
பய உணர்வுகள் அதிகரித்தால் (சிறு மூளையில்) ஏற்படும் தீய விளைவுகள்
ஒரு குழந்தை ரோட்டில் செல்வதை நாம் பார்க்கின்றோம் அது போகும் பாதையிலோ ஒரு பள்ளம் (குழி) இருக்கின்றது… நம்முடைய கண் கரு விழி அதைக் காட்டுகின்றது. பார்த்தவுடன் “ஐய்யய்யோ அங்கே குழி இருக்கின்றதே…” என்று என்று பதறுகின்றோம்.
குழந்தை அதைப் பற்றிய அறிவு இல்லாதபடி அதனுடைய சிந்தனைக்கு இல்லாதபடி ஓடி வருகின்றது. காரணம் தனக்கு வேண்டிய ஒரு பொருளை எடுப்பதற்காக அப்படி வருகின்றது.
பொருளைத்தான் அந்த குழந்தை பார்க்கின்றது… இந்தப் பள்ளத்தை அது பார்க்கவில்லை.
ஆனால் நாம் அந்தப் பள்ளத்தைத் தெரிந்து கொண்டோம். உற்றுப் பார்க்கப்படும் பொழுது குழந்தையினுடைய வேகத்தை கண்டு “குழந்தை உள்ளே விழுந்து விட்டால் என்ன ஆகும்…?” என்று நமக்குப் பயம் வருகின்றது.
குழந்தைக்கு பயம் இல்லை. யார் பெற்ற குழந்தையாக அது இருந்தாலும் அன்பும் பண்பும் பரிவு கொண்ட மனிதன் நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்தக் குழந்தைக்குத் “தீங்கு விளையப் போகின்றது…” எனத் தெரிந்து கொள்கின்றோம்
தெரிந்து கொண்ட பின் அவனைக் காக்கும் எண்ணங்களே நமக்குள் வருகின்றது. அத்தகைய எண்ணங்கள் வரும் பொழுது ஓடிப்போய் அந்தக் குழந்தையைக் காத்து விடுகின்றோம்.
அதே சமயத்தில்
1.பயத்தின் உணர்வுகள் நமக்குள் தூண்டுகின்றது
2.நம் உடலுக்குள் உணர்வின் இயக்கம் அதிகமாகின்றது… பய அலைகளைக் குவிக்கின்றது.
3.அதன் உணர்வின் துணை கொண்டு வேகத் துடிப்புடன் குழந்தையை நாம் ஓடிச் சென்று காத்து விடுகின்றோம்.
அந்த சமயத்தில் நாம் நுகர்ந்த பய உணர்வால் அதற்குப்பின் அடிக்கடி யாரைப் பார்த்தாலும் அல்லது ஒரு பொருளே வித்தியாசமாகத் தெரிந்தாலே
1.“அது கீழே விழுந்து விடுமோ…” என்ற எண்ணம் வரத் தொடங்கும்.
2.பயத்துடன் உற்று நோக்கப்படும் பொழுது அந்தப் பொருள் நிச்சயம் கீழே விழுகும்.
ஆனால் அந்த எண்ணங்கள் இங்கே பதட்டத்தைத் தான் உண்டாக்கும். இப்படி இந்தப் பதட்ட நிலைகள் எடுத்துக் கொண்டவர்கள் அடுத்து யாரைக் காக்க வேண்டும் என்றாலும்
1.அந்த அவசரப்பட்டே செயல்படுவார்கள்… அத்தகைய எண்ணம் தான் வரும்.
2.கடைசியில் கை கால் எல்லாம் நடுக்கம் வரத் தொடங்கும்
இந்த வாழ்க்கையில் அவர் நன்மைகளைத்தான் செய்கிறார். இருந்தாலும் பிறரைக் காத்திடும் நிலைகள் வரும் போது அந்த அவசர அவசரமாகச் செயல்படும் தன்மை வரும்.
ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று எண்ணுவார். ஆனால் அது தடைப்படும் பொழுதெல்லாம் “நடுக்கங்கள்” அவருக்குள் வரும்.
1.சிறு மூளையில் இந்த உணர்ச்சிகள் இயக்கப்படும் பொழுது அதனுடைய இயக்கத் தொடராக நடுக்க வாதமாக வந்துவிடும்
2.அதற்கு மருந்தே இல்லை…! (ஆனால் அவர் நல்லவர்).
இது போன்ற உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ஏதோ காரணத்தால் அது நடக்கவில்லை என்றால் உடனே கோபம் வரும்… உணர்ச்சியின் வேகம் தூண்டும். தன்னுடைய செயலாக்கத்தை மாற்றிவிடும்.
1.அந்த உணர்வின் வேகம் வந்து விட்டால் இரத்தக் கொதிப்பாக மாறும்.
2.அதன் வளர்ச்சியில் நடுக்க வாதமும் வரும்.
இவைகள் எல்லாம் சந்தர்ப்பங்களால் உருவாக்கக்கூடிய நிலைகள். இந்த மாதிரி நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். அதைப் பெறும் வழி என்ன…?
நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… விண்ணின் ஆற்றலை இந்தப் பூமிக்குள் அது கலந்துள்ளதை உயிராற்றல் கொண்டு தனக்குள் ஈர்த்து வளர்த்துக் கொண்ட நிலையை எனக்குள் (ஞானகுரு) பதிவாக்கினார்.
1.வானியல் தத்துவத்தை அறிந்தார்…
2.புவி ஈர்ப்பின் தன்மையை அறிந்தார்
3.உயிரியல் தத்துவத்தை உணர்ந்தார்
3.இது எவ்வாறு என்று எனக்கு உபதேசித்து அந்த உணர்வின் தன்மை எனக்குள் பதிவு செய்தார்
4.அதை நான் நினைவு கொண்டு அவர் கற்றுணர்ந்த உணர்வுகளை நான் அறிகின்றேன்
5.அதை எனக்குள் விளையச் செய்கின்றேன். விளைந்த உணர்வின் எண்ணங்கள் வெளிப்படுகின்றது
6.வெளிப்பட்ட உணர்வின் எண்ணங்களைத் தான் உங்களுக்குள் இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன்.
இதை எண்ணி ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் தீமையை நீக்கும் சக்திகளை வளர்த்துக் கொள்ளலாம்.
காரணம் எத்தனையோ கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் பார்க்காத மனிதன் இருக்க முடியாது. ஆனால் பார்த்தாலும் (உதவி செய்ய முற்பட்டாலும்) அடுத்த கணம் அந்தத் துயரம் உடலுக்குள் வளராதபடி நாம் தடுக்க வேண்டியது அவசியம்.
நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது உயிரான ஈசன் தான். எண்ணியதை அணுவாக மாற்றுவது உயிர் அதற்கு ஜீவன் கொடுத்து உணவு கொடுப்பதும் உயிர். அந்த உணர்வின் அணுவாகி மலமாகி உடலாக சிவமாக ஆகின்றது. ஆகவே நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?
1.அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் சிவமாக ஆக்கினால் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்ளலாம்.
2.அதற்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் கவர வேண்டும்.
எத்தகைய தீமையைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணமே அவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த முறைப்படி நாம் உதவி செய்ய வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எத்தகைய வேதனையைப் பார்த்தாலும் இப்படித்தான் நாம் எண்ணித் தூய்மைப்படுத்தி நம் நல்ல எண்ணங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தீமைகளை வலுவிழக்கச் செய்து பழக வேண்டும்
1.பயமும் வேதனையும் ஆத்திரமும் நமக்குள் வளராதபடி
2.அதை நாம் மாற்றி அமைக்கும் சக்தியாக இதைச் செயல்படுத்த வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.