மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகள்

Image

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் விண் சென்ற உணர்வுகள்

 

 

நமது குருநாதர் அவர் தீமைகளை அகற்றி மெய்யுணர்வைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி இன்றும் விண்ணுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கின்றார்,

 

இப்பொழுது தற்காலத்தில் (1971) சப்தரிஷி மண்டலத்தில் இணைந்தவர் தான் நமது குருநாதர் “மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்”.

 

அவர் உடலில் விளைந்த அந்த உணர்வின் எண்ணங்களை உபதேச வாயிலாகப் படிக்கும் பொழுது ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

 

பதிந்த நிலைகளை மீண்டும் எண்ணும்போது நமது குருநாதர் காட்டிய அருளுணர்வு இங்கே படர்ந்திருப்பினும் அவர் நினைவு கொண்டு அங்கே விளைந்த உணர்வை நாம் கண்டுணர முடிகின்றது. நுகர முடிகின்றது.

 

நுகர்ந்த உணர்வுகள் – ஒரு வித்து எவ்வாறு தனக்குள் சுவாசித்து தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அதே மரமாக விளைகின்றதோ இதைப் போல குருநாதர் உடலில் விளைந்த

1.அந்த மெய்ஞானியின் மெய்யுணர்வின் ஆற்றல்

2.நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்று ஒளியின் சரீரமாக இருக்கும் அந்த உணர்வின் ஆற்றல்

3.நமக்குள் அது வளரும் தன்மை பெறுகின்றது.

 

ஒரு வித்து தாய் மரத்தின் சத்தைக் கவருவது போல் மெய் ஞானிகள்  விளைவித்த மெய் ஞான உணர்வுகளை நாம் பெற வேண்டும்

 

இதைப் படித்துப் பதிவாக்கும் அனைவரும் மெய் வழி நடந்து மெய் ஞானம் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து “என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்” என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுவோம் பிரார்த்திப்போம்.

 

ஓம் ஈஸ்வரா குருதேவா…!

 

உடலையே காக்க முடியாது உடலை விட்டுப் போகின்றோம் – சேர்த்து வைக்கும் பணமும் பொருளும் யாரைக் காக்கப் போகின்றது…! சேர்க்க வேண்டிய சொத்தைச் சேர்த்தால் “பறக்கும் நிலை பெறலாம்…”

 

 

இந்த வாழ்க்கையில் நாம் எப்படியும் வாழ வேண்டும் என்று வேகத் துடிப்புடன் பல இலட்சங்களையும் கோடிகளையும் இணைத்துப் பொருளாகச் சம்பாரித்து வைக்கின்றோம்.

 

1.இவ்வளவு வைத்திருக்கின்றேன்… ஆண்டவன் என்னை ஏன் சோதிக்கின்றான் என்று தெரியவில்லை…!

2.இந்த வேதனையைத்தான் எடுக்கின்றார்கள்.

3.இதற்கும் அதற்கும் உடலுக்கும் மனதிற்கும் சீரற்ற நிலைகள் ஆகி

4.கடைசியில் மன நிம்மதியற்ற நிலையில் தான் இருக்கின்றார்கள்.

 

பல ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பாரித்த பின்

1.இன்றைக்குப் பொய் சொல்லி “எப்படிடா தப்பிக்கலாம்…” என்று ஷேர் மார்க்கெட்டிலோ

2.மற்ற தெரியாத வகைகளிலோ கொண்டு போய் அந்தக் கோடிகளைப் போடுகிறார்கள்.

 

இவ்வளவும் இருந்தாலும் “மன நோய்க்கு…” மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்.

 

சொத்துக்களைக் காக்க வேண்டும் என்று சென்றாலும் இந்த மனதிற்கும் உடலுக்கும் நிம்மதி இல்லை. நிம்மதியற்ற உணர்வே நஞ்சாக மாறுகின்றது.

 

உடலை விட்டுச் சென்றால் இந்தக் கோடிச் சொத்து எங்கே வருகின்றது? வருமா…!

 

நாட்டிற்கு முதல் மந்திரியாக இருக்கலாம். அதிகாரத்தின் நிலைகளில் தட்டிக் கேட்கும் நிலையும் இங்கே இருக்கலாம். ஆனால் இவருக்கு நிம்மதி ஏது?

 

அதைப் போலத்தான் இன்றைய நிலைகள் கொண்டு பெரிய பதவிகளில் இருப்போருக்குப் பேரும் புகழும் இருக்கலாம்.

1.ஆனால் அதன் மறைவிலே நஞ்சு கொண்ட உணர்வின் தன்மைகள்

2.”இணைந்தே” இருக்கின்றது.

3.இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்

 

அந்த நஞ்சற்ற நிலையாக நாம் திகழ வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் தன்மையை நாம் பழக வேண்டும்.

 

ஆகவே அத்தகைய நஞ்சின் தன்மை வரும் நிலையிலிருந்து தப்ப “தனி மனிதன் – எதுவும் செய்ய முடியாது”,

 

அதற்குத்தான் ஆலயங்களிலே விநாயகரை முன்னிறுத்திக் காட்டினார்கள் ஞானிகள்.

 

நம் வாழ்க்கையில் எத்தகைய கஷ்டம் வந்தாலும் அந்த விநாயகரைப் பார்த்தவுடனே மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் உடலிலுள்ள உறுப்புகள் முழுவதும் படர்ந்து அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றச் செய்து உணர்வின் ஆற்றலை உடலுக்குள் உள் செலுத்துதல் வேண்டும்.

 

நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உள் செலுத்தும் பொழுது உள் நின்று வரும் குழம்பின் தன்மை இந்தத் தீமைகளைப் பிளக்கச் செய்யும்.

 

கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது.

1.நம் உடலையே நம்மால் காக்க முடியவில்லை என்கிற பொழுது

2.சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா…!

 

அருளைச் சேர்த்தால் ஞானம் வரும். “ஞானத்தால் தான்…” செல்வத்தைக் காக்க முடியும். இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் முடியும்.

1.உடலுக்குப் பின் இனி பிறவி இல்லை என்று

2.கல்கி – ஒளியின் சரீரமாக

3.பறக்கும் நிலை அடைய முடியும்.

ஆதியிலே கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனார்கள் – அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்

Image

agastiyar

ஆதியிலே கணவன் மனைவியாக ஒன்றி வாழ்ந்த அகஸ்தியனும் அவன் மனைவியும் துருவ நட்சத்திரமாக ஆனார்கள் – அதைப் பின்பற்றியவர்கள் சப்தரிஷி மண்டலமாக ஆனார்கள்

 

 

இன்று சாதாரணமாகப் பார்க்கலாம். ஒரு பச்சிலையை நசுக்கி அதை நாம் நுகர்ந்தால் அந்த மணத்தை நுகரும் யானையோ, புலியோ, பாம்போ, தேளோ இவையெல்லாம் அதன் வீரியத் தன்மை குறைந்து மனிதர்களைத் தாக்குவதில்லை.

 

இதைப் போன்றுதான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் பல விஷ ஜந்துக்களிடம் இருந்தும் விஷப் பிராணிகளிடம் இருந்தும் கொடூர மிருகங்களிடம் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

 

1.பலவிதமான பச்சிலைகளை அரைத்து உடலில் முலாமாகப் பூசிக்கொண்டார்கள்.

2.பச்சிலைகளை அவர்கள் படுத்திருக்கும் குகைப் பக்கம் பாதுகாப்பிற்காகப் போட்டு வைத்துக் கொள்கின்றார்கள்.

 

 

இத்தகைய முலாம்களைப் பூசிக்கொண்டு படுத்துக் கொள்வதால் அவர்களும் அந்தப் பச்சிலை மணங்களை நுகரும் சந்தர்ப்பமும் ஏற்படுகின்றது.

 

உடலில் முலாமாகப் பூசி இந்த மணங்கள் வெளிப்படும் பொழுது மற்ற மிருகங்கள் அதை நுகர்ந்து இவர்கள் இருக்கும் பக்கம் வருவதில்லை.

 

மனிதனாக இருக்கக்கூடிய நாம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து விஷத்தை வென்றிடும் சக்தி பெற்றிடும் ஆற்றல் பெற்றவர்கள்.

 

உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றி விட்டு ஆறாவது அறிவாக அனைத்தையும் அறிந்திடும் அறிவாக நமது உடலிலிருந்து மணங்கள் வெளிவருகின்றது – “கார்த்திகேயா”.

 

தீமை என்று தெரிந்தாலே அதை அடக்கிடும் சக்தி பெற்ற நிலையைச் சேனாதிபதி என்று ஆறாவது அறிவினைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

 

இதைப் போன்று தான் தீமையான நிலைகள் வரும் பொழுது தன் எண்ணத்தால் அந்தத் தீமைகள் வராது தடுத்து வாழ்க்கையை நடத்தினர் அகஸ்தியருடைய தாய் தந்தையர்கள்.

 

இதன் வழி வாழ்ந்து வந்த நிலையில் கருவுறும் பொழுது உடலில் பூசிய பச்சிலைகளை அந்தத் தாய்  நுகரும் சக்தி கிடைக்கின்றது. கருவிலே வரும் குழந்தைக்கும் இந்த விஷத்தை வென்றிடும் சக்தி கிடைக்கின்றது.

 

கருவுறும்போது ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் இத்தகைய மணங்களத் தாய் நுகர்வதால் அது அந்தக் கருவுடன் இணைந்து விடுகின்றது.

 

இப்படிப் பத்து மாதங்களும் பெற்ற பின் அந்தக் குழந்தை (அகஸ்தியன்) பிறக்கின்றது.

 

பிறந்த பின் அந்தக் குழந்தை இருக்கும் பக்கம் யானையோ, தேளோ, புலியோ, பாம்போ, போன்ற எந்தக் கொடூரமான மிருகங்களும் அருகில் வருவதில்லை. ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள்.

 

அப்பொழுது அகஸ்தியனின் தாய் தந்தையர்கள் தன் குழந்தையைக் “கடவுளின் பிள்ளை…!” என்று போற்றும் நிலை வந்தது.

 

அந்தக் குழந்தை விண்ணுலகைப் பார்க்கும் பொழுது சூரியனைப் பார்க்கின்றது. விஷத்தை ஒடுக்கும் நிலைகளைக் கண் கூசாது அங்கு சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கின்றது.

 

பல நட்சத்திரத்தில் இருந்து வரக்கூடிய உணர்வின் ஒளி அலைகள் சூரியனுக்குள் வருவதையும் அந்தக் குழந்தை பார்க்கின்றது.

 

குளவி ஒரு புழுவைக் கொட்டி விட்டால் அந்த விஷத்தின் தன்மை ஆனபின் அதன் உணர்வின் துணை கொண்டு புழு குளவியாகின்றது.

 

புழு குளவியானதும் தாய்க் குளவியின் உணர்வின் நிலை கொண்டு அது என்ன செய்ததோ அதே போல இதுவும் புழுவைத் தன் விஷத்தால் கொட்டுகின்றது. அதையும் குளவியாக மாற்றுகின்றது. அதைப் போல

1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளின் ஆற்றலை

2.கருவிலேயே அந்தக் குழந்தை பெற்றதால் – தன் வளர்ச்சியில்

3.அந்த உணர்வின் இயக்கமாக “அறியும் ஆற்றல்” குழந்தைப் பருவத்திலேயே அவனுக்கு வருகின்றது.

 

நாளடைவில் ஐந்து வயது ஆகும் பொழுது பச்சிலையின் நிலைகளையும் அவை எவ்வாறு இயங்குகிறது? அதற்கு எவ்வாறு உணவு கிடைக்கின்றது என்ற நிலையும் அறிந்துணரும் சிந்தனைகளும் அவனுக்கு ஓடுகின்றது.

 

வானத்தை நோக்கி ஏகுகின்றான்….!

 

பிரபஞ்சத்தில் உருவாகும் நிலைகளையும் பிரபஞ்சத்திற்கு நட்சத்திரங்கள் எவ்வாறு பிற மண்டலங்களிலிருந்து சக்திகளை எடுத்து வருகின்றது என்ற நிலையும் இளமைப் பருவத்தில் பார்க்கின்றான் அகஸ்தியன்.

 

பூமியின் துருவப் பகுதியை உற்று நோக்கி ஐந்து வயதில் அந்த ஆற்றலை எடுக்கும் பொழுது “துருவன்” என்று காரணப் பெயர் (பின் வந்த ஞானிகள்) வைக்கின்றார்கள்.

 

வானஇயல் புவியியல் உயிரியல் தாவரவியல் எல்லாவற்றையும் கண்டுணர்ந்த அகஸ்தியனுக்குத் திருமணமாகும் பொழுது தான் பெற்ற உணர்வெல்லாம் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான்.

 

1.செவி வழி ஓதும் பொழுது அந்த உணர்வுகள் மனைவிக்கும் பதிவாகின்றது.

2.கணவன் சொன்னது போல மனைவியும் அதன் வழி நடக்கின்றது,

3.விண்ணின் ஆற்றலை மனைவியும் அறியத் தொடங்குகிறது.

 

கணவனும் மனைவியும் அவர்கள் ஒருவருக்கொருவர் மதித்து நடந்து  இரு மனமும் ஒரு மனதாகி இரு உணர்வும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி வாழ்கின்றனர்.

 

துருவத்திலிருந்து வரக்கூடிய தீமைகளின் உணர்வுகள் எதுவாக இருந்தாலும் இவர்கள் நுகரும் பொழுது அந்த நஞ்சினை ஒளியாக மாற்றும் தன்மையைப் பெறுகின்றார்கள்.

 

1.இன்று நாம் குழந்தைகளை ஈனுகின்றோம்.

2.அகஸ்தியரும் மனைவியும் வானுலக உணர்வை நுகர்ந்து அதை ஒளியாக உருவாக்கி

3.தன் உணர்வின் அணுக்களை ஒளியாக மாற்றினார்கள்.

 

மாற்றிய பின் இந்த உடலை விட்டு அகன்று ஒளியின் சரீரமாக இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றிய நிலை கொண்டு “துருவ நட்சத்ததிரமாக…” இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

அவர்களைப் பின்பற்றிச் சென்றவர்கள் அனைவரும் இன்றும் பிறவியில்லா நிலைகளை அடைகின்றனர். தீமைகளை வென்று அவர்கள் வாழ்க்கையில் தன்னைத் தெளிந்து வாழும் சக்தியைப் பெறுகின்றனர்.

 

இரு மனமும் ஒன்றி வாழ்ந்த அவர்களைப் பின்பற்றி நாமும் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கி  நஞ்சினை வென்றிடும் ஆற்றல் பெற்று உயிருடன் ஒன்றிய உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடைவோம்.

அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” பெற்ற அகண்ட அண்டத்தின் ஆற்றலை நாம் பெறவேண்டும்

Image

Bagamandala - Talaikaveri

அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” பெற்ற அகண்ட அண்டத்தின் ஆற்றலை நாம் பெறவேண்டும்

 

 

உலக யுத்தம் வந்தால் அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டுகளை வெடிப்பார்கள். அதனால் இரு மடங்கு மின் உற்பத்தியாகும் நிலை ஏற்படும்.

அந்த அணுக்கதிரியக்கங்கள் பிரபஞ்சத்தில் மோதி எல்லாக் கோள்களும் அதை எடுத்து அது உமிழ்த்தும் போது

1.சூரியன் அருகிலே போனதும் மோதி

2.இரு மடங்கு காந்தத்தை உற்பத்தி செய்யப் போகின்றது.

3.அந்த மாதிரி இயக்கச் சக்தி வரும் பொழுது நம் உயிரின் துடிப்பு அதிகரிக்கும்.

4.உடலில் உள்ள அணுக்களின் துடிப்பு அதிகரிக்கும்.

நம் உணர்வின் தன்மை மடிந்து போகும் நேரத்திலே நாம் நம்மைக் காக்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியனின் உணர்வை எடுத்தே ஆக வேண்டும்.

எப்படி வராகன் தீமையைப் பிளந்ததோ அந்த அருள் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து விஷத் தன்மைகள் நமக்குள் வராது பிளந்து பழகவேண்டும்.

சொல்வது லேசாகத் தான் தெரியும். இதைக் கண்டுபிடித்து அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் உங்களுக்கு ஆயுள் பத்தாது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியின் உணர்வுகள் கொண்டு அகஸ்தியன் உணர்வைக் கவரும்படி செய்தார்.

பாக மண்டலத்தில் அகஸ்தியன் அமர்ந்த இடத்தில் என்னையும் (ஞானகுரு) இருக்கச் செய்தார் குருநாதர். அங்கே மேலே தண்ணீர் இருக்கும். ஆனால் கீழே அடிவாரத்தில் நீர் கிடையாது. மேலே ஊற்றுகள் உண்டு.

மேகங்கள் கூடி வருவதை நுகர்ந்து அதை நீராக மாற்றுகின்றது. அதனால் தான் அகஸ்தியனுக்கு நீர் சக்தி வருகின்றது. நீர் சக்தி  வருவதனால் ஜீவ சக்தியை அவனால் பெற முடிந்தது.

இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது அகண்ட அண்டம் ஆதியிலே எப்படி உருவானது என்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உண்மைகளை அங்கே அமர்ந்து தியானிக்கும்போது அறிய முடிந்தது. குரு அருளால் அதைக் கண்டுணர முடிந்தது.

1.அகஸ்தியன் கண்டுணர்ந்த அந்த உணர்வின் அறிவு தான்

2.எனக்குள்ளும் புகுந்து இத்தகைய நிலைகளை எல்லாம் அறிய முடிந்தது.

இதைப் போல நீங்களும் அறிந்து தீமைகளைப் பிளந்து அந்த “அகஸ்தியனின் அருள் ஒளிகளை” உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்.

அகஸ்தியன் அருள் சக்தியை எடுத்தால் தான் நம்மைக் காக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி மற்றவர்கள் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி அது “மிகப் பெரிய ஆயுதமாக…” விஷ்ணு தனுசாகி  தீமைகளை ஒளியாக்குகின்றது.

Image

Dhanush

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி மற்றவர்கள் புருவ மத்தியில் இணைத்தாலும் சரி அது “மிகப் பெரிய ஆயுதமாக…” விஷ்ணு தனுசாகி  தீமைகளை ஒளியாக்குகின்றது.

 

 

ஒருவர் நம்மிடம் கோபம் வேதனை போன்ற உணர்வுடன் தாக்கிப் பேசும் பொழுது நம் நல்ல உணர்வுடன் அது சேர்ந்து கொள்கின்றது.

 

அப்படிச் சேர்ந்து கொண்டவுடன் அதைச் சரிக்கட்ட வேண்டும் என்ற நிலையில் அவர் உடலிலிருந்து (கோபமான நிலைகளில்) வந்தவுடன் “இரு நான் பார்க்கின்றேன்…” என்று சமப்படுத்தும் நிலைகளில் சண்டையிடுகின்றோம்.

 

அப்படித் தாக்கும் உணர்வு வரும் பொழுது நம்மிடம் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம்.

 

காளி கோவிலுக்குச் சென்றால் நாம் புலியையா பலியிடுகின்றோம்…?

 

கோபப்படுவோரைப் பார்த்தால் காளி…! காளிக்கு முன்னாடி புலி. கோப உணர்வைச் சுவாசித்தால் நமக்குள் காளியாக மாறி இரு…! உன்னை நான் பார்க்கின்றேன் என்று ருத்ரதாண்டவம் ஆட வைக்கின்றது இந்த உடலான சிவம்.

 

நம் உடலுக்குள் போய் நல்ல குணங்களால் உருவான அணுக்களைக் கொல்லும் அணுக்களாக மாறுகின்றது. அதாவது

1.நம் உடலில் உள்ள நல்ல குணங்களைப் பலியிடுகின்றோம் என்று அர்த்தம்.

2.அதைக் காட்ட காளி கோவிலில் காளிக்கு முன்னாடி புலியை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

 

நல்ல குணங்கள் பலியானவுடன் ருத்ரதாண்டவம் ஆடுகின்றோம். இது போய் நம் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் நம் நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பிக்கின்றது.

 

நம்மைத் தாக்கியவரைக் கொல்ல வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இது சிவ தனுசு. இந்த வீரிய உணர்வு கொண்டு வலுவாகத் தாக்கப்படும் பொழுது வீழ்ச்சி அடைகின்றது.

 

அப்பொழுது இதை வெல்லக் கூடியது எது? அதைத்தான் அங்கே இராமாயணத்தில் சீதாராமன் விஷ்ணு தனுசை எடுக்கின்றான்.

 

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகும் பொழுது விஷ்ணு தனுசு. உயிருடன் ஒன்றி ஒளியாகவே இருக்கின்றது. எதையும் அது வென்றிடும் ஆற்றல் பெற்றது.

 

நம் வாழ்க்கையில் எந்தத் தீமை வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று

1.அதை எடுத்துப் புருவ மத்தியில் நிறுத்தி

2.நம் உடலுக்குள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று

3.அந்த விஷ்ணு தனுசைப் பாய்ச்சுதல் வேண்டும்.

4.அப்பொழுது நமக்குள் கோபம் உண்டாகும் நிலை அடங்குகின்றது.

 

நம் உடலிலுள்ள இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கலந்தவுடன் கோப உணர்வின் வீரியத் தன்மை அடங்குகின்றது.

 

பரசுராமன் சிவ தனுசை எடுத்தான் அதனால் தோல்வி அடைந்தான். இராமாயணத்தில் இவ்வளவு அழகாகக் கூறியிருக்கின்றார்கள்.

 

அருள் உணர்வுகளைப் புருவ மத்தி வழியாகச் சுவாசித்து உடலுக்குள் செலுத்துதல் வேண்டும். இது தான் விஷ்ணு தனுசு. இதைத்தான் இராமன் விஷ்ணு தனுசை எடுத்துப் பரசுராமனைத் தோற்கடித்தான் என்பது.

 

மீண்டும் உடல் பெறும் உணர்வுகளை மாற்றி இனிப் “பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்…” என்பதையே இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.

 

சகஜ வாழ்க்கையில்

1.மற்றவரைத் தாக்க

2.உடல் பெறும் உணர்வைக் கொண்டு தான் நாம் தாக்குகின்றோம்.

 

அதற்கு மாறாக பிறவி இல்லா நிலை அடைந்த

1.மெய் ஞானிகளின் உணர்வை தனுசாக ஆயுதமாக எடுத்துத் தாக்கும் பொழுது

2.அதனின் பலன் இருவருக்குமே ஒளியாக மாறும்

3.நல்ல சந்தர்ப்பமாக வருகின்றது.

கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்

Bal Krishna

“கர்ப்பமான தாய் கடைப்பிடிக்க வேண்டிய தியானம்”

கருவுற்ற தாய் சண்டை போடுபவர்களையோ நோயாளிகளையோ ஆஸ்துமா நோய் உள்ளவர்களையோ பார்த்தால் அடுத்த நிமிடம் அவர்களைப் பார்க்காத நிலைகள் கொண்டு கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

1.“ஓம் ஈஸ்வரா”… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.என் கருவில் இருக்கக் கூடிய குழந்தையும் அதைப் பெற வேண்டும் என்று வலு ஊட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து நாம் யாரைப் பார்த்தோமோ
1.அவர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்
2.அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று மாற்றிட வேண்டும்.
3.இவ்வாறு கர்ப்ப காலங்களில் தொடர்ந்து இருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கிறோம் என்று தெரிந்தபின் ஒன்றிலிருந்து 90 நாள் TVயோ சண்டை போடுபவர்களையோ உற்றுப் பார்க்கக் கூடாது.
1.ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் ஆஸ்துமா நோயாளிகளைப் பார்த்தால் அதை நுகர்ந்தால் கருவிலே வளரும் குழந்தைக்கு அந்த ஆஸ்துமா நோய் வந்துவிடும்.
2.அதே போல் கண் ஊனமுற்றவர்களைப் பார்த்து அடப் பாவமே… இப்படி ஆக விட்டதே…! என்று நினைத்தால் போதும். கருவிலே இருக்கும் குழந்தைக்கு கண் ஊனம் ஆகும்.
3.கால் ஊனமுற்றவர்களை கருவுற்ற 90 நாட்களில் பார்த்தால் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கால் ஊனமாகும்.

தியானம் செய்யக்கூடிய அன்பர் தன் மகளுக்குத் திருமணம் முடித்தார். பெண்ணிற்குத் தாயார் இல்லை. திருமணம் முடிந்த பிறகு தந்தை பற்றிய கவலை பெண்ணிற்கு வந்துவிட்டது.

கட்டிக் கொடுத்த வீட்டில் உள்ளவர்கள் “உன் அப்பா என்ன… அடிக்கடி  இங்கே வருகிறார்…!” என்று கேட்டதனால் சங்கடமாகிவிட்டது.

கருவுற்றதால் இந்த மாதிரி உணர்வுகள் எடுக்கக்கூடாது. மிகவும்  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நான் (ஞானகுரு) ஏற்கனவே சொல்லியிருந்தேன்.

ஆனால் அந்தப் பெண் சங்கடப்பட்டு வேதனையான உணர்வுகளை எடுத்ததால் கருவில் இருக்கும் குழந்தைக்கு என்ன ஆகிவிட்டது. கை கால் கம்மியாகி விட்டது.

ஸ்கேன் எடுத்துப் பார்த்த போது “கை கால் இல்லாமல் இருக்கிறது…, பிறந்தபின் என்ன செய்வது…?” என்று அப்புறம் (Abortion) அபார்ஷன்  செய்து விட்டார்கள்.

கர்ப்பமான காலத்தில் இந்த மாதிரி எல்லாம் சங்கடப்படக் கூடாது. எப்படி இருக்க வேண்டும்…? என்றெல்லாம் நான் சொல்லி இருந்தேன்.

தன்னை அறியாமலே வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு… வேதனைப் பட்டு…, அந்தக் கருவின் வளர்ச்சி அவ்வாறு ஆகிவிட்டது.

கர்ப்ப காலத்தில் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

“எந்தக் காரணத்தைக் கொண்டும்…” சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ வெறுப்போ வேதனையோ படாத நிலைகள் இருக்க வேண்டும்.

1.அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்
2.கருவில் விளையும் குழந்தைக்கு அந்த நிலை பெற வேண்டும்
3.அகஸ்தியன் பெற்ற சக்திகள் அனைத்தும் இந்தக் கருவிலே வளரும் குழந்தை பெற வேண்டும்
4.அகஸ்தியன் துருவனான அந்த அரும் பெரும் சக்தியைக் குழந்தை பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்
6.இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவிலிருந்து மீட்கும் அந்தச் சக்தி என் குழந்தை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

இந்த மாதிரி ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள் எண்ணினால் பிறக்கும் குழந்தை ஞானியாகத் தோன்றும். அதனின் பார்வையில் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

அந்தக் குழந்தையின் மூலமாக நாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

ஆகவே கருவுற்ற தாய் அந்தப் பத்து மாதமும் ஞானத்தின் வழித் தொடரிலேயே இருத்தல் வேண்டும்.

எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை

Remote power energy

எதிர்பாராது வரும் அதிர்ச்சிகளிலிருந்து உடனடியாக மீளத் தியானிக்க வேண்டிய முறை 

நாம் இந்த உடலில் எத்தனை காலம் வாழ்கின்றோம்?

திடீரென்று ஒரு சுழிக் காற்று வருகின்றது. எதிர்பாராது ஒரு விஷத் தன்மையை நுகர்ந்துவிடுகின்றோம் சிறு மூளை பாகம் சென்றுவிடுகின்றது. நமக்குள் இரத்தத்தை வடிகட்டும் அந்த உணர்வின் உறுப்புகளை நிறுத்திவிடுகின்றது.

அல்லது அந்தச் சுவாசப் பையிலே இத்தகைய இயக்கச் சக்திகள் வந்தால் ஹார்ட் அட்டாக் (HEART ATTACK). ஹார்ட் அட்டாக்கிலே பலவிதம் உண்டு.

உறுப்புகளை இயக்கும் அந்தச் சிறு மூளை பாகம் தாக்கிவிட்டால் இந்த உறுப்புகள் அப்படியே நின்றுவிடும்.

ஒரு வாத நோய் வந்தால் கை கால்கள் மற்றும் அங்கங்கள் ஒரு பக்கம் செயலிழந்துவிடுகின்றதோ இதைப் போல நுண்ணிய அலைகளை இயக்கிக் கொண்டிருக்கும் இந்த உணர்வின் இயக்கங்களில் சிறு மூளைப் பாகங்களில் அந்த உணர்ச்சியைத் தடைப்படுத்தி அதை இயக்காது தடைப்படுத்தி விட்டால் ஹார்ட் அட்டாக்.

டாக்டரால் வேறு ஒன்றும் செய்ய முடியாது.

இருதயத்தில் மூன்று வால்வுகளில் இருக்கக்கூடிய நிலைகளில் அதில் அடைப்படும் பொழுது வலி வந்து செல்லும்.

ஆனால் ஹார்ட் அட்டாக் என்பது உணர்வின் தன்மை எடுத்தவுடன் இயக்கவில்லை என்றால் விரிந்ததைச் சுருக்காது அதே மாதிரி சுருங்குவது விரியாது. அதற்கப்புறம் விரிய முடியாது போய்விட்டால் மூச்சு இழுக்கும் சக்தி வராது.

மடிந்துவிடுவார்கள். இது வேறு. ஹார்ட் அட்டாக் இத்தனைவிதமான நிலைகளில் வருகின்றது.

தியானம் செய்து கொண்டிருக்கின்றேன் திடீரென்று வந்தது என்றால் உடலை விட்டுப் போவது அல்ல. இந்த விஞ்ஞான விஷத்தின் தன்மையால் கதிரியக்கங்கள் பரவினால் அது நமக்குள் புகாத வண்ணம் பாதுகாத்துப் பழக வேண்டும்.

உயிரைக் கடவுளாக எண்ணி எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஒளி படரவேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று குருநாதர் காட்டிய வழியில் அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றோம்.

தியானிக்கும் பொழுது இதை எண்ணி எடுத்தால் எளிதில் பெற முடியும். அந்த மகரிஷிகளைத் தொடர்பு கொள்ளும் அந்த நினைவைக் கொண்டு வந்தீர்கள் என்றால் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவும்.

தலை வலி மேல் வலி கைகால் வலி என்று எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக்கொதிப்பு நீங்க வேண்டும் என்று எண்ணத்தை வலுப்படுத்தி எண்ணினால் அதையெல்லாம் மாற்ற முடியும்.

இந்தப் பழக்கத்திற்கு வரும் பொழுது தீமைகளை மாற்றி இனி எந்த விஷத்தன்மை வந்தாலும் அதை மாற்றியமைக்கும் வல்லமை நாம் பெறுகின்றோம்.

வாசற்படியில் அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் நர நாராயணன் – விளக்கம்

Image

Narasimhar

வாசற்படியில் அமர்ந்து மடி மீது வைத்து “இரண்யனைப் பிளந்தான்… நர நாராயணன்” – விளக்கம்

 

 

நீர் நிலைகள் இருக்கும் பக்கம் விநாயகரை மேற்கே பார்க்க வைத்துள்ளார்கள்.

 

நாம் மேலில் பட்ட அழுக்கை நீரில் மூழ்கிக் குளித்து விட்டு துணியில் பட்ட அந்த அழுக்கைத் தூய்மைப்படுத்தி விட்டு கறையேறி நாம் வந்தவுடன் விநாயகரைப் பார்க்கும்படி செய்துள்ளார்கள் ஞானிகள்.

 

தன் உணர்வில் பட்ட அழுக்கைப் போக்கி உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.

1.விநாயகரைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது

2.தீமையை நீக்கிய மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று

3.நமக்குள் ஆழப் பதியச் செய்கின்றார்கள் ஞானிகள்.

 

ஏனென்றால் முதலில் காவியமாகத் தீட்டியிருப்பார்கள்.
அந்தக் கருத்தினை நமக்குள் பதிவு செய்து கொண்டபின் விநாயகரை உற்று நோக்கிய நிலைகள் கொண்டு

1.நம் உணர்ச்சியைத் தூண்டச் செய்து விண்ணை நோக்கி ஏகி

2.இந்த உண்மையை உணர்த்திய அந்தத் துருவ மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும்

3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும்

4.அதைப் பின்பற்றிச் சென்ற சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று வேண்டும்படி செய்கின்றார்கள்.

 

யாரிடம்…?

 

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நாம் எண்ணியதை இயக்கிக் கொண்டிருக்கும் நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கும் “உயிரான ஈசனிடம்…” வேண்டும்படி செய்தார்கள் ஞானிகள்.

 

வேதனைப்பட்டோரை உற்று நோக்கும் பொழுது உயிரிலே பட்டவுடன் “ஓ…” என்று ஜீவனாகி’ “ம்…” என்று உடலாகின்றது.

 

அது போல வேதனையை அகற்றிய மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உற்று நோக்கி அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டினால் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று நம் உடலாகின்றது.

 

நம்மை அறியாமல் சேர்ந்த அழுக்கினைப் போக்கும் நிலையாக  அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவு செய்து தனக்குள் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆற்றங்கரையில் வைத்துக் காண்பிக்கின்றார்கள்.

 

விநாயகரை உற்று நோக்கும் பொழுது இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி விண்ணுலகம் சென்ற துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.

 

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று அதை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

 

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதனுடன் இரண்டறக் கலந்த செம்பும் வெள்ளியும் ஆவியாக மாற்றுகின்றது.

 

இதே போல மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் செலுத்தி தீமைகளைக் கருக்கி  ஆவியாக மாற்றிடவேண்டும் என்று காட்டுகின்றனர்.

 

உயிரன ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து  உடலுக்குள் அந்த நினைவினை உட்செலுத்தும் பொழுது உடலில் உள்ள தீமைகளை அது அகற்றுகின்றது.

 

இதைத் தான் “நரசிம்ம அவதாரம்” என்பது. நாம் வாசற்படி மீது அமர்ந்து இரண்யனை மடி மீது வைத்துப் பிளந்தான்.

 

சுவாசம் மோதும் இடமான புருவ மத்தியில் வாசற்படி மீது அமர்ந்துள்ளான் உயிரான ஈசன் என்று காட்டி அதை நர நாராயணன் என்று அன்று தெளிவுபடுத்தினார்கள்.  (பிரபஞ்சத்திற்கு உயிர் சூரியன் – நாராயணன்; உடலுக்கு உயிர் ஈசன் – நர நாராயணன்)

 

ஆகவே நாம் கண்ணின் நினைவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து
தனக்குள் அந்த நிலைகளை எண்ணத்தால் எண்ணும் பொழுது அந்த ஈசனிடம் வேண்டும்போது

 

தீமையான உணர்வுகளை நாம் நுகரும் பொழுது நம் ஆன்மாவாக இங்கே மலர்ந்திருக்கும். இதை நுகர்ந்த பின் தான் அறிகின்றோம். அதை மடி என்று சொல்கிறோம்.

 

பிறரிடம் நாம் கேட்டறிந்த தீமையான உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறுகின்றது. மடி மீது என்பதும் இவைதான்.

 

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று உயிருடன் ஒன்றி அந்த உணர்வுடன் இழுக்கச் செய்து உடலுக்குள் அனுப்பும் பொழுது

1.இரண்டறக் கலந்த தீமைகளுக்குள் உட்சென்று அதை வீழ்த்துகின்றது

2.உடலுக்குள் சென்று தீமையைப் பிளந்து நீக்குகின்றது.

 

உடலுக்குள் உயிராக இருக்கும் நர நாராயணனிடம் வேண்டும் பொழுது

1.அந்த வேண்டுதலை ஏற்று அந்த உணர்வின் ஆக்கமாகத்

2.தீமையான நிலைகளை இங்கே மடி மீது வைத்துப் பிளக்கின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

 

தீமையை வென்ற மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அதை உற்று நோக்கி உயிரான ஈசனிடம் வேண்டி அந்த ஒளியின் தன்மையைத் தனக்குள் இணைக்கச் செய்ய வேண்டும்.

 

அவ்வாறு செய்தால் அவனே தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் விளைய வைக்கின்றான் என்ற இந்த உண்மையைச் சாதாரண எளிய மக்களும் இதை அறிந்து உணர்ந்து கொள்ளும்படிக் காட்டியுள்ளார்கள்.

 

இதன் வழி கொண்டு அந்த ஞானியின் உணர்வை நமக்குள் பதிவு செய்து நம் ஆன்மாவில் சுழன்று கொண்டிருக்கும் தீமைகளை எவ்வறு அகற்றிடவேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்

மகரிஷிகளைப் பற்றி இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதே நாம் தெரிந்து கொள்ள முடியும்

Image

மகரிஷிகளைப் பற்றி இந்தக் காலகட்டத்தில் இப்பொழுதே நாம் தெரிந்து கொள்ள முடியும்

 

 

பெரும்பகுதியானவர்கள் நாம் என்ன நினைக்கின்றோம்…!

 

நான் எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கின்றேன்.. அறிந்திருக்கின்றேன்… எல்லாம் செய்திருக்கின்றேன். ஆனால் சாமி (ஞானகுரு) சொல்லும் தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

1.படித்த என்னாலேயே இதைப் பின்பற்ற (FOLLOW) முடியவில்லையே…!

2.சாதாரணமானவர்கள் எப்படிப் பின்பற்ற முடியும்…! எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…! என்று முடித்துக் கொள்கிறோம்.

 

பிறரை எண்ணி இப்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் நிலைக்குத்தான் இது நம்மை அழைத்துச் செல்லும்.

 

சிறிய குழந்தைகள் பள்ளிக்கே சென்றிருக்காது. ஒரு மூன்று அல்லது நான்கு வயது உள்ள குழந்தைகள் டி.வி.யைக் கூர்ந்து கவனித்தால் போதும்.

 

டி.வி.யில் பாடும் பாட்டையெல்லாம் அந்தக் குழந்தை பாட ஆரம்பிக்கும். அதில் ஆடிய ஆட்டமெல்லாம் ஆட ஆரம்பிக்கும்.

 

நம்மால் அந்த மாதிரி ஆடிக் காட்டவும் பாடிக் காட்டவும் முடியுமோ…!

 

ஏனென்றால் அந்தக் குழந்தை

1.கூர்மையாகக் கவனித்தது.

2.அந்த உணர்வுகள் அதற்குள் பதிவாகின்றது.

3.அதையே மீண்டும் செயலாக்குகின்றது.

 

அதைப் பார்த்துவிட்டு என் குழந்தையைப் பாருங்கள்…! டி,வி.யைப் பார்த்துவிட்டு அப்படியே… பாடுகின்றது… ஆடுகின்றது…! என்று நாம் புகழ் பாடுவோம்.

குழந்தை எதைப் பதிவு செய்ததோ அந்த உணர்வுகள் அது அங்கே இயக்குகின்றது.

 

“குழந்தைப் பருவம்” மாதிரி ஞானிகளின் உணர்வுகளை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால்

1.அவர்கள் (ஞானிகள்) செய்த நிலைகளை எல்லாம் நாமும் செய்வோம்.

2.அதைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் கூர்மையாகப் பதிவாக்கினால் அது வரும்.

 

பதிவாக்காதபடி மற்றவர்களை எண்ணினால் என்ன ஆகின்றது?

 

“எங்கே நாம்…! எத்தனையோ புத்தகத்தைப் படித்திருக்கின்றேன்… அதில் உள்ளதை ஒன்றும் இவர் சொல்லவில்லை… இவர் (என்னமோ) புதிதாகச் சொல்கிறார்…!

 

நம்மால் ஒன்றும் பின்பற்ற முடியவில்லையே…! படித்தவர்களுக்கெல்லாம் அது தான் முன்னாடி நிற்கும். இவர் சொல்வதை எல்லாம் “அதை எப்படிப் பார்ப்பது?” என்ற எண்ணம் தான் வரும்?

 

பள்ளியில் நாம் படிப்படியாகப் படித்துத்தான் எல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றோம். விஞ்ஞானியாக ஆனதும் அப்படித்தானே.

 

மெய்ஞானிகளைப் பற்றி சாமி உபதேசிக்கும் அருள் உணர்வுகளை எல்லாம்

1.”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால்

2.இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்.

3.அதற்குண்டான மெய் உணர்வைப் பெறவும் செய்யலாம்.

 

குருநாதர் கொடுத்த தீமைகளைப் (கெட்டதைப்) பிளந்து அதற்குள் இருக்கும் ஆற்றலைப் பிரித்து எடுக்கும் ஞான உபதேசம்

 

 

குருநாதர் உபதேசித்தது:-

 

இந்த உயிர் புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் கெடுதலில் இருந்து தன்னைக் காத்திடும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து அந்த உடலில் சேர்த்து கொண்ட உணர்வு வலுப்பெற்று அதனின் வலு கொண்ட அந்த உணர்வின் சரீரமாக வளர்ந்தது.

 

கெட்டதை நீக்கி நல்லதைப் பெறும் இந்த உணர்வின் தன்மையை அது வளர்த்து அதிலே சேர்த்து கொண்ட அந்த வினைக்கு நாயகனாக

1.இன்று மனித உடல் நீ பெற்றிருக்கிறாய்.

2.அன்று இது நாற்றம் என்று நீ விலகி இருந்தால்

3.உன் உடல் இன்று நாற்றத்தை விலக்கும் சக்தியாக வராது.

4.உன் உடலில் இருந்து வரக்கூடிய இந்த உணர்வின் தன்மை

5.”கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…” என்று

6.வியாசகர் உணர்த்திய “வராக அவதாரத்தை” அங்கே சாக்கடையில் அமரச் செய்து எமக்குத் தெளிவாக்கினார்.

 

கெட்டதை நீக்கிப் பல நிலைகள் கொண்டு இப்படி வந்திருக்கூடியது தான் இந்த மனித உடல் என்று அங்கே சாக்கடையில் வைத்து உபதேசத்தைக் கொடுக்கிறார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

அந்த வராகன் நாற்றத்தை எண்ணாது நல்லதை நுகர்ந்தது போல் இந்த வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை நுகராது இந்தக் காற்றில் மறைந்துள்ள அருள் மகரிஷிகளின் அருளை நுகர்தல் வேண்டும் என்று எமக்கு அனுபவபூர்வமாகக் காட்டினார்.

 

வராகன் என்றால் தீமைகளைப் பிளந்து நல்லதைப் பிரிக்கும் “மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல்” என்று பொருள்.

 

கெட்டதைப் பற்றி அதிகமாக… அழுத்தமாக… இப்படி இருக்கிறதே.. கெட்டுவிட்டது… எல்லாம் கெட்டுவிட்டது… எல்லாம் போய்விட்டது… போச்சு…! என்று எண்ணுவதற்குப் பதில்

1.சரி ஆனது ஆகிவிட்டது..!

2.அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் நல்லதாக்கும் வழி என்ன?

3.மகரிஷிகள் நஞ்சை ஒளியாக ஆக்குவது போல்

4.நடந்த கெட்டதை எல்லாம் நல்லதாக ஆக்கும் சக்தி அந்த உபாயங்களும் யுக்திகளும் எனக்கு வேண்டும் என்று எண்ணி

5.இதற்கு அழுத்தம் கொடுத்து உயிரான ஈசனிடம் வேண்டினால்

6.சக்தி வாய்ந்த ஞானிகளாக நாம் நிச்சயம் மாறுவோம்.

 

நிலக்கடலையை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுப்பதுபோல் ஒரு தேங்காயை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுப்பது போல்

1.தீமைகளை உடைத்து அதைப் பிளந்து

2.அதற்குள் இருக்கும் இயங்கும் ஆற்றல்களை அந்த இயக்கச் சக்திகளை

3.நாம் பிரித்து எடுத்துக் கொள்ள முடியும்.

 

மனிதனாக நமக்கு அந்த ஆற்றல் உண்டு.

“உன்னைத் தொலைத்துவிடுகிறேன் பார்…!” என்று பழி தீர்க்கும் உணர்வை எடுத்தால் அதனின் முடிவு என்ன ஆகும்…?

Image

“உன்னைத் தொலைத்துவிடுகிறேன் பார்…!” என்று பழி தீர்க்கும் உணர்வை எடுத்தால் அதனின் முடிவு என்ன ஆகும்…?

 

 

காளி மற்ற கொடூரமான தெய்வங்கள வணங்கி வருபவர்களைப் பாருங்கள்.

1.கோபம் பயங்கரமாக வரும்.

2..எதை எடுத்தாலும் அவர்கள் சொல்லக்கூடிய… பேசக்கூடிய பேச்சு… என்ன செய்யும்?

3.அவர்கள் சொல் மற்றவர்களை மடங்கச் செய்யும்.

4..அப்பொழுது இவர்கள் ஜெயித்த மாதிரிப் போவார்கள்.

5..உன்னைத் “தொலைத்துக் கட்டிவிடுகிறேன் பார்…” என்பார்கள்

 

அவர்களிடம் யாராவது பேச முடியுமா என்றால் முடியாது. எல்லோரும் ஒதுங்கிக் கொண்டே போவார்கள். இந்த உணர்வுகள் கடைசியில் என்ன செய்யும் என்று அவர்களுக்கே தெரியாது.

 

“உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நல்ல குணத்தைத் தொலைத்துக் கட்டி அந்தக் காளியின் ரூபமாகக் கொதிப்படைந்து இரத்தக் கொதிப்பாக மாற்றி “என்னால் முடியவில்லையே தலை சுற்றுகிறதே…” என்ற நிலை தான் வருகிறது.

 

உடலுக்குப் பின் புலியின் ரூபம் தான் பெற முடியும். மற்றவர்களைத் தொலைத்துக் கட்டலாம். அடக்கி ஆளலாம். ஆனால் நம் உயிர் நமக்குள் அந்த அசுர சக்தியாகப் படைத்துவிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

 

கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்ற நிலையைத் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

 

நாம் எதுவாக ஆக வேண்டும்? எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனாக இன்று வந்திருக்கின்றோம். இதையெல்லாம் எங்கே கொண்டு போய் மாற்றும்?

 

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு இயக்குகிறது என்றும் நம் உயிரின் வேலை என்ன என்றும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட நம் நினைவாற்றலைத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாக இணைக்க வேண்டும். அதிலிருந்து வரும் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் நுகர வேண்டும்.

 

குடும்பத்தில் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து அந்த உணர்வுகளை ஒருவருக்கொருவர் பாய்ச்ச வேண்டும்.

 

கணவன் மனைவி இரண்டு உணர்வும் இவ்வாறு ஒன்றாகின்றது. உயிரின் உணர்வில் ஒளி பெறவேண்டும் என்று எண்ணும்பொழுது “ஒளியாகின்றது”. அதாவது

1.இரண்டு உடல்களிலிருந்து கருவாக்குகின்றது.

2.இரண்டு உயிரும் ஒன்றாகின்றது.

3.ஒன்றான பின் ஒளியாக மாறும் திறன் பெறுகிறது.

 

இப்படிச் சென்றவர்கள் தான் மகரிஷிகள். ரிஷி – ரிஷி பத்தினி என்று காட்டியிருப்பார்கள்.

 

 

“உயிரான ஈசன் நமக்குள் இருக்கின்றான்…” என்று அவனை நாம் மதித்துப் பழக வேண்டும்

Image

“உயிரான ஈசன் நமக்குள் இருக்கின்றான்…” என்று அவனை நாம் மதித்துப் பழக வேண்டும்

 

 

நம் உயிரை நாம் நம்பிப் பழக வேண்டும். அம்மா அப்பாவைக் கடவுளாக மதிக்க வேண்டும். உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும். உடலை அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ண வேண்டும்.

 

தீமை வந்தால் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

1.ஒவ்வொரு நாளும் அருள் உணர்வைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்

2.நமக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளை நாம் பார்க்கலாம்

3.பார்க்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக வரும்.

4.அகண்ட அண்டத்துடன் (2000 சூரியக் குடும்பம்) தொடர்பு கொண்ட உணர்வையும் நாம் உணர முடியும்.

5.எங்கே போக வேண்டும்…! என்ற உணர்வும் வரும்.

6.அதை வைத்து (நம் எண்ணத்தால்) நாம் செல்ல வேண்டிய இடத்தை நிச்சயம் அடைய முடியும்.

 

1.எண்ணியதை உருவாக்குவது நம் “உயிரே”.

2.எண்ணியதை உடலாக்குவதும் “உயிரே”.

3.எண்ணியதை ஆண்டு கொண்டிருப்பதும் ஆண்டவனாக இருப்பதும் நம் “உயிரே”.

 

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை வைத்து… அடுத்து…, “அவன் ஆட்சியும் நம்மை ஆளுவதும் அவனே”.

 

ஆகவே அவன் நமக்குள் இருக்கும் பொழுது அவனை மதித்துப் பழக வேண்டும்.

1.“அவனை மதிக்காதபடி…!”

2.உடல் தான் பிரதானம் என்று எண்ணினால்

3.உடலுக்குள் விளைந்த உணர்வின் செயலாக நாம் எண்ணியது உருவாக்கப்பட்டு

4.முடிவில் வேதனைப்படும் நிலை தான் வரும்.

 

இதிலிருந்து நாம் அனைவரும் மீண்டு அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.