மிக மிகக் குறைவான நேரத்தில் தியானத்தின் மூலம் அதீத சக்திகளைப் பெற முடியும்…! எப்படி…? – அனுபவம்

மிக மிகக் குறைவான நேரத்தில் தியானத்தின் மூலம் அதீத சக்திகளைப் பெற முடியும்…! எப்படி…? – அனுபவம்

Life meditation

கேள்வி:-
நான் ஷிப்ட் வேலையில் பணிபுரிகிறேன். சில நேரங்களில் OVER TIME பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஷிப்டில் உள்ள போது குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய தியான முறையைக் கூறுங்கள்.

பதில்:-
குறைந்த நேரம் செய்யக் கூடிய தியானம் அல்லது கூடிய நேரம் செய்யும் தியானம் என்று எதுவும் கிடையாது.

எவ்வளவு நேரம் தியானம் செய்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு அழுத்தமாக நாம் தியானிக்கின்றோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
1.அழுத்தம் அதிகமானால் வெப்பம் கூடும்.
2.வெப்பம் கூடினால் கவரும் சக்தியான காந்தம் கூடும்.
3.கவரும் சக்தி கூடினால் அதிக ஆற்றல் கிடைக்கும்.

நாம் செய்யும் தியானத்தின் அழுத்தத்தை அதிகமாக்க வேண்டும் என்றால் ஞானகுருவின் உபதேசங்களை அதிகமாக ஆழமாகப் பதிவாக்க வேண்டும். அதுவும் குறிப்பாக நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனுடன் இணைத்து அதையும் கேட்டுக் கொண்டே… பதிவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும்…!

சிலர் சொல்வார்கள். சாமிகள் உபதேசம் சரியாக அர்த்தம் ஆகாது. அதனால் அமைதியான நேரத்தில் கேட்டால் தான் நல்லது என்பார்கள். தினசரி வாழ்க்கையில் அமைதியான நேரம் என்பது எப்பொழுது வரும் என்று யார் சொல்ல முடியும்…?

ஆனால் சாமிகள் தன்னுடைய உபதேசத்தைப் பற்றி அவர் சொல்லும் பொழுது
1.இதை அர்த்தம் தெரிந்து எடுப்பதைக் காட்டிலும்
2.உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்
3.திரும்பத் திரும்பக் கேட்டுப் பதிவாக்குங்கள் என்று தான் பல முறை சொல்லியுள்ளார்,

உதாரணமாக சினிமாப் பாடலாக இருந்தாலும் சரி அல்லது மற்ற எந்தப் பாடலாக இருந்தாலும் சரி அதை எல்லாம் நம் மற்ற வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தான் கேட்டு மகிழ்கிறோம்.

ஒரு பாடலை எத்தனை முறை கேட்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு தடவை தான் கேட்கிறோமா…? இல்லையே..! அதே சமயத்தில் பாடல் பிடிக்கவில்லை என்றாலும் பத்துப் பதினைந்து தடவை கேட்கும்படியான சந்தர்ப்பம் வந்துவிட்டால் உங்களை அறியமாலே அந்தப் பாடலை நீங்களே பாடுவீர்கள்.

இதற்கு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் டி.வி.யிலோ அல்லது FM ரேடியோவிலோ விளம்பரங்களை அடிக்கடி சொல்லும் பொழுது அது எல்லாம் அப்படியே நமக்குள் பதிவாகின்றது.
1.அழுத்தம் என்பதற்கு அர்த்தமே இது தான்.
2.பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ… அது முக்கியமில்லை…!
3.நாம் எந்த அளவுக்கு அதைப் பார்க்கின்றோமோ அல்லது கேட்டுப் பதிவாக்குகின்றோமோ அது தான் முக்கியம்.

நீங்கள் டி.வி விளம்பரங்களை உற்றுப் பார்க்கின்றீர்களா..? இல்லை…! ஆனாலும் திரும்பத் திரும்பப் பார்க்கும் பொழுது அது நமக்குள் பதிவாகின்றது. அடுத்து அந்தப் பதிவானது அதன் அறிவாக நம்மை இயக்குகிறது.

அது போல் தான்
1.ஞானகுருவின் உபதேசக் கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்க…
2.எல்லா நேரத்திலும் (பாத்ரூமில் இருந்தாலும்) கேட்டுக் கொண்டேயிருந்தால்
3.ஒவ்வொரு நாளைக்கும் சாமிகள் சொல்லும் ஏதாவது ஒரு விஷயம் தனியாகப் புலப்படும் (அந்த நுண்ணிய உணர்வுகள்)
4.இப்படிப் பதிவாகும் உபதேசம் நாள்கள் மாதங்களாகி… மாதங்கள் வருடங்களாகும் பொழுது… நம் உடலில் உள்ள இரத்தங்களில் எல்லாம் அந்த அணுக்களின் அதீத பெருக்கமாகும்.
5.(குறைந்த பட்சம் ஆறு மண்டலமாவது பதிவாக்க வேண்டும் 6 X 48 = 288 நாள்கள்)

அப்படிப் பெருக்கமாகும் பொழுது குருவின் உணர்வுகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும்… தூண்டிக் கொண்டே இருக்கும்…! அந்தத் தூண்டுதல் வந்துவிட்டாலே
1.ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் கண்ணின் நினைவு புருவ மத்திக்குச் சென்று
2.அங்கிருந்து பூமியின் வடக்குத் திசையில் துருவப் பாதையின் வழியாக துருவ நட்சத்திரத்துடன் மோதி
3.மோதிய வேகத்திலேயே துருவ நட்சத்திரத்தின் சக்திகளை அப்படியே உறிஞ்சி
4.உங்கள் உடலுக்குள்ளோ உடல் உறுப்புக்குள்ளோ அல்லது அடுத்தவருக்குள்ளோ மற்ற பொருளுக்குள்ளோ…
5.எங்கே செலுத்த வேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அங்கே அதைச் செலுத்தினால்
6.அது தான்… “குறைவான நேரத்தில் எடுக்கும் மிக மிகச் சக்தி வாய்ந்த தியானமாகும்…!

இப்படி ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து தடவை எடுத்தால் உங்கள் எண்ணத்தில் அல்லது உங்கள் மனதில் காலையில் எழும் பொழுதும் இரவு படுக்கும் பொழுதும் இது தான் ஓடிக் கொண்டே இருக்கும்.

ஷிப்டும் ஞாபகம் இருக்காது. வேலையும் ஞாபகம் இருக்காது. ஆனால் எல்லா வேலையும் மற்றவர்களைக் காட்டிலும் நன்றாகச் செய்வீர்கள்.

அந்த வேலையும் சரியாக நடக்கும். அதே சமயத்தில் இந்தத் தியானத்தின் மூலம் அதீத அளவிலும் சக்தி பெற முடியும். (இடி மின்னல் சூறாவளி போன்று எடுத்துக் கொள்ள முடியும்).

தீமைகள் அதிகமாக வந்தால் அதை நீக்கி நல்லதாக்க இடி மின்னல் சூறாவளி போன்று நான் வருவேன் என்று ஈஸ்வரபட்டர் சொல்லியுள்ளார்.
1.நான் அவர் சொன்ன வழியில் தான் செய்து கொண்டுள்ளேன்.
2.மணிக்கணக்காகத் தியானம் செய்வதில்லை.

ஞானகுருவின் உபதேச LINK:- https://wp.me/P3UBkg-1Ia
[su_button url=”https://eswarabattar.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D” target=”blank” background=”#ffffff” color=”#2b13e7″ size=”5″ center=”yes” radius=”20″ icon_color=”#141bf3″ text_shadow=”1px 1px 1px #2426f8″ rel=”lightbox”]Click here – அனுபவங்கள்[/su_button]

குருநாதரின் கண்களை உற்றுப் பார்த்து… உபதேசம் கேட்டதால் ஏற்பட்ட பலன்கள்

ganakan1

குருநாதரின் கண்களை உற்றுப் பார்த்து உபதேசம் கேட்டதால் ஏற்பட்ட பலன்கள் 

 

சாமிகளிடம் (ஞானகுரு) 1987ல் இருந்து உபதேசத்தை நேரடியாகக் கேட்க ஆரம்பித்ததிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ அவருக்கு நேராக அவர் முன்னாடி தான் உட்கார்வேன்.

1.அவர் என்னைப் பார்க்கவே மாட்டார்.
2.நான் அவர் இடது கண்ணை மட்டும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
3.என் பார்வை அவர் மீது கடுமையாகவும் கூர்மையாகவும் தான் இருக்கும்.
4.முடிந்தவரை அவரிடமிருந்து வெளிப்படும் அனைத்தையும் கண்கள் வழியாக உறிஞ்சுகிற மாதிரித்தான் உணர்வுகள் இருக்கும்.

அவர் உணர்வுகள் எனக்குள் அதிகமாகும் பொழுது பின்னாடி என் தலையில் ஊசி குத்துவது போல் இருக்கும். பொறுக்க முடியாமல் இருக்கும் பொழுது நான் கையால் லேசாக என் தலையில் கையை வைத்தால் அப்பொழுது என்னை உற்றுப் பார்ப்பார் சாமி.

அதே மாதிரி சில நேரம் அவர் வீரியமாக உபதேசம் செய்யும் போது என் உடலுக்குள் அது அழுத்தமாகி என் கை ஆள் காட்டி விரலில் அந்த ஆற்றல் எல்லாம் மிக அதிகமாகக் குவியும். அப்பொழுது தரையைக் குத்துவேன் மெதுவாக. அப்பொழுது என்னை உற்று பார்ப்பார்.

1.கண்கள் இமைக்காமல் அவர் கண்களையே பார்ப்பேன்.
2.அந்த நேரத்தில் சுவாசம் மிகவும் அழுத்தமாக இருக்கும்.
3.சுவாசம் ஒரு நிமிடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தான் இருக்கும். (இழுத்து வெளிவிடுவது)

அந்த ஆரம்பப் பழக்கம் இருந்ததெற்கெல்லாம் தற்சமயம் மிகவும் தெளிவான நிலையில் விளக்கம் கொடுக்கின்றார் குருநாதர்.

சாமிகளை இப்பொழுது நேரிலே பார்க்க முடியவில்லை என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.
1.அவர் உபதேசத்தை உற்றுக் கேட்டு எழுத்து வடிவுக்குக் கொண்டு வந்தாலே
2.அந்த மூன்றாவது கண் என்ற அகக் கண் வழியாக அவரை உற்றுப் பார்க்க முடியும்.
3.கண்கள் வழியாக அவர் எந்த அருளைப் பாய்ச்சினாரோ அதுவும்
4.இப்பொழுது என்ன பாய்ச்சுகின்றாரோ அதுவும் சேர்ந்து கிடைக்கும்.

அதே போல் என் அனுபவத்தில் நான் கண்களைத் திறந்து தியானம் செய்த நேரமே மிக அதிகம். கண்களை மூடித் தியானம் செய்த நேரம் குறைவு தான்.

திறந்திருக்கும் கண்கள் வழியாகத்தான் எல்லா உணர்வுகளும் நமக்குள் வந்து சேர்கிறது.
1.அதே திறந்திருக்கும் கண்கள் வழியாக அருள் உணர்வுகளை எடுத்துப் பயிற்சி செய்ததால்
2.என்னால் மற்ற எந்த வேலை (எந்த வேலையாக இருந்தாலும்) செய்து கொண்டிருந்தாலும்
3.அந்த நேரத்தில் அதே கண்கள் வழியாகவே குருவையும் உயிரையும் மகரிஷிகளையும் விண்ணிலேம் என்னால் தொடர்பு எடுக்க முடிகிறது.

அங்கிருந்து எடுக்கும் சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து அந்தச் சக்திகளை உடலுகுள் ஊடுருவச் செய்து சரியான ஆணைகளை (COMMANDS) இட்டு இயக்கவும் முடிகிறது.

நான் அந்த நேரத்தில் விழித்த நிலையிலேயே விண்ணிலே மகரிஷிகளுடன் ஒரு நேரடித் தொடர்பு (VIDEO CONFERENCING) செய்துவிட்டு
1.என்னுடன் தொடர்பு கொண்டவர்களுக்குத் தக்க பதிலும்
2.அதன் மூலம் எனக்கு நல்லதாகவும் அவர்களுக்கு நல்லதாகவும் எல்லோருக்கும் நல்லதாகவும் ஆகிக் கொண்டேயுள்ளது.

இன்றும் அது தொடர்ந்து கொண்டுள்ளது. (விழித்த நிலையில்)

[su_button url=”https://youtu.be/v6_AKoLDkXA” target=”blank” background=”#ffffff” color=”#2b13e7″ size=”4″ center=”yes” radius=”20″ icon_color=”#141bf3″ text_shadow=”1px 1px 1px #2426f8″ rel=”lightbox”]Click here – அகக்கண் தியானம் செய்யும் முறை [/su_button]

ஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்…! (நாம் கட்சி மாற வேண்டும்)

noble souls in astral plane

ஞானிகளின் உணர்வுடன் நாம் ஒட்டிக் கொள்ள வேண்டும்…! (நாம் கட்சி மாற வேண்டும்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம் விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை (GENE) எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள். குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி உயிரினைத்தை.. ஏன்… மனிதனையே கூட உருவாக்க முடியும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஆகவே நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி ஞானிகளின் உணர்வை நாம் நமக்குள் (ஒட்டுச் செடி போல்) ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

நல்லது… கெட்டது… பிடித்தது… பிடிக்காதது… வேண்டியது… வேண்டாதது… என்று எதையும் பார்க்காமல்
1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்
2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்
3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும். இது மிகவும் முக்கியமானது…!

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்துவிட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து
1.புதுப் புதுக் கருக்களாகி
2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி
3.ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

பின் ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் ஆற்றல்கள் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாகவே மாறும்.

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா…” என்பார்.

கட்சி மாற வேண்டும்… என்றால் நாம் தவறு செய்தாலும் அல்லது எந்தத் தவறு நடந்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ)
1.உடனடியாக ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.
2.அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார் குருநாதர்.
3.அதை ஒட்டிய செயலாக நாம் மாற்றிப் பேச வேண்டும்… செயல்பட வேண்டும்…!

அதாவது நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை என்று உணர்ந்துவிட்டேன். அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே
1.என் மனதை
2.என் எண்ணத்தை
3.என் உணர்வை
4.என் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

அதாவது
1.தவறு செய்ததில் அல்லது தவறு நடந்ததில் அதிகமக அழுத்தமாக நினைவைச் செலுத்தாதபடி
2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து அதை உணர்ந்த நிலையில்
3.ஞானிகள் அருள் சக்தியை மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று
1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி
2.விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ… செலுத்தி
3.துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வரும் பேரருள் பேரொளியை அப்படியே உறிஞ்சி எனக்குள் சேர்த்துக் கொள்வது.

சேர்த்துக் கொண்ட பின் தங்கத்தில் திரவத்தை ஊற்றிய பின் செம்பும் பித்தளையும் ஆவியாகி தங்கம் பரிசுத்தமாவது போல் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றிய பின் துனியிலுள்ல அழுக்குகள் பிரிந்து செல்வது போல்
1.எனக்குள் இருள் சூழச் செய்யும் சக்திகள் செயலிழந்து மனம் தெளிவாகின்றது.
2.மன பலமும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் கிடைக்கின்றது. எல்லாக் காரியங்களும் நல்லதாகின்றது.

இது என்னுடைய அனுபவம்…!

நம் கண்களை ஞானக் கண்ணாக மாற்றும் வழி

gnanaguru

நம் கண்களைச் சக்தி வாய்ந்த ஞானக் கண்ணாக மாற்றும் வழி – 1

 

சந்தர்ப்பவசத்தால் குடும்பத்தில் நடக்கக்கூடிய சில கடுமையான சம்பவங்களால் மீண்டும் மீண்டும் வேதனையை அதிகமாக நுகர நேர்ந்தால் அதை ஆழமாக எண்ணி உற்றுப் பார்ப்பதால் கண்களில் உள்ள கருமணிகளில் விஷம் ஒட்டிக் கொள்கின்றது. (வேதனை என்பது விஷம்)

கருமணிகளில் சேரும் இத்தகைய விஷம் அதிகமாகும் பொழுது கண் எரிச்சல்… கண் பார்வை மங்கல்… கண்களிலிருந்து நீர் வடிதல்… இதைப் போன்ற நிலைகளாகி கடைசியில் கண்களில் சுத்தமாகப் பார்வையே போகும் வாய்ப்புகள் உருவாகிவிடுகின்றது.

அதே சமயத்தில் அந்தக் கருமணிகளுடன் சேர்ந்த நரம்பு மண்டலத்திலும் விஷத் தன்மைகள் சேரத் தொடங்கும்.

இந்த நரம்பு (ELECTRIC WIRE போல்) வழியாகத்தான் நாம் பார்த்த செய்தி உடல் முழுவதும் பரவி அதற்குத்தக்க நம் உடலும் உடலின் அங்கங்களும் இயங்குகின்றது.

ஆனால் இந்தக் கருவிழியுடன் சேர்ந்த நரம்புகள் பலவீனமடைவதோடு மட்டுமல்லாதபடி
1.வேதனைப்படும் உணர்ச்சியையே தூண்டிக் கொண்டிருக்கும்
2.நம்மை நல்லதை அதிகமாக எண்ண விடாது.

அதற்காகத்தான் நாம் தியானம் செய்யும் போது துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகளில் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்கின்றோம். கண்களில் அந்தச் சக்திகளை அதிகமாகப் படரச் செய்கின்றோம்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் அழுத்தமாக கண்களில் உள்ள கருமணிகளில் படரச் செய்யும் பொழுது அதில் படர்ந்துள்ள விஷத் தன்மைகள் கரைந்து விடுகின்றது. அதனுடன் ஒட்டிய நரம்புகளையும். தூய்மைப்படுத்துகின்றது.

இதனால் கண் பார்வை சீராகத் தெரிய வரும். மேலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கண் கருவிழியுடன் தொடர்பு கொண்ட நரம்புகளில் ஆழமாகப் பதிவாகின்றது. அதனால்
1.அடிக்கடி அந்த மகரிஷிகளின் பால் எளிதில் நம் நினைவுகள் செல்லத் தொடங்கும்.
2.நம் கண்களுக்கும் வீரிய சக்தியாக (ANTENNA POWER) கிடைக்கும்.
3.விண்ணின் ஆற்றலை எளிதில் கவரும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.

அதற்காக வேண்டித்தான் சாமிகள் (ஞானகுரு) தன்னிடம் ஆசி பெறும் பொழுது அவருடைய கண்களைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திச் சொல்கிறார்.
1.ஏனென்றால் நான் உங்களுக்கு அருள் உணர்வுகளை என் கண் வழியாக அதிகமாகப் பாய்ச்சுகின்றேன்.
2.அந்த நேரத்தில் நீங்கள் என்னை வணங்குவதையோ அல்லது வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தால்
3.நான் கண் வழி கொடுக்கும் ஞான வித்தை நீங்கள் பெற முடியாது.

உங்களுக்குள் எப்படியாவது ஞானிகளின் அருள் வாக்கை ஊழ்வினையாக வித்தாக நான் பதிவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் உங்கள் எண்ணம் (உங்கள் உயிரின் இயக்கம்) என்னை வணங்கும் நிலையில் அதில் கவனம் இருப்பதால் உங்களுக்குள் செலுத்தவும் முடிவதில்லை.

ஆகவே எந்த உயர்ந்த எண்ணத்தில் வருகின்றீர்களோ அந்த எண்ணத்தை வலுவாக்கி
1.என்னை நேராக நிமிர்ந்து பார்த்து
2.என் கண்களை உற்றுப் பார்த்து குருவின் அருள் சக்தி எனக்குக் கிடைக்க வேண்டும்
3.நாங்கள் எண்ணி வந்த காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று எண்ணினால் அது நிச்சயம் நிறைவேறும்.

என்னை வணங்குவதில் முக்கியமாக இருப்பதாலும்… வணங்கினால் நான் அவர்களுக்குச் செய்வேன்…! என்றும் தான் நினைக்கின்றார்கள்.

1.நான் கண் வழி பாய்ச்சும் அருள் உணர்வை எவ்வளவுக்கு எவ்வளவு கூர்மையாக யார் உற்றுப் பார்க்கின்றார்களோ
2.அந்த அளவுக்கு ஞானிகளின் அருள் ஞான வித்துக்கள் ஆழமாகப் பதிவாகும்.
3.பதிவான வித்து வலுவான நிலையில் வளரும். அதன் வழி அனைத்தும் நீங்கள் பெற முடியும் என்று தான் சொல்கிறேன்.

(சாமிகள் பல பௌர்ணமி உபதேசங்கள் கடைசியில் இது சம்பந்தமாக குறைந்தது பத்திலிருந்து இருபது நிமிடம் பேசியுள்ளார்.)

என் குருநாதரிடம் நான் அடி வாங்கி உதை வாங்கித்தான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு விதமான மெய் உணர்வுகள் வரும்.
1.அடி வாங்கித்தான் நான் கற்றுக் கொண்டேன் என்று சொல்கிறார் என்றால்
2.அவர் ஈஸ்வராய குருதேவரை எப்படிக் கண்களால் பார்த்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்…?

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் எப்படி வாழ்வது…? – அனுபவம்

Sabdharishis

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் எப்படி வாழ்வது…? – அனுபவம்

 

உதாரணமாக எல்லோருமே செல்ஃபோன் (MOBILE PHONE) உபயோகிக்கின்றோம். பக்கத்தில் பக்கத்தில் இருந்து ஃபோனில் தொடர்பு கொண்டாலும் இன்று அது விண்ணிலிருக்கும் செயற்கைக் கோளுக்குச் (SATELLITE) சென்று மீண்டும் அங்கிருந்து தான் கீழே வருகிறது.

பூமியின் எந்தப் பாகத்தில் எவ்வளவு தொலைவில் இருந்து பேசினாலும் அதே மாதிரித்தான் தொடர்பு கொள்ள முடியும்.

இதே மாதிரி இன்று செல்ஃபோனில் புளூ டூத், வைஃபை (BLUE TOOTH, WIFY) உபயோக்கின்றோம். இவையெல்லாம் பக்கத்திலேயே தான் தொடர்பு கொள்ள முடியும். தூரத்திற்குச் சென்று விட்டால் தொடர்பு கிடைக்காது. (இதெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்)

அது போல் விண்ணிலிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு அந்த வட்டத்திற்குள் செல்ல வேண்டும் என்றால்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது மிகச் சிறிய வட்டம்.
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் அது அடுத்த வட்டம்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குடும்பம் முழுவதும் பெறவேண்டும் ஈஸ்வரா…! அதற்கடுத்த வட்டம்.
4.மகரிஷிகளின் அருள் சக்தி ஊரில் உள்ளோர் நாட்டு மக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உலகம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்றால் ஓரளவிற்கு இது பெரிய வட்டம்.

ஆனாலும் மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டம் என்பது சாமிகள் (ஞானகுரு) சொன்னதைப் பதிவு செய்து அதன் வழி சப்தரிஷி மண்டலத்தையும் துருவ நட்சத்திரத்தையும் எண்ணினால் சப்தரிஷி மண்டலத்திற்குள்ளும் துருவ நட்சத்திரத்திற்குள்ளும் நம் நினைவலைகள் ஊடுருவிச் செல்கிறது.

1.அங்கிருந்து சக்திகளை எடுத்து நம் ஆன்மாவில் இணைக்கும் பொழுதும்
2.அதை மற்றவர்களுக்கு இணைக்கும் பொழுதும் அது ஒரு சுழற்சி வட்டமாக நம் ஈர்ப்புக்கு வரும்.

அதே சமயம் சாமிகள் சொன்ன
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்வின் ஆற்றல்படி
2.2000 சூரியக் குடும்பம் என்ற நிலைகளை இணைத்து
3.நம் நினைவலைகளை அகண்ட அண்டத்துடன் இணைத்தால்
4.அதாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுடன் கலந்து நம் நினைவினை அகண்ட நிலையில் செலுத்தினால்
5.அது மகரிஷிகளின் அருள் வட்டமாகும். மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டமாகும்.

அதற்குள் இணைந்து…
அதை நுகர்ந்து…
அதைக் கவர்ந்து…
அதைச் சுவாசித்து…
அதை நமக்குள் இழுத்தால்…
நம் ஈர்ப்பு மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒவ்வொரு நொடிப் பொழுதும் இவ்வாறு அங்கிருந்து எண்ணினால் நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம். அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பில் இல்லை என்று உணரலாம்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில்… சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக நான் முயற்சி எடுத்துக் கொண்டிருந்த பொழுது மேலே (விண்ணிலே) என் நினைவுகள் சென்ற பொழுது குருநாதர் எனக்குச் சொன்னது…
1.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நின்று கொண்டு
2.நான் அந்த அலைகளைக் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து கொண்டிருக்கின்றேன்.

சப்தரிஷி மண்டலத்தைக் கண்களால் பார்த்து நீ என்ன செய்யப் போகிறாய்…?

விண்ணிலிருந்து அலைகளை இழுத்துப் பூமிக்குள் நான் பாய்ச்சுவது போல்… நான் செய்வது போல்… “இந்த வேலையைச் செய்… போடா…! என்றார்.

என்னால் முடிந்தவரை அவர் சொன்ன வேலையைச் செய்து கொண்டுள்ளேன்…!

“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

divine-chracter-of-sages

“மனிதர்களைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…? அல்லது “மகரிஷிகளைப் பற்றிய பதிவு…” நமக்கு வேண்டுமா…?

 

இன்றைய சகஜ வாழ்க்கையில் ஒருவரை நாம் எப்படிப் பார்க்கிறோம்…? எப்படி நினைக்கின்றோம்…? எப்படி அறிகிறோம்…? எப்படி விசாரிக்கின்றோம்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்..!

1.யார் இவர்…? ஆணா பெண்ணா…? என்ன வயது…?
2.படித்தவரா படிக்காதவரா…? திருமணமானவரா ஆகாதவரா…?
3.எந்த ஊர்…? நல்லவரா கெட்டவரா…?
4.வசதியானவரா.., வசதி இல்லாதவரா…?
4.பார்க்க நன்றாகத்தான் இருக்கிறார்… அல்லது பார்க்கவே பிடிக்கவில்லை…! என்று இத்தனையும் பார்ப்போம்.

அதற்கப்புறம் அவருடன் பேசிப் பழகும் பொழுது நம்முடன் ஒத்துப் போனால் நல்லவன் என்போம். இவனை நம்பலாம்… அன்பானவன்… பண்பானவன்… இரக்கமானவன்…! என்று நினைப்போம்.

நம்மிடம் எதிர்த்துப் பேசினால் உடனே அவனை ஆகாதவன் என்போம். மோசமான ஆள்… ஏமாற்றுபவன்… கோபக்காரன்… கிறுக்கன் மாதிரி இருக்கிறான்…! என்றெல்லாம் நினைப்போம்.

நம் மனதிற்குள் இத்தனையும் ஓடும். உதாரணத்திற்கு இதையெல்லாம் சொல்கிறேன்.

இதில் என்னென்ன விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றோமோ அதற்குத்தக்க நம்முடைய அத்தனை செயல்களும் மாறும், சொல்களும் மாறும். அவருடன் பழகுவதும் மாறும். மாறிக் கொண்டேயிருக்கும்

இப்படி நம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரைப் பற்றியும் நாம் மீண்டும் மீண்டும் பதிவு செய்தால் கடைசியில் அதனால் நமக்கு எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.
1.அவர்களைப் பற்றிய உணர்ச்சிகள் தான் நமக்குள் வருமே தவிர
2.நம் உணர்வை அங்கே செலுத்தவே முடியாது.
3.அதாவது அவர்களிடமிருந்து நாம் வாங்கத்தான் செய்வோம்.

இதையே மகரிஷிள் உணர்வின் பதிவு கொண்டு ஒருவரைப் பார்க்கிறோம் என்றால் அல்லது நம் பார்வையில் வந்து ஒரு மனிதன் மோதினால்
1.இந்த உயிர் கடவுள்…!
2.ஈசன் வீற்றிருக்கு இந்த உடல் ஒரு ஆலயம்
3.மனிதனை உருவாக்கிய நல்ல குணங்கள் அங்கே தெய்வங்களாக இருக்கிறது…
4.அந்தத் தெய்வ குணங்களுக்கு நல்ல உணர்வை நாம் அபிஷேகம் செய்வோம்…!
5.அந்த உயிருக்கு அபிஷேகம் செய்ய நாம் விண்ணின் ஆற்றலைப் பெறுவோம்
6.அருள் மகரிஷிகளின் அருளாற்றலை அங்கே பாய்ச்சுவோம்
7.அவரை நம் பார்வையால் மெய் ஞானியாக ஆக்குவோம் என்று
8.இப்படிப்பட்ட நல் உணர்வுகளை நாம் பெற்று அவருக்குப் பாய்ச்சுவோம்.

இது விண்ணிலிருந்து எடுத்து அந்த உணர்வலைகளை உயிர் வழியாக அவருக்குப் பாய்ச்சும் முறை. அவர்களிடமிருந்து நாம் எதையும் கவரவில்லை அல்லது பெறவில்லை.

நாம் தான் அவருக்குக் கொடுக்கிறோம். கொடுக்கும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம். வாங்கும் நிலையில்லை. இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளிடமிருந்து
2.அவர்கள் பெற்ற சக்தியை நாம் ஏங்கிப் பெறுவதாக இருக்க வேண்டும்
3..அவ்வாறும் பெற்றதை மனிதர்களிடம் கொடுக்கும்படியாக இருக்க வேண்டும்.

மாறாக மனிதர்களைப் பற்றுடன் பற்றி அவர்கள் உணர்வுகளை நாம் வாங்கினால் மகரிஷிகளிடமிருந்து வாங்கும்படி வராது. போதும்… வேண்டாம்…! என்ற நிலை ஆகிவிடும்.

அதனால் தான் இராமலிங்க அடிகள்
1.நான் யாரிடமும் (மனிதர்களிடம்) யாசகம் கேட்க மாட்டேன்…! என்று சொன்னார்.
2.அதே சமயத்தில் நான் யாருக்கும் (எந்த மனிதனுக்கும்) இல்லை என்று சொல்லக் கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

அதனால் தான் மனிதர்களைப் பற்றிய பதிவுகள் வேண்டாம். மகரிஷிகளைப் பற்றிய பதிவு வேண்டும் என்று சொல்வது.
1.மனிதனாக இருக்க வேண்டும் என்றால்
2.இந்தப் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும் என்றால்
3.மனிதர்கள் பற்றிய பதிவுகளை எடுத்து வளர்த்துக் கொள்ளலாம்.

இல்லை…! இந்தப் பூமியில் நான் மறுபடி உடல் பெறக் கூடாது. விண்ணுக்குப் போக வேண்டும் என்றால் மகரிஷிகளின் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

இது அவரவர்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

அகத்தியர் வழியில் மணத்தை மாற்றி… “மனதை மாற்றும் வழி…!”

agastyamala idol

அகத்தியர் வழியில் மணத்தை மாற்றி… “மனதை மாற்றும் வழி…!” 

 

அணுவின் ஆற்றலை அறிந்தவன் அகஸ்தியன். அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றும் எல்லா அணுக்களிலுமே உண்டு. இந்த மூன்றும் எங்கும் எதிலும் சேர்ந்து கொள்ளும்.

நான்காவது மணம். அணுவிற்குள் இருக்கும் விஷம் அந்த மணத்தை இயக்கப்படும் பொழுது உணர்வின் இயக்கம் ஐந்தாக மாறுகிறது. எந்த மணமோ அதற்குத்தக்க உணர்வாகத் தான் அந்த அணு இயங்கும்.

ஆகவே ஒரு அணுவின் இயக்கத்தை மாற்ற வேண்டும் என்றால்
1.அணுவிற்குள் இருக்கும் மணத்தை மாற்றினால் தான்
2.அதனின் இயக்கத்தை மாற்ற முடியும்.
3.தியானம் செய்பவர்கள் இதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
4.அதாவது நம் மனதை மாற்ற வேண்டும் என்றால் நாம் சுவாசிக்கும் (சுவாசத்தை) மணத்தை மாற்ற வேண்டும்.

உதாரணமாக ஒருவர் நமக்குப் பிடிக்காத நிலையில் தீமையான உணர்வுகளை நம்மிடம் பேசிக் கொண்டிருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இப்படிப் பேசுகிறாரே…! என்று எண்ணினால் நம் நல்ல மனம் கெடுகிறது. நம் நல்ல உணர்வின் இயக்கமும் மாறிவிடுகிறது.

அப்பொழுது அவர் பேசுவதை நம்மால் நிறுத்த முடியவில்லை…. நம்மாலும் அங்கிருந்து விலக முடியவில்லை…! என்றால் அந்தச் சமயம் நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.அவர் பேசி வெளிப்படுத்தும் உணர்வுக்குள் இருக்கும்
2.வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்றையும் ஆற்றலாக நாம் எடுத்து
3.அதன் துணை கொண்டு மகரிஷிகளின் ஆற்றலை – “அந்த மணத்தை அதிகமாக நாம் சுவாசிக்க வேண்டும்…!”

அந்த மகரிஷிகளின் அருள் மணத்தை நமக்குள் எடுத்து எடுத்து வலிமையாக்கி யார் நம்மிடம் பேசுகின்றாரோ அவருக்குள் பாய்ச்ச வேண்டும்.

ஆனால் அவர்கள் எதை எதையோ பேசிக் கொண்டே இருப்பார்கள். அது காதில் விழுந்தாலும் அதை நமக்குள் கொண்டு செல்லாமல் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நல்லதை உருவாக்கும் ஆற்றலாக மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவர்கள் பேசப் பேச நமக்குள் மகரிஷிகளின் ஆற்றல்கள் கூடிக் கொண்டிருக்கும். அப்பொழுது நம்மிடமிருந்து வெளி வரும் மணம் (மூச்சலைகள்) மாறுகிறது. நம் மனம் மாறுகிறது.

இந்த மகரிஷிகளின் மணம் அதிகமாக நம்மிடமிருந்து வெளிப்படும் பொழுது அதை அவர்கள் சுவாசித்ததும் தேவையில்லாது பேச்சுகளைப் பேசுவதை நிறுத்திக் கொண்டு விலகி விடுவார்கள்.

இது தான் ஆத்ம சுத்தி. இதை வலுப்படுத்திக் கொள்வதே தியானம், இந்த மாதிரியான அனுபவம் மிக மிக முக்கியமானது.

ஏனென்றால் தங்கத்துடன் கலந்த செம்பையும் வெள்ளியையும் திரவகத்தை ஊற்றினால் தான் பிரிக்க முடியும். அது போல் யார் எதைப் பேசினாலும் அதிலுள்ள தீமையைப் பிரிக்கும் நிலையாக
1.நம் கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி
2.அவர்கள் பேசும் உணர்வினை “அந்த இயக்கத்தை நேரடியாக எதிர்க்காமல்…!
3.அவர்கள் பேசும் உணர்வில் வெளிப்படும் வெப்பம் காந்தம் விஷம் இவைகளை வைத்து
4.நாம் எடுக்க விரும்பும் மகரிஷிகளின் மணங்களைக் கவர்ந்து கொண்டேயிருக்க முடியும்.

அவர்கள் தவறாகப் பேசப் பேச நாம் இவ்வாறு செய்தால் இன்னும் அதிகமாக மகரிஷிகளின் மணங்களைக் கவர முடியும். நமக்குள் மெய் உணர்வுகள் அபரிதமாக வளரத் தொடங்கும். பிற உணர்வுகள் நம்மை இயக்க முடியாது.

செய்து பாருங்கள்…! தீமைகள் நம்மை அணுகாது. நல்ல சக்திகளை நாம் பெறக்கூடிய சந்தர்ப்பமாக இது உருவாகும்.

[su_button url=”https://wp.me/p3UBkg-1Br” target=”blank” background=”#ffffff” color=”#2b13e7″ size=”4″ center=”yes” radius=”20″ icon_color=”#141bf3″ text_shadow=”1px 1px 1px #2426f8″ rel=”lightbox”]Click here – அகஸ்திய மாமகரிஷியும் துருவ நட்சத்திரமும் [/su_button]

spirit-energy

குரு மீது நம்பிக்கை இருந்தாலும்… நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…?

sivalingeswaran guru

குரு மீது நம்பிக்கை இருந்தாலும்… நம் காரியங்கள் ஏன் தோல்வி அடைகிறது…? 

 

கேள்வி:-
பல பேர் விரும்பிய இலக்கு (தொழில் குடும்ப நிகழ்வு) இதை எல்லாம் நிர்ணயித்துச் செயல்படும் போது தோல்வி அடையும் சூழலில் குருவை வணங்கித் திரும்பவும் அதைப் பெற முயற்சிக்கின்றார்கள்.

அப்படி முயற்சித்தாலும் மீண்டும் பல தோல்விகளைச் சந்திக்கும் போது குருவின் மேல் ஆதங்கப்படுகிறார்கள். குருவை விட்டு விலக மனமில்லாமல் குரு ஏன் நம்மைக் கை விடுகிறார் என ஆதங்கப்படுகிறார்கள்.

பல முறை குருதேவரிடம் காரியம் வெற்றி பெறப் பிரார்த்தனை செய்தும் காரியம் தோல்வியாகவே முடிந்தால் நம்பிக்கை தானாகவே குறைகின்றது.

இதற்குத் தீர்வு கூறுங்கள்…!

பதில்:-
இந்தக் கேள்வியில் குருவிடம் கேட்டோம் குருதேவரிடம் கேட்டோம் என்று தான் உள்ளது. அதே சமயத்தில்
1.புருவ மத்தியில் இருக்கும் தன் உயிரான குருவிடம்
2.கேட்கவே இல்லை என்பதும் மிகவும் தெளிவாக உள்ளது.

இது எப்படி இருக்கிறது என்றால் உதாரணமாக ஃபோனில் உபயோகப்படுத்தும் சிம்மைக் (SIM) காசு கொடுத்து வாங்கி அதன் மூலம் பேசுவதற்கும் செய்தி அனுப்பவதற்கும் பெறுவதற்குரிய பணத்தையும் கட்டி விட்டு
1.என்னால் பேச முடியவில்லை
2.என்னால் செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை என்று சொல்வது போல் தான் உள்ளது.

அந்த சிம்மை (SIM) ஃபோனில் அதற்குரிய சரியான இடத்தில் பொருத்திய பின்பு அதைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரும் ஆணையை இடவில்லை என்றால் நாம் எப்படிப் பேச முடியும்…?

சிம்மை ஃபோனில் போட்டு “ACTIVATE…!” செய்தால் தானே அது வேலை செய்யும்…!

சிம் (SIM) என்னைக் கை விட்டு விட்டது. ஆனால் நாங்கள் அதன் மீது இன்னும் நம்பிக்கை நிறைய வைத்துள்ளோம் என்று சொன்னால் அது எப்படிச் சரியாகும்…?

SIMஐ ACTIVATE செய்வது மிகவும் முக்கியம்.

அது போல் தான் நீங்கள் எதை விரும்பினாலும் புறக்கண்ணால் குருவிடமும் குருதேவரிடமும் கேட்டாலும்
1.அதை அகக் கண்ணாக இருந்து புருவ மத்தியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும்
2.நம் உயிருடன் இணைத்துக் கொண்டு வரவில்லை என்றால்
3.எந்தத் தகவலும் பெற முடியாது… அனுப்பவும் முடியாது… நம் சக்தியும் கூடாது…!
4.உயிருக்கு வெளியிலே தான் அந்தச் செய்திகள் எல்லாம் நிற்கும்.

ஏனென்றால் நம்முடைய உள் மனதில் எண்ணும் எண்ணங்களும் உணர்வுகளும் மிக மிகச் சக்தி வாய்ந்தது. நம் உயிர் அதற்குத்தான் அதிகமாகச் சக்தி கொடுத்து வளர்க்கும்… அதைக் காக்கும்…!

வெளி மனதில் இருப்பது சிறிது நேரமோ அல்லது காலமோ இருக்கும். பின் மறந்து போகும். அல்லது வலிமை இருக்காது.

1.உள் மனது என்பது ஆழமாகப் பதிவாகும் வித்து.
2.வெளி மனது என்பது சாதாரணமாக மண் மீது போட்ட வித்து போன்றது.

நாம் பல கோடிச் சரீரங்களில் பெற்ற உணர்வுகளும் இந்தச் சரீரத்தில் பெற்ற உணர்வுகளும் ஆழமாகப் பதிவாகியுள்ளது. ஆனால்
1.மகரிஷிகளைப் பற்றிய உணர்வும் குருவைப் பற்றிய உணர்வும் மண் மீது போட்ட வித்தாக இருக்கும் பட்சத்தில்
2.அதை ஆழமாகப் புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் மீண்டும் மீண்டும் ஒன்றச் செய்யாத பட்சத்தில்
3.அது வலுவாக இயக்காது… இயக்கவும் முடியாது.

மீண்டும் மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் புருவ மத்தியின் வழியாக இழுத்துச் சுவாசித்தால் தான் அகக் கண்ணான உயிரின் இயக்கம் மாறும். (இது மிகவும் முக்கியம்.)

குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு நீங்கள்
1.குருவை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
2.மகரிஷிகளை எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?
3.மற்றதை எல்லாம் எத்தனை முறை நினைக்கின்றீர்கள்…?
4.நல்லது நடக்கவில்லை… என்று எத்தனை முறை நினைக்கின்றீர்கள்..?என்று கொஞ்ச நேரம் சிந்தித்துப் பாருங்கள்.

இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக அளவில் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் உங்கள் நினைவின் எண்ணிக்கை அதிகமாகச் சென்றிருந்தால்… உயிரிடம் கேட்டிருந்தால் அல்லது பேசியிருந்தால்
1.உங்கள் தொடர்பு (ACTIVATION) மிகவும் சரியாக இருக்கும்.
2.அப்பொழுது குருதேவரும் நீங்களும் சரியான தொடர்பில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

அந்த எண்ணிக்கையே இல்லை என்றால் குரு உங்களைக் கைவிடவில்லை… “நீங்கள் தான் குருவைக் கைவிட்டுவிட்டீர்கள்…!” என்று அர்த்தம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றதல்லவா…!

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தையும் ஒள்யின் சுடராக மாற்றி என்றும் பதினாறாக வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் நாமும் நம் உயிருடன் ஒன்றியே இருக்க வேண்டும். உயிருடன் ஒன்றி வாழ வேண்டும்.

புறத்திலிருந்து வரும் உணர்வில் நம் நினைவுகளை எல்லாம் செலுத்தி விட்டால் உயிர் அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஏனென்றால் நெருப்பில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அது தான் இயக்கும்.

நீங்கள் மகரிஷிகளின் உணர்வை உயிரான நெருப்பில் போட்டால் தான் அந்த வாசனை நிச்சயம் வரும். அந்தச் சத்தை உயிர் இயக்கி நமக்குள் படைக்கும்.

1.குரு வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் படைத்தால் தான் நமக்கு நல்லது நடக்குமே தவிர
2.குரு வந்து நமக்குச் செய்து தர முடியாது.
3.அப்படிச் செய்தால் அது அவருக்குத் தான் நன்மையாக முடியும் நமக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

உங்கள் சாப்பாட்டை நீங்கள் சாப்பிட்டால் உங்கள் பசி அடங்கும். உங்கள் சாப்பாட்டை குரு சாப்பிட்டால் அவர் பசி தான் அடங்கும். உங்கள் பசி அடங்கவே அடங்காது.

புருவ மத்தியில் அமர்ந்து தியானியுங்கள்.. தவமிருங்கள்…!
உங்கள் உயிருடன் நேருக்கு நேர் உரையாடுங்கள்…!
அவன் உருவாக்கித் தருவான் நீங்கள் எண்ணியதை எல்லாம்…!

செய்து பாருங்கள்…!

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

eternal blissful life

வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தியானத்தின் மூலம் பெற முடியுமா…?

 

கேள்வி:-
லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களை (வீடு வேலை குழந்தைகள் படிப்பு) தியானத்தின் மூலம் பெற நினைப்பது சரியா…?

பதில்:-
லௌகீக வாழ்க்கைக்கு என்று தனியாக எதையும் தேட வேண்டியதில்லை. பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோம். உணவை உட்கொள்கிறோம். அது உடலுக்கு அவசியம் தான்..!

ஆனால் உடலை உருவாக்கிய உயிரின் அருள் பசியைப் போக்க நாம் என்ன செய்கிறோம். உடல் பசியைத் தினமும் மூன்று வேளை போக்குகின்றோம். ஆனால் அருள் பசியைத் தினமும் தணிக்கின்றோமா…? இல்லையே…!

அதை விடுத்துவிட்டு நம் உடலுக்கு… இந்த லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் பெற்றிருந்தாலும் மனிதனல்லாத உடலுக்குள் சென்ற பின் நம்முடைய நிலை என்ன…?

அருள் வாழ்க்கை வாழ்ந்தால் பொருள் நம்மைத் தேடி வரும். பொருளை மட்டும் தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது பொருள் இருந்தால் தானே அருளைப் பெற முடியும் என்று சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தாலோ பொருள் கிடைக்கும். ஆனால்
1.நம் ஆயுள் முடிந்து மீண்டும் இன்னொரு சரீரத்திற்குள் சென்று
2.மறுபடியும் அதே பொருளையே தேடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
3.ஒவ்வொரு சரீரத்திலேயும் பொருளையே தேடலாம்.
4.இதை முடிவு செய்து கொண்ட பின் தியானிக்கலாம்…!

ஆகவே தியானம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்…! இது மிகவும் முக்கியம். இதைத் தெரிந்து கொண்டால் கேள்விக்குண்டான பதில் உங்களுக்கே தன்னாலே வரும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டிருப்பதே தியானம் ஆகும். எதை எண்ணுகின்றோமோ அதை அடுத்தவர்களிடத்தில் சொல்லிக் கொண்டேயிருந்தால் அல்லது அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் ஜெபம் ஆகும். அதாவது ஜெபித்தல் என்று பொருள்.

மனிதன் என்றாலே மனது உள்ளவன்… அதாவது எண்ணத்தின் ஆற்றல் பெற்றவன்… எண்ணியதைச் செயல்படுத்துபவன்…! என்று பொருள்.

1.நாம் எதை எண்ண வேண்டும்…?
2.நாம் எதைச் செயல்படுத்த வேண்டும்…?
3.நாம் எதைத் தியானிக்க வேண்டும்…?
4.நாம் எதை ஜெபிக்க வேண்டும்…? என்பதைத் தீர்மானித்தாலே நாம் பெறவேண்டியதை எளிதில் பெறலாம்.

நாம் நல்லதை எண்ணுவோம். அதைச் செயல்படுத்துவோம் ஆனால் நடக்கவில்லை என்ற உடனே நல்லதை எண்ணுவதை விட்டு விட்டுச் சோர்வடைவோம்… கோபப்படுவோம்… ஆத்திரப்படுவோம்…! ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுது கடைசியில் வேதனைப்படுவோம்.

நடக்கவில்லை… நடக்கவில்லை…! என்று அதையே தியானித்து விட்டு குடும்பத்திலும் சரி நண்பர்களிடமும் சரி பார்க்கும் அனைவரிடமும் அந்த வேதனையைச் சொல்லி மீண்டும் மீண்டும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்.

நல்லதை முதலில் நினைத்திருந்தாலும் கடைசியில் தியானிப்பது வேதனையைத்தான்…! வேதனைப்பட்டால் எந்தக் காரியத்தையும் சீராகச் செய்ய முடியுமா…?

ஆனால் நல்லது நடக்கவில்லை என்றால்… அது எப்படி வேதனைப்படாமல் எப்படி இருக்க முடியும் என்பார்கள்…! வேதனை என்பதே விஷம். கோபம் என்றால் காரம். விஷத்தையும் காரத்தையும் வாயிலே போட்டால் எப்படி நல்ல சுவை வரும்…?

நல்ல சுவை வேண்டும் என்றால் விஷத்தை வேக வைக்க வேண்டும். காரத்தைத் தணிக்க வேண்டும். நல்ல சரக்குகளை இதனுடன் இணைக்க வேண்டும். இதைச் செய்யாதபடி நல்ல சுவை வராது.

அதைப் போன்று தான் நம்முடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அதாவது விஷத்தை வேக வைப்பதற்காக மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்துத் தான் ஆக வேண்டும். அதை எடுக்காதபடி நல்லதைப் பெற முடியாது.

அதை எடுத்து வலுவாக ஆக்கிக் கொண்ட பின்
1.எந்த நல்லது நடக்க வேண்டுமோ
2.அது மகரிஷிகள் உபதேசித்த அருள் வழிப்படி நடக்க வேண்டும் என்று சீராக எண்ணினால்
3.அதைச் செயல்படுத்தும் ஞானமும் வழி முறைகளும் தன்னாலே வரும்.

ஆனால் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து விஷத்தை அடக்காதபடி விஷத்தையே மீண்டும் மீண்டும் சேர்த்தால் முடிவில் சுவை வராது.
1.தியானமிருக்கும் பொழுது முதலில் நடந்தது
2.இப்பொழுது நடக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டியதிருக்கும்.

முதலில் ஆர்வ உணர்வுகள் இயக்கும் பொழுது நம் எண்ணம் சீராகவும் வலுவாகவும் இயக்கும். ஆர்வம் தணியும் பொழுது எண்ணம் சீராக இருப்பதில்லை… வலுவாகவும் இருப்பதில்லை.

எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருந்தால் தான் இயக்கம் தெளிவாக இருக்கும். அந்த எண்ணம் வலுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் எடுத்துச் சேர்த்து வலுவாக ஆக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் நாம் எண்ணியபடி நடக்கவில்லை.. கிடைக்கவில்லை… என்ற நிலை ஆனவுடன் நம்மை அறியாமலே சோர்வும் கோபமும் ஆத்திரமும் வேதனையும் நமக்குள் வரத் தொடங்குகிறது.
1.அதற்குச் சிறிதளவு இடம் கொடுத்தால் என்ன ஆகும்…?
2.நம் உயிர் அதை இயக்கத் தொடங்கும். அந்த உணர்ச்சிகளை ஊட்டும்.

நாம் சாப்பிடும் உணவில் சுவையற்ற பொருள் இருந்தால் சாப்பாட்டை எப்படி வெறுக்கின்றோமோ அதே மாதிரி உடனே நமக்கு வெறுப்பு வரும். வெறுப்பு வந்தால் அடுத்து நம்முடைய தியானம் எதுவாக ஆகின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்…!

ஞானிகள் உணர்வை நெருங்க வேண்டும் என்றால் இந்தத் தெளிவு நமக்குள் வர வேண்டும். இத்தகைய தெளிவுடன் ஞானிகளின் உணர்வை எடுத்தால் அருள் ஆனந்த வாழ்க்கை நிச்சயம் வாழ முடியும். அருளைப் பெற்றால் இந்த லௌகீக வாழ்க்கையும் அதன் வழியிலே எளிதாகச் செல்லும்.

உடலை விட்டுப் பிரிந்தால் மீண்டும் எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது நேரே துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் ஐக்கியமாகலாம்.

நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

Respect

நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

 

“பிறர் நம்மைத் திட்டுகிறார்கள்…! கேவலமாகப் பேசுகிறார்கள்..! என்றெல்லாம் நாம் எண்ணுகிறோம். அதனால் ஆத்திரப்படுகின்றோம்… வேதனையும் படுகின்றோம்.

ஆனால் “இந்த உடலைத்தான் திட்டுகிறார்கள்… கேவலப்படுத்துகிறார்கள்… நம்மை அல்ல…!” என்று ஞானகுரு சொல்கிறார்.

எப்படி…?

அதாவது மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே மற்றவரிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பது என்ன..?

என்னிடம் “மரியாதையாகப் பேச வேண்டும்… மரியாதைக் குறைவாக நடக்கக் கூடாது…!”. மரியாதை இல்லாமல் பேசினால்… ஏதாவது செய்தால் எனக்குக் கோபம் கடுமையாக வரும்…! என்று எல்லோருமே தாராளமாக இப்படித்தான் நினைப்போம்.

இருந்தாலும்… உடலை விட்டு உயிர் போய்விட்டால் இந்த உடலுக்கு நாம் எந்த மரியாதை கொடுக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.உடனே அந்த உடலை அழிக்க வேண்டும் என்பதிலே தான் குறியாக இருக்கின்றோம்.
2.ரொம்ப நேரம் இறந்த உடலை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதை “மிகவும்…….!” வலியுறுத்திச் சொல்கிறோம்.

யாராவது இல்லை என்று மறுக்க முடியுமா…? அப்பொழுது எங்கே செல்கிறது… “நாம் எதிர்பார்க்கும் நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை…?!”

அதனால் தான் ஞானகுரு சொல்கிறார்…! ஒருவர் நம்மைப் பழித்துப் பேசவோ திட்டவோ தவறாகவோச் சொல்கிறார் என்றால்
1.அது என்னை அல்ல…!
2.அழியக் கூடிய இந்த உடலைத்தான் சொல்கிறார்கள்…! என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார்.
3.அழியப் போகும் உடலுக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. இது உண்மை.

ஆனால் கிடைக்காத அந்த மாரியாதைக்காக நாம் எவ்வளவு கௌரவம் பார்க்கிறோம்….? எப்படி எல்லாம் உடலை அழகு பார்க்கிறோம்…? உடலுக்காக இன்னும் என்னென்னவோ பல சிரமங்களை ஒவ்வொரு நிமிடத்திலும் படுகின்றோம்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் அதை உயிருடன் ஒன்றிய நிலையாக விளைய வைத்துக் கொண்டே வந்தால்
1.அதற்குரிய மரியாதை இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.அழியாத நிலையாக என்றுமே உயிருடன் ஒன்றி வாழ முடியும் என்று உணர்த்துகிறார் குரு.

உடலுக்குக் கொடுக்கும் அல்லது எதிர்பார்க்கும் மரியாதையை விட மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்ப்பதில் நமக்குக் கிடைக்கும் மரியாதையே என்றும் நிலைத்ததாகும்.

ஆகவே பிறரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது மரியாதை கிடையாது. மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்தால் தான் நமக்கு (உயிராத்மாவிற்கு) மரியாதை.