருடன் ஒன்றி இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்தி கண்ணின் நினைவினை அந்த அணுக்களுக்கு உபதேசித்தல் வேண்டும்.
1.இந்த உணர்வின் தன்மை உருப் பெற்றபின் இதன் வலுகொண்ட பின் அதன் அருகிலே ரத்தங்களில் வந்தாலும் ஏற்றுக் கொள்ளாது
2.இதனின் உணர்வுகள் நம் உடல் உறுப்புகளில் வரும் பொழுது கிட்னி அந்த விஷத்தைப் பிரித்து விடுகின்றது… வெளியேற்றி விடுகின்றது
3.ஏற்றுக் கொள்ள முடியாத நிலை வரும்பொழுது இது பிரித்து விடுகின்றது.
ஆகவே நாம் எண்ணும் அருள் உணர்வுகள் உடல் உறுப்புகளில் வலுப் பெறும் போது அந்தக் கிட்னியை அந்த விஷத்தன்மை செயலற்றதாக மாற்றுவதற்கு முன்… கிட்னியை உருவாக்கிய அணுக்களுக்கும் அருள் ஒளி படர்கின்றது.
பின் அந்த விஷத்தின் தன்மையை வடிக்கும் தன்மையாக வெளியேற்றி விடுகின்றது.
ஆனால் நாம் மாற்றத் தவறினால் என்ன நடக்கிறது…?
வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் அது அணுக்களாக மாறப்படும் பொழுது கிட்னிக்கு சிறுநீரகத்தின் மூலம் அதைச் சீராகப் பிரிக்காதபடி விட்டுவிடுகிறது. இரத்தத்தைச் சுத்திகரிக்கவில்லை என்றால் விஷத்தின் தன்மை மற்றொன்றுக்குச் சேர்கின்றது. வடிக்கத் தவறினால் உடலுக்குள் கடும் நோய் உருவாகி மடியும் தன்மை வருகின்றது.
ஆகவே நமது ஞானிகள் காட்டிய அருள் வழியில் இந்த வாழ்க்கை எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நான் சொல்வது உங்களுக்கு எளிதாக இருக்கலாம்.
1.இதை எல்லாம் கண்டுணர்வதற்கு எவ்வளவோ சிரமப்பட்டேன்… கடும் வேதனைகளை அனுபவித்தேன்.
2.வேதனை எப்படி வருகின்றது என்று உணரும்படி செய்தார் குருநாதர்.
3.வேதனை உன்னைத் தாக்கப்படும் பொழுது அதை நீ எவ்வாறு மாற்ற வேண்டும்…?
4.என்னென்ன உபாயங்களைக் கையாள வேண்டும்…? என்று என்னைத் தெளிவாக்கினார்.
5.அதனின் உணர்வினைத் தான் ஞான வித்தாக உருவாக்கி உங்களுக்குள் பதிவாக்குகிறேன்.
காரணம்… தீமை வரும் பொழுது உங்கள் எண்ணத்தால் அதை அகற்றிடும் வலிமை நீங்கள் பெற வேண்டும் என்று தான் தொடர்ந்து இங்கே உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.

ஒளிச் சரீரம் பெறச் செய்யும் ஆகார சக்தியான அன்னபூரணி
காரண காரியமாக விளங்கும் இந்த உடல் கொண்ட ஜீவாத்மா… சிருஷ்டி எனப்படும் பிறவிக்குத் தனக்குகந்த தன்மைக்கே… கொண்ட குணங்களின் தன்மைக்கொப்ப பிறப்பினுக்கே வந்தாலும்… சகலமும் மறைக்கப்படுகின்ற சூட்சமம்… ஒளி நிலை பெற்றிட மேலெழும்பும் சக்தியின் தன்மையாக எடுத்துக் கொண்டால் ஆத்மா ஒளி பெற்றே திகழ்கின்றது.
1.”காரணம்” என்பது ஆகாய சூட்சுமமாக சகலமும் மூலத்தின் தன்மையாக விளங்கி
2.சிருஷ்டியின் செயலாக… கொண்ட எண்ணம் செயலுற்று… “காரியமாகின்ற” சரீரத்தைப் பெறுகின்றது.
காரண காரியம்… காரிய காரணமாக மனிதன் செயல்பட்டு… பெற்று… வளர்த்து (தன்னை) உயர்த்திக் கொண்டிட்டால் ஒளிமார்க்க நிலை…!
“அன்னபூரணி காட்டும் ஆகாரக் குறிப்பு” வியாபித்திருக்கின்ற மூலப்பிரகிருதி… (இயற்கையின் படைப்பு) சகலமும் ஈஸ்வர சொரூபம் தான் என்றாலும் மூலத்தின் குணத்திற்கு வண்ணங்கள் உண்டு.
1.பிருதிவி (பூமி – நிலம்) தத்துவத்தில் மண்ணாகக் காண்பதே செந்நிறம்
2.அக்கினியாகக் காண்பது கருமை நிறம்
3.நீரின் தன்மையில் அடங்குவது வெண்ணிறம்
4.காற்றின் புலப்படாத் தன்மையுள் பச்சை நிறம்
5.ஆகாய நிலையின் புகைவண்ணம் வெளிர் நீலம்.
இந்த ஐந்தும் (பஞ்ச பூதங்கள்) ஜீவன் புசித்திட ஈஸ்வர சக்தியாக… அன்னபூரணி – விஸ்வேஸ்வரர் மாமகரிஷியின்… தாய் சக்தி எனும் பஞ்ச காரண காரணியாக… ஒளிமார்க்க (ஓளிச்சரீரம் பெறுவது) நிலை உபதேசிக்கப்பட்டதப்பா.
மூல காரணியை… மனிதன் செயல் கொள்ளும் விதத்தில் “வேதாள மாமகரிஷி” உரைத்திட்ட நிலையும் உண்டு.
பெரும் நெருப்பாக இருந்தாலும் அதுவும் நீருக்குள் அடங்குகின்றது. பெரும் நீரானது இழுத்து இயங்கும் செயலாக… காரண சக்தி இயற்கையின் சீற்றம் காட்ட… காரியம் ஏற்படும் நீர் அடங்காது.
சூரியக்கதிர் அம்பு பாய்ந்து… அகநிலையால் புறமும்… காத்திடுகின்ற செயலாக
1.இப்பரு உடலைக் கொண்டு ஆத்ம சக்தியை வளர்த்துக் கொண்டாலும்…
2.இவ்வுடலையே சூழ்ந்து காத்துக் கொள்ளும் வலு வீரிய “காரண மூல சக்தி ஆத்மாவிற்கு உண்டு…”
காட்டையே பற்றி எரித்து உரத்து ஆடும் பெரும் நெருப்பானது நாணல் புல்லைப் பற்றி அதையும் தீய்ப்பினும்… கடும் மழை நீருள் அந்தக் காட்டுத் தீயானது அணைகின்றது.
அது போல் மனித மனத்தின் நிலை அகம் புறம் இரண்டு செயல் தன்மைகளில்
1.உலகோதய நிலை நாட்டத்திலும்… நாம் எடுக்கும் ஜீவ ஆதார சக்தி…
2.காட்டுத் தீயை அடக்கிய நீர் சக்தியானது
3.பூமியின் மேற்பரப்பில் காற்று நெருப்பால் ஒவ்வாத நிலைகளற்று… (கருகிய நிலைகள்)
4.பூமிக்குள் மறைந்திருக்கும் கிளைத்தெழும் ஜீவசக்திகள் அந்த நீரின் சக்தி கொண்டே (கருகியது) தழைத்து எழுவது போல்…
5.மன எண்ணக் கரு அவ்வண்ணமே ஜீவ ஆதார சுருதியாக “அகக் கனலாகக் கனன்று எழும்…”
இதிலே காட்டிட்ட தன்மைகள் பண்டு (பண்டைய – பழைய) வழியாக இருந்தாலும் அதை விண்டு அறிந்திடுதல் வேண்டும்.
உலகமும் ஜீவஜோதியும் வரைந்திடும் பொழுது அந்தப் படத்தினால் அஷ்டலட்சுமி அன்னபூரணி வாக்கு தேவி மண்டல அமைப்பு காட்டப்பட வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?
இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.
இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?
எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.
1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.
ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.
“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் “ஆக்கினைக்கு நீ இங்கே தொடு…” என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.
இது அல்ல…!
நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளையும்… இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது “அது எப்படி உருவானது…?” என்ற உணர்வுகளையும் பதிவாக்குகின்றோம்.
அதாவது உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.
நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்…!
ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.
மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.
4.இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது.
5.அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.
“ஆக்கினை…” (ஆக்ஞை) என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிலே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.
மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.
1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.உயிரணு தோன்றி… மனிதனாகப் பிறந்து வளர்ந்து
2.27 நட்சத்திர உணர்வுகளை உணவாக உட்கொண்ட பின்…
3.உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது.
துருவத்தை எல்லையாகக் குறி வைத்து அதன் வழி நட்சத்திரங்களின் உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து அதனின் எல்லையை அடையும் போது துருவ நட்சத்திரமாகிறது.
நம் பிரபஞ்சம் மற்ற நிலைகளில் அவைகளை எடுத்தாலும் உயிரணு தோன்றிய பின்… நட்சத்திர உணர்வுகளை உட்கொண்டு உணர்வுகளை ஒளியாக மாற்றும் தன்மை வருகிறது… மற்றதைக் கருக்கி விடுகின்றது.
1.நட்சத்திரம் மின் கதிர்களாக வரப்படும் பொழுது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போன்று தான்
2.இந்த உயிரணுவின் தோற்றங்கள் இப்படி உருவாகித் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது.
மனிதரான பின் கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றான பின் அந்தத் துருவ நட்சத்திரமாக மாறுகின்றது. அந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உணர்வுகளும் ஒளியாகின்றது.
உடலை விட்டுச் சென்ற பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக மாற்றி “சப்தரிஷி…” சிருஷ்டித்துக் கொண்ட உணர்வு… அந்த மண்டலங்களாக துருவ நட்சத்திரத்துடன் இயங்குகின்றது.
மகாபாரதத்தில் இது தெளிவாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் காலத்தால் மறைத்து விட்டார்கள். இந்த உண்மைகளை நாம் மறந்தே போய் விட்டோம்.
காரணம்… அரசர்கள் தனக்குத் தெரிந்த “ரகசியம்…” மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்ற நிலையில் அவ்வாறு செயல்படுத்தி விட்டார்கள்.
1.வேதங்களை மாற்றப்பட்டு… உண்மையின் இயக்கங்கள் மறைக்கப்பட்டு…
2.மறைந்த உணர்வுகளை… அந்த உண்மைகளைத் தேடிக் கொண்டே இருக்கின்றோம். இன்னும் கிடைத்த பாடு இல்லை…!
ஆனால் இப்பொழுது நீங்கள் அதை தேடிக் கொள்ள வேண்டாம்..! உங்கள் உடலுக்குள் அனைத்தும் உண்டு.
ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்…? என்று தான் சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு) இருந்தாலும் ஏற்றுக் கொள்வார் குறைவாகவே உள்ளனர்… ஏற்றுக் கொள்வதே மிகக் கடினமாக இருக்கின்றது
காலை துருவ தியானத்தில் எப்படியும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை எல்லாம் தொடர்பு கொள்ளச் செய்கிறோம்.
அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய அந்தப் பேரருளை எடுத்து
1.அந்த இயக்கச் சக்தியை உங்களுக்குள் உருவாக்கப்பட்டு அதன் வழியில் இயங்கிப் “பேரொளியாக…”
2.உயிர் எப்படி ஒளியானதோ உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் ஒளி மயமாக மாற்றி
3.அதற்கப்புறம் எத்தகைய தீமையும் தனக்குள் வராதபடி வேகா நிலையை அடைந்து
4.என்றும் பேரருள் பேரொளியாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டதில்
5.வாழக் கற்றுக் கொள்வது தான் இந்தத் துருவ தியானப் பயிற்சியின் நிலைகள்.
உங்களுக்குள் ஆழப் பதிவு செய்த இந்த உணர்வினை நினைவுக்குக் கொண்டு வந்து இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி… இனி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று இதை அடிப்படை ஆதாரமாக வைத்துச் செயல்படுங்கள்.
1.மனித வாழ்க்கையில் வரும் சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ பகைமை உணர்வோ போன்றவைகளை மாற்றி அமைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அதைப் பற்றுடன் பற்றுங்கள்.
3.அதை வைத்து இந்த வாழ்க்கையில் வரும் தீமைகள் தனக்குள் புகாத வண்ணம் தடுத்துக் கொள்ளுங்கள்.
சந்தர்ப்பத்தில் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் கலக்கச் செய்யப்படும் பொழுது அதன் வலிமையை இழக்கச் செய்ய முடியும்.
ஆகவே அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து உடலுக்குள் அதை அணுக்களாக மாற்றிடும் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான் துருவ தியானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.
அதை லேசாக நினைத்து விடாதீர்கள்…!


அகக்கண் என்ற முக்கண்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நட்சத்திரத்தின் பால் இணைந்து… அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.முக்கண் என்ற உயிருடன் ஒன்றி ஏங்கித் தியானியுங்கள்.
2.இப்பொழுது புருவ மத்தியில் பேரருள் பேரொளியாக மாறும்
3.உயிருடன் ஒன்றி அதை நீங்கள் காணலாம்… அகக்கண் கொண்டு…!
4.துருவ நட்சத்திரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் உணர்வை நீங்கள் இப்போது அகக்கண்ணால் பார்க்கலாம்.
5.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அகக்கண்ணால் நீங்கள் இப்பொழுது பார்க்கலாம்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் பாய்ச்சி… அந்தப் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
இப்போது
1.துருவ நட்சத்திரத்தினுடைய அருள் மணம் வெளி வரும் போது உங்கள் உடல் முழுவதும்
2.“ஒரு பாதுகாப்புக் கவசம்” போன்று பேரருளின் ஒளி வட்டம் காணும்.
3.தீமைகள் உங்கள் ஆன்மாவிலே புகாது பாதுகாக்கும் உணர்வின் சக்தியாக இது அமையும்.
4.உங்கள் உடல் முழுவதும் ஒரு ஒளி வட்டம் தெரிவதை அகக்கண்ணால் நீங்கள் உணரலாம் பார்க்கலாம்.
5.இப்பொழுது உங்கள் உடலே ஒளிமயமாகக் காட்சி தரும்.
துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளி கணவன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் மனைவி தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
கணவன் மனைவி இவ்வாறு ஒருவருக்கொருவர் பாய்ச்சி இரு மனமும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணைந்து பேரருள் என்ற உணர்வுகளை உங்களுக்குள் உருவாக்குங்கள்.
உங்கள் இருவரது உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தையும் பேரொளி பெறும் அணுக்களாக… கருக்களாக… உருவாக்குங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் தாய் தந்தையர் பெற்று… எங்களுக்கு அவர்கள் அந்த அருளைப் பாய்ச்சி… எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனைவரும் பொருளறியும் திறன் பெற அருள்வாய் ஈஸ்வரா.
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்பொழுது “சப்தரிஷி மண்டலங்களின் காட்சி உங்களுக்குக் கிடைக்கும்… மனக்கண்ணால்…!”
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவை விண்ணிலே செலுத்தி சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுங்கள்.
சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்திற்கும் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்திகளை ஊட்டுங்கள்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையரின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களின் ஈர்ப்பு வட்டதில் இணையச் செய்வோம்… உந்திச் செலுத்துவோம்.
இப்பொழுது
1.அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலங்களுடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் உணர முடியும்.
2.அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் ஒளி வட்டத்தில் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதை அகக்கண்ணால் பார்க்கலாம்.

அன்னபூரணி அஷ்டலட்சுமி வாக்குதேவி
காசியம்பதியில் விறகு சுமந்த வேண்மா சந்தர்ப்பத்தில் மயக்கமுற்றுச் சாய்ந்து… அந்தச் சரீரத்திலிருந்து ஜீவன் நீங்கிடும் தருவாயில் ஆங்கு வட்டமிட்ட “விஸ்வேஸ்வர மாமகரிஷி” (காசி விஸ்வநாதன்)… வேண்மாவின் உடலில் சூட்சும செயல் கொண்டு “கல்லால சித்தன்” என்ற நாமம் பூண்டு மௌனித்து எடுத்த சக்தி நிலை பெரிது.
1.மௌனமே சக்தி பெறச் சம்மதம் எனப் பொருள்பட
2.வானியல் தொடர்பாக வாக்கு தேவி அன்னபூரணி… அஷ்டலட்சுமி… என்ற மண்டலங்களாகப் பெயர் நாமப்படுத்தி
3.அதைச் சிரசினுள் காட்ட வந்ததே
4.அன்னபூரணியை வலக்கண்ணும்
5.அஷ்டலட்சுமியை இடக்கண்ணும்
6.வாக்கு தேவியைப் பிடரிக் கண்ணும் என்று காட்டி
7.மனக்கண் குறிப்பாக உள் முகம் நோக்கி… அகப்பார்வை ஒளிமார்க்கம் காட்டும் விதம்… – அதுவே “அக்ஷி…”
இத்தன்மையை அறியும் போது அறிய வேண்டியது ஒன்று உண்டு.
கிணற்றில் நீர் இருக்கின்றது. கிணற்றில் இருக்கின்ற நீரை நீர் இறைக்கின்ற உபாயமாகக் கைக்கொள்ள வேண்டிய முறை உண்டு.
அதாவது யாம் சொல்ல வருவது “அறிவை அறிவால் அறிதல்” என்பது.
சிறு குழந்தைகள் ஓரு மண் கலயத்தைக் கயிற்றினால் கட்டி அதைக் கிணற்றிற்குள் விட்டு நீர் இறைக்கின்ற செயலில் அது பக்குவமற்ற தன்மை என்றாலும்… “கவனத்தின் குறைபாடு தான்…”
சிறு பிள்ளை விளையாட்டு என்றபடி நீர் மொண்ட அந்தச் சிறு மண்பாண்டம் நீர் இறைக்கும் தருவாயில் கிணற்றுச் சுவரில் பட்டு உடைந்து விடுகிறது. அந்தக் குழந்தைகள் தாங்கள் கைக் கொண்ட செயலுக்கு நாணமுறுகின்றனர். அதைப் போல் இல்லாதபடி
1.இந்த ஞான வழியினை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழி முறை என்பது… சிந்தனையில் சிரத்தையோடு
2.சூட்சும மாமகரிஷிகள் காட்டுகின்ற வழித்தன்மையைக் கையாள்வதில் கொள்கின்ற தனித்துவ செயல்பாடு “உறுதியாக” இருத்தல் வேண்டும்.
அந்த உறுதியை எப்படிச் செயல்படுத்துவது…?
கிணற்றில் நீரை இறைக்க வேண்டும் என்றால் உடையாத ஓர் கலம் வேண்டும். நீர் இறைக்கும் தருவாயில் நீர் இறைக்கின்ற கலம் நீர் மொள்கின்ற சத்தத்தைப் புலனறிவால் அறிந்து கொண்டு… கலத்தில் நீர் நிறைந்து விட்ட தன்மையை உணர்ந்தே… பக்குவமாக வெளிக்கொணர்ந்து பயனுறக் கைக்கொள்ளல் வேண்டும்
அது போல்
1.விஸ்வேஸ்வர மாமகரிஷி காட்டிய அந்த உயரிய வழித்தன்மை
2.அவராலும் அவருடைய சீடர்களாலும் கடைபிடிக்கப்பட்டு வந்த அந்த முறையை
3.இன்று அறியப்பட வேண்டிய இரகசிய உண்மைகளை நீங்கள் அறிந்து தெளிந்து… ஆக்கச் செயலுக்காக உயர்ந்து
4.பால்வெளியின் பூதியில் ஓர் மண்டலமாக உருக் கொள்கின்ற திறனுக்கே
5.உயர்வெண்ணம் செலுத்தப்படல் வேண்டும்
அரை குறையாக அறிந்ததை… அறிந்து விட்டதாக எண்ணி இரகசிய உண்மைகளைச் செல்வம் சேர்த்திடும் எண்ணத்திற்குச் செயல்படுத்திட எண்ணிய இந்தத் தேசத்தில்… அக்ஷி முறை செயலுறுவாகச் செயல் கொண்டு “இயங்கிடாத நிலையே” இன்று திபெத்தில் இரகசிய முறையாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது.
1.ஆத்மாவும் ஜீவனாடி நாத விந்துவும்
2.மேலது கீழாய் கீழது மேலாய்
3.சிருஷ்டி எனப்படுவது கீழ் இறங்கல்
4.ஞானம் எனப்படுவது மேலுயர்தல்
5.சிருஷ்டி… சிருஷ்டிக்கும் சக்தி… என்று ஆதி சக்தியின் தன்மையையே அவ்வாறு குறிப்பிட்டோம்.
“ஸ்ரீ பாதங்கள்…” என்று உரைப்பதே “நாத விந்து” எனப்படுகின்ற ஒலி ஒளி சக்திகளையே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனாக வருவதற்கு முன் நாம் பாம்பாக இருந்திருப்போம்… தேளாக இருந்திருப்போம்.. நமது தாய் அவர்களைப் பாதுகாக்க நம்மை அடித்துக் கொன்று இருப்பார்கள்…
1.இந்த (நம்) உயிர் அவர் உடலுக்குள் சென்றிருக்கும்
2.போன உடனே அவர்கள் உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி வருகின்றது.
கருவாக ஆன பிற்பாடு தேளாக இருந்த… பாம்பாக இருந்த நம்மை… மனிதனாக உருவாக்குகின்றது நமது தாய். அப்போது நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்…?
நம் தாய் தந்தையினுடைய உயிர் தான்…! கடவுளாக இருந்து மனிதனாக நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்தான்.
அம்மா அப்பாவைக் கடவுளாக நாம் மதித்துப் பழகுதல் வேண்டும் யாராவது நாம் நினைக்கின்றோமா…?
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தாயைத் திட்டுபவர்கள் தான் உண்டு. எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உடனே தாயைத் திட்டுவார்கள்.
1.இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்…
2.உண்மையை உணர்தல் வேண்டும்.
பத்து மாதம் நம்மைச் சுமந்து உருவாக்கியவர்கள் தாய். பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும்… ஒரு நாளைக்குத் தலையிலே கல்லை வைத்துத் தூக்கிப் பாருங்கள். சுமக்க முடிகிறதா என்று…!
ஆனால் பத்து மாதம் நம்மைச் சுமக்கின்றது.
சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வையே எண்ணி எடுக்கின்றது.
இத்தனை அவஸ்தைகளும் பட்டுப் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.
விவரம் தெரிவதற்கு முன் நாம் நெருப்பைத் தொட முயற்சிப்போம். டேய்… டேய்… நெருப்புடா…! என்று நம்மைப் பாதுகாக்கின்றது… அந்தத் தெய்வமாக இருக்கின்றது.
இது நல்லது இது கெட்டது இது அசுத்தம் என்று அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக்கூடிய குரு யார்…?
நம் தாய் தான். ஆனால் எத்தனை பேர் நாம் தாயை மதிக்கின்றோம்…?
1.தாயை மதிப்பவர்கள் சிறிது பேர்தான்.
2.தாயின் அருள் வேண்டும்… எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்று வேண்டுபவர்கள் கொஞ்சப் பேர் தான்.
அந்த தாயின் உணர்வைப் பெறச் செய்வதற்குத் தான் குருநாதர் காட்டிய வழியில் இதை உணர்த்துகின்றோம்,
எத்தனையோ துன்பங்கள் பட்டு என்னை நீங்கள் வளர்த்தீர்கள். எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் அங்கே மறைய வேண்டும்.
1.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெற வேண்டும்
2.மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் அவர் பெற வேண்டும்.
3.தாய் தந்தையர் என்றென்றும் எங்களுக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று
4.தாய் தந்தையரை நாம் வணங்கி எண்ண வேண்டும்.
நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று தாய் தன் எண்ணத்தால் எடுத்துப் பதிவாக்கியிருக்கின்றது. நமக்குள்ளும் அந்தப் பதிவு உண்டு. இந்தக் காற்றிலும் அது உண்டு.
1.எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
2.அம்மா… எனக்கு நோய் நீங்க வேண்டும் அந்த அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.தாயும் இதே மாதிரி என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றது
4.அந்த உணர்வை நுகர்ந்தீர்கள் என்றால் உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.
உதாரணமாக… காட்டுக்குள் செல்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். புலியோ யானையோ துரத்தி வரும் நேரத்தில் அம்மா…! என்று சொன்னால் போதும். அந்தப் புலியானாலும் யானை ஆனாலும் உங்களைத் தாக்காது.
என்னைக் (ஞானகுரு) காட்டிற்குள் போகச் சொல்லி “தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது…?” என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர்.
போய்க் கொண்டே இருப்பேன். திடீரென்று புலி வந்தால் உடனே நான் “ஐய்யய்யோ…” என்று சத்தம் போடுவேன்.
அப்பொழுதுதான் குரு உணர்த்துவார்
1.டேய்…! உன் அம்மா எங்கேடா போனது…?
2.உன் அம்மாவை நினைடா…! என்பார்.
நினைத்து நான் அம்மா… என்று சத்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வரும் புலி அப்படியே நின்றுவிடும். இது எல்லாம் அனுபவத்தில் பெற்ற உணர்வு.
நீங்களும் இதே போல் தாயின் அருள் சக்தி பெற்று… ஞானிகள் காட்டிய வழியில் சென்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.


பாதுகாப்புக் கவசம்
அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை…
1.இயற்கை எப்படி விளைந்தது…? என்றும்
2.இயற்கையில் இருந்து ஞானிகள் எவ்வாறு மீண்டனர்…? என்பதையும்
3.இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கப்படும் பொழுது நீங்கள் செவி வழி அதைக் கேட்டுக் கூர்ந்து கவனித்து
4.அந்த உணர்வினை நுகர்ந்தது அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று உங்கள் உடலாக உருவாக்கி விடுகின்றது உயிர்.
ஆக இவை அனைத்தும் உங்கள் எதிர்காலத்தில் வரும் பகைமை உணர்வுகள் தாக்காது அதனின்று விடுபடும் அருள் ஒளியின் உணர்வினைச் சேர்த்தால் இது உங்களைப் பாதுகாக்கும் சேனாதிபதி என்ற நிலை பெறுகின்றது.
அத்தகைய நிலைகள்
1.உங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக உணர்வின் அணுக்களைப் பெறச் செய்ய
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கலந்து அதனை உருவாக்கினால் இந்த உணர்வின் எண்ணம் உங்களைக் காக்கும்.
அதுவே சேனாதிபதி.
எண்ணத்தின் தன்மை கொண்டு விண்ணின் நிலையை நீங்கள் நுகர்ந்தறிந்தால் உங்கள் உயிர் அதை உருவாக்கி விடுகின்றது. மனிதன் தான் இதைச் செய்ய முடியும்… பிரம்மாவைச் சிறை பிடித்தான்.
அருள் ஒளி பெறும் உணர்வை நாம் நுகர்ந்தால் உணர்வின் அறிவாக ஒளியின் சரீரமாக மாற்றும்… ஒளிச் சுடராக உருவாக்கும்.
ஆகவே காலத்தால் விளைந்த விஷத் தன்மைகளை மாற்றிச் சுவை கொண்டதாக… இருளற்ற ஒளியான நிலைகளை உருவாக்கும் உணர்வுகள் பெறுகின்றது. இதனை நாம் பெறும் மார்க்கம் இதுதான்.
ஆகவே பேரருள் பேரொளி பெற்ற அருள் உணர்வினை நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களில் இணைத்தால் பேரொளி என்று உருவாக்கி விடுகின்றது… உடலை ஒளியாக மாற்றி விடுகின்றது.
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நுகர்ந்து அந்த அரும்பெரும் சக்தியை ஏங்கிப் பெற்று
2.நம் உடலில் பரப்பி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களும் பெறச் செய்வோம்.
3.பேரருள் பெறும் தன்மையாக… ஏகாந்த நிலையை அடைவோம்.

விஸ்வேஸ்வரர் உபதேசித்த அக்ஷி
முன்பு ஒரு காலத்தில் காசியம்பதியில் விறகு சுமந்து விற்று ஜீவனம் செய்து வந்தவர் வேண்மா என்ற பெயர் கொண்டவர். காசி நகர் சக்தியாகச் செயல்படும் அன்னபூரணியை மானசீகமாகப் பூஜித்த அன்பன் அவன்.
“விஸ்வேஸ்வரர்” வேண்மாவில் செயல் கொண்டு “அக்ஷி முறை” வகுத்துத் தந்த வழி இன்று “குண்டலினி” யோகப் பயிற்சியாக…
1.அந்த முறையும் இந்த முறையும் ஒன்றெனக் கூறி
2.பொருள் ஈட்டும் செயலாகப் பேராசை வலையில் சிக்கித் திகழ்கின்றனர்.
விஸ்வேஸ்வரர் சூட்சுமமாய் வேண்மாவில் செயல் கொண்டு அன்றைய காலகட்டத்தில் “சம்பூத் தீவாக” வழங்கி வந்த அத்தீபகற்பத்தில் அக்ஷியை உபதேசித்தார்.
அவர் “கல்லால சித்தன்” எனப் பெயர் பூண்டு காட்டிய வழி இன்றும் திபெத்திய பீடபூமியில் சீடர்கள் வழி கூற வந்த “லாமாக்கள்” என்று பெயரிட்டே அவர்கள் தம் வசம் இன்றும் செயல் கொண்டு செயல்படுத்தி… மறைக்கப்பட்டு… பேரின்ப லயத்தை தியானத்தின் வழியாகச் சித்தன் நிலை கைகொள்கின்றனர்.
சரீரத்தில் ஓடிடும் சுவாச நாடிகள் (காற்று நூல்) மகரிஷிகளால் காட்டப்பட்டதை ஏற்கனவே உணர்த்தி உள்ளோம். சுவாசங்கள் ஓடிடும் அந்தந்தக் காலகட்டத்தில் “அந்நாடிகளின் வழி எண்ணிடல் வேண்டும்” என்று எத்தனை பேர்களுக்குச் சொல்கின்றாய்…?
எண்ணல் வேண்டும் என்கிறாயே அது என்ன…?
1.நீ கூறுகின்ற வழியே தான் இன்னும் ஒரு படி மேலாக “அகக் கண்ணால் கண்டு”
2.அந்தந்த இடங்களின் சக்தியை… சக்தியின் செயல்பாட்டையும்
3.சிரசின் உச்சிக்கே அகக்கண் கொண்டு நகர்த்தி
4.மேலெழும்ப வைத்திடும் செயலில் கிடைத்திடும் பேரானந்தம்
5.நீங்காமல் நின்று நிலை பெற்றிருக்க அனுபவித்தலே “அக்ஷி…”
அதற்கும் மேலாக ஆத்ம பலம் கூட்டிடும் தத்துவார்த்த உபதேசமாக
1.“யக்ஞம் வேதாள மாமகரிஷி” அன்று முன் மொழிந்ததை
2.இந்த உலகினுக்கு இக்கலியில் மொழிய வந்திருக்கின்றோம்.
அவைகள் முற்றுப் பெறவில்லை. நீங்கள் அருந்த வேண்டிய ஞானச் சுடர் விளக்கம் எத்தனையோ உண்டு.
1.மூலாதாரம் முதல் கொண்டு உச்சி வரை ஒவ்வொரு இடமாக ஒளித்தன்மையைச் சித்தித்தே
2.விழிப்பார்வை கொண்டு எண்ணிப் பிறக்கும் அக்ஷி ஜோதியை… ஆகாய லிங்கத்தைக் காண்பதே சித்தன் நிலை…!
சரீரம் முழுக்க காந்தத்தின் புலன் உணர்வுகளால் தாக்க (உடல் உறுப்புகள் தியானம்) ஆத்ம பலம் கூட்ட அறிந்து கொள். அறிந்ததைத் தெரிந்ததே மெய்ஞானச் சுடராகும் வழி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நோயுற்ற ஒரு பெண் குழந்தையைக் குணப்படுத்துவதற்காக எம்மிடம் (ஞானகுரு) அழைத்து வந்தார்கள். சுமார் 13 வயது இருக்கும்.
குழந்தை நோயால் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் பொழுது வேதனை என்ற உணர்வையே எடுத்துக் கொண்டதால் விஷத்தின் தன்மை அடைந்து விட்டது.
1.மருந்து மாத்திரைகள் என்று விஞ்ஞான அறிவு கொண்டு விஷத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதால்
2.இந்த ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் மனிதனல்லாத உடலாகத் தான் பிறக்கும்.
அந்த உடலிலேயே அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை ஏற்று வளர்த்துக் கொண்டால் அடுத்து உடலை விட்டுப் பிரிந்தால் அது பிறவியில்லா நிலை அடைகின்றது.
ஆகவே…
1.மகரிஷிகளின் உணர்வை அந்த குழந்தைக்குச் செருகேற்றப்பட்டு
2.உயர்ந்த உணர்வைப் பெற வேண்டும் என்று அந்த உணர்வுடனே தொடர்பு கொண்டு தியானப் பயிற்சி கொடுத்தோம்.
ஏனென்றால் அது உடலில் ஆஸ்த்மா தொல்லை உண்டு.
நுரையீரல் பாகங்களில் நரம்பு இழுத்துப்பிடித்து இருப்பதனால் அத்தகைய பாதிப்பு வந்தது. இந்தப் பிடித்தம் அவர்களின் பரம்பரையில் வந்தது அப்பாவுக்கும் உண்டு… தாத்தாவுக்கும் அது இருந்தது
பரம்பரை வழியிலே வந்ததனால் இந்த பின்னம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட்டால் தான் அதனுடைய நிலைகள் தப்ப முடியும்.
ஆகவே பெண் குழந்தையாக இருப்பதால் இப்போது காப்பாற்றினாலும்… அதனுடைய மண வாழ்க்கையில் மீண்டும் அதிகமான வேதனைப்பட்டால் மனிதனல்லாத உருவைத் தான் உருவாக்கிவிடும்.
ஆகவே பருவம் வரப்படும் பொழுது அருள் ஒளியின் தன்மை கொண்டு இந்த உடலிலே மகிழ்ச்சியின் உணர்வு கொண்டு நஞ்சினை வென்றிடும் உணர்வுகளை அவர்களையே பெறும்படி செய்தோம்.
இப்போது எடுக்கும் அருள் உணர்வுகளின் வளர்ச்சி கொண்டு…
1.அடுத்து உடலை விட்டுப் பிரியும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணையவும்
2.உடல் பெறும் உணர்வுகள் கரையவும் பிறவியில்லா நிலையை அடையவும் இது உதவும்.
ஏனென்றால் கடும் நோய்வாய்ப்பட்டவருடைய நிலைகளை நாம் இத்தகைய நிலைகளில் அது மாற்றி அமைக்க வேண்டும்.
குழந்தையினுடைய தாயும் வேதனை உணர்வையே எடுத்துக் கொள்கின்றது. அதை மாற்றி ஒளியின் தன்மையாக மாற்றுவதற்கு இந்த உடலிலேயே அந்த உணர்வுகளைக் கரைத்திட வேண்டும் என்ற நினைவைக் கூட்டும்படி செயல்படுத்தப்பட்டது.
1.இதன் வழி செய்தால் அந்த ஆன்மா எளிதில் அங்கே போய்ச் சேர்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகிறது.
காரணம்… எந்த நேரமும் எத்தருணத்திலும் உடலை விட்டுப் பிரிய நேரலாம். முயற்சி செய்தால் இன்னொரு பத்து வருடம் வாழப் போகின்றோம்… அவ்வளவு தான்…!
ஆனால் இங்கே இந்தப் பெண் குழந்தை என்று வரப்படும் பொழுது சீரான உடல் அமைப்பு இல்லை என்றால் மண வாழ்க்கையில் காலப் பருவம் வரும் போதெல்லாம் வேதனைப்படும்.
1.ஆகவே “இது தேறாது…” என்ற நிலை வந்தபின்
2.தேறுவது எது…? என்ற நிலையில் அருள் உணர்வின் ஒளியே தேறுகிறது… அதுவே என்றும் பிறவியில்லா நிலை.
3.இந்த இளமைப் பருவத்தில் அது ஒளியாகிவிட்டால் நலமாக இருக்கும் என்று
4.அந்த ஆன்மா அதன்படி சப்தரிஷி மண்டலம் இணைந்தது.
இப்படி… இந்த உடலுக்கு என்று இச்சை அதிகமாகப் பெறாதபடி அருள் ஒளி பெற வேண்டும்… இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்க வேண்டும் என்று இந்த உணர்வுகளை நாம் எடுத்தாலே போதுமானது.
1.குறித்த காரியங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில்
2.அருள் ஒளியை நமக்குள் பெருக்கும் பொழுது தெளிவான உணர்வுகள் வரும்
3.வழியறிந்து செயல்படக்கூடிய திறன் வரும்
4.சோர்வு என்ற நிலைகள் விடாது தெளிந்த மனதைக் கூட்ட இது உதவும்.
எத்தகைய தொல்லைகள் வரினும் அருள் ஒளி எங்கள் உடலில் பெருக வேண்டும்… அருள் ஒளி பெறும் அந்த நினைவு பெருக வேண்டும்… இந்த உடலை விட்டுச் சென்றால் என்றும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்… அந்த அரும் பெரும் சொத்தே நமக்குச் செல்வம் என்று செயல்படுத்த வேண்டும்.
நாம் தேடிய செல்வங்கள் நம்முடன் வருவதில்லை… அழகான உடலும் வருவதில்லை… நாம் அலங்காரம் செய்யக்கூடிய பொருள்களும் வருவதில்லை… ஆடம்பரமாக நாம் கட்டிய வீடும் வாங்கிய காரும் வருவதில்லை. மற்ற எத்தகைய பொருளாக இருந்தாலும் நம்முடன் வருவதில்லை.
1.ஆனால் அந்த அருள் ஞானத்தை இந்த உடலிலே வளர்த்துக் கொண்டால்
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை பெறும்.
3.வேகா நிலையாக பிறவியில்லா நிலை அடைய முடியும்
4.அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ முடியும்
5.அப்படி வாழக்கூடிய பருவத்தை இந்த உடலிலேயே சேர்த்தால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?
வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.
இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.
காரணம்… வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.
அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்… சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே… ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.
ஏனென்றால்…
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் – உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.
மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது…? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது…?
வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.
1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.
அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.
ஆகவே… அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.
விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.
அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.
உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்… பார்க்கலாம்…!
அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!
ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு… நம்மைக் காத்திடும் சேனாதிபதி.
ஆகவே… தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்…?
நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.
நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா…!
தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து… இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்…?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.
இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்… உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.
சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.


இராமலிங்கம்
உயிரான ஈசன் தான் கவரும் உணர்வுகளை… “உருவமாக்கி அருவத்தின் செயல்கள் எவ்வாறு இருக்கிறது…?” என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றது நமது அகஸ்தியன் காட்டிய அறநெறி வழி கொண்டு “அவனில் பெற்ற உணர்வின் செயல்…” அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உயிரணு தோன்றி எத்தனையோ வகை உருவங்கள் பெற்று… உணர்வுக்கொப்ப அணுக்கள் விளைந்து உடலை விட்டுச் சென்ற பின் அதன் இணைப்பு கொண்டு அடுத்த உடலைப் பெறுகின்றது.
இப்படித்தான்
1.பல கோடி உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று இறையாகி
2.அதனின்றி மீள வேண்டும் என்ற உணர்வைப் பெருக்கிப் பெருக்கி எண்ணிலடங்காத உடல்களுக்கு இரையாகி
3.அதன் உணர்வைக் கவர்ந்து உடலின் உருவங்களை மாற்றி மாற்றி மனிதனாக நம்மை உருவாக்கி உள்ளது உயிர்.
மனிதன் தான் உயிரை ஈசன் என்று மதிக்கும் தன்மை பெறுகின்றான்.
1.தனக்குள் உருவாக்கியது யார்…? என்றும் உணர்வை இயக்குவது யார்…? என்றும்
2.தன்னில் இயக்கும் உயிரை முதல் மனிதன் அகஸ்தியன் காணுகின்றான்.
3.அதன் உணர்வின் செயலாக்கத்தைக் காணுகின்றான்.
4.கண்டபின் தான் நுகரும் உணர்வுகள் தான் தனக்குள் உருவாகின்றது என்பதை உணர்ந்தான்
5.உயர்ந்த நிலைகள் கொண்ட உணர்வினை அவன் நுகர்கின்றான்
6.தீமைகளை அகற்றும் உணர்வை நுகர்கின்றான்
7.அதன் உணர்வு கொண்டு தீமையை அகற்றிடும் அணுக்களை உருவாக்குகின்றான்
8.இருளை வென்றிடும் உணர்வினை நுகர்கின்றான். இருளை அகற்றிடும் அணுக்களைப் பெருக்குகின்றான்.
9.இப்படிப் பெருக்கித் தான் விண்ணின் ஆற்றலை நுகர்கின்றான்
10.அதனில் வரும் நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றுகின்றான்.
11.அறிவின் ஞானமாக இயக்குகின்றான்… அருள் ஒளி என்ற உணர்வினைப் பெருக்குகின்றான்.
பெருக்கிய நிலைகள் கொண்டு அதை எல்லாம் தன் மனைவிக்கே ஓதுகின்றான். இவை இவை…! என்றும் இதனின் உணர்வுகள் இவ்வாறு…! என்றும் செவி வழி கூட்டும் பொழுது உணர்வின் தன்மை இயக்கப்பட்டு அதன் வழி
1.மனைவியும் கணவனுடன் ஒன்றிணைந்து தான் கண்ட உணர்வுகளை இருவரும் ஒன்றென இணைந்து
2.இரு உணர்வும் ஒன்றென இணைந்து இரு மனமும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றென இணைந்து உணர்வினை ஒளியாக மாற்றி
3.விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து ஒளி என்ற உணர்வாக மாற்றியவன் அகஸ்தியன் துருவனானான்
4.துருவ மகரிஷியாக துருவ நட்சத்திரமாக ஆனான்… அவர்கள் வளர்ச்சியில்.
எண்ணத்தால் உணர்வால் ஒளியின் சரீரமாக… “எண்ணம் கொண்டு” உயிருடன் ஒளியின் சரீரமானதால் இராமலிங்கம் என்ற காரணப் பெயரை வைத்து அழைத்தனர்.

மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்
1.உள்ளத்தின் கூளமதை உணர்ந்து கொண்டு… அதை தூய்மையாக்கிடும் முயற்சிக்கு (தன் ஆத்மாவைச் சுத்தம் செய்வது)
2.இன்றைய மக்களின் நிலை வேர்விடும் ஒதிய மரமாகக் காணப்படுகின்றன.
3.சூறைக்காட்டில் ஒதிய மரம் (மிகவும் மென்மையான மரம்) நின்று நிலை பெற்றிடாது.
கருமானின் (கொல்லன்) உலைக்களத்தில் சென்று தேவையற்ற இரும்புப் பொருட்கள் அங்கே ஏன் கிடைக்கின்றது…? என்று கேள்வி கேட்க முடியுமா…! அவைகளை அவன் உளைக்களத்தில் தானே வைக்க முடிந்திடும்.
உலக சிருஷ்டியின் கூளத்தைப் பார்…! உலகத்தின் குப்பைகள் ஒவ்வொன்றும் புதிய புதினங்களாக உருவாக்கிக் கொண்டிருக்கும் சிருஷ்டியின் இரகசியங்களை நீ அறிந்து கொண்டிட வேண்டும்.
மனித மனத்தின் கூளங்கள்… மனிதனின் மனக்கருவையை மூடிக்கொள்ளும் அளவிற்கு வளர்ந்து… ஆத்ம பரிபாலன அரசை இந்த உலகோதயம் சூதிலே வீழ்த்திவிடும்.
உரத்து எழுகின்ற காற்றே குப்பைகளை அகற்றும். அது போல் மகரிஷிகளின் சக்தியை வைத்துத் தான் ஆன்மாவில் பட்ட அசுத்தங்களை அகற்ற முடியும்.
தூய்மைப்படுத்த வேண்டுமென்றால்… சப்தரிஷிகளின் அருள் வழி கடாக்ஷங்கள்… மகரிஷிகளின் அருள் ஒளியாக உரத்து மனத்தூய்மை காட்டும் அந்தச் செயல்பாட்டின் உறுதி நம்மிடம் எப்படி இருக்க வேண்டும்…?
தென்னம்பாளைப் பஞ்சு…
அம்பின் நுனிக் குஞ்சு…
பாறையின் மோதல் வேக நெருப்பு… (SELF IGNITION)
(இராம) காதையின் வழி கண்டுகொள் விருப்பு.
1.தென்னம்பாளைப் பூவின் பஞ்சு போல் அமைத்திட்ட கோலாக அம்பாக அமைந்து…
2.நாண் பூட்டிய வில்லின் மூலம் அதை எறிய…
3.காற்றின் உராய்வு சக்தி கொண்டு கனன்று எரிகின்ற நெருப்பாக…
4.மனத்தூய்மை பெற்றிடும் முயற்சி… அக்னி அஸ்திரத்தை எறிகின்ற விசை போல் இருந்திட வேண்டும்
நீ ஈர்த்துக் கொண்டிடும் “உயர் மின் நுண்காந்த அணுக்கள்” ஆகாயச் சித்தன் (அகஸ்தியன்) கண்ட செயலில்… சரீர உள் நிகழ்வில்…
1.உச்சி முதல் உள்ளங்கால் வரை… உள்ளங்கால் முதல் உச்சி வரை அந்த ஒளி அணுக்கள் ஓடிடும் ஓட்ட கதியில்…
2.மேலிருந்து கீழாக கீழிருந்து மேலாக ஓட்ட கதி சந்திப்பின் உராய்வில் உண்டாக்கப்படும் ஒலி நாதம்…
3.நம் சரீரத்தைச் சுற்றி ஓடும் அண்ட கோசம் என்ற ஒளிச்சுற்றலாக அமைவு கொண்ட அமைப்பில்
4.உன்னுள்ளே ஓங்கார நாதத்தை இடைவிடாது கேட்டு அனுபவிக்கின்றாய் அல்லவா.
ஞானமாகச் சுடர்கின்ற தன்மைக்கு அதுவே முன் முயற்சி. அனைத்தையும் அறிந்து கொள்ள… தெளிந்து கொள்ள முடியும். அத்தகைய மனித மனத்தின் மனோ சக்தியின் ஆற்றலை… இன்றைய மனிதன் இன்னும் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பூட்டி இருக்கின்ற மனக் கதவைத் திறந்து கொள்ள… இங்கே கொடுக்கும் உபதேச வாயிலாகத் “தியானம் என்ற சாவியை” மனமுவந்து அளிக்கின்றோம்.
அதை வைத்துத் தன் மனக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவன்… உள்ளே இருந்து கொண்டு கதவடைத்துத் தாழ்பாளை இட்டு பூட்டிக் கொண்ட பின்… சாவியைத் தொலைத்து விட்டானப்பா…! (மீண்டும் பிறப்புக்கு வராது மகரிஷிகளுடன் ஒன்றிடும் நிலை).
1.அத்தகைய மெய் ஒலி மெய் ஞானம் சுடராக விளங்க… உண்மை நிலை உணர்ந்து தங்களை உயர்த்திக் கொள்வோர்
2.இங்கே வழிகாட்டும் மாமகரிஷிகள் நிலையின் வழி ஒன்றுவர்.
படைப்பின் படைப்பே சிருஷ்டி… அனைத்தும் பெற என்னுடைய ஆசிகள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.
ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி…! எனக்குத் தலை வலிக்கிறது… மேல் வலிக்குதே… உடம்பு வலிக்குதே… என்னை காப்பாற்ற மாட்டீர்களா…! என்று தான் நினைக்கிறார்கள்.
சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.
சாமியைத் தான் நினைக்கிறார்கள்… ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.
இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்…? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்… உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு… என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.
அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.
இந்த வாழ்க்கை என்ன…? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.
உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.
நல்ல குணங்களுக்கும்… தீமை செய்யும் குணங்களுக்கும்… மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது… உடல் நோய்கள் வருகின்றது… சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.
1.என்ன வாழ்க்கை…? என்றும் இனி வாழ்ந்து என்ன…? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.
இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.
ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.
பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.
அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஞானிகள் காட்டிய வழியினைப் பற்றுடன் பற்றும் பொழுது அருளை நாம் பற்றுகின்றோம். அதன் வழியே காரியங்கள் எல்லாம் நடக்கின்றது.
வாழ்க்கையில் குடும்பப் பற்றினை அதிகமாகச் சேர்த்து அருள் பற்றினைக் குறைக்கப்படும் போது செயல்கள் தடைப்படுகிறது. காரணம்…
1.குடும்பப் பற்று என்று வந்தாலே
2.அதிகமான நிலையில் தன் சிந்தனையை இழக்கச் செய்யும்.
இந்தக் குழந்தைக்கு இப்படி ஆக வேண்டும்… அங்கே இப்படி நடக்க வேண்டும்… என்ற உணர்வு வந்து விட்டாலே போதும்.
1.நமக்குள் பதிந்திருந்த “பழைய உணர்வுகள்” அனைத்தும் முன்னாடி வந்துவிடும்.
2.அது முன்னாடி வந்து விட்டால் அதனைக் காப்பது என்பதே பெரிய சிரமம்.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஒரு காரியத்தைச் சித்தியாக்க வேண்டுமென்றால் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… எல்லாம் தெளிவாக வேண்டும் என்ற உணர்வினை அடிக்கடி நாம் கூட்டிக் கொண்டே வந்தால் சரியாக இருக்கும்.
1.கண்களைத் திறந்து விண்ணை நோக்கி நினைவைச் செலுத்தி
2.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணி
3.அந்த அருள் சக்திகளைச் சுவாசிக்க வேண்டும்.
அதற்குப் பின் வாழ்க்கையில் எது நமக்குக் குறையாகத் தென்படுகிறதோ அது நிறைவேற வேண்டும்… குழந்தைக்கு திருமணம் ஆக வேண்டும் சீக்கிரம் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்
ஆனால் ஆகவில்லை என்கிற போது பெண்ணுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது… திருமணம் ஆகவில்லையே…! என்று ஏக்கம் வருகிறது.
ஏக்கத்தின் தன்மை கொண்டு “அது நடக்க வேண்டும்…” என்ற நிலை இருந்தால் சோர்வு நமக்குள் வராது. ஆனால் சோர்வடைந்த நிலையில் எண்ணி எடுக்கப்படும் பொழுது இந்த விஷத் தன்மைகள் கூடி
1.இந்தப் புவியின் பற்றும் உடலின் பற்றும் அதிகரித்து விடுகின்றது.
2.அருள் ஞானிகளின் பற்று தணிகின்றது.
ஆனால் அருளைக் கூட்டினால் அது வளர்ந்து எதையும் நாம் வெல்ல முடியும்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் எடுக்கும் உணர்வுகள் உயர்வாக இருக்கப்படும் பொழுது நலமாகின்றது.
கொஞ்சம் தளர்ச்சி அடைந்தால் விஷத்தின் தன்மை கூடி விடுகின்றது மனித வாழ்க்கையின் எண்ணங்கள் கூடினால் அருள் ஞானத்தை இழக்கும் சக்தி வருகின்றது.
ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.நமக்குள் வரும் எந்தக் குறையாக இருந்தாலும் அதை மனதில் இருத்தாதபடி
2.அருள் ஒளி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் வழியில் எங்கள் வாழ்க்கை நலம் பெற வேண்டும்
4.எங்கள் பார்வை அனைவரையும் நலமாக்க வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும் என்று
5.இந்த உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டே வந்தால் இந்த உயர்ந்த குணம் நமக்குள் உருவாகும்… நமக்குள் அது பெருகும்… நம்முள் அது வளரும்.
6.நம் சொல் அனைவரையும் பற்றுடன் இயக்கும் நிலை வரும்
7.நாம் எண்ணிய காரியங்கள் ஜெயமாகும்… அந்த உணர்வின் இயக்கமும் நமக்குள் தொடர்ந்து செயலாகும்.


“அகஸ்தியனின் சகாக்கள்” சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்
1.அகஸ்தியன் தன் இளமைப் பருவத்தில் பல விஷம் கொண்ட தாவர இனங்களை நுகர்ந்தாலும் உணவாக உட்கொண்டாலும்
2.அவை அனைத்தும் இவனுக்குள் விஷத்தை ஒடுக்கி… உணர்வின் தன்மை மாற்றும் நிலை வருகின்றது.
உதாரணமாக ஒரு தட்டான் பூச்சி எதன் மேல் தன் முட்டைகளை இட்டதோ அந்த உணர்வுக்கொப்ப அதிலுள்ள மணத்தைத் தாங்கி அந்த உணர்வுக்கொப்ப பல வித வர்ணங்கள் கொண்டு பல பல வகையில் பூச்சிகளாக வருகின்றது.
1.ஒரே தட்டான் பூச்சி தான் முட்டைகளை இட்டது
2.ஆனால் முட்டைகளை இட்ட செடிகளுக்கொப்ப அந்த கருக்களில் நுகரப்பட்டு
3.பல வண்ணங்களில் பல விதமான பூச்சிகள் உருவாகின்றது.
இது எல்லாம் இயற்கையில் விளைவது.
இதைப் போல தான் இயற்கையில்
1.அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுது விளைந்த உணர்வுகள்
2.பல பல இயக்கத்தின் உணர்வுகளையும் நஞ்சினை அடக்கிடும் தன்மையும் உணர்கின்றான் அகஸ்தியன்.
“அவனில் இணைந்த உணர்வுகள்” நஞ்சினை வென்றிடும் உணர்வுகளாக நுகர்ந்ததனால் அதை அவனின் எண்ண ஒலி கொண்டு வெளிப்படுத்துகின்றான். அதனைச் சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.
1.அவனுடன் பழகியோர் அவன் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அவன் உணர்வைப் பதிந்தோர்
2அவர்களுக்கும் அது கிடைக்கப் பெறுகின்றது
அகஸ்தியன் தாய் கருவில் பெற்றான். அவனுக்குக் கிடைத்த உணர்வுகள் தன் சகாக்கள் கேட்டறியப்படும் போது அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் விளையத் தொடங்குகிறது
இவனில் விளைந்த உணர்வுகள் அவர்களுக்குள் ஜீவனுக்களாகப் பெற்று அந்தச் சகாத் தோழர்களும் இவனைப் போன்றே அவனை ஒட்டி வாழும் நிலைகள் வருகின்றது
காரணம்… அவரவர்கள் சந்தர்ப்பம் இயற்கையில் எதை எதை நுகர்கின்றோமோ அவை அனைத்தையும் உயிர் உடலில் அணுக்களாக உருமாற்றிக் கொண்டே உள்ளது.
இதை எல்லாம் அறிந்தவன் அகஸ்தியன். பல கோடி இன்னல்களைக் கடந்து அதனைத் தான் அறிந்து தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து தீமையை அகற்றிடும் அருள் சக்தி பெற்றான் அகஸ்தியன்.
1.அவன் நிலையை நாமும் காண முடியும் காண வேண்டும் என்பதற்கே
2.குரு வழியில் இதை வெளிப்படுத்துகின்றேன்
அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அகஸ்தியன் உணர்கிறான்.
அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.
இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள அவன் சகாக்களுக்கும் சொல்கிறான்.
அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நடந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில் “அன்பே” முதன்மையாகும்
மனித மனம் சமுத்திரத்திற்கே (கடல்) ஒப்புவமை காட்டப்பட்டது. அமைதியாகத் தோற்றமளிக்கும் அந்தக் கடல் நீர்
1.பரப்பளவிலே உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிடும் உண்மை நிலையே “நம் மனத்தின் அலைபாயும் எண்ணங்கள்…”
2.இடையறாது சதா வீசிக்கொண்டே இருக்கும் அலைகள் போல் குணங்களின் தன்மைகள்
3.பல பல குணங்களாக ஆர்ப்பரிக்கும் மனத்தின் எழுச்சி எண்ண அலைகளானது…
4.நாம் கொள்ளப்படுகின்ற (முடிவெடுக்கும் நிலைகள்) கருத்தின் வாசனையாக… “பருவ கால மாற்றம் போல்…”
5.அதனால் ஏற்படுகின்ற கடலின் சூறாவளி போல்… கொண்ட குணத்தின் தன்மை காட்டும்.
மனத்தினுள் மெய் ஞான விழிப்பின் உதயம் கண்டால் நற்குணத் தன்மைகளில்… “அன்பே முதன்மையாக” அந்த குணங்களே வீசிடும் அலைகளாகப் பரவி… புறத்தின் பொய்மை நிலைகள் அகன்று… சாஸ்வதமான மெய் ஒலியால் ஒளி காட்டும் மெய் ஞான நிலை கூட்டி… மெய் ஞானச் சுடராக விளங்கும்.
அதீத நோய்வாய்ப்பட்டவன் நறுமலர் தேனின் சுவையை அறிந்து கொண்டிட முடியாத் தன்மை போல் மெளடீகத்தின் (மூடத்தனம்) வலையில் உட்படும் மனிதர்கள் அதிகரிக்க…
1.மெய் ஞான மணம் காட்டி… சுவை கூட்டும் எளிய தியானத்தைக் காட்டினாலும்
2.கடைப்பிடிக்க முன் வருபவர்கள் அரிதிலும் அரிதாகிக் கொண்டே வருகின்றார்கள்.
அதீத சுகவாசம்… சோம்பேறித்தனம்… இவை எல்லாம் அருள் செல்வத்தைப் பேணிக் காத்திடும் கடமையைக் குறைத்துவிடும்.
அருள் செல்வத்தைப் பேணுகின்ற பொறுப்பு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதனுக்கே உரியது…. அந்தப் பொறுப்பும் அதைக் காக்கின்ற கடமையும் அவனையே சார்ந்தது.
வாசல் வழி திறந்திருந்தால் திருடன் புக ஏதுவாகும். தீய குணங்களையே அவ்வாறு கூறுகின்றோம். ஆத்ம பலம் கூட்டிடும் கடமையை ஏற்றுக் கொண்ட மனிதன்
1.திருடனாலும்… அதாவது தீய குணங்கள் அருள் செல்வத்தை அபகரிக்க…
2.”தனக்கு அதிலே எதுவும் பொறுப்பில்லை…” எனத் தட்டிக் கழித்திட முடிந்திடுமோ…?
3.பொருளைக் காக்கின்றவன் காக்கின்ற கடமையைத் தவறிவிட்டால் அதனுடைய முழுப் பொறுப்பும் அவனுக்கே உரியது.
விழுப்பொருளாம் (உயிருடன் ஒன்றி விண் செல்லும் ஆற்றல்) அந்தப் பொருளை முன் நிலை போல் சமன்படுத்த… மனித மனத்தின் செயலுக்கே அது உரியது.
உவப்பு (மகிழ்ச்சி) மனத்தினுள் நிலைபெற்றுப் பேரானந்த லயமாகக் கலந்திடவே… மனத்தின் பாங்கு அன்று மலர்ந்த மலர் போல் மணம் வீசும் செயலை உணர்ந்து கொண்டிடும் மகிழ்வால்… நாதமாக ஈர்த்திட்டு பேரொளி பெற்றிடவே இங்கே உரைப்பதெல்லாம்.
துறவறம் பூண்டு ஒளி நிலை பெற வேண்டும் என்றே கூறுகின்றார்கள். நாம் கூறிடும் நிலையோ “இல்லறத்தின் வழியாக… ஒலி கொண்டு ஒளி பெறுதல் தான்…”
நாதத்தைக் கூட்டி நாத நாதாந்தம் ஆகுதல்… பேரொளியாகுதல்…” என்பதெல்லாம் நல்லறம் ஆக்கிடும் இல்லறத்தில் பயனுறப் “படைப்பின் படைப்பாதல்…” என்பதனையே உணரல் வேண்டும்.
ஔவையின் உரை… வறுமை கொடியது…! பசியை நோய் என்றே பகர்ந்த உரை. பசி நோயானது தொடர்ந்து பீடிக்கப்படுங்கால்… சரீரம் பசி நோய்த் தாக்குதலில்… உணர்வின் உந்துதல் கொண்டு உயர் நிலையை எண்ணிடாது.
புசித்தால் அந்த நோய் அகலும். ஆனால் தொடர்ந்து வருத்தும் அந்தப் பசி நோயிற்கு “வறுமையில் உழல்பவன்… வளமாக வாழ்பவன்…” என்றெல்லாம் பேதங்கள் ஏது…?
ஜீவ பிம்ப சரீரம் பெற்ற அனைத்து உயிர்களையும் தான் பசி நோயானது வருத்துகின்றது. புசிக்க வழி காணும் ஆக்கத்தின் செயல் இன்றி பசி அகன்றிடுமா…?
வாழும் வாழ்க்கையின் செயலில் முயற்சி அன்றோ திருவினை தருகின்ற உசித மனம் வேண்டும். உசித மனம் கொண்டவன் உரப்ப தானேகும் பசி நிலை (கட்டுக்குள் அடக்க முடியும்).
இந்தத் தியானத்தின் வழியில் செயலுறும் வழியாகக் காற்றமில சக்தியை (உயிர் வழி சுவாசம்) ஈர்த்துக் கொண்டிடும் பக்குவத்தில்… மூல அமில சக்தியாக ஆகாரத்தை (பசிக்கு உட்கொள்ளும் உணவு) இந்தச் சரீரத்திற்கே பெற்றுக் கொள்ள முடிந்திடும். அதாவது
1.தொடர்ந்துற்ற பசிக்குத் தொடர்ந்தே உணவு அருந்திடும் தன்மை போல்
2.தொடர்ந்தே காற்றமில சக்தியைச் சரீரத்தினுள் ஈர்த்துக் கொள்ளும் செயலில்
3.”நிலை நிற்கும் பேறு அதுவே…” என மாமகரிஷிகளால் அந்தச் சக்திகளை வளர்த்துக் கொண்டிடலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் பாஷை புரியாதபடி எதை எதையோ சொல்லுவார் என்னென்னவோ சொல்லுவார். எனக்குத் (ஞானகுரு) தெரியாது
1.தெரியாது… என்று நான் சொன்னாலும் வம்பு…!
2.தெரியும் என்று நான் சொன்னாலும் “எப்படித் தெரிந்து கொண்டாய்…?” என்று கேட்பார் குருநாதர்
இப்படி வழக்கத்திற்கு மாறான நிலையில் செய்து அதனைத் தனக்குள் செய்யச் செய்து
1.அவரின் சக்தி வாய்ந்த உணர்வை எனக்குள் போதிக்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் வளர்ந்தபின்
2.இப்போது எப்படி இருக்கின்றது…? என்று கேட்பார்…?
அவர் சொல்லும் (உபதேசம்) பொழுதும் எனக்குக் கஷ்டங்கள் வரும் பொழுதும் மறைமுகமாகவே எனக்குள் இப்படித் தான் சொல்வார். சொல்லிவிட்டு
1.அதைப் பார்… இதைப் பார்…
2.இப்படிப் பார்… அப்படிப் பார்…! என்பார்.
அதை நான் கேட்கும்போது இவர் என்ன சொல்லுகிறார்…? என்று நான் நினைத்து விட்டால்
1.ஏன்டா திருடா நீ இதைத் திருட வேண்டும் என்றால் அதைத் திருடுகின்றாயே…!
2.நான் சொல்வதை விட்டுவிட்டு எதை எதையோ திருடிக் கொண்டிருக்கிறாய்… “என்னவோ ஏதோ என்று…”
ஆக அதைத் திருடினால் நீ திருடனாகின்றாய். ஆனால் நான் சொல்லும் உணர்வின் தன்மையைப் பெற்றால் நீ திருடன் அல்ல. நீ என்னிடம் கேட்டு வாங்குகிறாய்…! ஆகவே நான் கொடுக்கும் உணர்வின் தன்மையை நீ ஏங்கிப் பெறு என்பார்.
ஆனால் இவர் (ஈஸ்வரபட்டர்) சொல்வது எப்படி…? எனக்கு ஒன்றும் அர்த்தம் ஆகவில்லையே… அதாகின்றது… இதாகின்றது… என்று எண்ணினால்
1.திருட்டுத்தனமாக உனக்குள் “குறையின் உணர்வை” எடுத்துக் கொள்கின்றாய்.
2.அது உன் திருட்டுத்தனத்தின் நிலையைக் காட்டுகின்றது.
நான் கொடுக்கின்றேன்… நீ எடுத்துக்கொள்…! ஆகவே கொடுப்பதை விடுத்துவிட்டுக் கிடைக்காததை நினைத்து நீ எங்கோ நினைவு செலுத்துகின்றாய்.
நான் மனமுவந்து கொடுக்கும் உணர்வை நீ நுகர்ந்தறிந்தால் அதன் அணுவாக உனக்குள் வரும். அருள் ஞானத்தின் உணர்வுகளை உனக்குள் வளர்த்துக் கொள்ள உதவும்…! என்றார்.
இப்படித்தான் அவருடைய சொல் செயல் இவை எல்லாம் வெளிப்பட்டது. அதன் வழி கொண்டு எனக்குள் தெளிவாக்கினார்.
எனக்குக் கல்வி அறிவே இல்லை… நான் மூடனாக இருப்பினும் என் மூடத் தன்மையை நீக்கி அருள் ஞானத்தை எப்படி வளர்க்க வேண்டும்…? என்று வளர்த்தார்.
காடு மேடெல்லாம் அலையச் செய்தார் உணவு இல்லாதபடி தேடச் செய்தார். இயற்கையில் ஒவ்வொன்றும் எப்படி உருவாகிறது…? என்று இப்படி எத்தனையோ பல உணர்வுகளைக் காட்டுகின்றார். அதையெல்லாம் பசியோடு இருந்து தான் பார்த்தேன்.
1.என் குரு எனக்குச் சொன்னது போன்று…
2.அவர் எனக்கு உணர்த்தியது போன்று…
3.நீங்களும் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்…! என்று தான் இப்பொழுது உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.