குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

agathiar

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இன்றும்… உடல் நலம் சரியில்லை என்றால் அதை நீக்க “மந்திரிக்க வேண்டும்…!” என்ற நிலையில் சிலர் மந்திரவாதியிடம் செல்வார்கள்.

அதாவது தன் குழந்தைக்கு மந்திரிக்க வேண்டும் என்று செல்லப்படும் போது அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அவர்கள் யாரும் அறிய மாட்டார்கள்..

குழந்தையின் வியாதியைப் போக்க அவர்கள் மந்திரித்து தாயத்துக்களையோ மற்றதுகளையோ கொடுப்பார்கள். அதை அந்தக் குழந்தை கட்டிக் கொள்ள நேருகின்றது.

ஆனால் ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் கட்டியிருக்கும் அந்தத் தாயத்தைப் பார்த்துக் குழந்தைக்குள் பயமான உணர்வுகள் வருமானால் என்ன நடக்கின்றது…?

இதற்கு முன்னாடி ஒரு மந்திரவாதி தெய்வத்தின் நிலைகளை வைத்து அவன் பல மந்திர தந்திரங்களைச் செய்து “இது தான் தெய்வம்…!” என்று சில நிலைகளை எடுத்துக் கொண்டு அவன் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அந்த மந்திரவாதியினுடைய உயிராத்மா இந்தக் குழந்தையின் பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

இறந்த மந்திரவாதி அவன் வாழும் காலத்தில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ அதை இந்தக் குழந்தை உடலிலேயும் அந்த உணர்வுகள் செயல்படுவதைப் பார்க்கலாம்.

சில கிராமப்புறங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட “திடும்…” என்று முருகன் இங்கே வந்து குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றான்… பல சொற்களையும் பல நிலைகளையும் வெளிப்படுத்துகின்றான்…! என்று பார்க்கலாம்.

இதெல்லாம் ஒரு மனிதன் உடலில் விளைய வைத்த அந்த மந்திர சக்திகள் தான் அவ்வாறு இயக்குகின்றது.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காலத்தில் அவனுக்கு மந்திரமும் தெரியாது. மாயமும் தெரியாது.

அவன் சிறு பாலகனாக இருக்கும் பொழுது பயமற்ற நிலைகள் கொண்டு விண்ணை நோக்கிப் பார்த்து அந்தப் பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை தனக்குள் எடுத்து ஒவ்வொன்றையும் நுகர்ந்தறிந்து கொண்டான். எப்படி…?

தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது அவர்கள் பெற்ற விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டு அந்த விஷத்தின் தன்மையை நீக்கும் உணர்வுகள் சந்தர்ப்பவசத்தால் அவனுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்தது.

பேரண்டத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி வளர்கின்றது என்பதையும் பிரபஞ்சத்திற்குள் உயிராத்மாக்கள் எப்படி வளர்கின்றது என்பதையும் ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் அறிகின்றான்.

முதலிலே அகஸ்தியனின் தாய் தந்தையர் பிற மிருகங்களிலிருந்தும் விஷமான பாம்புனங்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து உடல்களிலே அரைத்துப் பூசி தங்களைப் பக்குவப்படுத்திப் பழகிக் கொண்டார்கள். அவர்கள் கருவிலே உருவானவன் தான் அகஸ்தியன்.

இருந்தாலும் அவர்கள் சுவாசித்த கடும் விஷம் கொண்ட தாவர இனச் சத்தால் உடலிலே நோயாகி அகஸ்தியனின் ஐந்தாவது இறந்து விடுகின்றார்கள்.

தன்னை விட்டுப் பிரிந்து விட்டனரே…! என்று அகஸ்தியர் தன் தாய் தந்தையரை எண்ணி ஏங்கும் பொழுது குழந்தையின் மீது பற்று கொண்ட அந்த இரு ஆத்மாக்களும் அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

வந்த பின் அகஸ்தியன் சூரியனை நோக்கி எண்ணும் போது அவர்கள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் எல்லாம் வீரியமடைந்து
1.ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைக்குச்
2.சர்வத்தையும் அறியும் ஆற்றல் அங்கே பெருகுகின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் மற்ற கோள்களின் சத்தைச் சூரியன் எப்படிக் கவருகின்றது…? சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்த சக்தி பூமிக்குள் தாவர இனச் சத்தை எப்படிக் கவருகிறது…? இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளை ஒன்றும் அறியாத அந்தப் பாலகன் அறிகின்றான்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் தன் உடலை வளர்க்கச் செய்யாது உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியின் திறமையாக வளர்ந்தது…!
1.அவன் மிகவும் குள்ளமாக இருந்தான்
2.ஆனாலும் அவன் உணர்வின் ஆற்றல் மிகவும் பரிமாணமான (MULTI DEIMENSIONAL) நிலையில் வளர்ந்தான்
3.துருவத்தின் நிலையை அறிந்து அதன் வழியாய வரும் உணர்வுகளில் உள்ள விஷத்தை ஒடுக்கினான்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றான்.
5.அந்த அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
6.அவன் அருளைப் பெற்று அவனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரமாக வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply