“நாடிகள்…” காற்று மூலமாக நம்மை உணரச் செய்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siddha s.jpg

“நாடிகள்…” காற்று மூலமாக நம்மை உணரச் செய்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு… செவிப் புலனறிவு… உணர்வுப் புலனறிவு… நுகர்தல் புலனறிவு… சுவைத்தல் புலனறிவு… என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

Polaris soul protection.jpg

நன்றாகப் பழகியவர்களுக்குள் ஒருவருக்கொருவர் பழிச் சொல்கள் எப்படி வருகின்றது…?

இரண்டு பேர் நண்பர்களாக இருக்கின்றார்கள். சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஆகிச் சண்டை இட்டுக் கொண்டார்கள் என்றால் என்ன ஆகின்றது..?

ஒருவரின் செயலைப் பார்த்து “நீ இப்படிச் செய்துவிட்டாயே…!” என்று பழிச் சொல்லாக மாறுகிறது. அதைக் கேட்ட பின் பதிலுக்கு அவரும் “நீ மட்டும் ரொம்ப யோக்கியமா…?” என்று சொல்வார்.

இராமன் அம்பை எய்தான்…! என்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான். ஆகவே அப்பொழுது அந்த இரண்டு நண்பர்களுக்குள் தவறு செய்தவர் யார் என்ற முடிவு தெரியாது. ஆனால் சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகிறது.

இந்த உணர்வுகள் ஊட்டப்படும் போது இருவருக்குள்ளும் பழிச் சொல்லாக மாறுகின்றது. அப்பொழுது அந்த நேரத்தில் நம்மை எது இயக்குகின்றது…?

இரண்டு பேரில் யார் தவறு செய்தார்கள் என்று அந்த இருவருக்குமே தெரியாது. கோபப்பட்டுச் சண்டை போட்டார்கள் என்றால்
1.நான் ஒன்றும் செய்யவில்லை.. அவர் தான் செய்தார் என்பார்
2.இரண்டமாவர் நான் ஒன்றும் செய்யவில்லை அவர் தான் அப்படிப் பேசுகிறார் என்பார்
3.ஆக இதிலே அந்த முடிவையே காண முடியாது… காண முடிகின்றதா…?

அதே சமயத்தில் இதைக் கேட்டு நியாயம் பேசுவதற்காக ஒருவர் வருவார். இரண்டு பேருக்கும் சார்பாக வந்து
1.சரி போங்கள்…! என்று உண்மையை எடுத்துச் சொன்னால்
2.உடனே அவர்கள் மேலேயும் பகைமை ஆகும்.
3.எப்படியும் ஒருவரிடம் பகைமை ஆகிவிடும்

இரண்டு பேரும் சமாதானமாகப் போங்கள்… என்று மத்தியஸ்தம் சொனால் “அவருக்கு என்ன…? அவருக்கு வேண்டியர் போல இருக்கிறது. அதற்காக இப்படிப் பேசிவிட்டுப் போகிறார்…!” என்பார்கள்.

ஒர் உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் போது அந்த மாறுபட்ட உணர்வு நம் நல்ல குணங்களை அது சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

எது…?

நீங்கள் காரத்தை எடுத்து அதை எதிலே கொண்டு போய்க் கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும். ஆனால் மற்ற “சப்…” என்று இருக்கும் பொருளிலே அந்தக் காரத்தைச் சேர்த்தால் உணர்ச்சியைத் தூண்டி அந்தச் சுவையின் உணர்வுகளை நமக்குள் உணரச் செய்கின்றது.

இதைப் போல தான் வாழ்க்கையில் அறியாது வரக்கூடிய தீமைகளிலிருந்து நமது சொல்லின் நிலைகளைப் பக்குவப்படுத்தும் அந்த நிலைகளைப் பெறுதல் வேண்டும்.

அந்தப் பக்குவ நிலை பெறச் செய்வதற்காக வேண்டித்தான் பகைமைகளை அகற்றி ஏகாந்தமாக வாழும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களைப் பெறச் செய்கின்றோம்

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் சென்றால்
1.எது நம்மை இயக்கியது…?
2.தவறான சொல்கள் எப்படி வருகிறது…?
3.பகைமை எதனால் வருகிறது…?
4.பகைமைகளை அகற்றி எப்படி ஒன்றி வாழ வேண்டும் என்ற உண்மைகளை உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து மீண்டு மன பலத்தைப் பெறும் வழி

Protected zone - eternal

அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து மீண்டு மன பலத்தைப் பெறும் வழி

 

யாம் (ஞானகுரு) காட்டினுள் இருந்தபொழுது பல உயிரினங்கள் தன் பசியைத் தணிப்பதற்காக மற்ற உயிரினங்களைத் துரத்துவதும் மற்றவைகள் அஞ்சி ஓடுவதும் சிக்கிக் கொண்டவைகள் ஓலமிடுவதும் போன்றவைகளைக் கண்டு யாம் அச்சப்படும் நிலை உண்டானது.

1.அவைகள் செய்த துயர நிலைகளால் துயரத்தை உருவாக்கும் அணுக்கள் எமக்குள் எப்படி விளைகின்றது…? என்றும்
2.இதை உடனடியாக மாற்றுவதற்கு யாம் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்றும் எமக்குக் குருநாதர் உபதேசித்தார்.

மகரிஷிகள் தமக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வை உன்னிடத்தில் வளர்த்துக் கொண்டால் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அந்த உயிரினங்கள் உன்னைப் பார்த்தாலும்
1.உன்னுள் வளர்த்துக் கொண்ட உணர்வின் மணம் கண்டு அது அஞ்சி ஓடும்.
2.அச்சுறுத்தும் உணர்வுகள் உனக்குள் வந்தாலும் அதை அடக்கி ஒளியாக உனக்குள் மாற்றுகின்றாய்.

எதனின் உணர்வை உனக்குள் அடக்குகின்றாயோ அதனின் உணர்வுகள் உனக்குள் வலு பெறும்பொழுது வெளிப்படும் நுண்ணிய அலைகளை நுகரும் ஆற்றல் மற்ற உயிரினங்களுக்கு உண்டு.

இதனை நுகரும் உயிரினம்
1.இவன் நம்மை அடக்கி விடுவான் என்ற உணர்வு கொண்டு அது அஞ்சி ஓடும் என்ற நிலைப்படுத்தி
2.அதை நிதர்சனமாகக் காண்பித்தார் குருநாதர்.

இந்த உண்மைகளைக் குருநாதர் எமக்கு உணர்த்தி எம்முள் உணர்ச்சிகளை தூண்டச் செய்து எமக்குள் இதனின் நினைவின் ஆற்றலைப் பதியச் செய்து அந்தத் துருவ மகரிஷிகளின் ஆற்றலை நீ பருகு…! என்றார்.

ஆகவே நாம் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு, மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி
1.நமக்குள் இருக்கும், துன்புறுத்தும் உணர்வின் அணுக்களுடன்
2.மகரிஷிகளின் அருள் சக்தியை இணைக்கப்படும் பொழுது
3.அது நம்முள் தீமைகளைக் கவர்ந்திடும் நிலைகளை மாற்றி
4.அருள் மகரிஷிகளின் இனங்களைக் கவர்ந்திடும் நிலை வருகின்றது

இப்படி மகரிஷிகளின் அருளுணர்வுகளை நம்முள் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தீமைகளை அடக்கிடும் தன்மை வருகின்றது. நம்முள் அஞ்சிடும் நிலை மாறுகின்றது. தெளிந்த மனதின் தன்மை நம்மில் உருவாகின்றது.

நல்ல நேரம்…கெட்ட நேரம்… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

astrology cosmology

நல்ல நேரம்…கெட்ட நேரம்… பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

தன் நிலை என்பது என்னப்பா…? தன் நிலையை மறந்திடாமல் ஜெப நிலையைக் கூட்டிக் கொள் என்பது என்னப்பா..? தன் நிலை என்றால் தியானத்தில் (ஜெப நிலையில்) இருப்பது மட்டும் தன் நிலை அல்ல…!

மற்றவர்கள் எதிர்ச் சொல்களாக உன்னை நோக்கிப் பேசும் பொழுது அதனால் உன் நிலைக்குக் கோபதாபங்கள் வரும்பொழுது உன் எண்ணத்தில் கலக்கவிட்டு அதனால் வரும் சோர்வையும் கோபத்தையும் உன்னுள் அடக்கும் பொழுது நீ வீசிடும் எதிர்ச் சொல்தான் தன் நிலையை மறந்து நீ பேசும் சொல்.

மனித வாழ்க்கையில் குடும்ப நிலையில் குறையும் நிறையும் எல்லாமே கலந்துதான் வந்துவிடும். அந்நிலையில் மனச் சோர்வை வளரவிட்டு அதி சந்தோஷத்தை வளரவிட்டு வாழ்பவன் எல்லாம் தன் நிலை மறந்து வாழ்பவன்தான்.
1.சுவாச நிலைக்குக் கடும் எதிரிகள் தான்
2.கோபமும்… அதிகோபமும்… மிக மகிழ்ச்சியும்…!

மனித வாழ்க்கையில் அன்பு பாசம் ஆசை செயல் கடமை எல்லாமே அவசியமானதுதான். வாழ்க்கை நிலையில் வரும் கஷ்டத்தை எண்ணிக் கலங்கி அந்நிலையில் அவன் விடும் சுவாசம் அவன் எண்ண நிலையிலேயே கலந்து மனச் சோர்வையும் பெரும் சஞ்சலத்தையும் அடைந்து அந்நிலையில் அவன் உடல் நிலையையும் பாதித்து அவன் வாழ்க்கை நிலையில் தொழில் நிலையில் எல்லாமே இக்கஷ்ட நிலைகள் தான் தெரிந்திடும்.

அந்நிலையில் இருப்பவன் விடும் சுவாச நிலையினால் தன் குடும்ப நிலை… அந்த இல்லத்தின் தன்மை… அவனைச் சார்ந்தோரின் நிலை…! எல்லாமே மாறுபட்டுப் பெரும் சலிப்பு நிலையில் நிலை பெறுகிறது.

அப்படி ஆனதும் “என் நேரம் சரியாக இல்லை…!” என்று பல ஜோசியங்களைப் பார்த்துப் பாவ பரிகாரங்களைச் செய்து எல்லாவற்றையுமே இம்மனிதர்கள் குட்டிச்சுவர் செய்து விடுகிறார்கள்.
1.ஆண்டவனின் மேல் பழியைப் போடுகிறார்கள்
2.மற்றவர்களின் வாழ்க்கை எல்லாம் நல்ல நிலையில் உள்ளது… எனக்கு மட்டும் ஏன் இப்படிக் கொடுமை செய்கிறாய்…?
3.நான் என்ன பாவம் செய்தேனோ..? என்றெல்லாம் வேண்டுகிறார்களப்பா.

இந்நிலைக்கு ஆண்டவன் என்னப்பா செய்வான்..?

சந்தோஷ நிலையில் உள்ள பொழுது சகலத்தையும் பெற்று விடுகிறான். அந்நிலையில் ஆண்டவன் எனக்களித்தது… ஆண்டவன் எனக்களித்தது…! என்று சொல்கின்றான். ஆண்டவனா அவனுக்கு அளித்தான்…?

என் நேரம் நல்ல நேரம் என்கின்றான்…!
1.இவன் நேரம் மட்டுமா நல்ல நேரம்…?
2.எல்லா நேரங்களும் ஒரே நேரம் தான்…!
3.அவனவன் மன நிலையை வைத்து அவன் சுவாச நிலையில் வருவதுதான் நல்ல நேரமும் கெட்ட நேரமும்.

தன் நிலை மறந்திடாமல் என்று முதலில் சொன்னேன். எந்த நிலை வந்தாலும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாதவனுக்கு இப்பொழுது சொல்லிய நல்ல நேரமும் கெட்ட நேரமும் வந்து அண்டிடாதப்பா…!

அதி சந்தோஷ நிலையில் உள்ளவனுக்கும் தன் நிலையில் அவன் விடும் சுவாச எண்ண அலையில் அவனுக்கும் தான் பல வியாதிகள் வந்து அண்டுகின்றன. சலிப்புத் தன்மையில் உள்ளவனுக்கும் வியாதி வருகின்றது.
1.வியாதியை விதி என்கின்றார்கள்.
2.வியாதியும் விதியும் வருவதெல்லாம் இம்மனநிலையில் இருந்துதான்.

மன நிலையை எந்நிலைக்கும் மாற்றிடாமல் அந்நிலையில் விடும் சுவாச நிலைதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை நிலையையே நடத்திச் செல்கின்றது.
1.ஆண்டவன் செய்யவில்லை…
2.அவனாகவே செய்வதுதான் அவன் வாழ்க்கை நிலையெல்லாமே.

என்னப்பா புரிந்ததா…?

ஆகவே ஒருவரின் எதிர்ப்புச் சொல்லோ பழிச் சொல்லோ ஒருவரின் குறையோ மற்றவரின் சந்தோஷமோ எதுவுமே தன் நிலையில் இருப்பவனுக்கு அவன் மன எண்ணத்தில் வந்து தாக்கும் பொழுது அந்நிலையின் எதிர்ப்பு அவனை அண்டாமல்
1.தான் எடுத்த ஈஸ்வர சக்தியின் துணை கொண்டு தன்னைக் காத்து
2.அந்த அருள் ஒளியை மற்றவருக்குள் பாய்ச்சுவது தான்…! தன் நிலையில் இருப்பது என்பது…!

தலையில் மலர்களைச் சூடும் வழக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

POOJADAI1.jpg

தலையில் மலர்களைச் சூடும் வழக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது.

ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

Vali vadam - sukreevan.jpg

வாலியை இராமன் கொல்லாமல் குகையின் வாசலில் கல்லைப் போட்டு ஏன் மூடுகிறான்…?

வாழ்க்கையில் நாம் நல்லது செய்து வந்தாலும் தூசி (தீமைகள்) வெளியில் இருந்து தான் உடலுக்குள் வருகிறது. அதனால் தான் இராமாயணத்தில் வாலியை இராமன் குகைக்குள் போட்டு மூடி விடுவதாகக் காட்டுகிறார்கள்.

அதாவது “தீமைகள் நமக்குள் உட்புகாதபடி தடுக்க வேண்டும்…” என்று உணர்த்துகிறார்கள்.
1.குகைக்குள் வாலி இருக்கின்றான்.
2.இராமன் அம்பை எய்து ஒரு கல்லைப் போட்டு அந்தக் குகையின் வாசலை அடைத்து விடுகின்றான்.
3.ஆனால் அவனைக் கொல்லவில்லை.
4.அவன் வீரியத்தைத் தடைபடுத்துகிறான் என்று காட்டுகின்றார்கள்..

உதாரணமாக பிறர் செய்யும் தீமையான எண்ணங்களும் குற்றச் செயல்களும் நம் உடலுக்குள் போனால் என்ன செய்யும்…? அந்தத் தீமையின் உணர்வாக அதனுடைய வலிமை கொண்டு இயக்க ஆரம்பித்துவிடும்.

நம் நல்ல குணம் வேலை செய்யுமோ…? அது செயலற்றுப் போகும். அதற்காகத் தான் தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்…! என்று காட்டுகிறார்கள்,

கோபமாகப் பேசுகிறார்கள்… தவறான செயல்களைச் செய்கிறார்கள் என்றால் அதை நாம் நுகர்ந்த உடனே அவர்கள் மேலே வெறுப்பு வரும்.

அந்த இரண்டு உணர்வும் சேர்ந்து நம் உயிர் என்ற ஈஸ்வர லோகத்தில் உருவாக்கும்.
1.அவனைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாக நம்மைப் பேச வைக்கும்.
2.இப்படி எல்லாம் செய்கிறான்… இவன் என்ன யோக்கியமா…? என்போம்.
3.அவர்கள் நல்லது செய்தாலும்… அதை ஏற்க மாட்டோம்…!
4.முதலில் அவர்கள் எப்படியெல்லாம் நம்மைப் பேசினார்கள்…? இப்பொழுது மட்டும் யோக்கியம் மாதிரி நடக்கின்றார்கள்…! என்று நம்மைப் பேச வைக்கும்.
5.இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வரும் போது வெறுப்பின் தன்மை அதிகமாகி விடுகிறது.

நம்மை அறியாமலேயே இப்படி வெறுப்பின் உணர்வுகள் அதிகமாகி நம் ஈஸ்வரலோகத்தில் அந்தக் கருவின் தன்மை உருவாகி நம் உடலுக்குள் பிரம்மலோகமாக மாறுகிறது.

பிரம்மலோகத்தில் அணுக்களாக உருவாகி விட்டால் அது தன் சாப்பாட்டுக்காக ஏங்கும். அந்தத் தீமையின் உணர்வை எடுத்து வளர்க்கத் தொடங்கும். அப்பொழுது நாம் இதை மாற்றி அமைக்க வேண்டுமா இல்லையா…?

ஆகவே நம்மை எது கோபப்படச் செய்கிறது..? என்று நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
1.அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
2.அதுவே சொல்லாக வருகின்றது என்று உணர்தல் வேண்டும்.

அடுப்பிலே பாத்திரத்தை வைத்து எந்தக் காய்கறியைப் போட்டு வேக வைக்கிறோமோ அதற்குத் தகுந்த மணம் தான் வரும். ஆகையினால் இந்த மணத்தை நல்ல மணமாக மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியைக் கொடுக்கின்றோம்.

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில் நம்மை எப்படி அந்தத் தீமைகள் இயக்குகிறது என்று தன்னை அறிதல் வேண்டும். நாம் ஏன் கோப்படுகிறோம்…? எதற்காக அந்தக் கோபம் வருது…? என்ற சிந்தனை வேண்டும்.

ஆகவே கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் ஒரு தவறு நடக்கிறது என்றால் பண்பு அன்பு பரிவு என்ற உயர்ந்த உணர்வுகள் கொண்டு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

கோபத்துடன் பதில் சொல்லப்படும் பொழுது நாம் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் அந்த வழியில் அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் பகைமை உணர்வுகளைத் தான் ஊட்டும். அந்தப் பகைமை உணர்வு ஊட்டுவதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

ஏனென்றால் ஒரு குடும்பத்தில் பகைமை உணர்வு அதிகமாகும் போது சாப அலைகளாகி அதன் தொடர்ச்சியில் அந்தக் குடும்பமே சின்னா பின்னாமாகிறது. அதனுடைய நிலைகளில் பின் வரும் சந்ததிகள் தவறு செய்யவில்லை என்றாலும் அவர்களையும் அது இயக்கி குறைபாடுகளாகி விடுகின்றது.

ஆகவே இதைப் போன்று நாம்
1.மற்றவர்களுடைய குறைகளைக் கண்டாலும் அவருடைய முந்தைய நிலைகள் இயக்கப்பட்டு
2.அதே உணர்வுகள் நம்மை இயக்கி நம்முடைய நல்ல உணர்வுகளையும் மாற்றுகிறது என்பதை
3.அந்த இடத்தில் சிந்திக்க வேண்டும்.

சிந்திக்கின்றோம் என்றால் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் தான் அந்த உடல்…! என்று எண்ணி விட்டால் அவர்கள் செய்யும் தவறும் குறைகளும் நமக்குள் வராது.

உயிரால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவர்களும் பொறுப்பை உணர்ந்து சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும். ஆண்டவன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மனத் தூய்மை ஏற்பட வேண்டும் என்று இப்படி நீங்கள் எண்ணிப் பாருங்கள். கோபமோ பழிச் சொல்லோ நமக்குள் எதுவுமே வராது.

இது எல்லாம் நாம் இந்த மனித வாழ்க்கையில் ஞானிகள் காட்டிய வழியில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நல் நெறிகள்.

ககனமணியின் முக்கியத்துவம் என்ன…?

Astral path and way kakana mani

ககனமணியின் முக்கியத்துவம் என்ன…?

கேள்வி:-
சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…! என்று ஈஸ்வரபட்டர் சொல்கிறார். ககனமணிக்கு விளக்கம் தேவை.

பதில்:-
நம் குருநாதருக்கு ரசமணிச் சித்தர் என்ற பெயர் உண்டு. அவர் நம் சாமிகளை (ஞானகுரு) ஆரம்பத்தில் சந்திக்கும் பொழுது வெள்ளி உருண்டைகளைக் கொடுத்து “உன் வீட்டில் வைத்துக் கொள்…!” என்று சொல்கிறார்.

ஆனால் சாமிகள் ஈஸ்வரபட்டரின் பைத்தியம் போன்ற தோற்றத்தைக் கண்டு அதை வாங்க மறுத்து விட்டதாகச் சொல்வார்.

வெள்ளி உருண்டை என்பது பாதரசத்தில் பல சாரணைகளை ஏற்றப்பட்டது தான் அது. அன்றைய சித்தர்கள் பலதரப்பட்ட ஔஷதங்களைச் செய்தார்கள். அதிலே அவர்கள் அதிகம் உபயோகப்படுத்திய பொருள் தான் இந்தப் பாதரசம்.

சூரியன் நட்சத்திரங்கள் கோள்கள் சத்தை எல்லாம் எடுத்து அதிலுள்ள நஞ்சைப் பிரித்துப் பாதரசமாகத்தான் மாற்றிக் கொண்டேயுள்ளது. நாம் வெயிலாகப் பார்ப்பது அனைத்துமே அது தான்.

சூரியன் எப்படித் தான் பேரொளியாக ஆகி இந்தப் பிரபஞ்சத்தையும் ஒளிமயமாக மாற்றுகின்றதோ அது போல் நம் உயிருக்கும் அந்த ஆற்றல் உண்டு.

சூரியனைப் போல் நாமும் நம் மீது மோதும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறும் பொழுது பேரொளியாக ரசமணியாக நம் உயிர் மாறுகின்றது. அப்படி ஆன நிலையைக் குறிப்பதற்குத்தான் குருநாதரை ரசமணி சித்தர் என்று அழைத்தார்கள்.

உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றினாலும் “விண் செல்லும் ஆற்றல் தேவை…!”

1.எத்தனையோ ஞானிகளும் தவசிகளும் ஒளியாக ஆகி
2.இந்தப் பூமிக்குள்… தன் உடலுக்குள்… (இறக்காமல்)
3.“சிறைக்குள் அடைப்பட்ட மாதிரி இருக்கின்றார்கள்…!” என்று
4.ஈஸ்வரபட்டர் நம் சாமிகளை கேதார்நாத் பத்ரிநாத் போன்ற இடங்களுக்குச் செல்லச் செய்து நேரடியாக அவர்களைக் காட்டுகின்றார்.

அதாவது கேதார்நாத்தில் ஓ…ம் நமச்சிவாய…! என்றும் பத்ரிநாத்தில் ஹரி ஓ…ம் நமோ நாராயணா…! என்றும் பனிப்பாறைகளுக்குள் அங்கே சொல்லிக் கொண்டே உள்ளார்கள்.
1.ஆனால் ஒளியான உயிராத்மாக்களை விண்ணுக்கு உந்தித் தள்ளவோ
2.அல்லது தன்னிச்சையாக விண் செல்லவோ அவர்களால் முடியவில்லை என்று காட்டுகின்றார்.

உயிரை ரசமணியாக மாற்றினாலும் விண் செல்லும் நிலையைத்தான் ஈஸ்வரபட்டர் அங்கே ககனமணி என்று காட்டுகிறார். அகஸ்தியன் தன்னிச்சையாக விண் சென்றவன். துருவ் நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அகஸ்தியன் உணர்வைச் சீராகப் பின்பற்றியவர்கள் விண் சென்ற அவனுடைய ஆற்றலை எடுத்து அவனைப் போலவே விண்ணுலகில் சஞ்சரித்து ஏகாந்த நிலை கொண்டு அவனுடைய ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இந்த உடலை விட்டு எந்த நேரம் அகன்றாலும்
1.நம் உயிராத்மா விண்ணுலகம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தால்
2.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்ற பற்று இருந்தால்
3.நாம் அந்தக் ககனமணியைப் பயன்படுத்தியவர்கள் ஆகின்றோம்.
(ஏனென்றால் பலருக்கு இந்த உடல் பற்றும் உலகப் பற்றும் உள்ளது. அந்தப் பற்று இருந்தால் நாம் விண் செல்லவே முடியாது)

நம் உயிர் விண்ணிலிருந்து தான் பூமிக்குள் விஜயம் செய்தது. அது தான் விஜய தசமி. பல கோடிச் சரீரங்கள் பெற்று வளர்ச்சியில் மனிதனாகின்றது. மனிதனான பின் அடுத்த வளர்ச்சியாக எந்த விண்ணிலிருந்து தோன்றியதோ அந்த விண்ணிலே ஒளியாகச் சென்று நட்சத்திரமாக மண்டலப் படைப்பாக ஆகும் நிலையே ககனமணி.

அகண்ட அண்டத்திலே எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொள்வது என்பதும் அதுவே…!”

மூன்றாவது கூட முழுமையாகப் படிக்காத எனக்கு ஞானத்தைப் பெறக்கூடிய பாக்கியம் எப்படிக் கிடைத்தது…?

Father mother ancestor deities.jpg

மெய் ஞானத்தைப் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு எப்படிக் கிடைத்தது…?

தாய் வயிற்றில் நான் (ஞானகுரு) கருவாக இருக்கும்போது என்னுடைய பாட்டி என்ன் செய்திருக்கிறது…? என் அப்பாவுக்கு இரண்டாவது கல்யாணம் செய்ய முயற்சி செய்தது.

எனக்கு முன்னாடி மூன்று பேர் பிறந்திருக்கின்றார்கள். இருந்தாலும் என் அப்பாவிற்கு இரண்டாவது கல்யாணம் செய்ய வேண்டும் என்று என் பாட்டி அம்மாவை மிகவும் துன்புறுத்தியது.

நான் பிறந்த பிற்பாடு என் அம்மா என்னிடம் சொன்னது: எப்படியாவது இரண்டாம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பாட்டி (என் அம்மாவின் மாமியார்) நிர்பந்தம் செய்தது.

அப்பொழுது நான் வேண்டாத தெய்வம் இல்லை. என் கணவருக்கு இரண்டாம் கல்யாணம் செய்யக் கூடாது…! என்று கோயில் குளம் எல்லாம் போய்ச் சுற்றி வந்தேன். என் குலதெய்வம்… மூதாதையர்களை எல்லாம் வேண்டினேன். (மூதாதையர்கள் – ஞானகுருவின் பாட்டனுடைய பாட்டன் கொஞ்சம் மந்திர சக்தி கற்றுக் கொண்டவர்கள்)

இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நீ கர்ப்பத்தில் இருக்கும்போது தான் இதை எல்லாம் வேண்டினேன்.
1.அதுதானப்பா உனக்கு (ஞானகுரு) இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது.
2.நம் குலதெய்வங்கள் எல்லாம் பக்கபலமாகச் சேர்ந்து நின்றது என்று அம்மா சொல்லியது.

என் அண்ணன் என்னுடைய அப்பா பெற்ற பாட்டியைத்தான் அம்மா என்று கூப்பிடுவார். என் அம்மாவை அம்மா என்று கூப்பிட மாட்டார். என் அம்மாவை மதிக்கவே மாட்டார். இது எல்லாம் நடந்த நிகழ்ச்சி.

என் அத்தைக்குப் பிள்ளை இல்லை. அதனால் அந்தச் சொத்தை என் அண்ணனுக்கு எழுதி வைக்கலாம் என்று ஏற்பாடு செய்தார்கள். சொத்து போய்விடக் கூடாது என்று இதை எல்லாம் செய்தார்கள்.

ஆனால் என் அம்மாவின் மீது எங்கள் பாட்டிக்கு வெறுப்பு. இதை எல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகின்றார். அனுபவத்திலே குருநாதர் கொடுத்த உண்மையின் உணர்வுகள் தான் இது.
1.ஆகவே உன் குடும்பத்திலே எப்படி இருக்கிறது…?
2.இப்படி ஒவ்வொரு குடும்பங்களிலும் இது எப்படி இருக்கும் பார்…! என்று காண்பித்தார்.

நான் பிறந்த பிற்பாடு என் பாட்டி எங்கம்மாவைத் திட்டியதோ கொஞ்சம் நஞ்சம் கிடையாது. அதற்கு பின் இரண்டு பையன்கள் பிறந்து இறந்து போனார்கள்.

அதற்காக வேண்டி என் பாட்டி என்னைச் சாமி கும்பிடச் சொல்லி கழுத்திலே சூடு போட்டது. எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது.

ஏனென்றால் அந்தக் காலத்தில் தெக்கத்தி நோய் (காக்காய் வலிப்பு போல் ஒரு நோய்) என்று சொல்வார்கள். அதற்கு இந்த மாதிரிச் போட்டோம் என்றால் அடுத்து அந்த நோய் வராது என்று அந்தக் காலத்தில் ஒரு மூட நம்பிக்கை.

ஏனென்றால் நான் முன்னாடி சொன்ன மாதிரி என் பெரியப்பா வீட்டில் அந்தப் பிள்ளைக்கு வந்தது போல் இங்கே அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக எனக்குத் தம்பி பிறந்த அன்று என் பாட்டி சூடு போட்டது.

தம்பி பிறந்திருக்கின்றான் சாமியைக் கும்பிடுடா என்று சொல்லியது. அந்தக் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது.

என் பாட்டி அடிகடி திட்டிக் கொண்டிருந்ததால் ஒரு சமயம் என் அம்மா கிணற்றில் போய் விழுந்து விட்டது.

அங்கே எல்லாம் சிறிய வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுத்துவிடுவார்கள். எனக்கு ஏழு வயது இருக்கும். அன்றைய தினம் லீவு வேறு. வீட்டிலும் யாரும் இல்லை.

கிணற்றில் குதித்து என் அம்மாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினேன். அதிலே இருந்து அம்மாவுடனே நான் எப்பொழுதும் இருப்பேன். என் அம்மாவின் ஆசிதான் எனக்கு இந்தக் குரு அருள் கிடைத்தது.

1.என் அம்மா அது எடுத்துக் கொண்ட உணர்வு
2.அவர்கள் தெய்வத்தை வேண்டிய அருள் உணர்வுகள்
3.கருவில் விளைந்த அந்தப் பூர்வ புண்ணியம் தான் எனக்கு இந்த அளவுக்குச் சக்தி கிடைத்தது.
4.குரு அருளால் ஓரளவுக்கு எல்லோருக்கும் சேவை செய்யக்கூடிய நிலை எனக்கு (ஞானகுரு) வந்திருக்கிறது.
4.என் அண்ணனுக்கோ என் தம்பிக்கோ என் தங்கைக்கோ ஒருவருக்கும் இந்த ஞானம் கிடைக்கவில்லை.

ஏனென்றால் அனுபவபூர்வமாகக் குருநாதர் இந்த உணர்வுகளை எல்லாம் எனக்கு நினைவுபடுத்தி நீ எப்படி ஞானம் பெற்றாய்…? என்றும் உன் குடும்பப் பாரம்பரியம் எப்படி வந்தது…? என்ற நிலையும் உணரச் செய்தார்

ஒவ்வொரு குடும்பங்களிலும் தவறுகள் இல்லாமலேயே சந்தர்ப்பத்தால் பாசத்தால் நுகர்ந்த நிலைகளில் தொல்லைகளும் சங்கடங்களும் எப்படி வருகிறது…? என்று இப்படி நிதர்சனமாகக் காட்டினார்.

இதைப் போல உண்மையின் நிலைகளை விளக்கச் செய்து மனிதன் என்ற பண்பை வளரச் செய்ய வேண்டும் என்றால் அந்த அகத்தியன் பெற்ற அருள் உணர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருளை அகற்ற வேண்டும் என்று குருநாதர் எமக்கு உபதேசித்தருளினார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய அந்த் அருள் உணர்வுகளைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

சாப அலைகளால் பிறக்கும் சந்ததியினர் எப்படிச் சிரமப்படுகின்றனர்…? என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி

curse-rays

சாப அலைகளால் பிறக்கும் சந்ததியினர் எப்படிச் சிரமப்படுகின்றனர்…? என் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சி

 

என் (ஞானகுரு) பெரியப்பாவின் தங்கைக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். அது முதல் மனைவியாகப் போய் இருந்தது. அவர்களுக்குள் ஏதோ கருவாகி உள்ளது. திருமணமாகி அந்தக் கருவாக இருக்கும்போது (பெரியப்பாவுடைய) தங்கையின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஏனென்றால் அந்தக் காலத்தில் இரண்டு கல்யாணம் மூன்று கல்யாணம் பண்ணிக் கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது. திடீரென்று சொந்தத்தில் பெண் என்ற நிலை வரும்போது அவர் இரண்டாவது கல்யாணத்தைச் செய்து கொண்டார்.

கர்ப்பமாக இருக்கும் போது “இப்படி இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டாரே…!” என்று அவர்கள் சொன்னார்கள்.

இப்பொழுது உள்ள சட்டம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது.

நான் பிரியபட்டேன்…. நான் கல்யாணம் செயது கொண்டேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்…? வேண்டாம்… என்றால் நீங்கள் விலகிப் போகலாம் என்று அவர் ஊர் பஞ்சாயத்தைக் கூட்டினார்.

ஊர் நாட்டாமைகள் எல்லாம் சேர்த்து பஞ்சாயத்துச் செய்யும் பொழுது அந்த அம்மா தன் கர்ப்ப காலங்களில் கடும் வேதனையும் சங்கடமும் பட்டது.

எந்த அளவுக்குக் கடும் வேதனையும் சங்கடமும் பட்டதோ அந்த உணர்வுகள் எல்லாம் கருவிலே இணைந்து அது பெண் குழந்தையாகப் பிறக்கிறது.

1.பிறந்த பின் அந்தக் குழந்தைக்கு எந்தச் சிந்தனையும் இல்லை.
2.வாய் பேச வரவில்லை. வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும்.
3.மூளை வளர்ச்சி இல்லாதபடி அதுபாட்டிற்கு இருந்தது.
4.அது வயதுக்கு வந்து பருவம் ஆகும் வரையில் கூட அப்படியே தான் இருந்தது.

இந்த மாதிரி ஆனதால் அந்த அம்மா தன் சொத்தைப் பிரித்துக் கொண்டு வந்து விட்டார்கள், இருந்தாலும் என் வாழ்க்கையை நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாசமாக்கி விட்டீர்களே…! என்று தன் அண்ணனைப் (என் பெரியப்பாவை) பிடித்துப் பேசும்.

நீங்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்தக் கல்யாணத்தை அனுமதித்தீர்கள் என்று…!

ஆக அந்த அம்மா பேசிய சாப அலைகள் பெரியப்பா குடும்பத்தில் சாடியது. அவருக்கு ஒரு பையன் மூன்று பெண் பிள்ளைகள்.

கர்ப்பம் என்று சொல்லப்படும் போது தன் பிள்ளைக்கு எப்படி ஆனதோ அதே போல் அவருடைய குழந்தைகளுக்கும் ஜன்னி மாதிரி வந்தது. காக்காய் வலிப்பும் வந்தது. மூளை வளர்ச்சி இல்லாது போனது.

ஒரு பையனுக்குக் கால் வராமல் இருக்கிறது. பெண்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்து அந்த குழந்தையோட அது அவஸ்தைப் படுகிறது.
1.அந்தச் சந்தர்ப்பத்தால் குடும்பமே இத்தகைய நிலைகள் உருவாக்கப்பட்டு இந்த நிலை ஆகிவிட்டது.
2.இதை எல்லாம் நடைமுறையில் குருநாதர் அனுபவரீதியாக எமக்குக் காட்டுகின்றார்.

அதே மாதிரி என் மனைவி வழியில் எடுத்துக் கொண்டாலும் என் மனைவியின் சின்னம்மா (அதுவும் இரண்டாம் தாரமாக வந்தது தான்). அது எங்கள் சிறிய பாட்டி மகள்.

அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் வாய்த் துடுக்கு. யாரும் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ள வரவில்லை என்று. தன் தம்பி மகனுக்கே இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொடுத்து விட்டார்கள். அது கண்டபடி சாபம் இடும்.

எங்கள் பாட்டி என்ன செய்தது…? (என் மனைவியை) எங்கள் குடும்பத்திலேயே கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வந்தது.

அதனாலே என் அண்ணன் கட்டிக் கொள்ள வேண்டியதை என்னைக் கட்ட வைத்துவிட்டார்கள்… வாரிசு என்று, என் மனைவியின் சின்னம்மா அவர்கள் அப்பாவைப் பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி பேசும். இவ்வளவு தான் என்று இல்லை.

என் மனைவி குடும்பத்தில் இந்த அம்மாளின் சாபத்தால் பிறந்த ஆண் வாரிசும் இறந்து விட்டார் (என் மனைவியின் சகோதரன்). ஆனால் என் மனைவி மீது அந்த அம்மாவுக்குக் கொஞ்சம் பிரியம்.

அதே சமயத்தில் என் மனைவியின் அப்பாவை (என் மாமனாரை) ரோட்டிலே போய் உட்கார்ந்த கொண்டு கேவலப்படுத்தும்.

நான் (ஞானகுரு) கல்யாணம் முடித்து வந்த புதிதில் இந்த அம்மா இப்படித்தான் பேசிக் கொண்டிருந்தது. வாசல் படி மேல் உட்கார்ந்து கண்டபடி பேசிக் கொண்டிருந்தது.

நான் என்ன செய்தேன்…?

பெரிய அம்மிக் கல்லைத் தூக்கிக் கொண்டு போய் உன்னை இந்த மட்டோட குளோஸ் (CLOSE) செய்கிறேன் என்று சொல்லித் தலைக்கு மேலே தூக்கி “டபால்…” என்று அந்த அம்மாவின் பின்னாடி போட்டேன்.

அய்யய்யோ… என்னைக் கொல்ல வந்து விட்டானே… எங்கள் அண்ணன் பையன்…! என்று சப்தம் போட்டது. அன்றிலிருந்து பேசுவதை விட்டு விட்டது. அதற்கப்புறம் அது இறக்கிற வரையில் என்னிடம் பேசவில்லை.

ஆனால் என்ன செய்தது…? பார்…! என்னைச் சீரழித்தாய் அல்லவா…! உன் குடும்பத்தையே எப்படி ஆட்டி படைக்கிறேன்…? என்று சொன்னது. நடந்த நிகழ்ச்சி இது.

அது இறந்த உடனே என் மனைவி உடலுக்குள் வந்து படுத்தின பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை. கண்டபடி ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறது. நான் சித்தான பிற்பாடு ஒரு சமயம் வந்து கேட்கிறது.

என்னுடைய சிறிய வயதில் நடந்த சப்பவங்கள் எல்லாம் என் மனைவிக்குத் தெரியாது. ஆனால் இந்த உடலில் அந்த அம்மா இருந்து கொண்டு “போடா எங்க அண்ணன் மகனே.. எனக்கு எல்லாம் தெரியுமுடா…!” என்று சொல்கிறது.

போடா என் அண்ணன் மகனே… எனக்கு என்ன தெரியாதா…! போய் வெத்திலை வாங்கிக் கொண்டு வாடா…! பாக்கு வாங்கிக் கொண்டு வாடா…! என்று என் மனைவி உடலிலிருந்து கேட்கிறது.

அந்த அமமாளுக்கு வெத்திலை போடும் பழக்கம் இருந்ததால் அப்படிக் கேட்கிறது. போடா… வாடா…! என்று பேச ஆரம்பித்து விட்டது. “நான் தானடா உன்னைத் தூக்கி வளர்த்தேன்…!” என்று பேச ஆரம்பித்தது.

ஒரு சமயம் என்னுடைய சிறிய வயதில் எனக்கு அம்மை வார்த்து இருக்கும் போது இட்லி சாப்பிட வேண்டும் என்று கேட்டு அழுகிறேன். இந்த அம்மா என்ன செய்தது…? உடனே அரிசியை நல்ல சாதமாக ஆக்கி இட்லி மாதிரிச் செய்து கொண்டு என்னிடம் கொடுத்தது.

அப்படிக் கொடுத்தவுடனே அந்த இட்லியை எடுத்து அந்த அம்மா மேலேயே அடிச்சிட்டேன். இது இட்லி இல்லை என்று சொல்லி…!

அதை என் மனைவி உடலிலிருந்து நினைவுபடுத்திச் சொல்கிறது. என் மனைவிக்கு இது தெரியாது. ஆனால் அந்த உணர்வுகள் உடலிலிருந்து பேசுகிறது

இதை எல்லாம் மிகவும் தெளிவாக அனுபவரீதியாக எனக்குக் காட்டினார் குருநாதர்.
1.ஒரு உடலில் விளைந்த உணர்வுகள் என்ன எல்லாம் செய்யும்…? என்று உங்களுக்குத் தெரியாது.
2.இப்பொழுது அதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்..

நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

power of meditation

நன்மை பயக்கும் சக்தியை உங்களுக்கு எப்படிக் கொடுக்கின்றோம்…?

 

ஒருவன் தீமையை செய்கிறான் என்றால் அவனிடம் உள்ள தீமையின் உணர்வுகளை வீழ்த்துவதற்குப் பதில் தீமை செய்தவனின் உடலையே சாய்த்துவிடும் நிலை வருகிறது என்று தெளிவாகக் காண்பித்தருளினார், நமது குருநாதர்.

1.தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும்,
2.மனிதன் அவைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவன்.

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்து விட்டால் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வுகள் நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்.

மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கித் தீமையின் உணர்வுகளை ஒடுக்கி, அவைகளுடைய செயலாக்கங்களை மாற்றி தம்முள் நல்லுணர்வினை வலிமை மிக்கதாக மாற்றியவர்கள்.

அவர்களைப் போன்று நாம் நம்முள் தீமையின் உணர்வுகளை ஒடுக்குகின்ற பொழுது
1.ஒருவன், நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்
2.அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.
3.மகரிஷிகளின் அருளுணர்வுகளை நமது உடலில் கலக்கப்படும் பொழுது
4.நமது உடலில் தீமைகளை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும் அவைகளை
5.நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக மாற்றுகின்றன.

உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது விஷம் நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது.
1.எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ
2.அந்த விஷம் ஊடுருவி,
3.நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும் பரவச் செய்கின்றது.

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி வேதனையை உருவாக்கும் அணுக்களை, வளர விடாமல் தடுக்கச் செய்கின்றது “மருந்துடன் கலந்துள்ள விஷம்…!”

இதைப் போன்று
1.நாம் எத்தகைய தீமையின் உணர்வைக் கண்டறிந்தோமோ
2.அப்பொழுது மகரிஷியின் ஆற்றல் மிக்க சக்தி நாம் பெற வேண்டும் எனும் உணர்வினை இணைத்து
3.நமது உடலுக்குள் செலுத்தி விட்டால்
4.அருள் ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு,
5.நமக்குள் வலு கொண்ட நிலையாக மாறுகின்றது.