நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

நம் எண்ணங்களும்… நாம் நுகரும் உணர்வுகளும்… அதனின் செயலாக்கங்களும்

 

இன்று நாம் தவறே செய்ய வேண்டாம். ரோட்டிலே செல்கின்றோம்… வாகனம் ஒன்று வேகமாக வருகின்றது…! என்று பார்க்கின்றோம். யார் மீதாவது மோதி விட்டால் அவர்கள் அவதிப்படுவார்களே என்ற எண்ணங்கள் நமக்குள் தோன்றுகின்றது.

அத்தகைய எண்ணங்கள் தோன்றும் பொழுது அந்த வாகனத்தின் வேக உணர்வைக் காணும் பொழுது மனது “பட…பட…” என்று துடிக்கின்றது. பயத்தினால் துடிக்கப்படும் பொழுது அச்சமான உணர்வலைகள் பெருகி விடுகின்றது.
1.பய உணர்வு பெருகினால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
2.வேதனையாகி… இனி என்ன ஆகும்…? என்று மன பயம் தூண்டப்படுகின்றது.

வேதனை என்பதே நஞ்சு. வேதனை கலக்கப்படும் பொழுது எதையாவது ஒரு பொருளை பார்க்கிறோம் என்றால்… அந்தப் பொருள் கீழே விழுந்து விடுமா…? என்ற பயம் வருகின்றது.

அந்த பயத்துடன் எண்ணிவிட்டால்
1.பார்த்த உடனே அந்தப் பொருள் கண்டிப்பாகக் கீழே விழுந்து விடும்.
2.அதே சமயத்தில் மன உறுதி கொண்டு அதை மாற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் உடனே அது வரும்.

ஆனால் நாம் கீழே விழுந்து விடும் என்று எண்ணுவோம். அதை (எண்ணத்தை) எடுத்து மாற்றி வைக்க மனம் வராது.

ஆக… இந்த உணர்வுகள் இத்தகைய நிலையில் கொண்டு அதுவே எண்ணத்தில் இருக்கப்படும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்களும் எதிர்வரும் உணர்வு மோதப்படும் பொழுது
2.காற்றலை போல வந்து அந்தப் பொருள் ஆடுவதைப் பார்க்கலாம்.

மனிதனின் உணர்வின் உணர்ச்சிகள் “கொஞ்சம் போல இருப்பதை” இதில் உள்ள காந்தப்புலன் எழுத்து டப்… என்று கீழே விழுகச் செய்துவிடும்.

இதே போல ஒரு மனிதனுக்கு உடலில் அரிப்பாகிவிட்டால் அதை உற்றுப் பார்த்தால் உங்கள் கை அடுத்து உடலில் எங்கேயாவது ஒரு இடத்திற்குப் போய் அதைத் தேய்க்க ஆரம்பிப்போம்.

அந்த உணர்வின் உணர்ச்சிகள் நம்மை அறியாமலே அந்த உணர்ச்சிகளைத் தூண்டச் செய்யும். ஏனென்றால்
1.அந்த இயற்கையின் உணர்வுகள் நாம் எதை உற்றுப் பார்க்கின்றோமோ நுகர்கின்றது
2.நுகரும் பொழுது அந்த உணர்வு நம்மை அறியாமலேயே செயல்களைச் செயல்படுத்தி விடுகிறது.

ஒருவர் தலை சொறிவதைப் பார்த்துக் கொண்டேயிருங்கள். நம்மை அறியாமலே இந்தக் கை நம் தலையைச் சொறியும்படி செய்யும்.

காரணம் அந்த உணர்வின் எண்ணங்கள் நுகரப்படும்போது அந்த உணர்ச்சிகள் தான் நம்மை இயக்குகின்றது.

இது எல்லாம் இயற்கையின் சில செயல்கள்.

இதைப் போன்று தான் மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நுகர்ந்தோம் என்றால் நம் நல்ல குணங்களை… அந்த வேதனை என்ற விஷம் நம்மைத் தெளிவாக்காதபடி இருளாக்கி விடுகின்றது.

அப்போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகிறது… நல்ல பார்வைகளோ நல்ல சொல்களோ இழக்கப்படுகிறது. நல்லதைச் சொல்லத் தவறி விடுகின்றோம்.
1.ஒரு நல்லதையே எண்ணி அந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றால் முடியாது…
2.நம்மால் நல்லது சொல்ல முடியாது போய் விடுகின்றது.
3.நல்ல உணர்வின் நினைவு இல்லாது போய் விடுகின்றது…
4.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய் விடுகிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் வேதனைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தே ஆக வேண்டும் நம் உடலில் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை மீண்டும் மீண்டும் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்தே ஆக வேண்டும். இவ்வாறு செய்தால் தான்
1.நம்மை அறியாமல் இயக்கச் செய்யும் பிற உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் விடுபட முடியும்.
2.நாம் அருள் வழியில் என்றுமே வாழ முடியும்.

இன்றைய உலகப் பிடியில் நம் எண்ணத்தை அடகு வைத்து விட்டால்… மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் ஆகும்

இன்றைய உலகப் பிடியில் நம் எண்ணத்தை அடகு வைத்து விட்டால்… மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் ஆகும்

இந்தக் கலி முடிந்து அடுத்து வர இருக்கும் “கல்கி” மாற்றத்தின் சுழற்சியில் மீண்டும் மனிதர்கள் ஜீவனுக்கு வந்தாலும்
1.இந்த உலக மாற்றத்தின் பொழுது நம் உடலிலுள்ள ஆத்மா பிரியும் நிலை கொண்டு
2.அடுத்த பிறப்பிற்கு வரும் தொடரும் அதன் சுழற்சியிலே தான் செயல் கொள்ள முடிந்திடும்.

பிறப்பிற்கு வரும் நிலையில் முதல் கால கட்டத்தில் (கல்கி) வரும் தருவாயிலேயே “அறிவாற்றல் கொண்ட” எண்ணத்தின் நிலைக்கொப்பத் தாயின் கருவிற்கு வர முடியாது.

எல்லாமே மாறிய பிறகு புதிய உயிரணுக்கள் தோன்றும் தருவாயில் அந்த உயிரணுக்கள் ஜீவனின் வளர்ச்சி நிலை பல காலங்கள் தாவர இன வர்க்க வளர்ச்சியிலும் மற்ற கனி வளங்களின் வளர்ச்சி நிலையிலும் செயல் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அவை வளர்ந்து.. மடிந்து… அதிலிருந்து தோன்றும் உயிர்ப் பிராணி நிலை பெற்று மீண்டும் அதன் இன வர்க்க நிலை மாறி பல வளர்ச்சி நிலைகள் தானாக உயிர் பெறும் உயிரணுவிலிருந்து மாறிப் பல அமில குணத்தை ஈர்த்த உயிரணுக்களாக வேண்டும்.

அப்படி ஆன பிறகு உயிராத்மாவாகி அந்த உயிராத்மாக்களின் சேர்க்கைக் குணமுடன் மற்ற உயிரணுவின் பிறப்பு நிலை தோன்றிய பிறகுதான் ஜீவன் பெறும் நிலை கொள்கின்றது.

உயிரணுவிற்கும் உயிராத்மாவிற்கும் வேறுபாடு புரிகின்றதா…?

இந்தப் பூமியிலிருந்து வெளிப்படும் வெப்ப அலையின் அமில குணத்தின் ஈர்ப்பில் படர்ந்து இயற்கை வளங்களாக வளர்பவை எல்லாம் உயிரணுக்கள் கொண்ட நிலை.

உயிராத்மா என்பது… பிறப்பிற்கு வரும் இரண்டு ஜீவ உடல்களின் எண்ணக் கலவையின் சேர்க்கையில்… தன் நிலையை ஜீவிதம் கொள்ளும் ஆசையுடன் கர்ப்ப நிலைக்கு ஜீவன் கொள்வதெல்லாம் ஜீவ ஆத்மா பெறும் நிலை.

இப்படி இம் மாறும் கலியினால் நம் உயிரணு உருவிற்கு வரப் பல்லாயிரம் ஆண்டுகள் செல்லும் (இது முக்கியம்). இந்த உலகச் சுழற்சியில்
1.நம் எண்ணத்தை இவ்வுலகப் பிடியில் அடகு வைத்து விட்டால்
2.அதை மீட்பதற்கு பல ஆயிரம் காலங்கள் செல்லும்.

இவ்வெண்ண நிலையிலேயே பிரியும் ஆத்மாக்கள் தான் சேமித்த குண நிலையுடனே சுழன்று சுழன்று… மீண்டும் அறிவு நிலை கொண்ட ஞானம் பெறக்கூடிய உடல் பெறுவதற்குப் பல காலங்கள் சுழல வேண்டியதிலிருந்து மீட்டிட வேண்டும் என்பதற்குத் தான் இந்த உண்மைகளைப் புகட்டுகின்றேன்.

பரம்பொருளின் ஞானமான அச்சக்தி நிலை கொண்ட ஜோதி ஆத்மாக்களான அந்த மாமகரிஷிகளிடம் நம் எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் காட்டிய வழியில் நம் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

அந்தச் சப்தரிஷிகளின் எண்ண வட்டத்திற்குள் நாம் எடுக்கும் சுவாச அலைகள் பாயும் பொழுது அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும்.

மேன்மேலும் அந்தச் சக்தியை நாம் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தின் பொழுது அவர்களின் நிலையுடன் நாம் ஐக்கியப்பட்டு அவர்களைப் போன்று நாமும் சப்தரிஷியாகலாம்.
1.இந்தப் பூமி மட்டுமல்ல… எந்தப் பூமியையும் நமதாக ஏற்று
2.அந்த ஒளி வட்டத்திற்குள் நம் ஒளி பிரகாசிக்கத்தான்
3.யாமறிந்த (ஈஸ்வரபட்டர்) உண்மைகளைப் பலரும் அறிந்து கொள்ளவும்
4.அப்பரம்பொருளின் ஞான சக்தியை வழிப்பெறும் வழி ஆற்றலைப் புகட்டுகின்றோம்.

இவ்வுயிரணு தோன்றி மாறி மாறி எடுக்கும் அமில குணத்தின் வளர்ச்சியினால் ஏற்படுவது தான் சிறு எறும்பு முதல் கொண்டு சூரியன் சந்திரன் அதற்கும் அப்பாற்பட்ட எல்லாமே…!

எந்த உயிரணுவும் மடிவதில்லை. எப்பரம்பொருளிடமும் ஒன்றி நிற்பதுவும் இல்லை.

உயிரணுவாக உலகாய் உருவம் கொண்டே வளர்ந்து கொண்டே கலந்துள்ளது தான் அப்பரம்பொருளான ஆதிசக்தியின் ஒளி சக்தி.
1.ஒன்றுடன் ஒன்று மாறி மாறி உருப்பெற்றே சுழன்றே ஓடும் சிக்கலில்
2.உயர் ஞானம் கொண்ட சப்தரிஷிகளின் ஞானம் பெறுவது தான் உயர் ஞானம்.

அந்த ஞான நிலை பெறும் வழித் தொடர் தான் இந்த மனித உடல் கொண்ட ஆத்ம ஞானம். மனித உடல் கொண்ட ஞானத்திலிருந்து தான் உயர் ஞானம் பெற முடியும்.

இந்த மனித உடல் கொண்ட அறிவு நிலை பெற பல உருமாற்றம் கொண்ட உருவ நிலையெல்லாம் பெற்றுப் பெற்றுத் தான் இந்த மனித உடலையே பெற்றிருக்கின்றோம்.

செயற்கையின் பிடியில்… கலியான இக்காலத்தில்… சோம்பேறி நிலை கொண்ட வாழ்க்கைக்கு அடிமைப்பட்டு மீளத் தெரியாமல் சிக்குண்டு வாழும் நாம்… இந்த மனித ஞானத்தைப் போற்றி நல் வழி பெறும் ஞானத்தைப் பெற்றிடுவோம்.

கண்ணாடியில் உள்ள தூசியைப் போக்கிட அழுக்குத் துணியால் தட்டினால் மீண்டும் இதன் அழுக்குத்தான் அதிகமாகப் படரும். சுத்தமான துணியை கொண்டு துடைத்தால் தான் அந்தக் கண்ணாடியில் உள்ள அழுக்கு நீங்கும்… ஏனென்றால்
1.அழுக்கை அழுக்கு கொண்டு அகற்ற முடியாது.
2.நம் அக அழுக்கைப் பக்தி என்ற பகவான் ஞானத்தைக் கொண்டு போக்கித் தான் நம் அழகை நாம் காண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்

துருவ நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகள்

 

தீமையின் உணர்வுகளைச் சமப்படுத்தி அதை ஒளியாக மாற்றும் அந்த அறிவின் ஞானமாக மாற்றிடும் நிலைகளுக்காகத் தான்… அன்று சைவ சித்தாந்தம் மகரிஷிகளால் உருவாக்கப்பட்டது.

மின்மினிப் பூச்சிகளைப் பார்க்கின்றோம். அது தனது உணர்வின் தன்மையை மூச்சலைகளாக மாற்றும் பொழுது
1.அதற்குள் இருக்கக்கூடிய கந்தகத்துடன் உராய்ந்து
2.ஒளிக்கற்றைகளாக மின்னி வெளிச்சத்தை ஊட்டுகின்றது.

அதைப் போன்று தான் மகரிஷிகளும் விண்ணிலிருந்து வரும் உணர்வை அடக்கி ஒளியாக மின்னிக் கொண்டிருக்கின்றார்கள்… ஒளிக்கறைகளை உமிழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

நமது வாழ்க்கையில் இருள் சூழும் நிலைகள் வரும் பொழுது… அந்த இருளை மீட்டிடும் நிலையாக நாம் நம்முடைய ஒவ்வொரு அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை இணைக்க வேண்டும்.

அதாவது இருள் சூழ்ந்த நிலையை நீக்கிவிட்டு உட்பொருளை நாம் அறியும் சக்தியாக அந்த மகரிஷிகளின் ஆற்றலை நாம் பெறுதல் வேண்டும்.

எப்பொழுதெல்லாம் சங்கடமும் வேதனையும் தோன்றுகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
1.அதை மாற்றியமைத்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்து அதனுடன் இணைத்து விட்டால்
2.தீமையின் உணர்வு தனக்குள் வராதபடி தடுத்து அதற்குள் உட்பொருளை அறியும் அறிவின் ஞானமாக நமக்குள் வளரும்.

மனிதனான பின் இதைத்தான் கார்த்திகேயா என்பது…! பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி வளர்ச்சி அடைந்த அந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றி அமைத்து அதற்குத் தக்க ரூபங்களை மாற்றி அந்த உணர்வின் எண்ணங்களால் இன்று மனிதனாக உருவாக்கி வைத்துள்ளது நமது உயிர்.

ஆகவே… எதனையும் அறிந்திடும் செயலாக்கங்கள் மனித உடலுக்குள் உண்டு. ஆறாவது அறிவைச் சீராகச் செயல்படுத்திய மனிதன் தான் விஞ்ஞானியாக ஆகின்றான்.

அதைச் சீராகச் செயல்படுத்தும் மெய் ஞானி தன் உணர்வின் தன்மை கொண்டு உடலின் மாற்றத்தை உருவாக்கி… ஒளியாக மாற்றிடும் நிலையாகப் பிறவி இல்லாத நிலை அடைகின்றார்.

வானவியல் புவியியல்… அதாவது
1.வானிலே விளைந்த அணுக்களின் தன்மை புவியியலாக மாற்றப்படும் பொழுது தாவர இனங்களாக மாறுகின்றது
2.தாவர இனங்களாக மாற்றிய உணர்வின் தன்மையை உயிரணு நுகரப்படும் பொழுது உயிரியலாக மாறுகின்றது.

உயிரியலின் தன்மை தனக்குள் மாற்றப்படும் பொழுது
1.விண்ணுலகில் உயிரணுக்களின் மின் அணு போன்று தீமைகளை நீக்கி
2.தீமையற்ற உணர்வுகளைத் தனக்குள் வளர்த்தவர்கள் தான் மகரிஷிகள்.

மின்மினிப் பூச்சி தான் நுகரும் உணர்வின் தன்மை கொண்டு “வெளிச்சத்தை உருவாக்கி” இரை தேடிச் சென்று அந்த உணர்வினை அது வளர்க்கின்றது. அதைப் போன்று தான்
1.துருவ மகரிஷி தனக்குள் ஒளியின் சரீரமாக ஆகி வளர்ந்து இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் ஒளி அலைகளாக இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளது… நமக்கு முன் பரவிக் கொண்டுள்ளது.

உதாரணமாக ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் உற்றுப் பார்த்து அவனுக்கு வேண்டிய உதவிகளை நாம் செய்தாலும் அந்த வேதனையான உணர்வுகள் நம் உடலில் உள்ள நல்ல அணுக்களில் படரப்படும் போது இருள் சூழ்ந்து விடுகிறது.

அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து அதை அடக்கி ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மின்மினிப்பூச்சி தன் ஒளிக் கதிர்களைப் பாய்ச்சி
1.மற்ற எதிரிகளிடம் இருந்து தப்பி
2.தாவர இனங்களில் விஷத்தன்மையான அணுக்களை விலக்கிவிட்டு
3.தான் எந்த இடத்தில் உணவாகத் தேடியதோ அதைத் தெளிவாக எடுத்து அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக விளையும்.

இதைப் போன்று தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக “ஒளியின் நிலைகளாக ஜொலித்துக் கொண்டு” இந்தப் பிரபஞ்சத்திற்குள் வருவது அனைத்தையுமே ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டுள்ளார்.

அதிலிருந்து வெளிப்படும் ஒளிக்கற்றைகளை சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து பரவச் செய்கின்றது.
1.அதை யாரெல்லாம் உற்று நோக்குகின்றார்களோ…
2.அதைப் பெற வேண்டும் என்று பதிவு செய்து அந்த ஆற்றலைப் பருக எண்ணுகின்றார்களோ…
3.அவர்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதி பெறுகின்றார்கள்.

எத்தகைய வேதனையோ அல்லது நஞ்சான உணர்வுகளோ வந்தாலும்… அதனால் அவதிப்படுவோருக்கு நாம் உதவி செய்தாலும்… அந்த உணர்வினைத் தனக்குள் கவராது “துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதனுடன் இணைக்கப்படும் பொழுது” இருளை நீக்கி… தனக்குள் பொருள் காணும் நிலைகளுக்கு “அந்த உணர்ச்சிகளைத் தூண்டிச் சமப்படுத்தும் எண்ண வலிமையை உருவாக்கும்…!”

ஆகவே ஒவ்வொரு நொடியிலும்
1.துருவ நட்சத்திரத்தின் ஒளிக் கற்றைகளை நாம் நுகர்தல் வேண்டும்…
2.உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியின் அணுக்களாக மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

வழி மாறிச் சென்ற “மெய் ஞான விழிப்பை” மீண்டும் வழிப்படுத்துகின்றோம்

வழி மாறிச் சென்ற “மெய் ஞான விழிப்பை” மீண்டும் வழிப்படுத்துகின்றோம்

 

இப்பொழுது மெய் ஞானத்தின் தத்துவத்தை யான் (ஈஸ்வரபட்டர்) தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

மாமரத்தில் மரம் முழுவதற்கும் எல்லாக் கிளைகளிலும் கனிகள் ஒன்றைப் போல் கிடைக்கப்படும் நிலையில் மனித ஆத்மாக்கள் ஒத்து வாழ்ந்த நிலை தான் முந்தைய காலங்களில் இருந்தது.

அது மாறி அரசன் என்ற ஒருவரின் கீழ் ஆதிக்கம் பெற்று குடிமக்களாக வழி வந்த வாழையின் நிலையில் ஒரு மரம் ஈனும் குலையில் பல பழங்கள் உள்ள நிலை போன்று வழி வந்தது.

அதுவும் மாறி இப்பொழுதைய நிலையோ பலா மரத்தை ஒத்த ஜாதியின் மரம் ஒன்று தான் அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தில் ஒவ்வொரு பழத்திற்குள்ளும் பல சுளைகள் அடக்கம் பெற்றுள்ள நிலை போல் ஜாதி என்ற ஐக்கியப் பிணைப்புடைய நிலையாக இருக்கின்றது.

அப்படி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் “மெய் ஞான விழிப்பு…” என்ற நிலையில் பேருண்மைகளைக் கூறினாலும்… சுழன்று கொண்டேயுள்ள ரங்கராட்டினத்தை உடனே நிறுத்தும் பொழுது அது அப்படியே நிற்காது. ஓர் அசைவுபட்டுப் பின்னோக்கி முன் வந்து தான் அதை நிறுத்துவது போல் தான்
1.சுழன்று கொண்டுள்ள இந்தப் பிணைப்பான வழி முறை மாற்றத்திலிருந்து
2.நம் மனித ஆத்மாக்களை அவர்களின் எண்ணத் தொடரையே சிறுகச் சிறுக வழிப்படுத்தித்தான்
3.உண்மையின் ஸ்வரூபத்தை உணர்த்திக் காட்டிடல் முடியும்.

ஆதிசங்கரரின் காலத்திற்குப் பிறகு… மனித ஆன்மாக்களை ஞான மார்க்கத்திற்கு வழிப்படுத்தும் யோகமார்க்கங்களும் பக்திமார்க்கங்களும் மனிதனைத் தன் இச்சையில் வழிப்படுத்தும் நிலையிலேயே விட்டுவிட்டனர்.

பல மகான்கள் இந்த உலகிற்கு நல்வழி புகட்டப் பல வழிகளைச் செயல்படுத்தி வந்தாலும் ஈர்த்து எடுக்கும் பக்குவ குணமுள்ள மனித ஆன்மாக்களைச் செயலாக்குவது கடினப்பட்டுவிட்டது.

அதனால் தான் அந்த மகான்கள் தான் உணர்ந்த வழிகளை மட்டும் அனுபவக் கதையாக்கி… கடைசியில் ஆண்டவன் என்றால் யார்…? என்று ஒரு ஞானத்தைப் புகட்டிவிட்டு “இந்நிலை பெற… மனித ஆன்மாக்கள் எந்த நிலை பெற வேண்டும்…?” என்பதனை உணர்த்தாமல் சென்றுவிட்டனர்.

இவ்வளவு காலங்களுக்குப் பிறகு உம்மால் (ஈஸ்வரபட்டர்) உணர்த்தப்படும் நிலை என்ன…? என்ற வினா எழும்பலாம்.
1.இந்த நிலையை இப்பொழுது இங்கே உணர்த்துவது என்பது என் ஒருவனின் செயல் மட்டுமல்ல..!
2.இந்தப் பூமியில் அவதரித்து ஆண்டவனான சப்தரிஷிகள் பலரின் ஆவலை
3.இந்தப் பூமியின் ஆத்மாக்கள் உண்மை உணர்ந்து உயர… போதனைகள் இங்கே அளிக்கப்படுகின்றன.

இதற்கும் வினா எழும்பலாம்… இப்பொழுது மட்டும் அது எப்படி என்று…?

1.எந்தச் சக்தி பரப்பப்பட்டதோ..
2.அந்நிலையில் ஏற்றுக் கொண்ட நிலைப்பட்டவரினால்…
3.பலருக்கும் நிலைப்படுத்த இச்செயல் நடந்து வருகின்றது.

ஒவ்வொரு ஆத்மாவும் “தன்னுள் உள்ள ஜீவத் துடிப்பே தான் ஆண்டவன்…!” என்பதை உணர்ந்திடல் வேண்டும்.

அந்த ஜீவனுக்கு ஜீவன் தந்த காற்றும்.. ஒளியும்.. நீரும்… கொண்ட ஜீவ ஆண்டவன்களை ஜோதி கொண்டு வணங்கியே வழித் தொடர் பெறும் நடை முறைச் செயல்களை உணர்த்திடுவோம்.

அடுத்தவர்களைப் பற்றி நாம் அறிய முற்பட்டால் வரும் தீங்குகள்

அடுத்தவர்களைப் பற்றி நாம் அறிய முற்பட்டால் வரும் தீங்குகள்

 

என் (ஞானகுரு) கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு மற்ற மனிதர்களை உற்றுப் பார்க்கும்படி செய்தார் குருநாதர். உதாரணமாக ஒருவர் உடலில் வலியும் வேதனையும் இருக்கின்றது என்றால் அதற்கென்று சில முறைகளை குரு எனக்கு உணர்த்தினார்.
1.அந்த முறைப்படி அந்த உணர்வின் நினைவு கொண்டு அவர் உடலுக்குள் கண்களிலே பார்த்தோம் என்றால்
2.மற்ற எதிரியான அணுக்கள் அந்த உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுடன் போர் செய்து
3.அதைக் கொன்று புசிக்கும் நிலையாக வரும் பொழுது வலி ஏற்படுகின்றது என்பதை உணர முடிந்தது.

ஆரம்ப காலத்தில் நிறைய பேருக்கு இதை எல்லாம் நானும் காண்பித்தேன்.
1.உடலிலே வலி ஏற்படும் இடங்களில் என்ன நடக்கிறது…?
2.உடலுக்குள் என்னென்ன உருவாகின்றது…?
3.வயிற்றில் கேன்சரே இருந்தாலும் அந்தக் கட்டியின் நிலை எப்படி இருக்கிறது…? என்று பார்க்க வைத்தேன்.

அதாவது… நோய்க்குக் காரணமான நிலைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று குருநாதர் எனக்குக் காட்டிய அருள் வழியில் மற்றவர்களையும் பார்க்கும்படி வைத்தேன்.

ஆனால் அந்த மாதிரிப் பார்க்கும் பொழுது “அங்கே என்ன…? ஏது…?” என்று பிறருடைய நோய்களை அதிகமாகக் கவர்ந்து விடுகின்றார்கள். பின் அந்த நோயைத் தான் அவர்கள் வளர்த்துக் கொண்டார்கள்.

அந்த அருள் ஞானிகள் பெற்ற அருள் ஞானத்தை இவர்கள் வளர்த்துக் கொள்ள முடியவில்லை. காண்பித்த உடனே தெரிந்ததும் பெரிய அதிசயமாக… பேராச்சரியமாகப் போய் விடுகின்றது.

உன் குடும்பத்தில் இப்படி எல்லாம் சண்டை வந்தது என்று நுகரும் ஆற்றல் வந்ததும்
1.கெட்டதை எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்
2.ஆனால் நல்லதைச் சொல்ல முடியவில்லை.

சாதாரணமாக… எந்தெந்த தெய்வங்களை நாம் வணங்கி வருகின்றோமோ இந்த உணர்வலைகள் உடலில் செல்களாக அமைகின்றது. இறந்து விட்டால் அதே பக்தி கொண்டு இன்னொருவர் ஏங்கப்படும் பொழுது இந்த ஆன்மா அங்கே சென்று காட்சியாகக் கொடுக்கும்.

தெய்வத்தின் காட்சிகள் எல்லாம் எப்படி உருவாகிறது…? என்பதை ஆரம்பத்தில் தெளிவாகக் காட்டி வந்தது தான். ஆனால் கடைசியில் என்ன செய்து விட்டார்கள்…?

எந்தெந்த ஆசை கொண்டு… தெய்வங்களை எப்படி வணங்கினார்களோ அந்த மனிதன் இறந்த பிற்பாடு அதே தெய்வ பக்தி கொண்ட மனிதன் ஏங்கினால் அதே ஆன்மா இங்கே வரும்.

எந்த தெய்வத்தை இவர் வணங்கினாரோ அதை தெய்வத்தினை வணங்கி இறந்த அந்த ஆன்மா வந்துவிடும். ஆஹா… மீனாட்சியைப் பார்த்தேன் காமாட்சியைப் பார்த்தேன். எங்கள் குலதெய்வத்தைப் பார்த்தேன் முருகனைப் பார்த்தேன்.

அவர் வழிபட்ட உணர்வுகள்… அதன் வழியில் பார்ப்பார்கள்.

ஆனால் அடுத்து… அவர் எப்படி வேதனைப்பட்டாரோ அதுவும் இவருக்குள் விளையும்… தெய்வம் எனக்குக் காட்சி கொடுத்தது என்று. எந்தெந்த தெய்வத்தைப் எண்ணி எந்த நோயால் மடிந்தாரோ அந்த மடிந்த உணர்வின் தன்மையே இங்கே வரும் இதைப் பார்க்கலாம்… அவருக்குள் அருளாடும்.
1.முருகன் என்னைச் சோதிக்கின்றான்… காளி என்னைச் சோதிக்கின்றது… குலதெய்வமே என்னைச் சோதிக்கின்றது என்று.
2.இவைகள் எல்லாம் உடலுக்குள் அணுக்களாக விளையப்படும் பொழுது அந்த உணர்வுகள் உடலுக்குள் செல்களாக வளர்கின்றது.
3.இறந்த பின் அது அலைகளாகப் படர்கின்றது அதே எண்ணம் கொண்டு பதிந்தபின் அந்த உருவம் தெரிகின்றது

இப்படித்தான் தெய்வங்கள் காட்சியாகத் தெரிய வரும்.

ஆண்டவன் வந்து நமக்குச் செய்து தருவதல்ல… நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்

ஆண்டவன் வந்து நமக்குச் செய்து தருவதல்ல… நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்

 

இருட்டில் உள்ள பொழுது வெளிச்சத்தைக் கண்டவுடன் மகிழ்கின்றோம். வெயிலில் உள்ள பொழுது நாம் நிழலுக்கு ஏங்குகின்றோம்.

ஆனால் இந்த நிலை பெற்ற பிறகு உண்மையின் நிலையிலேயே உள்ளோமா…? தன்னிச்சைப்படி இந்த வழித் தொடரின் வாழ்க்கையில் தான் உழன்று கொண்டுள்ளோம்.

அதே போல் நம் வாழ்க்கையில் பல நிலைகளை நம் உடலினுள் கூட்டிக் கொண்டுள்ளோம். இந்த நிலையை மாற்றி நம் ஒளியைக் காண முயல்கின்றோமா…?

கண்ணாடியின் தூசியை அகற்றித் தெளிவாக உருவைக் காணுகின்றோம்.
1.இந்த உடலில் உள்ள அசுத்த அலைகளையும் தீய எண்ணங்களையும் மாற்றி
2.நம்மின் உண்மை அழகைக் காண முயல்கின்றோமா…?

நம்மிடமுள்ள அசுத்த அலைகளை அகற்ற நாம் விழையாமல் “ஆண்டவன் வந்து தானாக அகற்றுவான்…! என்று ஆண்டவனை வேண்டி… அக அழகு காண முயல்கிறோம்…”

ஒரு செம்பில் உள்ள நீரில் அதற்கு மேன்மேலும் நல்ல நீர் ஊற்றும் பொழுது நல்ல நீரும் அசுத்த நீரும் கலந்து வெளிப்பட்ட பிறகு தானாக அனைத்தும் நல்ல நீராகி விடுகின்றது.

அதைப் போல் நம்மில் உள்ள தீய அணுக்களை நாம் எடுக்கும் நல் உணர்வின் ஈர்ப்பினால்… மேன்மேலும் சேமிக்கப்படும் நல் உணர்வான அமில குணங்கள் அதிகப்படப்பட… இந்தத் தீய அணுக்கள் பல ரூபத்திலும் வெளிப்பட்டுவிடும்.

1.நம் உடலில் இரத்த நாளங்களில் ஆக்ரோஷமான ஆவி ஆத்மா ஏறியிருந்தாலும்
2.தீய அமில குணங்கள் வெளிப்படும் பொழுது
3.அதன் குண அமிலத்திற்குகந்த ஆகாரம் கிடைக்காத தன்மையில்
4.அதன் பாதிப்பான குணத் தூண்டுதலும் நம்மை ஒன்றும் செய்திடாது.

இந்நிலையை உணர்த்தும் தத்துவ ஞானத்தை உணர்ந்து இந்த ஆத்மாக்கள் உயர்ந்தால் தான் சக்தி நிலை கூடும்.

உலக சக்தியும்… அண்டசராசரங்கள் என்று உணர்த்துகின்றனரே… அந்த அனைத்துச் சக்தியையும் உணர்த்த வல்ல சக்தி இந்த உலக ஆத்மாக்களுக்குத் தான் உண்டு.

மனித ஆத்மாவினால் முடியாத சக்தி எச்சக்திக்குமில்லை…!

இதை உணர்த்தும் நிலை இந்த உலகம் நம் பூமியின் நிலை கூடிக் கொண்டேயுள்ளது. உலகச் சுழற்சியில் பல அமில சக்திகளை நம் உலகம் ஈர்த்துக் கொண்டே சுழன்றுள்ள நிலையில் உலகின் உள் நிலையில் உள்ள பல அமிலங்கள் வெளிப்பட்டு விட்டது.

1.இயற்கையாக வெளிப்பட்டது மட்டுமின்றி
2.மனிதனால் பூமியிலுள்ள பல பொக்கிஷத்தை ஈர்த்து எடுத்ததினால்
3.மேல் பாகம் கனத்தும் உள் நிலை வலுவிழந்தும் உள்ள நம் பூமியின் நிலை
4.இந்தக் குறுகிய காலப் போக்கில் தன் நிலையைத் தானாக ஒழுங்குபடுத்தும் நிலை வருகின்றது.

அப்பொழுது நம் நிலை எல்லாம் என்னவாகும்..? என்பதனை உணர்ந்து இந்த உடல் என்ற கோளத்தை நம் நிலைக்குகந்த அமிலங்களைச் சேமித்து நம் உயிராத்மாவிற்கு ஊட்டம் தந்து ஆத்ம ஞானம் பெறும் அறிவின் பொக்கிஷத்தின் வழித் தொடரை உருவாக்குங்கள்.

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

 

சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே குடும்பத்தில் எதிர்பாராது பல நிலைகள் ஆகி அதனால் வேதனையாகும் பொழுது கோபமும் எரிச்சலும் சிறுகச் சிறுக விளைந்து… உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள்” அதிகமாக இயங்க ஆரம்பிக்கும்.
1.எந்த அளவுக்கு வேகத் துடிப்பின் உமிழ் நீர்கள் சுரக்கின்றதோ
2.அந்த வேகத் துடிப்புக்கொப்ப பித்தம் அதிகமாகும்.

ஆகாரத்தை எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் இயங்கி அதை ஜீரணிக்க செய்யும். ஆனால்
1.அதிகமான பித்தமானாலோ மந்தமாக்கிவிடும். அதே சமயத்தில் வாய் உமட்டல் வந்துவிடும்
2.பசி அதிகமாகும் ஆனால் ஆகாரம் அதிகமாக உட்கொள்ள முடியாது.

இத்தகைய உணர்வு உடல் முழுவதும் பரவி… கார உணர்ச்சிகளும் கூடி அதை இந்த பித்த சுரப்பிகள் எடுக்கப்படும் பொழுது “நமது நாடி நரம்புகள் அனைத்தும் பலவீனப்படச் செய்யும்…”

அதே சமயத்தில் எதையாவது ஒரு தொழில் செய்வோம் என்றால்
1.கடினமான சாமானைத் தூக்கினால் திடீரென்று கண் கட்டும்… கீழே விழுகச் செய்யும்.
2.அதே சமயம் உட்கார்ந்து எழுந்தாலும் கண் கட்டச் செய்யும்.

ஏனென்றால் இந்தப் பித்தத்தின் சுரப்பிகள் நமக்குள் அதிகமாகும் பொழுது… கடைசியில் இரத்தக்கொதிப்பும் பக்கவாதங்களும் வந்து விடுகிறது.

ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை உயிர் இயக்கிக் காட்டுகின்றது. நாம் எதைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் உண்மையை… “குடும்பத்திலே இப்படிச் செய்கின்றார்கள்…” என்று அந்த உணர்வினைக் கண் இழுத்துக் காட்டுகின்றது.

அந்த உணர்வினை உயிர் இயக்கிக் காட்டிப் பொருளறியச் செய்கின்றது… அறியச் செய்தாலும்… நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக ஐக்கியமாகி விடுகிறது.

இவ்வாறு உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை… இவை அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய திறன் மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு.

அதைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வந்தது போல இந்த உணர்வின் தன்மை நம்மை அறியாமலே இயக்கி வேதனை கொண்ட உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கி விடுகிறது.

வாதமோ இரத்தக் கொதிப்போ ஆகிவிட்டால் அதே சமயத்தில் பித்த சுரப்பிகள் அதிகமாகும் பொழுது பசியின் கொடுமை அதிகமாகும். வாத நோய் வந்தவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்கும் பசியின் ஏக்கம் அதிகமாகும்.

1.பசி எடுத்தவுடன்… ஆகாரம் உடனே கொடுக்கவில்லை என்றால் மிகவும் கோபம் வரும்
2.யார் அவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களை ஏச வேண்டிய நிலையில் வெறுக்கும் நிலையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

அந்த வெறுப்பான உணர்வு கொண்டு வேகமாகக் கேட்கப்படும் பொழுது அவர்கள் உணவு உடனே கொடுக்கவில்லை என்றால் அவருடைய எண்ணம்…
1.“இப்படிச் செய்கின்றார்களே…
2.நான் சம்பாரித்துக் கொடுத்தேனே…
3.தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யவில்லையே என்ற இந்த உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வுடன் ஏங்குகின்றாரோ இந்த உணர்வின் ஆற்றல் அவர் உடலுக்குள் சென்று விடுகின்றது. உடலை விட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பண்புடன் உதவி செய்திருந்தாலும்… நேரத்தில் தனக்கு உபகாரம் செய்யவில்லை என்ற இந்த உணர்வு தான் உந்தப்படுகிறது.

அந்த உணர்வின் வேகத்தில் அவர் மேல் எடுத்துக் கொண்ட வெறுப்பான உணர்வுகள்… பதிலுக்கு அவர்களும் வெறுப்பாகச் சொல்லும் பொழுது வெறுப்பான உணர்வுகளைப் பாய்ச்சி… பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பும் நம்மைப் பார்க்கும் பொழுது வெறுப்பும்… இப்படி வெறுப்புகள் தோன்றி இந்த உணர்வுகள் விளைந்து உடல் நலிவடைந்து விடுகிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா… யார் மீது வெறுப்பானதோ அவர் உடலுக்குள் தான் செல்லும்… இதே நோயின் கொடுமையை அங்கேயும் உண்டாக்கும்.

தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்

தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை நாம் பெற வேண்டும்

 

தீபத்திற்கு ஓ…ம் என்ற ஒலியின் உருவ எழுத்தினை மேல் வைத்து ஐம்புலனின் ஐக்கிய ஒளியை ஐந்து முகங்களாக்கி தீபமேற்றி வணங்கிட நம் முன்னோர்ககள் வழிப்படுத்திச் சென்றார்கள். ஒவ்வொரு முறைகளுக்கும் தத்துவ மையம் கொண்டே சகல நிலைகளையும் உணர்த்தினார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்படிப் பல முறைகளை உணர்த்தியும் வாழ்க்கை என்ற சுழலிலிருந்து ஞானம் பெறவும் அதற்குகந்த ஜெப முறையை வழிப்படுத்தியதை எல்லாம்
1.“அதற்குகந்த காலங்கள் வரட்டும்…!”
2.இப்பொழுது வாழும் இந்த வாழ்க்கை நிறைவுக்குண்டான வழி செயல் முற்றுப் பெற்ற பிறகு தான்
3.ஞான வழிக்கு நம் ஜெப நிலை செல்ல வேண்டும் என்று கால நிலையைக் கடத்தி
4.அதற்குகந்த காலத்தை ஏற்கும் நாளை எண்ணியே வாழும் காலத்தையே கடத்திவிடுகின்றனர்.

பசிக்கு உண்ணுகின்றோம். ஆனால் அதற்குகந்த காலம் வரட்டும் என்று காத்திருப்பதில்லை பசிப்பவன்…! அதே போல் எந்தச் செயலில் இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும்
1.நம் உடலிலிருந்து வெளிப்படும் கழிவை வெளிப்படுத்த
2.அதற்குரிய “காலம் வரட்டும்…” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…?

உடலில் உள்ள அமிலத்தை உண்டு… கழித்தே… வாழும் நாம் அந்த உடலுக்குகந்த உயர் குணமுடைய அமில ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டி… வரும் நாள்.. என்று எண்ணிக் கடத்தி வருகின்றோம்.

இதனை உணர்த்தத்தான் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்திச் சாந்த குணத்தின் சக்தி அமிலத்தை ஈர்க்கும் ஜெப நிலையைப் பெறுங்கள் என்று சொல்கிறோம்.

அன்பு ஆசை என்ற பிணைப்பான நிலைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதி அன்பினால் வரும் வினையையும்… அதி ஆசை கொண்ட பேராசைக் குணத்தையும் வழிப்படுத்திடாமல்
1.இந்தத் தீய குணத்தின் ஆணிவேரை முதலில் சமப்படுத்தும் பக்குவத்தை ஏற்று
2.நம் ஆத்ம ஜெபம் இருந்திடல் வேண்டும்.

ஆண்டவனின் அன்பைப் பெற “அன்பே தெய்வம்.. அன்பே சத்தியம்…!” என்ற அன்பு வெறிக்கு அடிமைப்பட்டாலும் நம் ஆத்ம நிலை உயருவது கடினம்.

நம் எண்ணமெல்லாம்…
1.இந்த உலகுடனும் கலந்துள்ள அலையில் உள்ள
2.நல் அலைகளை மட்டும் சேமிக்கும் பழக்கத்தைத்தான் மேற்கொள்ள வேண்டும்.
3.தீய அணுக்கள் என்று ஒதுக்கியும் வெறுத்தும்
4.”நான் நல்லவன்…” என்ற ஒரே வெறி கொண்ட நிலை பெற்றாலும்
5.நம் ஆத்ம நிலை வளருவது கடினம் தான்.

ஜெபம் பெறுங்கள்.. நல் உணர்வு பெறுங்கள்… என்றெல்லாம் வழிப்படுத்துகின்றோம். அந்த நிலையில் நம் எண்ணக் கலவை வழிப்படுத்திக் கொண்டு வரும் நிலையில்
1.நம்மை அறியாமல் பிறர் செய்யும்
2.அவர் எடுத்த அமில குணத்தை ஒத்த அலைகள் நம்மை மோதுண்ட நிலையில்
3.அதே சமயத்தில் மற்றொருவர் செய்யும் தவறை இவர் சுட்டிக் காட்டும் பொழுது
4.இவரின் நிலையான அமில மோதலின் நிலையால்
5.பல நாட்கள் நாம் நம்முடன் மோதுண்ட அலைகளை அடக்கிப் பழக்கப்பட்ட நிலையில்
6.மற்றோரின் சொல்லிலிருந்து வெளிப்படும் எந்தக் குண எதிர்நிலை மோதலும் நம்மைச் சாடி
7.”அதே உணர்வுடனே நம்மையும் பேசச் செய்யும்…!”

நாம் பெற்ற ஜெபத்தின் வலு என்ன ஆயிற்று…? எங்கே போனது…?

முதலில் நம் நிலையில் பிறரின் சொல் எண்ணத்தைக் கொண்ட அமிலத்திற்கு அடிபணியலாகாது. பல நாள் நமக்குகந்த குணமுடன் வாழ்ந்த நிலையில்
1.ஒருவர் வந்து மற்றொருவரின் மேல் சொல்லப்படும்
2.எந்நிலை கொண்ட சொல்லின் அமிலங்கள் நம்மிடம் சொல்லும் பொழுதும்
3.நாம் அவர் சொல்லும் நிலையை வைத்து… “நம் எண்ணத்தைச் சிதறவிடலாகாது…!” (இது முக்கியம்)

ஆத்ம ஞானம் பெறும் வழித் தொடரில் பல நிலைகள் உள்ளன.

ஒவ்வொரு தடவை நாம் சுவாச நிலை எடுத்து வெளிப்படுத்தும் நிலை கொண்டு “அதன் எண்ணத்தை ஒத்த அமிலத் தன்மை உராய்ந்து கொண்டே தான் உள்ளது…” என்பதனை உணர்ந்து நம் ஆத்ம ஞானம் இருந்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்குகந்த உயர் ஞானத்தைப் பெற இன்றைய கலியில் உள்ள ஆத்மாக்களில் வழி பெறும் பக்குவம் இந்த நாகரீக உலகில் மிகவும் குறைந்து விட்டது. இன்று உணர்த்தப்படும் முறையும் ஏற்கப்படும் வடிவிலில்லை.

1.தன் உண்மை நிலையைத் தான் உணர்ந்தால்
2.தன் உயிராத்மாவின் நிலை உயரும்… ஒளிரும்…! என்ற வழித் தொடர் பெற்றே ஜெப நிலை கொண்டிடுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பதிவாக்க வேண்டிய இடம்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது “வெறுமனே சொல்வதல்ல…”
1.ஓ…ம் என்பது நமது உயிர் உடலுக்குள் என்று இயங்கிக் கொண்டுள்ளது. அதற்குப் பெயர் ஓ…!
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சக்தி ம்… என்று நம் உடலுடன் ஐக்கியமாகின்றது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அந்த எண்ணத்தின் சக்தியை
1.உடலுக்குள் இருக்கும் எலும்பு – மேக்னட்
2.அதற்குள் இருக்கும் ஊன் ஊழ் வினையாகப் பதிவு செய்து கொள்கின்றது.

நாம் எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் நிலைகள் கொண்டு நாம் எண்ணக்கூடிய எண்ணத்தை நமது உயிர் ஜீவனாக்கச் செய்கின்றது.

அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் அந்தக் குணங்களும் நம் உடலிலேயே இயக்கப்பட்டு அது ஜீவன் பெறச் செய்வதற்கு மூலமாக இருப்பது நமது உயிர். அதற்கு குருவாக இருப்பதும் நமது உயிர் தான்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது உயிரை ஈஸ்வரனாகவும் அதே உயிர் நமக்குள் குருவாக பல உணர்வின் சக்திகளை நமக்குள் பதிவு செய்வதாக எண்ணி அந்த ஏக்க உணர்வு கொண்டே சொல்ல வேண்டும்.

ஒரு மைக்… நாம் பேசுவதை இழுத்துக் கவர்ந்து நாடாக்களில் பதிவாக்கப்படும் பொழுது
1.அதில் உள்ள முலாம்…
2.அதற்குள் மறைந்துள்ள காந்தம் எப்படி அது கவர்ந்து பதிவு செய்து கொள்கின்றதோ அதே போல
3.நாம் எண்ணும் பொழுது கண்ணின் நினைவலைகள் புற நிலைகளிலிருந்து அதைக் கவர்கின்றது.

அதே சமயத்தில் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அது கிளர்ந்து எழுகின்றது. அப்பொழுது காற்றிலிருந்து அந்த உணர்வுகளை உடல் கவர்ந்து தனது ஆன்மாவாக வைத்துக் கொள்கின்றது.

அப்படித் தனது ஆன்மாவாக ஆக வேண்டுமென்றால்…
1.நாம் எண்ணும் எண்ணம் ஊழ்வினையாகப் பதிவாக வேண்டும்
2.ஊழ் என்பது நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் எலும்புக்குள் ஊனாக இது பதிவாக வேண்டும்.
3.அப்படிப் பதிவானால்தான் நாம் எதை எண்ணுகின்றோமோ அது நினைவுக்கு வரும்
4.அந்த உணர்வின் நிலையை நாம் அறிய வேண்டியது வரும்.

நாம் எண்ணிய உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கும் பொழுது சுவாசித்த உணர்வுக்கொப்ப உயிரின் தன்மை அது இயங்குகின்றது. அதனால் தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

இப்பொழுது எதை உபதேசிக்கின்றேனோ… கூர்மையாகக் கவனிப்போர் உணர்வுகளில் ஊழ்வினையாக… வித்தாகப் பதிவாகின்றது. அப்படிப் பதிவாகி மீண்டும் நினைவுபடுத்தும் போது அந்த ஆற்றலை நீங்கள் பெற முடியும்.

எந்த மகரிஷிகளின் சக்திகளையோ அல்லது சப்தரிஷி மண்டலங்களின் ஆற்றல் மிக்க உணர்வலைகளையோ…
1.குருநாதர் கூறிய அருள் வழிப்படி நான் எண்ணிச் சுவாசித்து
2.அதனை ஊழ்வினையாக எனக்குள் பதிவு செய்ததை மீண்டும் நான் நினைவுக்குக் கொண்டு வந்து
3.விண்ணின் ஆற்றலை எனக்குள் பெருக்கி அதைச் சுவாசித்து
4.அந்த உணர்வின் எண்ண ஒலிகளாக வெளிப்படுத்துவதை இப்பொழுது நீங்கள் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால்
5.அந்த உணர்வின் சத்து ஊழ்வினையாக உங்களுக்குள்ளும் பதிவாகிறது.

அந்த ஞானிகள் மனிதர்களாக இங்கே வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குள் அறியாது வந்த தீய வினைகளை… சில தீய விளைவுகளை… அவர்கள் மாற்றி உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்.

அவர்கள் எப்படி அருள் வழியில் வாழ்ந்தார்களோ அவர்கள் பெற்ற ஆற்றலை நாமும் பெற முடியும் அதைப் பெறச் செய்வதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டுப் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டுப் பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்

 

புண்ணிய ஸ்தலம் என்பது கோவில்கள் தான்…!

1.அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உள்ள மூலவர் உருவினிலே
2.அந்த ஸ்தலத்தை நினைத்து எங்கிருந்தாலும் எவன் ஒருவன் வேண்டுகிறானோ
3.அந்நிலைக்கு அவனுக்கு அருள் புரிகின்றான் அந்நிலையில் அமர்ந்துள்ள மகான்.

புண்ணியம் எய்தி… பிறந்த பயனை தன் ஜெப நிலையால் தன் நிலையை ஜோதி நிலையாக்கி… அவன் ஸ்தாபிதம் செய்த சிலையில்… தன் ஜீவனை அந்த சிலையின் ஜீவனாக்கி… எண்ணுபவர்களுக்கெல்லாம் அவ்வெண்ணத்தின் வழியினிலே வழியமைக்கின்றான் அந்த மகரிஷி ஜோதி நிலையில்…!

ஆண்டவன் என்பவன் யார்…? என்று பல முறை கேட்டுள்ளேன், ஆண்டவன் என்பது இப்பொழுது புரிந்ததா…?

இறப்பும் பிறப்பும் அவனவன் செய்த கர்ம பயனால் வருவது தான்…! எமனும் வரவில்லை… காலதேவனும் வரவில்லை…! என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

அவனவன் பிறப்பையும் இறப்பையும் அவன் வழியில் உள்ள அவனுள்ளே உள்ள சக்தியின் பயனைப் பெற்றுத்தான் பிறக்கின்றான்… இறக்கின்றான்.

சுவாச நிலையில் தான் வியாதிகள் வருகிறது. அவன் வாழ்க்கை முறையில் உள்ள சுவாச நிலையும் அவனுக்கு வித்திட்டு வியாதியைப் பெருக்கச் செய்கிறது.

1.எண்ணத்தின் பயத்தினால் தான் வியாதி முற்றி
2.அச்சுவாச நிலை பெரும் மாறுபட்டு அந்த அழுகும் தன்மையுள்ள உடலில்
3.அவன் உடலில் உள்ள சிறு சிறு நல்ல அணுக்களும் அவனைக் காத்து வந்த நிலையை மாற்றி அந்த அணுக்களும் அழுகி
4.பெரும் வேதனையில் உள்ள அவன் விடும் சுவாச நிலை அவனையே அழிக்கின்றது பெரும் பயத்தினால்..!

அந்த நிலையில் அவ்வுயிர்… அவனுள் இருக்கும் அவ்வுயிர் சலிப்புடன் அவன் உடலை விட்டு ஆவி உலகம் செல்கிறது. அந்த ஆவிகள் தான் பிறகு (அடுத்த பிறவியாக) பிறக்கின்றது.

“எண்ணம் போல் வாழ்வு…!” என்றார்கள் பெரியவர்கள். எண்ணத்தை எண்ணத்தின் எண்ணம் எல்லாம் அவன் விடும் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

பெரும் வேதனை உள்ள மனிதன்…
1.தன்னுள் இருக்கும் ஈசனை நினைத்து “ஈஸ்வர தியானம்” செய்து
2.தான் செய்த பாவ புண்ணியங்களை மறந்து… எப்படியும் வாழ வேண்டும்…
3.ஒரு நிலையில் வாழ வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்…! என்று
4.தன் எண்ணத்தினுள்ளேயே எண்ணிக் கொண்டு அவன் விடும் சுவாச நிலைக்கு அந்தச் சக்தியின் அருள் கிட்டுகிறது.

எண்ணத்தில் சலிப்பு வந்தவனுக்கு வாழ்ந்து என்ன பயன்…! என்ற நிலையில் அந்தச் சுவாசத்தை எடுத்துச் சுற்றுபவனுக்கு அந்த எண்ணமே தான் சுற்றுகிறது அவன் உடலில்.

அந்த எண்ணம் போல் தான் அவன் விடும் சுவாச நிலையில் சுற்றுகிறது அவன் எண்ணம். அந்நிலையே தான் அவனுக்கும் வருகிறது.

எண்ணத்தில்தான் குழந்தை பிறப்பிலிருந்து அதன் எல்லா நிலைகளிலுமே எண்ண வடிவில்தான் அதன் வாழ்க்கையே அமைகிறது.

முடிவில்லா இந்த உலகில்… முடிவில்லா உடலுடன்… “மூவுலகை ஆட்டி வைக்கும் அச்சக்தியைப் பெற்றிட…” இந்த உலகில் உதித்த ஒவ்வொரு உயிரும் காலம் சுற்றும் நிலை போல் அந்நிலை எய்திட முடியும்.

பல பிறவிகள் மாறுபட்டு ஆவி உலகில் படும் அவஸ்தையிலிருந்து விடுபட்டு… ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்திடலாம்… வாழ்ந்திடலாம்.. பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.

முடிவில்லா உலகைப் போலவே முடிவில்லாமல் வாழ்ந்திடலாம்…!