
ஃபோன் எல்லோருடைய கைகளிலும்… எப்போதும்… நீங்காது இடம் பிடித்திருப்பதன் காரணம் என்ன…?
கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் இயக்குகின்றது.
1.அதில் உள்ள நாடாக்களில் உள்ள காந்தப் புலனறிவில் கெமிக்கல் கலந்த உணர்வினைப் பதிவாக்குகின்றான்.
2.எலக்ட்ரிக்கல் இதனுடைய தட்டெழுத்தின் தன்மை வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் ஆக மாற்றுகின்றது.
3.அதனுடைய அழுத்தம் எதுவோ அதனின் நிலையை இயக்குகின்றது.
இதை உருவாக்கியவன் நினைக்கலாம் இதிலே பதிவு செய்து கொண்ட நிலைகளால் தான் அது இயங்குகிறது என்று. அது மட்டுமல்ல…!
மனித உயிரின் தன்மை எலெக்ட்ரிக். ஒரு உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்.
1.அதற்குத் தக்க தான் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் இவருடைய கைகளும் இயங்குகின்றது.
2.இந்த உணர்வின் காந்தப் புலன் இணைகிறது.
3.இவன் நினைவின் ஆற்றலுக்குள் ஜீவணுக்களாக அங்கே படங்களாகக் காட்சி தருகின்றது.
இவனுடன் இணைந்த நிலை தான் அங்கே வருகிறது.
நாம் நினைக்கின்றோம் அது இயந்திரம் என்று. இவனை அறியாது இயக்கக்கூடிய நிலைகளை மனிதனின் எண்ண உணர்வுகள் இங்கே பதியப்படும் பொழுது இவனுடைய உணர்வின் நினைவலைகளும் அதிலே வைத்திருக்கும் நாடாவிலும் இது பதிவாகின்றது… ஆனால் மனிதனின் மூளை என்பான் கம்ப்யூட்டரை.
தட்டெழுத்தின் மூலமாக ரிக்கார்டை இயக்கப்பட்டு காந்தப்புலனறிவுகள் இயக்கப்படும் பொழுது மனிதனைப் போன்று செயல்படும்.
1.மனிதன் சொல்வது போல் சொல்லும்… வருவோரைப் பற்றிக் கேட்டுப் பதிலும் கொடுக்கும்.
2.கம்ப்யூட்டர் மூலமாக இன்று எவ்வளவோ நுண்ணிய நிலைகளை (CHATGPT.. GEMINI… SIRI) இவ்வாறு தான் செயல்படுத்துகின்றார்கள்.
ஆனால் மனிதன் நோய்வாய்ப்பட்டோ அல்லது வெறித்தனமாகவோ உணர்வுகள் மாற்றப்பட்டு வீட்டில் சண்டையோ சங்கடமோ வெறுப்புடன் வந்து செயல்பட்டால்… இந்த உணர்வின் தன்மை அழுத்தத்தின் தன்மை இயக்கும்.
அதனின் இயக்கம் நாடாக்களில் பதிவு செய்து மற்றொருவர் இயக்கப்பட்டு படங்களாகப் பதிவாக்கப்பட்டால் இதனுடைய நிலைகள் இவன் உடலுக்குள் இவருடைய உணர்வுகளும் மாறும். கம்ப்யூட்டர் இப்படித்தான் வேலை செய்கிறது.
அதனால் தான்
1.கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் ஒரு சிலர் தன் நிலையையே இழந்திருப்பார்கள்.
2.இன்னொருவர் கம்ப்யூட்டரில் இயக்கத்தின் தன்மை கொண்டு சரியாக வேலை செய்திருந்தாலும்
3.வீட்டிலே வெறுப்பு குடும்பத்தில் வேதனை போன்ற உணர்வுகளை எடுத்தால் அது கலந்துவிடும்.
4.அதை இயக்கப்படும் பொழுது… இவன் (அடுத்தவன்) பார்த்தான் என்றால் இவனும் பிரமை பிடித்த மாதிரி ஆகிவிடுவான்.
5.இது எல்லாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய விளைவுகள்.
6.(சிறு குழந்தைகள் முதல் கொண்டு பெரியவர்கள் வரை இதனால் தான் அதிலிருந்து வெளி வர முடிவதில்லை).
ஆகவே… காந்தப் புலனறிவு எதனுடன் இயக்குகின்றதோ அதனின் இயக்கமாக மாறுகின்றது.
கம்ப்யூட்டர் திருடர்களும் இன்று நிறையவே வருகிறார்கள். பேங்கில் இருக்கும் கணக்கை மாற்றி கண்டுபிடிக்காதபடி உணர்வுகளைக் கொண்டு வந்து திருட்டுத்தனத்தைப் பாய்ச்சுகிறார்கள்.
இவன் எந்தக் கணக்கைப் போட்டாலும் அது காட்டாது.
1.அதற்காக அமெரிக்காவில் கண்டுபிடித்து என்ன செய்கின்றார்கள்…?
2.எவன் திருடுகிறானோ அவனுக்கே உத்தியோகம் கொடுக்கின்றார்கள் கம்ப்யூட்டர் திருடர்கள் (HACKERS).
பல கோடிக்கணக்கான பணங்களை பரிவர்த்தனை செய்யக்கூடிய நிலையில் இவ்வாறு ஏமாற்றி வேலைகளைச் செய்கின்றார்கள். பணம் காணாமல் போகிறது… ஆனால் யார்…? என்று தெரிவதில்லை.
விஞ்ஞான அறிவால் வந்திருந்தாலும் மனித உணர்வுகள் கலந்து தான் அது இயக்குகின்றது.
1.மனித உணர்வில் இருந்து பல கோடி உணர்வுகள் எடுக்கப்பட்ட பின் இந்த உணர்வலைகள் மாறுகின்றது.
2.அதை நுகர்கிறான்… அதற்குள் கலக்கின்றான்.
3.அடுத்தடுத்து… எதனைப் புதிதாக உருவாக்குகின்றானோ அந்த செல்களில் இந்த உணர்வுகள் இழுக்கப்படுகின்றது.
4.பதிவாக்கி மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது மனிதனால் இயக்கப்படுகின்றது.
மனிதன் இன்று எதை இப்படி உருவாக்கினாலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகளே அங்கே இயக்குகின்றது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.