அருள் வழியில்… இப்பொழுது வருபவர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் தான்…!
பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவுக்காக மற்ற உயிரினங்களை எடுத்தாலும் மற்ற உடலில் உள்ள விஷங்கள் எல்லாம் தன் உடலில் கலந்து கலந்து
1.பல விதமான வர்ணங்களாக… நாகரத்தினமாக விளைகின்றது…. “கல் மயமாகின்றது…!”
2.ஆனால் மனிதனான பின் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றப்படும் போது இது “மின் மயமாகின்றது…”
அதாவது… இயக்கம் உயிர் துடிப்பு எப்படி ஆகின்றதோ நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து… ஒளியின் சேர்க்கை ஆகிறது.
தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து தேனை உருவாக்கி ஒரு கூடாகக் கட்டி அதிலே எப்படி அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகளை… தேனீயைப் போன்று ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றுகிறது.
துருவ நட்சத்திரம் திடப்பொருள் அல்ல… உயிரின் இயக்கத்தைப் போல ஈர்க்கும் ஒன்றுடன் இணைந்து அது வாழும் தன்மையும் பெற்றது திடப்பொருள் ஆகிவிட்டால் வைரமாக… கல்லாக… கோள்களைப் போன்று பாறை ஆகிவிடும்.
மின் இயக்கத்துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியின் மையத்தில் வெப்பமாகி அதன் உணர்வைக் கவர்ந்து கொண்டு வருகின்றது
ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக வளர்ச்சி ஆக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து “ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது….”
தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை நாம் உட்கொள்ளும் பொழுது அது எப்படி சுவையாக இருக்கின்றதோ அதைப்போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகச் செலுத்தி அதனை வளர்ச்சியாக்கும் போது
3.விஷத்தை மாற்றி இனிமை என்ற உணர்வை ஊட்டி அதை வளர்த்துக் கொள்வதே ஆறாவது அறிவின் சிறப்பு.
எல்லாமே… சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமானது.
மனிதனாகி ஆறாவது அறிவு பெற்றபின்…
1.தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி
2.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு அனைத்து உலகிலும் வரும் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருக்கிணைந்த இயக்கமாகப் பெறச் செய்வது தான் நம்முடைய நோக்கமாக இருத்தல் வேண்டும்.
உயிர் உடலான இருளுக்குள் இருந்து தான் உணர்வின் அறிவாக இயக்குகின்றது. ஆனால் மகரிஷிகள் என்பவர்கள்… உயிரைப் போல ஒளியின் உடலாக மாற்றி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் “சூரியனே அழிந்தாலும்” அதிலிருந்து வெளிப்படும் விஷத்தின் தன்மையைக் கூட ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.
அத்தகைய ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
1.நுகர்ந்த உணர்வு உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் இணைந்து
2.ஒவ்வொரு நோடியிலும் சுவாசிப்பது… புருவ மத்தியில் உயிரிலே மோதுவது போன்று
3.அந்த ஜீவ அணுக்களும் இந்த உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றது.
உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அத்தகைய தகுதி பெறச் செய்வது தான் எம்முடைய (ஞானகுரு) இந்த உபதேசத்தின் நோக்கம்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னுடைய நினைவை துருவ நட்சத்திரத்திற்கு எப்படி அழைத்துச் சென்றாரோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.உங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்களின் முகப்பில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும்படி செய்கின்றேன்.
விஷத்தை ஒளியாக மாற்றும் அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் பெறுவதற்கு… அதற்குண்டான சரியான காலப்பருவங்களை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
குருநாதர் எந்தெந்தப் பருவங்களில் எதனெதன் சந்தர்ப்பத்தில் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல்
1.உங்களுக்குள் அந்த மனப்பக்குவம் வளர்ச்சி பெறுவதற்குத் தக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.
அப்படி மனப்பக்குவமாகி விளைந்த பின் உங்களில் விளைந்த உணர்வுகள்… உங்களுடன் பழகும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.
ஆகவே “பிந்தி வருபவருக்கு…” உங்கள் மூலமாக உயர்ந்த சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடிகின்றது ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு அது விளைகின்றது என்பதை நீங்கள் உணர்தல் வேண்டும்.
1.குருவுடன் தொடர்பு கொண்ட உங்களில் விளைந்த அந்த உணர்வுகள் தான்
2.இனி வருவோருக்கு அந்த மகரிஷிகளின் உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது.
அணு குண்டுகளை உருவாக்கிய எந்த நாடும் அதைப் பயன்படுத்தப் போவதில்லை… தானாகவே வெடிக்கப் போகிறது…
இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்…!
இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே. அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல… ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.
அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.
சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.
ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.
எந்நிலையில்…? என்று கேட்பீர்கள்…!
இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.
இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.
1.“இன்று வெடிக்கப் போகின்றேன்… நாளை வெடிப்பேன்…!” என்று பயமுறுத்தலுடன்
2.பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை… மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.
ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.
ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.
இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து… இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு… “ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில்”
1.அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில்
2.அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.
இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.
இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.
இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே…? என்ற வினாவும் எழலாம்.
1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே “நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா…!”
யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.
“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.
“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…”
1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.
27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.
காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.
அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.
கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.
இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.
நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.
இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.
நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!
நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.
மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.
அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.
இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்…”
அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.
27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.
அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது
இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.
உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,
ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)
ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.
குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.
ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.
ஜெப நிலை
கேள்வி:
நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.
ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.
ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.
அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.
இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.
வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.
இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா..! என்று.
சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது…?
நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.
1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.
இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.
ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.
இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள் இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.
ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.
சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.
உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.
1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.
முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.
இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.
“முள்ளை முள்ளால் எடு…” “வைரத்தை வைரத்தால் அறு…” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.
இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.
போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.
இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.
இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.
வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.
1.அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்…!
2.உலக சக்தியும்… சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால்
3.“அனைத்து சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்…!”
4.இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்… வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.
தொழில் செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது
தொழிலில் நஷ்டமானால் “நஷ்டம் ஆகிவிட்டது…” என்று எண்ணத்தை விடுத்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஈரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுவாக்க வேண்டும்.
அந்த நஷ்டத்தால் ஏற்பட்ட வேதனையை துருவ நட்சத்திரத்தின் சக்தியைன் எடுத்து அப்புறப்படுத்திய பின்
1.நமக்குச் சிந்திக்கும் திறன் வருகின்றது
2.அடுத்து எப்படி அதை சமாளிக்க வேண்டும் என்ற ஞானமும் வருகின்றது
3.அந்த ஞானத்தின் வழி கஷ்டத்தை நிவர்த்திக்கும் சக்தி நமக்குள் வருகின்றது.
நஷ்டம் வருகிறது என்றால் இவ்வாறு செய்யாதபடி நம் நண்பர்களிடத்தில் இதைச் சொன்னாலோ அவரும் திரும்ப அந்த வேதனைப்படும்படி தான் சொல்வார்.
அந்த வேதனையை மீண்டும் சொன்ன பிற்பாடு
1.அடுத்து அவர் ஏதாவது நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும்
2.பணம் கொடுத்தால் திரும்ப வருமா…! என்று சந்தேகப்பட்டு “என்னிடம் இப்பொழுது பணம் இல்லை…” என்று சொல்லிவிடுவார்
காரணம்… அவரை பாதுகாத்துக் கொள்ளத்தான் அவ்வாறு செய்வார். அந்தச் சமயத்தில் நம்முடைய சிந்தனைகள் (கஷ்டம் என்று சொன்னது) நமக்கு நாமே தண்டனை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
இதைப் போன்ற பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய சொல்…
1.கஷ்டங்களைச் சொல்லாதபடி இந்தக் காரியங்கள் இப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுப் பழக வேண்டும்
2.அப்பொழுது நமக்கு உதவி செய்யும் பண்புகளை அங்கே உருவாக்கும்
உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
சில பேர் “தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் எண்ணி… இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு… எனக்குப் பணம் கொடுங்கள்…!” என்று கேட்டபின் அவருக்குக் கொடுத்தால் அடுத்து அவரிடம் திரும்ப வாங்க முடியாத நிலை ஆகிவிடும்.
நம் உடலின் ஈர்ப்பிற்குள் வட்டத்தில் இருந்த இந்த உணர்வுகள் தான்
1.அந்த (நமது) உணர்வே நம் உடலுக்குள் எதிரியாக மாறி எதிரிகளை உருவாக்கிக் கொண்டு
2.நமக்கு ஏற்படும் நன்மைகளை வரவிடாதபடி தடுக்கும்
இதைப் போன்ற உணர்வுகளிலிருந்தெல்லாம் தப்புவதற்கு ஆத்ம சுத்தியை நீங்கள் அவசியம் கடைப்பிடித்துப் பழக வேண்டும். காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரவர்கள் வசதியைப் பொறுத்து எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
தொழில் நஷ்டம்…! என்று சொல்வதைக் காட்டிலும் அந்த அருள் சக்தியைப் பெற்று வளர்த்துக் கொண்ட பின் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற ஞானமும் சிந்திக்கும் ஆற்றலும் வரும்.
நம்மிடம் பொருள் வாங்கியவர் அதற்குண்டான பணம் வர வேண்டும் என்றாலும்
1.அவர்களுக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள்ளும் அந்தத் தொந்தரவு வருவதில்லை… நாம் எண்ணும்போது அவர்களுக்கும் நல்ல நிலை ஏற்படும்.
ஆனால் கொடுத்தேனே… சமயத்தில் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று வேதனைப்பட்டால் இந்த வேதனை அவருக்குள்ளும் பாய்ந்து அவருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து… அவருடைய வரவும் குறையும்… அதனால் நமக்கு வர வேண்டிய பணமும் தடைப்படும்.
இதை எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்
ஆகவே வாடிக்கையாளர்கள் எல்லோரும் நல்ல நிலைகள் பெற வேண்டும்… பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று நாம் தியானித்தால் அவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்… “நம் பணம் தேடி வரும்…”
உதாரணமாக கடன் கொடுத்தவர்களில் கொஞ்சம் “போக்கிரித்தனம்” செய்பவர்களாக இருந்தால்
1.அவன் கேட்டால் கொடுக்கவில்லை என்றால் உதைப்பான் என்று தெரிந்தால் பணம் அவர்களுக்கு முதலில் தேடிப் போகும்
2.ஆனால் நீங்கள் இரக்கம் ஈகை என்று இருந்தால் உங்களிடம் “சொல்லிக் கொள்ளலாம்” என்று வரும்.
அவர்களுக்குப் பணம் போகும்… உங்களுக்குச் சங்கடம் தான் வரும். பார் இவ்வளவு தூரம் செய்தேன் கேட்டவுடனே அவனுக்குக் கொடுக்கின்றான் நமக்குக் கொடுக்கவில்லையே…! என்று மீண்டும் வேதனை தான் வரும்.
ஆகவே பணம் தராதவரைப் பற்றி அந்த வேதனையை நாம் அதிகமாக எடுக்க எடுக்க அவருக்குத் தப்பி வந்தாலும் கூட மீண்டும் கடன் கொடுக்க முடியாத நிலை ஆகிவிடும். அவரும் இருப்பதைத் தட்டி பறித்துச் சென்று விடுவார். அடுத்து நம் காசைக் கூடப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.
இதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!
ஆகவே ஆத்ம சுத்தி செய்து அவர்களுக்கும் பணம் (வருமானம்) வர வேண்டும்… எல்லோருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இப்படிச் செய்யச் செய்ய…
1.உங்களுக்கு மன உறுதி கிடைக்கின்றது
2.தொழிலும் மன சங்கடம் இல்லாதபடி நடத்த முடிகின்றது
3.அதற்கு வேண்டிய வரவு வரும்
4.மனம் வலிமை பெறும்போது உங்களைத் தேடி அந்தக் காசு வரக்கூடிய சந்தர்ப்பமும் வரும்.
ஆவியின் பிம்பமான “அனைத்து பிம்பமுமே ஆண்டவன் தான்”
உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே…! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்…? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.
இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் அனைத்துமே ஆவி தான் என்று உணர்த்தினேன்.
எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.
இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.
ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.
காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா.
இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.
எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.
இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.
இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.
இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.
இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.
இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.
இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.
இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.
அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.
1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.
ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.
இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.
ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!
இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.
ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவேஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!
உயிர் நமக்குக் கொடுக்கும் தீர்ப்பு
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பல உண்மைகளை உங்களுக்கு உபதேசத்தின் வாயிலாக உணர்த்தி உள்ளோம்
ஆக… எந்த நிலையிலும் உயிர் உடலை விட்டுத் தான் வெளியே செல்கின்றது ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
1.வாழும் காலத்தில் நாம் எதைச் சேர்த்துக் கொண்டமோ அதற்குத் தக்க தான்
2.அடுத்து மாற்று உடலை உயிர் உருவாக்குகின்றது… உணர்வுக்கொப்ப உடலை மாற்றுகின்றது
கோடிச் செல்வங்கள் வைத்திருப்பவரும் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை அவர்களும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இவைகளை எடுக்கத் தான் செய்கிறார்கள்.
அவர்கள் உடலில் கடுமையான நோய்களாக அது விளைந்து விடுகிறது. செல்வத்தால் அவர்கள் வாங்கிய பொருள்களை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது… அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருகின்றது.
ஆகவே எப்படி இருந்தாலும்
1.இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ முடியும்.
2.வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் யாம் சொல்லும் தியானத்தை அதிலே நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ விரோதமோ அவைகளை நுகர நேர்ந்தால் அது இயங்கிடாது தடைப்படுத்திக் கொள்ளுங்கள் அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படி உங்களிடம் சொல்கின்றோம் (ஞானகுரு).
ஆத்ம சுத்தி உங்களைச் செய்யும்படி சொல்லி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவும்படி செய்து
2.அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானித்து
3.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள்… நீங்கள் எண்ணியதை ஈர்த்து அது வளரும் பருவம் பெறுவதற்கு
4.வளர்ச்சி பெறும் பருவத்தைச் செயல்படுத்துவதுதான் என்னுடைய (குருவின்) வேலை.
ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும்… பரிசுத்தப்பட வேண்டும்… அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்… அருள் பெருக வேண்டும்… இருள் புகாத நிலைகள் வேண்டும்… என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலைக் கோவிலாக மதித்து உயிரை ஈசனாக மதித்து அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
உங்கள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். உயிர் எல்லாவற்றையும் உணர்த்தினாலும் எல்லாவற்றையும் உணர்த்தும் அறிவு இந்த ஆறாவாது அறிவுக்கு உண்டு.
உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்வது தான் நமது குரு காட்டிய அருள் வழி.
நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயல்தான் நம்மை வழி நடத்துகிறது.
1.“மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகின்றது…”
2.எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது… அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது
3.அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கின்றது.
தனித்து… கடவுள் என்று ஒருவன் இல்லை…!
ஆகவே நாம் எண்ணும் உணர்வுகளில்
1.எந்தெந்தத் தீமைகளைச் செய்கிறோம் என்று அந்தக் கணக்கை உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்
2.அதே சமயத்தில் தீமைகள் எதையெல்லாம் நீக்கினோம்…? என்று அந்தக் கணக்கையும் உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்.
நமக்கு ஜட்ஜ்மெண்ட்…! தீர்ப்பு கூறுவது நமது உயிர்தான்
எதன் கணக்காக வருகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை இனி நீ பெறுவாய்
2.அதை நீ அனுபவித்துப் பார்…! என்று உயிர் தீர்ப்பு கூறி அதன் வழி அடுத்த வாழ்க்கை (ண்ஹம் வாழ்க்கை) தொடர்கின்றது.
ஆகவே உயிரை நாம் மதித்து பழகுதல் வேண்டும்.
ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகிறது
உடலான மணமே நமக்குள் எண்ணமாகி… அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாக மாறிக் கொண்டே இருக்கின்றது.
தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வை ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத்தன்மைகள் நமக்குள் கவராது தடுக்க முடியும்.
எந்தச் செயலைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் பிறரின் குறைகளை அறிய நேர்ந்தாலும் அந்தத் தீமைகள் தனக்குள் வளராதபடி மனத்தூய்மையாக்க ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சக்தி செய்து கொண்டே வர வேண்டும்.
வாழ்க்கையில் இந்தக் கணக்கு நமக்குள் கூடினால் நம் உயிர் அதற்குண்டான தீர்ப்பாக… நம்மைப் பிறவியில்லா நிலை அடையும்படி செய்யும்.
அதிலே சிறிது தவறினால் எந்த விஷத்தின் தன்மை கூடி… எதன் அடிப்படையாக நமக்குள் அது வளர்ந்ததோ… அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.
ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மீண்டும் மனிதனாக வருவதற்கு பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகும். இதையெல்லாம் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும்
நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்து
2.இந்தப் பிறவியில் வரக்கூடிய இருளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளி உடலைப் பெறுவோம்.
“ஆவி” என்றாலே நாம் பயப்பட வேண்டுமா…?
சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்…!
அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன…?
அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா…” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.
ஆவி என்றாலே பேய் பிசாசு என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.
இவ்வாவி என்றாலே உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.
ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலைகொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.
வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.
1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.
இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.
பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.
நாம்… அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.
அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால் தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.
பேய் பிடித்துள்ளது பிசாசு பிடித்துள்ளது ஆவியை ஓட்ட வேண்டும் என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டி பலவித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.
எவ்வாவியை யார் ஓட்ட முடியும்…?
அவ்வாவிக்கு பிற உடலில் ஏறி தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்கு சக்தியும் திறமையும் இல்லை.
அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.
ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.
ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது…?
அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.
அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.
துர் ஆவியைப் போலவே…
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.
அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்ல. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.
மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)
கேள்வி:-
சாப அலைகள் பாவ அலைகளின் இயக்கம் என்பது முற்பிறவியில் நாம் செய்ததா…? எத்தனையோ கோடிப் பிறவிகளில் நாம் எடுத்தது நம் ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் இயக்கமாக எதிர்பாராது விபத்துகள் ஏற்படுகின்றதா…? அல்லது விபத்து நடக்கும் இடத்தில் அங்கே பதிவான உணர்வின் செயலா…? ஒரே இடத்தில் எனக்கு ஏன் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது…? அந்த இடத்திலே சாப அலைகள் இருக்கிறதா…? விபத்து ஏற்பட்ட அதே பாதை வழியாக மீண்டும் செல்லலாமா…? அல்லது வேறு பாதையில் மாற்றிச் செல்ல வேண்டுமா…?
குரு இதற்குண்டான விளக்கத்தைக் கொடுத்து உணர்த்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
பதில்:-
அதாவது “இன்ன இடத்தில் விபத்து ஏற்படும்” என்று மற்றவர்கள் சொன்ன உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது.
1.”அந்தக் குறிப்பிட்ட இடம்” வந்தவுடன் அது உங்களுக்குள் நினைவுக்கு வருகின்றது
2.அது தான் அந்த இடத்தில் இயங்கியது (விபத்தாகிறது)
3.அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கின்றது… அதை இழுத்துக் கொண்டு வருகின்றது.
மற்றவர்கள் “இங்கே விபத்தாகும்…” என்று சொன்னாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை மறைத்து விட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.
ஏனென்றால்… பிறர் சொல்லும் உணர்வுகள் ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த இடத்திற்கு வந்தவுடன் “டக்…” என்று நினைவுக்கு வரும் அந்த சமயத்தில்
1.நீங்கள் வாகனத்தில் சென்றால்….பிரேக் இடாதபடி உங்களை அந்த வண்டிப் பக்கமே அழைத்துச் செல்லும்.
2.மற்றவர்கள் வந்து உங்களை இடிப்பது அல்ல
3.இதிலே தான் இந்த விஷயம் இருக்கின்றது… அதாவது நீங்கள் தான் அதிலே போய் விழுகின்றீர்கள்
4.காரணம் சந்தர்ப்பங்கள் நம்முடைய நினைவாற்றல்கள் அந்த மாதிரி இயக்குகின்றது
(5.ஒரு மனிதனுடைய உணர்வுகள்… சந்தர்ப்பம் இப்படியெல்லாம் இயக்கிவிடும்)
உதாரணமாக வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருக்கின்றது என்று சொல்வார்கள். சொன்னதற்குப் பிற்பாடு என்னதான் வீட்டின் சுவரை இடித்து அதை நீங்கள் மாற்றி வைத்தாலும் “அவன் சொன்ன இடி தான் இங்கே வரும்… குடும்பத்தில் குறைகளும் சங்கடங்களும் தான் வரும்…!”
இது எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வுகள் அதே இடம் வந்தவுடன் மீண்டும் அந்த ஞாபகத்திற்கு வரும்.
ஒரு பனை மரத்தில் அருகிலே நாங்கள் சென்றோம்… அதைப் பார்த்தோம்… அதில் ஒரு பூதம் பார்த்தேன்…! என்று வெறுமனே சொன்னால் கூட போதும்
எங்கெங்கே…? என்று கேட்பார்கள்.
அங்கே… அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறது அல்லவா என்று சொன்னால் போதும்…! ஆ… அப்படியா… என்பார்கள்…!
1.அங்கே பேயும் இல்லை பூதமும் இல்லை…!
2.ஆனால் அந்தப் பக்கம் நாம் செல்லும் பொழுது அன்றைக்கு அவர் சொன்னாரே…! பூதம் இருக்கிறது என்று.
3.இந்த ஒற்றைப் பனை மரத்தில் தானே… என்று எண்ணினால் போதும்.
4.உடனே அந்த இடத்திலே பேயாக அது காட்சி கொடுக்கும்.
இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்
ஏனென்றால் அத்தகைய மனிதனுடைய உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் போது “நம்முடைய எண்ணம்… அது இழுத்துக் குவித்துக் கொடுக்கும்…”
ரேடியோ டிவி அலைகள் இயங்குவது போன்று தான் மனிதனுடைய எண்ண உணர்வின் இயக்கங்களும்.
அதற்குத்தான் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வலுவாக்கி
1.நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று
2.நாம் கட்டாயப்படுத்தி இந்த எண்ணத்தை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஜோதிடம் ஜாதகம் பார்த்தாலும் அதிலே கஷ்ட நஷ்டங்களைத் தான் முதலிலே சொல்கிறார்கள். நல்லதை ஏதாவது முதலில் சொல்கிறார்களா…?
1.அந்த கஷ்டத்தைத் தான் நாம் பதிவு செய்கின்றோம்… ஏற்றுக் கொள்கிறோம்.
2.அப்புறம் அதிலே மீளக்கூடிய உணர்வு எங்கிருந்து வரும்…?
காசுக்காக வேண்டி சாங்கியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்வான். காசைச் செலவழித்துத்தான் போக்க வேண்டும் என்று சொல்வான்.
இது எல்லாமே மனிதனின் பதிவின் இயக்கம் தான். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).
மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து… குருநாதர் காட்டிய வழியில் அதை மாற்றி அமைக்கக்கூடிய வழி முறையைத் தான் மீண்டும் மீண்டும் உணர்வுபூர்வமாகச் சொல்லி “உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவாக்குகின்றோம்…”
1.தீமையை நீக்கும் அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தால்
2.வாழ்க்கையில் அறியாமல் வரும் எத்தனையோ கொடுமைகளிலிருந்து
2.எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்ப முடியும்..!
கோலமாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்ட ஆதிசங்கரருடன் தொடர்பு கொள்ளுங்கள்
அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.
அவ்வாவியின் எண்ணமெல்லாம்…
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.
நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.
ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்…?
ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.
அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.
சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்…?
நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.
அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்…
1.தன் ஜெபத்தை… தான் பெற்ற அருள் செல்வத்தை…
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதிசங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.
அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.
நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.
1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.
இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.
இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.
வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.
ஆதிசங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்…!
இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்…
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று… இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்தரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.
மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை..,
1.யார்.. எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்…
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.
இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.
இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.
விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி.க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.
இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்… இந்த நாடு… என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.
இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. அவர்களை எண்ணினால் அந்த அலைவரிசைப்படி நமக்குள் கோபம் வரும்… சங்கடம் வரும்.. வேதனை வரும்.
இத்தனையும் வருகின்றது.
ஆனால்
1.“இத்தனை தீமைகளையும் நீக்கிய…” உணர்வின் அறிவு கொண்ட
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
3.நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை”
4.நமக்குள் வந்து தீமைகளை நீக்கும்…
5.சிந்தித்துச் செயல்படும்… சக்தியாக வந்து நம் வாழ்க்கையை உயர்த்தும்.
இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.
அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.
இத்தகைய.. “கூட்டங்கள்” அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்க்ள்.
ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ…” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்.. ஓடச் செய்யலாம்…”
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.
ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம்… பார்க்க நேர்கின்றது… கேட்க நேர்கின்றது.
இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்துத் தீமைகள் புகாது தடுத்தால் “காலையில் ஆறு மணிக்கெல்லாம்… நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை”சூரியன் மேலே கவர்ந்து சென்றுவிடுகின்றது.
நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.
நமக்கு எப்பொழுது தொல்லை வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணித் தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.
குருநாதர் காட்டிய வழியில் நம் ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய முறை இதுதான். ஆத்ம சுத்தி என்பது இதுதான்.
1.நம் குருநாதர் “ஒவ்வொரு உயிரையும்” ஈசன் என்று மதித்தார்
2.எல்லோரும் நலம் பெற வேண்டும் என்றும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று தான்
3.இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.
ஆகவே அஞ்ஞான வாழ்க்கை நமக்குள் புகுந்து இயங்கிடாது அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “மெய் ஞான உலகை… நமக்குள் சிருஷ்டிப்போம்…”
தீமையை நீக்கும் இந்தக் கூட்டமைப்பு ஆயிரமாகும்… ஆயிரம் பல இலட்சங்களாகட்டும்…!
“சுவாசிக்கும் உணர்வும்… உட்கொள்ளும் உணவும்…” உடலுக்குள் அமிலமாகி இரத்தமாக மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்
பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சி நாகரத்தினமாக உருவாக்குகின்றது ஆனால் ஒடக்கான் போன்ற உயிரினங்கள் அது நுகரப்படும் பொழுது தன் உடலில் விஷத்தன்மையாக உருவாக்குகின்றது.
விஷத்தன்மையாக மாற்றிக் கொள்வதன் நோக்கம் மற்ற பூச்சிகளையும் வண்டினங்களையும் முழுமையாக விழுங்கப்படும் பொழுது “அதற்குள் இருக்கக்கூடிய விஷம் அதற்குள் ஏற்படும் அமிலமும்” அதனுடன் சேர்த்து விழுங்கியதை (பூச்சி வண்டு) அமிலமாக நீராகக் கரைத்துவிடும்.
கரைத்து உள்ளே சென்ற பின் இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் அணுக்களுக்கு ஆகாரமாகப் போகின்றது… அதனின் உணர்வின் சத்தைக் கொண்டது
மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அவையெல்லாம் நம் உடலில் ஜீரணிக்கும் போது முதலில் அமிலமாகத் தான் மாறும்.
1.நமக்குள் சேர்க்கும் விஷத்தன்மை கொண்டு “பித்த சுரபி” அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு
2.இந்த உணவுக்குள் கலந்த பின் அந்த அமிலத்தைக் குளுக்கோஸ் ஆக மாற்றுகின்றது.
குளுக்கோஸ் ஆக மாற்றி வரப்படும் பொழுது இரத்தத்தில் இருக்கக்கூடிய செல்கள் இந்த உணர்வின் தன்மை சுழல… சுழலச் செய்து “செவ்வணுக்களாக…” மாற்றுகின்றது.
ஆனால் அதை மாற்றும் தன்மை இல்லை என்றால்
1.விஷத்தின் தன்மை அந்த குளுக்கோசைச் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது
2.இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து தான் அதிகமாகும்… அதை மாற்றும் வல்லமை பெற வேண்டும்.
ஒரு மனிதன் அடிக்கடி வேதனையைச் சுவாசிக்கிறான் என்றால் அவ்வாறு வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது நாமும் வேதனைப்பட்டுச் சோர்வடைகின்றோம்
காரணம்… அவருடைய செயலைப் பார்த்து “ஒன்றும் முடியவில்லை…” என்கிற பொழுது சோர்வு வருகின்றது. சோர்வினால் அடுத்துக் கோபம் என்ற உணர்வைக் கலந்து சுவாசிக்கின்றோம்.
1.இது கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றுவதற்கு மாறாக
2.இந்த உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக உடலில் ஒரு பக்கம் உருவாகும்.
சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கெல்லாம் சீக்கிரமே இரத்தக் கொதிப்பு வரும். காரணம் அவர்கள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலில் உள்ள அணுக்களின் தன்மை இப்படி மாறுகின்றது.
இந்த வாழ்க்கையில் எதை எடுத்திருந்தார்களோ இரத்தங்களை எடுத்து வைத்தியரீதியிலே அணுக்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தக் கொதிப்பு இருக்கின்றது; சர்க்கரைச் சத்து இருக்கின்றது; அந்த இரண்டும் மோதலாகித் தனித்துப் பிரிக்கப்படும் போது அதனால் சளி உருவாகி ஆஸ்துமா உருவாகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்.
ஆகவே
1.இரத்தத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் சளி அதிகமாக உற்பத்தியாகி
2.உடலில் எல்லா இடத்திலும் உறையும் தன்மை அமிலங்கள் மாறிவிடுகின்றது… ஒவ்வொன்றும் இப்படி மாறுகிறது.
ஏனென்றால் உடலுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.
நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்து வலுவாகித் தான் மனிதனாக வந்துள்ளோம்.
ஆனால் மனிதனாக ஆனபின் நம்முடைய இந்த வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்
1.உடலுக்குள் அணுத்தன்மைகள் மாறி… அடுத்து இந்த உடலின் ரூபத்தை மாற்றும் நிலை வந்து விடுகிறது
2.கடைசியில் வேதனை வேதனை என்று கொண்டு போய்… மனித உடலையே மாற்றும் சக்தியாக வந்து விடுகின்றது.
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களால்… வேதனையைச் சந்திக்கும் போது அதை நாம் நுகர நேர்கின்றது. ஆனால் “அதை மாற்றி அமைக்கக்கூடிய சந்தர்ப்பம் தான்” ஞானிகள் காட்டிய மெய் வழியினை உங்களுக்கு யாம் இப்போது உபதேசிப்பதினுடைய நோக்கங்கள்.
புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது
அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க… கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.
கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.
புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.
1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்… ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.
ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா…?
அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.
மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.
அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.
இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்…”
புகழ் என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.
1.காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.
2.மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான்
3.அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.
பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது…? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா…? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.
கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது எடுத்துச் செல்பவன்… தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்…?
ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்…?
அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.
ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.
ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்…!
தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.
இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.
தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அற்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒருவர் தீமையான செயலைச் செய்கின்றார். தீமை செய்யும் தீயவர்கள் இருப்பினும் “அவர்கள் நல்லவராக மாற வேண்டும்” என்ற இந்த உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது.
2.நல்ல உடலாக மாற்றுகின்றது.
3.நல்ல சொல்லாகவும் செயலாகவும் நம்மைச் செயல்பட வைக்கின்றது.
ஒருவரை நல்லவன் என்று நாம் எண்ணினாலும் அவன் வெளிப்படுத்தும் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது என்ன ஆகும்…?
பாலிலே பாதாமைப் போட்டாலும் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தியில்லை.
அதைப் போன்று தான் நாம் நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது கெட்டவன் என்று இருந்தாலும் “அவன் சொல்லையோ செயலையோ கேட்டுத்தான்… பார்த்துத்தான்…” நாம் உணர்கின்றோம்.
அப்படி உணரப்படும் பொழுது நம் உடலில் தீய உணர்வின் வலிமை சேர்ந்து விடுகின்றது. ஆகவே
1.தீயவர்கள் என்பவர்கள் எவரும் இல்லை.
2.சந்தர்ப்பம் அந்தத் தீய செயலைச் செய்ய வைக்கின்றது.
3.அந்த உணர்வுகள் உடலிலே தீயதாக விளைகின்றது.
4.தீய அணுக்கள் விளைந்து தீயதாக அந்த உடலை இயக்குகின்றது.
5.தீயவனாக மாற்றி உடலுக்குப் பின் “இன்று மனிதன்.. அடுத்து… மனிதனல்லாத நிலையை…” உருவாக்கிவிடுகின்றது.
ஆனால் நமக்கு ஞானிகள் காட்டிய நிலைகளில் “தன்னை அறிந்து” செயல்படும் தத்துவம் தான் “விநாயகர் தத்துவம்…”
நாம் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். மனிதனானபின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைப் பெற்றோம்.
ஆகவே இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக் குறியைப் போட்டு திரும்பும் இடமெல்லாம் விநாகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஆக உயிரால் வளர்க்கப்பட்டது தான்.
1.உயிர் – “ஈசன்”
2.நுகர்ந்து கொண்ட உணர்வு – “வினை…”
3.அந்த வினைக்கொப்ப உடலின் நிலை – “விநாயகா…”
4.உணர்வின் தன்மை உறையும்போது அதனின் மலம் உடலாகும் பொழுது – “சிவம்…”
5.தீமைகளை நீக்கிய உணர்வு ஒவ்வொன்றும் நம் உடலில் அறிந்து கொள்ளும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றது. இது தான் – “கார்த்திகேயா…”
சிவனின் பிள்ளை மூத்தவன் விநாயகன் இளையவன் கார்த்திகேயன். எல்லாவற்றையும் அறிந்திடும் உடல் பெற்றது என்ற நிலையை நமது ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
விநாயகர் கோவிலுக்குச் சென்றால்.., நாம் என்ன நினைக்கின்றோம்…?
அங்கே குறைகளைச் சொல்வதும் அல்லது என்னைச் சோதிக்கின்றான் என்பதும்… அர்ச்சனை அபிஷேகத்தைச் செய்து குறைகளைச் சொல்லி அதைத்தான் விரும்புகின்றோமே தவிர
1.குறைகள் நமக்குள் எப்படி வந்தது?
2.அந்தக் குறைகளை எப்படி நீக்குவது..? என்ற நிலை இல்லை.
குறைகளை எப்படி நீக்குவது…? என்று கேட்டு யாராவது தீமையை நீக்கும் ஆற்றலை எண்ணுகின்றோமா..,? தீமை செய்பவர்களின் வலிமையைப் பற்றித்தான் “அதிக நேரம்” எண்ணிக் கேட்கின்றோம்.
1.தீமைகளைத் துடைக்கும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டிய வழியில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் செலுத்துவது.
கடுமையான விஷங்களை மாற்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன். அவன் தான் அந்தத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை நீக்கினானோ அதை நாமும் நீக்கலாம். அவன் சென்ற எல்லையை அடையலாம்.
தீமைகளை நீக்கிவிட்டு “உயிருடன் ஒன்றும் உணர்வை.. எப்படி ஒளியாக மாற்ற வேண்டும்?” என்பதை நாமெல்லாம் அறிந்து நம்மை நாம் தெரிந்து “தெளிவான வாழ்க்கை வாழ்வதற்குத்தான்” இந்தச் சிலைகளை எல்லாம் வைத்தார்கள் ஞானிகள்.
பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்
குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்
1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!
அதை மாற்றுவதற்கு என்ன வழி…?
வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.
பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)
அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.
அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களை சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.
இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.
இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.
இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும் தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.
இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.
அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்ற கூடாது.
ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!
தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள் என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.
இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.
இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பி தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்
இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!
எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடலிலும் உள்ளது
ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.
இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?
அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.
இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.
அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.
ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.
1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?
இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.
மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.
முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.
1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.
இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.
அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.
1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.
வழி வழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே… ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த… இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.
இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.
ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!
விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.
1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.
பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல்… இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?
மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.
நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?
1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.
உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”
சர்க்கஸில் விளையாடுபவர்கள் உடம்பை எத்தனை வகைகளில் வளைக்கின்றார்கள்…! நம்மால் அவர்களைப் போல் வளைக்க முடிகிறதா…? முடியாது.
ஆனால் அப்படி வளைத்துப் பழகியவர்கள் ஒரு மாதத்திற்கு அதைச் செய்யாமல் “சும்மா இருக்கட்டும்…!” அடுத்து அந்த உடலை வளைக்க முடியாது.
பல ஆட்டங்கள் ஆடலாம்… ஆனால் ஒரு மாதம் சும்மா இருக்கட்டும். அதைத் திரும்ப பழைய மாதிரிக் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதானதல்ல.
அதே போன்றுதான் ஆசனப் பயிற்சி செய்து பழகியவர்கள்… நான் அந்த ஆசனம் போடுவேன்… இந்த ஆசனம் போடுவேன்…! என்றெல்லாம் சொல்வார்கள். கொஞ்சம் சோர்வடைந்து இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் போதும். அடுத்து அந்தப் பயிற்சிக்கே போக விடாது.
அந்தச் சோர்வு “இப்பொழுது செய்யலாம்… சரி அப்புறம் செய்யலாம்…! என்று அப்படியே ஒரு ஐந்து நாள் சென்றால் அப்புறம் அவ்வளவு தான்… செய்ய முடியாது.
ஆசனப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களும் மனச் சலிப்போ… சஞ்சலமோ… மற்றவர்கள் உணர்வுகளைக் கேட்டால் அவர்களையும் இந்த உணர்வுகள் அது தடைப்படுத்தி விடும்.
ஆசனத்தால் நான் உடலைத் திருத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவேன் என்று சொல்வார்கள் ஆனால்
1.வேதனையான உணர்வை எடுத்தார்கள் என்றால்
2.அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆசனப் பயிற்சி செய்யப்படும் பொழுது
3.நரம்பு மண்டலங்கள் முறுக்கப்படும் பொழுது சிலருக்குப் புத்தி பேதமே ஆகிவிடும்.
4.அல்லது வெறுப்பின் காழ்ப்புணர்ச்சி வரும் அல்லது பிரஷர்…!
5.அந்த அழுத்தத்தின் தன்மை வந்து… நரம்பு மண்டலங்கள் செயலிழந்து விடும் தளர்ச்சி அடைந்து விடும்.
ஆசனத்தைச் செய்து இரத்தக் கொதிப்பை மாற்றலாம் உடல் உபாதைகளைப் போக்கலாம் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறுப்புகளின் படங்களையும் போட்டுக் காட்டுவார்கள் இன்னென்ன பயிற்சியால் இப்படி நன்மைகள் பெறலாம் என்றும் சொல்வார்கள். [ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) எனக்கு ஒரு குருவை வைத்து இந்த ஆசனப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன்}.
ஆக… ஆசனம் நமக்கு உதவி செய்கின்றது. ஆனாலும் ஒவ்வொரு நாளும்
1.கவலையோ வெறுப்போ கோபமோ அன்றன்றைக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம்
2.எதன் உணர்ச்சியின் வேகமோ… அதற்குத் தக்க (அந்த எண்ணங்களுடன்) பயிற்சிகளைச் செய்யப்படும் பொழுது
3.உணர்ச்சியின் வேகத்தால் மூளையைக் கூடப் பாதிக்கக்கூடிய நிலை வந்து விடுகிறது.
4.அதாவது சிரசாசனம் சர்வங்காசனம் இதைப் போன்ற நிலைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றது
காரணம்… மக்கள் மத்தியில் பல பல உணர்ச்சிப் போராட்டங்களில் வாழும் பொழுது குடும்பத்தில் வெறுப்பின் தன்மை ஏற்பட்டால் அதனுடைய அழுத்தம்
1.நம் உடலில் அழுத்தங்கள் அதிகமாகப்படும் பொழுது
2.சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் வெடித்து விடும்… ஆள் அவுட்…!
இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சலிப்பு சஞ்சலம் கோபம் கவலை வேதனை இது போன்ற உணர்வுகளை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகப் பெருக்கிக் கொண்டால்
3.தீமையான உணர்வின் இயக்கங்களை நாம் சமப்படுத்திக் கொள்ள முடியும்
4.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒன்றுக்கொன்று பகைமையாகாதபடி எதிர்ப்பாகாதபடி
5.எதிர்மறையான இயக்கங்களுக்குக் கொண்டு செல்லாதபடி இணைந்து செயல்பட்டு
6.மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெற முடியும்.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் நம் நிலை (ஆவி உலகம்)
மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்… நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.
நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.
1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு…
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக் குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.
அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.
ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்…
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதேபோல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.
இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.
வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.
இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.
மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.
மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.
அம்மிருக உணவை… பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.
இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.
இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன…?
அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே… ஷாஜஹான் என்னும் ஆவியும்…!
அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.
ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.
வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே…!
இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நேரத்திலும் யாம் உபதேசித்த உணர்வு கொண்டு ஒரு கம்ப்யூட்டரில் செயல்படுத்துவது போல் நீங்கள் வரிசைப்படுத்திக் கொள்ளலாம்.
அதன் துணை கொண்டு வாழ்க்கையில் பிறருடைய தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அல்லது அந்தத் தீமையைக் கேட்டாலும் அடுத்த நிமிடம் உங்களுக்குள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டை விட்டு நீங்கள் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணினால் இது (உங்களுக்கு) முன்னாடி வலிமை பெறுகின்றது.
அந்த சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும். ஆனால்…
1.வீட்டில் பையன் இப்படிச் செய்து விட்டான்
2.அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் என்று
3.காலையில் எழுந்தவுடன் இந்த எண்ணத்தில் சோர்வடைந்து விட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.
அது முன்னாடி வந்து விட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது… ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.
அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.
எதன் உணர்வு நம் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்து விடுகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னணியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.
இதையெல்லாம் மாற்றி அமைக்க உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.
அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது
1.தீமை என்றால்… விலகி வரும் உணர்வுகளையும்
2.தீமை வந்தால்… விலகிச் செல்லும் உணர்வுகளையும்
3.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்
4.வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும் நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.
அதை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றேன். நீங்கள் கூர்ந்து இதைப் பதிவாக்கிக் கொண்டால் நிச்சயம் உங்கள் நல்ல குணங்களைக் காக்க முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”
திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று காட்டும்.
வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.
அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.
அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.
ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.
ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.
எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.
1.ஒரு சிலருக்கு என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.
திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசாகனால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.
ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் வலுவான நிலைகள் எண்ணி
2.நமது பார்வையை செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.
இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.
யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும் அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.
ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!
தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும் ஆது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.
உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.
ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.
தவறு செய்துவிட்டு தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும் என்றால் அது தவறான நிலை.
உயிராத்மாவிற்கு நாம் சொத்து சேர்க்கின்றோமா…?
அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரனங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).
“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.
பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?
தன் நாட்டைக் காக்கத் தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க… ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு… அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.
அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?
குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.
அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”
சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.
அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு… வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.
அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.
1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?
பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.
கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.
இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.
பொய் உலகிலிருந்து தப்பி மெய் உலகிற்கு வாருங்கள்
இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.
இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.
அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.
இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும். அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.
இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.
அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.
1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்று பிறவி எடுத்திட…!
இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.
ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை பாக்கியம் பெற்ற வாழ்க்கை என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!
1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!
உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்
சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.
கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.
அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.
தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும் உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.
ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.
1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.
ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட காலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்
உலக நடப்புகளை பத்திரிகை டிவி மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே என்ன ஏது என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)
காற்றில் இருப்பதை டிவி ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.
சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.
உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!
அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்பட தொடங்கி விடுகின்றது
ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.
தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?
சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.
நான் தியானம் செய்தேன் என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.
1.அதை உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் – ஞானகுரு
தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”
சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.
அது மிகவும் வலிமைக்க சக்தி…!
யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.
எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும் ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.
ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.
எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது
உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.
குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.
அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.
“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.
இதிலே இன்னும் விளக்கம் தெரிய வேண்டுமா…?
வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்
தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி… எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்து தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒளியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளை சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.
வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.
அதாவது யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும்… அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்…
1.அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்…
2.வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்…
3.பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் போது அதற்குத் தக்க உழைப்பைத் தருகின்றதோ
4அந்தந்த நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன்… தன் செயலுக்காக…!
இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?
மனிதன்… இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும்தான் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழுகின்றான்… அத்தகைய வாழ்க்கை உடலுடன் மடியும் நிலை…!
ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தில் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.
புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.
எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி அமைதிப்படுத்தும் ஞானி… மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.
மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.
மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்கு செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.
வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீத செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவ செயலுக்காக சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.
மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.
வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்ப சொந்த பந்த செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.
பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும் உணர்வுடன் உடல் சொந்தம். மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும் சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.
1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியை குற்றம் குறைகளை குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்கு சொந்தமாக்கும் செயலாய் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.
மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.
கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்
பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.
ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.
ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.
ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.
அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.
இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.
பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.
எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.
இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”
இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.
இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.
அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.
அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.
1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.
இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!
தேவரிஷியாகச் செயலாக்குவதற்கு இந்த உடலைப் பயன்படுத்த வேண்டும்
இயற்கையின் சக்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாறிக் கொண்டேதான் உள்ளது. பச்சைப் பசேலென்று மழைக் காலத்தில் புல் பூண்டு படர்ந்துள்ள பூமியில் அது வளர்ந்து பழுப்பாகி காய்ந்து சருகாகி… மீண்டும் மழையில்லாக் காலங்களில் அவ்விடத்தில் வெடிப்பு விழுந்து… அங்குள்ள மண் இறுக்கம் கொள்ள… மீண்டும் மழை வர… பிறகு அதே இடத்தில் வளரக்கூடிய புல் பூண்டுகளின் வளர்ச்சி நிலை மாற மாற… இயற்கையின் தொடர்பிலேயே பல மாற்றங்கள் நொடிக்கு நொடி மாறுகின்றது.
இதைப் போன்றே மனித உணர்வின் எண்ணம் எடுக்கும் அலை ஒலியின் பதிவு நிலையைக் கொண்டு… ஆத்மா வளர்க்கும் ஒளித் தன்மையும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.
பூமியில் இன்றைய மனித ஞானத்தைக் கொண்டு தனக்கொத்ததை வளர்த்துப் பக்குவப்படுத்தி ஆகாரத்தையும் மற்றெல்லாச் செயற்கைத் தன்மைகளையும் பூமியின் வளத்திலிருந்து மனித வாழ்க்கைக்கு வளர்த்துப் பயன்படுத்தினாலும்…
1.எந்த மண்ணிலிருந்து தனக்கொத்ததை எடுத்து மனிதன் பயன்படுத்தினாலும்
2.அதை வெறும் மண்…! என்றுதான் ஒதுக்கி விடுகின்றான்.
மண்ணிலிருந்துதான் உணவுப் பொருட்களை விளைவித்து உட்கொள்கின்றோம். ஆனால் அம்மண்ணை அவ்வுணவுடன் சேர்த்து உட்கொள்வதில்லை.
இப்பூமியின் மண் வளத்தைக் கொண்டு வாழும் மனிதன் அம்மண்ணிலிருந்து சரீர ஜீவனை வளர்க்க தனக்கொத்ததைப் பயன்படுத்துவது போல் இச்சரீரத்தை பூமியின் கோளைப் போன்று இவ்வுயிராத்மா சரீர இயக்கத்தில் செயல்படும்.
1.ஜீவ வாழ்க்கையில் இச்சரீர உடலை ஓர் கோளாக எண்ணி
2.இச்சரீரம் மண்ணாக நாமெடுக்கும் உணர்வு ஜீவனாகி
3.அஜ்ஜீவனின் பலனே ஆத்மாவின் ஒளியாகச் சத்தாகும் அமைப்பாய்
4.இச்சரீரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சூரியனிலிருந்தும் மற்றக் கோள்களிலிருந்தும் நம் பூமியின் சுழற்சியால் அந்தந்த இடத்திற்கொப்ப ஈர்ப்பின் அமில செயல் வளர்ந்து… பல கோடித் தன்மைகள் பல உன்னத சக்திகளைப் பூமி வளர்த்துக் கொண்டு சுழற்சியின் கதியில் எண்ணமில்லா நிலையிலும்… பல கனி வளங்களிலும்… அபூர்வ இயற்கைத் தன்மைகளும்… இயற்கை சக்திகளும் வளருகின்றது.
இருந்த பொழுதும்
1.எல்லா நிலைகளையும் உணரவல்ல மனித உணர்வின் எண்ண ஞானம்…
2.மெய் ஞானத்தின் இயற்கை சக்தியை
3.மெய் ஞானிகள் மெய்யுணர்வில் மெய்யறிந்து மெய்யாக்கிய மேன்மையை
4.மெய் ஞானியாய் ஒவ்வொருவருமே தன் பகுத்தறிவின் உண்மை உணர்ந்து வளர்ந்திட வேண்டும்.
நம் ஜீவ உடல் உண்மையல்ல…! இயற்கையின் சதியில் ஒரு நாள் பிறப்பெடுக்கும் பூச்சியும்… ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் நாகமும்… சரீர உணர்வில் மெய்யறிய மனித நிலையின் உணர்வலையில் மோதிடும் ஞானத்தின் பகுத்தறிவால்தான் உயர் ஞானத்திற்குச் செயலாக்கக்கூடிய செயல் தன்மைக்கேற்ற கோளமிது.
ஜீவ உடல் கொண்ட உயிராத்மாவில் “உடல்” இயக்கக் கோளம்.
உண்மையை உணர்ந்து உய்யும் ஆத்மா மெய் ஞானிகளின் மெய்யறிய மெய் ஞானிகளின் தொடர்பைப் பெறுங்கள்.
வானக்கோள்களில் மறைந்துள்ள எண்ணிலடங்கா உண்மை சக்தியில்… என்றுமே மங்கா ஒளித் தன்மையை வளர்க்கும் சப்தரிஷிகளின் தேவ ரிஷியாக செயலாக்கும் செயலுக்கு… மனித உணர்வின் எண்ண உடல் கோளத்தைப் பக்குவப்படுத்துங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பழனியில் ஒரு பித்தரைப் போல இருப்பார் என்றாலும் பிறர் அவரைப் “பித்தர்” என்றே எண்ணுவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் எப்படிப் பித்துப் பிடித்துச் செல்வம் தேட வேண்டும் என்று எண்ணுவான். அதே சமயத்தில் செல்வத்தில் குறை என்றால் பித்துப் பிடித்து “வெறி பிடித்தவன்” போல் மற்றவரை எப்படித் தாக்குகின்றான்…!
பித்துப் பிடித்து மற்றவர்களுக்கு எப்படித் தொல்லைகள் கொடுக்கின்றான்…! ஒவ்வொரு மனிதனும் “பித்துப்பிடித்துத்தான் அலைகின்றான்” என்று சொல்வார்.
குருநாதர் போஸ்ட் கம்பத்தில் கல்லைக் கொண்டு தட்டுவார். அலோ.., ஹலோ… என்பார்.
“ஏன் சாமி… கல்லைக் கொண்டு போஸ்ட் கம்பத்தில் தட்டுகிறீர்கள்…?” என்று கேட்டேன்
நீ தான்டா… கேட்கின்றாய். மற்ற எல்லோருமே என்னைப் “பைத்தியக்காரன்..,” என்று சொல்கின்றார்கள். நான் டெலிஃபோன் செய்கின்றேன் என்கிறார்.
என்ன சாமி டெலிஃபோன் செய்கின்றீர்கள்…?
இந்தக் கம்பத்தின் மூலம் ஆண்டவனுக்கே செய்தி அனுப்புகின்றேன். அந்த ஆண்டவன் என்பது “யார் தெரியுமா…?” என்றார்.
1.நான் தட்டும் உணர்வுகள் சேர்த்து “உயிரில் பட்டபின்” அந்த ஆண்டவன் என்ன செய்கின்றான்…?
2.இந்த உணர்வை என்னைச் செயல்படுத்தச் சொல்கின்றான்.
தட்டும் பொழுது நான்… எதை எண்ணித் தட்டுகின்றேன்…? ஏனென்றால்… “தட்டும் பொழுது… சப்தம் வருகின்றது…”
ஒவ்வொரு பொருளிலும் தட்டும் பொழுது அதில் என்னென்ன நாதம் வருகின்றது…? கல்லில் தட்டினால் ஒரு நாதம்; மண்ணிலே தட்டினால் ஒரு நாதம்; மரத்தில் தட்டினால் ஒரு நாதம்; உலோகத்தில் தட்டினால் அது ஒரு நாதம்.
ஆக உணர்வின் ஒலியின் நிலைகள் நான் தட்டும் பொழுது “என் உயிரான இவனுக்கே எட்டுகின்றது…” அப்படி எட்டும் பொழுது நான் என்ன செய்கிறேன்…?
1.இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தெரிந்து வாழ வேண்டும்.
2.அந்த ஆண்டவன் கட்டிய ஆலயத்தில் அவர்கள் பரிசுத்த நிலைகள் பெற வேண்டும்.
3.அவர்கள் புனிதம் பெற வேண்டும்.
4.புனிதமான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.புனிதமான ஆலயமாக மாற்ற வேண்டும்.
6.இப்படி நினைத்து நான் டெலிஃபோன் செய்கின்றேன் என்கிறார் குருநாதர்.
ஆனால் வழக்கமாக நாம் டெலிஃபோன் செய்தால் மற்றவர்களிடம் என்ன கேட்கின்றோம்…? உங்கள் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கின்றார்களா…? என்ன..,? ஏது…? என்று கேட்கின்றோம்.
அதனால் என்னை ஆளும் ஆண்டவனுக்கு இதைத் தட்டி அவனுக்குள் இந்த உணர்ச்சியை ஊட்டுகின்றேன் என்கிறார் குருநாதர்.
1.உலக மக்கள் தன்னையறியாமல் எத்தனையோ நிலைகளைச் செய்கின்றனர்.
2.உடலாசை கொண்டு அவர்களை இயக்கும் ஆண்டவனை மறந்துவிட்டார்கள்.
3.அவர்களை ஆளக்கூடிய ஆண்டவனை மறந்து வாழ்கின்றனர்.
4.அவர்களுக்கெல்லாம் “அந்த ஆண்டவனை நினைவுபடுத்துவதற்கு” இதை நான் பாய்ச்சினேன்.
என்னைப் “பித்தன்…” என்கிறான். ஆனால் அவன் பித்தனாக இருக்கின்றான்.
தன் காரியத்தைச் செயல்படுத்த முடியவில்லை என்றால் “எத்தனாகவே… மாறிவிடுகின்றான்…” பிறருக்குத் தொல்லை கொடுத்து வாழும் எத்தனாக வாழ்கின்றான்.
1.இவனை எத்தன் என்று மற்றொருவன் சொல்கின்றான்.
2.ஆக அவனும் பித்தனாகவே மாறுகின்றான்
3.அடுத்து அவனும் எத்தனாகவே மாறிக் கொண்டிருக்கின்றான்.
அவன் உடலிலே வாழும் “அவன் உடலை உருவாக்கிய… அந்த உணர்வின் ஈசனை மறந்து விட்டான்…” அந்த ஈசனே இவனை ஆள்கின்றான் என்று அந்த ஆண்டவனை மறந்து மனிதனான பின் மறந்தே வாழ்கின்றார்கள்.
எமக்குள் (ஞானகுரு) இதைத் தெரியப்படுத்துகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.“நீ தான்… கேட்டாய்… அதனால் உனக்குச் சொல்கின்றேன்”.
2.“மற்ற எவனும்” கேட்கவில்லை. அவனுக்குச் சொல்லவில்லை.
3.ஆனால் அவனுக்கு டெலிஃபோன் பண்றேன்.
அவன் உடலில் உள்ள “ஆண்டவன்” அவனை ஆள்கின்றது. அவனுகெல்லாம் “நல்ல சிந்தனை கொடு…” என்று அவனுக்கு (ஆண்டவனுக்கு) நான் டெலிஃபோன் செய்கின்றேன்.
இப்பொழுது யாம் உபதேசிப்பதை நீங்கள் கேட்டால் உங்களுக்குக் கிடைக்கின்றது.
ஆனால் கேட்டுக் கொண்டிருந்தாலும்… “ஏதோ பைத்தியக்காரன் சொல்கின்றான்.., ஊரை ஏமாற்றுகின்றான்…” என்று சொன்னால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்…? அவரவர்கள் ஆசை கொண்டு (அவர்கள்) பைத்தியமாக இருக்கின்றார்கள்.
ஆனால், நான் என்ன செய்கின்றேன்…? என்று (குருநாதர்) என்னிடம் கேட்கின்றார். என் உடலில் உள்ள துணியை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டேன். ஏனென்றால், எனக்கு “இந்த ஆடை” பாதுகாப்பாக இல்லை.
அவர்களுக்குள் இருக்கும் எல்லா ஆண்டவனுக்கும் டெலிஃபோன் செய்கின்றேன்.
1.அந்த உடலை நீ பாதுகாத்துக் கொள்
2.அந்த உடலுக்குள் நல்ல நிலைகளைச் செயல்படுத்து
3.எல்லோரும் நல்லாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது எனக்குள் என்ன நடக்கின்றது…?
“நான் எண்ணக்கூடியது… (இந்த ஆடை) இந்த ஆன்மா” எனக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. “நான் இந்த ஆடையைத்தான்… விரும்பினேன். ஆனால் என் கிழிந்த ஆடையைப் பார்த்தவுடனே “என்னைப் பைத்தியம்” என்று சொல்கின்றார்கள் என்று தெளிவாக்கினார் குருநாதர்.
இதைக் கேட்டவுடனே எனக்கும் (ஞானகுரு) அந்த அழகான ஆடை “என் உள் மனது என்னை அழகுபடுத்துவதும்.., உயிருடன் ஒன்றி மகிழ்ந்து வாழும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது…”
உங்கள் ஒவ்வொரு உயிரையும் ஆண்டவனாக மதித்து நான் சொல்லும் பொழுது எனது சொல்லைக் கேட்கும் பொழுது உங்களுக்கும் அந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் கிடைக்கும். இந்த உணர்வு பெற வேண்டும் என்பவருக்கு அங்கே மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.
அதே சமயத்தில் என் கிழிந்த துணிகளைப் பார்த்து மற்றவர்கள் “என்னைப் பைத்தியம்…” என்ற நிலைகளை எண்ணும் பொழுது அவர்கள் பைத்தியத்திலிருந்து மீள முடியவில்லை.
ஆக மொத்தம் ஒவ்வொரு மனிதரும் பித்துப் பிடித்துத்தான் அலைகின்றனர்.
1.தன் பிள்ளையைச் சீராக வளர்க்க வேண்டும் என்று பித்துப் பிடிக்கின்றான்.
2.தன் பிள்ளை சரியாக வரவில்லை என்றால் எத்தனாகவே மாறுகின்றான்… பிள்ளையை உதைக்க ஆரம்பிக்கின்றான்.
3.இந்தப் பித்து எத்தனாக மாறுகின்றது…
4.என்ன சொன்னாலும் என் பையன் கேட்க மாட்டேன் என்கிறானே…! என்ற இந்த உணர்வு கொண்டு நாம் தாக்குகின்றோம்.
இதைப் போல தொழிலில் ஒருவருக்கு உதவி செய்கின்றோம். அதைச் சரியானபடி நாம் செய்தாலும் நாம் எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் “எத்தனாகப் பேசுகின்றோம்… திட்டுகின்றோம்…”
இப்படிப்பட்ட உணர்வுகளை எடுத்துப் பித்தனாகத்தான் ஒவ்வொரு மனிதனும் வாழ்கின்றானே தவிர என்னைப் பித்தன் என்கின்றனர். இந்த ஆடையும் அலங்காரமும் எனக்கு ஒன்றும் செய்யவில்லை.
அழகான ஆன்மாவை.., நான் சேர்க்கின்றேன்… “பாருடா…” என்று என்னிடம் சொல்கின்றார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.
1.அவரை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அவருக்குள் “அகண்ட அண்டத்தின்” உணர்வின் தன்மை
3.”அவருடைய ஆன்மாவில்… எப்படிக் கலந்துள்ளது” என்று அறிய முடிந்தது.
குருநாதர் எனக்குக் (ஞானகுருவிற்கு) காட்டிய இந்த நிலைகளை எல்லாம் நீங்களும் பார்க்கலாம். “எந்த அளவிற்கு.. ஆர்வமுடன் இருக்கின்றீர்களோ…” அதைப் பார்க்கலாம்.
அவரின் ஆன்மாவை “என்னில் பார்…” என்று அவர் சொல்கிற பொழுது அவரின் உணர்வுகள் அந்த மகிழ்ச்சிக்குரிய நிலைகள் வருகின்றது.
அவரைப் பார்த்தபின்.. “எனக்கும் ஏகாந்த நிலை… என்ற மகிழ்ச்சி” வருகின்றது.
என்னுடைய ஆடை எப்படி இருக்கின்றது…? மற்றவர்களுடைய ஆடை எப்படி இருக்கின்றது.
மற்றவர்கள் ஆடை வெளுப்பாக இருக்கின்றது…
1.ஆனால் சொல் எப்படி இருக்கின்றது…?
2.வேதனை என்ற உணர்வுடன் தான் வருகின்றது
3.அந்த வேதனையை நீ நுகர்ந்தால் உன் நிலை என்னாகின்றது…? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.
இப்படிப் பித்தர்களாக வாழும் நிலை தான் இன்று இருக்கின்றது.
1.யாரையும் தவறாகச் சொல்லவில்லை
2.அவன் படும் ஆசை அவனுக்குள் செயல்படுகின்றது.
அவரவர் ஆசையே அவருக்குள் மாற்றிக் கொண்டுள்ளது.
இந்த உடலின் இச்சையிலிருந்து நாம் மாற்றி “ஒளியின் உணர்வின்… ஆன்மாவைச் சேர்த்தால்…” இன்றைய செயல் நாளைய உடலாக மாறுகின்றது என்று காட்டுகின்றார் குரு.
அவர்களுக்குள் அருள் ஒளி என்ற இந்த உயர்ந்த ஆசையை ஊட்டும் பொழுது அதைப் பெற்றால் அவருக்குள் இருளச் செய்யும் அந்தத் “தீமையான உணர்வுகள் மாறுகின்றது”.
ஒவ்வொரு உயிரும் கடவுள் என்று… “அவன் வீற்றிருக்கும் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…” என்று தான் இந்தக் கல்லை வைத்து போஸ்ட் கம்பத்தில் அடிக்கின்றேன்.
உன்னையும் இப்பொழுது “அடித்தேன்டா…” என்கிறார் குருநாதர்.
1.உனக்குள் செவிகளில் அந்த நாதம் படுகின்றது
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு.. “ஏன் சாமி அடிக்கின்றீர்கள்…?” என்று கேட்டாய்
3.ஆக நீ இதன் மேல் இச்சைப்படுகின்றாய். இந்த இச்சையின் உணர்வு “உனக்குள் செயலாக்கும்…” என்று சொன்னார்.
நாம் காப்பாற்ற நினைக்கும் கௌரவம் உடலுடன் மறையக்கூடியது
1.வாழ்க்கையுடன் இச்சரீரத்தைச் சொந்தப்படுத்தாதீர்கள்
2.ஆத்மாவிற்கு இந்தச் சரீரத்தைச் சொந்தப்படுத்துங்கள்.
மனித உணர்வின் எண்ணம் சுய கௌரவத்தைக் கொண்டு தன் ஆத்ம உடலையே அடகு வைத்துள்ள நிலைதான் வாழ்க்கையின் நிலை.
உற்றார் உறவினர் எதிரி நண்பன் தன் சொந்தத்தின் ஈர்ப்புப் பிடிப்பு என்ற தொடரில் எல்லாம்
1.தன் ஆத்ம உணர்வின் எண்ணத்தை அடகு வைக்கும் வாழ்க்கையிலிருந்து
2.இச்சரீரத்தை ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும்
3.பிறவா நிலை பெறும் ஒளி சக்தியைப் பெறல் வேண்டும்.
கௌரவத்தின் சுயநிலை என்பது எப்படி இருந்தாலும் இந்த உடலுடன் மறையக்கூடிய நிலை தான். ஆனால் இந்த உடலுடன் எடுக்கும் தன் ஞானத்தின் மெய்ஞானம் என்றுமே வளரும் நிலை பெற்றது.
வாழ்க்கையின் நிலையே நிலையில்லா நிலைதான்…! ஆனாலும் இந்த வாழ்க்கை என்ற நிலையிலிருந்துதான் நிலைபெறும் நிலையாக இச்சரீரத்தைக் கொண்டே சகல நிலையையும் நாம் பெற முடியும்.
உணவு உண்ணும் பொழுது உண்ணக்கூடிய உணவு காரமெடுத்தவுடன் நீரைக் குடித்துச் சமப்படுத்துகின்றோம். அதிகமான இனிப்பை உட்கொள்ளும் பொழுதும் திகட்டல் எடுத்தவுடன் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்துகின்றோம். கடினமான பொருளை உட்கொள்ளும் பொழுது விக்கல் ஏற்பட்டவுடனும் நீரைக் குடித்துத்தான் சமப்படுத்திக் கொள்கின்றோம்.
அதைப் போன்று…
1.இச்சரீர உணர்வில் மோதும் உணர்வின் எதிர் அலைகள் தாக்கக்கூடிய ஒவ்வொரு தருணத்திலும்
2.உணர்வின் எண்ணத்திற்கு – ஞானிகளின் எண்ணமுடன்
3.சமமான சாந்தம் என்ற நல் நீரைச் செலுத்த வேண்டும்.
சரீர உணர்வில் எல்லா நிலைகளும் மோதத்தான் செய்யும். நாம் உணவு உட்கொள்ளும்பொழுது அறு சுவையையும் சமப்படுத்திச் சமைத்து உட்கொள்கின்றோம். அது போல் உணர்வில் மோதக்கூடிய எண்ணத்தை நாம் சமப்படுத்தி ஆத்மாவிற்குச் சத்தாக்க வேண்டும்.
1.உணவின் சத்தெடுத்து உடல் வாழ்கின்றது
2.உணர்வின் சத்தெடுத்து ஆத்மா வாழ்கின்றது
1.ஆத்மாவின் வாழ்க்கை தான் அழிவில்லா வாழ்க்கை
2.உடலின் வாழ்க்கை நிஜமற்ற வாழ்க்கை…!
சூரியனும் மற்றக் கோள்களும் அது அது எடுக்கும் தொடர்பு கொண்டு ஓடும் கதியில் சூரியன் எப்படி ஆறு வண்ணத்தின் வளர்ச்சியில் ஏழாம் நிலையான ஒளி நிலை பெறுகின்றதோ அதைப் போன்று
1.நாம் எடுக்கும் தியான சக்தியின் மூலம்
2.இச்சரீர உணர்வில் மோதக்கூடிய குணங்களை
3.குணத்திற்கொத்த வீரிய நிலையை “நம் உயிராத்மா சமைக்க வேண்டும்…!”
நான் (ஞானகுரு) சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்கிறார்கள்
மூன்று லட்சம் பேரைச் சந்தித்து குருநாதர் காட்டிய வழியில் பல வருட காலமாக அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு).
இப்பொழுது நல்ல உணவை உட்கொள்கின்றேன்… ஆனால் அன்று அப்படி அல்ல. என் இரண்டு காலிலேயும் 28 ஆணி இருந்தது. ஆனால் நீ செருப்பு போடக்கூடாது என்று குருநாதர் சொல்லி விட்டார்.
ஒரு சின்னக் கல் மீது காலை வைத்தால் போதும்… அ…ஆ…! என்று தலை உச்சி மயிர் நட்டமாக நிற்கும் பாத்ரூமில் சிறிது நேரம் அதிகமாக உட்கார்ந்திருக்க முடியாது… எரிச்சலாகும்.
கால் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும் என்ன வலி வேதனை எப்படி இருக்கிறது என்று…!
இத்தனையும் பொறுத்துக் கொண்டு
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்று குருநாதர் சொல்லி விட்டார்
2.ஒவ்வொரு குடும்பமும் எத்தனை பாடு படுகின்றது
3.குடும்பத்தில் உள்ளவர் யாராவது இறந்தால் அங்கே என்ன நிகழ்கின்றது…?
4.இறந்தவரின் ஆன்மாக்கள் எங்கே… எப்படி… என்ன செய்கின்றது…? என்று அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.
கஷ்டப்பட்டுத் தான் nhaan எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு வந்தேன். ஆனால்
1.உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நான் சொல்லும் முறைப்படி செய்து அதை நீக்கிக் கொள்ளுங்கள்
2.உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றேன்
3.அதற்குண்டான முறைகளையும் சொல்லி… வழிகளையும் காட்டி சக்திகளைப் பெறும்படி செய்தாலும் “ஏற்பதற்கு ஆள் இல்லை…!”
“தியானத்தைக் கடைபிடிக்கிறோம்… என்று தியான வழியில் வருகின்றார்கள்…! சக்திகளைக் கொடுத்து… உங்களுக்கு வரக்கூடிய தீமைகளை இப்படி மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்… யாரும் எடுப்பதில்லை.
1.”சாமி (ஞானகுரு) எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார்…” என்ற இந்த உணர்வுடன் தான் இருக்கிறார்கள்
2.சாமி சொன்ன தியானத்தைச் செய்து என்ன வந்தது…? என்று (சாதாரணமாக) கேட்கின்றார்கள்.
ஆக மொத்தம் நான் சொல்வதை… “நீங்கள் எடுத்தால் தானே” அது நடக்கும். உணவைக் கொடுத்த பின் அதைச் சாப்பிடவில்லை என்றால் பசி எப்படித் தீரும்…?
பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்குச் சத்துதான். ஆனால்
1.சாப்பிட வேண்டும் என்று ஆசையை மட்டும் பட்டுக் கொண்டு
2.சாப்பிட முடியாதபடி (சாப்பிடாதபடி) வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் என்ன நடக்கும்…?
3.அந்தச் சத்து உங்களுக்குக் கிடைக்காது… விஷம் தான் வளரும்…!
ஒவ்வொரு நொடிப்பொழுதும் இந்த உயர்ந்த சக்தி நீங்கள் பெறுவதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.
யாம் சொன்ன முறைப்படி செய்து ஒரு சமயம் நல்லதாக ஆன பின் மீண்டும் (இன்னொரு) சிக்கல் வந்தால் அதே முறைப்படி செய்து அதிலிருந்து மீண்டு கரையேறுவதற்கு ஆள் இல்லை.
காரணம் அந்தப் பழக்கம் வரவேண்டும் என்பதற்குத் தான் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
எத்தனையோ பேருக்குத் துயரங்களும் துன்பங்களும் வரும் பொழுது… அதிலிருந்து மீட்டி விடுகின்றோம்… அவர்கள் எப்படியும் தெளிந்து வருவார்கள் என்று…! அந்த எண்ணத்தில் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்
ஆனால் அதற்காக வேண்டி
1.என்னுடைய சக்தியை நான் எல்லா நேரத்திலும் விரயம் செய்ய முடியாது
2.உங்களுக்கு வழி அமைத்துக் கொடுத்தாலும் கரை ஏறி வருவதற்குண்டான தன்னுடைய சுய பலம் வேண்டும் அல்லவா
3.”எல்லாம் சாமி பார்த்துக் கொள்வார்” என்றால் சாமி எதைப் பாப்பார்…?
நீங்கள் கஷ்டப்படுவது துன்பப்படுவது இதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால்… அந்தத் தீமையிலிருந்து தப்புவதற்குத்தான் நான் பார்க்க முடியும். உங்களை எப்படிக் காப்பது…?
யாம் இப்பொழுது கொடுக்கக்கூடிய வாக்கின் பிரகாரம் ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து ஆத்ம சுத்தி செய்து வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து… அந்தந்த நேரத்தில் சரியாகப் பயன்படுத்தித் தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடையுங்கள்
2.இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை
3.சிறிது காலம் செய்து பழகிக் கொண்டாலே போதுமானது.
தொழிலிலே ஆசை மற்றதில் ஆசை என்று அதை எண்ணி ஏங்கி… கடைசியில் அது நிராசையாகி விட்டால் வேதனை தான் வருகிறது வேதனை வளர்ந்தால் சிந்தனை இழக்கப்படுகின்றது.
அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் கண்டிப்பாக யாம் சொன்ன முறைப்படி நீங்கள் ஆத்ம சக்தி செய்ய வேண்டும். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திவிட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…? என்று சிந்தனை செய்ய வேண்டும்.
அதற்குண்டான உபாயங்கள் நிச்சயம் வரும். அந்த உயர்ந்த சிந்தனைகள் வருவதற்குத் தான் மணிக்கணக்காக உங்களுக்கு உபதேசிக்கிறோம்.
1.குருநாதர் எனக்குக் காட்டிய வழி முறைகளை எல்லாம்
2.உங்களுக்குப் பல வகைகளிலும் எடுத்துக் காட்டிக் கொண்டே வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உடல் இச்சை என்ற “கௌரவப் பிரச்சினை”
ஒருவர் கோபமாக இருக்கின்றார்… சங்கடமாகப் பேசுகின்றார்… சலிப்பாக இருக்கின்றார்… அந்த நேரத்தில் நல்லதைப் பற்றி நாம் உபதேசம் செய்தால் எப்படி இருக்கும்…?
ஏற்றுக் கொள்வார்களா…! நம் மீது வெறுப்பு தான் அதிகமாகும்.
தோசையைச் சுடுகின்றோம் என்றால் முதலில் நெருப்பைச் சரியான பக்குவத்தில் வைத்துத் தோசையை வார்த்தால் அது சரியாக… சீராக வரும். நானும் தோசை சுடுகின்றேன் என்று சொல்லிவிட்டு… சட்டி சூடாகாமல் மாவை வார்த்தால் என்ன ஆகும்…?
அது போலத் தான் ஒரு மனிதனுக்கு நாம் உபதேசிக்க வேண்டும் என்றால்
1.அந்தப் பக்குவமும் கேட்கும் பருவமும் அது எப்படி இருக்கின்றது…? என்று
2.அதை நாம் அனுசரித்துப் பார்த்து நல்லதைச் சொல்ல வேண்டும்
3.அப்போது தான் கேட்பார்கள்…!
இல்லை என்றால்… நல்லதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அவர் கேட்கவில்லை… மோசமான ஆள்…! என்று நாம் எண்ணி விடுகின்றோம்.
1.நல்லதைச் சொல்கிறோம் என்ற பேரில்.. நல்ல குணத்தை வளர்ப்பதற்கு மாறாக
2.”மோசமான ஆள்…” என்ற அந்த உணர்வை நமக்குள் கவர்ந்து விடுகிறோம்.
அவருக்கு நல்லதாக வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் நாம் சொல்கின்றோம். இருந்தாலும் நம் சொல்லைக் கேட்கவில்லை என்றால் நாம் என்ன செய்யப் போகின்றோம்…!
1.வேதனை என்ற உணர்வு வருகின்றது
2.வேதனை என்ற விஷம் வரப்படும் பொழுது நாம் சிந்திக்கும் தன்மையை இழந்து விடுகின்றோம்
3.சிந்திக்கும் தன்மை இழந்தால் அவர் மீது குற்றங்களைத் தான் சொல்ல வேண்டியிருக்கும்
4.அவரை எண்ணி நமக்குள் குறை என்ற உணர்வுகள் வந்து விடுகின்றது
5.அவரை நாம் குறையாக சொல்ல நேருகின்றது
6.அவரைத் தான் குறையாகச் சொல்கிறோம் என்று நாம் நினைக்கின்றோம்
7.ஆனால் நமக்குள் முதலில் குறையை வளர்த்துக் கொள்கின்றோம் என்று நமக்குத் தெரியவில்லை.
ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அவ்வாறு தான் இயக்கிக் காட்டும்.
தீமை என்று தெரிகின்றது… அதை அகற்ற பழக வேண்டும். அதாவது ஆறாவது அறிவு கொண்டு தீமையை நீக்கும் உணர்வைச் சேர்த்தால் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…! என்று தீமை உருவாகாதபடி தடுக்கப்படுகிறது.
ஆனால் தீமை என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்
1.இது உடல் இச்சை…! கௌரவ பிரச்சினையாக மாறிவிடுகின்றது
2.கௌரவ பிரச்சனைகள் வரும் பொழுது உடல் பற்று வருகின்றது.
3.உடல் பற்று வரும் பொழுது தீமை என்ற நிலையே வருகின்றது
ஆக இந்த உடல் பற்று வரும் பொழுது சிவம்… இந்த உடலைக் காக்கத் தான் நம் எண்ணங்கள் வருகின்றது.
ஆனால் “ஓ..ம்” என்ற பிரணவத்தைச் சிவனுக்கே ஓதினான் தகப்பன் சாமி என்று சாஸ்திரங்கள் காட்டுகிறது.
1.தீமையை நீக்கும் அருள் உணர்வை ஜீவனாக்கினால் பிரணவம்
2.அது தான் தகப்பன்சாமி…! (உடல் சிவம் – ஆறாவது அறிவு முருகன்)
தீமையை நுகர்ந்து விட்டால் உடனே சங்கடப்படுகின்றோம்… சலிப்படைகின்றோம். அப்போது ஆறாவது அறிவு கொண்டு என்ன செய்ய வேண்டும்…?
சங்கடத்தை நீக்க வேண்டும் சங்கடத்தை நீக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்க்க வேண்டும். இருளை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்தால் கார்த்திகேயா…! (கார்த்தி என்றால் வெளிச்சம்)
பல கோடிச் சரீரங்களில் எத்தனையோ தீமைகளிலிருந்து தப்ப வேண்டும்… தப்ப வேண்டும்… என்று எண்ணி எடுத்துத் தான் மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றோம்.
மனித உடல் பெற்ற பின் நாம் உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்து வரும் நஞ்சை இந்த உடல் மலமாக மாற்றுகின்றது… உணர்வின் தன்மை அறிகிறது.
உயிர் ஈசனாகின்றது… உடல் சிவமாகின்றது… பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்க வேண்டும் என்ற வினைகளைச் சேர்த்தது வினைக்கு நாயகனாக மனித உடலை உருவககியது (விநாயகா) மனித உடலை உருவாக்கிய பின் நஞ்சை மலமாக மாற்றுகின்றது.
அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவம் இதைத் தெளிவாகக் காட்டுகிறது. சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா.
இருந்தாலும்… உடல் பற்றின் தன்மை வரப்படும் போது
1.கௌரவக் குறைவாக என்னைப் பேசினான் என்ற உணர்வான பின்
2.அது “ஓ… ம்…” என்று நமக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது.
3.அவனுடைய தவறை நீக்குவதற்கு மாறாக அவனுடைய தவறை நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்
அந்தத் தவறு நமக்குள் பிரணவமாகி விடுகின்றது… உடலுக்குள் வரும் பொழுது வேதனை வருகின்றது. வேதனை வரும் பொழுது சிந்திக்கும் திறன் இழக்கப்படுகிறது… சிந்தனை இழந்து கார உணர்ச்சிகள் அதிகமாகி எரிச்சலாகின்றது.
உதாரணமாக…
1.ஒரு கல்லுடன் கல் மோதினால் (உராய்ந்தால்) நெருப்பாகின்றது
2.அந்த இடத்திலே தொடும் பொழுது சுடுகின்றது.
அதே போன்றுதான் இந்த உணர்ச்சிகள் மோதலாகும் பொழுது அதற்குத் தகுந்த மாதிரி வேகங்கள் வருகின்றது. அப்பொழுது அதை மாற்ற முடிகின்றதா…? இல்லை…!
அத்தகைய கார உணர்ச்சிகளை மாற்றுவதற்குத் தான்
1.நம் குருநாதர் காட்டிய வழியிலே அவர் கொடுக்கக்கூடிய அரும்பெரும் சக்திகளை
2.துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து நாம் பயன்படுத்திப் பழகுதல் வேண்டும்.
கௌரவம் அழியக் கூடியது… ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்
கோபம் என்ற கார நெடி உணர்வில் மோதியவுடன் நம் சரீர உணர்வில் இயக்கம் தாங்காமல் துரித கதியாகிறது. அப்பொழுது… “சாந்தம்…” என்ற நல் ஒலியை நாம் எடுக்கும் பொழுது அக்காரத்தின் நெடி வீரமாகின்றது
1.அந்த வீரத்தை முலாம் படுத்தும்
2.ஆத்மாவின் ஆத்ம வளர்ச்சிக்கு… வீரியத் தன்மையை வளர்த்துக் கொள்ளும் ஆயுதம் தான்
3.நமக்கு ஏற்படும் எதிர்நிலையின் கோப நிலையின் “காரம்”
4.வீரம் என்ற வீரிய சக்திக்கு “முலாம்…”
இதைப் போன்றே சலிப்பு சோர்வு என்ற ஒவ்வொரு குண நிலைகளுக்கும் உணர்வின் எண்ணத்தை உப்பு புளிப்பு காரத்தை எதில் எத்தன்மை கொண்டு சேர்த்துச் சுவையாக்கிச் சமைத்து சரீரத்திற்கு உட்கொள்ளும் உணவைப் போன்று இந்த ஆத்மாவிற்கு வாழ்க்கையை ஒட்டிய எதிர்நிலைகளைச் சமைக்கக்கூடிய நல் குணங்களாக்கிச் சத்தாக்க வேண்டும்.
தனி உப்பையும் தனிக் காரத்தையும் தனிப் புளிப்பையும் உடல் ஏற்பதில்லை. அறுசுவையும் உண்டு பழகிய உடலுக்கு எப்படி அவ்வெண்ணத்தில் தன் சுவைக்கொப்ப ஆகாரத்தைச் சரீர உணர்வு நாடுகின்றதோ அதைப் போன்று
1.நாம் மனிதனிலிருந்து மகானாகும் சக்தி எடுக்க
2.ஆத்மாவைப் புனிதப்படுத்தும் சுவையான நற்குணத்தைச் சமைக்கும் ஆலயமாக
3.இந்த உடலில் உயிர் என்ற தெய்வம் குடி கொண்ட நிலையில்
4.நாம் எண்ணத்தை உயர்த்தி நம் ஆத்மாவை ஒளியாக்கிக் கொண்டோமானால்
5.பல கோடி ஆண்டுகளாகப் பிறப்பின் தொடரில் பிறப்பெடுத்த நம் உயிர் ஆண்டவனை
6.”ஒளி ஆண்டவனாகச் செயல்படுத்துவது” இவ்வெண்ணம் தான்…!
எண்ணம் என்ற பகுத்தறிவின் நிலையைப் படைப்பின் உயர்வில் பெற்ற இத்தருணத்தைத் தவறவிடாமல்… சேவை என்பதன் பொருளே உயர் தன்மையை வளர்க்ககூடிய சேவை தான் என்பதை இயற்கையின் உண்மையில் உணர்ந்திடல் வேண்டும்.
ஏனென்றால்
1.சரீர கௌரவம் அழியக் கூடியது
2.ஆத்மாவின் உயர்வு தான் அழிவில்லா மகத்துவம்.
இதன் தொடரில் சூரியனைப் போன்ற ஒளி ஈர்ப்பாக உயிராத்மாவை வைரமாக்குங்கள்.. என்றுமே அழிவில்லா “ஜொலிப்பாக…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்தப் பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி… சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் “துருவப் பகுதியில் நேராக நின்று.. துருவ நட்சத்திரமாக… வடகிழக்காக அமைந்துள்ளான்…”
துருவ நட்சத்திரம் எத்தகைய விஷத் தன்மைகளானாலும் தீமைகளானாலும் அதையெல்லாம் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டயுள்ளது.
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியைக் கவரும்படி செய்தார் நமது குருநாதர்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை நுகரச் செய்து
3.என் உடலுக்குள் வந்த.., “தீமைகளை மாற்றியமைக்கும்” முறையினைச் சொன்னார்.
அதன் வழி என் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கினேன். அவர் எனக்குக் காட்டிய அதே வழியில் குரு கொடுத்த அருள் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறேன்.
1.1971ல் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் நம் குரு ஒளி உடல் பெற்ற நாள்… தீமைகளை வென்று சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தார்.
2.அவரைப் போலவே நீங்களும் தீமைகளை அகற்றுங்கள். இந்த உடலுக்குப் பின் ஒளியாக மாற்றுங்கள். உங்களால் முடியும்.
நான் (ஞானகுரு) ஒன்றும் உங்களை மாற்ற முடியாது. “சாமி மாற்றுவார்..” என்று நான் சொன்னால் உங்களை ஏமாற்றுவதாகத் தான் அர்த்தம்.
ஏனென்றால்… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் அதை அணுவாக மாற்றுகின்றது.
“நீங்கள் எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும்” என்று எண்ணும் பொழுது தான் நானும் அதைப் பெறுகின்றேன்.
இதைப் போல நீங்களும் “உலக மக்கள் அனைவரும்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் நீங்களும் பெறலாம்.
ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுவோம். குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றி நடக்கும்போது நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?
1.நான் ஒருவரைப் பார்த்தேன்… அவரின் தீமைகளைக் கேட்டேன்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றேன்
3.அவர் நன்றாக ஆக வேண்டும் என்று சொன்னேன்.
4.”அவர்கள் நன்றாக ஆனார்கள்…” என்று இந்த சந்தோஷம் உங்களுக்கு வரவேண்டும்… “வரும்”.
இதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
அதை விட்டுவிட்டு “என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கின்றான். இரு.., நான் அவனைப் பார்க்கிறேன்… அவனைத் தொலைத்து விடுகிறேன்…” என்ற நிலை வரக்கூடாது.
அதற்குப் பதிலாக அந்த அருள் உணர்வை நான் பெற்றேன். “என்னைத் திட்டியவர்கள் தீமையிலிருந்து விடுபட்டனர்… அவர்கள் நல்லவர்களாக ஆனார்கள்…” என்று இப்படிப்பட்ட அனுபவமாக இருக்க வேண்டும்.
அதைப் போல நோயுற்றவர்களாக இருந்தால்… “என் பார்வையால் சொல்லால் மூச்சால் அவர்கள் நோய் விலகியது” என்ற நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.
இதை நீங்கள் ஒரு பழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.
1.குரு எனக்கு இதைத்தான் காட்டினார்… அதைத்தான் நான் உங்களுக்கு உணர்த்துகின்றேன். பதிவாக்குகின்றேன்.
2.“இதைச் செயல் வடிவுக்குக் கொண்டு வருவது” உங்களுடைய பொறுப்பு…!
மனிதன் ஒளி நிலை பெறுவது தான் “இயற்கையின் கதி (வளர்ச்சி)”
இயற்கையின் கதியை… இறைசக்தியின் இறைத்தன்மையை வளர்க்கும் நிலைதான் பிறவா நிலை பெறும் நிலை.
உணர்வின் எண்ணமற்ற இயற்கையின் செயலில் சில மரங்கள் அம்மரத்தின் வீரியத்தில் வைரத்தின் ஒளி பாய்ந்து அவ்வைர ஒளியின் முதிர்வின் மூலம் தானப்பா “மண்டலங்களின் ஜீவ நாடி…!”
ஜீவராசிகளில் பாம்பு தன்னுடைய ஒளி சக்தியின் மாணிக்கத்தைப் பெறுகின்றது. வயது முதிர்ந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யானைகளுக்கு அதனுடைய உடலில் “யானை முத்து” என்ற முதிர்வின் அபூர்வப் பொருள் வளர்கின்றது.
பூமியின் இயற்கையில் முதிர்வின் நிலை பல நிகழும் பொழுது உணர்வின் எண்ணம் கொண்ட மனித நிலையில்… பிறவா நிலை பெறும் வழியை நாம் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும். ஏனென்றால் வாழக்கூடிய காலம் குறுகியது.
யானை மனிதனைக் காட்டிலும் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றது. ஆனால்
1.மனிதனின் தேவையின் குணம் அதிகப்பட்டு
2.மனிதன் வாழக்கூடிய காலத்தையே குறுக்கக்கூடிய வளர்ச்சி நிலைதான் இன்றைய நிலை.
இக்குறுகிய மனித ஜீவித வாழ்க்கை நிலையில் தத்துவ ஞானிகள் பிறவாநிலை பெற அறிந்துணர்ந்தனர்.
மிருகங்களில் சில இனங்கள் நீண்ட காலம் வாழ்ந்தாலும் மனிதனைப் போன்று பிறவாநிலை பெறும் நிலை அதற்கில்லை. ஆகவே மனிதன் தன்னுடைய இஜ்ஜீவ சரீரத்தின் உண்மை நிலையை உணரல் வேண்டும்.
நல்லொழுக்கத்தில் உயர் நிலை அடைய வேண்டும் என்பவர்கள் முதலில் இவ்வுடலின் சொந்தமான நிலை யாது…? என்பதை அறிந்திடல் வேண்டும்.
இச்சரீரத்தில் எடுக்கக்கூடிய உணர்வின் ஓட்டத்தை…
1.எம்மகானாலும் வாழ்க்கைத் தொடரில் உணர்வின் ஓட்டத்தை
2.சம நிலையில் வாழ்க்கைத் தொடரில் செயல்படுத்த முடியாது.
3.அதைச் செயல்படுத்தக் கூடிய நிலை பிறவாநிலை
4.அது இவ்வுடலில் இருந்துதான் செயலாக்கக் கூடிய நிலை,.. இயற்கையின் நிலை.
வாழ்க்கையில் நிகழக்கூடிய உணர்வின் மோதல் ஒவ்வொரு நொடியிலும் மாறிக் கொண்டேதான் இருக்கும். மாறக்கூடிய உணர்வின் சமைப்பை இவ்வுயிரின் செயல் சுட்டுப் பொசுக்கக் கூடிய ஜோதி நிலையான ஒளித்தன்மை பெறுவதுதான்…!
ஜீவகாந்த சரீரத்தில் விண்ணிலிருந்து எடுக்கக் கூடிய ஒளி சக்தியை… மின் காந்த ஒளியாய் நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வால் ஆத்மாவின் ஒளிசக்தி வலு கூடக் கூட
1.வாழ்க்கையில் மோதக் கூடிய எதிரொலியின் ஈர்ப்பிற்கு உணர்வின் எண்ணத்தை அடகு வைக்காமல்
2.ஆத்மாவின் செயலாய் உணர்வின் எண்ணத்தை ஈர்ப்புப்படுத்தும் பக்குவத்தில்
3.மனித குணம் ஞானம் செயல்படல் வேண்டும்.
விருப்பு வெறுப்பு வாழ்க்கையில் தான் நடக்கும். தியானத்தில் மின் காந்த ஒளியை எக்குணத்தில் நாம் முலாமாக்குகின்றோமோ… அதற்கொத்த இப்பூமியின் சமைப்பான ஏழு வண்ணத்தில்… ஒளியில்… இச்சரீர குணத்திற்கொப்ப நாம் எடுக்கும் தியானத்தால் ஆத்மாவின் ஒளித்தன்மையின் வண்ண நிலை வலுக்கொள்ளும்.
ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டு காலங்களுக்குப் பிறகு பாம்பு கக்கும் மாணிக்கம் ஒளி வீசுகின்றது. ஆகவே…
1.உயிராத்மாவை திடப்பொருளாக ஆக்குவதில்லை
2.ஆத்மாவை வலுப்படுத்தும் நிலை என்பது…!
இஜ்ஜீவ சரீர ஆத்மாவை சூட்சும ஆத்மாவாய் ஒளியாக்கும் வழியை இத்தியான வழியில் மனித குணத்திலிருந்து… சம குணத்தில் சரீரத்தில் ஓடக் கூடிய எண்ண நிலை ஆத்மாவின் உந்தலில் எண்ணம் செயலாகும் பொழுதுதான்… சரீர உணர்வில் பிறவாநிலையை இவ்வாத்மா பெற முடியும்.
1.தன் சரீரத்தை எந்த நிலைக்கும் பிரித்துக் கூட்டும் ஆத்ம ஒளி சக்தி பெற்ற ரிஷி சக்தியின் வலுவாய்
2.நம் சரீரத்தில் எடுக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு தான்
3.பிறவாநிலைப் படுத்த முடியும்.
தியானத்தின் மூலம் நாம் பெறும் சக்தி “எல்லோருக்கும் பொதுவானது”
குருநாதர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அற்புதங்களையும் காட்டினார்.
1.என் கையை நீட்டியவுடன் ஒரு மரம் சட…சட… என்று முறிந்து விழுகிறது
2.கையை நீட்டியவுடன் மேலே பறந்து போகும் காகம் இறக்கை தன்னாலே ஒடிந்து விழுகிறது
3.ஒருவன் கெடுதல் செய்கிறான் என்றால்… இப்படி என்று ஒன்றைச் சொன்னால் போதும்… அவனை உருட்டிக் இங்கே கொண்டு வந்துவிடும்.
4.பெரிய பெரிய கல்களையும் பறக்கச் செய்து காட்டுகின்றார்.
இந்தச் சக்திகளைக் காட்டி விட்டு “இது எல்லாம் எதற்காக ஆகும்…?” என்று விளக்கத்தைக் கொடுக்கின்றனர்.
இப்படி எல்லாம் செய்தாய் என்றால் நீ அதுவாகத்தான் ஆவாய்…! மந்திர சக்திகளை எடுத்தால் இந்த நிலைக்குத்தான் ஆகும் என்றார்.
மிலிட்டரியில் இறந்தவர்கள் பழி தீர்க்கும் உணர்வோடுதான் இறக்கின்றார்கள். “அந்தக் கூலிப்படைகள் எவ்வாறு இருக்கின்றார்கள்…? என்பதை நீ பார்…!” என்று அதையும் காட்டுகின்றார்.
லெப்ட்…ரைட்… லெப்ட்…ரைட்… மார்ச்… அபௌட்…டர்ன்…! என்று என்னென்னமோ சொல்கின்றார். பார்த்தால் பூட்ஸ் அடி சத்தம் பயங்கரமாகக் கேட்கின்றது.
ஏனென்றால் “இந்த உணர்வின் ஒலி அலைகள்” அவர்கள் எடுத்துக் கொண்டது இங்கே அலைகளாகப் பரவி உள்ளது. குவித்து எடுத்து அந்த உணர்வின் ஒலியைப் பாய்ச்சினால் பெரிய கல்லையும் தூக்கி எறிகின்றது
என்றோ இறந்தவர்கள் என்று இருந்தாலும் அது மறைந்து விடவில்லை அவர்கள் உடலில் விளைந்தது யாருக்குள் சென்றாலும் இந்த உணர்வின் (பழி தீர்க்கும்) தன்மை தான் இயக்கும்.
ஆக அதை அதிகமாக நுகர்ந்தால் அடுத்தவர்களைக் கொலை செய்வதற்குக் கூலிப்படையாகப் போகலாம். இது எல்லாம் இயற்கை நிலைகள்.
ஆனால் மனிதனாக ஆனபின் நீ முழு முதல் கடவுளாக ஆகின்றாய் நான் சொன்ன முறைப்படி அருள் ஞானத்தை உனக்குள் (ஞானகுரு) உருவாக்குகின்றாய். அனைவருக்குள்ளும் அதை உருவாக்கு…!
1.இந்த உலகம் உனக்குச் சொந்தமில்லை
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமில்லை
3.நீ எடுக்கும் அருள் ஞான உணர்வே உனக்குச் சொந்தமாகின்றது
4.அந்த அருள் ஒளியின் உணர்வையே சொந்தமாக்க முற்பட வேண்டும்
அனைவரும் அருள் ஞானம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் தான் நீ அதைப் பெறுகின்றாய்
1.”நான் பெற்றுவிட்டேன்” என்று நீ அகம் கொண்டால் அந்த விஷம் தான் உனக்குள் கூடும்
2.பெற்ற சக்திகளையும் உயர்ந்த உணர்வையும் அது அழித்துவிடும்… நீ போவது எங்கே…?
3.இருளுக்குள் தான் செல்ல வேண்டி இருக்குமே தவிர ஒளிக்குள் வர முடியாது என்று
4.இத்தனை உண்மைகளையும் காட்டிய பிற்பாடு நான் என்ன செய்ய முடியும்…!
பல பேர் எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… நான் அதைப்பற்றி எண்ணுவதில்லை “எனக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்… என்று நான் (ஞானகுரு) எண்ணினால் தானே…!”
ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய பல பெரியவர்களும் சாமியார்களும் நூற்றுக்கு 90% அறியாமல் தவறுகள் செய்தே வாழ்கின்றார்கள். ஆண்டவனையே நாங்கள் கைக்குள் வைத்திருக்கிறோம் என்று மக்களை ஏமாற்றப் பழகி வைத்திருக்கிறார்கள்.
அது அவர்களுடைய உணர்வு…! இருந்தாலும் எங்கே செல்கிறோம் என்று அவர்களுக்கே தெரியாது
அந்த உணர்வை வைத்து எம்மை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே எண்ணம் என்னையும் திருடனாகத்தான் அவர்களுக்குத் தெரிய வரும் அவர்கள் அப்படித்தான் எண்ணுவார்கள்.
ஆனால்
1.என்னைப் பார்ப்போர் அனைவருக்கும் ஞானிகளின் அருள் கிடைக்க வேண்டும் என்று
2.நான் பிரார்த்தனை செய்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக எண்ணுவதில்லை.
காரணம் குற்றம் என்று பார்க்கப்படும் பொழுது அந்தக் குற்றத்தின் உணர்வுகள் தான் விளையும்… குற்றவாளியாக நம்மையும் மாற்றிவிடும்.
நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று கீதையிலே சொன்னது போன்று
1.அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் அதுவாகின்றேன்
2.தவறு செய்கின்றார்கள் என்று எண்ணினால் நான் எதைச் செய்தாலும் அது தவறாகத்தான் வந்து சேரும்.
3.ஏமாற்றுகின்றான்… ஏமாற்றுகின்றான்… என்று தான் வரும்… அது அவருடைய குற்றம் அல்ல.
ஆனால் அதே சமயத்தில் தவறு செய்கின்றார்கள் என்று கோபப்பட்டுக் கடுமையான ஆயுதத்தை வைத்து அவர்களை நான் வீழ்த்த எண்ணினால் அவர்கள் உடலைத் தான் வீழ்த்த முடியும். இந்த உணர்வின் தன்மை விஷத்தன்மையாக எனக்குள் விளைந்து விடும்.
அதனால் தான் யார் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
1.“என்னிடம் சக்தி இருக்கிறது…” என்று அந்த வகையிலே அடக்கியாளும் உணர்வைச் செயல்படுத்துவதில்லை.
2.“ரோசப்பட்டு நான் அவ்வாறு செய்ய முடியாது…!”
அவர்களை உருட்ட வேண்டும் என்றால் உருட்டி விட்டுப் போகலாம்…! அத்தகைய அகம் வந்தால் நான் போகும் பாதையை அது தடையாக்கி விடும்.
இந்த உடலில் எத்தனை நாள் நாம் இருக்கப் போகின்றோம்…? இந்தப் புகழ் எவ்வளவு நாள் இருக்கும்…?
மற்றொருவரைக் கொன்று வீழ்த்தி… என்னைப் பார்த்தாலே அனைவரையும் அஞ்சும்படி செய்யலாம். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து விடுமே…! நல்ல குணங்கள் வீழ்த்த பின் நான் எங்கே செல்வது…?
ஆகையினால் மற்றவரின் போற்றுதலுக்காக யாம் எதையும் செயல்படுத்துவதில்லை
அந்த அருள் ஒளி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… ஒவ்வொரு உயிரும் ஒளியாக வேண்டும் என்று எண்ணுவது தான் என்னுடைய வேலை…!
நீங்களும் அதே வழிகளில் செயல்படும் பொழுது இருளை அகற்றலாம் உயிருடன் ஒன்றி ஒளியாகவும் முடியும். ஆகவே…
1.எல்லோரும் அருள் ஞானம் பெற வேண்டும் என்ற அந்தப் பக்குவத்திற்கு நீங்கள் வரவேண்டும்
2.இதை எல்லாம் நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நமக்குக் கிடைக்காததனால் “அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது”
குடும்பத்திலே குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள். முதலில் குழந்தைகளாக இருக்கும் பொழுது குடும்பத்துடன் இருந்தாலும் திருமணம் ஆன பின் பிரிந்து செல்கின்றார்கள்.
பிரிந்து சென்றாலும் தாய் தந்தையுடன் ஒட்டி வாழ்பவர்களும் உண்டு… அவருடன் ஒட்டி வாழாதவர்களும் இருக்கிறார்கள்.
இதே போல் தான் சூரிய குடும்பத்திலும் வளர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களின் தன்மைகள்.
ஆரம்ப நிலையில் பல அணுக்கள் மோதி மோதி…
1.மோதலில் ஏற்படும் நிலைகளில் அணுக்கள் உருமாறி ஆவியாக மாறுகின்றது
2.எடை கூடி மேகங்களாக மாறுகிறது… மேகங்களுக்குள் அணுக்கள் மோதும் போது தான் நீராக வடிகின்றது
3.நீருக்குள் சிக்கும் அணுக்கள் எடை கூடி ஓடும் பொழுது அருகிலிருப்பதுடன் உராய்வாகி
4.மற்ற உணர்வுகளைத் தனக்குள் கவர்ந்து திடமாக ஒரு பொருளாக மாறுகின்றது.
5.அது தான் பரம்பொருள்…! – ஒரு கோளாக உருவாகிறது.
அதாவது… ஓடும் வேகத்தில் தன் அருகிலே காந்தப் புலனால் உராயப்படும் பொழுது சுழற்சி ஆகின்றது. சுழற்சியால் வெப்பம் ஆகும் பொழுது நுண்ணிய அலைகளைத் தனக்குள் கவர்கின்றது. துருவப் பகுதி வழியாகத் தன் உணவை எடுக்கிறது.
பல பொருள்களைப் போட்டு நாம் வேக வைக்கும் போது எப்படிப் புது புது சுவை கொண்ட பொருள் உருவாகின்றதோ இது போன்று கோள்… அது நுகர்ந்த உணர்வுகள் கரைந்து அமிலமாக மாறுகின்றது.
அமிலத்தின் தன்மை அடைந்த பின் ஆவியாகப் பல மாற்றங்கள் அடைகிறது. மேலிருந்து வாரியாக பல அடுக்குகளாக வரும் போது இது தான் நிலநடுக்கங்களாக ஆகிறது.
நிலநடுக்கம் ஆன பின் மேல் பகுதி டபக்… என்று உள்ளே சென்று விடுகிறது. உள்ளே சென்ற பின் நிலைநடுக்கம் நின்று விடுகிறது. வேகத்துடிப்பு குறைந்து விடுகிறது.
1.இப்படித்தான் கோளுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு அதனின் வளர்ச்சியில் பெரும் சக்தியாக மாறி
2.சுழற்சியின் வேகம் கூட.. வெப்பத்தின் தணல் கூட… அது நடு மையத்தில் கூழ் போன்று ஆகின்றது.
முதலில் நீரானது… அடுத்து ஆவியானது மீண்டும் நீரானது. நீருக்குள் அணுக்களின் தன்மை சிக்கியது. சிக்கப்படும் பொருள்கள் உறைந்து உறைந்து எல்லை இல்லாத இடத்தில் ஒரு எல்லையாக பரம்பொருளாக உருப்பெறுகின்றது என்பதைச் சாஸ்திரங்கள் கூறுகின்றது.
சுழற்சியின் வேகம் கூடி நடு மையத்தில் வெப்பத்தின் தணல் கூடக் கூட அனைத்தும் உருகி அமிலமாகிறது… கோள் நட்சத்திரமாக மாறுகிறது.
அமிலமாக இருப்பதை உமிழ்த்தப்படும் போது பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது. உதாரணமாக நூலாம்படை பூச்சி தன் மலத்தால் வலையை விரித்து அதிலே சிக்கக் கூடியதை உணவாக எடுத்து வளர்கிறது.
அதே சமயத்தில் ஒரு ஈ கிடைத்தால் தன் மலத்தால் அதைக் காற்று புகாது சுற்றி மூடி விடுகிறது. மூடித் தன் இனத்தை அது விருத்தி செய்கிறது. ஒரு நூலாம்படைப் பூச்சி அடுத்து பலவாகிறது.
இதைப் போல் நட்சத்திரம் பால்வெளி மண்டலமாக அமைத்த பின் அதனின் உணர்வின் தன்மை பரவுகின்றது. இருந்தாலும் தன் சுழற்சியின் தன்மை கொண்டு தூசிகளாக வருகிறது.
நூலாம்படைப் பூச்சி வலையில் சிக்குவதை எப்படி உணவாக எடுத்துக் கொள்கின்றதோ அது போன்று பால்வெளி மண்டலத்தில் சிக்கிக் கொண்ட உணர்வுகளைச் சுழலும் வேகத்தில் நட்சத்திரம் தூசிகளாக மாற்றுகின்றது.
மேல் பகுதியில் இருந்து எடுப்பதைத் தனக்குள் விளைய வைக்கின்றது. அமிலமாக இருந்த அந்த நட்சத்திரம் சிறுகச் சிறுக உறைகிறது. அமிலம் உறைந்து பாதரசமாக மாறுகிறது.
1.அதை எடுத்தால் சூடாகாது… சூடானாலும் ஆவியாக மாறிவிடும் ஆனால் பொருளாக இருக்கும் போது எடை கூடியதாக இருக்கும்.
2.ஒன்றைத் தாக்கப்படும் பொழுது வெப்பத்தின் தணல் கூடி பிரித்துவிடும்.
3.ஆனால் வெப்பத்தின் தன்மை வரும் போது இயக்கும் சக்தி வருகின்றது
4.பாதரசத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் தன்மையாக வருகிறது.
இப்படி உருப்பெற்று வளர்ந்து வரப்படும் போது இந்த சூரிய குடும்பத்தின் எல்லையில் கடைசியில் இருப்பது… மற்றதை இழுக்கும் சக்தியாக நட்சத்திரங்களாக வளர்கின்றது.
நட்சத்திரங்கள் உமிழ்த்துவதைக் கோள்கள் இடைமறித்து உணவாக எடுத்து அதனின் வளர்ச்சியில் வளர்கின்றது. மையத்தில் சூரியன் அது செயல்படுகின்றது.
முதலில் நட்சத்திரமாக இருந்தது வளர்ச்சி பெற்றுச் சூரியனாக… ஒரு சூரியக் குடும்பமாக எப்படி மாறியதோ… அதே போல கடைசியில் இருக்கக்கூடிய நட்சத்திரங்கள் ஒவ்வொன்றுமே தான் வளர்ந்து… அதுவும் சூரியனாக மாறத் தொடங்குகிறது
நட்சத்திரங்கள் தனக்கென்று உருவாக்கப்படும் பொழுது பிற மண்டலங்களிலிருந்து (வேறு சூரியக் குடும்பத்திலிருந்து) எடுத்துக் கொடுப்பது இந்தச் சூரிய குடும்பத்திற்குக் கிடைக்காத நிலை வரும் பொழுது இந்தச் சூரியன் முதுமை அடைந்து விடுகிறது.
1.முதுமை அடைந்தால் சூரியன் நாளடைவில் செயல் இழந்துவிடும்
2.அது செயல் இழந்தால் இதனுடன் ஒட்டி இருக்கக்கூடிய கோள்கள் “எங்கே திசை மாறிச் செல்லும்…” என்று சொல்ல முடியாது.
நம்முடைய சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகை நட்சத்திரம் பிரிந்து சென்று விட்டது. அதனுடன் சேர்ந்து மற்ற நட்சத்திரங்களும் விலகிச் சென்று விட்டது… முழுமையாகவே விலகி விட்டது.
கார்த்திகை நட்சத்திரத்தின் பங்கு நம் சூரியக் குடும்பத்திற்குக் கிடைக்காததனால் “இங்கே அறிவு சூனியமாகிக் கொண்டிருக்கின்றது…”
விஞ்ஞானிகள் விஷக் கதிரியக்கப் பொறிகளை இங்கே பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்… அழிவின் தன்மையாகத் தான் இங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
மனிதனால் உருவாக்கப்பட்ட விஷக்கதிரியக்கங்கள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்து பிரபஞ்சத்திலும் பரவி விட்டது. பூமிக்குள் இருக்கும் மற்ற பொருளுடன் அது இரண்டாவது தரம் மோதிய பின்
1.கல் மண் கட்டிடம் அனைத்தையும் ஆவியாக மாற்றி
2.தன் இனமாகப் புயல் போல மாற்றக்கூடிய நிலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
வான்வீதியிலும் அது அதிகமாகப் பரவியதால் சூரியனால் கவரப்பட்டு அங்கேயும் மோதலாகி வெடிக்கும் நிலை வரும் போது
1.சூரியனுக்குள் பார்த்தால் கருகும் நிலை அடைந்து (நஞ்சைப் பிரிக்கும் தன்மை இழந்து கொண்டிருக்கிறது) கரும்புள்ளிகள் அதிகமாகப் பரவி விட்டது.
2.சூரியனும் மாசுபடும் நிலைகள் வந்து கொண்டிருக்கின்றது.
3.விஞ்ஞானிகளும் படம் பிடித்து அதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
2000 சூரியக் குடும்பங்களும் இப்படி விளைந்தது தான். இதிலே
1.முதலில் உருவான மையத்தில் இருக்கக்கூடிய சூரியக் குடும்பம் அது பெரிய சுழற்சி வட்டம்… “பெரிய பாதாளம்” என்பது அது தான்.
2.அதற்குள் எந்தக் கோள் சென்றாலும் கரைத்துவிடும்… எது சென்றாலும் கரைத்து ஆவியாக மாற்றிவிடும்
3.ஆவியாக மாற்றி… மறுபடியும் மற்ற கோள்களுக்கு மற்றவைகளுக்கோ அது உணவாகக் கொடுத்து விடும்.
இது போன்று தான் நம் சூரியனும் கரையும் நிலையில் வருகின்றது கரைந்து அமிலமாக ஆவியாகப் பரவும். நம் பூமி திக்கில்லாதபடி ஓடும். மற்ற சூரியக் குடும்பத்தில் எந்தக் கோளிலாவது போய் விழுகும்.
ஏதாவது ஒரு கோளின் ஈர்ப்புகள் புகும். பூமியிலே விளைந்த உயிர் அணுக்கள் மற்ற கோள்களில் நம் பூமி போன்று ஜீவிக்கக் கூடிய நிலை இருந்தால் அங்கே மீண்டும் உயிரினங்களாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
அப்படி இல்லை என்றால்
1.மனிதனாக உருப்பெற்ற “நம்முடைய உயிர்கள்” விஷத் தன்மை கொண்டு சதா வேதனைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டி இருக்கும்
2.கண்ணுக்குப் புலப்படாத நிலையில் (உயிர்) தான் இருக்கின்றது
3.ஆனால் சேர்த்துக் கொண்ட அந்த விஷத் தன்மையின் துடிப்பு தாங்காது வேதனையை வளர்த்துக் கொண்டுதான் இருக்கும்.
இது எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் காட்டிய உண்மைகள்.
மனிதனுடைய கதியை நிர்ணயிப்பது அவன் எண்ணும் எண்ணங்கள் தான்
காட்சி:
ஒரு கடிகாரம் தெரிகின்றது. கடிகாரத்தின் முட்கள் நகர்வதுவும் தெரிகின்றது.
விளக்கம்:
நேரத்தைக் குறிப்பிடுகின்ற கடிகாரத்தின் முள் ஒன்று பெரியதாகவும் ஒன்று சிறியதாகவும் உள்ளது. சிறிய முள் மணியையும் பெரிய முள் நிமிடங்களையும் காட்டுகின்றன.
பெரிய முள் ஓர் சுற்றுச் சுற்றிவர சிறிய முள் அடுத்த எண்ணுக்கு நகருகின்றது. அதைப் போன்று உணர்வின் எண்ணத்தின் வேகம் கடிகாரத்தின் பெரிய முள்ளைப் போன்று இச்சரீர ஒலியால் சுழலுகின்றது.
1.ஆத்மாவின் பதிவானது பெரிய முள்ளின் சுழற்சி வேகத்தைப் போன்றும்
2.உணர்வின் எண்ணத்தின் வேகம் ஆத்மாவின் செயல் பதிப்புகளானபின்
3.அது விளைந்து… இச்சரீரத்தின் வாசனையாக “இச்சரீரம் அடுத்து அடையும் கதியை…” சிறிய முள்ளின் குறிப்பு உணர்த்துகின்றது.
மனித உணர்வின் எண்ண ஓட்டத்திற்கு ஓப்ப செயலாக்கும் விந்தையின் விளைவுதான் “மனிதனின் கதி…”
1.மனிதனின் கதியில் செயலாக்கும் உயிரே “ஆண்டவனாய்…”
2.ஆண்டவனின் இயக்க ஆத்மாவில் எது பதிவாகின்றதோ அதுவே இறைவனாய் உள்ள நிலையில்
3.மனிதனின் மெய் ஞானம் தன் உணர்வின் எண்ணத்தின் வேகத்தை எக்கதி கொண்டு எடுக்கின்றானோ
4.அக்கதியின் ஈர்ப்பிற்குத்தான் சரீரத்தின் செயல் செயலாகும்.
இயற்கையின் கதியில்… பூமி சுழன்று ஓடும் பொழுது பூமியின் வட்டத்தில் அதன் ஓட்ட கதியில் எது எதையெல்லாம் சந்திக்கின்றதோ அச்சந்திப்பின் அமிலத்தைத் தன் வளர்ச்சியின் வித்தாக்கி… இயற்கையின் கதியாய் பூமி வளர்க்கும் வளர்ப்புகளும்… பூமியின் கால நிலையில் காற்றும் மழையும் உஷ்ணமும்… சுழற்சியின் கதியின் ஓட்டத்திற்கொப்ப பூமியின் செயல் வளர்ச்சி சுழலுகின்றது.
பூமியில் வளரக்கூடிய தாவரங்களின் வளர்ச்சியில் மரங்களையோ கொடிகளையோ வெட்டும் பொழுது… மீண்டும் அடிமரத்தின் தண்டு
1.”ஒரே கதியின் உணர்வில்” தாவரங்கள் இயற்கையின் அமிலத்தை எடுத்து ஒன்றின் தொடர்பில் வளர்வதினால்
2.வெட்டிய பிறகும்… துளிர் விட்டு மீண்டும் அம்மரங்கள் வளர்கின்றன.
ஆனால் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு… அதற்கடுத்த நிலை கொண்ட ஜீவ அணு வளர்ச்சி கொண்ட ஜீவ ஜெந்துக்களின் நிலையில் அதனுடைய உறுப்புக்கள் வெட்டுப்பட்டதென்றால் மீண்டும் வளர்வதில்லை.
அதே சமயத்தில் மனிதனின் நிலையில் பல உணர்வுகளை அறியக்கூடிய செயல் தன்மை எண்ணத்தின் உணர்வின் வேகம் கொண்ட செயல்பாட்டுத் திறமை உள்ளது.
ஆகையினால் மனிதன் தன் எண்ணத்தைக் கொண்டே தனக்கொத்ததைப் படைக்கவல்ல ஆற்றல் திறன் கொண்டவன் ஆகின்றான். மேலும்…
1.செயல் தன்மையின் உருவக நிலைக்கு
2.மனிதனின் நிலைதான் இப்பூமியின் வளர்ச்சியின் கடைசி நிலை. (உயர்ந்த படைப்பு)
தாவரங்களின் நிலையில் தனக்கொத்ததை ஈர்த்து ஒரே செயலில் வளரும் நிலையினால் அவைகளுக்கு எண்ணத்தின் ஓட்டமில்லை. மற்ற ஜீவ ராசிகளின் நிலையில் மனிதனை ஒத்த செயல் தன்மையில்லை.
1.எல்லா நிலையும் உணரக்கூடிய மனிதன்
2.தன் உணர்வின் எண்ணத்தில் எதை எடுக்க வேண்டும்..? என்பதனை
3.மனிதனின் ஞானத்தால் அறிதல் வேண்டும்.
ஆகவே… இப்பூமியில் பல நிலைகளுடன் ஒன்றிய வாழ்க்கையில் நாம் எதை எண்ணுகின்றோமோ அவ்வெண்ணத்தின் பல நிலைகள் வளர்ந்தாலும்
1.தனக்கொத்ததைப் பண்படுத்தி தன் ஜீவிதத்தை வளர்க்கும் மனிதன்
2.தனக்கொத்த நற்குணத்தின் நல் ஒலியை
3.தன் ஆத்மாவின் கதியில் பதிவாக்க வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று நீங்கள் சொத்தை அதிகமாகச் சேர்த்து வைத்திருந்தால் அடுத்தாற்போல் உங்கள் மனது எப்படி இருக்கின்றது?
துடுக்… துடுக்… துடுக்… என்று கடிகாரம் அடித்த மாதிரி இருக்கும். எங்கேயாவது “திருடி விட்டார்கள்..,” என்று பத்திரிக்கையில் படித்தால் போதும்.
இரவெல்லாம் துடுக்… துடுக்… என்று இருக்கும். இவ்வளவு நகைகளையும் எங்கே ஒளித்து வைப்பது…! இவ்வளவு பணத்தையும் எங்கே ஒளித்து வைப்பது..?
வைத்தாலும் இந்த மனது என்ன செய்யும்..?
எங்கேயாவது… “சறுக்…” என்று சப்தம் கேட்டால் போதும். உடனடியாக முழிப்பு வந்து “பட..படா… பட..படா…!” என்று துடிக்க ஆரம்பித்துவிடும்.
ஏனென்றால் கொள்ளை கொலை என்று இன்றிருக்கக்கூடிய உலகத்தில் நாம் எண்ணும் பொழுது இவ்வாறு நமக்குள் வந்துவிடுகின்றது.
நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்…? சம்பாரித்து வைத்த என் நகைகளைக் காணோம் என் பணத்தைக் காணோம்.., 50 பவுனைக் காணோம் என்று அலறுகின்றார்கள்.
போனால் போகின்றது என்று அதை விடாதீர்கள்.
1.எடுத்துக் கொண்டு போனவனுக்கு நல்ல புத்தி வரவேண்டும்.
2.யாரிடமாவது அவன் சிக்க வேண்டும்.
3.சீக்கிரமே போலீசில் சிக்கிவிடுவான்.
4.சிக்கிக் கொண்டபின் நம் பணம் திரும்ப வரவேண்டும்.
5.தவறு செய்ததை அவன் சிந்திக்க வேண்டும்.
6.தான் செய்த தவறை உணர வேண்டும்
7.“இந்த மாதிரி எண்ணி… உங்கள் தியானத்தில் எடுத்துப் பாருங்கள்”. உங்கள் காசு வருகின்றதா இல்லையா என்று பாருங்கள்.
இந்த உணர்வு.., “வேகமாக” வேலை செய்யும்.
பெரும்பகுதியாவனவர்கள் பொருள் திருடு போனபின் எப்படி எண்ணுகின்றார்கள்..?
நகைகளை எல்லாம் எண்ணி “அய்யோ… போய்விட்டதே… எல்லாம் போய்விட்டதே… போய்விட்டதே..” என்று தான் எண்ணுகிறார்கள் இப்படி எண்ணினால் என்ன ஆகும்…?
ஏற்கனவே நகை போய்விட்டது…
1.அடுத்து அன்றைய தினம் நீங்கள் சம்பாரித்த பணத்தையும் எங்கேயாவது வைத்துவிட்டு
2.“அதையும் காணோமே..!” என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள்.
இந்தப் பதட்டம் இப்படி வந்துவிடும்.
அதே மாதிரி கையில் ஒரு பையை (BAG) எடுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பதட்டத்திலேயே அதையும் எங்கேயாவது வைத்துவிட்டு என்ன செய்வோம்…?
கையில் வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் கூட வராது. நாம் எந்தச் சிந்தனையில்லாமல் வந்து விடுவோம்.
“ஐய்யய்யோ… என் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேனே..,! இதுவும் எங்கே போனதோ…? என்ற இந்தப் பதட்டம் கையில் இருக்கின்ற பொருளையும் விட்டுவிடச் செய்துவிடும்.
இதுவெல்லாம் நமக்குள் எது செய்கின்றது? காரணம் என்ன…? என்றால் நாம் அல்ல… நாம் தவறு செய்யவில்லை.
1.என் பொருள் “திருடு போய்விட்டதே” என்று நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அந்த அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் இனி வரும் எதிர்காலத்தில் விஷத் தன்மையான உணர்வுகள் உலகம் முழுவதும் பரவப்படும் பொழுது அதிலிருந்து “உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்” என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.
உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் காற்றிலே படர்கின்றது.
“அதை நீங்களும் எடுத்து… அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி… என் பணம் கிடைத்துவிட்டது…” என்று சந்தோஷப்பட்டு நீங்கள் சொல்ல வேண்டும்.
1.நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போன்று
2.நீங்களும் “பிறருடைய தீமைகளைப் போக்குபவர்களாக” மாற வேண்டும்.
3.“நல்ல சிந்தனை உள்ளவர்களாக… மற்றவர்களையும் மாற்றியமைக்கும் சக்தி… நமக்கு உண்டு” என்ற நிலைக்கு வர வேண்டும்.
சோகத்திற்கும் சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் வெறுப்பிற்கும் வேதனைக்கும் “உங்கள் உணர்வை… உயிரிலே மோதவிடாதீர்கள்…”
மனிதனை உருவாக்கிய நல்ல சிந்தனைகள் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் இந்த விஷமான உணர்வுகள் உயிரில் மோத விடும்பொழுது “அதை மாற்றியமைத்தல் வேண்டும்…”
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். எத்தகைய தீமைகளையும் மாற்றியமைப்போம்.
நன்மைகள் பல செய்யத் துணிவோம்,
நுகரும் ஆற்றல் பெற வேண்டுமப்பா…!
காட்சி:
ஒருவர் காப்பியை ஆற்றிப் பருகுவதைப் போன்று தெரிகின்றது.
விளக்கம்:
நீரைக் கொதிக்க வைத்து… அதில் காப்பித் தூளைப் போட்டு பாலைத் தனியாகக் கொதிக்க வைத்து… காப்பியில் எடுத்த நீரையும் பாலையும் சேர்த்து அதற்குகந்த பக்குவத்தில் வேண்டிய அளவு சர்க்கரை சேர்த்து… “நம் உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூட்டிற்கு” அதை நாம் பருகுகின்றோம்.
பாலையும் நீரையும் காப்பித் தூளையும் சர்க்கரையையும் அதற்குகந்த உஷ்ணத்தைக் கொடுத்து காய்ச்சிச் சுவைப்படுத்திப் பிறகு அந்தச் சுவைக்குகந்த உஷ்ணத்தில்…
1.நம் உடல் ஏற்கக்கூடிய பக்குவத்திற்குக் காப்பியை ஆற்றிய பிறகுதான்
2.நாம் அதனைப் பருக முடிகின்றது.
அதைப் போன்று நம் உணர்வின் எண்ணமுடன் பல விதமான செயலுக்குகந்த எண்ண ஓட்டங்கள் கலக்கப் பெறும் பொழுது… உணர்வின் சமைப்பாய் உயிர் சமைக்கும் உஷ்ணத்தைக் கொண்டு… ஆத்மாவினைச் சுவைப்படுத்தி… ஆத்மாவின் சுவையை மீண்டும் செயலாக்க…
1.உணர்விலிருந்து வெளிப்படும் “நம் சொல்லின் ஒலி”
2.பக்குவப்படுத்தப்பட்ட பருகக்கூடிய தன்மைக்கு
3.ஆற்றிய காப்பியைப் போல் வெளிவரல் வேண்டும்.
பலவற்றையும் நாம் சமைக்கும் பொழுது… அதற்குகந்த உஷ்ணத்தைத் தந்து சமைத்த பிறகுதான் பிறிதொரு பக்குவத்திற்குச் செயல் கொள்ள முடியும்.
ஆரம்ப நிலை இயற்கையின் தொடர்பில்… வளர்ச்சியின் செயல் யாவையுமே விஷத் தன்மை கொண்ட வளர்ப்புத்தான்.
ஜீவ ஜெந்துக்கள் அதனுடைய சுவையின் உணர்விற்கொப்ப அதனதன் உடல் நிலைக்குகந்த உணவை மட்டும்தான் உட்கொள்ளும். மாற்று நிலை… சமைப்பு நிலை… ஏற்படுத்திக் கொள்ளாநிலை தான் ஜீவஜெந்துக்களின் நிலை.
இப்பூமியின் தொடர்பில் இப்பூமி எடுக்கும் அமிலத்தின் தொடர்பில் நாம் வாழ்ந்தாலும்…
1.நாம் உண்ணக்கூடிய உணவு… எது எது மனிதனுக்கு ஏற்றது…? என்பதை
2.நம் முன்னோர்கள் நமக்கு தொடர்புப் படுத்திய உணவு முறையைப் பக்குவப்படுத்தி நாம் உண்ணுகின்றோம்.
மிருகங்களைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற மனித நிலையில் இயற்கையில் வளர்ந்துள்ள பல நிலைத் தாவரங்களை வழிப்படுத்திய நிலைத் தொடரில்தான் நாம் சமைத்து உண்டு வாழ்கின்றோம்.
நம்மைக் காட்டிலும் அறிவில்… செயல் திறனில் ‘செயலற்ற மிருகங்கள்…” நம்மைக் காட்டிலும் மேம்பட்ட நிலையில் “தன் உணர்வின் சுவாசத்தால்” பல உண்மைகளை முன் கூட்டி அறியக்கூடிய நிலைக்குச் செயலாக்கும் பொழுது அறிவில் உயர்ந்த மனித ஞானம் ஏன் உயர்வில் செயலாக்க முடியாது…?
உருவத்தில் சிறிய எறும்பு… மழைக் காலத்தில் தன் ஆகாரத்தை உண்ணுவதற்காக மழை வருவதற்கு முதலிலேயே அறிந்து சேமித்துக் கொள்கின்றது.
நாம் பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ள பொருளைத் தனக்கு ஒத்த உணவு என்று முன் கூட்டி அறிந்து தன் இனத்தின் கூட்டில் தனக்குகந்த உணர்வின் சுவாசத்தால் எறும்பு எடுத்து விடுகின்றது.
ஆனால்… மனிதன்
1.மூடி வைத்துள்ள பாத்திரத்திலுள்ள பொருளை அதன் மூடியை எடுத்தால் தான்
2.உள்ளே என்ன இருக்கின்றது…? என்பதை அறிய முடிகின்றது.
நம்மைக் காட்டிலும் சிறு எறும்பு அதை அறியும் பொழுது மனித ஞானம் எங்குள்ளதப்பா இன்று…?
மழை வருவதற்கு முன்னும்… எதிரி தன்னைத் தாக்க வருவதற்கு முன்னும்.. பல மைல்களுக்கு அப்பாலுள்ள நீர் நிலைகளைத் தன் சுவாசத்திலேயே அறியும் நிலையும் மிருக ஜெந்துக்களினால் அறிய முடிகின்றது.
இதனை எல்லாம் நாம் அதனுடைய “இயற்கையின் செயல்” என்கின்றோம்.
ஒவ்வொரு உருவக நிலையும்… அது அது எடுத்த சூரிய ஒளியில் உதித்த உயிரணுக்களின்… மண்டல ஈர்ப்பின் சுவைக்கொப்ப உருவாகும் உருவகத் தொடர் தன்மையில்… பூமியின் சமைப்பின் தொடர் உருவக உரு பெற்றிருந்தாலும்…
1.உருப்பெற்ற தன்மையின் உடல் அமைப்பின் செயல் நிலையை
2.மிருக ஜெந்துக்களினால் மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.
மனித நிலையில் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு இயற்கையின் உண்மையை உணர்ந்து எண்ணத்தின் மெய் ஞானத்தால் எதனையும் மாற்றி அமைக்கக் கூடிய செயல் தன்மைக்கு மனிதனால் தான் முடியும்.
மெய் ஞானத்தின் உண்மையை இயற்கையின் தொடர்பு கொண்டு வானக்கோள்களின் நட்சத்திர ஒளியை இச்சரீர உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் அமிலத்தின் ஒலியை உணர்வின் எண்ணத்தைக் கொண்டு சமைக்கப்படும் நிலையே ஆத்மாவின் பதிவு ஆகிறது.
இதே தொடரில் இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரக்கோள்கள் நவக்கோள்கள் ஒவ்வொன்றையும் எண்ணி நாம் தியானிக்கும் பொழுது எண்ணத்தின் உணர்வில் அக்கோளின் அமிலத்தின் அலையை இச்சரீரம் சமைத்து ஆத்மாவில் பதிவாக்கிக் கொள்கின்றது.
இப்பூமியின் பிடிப்பிலிருந்து மனித நிலை உயர வேண்டும் என்றால்…
1.இப்பூமிக்கு வளர்ச்சி கொடுக்கும் செயலாய் சுழலும் பிற கோள்கள் நட்சத்திரங்களின் தொடர்பில்
2.நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி நாம் எடுக்கும்
3.அந்த அமிலத்தின் அலையைக் கொண்டுதான்
4.மனித நிலைக்கு அடுத்த நிலையான “ஆத்ம ஜோதி” என்ற ஒளியான வளர்ச்சி நிலை வலுக்கொள்ளும்.
இப்பூமியின் தொடர்பில் இருந்து… விஞ்ஞானி பல ஒலி ஆண்டுகளையும்… ஒளி ஆண்டுகளையும் கணக்கெடுத்து வான்கோளிலுள்ள உண்மைகளை எல்லாம் அறிந்தாலும்… அப்படி அறியக்கூடிய விஞ்ஞானியின் வாழ்க்கைக் காலம் “சரீரம் உள்ள வரைதான்…!”
1.ஆனால் மெய் ஞானத்தில் அறியக்கூடிய காலம் என்பது
2.வழி வழியாய் வளரக்கூடிய காலமப்பா…!
நாம் மேலே செல்வதற்குப் பதில்… கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
நாம் செய்யும் தியானம் இந்த உடலுக்காக அல்ல… உடலைப் பார்ப்பதற்காக அல்ல.
1.நிலையாக இருக்கும் இந்த உயிர் இருக்கின்றதே…
2.அதைத்தான் நாம் தியானிக்க வேண்டும்.
தியானம் இருந்தேன் நல்லதானது… காப்பாற்றினார் (ஞானகுரு) கடவுளாக இருக்கின்றார் என்று இத்தகைய உணர்வுக்கு நாம் சென்றால் மீண்டும் புவியின் ஈர்ப்புக்குத் தான் வருவோம்.
ஆகவே நாம் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும் என்ற ஏகாந்த உணர்வுகளைக் கொண்டு வந்தோம் என்றால் அது அருள் வழியாக இருக்கும்.
ஆனால் அதை விடுத்து விட்டு
1.இந்த வாழ்க்கைக்காக நாம் எண்ணினால் என்ன ஆகும்…?
2.தான் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வருத்தம் வரும்… அப்போது வேதனை வருகிறது.
3.அப்பொழுது எந்தப் பற்று…? வேதனை என்ற பற்று தான் வருகின்றது அது தான் அதிகமாகின்றது
இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் ஞானத்தை வளர்ப்பதற்கு உண்டான அந்த முயற்சியை நாம் எடுக்க வேண்டும்.
எப்பொழுதுமே எதிலுமே இந்த உடல் பற்று என்று இல்லாதபடி உயிர் எப்படி உணர்வை ஒளியாக மாற்றுகின்றதோ அதைப் போன்று எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்ற இந்தப் பற்றை நாம் வளர்த்துக் கொண்டால் அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வந்த இருள் என்ற நிலையை பற்றற்றதாக மாற்ற முடியும்.
இது தான் தியானம்.
நான் தியானமிருந்தேன் கல்யாணம் நடந்தது… நான் தியானமிருந்தேன் உடல் நலமானது… நான் தியானமிருந்தேன் தொழில் நன்றாக நடந்தது… என்று வெறுமனே சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இதற்காக நம்முடைய ஆசையைக் கூட்டக் கூடாது…!
நாம் பார்ப்பவர் நலமாக வேண்டும் என்ற ஆசைப்படலாம். அப்போது அந்த அருள் உணர்வு பெற வேண்டும் என்ற இச்சை நமக்குள் விளைகின்றது.
இச்சா சக்தி கிரியா சக்தி…!
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்த இச்சையைக் கூட்டும் பொழுது
2.நம் உயிரிலே அந்த உணர்வு பட்டு கிரியை ஆகி அந்த ஞானத்தின் வழி நம்மை அந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
உடல் இச்சைக்காக நாம் ஆசைப்பட்டு அதை நமக்குள் கிரியை ஆக்கினால் அது இந்த வாழ்க்கையினுடைய நிலைகளுக்குத் தான் வரும்
1,சிறிது தடைப்பட்டால் என்ன செய்யும்…?
2.ஞானம் இழக்கப்பட வேண்டியிருக்கும்.
இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்… அருளைப் பெருக்க வழியைத் தேட வேண்டும். இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே…? என்ற நிலையில் சப்தரிஷி மண்டல எல்லையை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
அது தான் ஏகாதசி…!
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடிய பற்றை எல்லாம் நீக்கிவிட்டு
2.எல்லோரும் பேரின்பம் பெற வேண்டும் என்று எண்ணுவது தான் ஏகாதசி விரதம்.
அன்றைய நாள் முழுவதும்… ஒவ்வொரு மாதத்திலும்… அவ்வப்பொழுது வரக்கூடிய குறைகளை நீக்குவதற்கும் பிறருடைய பகைமைகளைக் குறைப்பதற்கும்… “அவர்களுக்கெல்லாம் அருள் பெற வேண்டும்… என்று அந்த ஏகாந்த உணர்வை வளர்த்துக் கொள்ளும் பொழுது “ஏகாதசி…”
யாருடைய பகைமையையும் நாம் நமக்குள் வளர்ப்பதில்லை. அந்தப் பகைமை இல்லாது செல்லப்படும் பொழுது “பத்தாவது நிலையான பிறவி இல்லா நிலையை அடைய முடியும்…”
12 மாதங்களிலும் 12 ராசிகளிலும் மாறி வரப்படும் பொழுது
1.ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மனிதனுடைய உணர்வுகள் ராசிகள் அங்கே மாறப்படும் பொழுது
2.அந்த ராசியை எப்படி மாற்ற வேண்டும் என்று தான் தத்துவ ஞானிகள் கூறியுள்ளார்கள்.
வைகுண்ட ஏகாதசி…! எல்லோரும் ஏகமாகச் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கி… ஒருவருக்கொருவர் பகைமை ஆகாதபடி… வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் இவையெல்லாம் உடலுக்குள் வளராதபடி தடுத்து அனாதையாக்குதல் வேண்டும்.
அனாதையாக்கினால் காலையில் 6:00 மணிக்கு சூரியன் அதைக் கவர்ந்து சென்று விடுகிறது. அதைச் சூரியன் கவர்ந்து செல்லப்படும் பொழுது இந்த உடலை விட்டுச் செல்லும் நாம் துருவ நட்சத்திரத்திந் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்தில் இணைகின்றோம்.
ஒளி என்ற உடலும்… ஒளியான அறிவும்… இருளை நீக்கும் ஞானமும்… மெய்ப்பொருள் காணும் சக்தியும் கிடைக்கும்.
ஆகவே…
1.நாம் மேலே செல்வதற்குப் பதில் கீழே இந்த உடலுக்குள் இழுத்து விடக்கூடாது
2.இந்த உடலில் வாழ்வதற்காக யாம் (ஞானகுரு) கூட்டத்தைக் கூட்டவில்லை
3.இதிலிருந்து பிரிந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.
அதுதான் நமக்கு முக்கியம்…!
சிறிது நாட்கள் தான் நாம் வாழ்கின்றோம். அப்படி இந்த உடலில் வாழும் நாள்களுக்குள் நம் மனம் ஐக்கியமாக வேண்டும்… எல்லாவற்றையும் ஒன்று சேர்க்க வேண்டும்
1.ஒளியாக மாறுதல் வேண்டும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைதல் வேண்டும்.
ஒவ்வொரு நொடியிலும் நாம் சுவாசிக்கும் உணர்வு உமிழ் நீராக (திரவகமாக) ஆகாரத்துடன் கலக்கிறது
1.உணர்வுகள் நுகரப்படும் பொழுது உமிழ் நீர்கள் எப்படிச் சுரக்கிறது என்று
2.காட்டிற்குள் அழைத்துச் சென்று என்னை வைத்தே தங்கத்தைச் செய்யும்படி
3.உமிழ் நீர்களை வைத்து அதை உருவாக்கும்படி செய்து காட்டினார் குருநாதர்.
வேறு ஒன்றும் வேண்டியது இல்லை.
மாங்காயைச் சாப்பிட்டு இருக்கின்றீர்களா…? வெயில் காலங்களில்…! எப்படி இருக்கின்றது…?
இப்பொழுது உமிழ் நீர் (எச்சில்) உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…? லேசாக அந்தப் புளிப்பு கலந்து உமிழ் நீர் ஊறுகிறதல்லவா…!.
“மாங்காய்…” என்ற சொல்லை நான் சொன்னவுடன்
1.அந்த உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுது உமிழ் நீராக எப்படி மாறுகின்றதோ
2.இதே மாதிரித் தான் நம்முடைய எண்ணங்கள் நாம் நுகரக்கூடியது அனைத்தும் உமிழ் நீராக மாறும்.
3.(இது நமக்குள் ஒவ்வொரு நொடியிலும் நடந்து கொண்டிருப்பது).
உணவை உட்கொண்ட பின் சங்கடம் சலிப்பு வெறுப்பு இது போன்று எண்ணிப் பாருங்கள். சரியான ஜீரண சக்தியாக வராது அஜீரணமாகி… விஷத்தன்மைகளாக மாறும்.
ஆகையினால் தான் பேசும் பொழுது “உயர்ந்த ஞானத்துடன் பேச வேண்டும்” என்று சொல்வது. அவ்வாறு செய்து வந்தீர்கள் என்றால் நல்ல சக்தியாக உங்களுக்குள் சேரும்.
அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான் அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று வேதனையும் சோர்வையும் கலந்து
1.அந்த உணர்வோடு உணவு உட்கொண்டீர்கள் என்றால்
2.உடலுக்குள் எதிரியான அணுக்கள் உற்பத்தியாகி நோயாக உருவாக்கும்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
நாம் சாப்பிடும் ஆகாரத்துடன் சுவாசிக்கும் உணர்வின் உமிழ் நீர்கள் சேர்கின்றது. இந்த உமிழ் நீர் எதுவோ அதற்குத் தகுந்த சாப்பிட்ட ஆகாரத்தை மாற்றுகின்றது.
இது ஒரு திரவகத்தைப் போன்று தான்..
கடினமான நிலைகள்… வேதனை சலிப்பு அந்த உணர்வோடு இருந்து பாருங்கள். நீங்கள் சாப்பிட்ட ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்காது
1.நாம் நுகரும் உணர்வுகள் நமக்குள் எப்படி அது உமிழ் நீராக… அந்த உணர்வின் சத்தாக…
2.அதற்குண்டான கருவின் தன்மையாக… அணுக்களாக உடலுக்குள் எப்படி உருப்பெறுகின்றது…?
3.அதனுடைய இயக்கங்கள் எப்படி எல்லாம் நம்மை மாற்றுகிறது…? என்பதை
4.நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றேன்.
“நமக்கு மேல் ஒருவன்” நம்மை உயர்த்தச் செயல்படுகின்றான் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்
நட்சத்திரமாய் உயர்ந்த வளர் சக்தி கொண்ட கோள்களாய்… பல கோடி உயர்ந்த உருளக் கூடிய மண்டலக் கோள்கள் இருந்தாலும்… உணர்வின் உண்மை அறியும் “ஞான மனித நிலை” எல்லாக் கோள்களிலும் இல்லை.
உணர்வின் எண்ணத்தில்… அறியும் ஆற்றல் செயல் தன்மை செயலாகும்…
1.இயற்கையின் ஒளி சூட்சுமத்தை வளர்க்கும் வலிமை கொண்ட தொடர்நிலை வளர்ந்தால்தான்
2.இயற்கையின் சுழற்சி ஓட்டத்திலிருந்து சமைக்கும் குண தத்துவத்தைச் செயலாக்க முடியும்.
ஆகவே பல கோடி நிலைகள் செயல்படும் அண்டக் கோள்களில் அறிவின் ஆற்றலும் அறியும் திறனும் மனிதனுக்குத்தான் உண்டு.
தனக்கொத்ததை மனிதனின் எண்ணம் ஏற்படுத்திக் கொள்ளும் ஏற்றத்தில்…
1.மனித உணர்வின் செயல் வீரியம்… “தான்…!” என்ற முதிர்வு நிலை ஏற்படுத்திக் கொண்டால்
2.தன் அடுத்த வளர்ச்சி நிலை இயற்கையின் தொடர்பு ஒலியை எடுக்க முடியாத் தேக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.
இந்த உண்மைகளை எல்லாம் அறிந்த சித்தன் “தனக்கு மேல் ஒருவன் உண்டு…” என்ற தெய்வத்தின் குணங்களை மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டக் கோவில்களையும் சிலைகளையும் தத்துவ ஞானத்தில் ஸ்தாபித்தான்.
மனிதனின் உணர்வின் வேகம் “தான் உயர்ந்து விட்டேன்…!” என்ற எண்ணத்தைக் கூட்டிக் கொள்ளும் பொழுது தன்னை ஒத்த ஜீவாத்மாக்களை உயர்த்தக் கூடிய உணர்வுகள் மங்கிவிடுகின்றன.
1.தனக்கு மேல் ஒருவன்…
2.“தன்னை உயர்த்தச் செயல்படுகின்றான்…” என்ற எண்ணத்தின் வேகம் செலுத்தும் பக்தியினால் தான்
3.மனிதர்களின் உணர்வில் “தான்…” என்ற எண்ணத்தை அகற்ற முடியும்.
இதை உணர்த்திய பக்குவம் நம் ஞான பூமியில் பல உண்டு.
மனிதன் தெய்வத்தின்பால் செலுத்தப்பட்ட எண்ணத்தின் வேகம் கோயில்களில் தீ மிதித்து விரதங்கள் அனுஷ்டித்து பல செயல்கள் பக்தியில் செயல்படுவதை எல்லாம் பார்க்கின்றோம்.
பக்தியின் உந்தலின் வேகம் அவ் உணர்வின் வீரியத்திற்கொப்ப “அவன் எடுக்கும் சுவாசத்தின் வேகத்தால்” இன்றும் தீக்குண்டங்கள் நடப்பதைக் காண்கின்றோம்.
மனிதனின் உணர்வின் எண்ண வேகம் “எதனையும் ஈர்க்கவல்ல செயல் குணத் தன்மை கொண்டது…” இதனை…
1.”தான் என்ற” அறிந்து விட்டோம்… என்ற எண்ணத்தை விட்டு விட்டு
2.அறிய வேண்டிய எண்ணம் கொண்டு செலுத்துவதே உத்தமம்.
மனித உணர்வில் சலிப்பு சோர்வு வெறுப்பு கோபம் என்ற நிலைகளைக் கூட்டிக் கொள்ளாமல்… நற்குணத்தின் நறுமணமாய் இச்சரீர உணர்வின் ஒலி சுவாசமெடுத்து…. சம குணத்தின் ஒலியால் இயற்கையின் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் ஒளியால்… நட்சத்திர மண்டலங்களின் ஒலி அலைகளையும் ஜீவ உணர்வுடன் இழுக்கும் பொழுது… இஜ்ஜீவ உணர்வின் எண்ணத்தில் மோதும் பொழுது… ஒளியாக… மின்காந்த ஒளியாக ஆத்மா ஒளிர்கின்றது.
ஆத்மாவின் ஒளிகள் மண்டலக் கோள்களின் எண்ண உணர்வுடன் ஈர்க்கும் பொழுது எப்படி இன்று நீரைக் கொண்டு இக்காற்றலையில் இருக்கும் மின் காந்த ஒளி சக்தியை மின்சாரமாக விஞ்ஞானத்தில் காண்பதைப் போன்று…
1.இச்சரீர எண்ணத்தின் உணர்வின் வேகத்தால்
2.நட்சத்திரங்களில் இருந்து வருவதையும் சூரியன் சந்திரன் மற்றக் கோள்களிலிருந்து வரும் சக்திகளையும்
3.நாம் எண்ணி எடுக்கும் ஒலி அலையில் அவ்வொலியின் உணர்வுடன் எண்ணத்தை எக்கோளுடன் செலுத்துகின்றோமோ
4.அந்த மண்டலங்களிலிருந்து வெளிப்பட்ட அமிலம் இச்சரீர உணர்வின் எண்ணமுடன் மோதும் பொழுது
5.உடலில் உள்ள உயிர் அணுக்கள் யாவும் ஒளி நிலையைப் பெறும் தன்மையை இச்சரீர ஆத்மா வளர்த்துக் கொள்ளும்.
இப்பூமியின் உணர்வுடன் சுழலும் வாழ்க்கை நிலையில்… மீண்டும் மீண்டும் இப்பூமி சமைத்து வெளிப்படுத்திய உணர்வின் ஒளியைத் தான் ஆத்மா வளர்த்துக் கொள்கிறது.
அத்தகைய தொடரில் நம் ஆத்மா இப்பூமிப் பிடிப்பில் சிக்கிவிடும் தன்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு
1.உயிரின் உயர்வை உய்யும் செயலாய்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் காலத்தை விரயப்படுத்தாமல்
3.உயரும் தன்மையில் நாம் அனைவரும் உய்வோமாக..!
முந்தைய தீயவினைகளையும் இப்போது வரும் தீயவினைகளையும் தடுக்க வேண்டும்… “இல்லையென்றால் தியானம் அர்த்தமற்றது தான்”
உங்கள் வாழ்க்கையில் தியானம் செய்வதற்கு முன்னாடி இருந்த அனுபவமும்… தியானத்திற்கு வந்த பிற்பாடு சில அனுபவங்களும் உங்களுக்குத் தெரியும்.
இதை நீங்கள் கூர்ந்து பார்த்து இதனுடைய இயக்கம்
1.நாம் இயங்குகின்றோமா…
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்கியதா…?
3.அந்த இயக்கிய உணர்வுக்குத் தக்க நாம் செல்கின்றோமா…? என்பதை யோசனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் உணவாக உட்கொண்ட அந்த உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை நம் உடல் மலமாக மாற்றுகின்றது. ஆகவே தீமை என்ற உணர்வுகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு.
அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? அதை மாற்றுவதற்கு உண்டான சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இந்த உபதேசம்.
எனக்கு (ஞானகுரு) எப்படித் தீமைகளிலிருந்து தப்புவதற்கு குருநாதர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்தாரோ அதைத் தான் உங்களுக்குள்ளும் நான் பெறச் செய்து கொண்டிருக்கின்றேன்.
அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால்
1.முந்தைய தீயவினைகள் இருந்தாலும் குறையும்
2.புதிதாகத் தீயவினைகள் நமக்குள் உருவாகாதபடி தடுக்கவும் முடியும்.
3.இரண்டும் இல்லை என்றால் நான் தியானம் செய்தேன்… அதைச் செய்தேன்… என்று சொன்னால் “அது அர்த்தமற்றது…”
ஆகவே இதைப் பின்பற்றி ஒவ்வொன்றுக்கும் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டும்.
ஒரு வித்தினை ஊன்றி செடி உருவாகி விட்டால் அது வளர்வதற்குண்டான நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் தான் வளர்க்க முடியும்… அதிலே மீண்டும் வித்துக்களும் உருவாகும்.
ஆனால் செடியை வைத்து விட்டேன்… தண்ணீரையும் ஊற்றி விட்டேன்.. அது வளர்ந்து விடும் என்று சொன்னால் எப்படி விளையும்…?
இது போன்று அனுபவத்திலே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வரக்கூடிய அழுக்குகளை நீக்கிடும் ஒரு பழக்கம் வர வேண்டும்,
1.எத்தனையோ கோடி உடல்கள் பெற்று
2.அதிலிருந்து மீளும் சக்திகளை நாம் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது தான்
3.உயிர் இந்த மனித ரூபத்தைக் கொடுத்தது.
அகஸ்தியன் பல விஷத்தன்மைகளை அடக்கி அதை எல்லாம் மாற்றி அமைத்ததனால் ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்றால்… அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போன்று நாமும் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றி முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதிய வினைகள் நமக்குள் சேராதபடி தடுத்து நம் உணர்வுகளை வலுவாக்க முடியும்.
வலு பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.
எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பதிவாக்கிக் கொண்டு அதன் வழி நடந்த பின்
1.வாழ்க்கையில் உங்களை எது இயக்கியது…?
2.குடும்பங்களில் வெறுப்பு எப்படி வந்தது…?
3.பகைமைகள் எப்படி வந்தது…?
4.தொழில் எப்படி நஷ்டமானது…?
5.அதை எல்லாம் தியானத்தின் மூலம் எப்படி மாற்றினோம்…? என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
உங்களிடம் இப்போது கேட்கிறோம்…! அடுத்து அதற்குண்டான விடைகளையும் யாம் (ஞானகுரு) கொடுக்க முடியும்.
எம்மிடம் பழகிக் கொண்ட பிற்பாடு… தியானத்தில் இருந்தீர்கள். தியானத்தின் மூலம் தீமை நீக்கிடும் அனுபவங்களைப் பெற்று அதை வலுப்படுத்தித் தான் ஆக வேண்டும்.
அதை மற்றவரிடமும் சொல்லித் தான் ஆக வேண்டும். நீங்கள் அதை வெளிப்படுத்தினால்
1.அடுத்து மற்றவரும் தங்களுடைய அனுபவங்களைச் சொல்ல
2.எல்லோரும் அந்த ஞானிகள் காட்டி வழியினைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்குத் தான் இதைச் சொல்வது.
ஆரம்பத்திலே எத்தனையோ உணர்வுகளை வெளிப்படுத்திக் காட்டினோம். உடலுக்குள் ஆன்மாக்கள் எப்படி இயங்குகின்றது…? அது உடலுக்குள் நுகரப்பட்டால் என்ன செய்யும்…? எல்லாவற்றையும் காட்சியாகக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தோம்.
ஆனால் காட்சியைக் கொடுக்கப்படும் போது அவரவர் ஆசை எதுவோ அதற்குத்தக்க
1.அந்த ஆசை உணர்வு கொண்டு இறந்த பிற ஆவிகள் அவர்கள் உடலில் புகுந்து…
2.போகும் மார்க்கங்களை இடைமறித்து… மீண்டும் தீய வினைகளுக்கே அழைத்துச் சென்று விட்டது.
ஆரம்ப நிலையில் எம்மிடம் பழகியவர்கள் எல்லாம் பெரும்பகுதி அந்த நிலைக்குத் தான் சென்று விட்டார்கள்.
ஒவ்வொருவரும் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பல நிலைகளைக் காண்பித்தேன். அதைத் தப்பான வழியில் கொண்டு சென்று விட்டார்கள்.
ஆகவே… அந்த இயற்கையின் உண்மைகளை நாம் நுகர்ந்து கொண்ட பின் நம் உணர்வுகள் என்ன செய்கின்றது…?
நம் உடலில் அது வளர்ந்த பின் நண்பர்கள் நம்மைப் பார்க்கும் போது எப்படி மதிக்கின்றனர்…? ஒரு பொருளைப் பார்த்த பின் நமக்கு வெறுப்போ அல்லது அதன் மீது பாசமோ எப்படி வருகிறது…? என்பதை நாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் நம் உடலுக்குள் இருக்கும் உணர்வுக்கொப்பத் தான் அது வரும்.
1.எம்மிடம் அதை வெளிப்படுத்தினால் அதற்குண்டான விளக்கமும் உங்களுக்குக் கிடைக்கும்.
2.அருள் வழியில் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு இது உதவும்.
தனக்குத் தானே விதியை விதித்துக் கொண்டு… அதைத் தான் “தெய்வத்தின் விதி” என்று எண்ணி வாழ்கிறார்கள்
ஆத்திச்சூடியில் ஔவையாரின் அரிச்சுவடியில் “இளமையில் கல்” என்பதன் பொருள் யாது…?
வளரக்கூடிய எண்ண உணர்வில் எதனை அறிவின் வளர்ச்சிக்குப் போதனையாக எதை வளர்க்கின்றோமோ அவ்வினையின் செயலே விதியாகும்.
நற்கதியைப் போதிக்கும் சுருக்கத்தை முன்னோர்கள் ஆறில் வளையாதது அறுபதில் வளையுமா…? என்று பல உண்மைதனை நமக்குப் போதித்தனர்.
காலையிலிருந்து இரவு வரை உணர்வின் எண்ணத்தின் வேகத்தை மனிதனின் செயல் அவரவர்களின் நிலைக்கொப்ப தொழிலாளர்களும் வியாபாரிகளும் மருத்துவம் விஞ்ஞானம் பலதரப்பட்ட செயல் முறை ஒவ்வொன்றிலுமே ஒன்றில் பழக்கப்பட்ட உணர்வின் எண்ண ஓட்ட செயல் முறையின் செயல் வளர்ச்சியே வலுவாக்கும் தன்மையாக உள்ளது.
அந்தந்த தொழிலின் வினைகளின் செயல் விதி என்ற தொடரில்தான் வாழ்க்கை அமைப்பின் ஆத்மாவாகி அவ்வாத்மாவின் மணமே செயலாகும் கதியில் மனித நிலை செயல் கொள்கின்றது.
இச்செயலின் நிலை யாவையுமே மனிதன் இன்று வரை
1.தன் விதியின் செயலைத் தெய்வத்தின் செயலாக
2.தனக்குத் தெய்வம் விதித்த விதி…! என்று தான் வாழுகின்றானே அன்றி
3.தான் எடுக்கும் எண்ணத்தின் வினைதான் விதியாக அமைகிறது என்றும்
4.எடுத்துக் கொண்டதற்கொப்ப அந்த விதியின் கதியே
5.நற்கதியாகவும் துர்கதியாகவும் வாழும் நிலை அமைகிறது என்பதனை உணரல் வேண்டும்.
இளமைக்கால அறிவின் வளர்ச்சியில் எண்ணத்தின் வினையை எவ்வினையின் செயலுக்குப் பக்குவப்படுத்தி… நம் குழந்தைகளை எப்படி வளர்க்கின்றோமோ அந்த விதியின் கதியின் தொடரில் தான் உணர்வெடுக்கும் எண்ணப்படி செயலாக்கும் முறையையும் வலுவாக்குகின்றோம்.
ஒவ்வொரு சிசுவின் ஆரம்பக்கால ஆத்மத் தொடர் முந்தைய ஜென்மத்தில் அவ்வுயிராத்மா எத்தொடரின் வலுக்கொண்ட ஆத்ம உயிரில் இருந்திருந்தாலும்
1.தாய் கர்ப்பத்தில் ஜீவிதம் கொள்ளும் காலத்தில்
2.உடல் கூறின் அமைப்பு பெறும் வளர்ச்சி நிலையில்
3.தாய் உணர்வின் எண்ண கதியின் ஜீவ ஓட்டத் தொடரில் ஜீவகாந்த சரீர ஒலி எடுக்கும் பொழுது
4.முந்தைய ஜென்ம நிலை யாவும் மறக்கும் நிலை ஆகின்றது.
தாய் எடுக்கும் உணர்வின் ஒலித்தொடர்பின் பிறப்பால்… பிறப்பின் செயலுக்கு எண்ணத்தின் உணர்வின் ஒலியின் அறிவை வளர்க்கும் பக்குவத்தால்… இஜ்ஜென்மத்தின் கதி மாறுகின்றது.
1.தெய்வத்தின் தொடர்பால் தொடர் பட்ட விதியல்ல மனிதனின் நிலை
2.தன் உணர்வின் எண்ணத்தால் ஏற்படுத்திக் கொண்ட செயலின் கதியின் ஓட்டம் தான்
3.இது நாள் வரை நாம் வாழும் வாழ்க்கை நிலை.
இவ்விதியை மதி கொண்ட நற்கதியில் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலக்கும் நிலையாக நம் உணர்வின் எண்ண ஜீவகாந்த ஒளி கொண்டு உணர்ந்து பெறும் தொடர்பால் பல உண்மைகளை அறியலாம்… உணரலாம்.
அத்தகைய ஒளி கொண்ட உயர் சக்திகளின் செயலுடன் நம் செயலின் எண்ண ஓட்டம் அமைந்தால் விதியின் கதியே நற்கதியாய் நல் ஒளி பெறும் தன்மையாக அமையும்.
இதைப் பெறவல்ல நிலை எண்ணத்தின் உணர்வு கொண்ட மனிதச் செயலுக்குத்தான் உண்டு.
அதே போல் மண்டலக் கோள்களையும் தாவரங்களையும் ஜீவராசிகளையும் எதனையுமே…
1.தன் உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒலி அலையின் முலாமின் தொடர்
2.இவ்வாத்மாவில் பதிவாக்கிக் கொள்ளும் செயல் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு.
ஆனால் மனிதச் செயலின் வீரிய உண்மை விஞ்ஞானத்திற்கு இன்று அடிமை ஆகிவிட்டது.
1.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மையோ…
2.அதைச் செயலாக்கும் மாமகரிஷிகளின் வளர்ச்சியால்
3.நாம் ஒவ்வொருவரும் செழுமை அடையலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று குற்றவாளிகள் பெருகும் நிலைக்குக் காரணம் என்ன…?
1.மக்கள் ஆசையின் நிமித்தம் பேராசையாக வளர்த்துக் கொள்கின்றனர்.
2.ஆனால் அது “நிராசையாக மாறும் பொழுதுதான்… குற்றவாளியாகின்றார்கள்…” குற்றங்களை அதிகமாகச் செய்கின்றனர்.
3.அவர்கள் செய்த குற்றங்கள் “மற்றவர்களின் சாபங்களால்…” ஒவ்வொரு குடும்பங்களிலும் வேதனைகள் படுகின்றனர்
4.பல வகைகளிலும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதைப் போன்று இன்று அரசாங்க நிர்வாக நிலைகளில் நீதியைச் சொல்லக்கூடியவர்களும் நீதிகள் தவறப்பட்டு மக்களுக்கு நீதியை நிலைநாட்ட முடியாமல் எதிர்பார்த்த அளவு இல்லை.
நீதிக்குப் புறம்பான நிலைகளில் தீர்ப்புகள் கூறப்படும் பொழுது… அந்த நீதிக்குரியவன் நீதிபதிகளையும் அதற்குக் காரணமானவர்களையும் மனம் நொந்த நிலையில் சாபமிடுகின்றான்.
அப்படிச் சாபமிட்ட உணர்வுகள் யார் நீதி சொன்னார்களோ அவர்கள் உடலில் பதிவாகின்றது.
ஆனால் நீதிபதியாக இருப்பவரோ செல்வத்தைச் சம்பாரிக்கின்றார். அதே சமயத்தில் அவருடைய குடும்பங்களில் இந்தச் சாபமிட்ட உணர்வுகள் “குழந்தைகளும்.., அவர் வாரிசுகள் அனைத்தும்… துன்பத்தை அனுபவிக்கின்றனர்…”
1.நாம் இன்று தவறு செய்தோம் என்றால்
2.குழந்தைகளுக்கு நிச்சயம் அதனின் பாதிப்பு உண்டு.
3.அடுத்து அந்தக் குழந்தைகள் வாடும் பொழுது… “அவர்களுடன் சேர்ந்து நாமும் நிச்சயம் அனுபவிக்க நேரும்…”
ஆகவே இதைப் போன்ற இயக்கங்கள் “உலகில் இப்படி நடக்கின்றது…” என்பதனைத் தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
நாடு நலம் பெற வேண்டும் என்றால்
1.நாம் எல்லோருமே ஞானிகளாக வேண்டும்.
2.நல்ல உணர்வுகளைச் செயல்படுத்திப் பழகுதல் வேண்டும்.
3.நாட்டில் எல்லோரையும் நல்லவர்களாக மாற்றிப் பழகுதல் வேண்டும்.
4.அரசாங்கமோ மற்றவைகளோ அதில் நல்ல நிர்வாகத்தை உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.
யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் தான் தவறாக்கிவிடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
இன்றைய விஞ்ஞான அறிவு எங்கேயோ போய்விட்டது. கடுமையான நோயாகி விட்டால் மனிதனின் உறுப்புகளைச் செயற்கையாகவே செய்து மாற்றுவதும் இதைப் போல எத்தனையோ நிலைகளைச் செயல்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது.
ஏனென்றால் நமக்குள் வேதனைகள் அதிகமாகிவிட்டால் நோயாகி விடுகின்றது. அறுவை சிகிச்சை செய்து இருதயத்தை மாற்றினாலும் அவர்களும் சிறிது காலமே வாழ்கின்றனர்.
இருதயத்தை மாற்றியவர்கள் என்ன எண்ணுகின்றார்கள்…?
என் இருதயத்தை மாற்றியிருக்கின்றார்கள் மாற்றியிருக்கின்றார்கள் என்று எண்ணிக் கொண்டு
1.“நாளைக்கு வாழ முடியுமா…?” அதிக நாள் வாழ முடியுமா…? என்ற இந்த வேதனை உணர்வுகள் தான் வருகின்றது.
2.இது குறைவதில்லை
3.சாம்பாரித்த பணத்தை அதற்காக வேண்டி எவ்வளவோ செலவழித்தும் மீண்டும் வேதனையைத்தான் வளர்க்க முடிகின்றது.
4.இதைப் போன்று மக்களின் நிலைகளில் நாம்… “இந்த உடலுக்குப் பின் என்ன ஆகின்றோம்…?” என்று யாருமே “சற்றும்” சிந்திப்பது இல்லை.
இதற்குத்தான் இராமாயணம் மகாபாரதம் கந்த புராணம் விஷ்ணு புராணம் சிவ புராணம் விநாயகர் புராணம் உலகில் எந்த நாட்டில் இல்லை என்றாலும் நம் நாட்டில் இது தெளிவாக உண்டு.
அந்தக் காவியங்களில் மனிதன் அடைய வேண்டிய எல்லையைத் தெளிவாக்கியுள்ளார்கள்.
நம் நாட்டில் தோன்றிய ஞானிகள் சாஸ்திரங்களாக கொடுத்ததை நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் காட்டிய அருள் வழி வாழ்ந்தால் அந்த ஞானிகள் இருப்பிடத்தை நாமும் அடையலாம்.
1.அழியக் கூடிய உடலுக்காக வாழாதீர்கள்
2.அழியாத நிலைகள் கொண்ட… “நம்மை உருவாக்கிய உயிருக்காக வாழுங்கள்…”
3.உயிருடன் ஒன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து என்றுமே அழியாத நிலைகள் பெறலாம்.
ஞானிகள் காட்டிய வழியில் நாம் உருவாக்க வேண்டியது
கண்ணன் துகிலை உறிந்தான்… யார்…? கிருஷ்ணன்…! குளிக்கும் பெண்களின் சேலைகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்று காவியங்கள் சொல்கின்றது.
அதனின் உட்பொருள் என்ன…?
1.நம் கண்கள் ஒன்றை உற்றுப் பார்க்கின்றது… அந்த உணர்வைப் பதிவாக்குகின்றது
2.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ அந்த எண்ணத்தின் அலைகள் வரப்படும் பொழுது
3.தனக்குள் அந்த உணர்வுடன் மோதும் பொழுது (அங்கே என்ன நடக்கிறது என்பதை) அவர் திருட்டுத்தனம் செய்கின்றார்…? என்று
4.அதற்குள் அவர் உணர்வின் தன்மையை இழுக்கின்றது… அதாவது துகிலை உறிகின்றான்.
5.இந்த உணர்வின் தன்மை கொண்டு உள்ளே மறைத்த நிலைகள் செயல்படுவதை
6.உள் நின்று அந்த உணர்வை இழுத்துத் தனக்குள் அறிகின்றது – நம் கண்கள்.
இதைக் காட்டுவதற்குத் தான் உருவமாகக் காட்டி “கண்ணன் துகிலை உறிந்தான்…” என்று கருத்தினைப் பதிவு செய்கின்றார்கள்.
கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்றும் சொல்வார்கள். அதாவது ஒவ்வொரு உணர்வின் தன்மையையும் (அதற்குள் இருக்கும் வலிமையை) “தீமையை நீக்கும்” உள் இருக்கும் உணர்வை அறிகின்றது.
உதாரணமாக ஜாதகம் ஜோதிடம் பார்ப்பவரிடம் சென்று நல்லது கெட்டது பார்க்கப் போனால் தெரியும்… ஏனென்றால் அவர்கள் கண்களைத் தான் உற்றுப் பார்ப்பார்கள்.
நீங்கள் அவரைப் பார்க்காதபடி தலையை மட்டும் கொஞ்சம் குனிந்து கொண்டே இருந்தால் போதும். அவரால் ஒன்றும் சொல்ல முடியாது… பேச முடியாது.
அவர்கள் அதே எண்ணத்தில் (பழக்கத்தில்) இருக்கும் பொழுது
1.நம் கண்களை நேர் கொண்டு பார்த்த பின் உணர்வின் தன்மை மோதும் போது
2.இப்படி இருந்தது அல்லவா…! என்று நடந்ததைச் சொல்வான்.
3.அறியாமலே நாம் தலையாட்டத் தொடங்குவோம்
4.அதை பிடித்துக் கணக்கு போட்டுக் கொண்டே சொல்வான்.
அதற்குத் தகுந்த மாதிரி அவன் சொல்லச் சொல்ல… நாம் ஆமாம்… ஆமாம்… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே வருவோம் வரிசையில் அவன் சொல்லிக் கொண்டு போவான்.
ஜாதகம் ஜோதிடம் சொல்பவர் எல்லாம் இப்படித்தான் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் ஆனால் ஜோதிடமும் ஜாதகமும் மனிதனுக்கு இல்லை.
ஏனென்றால் அவன் தான் நமக்குள் அதைப் பதிவு செய்கின்றான். எப்படி…?
உங்கள் குழந்தை இந்த நேரத்திலே பிறந்திருக்கின்றது. இந்த நேரத்திலே இந்த நட்சத்திரத்திற்கு மிருகம் தான் பிறக்கும். ஆகையினால் அந்த குணத்தின் தன்மையாக உங்கள் குழந்தை இருப்பான்… அசுர செயல்களைச் செயல்படுத்துவான் என்று இவன் “கால்குலேஷன்” போடுவான்.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கின்றது… குடும்பத்திற்கு ஆகாது…! மிருகங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியாதோ அது போல் குழந்தை அவன் உணர்ச்சிப்படியே செல்வான். அவன் பிறந்ததிலிருந்து “உங்கள் குடும்பத்திற்கு சனியன்” என்று வரிசையில் சொல்லிக் கொண்டு போவான்.
ஆனால் குழந்தை ஒன்றும் தவறு செய்யவில்லையே…!
குழந்தை பிறந்த ஜாதகத்தை… அந்தச் சட்டத்தை இவன் எழுதுகிறான். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லும் பொழுது இதை எடுத்து உருவாக்கி வைத்து விடுகின்றான்.
அடுத்து நாம் என்ன செய்கின்றோம்…?
இந்த உணர்வுடன் நாம் தொழில் செய்யும் இடங்களுக்குச் சென்றால் நம்மிடம் பொருளை வாங்கிச் சென்றவன் பணத்தைத் திரும்பக் கொடுப்பானா…! கொடுக்க மாட்டானா…? என்று எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்து விடுகின்றது.
இந்த உணர்வுகள் வந்த பின் சந்தேக உணர்வு அவனுக்குள் ஆனபின் அவன் கொடுக்கவே மாட்டான். இங்கே எண்ணிய எண்ணம் அங்கே செயலாகிறது.
1.ஆக… அந்த ஜாதகக் குறிப்புப் பிரகாரம் அவன் சொன்னது நமக்குள் பதிவாகி அது கடவுளாக இயங்க ஆரம்பித்து விடுகிறது.
2.அவன் தான் (ஜோதிடம் சொல்பவன்) சிருஷ்டிக்கின்றான்… எண்ணத்தால் நமக்குள் இப்படி உருவாகிவிடுகிறது.
ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை பெற்று “அவன் இப்படித்தான் இருக்க வேண்டும்… நற்பண்புகள் நற்குணங்களுடன் வாழ வேண்டும்…” என்று கருவில் இருந்தே இப்படி வளர்த்துப் பாருங்கள்.
குடும்பத்தில் எவ்வளவு தரித்திரம் இருந்தாலும் அது நீங்கிவிடும். அத்தகைய சக்தி பெற்ற வல்லமை பெற்றவனாக அவன் மாறுவான். நீங்கள் இதைத்தான் உருவாக்க வேண்டும்.
ஆனால் இன்று வழக்கத்தில் நாம் எப்படி இருக்கின்றோம்…?
குடும்பத்தில் கர்ப்பம் என்று இருந்தாலும் கூட ஆயிரம் சண்டைகள் போடுவோம்.
1.இதெல்லாம் கர்ப்பிணிப் பெண்ணுக்குள் பதிவான பின் குழந்தை உருவாகிப் பிறந்த பின்
2.அவன் அதே குணத்துடன் எல்லோருடன் சண்டை இழுத்துக் கொண்டிருப்பான்.
3.ஊரில் இல்லாத வம்பை எல்லாம் இழுத்துக் கொண்டு வருவான்.
காரணம்… சண்டையிட்ட உணர்வுகள் தாய்க்கு ஊழ்வினையாகப் பதிவானது. கருவிலே விளையும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.
குழந்தை உருவாகும் பொழுதே மகரிஷிகள் சக்தி என் குழந்தை பெற வேண்டும். அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… உலக ஞானம் பெற வேண்டும்… தீமைகளை அகற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்… நஞ்சை வென்றிடும் உணர்வுகள் பெற வேண்டும்… என்று தாயும் சரி குடும்பத்தில் உள்ள அனைவரும் சரி இப்படிச் சொல்லிப் பாருங்கள்.
1.ஞானிகளுடைய உணர்வுகளை எடுத்து
2.அருள் ஞானக் குழந்தைகளை வளர்த்துப் பாருங்கள்
அக்கால அரசர்கள் வல்லமை பெற்ற குழந்தைகளை இப்படித் தான் உருவாக்கினார்கள்… ஆனால் மக்கள் யாரும் செய்யவில்லை.
அரச குடும்பத்தில் கர்ப்பம் ஆகிவிட்டார்கள் என்று தெரிந்தாலே கர்ப்பிணித் தாய்க்கு பலவிதமான விஷங்களையும் பலவிதமான போதனைகளையும் கொடுத்து… அந்தக் கருவிலேயே விஷமான உணர்வுகளை ஏற்றி… எந்த விஷமும் பாதிக்காத அளவிற்குத் தன் நாட்டினுடைய பெருமைகளைச் சொல்லி சக்தி வாய்ந்த குழந்தைகளை அன்று உருவாக்கினார்கள்.
விஷத்தின் ஆற்றலால் தான் (எல்லாமே) வலிமை பெற்றது. அந்த உணர்வைக் கொடுத்துக் கொடுத்து அந்த விஷத்தை ஏற்றி வைத்துத் தாயினுடைய இரத்தத்தின் வழி குழந்தைக்கு அது போய்ச் சேரும்படி செய்தார்கள். மிருகத்துக்கு ஒத்த வலு அந்தக் குழந்தைக்கு வருகின்றது
அதே சமயத்தில் பல போதனைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.
நாட்டினுடைய நன்மை பெருமைகள்… எதிரிகளைப் பற்றிய உண்மைகள்… எதிரிகளை எப்படி வீழ்த்த வேண்டும்…? இராஜதந்திரங்களை எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று கதையைச் சொல்லிக் கொண்டே வருவார்கள்.
இந்த கர்ப்பிணி அதை கேட்டுக் கொண்டே இருக்கும். அரச குழந்தைகளை இப்படித்தான் அன்று உருவாக்கினார்கள். ஆனால் மக்களிடம் சொன்னால் யார் கேட்கின்றார்கள்…?
அன்று அரசர்கள் எப்படி உருவாக்கினார்களோ அது போன்று
1.அந்த ஞானிகள் காட்டிய வழியில் மெய் ஞானிகளை
2.உலகைக் காத்திடும் சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்… உருவாக்க முடியும்
நம்முடைய “விதி” (தலையெழுத்து) உருவாகும் விதம்…!
கடிகாரத்தை (MECHANICAL WATCH) நாம் சாவி கொடுக்கும் பொழுது எந்த அளவிற்குச் சுற்றுகின்றோமோ… அதற்கொத்த அமைப்பு முறை கொண்டு அதனுடைய ஓட்ட முறை செயல்பாடு உள்ளது. செயல்படுத்தும் பொருள் நிலை செயலாக்கப்பட்ட நிலை கடிகாரத்தின் நிலை.
அதைப் போன்றே மனித வாழ்க்கையில் நாம் எடுக்கும் எண்ண உணர்வின் செயல்…
1.காலையிலிருந்து இரவு வரை நம்முடைய செயல்பாடு அனைத்தும் நம் புலனடங்கி உறங்கும் வரை
2.நம் எண்ணத்தில் எடுத்த உணர்வலைகள் யாவும் வினையாகச் சரீர உணர்வில் செயல்படுகின்றது
3.செயலடங்கிப் புலன் அமைதியுற்று உறங்கும் பொழுது நம் ஊனுடன் பதிவாகி விடுகின்றது.
இதே தொடரின் அலையை ஒன்றின் தொடரில் ஆவேச உணர்வில் எந்த அலையின் வீரியத்தைச் செலுத்துகின்றோமோ… பயத்துடனோ கோபத்துடனோ அச்சத்துடனோ குரோதம் வஞ்சனை என்ற எவ்வுணர்வின் வேகத்தையாவது அதிகமாக எடுத்தால்
1.அதே உணர்வின் அலையை திரும்பத் திரும்ப எண்ணி எடுக்கும் வேகத்தால் அதுவே வினையாகி
2.வினையின் பயன் எலும்புக்குள் இருக்கும் ஊனில் பதிவாகி
3.அதன் தொடர் அலையைச் சில காலங்கள் எண்ணி எடுக்கும் தொடரில்
4.நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் “விதியாகி” விடுகின்றது.
அவ்வாறு உருவாகும் விதியின் தொடரை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று “தெரியாத செயலுடன் தான் நாம் வாழுகின்றோம்…”
ஏனென்றால் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் உணர்வின் வேகம் பல ரூபத்தில் நமக்கு நடந்து கொண்டுதான் இருக்கும். அத்தொடரின் ஈர்ப்புகளை எல்லாம் வினையாக (விதியாக) நமக்குள் பதிவு செய்து கொள்ளாமல் நம் உயிரின் வலுவின் ஆத்ம ஒளியைக் கூட்ட வேண்டும்.
உயிரான நெருப்பில் நாம் அதில் செலுத்தும் எண்ணத்தின் உணர்வின் வாசனையைத் தான் அது சமைக்கும். அதுவாகத் தான் நம்மை மாற்றும்.
நம் பூமியின் சுவைத் தன்மை எப்படி ஆறு குணங்களைக் கொண்டு ஆறு சுவைகளை வளர்த்துக் கொண்டதோ அதைப் போன்றுதான்
1.உணர்வில் சலிப்பை வளர்க்கும் பொழுது புளிப்பும்
2,உணர்வில் கோபத்தை வளர்க்கும் பொழுது காரமும்
3.உணர்வில் இனிமையை வளர்க்கும்பொழுது இனிப்பும்
4.உணர்வில் விரக்தியை வளர்க்கும் பொழுது துவர்ப்பும்
5.உணர்வில் வெறுப்பை வளர்க்கும் பொழுது கசப்பும்
5.இப்படியாக குணத்திற்கொப்பச் சுவையில் நம்முடைய உயிர் காந்த ஜீவ சரீரம் பதிவு கொண்டு விடுகின்றது.
இத்தகைய வினையின் செயல் விதியாகும் வளர்ச்சியை நாம் மேல் நோக்கி எடுக்கக்கூடிய உணர்வின் தியானத்தால் நற்குண ஒலி கொண்டு உயர் மின் காந்த அலையை “அதிகாலையிலிருந்தே நாம் எடுக்கும் பக்குவ முறையினால்”
1.அந்தந்த வினையின் செயலுக்கு அடிமையாகாமல்
2.நற்குண ஒலியின் செயல்பாட்டில்
3.எண்ணத்தின் வேகத்தை எதிர்கொள்ளும் எதுவாகிலும் (தீய நிலைகள்) சுட்டுப் பொசுக்கும் ஆயுதமாக
4.நம் உயிராத்மாவின் சமைப்பில் உயர் ஞானிகளின் மகரிஷிகளின் மணங்களை எடுத்துத் தியானிக்க வேண்டும்.
இதன் வழி செய்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நமக்குள் விதைக்கும் வளர்ப்பாக உயிராத்மாவின் வீரிய ஒளித் தன்மையின் செயலை நாம் பெற முடியும்.
ஆகவே ஒளியான எண்ணத்தின் உணர்வை உயிராக்குங்கள்…!
உங்களுடைய ஏக்கம் தான் என்னைப் பேச வைக்கிறது – ஞானகுரு
எம்முடைய உபதேசங்களை எல்லோரும் கேட்கின்றீர்கள் ஆனால் அடுத்தாற்போல் குறைகளைத் தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள். அதை எல்லாம் முதலிலே நீக்கிப் பழக வேண்டும்… மாற்றி அமைக்க வேண்டும்
மணிக்கணக்காக யாம் (ஞானகுரு) உபதேசிப்பதன் நோக்கமே அந்த ஞானிகள் உணர்வை நீங்கள் பெற்று நன்மை பெறும் சக்தியாக உங்களுக்குள் மாற்றுவதற்குத் தான்.
1.யாம் பதிவு செய்ததை மீண்டும் நீங்கள் எண்ணினால் அது உங்களைக் காக்கும் சக்தியாக வருகின்றது
2.தீமையிலிருந்து விடுபடவும் செய்கின்றது… தீமை அகற்றும் சக்தி பெறுகின்றீர்கள்
அதற்குத்தான் மணிக்கணக்கில் பேசுவது.
ஆனால் மணிக்கணக்கில் வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எடுத்து விடுகின்றீர்கள். குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது பல வேதனையான நிலைகளைச் சந்திக்கும்படி செய்கின்றார்.
1.அதை எப்படி மாற்றுவது…? என்ற நிலையில் மாற்றுவதற்குண்டான உபாயத்தைக் காட்டினார்
2.அவர் சொன்ன முறைப்படி செய்து எனக்குள் வந்த வேதனைகளை மாற்றி அதிலிருந்து மீண்டேன்
3.அதைத்தான் உங்களுக்கும் இப்பொழுது வாக்காகக் கொடுக்கின்றேன்
இதற்கு முன் இதை எல்லாம் அதிகமாக வெளிப்படுத்தியதில்லை இங்கே தான் வெளிப்படுத்துகின்றேன். ஏனென்றால்
1.எங்கெங்கு… யார் யார்… ஏங்கி இதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இந்த உணர்வுகள்
2.உங்களுடைய ஏக்கம் தான் அருள் உணர்வுகளை என்னை வெளிப்படுத்தும்படி செய்கின்றது
3.நானாக இப்படிப் பேச (உபதேசம்) முடியாது.
ஏக்கத்தின் உணர்வு கொண்டு அந்தத் தொடர் வரப்படும் பொழுது… அந்த உணர்வுக்கொப்பத்தான் நான் பேச முடியும். அப்படி அல்லாதபடி… நானாக எடுத்துச் சொல்வது என்றால் அது வராது.
உணர்வின் தன்மை மோதலாகும் பொழுது.. மின்னல் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் பொழுது அந்த உணர்வுகள் பிளந்து அதனுடைய அலைகள் படர்கின்றது.
இதைப் போன்று தான்
1.நீங்கள் ஏங்கும் பொழுது அந்த உணர்வை நுகர்ந்துதான் நான் பேசுகின்றேன்
2.தீமைகள் எப்படி இயக்குகின்றது… அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்று
3.அந்த அருள் ஞானி உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சித் தீமையைப் பிளக்கும் உணர்வுகளை நுகரச் செய்து
4.அந்த அருள் உணர்வை உங்களுக்குள் உருவாக்கும்படி செய்கின்றேன்.
அந்த உணர்வின் எண்ணங்களை உங்களுக்குள் உருவாக்கி தீமைகளையும் பகைமைகளையும் உங்களுக்குள் வராதபடி தடுக்கும் சக்தியாக “கல்யாணராமனாக” நீங்கள் மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய உபதேசத்தின் நோக்கம்.
இதனைப் பின்பற்றி நீங்கள் வளர்ந்து வந்தீர்கள் என்றால் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் என்னிடம் கேட்டுவிட்டு அந்தப் பக்கம் காற்றிலே விட்டு விட்டுச் செல்வதாக இருந்தால்
1.சாமி சொன்னார் என்று சாதாரணமாகத் தான் தெரியும்
2.சாமி எனக்கு என்ன செய்தார்…? என்று தான் பேசுவீர்கள்.
குருநாதர் எனக்குக் காட்டிய பேருண்மைகளை அவர் எனக்கு கொடுத்ததைக் காட்டிலும் பன்மடங்கு உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன் இதற்கு மேல் நான் என்ன உதவி செய்ய வேண்டும்…?
1.நீங்கள் எல்லாம் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்
2.என்னைச் சந்தித்தவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று
3.சதா உங்கள் உயிரை எண்ணி நான் தியானம் இருக்கின்றேன்
அந்த உணர்வினை நீங்கள் தான் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். ஞானிகள் உணர்வை யாம் கொடுத்தால் அதை நுகரும் பருவத்தை நீங்கள் இழந்து விடக்கூடாது. நல்ல சாப்பாடு போட்டால் அதை நீங்கள் உட்கொள்ள வேண்டும் அல்லவா…!
ஒரு விவசாயம் செய்யும் இடத்தில் உயர்ந்த வித்தினைக் கொடுக்கின்றார்கள். அதைச் சீராக விதைத்தால் நல்ல பலன் கிடைக்கும் ஆனால் அப்படி விதைக்காதபடி மண்ணிலே வீசிவிட்டுச் சென்றால் எது எப்படி முளைக்கும்…?
எறும்போ பூச்சியோ மற்ற பறவைகளோ அந்த விதைகளைத் தின்றுவிடும்… அது எப்படி முளைக்கும்…?
அதே சமயத்தில் விதைத்தது சீராக முளைத்து வந்தாலும் அந்தந்தக் கால பருவத்திற்கு அதைப் பண்படுத்தும் நிலைகளையும் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.
அது போன்று தான்
1.நாம் கொடுத்த உபதேச வாயிலாகக் கொடுக்கும் பதிவை நீங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அருள் ஞானத்தை பெருக்க வேண்டும் என்று அந்த அருள் உணர்வுகளைக் கூட்டினால்
3.அறியாது வந்த இருளைப் போக்கும்… அருள் வழி வாழவும் முடியும்
4.பிறவி இல்லா நிலையும் நீங்கள் அடைய முடியும்.
இது உங்கள் கையில் தான் இருக்கின்றது…!
விண்ணுலக ஆற்றல்
மனிதனின் செயலில் பல விநோத உண்மைகளை வளர்த்துக் கொண்டுள்ளான். “மனித விஞ்ஞானம்” பல உண்மை நிலைகளைச் செயல்படுத்தும் நிலையில்… இன்று நாம் பல நிலைகளைக் காண்கின்றோம்.
தனக்கு மேல் வீரியத் தன்மை கொண்ட பல உண்மைகளை அதற்குகந்த பாதுகாப்பு செயல் திறமையுடன்… இன்றைய மனிதனின் விஞ்ஞானம் எப்படி முன்னேற்றம் கண்டுள்ளது…?
வீரிய சக்தி கொண்ட மின்சாரத்தைத் தன் செயலுக்கு மனிதன் உபயோகப்படுத்துகின்றான். அதைச் செயல்படுத்துவதற்கு அதற்குகந்த பாதுகாப்பு நிலையில்
1.எது எதில் அந்த மின்சாரம் பாயும் தன்மை கொண்டுள்ளது…? என்று கண்டறிந்து…
2.அதனுடைய வீரியத் தன்மையைத் தன்னுடைய செயல் தன்மைக்கு
3.அதையே பக்குவப்படுத்திப் பலன் காணுகின்றான்.
இது எல்லாமே இவ்வுடலின் வாழ்நாளைக் கருதி வளர்த்துக் கொண்ட வழிமுறைகள் தாம்.
மனித உணர்வின்… எண்ண வீரியத்தின் ஒலியை இன்றைய மனிதன் உணர்ந்தானானால்… தன் உணர்வின் ஒலி கொண்டு ஒளிரும் நிலையைத் தன் வலுவில் வளர்க்கும் வளர்ச்சியை வளர்த்துக் கொள்ள முடியும்.
நம் பூமியின் ஓட்டத்தில் பல கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள சூரியனின் ஒளியை நம் பூமி “தன்னுடைய சுழற்சியின் ஜீவ ஓட்ட ஈர்ப்பின் ஒளியால்” ஒளி பெறுகின்றது.
அதைப் போன்றே தன் ஓட்ட கதியில் நட்சத்திர ஒளிகளையும் சந்திரனின் ஒளி அலையையும் தன் ஓட்டத்தில் தொடர்பு கொள்ளும் மற்றக் கோள்களின் சந்திப்பில் அந்தந்தக் காலங்களில் அவ்வொளியின் ஒலியை நம் பூமி சந்தித்துக் கொண்டே ஓடுகின்றதல்லவா…?
நாம் இன்று காணும் நட்சத்திரங்களின் ஒளியையும் சூரியனின் ஒளியையும் சந்திரனின் ஒளியையும் பூமி தன் ஜீவகாந்த ஒளியின் சுழற்சியில் ஒளி பெற்றுத் தன்னுடைய சுழற்சியின் ஈர்ப்பில் சந்திக்கும் அவைகளின் தொடர்பலையின் அமிலத்தின் ஒளித் தன்மையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று பெற்று வளர்கிறது.
மனிதப் பிறப்பிற்கு ஜாதகத்தில் நட்சத்திர ராசிகளை அந்தந்த நேரத்திற்கொப்ப பிறக்கும் குழந்தைகளுக்கு எப்படிக் கணிக்கின்றார்களோ அதைப் போன்றுதான் இன்று நம் பூமியில் பல நிலைகள் (அது சந்திக்கும் நிலையில்) வளர்ந்துள்ள வளர்ச்சியின் தன்மையும்.
ஆனால் இதை எல்லாமே பூமியின் சுழற்சி ஓட்ட கதியில் சந்திப்பின் தொடரில் வளர்ந்த “இயற்கையின் வளர்ச்சி” என்கின்றோம். ஆனாலும் அதே இயற்கையை… மனிதன் தன் செயலுக்குப் பல நிலைகளை வகுத்துக் கொள்கின்றான்.
ஆகவே பூமியில் ஜெனித்த மனிதன்
1.இயற்கையைத் தன் செயலின் தொடரில் செயலாக்கும் “விந்தைதனை”
2.தன் உணர்வின் எண்ணத்தால் “மெய்ஞானத் தொடர் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்…”
ஏனென்றால் இப்பூமியின் ஜெனிப்புத் தொடர் அலை ஈர்ப்பு… இப்பூமியில் வாழும் காலத்திற்குத்தான் பயன்படும். உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் தேய் பிறை தான்.
உணர்வின் எண்ணத்தின் ஓட்டத்தை மற்றக் கோள்களின் தொடர்புடன் எண்ணி எடுக்கும் ஒலி அலையால்… இஜ்ஜீவ காந்த சரீர ஓட்டத்தில் எண்ணி எடுக்கும் அலையின் தொடர் அமில குணத்தை…
1.இச்சரீர உணர்வின் தொடரில் வளரும் உயிர் காந்த ஒளி அலையின் தொடர்பால்
2.இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம ஒளி ஒளிரும் தன்மையை
3.இவ்வெண்ணத்தில் எடுக்கும் தொடர்புபடுத்தி வலுப்படுத்திக் கொள்ளலாம்.
நம் பூமியின் ஓட்டத்தினால்தான் சூரியனின் ஒளியையும் மற்றக் கோள்களின் ஒளியையும் பூமி பெறுகின்றது.
அதைப் போன்று ஜீவகாந்த சரீர உயிர் எண்ண ஓட்டத்தால்… நாம் எண்ணி எடுக்கும் எக்கோள்களின் ஒளி அமிலத்தையும்… இச்சரீர உணர்வில் பதிவாக்கும் வலுவினால்…
1.இது வரை ஆத்மாவின் ஒளி வட்டம் வளர்ந்த நிலையை வலுவாக்கும் வழிமுறையில்
2.தியானம் கொள்ளும் வலுவால் இச்சரீரத்தின் ஆத்ம உயிர் வலுவாகும் ஒளியை நாம் காணலாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நூறு சதவீதம் ரோஜாப்பூவும் நூறு சதவீதம் வேப்பிலையும் நூறு சதவீதம் விஷச் செடியும் இதெல்லாம் கலந்தால் “அரளிச் செடியாக…” மாறுகின்றது.
1.அரளி விதையை நாம் “சாப்பிட்டோம் என்றால்” ஆளைக் கொல்கின்றது
2.அரளிப் பூவின் “மணத்தை நுகர்ந்தால்’ தீயதை மாற்றுகின்றது.
சிலர் கால்கள் இரண்டும் ரொம்ப நாளாக வலிக்கின்றது என்பார்கள், சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் குதி கால்களில் நடக்க முடியாது. சிலருக்குக் காலில் நீர் வடியும்.
அரளிப் பூவை இலேசாக ஒரு ஓட்டில் போட்டு வறுத்து தேங்காய் எண்ணையில் போட்டு காலில் நீர் வடிபவர்களுக்குப் போட்டோம் என்றால் அந்த விஷ நீரை எடுத்துவிடும். கால்களில் இருக்கும் விஷ நீர் எல்லாவற்றையும் எடுத்துவிடும்.
கால் வலி பறந்து போகும்.
ஆனால் அரளி விதையைச் சாப்பிட்டால் ஆளைக் கொன்றுவிடும். இதைப் போன்று “ஒவ்வொரு உணர்வுகளும்… எப்படி இயக்குகின்றது…? என்பதனை குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.
காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.
1.அதையெல்லாம் வாக்குடன் கொடுக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்யவேண்டும்.
3.கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும்.
குருநாதர் எனக்குக் கொடுத்ததை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் என்றால் நீங்களும் நமது குருவைப் போல பிறருடைய தீமைகளைப் போக்கும் ஞானிகளாக மாற வேண்டும்.
இந்த உணர்வுகளைக் காற்றிலே பரவச் செய்யவேண்டும். நமக்குள் வரும் விஷத் தன்மைகளை அகற்ற வேண்டும்.
மனிதனுக்குள் இனம் மதம் மொழி என்ற பேத நிலைகளில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் அனைத்தும் உங்கள் மூச்சலையால் நீக்கிடல் வேண்டும்.
ஒவ்வொருவரு மனிதனையும் சிந்தித்துச் செயல்படும் ஞானிகளாக மாற்ற வேண்டும்.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எப்படித் தீமைகளை மாற்றினாரோ அதைப் போல
2.நீங்கள் ஒவ்வொருவரும் குரு வழியில் உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும்.
3.பிறருக்குத் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும். இந்த உணர்வின் அலைகள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் படரவேண்டும்.
4.உயர்ந்த ஞானிகளாக மாற வேண்டும்.
மறைமுகமாகச் செய்ய வேண்டியது
மனிதனாக உருவாக்கப் பங்கு கொண்டது 1008 குணங்கள். அந்த 1008 குணங்களைத் தான் ஞானிகள் ஆலயத்தில் தெய்வங்களாகக் காட்டுகின்றார்கள். சிலையாக உருவாக்கி வைத்தது ஞானிகள்… அது துவைதம்.
அந்தச் சிலைக்கு வைர கிரீடத்தை வைக்கின்றான்.. தங்க ஆபரணத்தைப் போடுகின்றான்… மலர் மாலைகளை அணிகின்றான். ஔஷதங்கள் சுவையாக உருவாக்கப்பட்டு தெய்வத்திற்கு உணவாகப் படைக்கின்றான்.
இயற்கையில் விளைந்த கனியும் அங்கே வைக்கின்றான். இயற்கையில் விளைந்ததும் செயற்கையில் விளைந்ததும் என்ற உணர்வைக் காட்டுவதற்காக…!
நமக்குள் நல்ல குணங்கள் எப்படி வளர்ந்தது…? ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் தன்மை பெற்ற நிலையை ஒன்றுடன் இணைத்து நாம் எதைச் செய்ய வேண்டும்…? என்பதற்காகச் சிலையை உருவாக்கினான்…!
பதார்த்தங்களையும் வைத்தான் திரையிட்டு மறைத்தான்.
1.தீப ஆராதனையைக் காட்டித் தன்னை அறியும்படி செய்தான் தனக்குள்
2.மறைந்திருக்கும் இந்த உணர்வைத் திறந்து பார்க்கப்படும் பொழுது உணர்வுகள் எப்படி…? என்பதை அறியம்படி செய்தான்
இது தான் ஆலயம்.
திரையைத் திறந்தபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகிறது. எதனால்…? வெளிச்சத்தால்…!
கார்த்திகேயா என்ற நிலையில் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உணர்வை நுகர்ந்தறியும் தன்மை பெற்றவன் மனிதன். எதனெதன் குணங்களைத் தனக்குள் எடுத்து… உருவாக்கும் தன்மை எப்படிப் பெற வேண்டும் என்பது ஆறாவது அறிவு… ஆக படைக்கத் தெரிந்து கொண்டவன்.
விண்ணின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது இனிமையின் உணர்வை வளர்க்கின்றது. தீமையின் நிலைகளை அகற்றிடும் சக்தி பெறுகின்றது என்பதற்காகச் சிலையை உருவாக்கி வைத்தனர்.
தீபத்தை அங்கே காட்டப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் இச்சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் நாம் வேண்ட வேண்டும்.
இந்த ஆலயம் வருவார் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா. நாங்கள் பார்ப்போர் குடும்பமெல்லாம் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அருள் ஒளியின் சுடராக அந்தக் குடும்பங்களில் வளர வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
1.ஏனென்றால் நமக்குள் பல குடும்பங்கள் உண்டு
2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் குடும்பமாக வாழ்கிறது
3.கோபப்படுவோர் உணர்வை நுகர்ந்தால் நமக்குள் கோபத்தின் அணுக்கள் வளர்கின்றது
4.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் அது போர் செய்கின்றது
5.ஆகவே அதை மாற்றி நட்பின் தன்மை அடைவதற்கு இந்த ஞானிகள் உணர்வை நாம் இப்படி எடுத்தல் வேண்டும்.
ஏனென்றால் நுகரும் உணர்வுகள் அணுவாக மாறுகின்றது… அணுவின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது. எதனின் வலு அங்கு வருகின்றதோ அதனின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது. இதை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் கோவிலிலே இப்படிக் காட்டியுள்ளார்கள்
அந்த ஆலயம் வருவோர்… நாம் பார்ப்போர் குடும்பங்கள்… நாம் தொழில் செய்யும் இடங்களில் பணிபுரிவோர்… எல்லோருமே பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
உதாரணமாக நாம் தொழில் செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நம்மிடம் வேலை செய்யும் ஒருவனுக்கு வீட்டிலே சங்கடமாக இருக்கின்றது.
1.சங்கட உணர்வுடன் இங்கே வந்து வேலையைச் செய்யும் பொழுது…
2.தவறாகச் செய்து விடுகின்றான்… உற்பத்தி ஆகும் பொருள் நஷ்டமாகி விடுகின்றது
அல்லது அவன் வேலைக்கு வரும் பொழுது ஒருவன் ரோட்டிலே எதிர்பாராது கீழே விழுந்து விடுகின்றான். அவனை உற்று நோக்கி இருந்தால் அந்த இரக்க மனம் கொண்டு அந்த வேதனையை எடுத்துக் கொள்கின்றான்.
அவன் நல்ல குணத்துடன் இந்த விஷம் கலந்து விடுகின்றது. அப்போது இருளடைந்து விடுகின்றது. இருளான உணர்வுகள் கலந்து இங்கே வேலையில் அமர்ந்து வேலை செய்யப்படும் பொழுது பொருளறிந்து செயல்படும் திறன் இழக்கப்படுகிறது… உற்பத்தி குறைந்து விடுகிறது.
அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?
நம்மிடம் வேலை செய்யும் அந்த தொழிலாளி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் திறன் அவன் பெற வேண்டும் என்ற உணர்வை நாம் பாய்ச்சினால் “அடுத்து அவன் தவறில்லாதபடி வேலையை நிதானித்துச் செய்வான்…”
மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினை அனைவருக்கும் நாம் வேண்டிடல் வேண்டும்… அதை வளர்த்திடல் வேண்டும். அதற்குத் தான் ஆலயத்தில் இந்த மார்க்கத்தைக் காட்டினார்கள்.
சிலையைப் பார்க்கும் பொழுது துவைதம். ஸ்தல புராணமாக வடித்து நற்குணங்களை அங்கே விவரித்துக் காட்டியுள்ளார்கள்.
1.அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வீக நிலைகளையும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்
2.இந்த ஆலயம் வருபவர் எல்லோரும் தெய்வகுணம் பெற வேண்டும் தெய்வ நிலைகளும் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போர் குடும்பம் எல்லாம் தெய்வ குணமும் தெய்வீகப் பண்புகளும் பெற வேண்டும்
4.நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் தெய்வ குணங்கள் பெற வேண்டும்…
5.தெய்வ சக்தி அங்கு வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
6.நமக்குள் இல்லாதவர்கள் யாரும் இல்லை… எல்லோருமே நமக்குள் இருக்கின்றார்கள். “
7.எல்லோருக்கும் அந்த உயர்ந்த சக்தி கிடைக்கும்படி செய்ய வேண்டும் “மறைமுகமாக…”
ஏனென்றால் ஒரு வேதனைப்படுவனுடைய உணர்வுகள் “மறைமுகமாக” நமக்குள் வந்து தான் விஷத்தின் தன்மையாக மாறி… நம்மை அறியாமலே வேதனைப்படும் செயலாக அமைத்து விடுகின்றது. மற்றவரிடம் அதைச் சொல்லப்படும் போது அது எல்லோரையும் வேதனைக்குள்ளாக்குகிறது.
இதை மாற்ற வேண்டும் என்பதற்குத் தான் கல்யாணராமா…! பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றும்படி ஆலயத்தில் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மனிதனுக்கு மட்டும் தான் “சரி… தவறு…” என்று பகுத்தறியும் ஞானம் உண்டு – அதைப் பயன்படுத்துகின்றோமா…!
காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.
விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…?” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!
தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.
சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.
ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.
மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.
மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்கள் நண்பருக்கோ உறவினர்களுக்கோ நோய் என்று கேள்விப்பட்டால்… “ஐயோ… உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று வேதனைப்படாதீர்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.
அந்த நோயால் வேதனைப்படுபவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெறும் ஆற்றல் அவருக்குள் வரவேண்டும். அருள் வழியில் அவர் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வைப் பெறச் செய்யுங்கள்.
ஒருவருக்குக் கடுமையான தலைவலியே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டு.., “ஒரு மரத்தில் அவர்களைக் கையை வைக்கச் சொல்லி… உங்கள் தலைவலி நீங்கிப் போகும்..” என்று சொல்லுங்கள்.
தலைவலி நீங்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.
1.நீங்கள் ஒவ்வொருவரும் “தீமையை நீக்கக்கூடிய… சக்திவான்களாக” மாற வேண்டும்.
2.நான் (ஞானகுரு) சொன்னால் உங்கள் தீமைகள் போகின்றது.
3.ஏன் நீங்கள் சொன்னால் மற்றவர்கள் தீமைகள் போகக் கூடாதா..,?
நான் மட்டும் தான் அதைச் செய்ய வேண்டுமா…?
விஞ்ஞான நிலைகளால் இன்று இந்த உலகமே திசை திரும்பும் நிலைகள் வந்து கொண்டு வருகின்றது.
முன்பு ஒரு காலத்தில் இந்தப் பூமி ஒரு பக்கம் உறைபனியாக நீள வடிவாக வரப்படும் பொழுது தலை கீழாகக் கவிழும் தன்மை வந்தது.
அப்பொழுது அகஸ்தியன் தன் சக்தியினால் அந்த இடத்தைத் திருப்பி அது வரக்கூடிய திசையை மாற்றி அதன் உணர்வை உறையும் இடமாக்கி இதைக் கரைக்கச் செய்து கடலாக மாற்றி இன்றும் பூமியில் அவன் மாற்றி வைத்த நிலைகள் தான் நாமும் வாழ்கின்றோம்.
அன்று இந்தப் பூமி கவிழாது சமப்படுத்தியவன் அந்த அகஸ்தியனே. அதனால் தான் பின் வந்த ஞானியர்கள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.
1.அகஸ்தியன் உடல் வலிமையைக் காட்டவில்லை.
2.அவன் தன் “எண்ணத்தின் உணர்வின் ஆற்றலால்”
3.அகண்ட அண்டத்தையும் “எட்டிப் பிடிக்கும்..” ஆற்றல் கொண்டவன் என்றும்
4.”மிகவும் சக்தி வாய்ந்தவன்…” என்பதற்கே கூழையாகக் காட்டினார்கள்.
இப்பொழுது விஞ்ஞான அறிவால் உலகமே நச்சுத் தன்மை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதனின் சிந்தனை குறைந்து உருக்குலையும் நேரம் வரும் இந்த நிலையில் அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்த ஆற்றலின் துணை கொண்டு இந்தப் பூமியில் மக்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்தல் வேண்டும்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலைகளில் அன்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரும் பெறும்படி நாம் செய்ய முடியும்.
அப்பொழுது இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் ஆன்மாவும் தூய்மையாகின்றது. இந்தக் குறுகிய காலத்தில் நாம் இந்த வளர்ச்சி பெறமுடியும்.
1.இந்தப் பூமியையும் நம் உயிராத்மாவையும்
2.அந்த அகஸ்தியன் துணை கொண்டு
3.அவன் சென்ற வழியில் நாமும் சென்று
4.இந்த உடலுக்குப் பின் அனைவரும் ஒளியின் உடலாகப் பெறும் சக்தியை நாம் பெறுவோம்.
குருநாதர் காட்டிய வழியில் எத்தனையோ மகான்களை விண் செலுத்தினோம் – ஞானகுரு
போகருடைய தாயை ஒரு விஷம் கொண்ட பாம்பு தீண்டி விடுகின்றது. காளிங்கராயன் என்பவரை போகர் அப்போது அணுகுகின்றார்.
தன் தாயைக் காக்க வேண்டும் என்ற நிலையில் அவரிடம் பல பச்சிலை மூலிகைகளை அறிந்து அதை வைத்துத் தன் தாயை எழுப்புகின்றார். விஷத்தின் தன்மை எவ்வாறு ஒடுக்குவது…? என்று அவரிடம் பழகித் தெரிந்து கொள்கின்றார்.
விஷத்தை ஒடுக்கும் உணர்வினைத் தனக்குள் அதன் உணர்வின் அறிவாக தெளிந்த நிலையில் கொண்டு வருகின்றார். போகர். அதன் வரிசையில் தான் பல ஆற்றல்கள் அவருக்குள் பெருகத் தொடங்கியது.
1.நட்சத்திரங்கள் கோள்கள் இயக்கங்களையும் அறிகின்றான்… வான மண்டலத்தையும் அறியத் தொடங்குகின்றான்.
2.இதையெல்லாம் அறிந்த பின் அவன் இன்னொரு கூட்டிற்குள் (உடலுக்குள்) செல்லவில்லை
3.ஒளியின் தன்மையைப் பெருக்குகின்றான்…
4.ஒளியின் தன்மை ஆனாலும் உந்தித் தள்ளி விண்ணுக்கு அவனை அனுப்பும் வழி இல்லை.
5.ஏனென்றால் அதற்குண்டான முகப்பு வரவேண்டும்… இருந்தாலும் அந்த ஒளி அலைகள் வருகின்றது.
குருநாதர் போகரைப் பற்றிச் சொல்லும் பொழுது அவன் பெரிய திருடன்… வானத்தையே திருடி இருக்கின்றான்…! ஆனால் விண்ணுக்குப் போகும் வழியைத் திருடத் தெரியவில்லை…! நீயும் ஒரு திருடன் ஏன்று என்னிடம் (ஞானகுரு) சொல்கின்றார்.
அப்பொழுதுதான் இந்த உணர்வின் தன்மை எடுத்து
1.போகருக்கு நீ அந்த விண் செல்லும் பாதையின் உணர்வைச் செலுத்து
2.அந்த உயர்ந்த உணர்வுகளை… நினைவுகளை எடு
3.அவருடன் தொடர்பு கொள்… அந்த உணர்வின் துணை கொண்டு இந்த முகப்பைக் கூட்டு.
4.ஒளி நிலை பெற வேண்டும் என்று அந்த அருள் ஒளியை அவரிடம் இருந்து நீ பெறு
5.ஏனென்றால் உயர்ந்த சக்தி பெற்றவர்.. அந்த உணர்வின் துணை கொண்டு விண்ணுக்குச் செலுத்து என்றார் குருநாதர்..
இப்படித்தான் இராமலிங்க அடிகள்… காந்தியடிகள்… விவேகானந்தர் என்று இது போன்று ஏனைய எத்தனையோ மகான்களை விண் செலுத்தும்படி செய்தார் குருநாதர். “ஒன்று இரண்டு அல்ல…”
ஒவ்வொருவரும் தத்துவங்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டாலும்
1.விண் செல்லும் பாதையை அந்த முகப்பின் தன்மை எவ்வாறு அவர்களுக்குச் சேர்க்க வேண்டும்
2.ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்த வேண்டும் என்று தெளிவாக கூறினார்.
இந்தப் பழக்கத்தை எல்லாம் ஏற்பபடுத்திய பின்பு தான் அவருக்கும் “தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும்” என்று குருநாதர் இந்த வேலையைச் செய்தார்.
ஏனென்றால்
1.அவர் (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ உடல்களைத் தாவியவர் தான்
2.தகுந்த உடல்கள் பெறவில்லை… அதற்குத் தகுந்த உணர்வுகள் கிடைக்கவில்லை
3.அவரவர்கள் இச்சைக்குத் தான் செல்கின்றார்கள்.
4.(குரு தன்மை அடைவதற்கு இப்படி எத்தனையோ நிலைகள் இருக்கின்றது).
அண்டத்தின் சக்தி இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கின்றதோ அதைப் பெறக்கூடிய தகுதியாகத் தான் முருகன் சிலையை வைத்தான் போகன். அது யாருக்கும் தெரியாது.
போகன் சிலையை மாற்ற வேண்டும்… வைக்க வேண்டும்… என்று பல பேர் வந்து கேட்டார்கள். அந்த மாதிரிச் செய்ய முடியாது. ஏதாவது மீறித் தொட்டீர்கள் என்றால் குடும்பம் எல்லாம் நாஸ்தி ஆகிவிடும்… தொடும் குடும்பம் எல்லாம் நாஸ்தியாகிவிடும் என்று சொன்னேன்.
உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் சிலையை வைத்தான் போகன்.
ஆனால் தனித்த நிலைகள் கொண்டு சுயநலத்திற்காக வியாபாரத்திற்காக அந்தச் சிலையைப் பயன்படுத்தினால் அவன் யாரும் உருப்பட மாட்டான்.
ஏமாற்றும் நிலைகள் கொண்ட எவனும் இங்கே உருப்படியாக மாட்டான். மற்ற கோவில்களில் செய்வது வேறு… அங்கிருக்கக்கூடிய சிலைகள் வேறு. பழனி முருகன் சிலை அப்படிக் கிடையாது. அத்தனை பெரிய அணையை போகன் இங்கே போட்டு வைத்திருக்கின்றார்.
தவறு செய்ய முடியாது… தவறு செய்தான் என்றால் நொறுங்கிப் போவான். உணர்வின் தன்மை விஷமாகிவிடும். விஷத்தை உட்கொண்டால் எப்படி நினைவிழக்கச் செய்யுமோ… புழுவாக பூச்சியாக பாம்பாகத் தான் அடுத்து பிறக்க நேரும்.
எது நடந்தாலும் உண்மையை அறியக்கூடிய “ஒரு நிமிட சிந்தனை… அந்த நிதானம் வேண்டும்”
இன்றைய மனித வாழ்க்கையில் நாம் பலதரப்பட்டோருடன் ஜீவிதம் நடத்த உறவாட வேண்டியுள்ளது. அப்படிப் பழகுபவர்களின் குணங்களில் தீயகுணம் நற்குணம் என்ற நிலையை அறியக் கூடிய தன்மையை நாம் எப்படிப் பெற முடியும்…?
சாதாரண நிலையில் எல்லாத் தீய குணங்களையும் தீய பழக்கங்களையும் கொண்ட கயவனின் உணர்வின் எண்ணம்
1.தன்னுடைய அதிகப்படியான சிந்தனையின் செயலை
2.எண்ணத்தில் தீயதிற்குச் செயல்படுத்தியவனின்
3.சரீர உணர்வின் ஆரோக்கியத்தில் கூட அதிக பாதிப்பு இருக்காது.
ஒரு பித்தளைப் பாத்திரம் அது எப்படி உறுதி கொண்டதாக உள்ளதோ அதைப் போன்று திருடனின் குணத்தில் அவன் வளர்த்துக் கொண்ட உணர்வின் சக்தி கொண்டு அவன் செயல் உறுதி கொண்டதாக இருக்கின்றது.
ஆனால் சமுதாயத்தில் அவன் நல்லவனாகக் காட்டிட
1.அவனுடைய செயல் எல்லாவற்றையும் அவன் பூசிக் கொள்ளும் முலாமாக
2.எதனையும் தன்னுள் கலக்கச் செய்யும் செயலாக
3.அந்தத் தீயவனின் நிலை தான் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் நிலையாக
4.இன்றைய கலியின் உணர்வு நிலை செயலாகின்றது.
உதாரணமாக… மண் பாண்டத்தில் எதனையும் எந்த முலாமும் பூசாமல் அதிலே சமைத்துச் சாப்பிட முடியும்.
1.எந்தத் தீயநிலையும் மண்பாண்டத்திற்கு இருப்பதில்லை
2.ஆனால் சிறிது கவனப் பிசகு ஏற்பட்டாலும் உடைந்துவிடும் அந்த மண்பாண்டம்.
அதே போல் தான்..
1.நல்லவர்களைத் தீயவர்கள் ஏமாற்றுவது மிகவும் சுலபம்
2.தீயவனை நல்லவனாக்கவோ நல்வழிப்படுத்தவோ மிக மிகக் கடினம்.
சமுதாயத்தில் நல் உணர்வு கொண்டோர் தன் உணர்வுக்கொப்பத் தான் ஒவ்வொருவரும் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தைச் செலுத்தி எல்லோரிடமும் நற்பெயர் எடுக்க வேண்டுமென்ற உணர்வில் அவர்களின் செயல் செல்கிறது.
இருந்தாலும்…
1.தீய நிலைகள் மோதும் பொழுது அவர்களுடைய உணர்வெடுக்கும் அலையால்
2.பதட்டத்தின் சிதறல் மண்பாண்டத்தைப் போன்று உடைந்து விடுகின்றது.
ஆனால் நயவஞ்சகத்திலேயே எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ள தீயவர்களின் குணம் எந்த நிலைகள் வந்து மோதினாலும் உடைவதில்லை. அவரின் உணர்வின் அலை பித்தளைப் பாத்திரத்தைப் போன்று.
இதைப் போன்ற ந்நிலையில் இருந்தெல்லாம் மனித ஆத்மாக்கள் எப்படி மீள முடியும்…?
நல் உணர்வு பெறும் பொழுதும் மீண்டும் மீண்டும் எண்ணத்தின் சிதறல்கள் வாழ்க்கையில் மோதும் பொழுதும் எல்லாவற்றையும் துறந்து சந்நியாசம் வாங்கியவர்கள் இந்தப் பூமியில் பலருண்டு.
இந்த நிலையில் மீளும் நிலைதான் சிந்தனையில் சீர்படுத்தும் சிகரமான ஆத்ம ஒளி பெறும் நிலை. அதாவது…
1.பதட்டமான காலங்களில் உணர்வின் எண்ணத்தை அவசர வேகத்தில் சொல் ஆற்றலை வெளிப்படுத்தாமல்
2.ஒவ்வொரு கால தருணத்திலும் எண்ணத்தின் சிந்தனையை நிதானப்படுத்தி
3.அத்தருணத்தில் மோதக்கூடிய எந்தச் செயலாக இருந்தாலும்
4.ஒரு நிமிட சிந்தனையால் உண்மையை அறியக்கூடிய நிதானத்தால்
5.மண்பானையை உபயோகிப்பதைப் போன்று உணர்வின் வேகத்தைப் பாதுகாத்தல் அவசியம்.
ஆகவே… நல்நிலையில் “ஏமாற்றும் தன்மையை..” சிந்தனையில் உணர்ந்துவிட்டோம் என்றால்
1.உணர்வை வேகமாகச் செலுத்தி தீய உணர்வலையுடன் நல்லதை மோதவிடாமல்
2.சிந்தனையில் நிதானப்படுத்தும் சொல் செயலால்
3.நல்வளர்ப்பின் நல் ஆத்மாவுடன் தீயதிலிருந்து விடுபட்டு
4.தன் ஆத்மா சிகரத்திற்குச் செல்லும் சீர்படும் சிந்தனையால் ஒவ்வொருவருமே சித்தனாகலாம்…!
கண்ணுக்குத் தெரியாமல் இயக்கும் எண்ணங்களும்… உணர்வின் இயக்கங்களும்
ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
1.நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது… உயிரிலே படுகின்றது… தவறு செய்கின்றான் என்று சொல்கின்றது.
2.கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது (படமாக)
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த மனித உடலில் இருந்து வருவதை இழுத்து ஆன்மாவாக்குகிறது (நம்மிடம் கொண்டு வருகிறது)
4.உயிரான காந்தம் இழுக்கின்றது.
உதாரணமாக நாடாவிலே (கேசட்) ஒலிகளைப் பதிவு செய்கின்றோம். நாடாவை இயக்கி “ஊசி” பக்கம் போனவுடனே நாடாவில் எது பதிவானதோ அதை இழுத்துப் பேசுகிறது (ஒலி எழுப்புகின்றது).
ஆரம்பத்தில் எல்லாம் இப்படி ஊசியை வைத்து உராய்ந்து தான் பதிவானதை மீண்டும் ஒலியாகக் கொண்டு வந்தார்கள்
1.இப்பொழுது லேசரை வைத்து அது (DRIVE) ஓட ஓட அதில் இருக்கக்கூடிய உணர்வுகளை அதை இழுத்து வெளிப்படுத்துகின்றது.
2.ஆனால் உராய்வதில்லை… நாடா தேய்வதில்லை.
லேசரை வைத்துத் தான் இப்பொழுது இயக்குகின்றார்கள் அந்த ஒலிகள் எதிலே இருக்கிறதோ அதை எடுத்துக் கொடுக்கின்றது
அதே மாதிரித் தான்
1.நாம் சுவாசிப்பதை எல்லாம் நமது உயிர் லேசராக இருந்து அதிலே பாய்ச்சிய உடனே இந்த உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதற்கும் சர்குலேஷன் ஆகின்றது
3.அதனதன் குணத்திற்குப் போன உடனே அவை அவை வீரியமடைகின்றது
4.சுவாசித்ததை (அந்த உணவுகளை) எடுத்து அது நன்றாகச் சாப்பிடுகின்றது.
5.அந்த வழியிலே அது (அந்தந்த அணுக்கள்) தெம்பாக இருக்கின்றது
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
தவறு செய்கின்றான் என்று பார்த்த பின் அடுத்து நல்லவை எதை எடுத்தாலும் நம் உடலில் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இது மடங்கப்படும் பொழுது இங்கிருந்து இழுக்கும் சக்தி குறைகின்றது
தவறு செய்தவனின் உணர்வுகளை நுகர்ந்து இது அடைப்பட்ட உடனே
1.நல்லதை இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகிறது.
2.பின் அதற்கு எப்படிச் சாப்பாடு கொடுப்பது…?
அதனால் தான்
1.அதைப் பிளந்து நீங்கள் கொடுக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்
2.யாம் (ஞானகுரு) வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சதா அந்த அலைகள் உங்களுக்குள் பாய்கின்றது.
கொஞ்சம் உங்கள் நினைவை “மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று விண்ணிலே செலுத்தினீர்கள்…” என்றால்
1.”டக்… என்று இதைப் பிளந்து… அந்த ஞானிகள் உணர்வுகளை அது ஓபன் பண்ணிவிடும்.
2.இது சர்குலேஷன் வரும்பொழுது அந்தத் தீமையான இயக்கங்கள் குறையத் தொடங்கும்
3.உங்களுக்குள் நல்ல நினைவாற்றல் வரும்
நீங்கள் வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.
யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி காணாமல் போன பணத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்… எங்கே வைத்தீர்கள் என்ற சரியான நினைவு வரும்.
1.அந்த இடத்திற்கே உங்களை அழைத்துச் செல்லும்… இங்கே இருக்கின்றது பார் என்று
2.முதலில் தெரியவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் ஆட்டோமேட்டிக்காக அங்கு இழுத்துச் செல்லும்
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஒரு நண்பரை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் போதும் இந்த நண்பரை இழுத்துக் கொண்டு வரும்.
ஏனென்றால் அவர் செல்லும் பாதையில் இருந்து இந்த உணர்வுகள் அவரை இயக்கி நாம் செல்லும் பாதைக்கு இழுத்துக் கொண்டு வரும்.
இயற்கையிலேயே நண்பர் மீது பற்று அதிகமாக இருந்தால் அடுத்த தெரு பக்கம் அவர் சென்று கொண்டிருந்தாலும் “நண்பரைப் பார்க்க வேண்டும்” என்று திடீரென்று எண்ணம் வந்தது என்றால் அவர் சென்று கொண்டிருக்கும் பாதையில் குறுக்காட்டி நாம் இருக்கும் பக்கம் இழுத்து வரும்
அட.. இப்பொழுதுதான் நான் உன்னை நினைத்தேன்.. நீ வந்து விட்டாயே…! என்று சொல்வோம். நண்பர் மீது இருக்கும் பற்றின் உணர்வுகள் இப்படி இயக்கும்.
இயற்கையிலேயே இந்த நிலை வரும். இதையெல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சில இயக்கங்கள்.
நாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை நாம் பார்க்க முடியும். இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
தீமை செய்யக்கூடியவர்கள் யாராவது நமக்கு அவ்வாறு எண்ணினால் அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் அது வரும்
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும்… தீங்கு செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள் என்றால்
3.அவர் உடலைப் பாதிக்கும்.
பாதிக்கும் பொழுது தான் நினைப்பார்கள். இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம் என்று நிச்சயம் இதை உணர்த்தும்.
1.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் நினைவலைகள் இங்கிருந்து அங்கே செல்லும்
2.அப்போது நம் நினைவு அவர்களுக்கு வரும்
3.நாம் தொந்தரவு கொடுத்தோம் அல்லவா என்று. இந்தத் திருப்பம் நிச்சயம் அங்கே வரும்.
4.தீங்கு செய்யும் நிலைகளைத் தடைப்படுத்தும் சக்தியாக வரும்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும் அருள் வழியில் சீராகச் செல்லக்கூடியதாக நாம் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்
நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.
நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று… ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே… செயல் கொள்கின்றது.
அந்த ரிஷி சக்திகளின் செயல்… சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்… உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய… அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.
நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.
பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை… உள்ளதை உண்டு மடிகின்றன.
தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.
ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்குப் பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.
மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு… இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து… அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை… “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு…”
தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்… செயலும் கொண்டு… அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக் கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்கள்.
உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை…
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக் கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.
அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக் கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.
ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இன்றைய சமுதாய உணர்வு… செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையை பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.
யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை…!
மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி வலு சேர்த்துக் கொண்ட பின் நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைக்க வேண்டும்.
அவருடைய உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு. நாம் எடுத்துக் கொண்ட ஞானிகள் உணர்வின் தன்மை கொண்டு அங்கே செல்ல வேண்டும் என்று
1.அவர்களை உந்திச் செலுத்தும் பொழுது
2.நேராக சப்தரிஷி மண்டலம் போய்ச் சேர்கின்றது.
சப்தரிஷிகள் என்பவர்கள் உடல் பெறும் உணர்வுகளை அவர்கள் கரைத்தவர்கள். அங்கே சென்றவுடன் நம் முன்னோர்கள் மீண்டும் உடல் பெறும் அந்த உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்கி விடுகின்றது… உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது
கரைத்த பின் அறிவாக இருக்கும் அந்த ஒளி நிலைத்து நிற்கின்றது. அந்தச் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்தில் அவர்கள் சுழலத் தொடங்குகின்றார்கள்.
அதே போன்று குடும்பத்தில் யார் உடலை விட்டுப் பிரிகின்றார்களோ கணவன் இறந்தால் கணவனை முதலில் அனுப்புகின்றோம்… மனைவி இறந்தால் மனைவியை முதலில் அனுப்புகின்றோம்.
சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து கணவன் முதலில் ஒளியாக ஆன பிற்பாடு மனைவி இங்கே இருக்கும் பொழுது
1.அதே உணர்வுடன் கணவன் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி இதை எண்ணப்படும் பொழுது அடுத்து மனைவி உடலை விட்டுச் சென்றாலும் அங்கே சென்று விடும்.
3.அதாவது அந்த உணர்வை எண்ணினாலே ஆட்டோமேட்டிக்காக மனைவியின் ஆன்மா அங்கே சென்றடைந்து விடும்.
நாம் எல்லோரும் சேர்ந்து அந்த உணர்வை நமக்குள் பெருக்குவதற்குத் தான் இப்போது கூட்டாக உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றோம். செய்கிறோம்.
1.இந்தப் பதிவு இல்லை என்றால்
2.அங்கே நாம் யாரையும் அனுப்ப முடியாது.
மனைவி முதலில் பிரிந்தால் மனைவியின் ஆன்மாவைக் கணவன் உந்தி அங்கே சப்தரிஷி மண்டலத்தில் செலுத்திய பின் கணவன் இங்கே எண்ணியவுடன் ஆட்டோமேட்டிக்காக கணவனின் ஆன்மாவும் அங்கே சென்று விடுகின்றது.
யார் பிரிந்தாலும் முதலில் அவர்களை அங்கே அனுப்பி வைத்து விடுகின்றோம். உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைத்து விடுகின்றோம்.
1.அங்கு இணைந்த பின் அவர்கள் உணர்வு இங்கே இருக்கின்றது.
2.அந்த ஒளியின் உணர்வை இங்கிருந்து நாம் பெருக்குகின்றோம்.
3.பெருக்கிக் கொண்டால் வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை
4.உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சப்தரிஷி மண்டலம் தான் நாம் செல்வோம்.
நண்பர்களுக்குள் நன்மை செய்தான் என்று பாசமாக இருக்கின்றனர். ஆனால் சந்தர்ப்பத்தில் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால்…
1.பாசத்தால் எண்ணி “நண்பா நான் போகின்றேன்…” என்று எண்ணினால் நண்பனுடைய உடலுக்குள் தான் அந்த ஆன்மா செல்லும்.
2.அந்த நண்பனும் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தானே “இப்போது போய் விட்டானா…” என்று எண்ணும் பொழுது அந்த உடலுக்குள் தான் செல்லும்.
சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!
ஆகவே… இதற்கு முன்பு மூதாதையர்களை விண் செலுத்தும் அந்தப் பழக்கத்தை நாம் விட்டு விட்டோம். இப்போது மீண்டும் அந்த ஞானிகள் கண்ட வழியினை “உங்களுக்குள் தொடரும்படி செய்கின்றோம்…”
மனிதனான பின் பிறவி இல்லா நிலை அடைந்தவர்கள் அக்காலத்தில் விண் சென்றவர்கள் தான் “முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள்” என்று சொல்வது. சப்தரிஷி மண்டலத்திற்குள் கண்ணுக்குப் புலப்படாது ஒளியாக எண்ணிலடங்காதோர் உள்ளார்கள்.
அவர்கள் பல கோடி ஆண்டுகள் ஆகித்தான் ஒளியின் சரீரமாக உள்ளார்கள் “என்றும் பதினாறு” என்று வாழுகின்றார்கள்.
1.இந்தச் சூரியக் குடும்பம் அழிந்தாலும் அவர்கள் பிற சூரிய குடும்பத்தில் இருந்து ஆற்றல்களைப் பெற்றதனால்
2.அதிலே நஞ்சாக வரும் உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள்.
3.என்றும் பதினாறு என்று அகண்ட நிலையில் எங்கும் செல்லும் திறன் பெற்றவர்கள்
4.ஒரு எல்லையில் இருந்து தனக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள்.
எந்த எல்லையில் இருக்கின்றார்களோ… துருவத்தை எல்லையாக வைத்து சூரியனைச் சுற்றி மற்ற கோள்கள் வருவது போன்றது துருவ நட்சத்திரத்தினுடைய வட்டத்தில் அவர்கள் சுழன்று வருகின்றார்கள் சப்தரிஷி மண்டலங்களாக…! மனிதனாகப் பிறந்து வாழ்ந்தவர்கள் தனித்தன்மை கொண்டு வாய்ந்தவர்கள் தான் அகண்ட அண்டம் பேரண்டம் எத்தனையோ நிலைகள் கொண்டது.
அதிலே எத்தனையோ கோடி ஆண்டுகள் வரப்படும் பொழுது அணுவாகி கோலாகி நட்சத்திரமாகி சூரியனான பின் நட்சத்திரமாகிக் கோளின் தன்மை அடைந்தது பலர்.
இந்தக் குடும்பங்கள் அழிந்தாலும் அதற்குள் எத்தனை நிலையில் உள்ளது
ஒரு சூரிய குடும்பமே எத்தனை கோடி மைல்கள் எல்லை விஸ்தீரணம் கொண்டது. அதேபோன்று அடுத்த சூரிய குடும்பத்தை எடுத்தாலும் அது எத்தனை கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது.
நாம் இந்த 2000 சூரியக் குடும்ப வட்டத்தில் தான் வாழுகின்றோம். ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான் சுழலுகின்றது. இது வேறு 2000 சூரியக் குடும்பத்திலிருந்து வரக்கூடிய சக்தியை எடுத்து தான் வாழுகின்றது.
இப்படி ஒவ்வொன்றிலும்
1.மனிதனாக உருப்பெற்றவன் ஒளியாக மாறிய பின் தனித்தன்மை வாய்ந்ததாகச் செல்லுகின்றது
2.இதற்கு அதற்கும் சம்பந்தமில்லாது செல்கின்றது… துருவத்தின் எல்லையில் தான் வாழ்கின்றார்கள்.
ஆகவே என்றும் 16 என்ற அந்த நிலையை நாம் அடைய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் தேய்பிறை தான்.
ஆகவே யாராக இருந்தாலும் நாம் பலருடைய ஆன்மாக்களை விண்ணுக்குச் செலுத்துகின்றோம்… மூதாதையர்களை அனுப்புகின்றோம்.
1.இவ்வாறு செய்து கொண்ட பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால்
2.யாருடைய தயவும் நமக்குத் தேவையில்லை நாம் அங்கேதான் செல்கின்றோம்.
தியானத்தில் அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… மூதாதையர்களின் உயிரான்மாக்கள் அங்கே இணைய வேண்டும் என்று இந்த உணர்வை நாம் வளர்க்க வளர்க்க
1.உடலை விட்டு நாம் சென்றால் அங்கே தான் உயிர் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர
2.புவியின் ஈர்ப்புக்குள் இருக்காது…!
இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் ஒரு தொடர்பு வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஆன்மாக்களை அங்கே அனுப்புகின்றோம்.
எல்லோரும் சேர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியம் ஆகும் பொழுது நம் குருநாதர் காட்டியபடி ஒளியின் கூட்டமைப்பாகின்றது.
நம் சித்தம் தெளிவாக வேண்டும்
காட்சி:
அழகான தடாகத்தில் அன்னப்பட்சி நீரில் நீந்துவதைப் போன்றும்… படகில் மனிதர்கள் அமர்ந்து செல்வதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்:
மனிதனுடைய ஞானம் “ஒன்றைப் பார்த்தவுடன்…” அதனைத் தன்னுடைய செயலுக்கு வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சிந்தனையில் அதைச் செயலாக்குகின்றான்.
நீரில் மிதக்கக்கூடிய அன்னப்பட்சியின் நிலையைப் பார்த்துத் தானும் அதைப் போன்று செயல்படுத்திக் கொள்ளும் அமைப்பாக (படகை) உருவாக்குகின்றான்.
1.இப்படிப்பட்ட சிந்தனையின் செயலுக்கு வலுப்படுத்தும் மனிதர்கள்
2.வாழ்க்கைத் தொடரில் வெற்றி பெறுகின்றார்கள்.
ஆனால் கற்பனையில் எண்ணக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை சஞ்சலம்… சோர்வு… பிணி… என்று அடைகின்றனர்
1.தன் ஞானத்தின் வலுவைத் தான் எண்ணிய கற்பனை உணர்வுடன்
2.வாழ்க்கையை ஒப்பிடும் சிந்தனையற்ற நிலையினால் அவ்வாறு ஏற்பட்டு விடுகின்றது.
கற்பனையின் உணர்வில் தான் எண்ணியதை… கவுரவத்தின் உணர்வாகச் செயலாக்குபவன் வாழ்க்கையில் தான் முன்னேறுவதில்லை.
ஆக்கத்தின் ஆக்கமாய் உணர்வின் எண்ணத்தைச் சிந்தனையில் சீர்படுத்தும் மனிதனின் குணம்… வாழ்க்கையின் செயல்பாட்டில் வெற்றி காணும் நிலை ஏற்படுகிறது
ஒவ்வொரு பொருளிலுமே அப்பொருளின் மாற்றம் எப்படி ஏற்படுகின்றது…? அதனுடைய “உஷ்ண அலையின் மாறுபாடு நிலை… சமைப்புநிலை… ஏற்படும் தன்மை கொண்டுதான்…” ஒவ்வொரு கருவின் உருவும் வளர்கின்றது.
வளர்ச்சியில் வெளிக் கக்கும் கழிவு நிலை கொண்டு தான்… அதனின் சத்து நிலையை ஒவ்வொரு செயலிலும் அச்செயல் நிலையின் “உன்னத நிலை” உருவாகின்றது.
பூமியின் ஈர்ப்பில்… உயர்ந்த ஒவ்வொரு கனி வளங்களும் வளரக்கூடிய நிலையில் அவ்வளர்ச்சியின் உயர்ந்த தன்மையான உலோகங்களை நாம் பிரித்து எடுக்கின்றோம்
சாதாரணமாகத் தங்கப் படிவங்கள் வளர்ந்துள்ள மண்ணில் உள்ள தங்கப் பாளங்களை வெட்டி எடுத்து… அதைப் புடம் போட்டுத் தங்கமாக்குகின்றோம். இதைப் போன்றே பூமியில் உள்ள கனி வளங்களை நமக்கு வேண்டிய பக்குவத்திற்குப் பல நிலைகளைச் செய்வித்துச் செயல்படுத்துகின்றோம்.
இதைப்போன்று இச்சரீரத்தின் உண்மை நிலையையும் நாம் உணரல் வேண்டும்.
நாம் எடுக்கக் கூடிய எண்ணத்தின் உணர்வின் உஷ்ண ஓட்டத்தால் நாசி எடுக்கும் சுவாசம் கொண்டு
1.நாசியில் (மூக்கில்) சளியும்
2.பார்க்கும் பார்வையின் ஒளி ஈர்ப்பைக் கொண்டு கண்ணெடுக்கும் ஒளி ஈர்ப்பால் கண்ணின் பீழையும்
3.செவி கேட்கும் ஒலி ஈர்ப்பால் காதில் அழுக்கும்
4.வாய் பேசும் ஒலி அலையால் வாயில் உமிழ் நீரும்
5;உண்ணும் உணவால் மலமும் சிறு நீரும்
6.பால் உணர்வின் உஷ்ண அலையின் தொடர்பால் பெண்ணிற்கு மாதவிடாயும் ஆணிற்கு விந்து நிலையும்
7.உடல் உறுப்பின் செயலில் வேர்வையும்
8.அந்தந்த உறுப்பின் அவயவங்களின் செயலுக்கொப்ப வெளிப்படும் கழிவுகள் நம் உடல் உறுப்பிலேயே செயல் கொள்கின்றதல்லவா…!
அதைப் போன்றே மனித வாழ்க்கையில் எண்ணத்தின் உணர்வில் மோதப் பெறும்… நடந்தது… நடக்க வேண்டியது… நடப்பது எதுவாகிலும்… உணர்வின் ஜீவித எண்ணமுடன் ஓடக் கூடிய எல்லாமே இவ்வுயிர் ஆத்மாவின் சரீர வாழ்க்கையில் எலும்பில் ஊனாகப் பதிந்து விடுகின்றது.
ஊன் நிலைக்கொப்பத்தான் ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும்… இருக்கும்.
1.எதை அதிகமாக எடுத்து மனித உணர்வின் எண்ணம் பேசிச் செயல்படுகின்றதோ
2.அந்த நிலைக்கொப்ப ஊனின் பதிவு வினையாக வாழ்க்கையில் வெளிப்படுகின்றது.
கண் பார்த்துப் பொருளறியும் நிலையால் கண்ணில் எப்படிப் பீழை ஏற்படுகின்றதோ அதைப் போன்று
1.உணர்வெடுத்து நாம் பேசியது.. பேசப் போவது என்ற எண்ண உணர்வே ஊனாகி…
2.ஊனே வினையாகி… வினையே வாழ்க்கையாக… அந்த வாழும் நிலையை மாற்றுவது என்றால்
3.இச்சரீர உணர்வின் விதியால் மதி கொண்ட உயர் ஞானத்தால் மெய் ஞானம் பெறும் ஏழாம் நிலையில்
4.இது நாள் வரை இங்கே சொன்ன வழி முறைக்கொப்ப விண்ணிலிருந்து பெறும் மின் காந்த ஒளி சக்தியைக் கவர்ந்து
5.சரீர உணர்வுடன் இவ் ஊனில் பதிவாகி உள்ள பதிவு நிலையை மாற்றக்கூடிய அந்தச் செயல் தன்மைக்கு
6.ஐம்புலனின் செயலின் வீரியத்தைக் கண் காது மூக்கு வாய் உணர்வு என்ற
7.ஐம்புலனின் செயலையும் ஒரு நிலையாக்கி… மதி கொண்டு மெய் ஞானம் பெற வேண்டும்.
மெய் உணரும் உண்மையால் பரந்து கிடக்கின்ற இயற்கையில் உண்மையின் உணர்வைச் சித்தத்தின் செயலாகச் சீர்படுத்துதல் வேண்டும்.
கற்பனைக் கோலம்… கலங்கிடும் காலம்…
அனுபவ ஆற்றல்… ஆக்கத்தின் ஆக்கம்…!
சஞ்சலத்தில் சச்சரவை… சங்கடத்தில் சிக்கலின்றி சிந்தனையில் சீர்தூக்கினால்…
சிந்தைதனில் சீர்படுத்த… சிந்தையின் செயலே சீர்படும் சிகரமாகுமே…!
பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது
சாமிக்கு குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார்…! நாம் எங்கே பார்க்கப் போகின்றோம்…? என்று எண்ணினால் யாம் சொல்லக்கூடிய அந்த உயர்ந்த உணர்வுகளைப் பெற முடியாது.
யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே…
1.என்னமோ அவர் குருநாதரிடம் சக்தி பெற்றார்
2.நாம் என்றைக்கு எதைப் பெறப் போகின்றோம்…? என்று எண்ணி விட்டுவிட்டால்
3.எம்முடைய உபதேசங்கள் உங்களுக்குள் பதிவும் ஆவதில்லை… உதறிவிடுகிறோம் என்று அர்த்தம்.
குருநாதர் எனக்குக் கொடுத்ததை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… பெற முடியும் என்ற அந்த ஆசையிலே தான் இதைச் சொல்கின்றேன். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும்.
தீமைகள் உங்களைத் தாக்குகிறது என்றால் அதை எடுக்கக் கூடாது… “அதைத் தான் உதற வேண்டும்….”
ஏனென்றால் நம்முடைய உடலில் எத்தனையோ விதமான குணங்கள் உண்டு. அந்தந்தக் குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்களும் உண்டு.
நீங்கள் சங்கடப்படவே வேண்டாம். சங்கடப்பட்டதைக் கேட்டு அத்தகைய அணுக்கள் உடலில் விளைந்திருந்தால்
1.குடும்பத்தில் கன்னா…பின்னா… என்று ஒருவர் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.அதைக் கேட்ட பின் அவரைப் பார்த்தபின் நம் உடலில் விளைந்த அணுக்கள் அதை உணவாக எடுத்து இங்கே வந்துவிடும்.
3.அறியாமலே நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தும்… குடும்பத்தில் சங்கடமான சொல்லைச் சொல்ல வைத்துவிடும்.
அந்த நேரத்தில் அணுக்கள் மீண்டும் தன் உணர்வை உணவை எடுக்காதபடி அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஈஸ்வரா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும் என்று பல முறை அதை எண்ண வேண்டும்.
அவ்வாறு எண்ணிவிட்டு மகரிஷிகள் அருள் சக்தி சங்கடப்பட்டவர்கள் பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையிலே நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும்… என்று இந்த எண்ணத்தை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.
இதை எண்ணினால் அவர்களுக்கு அது கிடைக்கும்.
1.ஆனால் அவர்கள் எண்ணவில்லை என்றாலும் அவருடைய சங்கட உணர்வு நமக்குள் விளையாதபடி நாம் மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் அடிக்கடி நான் இதை சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
ஏனென்றால் நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது தான் உயிருடைய வேலை.
1.எண்ணியதைத் தான் வாழ்க்கையில் வளர்க்க முடியுமே தவிர
2.ஒருவருடைய நிலைகளை நாம் பிரதிபலன் எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது.
ஆனால் அந்தப் “பிரதிபலன்… எதிர்பார்ப்பு…” எதுவாக இருக்க வேண்டும்…?
நாம் பார்த்த குடும்பம் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அனைத்தும் நலம் பெற வேண்டும் அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும் இந்த குடும்பம் பேரானந்தம் பெற வேண்டும் நாம் எண்ணி அதை அவர்களுக்குப் பாய்ச்சும் போது
1.அதன் வழி அவர்கள் வாழ்க்கையில் செயல்பட்டு அங்கே நல்லதனால்
2.அதைக் கண்டு நாம் மகிழ வேண்டும் அதைத் தான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.
மற்றவர்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும் என்று அதை “நம்முடைய எதிர்பார்ப்பாக” வளர்க்க வேண்டும்.
1.அந்த எதிர்பார்ப்பு நல்ல உணர்வின் அணுக்களாக நமக்குள் உருவாக்கும்…
2.அத்தகைய அணுக்களாக உடலில் விளையும் தீமைகள் நமக்குள் புகாது தடுக்கச் செய்யும்
ஆனால் பற்றை வேறு பக்கம் வைத்து. எதிர்பார்ப்பை அதிலே வைத்தோம் என்றால் என்ன ஆகும்…?
ஒருவர் மீது நமக்குப் பற்று அதிகமாக இருந்தால் அவர் என்ன தப்பு செய்தாலும் “சரி” என்று சொல்வோம்
அதே சமயத்தில் பிடிக்காதவர்களாக இருந்து என்னதான் நல்லதைச் செய்தாலும் உடனே “குறை கூறும் நிலைகள் தான்” நமக்குள் வரும். அவர்களைப் பார்த்த உடனே இந்த மாதிரி எண்ணங்கள் தான் வரும்.
இதைப் போன்ற நிலையில் இருந்து அந்த விஷத்தை ஒடுக்கும் ஆற்றலை நாம் பெற வேண்டும்
1.ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.நமக்குள் அந்தத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.
உடலின் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால் “மனிதன் – தன் உயர்வை அறிய முடியவில்லை”
இங்கே உணர்த்தப்படும் உண்மை மெய் ஞானத்தை… மனிதன் பெற வேண்டிய உண்மை சக்தியின் வளர்ச்சி நிலையை… ஒவ்வொருவரும் பெறல் வேண்டும்.
பூமியின் சுழற்சியும் பூமியின் வளர்ச்சியும் பூமியின் பல கோடி வளர்ப்பு நிலையில் ஜீவ பிம்பம் நிலை பெற்ற உணர்வுகளில் மனிதனுக்குக் காட்டப் பெற்ற உயர்வு சித்தம் என்பது அன்றிருந்த மனிதர்கள் சைவ சித்தாந்தத்தை மனிதர்களுக்கு உணர்த்தியது தான்…!
இயற்கையின் உண்மைகளை அறிய மனிதர்கள் உணர்வின் ஒட்டத்தில் ஜீவ வாழ்க்கைக்கு ஆறறிவின் முதிர்வை மெய் ஞானம் கொண்டு சித்தத்தை அறிய… சைவ சித்தாந்தத்தில் உண்மைகள் வடிக்கப் பெற்றது.
1.உயிரணுவின் உணர்வை உயர்த்தக்கூடிய ஒலி.. ஒளி… நீரைக் கொண்டு…
2.எடுக்கும் எண்ணத்திற்கு எண்ணம்தான் உணர்வாகி… உணர்வு தான் ஆத்மாவின் வலு என்பதனை உணர்ந்து
3.தெய்வ குணங்களை வணங்கும் எண்ணத்தை வழிகாட்டிய முறை நான்கு வேதங்களாய்ப் பிரிக்கப்பட்டு
4.மந்திர ஒலிகள் ஜெபிக்கப்பட்டு மந்திர ஒலிகளுக்கு வலுவாக்க வேள்விகளை நடத்தி
5.அதிலிருந்தே மனிதனை மனிதனே உயர்த்தி… தாழ்த்தி… வழி வந்ததின் வழியினை
6.நாம் இன்று நம் சிந்தனையில் உணர்ந்திடல் வேண்டும்.
இன்றைய விஞ்ஞானத்தில் வளர்த்துக் கொண்ட முறைகள் எல்லாமே மனிதனுடைய தேவையின் அடிப்படையில் “உடலின் சுகத்திற்கே” முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த விஞ்ஞானத்தின் கதியால் மனித உணர்வு உயர்வு எங்கிருக்கின்றது…? என்பதை மனிதன் மெய் ஞானத்தில் உணரவில்லை.
அணு ஆயுதங்களும் இன்று விஞ்ஞானத்தில் சுகம் கொள்ளும் ஒலி ஒளி யாவையுமே இவ்வுடலின் தேவைக்குத்தான் உள்ளது. மனித விஞ்ஞானம்… மருத்துவம்… யாவையுமே உண்ண… உடுக்க… இருக்க… உடலின் தேவைக்குச் சுகம் பெற வேண்டியதாகத் தான் உள்ளது.
1.ஆனால் மனித ஜீவ வாழ்க்கையில் மலர வேண்டிய…
2.மெய் ஞானத்தால் மனிதன் பெறக்கூடிய உண்மையை உணர்ந்தோமா…?
இந்த உடலுக்கு என்று சுகம் காண… மனித ஞானம் எல்லாமே விஞ்ஞானம் கண்டு… அதனால் விபரீத சுகமாக அல்லவா… இன்று நடக்கும் கலியில் சுகம் காணும் நிலை…!
உடல் வாழ்க்கை உள்ள வரைக்கும்… இன்ப வாழ்க்கை இனிது நடக்க… மனித உணர்வின் தேவை என்பது “செயற்கையிலேயே ஒன்றி விட்டது…” இயற்கையின் வித்தாக இருந்த உலகத்தை மாற்றும் வழியாகவே மாறி விட்டது இன்றைய நிலை.
எந்தச் சுகத்தைப் பெற மனித உணர்வின் வேகம் விஞ்ஞானத்தில் சென்றதோ… அவை எல்லாம் செயற்கையின் குறுகிய கால சுகம் தான்..!
1.மனித வாழ்க்கையில் உணர்வின் குணத்தைச் சமம் கொண்டு
2.மெய் ஞானத்தை உணரும் ஆத்ம பலம் பெறும் சுகம் ஒன்றே
3.ஏகாந்தத்தில் உணரும் ஏகாந்த சுகம்.
உயிர் பெற்ற ஜீவ ஆத்மாவின் முதிர்வு கொண்ட மனித உயர்வை… மெய் ஞானத்தால் மனிதனுக்கடுத்த தெய்வ குணங்களால்… தெய்வச் செயலைத் தன் சித்தத்தின் சித்தாக்கிக் கொண்டால் பிறப்பின் முதிர்வுக்கு அடுத்த நிலையான… “பறக்கும் நிலையை” மனிதன் என்றோ பெற்றிருக்கலாம்..!
மனிதனின் உணர்வில் இனிமையை ரசிக்க… இன்பமாய் இருக்க…வேண்டும் என்றால் அது… மெய் ஞானத்தின் சித்தத்தால் தான் பெற முடியும்.
1.இன்று செயற்கையில் காணும் நிலை யாவையுமே குறுகிய கால நிலை தான்
2.வழியறிந்து வளரும் நிலை “உண்மையின் சக்தி நிலை” பெறுவது ஆகும்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நான் (ஞானகுரு) உலக அனுபவம் பெறுவதற்காக குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்தார்.
பல தொல்லைகளான இடங்களுக்குப் போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது… பயம் வருகின்றது.
அப்பொழுது குருநாதர் அதை உன்னால் அடக்க முடியவில்லை என்றால் “அது தானே உன்னை இயக்குகின்றது… அது தானே உன்னை ஆட்சி புரிகின்றது… நீ அல்லவா அதை அடக்க வேண்டும்…” என்பார்.
அது உள்ளே சென்று உன்னை இயக்குகின்றது. உன்னை வேதனைப்படச் செய்வது யார்…?
1.”வெளியில் இருந்து தான்” உன் உடலுக்குள் போகின்றது.
2.அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
3.நான் தீமையைத் தடுக்கும் ஆயுதம் கொடுத்திருக்கின்றேன்.
4.நீ ஏன் அதைப் பயன்படுத்தித் தடுக்கவில்லை…?
5.தடுக்கவில்லை என்றால் அது அந்த வேலையைச் செய்யும் என்று என்னைத் தெளிவாக்கினார்.
ஆக நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.
ஒவ்வொருவர் உயிரைக் கடவுளாகவும் ஒவ்வொரு உடலைக் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.
அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து… அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்…” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.
அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான… இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.
“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.
யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.
அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.
“அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்… அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்…” என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.
1.அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்.
2.எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும்
3.அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால்
4.இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை.
அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.
இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.
ஒரு விபத்தையோ மற்ற அதிர்ச்சி தரக்கூடிய நிலைகளை உற்றுப் பார்த்தால் உடனடியாக ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
விபத்தில் உடலை விட்டு ஆன்மா பிரிந்திருந்தால் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அடிபட்டிருந்தால் அவர்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் பூரண குணம் அடைந்து சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும். அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் நினைக்க வேண்டும்.
உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போகின்றோம். ஆனால்…
1.தீமைகளை நமக்குள் புகாது தடுக்கும் நிலையை எண்ணாதபடி நாம் செய்தோம் என்றால்
2.அங்கே நடந்த விபத்தின் வேதனைகள் நமக்குள் வந்து நடுங்கச் செய்துவிடும்.
3.அதைப் பார்த்ததும்… உடனே “கிடு..கிடு…” என்று உடல் நடுக்கமாகிவிடும்
4.நம்முடைய அடுத்த நல்ல செயல்கள் அனைத்துமே தடையாகி “இரண்யன்” ஆகிவிடும்.
5.அதாவது நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும். அதனால் தான் இரண்யன் என்று பெயர் வைக்கின்றார்கள்.
இந்த மனித வாழ்க்கையில் மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும்…? என்ற நிலையாகக் காவியங்களாகப் படைத்துள்ளார்கள் ஞானிகள். ஏனென்றால் இயற்கையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்…? என்பதற்காக இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் காட்டினார்கள்.
அந்த மெய் ஞானிகள் உணர்த்தியதைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றோம்.
வேதனை என்ற விஷத்தின் இயக்கமும் விஷத்தை வென்ற துருவ நட்சத்திரத்தின் இயக்கமும்
ஒருவருக்கு நன்மைகளைச் செய்கின்றோம்… அதனால் நாம் சந்தோஷப்படுகின்றோம். ஆனால் நம்மிடம் உதவி பெற்ற அந்த மனிதனோ அவருடைய சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார் அல்லது வேதனைப்படும்படியாக ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்
வேதனை என்பதே விஷம். விஷத்தை உட்கொண்டால் எப்படி மயங்கச் செய்யுமோ இருளடையச் செய்கின்றதோ சிந்திக்கும் தன்மையையும் இழக்கச் செய்கின்றதோ இதைப் போன்று நாம் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் சிந்தனை குறைகின்றது… நம் சொல்லின் தன்மையும் மறைந்து விடுகின்றது.
1.மறைந்த பின் எவ்வளவு தான் நல்ல உபதேசங்களைக் கொடுத்தாலும்
2.சரியான வழியைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
பாலில் விஷம் பட்டால் குடிப்போரை அது மயங்கச் செய்யும். நல்ல பாலை அதிலே அதிகமாக ஊற்றும் பொழுது அந்த விஷத்தின் தன்மை குறையும்.
அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ள பால் அனைத்தும் வீணாகி விடுகிறது. அந்தப் பால் முழுவதுமே விஷம் ஆக்கிரமித்துக் கொள்கின்றது.
1.ஆயிரம் குடம் நல்ல பாலை அதிலே ஊற்றினால் விஷம் சிறுத்து விடுகிறது
2.அந்த விஷம் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது
அது போல் ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் ஒரு தடவை வேதனைப்பட்ட நிலைகளை நல்லதாக்க முடியும்.
இல்லை என்றால் வேதனை தாங்காது… தாங்குமோ…? அதற்குண்டான மனமில்லை. வேதனையே ஆக்கிரமிக்கும் சக்தியாக மாறுகின்றது வேதனை என்ற விஷத்தை நுகரப்படும் பொழுது கண்களைப் பார்த்தால் கரு நீலமாகத் தெரியும்… ஒளி மங்கியே தெரியும்.
இத்தகைய வேதனைப்பட்டு விட்டால் ஒரு புத்தகத்தையோ அல்லது ஒரு கணக்கையோ பார்த்துப் படிக்க வேண்டும் என்று
1.அந்த எழுத்துக்களைப் பார்த்தாலும் அந்த எழுத்துக்கள் சீராகத் தெரியாது
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்புத் தப்பாகத் தான் படிக்க வேண்டி வரும்.
இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
அதிகாலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் வலிமைப்படுத்த வேண்டும்
ஆக… ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தாலும் அவர் தவறான வழியில் செயல்படும்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படுகின்றோம்.
சந்தர்ப்பம் அதை நுகரப்படும் பொழுது வேதனை உருவாக்கும் அணுவாக உடலில் உருவாகின்றது அந்த வேதனையான அணு உருவாவதற்கு முன்
1.பிறர் படும் வேதனைகளைப் பார்த்த உடனே
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று
3.புருவ மத்தியில் இடைமறித்து உயிருடன் ஒன்ற வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று சிறிது நேரம் அதை ஈர்க்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… ஜீவான்மா பெற வேண்டும் என்று நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.
அப்படிச் செலுத்திய பின்… நம்மை வேதனைப்படும்படி யார் செய்தார்களோ அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் தெளிந்த மனம் அவர்கள் பெற வேண்டும் என்று
1.நாம் அவனைப் பற்றி எண்ணி வேதனைப்பட்ட உணர்வை
2.இவ்வழியில் நமக்குள் இணைத்து அந்த அணுவாக நமக்குள் மாற்ற வேண்டும்.
ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய… நமது உயிர் “ஓ” என்ற ஜீவ அணுவாக மாற்றுகின்றது ஆனால் உற்றுப் பார்த்து வேதனை என்ற உணர்வு வந்தவுடனே விஷத்தின் தன்மை அதிகம்.
ஆனால் அந்த விஷத்தை முறிக்கும் வல்லமை பெற்றது நட்சத்திரத்தின் ஆற்றல்.
உதாரணமாக விஷத்தின் தன்மை ஒரு மனிதனுக்குள் சாடி விட்டால் எருமை மாட்டின் சாணத்தைக் கரைத்து அதன் மீது இரண்டு கால் பாதங்களை வைத்தால் உடலுக்குள் சென்ற விஷத்தை முறித்து விடுகின்றது.
ஏனென்றால் எருமை மாட்டிற்கு விஷத் தன்மை ஜாஸ்தி. விஷத்தைத் தன் உடலாக ஆக்கிக் கொண்டு நல்லதை அதனுடைய சாணமாக மாற்றுகிறது.
இது எல்லாம் வைத்தியர்கள் தான் கொடுக்கும் மருந்துகளில் பேதிக்கோ மற்ற நிலைகள் அதிகமாகச் சேர்த்துவிட்டால் இந்த நிலை ஆகிவிடும்
1.அப்பொழுது எருமை மாட்டுச் சாணத்தை கரைத்து அதில் சிறிது நேரம் பாதத்தை வைக்கும்படி செய்வார்கள்… அதை முறித்து விடும்.
2.உள்ளுக்குள் சாப்பிட வேண்டியதில்லை… பாதத்தில் வைக்கப்படும் பொழுது அதை முறிக்கும் ஆற்றல் வருகிறது
3.எருமை மாட்டு சாணத்திற்கு விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி உண்டு
4.நஞ்சினை மாற்றிடும் சக்தியாக அதனுடைய சாணம் வெளிப்படுகிறது
வேதனைப்படும் உணர்வுகளை நாம் எப்போது நுகர்கின்றோமோ அல்லது செவிகளில் கேட்கின்றோமோ அந்த உணர்வின் உணர்ச்சிகள் உந்தி கண்கள் உற்று நோக்கும்… அதே வேதனை உணர்வை நுகரச் செய்யும்
உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் உடல் முழுவதும் சுழலத் தொடங்கும். உடல் முழுவதும் அந்த வேதனை சுழலப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களின் அணுக்களிலும் இது சாடி விடுகின்றது.
விஷம் ஊடுருவி எதிலும் கலந்துவிடும்
1.நல்ல குணங்களை அதற்குப்பின் என்னதான் எண்ணி எடுத்தாலும் இந்த விஷம் அந்த நல்ல குணங்களை அடக்கிவிடும்.
2.நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சரி வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்லி விட்டால்
3.அடுத்தாற்போல் “அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும்… விட்டு விடுங்கள்… என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா…!
4.உங்களுக்கு என்ன தெரியும்…? என்பீர்கள்.
இது எல்லாம் இயற்கையின் நியதிப் பிரகாரம் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இப்படித் தான் இயக்கும். அதை எல்லாம் மாற்றி அமைக்கும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இத்தனை விளக்கங்களையும் சொல்கிறோம்.
தெய்வ குணத்தை வளர்ப்பதே “சைவ சித்தாந்தம்…”
ஜீவன் பெற்ற அனைத்து ஜீவன்களுக்குமே ஞானம் உண்டு. ஞானத்தை எதில் செலுத்துகின்றோமோ அச்செயல்தான் நடக்கின்றது.
1.ஞானத்தை மெய்யாக ஆக்கும் உயர் ஞானத்தை உணரும் சித்தத்தால்
2.உண்மையை வளர்க்கும் சைவ சித்தமாக்க வேண்டும்.
உணர்வில் வளர்க்கப்படும் எண்ணங்கள் “பிறிதொன்றை வளர்க்கவல்ல…” உயர் குணமுடன் தெய்வ குணங்களைப் பெறுவது சைவத்தின் சித்தம்.
ஆனால் அசுர குணங்களை அரக்க குணமாக எண்ணக்கூடிய உணர்வு அசைவமாகின்றது. அதனுடைய தொடர் அலையில் வளர்ப்பின் நிலை யாவையுமே வளர்வற்ற சிதறும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.
இன்று இப்பூமியில் காற்றலையில் கலந்துள்ள அமிலத் தன்மை திடமாகி அத்திடத்தை நாம் நுகரும் பொழுது அதனுடைய வாசனை அதிகமாக வீசுகின்றது.
1.அதனையே சமைக்கும் பொழுது
2.திடத்தைக் காட்டிலும் வேகமாக அதனை நுகர முடிகின்றது.
சமைப்பின் பொருள் அனைத்தும் காற்றலையில் இருந்துதான் திடப்பட்டு செயலுக்கு வருகின்றது.
செயல்படும் பொருளைப் பார்க்கும் பொழுது (கண்களால்) அது “உறுதிப்படுத்தப்பட்ட உண்மை…” என்று அறிகின்றோம். உண்மை எதிலிருந்து வருகின்றது…?
இக்காற்றலையில் எவை எவையெல்லாம் கலக்கப் பெற்றுள்ளனவோ அவை தான் திடமாகிச் செயலாகின்றது. அதைப் போன்று…
1.வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள திடப் பொருளை நம்பி
2.அதைத்தான் உண்மை…! என்று நாம் உணர்ந்து
3.இந்த உடலுக்கு மட்டும் வாழுகின்றோம்.
உணர்வலையாக எண்ணுவதை… காற்றலையில் கலந்துள்ள உயர்ந்த நிலையை… தனக்கொத்த உணர்வலையின் எண்ணமுடன் “வலுப்படுத்தக் கூடிய வளர்ச்சிக்குத் தன் சித்தத்தைச் சைவமாக்க வேண்டும்…”
திடத்தின் உடல் வாழ்க்கையில் வாழக் கூடிய வழித் தொடர் யாவையும் அசைவம் தான்.
சித்தத்தால் எடுக்கும் மெய் ஞானத்தைத் தன் ஞானமாக்கும் உயர் ஞானி… தன் ஆத்மாவை அழிவில்லா ஒளித் தன்மையாக… என்றுமே அழியா நிலை கொண்டு ஏகாந்தத் தன்மை பெறுகின்றான்.
1.ஏகாந்த நிலைக்கும்…
2.இவ்வுடலின் உணர்வின் எண்ணத்தைச் சைவமாக்கும் தெய்வ குணத்திற்கும்… தொடர்புண்டு.
ஏனென்றால் இஜ்ஜீவ வாழ்க்கையில் சரீர உணர்வின் எண்ணம்.. சங்கடத்துடன்… சலிப்புடன்… மோதப்படும் உணர்வால் மனிதன் தன்னையே அசைவமாக்கிக் கொள்கின்றான்.
தெய்வ குணத்தைத் தன்னுள் வளர்த்து… மெய் உணரும் வழியை அறிய… தெய்வ குணங்களைப் பெற ஒவ்வொருவரும் அதை உரமாகத் தான் எடுத்து வளர்தல் வேண்டும்.
ஒவ்வொரு ஆத்மாவையுமே தெய்வ குணங்களை வளர்க்கும் சைவத்தின் சித்தாகத் தன் உணர்வின் செயல் அமையும் பொழுது தன் வலுவின் வளர்ச்சியால் மெய் ஞானி சித்தனாகின்றான்.
சித்து நிலையின் அஷ்டமா சித்தினால் அகிலத்தையும் அறியக்கூடிய வளர்ச்சி நிலையின் வளர்ப்பால் ரிஷியாக முடியும்.
இரு மனத்தின் திருமணமே
இல்லறத்தின் நறு மணமே
இறையுணர்வின் வழியறிந்தே
இவ்வுலகின் காவியத்தில்
இருளகற்றும் ஒளிச்சுடராய்
இனியதொரு வாழ்வமைப்போம்இடும்பனான குணமகற்றி
இறையருளின் நற்குணத்தில்
ஈன்றெடுக்கும் கனியமுதே
ஈசனருள் பொக்கிஷமே…!இல்லத்தில் இனிய வித்திட்டு
இனிய குண வளர்ப்பாக
இல்லறத்தில் நீர் ஊற்றி
இன்பத்தின் இனிமை பெற்றிடவேஈசன் அருளில் உதித்த நாம்
ஈன்றெடுத்த தெய்வமாய்
ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்.
நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!
வாழ்க்கையில் எத்தனையோ அழுக்குகளை (தீமைகளையும் கஷ்டங்களையும்) பார்க்கின்றோம்… வருகிறது. “அது வந்து கொண்டே இருக்கும்…”
வீட்டையும் உடலையும் உடையையும் சமையல் செய்வதையும் மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. அது போல் அதை நாம் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத் தான் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க எடுக்க உங்கள் பற்று துருவ நட்சத்திரத்துடனே இணைகின்றது… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது
3.பற்று துருவ நட்சத்திரத்தின் மீது வரப்படும் பொழுது பூமியில் பற்றற்றுப் போகின்றது.
இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்.
இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலை வைத்து நாம் நிரந்தரமான சொந்தத்தை உருவாக்க வேண்டும். பிறவி இல்லா நிலை என்னும் அந்தச் சொந்தத்தை நாம் கொண்டாட வேண்டும்.
பகைமை அகற்றும் அருள் உணர்வுகளைச் சேர்த்து விட்டால் என்றென்றும் நமக்கு அது உறுதுணையாக இருக்கும்.
1.விண்ணிலிருந்து வரும் நஞ்சினை அகற்றி அதை ஒளியாக மாற்றிடும் திறன்
2.இந்த உடலை வைத்துத் தான் நாம் அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.
இன்றைய செயல் நாளைய சரீரம்… நேற்றைய செயல் இன்றைய சரீரம். ஒவ்வொன்றும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் தீமைகள் அகற்றிடும் உணர்வாக… நல்லதையே வளர்த்து நல்லதையே எண்ணிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.
இதை எதற்காகச் சொல்கிறொம் என்றால்
1,இந்தக் காற்று மண்டலம் ஒரு சாக்கடையாக இருக்கின்றது
2.இதற்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கின்றது
3.அதை வலு கொண்டு நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வரும் தீமையைப் பிளக்க வேண்டும்
4.தீமையான உடலைப் பிளக்கும் சக்தி பெற வேண்டும்
உடலை விட்டுப் பிரிந்து சென்றால் தீமையைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் அருள் சக்தி கொண்டு பிறவி இல்லா நிலை அடைய உதவும். ஒவ்வொருவரும் இதைப் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.
ஆகவே யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியை விரயமாக்காதபடி செயல்படுத்த வேண்டும் டிவி ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள்.
அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைத்தால் அது வேலை செய்கிறது. இது போன்று நாம் தொழில் வியாபாரத்தில் எத்தனையோ பதிவுகளை நமக்குள் வளர்த்து வைத்திருக்கின்றோம்
அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் கொடுக்கல் வாங்கலில்…
1.சரியானபடி நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்தவருடைய நினைவு தான் அதிகம் வரும்
3.பாவிப் பயல் இந்த மாதிரிச் செய்தான்… என்னை ஏமாற்றுகின்றான்… என்ற “அந்த ஸ்டேஷனைத்தான் நாம் அடிக்கடி திருப்பி வைப்போம்…”
இதற்கு தகுந்தாற் போல் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதாவது செய்தால் அவர்கள் மீது நினைவு வரும். சொந்த பந்தங்கள் மீது ஏதாவது குறைபாடுகள் இருந்தால்… அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட குறைபாடுகளைத் தான் எண்ணிக் கொண்டிருப்போம்.
இதுவே வரிசையில் வந்து கொண்டிருக்கும்.
உதாரணமாக ஏதாவது குறைகளைப் பற்றி மட்டும் சிறிது பேசிப் பாருங்கள்…
1.அந்தக் குறை… இந்தக் குறை… என