நாம் எல்லோரும் நல்லவரே…!

நாம் எல்லோரும் நல்லவரே…!

 

பத்திரிக்கை வாயிலாக இன்று நாம் படிக்கப்படும் போது எங்கெங்கோ நடந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியான செய்திகளைப் படிக்க நேருகின்றது.

அதில் எண்ணத்தைக் கூர்ந்து செலுத்தி விட்டால்… எங்கேயோ விபத்தானதைப் படித்தறியப்படும் பொழுது அந்த உணர்வு நமக்குள் சேர்த்து… உடனே அதிர்ச்சி… அல்லது பயம்… அல்லது வேதனை… இது போன்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை. உலகத்தை அறிந்து கொள்ள நாம் படித்தாலும் இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி விடுகின்றது.

எதை நாம் படித்துத் தெரிந்து கொண்டோமோ அந்தச் செய்திகள் ஊழ்வினையாகப் (வித்துக்களாக) பதிவாகின்றது. அவ்வாறு படித்து நுகர்ந்து
1.எத்தனையோ பேர் வெளியிட்ட உணர்வலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நமக்கு முன் சுழன்று கொண்டே இருக்கின்றது.
2.அதை மீண்டும் எண்ணும் பொழுது நமக்குள் பதிவான அதே நிலைகள் அலைகளாக மீண்டும் குவித்து நம்மை உணரச் செய்கின்றது
3.சாதாரண ஆண்டென்னாவின் இயக்கம் போல (அருகிலிருப்பதை இழுத்து) அந்தந்த உணர்ச்சிகளாக இயக்கி நம்மைச் செயல்படுத்தி விடுகின்றது.
4.ஆக… எந்த வேதனையைப் பட்டோமோ அந்த வேதனைகளை விளைவிக்கும் தன்மையாக வந்து விடுகிறது.

ஆக… உலகை அறிந்து கொள்ள நாம் பத்திரிக்கையைப் படித்த்தாலும் நடந்த சம்பவங்களை அறிந்து நுகரப்படும் பொழுது தீய விளைவுகளாக நமக்குள் வந்து நோயாக உருவாகி விடுகின்றது.

தவறான செயல்கள் எதை எல்லாம் செய்தார்களோ… “அங்கே அடித்தான் இங்கே திருடினான் இங்கே கொலை செய்தான்…” என்று
1.தன்னைக் காத்திட இத்தகைய செயலைச் செய்தார்கள் என்று உணர்வின் நினைவலைகள் நமக்குள் பதிவான பின்
2.அதையே திரும்பத் திரும்பப் படிக்க நமக்குள் அதுவே விளைந்து
3.எந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று நினைக்கின்றோமோ அதை நம்மையும் செய்யும்படி வைத்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை எடுத்து அதைத் துடைக்க வேண்டும் அல்லது தடுத்து நிறுத்த வேண்டும்.

குருநாதர் எனக்கு எவ்வளவு பெரிய சக்தியை உணர்த்தினாரோ அதனின் உணர்வின் ஆற்றலை நான் பருகி அவரைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அந்த உணர்வுகள் ஊழ்வினையாக எனக்குள் (ஞானகுரு) பதிவானது.

அவரை நினைவு கொள்ளும் பொழுதெல்லாம்… அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை நுகர்ந்து அந்த உணர்வை எனக்குள் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

நீங்கள் துயரத்துடன் எம்மிடம் வரும் போது “உங்கள் துன்பம் நீங்கிப் போகும்…” என்று சொல்லால் சொல்வதை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து அதை மீண்டும் நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்றால் அந்தத் துன்பங்கள் நீங்கி மெய் ஞானிகளுடைய உணர்வு உங்களுக்குள் விளையத் தொடங்குகிறது.

ஒவ்வொரு நிமிடத்திலும் துன்புறும் உணர்வுகளை குருநாதர் எனக்குள் பாய்ச்சி அந்தத் துன்பப்படுத்தும் உணர்வுகளை நீக்குவதற்காக “விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…?” என்று உபதேசித்து அதனின் அனுபவபூர்வமான செயல்களை ஊட்டினார்.

அதனின் பக்குவம் கொண்டு நான் எடுத்துக் கொண்ட நிலையில் தான் 20 வருட காலம் அனுபவ ரீதியாக உலகைச் சுற்றி வந்தேன்.
1.மூன்று லட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அவருடைய உணர்வுகளை அது எவ்வாறு இயங்குகின்றது…? என்றும்
2.எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்கள் எதன் வழி எப்படி அவதிப்படுகிறார்கள்…? என்ற நிலையினை உணரும்படி செய்தார்.

அதே சமயத்தில் விஞ்ஞான அறிவால் விஞ்ஞானிகள் எப்படி பிறரை (ஆன்மாக்களை) நஞ்சு கொண்ட நிலைகள் கொண்டு இயக்குகின்றார்கள்…? அந்த ஆன்மாக்கள் எப்படிப் பதை பதைக்கின்றது…!

எதை அழித்திடும் உணர்வாகச் செலுத்தி விஞ்ஞானத்தைக் கண்டு கொண்டானோ அதனால் பாதிக்கப்பட்ட ஆன்மாக்கள் (விஞ்ஞான அறிவு கொண்டு செயல்பட்ட உயிரான்மாக்கள்) இறந்து… அதன் வழியில் விஞ்ஞான அறிவில் இவன் முன்னேறினாலும்
1.துன்புறுத்தப்பட்டு இறந்தவர்கள்… நஞ்சு கொண்ட ஆன்மாக்களாக எவ்வாறு உலகில் படர்ந்து கொண்டிருக்கிறது…? என்பதை
2.அனுபவ ரீதியிலே தெரிந்து கொள்வதற்காக குருநாதர் உலகம் முழுவதும் சுற்றும்படி சொன்னார்.

அதிலே பெற்ற அனுபவங்களைத் தான் உங்களுக்கு இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகின்றேன். இதை நீங்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் உயிருடன் என்றும் அழியாத நிலையில் வாழலாம்

 

நீ வணங்கும்
1.முருகா என்னும் போகரும்…
2.ஈஸ்வரா என்னும் ஈஸ்வரபட்டரும்…
3.வெங்கடாஜலபதி என்னும் பாலாஜி உருவில் வந்த பல கோடி நாமங்கள் பெற்றிட்ட கொங்கணவரும்…
4.கொங்கண மகாதேவரும்… சித்தர்களும் ஞானிகளும்…
5.உன் அறிவுக்கு எட்டாத இந்த உலகில் எல்லாப் பாகங்களிலும் தோன்றி இந்நிலையில் இருக்கும் சித்தாதி சித்தர்களும் ஞானாதி ஞானியர்களும்
6.ஞான ரிஷிகளும் சப்தரிஷிகளும் அருள் சக்தி பெற்று சூட்சம உலகில் ஒளியாக வாழுபவர்கள் தான்…!

அவர்களின் நல் உபதேசத்தைப் பெற்றவர்கள் மற்றவர்கள் நிலைக்குப் புரிந்திடச் செய்திடாமல் சில உபதேசங்களை மட்டுமே மனிதர்களுக்குப் புகட்டினர்.

1.உண்மையின் உயிர் இரகசியத்தை இந்த உலக மக்களுக்குப் புரிந்திடச் செய்யாமல்
2.ஒருவர் எழுதியதைப் பிறிதொருவர் மாற்றி எழுதி
3.தன் தன் ஜீவ வழிக்குப் பொருள் பெற்றிட
4.உலகத் தன்மையையே மறைத்துவிட்டார்கள்… மாற்றிவிட்டார்கள்.

ஜெப நிலை (தியானம்) என்றாலே பெரும் கடினமானது…! என்றும் எல்லோராலும் அதைப் பெற்றிட முடியாது…! என்ற ஒரு கடினத் தன்மையை மனிதர்களின் மனதிலே ஊன்றச் செய்து விட்டனர்.

சாதாரண வாழ்க்கை வாழும் மனிதனால் அது சாத்தியமில்லை என்ற அளவுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

ஆண்டவன் என்றாலே “யார்” என்று புரியாத நிலையில் தெருவின் மூலைக்கும் ஆற்றுப் படுகையின் படிகளில் எல்லாம்
1.அரச மரத்தை நட்டு விநாயகர் என்ற உருவத்தைப் பதித்து
அரச மரத்தைச் சுற்றினால் அருள் பெற்றிடுவாய்…! என்ற வேதத்தை ஊன்றிவிட்டார்கள்.

கடவுள் என்றாலே கல் தான்…! கல் என்ன செய்யும்..? என்ற நிலையில் கடவுள் இல்லை…! என்று ஒரு சாரார் நம்பும்படிச் செய்து விட்டார்கள்.
1.கடவுளைச் சென்று வேண்டுபவர்களும்
2.தன்னுள் தான் கடவுள் உள்ளான்…! என்பதை மறந்து விட்டனர்.

முருகனுக்கு இரண்டு மனைவிகள். மூத்தவள் வெள்ளை இளையவள் கருப்பு. முருகனுக்கே இரண்டு மனைவிகள் உள்ள பொழுது எனக்கு மட்டும் ஏன் தடை…! என்ற வாதங்களைப் பல ரூபத்தில் எழுப்பிக் கொண்டுதான் அந்தக் கடவுளையே வேண்டுகிறார்கள்.

தன்னுள் இருக்கும் கடவுளையே மறந்து அவன் முன்னோர்கள் கதை கட்டிய கடவுளைத் தான் வணங்குகிறார்கள்… தன் வழிக்கு உகந்தபடி…!

புரிகிறதா…?

1.முருகனின் மூவுலக அருளையே மறந்து..
2.அவன் உருவில் உள்ள ஆறு குணங்களையும் மறந்து…
3.முருகனுக்குப் போகரின் வழியில் அளித்திட்ட உருவ அமைப்பையே
4.எந்நிலைக்கு அந்த உருவை அப்போகர் நிறுவினார்…? என்ற நிலையையே மறந்து…
5.தன் வழிக்குப் பல கதைகளைச் சொல்லித் தெருத் தெருவாக முருகன் கதையைப் பெரும் கூத்தாக்கிவிட்டார்கள்.

இக்கலியில் வந்த இக்கலியின் மனிதர்கள்… “இவர்கள் நிலையே இவர்களுக்குப் புரியவில்லை…!” அழியும் உடல்… அழியும் உடல்… என்கிறார்கள். அழியும் உடலல்ல இவ்வாண்டவன் அருளிட்ட இந்த உடல் எல்லாம்.

உலகத் தன்மை அழிவதில்லை. பல நிலைகளைத் தான் இந்த உலகம் பெறுகிறது. உலக நிலையில் மாறுபட்டு மாறுபட்டுச் சுற்றிக் கொண்டே வருகிறது உலகம்.
1.உலகம் என்றென்றும் அழிவதில்லை…
2.காலங்கள் தான் அழிகின்றன… கால நிலைகள் அழிகின்றன.

அழியாத இந்த உலகம் பல அவதாரங்களை மாற்றிக் கொண்டே முதலில் ஆரம்பித்த நிலைக்கே வருகிறது. பிறகும் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டே சுற்றிக் கொண்டு வருகிறது.

அச்சூரியன் நிலை என்று அஸ்தமிக்கின்றதோ அன்று தான் இந்த உலகம் அழியும்… உயிரணுக்களும் அழியும்… மனிதனும் அழிவான்…!

ஒவ்வொரு மனிதனும் சுவாச நிலை என்ன…? என்று புரிந்திட்டால் இவ்வுயிருடனே என்றுமே அழியாத நிலையில் வாழலாம். அதற்குத்தான் இந்தப் பாட நிலைகள் எல்லாமே…!

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

“விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!”

“விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!”

 

காட்சி:- சிறிய குன்றிலிருந்து பெரிய குன்று, பின் சமமாக இருத்தல்…!

1.உன் ஜெப நிலையில் இப்பொழுது பல நிலைகளைக் கலக்கச் செய்துள்ளாய்.
2.உன் வாழ்க்கையில் நடப்பது தான் உன் நினைவில் வருகிறது.
3.அந்நினைவைத் தியானத்தில் அமரும் பொழுது மறக்க விடுவதில் என்னப்பா பலன்…?

தியான நிலையிலும் அந்நிலையே தான் சுற்றுகிறது. இதற்கும் ஒரு வழி வேண்டும். இனி தியானத்தில் அமரும் பொழுது
1.வாழ்க்கையில் வரும் எல்லாச் சம்பவங்களையும்…!
2.உன் உடலில் உள்ள ஆத்மலிங்கத்திடம் (ஈசனிடம்) சமர்ப்பித்துவிடு…
3.ஆத்ம லிங்கத்தை உன் ஜெபத்தில் கண்டிடுவாய்.

பல சித்தர்களையும் ஞானிகளையும் ரிஷிகள் நிலையையும் செப்பிவிட்டேன். இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்.

பல வாக்குவாதங்களைப் பேசிய மனிதர்கள்… அந்த மனிதர்களின் அவச் சொல்லுக்குப் பயந்துதான் தீட்சண்ய வார்த்தைகளுக்குப் பயந்து தான் “விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை..!” என்று அந்நிலையில் விட்டுவிட்டார்கள்.

இந்த உலகில் உள்ள சக்தியின் சொரூப நிலையைக் கண்டவர்கள் உண்மை நிலையைச் செப்பிட்டால் எற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லையப்பா…! விதண்டவாதம் பேசிய நாடப்பா இது

தவயோகிகள் முனிவர்கள் பல நாள் தவமிருந்து பெற்ற பலனையே மனிதர்கள் உணர்ந்திடவில்லை. தன்னுள்ளே அமிழ்த்திக் கொண்டு
1.ஜடப் பொருள் உருவில் தான் தியானித்துக் கொண்டுள்ளார்கள்.
2.இதனால் என்னப்பா பயன் இந்த மானிடருக்கு…?

போகரின் நிலையிலிருந்து முருகனின் வழியில் உணர்த்துகின்றார். முருகனின் வழியில் குணாதிசயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறுமுகா என்ற ரூபத்தில் அந்நிலையில் அண்டி வருபவர்களுக்கு எல்லாம் ஆறுதலை அளிக்கின்றார். பிறந்த பிறப்பின் பயனை… பிறவி எடுத்த நாள் முதல் கொண்டே இந்தப் பூவுலகுக்கு அருள் மழையாகப் பொழிகின்றார். இந்தப் பூவுலகம் உள்ள வரை பூ மழையாகப் பூரித்தே பொழிவார்.

கொங்கணவரின் வழியில் எடுத்துக் கொண்டால் மனித உடலுக்குச் செல்வச் செழிப்பை அவர் நிலையிலிருந்து அளித்திடுகிறார்.

செல்வத்தின் நாயகனப்பா அந்தக் கொங்கணவர். அவரின் நிலை அவர் தியான முறை எல்லாமே இந்த மனிதர்களுக்குப் பொருள் இருந்தால் பொங்கிச் சிரிப்பர் என்ற நிலைக்குத் தன் தியான நிலையையே அச்சக்தியின் சொரூபத்திலிருந்து தன் வழிக்குப் பல அருள்களை அருளியுள்ளார்.

நமக்குத் தெரியவில்லை என்றாலும் எண்ணிலடங்கா மகரிஷிகள் இன்றும் பூமியின் தொடர்பு கொண்டு மக்களை ஞானத்தின் பாதையில் வழி நடத்தச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
1.வாழும் காலத்தை வீணடிக்காது அவர்கள் அருள் சக்திகளைப் பெற்று
2.அவர்கள் துணையுடன் இந்தப் பிறவிக் கடலை நீந்தி விண்ணுலகம் செல்ல வேண்டும்.
3.இதுவே நம் பிறப்பின் இலட்சியமாக இருத்தல் வேண்டும்.

நான் – தான்… நீ – நான்… நான் – நீ…!

நான் – தான்… நீ – நான்… நான் – நீ…!

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டு அருள்வாய் ஈஸ்வரா…! நீ ஒளியாக இருப்பது போன்று என் உணர்வின் நினைவலைகள் அனைத்தும் ஒளியின் சுடராக வரவேண்டும்.

1.அந்த நினைவின் அலையாக நீயாக… நானாக வேண்டும்
2.நான் நீயாக வேண்டும் என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு பாடுவதுதான்
3.கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா என்பது.

நீ (உயிர்) எப்படி ஒளியாக இருக்கின்றாயோ… உணர்வின் தன்மை உனதாக இருக்க வேண்டும்.
1,எனதின் நிலைகள் உனதாக இருக்க வேண்டும்
2.உனதின் நிலைகள் எனதாக இருக்க வேண்டும்
3.நீ நானாக இருக்க வேண்டும்…! என்ற இந்த நிலையை எண்ணுவதற்குத் தான் “ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்பது,

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா…! ஆதியிலே விஷம்… விஷமற்ற நிலைகளில் தாக்கப்படும் பொழுது அது இயக்கமாகி சூடாகி அதனின் உணர்வு கொண்டு அது இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!

வெப்பம் பராசக்தி ஆகிறது… காந்தம் லட்சுமி ஆக மாறுகின்றது… இந்த விஷம் அதற்குள் “கருமாரியாக நின்று” அது இயக்கச் சக்தியாக அணுவாகின்றது.

இந்த இயக்கத்தைப் போலவே “நம் உயிருக்குள் நஞ்சின் தாக்குதல் தாங்காது இயக்கச் சக்தியாக ஆகி சூடாகி… அந்த உணர்வின் ஈர்ப்பு சக்தியாகி…” தன் உணர்வின் சக்தியை இந்த உடலை உருவாக்கும் உயிராக இருக்கின்றது என்பதைத்தான் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா குருதேவா உயிர் கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்பது.

1.நஞ்சின் இயக்கமாக
2.துடிப்பின் இயக்கமாக
3.உயிரின் இயக்கமாகி
4.உயிரின் இயக்கம் வெப்பமாகி
5.நாம் எண்ணிய நிலைகள் காந்தமாகி
6.அதனை இணைத்து நாம் படைக்கும் திறனாக
7.என் உயிராக எனக்குள் இருந்து இயங்கும் நிலை என்பதை உணர்த்தச் செய்வது…
8.நான் யார்…? என்ற நிலையை இந்த உயிரின் இயக்கமாகத்தான் நானாகின்றேன் (இதை இணர வேண்டும்).

“அந்த நானின் தன்மை விளைந்து” (அந்த உணர்வின் தன்மை) அதுவே தானாகின்றது. தானின் நினைவு உணர்வு ஆகும்பொழுது ஒளியாகின்றது
1.நான் தானாக வேண்டும்
2.தான் நானாக வேண்டும் என்ற நிலையில்
3.இதைப் போன்ற ஞானிகள் காட்டிய அருள் வழியினைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பாடுவது “உயிரை நினைத்து…”

என் நினைவை எங்கெங்கோ அலைய விட்டு என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றுமே இருந்துவிடு ஈஸ்வரா.

இந்த உயிரின் தன்மை… உயிர் ஒளியாக இருப்பது போன்று
1.என்றும் நான் ஒளியான நிலைகளாக
2.உன்னுடன் ஒன்றியே நான் ஒளியின் சரீரமாக
3.நான் நீயாக வேண்டும் நீ நானாக வேண்டும்.

ஒளியின் சிகரமாக… நான் தானாகித்தான் நானாகி… அந்த நிலைகள் கொண்டு இந்த உடலின் தன்மை பெற்றாலும்… “என்றும் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது…” நீ நானாகி… நான் நீயாக வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை குரு காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) வேண்டுகின்றேன்.

உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்ற நினைவு கொண்டு அந்த நிலையான ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற இந்த பாடலின் நோக்கத்தை
1.நாம் பரிபூரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்கள் உயிரை வேண்டி
2.அதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

தியான நிலையையும்… சுவாச நிலையையும்… “ஒன்று தானப்பா…!”

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நாள் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும்… நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

“ஈசனின் சக்தியையே” தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்…! புரிந்ததா…?

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம்… புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

நம் ஆன்மாவில் நடக்கும் “சில விசித்திரங்கள்”

 

துன்பப்படும் உணர்வுகளை ஒருவர் பேசுகின்றார் என்று கேட்டறிகின்றோம். அப்போது அவர்கள் வேதனைப்படும் சொல் உணர்வுகளாக நமக்குள் படர்ந்துவிடும்.
1.வேடிக்கையாகத் தானே கேட்டோம்… அவர் சொன்னதைக் கேட்டறிந்தோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
2.ஆனால் அவர்கள் பட்ட வேதனையான உணர்வுகள் நமக்குள் கலந்து
3.அந்த உணர்வின் மணம் ஆன்மாவில் சுழன்று கொண்டு தான் இருக்கும்.

உதாரணமாக அந்த நேரம் ரோட்டிலே நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முன் பார்வையில் வரக்கூடியதை எல்லாம் நம் கண் காட்டும். அதை இழுத்து நமக்குள் நுகர்ந்து அந்த உண்மையான பாதையில் நம்மை வழி நடத்துகின்றது கண்கள்.

இருந்தாலும் துன்பப்டுவோர் சொன்ன அந்தச் சம்பவத்தைக் கேட்டு… நுகர்ந்து எடுத்த அந்த மணமும் நம் உடலில் இருக்கக்கூடிய இந்த மணமும் கலந்து செல்லும்.

முதலில் கேட்டறிந்த வேதனையான உணர்வுகள் கலந்து ரோட்டில் செல்லும் பொழுது…
1.கண்ணுக்கு நேராகத் தெரியக்கூடியதைப் பார்க்க முடியாதபடி
2.அந்த சமயத்தில் சிந்திக்கும் திறன் இழந்து விடுகிறது.

ஒரு பாலிற்குள் அறியாது ஒரு நஞ்சு பட்டால் அதைச் சாப்பிட்டால் எப்படி மயக்கம் வருகின்றதோ அதைப் போல கேட்டறிந்த இந்த உணர்வுகள் நம் உடலில் ஆன்மாவாக… வாசனையாக இருக்கப்படும் பொழுது… கண் முன்னாடி வரக்கூடிய பொருளைக் காண்பித்து இதனுடன் இணைந்து போன உடனே “சிந்திக்கும் திறன் இழந்து விடுவோம்…”

அந்த சமயத்தில் முன்னாடி வண்டி வரும்… சீக்கிரம் விலகி விடலாம் என்ற எண்ணம் வராது. பஸ் வரும்… தெரியாது…!

சில பேரை நீங்கள் பார்க்கலாம் வண்டி வந்து கொண்டிருக்கும்… அது தெரியாது முன்னாடி போய்க் கொண்டே இருப்பார்கள். பஸ்ஸிலையோ காரிலேயே போகும் பொழுது இது போன்று நாம் பார்க்கலாம்.

முன்னாடி பார்ப்பார்கள்… ஆனால் நடந்து கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் முதலில் பார்த்தது வேடிக்கையானதாக… வேதனையான உணர்வுகளைக் கேட்டறிந்தாலும் அந்த மணம் இங்கே வந்துவிடுகிறது.
1.பஸ் மிகவும் அருகிலே வந்த பின் தான் ஆ…! என்று பயந்து துள்ளிக் குதித்து ஓடுவார்கள்… பார்க்கலாம்
2.சில நேரங்களில் கவலை தோய்ந்த நிலையோ வேதனைப்படும் நிலையோ கேட்டறிந்தால் நாமும் இப்படித்தான் நடப்போம்.

நாம் தவறு செய்யவில்லை… அவர்… தான் பட்ட கஷ்டத்தைச் சொன்னார் அதைக் கேட்டோம். நம்மை அறியாமலே ஒரு நொடி ஏமாந்தால் விபத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

மற்ற கோள்கள் சந்திரனை மறைக்கப்படும் பொழுது அங்கே எப்படி ஒளி மங்குகின்றதோ இதைப் போல
1.நமக்குள் இருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மையை
2.ஒவ்வொரு எண்ணத்திலும் “சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்டது” இப்படி மறைத்து விடுகின்றது.

அதனால் தப்பித்துக் கொள்ளும் நிலை இல்லாதபடி இதிலே சிக்கி எத்தனையோ பேர் வேதனைப்படுவரையும் பார்க்கலாம்.

நமக்குள் “1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு” அவை தான் மனிதனை… மனிதனாக உருவாக்கச் செய்தது மனித வாழ்க்கையில் தன்னைக் காத்திடும் நிலையும்… மனிதனாக ஆன பின் இந்த உடலையே ஒளிச் சரீரமாக மாற்றி பிறவா நிலையை உருவாக்கும் “மனித உடல் – கடைசி…”

உதாரணமாக சூரியன் பிரகாசமான நிலையில் ஒளி வீசிக் கொண்டிருந்தாலும் பூமிக்குள் இங்கே மேகங்கள் படர்ந்து விட்டால் அந்த ஒளி மறைந்து விடுகின்றது.

அது போல் நம்முடைய எண்ணங்கள் எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும்
1.பிற மனிதனுடைய எண்ணங்கள் அதை மறைத்து
2.நம் எண்ணங்களைப் பிறர் கேட்க விடாதபடி குற்றவாளியாக்கச் செய்வதும்
3.துன்ப உணர்வுகளைக் கேட்டுணர்ந்ததால் நம் நல்ல எண்ணங்களை அங்கே பிரதிபலிக்க முடியாதபடியும் செய்து விடுகிறது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பிறிதொரு மனிதன் வேதனைப்படும் சொல்லோ… அல்லது மற்ற குறைபாடுகளோ… அதை அவர்கள் நமக்குச் செய்ய வேண்டாம்…! அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்… நாம் வேடிக்கை பார்த்தால் போதும்.
1.”அவருடைய செயலை” நம் கண் இழுத்துக் கவர்ந்து நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது.
2.சுவாசித்த பின் நம் உயிரிலே படுகின்றது அதை உணர முடிகின்றது தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் தெரிந்து கொண்டது… அவன் உடலில் தவறான நிலையில் செய்தது… அதைக் கவர்ந்து நம் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அன்றைக்கு “ஒரு நான்கு மணி நேரத்திற்காவது”
2.நம் உடல் இழுத்து ஆன்மாவாகப் பெருக்கிக் கொள்ளும்.

அதன் பின் வேறு எந்த எண்ணங்கள் எண்ணினாலும் அதனுடன் கலந்து கலந்து… அன்றைய வாழ்க்கையில் வெறுப்பு சலிப்பு சஞ்சலம்… என்று அடைந்து
1.இது என்ன வாழ்க்கை…? இந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்றது…! என்று நாம் சொல்லிக் கொண்டே இருப்போம்.
2.இந்த உணர்வுகள் நமக்குள் ஆழமாக அதனின் வித்தின் தன்மையாக அடைந்து விடுகிறது.

நம் உடலில் 1008 குணங்களாக வளர்ச்சி பெற்று புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தப்பித்துத் தப்பித்து வந்தோம். இருந்தாலும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் தீமையின் விளைவுகளுக்கே நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆகையினால் தான் உங்களை “அடிக்கடி… அடிக்கடி” ஆத்ம சுத்தி செய்து கொள்ளும்படி சொல்கிறோம்.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டியது மிகவும் முக்கியமானது

 

நோயாளியைப் பார்க்கின்றோம்… அவருடைய நோயைப் பற்றி அறிகின்றோம். அவருக்கு உதவியும் செய்கின்றோம். ஆனாலும் அவரின் நோய்க்குக் காரணமான உணர்வுகள் நமக்குள் வலுவாகிவிட்டால் அதை நாம் துடைப்பதில்லை… துடைக்கத் தெரிவதில்லை.

நோய் வளர்ந்த பின் மருத்துவர்களிடம் சென்று அதற்குத் தக்க மருந்தை உட்கொண்டு மாற்றிக் கொள்கின்றோம்.
1.நோயாளியைப் பார்த்த உணர்வு ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
2.அதை நீக்குவதில்லை… நீக்கத் தெரியவில்லை
3.அப்போது மருந்து சாப்பிட்டு நோயை நீக்கினாலும் அந்த நோய் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கின்றது.

வயல்களில் களைகளைப் பிடுங்குகின்றோம்… மீண்டும் அந்தக் களைகள் முளைக்கத்தான் செய்கின்றது. அது போல் அன்றாடம் எத்தனையோ தீமைகளைப் பார்க்கின்றோம். உடலில் அந்தத் தீமைகள் அதிகமாகி விட்டால் நோயாகி விடுகிறது.

டாக்டர்களை அணுகி அந்த நோயை நீக்கினாலும் களைகளைப் பிடுங்கிய பின் மீண்டும் அது எப்படி முளைக்கின்றதோ அதைப் போன்று நமக்குள் மீண்டும் நோய் வருகின்றது.

நோயை நீக்க…
1.இன்னொரு விஷம் கொண்ட மருந்துகளைக் கொடுக்கப்படும் பொழுது அதில் உள்ள விஷமும் உடலுக்குள் சேர்ந்து விடுகிறது
2.நோய்களை நீக்க இப்படி.. பல உபாயங்களைச் செய்தாலும்
3.அந்த விஷத்தன்மைகளால் உடல் உறுப்புகள் பாழாகிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ உபாயங்களை நாம் செயல்படுத்துகின்றோம். உடல் உறுப்புகள் பழுதானால் நுரையீரல்… இருதயம் இவ்வாறு மாற்று உறுப்புகளை வைத்து மருத்துவர்கள் வாழ வைக்கின்றார்கள்.

உடலில் எலும்பே இல்லை என்றாலும் இன்னொரு உடலில் இருந்து எலும்பை உருவாக்கும் அணுக்களை வைத்து… “மோல்டு செய்வது போன்று எலும்பை உருவாக்கி…” அதை மனிதனுக்குப் பொருத்துகின்றார்கள்.

ஏனென்றால் எலும்பை உருவாக்கிய அணுக்களை அது பெருக்கப்படும் பொழுது அதனுடைய மலம் எலும்பாக வளர்கின்றது. பண வசதி உள்ளவர்கள் பல லட்சங்கள் ஆனாலும் அதைப் பொருத்திக் கொள்கின்றார்கள்.

ஆனால் அப்படிப் பொருத்திக் கொண்ட நிலையில்… கால்களையோ மற்ற அங்கங்களை இழந்து இருந்தாலும்… மற்றொருவர் எந்தவிதப் பின்னமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கப்படும் பொழுது
1.அவர்களைப் போன்று நமக்கு இல்லையே… நாம் இப்படி இருக்கின்றோமே…! என்ற வேதனை உணர்வு மீண்டும் வருகின்றது.
2.இப்படித் தொடர்ந்து வரும்போது முழுமையாக நோயிலிருந்து விடுபட முடிவதில்லை.

எத்தனையோ செல்வங்களைச் செலவழித்து உறுப்புகளை மாற்றி அமைத்தாலும் உடலை விட்டுச் செல்லும் பொழுது வேதனை உணர்ச்சிகள் உயிரோடு சேர்ந்தே செல்கின்றது.

நோயை நீக்க மருந்துகளை உட்கொண்டே வந்தாலும்… கடைசியில் இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது அதற்குத்தக்க மாற்று உடலை இந்த உயிர் ஏற்படுத்தி விடுகிறது.

ஆனால்
1.விஷத்தன்மைகளை எல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நுகர்ந்து நம் உடலில் பதிவாக்கி
2.தீமை என்ற உணர்வைக் கண்டால் உடனே அதை மாற்றி அமைத்து
3.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களையும் நாம் நல்லதாக மாற்றி அமைக்க முடியும்.
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினையாக மாற்றிக் கொள்ள முடியும்
ஒரு மனிதனுடைய மேல் தோல் பாழாகி விட்டால் அந்தத் தோலை உருவாக்கும் அணுக்களை வைத்து அழகான தோலையும் பொருத்தி விடுகின்றார்கள்.
1.ஆனாலும் உயிரைப் போன்று உணர்வின் தன்மை
2.ஒளியாக்கும் திறன் அவர்களிடம் இல்லை.

விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உடலைக் காக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து எடுத்து வாழ்ந்தாலும் வேதனை உணர்வுகள் உடலில் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றது இந்த உடலில் சேர்த்துக் கொண்ட நிலைக்கொப்ப அடுத்த மாற்று உடலை இந்த உயிர் உருவாக்கி விடுகிறது.

ஆனால் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்கி… துருவ நட்சத்திரத்தின் நினைவை அடிக்கடி கொண்டு வந்தால் உயிரான்மாவில் இது வலுவாகிறது.

பிறர் கஷ்டப்படுவதோ வேதனைப்படுவதோ துயரப்படுவதோ அல்லது உடலை விட்டு பிரிந்தவர்கள் பற்றிக் கேள்விப்படும் போதோ… அந்த நேரங்களில் எல்லாம் அதைத் தடுக்க…
1.ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிர் வழி கவர்ந்து
3.அதே கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி உடலை உருவாக்கி அணுக்கள் அனைத்தும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாகப் பாய்ச்சி
5.மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

இயற்கையின் முழு சக்தியை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

இயற்கையின் முழு சக்தியை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.இந்நிலைக்கு அந்நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இந்நிலையில் தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அவ் ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையை இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும்… பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.