“விஜய தசமி” – விஜயம் செய்தது எது…? தசமி என்ற பத்தாவது நிலையை அடைந்தவர்கள் யார்…?

Image

dussera

“விஜய தசமி” – விஜயம் செய்தது எது…? தசமி என்ற பத்தாவது நிலையை அடைந்தவர்கள் யார்…?

 

1.இந்தச் சூரியக் குடும்பத்திற்குள் விண்வெளியில் உயிராகத் தோன்றி
2.அந்த உயிர் பூமியின் ஈர்ப்பலைக்குள் வந்து
3.பூமிக்குள் இருக்கும் தாவர இனச் சத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
4.அந்த உணர்வின் சத்து கொண்டு எண்ணங்கள் உருப் பெற்று
5.எண்ணத்தின் நிலைகள் கொண்டு ஒவ்வொரு உணர்வையும் மாற்றி
6.ஒலி ஒளி என்ற நிலைகளுக்கு உருப் பெற்றது தான் சப்தரிஷி மண்டலம்
7.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று நாம் சொல்லும் ஒளியான உயிராத்மாக்கள் அனைத்தும்
8.அங்கே தான் இன்றும் வாழ்கின்றார்கள்.

விண்ணிலே எப்படி உயிர் ஒளியாகத் தோன்றியதோ அதே நிலையில் இங்கே பூமியில் இருக்கக்கூடிய தாவர இனச் சத்தின் நிலைகள் அனைத்தும் ஒளியாக மாறி உயிருடன் உயிராத்மாவாக மாறி மீண்டும் “விண் செல்வதே கடைசி நிலை…!

ஒரு உயிர் (உயிரணு) பூமிக்குள் வந்த பின் தாவர இனச் சத்தில் விழுந்தால் அதனின் சத்தைக் கவர்ந்து ஒரு புழுவாக உடல் பெறுகின்றது. இப்படிப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ பல கோடிச் சரீரங்கள் பெற்றுத்தான் மனிதனாகத் தோன்றியது. மனிதனான பின்
1.தன் எண்ணத்தால் உயர்ந்த எண்ணங்களைத் தனக்குள் சேர்த்து
2.இந்த உணர்வின் சத்தைத் தன் உடலுக்குள் விளைய வைத்து
3.உடலில் விளைந்த உணர்வின் ஆற்றலை உயிராத்மாவுடன் சேர்த்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாகச் சேர்வதே கடைசி நிலை – விஜய தசமி…!

விஜய தசமி என்கிற பொழுது விண்ணிலே தோன்றிய உயிரணு பூமிக்குள் “விஜயம் செய்து…” தன் சகல சக்திகளையும் உணர்வுகளையும் ஒளியாக மாற்றித் “தசமி…” பத்தாவது நிலையாக அழியாத ஒளிச் சரீரம் பெறும் நிலை.

மனிதன் விண் செல்லும் நிலையை நினைவுபடுத்துவதற்கே விஜய தசமி என்ற நாளை ஞானிகள் உருவாக்கிக் கொடுத்தார்கள்.

நம் குழந்தையோ பையனோ செய்யும் தவறிலிருந்து “அவர்களை நாம் எப்படி நல்வழிப்படுத்துவது…?”

Image

Sakthivel

நம் குழந்தையோ பையனோ செய்யும் தவறிலிருந்து “அவர்களை நாம் எப்படி நல்வழிப்படுத்துவது…?”

 

பாசத்தால் நம் குழந்தையை வீட்டில் சீராக வளர்த்தாலும் அவன் சந்தர்ப்பத்தால் தகாதவனுடன் சேர்ந்து விளையாடச் சென்று விட்டால் அவன் இப்படிச் செய்கிறானே…! என்று வேதனைப்படுகிறோம்.

வேதனை என்பது நஞ்சு. அவன் மேல் எவ்வளவு பற்று இருந்ததோ அவன் செயலைச் சந்தர்ப்பத்தால் கண்ணுற்றுப் பார்க்கும் போது இவன் இப்படி ஆகி விட்டானே…! என்ற வேதனை உணர்வுகள் தோன்றுகின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளை நாம் நுகர்ந்து கொண்ட பின்
2.அவன் மீது பாசமாக இருக்கும் நம் நல்ல உணர்வை மறைக்கச் செய்து விடுகிறது.

பால் தெளிவாக இருக்கின்றது. அதிலே பாதாமைப் போட்டால் அது உயர்ந்த சுவை பெருகுகின்றது. உடலுக்கு வலுவும் கொடுக்கின்றது.

அதைப் போல் நாம் தெளிந்த மனம் கொண்டு இருக்கும் போது பையனை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமே என்ற எண்ணம் கொண்டு அவனுக்கு வேண்டிய உபகாரங்கள் செய்து அவன் வளர வளர நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். அவன் வளர்ந்து வரப்படும் போது நாம் நினைத்தபடி வரவில்லையென்றால் என்ன செய்கின்றோம்…?

சந்தர்ப்பத்தால் அவன் தகாதவனோடு சேருகிறான். அல்லது தகாத செயலை அவனையறியாது செய்கின்றான் என்றால் அதை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் போது நம்மை வேதனைப்பட வைக்கின்றது. இந்த வேதனை என்பதே நஞ்சு.

1.ஒரு பொருளைச் சீராக வைத்திருந்தாலும்
2.மற்றொரு பொருள் அதனுடன் உராய்ந்த பின் இரண்டும் தேய்மானம் ஆகின்றது.
3.இதைப் போல தான் அவன் செய்யும் தகாத செயலின் உணர்வுகள்
4.நம் நல்ல உணர்வுடன் உராயச் செய்யும் போது வேதனை என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

வேதனை உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அவனுக்கு எப்படி எந்த நல்லதைச் சொல்ல வேண்டும் என்ற நிலையில்லாது நாம் நிலைகுலைந்து விடுகின்றோம்.

பாலில் நஞ்சினை விட்டுக் குடித்தால் அந்தப் பாலின் சத்தை இயக்காது நஞ்சு நம்மை மடியச் செய்வது போல் நாம் சுவாசித்த வேதனை என்ற நஞ்சு நம் நல்ல உனர்வை மாற்றி விடுகின்றது. பின் நாம் சிந்தித்துச் செயல்படும் திறனை இழந்து விடுகின்றோம்.

நம் பையன் “நல்லவன் தான்…!” என்றாலும் அவனை வளர்க்க வேண்டும் என்ற நிலையில் வாழ்க்கையில் இத்தகைய சந்தர்ப்ப பேதங்கள் உருவாகி விடுகின்றது. இப்படிப்பட்ட பேதங்கள் உருவாக்கப்படும் போது சிந்தித்து அவனுக்கு நல்ல வழி சொல்வதற்கு மாறாக கோபமான உணர்ச்சிகளைப் பேச வைக்கிறது.

நாம் உயர்ந்த நிலைகளில் மகிழ்ச்சியாக இருப்பினும் ஒரு ஏறும்போ தேளோ கொட்டி விட்டால் “தையா.. தக்கா…!” என்று தான் குதிப்போம். அட என்னய்யா… என்னய்யா…? என்று கேட்டால் “இருய்யா…!” என்று தான் நாம் சொல்வோம். அது போல
1.நஞ்சின் உணர்வுகள் (வேதனை) நமக்குள் கலந்த பின் சீரான பதில் கொடுக்காது
2.நம் நல்ல உணர்வுகள் அனைத்தும் துடிக்க ஆரம்பித்துவிடும்.
3.அந்தத் துடிப்பின் நிலைகள் கொண்டு பையனை ஏசவும் பேசவும் செய்து விடுகின்றோம்.

அவன் மேல் பற்றான நிலைகளில் நாம் இருந்தாலும் மீண்டும் மீண்டும் “இப்படிச் செய்கிறானே…!” என்ற வேதனையைச் சுவாசிக்கும் பொழுது பற்று கொண்டிருந்த நல்ல உணர்வுக்குள் நஞ்சு கலந்து விடுகின்றது.
1.நம்மைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு வெறுப்பு
2.அவனைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு வெறுப்பு

நம்முடைய ஆறாவது அறிவால் கருணைக் கிழங்கில் உள்ள நஞ்சை எவ்வாறு நீக்குகிறோமோ அதைப்போல நமக்குள் கலந்த இந்த நஞ்சை நீக்க அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.

நமக்குள் அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி என் பையன் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அவனுக்குள் அதைப் பாய்ச்சி அவனை அறியாது இயக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்ய வேண்டும். நமக்குள் மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்ட வேண்டும்.

இவ்வாறு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள்ளும் எடுத்து அவனுக்குள்ளும் பாய்ச்சப்படும் பொழுது
1.அவன் மீது எவ்வளவு பற்றுதலோடு நாம் இருந்தோமோ
2.அவனின் தவறான செயலால் நம் நல்ல சிந்தனைகள் இழக்காது
3.நம் ஆறாவது அறிவின் துணையால் நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

“முருகனின் இயல்பு…!” என்று நம் ஆறாவது அறிவின் தன்மையைத் தெளிவாக எடுத்து உருவகப்படுத்தித் தெளிவுபடுத்திக் காட்டியவர் இந்தப் போகமாமகரிஷி தான்.

ஆகவே அந்த ஆறாவது அறிவின் தன்மையின் இயக்கம் எவ்வாறு…? என்று முந்தைய நிலைகளில் மற்ற மகரிஷிகள் சொல்லி இருந்தாலும் அதனைப் பின்பற்றி
1.நஞ்சினை நீக்கும் ஆற்றல் மிக்க செயலைத் தனக்குள் கற்றுணர்ந்து
2.அவனின்று வெளிப்பட்ட உணர்வின் ஆற்றல் தன் இன மக்கள் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும் என்று
3.அந்தத் தெளிந்த உணர்வை ஊட்டி வளர்த்தவன் போகமாமகரிஷி.

அந்தப் போகமாமகரிஷியை நாம் எண்ணி அவர் உணர்வின் சத்தை நமக்குள் சேர்த்து மயில் எவ்வாறு நஞ்சினை வென்றதோ அதை நினைவுபடுத்தி அந்த மகரிஷிகளை எண்ணி நமக்குள் வரும் தீமைகளை வெல்ல வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் குழந்தை உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து அவனை அறியாது புகுந்த நஞ்சுகள் நீங்க வேண்டும் என்று உயர்ந்த உணர்வை அங்கு ஊட்டி அதனின் துணை கொண்டு நாம் நமக்குள் சேர்ந்த தீய உணர்வைத் துடைத்து விட்டு
1.எத்தகைய நஞ்சான உணர்வுகளும் நமக்குள் இயக்காது
2.நாம் “பேரானந்தப்பட வேண்டும்…!”

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

Image

FIRE MEDITATION

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். அவர் அப்படித் தெரிந்தாலும்
1.இந்த உலகம் எப்படிப் பித்தான நிலைகள் இருக்கின்றது…! என்று
2.தன் உடலுக்குள் இருக்கும் மறைந்த உணர்வுகளைக் காட்டி
3.அந்தப் பித்தான நிலைகள் நீக்கி அவரின் உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போதுதான்
4.அவருடைய உண்மையின் நிலைகளை நான் (ஞானகுரு) அறிய முடிந்தது.

அவரைப் பித்தனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் அவருக்குள் இருந்த மெய் உணர்வின் தன்மை
1.நம்மைப் பித்தனாக்கும் உணர்வை நீக்கும் உணர்வின் ஆற்றல் கொண்டது என்பதைப்
2.பின்னாடி தான் என்னால் உணர முடிந்தது.

குருநாதர் அவர் பெற்ற மெய் உணர்வை எமக்குள் உபதேசித்து அந்த உணர்வின் தன்மையையைப் பதியச் செய்தார். பதிவு செய்ததை வளர்த்துக் கொண்டேன்.

அவர் கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் தன்மைக்குத் தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் நான் அதன் வழிகளில் வளர முடியும்.
2.நான் தெரிந்து கொண்டேன்…! என்ற நிலைகளில் சொல்லிக் கொண்டிருந்தால்
3.நான் அழிந்து கொண்டு தான் இருக்க முடியுமே தவிர வளர்ந்திடும் நிலை இல்லை.
4.உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும்
5.உயர்ந்த வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும்
6.நீங்கள் இருள் நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.
7.மெய் வழியில் நீங்கள் என்றுமே சென்றிட வேண்டும் என்ற இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
8.நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற நிலையில் குருநாதர் ஆணைப்படி
9.அதை வளர்க்கும் நிலைகளிலே வளர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

அது போன்று நீங்களும் உங்களை ஆண்டு கொண்டு இருக்கும் உயிரை ஈசனாக மதித்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் மணங்களை நாங்கள் நுகர வேண்டும். எங்கள் உயிரான ஈசனுக்குள் அந்தச் சக்திகள் படர வேண்டும். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய் ஞானிகள் அருள் வழியில் நாங்கள் செல்ல வேண்டும் என்ற இதை எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித நிலைகளிலிருந்து மீண்டு ஒவ்வொருவரும் பிறவியில்லா நிலை எப்படி அடைவது என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் அந்தக் கருத்தினை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களையும் படைத்தார்கள்.

உலக நிலைகளில் ஒவ்வொன்றும் மோதல் ஆவதை மகாபாரதப் போராகக் காட்டி அது அனைத்தையும் கண் நுகர்ந்து பார்த்து இதிலிருந்து விடுபடும் நிலையை அதே கண்களே நமக்கு வழி காட்டுகிறது என்று கண்ணனைக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் மகாபாராதப் போரைக் கண்ணன் (கண்கள்) தான் வழி நடத்தினான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்கள். கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் அனைத்தையும் கண்ணன் கீதா உபதேசமாகச் செய்கின்றான் என்றும் அந்தக் காவியங்கள் மூலம் உணர்த்துகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படு அந்த மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நாம் கண்ணனிடம் (கண்களிடம்) வேண்டினால்
1.எட்டா தூரத்தில் விண்ணுலகில் இருக்கும் அந்த மெய் ஞானிகளை எட்டிப் பிடித்து
2.நம் கண்ணின் நினைவலைகள் கொண்டு அந்தச் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் செலுத்தும் பொழுது
3.உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் ஒளியான உணர்வைப் பெறச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் அவர்கள் பெற்ற சக்திகளை எந்த நஞ்சின் தன்மையும் மறைக்க முடியாது எந்தக் கோளும் மறைக்க முடியாது. எந்தச் சூரியனும் அதை மறைக்க முடியாது. அவைகளை யாரும் அழிக்க முடியாது. அழியாத நிலைகள் கொண்டது தான் துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும்.

ஏனென்றால் விண்ணிலிருந்து வரும் அந்த நஞ்சின் தன்மையை அவர்கள் உணவாக எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.

அவர்கள் பெற்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா சென்றாலும் மற்ற நஞ்சின் தன்மை நமக்குள் வந்தாலும் அதை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெறுகின்றோம். அதாவது
1.எரியும் நெருப்பிற்குள் ஒரு இருள் சூழ்ந்த பொருளைப் போட்டால்
2.அதுவும் பற்றி நெருப்பாக எரிவது போல
3.எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதனை வீழ்த்தி
4.ஒளியின் சுடராகப் பெறும் தகுதியாகப் பெற வேண்டும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராகப் பிரகாசமான நிலைகள் பெற வேண்டும் என்று நீங்கள் உங்கள் எண்ணத்தில் ஆழமாக ஊன்றி அதன் வழியில் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு உங்கள் அனைவருக்கும் அந்த ஆற்றல்கள் கிடைக்க வேண்டும் என்று நானும் தியானிக்கின்றேன். நீங்களும் அது போல் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?

Image

Transaction of our soul

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) “ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?”

 

கெமிக்கல் கலந்த ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்ட நாடாக்களில் விஞ்ஞான அறிவு கொண்டு (CD, MEMORY DRIVES) நம் எண்ணங்களையோ அல்லது பாடல்களையோ பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு காந்த ஊசியைக் (LASER) கொண்டு அதற்குள் உராயும் உணர்வின் ஒலிகளைப் பதிவாக்குகின்றார்கள்.

பாடல்களையோ மற்ற பேச்சுக்களையோ இப்படித்தான் பதிவு செய்கிறோம். அதிலிருந்து மீண்டும் காந்தப் புலனால் ஈர்க்கப்பட்டு அதற்குரிய சாதனத்துடன் (SCREEN, SPEAKER) இணைத்தால் எதைப் பாடினோமோ அதன் உணர்வாக ஒலி/ஒளி வருகின்றது.
1.அதை வேகமாகச் சுழற்றினால் அதிலிருந்து வெளி வரும் குரலோ இசையோ படமோ மாறுகின்றது.
2.நம் உணர்வுக்கொப்ப சமமாக்கினால் இனிமையாகின்றது.
3.அதே சமயத்தில் வேகம் குறைவானால் அந்தக் குரலின் தன்மை மாற்றமாகின்றது. இதை நாம் பார்க்கின்றோம்.
4.ஆகவே சுழற்சிக்குத் தக்க வெளிப்படும் அந்த உணர்வின் ஒலி அலைகள் மாறுகின்றது.

இவ்வாறு இயந்திரத்தின் துணை கொண்டு நாடாக்களில் பதிவு செய்து ஒலி/ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும் பொழுது இதிலே எந்தக் கெமிக்கல் கலந்த உணர்வினை இயக்குகின்றானோ அந்த அலைகளைப் பரப்புகின்றது.

அதைச் சூரியனின் காந்தப் புலன்கள் இழுத்துக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. காற்றிலே சிற்றலைகளாகப் படர்கின்றது. அதனுடைய இயக்கத் தொடரில் அதைக் கவர்ந்து செயல்படும் ஏரியலை அல்லது ஆண்டென்னாவை வைக்கின்றார்கள்.

ரேடியோவோ டி.வி.யோ அல்லது கம்ப்யூட்டரோ அதற்குள் இந்த ஆண்டென்னாவை இணைத்தவுடன் இதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து ட்ரான்சிஸ்டரால் கவரப்பட்டு விட்டால் அது ட்ரான்சாக்சன் செய்து
1.ஒலி/ஒளி அலைகளை மற்ற உணர்வுடன் வடிகட்டித் தனித் தனியாக அனுப்புகின்றது.
2.பேச்சுகளையோ பாடல்களையோ படங்களையோ அதன் மூலம் நாம் பார்க்கலாம்.
3.நம் உயிரும் இதைப் போன்று தான் இயக்குகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப் புலனறிவால் பிறருடைய நிலைகளை நாம் நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வின் அறிவாக
1.நம்மை இயக்கவும் செய்கின்றது
2.நம்மை அறியவும் வைக்கின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் உயிருக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளில் பட்டவுடன் அது ட்ரான்சிஸ்டரைப் (TRANSISTOR) போன்று ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கிறது.

அதாவது சுவாசித்த உணர்வுகளுக்குள் (காற்று) இருக்கும் ஒலி… ஒளி அவைகளை வடிகட்டி அந்த உணர்ச்சிகளை ஊட்டி அதைச் சிறுமூளைப் பாகத்திற்கு அனுப்பி மொத்த உடலையும் இயக்குகின்றது.

அதற்குப் பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து அது எந்தக் குணத்தின் உணர்வோ கருவாகி உருவாகி அணுவின் தன்மையாக நம் இரத்த நாளங்களில் சேமித்துக் கொள்கின்றது.

1.இரத்த நாளங்களில் உள்ள அணுக்கள் அதன் பசிக்கு உந்தும் பொழுது
2.அதனின் உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டப்பட்டு
3.கண் காது மற்ற புலனறிவுகளுக்கு ஆணையிடப்பட்டு
4.மீண்டும் காற்றிலிருந்து அதே இனமான உணர்வுகளைக் கவரச் செய்கின்றது.
5.இப்படித்தான் நம்முடைய சுவாசம் எண்ணம் சொல் செயல் இயக்கம் எல்லாமே இயங்குகின்றது.

மெய் ஞானிகளின் உணர்வை உயிர் வழியாக நாம் கவர்ந்தால் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் இயக்கமாகி அதனின் அறிவாக நாம் மெய் ஞானிகள் கண்ட மெய்யை உணர முடியும்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானத்தின் அறிவை விஞ்ஞான அறிவுடன் இணைத்துக் காட்டுகின்றோம்.

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

Image

sixth and seventh sense

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

 

இன்ஜினியருக்காகப் படிக்க வேண்டும்… டாக்டருக்காகப் படிக்க வேண்டும்… அதன் வழியில் செல்வத்தைச் சம்பாரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஆசையில் கல்விச் சாலைகளுக்கு சென்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து வாழ வேண்டும் என்று எல்லோருமே செயல்படுத்துகின்றனர்.

அப்படிப் படித்திருந்தாலும் வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சு ஊடுருவி விட்டால் உடனே படித்த நிலைகள் அனைத்தும் செயலிழந்து அந்த வேதனையான உணர்வுகளே மிஞ்சி வாழ்க்கை நலிவடைந்து உயிரான்மா நஞ்சு கொண்டதாக மாறுகின்றது.

ஏனென்றால் உயிரான்மாவில் பட்ட நஞ்சினை நீக்கும் திறன் நாம் கல்விச் சாலையில் படித்த படிப்பில் இல்லை.

உதாரணமாக ஒருவர் நோயினால் அவதிப்படுகிறார் என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். நோயிலிருந்து மீட்கத் தன் ஆறாவது அறிவான அந்த டாக்டரை வைத்துத் தான் அவரை அங்கிருக்கும் மருத்துவர் காக்கின்றார்.
1.அதாவது நம்முடைய ஆறாவது அறிவு… என்ற “டாக்டரின்” துணை கொண்டு
2.நாம் எதை எதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோமோ
3.அதைத் தான் நமக்குள் செயல்படுத்தும்.

அத்தகைய ஆறாவது அறிவைத் தெளிவாக்கி அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை அதை வளர்க்கச் செய்யும் நிலைகளுக்குத்தான்
1.நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக்கிய
2.மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

ஒளியுடன் உயிர் தொடர்பு கொண்ட நிலைகள் கொண்டு நம் உணர்வினை ஒளியாக்குவோம்.

எந்தக் கோள் எதனுடைய நிலைகளில் வந்தாலும் சூரியன் அவைகளை எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றுகிறது. அதே போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் விண்வெளியிலிருந்து வெளி வரும் நஞ்சினை மாற்றி ஒளிக்கதிராக மாற்றி நம் பிரபஞ்சத்திற்குகந்ததாக அனுப்புகிறது.

அதைப் போல் நம் உடல் கோளாக இருந்தாலும் உயிர் சூரியனைப் போன்று தனக்குள் வருவதை இயக்கினாலும் மனிதனுக்குள் எண்ணிய எண்ணங்கள் நட்சத்திரம் போன்று உணர்த்தினாலும்
1.காத்திடும் உணர்வு கொண்ட ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து
3.பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்ட
4.நம் ஆறாவது அறிவினைச் செம்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் விண்ணிலே எட்டாத தூரத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படர செய்து கொண்டிருப்பதை நமக்கு முன்னாடி சுழன்று கொண்டிருப்பதை நாம் பருகிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்து வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையில் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

ஆகவே ஆறாவது அறிவை நீங்கள் டாக்டராகப் பயன்படுத்தி நஞ்சினை நீக்கிடும் ஆற்றலாக ஒளியினைப் பருகும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பெருக வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

Image

horoscope-of-rishis

நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்தக் குழந்தை இன்ன நட்சத்திரம் இன்ன இன்ன இராசி என்பார்கள்.

அதன் அடிப்படையிலே வைத்து ஜாதகம் எழுதுவார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஜாதகத்தை எழுதுகிறார்கள். ஜாதகம் எழுதாதவர் பெரும்பகுதி யாரும் இல்லை.

அவ்வாறு எழுதிய ஜாதகத்தின் பிரகாரம் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்திம் கோளுக்கு (இராசிக்கு) இன்ன இன்னது ஆகாது என்ற நிலைகள் ஏற்கனவே எழுதிய குறிப்பை வைத்துக் கொண்டு குழந்தையின் வாழ்க்கை நிலையைக் காட்டுவார்கள்.

ஏனென்றால் விண்வெளியின் இயக்கத்தின் ஆற்றலை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் அங்கே உள்ள மதத்தில் இணைத்து
1.இது தான் கடவுளின் அவதாரம்..! இது கடவுளின் செயல்…! இந்த நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும்…! என்று
2.அவரவர்கள் உணர்வுக்கொப்ப நாடு வேறாக இருந்தாலும் அந்தந்த நாட்டிற்குத் தகுந்தவாறு மதங்களை அமைத்து
4.மதத்திற்குத்தக்க கடவுள்களை அமைத்துள்ளார்கள்.
5.அதன் அடிப்படை ஆச்சாரத்தில் விளைவித்த இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் ஜாதகக் குறிப்புகளை வைத்திருக்கின்றார்கள்.
6.அத்தகைய குறிப்புகள் கொண்டு தான் நம் ஜாதகத்தை உருவாக்கித் தருகின்றார்கள்.

குழந்தை பிறந்த நேரத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரைப் பார்க்கிறோம். இன்ன நட்சத்திரத்தில் இன்ன நிலைகள் பிறந்திருக்கிறது என்பதை அவர்களிடம் போய்க் காட்டும் போது எழுதி வைத்திருக்கும் சட்டத்தை அவர்கள் படிக்கிறார்கள்.

அவ்வாறு எழுதி வைத்ததன்படி இந்த நேரத்தில் கஷ்ட காலம் வருகிறது. நாலாவது மாதம் குழந்தைக்கு “ஏழரை நாட்டான் சனி…!” தொடங்குகிறது என்பார். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி விட்டால் குடும்பத்திற்கு ஆகாது… உங்கள் வியாபாரம் கெடும்… குடும்பத்தில் சிக்கல்கள் வரும்.. நோய்கள் வரும்..! என்று சொல்கின்றார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் தனக்குள் பதிவு செய்ததைத் (OS – OPERATING SYSTEM) திருப்பி எப்படி இயக்குகிறதோ அதைப்போல அவர்கள் சொல்வதை எல்லாம் நமக்குள் கேட்டுக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்ட பின் அந்த பதிவே நம்மை இயக்கத் தொடங்கும்.

பின் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் இந்த ஏழரை நாட்டான் இங்கே இருக்கிறானே… எப்படி வியாபாரம் செய்வது…? என்று அதையே வளர்த்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட எண்ணத்தை நமக்குள் யார் சிருஷ்டித்துக் கொடுக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தை வளர்த்துக் கொள்ள அதன் கீழ் அரசன் வாழ்ந்திட மக்களை ஒன்று சேர்க்க அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு வந்து அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து உருவாக்கி விட்டார்கள்.

உன்னுடைய ஜாதகப்படி பிழை ஏற்பட்டால் அதற்குப் பரிகாரமாக
1.நீ யாகத்தைச் செய்துவிடு…!
2.ஆண்டவனுக்கு நீ இதையெல்லாம் செய்து கொடுத்துவிடு
3.மற்றவர்களை வைத்து அனுஷ்டானங்களையும் மந்திரங்களையும் ஓதச் செய்.
4.அதே சமயத்தில் நீ இன்னென்ன இடத்திற்குச் சென்று (கோவிலே அல்லது ஒரு இடமோ) தியானிக்க வேண்டும் உன் பாவத்தை அங்கே சென்று கழிக்க வேண்டும் என்று
5.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறையைப் பின்பற்றுகின்றன. எல்லா மதங்களும் இப்படித் தான்…!

ஏற்கனவே அவர்கள் குறித்து வைத்ததை… மதத்துடன் இணைக்கப்பட்டதைத்தான்.. நாம் இன்று கடவுளாக வரித்து வைத்திருக்கின்றோம். அதன் படி நாம் எண்ணியதை எல்லாம் நம் உயிர் படைத்து விடுகின்றது. உடலுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்… சகோதரருக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கல் தடையாகும்… எதுவுமே உருப்படியாகாது…! என்று அவர்கள் சொன்னதைப் பதிவு செய்து கொண்ட பின் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வின் அலைகளாக நமக்குய் முன்னடி வந்து கொண்டேயிருக்கும்.

வெளியிலே எங்கே போனாலும் அல்லது எந்த வேலையைச் செய்தாலும் (வியாபாரமோ தொழிலோ) இந்த ஜாதகக் குறிப்பை எண்ணியவுடனே நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் காற்றுக்குள்) இந்த வாசனை வந்து விடும்.

இதே எண்ணத்தில் ஒருவரிடம் வியாபாரம் பேசப் போகும் போது இவர் என்ன சொல்வாரோ…! என்ற இந்தச் சந்தேக உணர்வோடு தான் நாம் போவோம். ஆனாலும் எப்படியாவது நம் பிழைப்புக்குப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பேசப்படும் போது சந்தேக உணர்வு கொண்ட சொல்களாக அவர் காதுகளில் கேட்கின்றது

அதனின் உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வை நாம் எண்ணினோமோ அது அவர் முன்னாடி வந்து நிற்கும்.
1.ஜாதகத்தில் சொல்லப்பட்டதை நுகர்ந்ததும் நமக்குள் எப்படி கலக்கம் ஏற்பட்டதோ
2.அதே இயக்கமாக அவருடைய உணர்வுக்குள்ளும் கலக்கமாகி
3.அடுத்து “சரி… பார்ப்போம்…“ என்று சொல்லத் தொடங்குவார்.
4.முதலில் பணம் கொடுத்து வாங்கலாம் என்று எண்ணியவர் இப்போது என்னிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையே..! என்பார்.
5.ஆகா… ஜாதகம் சொன்னது சரியாகப் போய் விட்டது என்று
6.நமக்குள் பதிவு செய்ததைத் திரும்ப எண்ணி அதை வலுவாக்கி நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
7.இங்கே நாம் எண்ணுவதை நம் உயிர் தான் படைக்கின்றது.
8.நம் உணர்வின் செயலையே அது மாற்றுகின்றது.
9.இப்படி வியாபாரம் மந்தமாகும் போது வேதனைப்படுகின்றோம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று சோர்வடைகின்றோம்.

இத்தகைய சோர்வான உணர்வுகளை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டதும் உயிர் அதைப் படைத்து வியாபாரத்தை மந்தமாக்கி அழகான உடலையும் நோயாக்கி நம்முடைய சுருதியைக் (திறமையைக்) குறைந்து விடுகின்றது.

ஒரு வீணையை வாசிக்க்கின்றார்கள் என்றால் அதில் உள்ள நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தால் இசை “கணீர்…!” என்று வரும்.
1.ஆனால் நரம்புகள் சிறிது தளர்ந்திருந்தாலே போதும்.
2.கணீர்… என்று சப்தித்த அந்த நரம்பு “டொய்ங்… ங்…” என்று இழுக்கும்.

இதைப்போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகளால் நம் நாதங்களின் (சொல்லின்) சுருதிகள் மாறி நம் உடலின் சுருதிகள் மாறி அந்த உணர்வுகள் வெளிப்படும் போது அதைக் கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

1.ஜாதகக் குறிப்பின் பிரகாரம் ஒவ்வொருவரும் நாம் இப்படித்தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்
2.நம்மை அறியாமலேயே நமக்குள் வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம்
3.வாழ்க்கையின் நிலைகளில் (மதத்தின் அடிப்படையில்) நமக்கு நாமே தடைகளைத்தான் விதித்துச் செல்கின்றோம்
4.இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

ஆனால் ஞானிகள் சொன்னது மனிதனாகத் தோன்றிவிட்டாலே அவன் முழு முதற் கடவுள்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்…! என்று ஞானிகள் சொல்லியிருந்தாலும் நாம் நல்லதைச் சிருஷ்டிக்கின்றோமா…?

கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலையில் மனிதனுக்கு ஜாதகம் கிடையாது. நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் படைக்கின்றது… உருவாக்குகின்றது…!

மெய் வழி சென்ற அந்த ஞானிகளின் வழியில் நாம் நடக்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திற்னை வளர்க்க வேண்டும். மெய் ஒளி பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இது தான் நாம் நமக்குள் சிருஷ்டிக்க வேண்டியது…!

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

Image

Gnana and education

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

 

கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வேண்டிக் கல்விச் சாலைகளுக்குச் செல்கின்றோம்.
1.அதிலே விஞ்ஞானத்தின் மேல் நாட்டம் வரப்போகும் போது விஞ்ஞான அறிவை (SCIENCE) வளர்த்து அதனுள் இணைகின்றோம்.
2.இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே செல்லும் போது அதன் மேல் கூர்மையாகி அதை (TECHNICAL) வளர்க்கின்றோம்.
3.மருத்துவம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓங்கி வரப்போகும் அதை (MEDICAL) வளர்த்துக் கொள்கின்றோம்.
4.விவசாயத்தின் மீது நாட்டம் வரும் பொழுது அதனின் நுட்பங்களைப் படித்து (AGRICULTURE) வளர்த்துக் கொள்கின்றோம்
5.பொருள்களைப் பற்றிய கணக்கீடுகளைத் தெரிய விரும்பும் பொழுது அதற்குள் இணைந்து அதைக் (COMMERCE) கற்றுக் கொள்கின்றோம்

இது எல்லாம் இந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நிலையே தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதைத் தெரிந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்க முடியும் என்று இன்று செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

இருந்தாலும் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிது குறை ஏற்பட்டால் அதனால் வேதனை என்ற நிலைகள் ஒரு சமயம் பட்டுவிட்டால்
1.கண்டுணர்ந்த படித்த விஞ்ஞானத்தின் அறிவு அனைத்தும் வீழ்ந்து விடுகின்றது.
2.பல காலம் படித்துணர்ந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாதபடி சோர்வடையச் செய்து
3.முழுவதும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்தான். மூன்றாவது கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் இதைப் பேசுகிறேன் என்றால்
1.குருநாதர் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை
2.அவர் எனக்குள் பதிவு செய்ததை நினைவு கூர்ந்து
3.இந்தக் காற்றில் இருப்பதை என் உயிரின் துணை கொண்டு நுகரும் பொழுது
4.மெய் உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் எண்ணங்களாக அது என்னைப் பேச வைக்கின்றது.

உதாரணமாக படித்துணர்ந்த நிலைகள் கொண்டு ஒரு பாடலைப் பாடுகின்றனர் என்றால் பாடிய முதலின் தலைப்பு சரியாக வந்தால் அந்த பாடலின் கடைசி வரையிலும் ஒரே சீராக எந்தத் தங்கு தடையுமில்லாது வரும்.

ஆனால் பாடலைப் பாடி வரப்போகும் போது இடைப்பட்ட நிலைகள் மறைந்து விட்டால் பாடலின் முழுமையின் நிலை வராது.
1.மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
2.(வெறுமனே பாட நிலைகளைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த நிலையில் தான் இருப்போம்)

அவ்வாறு இல்லாதபடி சீராக்கும் நிலைகளுக்குத்தான் அந்த மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை குருநாதர் எமக்குள் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் இதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இந்த இச்சையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இட்ட ஆணைப்படி இந்த எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது மெய் ஒளியாகப் பரப்புகின்றது எனது உயிர். மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை என் அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது.

அவ்வாறு கிரியை ஆகி வெளிப்படும் போது ஞானத்தின் செயலாகப் என்னைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமான நிலைகள் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.

இதே ஞானத்தின் உணர்வுகளை நீங்கள் கேட்டுணரும் பொழுது உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவாகின்றது. அந்த பதிவின் நிலைகள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சீர்படுத்தும் நிலையாக நிச்சயம் வரும்.

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

Image

Sita and fake deer

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

இராமனிடம் வில்லும் அம்பும் உண்டு. அந்த அம்பை எய்வது போல மனிதன் ஒரு சொல்லைச் சொன்னவுடனே
1.இந்தச் சொல்லின் உணர்வலைகள் அங்கே அம்பாகப் பாய்ந்து
2.அந்த உணர்வின் அலைகள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.இதனால் தான் சீதா இராமா என்பது. (சீதா என்பது சுவை. இராமன் என்பது எண்ணம்)

நாம் எந்தெந்த வகையான குணங்களை எடுத்து அதற்குரிய எண்ணங்களைச் சொல் வழியாக எப்படிப் பாய்ச்சுகின்றோமோ அந்த உணர்வின் நிலையே “இயக்கம்” என்று இராமாயணத்தில் காட்டப்பட்டது.

தன்னுடைய எண்ணத்தால் கவர்ந்து சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈசனிடம் பட்டு இந்த உணர்வின் அலைகள் உடலுக்குள் வித்தாக விளைந்து விளைந்த வித்தின் தன்மை உயிருடன் இணைந்து அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பச் செய்யும்… இயக்கச் செய்யும்… நிலையைத்தான் “சீதா இராமா…!” என்பது.

இதைப் போல நமக்குள் எத்தனையோ இராமன்கள் உண்டு. எந்தெந்தக் குணங்களை எடுக்கிறோமோ அவை ஒவ்வொன்றும் இராமன்களே.
1.சீதாராமா (சுவைக்கொப்ப எண்ணம்)
2.ஜானகிராமா (உணர்வின் சக்தி இணையும் நிலை)
3.பலராமா (பல பல எண்ணங்கள்)
4.பரசுராமா (உழுது பயிரிடும் நிலை… சமப்படுத்தும் எண்ணங்கள்)
5.கோதண்டராமா (வில்லை முறித்தது – தீமைகளை ஒடுக்கும் தன்மை)

ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் இராமன் என்ற சொல்லாக வைத்து அழைக்கிறோம். அதாவது நாம் சுவாசிக்கும் நிலைகளில் நாம் எண்ணும் எண்ணங்களே அந்தந்த உணர்வின் சக்தியாக இயக்கச் செய்கிறது என்ற தத்துவத்தைத்தான் அன்று வான்மீகி எழுதினார்.

ஆஞ்சநேயன் என்பது குரங்கு, பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கின்றது…? தனது பிடிப்பின் நிலைகள் கொண்டு அது செயல்படுத்துகிறது.
1.கோபம் வந்துவிட்டால் யார் நல்லது சொன்னாலும் நாம் கேட்போமா…?
2.அட போய்யா… உனக்கு என்ன தெரியும்…? என்று சொல்வோம்.
3.சந்தோஷமாக இருக்கும் போது வெறுப்பான விஷயங்களைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா…? மாட்டோம்.
4.அது போல ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு இயல்பு உண்டு.
5.”குரங்குப்பிடி…!” என்று சொல்வதுபோல நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டோமோ
6.அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் நம்முடைய செயல்கள் இருக்கின்றது.

சகல சக்திகளையும் இந்த உடலான நிலைகளைக் கொண்டு இயக்கும் நிலையைத்தான் இராவணன் என்பது. அதாவது நம் உடல் தான் இராவணன்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனித உடலாக வரும் வரையிலும் சர்வ சக்தியும் நமக்குள் சேர்க்கப்படுகிறது. அதிலே அசுர சக்திகளும் உண்டு. அந்த அசுர சக்திகளைக் கொண்டு இராவணன் என்ன செய்கின்றான்…?
1.சிவனை நேசிக்கின்றான்… சிவன் என்பது நம் உடல் (திடப்பொருள்)
2.நாம் அனைவருமே உடலின் ஆசை கொண்ட நிலையில் இராவணனாக இருக்கின்றோமே தவிர இராமனாக அல்ல.

சீதா… தான் கவர்ந்து கொண்ட சக்தி நாம் எந்தெந்தக் குணங்களைக் கவர்ந்து கொண்டோமோ அந்தச் சக்தியை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கைக்குள் வைத்திருக்கின்றான். (இலங்கை என்றால் உடல்)

1.ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு எல்லை உண்டு
2.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் பெரும் கடலாக இருந்தாலும்
3.நாம் எண்ணிய நிலைகள் ஒவ்வொன்றும் (தனித் தனியாக) தீவு போன்று இருந்தாலும்
4.இந்த உடலுக்குள் அது அனைத்துமே “அடங்கி இருக்கிறது…” என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

வான்மீகி ஒன்றும் அறியாதவன் தான். காட்டிலே பல உயிரினங்களைக் கொன்று குவித்தவன். அவனுடைய சந்தர்ப்பம் பட்சிகள் மூலம் மெய் ஞானத்தை நுகரும் ஆற்றல் பெற்றான். இராமாயணக் காவியத்தையே படைத்தான்.

விண்ணுலகச் சக்தியின் ஆற்றல் அந்த உணர்வின் சொல் வடிவாக எண்ணங்களின் ரூபத்தைக் கொண்டு எவ்வாறு இயக்குகிறது…? என்பது தான் இராமாயணத்தின் தத்துவமே.

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்று சொல்கின்றார்கள்.
1.சீதையினுடைய ஆசையைக் கொண்டு
2.அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான்.
3.அதவது நாம் எண்ணும் ஆசைகள் அனைத்தும் பொய்.
4.நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு
5.ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம்மைத் திசை திருப்புகிறது…? என்ற நிலையை
6.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் முன் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று
7.அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் பேசிய பேச்சும் மற்றவர்கள் பேசிய பேச்சும் இந்த உணர்வின் மூச்சலைகள் இவை அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

நாம் எதை நினைக்கின்றோமோ அதை இழுத்து நமக்குள் சுவாசித்து அந்த உணர்வுடன் மோதி இயக்கச் செய்யும் போது இலட்சுமணன். அதாவது
1.நாம் நினைப்பதைத் தூண்டி எழுந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணர்த்துகிறது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுவதால்தான் இலட்சுமணன் கோபம் உள்ளவன் என்கிறார்கள்.
3.நாம் நினைத்துச் சுவாசித்த சுவாசம் மோதியவுடன் இது பொய்யான ஆசை…! இதனால் உனக்கு விபத்து…! என்ற நிலையில்
4.இலட்சுமணனாக இருந்து இயக்கி நமக்குள் அந்த உண்மையைச் சொல்கின்றான்.

நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த உண்மையைச் செய்கின்றது. ஆனால் ஆசைப்படும் போது இருள் சூழ்ந்த நிலைகளுக்குள் நாம் செல்கின்றோம்.

சைக்கிள் வேலை தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சைக்கிள் கடையை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சூழ்நிலையைப் பார்த்து “நீ சைக்கிள் கடை வைத்து நடத்தினால் நஷ்டமாகிவிடும்…!” என்று ஒருவர் சொன்னால் போதும்,

இங்கு கடை வைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை அந்தப் பொறாமையினால் தான் அவ்வாறு சொல்கிறார்…! என்று இப்படித்தான் நினைப்போம்.
1.எண்ணிய ஆசையானது சீதா… அது கவர்ந்து கொண்ட சக்தி
2.அடுத்தவர்கள் சொல்லும் உணர்வினுடைய நிலைகளை நாம் சுவாசித்துச் சிந்திக்கும் போது வருவது இலட்சுமணன்

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது… நம்மை இயக்குகிறது…? என்ற நிலையை அன்று வான்மீகி இத்தகைய உணர்வின் தன்மையாக இராமாயணக் காவியத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் சொன்ன மூலக் கருத்து இது தான்.

ஆனால் இன்று எத்தனையோ நிலைகளில் அந்தக் காவியம் திருத்தப்பட்டுள்ளது.

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

Image

religion

சகோதர உணர்வை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொண்டால் விண்ணிலே வாழ்வாங்கு வாழலாம்…!

 

மக்கள் அனைவரும் நன்மையைக் கருதி ஏங்கினாலும் மதங்கள் அனைத்தும் நன்மையைப் பற்றிச் சொல்லி இருந்தாலும் தன் மதத்தை மட்டும் காக்கும் நிலையாகவும் தன் இனத்தை மட்டும் காக்கும் நிலையாகத்தான் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

தன்னைக் காத்திடும் நிலைகளைத்தான் உருவாக்கியதே தவிர பிறருடைய நிலைகளைத் தன் சகோதரன் என்ற நிலைகள் உருவாக்கவில்லை. வாயளவிலே “சகோதரர்” என்று பேசிக் கொள்கின்றோம் அவ்வளவு தான்…!

ஆனால் இந்தப் பூமியிலே ஒருவருக்கொருவர் இணைந்து தான் நாம் வாழுகின்றோம். யாரும் இணையில்லாது வாழ்வது இல்லை.

ஒரு தொழிலைச் செய்தாலும் ஒருவருக்கொருவர் நட்பின் தன்மை கொண்டுதான் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கின்றோம். நட்பில்லை என்றால் வியாபாரம் இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் தொடர் கொண்டு தான் இந்த வாழ்க்கையே நாம் வாழுகின்றோம்.

ஒருவருக்கொருவர் பகைமை கொண்டால் மனித வாழ்க்கையை ஒருவருக்கொருவர் அழித்துக் கொள்கின்றோம் என்று தான் அர்த்தம். இதைப்போன்ற நிலைகள் இல்லாதபடி நாம் மாற்றிட வேண்டும்.

கடலிலே பெருங்காயத்தைக் கலக்கினால் அதனுடைய வாசம் சிறிது நேரமே இருக்கும். அடுத்த நிமிடம் அந்த மணம் மறைந்து விடுகின்றது.

இதைப்போல உயர்ந்த நிலைகளை நாம் பேசினாலும் கடலைப்போல ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனையும் வெறுப்பும் உப்புக் கரிப்பது போல நமக்குள் கைப்பான வாழ்க்கையாகத்தான் மனித வாழ்க்கையில் அதிகம் இருக்கின்றது.

நாம் நல்லதை எண்ணினாலும் கடலிலே கரைத்த பெருங்காயத்தைப் போன்றே சிறிது நேரமே அந்த நறுமணங்கள் இருக்கின்றது. அடுத்த கணம் அந்த நறுமணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

1.நமக்குள் இருக்கக்கூடிய நல்ல எண்ணங்கள் அனைத்தும் சிறிது நேரத்தில் மறைந்து
2.அடுத்துக் கவலையும் சோர்வும் வெறுப்பும் வேதனையும் படக்கூடிய உணர்ச்சிகளே நமக்குள் தூண்டி
3.நாளை என்ன செய்வது…? என்ற நிலைக்கே ஆளாகிவிடுகின்றோம்.

நல்லது செய்ய வேண்டும் என்று சிறிது நேரம் சிந்திக்கின்றோம். ஆனால் அடுத்த கணம் எப்படி நடக்குமோ…? இது எப்படி நடக்கப் போகின்றது…? என்று தனக்குத் தானே பலவீனமாகி சந்தேக உணர்வுகள் தோன்றி விடுகின்றது.

இதைப்போன்று தான் மனித வாழ்க்கையில் நஞ்சிற்குள் சிக்கப்பட்டு நம்முடைய எதிர்காலத்தையும் அது நசியச் செய்து கொண்டிருக்கின்றது.

இயற்கையில் விளைந்த நெல் மற்ற தானியங்களில் உருவாகும் மணி முத்துக்கள் பயிரிலே இணைந்து வளர்வதற்கு நஞ்சு உதவியாக இருந்தாலும் அதை நம் ஆறாவது அறிவு கொண்டு அகற்றிவிட்டு வேக வைத்துச் சமைத்துச் சுவைமிக்கதாக உருவாக்கி உட்கொள்கின்றோம்.

உதாரணமாக நாம் பொங்கல் வைக்கப்படும் போது அதை வேக வைத்து அந்தப் பொருள்களில் உள்ள நஞ்சினை நீக்கி அதிலே பல நல்ல பொருளைக் கலக்கப்படும் பொழுது மிகுந்த சுவையாகின்றது.

இதைப் போன்று தான் நமது வாழ்க்கையில் நம்மை அறியாது ஒரு தொழிலின் நிமித்தம் சிறிது குறைகள் ஏற்பட்டு அதனால் வேதனையான உணர்வை நாம் கவர்ந்தாலும் பொங்கலை எப்படிச் சுவையாக உருவாக்குகின்றோமோ அதைப் போல நமக்குள் பொங்க வைக்க வேண்டும்.
1.அந்த மகிழ்ச்சியின் தன்மை பொங்கி வழிந்து
2.நாம் பிறரைக் காணும் போதெல்லாம் அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.
3.நாம் இடும் மூச்சலைகள் இந்த நாட்டிலே அது படர்ந்து தீமை விளைவிக்கும் நிலைகள் அனைத்தும் அகன்றிட வேண்டும்.
4.ஏனென்றால் நஞ்சின் தன்மை நீக்கும் சக்தி மனிதனுக்கு உண்டு.

நஞ்சினை நீக்கிடும் உணர்வைத் வளர்த்துக் கொண்ட அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கலக்கச் செய்யும் போது அந்த உணர்வு ஆற்றல் மிக்க நிலையாக நமக்குள் விளைகின்றது. இத்தகைய உணர்வின் எண்ண அலைகள் படரப்படும் போது தீமைகள் அகற்றிடும் நிலையே இங்கே வருகின்றது.

இன்று எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மதத்தோராக இருந்தாலும் அவர்கள் கடை வைத்தால் நாம் அங்கே சென்று நமக்கு வேண்டிய பொருள்களை அங்கு வாங்குகின்றோம். அவர்களுக்கு வேண்டியது இருந்தால் நம்மிடம் வந்து வாங்குகிறார்கள்.
1.இதில் வேற்றுமை இருக்கின்றதா…? இல்லை.
2.இவ்வாறு நாம் வேற்றுமையற்ற நிலைகள் வாழப்படும் போது
3.மற்ற நிலைகளில் ஏன் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும்…?

எந்த மதமாக இருந்தாலும் எந்த இனமாக இருந்தாலும் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் உலக மக்கள் அனைவரும் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

எங்களுக்குள் சகோதர உணர்வுகள் வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு பகைமை உணர்வை ஓங்கச் செய்யாது அதைத் தாளச் செய்ய வேண்டும்.

சகோதர உணர்வுகளையும் சகோதரப் பாசங்களையும் ஏற்படுத்தும் நிலைக்குத்தான் மகரிஷிகள் நமக்குப் பல பண்டிகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

ஒட்டு மொத்த நாட்டு மக்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் தன்னை அறியாத பகைமை வேற்றுமைகளை அகற்றி தெய்வீகப் பண்பை வளர்க்கவும் பண்பின் பெருக்கமாகச் சகோதர உணர்வுகளை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளவும் ஒவ்வொரு மாதத்திலும் உருவாக்கப்பட்டது தான் பண்டிகைகள்.

அகண்ட அண்டங்களும் பிரபஞ்சங்கள் எல்லாமே ஒன்றை ஒன்று தழுவிய நிலையில் தான் இயங்கிக் கொண்டுள்ளது.
1.தனித்த சக்தி ஒன்று தான் என்ற நிலையில்
2.அப்படிப்பட்ட ஒரு சக்தி எங்கேயும் இல்லை.
3.ஆகவே சகோதரத்துவத்தை நாம் அனைவரும் வளர்ப்போம்.
4.பகைமையில்லாது எதிர்ப்பில்லாது மகிழ்ந்து வாழ்வோம்.
5.மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் சென்று ஏகாந்த நிலை பெறுவோம்.

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

Image

spiritual-unity

மெய் ஞானத்தைப் பெறும் வழியில் “நான் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் “நாம் பெறவேண்டும்…” என்று விரும்புவதற்கும் உள்ள வித்தியாசம்

 

மாமரத்தில் விளைந்த உணர்வின் சத்து மாங்காயாக இருக்கும் போது புளிப்பின் தன்மையாக இருந்து அந்த மணத்தையே வெளிப்படுத்தும். ஆனால் அது மாங்கனியாகும் பொழுது நல்ல மணமாக வெளிப்படுத்துகின்றது.

அதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் வந்த வெறுப்பின் சத்தையும் புளிப்பின் சத்தையும் மெய் ஞானிகள் கனிவாக்கிக் கனியின் தன்மை அடைந்து ஒளியின் சரீரம் பெற்று விண்ணிலே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அந்த உணர்வினை எண்ணும் போது அதை நீ பருகும் சக்தி பெறுகின்றாய். அதே சமயத்தில் அதைப் பருகும் நிலை அடைந்த நீ
1.உனக்குள் விளைந்த மணமாக அந்த மெய் ஞானிகளின் உணர்வை அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்கும் போது
2.அந்த உணர்வின் சக்தி உனக்குள் கனிவாகும் – கனியின் தன்மையைப் பெறும் தகுதியாக நீ பெறுகின்றாய்…! என்று குருநாதர் இதைச் சொன்னார்.

அந்த அருள் ஞானிகளின் உணர்வின் சக்திகளை “நாம் அனைவரும் பெற வேண்டும்…!” என்ற நிலையிலேயே என்றும் வளர வேண்டும்.
1.“நாம்…!” என்ற ஒருக்கிணைந்த நிலையை அடைந்தால் நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்த்து வலுக் கொண்ட நிலையாக ஆகின்றோம்.
2.”நான்…!” என்ற நிலையில் தனித்துச் சென்றோம் என்றால்
3.மற்றவர்களின் உணர்வின் வலு நமக்குக் கிடைக்காது இழக்கப்படுகின்றது.
4..அப்பொழுது நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் நிலை வருகின்றது என்று குருநாதர் என்னை எச்சரித்தார்.

எந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பருகினோமோ எதை நாம் கலந்து உறவாடினோமோ அந்த உணர்வின் சத்தை நீ பெற வேண்டும் என்று… நான் எப்படி எண்ணினேனோ…!
1.நீ பெற வேண்டும் என்று நான் எண்ணும் போது
2.உன்னுடன் இணைத்தே நான் ஆகிறேன். அப்பொழுது நாம் ஆகின்றோம்.

இதைப்போல அனைவருக்கும் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நீ எண்ணும்போது
1.அவர்களுடன் இணைந்தே நீயும் அவர்களாகின்றாய்.
2.அவர்களும் உன்னுடன் இணைந்தே உன் தன்மை பெறுகின்றார்கள்.

விண்ணிலிருந்து விஷத் தன்மைகள் பல வந்தாலும் சூரியன் அதையெல்லாம் ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே ஒளியின் சுடராக இயக்குவது போல் உனது உணர்வும் செயல்பட வேண்டும்.
1.மெய் ஞானிகளின் உணர்வை நீ பருகி
2.பருகிய அந்தச் சத்தை அனைவரையும் நீ பெறச் செய்ய வேண்டும்
3.அதனின்று தான் நீ இதைப் பெறுகின்றாய்…! என்று தெளிவாக எமக்கு உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நாம் ஒவ்வொருவரும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியை இந்த உலகில் வாழும் அனைத்து மக்களையும் பெறச் செய்வோம்.

கனியின் தன்மையை அடைந்த அந்த மெய் ஞானிகள் பெற்ற அழியா ஒளியின் சரீரத்தை நாம் அனைவரும் பெற வேண்டும் என்ற நிலைக்குத் தான் இதை உணர்த்துகின்றோம்.