ஞானத்தைப் பெறுவதற்கு என்று எந்தச் சட்டமும் இல்லை… எல்லோரும் பெறலாம்…!

ஞானத்தைப் பெறுவதற்கு என்று எந்தச் சட்டமும் இல்லை… எல்லோரும் பெறலாம்…! 

தியானத்தில் உங்களுக்குச் சக்தி கொடுக்கிறோம். எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும் உங்களுக்கு அந்த பவரைக் கொடுக்கிறோம்.

ஆனால் பொது வாழ்க்கையின் நிலை கொண்டு உங்களைக் காட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை.
1.யாரையும் நான் (ஞானகுரு) சொல்வதைக் கேட்க வேண்டும்…! என்றோ
2.இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற நிலைக்கோ நான் கட்டாயப்படுத்தவில்லை.

தர்மத்தையும்… நியாயத்தையும்.. ஞானிகளின் உணர்வுகளையும்… அது எப்படி இயக்குகிறது..? என்ற நிலைகளையும் உங்களுக்குள் பதியச் செய்கிறேன். அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும்.

“இங்கே இப்படித்தான் சட்டம்…!”” என்ற நிலைகள் கொண்டு வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் கூட நிற்காது.

ஆனால் அந்த ஞானிகள் கண்டுணர்ந்த உண்மையின் நிலையை பதிவு செய்யப்படும்போது இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அது உங்களை உயர்த்திக் காட்டும்.
1.அதன் வழியில் உங்கள் மனதால் ஏற்றுக் கொண்டால் போதுமே தவிர
2.கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவுதான்.

எந்த நிலைகள் எதன் வழி வந்தாலும் ஒரு சட்டத்தை இயற்றி இப்படித்தான் வர வேண்டும் என்று வந்தால் அவருடைய உணர்வுகள் அந்த கட்டுக்கோப்பு நிலைத்திருக்காது.

அந்த இயற்கையின் உண்மை நிலைகளை எடுத்து விரிவாக்கி அருள் ஞானிகளின் பாதையைப் பதிவாக்கி அதை உங்கள் நினைவுகளில் இருக்கச் செய்து அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும். அப்படி இருந்தால் தான் மாற்ற முடியும்.

1.அதனால்தான் உங்கள் உயிர் எதை இயக்குகின்றது என்றும்
2.அது எப்படி உருவாக்குகிறது என்றும் சொல்கின்றோம்.
3.நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது…?
4.இதிலிருந்து நாம் எப்படி உருவாக்க வேண்டும்…? என்று தெளிவாக்குகிறோம்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதன் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான். நாம் உருவாக்கும் ஆற்றலைப் பெற்றவர்கள். அப்படியானால் நாம் எதை உருவாக்க வேண்டும்..?

தீமையை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலுக்குள் உருவாக்க வேண்டும். நாமும் அந்த மெய் ஞானிகளைப் போன்று வளர வேண்டும். அது தான் கார்த்திகேயா.

குருநாதரை (ஞானகுருவை) நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் மிகவும் உயர்வாகச் சொல்கிறார்…! என்று போற்றி விட்டுக் கடைசியில் கொண்டு போய்க் குழியில் தள்ளி விடாதீர்கள். அது எனக்குத் தேவையற்றது.
1.நான் யாருடைய போற்றுதலுக்கும் வரவில்லை.
2.உங்களை உயர்ந்த நிலைகளில் எண்ணும் நிலைகளுக்கு குரு கொடுத்த ஆணைகளைச் சிறப்பித்துப் பழகுங்கள்
3.இதை நாம் பழகி அதை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஏனென்றால் நாம் பிறருக்குச் சொன்னாலும் நிற்காது. இங்கு நாம் அமைத்துக் கொண்ட நிலைகளில் எப்படி உருவாக்க வேண்டும் என்று அதை நாம் இன்னும் தெளிவான நிலைகளில் மகரிஷிகளின் அருள் வழியில் விரிவாக்கிக் கொண்டு போக வேண்டும்.

மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும்

Spiritual path

மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் செல்ல வேண்டும்

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எந்த நிமிடமும் எடுக்கக்கூடிய சக்தியை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். அதைப் பற்றுடன் பற்ற வேண்டும்.
1.எந்த நிமிடம் ஆனாலும் எந்தக் குறையப் பார்த்தாலும் “ஈஸ்வரா…” என்று உயிரிடம் வேண்ட வேண்டும்
2.ஈஸ்வரா…! என்ற சொல்லை எப்பொழுதும் மறக்கக் கூடாது.
3.ஈஸ்வரா என்பது நம்மை உருவாக்கிய உயிர்.

ஆகையினால் எத்தகைய நிலை வந்தாலும் அவர்களின் குறையை நீக்கிவிட்டு “ஈஸ்வரா…!” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவைக் கொண்டுவர வேண்டும்.

உயிருடன் ஒன்றி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டுமென்று இந்த உணர்வைப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும். இது வளர்ந்தவுடன் நம் குறைகளை நீக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் மலரைப் போன்ற மணமும் அனைவரும் பெற வேண்டும். அவர்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும். எங்கள் பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்று இதை வளர்த்துப் பழக வேண்டும்.

1.நாம் நியாயத்தை நினைப்போம்.
2.ஒருவர் குறை சொன்னால் அந்தக் குறையை வளர்த்துவிடுவோம்.
3.இரண்டு முறை சொல்லி விட்டால் அந்த வித்து வளர்ந்துவிடும். அந்தக் குறைதான் வளரும்.
4.அப்பொழுது நமக்குள் மனப் போராட்டமே அதிகம் இருக்கும்.
5.பின் நாம் போகும் பாதைக்கே இது இருள் சூழும்.
6.அதனால் நமது எல்லை எது…? அந்த மகரிஷிகளின் அருள் வட்டம்தான்…! அந்த எல்லையை அடைய வேண்டும்.

அந்த எல்லையை அடைய வேண்டுமென்றால் அவர்கள் உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். பொருள் கண்டு\ணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இதைச் சிறிது நாள்களுக்குச் சொல்லிப் பாருங்கள்.

1.நம் பார்வை மற்றவர்களைத் தவறிலிருந்து மாற்றும்.
2.அப்படியும் அவன் தப்பு செய்கிறான் என்றால் அவனிடம் இருள் இருக்கும்.
3.அதனை விலக்கித் தள்ளிவிட வேண்டும்.
4.அவன் நம்முடன் அணுகி அருகில் இருந்தாலும் அவன் இருள் நம்மைச் சாராது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சி அவன் இருள் நீங்க வேண்டுமென்று தாக்கப்படும் பொழுது இருள் விலகுகின்றது.
1.இந்தக் கட்டாயத்திற்கு நாம் வந்துவிட்டால்
2.அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நாம் நிச்சயம் போக முடியும்.

தியானத்தின் ஏணிப்படிகள்

Concentration - Meditate

தியானத்தின் ஏணிப்படிகள்

 

தியானமிருக்கும் பொழுது நாம் துருவ மகரிஷியை எண்ணுகின்றோம். துருவ நட்சத்திரத்தை எண்ணுகின்றோம். அதன் வழி கொண்டு சப்தரிஷி மண்டலங்களுடன் நம் நினைவை இணைக்கின்றோம்.

ஆறாவது அறிவு கொண்டு துருவ மகரிஷி வெளிபடுத்திய உணர்வு கொண்டு தனக்குள் பெற்று ஏழாவதாக ஒளியின் சரீரம் பெற்று மண்டலமாக இயங்கிக் கொண்டுள்ளதுதான் சப்தரிஷி மண்டலம்.

இந்தத் தொடர் வரிசையில் நம் நினைவினை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் கலந்து விடுகின்றோம்.
1.இதைப் பற்றுடன் பற்றி ஏணிப் படிகளில் மேலே போகிற மாதிரி 1, 2, 3 என்று அதோடு இணைத்து விடுகிறோம்.
2.இது மிக முக்கியம். வரிசைப் படுத்தி இதைக் கொண்டு போக வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் சேர்க்க வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் பிறவிக் கடனை நீக்கிச் சென்றவர்கள். அவர்களை எண்ணத்தால் கவர வேண்டுமென்றால் நமக்கு அந்தச் சக்தி தேவை.

அந்த சக்தியைப் பெறுவதற்குத்தான்…
1.மகரிஷிகளின் உணர்வினை அடிக்கடி உங்களுக்குள் பாய்ச்சப்பட்டு
2.ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளில் அது சேர்க்கப்பட்டு
3.அவர்கள் உணர்வின் வலுவைப் பெற்ச் செய்கிறோம்.

தியானத்தில் அமர்ந்துள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற “ஒருங்கிணைந்த வலுவைக் கொண்டு வருகின்றோம்…!”

குருநாதர் காட்டிய வழியில் அந்த வலுவைக் கூட்டி எண்ணி அதை ஆழமாகப் பதிவு செய்யப்படும்பொழுது எல்லோருடைய எண்ணமும் சமமாகக் கிடைக்கின்றது.
1.அப்பொழுது அந்த ஒருங்கிணைந்த உணர்வுகள் காற்றிலுள்ள மகா ஞானிகளுடைய உணர்வோடு ஒன்றிவிடுகின்றது.
2.அதற்குச் சமமாகி விடுகின்றது.

ஒரு நூலைக் கட்டி ஒரு சாமானைத் தூக்கும்போது அது அறுந்து விடுகின்றது. பல நூல்களை இணைத்துக் கயிறாகத் தறித்துக் கடினமான சாமானையும் எளிதாகத் தூக்குகின்றோம்.

அதைப் போலத்தான் நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் அவர் எதை எதை எல்லாம் உணர்த்தினாரோ அதை மனதில் வைத்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை கூட்டுத் தியானத்தின் மூலம் உங்களைப் பெறச் செய்கின்றோம்.

குரு நாடி என்ற “பிந்து”

bindu chakra.jpg

குரு நாடி என்ற “பிந்து”

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும். உணரவும் முடியும்.

“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி

God of death - Yama (2).jpg

“மௌன விரதம்” மூலம் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி

“மௌன விரதம் இருக்கிறோம்…” என்று சொன்னால்
1.எப்போதுமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் உடலில் படர வேண்டும்.
2.அந்த அருள் ஞானம் நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
3.அந்த அருள் மகரிஷியின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ வேண்டும் என்ற
4.இந்த உணர்வோடு தான் தியானம் இருக்கிறேன் (ஞானகுரு).

ஏனென்றால் என்னை நினைப்பவர்கள் எல்லோரும் “அந்தக் கஷ்டம்… இந்தக் கஷ்டம்…! என்று தான் சொல்கிறார்கள். அந்த மாதிரி இல்லாதபடி நான் எப்படி உங்களுக்குச் சொல்கிறேனோ அதே போல் நீங்களும் செயல்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். நாங்கள் பார்த்த குடும்பங்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று இப்படி நீங்களும் எண்ண வேண்டும்.

உடலில் நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை விடுத்து விட்டு அருள் மகரிஷியின் உணர்வுகள் எங்கள் உடலிலே படரவேண்டும். எங்கள் உடலில் உள்ள சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும். நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானம் செய்தாலே போதும்.

நீங்கள் நலம் பெறவேண்டும் என்று யாம் உங்களுக்குக் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வுகளை நுகர்ந்தால் தொடர்ந்து உங்கள் சர்க்கரைச் சத்து குறையும். சர்க்கரைச் சத்தை மாற்றும் வலிமையும் உங்களுக்குக் கிடைக்கின்றது.

1.மருந்தால் இல்லை…!
2.ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட எண்ணத்தால் தான் முதலில் அந்த நோய்கள் வந்தது.
3.ஆகவே எண்ணத்தால் தான் இதை மாற்றும் வல்லமையையும் நீங்கள் பெறவேண்டும்
4.விஞ்ஞானத்தில் இனி வரும் விஷமான தன்மைகளிலிருந்து உங்களை மாற்றி கொள்வதற்கும் இது உதவும்.

என்னுடைய தியானமே… என்னுடைய தவமே.. நீங்கள் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும். நஞ்சான நிலைகளை அடக்கி ஒளியாக மாற்றும் ஆற்றல் பெறவேண்டும். உலகுக்கு நல்ல வழி காட்டிகளாக வர வேண்டும் என்பது தான்.

இவ்வாறு யாம் கொடுக்கும் இந்த வாக்கைப் பதிவு செய்து கொண்டு “விழித்திரு..!” என்ற நிலையில் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின் பால் செலுத்திச் சீராகத் தியானித்து அந்த அருளை வளர்த்துக் கொண்டால்
1.உங்கள் பிணிகளைப் போக்க முடியும்
2.தீமைகள் புகாது தடுத்துக் கொள்ள முடியும்.

இந்த உடலே நம்முடன் வருவதில்லை… அதிலே சேர்க்கும் கௌரவம் நிற்குமா…?

God of death - Yama.jpg

இந்த உடலே நம்முடன் வருவதில்லை… அதிலே சேர்க்கும் கௌரவம் நிற்குமா…? 

விநாயகர் சதூர்த்தி என்று நாம் சொல்லப்படும் போது அன்றைக்கு நாம் இயற்கையில் விளையக் கூடியதை எல்லாம் வேக வைத்து “கொழுக்கட்டையாகச் செய்து” அதை ருசியாகச் சமைத்து நாம் உணவாக உட்கொள்கிறோம்.

வேக வைக்கப்படும் பொழுது அந்தத் தானியங்கள் எதுவும் மீண்டும் முளைப்பதில்லை. இதே மாதிரி
1.பிறருடைய வேதனையான உணர்வுகள் அது நமக்குள் விளைந்தாலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கப்படும் போது வேதனைகளை வேக வைத்துவிடுகிறது.
3.அவ்வாறு வேக வைத்தால் அடுத்து அந்த வேதனை என்ற உணர்வுகள் அது நமக்குள் வளராது… அது முளைக்காது…!
4.இப்படி ஒரு பழக்கத்திற்கு நாம் எல்லோரும் வரவேண்டும்.

இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கிறேன் (ஞானகுரு).

1.நமது வாழ்கையில் நம்மைப் பிறிதொன்று எப்படி இயக்குகின்றது…?
2.நம் உயிரை ஈசனாக மதித்தாலும் அவனால் உருவாகப்பட்ட கோவில் என்று எண்ணினாலும்
3.நாம் நுகரும் உணர்வுகள் நம்மை அறியாமலேயே எப்படி நம்மைத் திசை திருப்புகின்றது..?
4.அதிலிருந்து நாம் எப்படி மீளவேண்டும்…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலே நமக்குச் சொந்தம் இல்லை…!
1.இதில் எத்தனை கௌரவம் வந்தாலும் நிற்கப் போகின்றதா…?
2.நாம் தேடி வைத்த செல்வம் இருக்கப் போகின்றதா..? இல்லை…!

நம் உயிருடன் ஒன்றிடும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றும் நிலையாக எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுக்கின்றோமோ “அந்த உணர்வே கடைசி வரையிலும் நிலையானது…!”

தீமைகளையும் பகைமைகளையும் வென்றிடும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நாம் நிச்சயம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…?

Polaris direct link

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எந்த வழியில் பெறுவது…? 

 

மகரிஷிகள் இந்த உலகப் பற்றை உடலின் பற்றை விட்டு உயிரின் பற்றிலே விண் சென்றவர்கள்.
1.உயிரின் சேர்க்கை
2.உயிர் ஒளியால் உணரப்பட்ட உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றப்படும் பொழுது
3.உயிருடன் ஒன்றிய ஒளியாக ஆனவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் வழியில் குருநாதர் காட்டிய இந்த நெறியை நாம் பின்பற்றப்படும் பொழுது நாமும் அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்.

ஏனென்றால் விண்ணுலக ஆற்றலை இந்த மண்ணுலகில் வந்து அதனைத் தனக்குள் கண்டான் விஞ்ஞானி. மண்ணுக்குள் கண்டாலும் புவியின் ஈர்ப்பு நிலைகளை உணர்ந்தான்.

ஆனால் அதே சமயத்தில் ஒரு இராக்கெட்டை ஏவும் போது இந்த பூமியின் ஈர்ப்பு நிலை சுற்று அதைப் போல பன்மடங்கு வேகத் துடிப்பினை உந்து விசையாக அனுப்புகின்றான்.

புவியின் ஈர்ப்பைக் கடந்துச் சென்றபின் அதனுடைய வேகத் துடிப்பு அதிகமாகின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு தானே மிதக்கும் நிலை வருகின்றது. எந்த வேகத் துடிப்பின் நிலை கொண்டிருக்கின்றானோ அதை நிலை கொள்ளவும் செய்கின்றான்.

இதைப் போலத்தான் அகஸ்தியன் கண்ட விண்ணுலக ஆற்றலையும் அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்ததையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

1.ஈஸ்வரபட்டர் ஆரம்பத்தில் இதையெல்லாம் என்னுள் (ஞானகுரு) இணைத்தார்.
2.நான் உங்களுக்குள் அதை இணைக்கின்றேன்.

அணுவின் ஆற்றலை தனக்குள் அறிந்த அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்து விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பருகி அதையும் சேர்க்கின்றார்.

நமது பூமி தனக்குள் இழுக்கும் போது இடைமறித்து உணர்வை நுகர்ந்து அந்த வலுவை பெறுகின்றார். அதனால்தான்
1.காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை இடைமறித்து
2.அதிலிருந்து வரும் சக்திகளை அந்த வழிகளில் உங்களை சேர்க்கச் சொல்வது.

ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அங்கு இருக்கும் பொருள் தெரிவது போல் அந்த மகரிஷிகள் உடலில் விளைந்த உணர்வுகளை நமக்குள் ஒளியாக மாற்றும்போது
1.நம்மை அறியாது பிறிதொரு உடலில் விளைந்த உணர்வுகள்
2.நம்மை எப்படி இயக்குகின்றது என்பது தெரிகின்றது.

திடீரென்று ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றார் நம்மால் அடக்க முடிகின்றதா…? இல்லையே…!

ஏனென்றால் அவர் உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் பாய்ந்தபின் நம்மை எப்படி இயக்குகின்றது என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

இதைப் போல அந்த மகரிஷிகள் உணர்வுகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் போது நமக்குள் அந்த உணர்வின் இயக்கத்தையும் உணர முடிகின்றது

நம் தெளிந்த அறிவு மறைக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. இருளிலிருந்து விடுபட முடியாத போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளி கண்டபின் இருளிலிருந்து விடுபடும் மன பலம் கிடைக்கின்றது.
1.அதனால்தான் உங்களை அதிகாலையில் எப்படியும் அந்த நேரத்திற்குத் தட்டி எழுப்பி விடுவதும்
2.அந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்வதும்.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் நினைவினை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். மகரிஷிகளின் உணர்வின் ஒளிகளை எடுத்து நமது உயிருடன் ஒன்றச் செய்து நமது உடலிலுள்ள உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

1.உயிரிலே நம் குருநாதர் கொடுத்த அச்சக்தியை எண்ணி
2.உள்முகமாக உடலுக்குள் செலுத்தி
3.ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.

ஞானிகள் மகரிஷிகளின் தற்போதைய செயல் என்ன…!

Protected zone of sages

ஞானிகள் மகரிஷிகளின் தற்போதைய செயல் என்ன…!

 

“ரிஷி நிலை…!” பெற்ற மகரிஷிகளின் நிலையெல்லாம் ஒன்றிரண்டு நாளில் பாட நிலையில் சொல்ல முடியாத நிலையப்பா.

ரிஷி அருள் பெற்றவர்கள் எல்லாம்
1.இவ்வுலகை… இவ்வுலக மக்களுக்காக… இவ்வுலக நன்மைக்காக… தாங்கள் பெற்ற அருளை
2.பல ரூபத்தில்… பல வழிகளில்… பல உடல்களில் வந்து… பல கோயில்களின் சிலைகளின் ரூபத்திலும் வந்து…
3.ஆண்டவனை அடிபணிந்து.. ஆண்டவன் ஒருவன் உள்ளான்… அவன் நம்மைக் கைவிடமாட்டான்… என்ற ஒரே நிலையில் அண்டி வருபவர்களுக்கு
4.ஆண்டனவனாக வந்து அருள் புரிகிறார்கள்…! என்று பல பல தடவை சொல்லிவிட்டேன்.

பல புராதனக் கோயில்களில் சென்றிருந்தால் தெரியும். கோயில் வாசலின் உட்புகும் பொழுதே கோயிலின் மணம் ஒன்று எல்லோருக்குமே தெரியுமப்பா.

பல மூலிகைகள் கலந்த அவ்வாசனையை “என்ன…” என்றே நாம் புரிந்திட முடியாத நிலையில் அம்மணம் வீசிடுமப்பா. அம்மணங்கள் எங்கிருந்து வருகின்றன…?

பல பக்தர்கள் ஒன்றுகூடி பிள்ளையாரப்பா…! முருகா…! ஈஸ்வரா…! கோவிந்தா…! என்ற நாமத்தை ஒரே நிலையில் ஒலித்துக் கொண்டே அக்கோவிலுக்குள் செல்கிறார்கள்.

அக்காலத்தில் இந்த ரிஷிகள் தவமிருந்து அமைத்த கோவில்களில் எல்லாம் இம்மணங்கள் வீசிடும். அந்த ரிஷிகள் தான் பெற்ற ஈஸ்வர சக்தியில் இருந்து பல மணங்களைத் தன் வழிக்கு ஈர்த்து வரும் மானிடர்களுக்கு எல்லாம் “அம்மணங்களை அளிக்கிறார்கள்…!”

சித்தர்களின் அருளையும் ரிஷிகளின் அருளையும் சிந்தித்துப் பார்க்கவே முடிந்திடாதப்பா. அந்நிலையில் அருள் பெற்றவர்கள் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் தவப்பயன் பெற்ற ரிஷிகளும் இல்லாவிட்டால் இவ்வுலக நிலையே வெறும் குட்டிச்சுவராகி இருக்குமப்பா.

அந்த மகரிஷிகளும் ஞானிகளும் இக்கலியின் கடைசியில் கடும் தவமிருக்கிறார்களப்பா. கல்கிக்கு இம்மானிட மக்களை எப்படியாவது ஈர்த்துச் செல்ல வேண்டும். இக்கலியில் மடியாமல் கல்கிக்கு வந்திட வேண்டும் என்று பேராவல் கொண்டு பெரும் தவமுள்ளார்கள்.

1.கல்கியின் ஆரம்ப நிலைதானப்பா
2.சில இடங்களில் மனித உள்ளங்களில் இந்த மெய் ஞானத்தின் நிலை பரவி வருகின்றதப்பா.

ஏனென்றால் இக்கலியில் உள்ள மனிதர்களின் நிலையை “என்ன…?” என்று எண்ணிப் பார்த்திடவே முடியவில்லையப்பா.
1.ஆசை
2.அதியாசை
3.பேராசை
4.கலியில் கடைசி நிலை இதுதானப்பா. பேராசை நிலை,
5.இந்நிலையில் யாரும் (இங்கே) தனித்து நிலைத்திட முடியாதப்பா.

ஆகவே காலமுடன் கலந்துதான் உயிரான ஈசனை எண்ணித் தியானிக்க வேண்டுமப்பா.

1.ஊர் நிலையில்…
2.உலக நிலையில் ஒத்துப் போய்..
3.உங்கள் எண்ண நிலையில் மட்டும் ஈசனின் அருளை மாற்றிடாமல் தியானித்திடுங்களப்பா… ஜெப அருளைப் பெற்றிடுங்கள்…!

அச் சித்தர்களின் நிலையையெல்லாம் நீங்கள் அறிந்திட மட்டும்தான் இந்த ஜெப அருள் இல்லையப்பா. இந்நிலையில் இருந்து கொண்டே உன்னையும், சித்தராகவும் ஞானியாகவும் ரிஷியாகவும் ஆக்கத்தான்… கல்கியில் கலக்கத்தான்… கடும் தவம் செய்து “ஈஸ்வரபட்டனாகிய யான் இந்த உலகில் சுற்றிக் கொண்டுள்ளேன்…!”

புரிந்த பாடத்தை நல்ல நிலையில் ஏற்றுக் கொள்ளுங்களப்பா. என்றும் என் அருள் உங்கள் எல்லோருக்கும் உறுதுணையாக இருக்கும்.

துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

Polaris and earth

துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்

 

நீங்கள் எந்த நிமிடம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டுமென்று “ஈஸ்வரா…!” என்று உயிருடன் ஒன்றுகின்றீர்களோ அப்பொழுது நீங்கள் அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
1.அதை விரையமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
2.அதற்குத்தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை ஆழப்பதிவு செய்வது.
3.நீங்கள் பார்க்கின்றவர்களுக்கு எல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

உங்கள் சொல் பேச்சு பார்வை உங்கள் மூச்சலைகள் இந்தக் காற்றிலே பரவினாலும் நீங்கள் யாருக்குப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று எண்ணத்தைப் பாய்ச்சினாலும் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது தன் இனத்தின் செடி பெருகி விட்டால் குவிந்த சக்தி கொண்டு அந்தத் தாவர இனங்கள் செழிப்பாக வளரும். களைகள் முளைத்து விட்டால் அந்த நிலையில் வளர்வதில்லை.

அதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் களைகள் முளைக்காமல் இருக்க வேண்டுமென்றால்
1.நாம் யாரைப் பார்த்தாலும் அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெற வேண்டும்
3.அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்க வேண்டுமென்று எண்ண வேண்டும்.

இதைத்தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அந்த உணர்வின் சக்தி நமக்குள் வருகின்றது.

நம் உணர்வுகள் அனைத்தையும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் இணைக்கச் செய்து நண்பர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் உங்கள் சக்தியை அவர்களுக்குப் பரப்பி அவர்களைச் சந்திப்போர் எல்லாம் அதைப் பெறச் செய்ய வேண்டும்.
1.நாம் துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றி
2.எல்லோரையும் அதைப் பற்ற வைக்க வேண்டும்.

சூரியன் எத்தனையோ விஷத் தன்மையான நிலைகளை எடுத்தாலும் அந்த விஷத்தைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது. அதில் விளைந்த மகாஞானி உலகில் அவன் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவானாலும் அதிலுள்ள நஞ்சினைப் பிரித்துவிட்டு ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளான்.

இந்த மனித உடலில் அவர்கள் பின்பற்றிய அந்த உணர்வைச் சேர்த்தால்தான் என்றும் ஒளியின் சுடராக நிலைக்க முடியும். அதைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே.

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

Soul cleansing

ஆத்மாவைச் சுத்தம் செய்ய ஆயுதம் கொடுக்கின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) பிரச்சாரம் செய்யவில்லை. உங்கள் ஒவ்வொருவருடய நிலைகளிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பதியச் செய்து இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டச் செய்கின்றோம். அதற்குத்தான் இந்தத் தியானம்.

வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பமானாலும் சரி “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடலைத் தியானித்துக் கொள்ளுங்கள். இதற்குப் பெயர் “ஆத்ம சுத்தி”

1.உங்களை அறியாமலேயே உங்களைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான்
2.தக்க ஆயுதத்தை “மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.
3.ஏனென்றால் இது எல்லாம் வாக்குடன் கூடிக் கொடுக்கும் நிலைகள்.
4.நீங்கள் எல்லாம் கடும் ஜெபமிருந்து இந்தச் சக்தியைப் பெறுவதென்றால் அவ்வளவு சாதாரணமானதல்ல.

சரியான முறைகளில் இந்த ஆத்ம சுத்தி என்கிற எண்ண உணர்வின் எண்ண வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு இந்த உணர்வின் தன்மையைக் கொல்லூரில் 16 வருடங்கள் எடுத்து வளர்த்து அந்த வாக்கின் ஒலியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

இப்படிப் பதியச் செய்ததை
1.யாம் சொல்லும் இந்த முறைப்படி யார் ஒருவர் தியானத்தில் இருக்கின்றார்களோ
2.அவர்களுக்கு இந்த வாழ்க்கையிலே எத்தகைய துன்பமிருந்தாலும் நிச்சயம் நீங்கிவிடும்.

பெண்களாக இருக்கக்கூடியவர்கள் அனைவருமே சமையல் செய்யும் பொழுது ஆத்ம சுத்தி செய்து விட்டு அரிசியைப் போடும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நாம் சமைக்கும் சாப்பாட்டை யார் புசித்தாலும் அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டுமென்று எண்ணுங்கள். நீங்கள் அப்பொழுது சுவாசிக்கக் கூடிய உணர்வு உங்களை அறியாமலேயே உங்களைச் சுத்தப்படுத்தும்.

பெண்களுக்கு அடிக்கடி கவலையும் தொல்லைகளும் வருவதனால் அந்த உணர்வுகளால் அவர்களுக்குக் கை கால் குடைச்சலும் தலைவலியும் ஒற்றைத் தலைவலியும் அதிகமான நிலையில் வரும். காரணம் பெண்களுக்கு ஈர்ப்பு சக்தி ஜாஸ்தி.

1.அடிக்கடி கவலையும் மற்ற நிலைகளையும் எண்ணி எண்ணி
2.அவர்களை அறியாமலேயே இந்த உணர்வுகள் உடலில் சேர்ந்து கை கால் குடைச்சல் வந்துவிடுகின்றது.
3.அதுவே பின் நாட்களில் நோய்களாக வளர்ந்து நல்லதையே சிந்திக்க முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினால் சமையல் செய்யும் பொழுதும் சமையல் செய்தபின் பரிமாறும் பொழுதும் இந்த நிலைகளைச் செய்து கொள்ளுங்கள். கணவன் மனைவியும் அவசியம் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியே சென்றாலும் தொழிலில் போய் அமர்ந்தாலும் ஒரு சங்கடமான வார்த்தைகளைக் காதில் கேட்டாலும் அடுத்த நிமிடம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு நிமிடமும் சுத்தப்படுத்துவதற்கே இந்த ஆயுதத்தை யாம் கொடுக்கின்றோம்.

இவ்வாறு நமது வாழ்க்கையில் தொடர்ந்து செய்து வந்தால் மகரிஷிகள் எவ்வாறு தங்கள் உணர்வுக்குள் ஒளியைச் சேர்த்து தீமைகளை நீக்கி உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரமாகிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றார்களோ அதைப் போல நாமும் அவர்களுடைய நிலையை அடைய முடியும்.

இதற்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!