தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

தீமை செய்யும் (இடும்ப) குணங்களும் அதனால் உடலில் உருவாகும் நோய்களும்

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் கொள்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் – ஆத்திரம் – ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு – விரக்தி – குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக…” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்… மூலாதாரம்…. நாபி… இருதயம்… கண்டம்… நெற்றி… தலையின் உச்சிப் பகுதி… முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடிடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாக சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தில் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடிடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது…?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு… பித்தம்… மன நோய்:-
குறுகிய மன நிலை… மருள்… பொறாமை… ஏக்கம்… உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்… தோல் வியாதி:-
மோகம்… செருக்கு… அதி ஆசைகள்… என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்…!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடிடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்… திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல…!
1.நல் எண்ண குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்… அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்காது…!

 

மனிதனின் சரீரமானது எண்ணம் கொண்டு ஜீவ காந்த ஆற்றலின் கதியினால் இயங்கும் இயற்கைச் செயல்பாட்டில் சரீரம் நலிவுறும் காலங்களில் எல்லாம் அதைக் குணப்படுத்த நவீன மருத்துவ விற்பன்னர்கள் (DOCTORS) பல பல முறைகளைக் கையாளுகிறார்கள்.

நோயின் குணங்களை அறிந்து அந்த நோய் அகலச் செயல்படுத்தும் இன்றைய மருத்துவத்தில் நோய்வாய்ப்படுபவனின் சரீரம் மருத்துவர் கொடுக்கும் மருந்தின் குண அமிலத்தை ஏற்றுக் கொண்டு நோயை அகற்றிடச் செயல்படுகிறது.

ஆனால் நோயின் கடுமை வீரியம் கொண்டால் உட்கொள்ளும் மருந்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் முதிர்வாகிச் சரீர அவயங்களில் பெரிய பாதிப்பு எற்படத் தொடங்கிவிடுகிறது.

இவைகளை மருத்துவர்கள் கண்டு கொண்டு அந்த நோயின் கடுமைக்கு ஏற்ப அறுவைச் சிகிச்சை முறைகளையும் (SURGERY) கற்ற அறிவின் ஞானம் கொண்டு செயல்படுத்துகிறார்கள்.

மருத்துவம் மனிதனை இன்றைக்குக் காத்துக் கொண்டிருப்பது இதைப் போன்ற வழிகளில் தான். ஆனால்
1.மனிதனுடைய சந்தர்ப்பத்தினால் அவன் எடுத்துக் கொண்ட குணங்களின் கடுமையால் தான் சுவாச ஈர்ப்புத் தன்மையே மாறுகிறது.
2.அதனால் சரீரத்தில் நலிவுகள் ஏற்படத் தொடங்குகிறது
3.இன்றைய மனிதனின் செயல்பாடுகள் இப்படிப்பட்ட விதி வழி செல்கின்றதப்பா…!

பூமி ஈர்த்துச் சமைக்கும் சுவாசத்தின் செயலில் நன்மை தீமை என்று கலந்தே காற்றினில் படர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் வாழ்க்கை மோதலில் மனிதன் தான் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட எண்ணம் வலு நிலை பெற்று விடுவது “சுவாசத்தின் கதியினால் தான்…!”

சரீரத்திற்குள் அமைந்து வினைச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான நாடிகள்: மூலாதார நாடி… நாபி நாடி… மார்பு நாடி… கண்ட நாடி… சிரசில் நெற்றிப் பகுதியில் சிவசக்தி நாடி… சிரசின் உச்சியில் ஈஸ்வர நாடி…. ஆகும்.

இவைகளுடன் சேர்ந்து சரீர அவயங்களில் புறத் தொழில் புரிந்திடும் செயலாகச் செயல்பட்டு ஓடிடும் நாடிகள் கண்… காது… நாசி… வாய்… கை கால் உறுப்புகள்.. ஒவ்வொன்றுமே சரீர வளர்ச்சிக்காக இயங்கினாலும்
1.அந்த வளர்ப்பின் முதிர்வாக…
2.கடைசியில் மனிதனின் சரீரத்தில் ஏற்படுகின்ற நோய் நொடிகள் அனைத்திற்கும் மூல காரணம் எது…?

உலகோதய வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் செயல்படும் குணங்களில்
1.பயம் கோபம் மோகம் ஆத்திரம் அவசரம் வெறி வேதனை உள்ளிட்ட
2.பல்லாயிரம் கிளைகளாகக் கிளைத்திடும் அந்தக் குணங்களின் செயல்பாடே
3.சுவாசத்தின் கதியாக நாடிகளில் ஓடுகின்றது.
4.அந்தந்தக் குணங்களின் வீரியத்திற்கொப்ப இரத்த நாளங்களைத் தூண்டச் செய்து
5.மேலே சொல்லப்பட்ட அக… புற நாடிகளில் ஓடும் சீரான சுவாச ஓட்ட கதி முழுவதையுமே அது மாற்றி விடுகின்றது.

அதே சமயத்தில் சரீர உள் அவயங்கள் செயல்படும் செயலிலும் மாற்றத்தை ஏற்படுத்தி வேதனைகளை உண்டாக்குகின்றது. அந்த வேதனையின் உச்ச நிலையே நோயாக மாறுகின்றது.

நோயாக ஆன நிலையில் இயற்கையின் கதியை அதாவது சரீர இயக்கத்தின் இயல்பையே மாற்றிவிட்டு தான் பெற வேண்டிய உயர் நிலைக்கே விபரீதத்தை விளைவித்துக் கொள்கின்றான் மனிதன்…!

சுவாச நிலை சுவாச நிலை என்று பல முறை சொல்கிறோம். அந்தச் சுவாச நிலையைச் சரி செய்ய வேண்டுமா இல்லையா..?
1.சுவாச நிலையை மாற்றாதபடி
2.நாடிகளின் இயக்கங்களைச் சீராக்காதபடி
3.மருந்தை மட்டும் உட்கொண்டால் சரீர சுத்தி கிடைக்குமா…?

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

நோய் நீக்க மருந்தை உட்கொண்டாலும்… “அதற்கு முன்” மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டியது மிக மிக அவசியம்

 

நாம் கோபப்படுவோரையோ அல்லது ஒரு வேதனைப்படுவோரையோ பற்றிக் கேட்டறிந்து அவர்களுக்கு உபகாரங்கள் செய்தாலும்… கேட்டறிந்த உணர்வுகளை நமது உயிர் (நாம் நுகர்ந்ததை) ஓ… என்று இயக்கி ஜீவ அணுவாக மாற்றி உடலுக்குள் இணைத்து விடுகிறது.

அதாவது நாம் பரிவு கொண்ட மனதுடன் பிறர் வேதனைப்படும் உணர்வினைத் தனக்குள் கவர்ந்த பின் “வேதனையை உருவாக்கும் அணுவாக” உருப்பெற்று விடுகின்றது.

உதாரணமாக செடிகளில் விழும் புழுவைக் கொல்ல நஞ்சு கொண்ட மருந்தினை அதன் மேல் பாய்ச்சுகின்றோம். புழு இறந்து விடுகின்றது.
1.அது இறந்தாலும்… அதனின் கருவின் தன்மைக்குள் இந்த நஞ்சு இயக்கப்பட்டு
2.அந்த நஞ்சால் இறக்காத உடலாகப் பின்னாடி (அடுத்து) பெறுகின்றது.

அது போல் மனிதன் வேதனைப்படுவதைக் கூர்ந்து கவனித்து அந்த வேதனையான உணர்வின் சத்தை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாக மறைகின்றது… நோயாகிறது.

விஞ்ஞான அறிவு கொண்டு அந்த நோயை நீக்க அவன் பாய்ச்சும் நிலைகள்… நஞ்சு கலந்த மருந்தாகக் கொடுக்கின்றார்கள். அது நோயினை வலுவிழக்கச் செய்தாலும்… அதனால் விளைந்த அணுவின் தன்மை அந்த நஞ்சே கலந்ததாகவே மாறுகின்றது..

1.நஞ்சான மருந்தைப் பாய்ச்சித் தான் புழுவைக் கொல்கின்றோம்.
2.அது இறந்தாலும் அது இட்ட கரு முட்டையில் இந்த நஞ்சு பரவி நஞ்சின் தன்மையாக எப்படி அடைகின்றதோ
3.நஞ்சு கொண்ட புழுவாக… நஞ்சுக்கும் அஞ்சாது தப்பி அதனுடைய செயலாக்கங்கள் வளர்வது போன்று
4.இன்று வைத்திய ரீதியில் ஆஸ்த்மா கேன்சர் போன்ற கடும் விளைவுகள் கொண்ட நோய்களுக்கு
5.விஞ்ஞான அறிவால் கடும் விஷத்தை நல்ல மருந்துடன் காய்ச்சி அதை இணைத்துத் தான் மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

மருந்தை நாம் உட்கொள்ளும் போது இந்த விஷத் தன்மை ஊடுருவி அந்த மருந்தினை உடலுக்குள் ஊடுருவிச் செலுத்துகின்றது. மற்ற குணங்கள் கொண்ட உணர்வுடன் இது அதிகமாகக் கலந்த பின் இந்த நோயை உருவாக்கிய அணுக்களைச் சோர்வடையச் செய்கின்றது… அவைகள் மடிகின்றது…! உடலில் வரக்கூடிய வேதனை குறைகின்றது.

ஆனாலும் இந்த உணர்வின் அணுக்கள் உள் சென்று மீண்டும் மீண்டும் இந்த மருந்தின் வேகத் துடிப்பைக் கொண்டு வரும் பொழுது என்ன ஆகிறது.

அப்போது அமைதி கொள்கின்றனர்.
1.பின் அதனுடைய வழிகளில் இதே கலந்த மருந்தினை ஒவ்வொரு டோஸாக (DOSAGE) விஞ்ஞான அறிவுப்படி கூட்டுகின்றனர்.
2.விஷத் தன்மை கொண்டு நோயை அடக்க எண்ணினாலும் கடைசியில் இந்த விஷத்தின் தன்மை அதிகமாக முதிர்வடைந்து
3.மீளாத் துயர் கொண்ட நஞ்சாக உடலில் வளர்த்துவிடுகிறது.

அப்போது நஞ்சு கொண்ட உடலாக வெளிவந்த பின்…
1.இறக்கப்படும்போது எவர் மேல் பற்று கொண்டாரோ அந்த உடலுக்குள் சென்று
2.அதே நஞ்சு கலந்த உணர்வினைப் பாய்ச்சி நோயினை உருவாக்கி விடுகின்றது.

ஆஸ்த்மா போன்ற நோய்கள் இதைப் போன்று பரவி வந்தாலும்
1.பற்று கொண்ட உடலில் இந்த ஆன்மா உள் புகுந்து விட்டால்
2.அடுத்து இவர்கள் எந்த மருந்தினை உட்கொண்டாலும் அது ஈடேறுவதில்லை.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்தால் தான் அதிலிருந்தெல்லாம் நாம் தப்ப முடியும்.

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

“பேரின்ப ரசம் பருகும் சூட்சம கதியைத்தான்” ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்

 

வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே…!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்…!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே…! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்…! என்பதன் கருத்தை ஊன்றி… உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்…!” என்பதெல்லாம்… – சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில் சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்… சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ… அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு… சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து…” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து… “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது…”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின…! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி…
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன…?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.

சுண்ணம்

சுண்ணம்

 

1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே…!

இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

 

மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.

அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.

விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.

செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”

இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!

அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.

அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.

நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).

அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.

ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

பிறரின் வேதனைகளை “இரக்கப்பட்டுக் கேட்டறிந்தால்” வரும் தீய விளைவுகள்

 

உதாரணமாக கோழியோ பாம்போ கருவுற்றால் அவைகள் கேறும். குருவி மற்ற அதைப் போன்ற முட்டையிடும் சில இனங்கள் அனைத்துமே கேறத்தான் செய்யும்.

மனிதனின் வாழ்க்கையில் வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து (சுவாசித்து) விட்டால் அது இரத்தத்தில் கலந்துவிடுகிறது. பின் கருத்தன்மை அடைகின்றது.

1.மீண்டும் மீண்டும் அவரின் வேதனையை எண்ணி நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் இந்த உணர்வுகள் முழுமை அடைந்தால்
2.எந்த உடலிலே அந்த வேதனை உணர்வுகள் அணுக்களாக விளைந்ததோ
3.அதே மாதிரி நம் இரத்த நாளங்களிலும் அந்த அணுவை உருவாக்கும் “கரு முட்டைகளாக” மாறி விடுகின்றது.

அவ்வாறு கரு முட்டைகள் ஆகும் பொழுது அந்த இரத்தம் இரத்தநாளங்கள் வழியாகச் சுழலும் போது அந்தக் குறித்த காலம் வரும் பொழுது என்ன நடக்கின்றது…?

வேதனைப்படுவோரை… “அடப்பாவமே… நல்ல மனிதன் இப்படி அவதிப்படுகின்றானே…!” என்று தான் அவர்கள் நோயாக அல்லது துன்பத்தில் வாடுவதை நாம் எண்ணுகின்றோம்.

கோழி எப்படிக் கருவுற்ற பின் அது கேறுகின்றதோ அதைப்போல நுகர்ந்த உணர்வுகளை “மீண்டும் மீண்டும் திரும்ப எண்ணும் பொழுது” அது கோழி கேறுதல் போன்று ஆகிவிடுகிறது

அவர் உடலிலே நோயாக உருவாக்கிய அணுவின் தன்மை நம் இரத்தங்களிலே கருவுற்று முட்டையாக மாறுகின்றது.
1.அந்த முட்டை இரத்தத்தில் சுழன்று வரும் பொழுது உடலுக்குள் சிறு மூளை பாகம் வரை செல்லும்… மற்ற எல்லா பாகங்களுக்கும் சென்று வரும்.
2.முட்டையாக இருக்கும் பொழுது முதலில் அந்த வேதனை நமக்குத் தெரியாது.

ஆனால் இரத்த நாளங்கள் வழியாக நம் உடல் உறுப்புகளுக்குள் சுழன்று வரும் பொழுது… இருதய வாயில்களில் இரத்தங்களை வடிகட்டி வரும் அந்த இடத்தில் இந்த முட்டை சென்றால்… இது வடிகட்டும் திறன் கொண்டு இழுத்து அனுப்பப்படும் பொழுது துடிப்பின் தன்மை அழுத்தமாகும் பொழுது அந்த முட்டை வெடித்து விட்டால் போதும்.

வேதனையை உருவாக்கும் அந்த விஷமான அணு அந்த இருதய பாகத்தில் சேர்ந்து விடுகிறது. சேர்ந்த பின்
1.அந்த மனிதன் எப்படி வேதனைப்பட்டானோ அதே வேதனை உணர்வுகள் இருதய வாயிலே தோன்றி
2.பளீர்… பளீர்… என்று மின்னும்… ஊசி குத்துவது போல் இருக்கும்.
3.நெஞ்சு வலிக்கின்றது… எப்படியோ எனக்கு மயக்கமாக வருகிறது என்று சொல்லத் தொடங்குவோம்.

நெஞ்சு வலிக்கின்றது என்று ஒரு அணுத்தன்மையாக முதலில் அடைந்தாலும்… முட்டை வெடித்து முட்டையை விட்டு வெளிவந்த குஞ்சுகள் தன் இரைக்காக (வேதனைப்படும்) உணர்ச்சிகளை உந்தும்.

கோழி முட்டைகள் பொரிந்த பின் வெளி வந்த குஞ்சுகள் கத்தும். அப்போது தாய்க்கோழி கூவி இரையைத் தேடித் தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றது.

அதைப் போல நமது உயிர் நாம் எண்ணியதை அணுக்களாக உருவாக்கிய பின் உணவு கொடுக்கும்.
1.இருதய வாயிலில் உருப்பெற்ற அணுக்களுக்கு… அந்தக் குஞ்சுகள் இரைக்காக உணர்ச்சியைத் தூண்டும்.
2.அப்போது வலி வரும்… மீண்டும் வலிக்கின்றதே வலிக்கின்றதே என்று எண்ணும் போதெல்லாம்
3.அந்த வலியின் உணர்வை எடுத்து அந்த அணு தன் இனத்தையே பெருக்கத் தொடங்கும்.

முதலிலே லேசாகத்தான் நெஞ்சுவலி இருந்தது பின் அது அதிகரித்து அணுக்களின் தன்மை தன் இனத்தைப் பெருக்க ஆரம்பிக்கும் பொழுது “இருதய வால்வுகள்” விஷத்தன்மையான நிலைகள் கொண்டு “அது விரிவடையும்… அல்லது ஒடுங்கி நிற்கும்….”

விஷ வாயுவின் தன்மை உற்பத்தியாகத் தொடங்கினால் அதனுடைய முடிவு… தாங்காதபடி அந்த ரத்த நாளங்கள் வெடித்து விடும். வெடித்தால் ஒன்றும் செய்ய முடியாது… இது ஒரு பக்கம்.

ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்…. திடீரென்று இயக்கச் சக்தி குறைவு.

ஆனால் அவர் ,மீது பற்று கொண்ட ஒருவர் அவர் மீது நினைவாற்றலைச் செலுத்தி… “திடீரென்று இறந்து விட்டாரே…” என்று அடிக்கடி இந்த வேதனையான உணர்வுகளை நுகர்ந்தால் இந்த அணுத்தன்மை சிறு மூளை பாகம் செல்லும் பொழுது அங்கே வெடித்து விட்டால் இந்த உணர்வின் தன்மை கூடும்.

அது உயிர் பாகம் வரும் பொழுது… நமது உயிரோ கண் காது மூக்கு உடலுக்கு ஆணையிடும். எந்த மனித உடலிலிருந்து இந்த விஷத்தன்மை நுகரப்பட்டு அணுவானதோ அதைக் கவர்ந்து அதே உணர்வின் தன்மையை இங்கே நமக்குள் உருவாக்கும்.

பின்…
1.சிறு மூளை பாகங்களில் இருதயத்தை இயக்கக்கூடிய அந்த நரம்புகளில் தொடர்பு இழந்து விட்டால்
2.இருதயம் இயங்காதபடி ஒரு நொடிக்குள் நாளை மாய்த்து விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே… எத்தகைய தீமைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் பார்க்க… கேட்க… நுகர நேர்ந்தால் அதை மாற்றிட நமது குருநாதர் காட்டிய வழியில்
1.உடனுக்குடன் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
2.இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து.
3.தீமைகள் இரத்தத்தில் கருத்தன்மையாக உருவாகதபடி தடுத்து நம் வாழ்க்கைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கு தான் உணர்வின் இயக்கங்களை உங்களுக்குள் தெளிவாக்கி வேதனைகளை மாற்றி அமைக்கும் உபாயங்களைச் சொல்லி… அருள் வழியில் இந்த வாழ்க்கை வாழ்ந்திட… “அதற்குண்டான ஒரு பழக்கமாக… ஒரு பயிற்சியாக… இதைக் கொடுக்கின்றோம்…”

விஷ வைத்திய சாஸ்திரம்

விஷ வைத்திய சாஸ்திரம்

 

இயற்கையுடன் ஒன்றி வளரும் தாவர இனங்களின் ஓர்மித்த சுவாச அலை ஈர்ப்பில் அதனதன் அமில குணத் தன்மைகளின் பாகுபாட்டையும் அதனின் சூட்சமங்களையும் அறிந்தவர்கள் தான் அன்றைய ஞானிகள்.

அவர்கள் பெற்ற உயர் ஞான வலுவின் மூலம் “இயற்கை மூலிகை ஔஷத இரகசியங்களை அறிந்து…” அதனின் வளர்ச்சியில் வளர்ச்சியுற்ற நிலை தான் விஷ வைத்திய சாஸ்திரம் பிறந்ததன் காரணம்.

தீமையானதையும் நல்லவைகளாக மாற்றித் தரும் மகான்கள் இந்த உலகத்தில் உள்ளோர் நல் வாழ்வு வாழ்ந்திட அளித்த வைத்திய பொக்கிஷங்களை எல்லாம் மறை பொருளாக்கப்பட்டதன் காரணம் என்ன என்றால் நன்மைகளையே எதிர்மறைகளாக உணர்ந்து தீய எண்ணத்தை வலுவாக்கிக் கொண்ட “இன்றைய மனித குலத்தின் நஞ்சான எண்ணத்தால் தான்…!”

போகர் பெற்ற அனுபவ ஞானத்தால் கசாங் என்ற பெயர் நாம சித்தனாக உலகிற்கு நன்மைகள் புரிய முனைந்த பொழுது அன்றைய அரசாங்கமே அதை எல்லாம் மக்களுக்குக் கிடைத்திடாத வண்ணம் தடுத்து கசாங் சித்தரையே அழித்துவிட முனைந்தது.

அவர்கள் எய்த விஷ அம்பு சரீரத்தில் தைத்துவிட்ட கோலத்தில் அடர்ந்த கானகத்துக்குள் தப்பி ஓடினார். காட்டில் பைராகிகள் தொடர்பு ஏற்பட்டு திட வைராக்கிய சிந்தனை கொண்டு எவ்வளவு எதிர்ப்பு நிலை இருந்த போதிலும்
1.உலகு உய்ய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்தின் பாங்கில்
2.தன்னை மாமகரிஷியாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டார்.
3.அந்த போகமாமகரிஷியின் அருள் சக்தியை நாம் பெற வேண்டுமப்பா..!

அன்று பைராகிகளின் உதவியுடன் விஷ வைத்திய முறைகளைக் கற்றுணர்ந்தார் போகர். அதே தொடரில் விஷ மூலிகைகளைப் பக்குவப்படுத்தும் முறை கொண்டு விண்ணிலே பறந்தும் காட்டினார் போகர்.

அதன் பிறகு தியான ஈர்ப்பின் செயல் மூலம் “இந்தச் சரீரத்தையே மிதக்கச் செய்யும் செயலாகக் காட்டியது…” காளாஞ்சி நாதரின் (காலிங்கநாதர்) தொடர்புக்குப் பின் தான். அதுவே “வாயு ஸ்தம்பம்…!”

(மகரிஷிகள் பெற்ற அனுபவ ஞானங்களை வெளியிடுவது கூட அவர்களின் சம்மதம் என்ற அருளாசி பெற்றுத்தான் சொல்லுக்கே கொண்டு வந்திட முடியும். போகர் அளித்திட்ட சம்மதத்துடன் அவருடைய அருளாசியுடன் கூறுவதில் இனி தடை ஏதுமில்லை)

போகநாதர் பெற்ற ஞான வளர்ச்சியை இதைப் படிப்போர் அனைவரும் பெற எமது அருளாசிகள்…!

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் “தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்…”

 

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி…?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். “எந்தக் கெமிக்கலில் கலந்து” இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக… சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்… கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு… அது… இது… என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை “நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது” இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்… ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக… அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்… உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

பிள்ளைகளும் சந்ததியினரும் நன்றாக வாழ… செல்வத்தைத் தேடினாலும் கடைசியில் நமக்குள் எதைச் சேர்க்கின்றோம்…?

 

எல்லோரும் அன்புடன் பண்புடன் சகோதர தத்துவத்துடன் பழகுகின்றோம். நம் முன்னோர்கள் மூதாதையருடன் பழகுகின்றோம்.. நம்மைக் காத்திட அவர்கள் எத்தனையோ சிரமங்கள் பட்டார்கள்.

நம்மைக் காப்பாற்றுவதற்காக சொத்தையும் செல்வத்தையும் அவர்கள் தேடி வைக்கின்றார்கள். ஆனால் செல்வத்தைத் தேடும் போது அதற்காக வேண்டி “எனக்கு இப்படிச் செய்தானே…” என்று எத்தனையோ நிலைகளில் வேதனைள் பட்டு… பல அவஸ்தைப்பட்டுகள் பட்டுத் தான் சேர்த்து வைக்கின்றார்கள்.
1.அந்த வேதனை அவர் உடலுக்குள் நோயாக மாறுகிறது
2.அவர் உடலில் விளைந்த வித்து அது.

கடைசியிலே நாம் என்ன செய்கின்றோம்…? “இப்படி நோயாகி விட்டாரே…” என்று எண்ணங்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் “நம் உடலில் பரம்பரை நோயாக வருகின்றது…”

சேமிக்க வேண்டும் என்பதற்காக (மிச்சம் பிடிக்க வேண்டும் என்று) எவ்வளவோ கஞ்சத்தனமாக இருந்து… தான் சாப்பிடாமல் இருந்து நம்மையெல்லாம் ராஜாவாக வளர்த்தார். ஆனால் அதே உணர்வுகள் நமக்குள் வந்து செயல்படத் தொடங்குகின்றது.

அவர் சரியாகச் சாப்பிடுவதில்லை… தன் பேரப்பிள்ளைகள் எல்லாம் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கின்றார். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அவர் கஞ்சத்தனமாக இருக்கின்றார்.

இருந்தாலும் இந்த உணர்வு கடைசியில் நோயின் தன்மை ஆகி பாசத்துடன் நாம் எண்ணும் பொழுது அந்த உணர்வு நமக்குள் வந்துவிடுகிறது.

தன் பிள்ளையைக் காக்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. அந்த நிலையில் வியாபார நிமித்தம் ஒருவருக்குக் கடன் கொடுக்கின்றார். ஆனால் அவரோ ஏமாற்றி விடுகின்றார்.

பாவிப்பயல் என்னை ஏமாற்றி விட்டான். நான் எத்தனையோ கஷ்டப்பட்டேன் என் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று. இந்த மாதிரிச் செய்து விட்டானே என்று வேதனை வந்தால்
1.சாகப் போகும் போது அவன் மீது தான் நினைவெல்லாம் செல்லும்.
2.எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என் பிள்ளைகளைக் காக்க முடியாதபடி தெருவிலே விட்டான் என்ற இந்த நினைப்பு தான் வரும்

காக்கும் உணர்வு கொண்டு நம்மையெல்லாம் அவர்கள் காத்தாலும் அவர் உணர்வு நமக்குள் வந்தபின் வேதனையாகி உடலை விட்டுச் செல்லும் பொழுது எங்கே செல்வார்…?

பழி தீர்க்கும் உணர்வுடன் தன்னை ஏமாற்றியவன் உடலுக்குள்ளே தான் செல்வார். அப்போது இருப்பிடம் எதுவாக மாறுகின்றது…? அங்கே மாறி விடுகின்றது.

ஆகவே நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்கள் இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுப்பதற்கு நாம் என்ன வைத்திருக்கிறோம்…?

விநாயகர் தத்துவத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.அதை வைத்து முன்னோர்களை நாம் விண் செலுத்த வேண்டும்.
3.அவர்களைப் பிறிதொரு உடலுக்குள் போக விட்டுவிடக் கூடாது.

கடன் வாங்கியவர்கள் திரும்பத் தரவில்லை என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று தனக்குள் வலுவாக்கிய பின்… அவர் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் பணத்தைத் திரும்பக் கொடுக்கும் அந்த வலிமை பெற வேண்டும் நல்ல ஞானம் அவருக்குள் வளர வேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் சமைத்து இந்தச் சொல்லாக சொல்ல வேண்டும்.

ஆனால் அதே சமயத்தில் நமது எண்ணங்கள் மாறிவிட்டால்… வாங்கிச் சென்றவனுக்கு “நான் கொடுக்க மாட்டேன்…” என்று கூட சிந்தனை வரும்.

ஏன்… எதனால்…?

உதாரணமாக… தீமை செய்கின்றான்… எனக்குக் கடும் துரோகம் செய்தான் என்று நாம் எண்ணினால் இந்த உணர்வு அவனைத் தாக்கி எப்படி அவனுக்குப் புரையோடுகின்றது.

எனக்கு துரோகம் செய்தவன் உருப்படுவானா…? என்று எண்ணினால் தொழில் செய்யும் இடத்தில் இயந்திரத்தில் அவன் வேலை செய்தால் ஆபத்தில் சிக்கி விடுகின்றான்.

உணவு உட்கொள்ளும் பொழுது ஈதே உணர்வுகள் ஊடுருவினால் அது புரையோடி அந்தச் சந்தர்ப்பம் அவனுக்குத் திக்கு முக்காடலாகி ஆகிறது

இதே போன்று அருள் ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து
1.கடன் வாங்கியவன் உணர்வை நமக்குள் மாற்றி… நமக்குள் வராது தடுத்து
2.இப்படித்தான் அவன் இருக்க வேண்டும்…
3.பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்ற இந்த வலுவின் தன்மை அங்கே ஊட்டி
4.நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற பண்புகளை எண்ணினால் உதவி செய்யும் பண்புகளை நிச்சயம் அங்கே வளர்க்க முடியும்.
5.இத்தகைய சிந்திக்கும் தன்மையை அவனுக்கு ஊட்டி நம் பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய சந்தர்ப்பத்தையும் உண்டாக்கலாம்.

ஆனால் சாபமிடும் உணர்வுகளும் வெறுக்கும் உணர்வுகளும் கொண்டு நாம் எண்ணினால் அவனால் வளர முடிவதில்லை. அவன் கடனைத் திரும்பக் கட்ட முடியாத நிலையாகி விடுகின்றது.

கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரும் ஆனால் திட்டும் போது ரோசம் வரும். ஏன்டா…! பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுகின்றாயா…? என்று நாம் திட்டுவோம்.

இந்த உணர்வின் தன்மை பதிவான பின் அவன் வாழ்க்கையில் தொழிலே நஷ்டமாகிவிடும். அப்படி ஆகி விட்டால் பணத்தை எப்படி நமக்குத் திரும்பக் கொடுப்பான்.

நான் கொடுத்தேன் அவன் ஏமாற்றி விட்டான் என்று தான் நாம் பேச முடியுமே தவிர அவனுக்கு நல்ல பண்புகளை ஊட்ட முடியாது. தீமையான உணர்வுகள் அவனுக்குள் அறியாமல் இயக்குவதை நமக்குள் சேர்ப்பதா அல்லது அதைச் சேராமல் தடுப்பதா…?

ஆகவே அருள் உணர்வை எடுத்து நம்மைத் தூய்மைப்படுத்தி
1.அவனுக்கு வருமானம் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வு நமக்கு நிம்மதி கிடைக்கும்.
2.பத்து ரூபாய் கொடுத்தாலும் 100 ரூபாய் கிடைக்கின்ற மாதிரி செய்ய முடியும்.
3.இந்த வலிமை கொண்டு நம் வியாபாரமும் பெருகும்.

அதே சமயத்தில் இந்த உணர்வு அவனுக்குள் பாயும் போது கடன் வாங்கி இத்தனை நாள் ஆகிவிட்டது என்று அவனும் நினைப்பான். பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் அவனுக்கும் வரும்.

இது எல்லாம் வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டிய “நுணுக்கமான விஷயங்கள்…”

ஏனென்றால் மனிதனின் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
1.தீமை என்று தெரிந்தாலும் தீமையை நீக்கக் கற்றுக் கொள்வதே அதனுடைய சிறப்பு.
2.அதைச் செயல்படுத்துவதற்குத் தான் உபதேச வாயிலாக ஞானத்தைப் போதிக்கின்றேன் ஞானகுரு).