சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

Image

Mountain mist

சில மலைப் பகுதிகளில் வளரும் செடிகளுக்கு உண்டான “விசித்திரமான ஆற்றல்கள்…!”

 

பெரிய பெரிய மலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம். ஆனால் அதிலே அந்தப் பாறை ஆவதற்கு முன் மேகங்களைக் கவர்ந்து அது தன்னிச்சையாக நீரைத் தான் பருகி அதன் அருகிலே எந்த மலை இருக்கின்றதோ அதறகுள் ஊடுருவிச் செல்லும் தன்மை பெற்றது. சில பகுதிகள் அவ்வாறு உண்டு.

அந்தப் பகுதிகளுக்கு மேலே மேகங்கள் படர்ந்து சென்றால் உச்சி மலையாக இருப்பது தனது காந்தப்புலனால் அந்த மேகங்களைக் கவர்ந்து அதற்குள் நீராகச் சுரக்கச் செய்கின்றது.

மலைக்குக் கீழே நீர் இருக்காது. ஆனால் அத்தகைய மலை உச்சிகளில் நாம் நீரைப் பார்க்கலாம். ஏனென்றால்
1.இவையெல்லாம் இந்தப் பாறைக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனும்
2.அதனுள் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்துக்களுக்கொப்ப
3.அதனின் துணை கொண்டு தான் அந்தப் பாறையை அது வளர்க்கின்றது.

அதே சமயத்தில் அந்தப் பாறைக்குள் நீராகக் கலந்து பாறை மீது நீர் ஓடினாலும் அதனின் தன்மை ஆவியாகப் பறந்து வரப்படும் போது அதைப் போல மற்ற செடிகளின் தாவர இனச் சத்துகளின் ஆவிகளும் இது இரண்டும் ஒருக்கிணைந்து அதனின் தன்மை கொண்டு ஓர் செடியாக ஒரு வித்தாக ஒரு கருவாக உருவாகின்றது.

1.அத்தகைய செடிகளை நாம் வேறு எங்கேயாவது ஊன்றினால்
2.அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய காந்தப்புலன்
3.விண்ணிலே நுண் அணுக்களாகக் கலந்து கொண்டு இருக்கும் நிலையில்
4.துருவப் பகுதியில் இருந்து வரும் அல்லது கடல் நீர்களிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளை
5.சூரியனின் காந்த சக்தி அது கவர்ந்து வைத்திருப்பதைத் தனக்குள் குவித்து
6.மேகங்களாக கூடச் செய்து நீராக வடியச் செய்து அந்த நீரின் சத்தை எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் பல உணர்வின் அலைகள் மோதி மோதி பல உணர்வின் சக்திகள் கருவாகி இப்படித்தான் பல பல தாவர இனங்களாக உருவாகின்றது.

அன்றைய மெய் ஞானிகள் இதைப் போன்ற தாவர இனத்தின் சத்தை அறிந்துணர்ந்து அந்தச் செடிக்குள்
1.மனிதனைக் காத்திடும் நிலை எவ்வளவு இருக்கின்றது…?
2.மனிதனுடைய நல்ல உணர்வினுடைய வளர்த்திடும் நிலைகள் எப்படி இருக்கின்றது…?
3.மனிதனுடைய சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் உணர்வின் சத்து செடியிலே எப்படி இருக்கிறது என்று மெய் ஞானிகள் கண்டுணர்ந்து
4.அதை நாம் பக்குவப்படுத்திப் பயன்படுத்தும் நிலைகளுக்குக் கொடுத்தனர்.

ஆனால் செடியிலிருந்து வித்தா…? வித்திலிருந்து செடியா…? என்று கேள்விக் குறி போட்டு இன்றும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

சில பொருள்களை இணைத்து மனிதனுடைய உணர்வுகள் இயக்கப்பட்டு புதுச் செடிகளை மனிதனால் உருவாக்க முடிகின்றது. உருவாக்கியதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.
1.ஒவ்வொரு செடியிலும் என்னென்ன உலோகச் சத்துகள் (கால்சியம் இரும்பு) அது எந்த இவ்வளவு இருக்கின்றது…?
2.அதில் மற்ற சத்துக்கள் எவ்வளவு இருக்கின்றது…?
3.அதே போல மனித உடலின் தசைகளில் கொழுப்புச் சத்து எவ்வளவு இருக்கின்றது…?
4.உடலில் தாதுக்களும் மற்ற உப்புகளும் எவ்வளவு இருக்கின்றது என்று இதை எல்லாம் அறிந்து கொள்கின்றது இன்றைய விஞ்ஞான அறிவு.

இருந்தாலும் இயற்கையாக உருவாகும் தாவரங்களிலிருந்து நாம் பெறக் கூடிய உணவு வகைகளை அன்று ஞானிகள் நமக்குக் காட்டியிருந்தாலும் அதை விடுத்துவிட்டு செயற்கையாக விஞ்ஞானத்தால் உருவாக்கப்பட்ட உணவு வகைகளைத்தான் நாம் இன்று அதிகமாகப் பயன்படுத்துகின்றோம்.

அதனால் இயற்கையின் அந்த மெய் ஞானத்தின் அறிவின் வளர்ச்சிகள் குன்றப்பட்டு மனிதன் சிந்தனைகள் குறைந்து இயந்திரத்தைப் போல இயங்கும் நிலையாக
1.விஞ்ஞானத்தின் வீரியத்தின் செயலாகத்தான் வளர முடிகின்றதே
2.மெய் ஞானத்தின் வீரியத்தின் தன்மை பெற முடியவில்லை.
3.இன்றைய மனிதன் தன்னைக் காக்கும் நிலையும் இல்லை.

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

Image

bhoovarahar

சாக்கடை அருகில் உன்னை அமரச் செய்து நான் உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…? என்பதைத் தெளிவாக்கினார் ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் எவ்வளவோ சாக்கடையான நிலைகள் கொண்ட காற்று மண்டலமாக இருக்கின்றது.
1.மனித வாழ்க்கையில் அதை நுகர்ந்து நுகர்ந்து
2.உடலுக்குள் அந்தச் சாக்கடையான சத்தையே நாம் நுகரும் தன்மை அடைந்துள்ளோம்.

ஏனென்றால் விருப்பு வெறுப்பு கோபம் ஆத்திரம் குரோதம் வேதனை என்று பிறர் மேல் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர குறைகளை நீக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்க்கவே இல்லை.

பன்றி சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து அதனின் உணர்வின் துணை கொண்டு பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வருகின்றது.

நாற்றத்தை எண்ணாது நாற்றத்தை நீக்கும் உணர்வின் எண்ணங்களாக விளைந்து நல்லதை நுகரும் நிலையாகப் பெற்ற பின் தான் மனிதனாக உருப் பெறுகின்றது பன்றி.

இதை உணர்த்துவதற்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் (ஞானகுரு) சாக்கடைக்கு அருகிலே அமரச் செய்தார்.
1.இந்தச் சாக்கடையில் இருக்கும் நாற்றத்தை நீ நுகராதே.
2.நஞ்சை நீக்கிய அருள் ஞானி உணர்வை இங்கிருந்து நீ பெறு…! என்றார்.
3.அருள் ஞானியின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
4.சாக்கடையை நுகர்ந்தாலும் அது அறியத்தான் உதவும்.
5.சாக்கடையின் நாற்றம் உனக்குள் விளையும் சக்தியாக விளையாது.

அதாவது அருள் ஞானிகளின் உணர்வுகள் உனக்குள் வரும் போது இந்தச் வாழ்க்கையில் இருக்கும் சாக்கடையான உணர்வினை நீக்கி மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தியை நீ பெறுவாய். அதைப் பெறச் செய்வதற்கே நான் உன்னை இங்கே அழைத்தேன் என்றார் குருநாதர்.

சாக்கடைக்கு அருகில் வந்ததும் நீ எதை நுகர்கின்றாய்..? கண்ணால் பார்த்ததும் அந்தச் சாக்கடையை நுகர்ந்து ஐய்யய்ய… ஐய்யய்ய…! என்று எண்ணுகின்றாய். அடுத்து அதை நினைக்கும் போதெல்லாம் உனக்குள் சாக்கடையிம் மணமே வருகின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த மணத்தை நீக்கிட வேண்டும் என்று எண்ணும் போது அதனுடைய உணர்வு உனக்குள் அந்தச் சாக்கடையை நீக்கும் எண்ணமாக வருகின்றது.

ஆகவே நாற்றத்தைப் பிளந்த அந்த வராகனைப் போன்று வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும்
1.அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று
2.குறைகளை நீக்கிடும் உணர்வாக நாம் வளர்க்க வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் வளர்க்கும் போது உடலுக்குள் இது விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அவர்களுக்குள் செலுத்தப்படும்போது அங்கே குறைகளை நீக்கிடும் சக்திகளாகத் தோன்றுகின்றது.

ஆகவே யாரைக் கண்டாலும் எவரைக் கண்டாலும் அங்கு குறைகள் எதுவாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டும்…?

மகரிஷிகளில் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு
1.நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணுவோம் என்றால் நமக்குள் அறிவித்த (குறையான) அந்த உணர்வுகள் மெய்ப் பொருள் காணும் நிலையாக வரும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் கண்டாலும் அதை அறிவிக்க மட்டும் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கடுத்து நாம் பயன்படுத்தக்கூடாது.

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையை நாம் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி… “இப்படிச் செய்தான் இப்படிச் செய்தான்…!” என்று எண்ணும் போது நமக்குள் எதைத் தவறென்று காட்டியதோ அதே தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து நம்மையும் தவறு செய்பவனாக வளர்த்துவிடும்.

மனித வாழ்க்கையில் குறை இல்லாது யாரும் நடந்ததில்லை. மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் போது அந்த குறையின் உணர்வாக இயக்கப்படும் போது அதில் இருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?

டி.வி,யோ மற்றதோ மூடி மறைத்திருப்பதை நாம் அந்த சுவிட்சைப் போடும் போது அது இயக்கி அங்கே அந்தப் படங்களைத் தெளிவாக நம்மைத் தெரிந்துணரச் செய்கிறது.

அதைப் போல தான் அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணத்தை நாம் செலுத்தப்படும் போது
1.அது நமக்குள் மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகளாக இயக்கி
2.ரிமோட் கண்ட்ரோலாக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.
3.நம்முடைய சொல்லைக் கேட்போருக்கும் அவர்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
4.மற்ற தீமைகள் வராதபடி நமக்குள் நல்ல உணர்வைத் தெரிந்து கொள்ளும் நிலையாக வருகின்றது.

நமக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் அந்த நிலையையும் தீமைகள் நமக்குள் புகாத நிலையையும் பெற வேண்டும் என்பதற்கே குருநாதர் எமக்குச் சாக்கடை அருகே அமரச் செய்து கொடுத்த அந்த உபதேசத்தை உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

Image

Group meditation powers

மெய் ஞான சக்தி எத்தனை பேருக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ “அந்த அத்தனை பேரின் வலுவும் நமக்குக் கிடைக்கின்றது…!

 

மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் உடலிலே வந்த தீமைகளை நீக்கி உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண்ணுலகில் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவ்வாறு விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளைத்தான் உனக்குள் (ஞானகுரு) பதியச் செய்கிறேன் என்றார் குருநாதர்.

அவ்வாறு பதியச் செய்த நிலைகள் கொண்டு
1.மனித வாழ்க்கையில் உன்னை அறியாது சோர்வடையச் செய்யும்
2.இருளான உணர்வுகளுக்குள் மெய் ஞானியின் உணர்வை இணைத்து
3.மெய் ஞானிகளை நினைவுக்குக் கொண்டு வந்து கவருவேயானால்
4.அந்த மெய் உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை நீ பெறுகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் விளைய விளைய உன்னிடமிருந்து வெளிப்படும் அந்த எண்ணத்தின் சொல் கேட்டுணர்வோர் அனைவரது உணர்வுகளில் “ஓ…” என்று ஜீவனாகி “ம்…” என்று அவர் உடலுக்குள் பிரம்மமாகின்றது.

பிறர் மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும்…! என்ற ஏக்க உணர்வுடன் வரும் போது
1.அனைத்து உணர்வின் சத்தும் உனக்குள் கிடைத்து நீ வலு பெற்றவனாக ஆகின்றாய்.
2.எத்தனை பேருக்கு அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணுகின்றயோ
3.அத்தனை பேருடைய எண்ண வலுவும் உனக்குள் கிடைக்கின்றது.

அவர்களுக்குள் மெய் உணர்வுகள் விளைய வேண்டும் என்று நீ எண்ணும் போது அந்த உணர்வுகள் அவர் உடலுடன் இரண்டறக் கலந்து அந்தச் சக்தி வாய்ந்த நிலைகள் அவருக்குள்ளும் விளைகின்றது.

அந்த ஞானிகளின் உணர்வை அவர்கள் பெற்ற பின் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்பதை நீ பார்க்கும் போது அந்த உணர்வின் சத்து கொண்டு உனக்குள் ஒளியாக மாற்றும் நிலை பெறுகின்றாய். அந்த அருள் ஞானிகளின் ஒத்த உணர்வாக அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய்.

ஆகவே கூட்டமைப்பாக எல்லோருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலைக்காக வேண்டித்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்தத் தெளிந்திடும் நிலை பெற்ற மெய் ஞானியின் நிலைகளை ஒவ்வொருவரும் உடலுக்குள் செலுத்தும் போது அவர்கள் ஒளிச் சரீரம் பெற்றது போல அனைவரது உணர்வும் அது ஒளி பெறும் தகுதியாக விளைகின்றது.

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

Image

lord-shiva-amarnath

உயிரை நாம் காண முடியவில்லை…! உணரத்தான் முடிகின்றது…!

 

பூமியில் உருவான ஓர் கடலைச் செடியின் மீது சூரியனின் வெப்ப காந்தங்கள் (வெயில்) தாக்குகின்றது. அப்படித் தாக்கப்படும் போது அது கொதிப்பாகி செடி தனக்குள் உறைந்தது போக மீதத்தை ஆவியாக கடலைச் செடியின் மணங்களாக வெளிப்படுகின்றது.

அத்தகைய மணங்களை இந்த வெப்ப காந்தங்கள் கவர்ந்து அணுக்களாக மாறுகிறது. அந்த அணு கடலைச் செடியின் மணத்தைத் தாங்கிய இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அத்தகைய கடலைச் செடியின் மீது சந்தர்ப்பத்தில் ஒரு உயிரணு படுமேயானால்
1.கடலைச் செடியிலிருந்து வெளிவரும் மணத்தை
2.உயிரணுவில் இணைந்த காந்தம் தனக்குள் கவர்ந்து
3.உயிரணுவுடன் இணைக்கப்படும் போது அது ஜீவனாகின்றது.

அந்தக் கடலைச் செடியின் மணம் உயிரணுவிற்குள் மோதும் பொழுது ஜீவனாகி ஆவியாகி மீண்டும் அதனுடன் உறையும் தன்மை வருகின்றது.

பாலைக் காய்ச்சிய பின் எப்படி அதன் மீது எப்படி ஆடை விழுகின்றதோ அது போல கடலைச் செடியின் மணம் (சத்து) உயிரணுவிற்கு மேல் ஆடை போன்று உறைந்து விடுகிறது.
1.ஆகவே அதற்குள் இந்த உயிரின் அறிவு அடைபட்டுவிடுகின்றது.
2.அதனால் தான் சூட்சமமாக இருக்கும் உயிரணுவை (உயிரை) நாம் பார்க்க முடியவில்லை.
3.மின் அணுவாகத்தான் பார்க்க முடியும்.
4.அதனின் நுண்ணிய நிலைகள் வரப்படும் போது அந்த உயிரின் நுண்ணணுக்களையும் நாம் காண முடியாது.
5.ஏனென்றால் அதுவும் சூட்சமத்தின் இயக்கத் துடிப்பு கொண்டது.

அதே மாதிரி ஒரு தாவர இனச் சத்தின் மணத்தைச் சூரியனின் வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அந்த மணத்தைக் கவர்ந்து கொண்ட அணுக்களின் தன்மை படர்ந்து வரப்படும் போது அதிலே எதிர்பட்டு நாம் சென்றால் அதைச் சுவாசிக்கும் பொழுது
1.ஏதோ ஒரு மணம் வருகிறது என்று நாம் அறிய முடிகின்றது.
2.அப்படி அறிந்தாலும் ஒரு விஷத் தன்மை கொண்ட செடியிலிருந்து வந்த மணமாக அது இருந்தால்
3.அதை நாம் சுவாசிக்கும் பொழுது அது நமக்குள் ஜீவன் பெற்று நம் நல்ல அணுக்களைச் செயல் இழக்கச் செய்கின்றது.
5.நாம் மயங்கி விழுந்து விடுகின்றோம்.

ஏதோ கெட்ட வாசனை வருகின்றது என்று அறிந்த நிலையில் மயங்கி விழுந்து விடுகின்றோம். அதாவது அதனுடைய இயக்கச் சக்தி அதிகமாகி நம் நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது. இதை நாம் அறிந்து கொள்கின்றோம்.

அதே போல ஒரு நறுமணமான மணத்தை நாம் நுகரப்படும் போது அந்த நிமிடம் நாம் சுவாசிக்கப்படும் பொழுது ஏதோ நல்ல வாசனையாக வருகிறது…! என்று அறிந்து கொள்கின்றோம்.

இப்படி இத்தனை மணங்களைச் சுவாசித்துத் தனித் தனியாக நாம் உணர்ந்தாலும் அது எவ்வாறு… எங்கிருந்து வந்தது…? என்று நம்மால் அறிய முடிவதில்லை.

இதைப் போலத் தான் ஒரு உயிரணு தாவர இனச் சத்தின் மணத்தை நுகரப்படும் போது அது உறைந்து புழுவின் உடலாக உருவாகின்றது. அப்பொழுது உயிர் அந்த உடலுக்குள் மறைந்து விடுகின்றது.

1.அதாவது சூட்சம நிலைகளில் நாம் காண முடியாத அந்த மணத்தை நுகர்ந்து
2.இந்த உயிரணு தன்னுடன் உறையச் செய்து
3.அதற்குள் உயிர் உள்ளடங்கி விடுகின்றது.

உயிரின் இயக்கம் ஈசன். ஆகவே ஈசன் என்ற இயக்கம் அது உள்ளடங்கி தான் இழுத்துக் கொண்ட சக்தியை உடலாகப் போர்த்திக் கொள்ளும் போது சிவமாக… உருவமாக நமக்குத் தெரிகின்றது.

அப்பொழுது உயிரின் இயக்கமான ஒளியின் சக்தி உடலுக்குள் மறைந்து விடுகின்றது.
1.ஒளியான உயிர் இருளான உடலுக்குள் மறைக்கப்பட்டு
2.உடலாகச் சிவமாகத் தோன்றுவதைத் தான் சிவன் இராத்திரி என்று
3.ஞானிகள் காரணப் பெயராக வைக்கின்றார்கள்.

உயிரின் தன்மை உடலான சிவத்திற்குள் ஆகும் போது அந்த உயிரின் தன்மை அதற்குள் நின்று மறைந்து விடுகின்றது. இது தான் சிவன்ராத்திரி.

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

Image

ஆதிமூலம் - உயிர்

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

 

ஒரு தீபத்தை ஏற்றினால் அது எரியும் போது அது தனக்குள் ஈர்ப்பு சக்தியை எடுத்துத் தான் எரியும். அந்த ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் தீபம் அணைந்துவிடும்.

இதைப்போன்று தான்
1.ஒரு உயிரணுவிற்குள் துடிப்பு ஏற்படும் போது அதனால் ஏற்படும் வெப்பத்தால்
2.அது மீண்டும் ஜீவன் பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக
3.அதற்குள் இருக்கக்கூடிய காந்தபுலன் அந்த இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருந்து எடுத்து அதை இயக்க வைக்கும்.
4.அதாவது ஒரு எண்ணைய் விளக்கைப் பொருத்தும் போது
5.அந்தத் தீபச் சுடரின் அருகிலே துவாரங்கள் இல்லை என்றால் ஈர்க்கும் சக்தி அடைபட்டு விடுகின்றது
6.நெருப்பு (தீபம்) எரிவதில்லை.

ஆகவே உயிரணுவின் சக்தி துடிக்கும் போது அதனுடன் இணைந்த காந்த சக்தி இது இயக்கப்பட்டு அந்தத் துடிப்புக்குள் ஈர்ப்பாகி
1.தன் அருகிலே இருக்கக்கூடிய பொருளை அது இழுத்து
2.உயிரணுவிற்குள் வளரும் சக்தியாக அது எந்தச் சக்தியை எடுத்ததோ
3.அந்த உணர்வின் மணமாக எண்ணமாகத் தெரிந்து கொள்ளும் நிலையாகின்றது.

இதைத்தான் ஞானிகள் இயக்கத்தை “ஈசன்” என்றும் அந்த இயக்கத்திற்குள் உருவாகும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் அதில் இணைந்த காந்தத்தை “லட்சுமி” என்றும் காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள். (நாம் புரிந்து கொள்ள)

அதே சமயத்தில் அந்தக் காந்தம் இழுத்து இந்த உயிருடன் இயக்கப்படும் போது அதை ஜீவன் பெறச் செய்கின்றது.

நாம் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து அதற்குக் கீழ் நெருப்பின் தன்மை அதிகமாகும் போது பாத்திரத்திலுள்ள நீர் கொதிக்கும் தன்மையாக – இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதிகமாகக் கொதிக்கும் பொழுது அந்த நீரே ஆவியாகின்றது. நீரைக் கொதிக்கச் செய்து அதன் மூலம் வரும் ஆவியின் தன்மையை வைத்து அன்றைக்கு இரயில் இன்ஜினையே இயக்கினார்கள். அதுமட்டுமல்லாதபடி அதிகமான பாரங்களையும் வைத்து இழுத்துச் செல்லும்படிச் செய்தார்கள்.

அந்த நெருப்பின் தன்மையை இயக்கச் சக்தியாக வைத்து நீரைக் கொதிக்கச் செய்து அந்தக் கொதிப்பிலிருந்து ஆவியாக வரும் நிலையை “நீராவி இயந்திரம்…!” என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இயக்கச் செய்தனர்.

இதைப் போன்றது தான் நமது உயிரின் இயக்கமும்.

உயிர் தனக்குள் உருவாக்கும் துடிப்பால் வெப்பமாகி ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உணர்வின் சத்தாக தனக்குள் உறையச் செய்கின்றது.

அவ்வாறு உறையச் செய்தாலும் தொடர்ந்து அந்தத் துடிப்பின் இயல்பாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.நமது உயிர் “ஓ……“ என்று பிரணவமாகி (ஜீவன் பெறச் செய்து)
2.கவர்ந்த சக்திகள் அதனுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்……” என்று உறைந்து
3.அது உடலாக மாறுகிறது. ஒரு உயிர் உடலை இப்படித்தான் உருவாக்குகின்றது.

நீரை வைத்து அதனுடன் ஒரு பொருளை இணைத்து வேகச் செய்யும் போது அது கொதிகலனாலும் நாம் போட்ட பொருளின் சத்து கரைந்து நீருடன் ஒன்றி இரண்டும் ஒன்றாக இணைந்து விடுகின்றது.

1.நம் உயிர் நெருப்பாக இருந்து துடிப்பின் நிலைகள் கொண்டு வெப்பமானாலும்
2.ஈர்ப்பின் காந்தத் துடிப்பால் தனக்குள் கவரப்பட்டு
3.எந்தக் குணத்தின் சத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றதோ
4.அந்த இணைப்பின் சக்தியால் அதனுடைய ஆவியாக மாறி
5.அதனுடைய ஈர்ப்பின் துணையில் தனக்குள் உறையும் தன்மையாக மாற்றிக் கொள்கிறது.
6.நீருடன் மற்ற பொருள்களை இணைத்துக் கொதிக்கச் செய்யும் பொழுது அது எப்படி இரணடறக் கலந்து ஒன்றாகின்றதோ
7.அதைப் போல உயிரணு தனக்குள் கவரும் சத்தினை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

உயிர் என்று சொல்கின்றோம். உடல் என்று சொல்கின்றோம். நான் யார்…? தான் யார்…? இந்தப் பிள்ளை யார்…! என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து நமக்குள் இயக்கும் சக்தியையும் அறிந்து இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் உணர்த்துகின்றோம்.

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

Image

narada muni - sage

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

 

அகஸ்தியன் துருவனாகித் துருவ் மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் ஒளியான அணுவைத்தான் நாரதன் என்று காட்டினார்கள். அதாவது ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது…!
2.விஷத்தின் தன்மை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு
3.விஷத்தையை ஒடுக்கும் நிலைகளைத்தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன்…! என்றும் அன்று ஞானிகள் பெயரை வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து அத்தகைய நிலைகளில் வெளிவரும் அந்த உணர்வை ஒருவன் நுகர்ந்தான் என்றால் மனித வாழ்க்கையில் அவன் ஆசையினுடைய நிலைகளைக் கலைத்து கலகப்பிரியனாக ஆக்கிவிடும்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளையும் தன்னை அறியாமல் ஆட்டிப்படைக்கும் செயல்களையும் நீக்கிவிட்டு அது தான் கலகப்பிரியன்…!” அந்தக் கலகமோ நன்மையிலே முடியும்.

உதாரணமாகத் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதிலே அறியாது சிறு தடை ஏற்படும் போது குழந்தை தவறு செய்து விட்டாலோ நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்றாலோ அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்பது விஷம். அந்த விஷம் நமக்குள் வந்து கலக்கத்தை ஏற்படுத்தி நம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது. அவன் இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே…! என்று கோபமும் ஆத்திரமும் வேதனையும் படுவோம்.

அதே போல பிறருக்குத் தக்க நேரத்தில் எல்லா உதவியும் நான் செய்தேன். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் சரியான நேரத்திற்குக் கொடுக்கவில்லை என்றால் அவர்களை எண்ணி வேதனைப்படுகின்றோம். உதவி செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று ஏசிப் பேசுவதும் அடுத்து வேதனையும் படுவோம்.

இதைப்போன்று நாம் மனித வாழ்க்கையில் பற்றுடன் வாழும் பொழுது அந்தப் பாசத்திற்கு எதிர்நிலையாக வரும் போது அதுவே நமக்குள் அதிகக் கோபத்தையும் எல்லை கடந்த ஆத்திரத்தையும் ஊட்டிவிடுகின்றது.

நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் படும் துயரத்தைக் கேட்டு விபரத்தை அறிந்து கொள்ளும் பொழுது அதை உங்களை அறியாது நுகர்ந்து விடுகின்றீர்கள்.

அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

1.இந்த நாரதன் என்ற உணர்வின் தன்மையை நாம் நுகரும் போது
2.நமக்குள் வரும் அத்தகைய தீமையான உணர்வுகளை எல்லாம் பிரித்து விட்டு
3.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக
4.எல்லாவற்றையும் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அணுவின் தன்மைக்கு “ரிஷியின் மகன் நாரதன்” என்று பெயரிட்டு நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்வதற்காக அவ்வாறு வைத்தார்கள்.

உங்கள் நல்ல குணத்தை அழிக்கும் திறன் கொண்ட அத்தகைய வேதனையான உணர்வை அழித்திட்ட தனக்குள் அடக்கிய அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துப் பழக வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்து
3.மகரிஷிகளை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்திகளைப் பெறச் செய்வதற்காகவும்
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

அந்த மகரிஷிகள் உணர்வுகளை நுகர்ந்தால் தீமைகளை மாற்றி நம் நல்ல பண்பினைக் காத்து பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக ஓங்கி வளர்த்துக் கொள்ள முடியும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் என்றும் நிலையாக நம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

Image

 

agathiar

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இன்றும்… உடல் நலம் சரியில்லை என்றால் அதை நீக்க “மந்திரிக்க வேண்டும்…!” என்ற நிலையில் சிலர் மந்திரவாதியிடம் செல்வார்கள்.

அதாவது தன் குழந்தைக்கு மந்திரிக்க வேண்டும் என்று செல்லப்படும் போது அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அவர்கள் யாரும் அறிய மாட்டார்கள்..

குழந்தையின் வியாதியைப் போக்க அவர்கள் மந்திரித்து தாயத்துக்களையோ மற்றதுகளையோ கொடுப்பார்கள். அதை அந்தக் குழந்தை கட்டிக் கொள்ள நேருகின்றது.

ஆனால் ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் கட்டியிருக்கும் அந்தத் தாயத்தைப் பார்த்துக் குழந்தைக்குள் பயமான உணர்வுகள் வருமானால் என்ன நடக்கின்றது…?

இதற்கு முன்னாடி ஒரு மந்திரவாதி தெய்வத்தின் நிலைகளை வைத்து அவன் பல மந்திர தந்திரங்களைச் செய்து “இது தான் தெய்வம்…!” என்று சில நிலைகளை எடுத்துக் கொண்டு அவன் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அந்த மந்திரவாதியினுடைய உயிராத்மா இந்தக் குழந்தையின் பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

இறந்த மந்திரவாதி அவன் வாழும் காலத்தில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ அதை இந்தக் குழந்தை உடலிலேயும் அந்த உணர்வுகள் செயல்படுவதைப் பார்க்கலாம்.

சில கிராமப்புறங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட “திடும்…” என்று முருகன் இங்கே வந்து குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றான்… பல சொற்களையும் பல நிலைகளையும் வெளிப்படுத்துகின்றான்…! என்று பார்க்கலாம்.

இதெல்லாம் ஒரு மனிதன் உடலில் விளைய வைத்த அந்த மந்திர சக்திகள் தான் அவ்வாறு இயக்குகின்றது.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காலத்தில் அவனுக்கு மந்திரமும் தெரியாது. மாயமும் தெரியாது.

அவன் சிறு பாலகனாக இருக்கும் பொழுது பயமற்ற நிலைகள் கொண்டு விண்ணை நோக்கிப் பார்த்து அந்தப் பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை தனக்குள் எடுத்து ஒவ்வொன்றையும் நுகர்ந்தறிந்து கொண்டான். எப்படி…?

தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது அவர்கள் பெற்ற விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டு அந்த விஷத்தின் தன்மையை நீக்கும் உணர்வுகள் சந்தர்ப்பவசத்தால் அவனுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்தது.

பேரண்டத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி வளர்கின்றது என்பதையும் பிரபஞ்சத்திற்குள் உயிராத்மாக்கள் எப்படி வளர்கின்றது என்பதையும் ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் அறிகின்றான்.

முதலிலே அகஸ்தியனின் தாய் தந்தையர் பிற மிருகங்களிலிருந்தும் விஷமான பாம்புனங்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து உடல்களிலே அரைத்துப் பூசி தங்களைப் பக்குவப்படுத்திப் பழகிக் கொண்டார்கள். அவர்கள் கருவிலே உருவானவன் தான் அகஸ்தியன்.

இருந்தாலும் அவர்கள் சுவாசித்த கடும் விஷம் கொண்ட தாவர இனச் சத்தால் உடலிலே நோயாகி அகஸ்தியனின் ஐந்தாவது இறந்து விடுகின்றார்கள்.

தன்னை விட்டுப் பிரிந்து விட்டனரே…! என்று அகஸ்தியர் தன் தாய் தந்தையரை எண்ணி ஏங்கும் பொழுது குழந்தையின் மீது பற்று கொண்ட அந்த இரு ஆத்மாக்களும் அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

வந்த பின் அகஸ்தியன் சூரியனை நோக்கி எண்ணும் போது அவர்கள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் எல்லாம் வீரியமடைந்து
1.ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைக்குச்
2.சர்வத்தையும் அறியும் ஆற்றல் அங்கே பெருகுகின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் மற்ற கோள்களின் சத்தைச் சூரியன் எப்படிக் கவருகின்றது…? சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்த சக்தி பூமிக்குள் தாவர இனச் சத்தை எப்படிக் கவருகிறது…? இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளை ஒன்றும் அறியாத அந்தப் பாலகன் அறிகின்றான்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் தன் உடலை வளர்க்கச் செய்யாது உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியின் திறமையாக வளர்ந்தது…!
1.அவன் மிகவும் குள்ளமாக இருந்தான்
2.ஆனாலும் அவன் உணர்வின் ஆற்றல் மிகவும் பரிமாணமான (MULTI DEIMENSIONAL) நிலையில் வளர்ந்தான்
3.துருவத்தின் நிலையை அறிந்து அதன் வழியாய வரும் உணர்வுகளில் உள்ள விஷத்தை ஒடுக்கினான்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றான்.
5.அந்த அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
6.அவன் அருளைப் பெற்று அவனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரமாக வேண்டும்.

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

Image

Spiritual target

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை உபயோகித்தாலும் இன்னும் அதிகப் போதை வேண்டும் என்பதற்காக நல்ல பாம்பை வைத்து நாக்கை நீட்டச் சொல்லி அந்த நாக்கிலே கொத்தச் செய்து இதைப் போன்ற விஷத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களும் உண்டு.

குரங்கினை நாம் இங்கே கடவுளாக வணங்கும் நிலை இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளிலே உயிருடன் இருக்கும் குரங்குகளை அப்படியே அதன் மேல் இருக்கக்கூடிய மூட்டைத் (TOP) தட்டி விடுகின்றார்கள்.

உள்ளே இருக்கக்கூடிய மூளையைக் குழப்பி அதில் சிறு பொடியைப் போட்டு நாம் எப்படி ஸ்ட்ரா மூலம் சர்பத் சாப்பிடுகின்றமோ அதேபோல குரங்கின் மூளையை உறிஞ்சிச் சாப்பிடுகின்ற நாடுகளும் உண்டு.

ஆக மனிதனாகப் பிறந்தும் மிருக நிலை போல உணவாக உட்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நிலைகளும் உண்டு.

நாம் கரப்பான் பூச்சி என்று சொல்கின்றோம். ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞான அறிவு பெருகி வந்தாலும் அந்தக் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயிலே வறுத்து ரசித்துச் சாப்பிடுவோரும் உண்டு.

ஆனால் இதையெல்லாம் உணவாக உட்கொள்ளும் தன்மை பெற்றவர்கள் எங்கே செல்வார்கள்…?

நாங்கள் வணங்கும் ஆண்டவன் நாங்கள் உணவாக உட்கொள்வதற்காகவே இதை எல்லாம் படைத்தான் என்று சொல்வார்கள். இன்று எல்லா மதத்திலும் உயிர்களைப் பலி கொடுத்து அதை ஆண்டவனுக்காக என்று படைக்கும் பழக்கம் உண்டு.

உனக்காகப் பலி கொடுத்து விட்டு உன் பெயரைச் சொல்லி நான் அந்த உயிரினங்களை எல்லாம் புசிக்கிறேன் என்று சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணர்வு என்ன செய்யும்…?

மிருக இனங்கள் மற்ற உயிரினங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மைகளைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. நாம் அதை உட்கொள்ளும் பொழுது அந்த விஷத்தின் தன்மை நமக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்களும் உயிரினங்களும் அது தன்னை அறியாமலே கொடூரமான செயல்களைச் (மனிதனைப் போன்ற சிந்தனை இல்லாது) செய்து பிறிதொன்றைத் தாக்கி விஷத்தை உட்கொள்கின்றது.

இதைப் போன்ற உணர்வின் சத்து நம் உடலுக்குள் சேரும் போது நமக்குள்ளும் அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அத்தகைய மிருகங்களின் உணர்வை நுகர்ந்து
2.அது மனித (நம்) உடலுக்குள் வளர்ச்சியாகி விஷத் தன்மையான செயலாக உருவாக்கி
3.அதையே ரசித்து மற்றவைகளை உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.

இரக்கமற்ற நிலைகள் கொண்டு கடவுளின் அடிப்படையிலோ அல்லது மதத்தின் அடிப்படையிலோ நாம் வளர்த்தாலும் விஷத் தன்மையை உணவாக உட்கொண்டவர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அந்த உணர்வினை வளர்த்து வெளியிலே செல்லும் போது விஷப் பூச்சிகளாகத் தான் போக முடியும்.

அதாவது இன்று மனிதன். நாளை விஷமான பூச்சி. ஏனென்றால் விஷப் பூச்சிகள் தன் விஷத்தால் மற்றதைக் கொத்தித் தன் உணவாக எடுத்துத்தான் அந்த மகிழ்ச்சியை அடைகின்றது.

பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் ரசித்துச் சுவாசிப்போமேயென்றால் நம் உடல் விஷத்தின் தன்மை அடைந்து நல் உணர்வுகள் அனைத்தும் மறந்துவிடும்.

1.ஏனென்றால் அந்த விஷத்தின் ஈர்ப்பு (வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தது) ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில்
2.நமக்குள் விளைய வைத்த அந்த உணர்வின் தன்மை
3.மணமாக மாறி நம் உயிருடன் ஒன்றி இருக்கும்.

உடலை விட்டுப் பிரியும் நிலையில் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு பூமியிலே நாம் மிதப்போம். மிதந்தாலும் இதை ஒத்த ஒரு விஷ ஜெந்தினுடைய உயிர் உடல் பெற்று விஷத்தை ஓங்கி வளர்க்கப்படும் போது அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

அந்த உடலின் சத்தை நாம் கவர்ந்து கருவாகி முட்டையாகி முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாகப் பாம்பாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

1.ஆகவே நாம் எத்தகைய நிலையைச் செய்தாலும் பிறரிடமிருந்து மறைக்கலாம்.
2.ஆனால் நமக்குள் இருக்கும் உயிரிடம் எதையும் மறைக்க முடியாது.
3.ஏனென்றால் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ
4.அது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் விளைந்து
5.சுவாசித்த உணர்வின் மணமாக நம் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது
6.அதற்குத் தக்க அடுத்த உடலாக அவன் உருவாக்கி விடுகின்றான்.
7.இதிலிருந்து யாருமே தப்ப முடியாது…!

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

Image

Peaceful heartful meditation

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

 

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக நமக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும் என்று கடைக்குப் போகிறோம். கடைக்காரருக்குத் தெரிந்தவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அவர் அவர்களுக்குத்தான் முதலில் சரக்குகளை எடுத்து கொடுப்பார்.

நான் கேட்ட சரக்கைக் கொடுங்கள்…! என்று சொல்லிக் கொண்டிருப்போம். சொல்லச்…சொல்ல… நேரம் ஆக…ஆக… அந்தக் கடைக்காரர் மேல் நமக்குக் கோபம் வந்து கொண்டே இருக்கும்.

நாம் கோபமாகப் பார்த்தவுடன் கடைக்காரர் என்ன செய்வார்…? நான் கொடுப்பதற்கு முன்னாடி “இவருக்கென்ன ஆத்திரம்…!” என்று இன்னும் சிறிது நேரம் நம்மை நிறுத்தி வைப்பார்.

நாம் பொறுமை இழந்து என்ன செய்கின்றோம்…? ஏய்யா…! அவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கின்றேன். எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே…? என்ற நிலை தான் வரும்.

இதைப்போல வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இதைப் போன்ற உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின்
2.நாம் எதை எண்ணினாலும் கலக்கமுடன் தான் நாம் இருக்க முடிகின்றதே தவிர
3.எந்தச் செயலையும் நல்லதென்று (நிம்மதியாக) நாம் வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் பட்டு எல்லா குணங்களிலேயும் இது கலக்கப்பட்டு அதை நுகரப்படும் போது எதனெதன் அளவைக் கூட்டிக் குறைத்து நாம் சுவாசித்துள்ளோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளிலே நோய்கள் உருபெறுகின்றது.

ஒரு விதை அது வேகமாக வளர்ந்து வரப்போகும் போது
1.தன் அருகிலே சத்தின் தன்மை குறையப்படும் போது
2.அதற்குத் தக்கவாறு தாங்கும் நிலை அற்று விட்டதென்றால்
3.தன்னுடைய முதிர்வின் பலனைத் தரப்போகும் போது சீராக இல்லாதபடி “கருகி விடுகின்றது…”

இதைப்போலத் தான் மற்ற உணர்வுகள் கலக்கும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு வேண்டிய வலு இல்லாதபடி அந்த நல்ல குணங்களை வளர்க்காத வண்ணம் இது தடைப்படுத்தி ஓரளவுக்கு அது நம்மைச் சிந்தனையற்ற நிலையாக்கி விடுகின்றது.

சிந்தனைகள் கிளர்ந்தாலும் நல்லதை செயல்படுத்த முடியாத நிலைகளுக்கு அது உள்ளாக்கி விடுகின்றது. நல்ல குணங்களை வளர்ச்சியடையாது குன்றும் பொழுது உடல்கள் குன்றி… உணர்வுகள் குன்றி… அது வேதனை என்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நாம் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்திருக்கின்றோமோ அந்த மணத்திற்கொப்ப இன்னொரு உடல் இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று அந்த உணர்வின் சத்தை எடுத்து அந்த உடலாகப் பெற்று விடுவோம்.

நம் வாழ்க்கையில் கலக்க உணர்வுகள் இப்படிச் சேர்க்கப்பட்டுச் சிந்திக்கும் செயல் இழந்து மனிதனல்லாத உடலாக மாற்றிவிடுகின்றது.
1.இதையெல்லாம் செய்வது யார்…?
2.நம் உயிரின் தன்மையே…!

ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவு தீமையை நீக்கும் திறன் கொண்டது. “தீமையானது…” என்று இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்திப் நல்லதாகப் படைக்கும் நிலைகள் பெற்றவர்கள் நாம்.

இயற்கையில் வந்த ஒவ்வொரு பொருளையும் இன்று செயற்கையில் இணைக்கச் செய்து எத்தனையோ தாவர இனங்களையும் மற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள் மனிதர்கள். உயிரினங்களயும் கூட அது எத்தனையோ புதுப் புது ரூபங்களாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இந்தச் சக்தியை புற நிலைக்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் தங்கள் ஆறாவது அறிவை அக நிலைக்குப் பயன்படுத்தி ஏழாவது அறிவாக உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் தன் வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வினை ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்து
1.நம்மை அறியாது நம் நல்ல குணங்களுக்குள் கலக்கச் செய்யும்
2.தீமை செய்யும் உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளையும் நீக்கி
3.அந்த எண்ணங்களை அடங்கச் செய்வது தான் மனிதனின் கடைசி நிலை.

கேது சந்திரனை விழுங்குகின்றான்…! என்று சாஸ்திரம் சொல்கிறது

Image

Sun moon eclipse

கேது சந்திரனை விழுங்குகின்றான்…! என்று சாஸ்திரம் சொல்கிறது

 

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து சிறுகச் சிறுக அறியும் தன்மையாகப் பெற்று பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனான பின் முழுமையாக அறிந்து கொள்ளும் “பௌர்ணமி” ஆகின்றோம்.

வாழ்க்கையில் அறிந்து கொள்ளும் நிலை வரப்போகும் போது சந்தர்ப்பத்தால் வேதனை வேதனை என்ற இருள் சூழும் உணர்வுகளைக் கவர்ந்து அதனால் உடலுக்குள் விஷம் கொண்ட தன்மையையே நாம் அடைகின்றோம். இதைத்தான்
1.கேது சந்திரனை விழுங்குகின்றான் என்று அன்றைக்குக் காட்டினார்கள்.
2.அதைக் கிரகணம் என்றும் சொல்வார்கள்.

அதாவது வாழ்க்கையின் நிமித்தமாக நம்மை அறியாமல் நுகரும் தீமையான உணர்வுகள் விஷத் தன்மையாக நமக்குள் இணைவதைத்தான் கேது விழுங்குகின்றான் என்ற நிலையாகக் காட்டுகின்றார்கள்.

நம் நல்ல குணங்களை இந்த விஷத்தன்மைகள் நமக்குள் வந்து மறைத்து விடுகின்றது என்பதைக் “கிரகணம்…!” என்று காட்டுகின்றனர்.

சூரியனின் காந்த ஒளிகள் சந்திரனில் படாதபடி மற்ற கோள்கள் தடைப்படுத்தும் போது அது வளரும் தன்மையைத் தடைபடுத்தி விஷத்தின் தன்மையைச் சந்திரனில் வளர்க்கச் செய்கின்றது.

இதையெல்லாம் அன்றைய சாஸ்திர விதிகளாக உருவாக்கப்பட்டு ஞானிகளால் தெளிவாகக் காட்டப்பட்ட நிலை தான்.

வாழ்க்கையில் இருள் சூழும் இத்தகைய நிலைகளிலிருந்து மீள்வதற்காகத்தான் கோவிலை உருவாக்கினார்கள் ஞானிகள். அதன் மூலம் விஷத்தை வெல்லும் வழியையும் காட்டினார்கள்.

விநாயகரை பூஜிக்கும் போது இன்று நாம் என்ன செய்கின்றோம். குளித்து விட்டு இரண்டு அருகம் புல்லைத் தேடி எடுத்துக் கொண்டு
1.இந்தாப்பா…! உனக்குப் பிரியமான அருகம்புல்லை வைத்திருக்கின்றேன்
2.எனக்கு அந்தக் காரியம் முடிக்க வேண்டும்… இந்தக் காரியம் முடிக்க வேண்டும்..! என்று
3.தன்னிடம் இருக்கிற ஆசைகளை எல்லாம் விநாயகரிடம் சொல்லிக் கேட்போம்.
4.அதையே எண்ணி ஏங்கிக் கொண்டு இருப்போம்.

பத்து நாள் செய்து விட்டு அதன் பின் தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால்
1.உனக்காக நடந்தேன்… உனக்கு வேண்டியதை எல்லாம் படைத்தேன்
2.எனக்கு ஏன் இப்படித் தொல்லை கொடுக்கின்றாய்.
3.எனக்குச் செய்ய உனக்கு மனமில்லையா…? என்று வேதனைப் பட்டு அங்கே பூஜிக்கின்றோம்.

அடுத்தாற்போல் விநாயகருக்கு எருக்கன் பூவை மாலையாகச் சாற்றுவார்கள்.
1.வாழ்க்கையிலே விஷத் தன்மை வரும் பொழுது
2.எருக்கண் மாலையை விநாயகருக்குச் சாற்றிவிட்டால்
3.விஷத்தை முறித்து அவன் மனமுவந்து நமக்கு நன்மைகளைச் செய்வான் என்று இதைப்போல கோரிக்கைகளைச் செய்கின்றனர்.

அது நிறைவேறவில்லை என்றால்… உன்னைத் தினம் தினம் வணங்கினேனே…! உன் பெயரைச் சொல்லாத நாளே கிடையாது, உன்னை நினைக்காத நாள் கிடையாது…! ஆனால் எனக்கு ஏன் நீ இப்படிச் செய்கின்றாய்…? என்று வேதனையான உணர்வைக் கலந்து நாம் பூஜிக்கின்றோம்.

இப்படி நாம் பூஜித்தால் மீண்டும் விஷத்தைத் தான் வளர்க்கின்றோம். விஷத்தை நீக்குவதற்கு ஞானிகளால் படைக்கப்பட்ட தெய்வச் சிலையைப் பார்த்து வேதனையையும் கவலைகளையும் தான் நாம் வளர்க்கின்றோம்.

இதை உணர்த்துவதற்காகத்தான் ஆலயங்களில் சன்னதியில் திரையிட்டுக் காட்டுகின்றார்கள்.
1.பின் திரையை விலக்கி
2.விளக்கைக் காட்டி இருளை நீக்கும் நிலையாக அங்கே காட்டுகின்றார்கள்.

அந்த நேரத்தில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் இங்கே ஆலயம் வருவோரும் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்தச் சக்தி நமக்குள் கூடி வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கச் செய்யும்.