கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

Image

lord-shiva-wisdom-fruit

கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

 

கந்த புராணத்தில் நாரதன் கனியைக் கொண்டு வந்து கொடுப்பதாகக் காட்டியிருப்பார்கள். அப்பொழுது சிவன் சொல்கிறான்…
1.கலகத்தை மூட்ட நீ இங்கே கனியைக் கொண்டு வந்துவிட்டாயா என்ன…?
2.சரி சொல்… இது எது என்று பார்க்கிறேன்…! என்று
3.நமக்குத் தெளிவுறுத்த கந்த புராணத்தில் இவ்வாறு காட்டப்படுகிறது.

இந்த உலகை யார் முதலில் வென்று வருகின்றனரோ அவருக்கு இந்த ஞானக்கனி என்று சொல்லப்படுகிறது.

உடனே ஆறாவது அறிவு கொண்ட இந்த உணர்வின் எண்ணங்களைப் பல வாறு செலுத்தி
1.நான் மகிழ்வாகனன்…
2.நான் எதையுமே மகிழ்ச்சியாகப் படைக்கும் தன்மை கொண்டவன்
3.நான் எதையுமே சுழன்று வரவேண்டும் (முடியும்) என்ற “அகம்…!” அங்கு வளருகின்றது.
4.ஆனால் தாய் தந்தையை மறந்து விடுகின்றது…!

ஆறாவது அறிவு (முருகன்) விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு பரவி தன் ஞானத்தாலே புற உலகைத் தன் எண்ணத்தின் திறன் கொண்டு எண்ணுகின்றான்.

ஆனால் இங்கே நாரதன் நீ இந்த உடலிலே சேர்க்க வேண்டிய வினை எது…? என்று கேட்கின்றான்… (காட்டுகின்றான்).

எந்த அன்னை தந்தை உடலிலிருந்து நீ பெற்றாயோ அந்த வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். பேரண்டமும் பேருலக சத்தினுடைய தன்மையையும் உன் அன்னை தந்தையர் தான்.

அவர்கள் ஏங்கி எடுத்து அந்த உணர்வின் தன்மையால் உன் உடலை உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாகத்தான் நீ உருவாகி இருக்கின்றாய்…!

பிஞ்சாக இருந்து துவர்ந்து அது காயாகும் போது புளித்து அது கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப்போல
1.உன் அன்னை தந்தையர் அந்தக் கனியின் தன்மை பெறவேண்டும்.
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று அங்கே நாரதன் காட்டுகின்றான்.

ஏனென்றால் மெய் உணர்வின் தன்மை பெற்று இந்த மனித உடலில் உயிரின் தன்மை கனியாகி என்றும் அது சுவை கொண்டதாக விண்ணிலே சுழன்று கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த அந்த மணம் தான் “நாரதன்…!”

1.உன் அன்னை தந்தையை நேசித்து
2.அந்த உயர்ந்த அருள் சக்திகளை அவர்கள் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை
3.இதை வினையாக உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று கந்த புராணத்தில் நமக்குத் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

அன்னை தந்தையர் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நம்மை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டிப் பட்ட எத்தனையோ பல துயரத்திலிருந்து மீண்டு “என்றும் பதினாறு” என்ற அழியாதை நிலைகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணச் செய்தார்கள் அன்று ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அந்த மெய் வழியில் அந்த ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதைத் தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் அதைத் தன் அன்னை தந்தைக்கு ஆராதனையாகக் கொடுத்து “விண் செலுத்த வேண்டும்…!” என்று காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து விஷத்தை ஒடுக்கி என்றும் அழியாத நிலைகள் கொண்டு நிலையான ஒளிச் சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.

இவ்வாறு அவர்களை விண்ணுக்கு அனுப்பி இந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் இணைத்துக் கொண்டால்தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் நாமும் அந்தச் சூட்சும சரீரத்தைப் பெற முடிகின்றது.

1.அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாக சேர்த்து
2.உன் மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
3.கனியாகப் பெற்ற அந்த ஞானிகளின் அருள் சத்தை உனக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி
4.அதே கனியின் தன்மை தன் தாய் தந்தையர் பெற வேண்டும் என்ற ஏக்க நிலைகளைப் பெறவேண்டும் என்பதற்காக கதைகளாக இப்படி உணர்த்துகின்றார்கள்.

நாம் கதையை எப்படிப் படித்து அர்த்தம் காண்கின்றோம்…? விநாயகர் அம்மா அப்பாவைச் சுற்றி வந்தார். அதனால் அவருக்கு ஞானக் கனி கிடைத்து விட்டது…! என்று தான் நாம் சாதாரணமாகப் பார்க்கின்றோம்.

விரிவடைந்த நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “எதனையும் செய்திடுவோம்…! என்ற இந்த உணர்வை ஓங்கிச் செய்யப்படும் போது பொருள் ஆக்கத்தை இழந்து பரந்த மனம் கொண்டு எங்கேயோ (சூனியத்திற்கு) போகின்றது.

நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட நம் தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் நம்மை (மனிதனாக) உருவாக்கி நல் வழி காட்டுகின்றது என்ற நிலையைத்தான் ஞானிகள் அன்று தெளிவாக்கியுள்ளார்கள்.

அவ்வாறு நமக்கு நல் வழி காட்டிய நம் தாய் தந்தையரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் ஒளி துணை கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை விட்டு வென்று மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நின்று என்றும் பதினாறு என்ற கனியின் நிலைகள் அடையச் செய்ய வேண்டும் என்பதே “நாரதன் கொடுக்கும் ஞானக் கனியின் தத்துவம்…!”

ஆகவே விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.தாய் தந்தையின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அருள் வழியிலே எங்களுக்குள் வரும் இருள் நிலைகளை நீக்கிடல் வேண்டும்
3.மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் தகுதியினை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி
4.இத்தகைய நல்ல வினைகளைச் சேர்க்கும் விதமாக பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள் ஞானிகள்.

பள்ளிப் படிப்பில் ஆர்வமாகப் படித்து முன்னுக்கு வந்த குழந்தைகள் மேல் படிப்பில் தேர்வில் தேறாமல் (FAIL) போவதன் காரணம் என்ன…?

Image

Higher studies

பள்ளிப் படிப்பில் ஆர்வமாகப் படித்து முன்னுக்கு வந்த குழந்தைகள் “மேல் படிப்பில் தேர்வில் தேறாமல் (FAIL) போவதன் காரணம் என்ன…?”

 

ஓர் இன்ஜினியருக்குப் படிக்கக்கூடியவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி… அவர்கள் படிக்கச் செல்லும் பொழுது வீட்டிலே எந்த அளவுக்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு அவர்களுக்கு முன்னணியில் இருக்கும்.

வீட்டிலே கொஞ்சம் சஞ்சலப்பட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று இன்ஜினியரிங் படித்தால் நீங்கள் பாடங்கள் எதைக் கூர்மையாக கவனித்தாலும் உங்கள் சஞ்சல அலைகளுடன் கலந்து இந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.

1.படித்ததை மீண்டும் நீங்கள் நினைக்கப்படும் போது
2.இது சரியா…! தவறா…? என்று உங்களுக்குள் சரியான நிர்ணயம் செய்யாதபடி
3.இந்தச் சஞ்சல நிலைகளையே உண்டாகும்.

அந்தச் சஞ்சல நிலைகள் ஏற்படும் பொழுது கல்லூரியிலே தேர்வு வைத்தாலே போதும். கேள்விகளைப் பார்த்தவுடனே விடை தெரியாதபடி திகைப்புகள் ஏற்பட்டு…! சரியான பதில் எழுத முடியாதபடி அந்தப் பரீட்சையில் தேறாத நிலை (FAIL) ஆகிவிடுவீர்கள்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றனர்…?

படித்த உணர்வைத் திடீரென்று அதைச் சிந்தித்து இந்த உணர்வின் தன்மையை “இப்படித் தான்…!” என்று நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் பரீட்சையாக வைக்கின்றார்கள்.

அதாவது ஆசிரியர் நமக்குச் சொல்லி கொடுத்ததை நினைவுபடுத்தி அதை பரீட்சையாக நம்மை எழுதச் செய்து “படித்ததை…” நாம் அறிந்து கொள்வதற்காக வேண்டிப் பரீட்சையாக வைக்கின்றனர்.

நாம் வீட்டிலே அமைதி கொண்டு இருந்தாலும் வெளியிலே வரப்படும் போது நண்பர்கள் பால் உள்ள பற்றால் அங்கே அதைப் பார்த்தேன்.. இங்கே இதைப் பார்க்கலாம்…! என்று பொழுது போக்குக்காக ஆர்வங்களைத் தூண்டப்படும் பொழுது கவனங்கள் அங்கே திரும்புகின்றது.

அத்தகைய ஆசை கொண்டு ஆர்வங்கள் அங்கே செல்லப்படும் பொழுது படிப்பிற்கு என்று செல்லப்படப் போகும் போது இந்த ஆர்வ உணர்ச்சிகள் முன்னாடி வந்து உந்தும்.

அங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இது இடைமறிக்கும். பாட சம்பந்தமாக (ENGINEERING) நுண்ணிய உறுப்புகளின் செயல்களை இதை இப்படிப் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று அங்கே சொல்லிக் கொடுக்கும் பொழுது அதை முழுமையாகக் கவனிக்கும் எண்ணம் வராது.

அதைப் பார்க்க வேண்டும் அங்கே போக வேண்டும் என்ற ஆர்வ உணர்வுகளுக்குள் இங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை எண்ணிப் பார்த்தவுடனே மனதிற்குச் சிக்கலாக வரும்.

எதையோ சொல்கிறார்…! சொல்லிக் கொடுப்பது ஒன்றும் புரியவில்லையே…! என்ற உணர்வுகள் இயக்கப்படும் போது இந்த நினைவலைகள் வரப்படும் போது
1.கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்… கண் கனமாகும்.
2.தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
3.நான் படிக்கச் சென்றேன்… ஆனால் எனக்குத் தூக்கம் வருகின்றது.
4.என்னால் சரியாகப் முடியவில்லையே…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்துக்கள் அங்கே பாட நிலையாக வரப்போகும் போது அதை எடுத்து நம் எண்ணத்துடன் அதைப் பிணைத்து அதைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் போது ஊரைச் சுற்ற வேண்டும் என்ற இந்த ஆர்வங்கள் முன்னணியில் வந்து அதைப் புரியவிடாதபடி மறைத்துக் கொண்டு இருக்கும்.

நான் அழகான பொருள்களை அங்கே கண்டேன். அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று நண்பர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி இங்கே ஆர்வத்தை உந்தச் செய்யும் பொழுது பாடங்களைக் கற்க விடாது செய்யும்.

சிறிதளவு பதிவானாலும் அதைச் செயல்படுத்த முடியாது செய்து விடும். இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் பரீட்சையில் தேறவில்லை என்று கேள்விப்படும் தாய் தந்தையரோ பிள்ளைக்குப் பாடங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் படிக்க முடியவில்லை…! என்று அவர்களும் வேதனைப்படுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் படிக்கச் செல்கின்றோம். அங்கே படிக்கும் எண்ணம் இல்லாது சிந்தனைகள் வேறு பக்கம் செல்லப்படும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் அதிகமாக வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாது இயக்கும் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்து விடுபட முடியும்.

அதே போல படிக்கும் ஆர்வத்தைத் திசை திருப்பும் மற்ற நண்பர்களின் உணர்வுகளிலிருந்து விடுபடலாம்.

தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று உலக ஞானம் பெறவேண்டும் என்று அடிக்கடி இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் குழந்தைகளுக்குள் ஊடுருவி அவர்களை நல்வழிப்படுத்தும்.
2.கல்வியைச் சீராகக் கற்கச் செய்யும்.
3.உலக அனுபவத்தையும் பெறச் செய்யும்.

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?

Image

healing-hands

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?

 

நாம் வெண்மையான துணியைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே நடந்து போகின்றோம். எங்கேயோ பட்ட தூசி அது காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது பட்டு அழுக்காகின்றது.

மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதை உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் போது காற்றுக்குள் நெடி கலந்ததாகப் பரவி வரும். அந்தக் காற்றை நாம் சுவாசித்தால் “நச்… நச்…” என்று தும்முவோம்.

ஒரு இடத்தில் நல்ல வாசனையான பொருள்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். சந்தனமோ மற்ற பொருள்களிலிருந்து ஆவியின் அலைகள் வெளிப்பட்டுக் காற்றிலே மிதந்து வரும் அந்தப் பாதையில் ஒருவர் நடந்து சென்றால் அதைச் சுவாசிக்கப்படும் பொழுது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே பாதையில் வரப்படும் போது எனக்கு எப்படியோ இருந்தது. கப…கப… என்று இருந்தது. முதுகுப் பக்கமும் எரிச்சலாக இருந்தது என்பார்.

ஆனால் முதலில் வந்தவரோ இல்லை… அப்படி இருக்காது.. நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்.. எனக்கு ஒன்றும் இல்லையே…! நல்ல வாசனை தான் வந்தது என்பார்.

இது எல்லாம் ஏனென்றால் நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றது. அதைச் சுவாசிக்கும் பொழுது அதற்கொப்ப நம் சுவாசத்திலும் கலந்து நம்மையும் இயக்கத்தான் செய்யும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதை போலத் தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வியாபாரத்தில் நல்ல இலாபத்தைப் பெருக்கி விடலாம் என்று எண்ணுவோம்.

ஆனால் கடைக்கு வரும் ஒரு சிலர் வீட்டிலே தன் குடும்பத்தில் ஏற்பட்ட துன்பமான எண்ணத்துடன் வருவார்கள். அவர்களுடைய பிழைப்புக்காக வேண்டி எப்படியும் சாமான் வாங்கித் தான் ஆக வேண்டும்.

கஷ்டத்துடன் வரப்படும் போது நம்மிடம் வந்து இந்த அரிசி என்ன விலைங்க…? பருப்பு என்ன விலைங்க…!” என்று கேட்கின்றார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி அவர்கள் சொல்லும் போது நமக்குச் சரியாகக் (விவரம்) கேட்காது. அப்புறம் நாம் என்னய்யா…! கேட்கின்றீர்கள்….? என்று அழுத்திக் கேட்க வேண்டும்.

இந்த அரிசி தான் என்ன விலைய்யா…? என்று அவரும் அழுத்தமாகக் கேட்பார். அப்போது வீட்டிலே ஏற்பட்ட கஷ்டத்தால் கஷ்டமான உணர்வுகள் அவருக்குள் விளைந்தது நம்மிடம் வந்து கேட்கும் போது
1.அதே கஷ்டமான உணர்வுகள் நமக்குள் பட்டு
2.அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள்ளும் சேர்கின்றது.
3.ஆக ஒருவருக்கு ஒருவர் நாம் பிரிந்து செல்வதில்லை.
4.(அவர் கஷ்டத்ததைச் சந்தித்து துன்பப்படுகின்றார்… ஆனால் நாம் அந்தத் துன்பப்படுவோர் உணர்வைச் சுவாசித்துத் துன்பத்தை நமக்குள் விளைய வைக்கின்றோம்…!) முக்கியமானது

விண்ணிலே 27 நட்சத்திரங்களும் வானவீதியில் இருந்து வெளிப்படும் அந்த மற்ற விஷத்தின் தன்மைகளை முறித்து நாம் பிரபஞ்சத்திற்குள் அணுக்களானாலும் அந்த வட்டப் பாதையில் போகும் கோள் எதுவோ அது இழுத்து தன் உணர்வுடன் சேர்க்கின்றது.

உதாரணமாக சனிக் கோள் அந்தச் சக்திகளைப் பெற்று அதிலிருந்து வரும் உணர்வின் தன்மை நம் பூமிக்குள் வந்தால் பெரும் மழையாகப் பெய்கின்றது.

ஆனால் சனிக்கோளில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வுகள் நிலையை மற்ற கோள்களில் அதாவது புதன் கோளில் மோதும்போது வெடிப்பின் தன்மை அடைகின்றது.

நெருப்பின் மேல் நீரை ஊற்றினால் அது எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போல அடைகின்றது. இதைப்போல ஒவ்வொரு கோளிலும் சனிக் கோளின் தன்மைகள் படும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.

ஏனென்றால் புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அந்த வெப்பத் தணல்களில் நீரின் சத்து பட்டவுடனே வெடிப்பின் தன்மை வரும்.

சில பாறைகளிலே நீரின் தன்மை அது படும் போது அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். ஆக மற்ற கோள்களினுடைய நிலைகளில் சனிக்கோளின் தன்மைகள் பட்டால் அது எதிர்த்து அந்த நீரின் தன்மையை மீண்டும் வெப்ப அலைகளாக மாற்றி விடும்.

நீரைக் கொதிக்க வைக்கும் போது நீரின் சத்து மாறி ஆவியாக மாறுகின்றது. இதைப்போல தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.
1.இதைப் போன்று தான் நமக்குள்ளும்
2.ஒவ்வொரு விதமான குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது எதிர் நிலையாகும்.

நாம் வியாபராம் நன்றாக இருக்கிறது என்று எண்ணி உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்போம். ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் வேதனையுடன் நம்மிடம் வந்து அவரின் சங்கடத்தை எல்லாம் நம்மிடம் சொல்லிப் பேசிக் கொண்டிருந்த பின் அவருக்கு வேண்டிய சரக்கை நாம் எடுத்துக் கொடுத்தால் போதும்.

சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். உடலில் என்னமோ மாதிரி இருக்கின்றது. கிறு…கிறு…! என்று வருவது போல இருக்கின்றது. தும்மல் வருவது போல இருக்கிறது. உடலில் பளீர்…பளீர்..! என்று குத்துவது போல இருக்கிறது என்று சொல்வீர்கள்.

இந்த மாதிரி இருந்தது என்றால் அடுத்தாற்போல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். வந்தவர் இதற்கு முன்னாடி எப்படி வந்தார்…? அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்படி இருக்கின்றார் என்று பாருங்கள். அப்போது அவர்கள் குடும்பத்தில் இந்த கஷ்டமான நிலை இருந்திருக்கும்.

வியாபார நிலைகளில் முதலில் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய பேச்சின் நிலைகளைக் கேட்டுணர்ந்ததனால் நம்மை அறியாமல் உடலில் இத்தனை மாற்றங்களும் வந்து விடுகின்றது. ஏனென்றால்
1.நம் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் எதுவும் தனித்து வாழ்வதில்லை.
2.ஒன்றின் தன்மை ஒன்றிற்குள் அது கலந்து ஒன்றின் சக்தியை ஒன்று எடுத்துத்தான்
3.எல்லாமே இணைந்த நிலைகளில் சுழன்று கொண்டு வாழ்கின்றது.

அதைப் போன்று தான் நாம் மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது இத்தகைய நிலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
1.நேற்று இருந்த நிலை இன்று இல்லை…!
2.நேற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்று துன்பப்படுவோருடைய நிலைகளைக் கேட்டால் நம் மகிழ்ச்சி காணாது போய்விடும்.

உதாரணமாக முன்னாடி ராஜீவ் காந்தியை வெடி குண்டு வைத்துக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் சாதாராண நிலைகள் எல்லாம் மாறி எல்லாருக்கும் பதட்டங்களும் பயமும் பீதியும் ஏற்பட்டது.

அப்பொழுது ரோட்டில் போவதற்கே முடியாதபடி பய உணர்வுகள் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் அதை வெளிப்படுத்தும் போது மனிதருக்குள் சஞ்சலமும் பயமும் அதிகமாக ஏற்பட்டது.

இந்த மாதிரி உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நம் நல்ல குணங்களுடன் சேர்த்து ஒவ்வொரு நொடியிலேயும் விஷத் தன்மைகள் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள்.

நமது நண்பர் என்று மகிழ்ச்சியாக நாம் சந்திக்கின்றோம். ஆனால் அவரோ மற்றொரு இடத்தில் வெறுப்பாக வேதனையான சொல்களைக் கேட்டுவிட்டு இங்கே வருகின்றார்.

அவருடன் கலந்த அந்தச் சத்து… நண்பர் என்று பாசத்தோடு நாம் கலந்து உறவாடப்படும் போது அவர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வு நம் உடலிலே கலந்து விடுகிறது.
1.அவர் உடலில் அது அதிகமாக இருந்தாலும் அவர் உடலுக்குள் கலந்தது
2.இந்தப் பாசத்துடன் கலந்து நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இப்படி நமது வாழ்க்கையில் அடிக்கடி வந்து விடுகின்றது.

ஆனாலும் உயர்ந்த ஆறாவது அறிவு கொண்ட நாம் எத்தகைய பொருளானாலும் அதைச் சமைத்துச் சுவையாக்கி உணவாக உட்கொள்ளத் தெரிந்தவர்கள்…!
1.கசப்பையும் நாம் சுவை கொண்டு தான் மாற்றுகின்றோம்.
2.காரத்தையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்
3.காரலையும் புளிப்பையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்.

காய்கறிகளைச் சுத்தப்படுத்தி அதை எப்படி அறுசுவையாகச் சமைக்கின்றோமோ இதைப்போல மனித வாழ்க்கையில் நாம் எல்லோருடன் பழகினாலும்
1.நம் ஆறாவது அறிவின் திறமை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நம் உடலுக்குள் செலுத்திச் செலுத்தி
3.வரக்கூடிய துன்பங்களையும் வேதனைகளையும் அதனின் விஷத்தின் தன்மையைக் குறைத்தே ஆக வேண்டும்.

அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

Image

patience in meditation

அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

 

பஸ்ஸிலே செல்லும் பொழுது மணிக்கணக்கிலே நாம் பயணம் செய்வோம். ஆனால் நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு பஸ் வந்து நின்றவுடனே “வீட்டிற்குப் போக வேண்டும்…!” என்கிற இந்த அவசரம் முன்னாடி வந்து விடும்.

ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து கொண்டு தலை கை கால் மேலில் இடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு படுகின்ற அவஸ்தைகளைப் பார்க்கலாம்.

பத்து மணி நேரம் பஸ்ஸுக்குள் அமைதியாக உட்கார்ந்து இருப்போம். ஆனால் இறங்கும் பொழுது ஒரு நிமிடம் மற்றவர்கள் இறங்கட்டும். நாம் பின்னாடி இறங்குவோம்… என்ற பொறுமை வருவதில்லை. போட்டு பெட்டியையும் பைகளையும் வைத்து முட்டித் தள்ளிக் கொண்டிருப்போம்.

கீழே இறங்கி வண்டிக்காரனைப் பார்ப்போம். சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கின்றார்களா… இல்லையா…! என்று பார்ப்போம்.
1.கீழே இறங்கி அங்கே நின்று கொண்டே தான் இருப்போம்.
2.ஆனால் அந்த வண்டிக்குள் இருந்து இறங்குவதற்கு முன்னாடி அத்தனை அவசரம்.
3.மற்றவர்களைத் தள்ளி விட்டு நாம் முந்திக் கொண்டு போக வேண்டும்… என்ற நிலைகள் தான் வரும்.

இது எதைக் காட்டுகின்றது…? பிறரை ஒதுக்கும் நிலை தான் வருகின்றது. நம் செயலைப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் வெறுக்கும் நிலையும் பகைமையையும் தான் இது உருவாக்கும்.

நாம் ஒரு குழம்பு வைக்கும் போது குழம்பிற்குள் காரம் ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டுப் போகும். குழம்பிற்குள் உப்பின் தன்மை ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டு விடும்.

அதே போல வீட்டில் நாம் பலகாரத்தை எல்லாம் அழகாகச் செய்து அருமையாக வைத்திருக்கின்றோம். ஒரு பக்கம் இனிப்பான பதார்த்தத்தைச் செய்து வைத்திருக்கின்றோம், இன்னொரு பக்கம் காரமான பதார்த்தத்தைச் செய்து வைத்து இருக்கின்றோம்.

காரமான பதார்த்தத்தில் கொஞ்சம் அதற்கு உப்பைப் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். பக்கத்தில் இருக்கின்ற பாட்டிலில் உப்புத் தண்ணீர் அதிகமாக இருக்கின்றது. உப்புத் தண்ணீரை எடுக்கும் போது “டபக்…!” என்று திறந்து விட்டால் இனிப்புப் பதார்த்தத்தில் சிந்திவிடுகிறது. பின் இனிப்புப் பதார்த்தத்தில் ருசி எப்படி இருக்கும்…?

இதைப் போன்று தான் நாம் எடுக்கும் அவசர உணர்வின் தன்மையால் நாம் எவ்வளவு பக்குவப்படுத்திச் செய்திருந்தாலும் தீமையான விளைவுகள் தான் வாழ்க்கையில் வருகின்றது. அந்தப் பொறுமை இல்லாததால் எத்தனையோ வகைகளில் சிக்கித் தவிக்கின்றோம்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஞானிகள் கோவிலைக் கட்டி அருள் சக்திகளை எல்லோரும் பெறும்படி செய்தார்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணி விட்டு
1.நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் தொழில் வளம் பெருகி மகிழ்ச்சியான நிலைகள் அந்தக் குடும்பத்தில் ஏற்பட வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் மெய் ஒளி மெய் ஞானம் பெறவேண்டும் என்று
5.இதை எண்ணிக் கொண்டே இருந்தால் நமக்குள் இந்தச் சக்தி கூடுகின்றது.
6.மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் வளர வளர நமக்குள் அவசர உணர்வுகள் எதுவும் நம்மை இயக்காது
7.தீமையான விளைவுகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளைத் துடைப்பதற்குத் தான் மெய் ஞானிகளின் சக்திகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இனம் புரியாமல் நம்மை இயக்கும் பயமான பதட்டமான உணர்வின் இயக்கங்களை எப்படி மாற்றுவது…? மன வலிமையை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

Image

everything is perfect

இனம் புரியாமல் நம்மை இயக்கும் பயமான பதட்டமான உணர்வின் இயக்கங்களை எப்படி மாற்றுவது…? மன வலிமையை எப்படிக் கூட்டிக் கொள்வது…?

 

உதாரணமாக நாம் ரோட்டிலே நடந்து போய் கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராத விதமாக நமக்கு எதிரிலே தீய செயல்கள் கொண்ட ஒருவன் ஆத்திரத்துடன் மற்றொருவனை அடித்து நொறுக்குகின்றான்.

1.தாக்குண்டவனோ வேதனையுடன் அலறுகின்றான்.
2.அடிப்பவனோ மகிழ்ச்சியாக இருக்கின்றான்
3.இந்த இரண்டு உணர்வுகளும் வெளிப்படுகின்றது… சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது
4.நம் கண்ணோ அவர்களைப் பார்க்கின்றது அவர்கள் உடலைப் படமெடுக்கின்றது
5.அடிப்பட்டவரிடமிருந்து வெளிப்படும் வேதனையைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த அலைகளை நம் கண்ணின் காந்தப் புலனறிவு ஈர்க்கின்றது
6.ஈர்க்கப்படும் உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே படுகின்றது
7.உயிரிலே படும் போது உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு பயமும் ஆத்திரமும் அவன் படும் வேதனையும் நமக்குள் தோன்றுகின்றது.

நம் உயிருக்குள் பட்ட உடனே அதை நாம் உணர்ந்தறிந்தாலும் அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் சென்று விடுகின்றது. அதாவது அடி வாங்கியவன் பயந்து ஓடிவிட்டாலும் சரி… அல்லது இப்படி ஆகிவிட்டானே…! என்று நாம் “எப்படி எண்ணினாலும்…!” அந்தப் பயம் நமக்குள் வந்து விடுகின்றது.

இப்படி ஒரு தரம் பயமும் ஆத்திரமும் எடுத்து விட்டாலும் அடுத்த கணம்
1.எங்காவது “ஓய்…!”என்று சப்தம் கேட்டால் போதும்…! திடீர் என்று இங்கே திரும்பிப் பார்ப்போம். ஓடுவதற்கு ஆரம்பிப்போம்.
2.ஏதாவதொரு சாமான் “டொப்…” என்று விழுந்தால் போதும். அந்தச் சப்தத்தைக் கேட்டு நாம் செயலிழந்து விடுவோம்.
3.ஒரு வேலை செய்ய வேண்டும் என்ற நிலையில் வேகமாக எண்ணினால் போதும்…! நாம் எப்படி வேகமாகச் செய்ய முடியும்…? என்ற பதட்ட நிலை வந்து விடும்.

அடிபட்டுப் பயந்த நிலைகளை ஒரு முறை தான் நாம் பார்த்துச் சுவாசித்தோம். அதைத் துடைக்காமல் விட்டதால் அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

இந்தப் பய உணர்ச்சிகள் சிறுகச் சிறுக நம் நல்ல உணர்வுடன் சேர்ந்து நம் செயலில் பதட்டமும் பயமும் அதிகமாகி “நடுக்க வாதமாக…!” வந்து விடுகிறது.
1.நம் செயலில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது
2.நம் எண்ணத்தில் நடுக்கத்தின் தன்மை வந்து விடுகின்றது.
3.நாம் பேசும் சொல்லிலே பய உணர்வுகள் கலந்து விடுகின்றது
4.நம் பேச்சை அடுத்தவர்கள் கேட்டபின் பதிலுக்கு அவர்கள் நம்மைக் கேட்கும் பொழுது அது மிரட்டும் தொனியாக வரும்.
5.(அதாவது நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. என்னை மிரட்டுகிறானே…! என்ற நிலை தான் நமக்குள் வரும்)
6.ஆக நம்முடைய எண்ணமே நமக்குள் எதிரியாக மாறுகின்றது.

அதை நாம் துடைக்க வேண்டுமல்லவா…? அதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைக்கச் சொல்கிறோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரும் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த அருள் சக்தி உங்களுக்குள் பதிவாகின்றது. அடுத்து நீங்கள் தனித்துச் சென்றாலும் அந்த எல்லோருடைய ஆசியையும் உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

ஏனென்றால் ஒவ்வொருவரும் எத்தனையோ துன்ப நிலைகள் கொண்டு வந்தாலும் அனைவரும் இதைக் கேட்டுணர்ந்து அந்த மகரிஷியின் அருள் ஒளியை நாம் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும்படி செய்கின்றோம்.

தியானத்தில் அமர்ந்திருக்கும் அனைவரது உடல்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். எல்லோரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும். வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும் என்று எல்லோருடைய வாழ்த்து உணர்வுகளும் ஒருக்கிணைந்து பதிவு செய்யும் போது “வலுக் கொண்ட சக்தியாக… ஒரு கூட்டமைப்பாகச் சேர்கின்றது….!”

இவ்வாறு கூட்டு தியானத்தில் பதிவு செய்த இந்த உணர்வின் ஆற்றல்களை நாம் அடிக்கடி எண்ணி எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அடுத்து அசம்பாவிதங்கள் ஏதாவது பார்க்க நேர்ந்தால்… உடனே “ஈஸ்வரா…!” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று வானை நோக்கி ஏகி கவர்ந்த உணர்வைக் கண்ணின் நினைவு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும் என்று உடல் முழுமைக்கும் சிறிது நேரம் செலுத்த வேண்டும்.

அப்பொழுது எதிர்பாராது மற்றவர்கள் சண்டையிட்ட உணர்வுகளையோ மற்ற பயந்த உணர்வுகளையோ அதை எல்லாம் நம் உடலிலிருந்து அகற்றி நம்மைச் சுத்தப்படுத்தும் நிலையாக வருகிறது.
1.நம்மை அறியாது இயக்கிய அந்தப் பயமான உணர்வுகளும்
2.பதட்டமடையச் செய்யும் நிலையும் நமக்குள் முழுமையாககத் தணிகிறது.
3.மன பலமும் மன வளமும் தெளிந்த சிந்தனைகளையும் நாம் பெறுகின்றோம்…!

செய்து பாருங்கள் உங்கள் அனுபவம் பேசும்…!

குரு இல்லாத வித்தை ஒரு வித்தையாகாது…! ஏன்…?

Image

Guru maharaj

குரு இல்லாத வித்தை ஒரு வித்தையாகாது…! ஏன்…?

 

பள்ளியிலே நாம் படிக்கிறோம் என்றால் பாடங்களை அங்கே சொல்லாகச் சொல்லி வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் (THEORY) வேறு.

அதே சமயத்தில் நேரடியாக “இன்ன இன்ன செய்கின்றது…!” என்று பாட நிலைகளுடன் அனுபவத்தைக் காட்டி (PRACTICAL) உணரச் செய்யும் நிலைகள் வேறு.

1.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் போது பொருள் கண்டுணர்ந்து
2.விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.
3.ஆனால் வெறும் பாட நிலைகளைப் படித்துவிட்டு வரும்போது
4.அதை அறிந்து கொள்ள வரும் போது விரயங்கள் நிறைய ஆகும்.
5.ஏனென்றால் புதிதாக நான் கண்டுணரப் போகின்றேன் என்ற நிலை வரும் போது அது “குருவற்ற நிலை…!”

ஆகவே வெறும் பாட நிலைகளைக் கற்றபின் யாருடைய துணையும் இல்லாது ஒன்றைச் செய்யும் பொழுது காலமும் விரயமாகும்… பொருள்களும் விரயமாகத்தான் செய்யும்.

அதைப் போன்று தான் மெய் ஞானத்தை உணர வேண்டும் என்றால் அனுபவம் பெறாதபடி குரு துணையில்லாது சென்றால் நாம் போகும் பாதையில் சிறு சிறு தடைகள் பட்டாலும் பிறருடைய சோர்வான எண்ணங்களை நாம் கவரும் போது அந்த மெய் ஒளியைக் காணும் நிலைகள் திறனற்றதாகி விடுகின்றது.

அதற்குத்தான் குரு பலம் வேண்டும் என்று சொல்வது. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டிய அருள் வழிப்படி
1.அவரை நான் (ஞானகுரு) எண்ணி மெய் ஒளியைப் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் போது
2.அவர் கண்டுனர்ந்து எனக்கு உபதேசித்த உணர்வின் அலைகளை நானும் பின் தொடர்ந்து அதை நுகர நேருகின்றது.
3.நுகரும் போது குருநாதருடைய உணர்வுடன் ஒன்றி அவர் பருகிய மெய் ஞானத்தை நானும் பருக முடிகின்றது
4.அந்த உணர்வின் சத்தை நான் பருகப்படும் போது அந்த உணர்வின் எண்ண அலைகள் எனக்குள்ளும் குவிகின்றது.
5.அதே உணர்வின் எண்ணங்களை நான் வெளிப்படுத்தும் போது இது சூரியனின் காந்த சக்தி கவருகிறது.
6.இப்பொழுது நீங்கள் இதைக் கூர்மையாகப் படித்துணரும் போது அந்த மெய் உணர்வின் தன்மை உங்களுக்குள்ளும் பதிவாகின்றது.

இந்தப் பதிவின் நிலைகளை மீண்டும் நினைவாக்கி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணை நோக்கி உணர்வைச் செலுத்தி விண்ணிலிருந்து அதை ஈர்த்து உங்கள் உடலுக்குள் அந்த நினைவலைகளைச் செலுத்தப்படுத்தும் போது அந்த ஆற்றல் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்கின்றது.

மெய் ஞானிகளின் உணர்வுகளை குரு பலத்தால் தான் நாம் பெற முடியும். குரு துணையில்லாது விண்ணின் ஆற்றலைப் பெற முடியாது…!

“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

Image

Bhoganathar - kalinanathar

“காளிங்கராயன்…” என்ற குருவின் மூலம் தான் போகர் ஆற்றல் மிக்க மெய் ஞானியாக ஆனார்

 

ஞானியாக வளர்ந்து வந்தவர்கள் யாருமே பாட நிலைகளில் படித்து அந்த நிலையை அடையவில்லை. இராமலிங்க அடிகளை எடுத்து கொண்டால் அவர் கற்றுணர்ந்து வரவில்லை. அருணகிரிநாதரை எடுத்துக் கொண்டாலும் பல மந்திர தந்திரங்களை அவர் கற்று வரவில்லை.

இராமகிருஷ்ண பரமஹம்சரோ வியாசகரோ வான்மீகியோ கொங்கணவரோ இவர்கள் யாருமே பாட நிலையில் கற்று உணர்ந்தவர்கள் அல்ல. இதைப்போல போகரை எடுத்துக் கொண்டாலும் அவரும் பாட நிலையில் கற்றுக் கொண்டவர் அல்ல.

ஒரு சமயம் போகருடைய சிறு வயதில் அவர் தாய் தந்தையை காளிங்கராயன் என்ற நாகம் தீண்டி விடுகின்றது. அதனால் தாய் தந்தையர் இறந்து விடுகின்றனர்.

தாய் தந்தை மீது அதிகமான பாசமாக இருக்கும் போது தாய் தந்தையினுடைய உயிராத்மாக்கள் போகருடைய உடலிலே சேர்ந்து விடுகின்றது.

அப்போது அந்த ஏக்கத்தின் நிலைகள் கொண்டு தாய் தந்தையர்களை விஷத்தில் இருந்து மீட்டுக் கொள்வதற்காக பல உணர்வின் தன்மைகளைத் தனக்குள் அது எடுத்து நுகர்ந்தார்.

நாகம் தன் தாயைக் கொன்று விட்டதே…! என்று போகர் அந்தக் குழந்தைப் பருவத்தில் எண்ணி ஏங்கித் தாய் தந்தையரைக் காத்திடும் எண்ணத்தின் நிலைகள் கொண்டு பலவாறு பல நிலைகளிலே தெளிந்து விஷத்தை முறிக்கும் சக்தியாகத் தாவர இன சத்தின் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார். அவர் தெரிந்து வரவில்லை குருவாக.

அதாவது காளிங்கராயன் என்பது அந்த விஷத் தன்மையான அந்தப் பாம்பிற்குப் பெயர். அது மிகப் பெரிய பாம்பு. அதனால் தான் போகருக்குக் காளிங்கராயன் குருவாக வந்தது என்று சொன்னது.

1.இத்தகைய கொடிய விஷத்தின் தன்மை வாய்ந்த பாம்பு தாக்கப்படும் போது தான்
2.தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டும் என்று ஏங்கித் தவித்த அவருடைய எண்ணத்தின் ஈர்ப்பிற்குள்
3.விஷத்தை முறித்திடும் தாவர இனங்களைக் கண்டறியும் அறிவாற்றல் அவருக்குள் வளர்ந்து
4.அகஸ்தியனைப் போன்று எண்ணிலடங்காத தாவர இனச் சத்துகளை இவர் நுகர்ந்தறிந்து
5.சிறுகச் சிறுக அவர் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் ஞானங்கள் கொண்டு
6.தன் உடலைக் காத்திடும் நிலையும் நல்ல குணங்களைக் காத்திடும் தன்மையும் அவர் பெறுகின்றார்.

காரணம் இதற்கு முன் விண் சென்ற துருவ நட்சத்திரமும் (அகஸ்தியர்) அதற்குப் பின் சென்றவருடைய உணர்வலைகளும் போகரின் ஈர்ப்பிற்குள் சிக்கப்படும் போது தான் அந்த அறிவின் ஞானம் வருகின்றது.

தாவர இனங்களின் சத்துகளை அவர் அதிகமாக நுகரும் ஆற்றல் கொண்டு அதை அறிந்திடும் எண்ணம் கொண்டு அவைகளை மோகித்ததால் அவருக்குப் “போகன்…!”” என்று பெயர் வந்தது.

எதையுமே அது நுகர்ந்தறிந்து அந்த உண்மையை அறிந்திடும் எண்ணங்கள் அங்கே பிரதிபலிக்கச் செய்கின்றது. அதன் வழியிலே விண் சென்றவர்கள் தான். எல்லாமே சந்தர்ப்பத்தால் தான்.

இவ்வாறு தெரிந்து கொண்ட உணர்வின் தன்மை அவருக்குள் இருந்தாலும் இந்த உடலைக் காத்திடும் நிலையாகத் தான் ஆரம்பத்திலே அவர் பெற்றது.

தாய் தந்தையை விஷம் தாக்க அந்த விஷத்திலிருந்து உடலைக் காத்திடும் உணர்வின் தன்மை அதிகமாக வளர்ந்ததனால் விஷத்தை முறிக்கும் தாவர இனங்களை நுகர்ந்தறிந்து தன் உடலில் இணைக்கப்படும் போது
1.உடலை அழியா வண்ணம் உருவாக்கி
2.அதற்குள் தன் உணர்வின் சக்தியை எப்படிக் காத்திட வேண்டும் என்ற நிலை தான் போகனால் அறிய முடிந்தது.

தன் உடலைப் பல வருடங்கள் காத்து வைத்திருந்தாலும் “சிறைக்குள் அடைபட்ட உயிரணு போல தேங்கி விடுகின்றது…!” என்ற நிலையை உணர்ந்த பின் பிற்காலங்களில் தான் “உடலை விட்டுப் பிரிந்து விண் செல்ல வேண்டும்…!” என்ற நிலைக்கு வருகின்றார்.

1.அந்த நிலையில் பாமர மக்களை அணுகி அவருடைய நோய்களை நீக்கி
2.அவரிடத்திலிருந்து பேரன்பான மூச்சலைகளை போகர் நுகர்ந்து
3.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு
4.தன் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கடைசியில் விண் செல்கின்றார் போகர்.

ஏனென்றால் மிகச் சக்தி வாய்ந்த ஒவ்வொரு ஞானிகளும் இப்படித் தான் வந்தார்கள். ஆனால் அகஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை.

அகஸ்தியன் தான் முதலில் துருவத்தை அறிகின்றான். துருவத்தின் நிலைகள் அறிந்த பின் அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக ஒரு உயிராத்மா அடைகின்றது.

இது பல இலட்சங்களுக்கு முன்பு நடந்தது. இதையெல்லாம் நாம் நுகர முடியாது. ஆனால் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் எடுத்துக் கொண்ட அந்த ஆற்றல்மிக்க சக்தியைத் தெளிவாக எனக்கு (ஞானகுரு) உபதேசித்து அருளினார்.

அவர் சொன்னதை எல்லாம் பெறவேண்டும் என்று எனக்குள் அதைப் பதியச் செய்து கொண்டதனால் அவரைப் பின்பற்றி அவர் எண்ண உணர்வை நினைவு கொள்ளும் போது விண் வெளியின் ஆற்றலை நுகர முடிகின்றது.
1.குருவின் வழியில் யாம் (ஞானகுரு) இருந்ததனால்
2.விண் செல்லும் ஆற்றல் மிக்க அந்தச் சக்தியை அவர் உடலிலிருந்து நானும் அதைப் பருக முடிந்தது.
3.இப்பொழுது உங்களுக்கும் அதைப் போதிக்க முடிகின்றது.

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

Image

Divine Guru

மனிதன் வாழக்கூடிய பூமியாக மாற்றி மெய் ஞானத்தையும் மனிதனுக்குள் விளையச் செய்தவர்கள் “பண்டைய கால மகரிஷிகள்…!”

 

பண்டைய கால மாமகரிஷிகள் தங்களுடைய புலனறிவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி பல சக்தி வாய்ந்த ஆற்றல்களைக் கவர்ந்து தன் உடலிலே விளைய வைத்துக் கொண்டார்கள்.

அப்படி விளைய வைத்துக் கொண்ட சக்தியின் துணை கொண்டு தனக்குகந்த நிலையில் பூமிக்குள் கால சூழ்நிலைகளை மாற்றி மனிதனை இங்கே வாழ வைத்தார்கள். இந்தப் பூமிக்குள் மெய் ஞானத்தையும் பெருக்கினார்கள்.

அன்றைய மகரிஷிகள் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தனக்குகந்ததாக இந்தப் பூமியின் நிலைகளை மாற்றி அமைத்தார்கள்.
1.ஒவ்வொரு கால நிலைகளில் அது மாறினாலும் அதைத் திசை திருப்பி
2.மனிதனுக்குகந்த நிலைகளில் பூமியின் சுழற்சி நிலைகளைச் சீராக்கி அமைத்தார்கள்.

அதாவது சூரியனின் காந்த சக்தி இதைக் கவர்ந்திடாத நிலையில் ஒரு பகுதி அதை மறைக்கப்பட்டு மறு பகுதியில் பூமியைத் திருப்பினான் தனிப்பட்ட மனிதன் – “மகரிஷி…!”

அப்படி அமைக்கப்பட்ட இந்தப் பூமியிலே உருவான மனிதருக்குள் ஞானத்தின் உணர்வுகள் விளைந்தது. அதிலே மெய் ஞானியாக ஆன முதல் மனிதன் தான் அகஸ்தியன். அவன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அவனைப் பின்பற்றிச் சென்ற மகா ஞானிகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் ஒளி சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களை முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வார்கள்.

அத்தகைய மகரிஷிகள் வெளிப்படுத்திய வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உயர்ந்த சக்திகள் அனைத்தும் நாம் சூரியனால் கவரப்பட்டு அந்த உணர்வலைகள் இன்றும் நமக்கு முன் காற்றிலே இருக்கின்றது.

சாதாரணமாக வாழும் மனிதர்கள் நாம் வெளிப்படுத்தும் விருப்பு வெறுப்பு உணர்வுகள் அதிகமானாலும் அதைக் காட்டிலும் வீரிய நிலைகளில் வந்தால் அது எல்லாம் அழிந்துவிடும்.

ஆனால் அந்த மகரிஷிகள் உடலிலிருந்து பெருக்கிய அந்த உணர்வுகள் அனைத்தும் அழியாத் தன்மைகள் பெற்றது.

உதாரணமாக விஞ்ஞான அறிவு கொண்டு நாடாக்களில் பதிவு செய்த படங்களை இயந்திரத்தின் மூலமாகவும் செயற்கைக் கோள் மூலமாகவும் ஒலி/ஒளி பரப்பு செய்கின்றார்கள்.

எந்த டி.வி. ஸ்டேஷனிலிருந்து ஒலி/ஒளிபரப்பு செய்யப்படுகின்றதோ அதே ஸ்டேஷனை வீட்டிலுள்ள டி.வி. யில் பட்டனை அழுத்தித் திருப்பி வைக்கப்படும் போது காற்றிலே மறைந்துள்ள அந்த அலைகளைக் கவர்ந்து நாம் அறியும் வண்ணம் செய்கின்றது.

அதே போல பிறவா நிலைகள் பெற்ற அந்த மகரிஷிகளின் உணர்வலைகளை நாம் கவர வேண்டும் என்றால்
1.அவர்களை ஒத்த சம நிலைகள் கொண்டு
2.அதாவது அவர்களின் உணர்வின் எண்ணங்கள் கொண்டு எடுத்தால் தான் கவர முடியும்.

அப்படி இல்லையென்றால் நம்முடைய எண்ணம் அதன் அருகிலே செல்லாது. மகரிஷிகளின் ஆக்கமான சக்தி நம் எண்ண அலைகளைத் ஒதுக்கித் தள்ளி அதனுடைய ஆற்றலாகப் பெருக்கும். நம்முடைய நினைவலைகளால் மகரிஷிகளின் உணர்வுகளை ஈர்க்கும் நிலை இல்லாது போய்விடும்.

அந்த மகரிஷிகளின் பேராற்றல்களை ஈர்க்கும் நிலை பெறச் செய்வதற்கே உங்களுக்கு உபதேச வாயிலாக ஞானிகளின் உணர்வுகளைப் பதியச் செய்கின்றோம்.

ஞானிகளைப் பற்றிய பதிவுகள் உங்களுக்குள் அதிகமாக அதிகமாக அவர்களை ஒத்த உணர்வின் எண்ணங்கள் உடலுக்குள் வளர்ச்சியாகி அதை எளிதில் கவர முடியும்.

கட்டிடத்தை ஆறப் போட்டுக் கட்டுவது போல்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைச் சிறுகச் சிறுக ஏற்றி உங்களை மிகவும் வலுக் கொண்டவர்களாக ஆக்குகின்றோம்…!

Image

Energetic Meditation

கட்டிடத்தை ஆறப் போட்டுக் கட்டுவது போல்தான் மெய் ஞானிகளின் ஆற்றல்களைச் சிறுகச் சிறுக ஏற்றி உங்களை மிகவும் வலுக் கொண்டவர்களாக ஆக்குகின்றோம்…!

 

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகள் அனைத்துமே அந்த மெய் ஞானிகளின் ஞான வித்துக்களாக உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் ஒரு தரம் சொன்னாலும் அதைச் சொல்லிக் கொண்டே போகும் பொழுது அடுத்து நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அதனின் நினைவு வராது.

திரும்பச் சொல்லும் பொழுதுதான் இந்த உணர்வின் அலைகள் மீண்டும் உங்களுக்குள் பதிய ஏதுவாகும். பதிந்த பின் நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் உங்கள் நினைவுக்கு வர இது உதவியாக இருக்கும்.
1.இப்பொழுது தான் சொன்னார்…!
2.மீண்டும் அதையே திரும்பச் சொல்கிறார் என்று சொல்லி
3.யாம் சொல்வதை விட்டுவிட்டீர்கள்…! என்றால்
3.உங்களுக்குள் ஏற்கும் பக்குவம் குறைவாகி விடுகின்றது.
4.ஒரே நாளில் ஒரே தரம் உபதேசித்தால் (சொன்னால்) அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலை இல்லாது போய்விடும்.

மணல் செங்கல் சிமெண்ட் தண்ணீர் எல்லாவற்றையும் போட்டுத்தான் கட்டிடம் கட்டுகின்றோம். ஆனால் சீக்கிரம் கட்டிடத்தைக் கட்டி முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில்
1.ஒரே நாளில் செங்கலை ஏற்றிக் கட்டினால் என்ன ஆகும்…?
2.ஒரே அமுக்காக அமுக்கி எல்லாம் சரிந்துவிடும்.

அதைப் போலத்தான் மெய் ஞானிகள் பெற்ற பேராற்றல்களை உபதேச வாயிலாக உங்களைப் பெறச் செய்யும் பொழுது ஒரேயடியாகக் கொடுக்க முடியாது.

கட்டிடம் கட்டும் சமயம் ஒவ்வொரு இடத்திலும் அதை நிறுத்தி (ஈரம்) உணரும் வரையிலும் பொறுத்திருந்து தான் அடுத்தடுத்து கட்ட வேண்டும்.
1.கட்டிடம் எந்தப் பக்கம் சாய்ந்திருக்கின்றது..?
2.சரியாகக் கட்டியிருக்கின்றோமா..? என்று அதைச் சிந்தித்துப் பார்த்து
3.கட்டிடத்தை ஆறப் போட்டு அதற்குப் பின் மேற் கொண்டு கட்டுவதுதான் சாலச் சிறந்தது.

அதைப் போன்று துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் நிலையாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் வரும் பொழுது அந்தத் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் உணர்வின் ஆற்றலாக அதற்குத் தகுந்த மாதிரி ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன். அதைத்தான் “தொட்டுக் காட்டுதல்…!” என்பது.

சில பேர்…
1.நான் அங்கே அவரிடம் போனேன்… அவர் என் முதுகில் தட்டிக் காண்பித்தார்… பிறகு நெற்றியிலே தொட்டுக் காண்பித்தார்…
2.நீ நெற்றியிலே பார்… அங்கே தெரியும்…! என்றார்.
3.அதற்குப் பின் உச்சிக்குக் கொண்டு போ.. அது தெரியும்…! என்றார் என்பார்கள்.

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் திட்டியதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது ஆழமாக உங்களுக்குள் பதிந்து விடுகின்றது. பதிந்த அந்த நிலையை மீண்டும் எண்ணும் பொழுது அந்தக் கோபம் உங்களுக்கு அப்படியே வருகின்றது.

இதைப் போன்று தான் மெய் ஞானியின் அருளாற்றலை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டால் அது உங்களுக்குள் துன்பத்தைப் போக்கும் உணர்வுகளாக வரும். ஆகவே
1.உங்கள் உணர்வுக்குள் ஆழமாக…
2.உங்கள் உள்ளத்திற்குள் தொட்டு…
3.உங்கள் உள்ளத்தைத் தொடும் நிலைகளுக்கு உணர்வுகளை உந்தச் செய்து
4.மெய் ஞானிகளின் உணர்வைப் பதியச் செய்வது தான் “தொட்டுக் காட்டும் முறை…!” என்பது

நீங்கள் எப்பொழுதெல்லாம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ உடனடியாகக் காற்றிலே பரவியிருக்கக் கூடிய அந்தச் சக்திகளைச் சுவாசித்து உங்கள் வாழ்க்கையில் வரும் படபடப்பு பயம் வேதனை இதைப் போன்ற நிலைகளைக் குறைத்திட இது உதவும்.

இப்படிச் சிறுகச் சிறுக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் சேர்க்கும் அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சக்தி கூடும். அதனின் துணை கொண்டு எத்தகைய தீமைகளோ துன்பங்களோ சங்கடங்களோ உங்களுக்குள் வராதபடி தடுத்து என்றுமே ஏகாந்தமாக நீங்கள் மகிழ்ந்து வாழ முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

Image

practice makes perfect

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்தேன்… வரவில்லையே…! என்று எண்ணாமல் சீராக எடுக்கும் பயிற்சியை மேற் கொள்ளுங்கள்…! – மகரிஷிகளின் அருள் சக்தி பெறுவீர்கள்

 

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் ஏங்கி எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் அதை எடுத்தேன்…! வரவில்லை என்று யாரும் எண்ண வேண்டாம்.

ஒரு அழுக்குத் துணியைத் துவைக்கிறோம் என்றால் அழுக்கு முழுவதும் போகும் வரையிலும் அடுத்தடுத்து சோப்பைப் போட்டு நீக்குகின்றோம்.

ஒரு உலோகத்தை உருக்கி அதை ஒரு பொருளாக்க வேண்டும் என்ற நிலையில் (வார்ப்பு – MOULDING) செயல்படுத்தும்போது சரியாக வரவில்லை என்றால் மீண்டும் அதை உருக்கிச் சரியான பருவத்திற்குக் கொண்டு வருகின்றோம். இதைப்போல தான்
1.மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் திரும்பத் திரும்ப எடுத்து
2.ஆத்ம சுத்தி என்ற நிலையில் உள் செலுத்தி
3.மெய் ஞானிகளின் உணர்வைச் சீராக வளர்த்திடும் எண்ண
4.வலுவை நாம் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.

அதற்குத் தான் தியானமும் அதனின் துணை கொண்டு நீங்கள் எண்ணி ஏங்கும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்திகளைக் காற்றிலிருந்து எடுக்கப் பழக்குவதற்கே இந்த ஆத்ம சுத்தி.

தையற் கலையைக் கற்றுக் கொண்டவர்கள் நம்முடன் பேசிக் கொண்டே சீராகச் தைத்து விடுவார்கள். ஆனால் புதிதாகக் கற்றுக் கொள்ளச் செல்பவர்கள் சீராகக் கூர்ந்து கவனித்தாலும் அதை நேராகத் தைக்க முடியாது.

1.கூர்மையான உணர்வை மீண்டும் மீண்டும் அதற்குள் செலுத்தி
2.நம்முடைய உணர்வின் நிலைகளைச் சீராக வளர்த்துக் கொண்டால்
3.அந்த உணர்வில் நாம் வேலை செய்யும் எண்ணமே அது நம்மைச் சீராக அழைத்து செல்லும்.

உதாரணமாக கண் பார்வை இழந்தவர்கள் தன் உணர்வின் ஆற்றலால் சில பின்னல் வேலைகளைப் பின்னிப் பழகுகின்றனர். அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கமே சரியான அளவு கோலைப் பிடித்து அதைப் பின்னச் செய்கின்றது.

1.கண் தெரிந்து நாம் பின்னும் நிலையைக் காட்டிலும்
2.கண்ணற்றவர்கள் அதைப் பழகி அந்த உணர்வின் நிலைகள் கொண்டு அழகாகக் கலரையும் இணைக்கின்றனர்
3.தெளிவாக அந்தப் பின்னலையும் உருவாக்குகின்றனர்
4.கண்ணுள்ளவர்கள் கலரைப் பார்க்கின்றோம்… கண்ணற்றவன் தடவிப் பார்த்து அந்த உணர்வின் கலரைப் பார்க்கின்றனர்.

இதைப் போன்று தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளும் அந்த நிலை பெறுவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்று பழகிக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலில் எத்தகைய நோய் இருந்தாலும் அதை நீக்க உங்கள் எண்ணத்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து உங்கள் உயிருடன் இணைக்கச் செய்யும் போது அது ஜீவன் பெற்று உங்களுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.

வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குறையான உணர்வுகளோ பலவீனமான எண்ணங்களோ உங்களுக்குள் வந்தாலும்
1.அதை மனதில் ஏற்றுக் கொள்ளாது
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்தத் தீமை விளைவிக்கும் உணர்வுகளைத் தணித்து
4.மெய் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஓங்கி வளர்க்கச் செய்வதே ஆத்ம சுத்தி.
5.இதுதான் உண்மையான தியானம்…!