வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

Image

light-2

வெப்பம் தான் கடவுள்…! எப்படி…?

ஆதியில் ஓர் விஷம் கொண்ட ஆவி விஷமற்றதைத் தாக்கப்படும் போது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளை இந்த உண்மையைக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் கண்டதை எல்லாம் சாதாரண தன் இன மக்களும் கண்டு கொள்வதற்காக அதற்குக் காரணப் பெயர்களை வைத்தான்.

ஏனென்றால் விஷத்தின் தாகுதலால் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் போது காந்தமாக அமைகின்றது. வெப்பம் காந்தம் விஷம் இவ்வாறு ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக அது உருபெறும் சந்தர்ப்பத்தைத் தான் “உலகின் இயக்கச் சக்தியாக மாறுகின்றது…!”

1.வெப்பம் உருவாக்கும் சக்தி
2.காந்தம் எப்பொருளையும் தன்னுடன் (கவர்ந்து அல்லது இழுத்து) இணைத்து அணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ இயக்கும் சக்தி

அதாவது எப்பொருள் அதனுடன் கலந்ததோ அப்பொருளின் மணத்தையும் குணத்தையும் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுத்துகின்றது என்பதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் காரணப் பெயரை வைத்தார்கள் அன்று ஞானிகள்.

உதாரணமாக
1.நாம் சமையல் செய்ய வேண்டும் என்றாலும் வெப்பத்தை வைத்துத் தான் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்கள் இயக்குகின்றது.
3.ஒரு மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

அதைப் போல இன்று கடலுக்குள் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும் பூமியின் வெப்ப அலைகளால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் போது தான்
1.அந்த மீன்களிலுள்ள உயிரின் நிலைகளுக்குள் வெப்பங்கள் ஊடுருவி
2.அதைத் தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அந்த வெப்பங்களை வைத்து அதுவும் வாழ்கின்றது வளர்கின்றது.

இதைப்போல நம் உயிருக்குள் வெப்பமும் கதிரியக்கச் சக்தியும் இரண்டும் ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றது. அதனால் தான் துடிப்பு ஏற்படுகின்றது.

இது அதைக் கொல்ல ஆரம்பிக்கிறது. அது இதைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறது. இந்தப் போர் முறையினால்தான் துடிப்பாகி அங்கே வெப்பம் ஏற்படுகிறது.

அந்தத் துடிப்புக்குள் ஏற்படக்கூடிய வெப்பத்தினால் ஈர்க்கும் சக்தியான காந்தமாகி மற்ற ஏதாவது ஒரு மணம் (சத்து) இருந்ததென்றால் இழுக்கின்றது.

அந்த வெப்பத்திற்குள் அது பட்டவுடனே அது இயங்குகிறது… உற்பத்தி செய்கின்றது, ஈர்த்த அந்த மணங்கள் வெப்பத்துடன் இணைந்தவுடனே அந்தப் பொருளாக (உடலாக) மாறுகின்றது. சுவாசிக்கும் போது அது என்ன மணமோ அதை எடுத்துக் கொள்கின்றது.

உதாரணமாக ஒரு பையன் அடிபட்டு அதனால் வேதனைப்படுகின்றான். நான் அதைப் பார்க்கின்றேன். அப்பொழுது அதைச் சுவாசித்து என் உயிரில் பட்டவுடனே அவன் உடலில் விளைய வைத்தது என்னுடன் கலந்து உடலில் வந்து ஜீவன் பெறுகின்றது

அ.எனக்கும் உடலில் வேதனை வருகின்ற மாதிரி
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அடிபட்ட அவன் உடலில் வேதனை வரும் பொழுது, “ஆ..” என்று அலறி அவனிடமிருந்து மூச்சு வெளி வருகின்றது. அப்பொழுது அந்தக் காந்த அலைகள் அதை எடுத்துக் கொண்டதை நான் பார்த்தவுடனே எனக்குள்ளும் அந்த வேதனையாகி அவனைக் காப்பாற்றச் சொல்லுகின்றது.

அப்பொழுது அந்தப் பாச உணர்வுடன் காப்பாற்றுகின்ற எண்ணம் வரும் பொழுது இந்தக் குணம் எனக்குள் பட்டவுடனே பிரணவம், “ஓ..ம்”. எனக்குள் காப்பாற்றுகின்ற சக்தி ஏற்படுகின்றது. அப்பொழுது “ஓ…ம்”.

அதாவது நாம் ஒரு சரக்கைப் போட்டு வேக வைக்கும் பொழுது, அதில் இருக்கின்ற சத்தை என்ன செய்கின்றது…? உறிஞ்சித் தண்ணீருடன் கலந்து விடுகின்றது. நாம் வேக வைத்தால் என்ன செய்கின்றது..? ஒரு பொருளைப் போட்டவுடனே அது கரைந்து மற்றதுடன் கலக்கின்றது.

நாம் குழம்பு வைப்பது போல உயிரான வெப்பத்தில் மோதியவுடனே அவன் வேதனைப்பட்ட அந்த வேதனையான சத்து என்னிடம் உமிழ்நீராக மாறி என் உடலில் சேர்ந்து விடுகின்றது, “இது ஓ…ம்”

என் கண்ணுக்குப் புலப்படாத இந்தச் சக்தி என் உயிரிலே பட்டவுடனே ஜீவனாகி அது என் உடலுடன் சேர்த்து இணையும் பொழுது ஓ…ம் நமச்சிவாய…! நமதாக எனதாக மாறுகின்றது.

இப்படித்தான் நம் உயிர் இயங்கிக் கொண்டுள்ளது. நாம் சுவாசிப்பது அனைத்தையுமே பிரணவமாக்கி நமக்குள் ஜீவன் பெறச் செய்து நம் உடலாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். மெய் ஞானிகள் அவர்கள் தன்னைத்தான் எப்படி அறிந்தார்களோ உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றலைப் பெற்று நஞ்சை வென்று ஒளியாக ஆனார்களோ அதைப் போல நாமும் ஆக முடியும்.

வேகமாக அடிக்கும் ஆடிக் காற்றினால் நன்மைகள் பெருகுவதை உணர்ந்து தான் அதைப் “ஆடிப் பெருக்கு…” என்றார்கள் ஞானிகள்

Image

Adipperukku

வேகமாக அடிக்கும் ஆடிக் காற்றினால் நன்மைகள் பெருகுவதை உணர்ந்து தான் அதைப் “ஆடிப் பெருக்கு…” என்றார்கள் ஞானிகள்

ஆடி மாதத்தில் கேரளா கர்நாடகா மத்திய பிரதேசம் போன்ற இடங்களில் எல்லாம் நன்றாக மழை பெய்கின்றது. நீர் வளம் பெருகுகின்றது.

அங்கே பெய்யும் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அதிலிருந்து மோதும் காற்றலைகள் மழை இல்லாத இடங்களுக்கு அதைக் காற்றாகத் தள்ளி வருகின்றது. எப்படி…?

வெப்பத்தால் ஒன்றை நாம் கொதிக்க வைக்கப்படும் பொழுது அது ஆவியாக வெளி வந்து நகர்ந்து செல்கின்றது. இதைப்போல
1.சூரியனின் வெப்பத் தணல் மழை பெய்யும் இடங்களில் இருக்கும் குளிர்ச்சியின் வேகத்துடன் மோது பொழுது
2.அதனால் அழுத்தத்தின் தன்மை அதிகரிக்கப்பட்டு
3.அந்த வெப்பத்தின் சக்தியால் காற்றாகப் பெருகுகின்றது.

உதாரணமாக ஒரு பாய்லரில் (BOILER) வெப்பத்தை அதிகமாகக் கூட்டும் பொழுது உள்ளிருக்கும் ஆவிகள் (GAS) அழுத்தம் அதிகரிக்கும் போது மூடியைப் பிளந்து வெளியிலே செல்லும்.

அதைப்போல ஒரு பகுதியில் பெய்யும் மழை தனக்குள் வரும் வெப்பத்தின் தணல்களைக் கவர்ந்து அது அலைகளாக வரப்படும் போது அந்த வெப்பத்தின் தணலால் “காற்றின் வேகம் அதிகரிக்கின்றது…!”

அந்தக் காற்று தாவர இனங்களின் மீது பட்டு அதனுடைய வித்துக்களை எல்லாம் அடித்துச் சென்று மற்ற இடங்களில் அதைப் பெருக்கச் செய்கின்றது. இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

அங்கே மழை பெய்கின்றது. அதிலிருந்து வரும் அழுத்தத்தின் தன்மை அங்கே நிலைப்பதில்லை. இங்கே வருகின்றது. நீரைக் கவர்ந்து வரும் நேரத்தில் வெப்பத்தின் தணல் தாக்கப்படும் போது காற்றின் அழுத்தம் அதிகரிக்கின்றது.

காற்றின் வேகத் தொடரினால் தாவர இனங்களில் உள்ள வித்தினை மற்ற இடங்களுக்குப் பரவச் செய்தாலும் மற்றோர் பக்கம் விளைந்திடும் தாவர இனத்தில் இணை சேரும் போது அதற்குள் உறைந்த நஞ்சின் தன்மை கொண்ட அணுக்கள் உருவாவதை இது அப்புறத்துகின்றது.

இந்த ஆடிக் காற்று இவ்வளவு சிறந்தது. எப்படி எல்லாம் நல்லதைப் பெருக்குகின்றது என்று தெரிந்து கொள்ளுங்கள். தீமை அகற்றும் சக்தியாகப் பெருகுகின்றது.

1.குடகிலே (கர்நாடகா) நீர் பெருக்காகின்றது. அதனின் பெருக்கு இங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது.
2.அங்கே பதினெட்டாம் பெருக்காகின்றது. நீரின் தன்மையால் இங்கே காற்றின் பெருக்கம் அதிகமாகின்றது.

காற்றின் பெருக்கம் அதிகமாகும் போது அதிலிருந்து தீமையை அகற்றும் சத்தின் வல்லமை மற்ற தாவர இனங்களுடன் மோதி அதிலுள்ள நஞ்சினை நீக்கும் சக்தி பெருகுகின்றது.

1.இது வழித் தொடர்ந்து ஒன்றின் பின் ஒன்றாக
2.அது இணைந்திடும் சக்தியாக
3.அது இயங்கும் தன்மையாக
4.இயற்கையின் நிலையாக ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றது.

உதாரணமாக
1.ஒரு கோபத்தை உண்டாக்கும் செயலை நாம் கான நேர்ந்தால் அந்தக் கோபமான உணர்வுகள் நமக்குள் பெருகி நம் உடலுக்குள் கோபமான அணுக்கள் பெருக ஆரம்பிக்கின்றது.
2.அதைப் போல ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று அதைக் கண்டுணரப்படும் போது நமக்குள் வேதனையின் சக்தி பெருகுகின்றது.
3.நோயினால் வாடுகிறான் என்று ஒருவனை உற்று பார்த்தால் அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் போது நமக்குள்ளும் வேதனையாகின்றது.

இதைப் போன்றே தான் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் பெருக்கி நமக்குள் இருக்கும் தீமையை நீக்கும் சக்தியாகப் பெருக்கிடல் வேண்டும்.

அதே சமயத்தில் நமக்குள் விளைந்த அந்தத் தீமையை அகற்றும் சக்திகள் நாட்டு மக்கள் அனைவருக்குள்ளும் பெருக வேண்டும் என்ற “பெருக்காக…” நாம் அதைப் பெருக்கிடல் வேண்டும்.

ஒவ்வொருவரும் இந்த உணர்வின் சொல்லாகப் படரச் செய்யப்படும் பொழுது… அது மழையாகப் பொழியும் நீருக்குள் விளைந்து… அதனின் உணர்வின் தன்மை ஆவியாக மாறி… தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகி… அடுத்து நல்ல தாவர இன வித்துக்களைப் பெருக்கும் தன்மையாக வருகின்றது.

இத்தனை நல்லதையும் நினைவுபடுத்தும் நந்நாள் தான் “அடிப் பெருக்கு…!”

உடலை விட்டுப் பிரிந்தால் எந்த நிலை பெறுகிறோம் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

Spirit world

உடலை விட்டுப் பிரிந்தால் “எந்த நிலை பெறுகிறோம்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

பல மகான்கள் தோன்றி சூட்சும நிலை கொண்டு சூட்சும நிலையில் வாழ்ந்து இவ்வுலகுடனே கலந்துள்ள மாபெரும் உலகமப்பா இவ்வுலகம். இவ்வுலகில் உள்ள நிலை மற்ற எந்த உலகத்திலும் இல்லையப்பா…!

ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலையில்தான் இவ்வுலகமே உருண்டு செயல்படுகின்றது. எல்லாமே ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலை கொண்டு தான் நடந்து செயல்படுகின்றது.

நமக்கு முதலில் தோன்றிய எல்லாப் பெரியவர்களும் (ஞானிகள்) நம்முடன் தொடர்புடைய பெரியாவர்கள்தான். நாம் பல ஜென்மங்கள் எடுத்து வாழ்ந்த நிலை கொண்டு நம்முடன் ஒவ்வொரு ஜென்மத்திலும் தொடர்புடையோர் எல்லா இடத்திலுமே உள்ளார்கள்.

சொந்தம் என்பது ஏதப்பா..? நமக்குச் சொந்தமாக எதையப்பா ஏற்றுக் கொள்வது…? எதை விடுவது…?
1.எல்லாமே நமக்குச் சொந்தம்தான். இவ்வுடலும் நமக்குச் சொந்தமான உடல் தான்.
2.பல நிலை கொண்டு பலர் சொல்வார்கள். இவ்வுடல் நமக்குச் சொந்தமில்லை என்று…!
3.”பயம்…! என்னும் பேயை அகற்றிவிட்டால்…….” இவ்வுடலில் இருந்தே எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நம் உயிரினம் செயல்படலாம்.

இயற்கையின் சக்தியிலிருந்து சக்தியாக உயிர் பெற்று வாழும் எல்லா ஜீவஜெந்துக்களுமே அச்சக்தியின் சொந்தத்துடன் சகலத்தையும் ஒன்றாக எண்ணி வாழ்ந்திட்டாலே வாழ்ந்த வாழ்க்கையின் நிறைவைக் காணலாம்.

எதிலும் சலிப்பும் சங்கடமும் தோன்றும் நிலை கொண்டு எண்ணத்தைச் செலுத்திடாதீர்கள்.
1.சலிப்பும் சோர்வும் வருவதினால்தான் பல சங்கடங்கள் நம்மை அண்டி
2.அதனால் நம் உடல் நிலைக்கும் உயிர் நிலைக்கும் பெரும் கேடு விளைவித்து
3.உலக வாழ்க்கையில் பற்றற்றவராக நம்மை ஆக்கி
4.நம்மை ஒரு பகடைக்காய்போல் நம்மை நாமே ஆக்கிக் கொண்டு,
5.வாழ்ந்த நிலையில் திருப்தியும் திறனும் அற்றுப் பெரும் சங்கடத்துடன் நம் ஜீவாத்மா பிரிந்து செல்லும் நிலையில்
6.பெரும் சங்கடத்துடனே அவ்வாத்மா பல நூறு ஆண்டுகள் சலிப்புடன் சுற்றிக் கொண்டே பெரும் ஈனப் பிறவியாகப் பிறவி எடுக்கிறது.
7.அதிலிருந்து மாறி விடுபடும் நிலைக்கே அவ்வாத்மாவுக்குச் செயலும் திறனும் இல்லாமல் போகிறது.

அவ்வாத்மா முடிவில்லாமல் பல நிலை கொண்ட உயிரினங்களைப் (உடல்களை) பெற்று
1.அத்தகைய சங்கட நிலை கொண்ட நிலையில்
2.இந்த உலகில் எண்ணிலடங்காப் பல ஆத்மாக்கள் சுற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே இதைப் படிக்கும் ஒவ்வொரு உயிராத்மாவும் அவரவரின் நிலை கொண்டு நம் உடலில் உள்ள உயிராத்மாவிற்கு நாம் என்றுமே தீங்கு செய்யலாகாது. இதை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாம் எடுக்கும் ஒவ்வொரு சுவாச நிலையும் கொண்டுதான் எண்ணங்கள் வருகிறது. இவ்வுயிர் ஆத்மாவிற்கு அந்தந்தத் தன்மைகளை அவ்வாத்மாவில் பதிய வைக்கிறது.

இந்தப் பூமியில் ஜெனித்த நாள் முதற் கொண்டு எடுத்த சுவாச அலையும்… எண்ண நிலையும்… சப்த அலைகளும்… நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் நம் ஆத்மாவிற்கு எல்லா நிலைகளும் தெரிந்து கொண்டே தான் உள்ளது.

இவ்வுடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றாலும் நம் ஆத்மா உடலுடன் இருக்கும் பொழுது நமக்கு நினைவில் நிற்காத சில செயல்களும் சிறு பிராய நினைவுகளும் அவ்வாத்மாவைச் சுற்றியேதான் நம் நினைவலையும் சப்த அலையும் சுற்றிக் கொண்டிருக்கும்.

வாழ்ந்த காலத்தில் பல நன்மை தீமைகள் எல்லாம் கலந்துதான் வாழ்ந்திருப்போம். எந்த நிலையிலும் நம் எண்ணமும் சப்த அலைகளும் நம் ஆத்மாவைச் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில்
1.நாம் இனி வாழும் – வாழ்ந்த நாட்களில் நாம் எடுத்த சுவாச அலையும் எண்ண அலைகளும் சப்த அலைகளும்
2.நாம் எல்லோருமே அச்சக்தியிலிருந்து தோன்றிய சொந்த பந்தங்கள்தான்.

ஆகவே ஒன்றுடன் ஒன்று பின்னிய வாழ்க்கை நிலையில்தான் வாழ்கின்றோம் என்ற உண்மை நிலையை ஒரு நிலைப்படுத்தி நாம் பிறவி எடுத்த நாள் முதற் கொண்டு நம்மைச் சுற்றியே வட்டமடித்துக் கொண்டுள்ள நினைவலைகளையும் சப்த அலைகளையும்
1.வாழ்ந்த வாழ் நாட்களில் நம்மை அறிந்தும் அறியாமலும் நாம் செய்த தவறென்னும் துவாரங்களை அடைத்திட
2.இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம்முள் உள்ள “ஈஸ்வர சக்தியை…” தியானித்துக் கொண்டே
3.வாழும் நாட்களை எல்லாம் பெரும் புனிதத்துடன் வாழ்ந்து புண்ணிய நிலை கொண்டு நாம் தவறி விட்ட அத்துவாரங்களைச் சீர் செய்து நல்ல நிலையில்
4.இனி நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ள நம்மைச் சுற்றப் போகும் சுவாச அலைகளையும் சப்த அலைகளையும் எண்ண அலைகளையும் பெரும் புனிதமாக்கி
5.இன்று சகலத்திலும் கலந்துள்ள சகல பாக்கியங்கள் பெற்ற பல மெய் ஞானிகளின் மகரிஷிகளின் சூட்சும நிலைகொண்ட வாழ்க்கையையே நாம் வாழ வேண்டும்.

இவ்வுலகம் வேறல்ல… அவ்வுலகம் வேறல்ல… சகலமும் ஒரே உலகம்தான்…! ஒன்றுடன் ஒன்று கலந்த சூட்சும நிலை கொண்ட உலகத்திற்குச் செல்லத்தான் என் அன்பான ஆசியை அருளுகின்றேன். வழிபெற்று வாழுங்கள்.

– ஈஸ்வரபட்டர்

எந்தக் காரியத்தை எண்ணி ஆண்டவனிடம் கேட்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Image

எந்தக் காரியத்தை எண்ணி ஆண்டவனிடம் கேட்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

thought and mind power

இன்றுள்ள உலக நிலை அனைத்திலுமே
1.தன் புகழ் உயர வேண்டும்
2.அந்தப் புகழ் உயரச் செல்வம் வேண்டும்
3.அந்தச் செல்வம் சம்பாதிக்க இவ்வுடல் என்னும் கூடு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற
4.இப்படிப்பட்ட ஆசைகளுக்காகத்தான் அநேகம் பேர் பல வழிகளில் ஆண்டவனை வணங்குகின்றார்கள்.

ஆண்டவனிடம் தன் ஆசைக்கும்… தன் புகழுக்கும் வேண்டக் கூடாது…! என்பவர்களை எல்லாம் இன்றைய உலகம் “பெரும் பைத்தியமாக…” எண்ணுகின்றது. ஆண்டவன் எங்குள்ளான்…? என்ற கேள்விக்கும் இன்றைய உலகில் அறிந்து பார்க்கும் தன்மை இல்லையப்பா.

ஆண்டவனிடம் வேண்டிக் கேட்காவிட்டால் இவ்வுடலுக்கு ஆகாரம் வேண்டியது இல்லையா…? ஆண்டவன் தான் “பசி…” என்ற பெரும் பசியை இவ்வுடலுக்கு அளித்துள்ளானே.
1.இப்பசியை அடக்க… நாம் உண்டு வாழ்வதற்கு…
2,அவ்வாண்டவனை வேண்ட வேண்டாமா…? என்றெல்லாம் பல நிலைகளில் எண்ணுகிறார்கள்.

ஆனால் இவ்வெண்ணப் பசியைப் பேராசை கொண்ட பசியாக அலைய விட்டு அதனால் வரும் பல இன்னல்களுக்கு நாம் அடிப்பணிகிறோம்…! என்பதை நம் எண்ணப் பசியில் எண்ணிப் பார்த்தால் புரிந்துவிடும்.

இவ்வாத்மா பசியை யாரும் எண்ணுவதில்லை. இவ்வுடல் பசிக்குத்தான் இவ்வுலகமே இன்றுள்ளது. இவ்வுடல் பசியினால் தான் வரும் நிலைகள் எல்லாமே நமக்கு நடப்பவை.

இவ்வுடல் பசிக்கு நாம் எடுக்கும் உணவும் பிற நிலைகளும் நம் ஆத்மாவிற்கு எந்த நிலையில் ஏற்கிறது என்று எண்ணி
1.இவ்வுடல் என்னும் பசியை
2.மனம் என்ணும் பசியால் அடக்கி ஆண்டிட முடியுமப்பா.

இவ்வுலகில் உதித்த எல்லோரும் ரிஷிகளைப் போலவும் ஞானிகளைப் போலவும் இவ்வுடலுக்கு உணவு உண்ணாமல் “உடல் பசியை அடக்கி ஆளுங்கள்… என்று சொல்லவில்லையப்பா…!

அன்ன ஆகாரம் இல்லாமல் வாழ்ந்திடுங்கள் என்று சொல்லவில்லை.
1.இவ்வுடல் என்னும் கூட்டை
2.”எண்ணம் என்ற ஏவலனால்…” (CONTROL) எந்த நிலைக்கும் வைத்திருக்க முடியுமப்பா.

உண்ணும் உணவிலிருந்து இவ்வுடலுக்கு எப்படிப் பல நிலைகள் கிடைக்கின்றதோ அதேபோல் தான் அவ்வாத்மாவிற்கும் கிடைக்கின்றது.

நாம் உண்டு உடுத்தி மகிழ்ந்து வாழ்ந்திடத்தான் வேண்டும். ஆனால் அதற்காகப் பேராசை நிலை கொண்டு தன் தேவைக்கு மேல் சேமித்து வைப்பவன் ஒவ்வொருவனும் “தனக்குத்தானே எதிரி ஆகின்றான்…!”

இன்று இவ்வுலகில் பெருகி உள்ள மக்கள் நிலையில் அன்பும் ஆதரவும் காட்டி வாழும் நிலைமை மறைந்துவிட்டது. தன் உடல் பசி ஒன்றுதான் ஓங்கி நிற்கிறது.

நல்ல உபதேசங்களைக் கேட்பதும் நல்லோர் வழியில் செல்வதும் நம் ஆத்மாவிற்குச் செய்யும் நற்பணிகளை நாம் ஏற்று நடக்கவில்லை. நம் எண்ணங்கள் எல்லாம் இவ்வுடல் என்னும் பசியைத் தீர்த்துக் கொள்ளத்தான் ஆண்டவனை எண்ணுவதாகவே உள்ளது.

இவ்வுடல் வேறு… இவ்வாத்மா வேறு…! இவ்வுடலில் இவ்வாத்மா தங்கி இருப்பதையே நாம் பெற்ற பாக்கியமாகக் கொண்டு இவ்வுலக நிலையில் இவ் இயற்கையில் கலந்துள்ள உண்மைகளை அறிந்தே மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலைப் பெற்று (விண்ணின் ஆற்றல்) நாமும் வாழ்ந்திட வேண்டும்.

அச்சக்தி நிலை ஒரே நிலையில்தான் உள்ளது. நாம் எந்த நிலை கொண்டு ஏற்கின்றோமோ… “அந்த நிலைக்குத்தான்…” அச்சக்தி நிலை நம்முடன் வரும்.

இன்று வீசும் இக்காற்றையே நாம் எண்ணிப் பார்த்தால் நம் நிலைக்கு எல்லாம் விளங்கும்.
1.கொதிக்க வைத்த தண்ணீரை ஆற்றுவதும் அக்காற்றுதான்.
2.அனல் கொண்டு எறியும் விறகை எரிய விடுவதும் அக்காற்றுதான்.
3.ஒரே நிலை கொண்டு வீசும் காற்றுதான் இவ்வனலையும் எரிக்க உதவுகின்றது, கொதி நீரையும் குளிரவிடுகிறது.

அதைப் போல சக்தி நிலையும் நம் நிலைக்கு இப்படித்தான் வருகின்றது. எந்த நிலைகொண்டு நாம் எங்கு செல்கின்றோமோ அந்த நிலைகொண்டு தான் அச்சக்தி நமக்கு உதவி புரிகின்றது.
1.நம் எண்ணத்திற்கு உகந்தபடிதான் அவ்வாண்டவனின் சக்தியையும் நாம் பெற முடியும்.
2.இவ்வுலகமே இவ்வெண்ணம் என்ற பசி நிலையைக் கொண்டுதான் சுற்றி வருகின்றது.
3.தன் எண்ணமும் செயலும் அமைதி கொண்டு தன் ஆத்மாவை அடக்கி ஆள்பவனுக்கு
4.தன் நிலையில் பதட்டத்தை வளர விடாமல்
5.நான் என்ற எண்ணம் கொள்ளாமல் நல்லுணர்வுடனே வாழ்ந்திட முடியும்.

அமைதியுடனும் அன்புடனும் நடத்திச் செல்லும் மனப்பக்குவம் பெற்று வாழத்தான் யாம் சொல்லும் இந்த உபதேசமும் தியானமும்.

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

Image

Agastyan kamandalam

அகஸ்தியனின் கையில் கமண்டலத்தை ஏன் காட்டியுள்ளார்கள்…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காடுகளிலே அவன் வாழ்ந்து வந்தாலும் அவன் சந்தர்ப்பம் தன் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறும் தகுதி பெற்றான்.

அதன் மூலம் தீமைகளை அகற்றிடும் வல்லமையையும் இருள் சூழும் நஞ்சினை அடக்கி அதை அவனுக்குள் ஒளியின் தன்மையாகவும் பெருக்கிக் கொண்டான்.
1.அது மட்டுமல்ல…!
2.இந்த பூமியின் இயல்பான நிலைகளில் அதை உருவாக்கவும்
3.அதற்குள் மாற்றம் செய்யக்கூடிய வல்லமையும் அவனுக்கே உண்டு.

அதை வைத்துத்தான் இந்தப் பூமியையே அவன் வாழ்ந்த காலத்தில் சமப்படுத்தினான். அது எவ்வாறு என்பதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்குக் காவியப் படைப்புகளும் உண்டு.

நம் பூமி சுழலும் போது துருவப் பகுதியின் வழியாக விண்வெளியில் இருக்கும் ஆற்றலைக் கவர்கின்றது. அது தான் பார்வதி…! – தன் பார்வையில் கவரும் சக்திகள். அவ்வாறு பூமி கவரும் அந்தச் சக்திகள் அனைத்தும் துருவப் பகுதியில் உறைந்து சிவமாகின்றது.

1.அதாவது பூமி சுழலும் சக்தி பார்வதி
2.அப்படிக் கவர்ந்த சக்திகளின் உறைவிடமாக அங்கே வருகின்றது துருவப் பகுதியில்
3.ஆகவே சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி. அதன் சுழற்சியின் வேக சக்தியால் விண்ணிலிருந்து வரும் சக்திகளைக் கவரப்படும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம். கவர்ந்த உணர்வின் தன்மை சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

ஆனால் பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்

ஏனென்றால் பூமி கவர்ந்த அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் அணுக்களாகப் பெருகி
1.அந்தச் சக்தியின் தன்மை அகண்டு செல்லப்படும் போது
2.ஒரு பக்கம் எடை கூடி பூமி கவிழும் நிலை வரும்.

அதனால் பூமி திசை மாறி எடையற்ற பகுதிகள் மீண்டும் சக்திகளைக் கவர்ந்து அங்கே உறைந்து முதலில் உருவானது மீண்டும் கரைய இது வளரும்.

இப்படி பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் ஆவதிலிருந்து அதை ஆகாதபடி அன்று அகஸ்தியன் இதைக் காத்தான். அதைத்தான் சிவன் “அகஸ்தியா… நீ தெற்கே செல்…!” என்று சொல்வதாகக் காட்டியிருப்பார்கள்.

கல்யாணக் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகமாகிவிட்டால் எல்லாம் அதிர்ந்து விடும். அப்பொழுது பூமியின் நிலை தடுமாறி விடும். ஆகவே நீ தெற்கில் சென்று பூமியினைச் சமப்படுத்து..! என்ற எண்ணத்தை உருவாக்கியதாக அந்தக் காவியம் உண்டு.

அகஸ்தியின் தெற்கிலே சென்று சமமான பகுதியில் நின்று சூரியனின் காந்தப்புலனை அவன் எடுத்து இந்த பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
1.வடக்கில் கவரும் சக்திகள் பனியாக உறைந்தாலும்
2.தெற்கிலே நேராகக் கவரப்படும் சூரியனின் ஒளிக்கதிரால் அந்தப் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து
3.இந்தப் பூமியின் தன்மைகள் சமமாக ஆனது.

இதைத் தான் சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே சென்று இந்த உணர்வின் தன்மையை உற்றுப் பார்த்து நீ பூமியைச் சமப்படுத்து…! என்று சொன்னதன் மூலக் கருத்து. அதனால் தான் அகஸ்தியனின் கையிலே கமண்டலம் கொடுத்திருப்பார்கள். அதற்குள் நீர்…!

ஏனென்றால் பூமியிலிருந்து விண் சென்ற அந்த முதல் மனிதன் அகஸ்தியன் தென் பகுதியிலே வெப்பத் தணல்களை ஈர்க்கும்படியாகப் பூமியைத் திருப்பிப் பனிப்பாறைகளை நீராகக் கரையச் செய்து இந்தப் பூமியைக் காத்தான்…! என்று அவனுக்குப் பின் வந்த ஞானிகள் அதை உணர்த்தினார்கள்.

இன்றைய விஞ்ஞான அறிவால் ஒவ்வொருவரும் தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் விஞ்ஞானத்தால் விளைந்த நஞ்சுகள் அதிகரித்து இந்தப் பூமியில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்துவிடும் நிலையாக இன்று வளர்ந்து கொண்டுள்ளது.

அழிவை மாற்ற வேண்டும் என்றால் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நாம் போற்றும் அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுத்துப் பரவச் செய்தால்தான் இந்தப் பூமியின் நிலையை மீண்டும் சமப்படுத்த முடியும்…!

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

Image

Lord Ayyappa

பதினெட்டாம்படிக் கருப்பு என்று ஏன் சொல்கிறோம்…!

வாழ்க்கையில் அவசரம் ஆத்திரம் போன்ற உணர்வுகள் கொண்டு தன்னைத் திரும்பி பார்க்காது போகும் பொழுது நம்மை அறியாமலே இருளில் மடிந்து (விழுந்து) விடுகின்றோம்…! அப்படி விழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? என்ற நிலையைக் காட்டுவதற்குத் தான் பதினெட்டாம் படியை வைத்துக் காட்டுகின்றார்கள்.

பதினெட்டுப் படியைச் சீராக வைத்து அதை வழுக்கிடும் நிலைகளாக அமைத்து அங்கே அதற்கு அருகிலே “கருப்பாயி கருப்பணன்…” என்ற தெய்வங்களையும் காட்டுகின்றார்கள்.

ஐயப்பன் மேல் பக்தி கொண்டு வந்தாலும் ஐயப்பனைப் பார்க்க வேண்டும் என்ற வேகத்தில் வரும் போது மற்றதைச் சிந்திக்காது செயல்படும் தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.

நம் எண்ணம் ஒருமித்து உயர்ந்த குணங்களைப் பெற்றாலும் நாம் போகும் பாதையில் எத்தனையோ இடையூறுகள் வருகின்றது. மற்றவர்கள் செய்யும் தவறுகளையோ மற்றதுகளையோ அதை எல்லாம் நம் கண்ணில் பார்க்காமல் இருக்க முடியாது.

அதன் உணர்வுகள் வரும் போது அதை எல்லாம் நம் உயிரான விஷ்ணு வரம் கொடுத்து நம் உடலாகப் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் அறிந்த பின் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…? எதை நம் உடலுக்குள் சிருஷ்டிக்க வேண்டும்…?
1.நமக்குள் தீமை விளைவிக்கும் இருளைத் தணித்து விட்டு
2.நம் வேகத்தின் உணர்வை அடக்கிப் படி மீது ஏறும் போது
3.தன் அருகில் வருவோரை அழைத்து அரவணைத்துச் செல்லும் உயர்ந்த பண்புகளை உடலுக்குள் வளர்க்கும்படிச் சொல்கின்றார்கள்.

அதாவது நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமையான நிலைகளைத் தனக்குள் புகவிடாது தடுத்து அந்தத் தீமைகளை எவ்வாறு அடக்க வேண்டும்…? என்று நாம் தெளிந்திடும் நிலையாக ஐயப்பன் ஆலயத்தில் காவியத் தொகுப்பாகக் கொடுத்து பதினெட்டாம் படியை வைத்துள்ளார்கள்.

அன்று அவன் கூறிய அறிவுப்படி அதை அமைத்தாலும் இப்போது வெறும் ஐதீகம்… சாஸ்திரம்…! என்ற நிலைகளில் போய்விட்டது.

பதினெட்டாம்படிக்குச் சென்றால் நான் முதல் வருடம் போனேன். தேங்காய் சிதறுகாய் போட்டேன். அதற்கு வேண்டிய சாஸ்திரத்தைச் செய்தேன். ஐயப்பன் எனக்கு எல்லாம் செய்வான். ஆகையினால்
1.மூன்றாவது வருஷம் நான்காவது வருஷம் என்று இப்படிப் பதினெட்டு வருஷம் சென்றேன்.
2.இப்பொழுது முழுமை அடைந்து நான் ஐயப்பனின் அருளையே பெற்று விட்டேன் என்ற நிலைக்குத்தான் செல்கின்றார்கள்.

ஆனாலும் ஐயப்பன் கோவிலில் கூட்டம் கூடக் கூடக் அங்கே சென்று பதினெட்டாம்படி ஏறுவதற்குள் போகும் பாதையிலே எத்தனையோ பேர் மரணமடைகின்றார்கள்… (ACCIDENT) என்று கேள்விப்படுகின்றோம்.

ஐயப்பன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டு சென்றாலும் அருகிலே இருப்போர்களை அரவணைத்துச் செல்வதற்குப் பதில் மற்றவரை வீழ்த்துகின்றோம்.

ஏனென்றால் அந்த வேக உணர்வுகள் கொண்டு செல்லும் பொழுது அருகில் வருபவனை அறியாது இருள் சூழ்ந்து கொள்கின்றது. அந்த இருள் சூழ்ந்த நிலைகள் வருவதைக் குறைப்பதற்குத் தான் அங்கே கருப்பாயி கருப்பணன் என்று வைத்து அந்த இருளை நீக்க வேண்டும் என்று காண்பிக்கின்றார்கள்,

ஆகவே ஐயப்பனின் அருள் கொண்டு மற்றவரையும் தன்னுடன் அரவணைத்துச் சென்று அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுதல் வேண்டும்.
1.பதினெட்டாம் படி ஏறுவதற்கு முன் தான் அருகிலே இருப்போரை அரவணைத்து
2.அவர்கள் மேலே செல்லட்டும். அவர்கள் ஐயப்பனின் அருளைப் பெறட்டும் என்ற இந்த உணர்வின் தன்மை வரும் போது
3.நமக்குள் வரும் இருள் சூழும் நிலைகள் குறைந்து அமைதி கொண்டு நாம் அங்கே செல்ல போக முடியும்.

இதைத்தான் “வாழ்க்கையில் ஒழுங்குபடுத்தும் முறையாக… அங்கே காண்பிக்கப்பட்டு…!” அந்த உண்மையினுடைய நிலைகளை வளர்த்து பிறருக்குத் தீங்கு இல்லாத நிலைகள் மேலெ செல்லும் பொழுது அந்த மெய் ஞானி காட்டிய உணர்வின் தன்மையைப் பெற முடியும் என்று உணர்த்துகின்றார்கள்.

சாதாரண மக்களுக்கும் பக்தி என்றால் எது…? என்று காட்டி
1.மற்றோர்கள் உயர வேண்டும்.
2.அவர்கள் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்
3.அவர்களும் மெய் ஒளி காண வேண்டும் என்ற இந்த அரவணைப்பைக் கொண்டு செல்ல வேண்டும்.
4.அருள் ஞான உணர்வுகளைச் சீராக வளர்க்க வேண்டும் என்பதை அங்கே தலையில் சுமக்கச் செய்து
5.படி மீது ஏறுவதாக… அதாவது மேலே விண் செல்லும் மார்க்கத்தில் ஏறிச் செல்ல வேண்டும்…! என்று பதினெட்டாம்படியாகக் காட்டுகிறார்கள்.

அகத்தியரைப் போன்று அகத்தின் ஆற்றலை நாமும் அறிய வேண்டும்

Inner strength

அகத்தியரைப் போன்று அகத்தின் ஆற்றலை நாமும் அறிய வேண்டும் 

ஆரம்பத்தில் விமானத்தைப் புதிதாக உருவாக்கி அதைக் கண்டுபிடித்தவன் அதை வைத்து வானிலே பறக்க முயற்சி செய்த போது அவன் தற்கொலை செய்வதற்காகத்தான் இதை எல்லாம் செய்கிறான் என்று மற்றவர்கள் சொன்னார்கள்.

அவன் கண்டுபிடித்த நிலைகளை எண்ணிப் பார்த்து அவனின் அறிவின் தன்மையை அவர்கள் அப்பொழுது எண்ணவில்லை. அவனுடைய யுக்திகளையும் அறிய முற்படவில்லை.

ஆகவே ஒரு மனிதன் ஒரு உயரிய தன்மைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அவன் சொல்லும் உயர்ந்த தன்மைக்குள் இருக்கும் உட்பொருள் என்ன…? என்று அறிந்து
2.அந்த உயர்வின் சிந்தனைக்கு நாமும் சென்று வந்தால்
3.அந்தச் சிந்தனைக்கொப்ப நம் சொல்லின் தன்மை அமையும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி குறையான உணர்வை நமக்குள் எடுத்து விட்டால் அந்தக் குறையின் உணர்வின் தன்மை நமக்குள் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலையே நம் சொல்லுக்குள்ளும் செயலுக்குள்ளும் கலந்து நம் சிந்தனையையே பிரித்துக் காட்டும்.

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு நாம் ஒரு கம்ப்யூட்டரைச் செயல்படுத்துகிறோம் என்றால் ஒரே நிமிடத்தில் நூறு பாஷைகளில் மொழி பெயர்ப்பு செய்கிறது.

அதனுடைய காந்தப்புலன் இயக்க ஓட்டத்தில் அழுத்தத்தை அது செயல்படுத்தும் போது எந்தெந்தப் பாஷை இருக்கின்றதோ அந்த ஒலிக்குத் தக்கவாறு எழுத்துகளை முதலில் உருவமைத்துக் கொள்கின்றது.

அப்போது ஒரே வரிசையில் செல்லப்படும் போது இதனின் அழுத்தத்திற்குத் தக்கவாறு அதை மொழி பெயர்ப்புச் செய்வதும் அதற்கடுத்து
1.அதே எழுத்திற்கு இதனுடைய நிலைகள் இன்னது தான் என்று ஒலி அலைகளைப் பதிவு செய்வதும்
2.ஒரு நிமிடத்திற்குள் அங்கே போய்ப் பாய்வதற்கு முன் மொழி பெயர்ப்பு செய்து நம் கண்ணுக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துகின்றது.

ஆனால் அதை ஒரு மனிதன் மொழி பெயர்ப்பு செய்து அதனின் அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் ஒவ்வொன்றாக எடுத்து அத்தனை மொழிக்கும் தனித் தனியாகப் பல தடவைகள் செய்ய வேண்டும்.

ஆனால் பதிவு செய்யும் உணர்வைக் கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்காக அது பதிவு செய்து கொள்கின்றது. ஆணையிட்ட பின் அதன் வரிசையிலே இதனுடைய நிலைகளைத் தெளிவாக்கிக் கொண்டு ஒரு நிமிடத்தில் நாம் அந்தப் பாஷைகளைப் புரிந்து மொழி பெயர்ப்பு செய்து காட்டுகின்றது.

அதே போல வான மண்டலத்தில் சுழலும் கோள்களைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் மற்ற சூரியக் குடும்பங்களையும் இன்று காணுகின்றார்கள். புதிது புதிதாக விண் கற்கள் வருவதையும் பூமிக்கு அருகில் வருகிறது என்றும் பல இயந்திரங்களையும் கருவிகளையும் வைத்துப் பார்த்துச் சொல்கிறார்கள்.

விஞ்ஞான அறிவின் தன்மை கொண்டு ஒலி/ஒளி அலைகள் அங்கே வரப்படும் போது
1.எத்தனை டிகிரியில் இதனுடைய அலைகள் வருகின்றது…?
2.இதனின் வேக அழுத்தம் எவ்வாறு இருக்கின்றது…?
3.கோள்களின் சுழற்சியின் வேகம் எவ்வாறு இருக்கிறது…?
4.இது நடு மையத்தில் ஊடுருவி நம் சூரியனின் ஈர்ப்பிற்கு வரும் போது இடைமறித்து எந்தக் கோள்களின் பக்கம் சாய்கின்றது…? என்று
5.அதன் நிலைகளைத் தெளிவாகக் கண்டுணர்கின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் எத்தகைய புறப் பொருளின் உதவிகள் இல்லாமலே அன்றைய மெய் ஞானிகள் வான இயல் சாஸ்திரத்தைக் கண்டார்கள். அதையெல்லாம் மற்றவர்களுக்கும் உணர்த்தவும் செய்தார்கள். அப்படி மெய் ஞான அறிவால் காணக் கூடியதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் இப்போது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

யாம் பதிவு செய்யும் உணர்வுகள் கொண்டு அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் நீங்கள் ஒன்றினால் அதே உணர்வு உங்களுக்குள் பெருகி
1.விஞ்ஞானிகள் கருவியின் நிலைகள் கொண்டு பார்த்துச் சொல்வதை
2.நீங்கள் கருவியின் துணை இல்லாதபடி உங்கள் நினைவின் ஆற்றலைக் கொண்டு செல்லும் போது
3.அந்த விண்ணின் அதிர்வலைகளை நீங்களும் நுகர்ந்துணர்ந்து அதன் உணர்வலைகளைக் குவித்து உங்களாலும் சொல்ல முடியும்.

விண்ணிலிருந்து வரும் கற்கள் (ASTEROIDS) நம் பூமியில் விழுந்து விடுமோ…! இன்று விஞ்ஞானிகள் பயத்தால் வெளிப்படுத்தினாலும்
1.அந்த மெய் ஞானி உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் எண்ண அலைகளை அங்கே பாய்ச்சி
2.அத்தகைய பாறை திசை திரும்ப வேண்டும்…! என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒரு ஆயிரம் பேர் சொல்வார்கள் என்றால்
3.நாம் பாய்ச்சும் ஒலி அலைகள் “அங்கே குறுக்காட்டி…!” (இடைமறித்து) அதைத் திசை மாற்றவும் உதவும்
4.நம் பூமியில் விழுகாது செய்ய முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்வது உங்களுக்கு எளிதாகத் தெரியும். ஆனால் உங்களுக்குள் அத்தகைய ஆற்றல் உண்டு. அந்த மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உங்களாலும் பெற முடியும்… அவர்களைப் போல அனைத்தையும் காண முடியும்…! என்பதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

Gnana and education

பூமிக்கடியில் மறைந்து வாழும் எதிரிகளை எப்படிக் கண்டுபிடிக்கின்றார்கள்…?

இன்று அமெரிக்காவிலோ அல்லது வேறு நாடுகளிலோ விளையாடுகிறார்கள் என்றால் என்றால் அதனின் ஒலி/ஒளி அலைகளை அங்கிருந்து பரப்பப்படும் போது நேரடி வர்ணனையாக உலகம் முழுவதும் காண முடியும் என்ற நிலைகளுக்கு இன்றைய விஞ்ஞான அறிவில் செய்துள்ளார்கள்.

அதைப் போல உங்கள் வீட்டில் ஒரு சிறு வயரை (WIRE) நுழைய வைத்து விட்டால் போதும். உங்கள் வீட்டில் என்னென்ன சப்தங்கள் நடக்கின்றதோ அங்கே இருக்கக்கூடிய உருவங்கள் எதுவோ அதைக் காண முடியும். கேட்க முடியும். எலிகளோ அல்லது தூசிகளோ அவைகள் மூலமாகப் பார்க்க முடியும்.

ஏனென்றால் உலகப் போர் நடந்த காலங்களில் மற்ற நாட்டு நிலைகளை அறிவதற்காகச் செய்தார்கள். பெரிய மகாநாடுகள் நடக்கிறது என்றால் அதாவது ரகசிய ஆயுதங்களாக அங்கே இதனுடைய நிலைகளை அமைத்து விடுவார்கள்.

பறந்து செல்லும் “ஈ…!” போன்ற உயிரினத்தில் அதற்குள் ரேடியத்தைப் பாய்ச்சி உள்ளே அனுப்பி வைத்து விடுவார்கள். உள்ளே சென்ற பின் அங்கிருக்கும் அதனின் உணர்வலைகளைக் கவர்ந்து என்ன பேசுகின்றார்கள்…? யார் பேசுகின்றார்கள்…? என்ற நிலையில் அந்த உருவத்தையே அங்கு படமெடுக்கும் அளவிற்கு இதைக் கண்டுணர்ந்தார்கள்.

மேலை நாடுகளில் ஒவ்வொரு நாட்டின் ரகசியங்களையும் ஒவ்வொரு நாட்டினுடைய நிலைகளையும் இப்படித் தான் கண்டுணர்ந்தார்கள்.
1.இப்போது அதெல்லாம் இல்லை.
2.அதைக் காட்டிலும் மிகவும் நுட்பமாக வந்துவிட்டார்கள்.

ரேடியோ அலைகளைப் போன்று லேசர் (LASER) என்ற நுண்ணிய அலைகளை விண்ணிலிருந்து அந்த ஒலி/ஒளி அலைகளைப் பரப்பப்படும் போது சூரியன் காந்த சக்தி அதை அணுக்களாக படரச் செய்கிறது.
1.எங்கே எதனை அறிய வேண்டும் என்று எண்ணுகின்றார்களோ
2.அங்கே இந்த அலைகளைப் பாய்ச்சுகின்றார்கள்.
3.ஒரு இடத்தில் பேசுகிறார்கள் என்றால் அந்த ஒலி அலைகளின் காந்தப் புலன்கள்
4.சுவர்களிலே படப்படும் போது அந்த ஒலி அலைகளைக் கவர்ந்து அதைப் பதிவாக்கிக் கொள்கிறார்கள்.
5.அதை மீண்டும் ஆயிரம் மடங்கு பெருக்கப்பட்டு
6.என்ன பேசினார்கள்..? எந்த உருவம் அதைப் பேசியது…? என்று விஞ்ஞான அறிவில் தெளிவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் அன்றைய மெய் ஞானி என்ன செய்தான்…? மெய் ஞான அறிவால் தன் உணர்வின் எண்ண அலைகளை விண்ணிலே பாயச்சி அதைத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்.

தன்னுடைய கூர்மையான எண்ணத்தைக் கோடி (எண்ணிலடங்காத) என்ற நிலைகள் அந்த உணர்வின் தன்மைகளைப் பெருக்கிப் பெருக்கி
1.விண்ணிலே என்ன செயல்கள் நடக்கிறது என்று தன்னுள் அறிந்தான் மெய் ஞானி.
2.அவன் ஆக்கத்தை ஊடுருவி அது எங்கிருந்து தோன்றியது…? என்ற நிலையை அறிய
3.விண்ணிலே தன் எண்ணத்தைப் பரப்பி அது உருவான காலத்தையும் அறிந்து கொண்டான்.
4.அதே சமயத்தில் அந்த உணர்வின் செயலாக்கங்கள் எதன் வழிகளில் மனிதனுக்குள் வந்தது..?
5.எதன் வழியில் மனிதனுக்குள் அது இயக்குகின்றது…? என்பதையும் மெய் ஞானி கண்டுணர்ந்தான்.

இதைப் போன்று தான் இன்றைய விஞ்ஞான அறிவின் தன்மையும் அது வளர வளர சூரியன் காந்த சக்தி ஒலிபரப்பும் ஒலி/ஒளிக்குள் சக்தி வாய்ந்த அலைகளைப் பாய்ச்சி
1.காற்றே புகாதபடி ஒரு அறை (ROOM) இருப்பினும்
2.தான் பாய்ச்சும் காந்தப் புலனறிவுகளை அந்த அறையின் மாடிகளில் (உச்சியி) உராய்ந்த பின்
3.அறைக்குள் இருக்கும் உணர்வலைகளை எல்லாம் அறிகின்றான்.
4.ஈராக்கில் சதாம் ஹுசேனைப் பிடிக்க இவ்வாறு தான் செய்தான்.

அவன் (சதாம் ஹுசேன்) கண்டு கொள்ள முடியாத இந்த உணர்வின் தன்மையை மேலே ஒலி/ஒளி அலைகளைப் பரப்பி அதற்குள் என்னென்ன சம்பவங்கள் நடக்கிறது என்ற நிலையும் அவன் முழுமையாக அறிந்து கொண்டான். விஞ்ஞான அறிவைக் கொண்டு தன் எதிரிகளை வீழ்த்திட அவன் இப்படிக் கண்டுணர்ந்தான்.

எந்தக் குண்டினாலேயும் தன்னை யாரும் தாக்காதபடி அவன் பூமிக்கடியில் கட்டடத்தைக் கட்டி (UNDER GROUND) வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவன் இருக்கும் இடத்தைக் கண்டு அதற்குள் ஊடுருவிக் குறி தவறாது பாய்ச்சி நொறுக்கி அவனைப் பிடித்தான். ஏனென்றால் இது இவனுடைய பரிச்சாந்தரம்.

இதே போல் தான் விண்ணிலே சுழன்று கொண்டிருக்கும் கோள்களின் இயக்கங்களையும் சில பாறைகள் (ASTEROIDS) அது போகும் பாதைகளையும் காணுகின்றார்கள். அதனின் உருவத்தையும் படமாக்குகின்றார்கள் விஞ்ஞானக் கருவிகள் கொண்டு.

அதனின் வேகத்தையும் அது மற்ற எந்தக் கோளில் போய் விழுகும் என்பதையும் அளந்தறிந்து சொல்கிறார்கள். ஏற்கனவே இருபத்தைந்து வருடத்திற்கு முன் பெரும் பாறை (கோளின் சிதைந்த பகுதிகள்) வியாழன் கோளில் விழுகும் என்று கணக்கிட்டார்கள்.

ஆனால் இதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளில் அந்தப் பாறைகள் வியாழனில் விழுகும் என்று இவர்கள் சொல்வதற்கு முன்னாடியே யாம் சொல்லியிருக்கின்றோம்.

ஆரம்ப உபதேசங்களை (1980களில்) எம்மிடம் கேட்டுப் பதிய வைத்தவர்களுக்கு இது ஞாபகம் இருக்கும். இதற்கு முன் அது நம் பூமியைத் தொட்டே அது சென்றிருக்கின்றது. ஆனால் இங்கே விழுகவில்லை.

இதைப் போன்ற நிலையில் விஞ்ஞான அறிவு கொண்டு இவர்கள் ஒவ்வொன்றாக அறிந்து கொள்வதற்கு வெகு நாளாகும். ஆனால் நமது குருநாதர் அவர் கண்டுணர்ந்த அறிவால் அதனை எமக்குள் பதிவாக்கித் தெளிவாக எனக்கு எடுத்துக் (ஞானகுரு) காட்டினார்.

இதை எல்லாம் உங்களுக்கு ஏன் சொல்கிறேன் என்றால் “இவருக்கு என்ன தெரியும்…?’ என்று நினைத்து லேசாக விட்டுவிடாதீர்கள் என்பதற்குத்தான்.

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

Image

wisdom-light

ஞானத்தின் வளர்ச்சியைக் கொண்டவனால் எதைப் பெருக்க முடிந்தது…? ஞானத்தை அறியாதவர்கள் (சூனியமாக) எதைப் பெருக்கினார்கள்…?

 

ரைட் சகோதரர்கள் (WRIGHT BROTHERS) இரண்டு பேரும் சேர்த்து அன்று ஒரு விமானத்தைச் செய்யத் தொடங்கினார்கள். பறவைகள் பறப்பதை ஊன்றிப் பார்த்து “அதைப் போல எப்படியும் பறக்க வேண்டும்…!” என்று முயற்சி செய்தார்கள்.

பறவைகள் அதன் இறக்கைகள் வீசும் நிலைகள் கொண்டு அதற்குள் ஏற்படும் காற்றின் இயக்கத்தைக் கண்டுணர்ந்த பின்
1.“ரேடர்” (RUDDER) அதனுடைய வேகமான நிலைகள் சுழற்சியாகி
2.மறுபடியும் தனக்குள்ளேயே சுழலச் செய்து
3.அந்த உணர்வின் ஈர்ப்பலையால் உந்தச் செய்வதும்
4.அது ஈர்க்கும் நிலைகள் கொண்டு மிதக்கும் நிலைகளையும் கண்டுபிடித்தான்…! (இரண்டு ரெக்கைகளை வைத்து.)

அதன் மூலம் இடைமறித்து வரும் காற்றின் நிலைகளை ஊடுருவிச் செல்வதும் அதனின் சுழலும் வேகத்தில் தனக்குள் அந்தக் காற்றை ஈர்க்கும்படிச் செய்து “தானாகவே மிதக்கச் செய்ய முடியும்” என்று விமானமாக அன்று கண்டுபிடித்தான்.

அதைக் கண்டுபிடித்து அவன் பறப்பதற்காக முயற்சி செய்து கொண்டு இருந்தான். ஆனால் மற்ற அனைவரும் என்ன செய்தார்கள்…?
1.தற்கொலை செய்வதற்கு தயார் ஆகிவிட்டார்கள்…
2.இந்த இரண்டு பேரும் மரணமடைவதற்கு எதுவோ அதற்காக வழிவகுத்துக் கொண்டு உள்ளார்கள் என்று
3.அந்நாட்டு மக்கள் அந்த இருவருடைய நிலைகளை எண்ணிப் பரிதாபப்படுகின்றார்கள்.

ஆனால் தன் எண்ணத்தால் வெற்றிகரமாகப் பறந்தும் காட்டினான். அத்தகையை வலுவான சிந்தனை கொண்டு அதைச் செயல்படுத்திக் காட்டினான்.

அவன் கண்டுபிடிப்பைப் பின் தொடர்ந்தவர்கள் அவர்களைப் போன்ற சிந்தனையைக் கொண்டு இன்று புவி ஈர்ப்பைக் கடந்து செல்லும் இராக்கெட்டுகளைக் கண்டுபிடித்தார்கள்.

மேலே சென்று மீண்டும் புவி ஈர்ப்பிற்குள் வரும் போது உராயும் தன்மை கொண்டு அது சூடாகாமல் தணிந்து பூமிக்குள் இறங்கும் நிலையையும் கண்டுபிடித்தான் அதன் வரிசையில் வரக்கூடியவன்.

1.ரைட் சகோதரர்கள் விஞ்ஞானத்தின் அறிவை அங்கே பெருக்கினார்கள்… “விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்…!”
2.ஆனால் அதன் அருகிலே இருந்தவர்கள் அவர்களுடைய செயலைப் பார்த்து
3.பாவம்.. சாகப் போகிறார்கள்…! என்ற நிலையில் வேதனையத் தான் பெருக்கிக் கொண்டார்கள்.

இதைப் போன்று தான் முதலில் டி,வி.யைக் கண்டுபிடிக்கும் பொழுது புவி ஈர்ப்பின் நிலைகள் கொண்டு மனிதன் தன் எண்ணத்தால் எதைக் கவர்கின்றான் என்று அவன் உணர்ந்தான்.

அதை வைத்துத் தன் உணர்விற்குள் அவன் சிந்தனையை உயர்த்தினான்… பெருக்கினான்…! அந்தப் பெருக்கத்தின் தன்மை கொண்டு
1.ஒரு காந்தப்புலன் கவரும் நிலையும்
2.கவர்ந்திட்ட உணர்வின் தன்மை எதிலே உறைகின்றதோ
3.”அது நிழல் படமாகத் தெரிகின்றது…!” என்றும் அறிந்துணர்கின்றான்.

நீங்கள் வீட்டை அடைத்துக் கொண்டு பாருங்கள். அல்லது வீட்டில் ஜன்னலை அடைத்து விடுங்கள். அதன் வழியாகச் சிறிதளவு ஒளி வீட்டுக்குள் பட்டால் போதும்.
1.வெளியிலே யாராவது ரோட்டிலே நடந்து சென்றால்
2.அந்த ஒளி அலைகள் – “அவர்களின் நிழல்”
3.நம் வீட்டிலே தலை கீழாக நடந்து போவதைப் பார்க்கலாம்.

அதாவது அடைத்திருக்கும் வீட்டிற்குள் வெளிச்சம் புகும் இடத்தின் அருகிலே செல்லப்படும் போது தலை கீழாக நடந்து போகிற மாதிரித் தெரியும். (இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்)

கேமராக்களின் மூலம் நேர்முகமாக எடுத்த படங்களைத் தலை கீழாகப் போட்டால் தான் நேராகத் தெரியும். ஆரம்ப காலச் சினிமாப் படங்கள் எல்லாம் அப்படித்தான்.

விஞ்ஞான அறிவால் “எதிர் மறையின் இயக்கங்கள்” எவ்வாறு இயக்குகின்றது என்று அவன் அந்த அறிவைப் பெருக்கினான். பெருக்கிக் கொண்ட பின் அது எவ்வாறு ஒலி/ஒளியாக உணர்வலைகளை எவ்வாறு கவருகின்றது என்று டி.வி.யைக் கண்டுபிடித்த பின் அவன் பேரானந்தப் பெரு மகிழ்ச்சியைப் பெருக்கினான்.

அவன் டி.வி.யை உருவாக்கி மற்றவர்களிடம் அதைச் செய்து காண்பிக்கப்படும் போது பெண்களெல்லாம் சேர்த்து கோழி முட்டையால் அவனை அடித்துக் கொல்வதற்காக ஆரம்பித்தார்கள். அவன் போலீஸ் ஸ்டேஷனில போய்ச் சரணடைந்தான்.

புதிதாகக் கண்டுபிடித்தவன் விஞ்ஞான அறிவு கொண்டு சந்தோஷத்தைப் பெருக்கினான். ஆனால் இவர்கள் அவனைத் தாக்கும் உணர்வைப் பெருக்கினார்கள்.

காரணம்… நாங்கள் வீட்டிலே குளிப்போம். பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதற்காக வேண்டி இந்த மாதிரிச் செய்திருக்கின்றான் என்பது அவர்கள் குறுகிய எண்ணம்.
1.எதனின் இணைப்பின் நிலைகள் கொண்டு எது இயங்குகிறது என்ற நிலையை அவர்கள் அறியாது
2.அந்தத் தீமையின் நிலையைப் பெருக்கிக் கொண்டார்கள் அவர்கள்,

ஏனென்றால் அவர்கள் கண்களால் அவன் கண்டுபிடிப்பைப் பார்க்கப்படும் போது அந்தக் குறையான உணர்வுகளை அவர்கள் உயிர் பிரம்மமாக்கி அதனின் குழந்தையாகச் சிருஷ்டித்து அதனின் செயலாக்கமாக அவனைத் தாக்கும்படிச் செய்கின்றது.

ஆனால் அவனோ உயர்ந்த நிலைகள் கொண்டு விஞ்ஞான அறிவைக் காணும் நிலைகளில் அவனுக்குள் அதைப் பெருக்கினான். அவனைப் போன்ற எண்ணம் கொண்டவர்கள் இன்று எத்தனை மடங்கு பெருக்கி உள்ளார்கள்…!

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்கள் செயல்களை எல்லாம் உற்றுப் பார்த்தாலும் பார்த்த நிலையில் நாம் நமக்குள் எதைப் பெருக்குகிறோம் என்று சிந்திக்க வேண்டும்.

1.நமக்குள் வேதனையையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் கொதிப்பையும் பெருக்க வேண்டியதில்லை.
2.மாறாக மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு வர வேண்டும்.
3.இந்த மனித வாழ்க்கையில் நாம் முழுமை அடைய வேண்டும் என்பதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

தன்னை அறிந்தவன் இந்த மண்ணை அறிந்தவன் விண்ணை அறிந்தவன் அவர்கள் எல்லாம் இன்றும் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருமே இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி ஒளியின் சுடராகப் பெருக்கி உயிராத்மாவை ஒளியாக மாற்றி அந்த எல்லையை அடைதல் வேண்டும். அது தான் கடைசி எல்லை…!

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

Image

Bliss light soul

வெறுமனே ஆற்று வெள்ளத்தில் குளித்தால் அது ஆடிப் பெருக்கு அல்ல…!

 

நாம் ஒரு தொழில் செய்யப் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதை ஆரம்பிக்கும் பொழுதே
1.தொழில் நஷ்டமாகி விடுமோ…!
2.சரியான லாபம் வராமல் போய்விடுமோ…! என்ற பயத்தை ஊட்டிச் செயல்படுத்துவோம் என்றால்
3.தொழிலைச் சீராகச் செய்யும் அறிவு இழக்கப்படுகின்றது.

ஆகவே அந்தக் குறையான எண்ணத்தை எடுத்துக் கொண்டு அதையே அதிகமாக வளர்த்தால்
1.குறையின் உணர்வுகள் அதிகரித்து
2.எந்தச் செயலை எடுத்தாலும் அது முன்னாடி வந்து நம்மைப் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கும்.

அதற்குப் பதிலாக அந்தக் குறைகளை எல்லாம் நீக்கும் உணர்வின் எண்ணம் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு அதை அறிய முற்படும் போது
1.குறையை அகற்றிப் பிழைகளை நீக்கிச் செயல்படும் உணர்வுகள் இணைந்து
2.உங்கள் தொழிலைச் சீராக்கச் செய்யும். சரியான பலனும் கொடுக்கும்.

அதைப் போன்று குடும்பத்தில் குறைகள் வந்தாலும் அந்தக் குறைகள் எதிலே எப்படி வந்தது என்று அதை அறியும் தன்மைக்கு அந்த மகரிஷியின் அருள் சக்தியைத் தனக்குள் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்ற இதை நம்முள் பெருக்கி இருள் சூழ்ந்த நிலைகளைப் பிளந்து குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பெருக்க வேண்டும்.

உதாரணமாகக் காற்று அதிகமாக வரும் போது தூசிகளை எல்லாம் எப்படி அடித்துச் செல்கின்றதோ அதைப் போன்று எத்தகைய தீமைகள் நம்மைச் சூழ்ந்து வந்தாலும் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து நம்மை அறியாது வந்த தீமைகளை நீக்கிடல் வேண்டும்.

இந்த உணர்வினை நமக்குள் பெருக்குதல் வேண்டும். இது தான் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்பது.

ஆனால் ஆற்றிலே வெள்ளம் போகிறது. பதினெட்டாம் பெருக்கு என்று அதிலே போய்க் குளித்துவிட்டுப் பின் உணவாக உட்கொண்டால் அது ஐதீகம் தான்…!

ஆடிப் பெருக்கு என்று ஆற்றிலே குளித்து விட்டு ஆலயத்திற்குள் செல்லும் போது நாம் எதைப் பெருக்குகிறோம்…?
1.அங்கே ஞானிகள் காட்டிய வழியில் செய்ல்படுகின்றோமா…?
2.ஒருவருக்கொருவர் உயர்ந்த எண்ணங்களையும் உயர்ந்த பண்புகளையும் அங்கே பெருக்குகின்றோமா…?

ஆலயத்திற்குள் உள்ளே செல்லும் பொழுதே நமக்கு முன் வருவோரைத் தள்ளி விட்டு நாம் முந்திச் செல்ல வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். மற்றவரைத் தள்ளி விட்டு… “நாம் பெற வேண்டும்…!” என்ற நிலையைத்தான் ஆலயங்களில் பெருக்குகிறோம்.

ஆனால் ஆற்றிலே நீர் வெள்ளமாகப் பெருகிச் செல்லும் போது அதற்குள் வரும் அழுக்குகளை எல்லாம் கரைத்துச் செல்கின்றது. குளித்தவுடன் அங்கே நிற்பதில்லை.

அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வை ஒவ்வொருவரும் நமக்குள் செலுத்தி வாழ்க்கையில் வந்த தீமைகளைக் கரைத்து அருள் மகரிஷியின் உணர்வை நமக்குள் பெருக்காகப் பெருக்கிடல் வேண்டும்.

அந்த அருள் உணர்வுகள் நமக்குள் பெருகினால்தான் நம்முடைய பண்புகள் பெருகும். பண்புகள் பெருகினால் வாழ்க்கை உயரும்.
1.தெய்வீக அன்பை வளர்த்து
2.தெய்வீகப் பண்புகளை வளர்த்து
3.தெய்வீக சக்திகளைப் பெருக்குவதற்கே ஆடி பதினெட்டாம் பெருக்கு.