பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

 

சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே குடும்பத்தில் எதிர்பாராது பல நிலைகள் ஆகி அதனால் வேதனையாகும் பொழுது கோபமும் எரிச்சலும் சிறுகச் சிறுக விளைந்து… உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள்” அதிகமாக இயங்க ஆரம்பிக்கும்.
1.எந்த அளவுக்கு வேகத் துடிப்பின் உமிழ் நீர்கள் சுரக்கின்றதோ
2.அந்த வேகத் துடிப்புக்கொப்ப பித்தம் அதிகமாகும்.

ஆகாரத்தை எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் இயங்கி அதை ஜீரணிக்க செய்யும். ஆனால்
1.அதிகமான பித்தமானாலோ மந்தமாக்கிவிடும். அதே சமயத்தில் வாய் உமட்டல் வந்துவிடும்
2.பசி அதிகமாகும் ஆனால் ஆகாரம் அதிகமாக உட்கொள்ள முடியாது.

இத்தகைய உணர்வு உடல் முழுவதும் பரவி… கார உணர்ச்சிகளும் கூடி அதை இந்த பித்த சுரப்பிகள் எடுக்கப்படும் பொழுது “நமது நாடி நரம்புகள் அனைத்தும் பலவீனப்படச் செய்யும்…”

அதே சமயத்தில் எதையாவது ஒரு தொழில் செய்வோம் என்றால்
1.கடினமான சாமானைத் தூக்கினால் திடீரென்று கண் கட்டும்… கீழே விழுகச் செய்யும்.
2.அதே சமயம் உட்கார்ந்து எழுந்தாலும் கண் கட்டச் செய்யும்.

ஏனென்றால் இந்தப் பித்தத்தின் சுரப்பிகள் நமக்குள் அதிகமாகும் பொழுது… கடைசியில் இரத்தக்கொதிப்பும் பக்கவாதங்களும் வந்து விடுகிறது.

ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை உயிர் இயக்கிக் காட்டுகின்றது. நாம் எதைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் உண்மையை… “குடும்பத்திலே இப்படிச் செய்கின்றார்கள்…” என்று அந்த உணர்வினைக் கண் இழுத்துக் காட்டுகின்றது.

அந்த உணர்வினை உயிர் இயக்கிக் காட்டிப் பொருளறியச் செய்கின்றது… அறியச் செய்தாலும்… நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக ஐக்கியமாகி விடுகிறது.

இவ்வாறு உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை… இவை அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய திறன் மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு.

அதைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வந்தது போல இந்த உணர்வின் தன்மை நம்மை அறியாமலே இயக்கி வேதனை கொண்ட உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கி விடுகிறது.

வாதமோ இரத்தக் கொதிப்போ ஆகிவிட்டால் அதே சமயத்தில் பித்த சுரப்பிகள் அதிகமாகும் பொழுது பசியின் கொடுமை அதிகமாகும். வாத நோய் வந்தவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்கும் பசியின் ஏக்கம் அதிகமாகும்.

1.பசி எடுத்தவுடன்… ஆகாரம் உடனே கொடுக்கவில்லை என்றால் மிகவும் கோபம் வரும்
2.யார் அவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களை ஏச வேண்டிய நிலையில் வெறுக்கும் நிலையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

அந்த வெறுப்பான உணர்வு கொண்டு வேகமாகக் கேட்கப்படும் பொழுது அவர்கள் உணவு உடனே கொடுக்கவில்லை என்றால் அவருடைய எண்ணம்…
1.“இப்படிச் செய்கின்றார்களே…
2.நான் சம்பாரித்துக் கொடுத்தேனே…
3.தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யவில்லையே என்ற இந்த உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வுடன் ஏங்குகின்றாரோ இந்த உணர்வின் ஆற்றல் அவர் உடலுக்குள் சென்று விடுகின்றது. உடலை விட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பண்புடன் உதவி செய்திருந்தாலும்… நேரத்தில் தனக்கு உபகாரம் செய்யவில்லை என்ற இந்த உணர்வு தான் உந்தப்படுகிறது.

அந்த உணர்வின் வேகத்தில் அவர் மேல் எடுத்துக் கொண்ட வெறுப்பான உணர்வுகள்… பதிலுக்கு அவர்களும் வெறுப்பாகச் சொல்லும் பொழுது வெறுப்பான உணர்வுகளைப் பாய்ச்சி… பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பும் நம்மைப் பார்க்கும் பொழுது வெறுப்பும்… இப்படி வெறுப்புகள் தோன்றி இந்த உணர்வுகள் விளைந்து உடல் நலிவடைந்து விடுகிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா… யார் மீது வெறுப்பானதோ அவர் உடலுக்குள் தான் செல்லும்… இதே நோயின் கொடுமையை அங்கேயும் உண்டாக்கும்.

Leave a Reply