உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

உயர்ந்த சக்தி கிடைத்தும்… அதைப் பக்குவப்படுத்தத் தெரியவில்லை என்றால் பலனில்லாது போய்விடுகிறது

 

1.விண்ணிலிருந்து ஒளி அலைகள் வருவதையும்
2.அந்த மகரிஷிகளுடைய ஆற்றல்கள் எப்படி வருகிறது…? என்பதையும்
3.அகஸ்தியன் உணர்வலைகள் எப்படி வருகிறது…? என்பதையும்
4.பச்சிலைகளை அவர் எப்படி நுகர்ந்தறிந்தார்…? என்பதையும்
5.அதே உணர்வின் தன்மை அவருடைய தாய் தந்தையர் எப்படி நுகர்ந்தார்கள்…? என்பதையும்
6.விஷத்தன்மை கொண்ட அணுக்கள் தங்களுக்குள் வராது எப்படிப் பாதுகாத்துக் கொண்டார்கள்…? என்பதையும்
7.அம்பாசமுத்திரத்தில் ஒரு பையனுக்குக் காண்பித்துக் கொடுத்தேன் (ஞானகுரு)..

அங்கே ஒரு மருத்துவரின் தந்தைக்குத் தீராத தலைவலி நோய். அதை நீக்குவதற்கு அகஸ்தியருடைய மூலிகையை எடுக்க வேண்டும். நீ வானத்தை நோக்கி எண்ணி இந்த மாதிரி தியானம் இரு என்று அந்தப் பையனிடம் சொன்னேன்.

அகஸ்தியரின் உணர்வலைகள் வரும். அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை உன் கையிலே அந்தப் பொருள் கிடைக்கும்… அதை அவருக்குக் கொடுத்துவிடு என்று சொன்னேன்.

அவ்வாறு எண்ணிய உடனே
1.பையன் தியானத்தில் உட்கார்ந்திருக்கும் பொழுது அந்த வேர் கிடைக்கின்றது
2.கிடைத்த உடனே “அதை அவர் தலைமாட்டில் வை…” என்று செயல்படுத்தினேன்.

தலைவலியைப் போக்குவதற்கு அன்றைய காலத்திலே அவர் 12 ரூபாய் மாத்திரை சாப்பிட வேண்டும். காலையில் ஒன்று சாப்பிட வேண்டும் இரவு தூங்கப் போகும் முன் ஒன்று சாப்பிட வேண்டும்.

அப்பொழுது தான் தலைவலி நீங்கும்… இல்லையென்றால் புழுவைப் போல துள்ளுவார்.

அதே சமயத்தில் அவர் கேட்டது… “என் தலைவலியைப் பார்க்கின்றாய்… நீ இத்தனை தியானம் செய்கின்றாய்… ஆனால் உன்னால் அதைப் போக்க முடியவில்லை. நீ என்னப்பா தியானம் செய்கின்றாய்…?

இதை நான் அந்தப் பையனிடம் சொல்லி
1.தியானத்தின் மூலம் நீ கேள்… அகஸ்தியன் உணர்வுகள் குவியும்
2.அகஸ்தியன் உபயோகப்படுத்திய அந்த வேர்கள் கிடைக்கும் என்றேன்.

காரணம்… அன்று அகஸ்தியன் தாய் கருவில் இருக்கப்படும் பொழுது அவருடைய தாயார் பல தாவர மூலிகைகளைத் தனக்குள் மூலமாகப் பூசி… பல தீமையான மிருகங்களிடம் இருந்து அந்த விஷத் தன்மையான நிலைகளிலிருந்து துயரப்படாதபடி மீட்டிய அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் உண்டு.

அது கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குள்ளும் பதிந்தது அவன் பிறந்த பின் இந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மை நாடாத நிலைகள் கொண்டு விண்ணை உற்று நோக்கினாலும் நஞ்சினை அடக்கி உணர்வினை ஒளியாக மாற்றி துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்த உணர்வின் தன்மையைப் பக்குவமாகப் பெறும்படி செய்தது. ஏனென்றால் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் உலக அனுபவம் பெறுவதற்காக அந்த இளம் வயது பையன்… கலக்கமற்ற நிலைகள் அவனுக்குப் பெற வேண்டும் என்று செயல்படுத்தியது.

தகப்பனாருக்கு அந்த வேரைக் கொடுத்தபின் தலைவலி அகன்று விட்டது. மருந்து சாப்பிட்டும் முழுமையாக குணப்படுத்த முடியாதது இந்த வேரைத் தலைமாட்டில் வைத்ததும் முழுமையாக நீங்கியது.

அப்பொழுது அவர் “உங்கள் குருநாதர் நல்ல குருநாதர்…” என்று போற்றுகின்றார். ஆனால் அதற்குப்பின் அவர் இங்கு தியானத்திற்கு வரவில்லை.

இப்படி நிகழ்ச்சி ஆனபின் ஒவ்வொருவராக வந்து இந்தப் பையனிடம் கேட்க ஆரம்பிக்கின்றார்
1.என் உடலில் இருக்கக்கூடிய இந்த நோய்க்கு ஒரு பச்சிலை வேண்டும்
2.எனக்குக் குழந்தை வரம் வேண்டும் அதுக்கு ஏதாவது கேட்டுச் சொல்லுங்கள் என்று
3.இந்த மாதிரி பல நோய்களுக்கும் பல நிலைகளுக்கும் பச்சிலைகள் அங்கே வந்து கொண்டே இருந்தது.

தியானத்தில் அமர்ந்து பச்சிலை கிடைத்த பின்… எல்லோரும் அவனிடம் பச்சிலையைக் கேட்க ஆரம்பித்தார்கள். ஆக
1.மெய் ஞானிகளின் உணர்வுகளைப் பெறுவதற்கு இதை எல்லாம் அனுபவப்பூர்வமாக யாம் காட்டினாலும்
2.அந்த பிஞ்சு உள்ளமாக இருக்கக்கூடிய அந்தப் பையனுக்கு தெரிந்தாலும்
3.அடுத்து அவன் அவனுடைய உணர்வுக்குத் தக்கவாறு வேறு நிலைகளுக்கு மாற்ற ஆரம்பித்து விட்டான்.

நான் அங்கே போக வேண்டும்… இங்கே போக வேண்டும்… “எனக்குப் பணம் வேண்டும்” என்று கேட்க ஆரம்பித்து விட்டான்.

இவைகள் எல்லாம் உண்மையின் உணர்வின் நிலைகளைத் தெரியச் செய்தாலும்… பெரியவர்களுக்கு இதை தெரியச் செய்தாலும்…
1.அந்த ஆசையிலே தான் மூழ்கி விடுகின்றார்கள்.
2.மேற்கொண்டு அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற குரு காட்டக்கூடிய நிலைகள் அங்கே இல்லை.

பல வருடங்கள் யாம் பெற்ற சக்திகளை “அனுபவபூர்வமாக” மக்களுக்கு இது கிடைக்கச் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தினாலும்… அவர்களால் அதை நல்வழிக்குக் கொண்டு செலுத்த முடியவில்லை.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply