அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

அருள் ஞானிகளுடன் ஒன்றுவதே “மதி”

 

இந்த உபதேசத்தைக் கேட்பவர்கள் அனைவரும்… உங்களுக்கு நோயோ அல்லது மற்ற குறைபாடுகளோ தற்சமயம் ஏற்பட்டால் அது எல்லாம் இப்பொழுது வந்தது அல்ல.

இளமையில் ஏங்கிப் பெற்ற அல்லது பார்த்துணர்ந்த
1.தீமையான நிலைகளில் இருந்து விடுபட நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் பொழுது விதி என்ற நிலையும்
3.அந்த விதிப்படி வினைகள் விளைந்து நோயாக விளைந்து
4.வேதனை என்ற நிலைகளை நமக்குள் வளர்க்கின்றது.

அந்த விதிப்படி விளைந்த உணர்வுகளை மாற்ற
1.அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து விதி என்ற அந்த இருளை நீக்கி
2.அருள் ஞானிகளுடன் ஒன்றச் செய்வதே மதி.

மனிதன்… மதி என்ற நிலைகள் கொண்டு தான் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது. எத்தனையோ அருள் ஞானம் உருப் பெற்றது.

நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

நமது வாழ்க்கையில் முன் செய்து கொண்ட வினையே இது வருகின்றது. உதாரணமாக… ஒரு விபத்து என்று ஆனாலும் அதனைப் பற்றி நாம் கேட்டுணர்ந்த பின் அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப்பெற்றால்… நம் நல்ல குணங்களும் இருள் சூழச் செய்து விடுகிறது.

அது மட்டுமல்ல… விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த அதே உணர்வுகளும் நம்மை இயக்கப்பட்டு நம்மை அறியாமல் சில நோய்கள் வந்து விடுகிறது… அல்லது விபத்தாகி விடுகின்றது.

இதைப் போல
1.நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று
2.எத்தனையோ வினைகளுக்கு ஆளாக்கி அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகிவிடுகிறது.

ஆகவே எத்தகைய தீமைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெற வேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால்… உயிர் நாம் எண்ணிய உணர்வை நமக்குள் விளையச் செய்கின்றது “அந்த வலுவாக வளரச் செய்கின்றது…”

ஆகவே எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகள் அருள் சக்தியை நீங்கள் பெறும் அந்தத் தகுதிக்குத் தான்
1.நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.வாழ்க்கையில் வந்த இருளை வென்று உடல் பெறும் உணர்வுகளை அங்கே சப்தரிஷி மண்டலத்தில் கரைக்கச் செய்து
3.அறிவின் ஒளியாக அவர்களை அங்கே நிலைக்கச் செய்யும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.

“அந்த அறிவின் ஒளியின் தன்மை” நமக்குள் பெறும் போது நம்மை அறியாது வந்த இருளை நீக்கும் ஆற்றலை நாம் பெறுகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையும் தன்மையும் நாம் பெறுகின்றோம்.

அனைவரும் நாம் இதைப் பெறுவோம்… அருள் ஞான வழியில் நாம் செல்வோம்… என்று பிராத்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

குரு பீடத்தின் சக்தி

குரு பீடத்தின் சக்தி

 

மனிதனின் வாழ்க்கையில் சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ குரோதமோ சந்தர்ப்பவசத்தில் நமக்குள் இது வித்தாக ஆகிவிட்டால் விதியாக அது வளர்ந்து விடுகின்றது.
1.அந்த ஒவ்வொரு குணமும் விதியாக வளர்ந்து இந்த உணர்வின் தன்மை பெருக்கப்படும் பொழுது
2.கடும் நோயாக அவஸ்தைப்பட்டுத் தான் தீர வேண்டி இருக்கின்றது.

இதிலிருந்து மீள வேண்டும் என்றால் நம்முடைய மதியைச் செலுத்துதல் வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்… எங்கள் உடலில் அறியாது சேர்ந்த நோய்கள் நீங்க வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்… அருள் ஒளி பெற வேண்டும்…! என்று ஏங்கி அதைப் பெறுதல் வேண்டும்

“தபோவன குரு பீடத்தின் சூரியனை உற்றுப் பார்த்து” மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் இதற்கு முன் எங்களை அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் அகன்று மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நீங்கள் இதற்கு முன் செய்த வினைகளை அகற்றிடும் சக்தியாக அருள் ஒளி உங்களுக்குள் படர்ந்து உங்கள் உடலில் எந்த வலி இருந்தாலும் மேல் வலியாக வந்திருந்தாலும் அது அனைத்தும் குறைந்து மன பலத்தையும் மன வளத்தையும் கூட்டும்.

மனக்கவலையோ சோர்வோ அதைப் போன்ற நிலைகள் இருந்தாலும் இங்கே தியானிக்கும் பொழுது அந்த மன பலம் உங்களுக்குக் கிடைத்து மன வளம் பெறும் அந்தத் திறனும் கிடைக்கும்.

உங்கள் உயிரை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர்தல் வேண்டும் என்னை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும். மெய் ஞானிகள் உணர்வு எனக்குள் வளர வேண்டும் என் பார்வையால் நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலம் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிக் கண்ணைத் திறந்தே இந்தச் சூரியனைப் பாருங்கள்.

1.உங்கள் உடலுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகள் ஊடுருவதும்… மகரிஷிகளின் ஆற்றல் பெருகுவதையும் நீங்கள் உணர முடியும்.
2.மகரிஷிகள் வாழ்ந்த காலங்களில் அவர்கள் உருவங்கள் இருந்திருந்தால் அந்த உருவமும் சிலருக்குக் காட்சியாகக் கிடைக்கும்
3.சப்தரிஷி மண்டலங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

இவ்வாறு தியானிக்க… தியானிக்க
1.உங்கள் நரம்பு மண்டலங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் படரும் பொழுது
2.ஒரு காந்தப் புலனறிவு உங்களுக்குள் இயங்குவதை உணரலாம்

பய உணர்வுகள் அதிகரித்தால் (சிறு மூளையில்)ஏற்படும் தீய விளைவுகள்

பய உணர்வுகள் அதிகரித்தால் (சிறு மூளையில்) ஏற்படும் தீய விளைவுகள்

ஒரு குழந்தை ரோட்டில் செல்வதை நாம் பார்க்கின்றோம் அது போகும் பாதையிலோ ஒரு பள்ளம் (குழி) இருக்கின்றது… நம்முடைய கண் கரு விழி அதைக் காட்டுகின்றது. பார்த்தவுடன் “ஐய்யய்யோ அங்கே குழி இருக்கின்றதே…” என்று என்று பதறுகின்றோம்.

குழந்தை அதைப் பற்றிய அறிவு இல்லாதபடி அதனுடைய சிந்தனைக்கு இல்லாதபடி ஓடி வருகின்றது. காரணம் தனக்கு வேண்டிய ஒரு பொருளை எடுப்பதற்காக அப்படி வருகின்றது.

பொருளைத்தான் அந்த குழந்தை பார்க்கின்றது… இந்தப் பள்ளத்தை அது பார்க்கவில்லை.

ஆனால் நாம் அந்தப் பள்ளத்தைத் தெரிந்து கொண்டோம். உற்றுப் பார்க்கப்படும் பொழுது குழந்தையினுடைய வேகத்தை கண்டு “குழந்தை உள்ளே விழுந்து விட்டால் என்ன ஆகும்…?” என்று நமக்குப் பயம் வருகின்றது.

குழந்தைக்கு பயம் இல்லை. யார் பெற்ற குழந்தையாக அது இருந்தாலும் அன்பும் பண்பும் பரிவு கொண்ட மனிதன் நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்தக் குழந்தைக்குத் “தீங்கு விளையப் போகின்றது…” எனத் தெரிந்து கொள்கின்றோம்

தெரிந்து கொண்ட பின் அவனைக் காக்கும் எண்ணங்களே நமக்குள் வருகின்றது. அத்தகைய எண்ணங்கள் வரும் பொழுது ஓடிப்போய் அந்தக் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.

அதே சமயத்தில்
1.பயத்தின் உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது
2.நம் உடலுக்குள் உணர்வின் இயக்கம் அதிகமாகின்றது… பய அலைகளைக் குவிக்கின்றது.
3.அதன் உணர்வின் துணை கொண்டு வேகத் துடிப்புடன் குழந்தையை நாம் ஓடிச் சென்று காத்து விடுகின்றோம்.

அந்த சமயத்தில் நாம் நுகர்ந்த பய உணர்வால் அதற்குப்பின் அடிக்கடி யாரைப் பார்த்தாலும் அல்லது ஒரு பொருளே வித்தியாசமாகத் தெரிந்தாலே
1.“அது கீழே விழுந்து விடுமோ…” என்ற எண்ணம் வரத் தொடங்கும்.
2.பயத்துடன் உற்று நோக்கப்படும் பொழுது அந்தப் பொருள் நிச்சயம் கீழே விழுகும்.

ஆனால் அந்த எண்ணங்கள் இங்கே பதட்டத்தைத் தான் உண்டாக்கும். இப்படி இந்தப் பதட்ட நிலைகள் எடுத்துக் கொண்டவர்கள் அடுத்து யாரைக் காக்க வேண்டும் என்றாலும்
1.அந்த அவசரப்பட்டே செயல்படுவார்கள்… அத்தகைய எண்ணம் தான் வரும்.
2.கடைசியில் கை கால் எல்லாம் நடுக்கம் வரத் தொடங்கும்

இந்த வாழ்க்கையில் அவர் நன்மைகளைத்தான் செய்கிறார். இருந்தாலும் பிறரைக் காத்திடும் நிலைகள் வரும் போது அந்த அவசர அவசரமாகச் செயல்படும் தன்மை வரும்.

ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவார். ஆனால் அது தடைப்படும் பொழுதெல்லாம் “நடுக்கங்கள்” அவருக்குள் வரும்.
1.சிறு மூளையில் இந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கத் தொடராக நடுக்க வாதமாக வந்துவிடும்
2.அதற்கு மருந்தே இல்லை…! (ஆனால் அவர் நல்லவர்).

இது போன்ற உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ஏதோ காரணத்தால் அது நடக்கவில்லை என்றால் உடனே கோபம் வரும்… உணர்ச்சியின் வேகம் தூண்டும். தன்னுடைய செயலாக்கத்தை மாற்றிவிடும்.
1.அந்த உணர்வின் வேகம் வந்து விட்டால் இரத்தக் கொதிப்பாக மாறும்.
2.அதன் வளர்ச்சியில் நடுக்க வாதமும் வரும்.

இவைகள் எல்லாம் சந்தர்ப்பங்களால் உருவாக்கக்கூடிய நிலைகள். இந்த மாதிரி நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அதைப் பெறும் வழி என்ன…?

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… விண்ணின் ஆற்றலை இந்தப் பூமிக்குள் அது கலந்துள்ளதை உயிராற்றல் கொண்டு தனக்குள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட நிலையை எனக்குள் (ஞானகுரு) பதிவாக்கினார்.
1.வானியல் தத்துவத்தை அறிந்தார்…
2.புவி ஈர்ப்பின் தன்மையை அறிந்தார்
3.உயிரியல் தத்துவத்தை உணர்ந்தார்
3.இது எவ்வாறு என்று எனக்கு உபதேசித்து அந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தார்
4.அதை நான் நினைவு கொண்டு அவர் கற்றுணர்ந்த உணர்வுகளை நான் அறிகின்றேன்
5.அதை எனக்குள் விளையச் செய்கின்றேன். விளைந்த உணர்வின் எண்ணங்கள் வெளிப்படுகின்றது
6.வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களைத் தான் உங்களுக்குள் இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன்.

இதை எண்ணி ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் தீமையை நீக்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.

காரணம் எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் பார்க்காத மனிதன் இருக்க முடியாது. ஆனால் பார்த்தாலும் (உதவி செய்ய முற்பட்டாலும்) அடுத்த கணம் அந்தத் துயரம் உடலுக்குள் வளராதபடி நாம் தடுக்க வேண்டியது அவசியம்.

நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது உயிரான ஈசன் தான். எண்ணியதை அணுவாக மாற்றுவது உயிர் அதற்கு ஜீவன் கொடுத்து உணவு கொடுப்பதும் உயிர். அந்த உணர்வின் அணுவாகி மலமாகி உடலாக சிவமாக ஆகின்றது. ஆகவே நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?
1.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் சிவமாக ஆக்கினால் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளலாம்.
2.அதற்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.

எத்தகைய தீமையைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணமே அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த முறைப்படி நாம் உதவி செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எத்தகைய வேதனையைப் பார்த்தாலும் இப்படித்தான் நாம் எண்ணித் தூய்மைப்படுத்தி நம் நல்ல எண்ணங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீமைகளை வலுவிழக்கச் செய்து பழக வேண்டும்
1.பயமும் வேதனையும் ஆத்திரமும் நமக்குள் வளராதபடி
2.அதை நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக இதைச் செயல்படுத்த வேண்டும்.

உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

 

1.விண்ணிலிருந்து ஒளி அலைகள் வருவதையும்
2.அந்த மகரிஷிகளுடைய ஆற்றல்கள் எப்படி வருகிறது…? என்பதையும்
3.அகஸ்தியன் உணர்வலைகள் எப்படி வருகிறது…? என்பதையும்
4.பச்சிலைகளை அவர் எப்படி நுகர்ந்தறிந்தார்…? என்பதையும்
5.அதே உணர்வின் தன்மை அவருடைய தாய் தந்தையர் எப்படி நுகர்ந்தார்கள்…? என்பதையும்
6.விஷத்தன்மை கொண்ட அணுக்கள் தங்களுக்குள் வராது எப்படிப் பாதுகாத்துக் கொண்டார்கள்…? என்பதையும்
7.அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்குக் காண்பித்துக் கொடுத்தேன் (ஞானகுரு)..

அங்கே ஒரு மருத்துவரின் தந்தைக்குத் தீராத தலைவலி நோய். அதை நீக்குவதற்கு அகஸ்தியருடைய மூலிகையை எடுக்க வேண்டும். நீ வானத்தை நோக்கி எண்ணி இந்த மாதிரி தியானம் இரு என்று அந்தப் பையனிடம் சொன்னேன்.

அகஸ்தியரின் உணர்வலைகள் வரும். அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உன் கையிலே அந்தப் பொருள் கிடைக்கும்… அதை அவருக்குக் கொடுத்துவிடு என்று சொன்னேன்.

அவ்வாறு எண்ணிய உடனே
1.பையன் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வேர் கிடைக்கின்றது
2.கிடைத்த உடனே “அதை அவர் தலைமாட்டில் வை…” என்று செயல்படுத்தினேன்.

தலைவலியைப் போக்குவதற்கு அன்றைய காலத்திலே அவர் 12 ரூபாய் மாத்திரை சாப்பிட வேண்டும். காலையில் ஒன்று சாப்பிட வேண்டும் இரவு தூங்கப் போகும் முன் ஒன்று சாப்பிட வேண்டும்.

அப்பொழுது தான் தலைவலி நீங்கும்… இல்லையென்றால் புழுவைப் போல துள்ளுவார்.

அதே சமயத்தில் அவர் கேட்டது… “என் தலைவலியைப் பார்க்கின்றாய்… நீ இத்தனை தியானம் செய்கின்றாய்… ஆனால் உன்னால் அதைப் போக்க முடியவில்லை. நீ என்னப்பா தியானம் செய்கின்றாய்…?

இதை நான் அந்தப் பையனிடம் சொல்லி
1.தியானத்தின் மூலம் நீ கேள்… அகஸ்தியன் உணர்வுகள் குவியும்
2.அகஸ்தியன் உபயோகப்படுத்திய அந்த வேர்கள் கிடைக்கும் என்றேன்.

காரணம்… அன்று அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது அவருடைய தாயார் பல தாவர மூலிகைகளைத் தனக்குள் மூலமாகப் பூசி… பல தீமையான மிருகங்களிடம் இருந்து அந்த விஷத் தன்மையான நிலைகளிலிருந்து துயரப்படாதபடி மீட்டிய அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் உண்டு.

அது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள்ளும் பதிந்தது அவன் பிறந்த பின் இந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை நாடாத நிலைகள் கொண்டு விண்ணை உற்று நோக்கினாலும் நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வின் தன்மையைப் பக்குவமாகப் பெறும்படி செய்தது. ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உலக அனுபவம் பெறுவதற்காக அந்த இளம் வயது பையன்… கலக்கமற்ற நிலைகள் அவனுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்தியது.

தகப்பனாருக்கு அந்த வேரைக் கொடுத்தபின் தலைவலி அகன்று விட்டது. மருந்து சாப்பிட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாதது இந்த வேரைத் தலைமாட்டில் வைத்ததும் முழுமையாக நீங்கியது.

அப்பொழுது அவர் “உங்கள் குருநாதர் நல்ல குருநாதர்…” என்று போற்றுகின்றார். ஆனால் அதற்குப்பின் அவர் இங்கு தியானத்திற்கு வரவில்லை.

இப்படி நிகழ்ச்சி ஆனபின் ஒவ்வொருவராக வந்து இந்தப் பையனிடம் கேட்க ஆரம்பிக்கின்றார்
1.என் உடலில் இருக்கக்கூடிய இந்த நோய்க்கு ஒரு பச்சிலை வேண்டும்
2.எனக்குக் குழந்தை வரம் வேண்டும் அதுக்கு ஏதாவது கேட்டுச் சொல்லுங்கள் என்று
3.இந்த மாதிரி பல நோய்களுக்கும் பல நிலைகளுக்கும் பச்சிலைகள் அங்கே வந்து கொண்டே இருந்தது.

தியானத்தில் அமர்ந்து பச்சிலை கிடைத்த பின்… எல்லோரும் அவனிடம் பச்சிலையைக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆக
1.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறுவதற்கு இதை எல்லாம் அனுபவப்பூர்வமாக யாம் காட்டினாலும்
2.அந்த பிஞ்சு உள்ளமாக இருக்கக்கூடிய அந்தப் பையனுக்கு தெரிந்தாலும்
3.அடுத்து அவன் அவனுடைய உணர்வுக்குத் தக்கவாறு வேறு நிலைகளுக்கு மாற்ற ஆரம்பித்து விட்டான்.

நான் அங்கே போக வேண்டும்… இங்கே போக வேண்டும்… “எனக்குப் பணம் வேண்டும்” என்று கேட்க ஆரம்பித்து விட்டான்.

இவைகள் எல்லாம் உண்மையின் உணர்வின் நிலைகளைத் தெரியச் செய்தாலும்… பெரியவர்களுக்கு இதை தெரியச் செய்தாலும்…
1.அந்த ஆசையிலே தான் மூழ்கி விடுகின்றார்கள்.
2.மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற குரு காட்டக்கூடிய நிலைகள் அங்கே இல்லை.

பல வருடங்கள் யாம் பெற்ற சக்திகளை “அனுபவபூர்வமாக” மக்களுக்கு இது கிடைக்கச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தினாலும்… அவர்களால் அதை நல்வழிக்குக் கொண்டு செலுத்த முடியவில்லை.

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

பித்தம் அதிகரிப்பதன் காரணமும்… அதனால் உடலில் ஏற்படும் பாதிப்புகளும்

 

சில சந்தர்ப்பங்களில் நம்மை அறியாமலே குடும்பத்தில் எதிர்பாராது பல நிலைகள் ஆகி அதனால் வேதனையாகும் பொழுது கோபமும் எரிச்சலும் சிறுகச் சிறுக விளைந்து… உடலில் இருக்கக்கூடிய “பித்த சுரப்பிகள்” அதிகமாக இயங்க ஆரம்பிக்கும்.
1.எந்த அளவுக்கு வேகத் துடிப்பின் உமிழ் நீர்கள் சுரக்கின்றதோ
2.அந்த வேகத் துடிப்புக்கொப்ப பித்தம் அதிகமாகும்.

ஆகாரத்தை எந்த அளவுக்கு எடுக்கின்றோமோ அதற்குத்தக்க பித்த சுரப்பிகள் இயங்கி அதை ஜீரணிக்க செய்யும். ஆனால்
1.அதிகமான பித்தமானாலோ மந்தமாக்கிவிடும். அதே சமயத்தில் வாய் உமட்டல் வந்துவிடும்
2.பசி அதிகமாகும் ஆனால் ஆகாரம் அதிகமாக உட்கொள்ள முடியாது.

இத்தகைய உணர்வு உடல் முழுவதும் பரவி… கார உணர்ச்சிகளும் கூடி அதை இந்த பித்த சுரப்பிகள் எடுக்கப்படும் பொழுது “நமது நாடி நரம்புகள் அனைத்தும் பலவீனப்படச் செய்யும்…”

அதே சமயத்தில் எதையாவது ஒரு தொழில் செய்வோம் என்றால்
1.கடினமான சாமானைத் தூக்கினால் திடீரென்று கண் கட்டும்… கீழே விழுகச் செய்யும்.
2.அதே சமயம் உட்கார்ந்து எழுந்தாலும் கண் கட்டச் செய்யும்.

ஏனென்றால் இந்தப் பித்தத்தின் சுரப்பிகள் நமக்குள் அதிகமாகும் பொழுது… கடைசியில் இரத்தக்கொதிப்பும் பக்கவாதங்களும் வந்து விடுகிறது.

ஆனால் தவறு செய்யவில்லை.

எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வை உயிர் இயக்கிக் காட்டுகின்றது. நாம் எதைப் பார்க்கின்றோமோ அந்த உணர்வின் உண்மையை… “குடும்பத்திலே இப்படிச் செய்கின்றார்கள்…” என்று அந்த உணர்வினைக் கண் இழுத்துக் காட்டுகின்றது.

அந்த உணர்வினை உயிர் இயக்கிக் காட்டிப் பொருளறியச் செய்கின்றது… அறியச் செய்தாலும்… நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உடலாக ஐக்கியமாகி விடுகிறது.

இவ்வாறு உடலுக்குள் மாறிக் கொண்டே இருக்கும். இந்த நிலையை… இவை அனைத்தையும் மாற்றி அமைக்கக்கூடிய திறன் மனிதனின் ஆறாவது அறிவுக்கு உண்டு.

அதைச் சரியான முறையில் நாம் பயன்படுத்தவில்லை என்றால் நாம் பரிணாம வளர்ச்சியில் வந்தது போல இந்த உணர்வின் தன்மை நம்மை அறியாமலே இயக்கி வேதனை கொண்ட உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கி விடுகிறது.

வாதமோ இரத்தக் கொதிப்போ ஆகிவிட்டால் அதே சமயத்தில் பித்த சுரப்பிகள் அதிகமாகும் பொழுது பசியின் கொடுமை அதிகமாகும். வாத நோய் வந்தவர்களுக்கும் இரத்தக் கொதிப்பு வந்தவர்களுக்கும் பசியின் ஏக்கம் அதிகமாகும்.

1.பசி எடுத்தவுடன்… ஆகாரம் உடனே கொடுக்கவில்லை என்றால் மிகவும் கோபம் வரும்
2.யார் அவர்களுக்கு உதவி செய்கின்றார்களோ அவர்களை ஏச வேண்டிய நிலையில் வெறுக்கும் நிலையும் அதிகமாகச் சேர்த்துக் கொண்டே இருக்கும்.

அந்த வெறுப்பான உணர்வு கொண்டு வேகமாகக் கேட்கப்படும் பொழுது அவர்கள் உணவு உடனே கொடுக்கவில்லை என்றால் அவருடைய எண்ணம்…
1.“இப்படிச் செய்கின்றார்களே…
2.நான் சம்பாரித்துக் கொடுத்தேனே…
3.தக்க சமயத்தில் எனக்கு உதவி செய்யவில்லையே என்ற இந்த உணர்வுகள் ஓடிக்கொண்டே இருக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வுடன் ஏங்குகின்றாரோ இந்த உணர்வின் ஆற்றல் அவர் உடலுக்குள் சென்று விடுகின்றது. உடலை விட்டு ஆன்மா பிரிந்து விட்டால் பண்புடன் உதவி செய்திருந்தாலும்… நேரத்தில் தனக்கு உபகாரம் செய்யவில்லை என்ற இந்த உணர்வு தான் உந்தப்படுகிறது.

அந்த உணர்வின் வேகத்தில் அவர் மேல் எடுத்துக் கொண்ட வெறுப்பான உணர்வுகள்… பதிலுக்கு அவர்களும் வெறுப்பாகச் சொல்லும் பொழுது வெறுப்பான உணர்வுகளைப் பாய்ச்சி… பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பும் நம்மைப் பார்க்கும் பொழுது வெறுப்பும்… இப்படி வெறுப்புகள் தோன்றி இந்த உணர்வுகள் விளைந்து உடல் நலிவடைந்து விடுகிறது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா… யார் மீது வெறுப்பானதோ அவர் உடலுக்குள் தான் செல்லும்… இதே நோயின் கொடுமையை அங்கேயும் உண்டாக்கும்.

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

பெரும்பகுதியானவர்களுக்கு இன்று கிட்னி பழுதடைவதன் காரணம் என்ன…?

 

நாம் விளைய வைக்கும் தாவர இனங்களில் பூச்சிகள் புழுக்கள் விழுந்தால் அவைகளைக் கொல்ல பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம். அதே சமயத்தில் அதில் விளைந்த நல்ல தானியங்களை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ஆனாலும் அந்தத் தாவர இனத்திலே விழுந்த பூச்சிகள் நாம் தெளித்த பூச்சிக்கொல்லி மருந்தை ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அந்த நஞ்சினையே தனக்குள் ஏற்றுக் கொண்டு
2.கடும் நஞ்சு கொண்ட புழுவாக நஞ்சான கிருமிகளாக அடுத்து அது விளைகின்றது.

நாம் தெளித்த பூச்சி மருந்து நாம் விளைய வைக்கும் தாவர இனங்களிலும் கலக்கப்பட்டு… அந்த உணர்வின் சத்து அதுவே நஞ்சாக மாறி… அது கலந்த உணவை உணவாக உட்கொள்ளும் பொழுது “நம் உடலுக்குள் பலவிதமான நோய்களாக உருவாகிறது…”

அந்தப் பூச்சிகளையும் புழுக்களையும் இரக்கமற்றுக் கொன்றது போன்று அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி கொன்றிடும் உணர்வுகளாக அதிகமாக விளைந்து… அதனால் நம் உடலுக்குள் இருக்கும் “சிறுநீரகங்கள்” பாதிக்கப்படுகின்றது.

காரணம்… அதிலே இந்த நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்திகரிக்கும் அதனுடைய செயலாக்கங்கள் செயலற்றதாக ஆக்கி வெறித்தனமான நிலைகள் கொண்டு பல நோய்களை உருவாக்கக் காரணமாகி விடுகின்றது.

1.எந்த நஞ்சினை வடிகட்டும் திறன் கொண்டதோ நம் சிறுநீரகங்கள் அதனின் திறனை இழந்து
2.அதனால் நஞ்சு நம் இரத்தங்களிலே அதிகரித்து உடல் முழுவதும் சுழன்று
3.மனிதனுடைய சிந்தனைத் திறன் குறைந்து சிந்தனையற்றவனாக அந்த வளர்ச்சிகள் அதிகரித்து
4.மனித உடலுக்குள் நஞ்சையே வளர்த்திடும் நிலையாக மாறிவிடுகின்றது.

இதிலிருந்து மீள ஞானிகள் காட்டிய அறவழியில் நாம் செயல்படுதல் நல்லது.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள். ஆனால் மெய் ஞானிகள்
1.உணர்வுக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளைப் பிளந்து அதை ஒளியாக மாற்றினார்கள்
2.அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தால் விஞ்ஞான அறிவால் ஏற்றுக் கொண்ட அந்த நஞ்சின் தன்மையைப் பிளக்க முடியும்.

அதைப் பிளக்கச் செய்வதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய்ஞானிகள் உணர்வுகள் இங்கே படர்ந்து இருக்கும் வேளையில் அது ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

பதிவாக்கிய பின் அதை தியானிக்கும்படி செய்து அதனின் வலுப்பெறச் செய்து அதையே இப்பொழுது உபதேசமாக கொடுக்கப்படும் பொழுது “எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ… அது ஊழ் வினையாக உங்களுக்குள் பதிவாகின்றது…”

அதை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் இந்த வாழ்க்கையில் விஞ்ஞான அறிவால் நமக்குள் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ள உங்களால் முடியும்.

உபதேசித்த உணர்வுகள் அனைத்தையும் உங்களுக்குள் வலுப்பெறச் செய்து கொண்ட பின்… நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த ஞானிகள் உணர்வுகளை நீங்கள் சுவாசித்து… உங்களை அறியாது வந்த தீய வினைகளை நீக்க முடியும்.

விஞ்ஞானி எப்படி அணுவைப் பிளந்தானோ…? அதே விஞ்ஞானக் கல்விக்குச் செல்லப்படும் போது அதனின் ஆற்றலை அவன் பெறுவது போல்
1.மெய்ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்த்து
2.நம் உணர்வுக்குள் நஞ்சு கலந்ததை நம் உடல் பிரிப்பதை…
3.பிரிந்த நிலைகள் கொண்டு தன் எண்ணத்தால் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினைப் பிளந்து
4.அந்த மகரிஷிகள் உணர்வுகளைப் பாட நிலையாக எடுத்து அதனின் நிலைகள் கொண்டு
5.இந்த மனித வாழ்க்கையில் எப்போதெல்லாம் துன்பம் நேர்கின்றதோ அது சேராத வண்ணம் தடுத்து நிறுத்த ஈஸ்வரா என்று
6.எண்ணியதை இயக்கிக் காட்டும் அவனையே ஈஸ்வரா என்று “உயிரை எண்ணி ஏங்கி”
7.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வானை நோக்கி நினைவினைச் செலுத்த வேண்டும்.

சக்தி வாய்ந்த ஆண்டென்னா… விண்ணிலிருந்து வரும் சக்திகள் பூமிக்குள் படர்ந்து கொண்டிருப்பதைக் குவித்து ஈர்த்து… அதனுடன் இணைக்கப்பட்ட டிவியில் தெளிவாக அதைக் காட்டுகின்றது… உணர்த்துகின்றது.

இதை போன்று யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்ந்து கவனித்தால் உங்கள் கண் கரு விழிகளின் இயக்கத்திற்குள் ஆற்றல் மிக்கதாக இந்த உணர்வின் அலைகள் பாயும்..
1.இதை மனமுவந்து பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
2.அந்த சக்தி உங்களுக்குள் ஜீவன் பெறுகின்றது

இது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் (ஞானகுரு) செய்தேன் அதன் வழிகளிலே உயர்ந்த சக்திகளைப் பெற முடிந்தது. என் குருநாதர் காட்டிய வழியினைத் தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.

பதிவாக்கியதை நினைவு கொண்டு விண்ணை நோக்கி நீங்கள் ஏங்கினால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கிறது. உங்கள் உடலுக்குள் சேர்த்துத் தீய குணங்கள் விளையாது தடுத்துக் கொள்ள இது நிச்சயம் உதவும்.

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

மற்றவர்களுக்கு அருளைப் பாய்ச்சும் போது… தீமையிலிருந்து விடுபடும் சக்தியை நமக்குள் வலுவாக்க முடியும்

 

அன்றைய அரசர்கள் தன்னுடைய சுகபோகங்களுக்காக மனிதரை மாக்கள் ஆக்கி… அவன் சுகபோகங்களை அனுபவித்தான். அவனுக்குக் கீழ் அடிமையாக்கப்பட்ட நிலையில் மக்கள் இன்றும் நரக வேதனையில் தான் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அவன் ஏற்படுத்திய பகைமை உணர்வுகள் மதத்தை அடிப்படையாக வைத்து மக்களைப் போர் புரியச் செய்தான். அதன் விளைவாக… சகோதர உணர்வுகள் இன்று இழக்கப்பட்டுப் போர் முறைகளாக வந்து கொண்டிருக்கின்றது

பகைமை உணர்வுகள் வளர்ந்த பின்
1.அஞ்சி வாழும் நிலைகளாக உண்மையின் உணர்வுகளை அறியும் தன்மை இழக்கப்பட்டு
2.இன்று வாழும் மக்கள் பண்டைய கால வாழ்க்கை நிலை போல
3.மிருகத்தைப் போன்று ஒருவருக்கொருவர் தாக்கிடும் நிலையாக அஞ்சி வாழும் உணர்வுகளே விளைந்து வந்து கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து மனிதன் மீள வேண்டும்.

ஆகவே… நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உண்மையின் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இந்த மனித உடலில் இருந்தே அருள் வழியைப் பெற வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

உங்களை அணுகியவர்களுக்கும் இந்த அருள் உணர்வை ஊட்டுங்கள்.
1.தவறு செய்வது நாம் அல்ல… சந்தர்ப்பங்களும் அந்த நேரத்தில் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் இயக்கச் சக்தியாக இயக்குகின்றது.
2.இதிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஓதும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் வலுவாக வளர்த்துக் கொள்ள முடியும்.

உங்கள் சொல்… அந்த அருள் உணர்வுகள்… அங்கே பதிவாக்கப்படும் பொழுது அவர்களையும் தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியாக மாற்ற முடியும். நீங்கள் இடும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவருகின்றது.

நீங்கள் எண்ணும் பொழுது அகஸ்தியனின் உணர்வை அறியும் நிலையாக அறிய முடியும். நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் அகஸ்தியன் உணர்வையும் நீங்கள் பெற முடியும் உங்கள் வாழ்க்கையும் அந்த நிலை பெறும். அடுத்து பிறவி இல்லா நிலை அடையும் பாக்கியமும் பெறுகின்றீர்கள்.

உங்கள் வாழ்க்கை அனைத்தும் சதா அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே வாழ்ந்திடும் நிலை பெறுங்கள். அனைவரும் அதைப் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

1.பகைமை என்ற உணர்வோ… அதனால் வந்த நோயோ இருந்தாலும் அதை மறந்து விடுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறுவேன்… என் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வேன் என்று இதைப் பெருக்குங்கள்.

அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்… அது வளர அறியாது சேர்ந்த பகைமையால் ஏற்பட்ட கடும் நோய்களிலிருந்து விடுபட முடியும்.

நோய்…! என்று எண்ணத்தை அதன் மீது செலுத்தாதீரக்ள். அதை மறைக்க அருள் உணர்வுகளைச் சேருங்கள்.
1.இதைச் சேர்க்கச் சேர்க்க மகரிஷிகளை எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் சிறிது கடினமாக இருக்கும்.
2.மேலும் என்னைச் சிந்திக்க விடவில்லையே…! என்று ஏங்க வேண்டாம்
3.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவேன்… எனக்குள் இருக்கும் தீமையை விளைவிக்கும் அணுக்களும் சாந்தமடையும்.
4.என் உடல் நலம் பெறும்…!
5.என் இரத்த நாளங்களில் மகரிஷிகள் உணர்வுகள் பெருகும்… அருள் ஞானம் பெறுவேன்…
6.என் பேச்சும் மூச்சும் கேட்பவரையும் நலம் பெறச் செய்யும் என்று இத்தகைய உறுதியுடன் நீங்கள் செயல்படுத்துங்கள்.

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

நன்றாகத் தான் இருந்தார்… இப்போது கேன்சர் வந்துவிட்டது…! என்றால் ஏன்…?

 

இன்றைய உலகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது…? காற்று மண்டலம் நஞ்சாக மாறிவிட்டது…! நஞ்சுகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடித்த நிலைகளால் உலகம் மாசுபடும் நிலைகளுக்கே சென்றுவிட்டது.

1.தொழிற்சாலைகளில் வரும் கழிவுகளை எவ்வளவு குழியைத் தோண்டி அதில் புதைத்து வைத்தாலும்
2.அல்லது நீரிலே கலக்கப்பட்டு வடிக்கப்பட்டாலும்
3.அந்த உணர்வுகள் ஆவிகளாக மாறும் பொழுது காற்று மண்டலத்தில் தான் கலக்கின்றது.

பூமிக்குள் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் ஆனால் மேலே செல்லப்படும் பொழுது தாவர இனங்களிலே இது படர்ந்து விடுகின்றது அதனால்… கேன்சர் நோய் இன்று அதிகமாக வருகின்றது.

1.இவர்கள் கழிக்கும் நஞ்சுகள் அதிகரிக்கும் நிலையில்
2.எங்கே பார்த்தாலும் கேன்சர் கேன்சர் என்ற நோய்கள் வந்து கொண்டு இருக்கின்றது
3.நன்றாகத் தான் இருப்பார்கள்… திடீரென்று இந்த நோய் வந்துவிடும்.

இதைப் போன்ற கடுமையான நஞ்சின் நிலைகள் வரப்படும் பொழுது உடலில் மூட்டுகளிலும் இந்த விஷத்தன்மைகள் ஊடுருவுகின்றது.

எந்த வலுவின் தன்மை ஏற்கின்றோமோ நரம்பு மண்டலங்களுக்குள் இந்த விஷத்தன்மைகள் செல்லப்படும் பொழுது
1.அங்கே தேங்கி விட்டால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகள் முடியாது போய்விடுகின்றது.
2.நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த நிலை பெறுகின்றது.
3.இது போன்ற நிலையில் இருந்து மனிதன் மீள வேண்டும்.

இந்த உணர்வுகள் எல்லாம் எப்படி இயங்குகின்றது…? என்ற நிலைகளை குருநாதர் 20 வருடம் அனுபவபூர்வமாக தெளியச் செய்தார். தெளிந்து உணர்ந்த பின் தான் உங்களுக்கு இதை எடுத்துச் சொல்கின்றேன் (ஞானகுரு).

எம்மிடம்…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி என்றார்
2.அவன் அமைத்த உடல் அந்த ஆலயம் என்று நீ கருது
3.மனிதனை உருவாக்கிய ஒவ்வொரு உயர்ந்த குணங்களையும் சீர்படும்படி உனக்குள் எண்ணி அதை வளர்த்துக் கொள்.

பிறருடன் பழகிய உணர்வு… அதே உணர்வு வளர்ந்து இருந்தால்
1.அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால்
2.உனக்குள் அவர் உணர்வு பதிவாகி இருந்தால்… உன்னை உயர்த்தும் நிலையாக உனக்குள் அது சீர்படுகின்றது.

இது அல்லாது வேறு யாரிடத்திலும் காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்றால் பாவத்தைத் தான் நீ சேர்க்கின்றாய் எந்த மந்திரத்தைச் சொல்லி யாகத்தைச் செயல்படுத்துகின்றார்களோ பாவத்திற்கு நம்பர் ஒன்றாகின்றாய்…!

இந்த உடலை விட்டுச் சென்ற பின் எந்த உணர்வுகளை நீ பதிவு செய்து கொண்டாயோ இறந்த பின் மந்திரம் தெரிந்தவன் அதைப் பதிவு செய்தான் என்றால் பாவச் செயலுக்கு உன்னைப் பயன்படுத்துவான் என்றார்.

இதிலிருந்து எவரும் தப்ப முடியாது. மனிதன் மீண்டும் புழு பூச்சியாகத்தான் செல்ல முடியும் இதை எல்லாம் தெளிவாகக் கூறுகின்றார் குருநாதர்.

ஆகவே உங்களை நம்புங்கள்…! நீங்கள் எண்ணுவதைத் தான் உயிர் உருவாக்குகின்றது. எதை எண்ணிச் சேர்க்க வேண்டும்…? என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடலில் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். வளர்க்க வேண்டும் என்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவாக்குங்கள். அதை வலுவாக்கத் தியானித்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அதை மறந்து விட்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவேன் என்று அதை உறுதிப்படுத்துங்கள்.
2.எதனால் துன்பங்கள் வந்ததோ என் பார்வை அதைச் சீராக்க வேண்டும்…
3.நான் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும்
4.பொறுப்புடன் செயல்பட வேண்டும்… அந்தச் சக்தி எனக்குள் வளர வேண்டும்
5.என் பார்வை அனைத்தையும் நல்லதாக வேண்டும்
6.என் பேச்சைக் கேட்பார் வாழ்வில் நலமும் நலமும் அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுங்கள்.

இப்படி நீங்கள் எண்ணுவது நலம் பெறும் சக்தியாக உங்களை மாற்றும்…!

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

“சதமில்லாததை எல்லாம்” நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியதில்லை

 

யாம் உங்களுக்கு கொடுக்கும் அரும்பெரும் சக்திகளை நீங்கள் சீராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.. எங்களை அறியாது சேர்ந்த இரத்தக் கொதிப்பு நீங்க வேண்டும்… அதை நீக்கும் அரும்பெரும் சக்தி நாங்கள் பெற வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும் என்று ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் நண்பர் என்று இருக்கப்படும் பொழுது நண்பனுக்கு நன்மை செய்தான்… என்றால் வெகு தொலைவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது… துரோகம் செய்தான் என்றால் புரையோடுகிறது.

ஆனாலும் தியானம் எடுத்துக் கொண்ட பின் யாம் உபதேசிக்கும் உணர்வுகள்… உங்களுக்குள் பதிவான அந்த அரும்பெரும் சக்தியை நீங்கள் சீராகப் பயன்படுத்தி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.துருவ மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்
5.சர்வ நோய்களையும் நீக்கிடும் அரும்பெரும் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
6.எங்களுக்குள் அந்த நோய் நீக்கும் சக்தி விளைய வேண்டும் என்று
7.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… அருள் உணர்வுகளை உடலுக்குள் சேர்க்க வேண்டும்

கணவன்… மனைவிக்கு இது போன்று செயல்படுத்த வேண்டும். மனைவியும்… கணவனுக்கு இதைப் போன்று எண்ணி இந்த உணர்வுகளைப் பாய்ச்ச வேண்டும்.

கணவர் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… நோய் நீக்கக்கூடிய சக்தி அவருக்குள் வளர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று
1.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் எண்ணிப் பழகுதல் வேண்டும்
2.அடிக்கடி இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால் இருவருமே உடல் நலத்துடன் வாழ முடியும்.

சர்க்கரை நோயோ… ஆஸ்த்மாவோ இருந்தால் “அந்த நோய்களை மறந்து விட்டு” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… உடல் நலம் பெறும் சக்தி பெற வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடலில் எந்த நோய் இருந்தாலும் அது நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்…
1.நோய் நீக்கும் அருல் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் பெருக வேண்டும் என்று
2.திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப இந்த நினைவுகளை எடுத்து உடலில் செலுத்துங்கள்.
3.நாளடைவில் நோய்கள் நீங்கும்… துருவ நட்சத்திரத்தினுடைய ஆற்றல் அதிகமாகப் பெருகும்.

இப்படிப் பெருக்கி பழகிக் கொண்டால்தான் விஞ்ஞானத்தால் இனி வரக்கூடிய நஞ்சின் தன்மையை நாம் அகற்ற முடியும்.

ஆகவே துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு நாம் செல்லும் போது உணர்வின் ஒளியாக மாறி அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நாம் வாழ முடியும்.

ஏனென்றால் இந்தப் பூமியில்
1.நமக்கு இந்த உடல் சதம் அல்ல… சேர்க்கும் சொத்தும் நமக்குச் சதம் அல்ல
2.சதம் இல்லாததை எல்லாம் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும்… சதமான நிலைகளைப் பெறுவதற்கு இந்த உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்த உடலில் இருந்து ஓரளவுக்கு மகரிஷிகள் உணர்வுகளை முழுமையாகப் பெறும் வரையிலும் உடலையும் பாதுகாக்க வேண்டும்.

உடலைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
1.அப்படி வளர்க்கப்படும் பொழுது உடலையும் அது பாதுகாக்கின்றது
2.இந்த உடலில் இருந்து அருள் ஒளி பெறும் தகுதியையும் பெருக்கிக் கொள்ள முடிகின்றது
3.இரு மடங்கு நமக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

இந்த தியானத்தை அவசியம் நீங்கள் அனுதினமும் கடைப்பிடித்துப் பழகுங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

இதற்கு முன் நம்மை அறியாது சேர்ந்த தீயவினைகள் எதுவாக இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உங்கள் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்து
1.ஒவ்வொரு உயிரும் அந்த சக்தி பெற வேண்டும்
2.அந்த சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று
3.குரு வழியில் ஐக்கிய உணர்வு கொண்டு அருள் உணர்வுகளைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளேன் (ஞானகுரு).

அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தி… எதிர்காலத்தில் வரக்கூடிய தீமையிலிருந்து விடுபடும் சக்தியை வளர்த்து… உலகைக் காத்திடும் மெய் ஞானிகளாக நீங்கள் வளர்ந்திட வேண்டும் என்று குருவின் ஆணைப்படி நான் செயல்படுத்துகின்றேன்.

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.