சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

சப்தரிஷிகளின் ஞான வித்துக்களைத் தான் உங்களுக்குள் ஊன்றுகின்றோம்

 

“சப்தரிஷிகள்” தனது வாழ்க்கையில் தன்னை அறிந்து இருளை அகற்றிப் பேரருள் பெற்று பேரொளி என ஆன அவர் உடலில் விளைய வைத்த உணர்வுகள் வெளி வந்த அனைத்தும் இங்கே பரமாத்மாவாக நமக்கு முன் பரவி இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் வழியில் நானும் (ஞானகுரு) அதைக் கண்டுணர்ந்து… அந்த அருள் உணர்வை எனக்குள் வளர்த்து சொல்லாக இப்பொழுது வெளிப்படுத்துகின்றேன்.

சொல்லாக அப்படி வெளிப்படுத்தும் போது இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படர்கின்றது.
1.சொல்லாகச் சொல்லும் போது யாரெல்லாம் இதைக் கவர வேண்டும் என்ற உணர்வுடன் நுகர்ந்தறிகின்றனரோ
2.கவர்ந்த உணர்வுகள்… அந்த உணர்வுகள் அனைத்தும் ஞான வித்தாகப் பதிவாகின்றது.

வித்துக்களைப் பண்படுத்தி நிலத்திலே ஊன்றிச் சீராக எப்படி வளர்க்கின்றோமோ… இதைப் போன்று மகரிஷிகளின் வித்துக்களை உணர்வுகளைப் பெறக்கூடிய சத்தாக உங்களுக்குள் “ஞான வித்தாகப் பதிவு செய்கின்றேன்…”

1.”எந்த அளவிற்கு” நீங்கள் அதைப் பெற வேண்டுமென்று கவர்கின்றீர்களோ “அந்த அளவிற்கு” ஆழமாக உங்களுக்குள் பதிவாகின்றது
2.பதிவான நிலையை நினைவுக்கு கொண்டு வந்து மீண்டும் அந்த அருள் உணர்வை நீங்கள் கவர்ந்தால்
3.அருள் ஞானிகள் பெற்ற உணர்வினை உங்களுக்குள் வளர்க்க முடியும்.

வளர்த்த உணர்வின் துணை கொண்டு… அந்தச் சப்தரிஷிகள் எப்படி இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்து வாழ்ந்து… பிறவியில்லா நிலையை அடைந்தனரோ… அந்த அருள் உணர்வை நீங்களும் பெற முடியும்.

எமது குருநாதர் எப்படிப் பல உண்மையின் உணர்வுகளை அறிந்தாரோ அதை எல்லாம் எமக்குள் பாய்ச்சி…
1.அந்த அருள் வழி வெளிப்படும்படி செய்து
2.அனைவருக்குள்ளும் ஞான வித்தாகப் பதிவு செய்து
3.அவர்களுக்குள் அறியாது சேரும் தீமைகளிலிருந்து விடுபடும் மார்க்கத்தைக் காட்டும்படி சொன்னார்.

அவர்கள் அவ்வாறு வளர்த்திடும் அந்தப் பேரருளை இந்தப் பூமியில் பரமாத்மாவாக பரவச் செய்ய வேண்டும். இங்கே வாழும் மக்கள் அனைவரும் வாழ்க்கையில் அவர்கள் சந்தர்ப்பத்தில் ஏற்படும் இருளை அகற்றி அவர்கள் அருள் வழி வாழ்ந்திட வேண்டும்.

இந்த உயிர் எத்தனை கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக எப்படி வந்ததோ
1.உயிரைப் போன்றே உணர்வுகள் அனைத்தும் ஒளியாகி
2.ஒளியின் சரீரம் பெறக்கூடிய உணர்வைப் பெறச் செய்வதே
3.நமது குருநாதர் காட்டிய அருள் வழி நெறி தியானம்.

உங்களில் இப்போது பதிவு செய்ததை… அந்தச் சக்திகளைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் “அதுவே தியானம் ஆகிறது…”

நமக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசம்

நமக்கு வேண்டிய பாதுகாப்புக் கவசம்

 

நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களும் விஷத்தன்மையான செயல்களையும் நாம் நுகரப்படும் பொழுது… நமது ஆன்மாவை… இந்த உடலுக்குப் பாதுகாப்பாக இருப்பதை… சுத்தமாக அதை வலு இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்திகள் என்று உண்டு. அந்த எதிர்ப்பு சக்தி கொண்ட அணுக்களை… அந்த அமிலத்தின் தன்மைகளைக் குறைந்து விடுகின்றது. ஆக…
1.எதிர்ப்பு சக்தி இல்லாததனால் தீமை செய்யும் உணர்வுகள் ஒரு நொடிக்குள் ஊடுருவி
2.உடலில் சீக்கிரம் நோய் வருவதும்… பல தொல்லைகள் கொடுப்பதுமாக வந்துவிடுகிறது.

இன்று உலகெங்கிலும் நடக்கும் மத பேதம், இன பேதம் மொழி பேதம் இது போன்ற அசுர உணர்வுகளால்… சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்ததனால்… நாம் கண் கொண்டு பார்த்து அவைகள் நமக்குள் பதிந்த பின் என்ன நடக்கிறது…?

விஷத் தன்மை கொண்ட கதிரியக்கங்கள் பரவி பூமியில் எப்படி ஓசான் திரை கிழிந்ததோ… இது போன்று மனித உடலுக்குள் நம்மைக் காக்கும் நமது ஆன்மா பாதுகாப்பான நிலைகளிலிருந்து அதுவும் பிளக்கப்பட்டுவிடுகிறது.

அதனால் மனிதனுடைய நல்ல சிந்தனைகளைச் சீர்குலைக்கச் செய்துவிடுகிறது. மனிதன் உறுதியான உடல் பெற்று இருந்தாலும்
1.தீமைகளை எதிர்க்கும் அந்த சக்தி கொண்ட அந்த அமிலங்கள் குறைத்து விட்டதனால்
2.நம் உடலில் உள்ள பாதுக்காப்புக் கவசத்தை அது மறைந்து விடுகிறது.

அதை எல்லாம் மாற்றிட கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி… துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றச் செய்து… அதிலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் சேர்த்துக் கொண்டால் “நம் ஆன்மாவை… அந்தப் பாதுகாப்பு கவசத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்…” தீமைகள் புகாது ஆன்மாவை வலுவாக்கிக் கொள்ளலாம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும் விதமாக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை ஆங்காங்கு இந்த ஒளி அலைகளைப் பரப்பப்படும் பொழுது
1.எல்லோருக்கும் “அவருடைய உயர்ந்த சக்தி” கிடைக்க ஏதுவாகின்றது.
2.ஒன்று சேர்க்கும் உணர்வுகள் வருகின்றது
3.பகைமை உணர்வுகள் மாற்றப்பட்டு அன்பு கொண்டு அரவணைத்து வாழும் நிலைகள் வருகின்றது.
4.உயிரைக் கடவுளாக மதிக்கச் செய்கின்றது… உடலைக் கோவிலாக மதிக்கச் செய்கிறது
5.மனிதனுக்குள் உள்ள பண்பு கொண்ட உணர்வுகளைத் தெய்வமாக மதிக்கும் தன்மை வருகிறது
6.இன பேதம் அகற்றப்படுகின்றது… மன பேதம் அகற்றப்படுகிறது…
7.வெறுப்பு வேதனை போன்றவைகள் நமக்குள் நெருங்காது தடுக்க முடிகிறது.
8.அருள் உணர்வுகளை வளர்த்து நாளடைவில் பகைமை உணர்ச்சிகளை அறவே அழித்திடும் சக்தியாக நமக்குள் வளர்கின்றது.

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

“குரு அருள்” என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

 

வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.

1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்… எண்ணங்கள் எலக்ட்ரானிக்.

கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி… கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.

ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி… காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து…
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.

ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.

தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.

இதைச் செய்… நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்…! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்… அந்த உணர்ச்சிகள் உந்தி… கண் வழி ஆன்மாவாக மாற்றி… உயிருடன் இணைக்கச் செய்து… இரத்தத்தில் கலக்கச் செய்து… அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.

அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்

அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..

நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வரும்.. அருளைப் பெற முடியாது

நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னால் உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வரும்.. அருளைப் பெற முடியாது

 

ரோட்டிலே ரெண்டு பேர் சண்டை போடுகின்றார்கள்… அநாகரீகமாகப் பேசவும் செய்கிறார்கள்… நாம் பார்க்கின்றோம்… அந்த உணர்வின் தன்மை அறிகின்றோம் இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அடுத்து வேதனைப்படுகின்றோம்.

அதைத் துடைக்க வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஈஸ்வரா என்று நமக்குள் நம்மை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும்.

பின்… அவர்கள் இருவரும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்ல உணர்வுகள் அவர்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நாம் நுகர்ந்தால் அவர்கள் சண்டையிட்ட தீமையின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை… மாற்றப்படுகிறது..

சந்தர்ப்பத்தில் இதைப் போன்று வரும் நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார்… தியானம் தான் செய்கின்றேன்…! என்று நீங்கள் இருந்தாலும்
1.அந்தந்தச் சந்தர்ப்பத்தில் (இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுது) பார்த்து ஏமாந்து விடக்கூடாது.
2.ஏமாந்து விட்டால் அந்தந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் வலுப்பெற்று விடும்
3.அதைத் துடைக்காமல் விட்டு விட்டால் இரத்தத்தில் கருவாகிவிடும்… பின் அணுவாகி அதனின் தீமையை உருவாக்கத் தொடங்கும்.

தனி மிளகாயை உட்கொண்டால் என்ன செய்யும்…? ஆ…! என்று எப்படி அலறுகின்றோம். தனியாக உப்பை வாயில் வைத்தால் ஓ…ய் என்று உமட்டலாகின்றது. ஆனால் அதே மிளகாயையும் உப்பையும் மற்ற பொருள்களுடன் கலக்கப்படும் பொழுது அந்த உணவு சுவையுள்ளதாக மாறுகின்றது.

இது போன்று
1.பிற உணர்வுகளை நாம் பார்த்து நுகர கவர நேர்ந்தால்
2.அதற்குள் நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து கலவையாக்கி ருசியாக மாற்ற வேண்டும்
3.இது தான் “பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். தீமை என்ற நிலை நமக்குள் வராதபடி தடுக்கும் சேனாதிபதி ஆறாவது அறிவு தான்.

அது நம்மைப் பாதுகாக்கக் கூடிய சேனாதிபதியாக இருக்கிறது. அதைச் சரியான முறையில் பயன்படுத்தினோம் என்றால் நமக்கு எப்பொழுதுமே பாதுகாப்பாக வரும்.

ஆறாவது அறிவு எனக்கு இருக்கின்றது நான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கின்றேன்… தெரிந்து கொண்டேன்…! என்றால்
1.அறிய வேண்டும் என்ற நிலையில் கெட்டதெல்லாம் உள்ளுக்குள் புகுந்து
2.வேதனை வெறுப்பு சஞ்சலம் பயம் எல்லாமே நமக்குள் வந்துவிடும்.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் அவசியம் விடுபட வேண்டும்.

இதையெல்லாம் சுருங்கச் சொல்லி உங்களுக்குள் அருளைப் பெருக்கச் செய்து… இருளை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படியும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நான் கண்ட உண்மைகள் அனைத்தையும் உங்களிடம் மொத்தமாகச் சொல்லி
2.சிறுக்க முடிவுக்கு (கடைசியில்) வருவதற்கு முன்னாடி உங்களுக்குக் கஷ்டம் வந்து விடும்… உட்கார முடியாது.
3.நான் பட்ட கஷ்டங்கள் ஏராளமானது அதை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தால்
4.உங்களுக்கு மனக் கஷ்டம் தான் வருமே தவிர அந்த அருளைப் பெற முடியாது.
5.ஆகையினால் அந்தந்தச் சமயத்திற்கு உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆகவே கார்த்திகேயா… என்ற நிலையில் ஆறாவது அறிவைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் “எந்தத் துயரம் வந்தாலும்” அதை வளர விடாதபடி தடுக்க வேண்டும். அப்படித் தடுப்பதற்குத் தான் இதை எல்லாம் துணுக்குத் துணுக்காக உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில்ல் உங்கள் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கஷ்டமோ நஷ்டமோ துன்பங்களோ வேதனைகளோ வந்தாலும் அதை மாற்றி மறந்து… சந்தோஷத்தை ஊட்டும் நிலையாக…
1.தனித்த உப்பை… தனித்த மிளகாயை… தனித்த கசப்பை.. மற்ற பொருள்களுடன் சேர்த்து சுவையாக எப்படி மாற்றுகின்றோமோ
2.அது போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் எல்லாவற்றையும் சுவையாக மாற்ற முடியும்.
3.எது வந்தாலும் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து அதற்குள் கலக்க வேண்டும்.

என் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும் நல்ல பண்புகள் வளர வேண்டும் அவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம்மை யாராவது திட்டினால்… அவர் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும்… அவர்களுக்குத் தெளிவான எண்ணங்கள் வர வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எடுத்து
1.பிறருடைய தனித்த உணர்வு நமக்குள் வராதபடி
2.நம் உடலுக்குள் வளராதபடி இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மாற்றி அமைக்காதபடி அந்தந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்ற இந்த உணர்வுகள் நம் நல்ல உணர்வுகளுக்குள் கலந்து.. நம் நல்ல குணங்களைச் சுத்தமாகக் கெடுத்துவிடும்.

நல்ல குணங்கள் அப்படி மாறிய பின் பிறரை எண்ணி வேதனைப்படுவோம்… அடுத்து கோபப்படுவோம்.
1.அது எல்லாம் நமக்குள் நோயாக மாறிவிடும் (உடல் நோய்)
2.உடல் உறுப்புகள் கெடும்… நினைவுகள் எண்ணங்கள் மாறும் (மன நோய்).

இதைப் போன்ற நிலையில் இருந்து நீங்கள் விடுபட்டு “வாழ்க்கையே தியானம் ஆக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…”

பகைமைகளை மாற்றி அருள் உணர்வைப் பெருக்கி அருள் ஞானத்தைப் பெருக்குவதற்குத் தான் உபதேசமாகக் கொடுக்கின்றோம். சுருங்கச் சொல்லி பதிவாக்குகின்றோம்.

இதை நீங்கள் அடிக்கடி நினைவு கொண்டு தியானம் ஆத்ம சக்தி செய்து அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை உங்களுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

குருநாதர் எனக்குக் கொடுத்ததை… நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமல்லவா…!

 

ஒருவருக்கொருவர் பற்று கொண்டவர்கள் நாம் என்ன செய்கின்றோம்…?

ஆசை வைக்கின்றோம்… ஆனால் சமயத்தில் “என்னை அவமதித்து விட்டான்…” என்று ஆத்திரப்படுகின்றோம்
1.ஆத்திர ஆவேச உணர்வு கொண்டு அவன் செய்யும் தவறான உணர்வை நமக்குள் சேர்த்து விடுகின்றோம்.
2.நம்முடைய வளர்ச்சியை நாமே தடைப்படுத்தி விடுகின்றோம்

இப்படித்தான் இயற்கை நிலையிலிருந்து நம்மை மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்பொழுது மாற்றுவது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆக… ஒவ்வொன்றிலிருந்தும் தான் தப்பிக் கொள்ளும் உணர்வுகள் பெற்று வளர்ச்சியாகி வந்ததுதான் இந்த மனிதச் சரீரம்.

பலவற்றில் இருந்து தப்பிக்கும் ஞானத்தின் தன்மை வளர்த்துக் கொண்ட இந்த மனித உடலில் இவ்வளவும் தெரிந்து கொண்ட பின் உடலைக் காக்க நாம் எதைச் செய்ய வேண்டும்…?

உடலைக் காக்கும் ஆசை தேவை ஆனால்
1.உடலைக் காப்பதற்கு முன் அதீத ஆசை கொண்டு செயல்பட்டால்
2.உடலைக் காக்கும் தன்மையை இழக்கப்பட்டு வேதனை என்று உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது.

இதையெல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாக காட்டிய நிலைகள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் அனுபவரீதியிலே தான் இதையெல்லாம் தெரியும்படி செய்தார்.

சில இடங்களுக்கு அழைத்துச் செல்வார்…
1.இது நல்லதா கெட்டதா என்று கேட்பார்
2.நல்லது என்று சொன்னால் அது எப்படிடா… சொல்…? என்பார்
3.இல்லை இது கெட்டது… இப்படித்தான்…! என்று சொன்னால் அது எப்படிக் கெட்டது…? என்று அதற்கும் கேள்வி கேட்பார்.

ஏனென்றால் நீ நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் எப்படியெல்லாம் இயக்குகின்றது…? “என்னுடைய அதிர்வான சொல்கள்” வரும் பொழுது பதட்ட நிலைகள் உனக்குள் ஆகி உன்னைச் சிந்திக்கச் செய்கிறதா…?

இல்லை.

ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி தப்பிக்கலாம்…! என்ற எண்ணம் தான் உனக்கு வருகின்றது. இப்படியெல்லாம் விளக்க உண்மைகளைக் கொடுத்து அறிவின் இயக்கமாக இயக்கச் செய்து என்னை (ஞானகுரு) அனுபவபூர்வமாகத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதை நான் உங்களுக்குக் கொடுக்க வேண்டுமா இல்லையா…!

முதலிலே நான் சொல்லிக் கொண்டு வந்தேன்
1.பல வருட காலமாக ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்
2.இப்பொழுது மனிதனுடைய இயக்கங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும்படி செய்கின்றோம்.

முதலிலே பதப்படுத்தி பக்குவப்படுத்தி… உங்களிடம் அதை வலுப்படுத்தி… அதற்குப் பின் விளக்க உரைகளைக் கொடுத்தால் நீங்கள் கேட்பீர்கள்.
1.உங்களுக்கு அந்த உயர்ந்த சிந்தனைகள் வரும்
2.உங்களைக் காத்திடும் உணர்வுகளும் வரும்

ஆனால் புதிதாக இதைக் கேட்பவர்களுக்கு “சாமி எதையோ சொல்கின்றார்…” என்ற தலையைச் சொறிவார்கள்.

முன்னாடி கேட்டுப் பழகியவர்களுக்கு ஞானத்தை வளர்க்கும். புதிதாக வந்தவர்கள்… சாமி என்னமோ சொல்கின்றார்… எனக்கு ஒன்றும் தெரியவில்லையே தெரியாது என்று சொல்வார்கள். சாமி சொல்கின்றார்… நான் கேட்டுக் கொண்டிருந்தேன்… எனக்கு அர்த்தமே ஆகவில்லை…! என்பார்கள்.

ஆனால் பழைய ஆள்கள் உபதேசக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் சேர்த்துச் சேர்த்துத் தெளிவான மனதாக
2.எப்படி மனதைக் கூர்மைப்படுத்த வேண்டும் என்று செயல்படுத்திக் கொள்வார்கள்.

சந்தர்ப்பங்களில் இருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அந்த உபாயங்களும் வரும்.

இப்போது ஒன்றைச் சொல்கின்றேன் என்றால் அடுத்து அதைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது உங்கள் சாமி நேற்று சொன்னதைத்தான் இன்றும் சொல்கின்றார். சாமி என்ன சொல்கின்றார்…? என்று கேட்பார்கள் ஒரு சிலர்.

ஆனால் பற்றுள்ளவர்கள் என்ன சொல்கின்றார் என்று கூர்ந்து கவனித்துக் கேட்பார்கள்.
1.இன்றைக்கு ஒன்று சொன்னாலும் அந்தச் சொன்ன உணர்வுகள்
2.எதிலே எது எப்படி இயக்குகின்றது என்று விளக்கவுரையைக் கொடுக்கப்படும் பொழுது
3.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு விதங்கள் எத்தனையோ வரும்.

செடி கொடிகளின் வித்துகள் சந்தர்ப்பத்தில் மோதும் போது ஒரு ஜாதி இனத்தைப் போன்று மற்றொன்று உருவாகி இருக்கும் ஆனால் அதனுடைய மணமும் குணங்களும் வேறாக இருக்கும்… செயலாக்கங்களும் வேறு.

புல்லைப் போன்றே மற்ற கோரைப் புல்களும் உண்டு. ஒவ்வொன்றையும் பார்த்தால் அதைப் போன்றே இருக்கும். ஆனால் சுவை இருக்காது.

இதைப் போன்று இயற்கையின் நியதிகள் எது எதனுடன் சேர்க்கின்றதோ அதற்கொப்ப இயக்குகின்றது. இதை எல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

யாம் உங்களுக்குக் கொடுப்பது “சிந்தித்துச் செயல்படும் ஞான சக்தி தான்”

 

குருநாதர் காடு மேடு மலைகள் எல்லாம் அலையச் செய்து சில உணர்வுகளைச் சந்தர்ப்பவசத்தால் நுகரும் பொழுது
1.உன் உடலுக்குள் மாறுபாடான உணர்வுகள் எப்படி எல்லாம் வருகின்றது…?
2.பயத்தின் எல்லை கடந்த நிலை செல்லும் பொழுது எப்படி இயக்குகின்றது…?
3.உன் உடலிலே பதட்டம் எப்படிக் கூடுகின்றது…?
4.உன் சிந்தனைகள் எப்படிச் சிதறுகின்றது
4.உன் உடலிலே எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றது…?
5.அதனால் உடலுக்குள் இரத்த அழுத்தங்கள் எப்படிக் கூடுகின்றது என்பதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் பெற்ற அனுபவத்தைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றேன் (ஞானகுரு). விளையாட்டுக்காக நான் பேச வரவில்லை.

குரு வழியில் அந்த உயர்ந்த உணர்வுகளைக் கொஞ்சம் நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் உயர்ந்த சிந்தனைகள் உங்களுக்கு வரும். நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்ற நிலைகளை நீங்கள் சிந்தித்துச் செயல்படுவதற்கு ஒரு நல்ல வழியாக உருவாகும்.

ஏனென்றால்
1.அந்த ஞானத்தை யாம் புகட்டும் போது அதன் வழியில் வாழ்க்கையை நீங்கள் வழி அமைத்தால்
2.தீமைகள் புகாது தடுக்கும் அந்த வல்லமையை நீங்களே பெறுகின்றீர்கள்.
3.அதைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

எனக்கு குருநாதர் எப்படி இந்த உணர்ச்சிகளைக் கொண்டு வந்தாரோ அதே வழியில் உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். பொறுமையாக இருந்து நீங்கள் இதை பதிவு செய்ய வேண்டும்.

சாமி எதை எதையோ சொல்கின்றார்… என்னால் சகிக்க முடியவில்லை… அறுவைக் கேஸ் என்று கூட நினைப்பவர்கள் பலர் உண்டு.

கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரம்…! கண்கள் கொண்டு கூர்மையாக சாமி என்ன சொல்கின்றார் என்று உற்றுப் பார்த்தால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திற்கு உங்கள் நினைவுகளை யாம் அழைத்துச் செல்லும் பொழுது
2.இந்த கணக்கின் பிரகாரம் உங்கள் உடலில் அந்த உணர்வின் தன்மை வலிமையாகி
3.அதன்படி உங்களை வாழச் செய்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி உங்களுக்குள் பெருக்க முடியும்

துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. நமது பூமியின் துருவப் பகுதியின் எல்லையிலே இது அதிகமாகின்றது.
1.துருவத்தின் வழி பூமி அதை இழுக்கிறது… இழுத்து துருவத்தின் பகுதியில் அடர்த்தி அதிகமாகின்றது.
2.இந்த நேரம் பார்த்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வைச் சுவாசித்து
3.நம் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கு கணங்களுக்கு அதை அதிபதியாக வேண்டும் – அந்த உயர்ந்த குணங்களை.

நந்தீஸ்வரன்… நாம் சுவாசித்த உணர்வு அதன் இயக்கமாகத் தீமைகளை நீக்கிடும் சக்தியாக நமக்குள் உருவாக்குகின்றது அடிக்கடி இதை எடுத்தால் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை தீமையை நீக்கும் அந்தக் கணக்கின்படி “துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பிற்கு நாம் செல்கின்றோம்…”

உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!

உங்களால் நான் நன்மை அடைகின்றேன்… என்னால் நீங்கள் நன்மை பெறுகிறீர்கள்…!

 

அருள் மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பதிவாக வேண்டும் என்று தான் திரும்பத் திரும்ப உபதேசிக்கின்றேன். அந்தப் பதிவின் துணை கொண்டு உங்களை நான் (ஞானகுரு) பிரார்த்திக்கும் பொழுது உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்தவும் உங்கள் உயிரான ஈசனுக்கு அமுதைக் கொடுப்பதும் அது அபிஷேகிக்கும் நிலையாகவும் அடைகின்றது.

அதை நீங்கள் சுவாசிக்கப்படும் பொழுது உங்கள் உடலுக்குள் சென்று நல்ல உணர்வுகளைச் சேர்ப்பிக்கும் சந்தர்ப்பமாக இப்போது உருவாகின்றது.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உங்கள் உடலைக் கோவிலாக மதித்து நான் தியானிக்கின்றேன்.
2.உங்களை எண்ணி நல்லதாக வேண்டும் என்று நான் எண்ணும் பொழுது எனக்குள்ளும் அது உமிழ் நீராகி அருள் சக்தியாக மாறுகின்றது
3.அருமருந்தாக மாறுகின்றது. அருள் வழி வாழவும் முடிகின்றது.
4.உங்களால் நானும் நன்மை அடைகின்றேன்… என்னால் உங்களுக்கும் நன்மை ஏற்படுகிறது.

ஆகவே நாம் அனைவரும் குருநாதர் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுவோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எது இருந்தாலும்… இந்த உலகம் முழுமைக்குமே தீவிரவாதம் என்ற நிலைகளில் மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலையாக வந்துவிட்டது.

1.கருவில் இருக்கும் பிண்டங்களை அழித்து
2.அதையே உணவாக உட்கொள்ளும் நாகரீகம் உலகமெங்கும் பரவி விட்டது.

தாய்லாந்து அமெரிக்கா சைனா ஜப்பான் போன்ற நாடுகளில் எல்லாம் கருச்சிதைவாக்கப்பட்டு கருசிதைவான அந்தக் குழந்தைகளை உணவாக எடுக்கப்படும் பொழுது “முதுமையானவன் இளமையாக முடியும்…” என்று விஞ்ஞான அறிவில் கூறப்பட்டு… தவறான வழிகளில் நடந்து கொண்டிருக்கின்றது.

இப்படி நடந்து கொள்வோர் நாளை எங்கே செல்வார்கள்…?

நரமாமிசத்தை உட்கொள்ளும் அகோரிகள் இங்கே இந்தியாவில் இருக்கின்றார்கள் சுடுகாட்டில் வெந்து கொண்டிருக்கும் உடல்களை “அதைத் தள்ளி விட்டு எனக்குக் கொடு… என்பார்கள்.

அவருடைய தசைகளைத் தின்று சொர்க்கத்துக்கு அவனை அனுப்புகிறேன் என்று சொல்லும் அகோரி என்ற சாமியார்களும் உண்டு.

இதைப் போன்ற அசுர உணர்வுகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த உலகைக் காக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து
2.உடலுக்குள் அருள் ஞான சக்திகளைப் பெருக்கி
3.உங்கள் மூச்சும் பேச்சும் உலக இருளை நீக்கிடும் சக்தியாக நீங்கள் அனைவரும் பெற வேண்டும்.

தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! என்று தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான் துருவனான்… துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான்.

அந்த அருள் சக்தியை நாம் பெற்று எந்நாட்டரையும் பெறச் செய்தால் அவர்கள் அறியாத நிலையில் இருந்து அவர்களும் மாறுபட்டு மனிதன் மனிதன் என்ற நிலைகள் உணர்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்த நிலை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன்.

எம்முடைய உபதேசங்களை வெறுமனே… கேட்பதையோ படிப்பதையோ விட “பதிவாக்க வேண்டியது மிக முக்கியம்”

எம்முடைய உபதேசங்களை வெறுமனே… கேட்பதையோ படிப்பதையோ விட “பதிவாக்க வேண்டியது மிக முக்கியம்”

 

தீமை என்றால் அதைத் தெரிந்து கொள்ளக் கூடிய சக்தி கார்த்திகேயா என்றும் சேனாதிபதி… தீமைகளைத் தடுக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது.

தீமை புகாமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் இந்நேரம் வரையிலும் பேசுகின்றேன் என்றால் அதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். தியானப் பயிற்சியாகவும் கொடுக்கின்றேன்.

இதை எல்லாம் பதிவாக்கிய பின் நீங்கள் தியானத்தில் இருக்கும்போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்தால் அந்தச் சக்தி “எண்ணியவுடன் உங்களுக்குக் கிடைக்கும்…”

ஆனால் சிலர் என்ன செய்கின்றார்கள்…?

உபதேசம் கேட்கும் வரையிலும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் இங்கே நாம் சொன்ன உணர்வுகளைப் பதிவாக்காது விட்டு விடுகிறார்கள். (பதிவானால் தான் மீண்டும் நினைவுக்கு வரும்)

“தியானம்…” என்று சொன்னதும் நினைவுகள் எங்கெங்கோ போகிறது என்பார்கள். என் பையன் இப்படிச் செய்கின்றான்… தொழிலில் நஷ்டம் என்று பல எண்ணங்கள் வருகிறது. தியானத்தில் உட்கார்ந்தாலும் என்னால் முடியவில்லை என்பார்கள்.

ஏனென்றால் தியானத்தில் இருக்கும் பொழுது பாருங்கள்… மனக்குடைச்சல் வரும்… இல்லாத சங்கடம் எல்லாம் வரும்.

அதற்குத் தான் இங்கே உபதேசிக்கும் போது கூர்ந்து பதிவாக்குங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறோம். உபதேசத்தன் வாயிலாக ஞானிகளின் உணர்வுகளை இழுப்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றோம்.

இந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று தியானிக்க வேண்டும்.

இப்படித் தியானித்து நாம் பழகிக் கொண்டோமென்றால் பிறர் சாபமிடுகின்றார்கள் சண்டையிடுகிறார்கள் என்று பார்க்கும் போது அதை நுகராமல்
1.உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை வானிலே செலுத்தி அந்தச் சக்திகளைக் கவர்ந்து
3.மீண்டும் கண்ணின் நினைவை உயிரிடம் புருவ மத்தியில் கொண்டு வந்து அதன் வழியாக இழுங்கள்.

அப்போது தீமை செய்வோர் உணர்வு நமக்குள் ஈர்க்காது… நம்மை இயக்காது…! இந்த மாதிரித் தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீய வினைகள் நமக்குள் அணுவாக உருவாகாதபடி நோயாகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

 

சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.

மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?

மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.

இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.

இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.

அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.

எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.

வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.

அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.

அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.

நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.

உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”

உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..

சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்

வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.

ஞானவனம்… தபோவனம்…!

ஞானவனம்… தபோவனம்…!

நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்…” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.

ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.

இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து… தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.

அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி… உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்… நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்…!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.

நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.

உதாரணமாக… ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.

அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ… நாய் கடித்து விடுமே…! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.

அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்… இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு… மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.

அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா…..” என்று நீ சொல்லப்பா… நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.

“அம்மா…” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா… என்று சொன்னாலே போதுமானது… பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.

ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே…. எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்… சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.

காரணம்… அது அவருடைய குறை அல்ல…!

அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட… இது போன்று சந்தித்த பின்… எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே…” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.

காரணம்… எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.

தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!