
நாம் பெற்று வளர்க்க வேண்டிய அழியாச் சொத்து
தீவிரவாதம் என்ற நிலையாகி மனிதனுக்கு மனிதன் கொன்று ரசித்து வாழ்வதும் அதே போல மனிதனையே புசித்திடும் நிலைகளும் வந்து விடுகின்றது,
தீவிரவாதிகளும் கொன்றவர்களைச் சும்மா விடுவதில்லை. பழி தீர்த்து அவனைக் கொன்று “அவனை உணவாக உட்கொண்டு வாழ்கிறேன்…” என்று சொல்கிறார்கள்.
1.அன்று ஒரு காலத்தில் ஆசியக் கண்டத்தில் இஸ்ரவேல் என்ற நாட்டில் யூதர்கள் இப்படிச் செயல்படுத்தி வந்தாலும்
2.அவர்களுக்குள் போர் வந்தால் பெண்களும் சரி ஆண்களும் சரி
3.உன்னைக் கொன்று உன் ஈரலை நான் விழுங்கப் போகின்றேன் என்பார்கள்.
4.சொல்வதோடு மட்டுமல்ல…! கொன்று அந்த ஈரலைப் பச்சையாகவே சாப்பிடுவார்கள்.
இதைப் போல வெறித்தனமான உணர்வுகள் கொண்டு அன்று செயல்படுத்தப்பட்ட நிலைகள் தான்.
ஆக… அந்த வம்சமே மற்றவர்களைக் கொன்று முழுமையாக அவர்களைத் தின்பது தான்.
1.அங்கே பரவிய அந்த உணர்வு தான்
2.உலகம் முழுவதற்கும் இப்பொழுது பரவிக் கொண்டிருப்பது.
புது வருடம் பிறந்து விட்டது முதல் தேதி என்று இவர்கள் கொண்டாடினாலும்… தீமைகளை உணர்த்தி தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று இயேசு அதைச் சொல்லி இருந்தாலும் “அந்த வம்சம் தான் இரக்கமற்றுக் கொன்றது… அதை ரசித்து வாழ்ந்தது…”
இன்றைய நிலைகள் நடப்பது… அன்றைய இதனுடைய தொடர்ச்சி தான்…!
இதைப் போன்ற கொடுமைகளிலில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் 25 வருடம் யாம் உங்களுக்குத் தொடர்ந்து அந்த மெய் ஞானிகளைப் பற்றி உபதேசித்து வருவது.
1.உங்கள் அனைவருக்குள்ளும் பரவச் செய்து அந்த அருள் மகரிஷிகள் உணர்வை ஏங்கிப் பெறும்படி செய்து செய்து கொண்டிருக்கின்றேன்.
2.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பெற்றால் ஒழிய இதிலிருந்து தப்ப முடியாது.
3.ஆகவே அருள் ஒளியைப் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.
இன்றைய உலகச் சூழ்நிலையில் எந்தச் செல்வத்தையும் காக்கும் திறன் எவருக்கும் இல்லை.
1.ஆனால் என்றும் அழியாச் செல்வத்தை… அருள் ஞானச் செல்வத்தை.. அருள் சக்தியாக நமக்குள் உருவாக்கி விட்டால்
2.இதை யாரும் தடுக்க முடியாது… அதை அழித்திட முடியாது.
ஆறாவது அறிவின் துணை கொண்டு அந்த அருள் சக்திகளை வளர்க்க வேண்டும். அந்த ஒளியின் தன்மையாக நாம் அனைவரும் வளர வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.