“சுவாசிக்கும் உணர்வும்… உட்கொள்ளும் உணவும்…” உடலுக்குள் அமிலமாகி இரத்தமாக மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்

“சுவாசிக்கும் உணர்வும்… உட்கொள்ளும் உணவும்…” உடலுக்குள் அமிலமாகி இரத்தமாக மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்

 

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சி நாகரத்தினமாக உருவாக்குகின்றது ஆனால் ஒடக்கான் போன்ற உயிரினங்கள் அது நுகரப்படும் பொழுது தன் உடலில் விஷத்தன்மையாக உருவாக்குகின்றது.

விஷத்தன்மையாக மாற்றிக் கொள்வதன் நோக்கம் மற்ற பூச்சிகளையும் வண்டினங்களையும் முழுமையாக விழுங்கப்படும் பொழுது “அதற்குள் இருக்கக்கூடிய விஷம் அதற்குள் ஏற்படும் அமிலமும்” அதனுடன் சேர்த்து விழுங்கியதை (பூச்சி வண்டு) அமிலமாக நீராகக் கரைத்துவிடும்.

கரைத்து உள்ளே சென்ற பின் இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் அணுக்களுக்கு ஆகாரமாகப் போகின்றது… அதனின் உணர்வின் சத்தைக் கொண்டது

மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அவையெல்லாம் நம் உடலில் ஜீரணிக்கும் போது முதலில் அமிலமாகத் தான் மாறும்.
1.நமக்குள் சேர்க்கும் விஷத்தன்மை கொண்டு “பித்த சுரபி” அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு
2.இந்த உணவுக்குள் கலந்த பின் அந்த அமிலத்தைக் குளுக்கோஸ் ஆக மாற்றுகின்றது.

குளுக்கோஸ் ஆக மாற்றி வரப்படும் பொழுது இரத்தத்தில் இருக்கக்கூடிய செல்கள் இந்த உணர்வின் தன்மை சுழல… சுழலச் செய்து “செவ்வணுக்களாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதை மாற்றும் தன்மை இல்லை என்றால்
1.விஷத்தின் தன்மை அந்த குளுக்கோசைச் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது
2.இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து தான் அதிகமாகும்… அதை மாற்றும் வல்லமை பெற வேண்டும்.

ஒரு மனிதன் அடிக்கடி வேதனையைச் சுவாசிக்கிறான் என்றால் அவ்வாறு வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது நாமும் வேதனைப்பட்டுச் சோர்வடைகின்றோம்

காரணம்… அவருடைய செயலைப் பார்த்து “ஒன்றும் முடியவில்லை…” என்கிற பொழுது சோர்வு வருகின்றது. சோர்வினால் அடுத்துக் கோபம் என்ற உணர்வைக் கலந்து சுவாசிக்கின்றோம்.

1.இது கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றுவதற்கு மாறாக
2.இந்த உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக உடலில் ஒரு பக்கம் உருவாகும்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கெல்லாம் சீக்கிரமே இரத்தக் கொதிப்பு வரும். காரணம் அவர்கள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலில் உள்ள அணுக்களின் தன்மை இப்படி மாறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எதை எடுத்திருந்தார்களோ இரத்தங்களை எடுத்து வைத்தியரீதியிலே அணுக்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தக் கொதிப்பு இருக்கின்றது; சர்க்கரைச் சத்து இருக்கின்றது; அந்த இரண்டும் மோதலாகித் தனித்துப் பிரிக்கப்படும் போது அதனால் சளி உருவாகி ஆஸ்துமா உருவாகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆகவே
1.இரத்தத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் சளி அதிகமாக உற்பத்தியாகி
2.உடலில் எல்லா இடத்திலும் உறையும் தன்மை அமிலங்கள் மாறிவிடுகின்றது… ஒவ்வொன்றும் இப்படி மாறுகிறது.

ஏனென்றால் உடலுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்து வலுவாகித் தான் மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனாக ஆனபின் நம்முடைய இந்த வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்
1.உடலுக்குள் அணுத்தன்மைகள் மாறி… அடுத்து இந்த உடலின் ரூபத்தை மாற்றும் நிலை வந்து விடுகிறது
2.கடைசியில் வேதனை வேதனை என்று கொண்டு போய்… மனித உடலையே மாற்றும் சக்தியாக வந்து விடுகின்றது.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்களால்… வேதனையைச் சந்திக்கும் போது அதை நாம் நுகர நேர்கின்றது. ஆனால் “அதை மாற்றி அமைக்கக்கூடிய சந்தர்ப்பம் தான்” ஞானிகள் காட்டிய மெய் வழியினை உங்களுக்கு யாம் இப்போது உபதேசிப்பதினுடைய நோக்கங்கள்.

புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது

புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது

 

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க… கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்… ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா…?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்…”

புகழ் என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

1.காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.
2.மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான்
3.அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது…? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா…? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது எடுத்துச் செல்பவன்… தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்…?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்…?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்…!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அற்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

 

குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்
1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!

அதை மாற்றுவதற்கு என்ன வழி…?

வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)

அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.

அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களை சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.

இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.

இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும் தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.

அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்ற கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!

தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள் என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.

இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பி தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!

எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடலிலும் உள்ளது

எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடலிலும் உள்ளது

 

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன…?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா…?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா…?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா…?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை…?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழி வழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே… ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த… இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை…!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே…! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல்… இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…?

மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்…?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”

உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”

 

சர்க்கஸில் விளையாடுபவர்கள் உடம்பை எத்தனை வகைகளில் வளைக்கின்றார்கள்…! நம்மால் அவர்களைப் போல் வளைக்க முடிகிறதா…? முடியாது.

ஆனால் அப்படி வளைத்துப் பழகியவர்கள் ஒரு மாதத்திற்கு அதைச் செய்யாமல் “சும்மா இருக்கட்டும்…!” அடுத்து அந்த உடலை வளைக்க முடியாது.

பல ஆட்டங்கள் ஆடலாம்… ஆனால் ஒரு மாதம் சும்மா இருக்கட்டும். அதைத் திரும்ப பழைய மாதிரிக் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதானதல்ல.

அதே போன்றுதான் ஆசனப் பயிற்சி செய்து பழகியவர்கள்… நான் அந்த ஆசனம் போடுவேன்… இந்த ஆசனம் போடுவேன்…! என்றெல்லாம் சொல்வார்கள். கொஞ்சம் சோர்வடைந்து இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் போதும். அடுத்து அந்தப் பயிற்சிக்கே போக விடாது.

அந்தச் சோர்வு “இப்பொழுது செய்யலாம்… சரி அப்புறம் செய்யலாம்…! என்று அப்படியே ஒரு ஐந்து நாள் சென்றால் அப்புறம் அவ்வளவு தான்… செய்ய முடியாது.

ஆசனப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களும் மனச் சலிப்போ… சஞ்சலமோ… மற்றவர்கள் உணர்வுகளைக் கேட்டால் அவர்களையும் இந்த உணர்வுகள் அது தடைப்படுத்தி விடும்.

ஆசனத்தால் நான் உடலைத் திருத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவேன் என்று சொல்வார்கள் ஆனால்
1.வேதனையான உணர்வை எடுத்தார்கள் என்றால்
2.அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆசனப் பயிற்சி செய்யப்படும் பொழுது
3.நரம்பு மண்டலங்கள் முறுக்கப்படும் பொழுது சிலருக்குப் புத்தி பேதமே ஆகிவிடும்.
4.அல்லது வெறுப்பின் காழ்ப்புணர்ச்சி வரும் அல்லது பிரஷர்…!
5.அந்த அழுத்தத்தின் தன்மை வந்து… நரம்பு மண்டலங்கள் செயலிழந்து விடும் தளர்ச்சி அடைந்து விடும்.

ஆசனத்தைச் செய்து இரத்தக் கொதிப்பை மாற்றலாம் உடல் உபாதைகளைப் போக்கலாம் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறுப்புகளின் படங்களையும் போட்டுக் காட்டுவார்கள் இன்னென்ன பயிற்சியால் இப்படி நன்மைகள் பெறலாம் என்றும் சொல்வார்கள். [ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) எனக்கு ஒரு குருவை வைத்து இந்த ஆசனப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன்}.

ஆக… ஆசனம் நமக்கு உதவி செய்கின்றது. ஆனாலும் ஒவ்வொரு நாளும்
1.கவலையோ வெறுப்போ கோபமோ அன்றன்றைக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம்
2.எதன் உணர்ச்சியின் வேகமோ… அதற்குத் தக்க (அந்த எண்ணங்களுடன்) பயிற்சிகளைச் செய்யப்படும் பொழுது
3.உணர்ச்சியின் வேகத்தால் மூளையைக் கூடப் பாதிக்கக்கூடிய நிலை வந்து விடுகிறது.
4.அதாவது சிரசாசனம் சர்வங்காசனம் இதைப் போன்ற நிலைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றது

காரணம்… மக்கள் மத்தியில் பல பல உணர்ச்சிப் போராட்டங்களில் வாழும் பொழுது குடும்பத்தில் வெறுப்பின் தன்மை ஏற்பட்டால் அதனுடைய அழுத்தம்
1.நம் உடலில் அழுத்தங்கள் அதிகமாகப்படும் பொழுது
2.சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் வெடித்து விடும்… ஆள் அவுட்…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சலிப்பு சஞ்சலம் கோபம் கவலை வேதனை இது போன்ற உணர்வுகளை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகப் பெருக்கிக் கொண்டால்
3.தீமையான உணர்வின் இயக்கங்களை நாம் சமப்படுத்திக் கொள்ள முடியும்
4.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒன்றுக்கொன்று பகைமையாகாதபடி எதிர்ப்பாகாதபடி
5.எதிர்மறையான இயக்கங்களுக்குக் கொண்டு செல்லாதபடி இணைந்து செயல்பட்டு
6.மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெற முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் நம் நிலை (ஆவி உலகம்)

உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் நம் நிலை (ஆவி உலகம்)

 

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்… நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு…
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக் குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்…
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதேபோல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை… பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன…?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே… ஷாஜஹான் என்னும் ஆவியும்…!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே…!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

 

திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று காட்டும்.

வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.

அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.

ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.

எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.

1.ஒரு சிலருக்கு என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசாகனால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.

ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் வலுவான நிலைகள் எண்ணி
2.நமது பார்வையை செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.

இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும் அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!

தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும் ஆது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.

உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

தவறு செய்துவிட்டு தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும் என்றால் அது தவறான நிலை.

உயிராத்மாவிற்கு நாம் சொத்து சேர்க்கின்றோமா…?

உயிராத்மாவிற்கு நாம் சொத்து சேர்க்கின்றோமா…?

 

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்…? ஒவ்வொரு உயிரனங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன…? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை…” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது…? பேய் பிசாசு என்பது என்ன…? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன…?

தன் நாட்டைக் காக்கத் தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க… ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு… அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன…?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல… அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன…”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு… வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்…?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா…? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்

உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்

 

சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.

கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.

அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.

தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும் உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.

ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.

1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட காலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்

உலக நடப்புகளை பத்திரிகை டிவி மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே என்ன ஏது என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)

காற்றில் இருப்பதை டிவி ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.

சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!

அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்பட தொடங்கி விடுகின்றது

ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.

தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?

சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.

நான் தியானம் செய்தேன் என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.

1.அதை உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

பொய் உலகிலிருந்து தப்பி மெய் உலகிற்கு வாருங்கள்

பொய் உலகிலிருந்து தப்பி மெய் உலகிற்கு வாருங்கள்

 

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்… பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும். அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா…? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்று பிறவி எடுத்திட…!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை பாக்கியம் பெற்ற வாழ்க்கை என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை…!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்…!