எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

எம்மிடம் துன்பத்தைச் சொல்லி எதையும் கேட்காதீர்கள்… நல்லதைச் சொல்லி அதைக் கேட்டு வாங்குங்கள்

 

தெரிந்தோ தெரியாமலோ நம் உடலுக்குள் அசுர அணுக்கள் புகுந்து விட்டால் தன் அருகிலே இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்கிவிடும்.

நல்ல உடலை உருவாக்கிய அந்த அணுக்கள் மடிந்துவிட்டால் உடலுக்கு இயக்கச் சக்தியாக மற்றும்… “திரவகப் பொருள்கள்” கிடைக்காது போய்விடும்.

1.நரம்புகளுக்குள் ஒரு விதமான ஆசிட் (அமிலம்) உண்டு
2.அந்தத் திரவகம் நமக்குள் இல்லை என்றால் கைகளை மடக்குவதோ மீண்டும் நேராக்குவதோ கடினமாகிவிடும்.
3.மூட்டுகளிலும் இந்தத் திரவங்கள் ஓடப்பபட்டு அது தான் மடக்குவதற்கும் மற்றதுக்கும் இயக்குகிறது.

நாம் பார்க்கின்றோம் விஞ்ஞான அறிவு கொண்டு இயந்திரங்களுக்கு ஒரு திரவப் பொருட்களை (OIL – LUBRICANTS) அதற்குள் கலக்கின்றார்கள் அப்பொழுது அந்த இயந்திரங்கள் தேய்வில்லாதபடி சில காலம் ஓடுகின்றது.

இன்ஜின்களிலும் இதே போன்று திரவங்களைக் கலக்கின்றனர்… அதற்குள் இருக்கும் பேரிங்… பிஸ்டன்… தேய்வில்லாதபடி ஓடுகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் உயர்ந்த அணுக்களால் உருவாக்கப்பட்டது அந்த அணுக்களின் மலம் திரவமாக மாற்றப்பட்டு நம் உடல் உறுப்புகளில் இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகிறது.

உதாரணமாக நுரையீரல் என்று வைத்துக் கொள்வோம். நுரையீரலுக்குள் நுண்ணிய அலைகளாக இயக்கச் செய்யும்
1.அந்த நரம்புகளுக்கும் வாயு நரம்புகளுக்கும்… திரவம் அதற்குள் சென்ற பின் விரிவடைகின்றது.
2.மீண்டும் சுருங்கச் செய்வதற்கு அதில் உள்ள திரவ அணுக்கள் சுருங்கி இழுக்கும்
3.அந்தக் காற்று புகும் பொழுது மீண்டும் விரிவாகும்.

எப்படி ஒரு காற்றினை அழுத்தி இழுக்கப்படும் பொழுது விரிவாகிறதோ… அந்த அழுத்தத்தைக் குறைக்கப்படும் பொழுது எப்படிக் குறைகின்றதோ… இதைப் போன்று தான் நம் சுவாசப்பைகளை நரம்பில் உள்ள திரவம் இயக்குகின்றது.

நுரையீரலை இயக்கச் செய்யும்…
1.அதாவது அனைத்து உறுப்புகளையும் ஒருக்கிணைந்து இயக்கச் செய்யும் ஈரல் மையங்களில் ஆசிட் பவர் குறைந்து விட்டால்
2.அதை இழுத்து விரிவடையச் செய்யும் காற்று நிலைகள் விரிவடைந்து விட்டால் அதிகமாக விரிவடைந்து விடும்.
3.அதே சமயத்தில் அதைச் சுருங்கச் செய்யும் சக்தியும் குறைந்து விடுகின்றது.

அப்படிக் குறைவடையப்படும் போது நம் நினைவாற்றலையும்… இந்தத் திரவகம் சிறு மூளை பாகம் சென்று ஒன்றுடன் ஒன்று இணைந்து இயக்கப்படும் பொழுது அங்கேயும் அதனுடைய அழுத்தக் குறைவுகள் ஆகி விட்டால் அந்த உறுப்புகளை இயங்காது தடைப்படுத்தி விடுகின்றது… மிகவும் நுண்ணிய நிலைகளில் இப்படி ஆகிவிடுகின்றது.
1.இத்தகைய நிலைகள் நமக்குள் ஏற்பட்டு விட்டால்
2.தீய அணுக்கள் உடலுக்குள் புகாது தடைப்படுத்தும் சக்தி இழக்கப்படுகிறது.

இவ்வாறு துரித நிலைகள் கொண்டு இந்த விஷத்தன்மை ஊடுருவி விட்டால் விஷ அணுக்களாக உடலுக்குள் உருவாகி அது வளர்ச்சியாகத் தொடங்குகிறது.

அதனால் பொழுது
1.நல்லதைப் பெற முடியாதபடி
2.நல்லதை எண்ண முடியாதபடி
3.நல்லதைக் கேட்க முடியாது ஒரு தடையாகிவிடும்.

என்னிடம் வந்தீர்கள் என்றால் சாமி…! என்னுடைய நோய் குறையவே மாட்டேன் என்கிறது… கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது… குடும்பத்தில் சும்மா சண்டை வந்து கொண்டே இருக்கிறது…! என்றே சொல்வீர்கள்.

“நல்லதைச் சொல்லிக் கேளுங்கள்” என்று நான் சொன்னாலும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். எங்கள் வீட்டில் கஷ்டமாக இருக்கின்றது… அதை எப்படி நாங்கள் சொல்லாமல் இருப்பது…! என்று தான் சொல்வீர்கள்.

ஏனென்றால் எந்த உணர்வு இழுக்கின்றதோ அது தான் இங்கே வரும்.
1.கஷ்டம் என்ற உணர்வு அந்த நினைவாற்றல் வந்து விட்டால்
2.உங்கள் ஆன்மாவின் முன்னணியில் அது தான் இருக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அது உங்கள் உடலுக்குள் நன்மை பயக்கும் சக்தியாக வரும். அதனால் நீங்கள் நலம் பெறுவீர்கள்… உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி வரும்… தொழில்கள் வளம் பெறும்…! என்று நான் சொன்னாலும்…
1.“இதை உங்கள் உணர்வு ஏற்க மறுக்கும்…”
2.நான் சொல்வது அனைத்துமே விரயம் ஆகிவிடும்

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; எங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும்; என் குடும்பம் நலம் பெற வேண்டும்; எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்; குழந்தைகள் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்; குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட வேண்டும்; வியாபாரம் பெருக வேண்டும்; வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்; அவர்கள் நலம் பெற வேண்டும்…! என்று இதை ஏங்கிப் பெற்றால் அந்த நல்ல அணுக்கள் உங்களில் வளரும்.

1.நீங்கள் உடல் நலம் பெறுவீர்கள்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் குடும்பம் நலமும் வளமும் பெறும் என்று
3.இதைத்தான் உங்களுக்குள் ஊழ்வினை என்று வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
3.அதை நினைவாக்கி வளர்ப்பதற்குத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

ஆகவே நான் கொடுக்கும் நல்லதை மறந்துவிட்டுத் துன்பத்தைச் சொல்லி அத்தகைய பதிவை நீங்கள் வளர்ப்பது உங்களுக்கு நல்லதல்ல…!

அதை மாற்றிக் கொள்ளுங்கள்…!

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

குரு (ஈஸ்வரபட்டர்) உணர்வு உங்களை இயக்கி” மகிழ்ச்சியை ஊட்டும்

 

ஒருவன் கடுமையான பாவத்தைச் செய்வதை உற்றுப் பார்த்தாலே அவனுக்குள் விளைந்த அந்த வினைகள்… கூர்ந்து கவனிக்கும் போது அந்தப் பாவ வினைகளே நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஒருவன் சாபமிடுவதைக் கூர்ந்து கவனித்தால் அவனிட்ட சாப வினைகள் எதை அழிக்க வேண்டும் என்று எண்ணினானோ அதே உணர்வு நமக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.
1.சாபமிட்டோருக்கும் அதே நிலை… கேட்டோருக்கும் அதே நிலை
2.இது போன்ற தீமைகள் நமக்குள் தாக்காது தீய வினைகள் சாப வினைகள் நமக்குள் சேர்ந்திடாது
3.விண்ணின் ஆற்றலைக் கவர்ந்து அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

அதற்கே குருநாதர் (ஈஸ்வரபட்டர்) உங்களுக்கு இத்தகைய அருள் உணர்வுகளைப் போதித்து… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று உங்களை அறியாது உள் புகும் தீமைகள் அனைத்தையும் அகற்றும்படியாக வழி காட்டுகின்றார்.

தீய வினைகளை அகற்றி என்று மகிழ்ச்சியான சொல்களை நீங்கள் சொல்கின்றீர்களோ அப்போது எமது குருநாதரை உங்களில் நான் (ஞானகுரு) காணுகின்றேன். தீமைகளை அகற்றி என்று மகிழ்ச்சியுடன் நீங்கள் எம்மைச் சந்திக்கின்றீர்களோ அப்பொழுது என் குருவை உங்களிடம் நான் பார்க்கின்றேன்.

தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு விண்ணுலகில் மகரிஷிகள் சஞ்சரித்துக் கொண்டிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஒளியான அணுக்கள் இங்கே வந்து கொண்டுள்ளது.

குருநாதர் காட்டிய அருள் நெறி கொண்டு அதைத் தான் உங்களை இப்போது பெறும்படி செய்து கொண்டுள்ளோம். அதை நீங்கள் சுவாசிக்கப்படும் போது
1.அந்தச் சப்தரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் இயக்கி
2.உங்களை அறியாத வந்த பாவ வினைகள் நீங்கி தீயவினைகள் நீங்கி சாப வினைள் நீங்கி
3.உங்களில் மகிழ்ச்சி பெறும் நிலைகளில் அது இருந்தால்
4.எமது குருநாதன் அந்த உணர்வின் இயக்கமாக உங்களுக்குள் இயக்கி
5.தீமைகளை மாய்த்து… மெய் வழி காணும் உணர்வாக மலர்ந்த முகத்துடன் உங்களைக் காண வைக்கின்றார்.

மகிழ்ச்சியுடன் அதை நான் காணும் நிலையாக வருதல் வேண்டும்.

உங்கள் உயிரான ஈசனை மதித்து… அன்னை தந்தையின் உயிரை ஈசனாக மதித்து… அவர்களைத் தெய்வமாக மதித்து அவர்களைக் குருவாகவும் மதித்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் வழிபடுத்திக் கொள்ளுங்கள்…!

எத்தகைய சந்தர்ப்பத்திலும்… மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி… அதைப் பற்றுடன் பற்றிக் கொண்டால் வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றிடாது (பற்றற்றதாக) செயல்படுத்த முடியும்.

ஆகவே… மறவாதீர்கள்…!
1.ஒவ்வொரு நாளும் கொடுக்கக்கூடிய உபதேசங்களை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி
2.வீட்டிலிருந்தே தியானித்து அந்த அருள் சக்திகளை நீங்கள் பெற முடியும்.
3.அந்த்த் தகுதியை நீங்கள் பெற வேண்டும் என்று என் குருநாதரைப் பிரார்த்திக்கிறேன்.

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான்… அதிலிருந்து விடுபடும் சக்திகளைக் கொடுத்தார் குருநாதர்

பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான்… அதிலிருந்து விடுபடும் சக்திகளைக் கொடுத்தார் குருநாதர்

 

என் (ஞானகுரு) காலிலே பல ஆணிகள் உண்டு. காலில் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும். ஒரு சிறிய கல் காலிலே குத்தினால் தலையில் இருக்கக்கூடிய… உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் ஒரு குச்சியை வைத்துக் காலிலே பத்து அடி அடித்தாலே போதும் ஜீவனே பிரிந்து விடும். அப்போது அந்த வேதனை எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு காலிலும் சேர்த்து 26 ஆணிகள் உண்டு…! ஒரு காலடி நான் எடுத்து வைக்க வேண்டும் என்றால் முள்ளிலே கால் வைப்பது போன்று தான் இருக்கும்.

சிலம்பு விளையாடுபவர்கள் எப்படிக் காலடி எடுத்து வைத்துச் செயல்படுகின்றார்களோ அது போன்று பாவ்லா போட்டுத் தான் நடக்க முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் ஊரைச் சுற்றி உலகைச் சுற்றி நான் அனுபவம் பெறுவதற்காகப் போகும் போது… குருநாதர் எம்மை “நீ செருப்பு போட்டு நடக்கக் கூடாது…” என்று சொல்லிவிட்டார்.
1.செருப்பு போட்டு நடந்தால் கஷ்டத்தை நீ உணர முடியாது
2.எத்தனையோ பேர் இந்த உலகிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
3.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணர வேண்டும்.
4.அதை உணர்ந்தால் தான் மற்றவர்களுக்கு நீ உதவி செய்ய முடியும்… அதை நீக்கவும் முடியும்.

ஆகவே… உனக்கு வேதனை வரும் பொழுது அதை நீக்கக்கூடிய உணர்வுகள்… அந்த உபாயங்கள்… அது எப்படி…? என்பதை நீ அறிந்து கொள்ளவே இதைச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

காலிலே ஆணி என்றாலும் நடக்கும் பொழுது உன் மனது என்ன ஆகிறது…? நீ சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் சென்று என்ன ஆகின்றது…?

ஆணி வந்தவர்கள் கால்கள் எப்படி முடமாகின்றது…? நன்றாகத் தான் இருப்பார்கள் இந்த ஆணிகள் வந்துவிட்டால் உடல் குறுகி நலிந்த நிலை ஆகி விடுகின்றார்கள்… அவரின் மனதும் வேதனைப்படும் உணர்வாகவ ஆகி விடுகிறது.

இப்படி… தன்னை அறியாமலே எந்தெந்த நிலைகள் கொண்டு மனிதர்கள் வேதனைப்படுகின்றனர்…? அந்த வேதனை உருவாகவே எப்படி மாறி விடுகின்றார்கள்…?

இது போன்ற நிலைகளை நீ அனுபவபூர்வமாக அறிந்தால் தான் அதை நீக்க முடியும்…
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகர் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டி அருள் நெறிப்படி
5.நாம் எதை எண்ண வேண்டும்… எதனை நாம் பருக வேண்டும்…?
6.எதனை நாம் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
7.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
8.ஞானிகள் உணர்வினை வினைக்கு நாயகனாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்ற நிலையை
9.என் காலில் ஆணி இருக்கின்ற வரையிலும் நடந்து பல நிலைகளைச் செயல்படுத்தினார் குருநாதர்.

மகரிஷிகள் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றி விண்ணுலகில் இன்று சுழன்று கொண்டிருக்கிறார்கள். தீமையை அகற்றிய நிலைகள் அவர் உடலில் விளைய வைத்த சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்தார். இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்து ஞானிகளின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

 

எல்லா உயிரையும் ஈசனாக மதி…! அந்த உடல்களை ஆலயமாக மதி… அந்த ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் உயர்ந்த குணங்களை மனிதனாக உருவாக்க உதவிய நற்குணங்களை எல்லாம் தெய்வமாக மதி.

ஒவ்வொரு மனிதனும்… அவன் தீமையிலிருந்து அகன்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்… “நீ பிரார்த்தனை செய்…”

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எதைப் பிரார்த்தித்தேனோ… எதை உபதேசித்தேனோ
2.எவ்வாறு அதையெல்லாம் நீ கூர்ந்து கவனித்தாயோ அந்த உணர்வுகள் அனைத்தும் உனக்குள் பதிவாகி
3.அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது
4.நான் கூறிய உணர்வையும் நான் உணர்த்திய உணர்வையும் நீ பெறும் தகுதி பெறுகின்றாய்.

கீதையின் சாரத்தை” அன்று வியாசகர் உணர்த்தியது போன்று… நான் உனக்கு உபதேசித்ததை நீ எடுக்கப்படும் போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!”

ஆகவே… பிறருடைய தீமைகளை அகற்றி அதிலிருந்து அவர்கள் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு.

நான் உனக்கு உபதேசித்து உணர்த்திய ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைப் பருக வேண்டும் என்று நீ எண்ணு.
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நீ அதைப் பெறுவாய் என்றால்
3.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது… அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியை நீ பெறுகின்றாய்.

மெய் ஞானிகள் உணர்வை நீ பெறும் பொழுது அது உனக்குள் விளைந்து சொல்லாக வெளிப்படும் போது அதைக் கேட்பவர் உணர்வுளிலும் ஆழமாகப் பதிகின்றது.

ஆழமாகப் பதிந்த பின் அவர்களை மீண்டும் அதை நினைவு கொள்ளும்படி செய். அவர்கள் எப்போது நினைவு கொள்கின்றனரோ அந்தத் தீமையிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு நான் உணர்த்திய உணர்வை
3.அதன் துணை கொண்டு நீ கண்டறிந்த அறிவிந் ஞானத்தை எல்லா மக்களுக்கும் உபதேசி.
4.அவர்களுக்குள் அது பதிய வேண்டும் என்று நீ செயல்படுத்து
5.அருள் ஞானிகள் உணர்வை அவர்கள் பெறும் தகுதியாக அந்த உணர்ச்சிகளை அவர்களுக்குத் தூண்டு.

அதன் வழியில் அவர்கள் அதைப் பெற்றார்கள் என்றால் அவரை அறியாது உள் புகுந்த தீமைகளை அகற்ற இது உதவும்.

காரணம்… அவர்களுடைய நல்ல குணத்தால் உயர்ந்த பண்பால் பரிவால் பிறரைக் காத்திடும் நிலைகள் கொண்டு… பிறரைக் காத்திடும் செயலாகச் செயல்பட்டாலும் பிறர் படும் துயரத்தின் உணர்வுகள் நுகர்ந்தறிந்தே அவர்களால் செயல்பட முடிகின்றது. அந்தத் துயரங்களை நுகர்ந்தறிந்த பின்
1.அதிலிருந்து பிறரை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தும் அந்த நல்ல மனிதர்களுக்குள்
2.அவரை அறியாது அந்த தீமைகள் புகுந்து விடுகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டது போன்று… நல்லவையாக இருக்கும் இந்த உணர்வுக்குள் விஷம் கலந்த பின் அவர்கள் செயலற்றதாக ஆகிவிடுகின்றனர்.

1.பிறரைக் காக்கின்றனர்… ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றன.
2. நான் கொடுக்கும் உபதேசத்தினை அத்தகைய நல்லோரைக் காத்திடும் தன்மைக்கு நீ பயன்படுத்த வேண்டும்
3.தீமையை அகற்றிடும் செயலாக “எனது வாக்கு” உனக்குள் இருந்து வேலை செய்யும்.

ஆகவே ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று அந்த உடல்களை நினைத்து அந்த உடலில் இருக்கும் உயர்ந்த குணங்களைக் காத்திடும் நிலையாக…
1.நான் சொன்ன உபாயத்தின்படி விண்ணை நோக்கி நீ ஏகி அந்த உணர்வின் தன்மை பருகி
2.அதனை நீ சொல்லாக வெளிப்படுத்தி கேட்பவர் உணர்வுக்குள் அருள் ஞானிகளின் வித்துக்களை ஆழமாகப் பதியச் செய்.

யாரெல்லாம் நீ சொல்வதைப் பின்பற்றித் தொடர்ந்து செய்து வருகின்றார்களோ… தீமை அகற்றிடும் சக்தி அவர்கள் பெறுகின்றனர்.

அவர்கள் பெற வேண்டும் என்று நீ அவர்களை நினைத்துத் தியானித்தாய் என்றால் அவர் எண்ணும் பொழுது அவர்களுக்கும் தீமை அகற்றும் சக்தி கிடைக்கின்றது.

ஒரு நெலைச் சமைத்து யாரும் அதை உணவாக உட்கொள்ள முடியாது நீ ஒருவனாக இருப்பினும் ஒரு நெல் மற்றவர்கள் பசியைப் போக்க உதவாது.

மற்றவர்கள் உணர்வுகள் எண்ணங்களை ஒருக்கிணைத்து…
1.உயர்ந்த எண்ணங்களை எல்லோரையும் வளர்க்கச் செய்து
2.அந்த அருள் ஆற்றல் மிக்க நிலைகளை “பெரும் குவியலாக” நாம் சேர்க்க வேண்டும்.

அனைவரும் தெரிந்து தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணி ஏங்கி…
1.நான் உனக்குக் கொடுத்த உபதேசத்தின் சக்தியை
2.அதன் மூலம் நீ பெற்ற அந்தத் தகுதியினை…
3.எல்லோர் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிவு செய்து
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் அனைவரையும் நீ ஒருங்கிணைத்து வலுப்பெறச் செய்.

அவர்கள் எல்லோரும் வலு பெற வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ அதைப் பெறுகின்றாய். எல்லோரும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கி எண்ணுகின்றாயோ அது அனைத்தையும் பெறும் தகுதியை நீ பெற்று… உனக்குள் விளைந்து… அது சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்பார் உணர்வுகளிலும் அது பதிவாகி அவர்கள் அறியாத வந்த தீமைகளை நீக்கிடும் செயலாக ஆகின்றது.

குருநாதர் எனக்குக் கொடுத்த அனைத்தையும்… அப்படியே உங்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன் (ஞானகுரு).

குரு துணை அவசியம் வேண்டும்

குரு துணை அவசியம் வேண்டும்

மெய் வழியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வருவோருக்கு அந்த உணர்ச்சிகளை உந்தச் செய்து ஞானிகள் உணர்வான சத்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).
1.இதைப் பெறும் தகுதியை குருநாதர் எனக்கு எவ்வாறு ஏற்படுத்தினாரோ அதே போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.
2.மெய் உணர்வுகளை அவர் எப்படித் தனக்குள் படைத்தாரோ… அதைப் போன்று ஒவ்வொரு நொடியிலும் நான் அதை எடுத்துக் கொள்கின்றேன்.

உங்களுக்கு யாம் உபதேசிக்கும் பொழுது நட்சத்திரங்களின் சக்தியையும்… சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் சக்திகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி… அந்த உணர்வின் தன்மைகளை ஈர்த்து எடுத்துக் கொண்டுதான் உங்களுக்கு உபதேசிப்பது.
1.உங்கள் உடலுக்குள் இருக்கும் பல கோடி உணர்வுக்குள்ளும் அதை இணைத்து மாற்றி
2.நல்ல உணர்வாகப் பெறக்கூடிய தகுதியை எற்படுத்துகின்றோம்.

காரணம்… மகரிஷிகள் வெளிப்படுத்திய சக்திகளை சாதாரண மக்கள் கவர முடியாது. அதற்குண்டான வலுவான காந்த சக்தி தேவை.

சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர வேண்டும் என்பதற்கே யாம் இப்போது உபதேசிப்பது. உபதேசத்தின் வாயிலாகத் தான் அதை நீங்கள் பெற முடியும்.

புத்தகங்களில் படிப்பதைப் போன்று அந்த ஞானிகள் உணர்வைப் படித்தாலும்… படித்த நிலைகள் கொண்டு அந்த ஞானிகள் அருளைப் பெறும் தகுதி இல்லை.
1.காரணம் அதற்குண்டான ஆற்றல் இருந்தால் தான் அதனை நீங்கள் பெற முடியும்.
2.அதற்குண்டான ஈர்க்கும் சக்தி தேவை.
3.அந்த சக்திக்குண்டான வித்து தேவை…
4.அதற்குத்தான் “குரு வேண்டும்…” என்று சொல்வது… அவரின் துணை இருந்தால் தான் அதை எடுக்க முடியும்.

என்னுடைய (ஞானகுரு) முயற்சி எது…? என்றால் மகரிஷியின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு வருவதும்… துன்பம் வரும் போது அதை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதும் தான்…!

யாம் பதிவு செய்த வித்திற்கு ஒரு அரை மணி நேரா௳அவது நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தியை எண்ணி எடுத்து… உங்களுக்குள் அதை விளைய வைக்க வேண்டும்.

பின்… உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அப்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணினால் யாம் பாய்ச்சிய உணர்வின் சக்தி உரமாகக் கிடைத்து
1.உங்களுக்குள் மன கலக்கமோ குழப்பமோ அவைகளை அகற்றி
2.உடல்களில் வலியோ வேதனையோ இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு உதவும்.

அப்படி உதவுவதற்குத் தான் தியானமும் ஆத்ம சுத்தியும் பயிற்சியாகக் கொடுப்பது.

ஞானிகள் இங்கே அவர்கள் வாழ்ந்த காலத்தில் உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதை எல்லாம் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.ஒரு செயின் தொடர்பு போன்று அந்த ஞானிகள் உணர்வை எடுக்கப் பழகிக் கொண்டால்
2.ஆத்ம சுத்தி செய்யும் போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.உடனே அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்… துன்பங்களைத் துடைக்க முடியும்.

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்

“நம் பாசம்” மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதாக… இணையச் செய்வதாக இருக்க வேண்டும்

 

உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவராக இருந்தாலும்… சந்தர்ப்பம் அவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அடுத்த கணமே “அழுது… அவருடைய ஆன்மாவைக் கவர்ந்து இழுத்து விடாதீர்கள்….!”
1.அந்த ஆன்மாவை அருள் ஒளி பெறச் செய்யுங்கள்
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்யுங்கள்.
3.அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரையச் செய்யுங்கள்
4.ஒளி பெற்ற அறிவின் தன்மையை நிலைக்கச் செய்யுங்கள்.
5.அவர்களைப் பேரின்பப் பெரு வாழ்வாக வாழச் செய்யுங்கள்.

பாசத்தால்… பண்பால்… எங்களுக்கு உதவி செய்தாயே…! எனக்கு நன்மை செய்தாயே…! என்று நன்மை செய்தவர்களை இப்படி எண்ணக்கூடாது.

எனக்கு நன்மை செய்தார் துன்பத்தைப் பெற்றார்…! “இனியாவது” அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அங்கே உடல் பெறும் உணர்வு கரைந்து பேரின்ப பெரு வாழ்வு பெற வேண்டும்.

நாங்கள் அடைந்த துன்பத்தை கேட்டாய் அதை உனக்குள் வளர்த்தாய். ஆகவே அந்தத் துன்பத்தின் நிலைகள்… இத்துடன் கரைத்து விட்டு அருள் ஒளியின் சுடராக நீ என்றுமே நிலைத்திருக்க வேண்டும்… இனி பிறவியில்லா நிலைகள் பெற வேண்டும் என்று இவ்வாறு இந்த உணர்வுகளை நீங்கள் பாய்ச்சுங்கள்.

1.உதவி செய்தவர்களை உங்கள் பாசத்தால் எண்ணி “இழுத்தால்…” அந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் தான் வருகின்றது.
2.மீண்டும் துன்பத்தைத் தான் இங்கே விளைய வைக்க முடியும்.
3.பாசத்தால் நமக்குள்ளும் அந்த நோயை வளர்த்து விடுகின்றோம்.
4.அவரும் அடுத்து இழி நிலையான சரீரமாகத் தான் பிறக்கச் செய்ய முடியும்.

அத்தகைய நிலையில் இருந்து உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்களை மீட்டுங்கள். உங்களுக்கு இன்பத்தை ஊட்டிய அந்த ஆன்மாக்களை அழுது யாரும் இழுக்காதீர்கள்… பாசத்தால் கவர்ந்து விடாதீர்கள்.

“பாசத்தை”
1.எல்லை கடந்த நிலைகள் கொண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திலே இணையச் செய்யுங்கள்
2.உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுங்கள்… ஒளிச் சரீரமாக அவர்களை மாற்றுங்கள்.
3.அது தான் உங்களுக்கு நன்மை செய்தவர்களுக்கு செய்யக்கூடிய கடமைகள்.

இதை நீங்கள் செய்யத் தவறாதீர்கள்.

அந்த அருள் ஒளியை நீங்கள் பெற எமது குரு அருளும் எனது அருளும் உறுதுணையாக உங்களுக்கு இருந்து இந்த சக்திகளை எண்ணி ஏங்கிப் பெற்றால் அதன் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த உடலை விட்டுச் சென்றால் அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குள் சென்று உடல் பெறும் உணர்வை மாற்றி ஒளி பெறும் உணர்வாக உங்களுக்குள் விளையச் செய்யுங்கள்.

என்றும் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையை அடைவோம். மனிதனின் கடைசி எல்லை அது தான். இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் மூச்சு பிறருடைய துன்பங்களை நீக்கும் அருள் சக்தியாகப் பெறுதல் வேண்டும்.

“எம்முடைய உபதேசத்தைக் கேட்க விரும்புவோருக்கு” அதனின் பலன் நிச்சயம் கிடைக்கும்

“எம்முடைய உபதேசத்தைக் கேட்க விரும்புவோருக்கு” அதனின் பலன் நிச்சயம் கிடைக்கும்

 

ஒவ்வொரு நாளும் அந்தத துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொண்டே வந்தால் நாம் பிறவியில்லா நிலை அடையும் தகுதி பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பெறுகின்றோம்.

1.துருவ நட்சத்திரத்தின் மீது நாட்டம் செலுத்தினால்
2.அந்தப் பேரருள் உணர்வுகள் நம் உயிரிலே அரங்கநாதனாக மாறி
3.அதன் வழியில் தீமைகளை அகற்றிடும் உணர்ச்சிகளாகப் பரவி அந்த உணர்வே நம்மை ஆளும்… ஆண்டாள்…!

இதை அறிந்து கொண்ட நிலையில் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்து பழக வேண்டும்.

ஆனால் தீமை என்ற உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அது அரங்கநாதனாக இயக்கி அடுத்துத் தீமையின் நிலையாகத்தான் நம்மை ஆளும் ஆண்டாள்.

தீமையை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் பெருக்கினால்
1.தீமையை நீக்கும் உணர்ச்சிகள் நம்மை ஆளும்… ஆண்டாளாக மாற்றி அமைக்கும்
2.இவ்வாறு நாம் வாழ்ந்தால் நமக்குள் ஆழ்வார் என்ற நல்ல உணர்வின் தன்மை அணுக்கள் உருவாகினால்
3.நம் சொல்லும் செயலும் புனிதம் பெறும்… நம் உடலும் தெளிந்த நிலைகள் பெறும்.

உடலை விட்டுப் பிரிந்தால் இந்த உடலில் விளைந்த சூட்சம சரீரம் (உயிராத்மா) துருவ நட்சத்திரத்தின் இணைப்பில் பிறவியில்லா நிலை அடையும் தன்மை வரும்.

எத்தகைய விஞ்ஞான அறிவு கொண்டாலும் இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் போன்ற பகைமை உணர்வுகள் நம் உடலில் விளையப்படும் பொழுது (மாற்றியமைக்கவில்லை என்றால்) அது நாளடைவில் கேன்சர் டி பி. ஆஸ்த்மா சர்க்கரைச் சத்து இரத்தக் கொதிப்பு இருதய நோய் போன்ற நோய்களாக நமக்குள் விளைந்துவிடும்.

உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை மாற்றித் தீய உணர்வின் தன்மையாகி நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட உறுப்புகளை அழித்து விடுகின்றது.

ஆடு மாடு மான் போன்ற உயிரினங்களை சாந்தம் கொண்டு அவைகள் தன் உடலை வளர்த்தாலும் புலியோ மற்ற மிருகங்களோ அவைகளை அடித்துக் கொல்லும் போது அந்த உடல்கள் அழிந்து விடுகிறது.

அதைப் போன்று தான்… நாம் சந்தர்ப்பத்தால் நுகர நேரும் வேதனை வெறுப்பு கோபம் பயம் போன்ற உணர்வுகள் நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட நம் உடல் உறுப்புகளைக் கொன்று புசித்துவிடும்.

இது போன்ற நிலைகளில் எல்லாம் இருந்து நாம் மீள்வதற்கு நம் முன்னோர்கள் மூதாதையர்களை அவசியம் விண் செலுத்த வேண்டும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் நாம் அங்கிருந்து எளிதில் சக்தி பெற முடியும்.

அதன் மூலம் நமக்குள் அறியாது வரக்கூடிய தீமைகளை எல்லாம் மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை என்ற நிலையை நாமும் அடைய வேண்டும்.

1.கோடிச் செல்வம் தேடினும் அந்தச் செல்வம் நம்முடன் வருவதில்லை
2.இந்த உடலும் நம்முடன் கூட வருவதில்லை

ஆகவே பேரருள் என்ற உணர்வின் தன்மையைக் கூட்டக் கூட்ட அந்த உணர்வின் ஒளியாக பிறவியில்லா நிலை நிச்சயம் அடையலாம்.

1.இதை விரும்புவோர் தான் இதைச் செயல்படுத்த முடியும்
2.உடலின் இச்சை கொண்டால் பலன் இல்லை…!

அருள் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் எடுத்தால் தீமைகளை அகற்றிச் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் தேடிய செல்வத்தைக் காக்கும் சக்தியும் கிடைக்கும்.

இந்த உடலையும் சீராக வைக்கும். சிந்தித்துச் செயல்படும் தன்மையையும் செல்வத்தை நாம் தேடாது செல்வமே நமக்குள் வந்து குவியும் தன்மையும் வரும்.
1.ஆனால் “செல்வம் குவிகிறது…” என்று செல்வத்தின் மீது ஆசை வைத்தால்
2.நம் உணர்வின் தன்மைகள் அனைத்தும் இந்த உடலின் பற்றுக்கே வந்துவிடுகிறது.

ஆகவே நாம் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று இருளை அகற்றி அருள் வழியில் வளர்ந்து நாம் மெய்ப் பொருளைக் காண்போம்.

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

“ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது “மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ணத்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது… வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள “ஒரு உடலை” எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை “எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா….”
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்…
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது… என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில்… “ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான்…” என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

 

“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.

சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.

வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”

1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.

வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.

அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.

இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.

உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”