உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

உங்கள் கண்களை மிகச் சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும்

 

ஆண்டனாக்களின் பவரைக் கூட்டும் பொழுது வெகு தொலைவில் இருக்கும் விண்ணின் ஆற்றலையும் செயற்கைக்கோள் மூலமாக ஈர்க்க முடிகிறது விஞ்ஞான அறிவால். அங்கிருந்து வரும் அலைகளை நாம் கவர்ந்து வீட்டிலே டிவி பெட்டி மூலமாகப் பார்க்கின்றோம்.

அதைப் போன்று… அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்போது யாம் உபதேசிக்கும்போது நீங்கள் அதைக் கூர்ந்து கவனித்தால்
1.உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு செய்வது மட்டுமல்ல.
2.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
3.அது ஆழமாகப் பதிவான பின் உபதேசித்ததை எண்ணும் பொழுது
4.விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த ஆண்டனாக்களைக் கொண்டு வருவது போன்று
5.உங்கள் கண்களை ஆண்டனாவாக… மிக சக்தி வாய்ந்ததாக மாற்ற வேண்டும்.

இப்பொழுது இதைக் கேட்டுணரும் பொழுது கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் யாம் சொல்வதை
1.உங்கள் கண் ஈர்த்து உங்களுக்குள் முதலிலே ஊழ் வினையாகப் பதிவு செய்கின்றது.
2.அதே சமயம் கண்ணுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளுக்கு…
3.திரைகளுக்கு அனுப்பும் அந்த ஒவ்வொரு நுண்ணிய அலைகளிலும் “சக்தி வாய்ந்ததாக” இது சேர்கின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் “ஆண்டனா பவர்” (சக்திவாய்ந்த) போல அதைக் கவர்ந்து… உங்களைச் சுவாசிக்கச் செய்து… உங்கள் உடலுக்குள் சென்று தீமையான நிலைகளை நீக்கிட இது உதவும்.

தீமைகளை நீக்கி… அந்த அருள் சக்திகளை வலுகொண்டதாக மாற்றுவதற்கு… குருநாதர் எனக்கு எவ்வாறு அருள் உணர்வுகளைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்று தான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருளை நீங்கள் காண வேண்டும் என்று அதைப் பெறச் செய்கின்றோம்

அதன் பின்பு… தீமை நீங்கிய உணர்வை நீங்கள் பேசப்படும் போது உங்கள் மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்த அலைகளாகப் பரவச் செய்கிறது.

1.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
2.மற்றவர்கள்… அவரின் உணர்வுகள் அறியாது சென்றாலும்
3.”உங்களுடைய மூச்சலைகள்” அவர்களுடைய தீமைகளை நீக்கக்கூடியதாக… மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

அதற்கு இது நிச்சயம் உதவும்.

விட்ட குறை

விட்ட குறை

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க… ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

என்னுடைய பாதுகாப்புக்காக… குருநாதர் கொடுத்த விண்ணின் ஆற்றல்

 

உங்கள் கஷ்டங்களைச் சொல்லி அதிலிருந்து நிவாரணம் தேட என்னிடம் (ஞானகுரு) கேட்டாலும்… நான் கேட்டறியும் பொழுது அந்த உணர்வை என் செவிப்புலன் ஈர்த்து… அந்த உணர்ச்சிகளைத் தூண்டி சுவாசித்து… பின் என் உயிரிலே பட்டு அறிந்து தான் “நான் பதில் சொல்ல வேண்டி வரும்…”

குருநாதர் கொடுத்த சக்திகள் கொண்டு பல உபகாரங்களைச் செய்தாலும் நீங்கள் சொல்லும் கஷ்டமான உணர்வுகள் என் உடலுக்குள் சென்று விட்டால் அது கடுமையான தீய விளைவுகளை எனக்குள் உண்டாக்கிவிடும்.

அவைகளைச் சமப்படுத்துவதற்கு குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று தெளிவாக உணர்த்தினார்.
1.விண்ணின் ஆற்றலை எடுத்துச் சுத்தப்படுத்தி… அதை வேக வைத்து
2.அதனைச் சமப்படுத்தி… சுவை ஆக்கி
3.யார் உன்னிடம் சொன்னார்களோ அவருடைய தீமைகளை நீக்க இந்த உணர்வின் வாக்கினை அங்கே பதிவு செய்து
4.தீமையிலிருந்து அவர்கள் விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்…! என்று சொன்னார்.

அருள் ஆற்றல்மிக்க விண்வெளியின் ஆற்றலை எப்படிப் பருக வேண்டும் என்ற உணர்வினை எமது குருநாதர் எனக்குள் உபதேசித்து…
1.அந்த உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனிக்கச் செய்து… அதை ஊழ்வினையாகப் பதிவு செய்து
2.நீங்கள் துன்பம் என்று எம்மிடம் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தாலும்
3.அந்தத் துன்பங்கள் எனக்குள் விளையாத வண்ணம் தடுக்க
4.அடுத்து குருநாதர் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
5.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்கத்தைச் செலுத்தி
6.அது என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அன் உணர்வுகள் அனைத்திலும் கலக்கச் செய்கிறேன் (ஞானகுரு)

உதாரணமாக தங்க நகைகள் செய்ய செம்பும் வெள்ளியும் வைத்து… அதைத் தெரிந்தே தான் கலக்கின்றோம். ஆனால் அதை வைத்து அடுத்த நகை செய்யப்படும் பொழுது திரவகத்தை ஊற்றி அந்த செம்பையும் வெள்ளியையும் நீக்கிவிட்டு மீண்டும் சுத்தத் தங்கத்தை வைத்து நகை செய்யச் செல்கின்றோம்.

அது போல் நீங்கள் ஆயிரக்கணக்கான பேர் வந்தாலும்… உங்களுக்கு நான் நன்மை செய்ய வேண்டும் என்று சொன்னாலும்… உங்களுடைய துன்பங்களைச் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்தே நான் உதவி செய்ய முடிகிறது.

கேட்டறிந்த அந்தத் தீமை எனக்குள் சேராத வண்ணம் குருநாதர் காட்டிய வழியில்
1.அவர் எனக்குக் கொடுத்த… எனக்குள் பதிவு செய்த… உயர்ந்த எண்ணத்தின் சக்தியை வலுவூட்டச் செய்து
2.விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
3.அதை நுகர்ந்து என் உடலுக்குள் செலுத்துகின்றேன்.

அன்று வாழ்ந்த மெய்ஞானிகள்… தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வரும் சென்ற அந்த அரும் பெரும் சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியிலே படரச் செய்து கொண்டிருப்பதைத் தான் குரு எனக்குள் பதிவு செய்தார்.

அதை நினைவு கொண்டு நான் எண்ணும் பொழுது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது.

தங்கத்தில் திரவகத்தைத் விட்ட பின் அதில் இருக்கக்கூடிய அழுக்குகள் பிரிவது போன்று அந்த அருள் ஞானிகளின் உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது… அதைப் பிரித்து விடுகின்றது.

இதுதான் ஆத்ம சக்தி என்பது…!

அனைவரும் என்னிடம் கஷ்டங்களைச் சொல்லும் போது உடனுக்குடன் நான் அதைச் சுத்தப்படுத்தவில்லை என்றால்
1.உங்களுக்கு முன்னாடி எத்தனையோ நிலைகள் எனக்குள் மாறிவிடும்.
2.உங்களுக்கு நான் நன்மை செய்தாலும் நீங்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் எனக்குள் சுமையாக வந்து என் நல்லதை மூடி மறைத்து விடும்.

ஆகவே தீமைகளை நீக்குவதற்கு குருநாதர் எனக்குக் கொடுத்த “உபாயத்தை” அந்த மகரிஷிகள் உணர்வினை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

எந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆற்றல்மிக்க சக்தி உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகும்.

அதற்கப்புறம் நீங்கள் தீமையை எப்பொழுது சந்திக்க நேர்ந்தாலும்…
1.உடனே ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கும்போது
3.முன்னாடி இருக்கும் மகரிஷிகள் அருள் உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கிறது.

ஆகவே விண்ணின் ஆற்றலைப் பெற நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும்.

தூக்கத்தில் வரும் கனவுகளின் இயக்கங்கள்

தூக்கத்தில் வரும் கனவுகளின் இயக்கங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒரு நிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாச நிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

என்னை இப்படிச் சொல்லிவிட்டானே…! என்று “அதையே எண்ணி” நம் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றோம்

என்னை இப்படிச் சொல்லிவிட்டானே…! என்று “அதையே எண்ணி” நம் வாழ்க்கையையே கெடுத்துக் கொள்கின்றோம்

 

எனக்கு இடைஞ்சல் செய்தான்… பாவி..! “தொலைந்து போகிறவன்… மோசமானவன்…!” இப்படி எல்லாம் செய்தால் உருப்படுவானா…? என்று “உங்கள் பெயரைச் சொல்லி… அது உங்களில் பதிவானால் போதும்…!”
1.என்னை இப்படிச் சொன்னார்களே… சொன்னார்களே…! என்று அதையே எண்ணி
2.இந்த உணர்வுகளைச் சேர்த்து அவர்கள் சொன்ன நிலைக்கு ஆளாகி விடுவீர்கள்.

அந்தக் கோபமான உணர்வு நமக்குள் சேர்ந்து “இப்படிச் சொன்னான் பார் அவனை என்ன செய்கின்றேன்…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதும்.

அவர் எங்கேயோ இருப்பார். கெட்டுப் போக வேண்டும் என்று சொன்ன உணர்வு… நமக்குள் மோதிய பின் கோப உணர்வாகி நம் நல்ல குணங்கள் எல்லாம் கேட்டு அந்த ஆத்திர உணர்வு நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.

1.அவர் ஒரு தடவை தான் சொன்னார்…
2.இருந்தாலும் இந்த உணர்வு நமக்குள் வந்தபின் அவரை நினைக்கும் போதெல்லாம் ஆத்திரமும்
3.அவனை உதைக்கின்றேன்… எங்கே வந்தாலும் விட மாட்டேன் என்று எண்ணும் போது
4.”அந்த எண்ணம்” நம் உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களை எல்லாம் உதைத்துக் கொண்டே இருக்கும்.

அப்போது உடல் எல்லாம் வலிக்கிறது என்று சொல்வோம். இது விளைய விளைய அவர்களை நினைக்க நினைக்க இது உடலுக்குள் விளைந்து கொண்டே வந்து கடைசியில் கழுத்து வலி மேல் வலி வந்து கொண்டே இருக்கும்.

1.யார் சொன்னாலும் சரி…
2.அந்தச் சொல்லைப் பொறுக்க முடியாதபடி “உன்னை உதைத்தால் தான் சரியாகும்…? என்ற ஆத்திரத்தைத் தூண்டும்.

தன்னுடைய பிள்ளையையே பார்த்தாலும் கூட… சொன்னபடி கேட்கவில்லை என்றால் “இங்கே வாடா…” என்று ஆத்திரத்துடன் பேசச் சொல்லும்.

இந்த உணர்வுகள் எல்லாம் சிறுகச் சிறுக இரத்தக் கொதிப்பாக வளர்ந்து கை காலெல்லாம் முடக்கி விடும்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் அவர்கள் சொன்னதை எடுத்துக் கொண்ட பின் இது கொஞ்சம் கொஞ்சமாக விளைந்து… யார் ஒன்றைச் சொன்னாலும்… அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாது.

உடனே அவர்களைப் பற்றிக் குறை பேசுவோம். குறையைச் சொன்னவுடன் அவர்களுக்குக் கோபம் வரும். மீண்டும் கோபமாகப் பேச வேண்டி வரும்

இப்படி நம்மை அறியாமல்
1.ஒரு தரம் சொன்னது நமக்குள் கலந்து கலந்து இயக்கி
2.நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகள் அடுத்தவர்களின் கோபத்தைத் தூண்டச் செய்து
3.கோபமாக நம்மிடம் பேசச் செய்து… இப்படி அந்தக் கோபம் நமக்குள் தொடர்ச்சியாக விளைந்து கொண்டே வரும்.

உடல் ஆரோக்கியம் இழந்து இரத்தக் கொதிப்பாக மாறும்.. இந்தக் கோப உணர்வுகள் விளைய விளைய தொழிலும் வியாபாரத்திலும் இடைஞ்சல் வரும். நண்பரிடத்திலேயும் கோபம் வரும். அதனால் பகையாகிப் பல விளைவுகள் ஆகிவிடும்.

ஆக நம்மை அறியாமலே உடலிலும் தண்டனை… நம் சொல்லைக் கேட்பவர்கள் அனைவரும் நம்மை வெறுப்பார்கள்.

இப்படி நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது. வேதனை அதிகமாகி மனிதனையே செயலிழக்கும்படி ஆகின்றது.

பாவிப்பயல்… மோசம் செய்தான் துரோகம் செய்தான் இடைஞ்சல் செய்தான் என் குடும்பத்திற்குத் தொல்லையாக இருக்கின்றான் என்று ஆன பின் அதறக்க வேண்டி… ஜாதகமோ ஜோதிடமோ பார்க்கச் சென்றால் “உங்களுக்குச் செய்வினை செய்து விட்டான்…!” என்று அவர்கள் சொல்லி விடுவார்கள்.

1.அதைக் கேட்ட பின்… உணர்வின் வேகங்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாகி
2.சண்டாளப் பயல் இப்படிச் செய்து விட்டான்…! என்று மனதைப் பலமாக வைத்து விட்டால் உடலிலே கடுமையான நோயாகி விடுகின்றது.

நோயாக வளர்ந்த பின் எந்த மனிதனைக் குறி வைத்து இந்த எண்ணங்கள் சென்றதோ… இந்த மணங்கள் இங்கே அதிகமாகி உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் அந்த உடலுக்குள் சென்று அவனுக்குள் பேயாக ஆட்டிப் படைக்கும்… அவனுக்குத் தொல்லைகள் கொடுக்கும்

எந்த அளவிற்கு இந்த உடலில் தொல்லைகள் அனுபவித்ததோ அந்த நோய் அங்கேயும் உருவாகும். அதே சமயத்தில் வெறுத்துப் பேசிய உணர்வுகளும் அங்கே சென்ற பின் அவர்களை இன்னும் இம்சைப்படுத்தி… அந்த உடலில் நஞ்சினை விளையச் செய்து… இந்த உயிரான்மா தனக்குள் அதிகமாக அதைப் பெருக்கி… இன்னும் கொஞ்சம் தேய்மானம் ஆகும்.

மனித உடலில் முழுமையாகத் தெரிந்து கொள்ளும் (அறிவு) நிலை பெற்றிருந்தாலும்… பிறிதொரு எண்ணங்கள் உடலில் விளைந்த பின்… பௌர்ணமி எப்படித் தேய்கின்றதோ இதைப் போல நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகிறது.

பல கோடிச் சரீரங்களில் பல தீமைகளைக் கடந்து வலிமை பெற்று மனிதனாக வந்த நிலையில்
1.இரு அவனை நான் தொலைத்து விடுகின்றேன் என்று சொன்னால்
2.”உன்னைத் தொலைத்து விடுகிறேன்…” என்று நாம் எடுத்துக் கொண்டது
3.நம் உடலுக்குள் வந்து நம் நல்ல உணர்வைத் தொலைத்துவிடும்… நோயாக மாற்றிவிடும்.

இருக்கட்டும்… நான் பார்க்கின்றேன்…! நாம் லேசாகச் சொல்லிவிடலாம். இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலே… நாம் எண்ணிய அந்த உணர்வு… முதலில் நமக்குள் தான் பாய்கின்றது.

பாய்ந்த பின் தான்… அந்தக் கெட்ட புத்தி வந்து நம்மைக் கெட்ட செயலைச் செய்ய வைக்கும். ஆக நம் நல்ல குணங்களை. முதலில் நாம் தான் கெடுக்கின்றோம்.

அது நமக்குள் தீய வினையாக விளைந்து விடுகிறது. இப்படி நம்மை அறியாமல் எத்தனையோ வேதனைகள் பட்டுக் கொண்டு இருக்கின்றோம்

1.இதிலிருந்து மீள்வதற்கு நாம் என்ன செய்வது…? என்பதை அன்று மகரிஷிகள் பல முறைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.
2.அதையெல்லாம் தெரிந்து கொள்வதற்குத் தான் இந்த உபதேசத்தையே உங்களுக்கு கொடுப்பது.

காரணம்… அந்த ரிஷிகள் முழுமை அடைந்தவர்கள். அவர்கள் உணர்வைப் பெற்றால் தான் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

சூரியனைத் தான் கடவுளாக அன்று வணங்கினார்கள்

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

முழுமுச்சாக நாம் செய்ய வேண்டியது…!

 

வாழ்க்கையிலே வரக்கூடிய குறைபாடுகளையோ மற்ற தீமைகளையோ வேதனைகளையோ கேட்க நேர்ந்தால் நுகர நேர்ந்தால் அது நம் உடலுக்குள் வராதபடி தடுக்க… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் என்று நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அதற்குப் பின்
1.”எது நல்லவையோ அது நடக்க வேண்டும்…” என்று எண்ணத்தை நாம் செலுத்த வேண்டும்
2.அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

இந்த வழியில் நாம் வாழ்ந்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்.

உலகெங்கிலும் எத்தனையோ கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில்… நம் பூமி மட்டுமல்ல இந்தப் பிரபஞ்சமே உருமாறும் நிலை இருக்கின்றது… கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் தப்ப வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை மேற்கொண்டு
1.அவர் கொடுக்கும் உபாயங்களை நாம் கடைப்பிடித்து
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லை என்ற நிலை அடைய
3.அதை முழுமூச்சாக நாம் செயல்படுத்த வேண்டும்.

கடலில் படகை ஓட்டிச் சென்றோம் என்றால் அதிலே அலைகள் எதிர்த்து வரும் பொழுது அதைப் பிளந்து நாம் செல்ல வேண்டிய எல்லையை அடைகின்றோம்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரம் தான் நமது எல்லை என்று முடிவுகட்டி இந்த வாழ்க்கையில் எத்தனை விதமான சங்கடமோ சலிப்போ வெறுப்போ அல்லது பாசத்தால் வரக்கூடிய உணர்வுகளோ வந்தால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று வரும் அலைகளைப் பிளந்திடல் வேண்டும்.

நமது எல்லையான துருவ நட்சத்திரத்தை அடையக்கூடிய சக்தியாக… வாழ்க்கை என்ற ஓடத்தைச் சீர்படுத்தி வாழ வேண்டும்.

காட்டிற்குள் சென்று தவம் இருந்து அந்தச் சக்தியைப் பெறுவதல்ல. இந்த நாட்டுக்குள் வாழும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற வேண்டும். “இது தான் உண்மையான தவம்…”

அந்த தவத்தை நாம் எடுத்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் வலுப்பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கும் வல்லமையும் பெறுகின்றோம்.

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

இன்று வாழ்வது கனவு தான்…! நிலைத்தது அல்ல…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி… பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

கோடீஸ்வரன்

கோடீஸ்வரன்

 

நாம் எத்தனையோ கோடித் தவறுகளைப் பார்த்தாலும் அந்தந்த சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் செலுத்தித் தூய்மைப்படுத்தி இந்த உணர்வினை வலு சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத்தான் இராமேஸ்வரத்தைக் காட்டினார்கள். நாம் பல கோடி உடல்களில் மற்றொன்றைக் கொன்று தின்று இன்று மனிதனாக வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் கோடிக்கரையாக வந்திருக்கின்றோம்… தனுசு கோடி.

தீமை என்று தெரிந்த பின்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதைத் தாக்கி அதனின் வலுவை இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் விஷ்ணு தனுசு.
2.உயிரைப் போன்றே உணர்வின் அணுக்களை ஒளியாக உருவாக்குதல் வேண்டும்.
3.எத்தனை கோடி விதமான உணவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அத்தனையும் மாற்றி அமைக்க வேண்டும்.

ஏனென்றால் கோடிக்கணக்கான (எண்ணிலடங்காத) உணர்வுகளையும் ஒளியாக மாற்றி அமைத்தது அந்தத் துருவ நட்சத்திரம். அதன் உணர்வை அவ்வப்பொழுது நமக்குள் எடுத்துத் தீமைகளை நீக்குதல் வேண்டும்.

உதாரணமாக ரோட்டிலே நாம் செல்லும் பொழுது ஒருவன் வேதனைப்படுவதைப் பார்க்கின்றோம். அந்த நிமிடமே ஈஸ்வரா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்
1.உள்முகமாக இந்த உணர்வின் வலுவை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.வேதனைப்படும் உணர்வு நமக்குள் வலுவாகச் சேர்வதற்கு முன் அதைத் தடுத்து நிறுத்திவிட்டு
2.வேதனைப்படுபவனுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிடைக்க வேண்டும்
3.அவன் அவன் நலமாக வேண்டும் என்று எண்ணிச் சொல்லிவிட வேண்டும்.

அவன் உணர்வு நமக்குள் வராது…!

அதே போன்று இரண்டு பேர் கொடூரமாகத் தவறு செய்கின்றார்கள். சண்டையிடுகின்றார்கள். அதைப் பார்த்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கி புருவ மத்தியில் உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். அவர்களுடைய தவறுகள் நமக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து விட்டால்… அந்த உணர்வுகள் உள் புகுவதில்லை.

1.பின் அந்த உணர்வை ஈர்க்காது ஒதுக்கிவிட்டு
2.அவர்கள் இருவரும் ஒன்றுபட்டு வாழும் தன்மையும் பண்புடன் வாழும் தன்மையும் பெற வேண்டும் என்று
3.நாம் விலகி விட வேண்டும்… அந்தத் தீமை நமக்குள் விளையாது.

ஏனென்றால் தவறு செய்கின்றார்கள் என்றால் அதனைப் பார்க்காமல் இருக்க முடியாது கேட்காமல் இருக்க முடியாது.

ரோட்டிலே செல்லும் போது ஒரு வாகனம் வேகமாக வருகிறது என்றால் பார்த்தவுடனே “பயம்” என்ற நிலை வந்து விலகுகின்றோம்.

பார்க்கின்றோம்… பஸ் திடீரென்று நம் பக்கமாகத் திரும்புகின்றது. அந்த அதிர்ச்சியின் வேகத்தில் நாம் ஒதுங்கி விடுகின்றோம்.
1.அப்படி அதிர்ச்சி கொடுக்கவில்லை என்றால்
2.நாம் அங்கிருந்து விலக முடியாது.

அதிர்ச்சியை ஊட்டுவது எது…?

அதன் வேகத் தொடரை நம் கண் நுகர்ந்து உயிரிலே மோதப்படும் போது உணர்ச்சிகள் தெரிய வருகின்றது. ஆனாலும் அடுத்து அதிர்ச்சியின் தன்மை கூட்டி உடலில் பதட்டமாகி வேகமாக விலகிச் செல்ல வைக்கின்றது.

விலகிச் சென்றாலும் அதிர்ச்சியின் உணர்வு நம் இரத்தத்தில் கலந்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சேர்ந்து விட்டால் அடிக்கடி பய உணர்வும் மற்ற நிலைகளும் ஏற்பட நேர்கின்றது.

பயம் அதிகமானால் சிந்திக்கும் தன்மை கூட சில நேரங்களில் முடியாது போய் விடுகின்றது. இப்படி…
1.நம் சந்தர்ப்பம் நாம் நுகர்ந்த நிலைகள் நம் இரத்தங்களிலே மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது.
2.சந்தர்ப்பத்தில் தப்பினாலும் அடுத்த கணமே… ஈஸ்வரா என்று
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று அந்த அதிர்ச்சியின் உணர்வைத் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

இப்படி வாழ்க்கையில் எத்தனையோ விதமான உணர்வுகள் நமக்குள் வரும்…! அதை அதை அவ்வப்பொழுது தடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து மாற்றிக் கொண்டே வந்தோம் என்றால் அதுதான் “தனுசு கோடி…”

ஆகவே… உயிரின் தன்மை ஒளியாக்கிய அந்த உணர்வை… அந்தந்த நேரத்தில் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் தீமை சேராதபடி தடுத்து நிறுத்துகின்றோம்.

உடலில் விளைந்த அந்த உணர்வுகள் கொண்டு
1.“இந்த உயிர்” அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலு கொண்டதால் நேராக நம்மை அங்கேயே அழைத்துச் செல்கின்றது.
2.தொக்கிய உணர்வின் அணுக்களை அங்கே தூய்மைப்படுத்தி விடுகிறது

அப்போது ஏகாந்தமாக… எத்தகைய எதிர்ப்பும் இல்லாது என்றும் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்…!

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

நம்முடைய வைராக்கியம் எதிலே இருக்க வேண்டும்…?

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.
1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும் உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகாநந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும் ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால் அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.
1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.