பிரபஞ்சத்திற்கு உயிர் சூரியன் – மனித உடலுக்கு உயிர் சூரியனாகின்றது – “காயத்ரி”

Image

பிரபஞ்சத்திற்கு உயிர் சூரியன் – மனித உடலுக்கு உயிர் சூரியனாகின்றது – “காயத்ரி”

 

 

1.நமக்கு முன் பரவிக் கிடப்பது பரமாத்மா.

2.எண்ணி எடுப்பது ஆத்மா.

3.இந்த உணர்வின் தன்மை உடலுக்குள் விளைந்தால் ஜீவாத்மா.

விளைந்த உணர்வுகள் எதன் எதனுடன் இணைத்து எதைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த உணர்வினுடைய ஆற்றலின் நிலைகள்

1.உயிருடன் சேர்த்து நினைவுடன் சேர்ந்து இயக்கக்கூடிய ஆற்றலாக

2.ஒரே இயக்கமாக வருவது நான்காவது – காயத்ரி.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நமக்குள் அது சிருஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் உயிரின் ஓட்டத்திற்குள் தான் இது நிலைத்திருக்கின்றது என்ற நிலையை காயத்ரி – சூரியன் என்று சொல்வது. சூரியன் என்றால் நம் உடலுக்கு “உயிர்” சூரியனாகின்றது.

உயிரின் நிலைகள் கொண்டு மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்து ஒளியின் சரீரமாகச் சிருஷ்டிக்க வேண்டும் என்பதே காயத்ரி. (காயத்ரி மந்திரம் என்பார்கள்)

 

தீமை செய்பவர்களின் உடலை வீழ்த்த வேண்டியதில்லை – அருளைப் பாய்ச்சி அவர்களை நல்லவர்களாக்க வேண்டும் – கீதா உபதேசம் கண்ணன் அர்ச்சுனனுக்குச் சொன்னது

 

 

மகாபாரதத்தில் குருவே எதிரியின் பக்கம் இருந்து அந்த விஷத்தின் தன்மை சிக்கியபின் குருவாகக் காட்டப்பட்ட அந்த மெய் உணர்வின் சக்திகளை எப்படி மீட்டுவது?

குருவிற்குள் தன்னை அறியாது வந்தாலும் அந்தக் குருவின் நிலையை அவரை அறியாது ஏனென்றால் அந்தப் பாசத்தின் வலைகளில் சிக்கும் பொழுது

1.குரு என்ற நிலையில் மரியாதை

2.இங்கே சகோதரர் என்ற மரியாதை

3.ஆனால் அவர்கள் செய்வதோ தவறு.

எனக்குள் இருக்கக்கூடிய வலிமை கொண்டு “அவரை வீழ்த்தி விட்டால்…”  நான் யாருக்காக வேண்டி வாழ்கிறேன் என்ற இந்த உணர்வின் சோகங்கள் இங்கே தூண்டும் பொழுது அப்பொழுது தீமையை வளரவிடும் நிலையாகி “நல்லதைக் காக்கும் திறன் இழக்கின்றது”.

மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட இந்தப் பாசத்தின் நிலைகள் எல்லை கடந்து செல்லும் பொழுது நம்மால் அதை மீட்டும் நிலை அது பலம் இழந்து நம்மையே வீழ்த்தி விடுகின்றது.

இத்தகைய நிலையைத்தான் அர்ச்சுனனுக்கு (அர்ச்சுனன் என்பது சகல வலிமையும் கொண்ட உணர்வின் நிலைகள்) தன் உயிரான நிலைகள் கீதா உபதேசத்தின் தன்மை உபதேசிக்கும் பொழுது

1.நீ எங்கே எடுத்தாலும் என்னிடம் தான் வருகின்றாய்.

2.எதை நினைத்தாலும் அந்தக் கண்ணின் வழி கொண்டு தான் அறிய முடியும்.

3.நீ எதைச் சேர்த்தாலும் அதனின் உணர்வு கொண்டு தான் இந்த உடலிலே விளைகின்றது.

4.நீ எதை நினைக்கின்றாயோ அதனின் நிலைகள் யார் எதைச் செய்தாலும் என்னிடமே நீ வந்து சேர்வாய்.

5.என் நிலையையே நீ அறிவாய் என்று

6.இந்தக் கண்ணின் உபதேசம் கண்ணனின் நிலைகள் கொண்டு காட்டப்பட்டது.

ஆனால் கண்ணின் நினைவுகள் என்னாகின்றது? கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான் என்கிறபோது அவர் அறியாத நிலைகள் அங்கே வருகின்றது.

அவர் எடுக்கும் உணர்ச்சிகள் இந்த உடலை ஆட்டிப்படைக்காதபடி இந்தக் கண்ணின் நிலையை அவருடன் ஒன்றி “கண்ணா…!’ என்று நாம் எண்ணும் பொழுது

1.இந்தக் கண்ணின் நிலைகள் உயிருடன் எண்ணி

2.நினைவை நாம் இங்கே புருவ மத்தியில் செலுத்தி

நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் குருவான – உயிருடன் அங்கே ஏங்குவது.

அதைத் தான் குருக்ஷேத்திரப்போர் என்பது.

அங்கே அவர்கள் (தீமை செய்யும்) உணர்வுகளை நாம் சுவாசித்து உயிரான குருவிடம் பட்டுத்தான் அதை நாம் அறிய முடிகின்றது.

அவருடைய உணர்வின் தன்மை இங்கே செல்லாதபடி “ஈஸ்வரா” என்று குருவை எண்ணி அந்த மெய் ஒளி பெறவேண்டும் என்ற ஆற்றல்மிக்க சக்தியைக் கூட்டும் பொழுது அந்த உணர்வின் தன்மை எனக்குள் வலு கூடுகின்றது.

இந்த உணர்வின் எண்ணத்தை ஓங்கிச் செலுத்தி மெய் உணர்வை ஊட்டிய மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அந்த மெய் ஒளியை நமக்குள் சேர்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு

1.எங்கே எண்ணித் தாக்க வேண்டும் (எனக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும்) என்று எண்ணினார்களோ

2.அந்த எண்ணத்தை “அங்கேயே…” நிறுத்த வேண்டும்.

3.அம்பைக் கொண்டு அல்ல.

4.புறத்தால் காட்டிய இந்த அம்பை எய்து தவறு செய்பவர்களை அந்த உடலை வீழ்த்துவது அல்ல.

உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று அந்தத் தீமையான உணர்வை இயக்கியதை அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்…!”

வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அகற்றும்படி செய்கின்றது.

சுவாசித்த உணர்வுகள் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து குடலுக்குள் சென்று அஜீரணத்தை எப்படி உண்டாக்குகின்றது? – உயிரில் படும் உணர்வின் இயக்க நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்

Image

Geetha

சுவாசித்த உணர்வுகள் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து குடலுக்குள் சென்று அஜீரணத்தை எப்படி உண்டாக்குகின்றது? – உயிரில் படும் உணர்வின் இயக்க நிலைகளை அறிந்து கொள்ளுங்கள்

 

 

உதாரணமாக ஒருவருக்கு நாம் உதவியோ மற்றதுகளைச் செய்து அவரைச் சந்தோசமாகச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். உதவியால் அவர் மகிழ்கின்றார்.

 

அந்தச் சந்தோசத்தை உருவாக்கி அந்த உணர்வின் சுவாசத்தை எண்ணி அதை நாம் செயல் படுத்திக் கொண்டிருக்கும் இடத்தின் அருகிலே ஒருவர் நோய்வாய்பட்டுத் துன்பபட்டுத் துயரம் கொண்ட குரலை எழுப்புகின்றான் வைத்துக் கொள்வோம்.

 

அப்பொழுது நல்லதைச் செய்யக் கூடிய பாசமான உணர்வுகள் கொண்டு அவரை எண்ணி நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது இதே உணர்வுகள்

1.அந்த வேதனைப்பட்டவன் பக்கம் திரும்பியவுடன்

2.அவருடைய வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தவுடனே

3.என் சந்தோசம் மறைகின்றது.

4.மறைந்து எனக்குள் சுவாசித்தவுடன் வேதனையான உணர்ச்சிகளைத் துண்டுகின்றது.

5.வேதனை உணர்ச்சி அது ஜீவன் பெறுகிறது.

6.வேதனை ஜீவன் பெறும் பொழுது என் உடல் சுருங்குகின்றது. முகம் வாடுகின்றது என் உணர்ச்சிகள் மாறுகின்றது.

 

ஆனால் நாம் தவறு செய்யவில்லை

 

நல்லதைச் செய்ய வேண்டும் என்று சந்தோசத்தை உருவாக்கும் எண்ணத்துடன் நாம் சுவாசித்த உணர்வு நம் சொல் நம் பார்வை செயல் மற்றவர்களை மகிழ்விக்கச் செய்கின்றது.

 

ஆனாலும் அதே சமயம் அருகில் இருப்பவர் நோயால் துன்பபட்டு “எனக்கு இப்படி வேதனை தாங்க முடியவில்லையே…!” என்று இருக்கும் பொழுது என்ன ஆகின்றது?

 

முதலாமவருக்குப் பொருளால் உதவி செய்து நாம் மகிழ்ந்திருந்தாலும் அதே சமயம் இரண்டாவது நோயால் வாடுபவருக்குப் பொருளைக் கொடுத்து அந்த வேதனையைக் குறைக்க முடியுமோ…? குறைக்க முடியாது.

 

அப்போது அவரிடமிருந்து வெளிவரும் துன்பமான உணர்வின் அலைகளைப் பாச உணர்வு கொண்டவர்கள் சுவாசிக்க நேர்ந்தால் சந்தோசப்படும்படியான செயல்களை நாம் செய்து கொண்டு இருந்தாலும் இந்தச் சங்கடமான உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது.

 

சுத்தமான பாலில் ஒரு துளி விஷம் பட்டாலும் என்ன செய்கிறது? குடித்தால் மயக்கம் வருகின்றது.

 

அதைப் போன்று தான் அருகில் நோய்வாய்ப்பட்டவர் உணர்வைச் சுவாசித்தவுடன் இந்த இடத்தில் குருவிடம் இந்த க்ஷேத்திரத்திலே போர் நடக்கின்றது.

 

முதலாமவர் நல்லவர் என்ற நிலையில் நம்மைத் தேடி அவர் வருகின்றார். உதவி செய்கின்றோம். மகிழ்கின்றார். நாமும் மகிழ்கின்றோம்.

 

ஆனால் இரண்டாமவரோ நோயால் வேதனைப்படுகின்றார். அந்தப் பாச உணர்வுகள் வேதனையை இங்கு இழுத்துக் கொள்கின்றது.

 

இழுத்தவுடனே நல்ல குணத்துடன் இரண்டும் கலந்து பாலிலோ விஷத்தைக் கலந்து உண்டால் எந்த நிலையோ அதே போல உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

 

நம் சொல்லில் இனிமையும் குறைகின்றது. அப்போது அங்கே மகிழ்ச்சி தடைப்படுகின்றது. ஆனாலும் இதோடு போய் விடவில்லை.

 

அவர் நோயால் வேதனப்பட்டுப் பேசிய இந்த உணர்வின் சத்து உமிழ் நீராகக் கரைந்து நாம் சத்தான ஆகாரம் சாப்பிட்டிருந்தாலும் இந்த விஷமான உணர்வின் சத்து அங்கே கலந்தபின் வயிரை நெளியச் செய்கின்றது. வயிற்றைப் பிரட்டும்.

 

வேதனையான உணர்வின் உமிழ் நீர் நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்தவுடனே அங்கே நோயால் துன்பப்படுவதைக் கேட்டதும் எப்படி மயக்கமடைந்தோமோ அதே போல நம் ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய செயல்களை இழக்கச் செய்கின்றது.

 

1.எப்படி வாயை அசைத்துச் செயல்படுகின்றோமோ

2.ஒரு பாம்பு சுருங்கி நெகிழ்ந்து (நெளிந்து) தன் ஓட்டத்தைச் (நகர்ந்து) செயல்படுத்துகிறதோ

3.அதைப் போன்று தான் நம் குடலின் இயக்குகின்றது.

 

எந்த மகிழ்ச்சியான உணர்வைச் சுவாசிக்கின்றமோ அதற்குத் தகுந்தவாறு குடல் நீண்டு நெகிழ்ந்து பிசைந்து அந்த ஆகாரத்திலுள்ள சத்தை வடிக்கின்றது.

 

ஒரு எறும்பு காலிலே கடித்து விட்டால் என்ன செய்கிறோம். உடனே “உச்சு… உச்சு…” என்று காலை உதறுகிறோம்.

 

இதே போலத்தான் அந்த வேதனையான உணர்வின் உமிழ் நீர்கள் நம் குடலுக்குள் ஆகாரத்துடன் கலந்தவுடனே

1.அதனின் இயக்கச் சக்தி தொடர்வதில்லை.

2.“ஆ…” என்று விரிந்துவிடுகின்றது (சத்தைப் பிழிவதில்லை)

3.சாப்பிட்ட ஆகாரத்தைப் பொத பொத பொதவென்று கொட்டி விடும்.

 

அவ்வாறு கொட்டியவுடனே கீழே இருக்கும் குடலுக்குள் நோவானவுடனே (வலியாகி) இறுக்கிப் பிடித்து விடும்.

 

அப்புறம் நடு மையத்தில் போனவுடனே பலூன் போல உப்ப ஆரம்பித்துவிடும். ஒரு பலவீனமான பலூனுக்குள் காற்றை ஊதினால் “புஷ்..ஷ்ஷ்..” என்று அந்த இடத்தில் அதிகமாக உப்புகிறது.

 

அப்போது அந்த வேதனையான உணர்வுகள் வரப்படும் பொழுது இந்தக் குடல் விரிந்து “வாயு” உற்பத்தியாகின்றது. கீழே போய்விட்டால் தொந்தரவு இல்லை.

 

மேலே வந்தால் பெரும் குடலிலேயும் கலந்து இதனுடைய புளிப்புத் தன்மையான நிலையில் சில நேரங்களில் கீழிருந்து எதிர்த்து அந்தக் சாப்பாடே (வாந்தியாக) வெளியில் வரப்பார்க்கும்.

 

ஏனென்றால் பிறருடைய வேதனையான நிலைகளை நாம் கேட்கப்படும்பொழுது இவ்வாறு இந்த நிகழ்ச்சி நடந்து விடுகின்றது.

 

நாம் தவறு செய்யவில்லை. அவர் வேதனைப்படுகின்றார். அவர் உடலில் விளைய வைத்த அந்த உணர்வுகள் வெளிப்படுகின்றது. பாசத்தால் நாம் சுவாசிக்கின்றோம்.

 

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தால் நமக்குள் மகிழ்ச்சி தோன்றுகின்றது. அதே போல மாம்பழம் சுவையான நிலைகளில் இருந்து அதன் வாசனையைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம்.

 

மாங்காயைப் பார்த்தவுடன் புளிப்பு வருகின்றது. முகம் சுளிக்கின்றது. அது தவறு செய்யவில்லை. “அது உணர்வின் இயக்கம்”.

 

அது கனியாகும் பொழுது இனிக்கின்றது. காயாகும் பொழுது புளிக்கின்றது. புளிப்பை நுகரும் பொழுது முகம் சுளிக்கிறது. அதுவே கனியாகும் பொழுது ரசிக்கின்றது.

 

இதே போன்று தான் ஒருவர் மகிழ்ச்சியின் தன்மை கொண்டு பேசும் பொழுது நாம் மகிழ்ச்சியான செயல்களில் செயல்படும் பொழுது மகிழ்கின்றோம். மகிழ்ச்சியான செயல்களைக் கேட்பவர்களும் மகிழ்கின்றார்கள்.

 

ஆனால் அதன் அருகிலேயே ஒருவர் தன் உடலின் வேதனையால் துடிக்கின்றார் என்றால் அதைப் பார்த்தவுடன் இந்த மகிழ்ச்சியுடன் கலந்து உடனே சோர்வடைகின்றது.

 

இங்கே பார்த்தால் மகிழ்ச்சி. சோர்வடைந்துவிட்டால் மகிழ்ச்சிக்கு இரண்டாவது முறை எழுந்திரிப்பதே கஷ்டம். அடுத்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும்.

 

ஆனால் அந்த மகிழ்ச்சி அங்கே சோர்வடைந்து விடுகின்றது. மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் சோர்வடைகின்றது. இதே போல நம் குடலுக்குள்ளும் நாம் சாப்பிட்ட ஆதாரத்தை நஞ்சாக மாற்றுகின்றது.

 

அவர் எப்படி வேதனைப்படுகின்றாரோ அதேபோல என் குடலுக்குள் அவரை எண்ணிப் பார்த்த இந்த உமிழ் நீர் இங்கு வந்து விடுகின்றது.

 

“சங்கநாதம்” – அதனால் தான் கீதையிலே கண்ணன் சங்க நாதத்தை வைத்து பூம்…ம்ம்… பூம்..,”. என்று சொல்லி மேல் நோக்கி ஊதுகின்றான்.

 

(கீதை என்றால் கீதம். கண் வழி கவரும் உணர்வுகள் உயிரிலே பட்டபின் கீதங்களாக நாதங்களாக எப்படி உருவாகி உணர்ச்சிகளாக இயக்குகின்றது என்பதைக் காட்டுகின்றார்கள்)

 

மேலே ஊதுவதன் நோக்கம் என்ன?

 

சாதாரண மனித உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளை நினைக்கும் பொழுது இதைச் சுவாசித்து அச் செயலின் நிலைகள் ஜீவன் பெற்று அதன் வழியில் நாம் செயல்படுகின்றோம்.

 

1.அதே சமயம் நாம் மேல் நோக்கிப் பார்க்கும் பொழுது

2.சாதாரண வாழ்க்கையில் வரும் உணர்வின் தன்மை இங்கே குறைகின்றது.

3.கண்ணின் நினைவலைகளை நாம் உயிருடன் ஒன்றி

4.“ஈஸ்வரா…” என்று சொல்லும் பொழுது அவன் சிருஷ்டிக்கின்றான்.

 

மகிழ்ச்சியான நிலையை எண்ணிணாலும் அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்தச் சுவாசம் உயிரிலே பட்டுத் தான் எனக்கு இங்கே மகிழ்ச்சியாகின்றது.

 

வேதனைப்படுவோரைப் பார்த்த உடனே நமக்குள் வந்து உயிரிலே பட்டுத் தன்னை அறியாமல் சோர்வடையச் செய்கின்றது. இங்கே தான் “குருக்ஷேத்திரப்போர்” நடக்கின்றது.

 

குருக்ஷேத்திரப்போர் என்றால் சர்வத்தையும் அடக்கக்கூடிய நிலைகள்

1.உயிரான குருவுக்குப் பணிய வேண்டும்.

2.இந்தப் பணியைச் செய்யக்கூடிய இந்தச் சக்தியின் இயல்பை உணர்த்துவதற்குத்தான்

3.குருக்ஷேத்திரப்போர் என்று ஞானிகள் சொன்னது.

 

குருவாக இருக்கும் உயிரிடம் வேண்டி ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்த ஆற்றல் மிக்க சக்தி நமக்குக் கிடைக்கின்றது.

“உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்…” என்ற நிலையை மாற்றி “உன்னாலே நான் நல்லதானேன் என்னாலே நீ நல்லதானாய்…” என்ற நிலைக்கு மாறவேண்டும்

Image

“உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய்…” என்ற நிலையை மாற்றி “உன்னாலே நான் நல்லதானேன் என்னாலே நீ நல்லதானாய்…” என்ற நிலைக்கு மாறவேண்டும்

 

ஒரு நண்பர் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வேதனைகளை நம்மிடம் சொல்லும் பொழுது அவர் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டுகின்றோம்.

வழி காட்டிய நிலைகளில் அவர் கஷ்டங்களை நாமும் கேட்டு அறிந்து கொண்டோம். அறிந்து கொண்டாலும் அவர் வாழ்க்கைக்கு நல்ல வழி வகுக்கின்றது. இந்த வழியில் செயலின் தொடரை நாம் செய்கின்றோம்.

ஆனால் அடுத்து நாம் நம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இந்த வேதனைப்பட்ட மனம் கூடவே நிற்கும். நல்ல மனதில் படும் இந்த வேதனையைச் சுத்தப்படுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்துகின்றோமா…!

நண்பருக்கு நல்ல வழிகாட்டிவிட்டோம். ஆனால் நாம் கேட்டறிந்த வேதனையை அடுத்த நிமிடமே சுத்தப்படுத்திவிட்டு இனி உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் நாம் சொல்வதை அவரும் ஏற்றுக் கொண்டால் அங்கே சிறப்பாகின்றது. அவருக்கு லாபமும் வருகின்றது.

ஆனால் “ஐயோ…! இப்படிக் கஷ்டப்படுகின்றாயே… என்று எண்ணி..,

1.“இந்தா இந்தப் பணத்தை வைத்துக் கொள்” என்று சங்கடப்பட்டுக் கொடுத்தால் சங்கடமே வரும்.

2.வேதனையான உணர்வுகள் தான் வரும். அவரும் வேதனையுடன் தான் வாங்குவார்.

3.இந்த ஒலியின் மாற்றங்கள் இந்த வேலையைச் செய்யும்.

4.இரண்டு பேரும் கெட்டோம். உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்று தோப்புக்கரணம் போட வேண்டியது தான்.

இதுவெல்லாம் இயற்கையின் செயலின் நிலைகள். “உணர்வின் இயக்கங்கள்” தான் இவைகள்.

உணர்வின் இயக்கமாக நாம் செல்லாமல் ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வலுக் கூட்டி அந்த அருள் உணர்வுடன் அவரிடம் சொற்களை வெளிப்படுத்தினால் அவருடைய கஷ்டமோ துயரமோ வேதனையோ நமக்குள் வராது.

அவரால் நாம் ஞானிகளின் உணர்வை அதிகமாக நுகர்கின்றோம். அந்த உணர்வுடன் அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

அப்பொழுது அவருக்குள்ளும் ஞானிகளின் உணர்வுகள் இணைகின்றது. அவரும் தீமைகளை வென்றிடும் ஆற்றல் பெறுகின்றார்.

இரக்கப்படுவது மட்டும் முக்கியமல்ல. நாம் செய்யும் உதவி நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும்.

இது மிகவும் முக்கியம்.

பதினெட்டாம் நாள் போர்

Image

பதினெட்டாம் நாள் போர்

 

 

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேதனையான எண்ணங்கள் உணர்ச்சியைத் தூண்டும் பொழுதெல்லாம் அடுத்த நிமிடமே அதை அடக்கிப் பழகுதல் வேண்டும்.

எதை வைத்து…?

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் பெறவேண்டும் என்ற உணர்வினைக் கலந்து கலந்து நம் உணர்வின் அறிவுகளை மாற்றப்படும் பொழுது

1.இந்த உணர்வின் ஒளிச் சுடராகத் தனக்குள் வளர்ச்சி பெற்று எட்டாவது நிலை அடைந்து

2.ஒன்பதாவது உயிருடன் ஒளிச் சரீரமாகச் சேர்கின்றது.

இந்த உடலை விட்டு உயிராத்மா வெளி வரும் பொழுது எந்த உடலும் தன்னைக் கவராத வண்ணம் தீமையை நீக்கி ஒளிச் சுடராகி

1.எட்டாவது எந்த விஷத்தன்மை வந்தாலும் அதனின் ஈர்ப்பின் சக்தியை இழக்கச் செய்து

2.உணர்வை ஒளியாக வளர்க்கச் செய்து விண்ணின் தன்மை எட்டுவது விஜய தசமி.

3.ஆக “ஈரெட்டு பதினாறு – என்றும் பதினாறு”.

உடலுக்குள் விஷத்தின் தன்மை எட்டு. உடலை விட்டு வெளியில் சென்ற பின் எட்டு. மற்ற கோள்களின் சக்திகள் எதையும் தன்னை நாடாவண்ணம் இந்த உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாறி விண் செல்வதே கடைசி நிலை.

அதுதான் பத்தாவது நிலை.

மகாபாரதத்தில் பதினெட்டாம் நாள் போர் என்று காண்பித்திருப்பார்கள்.

நம் உடலுக்குள் நின்று பத்தானாலும் வெளியில் வந்து எட்டுக் கோள்களின் எதிர்ப்பு சக்தியான விஷத்தின் தன்மையை முறியடித்து தன் உணர்வின் தன்மை ஒளியாகச் சேர்த்துக் கொண்டால் என்றும் பதினாறு ஈரெட்டு பதினாறு.

உடலுக்குள் வரும் தீமையை மாய்த்து ஒளியின் உணர்வை வளர்த்து வெளியில் சென்றபின் தீமை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு அந்த உணர்வின் ஒளியின் சுடராகச் செல்வது பதினெட்டு.

பதினெட்டாம் நாள் போர் என்று மகாபாரதப் போரின் தத்துவத்தில் அந்தப் போரை வென்றவன் தான் விண்ணை அடைகின்றான். பத்து + எட்டு = பதினெட்டு

இந்தப் பூமிக்குள் விளைந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலை ஒவ்வொன்றையும் மனிதனான பின் சிருஷ்டிக்கும் தன்மையாக மனித உடலுக்குள் நாம் பெறும் ஆற்றல் மிக்க சக்திகளை அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

 

 

தரையிலிருந்து விண்ணிலிருப்பதை இயக்கும் மனிதனால் தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

 

பல டன் எடை கொண்ட செயற்கைக் கோள்களை விண் வெளி ஆய்வுக் கூடங்களையும் இன்று விண்ணிலே ஏவி வைத்துள்ளார்கள்.

1.இயந்திரத்தில் எட்ட முடியாத தூரமாக இருந்தாலும் லேசர் புலனின் இயக்கம் கொண்டு

2.கதிரியக்கச் சக்திகளாக இருந்தாலும்

3.ரேடார் (RADAR) என்ற ஒலி அலைகளைத் தனக்குள் இயக்கச் செய்து

4.தரையிலிருக்கும் ரேடார் விண்ணிலிருப்பதைத் தனக்குள் அந்த நுண்ணிய அலைகளைக் கவர்ந்து இழுக்கும் நிலைக்கு வைத்துள்ளார்கள்

ஆனால் அதே சமயம் விண்ணில் அனுப்பும் இயந்திரத்திலேயும் ரேடார் என்று நுண்ணிய அலைகள் வைக்கும் பொழுது அந்த ரேடார் தன்னுடைய உணர்வின் ஒலி அலைகளைப் பிரித்தெடுத்து

1.இங்கே மனிதனால் ஒலியாக எழுப்பட்டதை

2.உணர்வின் ஒலிகள் உந்தி

3.அங்கே இயந்திரத்தை இயக்கித் திசை திருப்புகின்றது.

தொலை நோக்கிகளையும் செயற்கைக் கோள்களையும் இங்கிருந்து ஆணையிட்டுச் செயல்படுத்துகின்றார்கள் விஞ்ஞானிகள்.

“இவ்வளவு ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்”. அந்தச் சிந்தனைக்குரிய நிலைகள் வரும் பொழுதுதான் “மிக நுண்ணிய நிலைகளையும்” அறிகின்றான்.

இவ்வளவு ஆற்றல் பெற்றிருந்தாலும் தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் இல்லை என்றால் மறுபடியும் இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டும்.

எந்தச் சாமியும் காப்பாற்றாது, எந்தச் சாமியாரும் காப்பாற்ற முடியாது. நாம் எடுக்கும் உணர்வுகளை நமக்குள் “உள் நின்று” இயக்கும் உயிரான ஈசன் அது சமைத்து அணுக்களாக விளையச் செய்துவிடும்.

விளைந்த உணர்வுகளைத் தன்னுடன் இணைந்த உயிராத்மாவாக்கி அடுத்த நிலையை உயிர் உருவாக்கிவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் “நாம் எங்கே செல்ல வேண்டும்…! என்பதை உணர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைவதே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

“ஒரே எரிச்சலாக இருக்கின்றது…!” என்கிறோம் – எரிச்சலை நீக்கும் வழிமுறை

 

நினைத்தவுடன் நமக்குக் கோப உணர்வு வருகிறது. கடுமையான நிலைகளும் வருகின்றது. அதைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே நல்ல தண்ணீரை ஊற்றினால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அழுக்கின் நிலை மாறத் தொடங்கும்.

அதே போல நம்முடைய முந்தைய வாழ்க்கையின் நிலையில் நாம் சேர்த்துக் கொண்ட அழுக்குகள் உடலுக்குள்ளும் நம் ஆன்மாவிலும் நிறைய இருக்கிறது.

அவையெலாம் நாம் அறியாமல் சேர்த்தவை.

நாம் உண்ணும் உணவில் தனித்துக் காரத்தைச் சாப்பிடும் பொழுது “ஆ…” என்று அலறுகின்றோம். வாய் வயிறு எல்லாம் எரிச்சலாகின்றது.

அதே போல் நாம் எடுத்துக் கொள்ளும் கோபமான உணர்வுகள் உயிரான ஈசனிடம் படும் பொழுது அந்த அணு சிசுக்களில் பட்டவுடன் ஆத்திரமான அலைகள் வீசத் தொடங்குகின்றது.

அப்பொழுது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் “ஆ…” என்று அலறச் செய்கின்றது.

1.அந்த அலைகள் உடலுக்குள் பட்டவுடன் எரிகின்றது
2.நம் எண்ணங்கள் மாறி எரிச்சலுடன் பேசச் சொல்கின்றது
3.நம் பார்வையும் எரிச்சலுடன் பார்க்கச் செய்கின்றது
4.நாம் செயல்கள் அனைத்தையும் தடைப்படுத்தச் செய்கின்றது.

உதாரணமாக ஒரு நச்சுத் தன்மை கொண்ட புகையை எழுப்பியபின் அது படர்ந்து காற்றிலே கலந்து பூமிக்குள் படர்கின்றது.

நாம் சுவாசிக்கும் பொழுது புகையின் உணர்வு பிராணவாயுவுடன் கலந்து உடலுக்குள் ஊடுருவி காந்தத்துடன் இணைந்து உடல் முழுவதற்கும் இயக்கச் செய்துவிடுகின்றது.

இதைப் போன்று தான் நல்ல குணங்களுடன் இருந்தாலும் எரிச்சலூட்டும் செயல்களை நாம் பார்த்தவுடன்
1.எண்ணத்திலே எரிச்சல்
2.செயலிலே எரிச்சல்
3,சுவாசத்திலே எரிச்சல்
4.கண்ணின் பார்வையிலே எரிச்சலாகின்றது.

இந்த எரிச்சலான உணர்வுகள் உமிழ்நீராக மாறி உடலுக்குள் சென்று நம் ஆகாரத்துடன் நஞ்சாகக் கலந்து உறுப்புகளுக்குள் தேங்கி நம் உடலை அதனின் இருப்பிடமாக்கித் தன் இனத்தை வளர்க்கத் தொடங்கி விடுகின்றது.

நல்ல குணங்களை நம்மைச்  சிந்திக்க விடாதபடி தடைப்படுத்திக் கொன்டே இருக்கின்றது. உடலில் நோய் வரக் காரணமாகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றி அமைப்பதற்குத் தான் உங்கள் அனைவரது உள்ளங்களிலும் அந்த மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் மணங்கள் உமிநீராக மாறி
2.நல்ல அணுக்களாக உருவாகின்றது.
3.உடலில் உருவான நஞ்சான அணுக்களின் வீரியத்தை அடக்கி
4.அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது.
5.மகிழ்ச்சியான ஏற்படுகின்றது உடல் நலம் மன பலம் பெறுகின்றோம்.

அப்பொழுது நாம் சந்திக்கும் அனைவரது நிலைகளிலும் நாம் எடுக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் படர்கின்றது. நாம் கலந்து உறவாடும் அனைவருமே நம்மால் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

அவர்களிடம் மற்ற குறைகள் இருந்தாலும்
1.அந்தக் குறைகள் நீங்கி நிவர்த்தியாக வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது
2.நம்முடைய சொல்லாலும் மூச்சாலும் அவர்களுக்குள் நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது
3.எல்லோரும் நலம் பெறும் சந்தர்ப்பமாகின்றது.

அதனால் தான் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று அடிக்கடி நினைவை மகரிஷிகளின் பால் செலுத்தும்படி சொல்கின்றோம்.

“மேல் நோக்கிய சுவாசம்…” மிக மிக முக்கியமானது

Image

meditation-healing

“மேல் நோக்கிய சுவாசம்…” மிக மிக முக்கியமானது

 

மெய்ஞானிகளைப் பற்றி யாம் உபதேசிக்கின்றோம். மகரிஷிகள் தீமைகளை வென்று ஒளியாக மாற்றிய உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகள் தூண்டி உங்களை மேல் நோக்கிச் சுவாசிக்க வைக்கின்றது.

அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது கிடைக்கவேண்டும் என்று பெருமூச்சாக அமைந்து அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

சிலர் அடி பணியும் நிலைகள் கொண்டு கீழ் நோக்கி எண்ணிச் சுவாசிக்கின்றார்கள். மேல் நோக்கி எண்ணி எடுப்பதற்கு பதில் கீழ் நோக்கி எடுக்கும் பொழுது சாதாரண மனிதருடைய உணர்வைத்தான் பெற முடியும்.

ஏனென்றால் நாம் பெறவேண்டிய ஆற்றல் விண்ணிலே இருக்கின்றது. விண்ணின் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று நான் தியானிக்கும் பொழுது நீங்களும் அதே வழியில் எண்ணினால் அந்தச் சக்திகளைப் பெறுவது எளிதாக இருக்கும்.

சாதாரண வாழ்க்கையில் பெரியவர்களுக்குப் பாத பூஜையும் பாத நமஸ்காரமும் கும்ப அபிஷேகமும் செய்து அடிபணிந்தே பழகிவிட்டோம்.

நமக்குள் வரும் இந்த ஆசை நம்மை அறியாமல் இருள் சூழச் செய்யும் நிலைகளுக்கே அழைத்துச் செல்லும்.

1.இந்த உயர்வு நமக்குத் தேவை இல்லை.

2.உயர்ந்த எண்ணங்கள் தான் நமக்குத் தேவை.

3.நாம் எந்த உயர்ந்த உணர்வின் தன்மையைப் பெறவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு வருகின்றமோ

4.அந்த உணர்ச்சியின் தன்மையை நாம் தூண்ட வேண்டும்.

பிறரைப் போற்றிப் புகழ்ந்து பேசித் துதிக்க வேண்டும். அப்படியெல்லாம் போற்றினால் தான் நமக்கு நல்லது கிடைக்க வேண்டும் என்ற நிலைக்கு நம் எண்ணங்கள் செல்லக்கூடாது.

1.மெய் ஒளி பெறும் உயர்வான எண்ணங்களை எடுத்து எடுத்து எடுத்து

2.நம் உடலுக்குள் தீமையான உணர்வுகளையும் தீய வினைகளையும்

3.(அவைகளை) அடிபணியச் செய்ய வைக்க வேண்டும்.

4.இது நம் பழக்கத்திற்கு வர வேண்டும்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெறவேண்டும். அந்த அருள் ஆற்றல் எல்லோரும் பெற வேண்டும் என்ற உணர்வைக் கொண்டு வாருங்கள்.

மனித உணர்விற்குள் வரும் தீமைகளையும் துன்பங்களையும் வேதனைகளையும் குறைப்பதற்கு தயவு செய்து ஒவ்வொரு நொடியிலும் அந்த ஞானிகளின் உணர்வை எடுத்துப் பழகுங்கள்.

தீமைகள் வரும் பொழுது “ஈஸ்வரா…” என்று மேல் நோக்கிச் சுவாசித்து விண்ணின் ஆற்றலைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆன்மாவிற்குள் தீமைகள் புக முடியாது தடையாகும். செய்து பாருங்கள்.

தீமையை நீக்கும் சக்தியே நமக்குத் தேவை. உயிராத்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து என்பது அது தான். உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் நாம் அனைவரும் பெறவேண்டும்.

மனிதனுக்கு மட்டும் தான் அந்தத் தகுதி உண்டு.

மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது

Image

மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது

 

1.மூலம் என்பது உயிர்.

2.ஆதாரம் என்பது நமக்குள் இருக்கக்கூடிய உணர்வு.

3.அதில் மெய் ஒளியைக் காணும் ஆதாரத்தைத் தட்டியெழுப்பி

4.அந்த உணர்வின் சக்தியை நாம் சுவாசித்து

5.அந்த உணர்வைப் பெருக்கச் செய்வதுதான் “மூலாதாரத்தைத் தட்டியெழுப்புவது” என்று ஞானிகள் சொன்னது.

மூலாதாரத்தைத் தட்டியெழுப்பி என்று நினைவை எங்கெங்கோ செலுத்தி “மூலம்… பூரம்… மணிப்பூரம்…” என்று சொல்லி எதை எதையோ இவர்கள் சிருஷ்டித்துக் கொண்டு அறியாத நிலையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களையும் அறியவிடாது செய்துவிடுகின்றனர்.

இயற்கையின் தன்மை நாம் சுவாசிக்கும் பொழுது

1.வடிகட்டும் உணர்வின் தன்மை “சுவாசம்”

2.நமக்குள் உணர்வின் தன்மையை செல்களைத் தட்டியெழுப்பி

3.நம் மூச்சின் தன்மை உடலாக்குவது தான்

4.அந்த உணர்வின் சக்தியை வடிப்பது தான் இந்த இயற்கை.

5.அந்த இயற்கையுடன் ஒன்றிய நிலைகளில் நாம் செல்வது தான் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி.

ஒரு தென்னை மரம் தனக்குக் காந்த சக்தி குறைவாக இருந்தால் என்ன செய்யும்? வளைந்து நெளிந்து அந்தச் சூரியனின் காந்த சக்தியை எடுத்துத் தனக்குள் விளைவித்துக் கொள்ளும்.

அதைப் போல் தான் மனிதன் அந்த மெய்ஞானியின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் அதற்குத் தக்கவாறு நாம் எண்ணி ஏங்கி எடுத்தல் வேண்டும்.

ஒரு ட்யூப் லைட் (TUBE LIGHT) அதற்குத் தக்க மின்சாரத்தின் அளவுகோல் சரியாக வைக்கும் பொழுது சரியான நிலைகளில் எரிகின்றது. குறைந்தாலோ எரிவதில்லை.

இதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்றால் மகரிஷிகளின் அருளை “நீ பெறு” என்று வெறும் வாயிலே சொல்ல வேண்டாம்.

ஒரு பத்து நிமிடமாவது இந்தச் சக்திகளை எடுத்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.“ஈஸ்வரா” என்று உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழகவேண்டும்.

2.கண்ணின் நினைவை அங்கே புருவ மத்திக்குக் கொண்டு போகவேண்டும்.

3.மகரிஷிகளின் உணர்வைக் கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.

4.அடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலிலுள்ள அணுக்களில் இணைக்க வேண்டும்.

இப்படி நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்ப்பிப்பது தான் “குண்டலினி யோகா”.

அந்த உணர்வின்  தன்மை வலுப்பெறும் பொழுது எத்தகையை தீமையாக இருந்தாலும் அதைப் பிளக்கின்றது. நமக்குள் ஆற்றல்கள் பெருகுகின்றது.

“தியானம்… என்பது இது தான்”

Remote spiritual power

“தியானம்… என்பது இது தான்”

எத்தனையோ அசம்பாவிதங்கள் கொடுமைகள் நடக்கின்றது…! என்று பத்திரிக்கை டி.வி. மூலமாக நாம் தினசரி பார்க்கின்றோம்… படிக்கின்றோம்…

படித்தவுடன் நம்மை அறியாமலே ஒரு பயமோ நடுக்கமோ ஏற்படுகிறது. நம் மனமும் பலவீனம் அடைகிறது. இதைப் போன்ற நிலைகள் எதிர்பாராமல் நம்மையறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அதற்கொரு சக்தி வேண்டும் அல்லவா.

அருள் ஞானிகள் உபதேசித்த அந்த அருள் வழிப்படி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் ஒரு நிமிடம் எண்ணி ஏங்குங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களுக்குள் பாய்ந்து
1.தீமையை அகற்றும் ரிமோட் கன்ட்ரோல் ஆக
2.அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களைக் காத்திடும் செயலாக வரும்.

உதாரணமாக… நீங்கள் பஸ்ஸுக்குச் செல்லும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் பார்ப்போரெல்லாம் நலம் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணித் “தியானித்துவிட்டுச் செல்லுங்கள்”.

நீங்கள் பஸ் ஏறப்படும் பொழுது
1.உங்கள் நினைவலைகள் எங்கே கூர்மையாகச் செலுத்துகின்றீர்களோ
2.இந்த உணர்வுகள் இடைப்பட்ட நேரங்களில் பஸ் அடுத்து அது விபத்து ஏற்படுமேயானால்
3.நம்மை அந்தப் பஸ்ஸில் ஏறவிடாது.

அனுபவத்தில் பார்க்கலாம்.

“ரிமோட் கன்ட்ரோல்” என்ற நிலைகளில் நாம் எடுக்கும் ஞானிகளின் உணர்வுகள் இது வரும். “தியானம்… என்பது இது தான்”.

ஒவ்வொரு நொடியிலேயும் அந்தத் தியானத்தின் பலன்களை நாம் பெறமுடியும். ஆகவே அந்த அருள் ஞானியின் உணர்வுகளை அடிக்கடி எண்ணி அதை நமக்குள் சேர்த்துத் தீமைகள் நம்மை அணுகாத நிலையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம் எண்ணம் நம்மைக் காக்கும்…!

இதைத் தான் நாம் எண்ணும் நல்ல குணங்களையே… “நம்மைக் காக்கும் தெய்வமாகத் துதிப்போம்…” என்று சொல்வது.

உயிருக்குள் செய்ய வேண்டிய யாகத்தை வெளியில் செய்து கொண்டிருக்கின்றோம்

Image

Yagam yaga

உயிருக்குள் செய்ய வேண்டிய யாகத்தை வெளியில் செய்து கொண்டிருக்கின்றோம்

 

 

 

1.நாம் எண்ணக்கூடிய எண்ணங்களும் சுவாசிக்கும் உணர்வுகளும்

2.உயிருக்குள் – உயிரின் துடிப்பினால் உண்டாகும் (யாகத் தீயான) நெருப்பில் படுகிறது என்றுதான் ஞானிகள் சொன்னார்கள்

3.அந்த உயிரான நெருப்பில் அருள் உணர்வுகளைப் போடும்படி சொன்னார்கள்

இன்றைய வழக்கில் என்ன செய்கிறார்கள்?

காசைக் கொடுத்துத் தீயை வளர்க்கின்றார்கள். அந்த நெருப்பிலே எல்லாவற்றையும் போட்டு “நெய்யை ஊற்று… பாலை ஊற்று… அந்தக் கட்டையைப் போடு… இதைப் போடு… என்று ஆண்டவனுக்கு வேண்டியதெல்லாம் போட்டால் அவன் பார்த்துக் கொள்ளட்டும்…” என்று செய்கின்றார்கள்.

நெருப்பிலே எல்லாம் கருகி புகையாகப் போகின்றது. இதெல்லாம் செய்தால் “எனக்கு எல்லாம் செய்வான்”.

ஆண்டவனுக்காக இதையெல்லாம் போட்டு நேராக இந்த வாசனைகளை அவனுக்கு அனுப்பினால் நமக்கு அவன் “எல்லாவற்றையும் கொடுப்பான்…” என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றோம்.

“உயிர்” என்ற நிலையை விட்டுவிட்டு “நெருப்பில் போட வேண்டும்…” என்பதை மட்டும் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் காட்டிய முறைப்படி நம் உயிரான நெருப்புக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் போட்டால் அந்த உணர்ச்சிகள் வெளிப்படுகின்றது.

அந்த உயர்ந்த உணர்வலைகளைச் சொல்லின் தன்மை கொண்டு வெளிப்படுத்தினால் அதைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

1.அப்பொழுது நமக்குள் இருக்கும் தீமைகள் நீங்குகிறது.

2.நம் சொல்லைக் கேட்போர் தீமையும் நீங்கும்.

3.ஆக மொத்தம் தீமையை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக அந்த உணர்வலைகளாக அங்கே படர்கின்றது.

4.இதற்குத்தான் ஞானிகள் சொன்னது.

புறத் தீயிட்டு அதை எழுத்தில் (புத்தகத்தில்) காட்ட முடியாது. நெருப்பு எப்படி வேலை செய்கின்றது…! இப்படித்தான் உயிர் செய்கிறது அன்று சொல்லிக் கொடுத்தார்கள்.

“உள் நின்று இயக்கும் ஆண்டவன்” இப்படிச் செய்வான் என்று காண்பித்தார்கள். ஏனென்றால்

1.நெருப்பிலே எந்தெந்தப் பொருளைப் போட்டாலும்

2.அதைக் “கரைத்து” (கருக்கி)

3.எல்லாம்… “மணமாகத்தான் கொடுக்கின்றது”.

 

அதைப் போன்று தான் நம் உயிரான நெருப்பும் நாம் எண்ணத்தால் எடுக்கும் குணங்களை நமக்குள் அது உடல் முழுவதும் பரப்பி சொல்லாகச் செயல்பட்டு அந்த உணர்வின் தன்மையாக விளையும் என்று அன்றைக்குச் சொன்னார்கள்.

“காசு ஆசை…!” என்ற உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நேரடியாக அனுபவம் கொடுத்து என்னைப் பக்குவப்படுத்தினார் குருநாதர்

Image

Agathiyam final

“காசு ஆசை…!” என்ற உணர்வுகள் எப்படி இயக்குகின்றது என்று நேரடியாக அனுபவம் கொடுத்து என்னைப் பக்குவப்படுத்தினார் குருநாதர்

 

சஞ்சீவி மலை மேல் ஒரு சாமியார் இருக்கின்றார். அவர் வேறு ஒன்றுமே சாப்பிடுவது இல்லை. அவரைப் போய்ப் பார்த்து விட்டு வரலாம் என்று என் மருமகனும் நானும் (ஞானகுரு) சென்றோம்.

 

ஆரம்பத்தில் நான் (ஞானகுரு) சித்தாகி இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி இது.

 

சஞ்சீவி மலைச் சாமியார் ஒரு இராமலிங்க அடிகள் பக்தர். அதனால் அவர் வெறும் கடலைப் பருப்பு தான் சாப்பிடுகின்றார். எந்த ஆசையும் இல்லை. ஏதோ வருகின்றவர்களுக்கு ஆசி கொடுக்கின்றார் என்று சொன்னார்கள்.

 

சரி என்று இரண்டு பேரும் போனோம்.

 

அங்கே போகும்போது வழியில் ரோட்டில் பார்த்தால் புது நோட்டு (பணம்) கீழே கிடந்தது. யாரும் போட்டார்களோ… இல்லையோ…! அல்லது குருநாதர் அந்த வேலையைச் செய்தாரோ…, தெரியாது…!

 

அது சில நேரங்களில் காசு இல்லை என்று நான் சென்றால் குருநாதர் இந்த வேலையைச் செய்வார். எங்கேயோ போய் நான் ஏதாவது செய்தாலும் அந்த இடத்தில் ஏதோ ஒரு வகையில் பணம் வரும்.

 

அந்த மாதிரி நடந்திருப்பதால் எனக்கு அந்தக் கலக்கம் வரவில்லை.

 

ஆனால் மருமகனும் வருகிறார் நானும் போகிறேன். பணத்தைப் பார்த்ததும் சரி… “யாராவது ஒரு ஆள்…! அட.., நம் மருமகன் தானே அவர் எடுக்கட்டும்..” என்று இல்லை.

 

அந்த ஆசை…! நானும் வேக வேகமாக ஓடிப் போய் எடுக்கின்றேன். அவரும் வேக வேகமாக ஓடிப் போய் எடுக்கின்றார்.

 

அப்போது அந்த இடத்தில் குருநாதர் காட்டுகின்றார்.

 

உன் மருமகன்தானே…! எடுத்து உன் கையில் கொடுப்பார் அல்லவா. நீ மருமகனுக்குச் செய்யலாம் இல்லை. அப்போது அவர் எடுக்கின்ற வரையிலும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் அல்லவா..!

 

இந்தக் “காசு  ஆசை…” என்ற நிலையில் அவருக்கு முந்திப் போய் நீ “நான் பணத்தை எடுக்க வேண்டும்… என்று வருகின்றது இல்லையா…!

 

இது நடந்த நிகழ்ச்சி. அனுபவத்தில் கொடுக்கின்றார்.

 

அந்த உணர்வுகள் தான் எடுக்க வேண்டும் தனக்கு வேண்டும் என்ற ஆசை தான் வருகின்றது என்பதை அனுபவபூர்வமாக அந்த இடத்தில் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.

 

அப்போது இந்த உணர்வு உறுத்தினவுடனே எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டேன்.

 

அவர் என்ன செய்கிறார்? நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுக்கின்றார்.

 

எனக்கு எதற்கப்பா..? நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.

 

பிறகு சஞ்சீவி மலை மேல் போனவுடனே அந்தச் சாமியார் அவர் ஆசையின்றி எப்படி இருக்கின்றார்…? என்று அவருடைய நிலைகளை முழுவதும் பார்த்தேன்.

 

ஏதோதோ விபரங்களைச் சொல்கிறார். அவருடைய மனமும், அவருடைய ஆசையும் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் ஒரு வேஷதாரி என்று அறிய முடிந்தது.

 

இராமலிங்க அடிகள் எல்லோருக்கும் உதவி செய்யச் சொல்லி இருக்கின்றார். ஆனால் அவர் பேரை வைத்து இங்கே தன் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இதுகளெல்லாம்

1.குருநாதர் எனக்கு அனுபவங்களைக் கொடுத்தது ஒன்றல்ல இரண்டல்ல.

2.என்னைப் பக்குவப்படுத்துவதற்காக வேண்டி

3.எத்தனையோ வகையில் எல்லாம் என்னை அழைத்துச் சென்று காட்டியிருக்கின்றார்.

 

அதனால் நம்  மனம் பக்குவப்பட வேண்டும்.