சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

curse-rays

சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

மற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…!” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.

1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது
2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக
3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…!” என்பார்கள்.

தெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்…? காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.

ஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது
1.என்ன…? உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்
2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…!” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.
4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.
5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.

தீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன…? என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.

அவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.

சில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…
1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.
3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.

அப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.

1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்
2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து
3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\ற்று
4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

Protecting scolding and curse

நம்மைக் கேலியாகக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தால் தடுக்க என்ன செய்ய வேண்டும்…? 

எமக்கு (ஞானகுரு) வேண்டியது என்ன…? உங்கள் சந்தோஷம் தான் எமக்குத் தேவை. அதை விட்டு விட்டு என்னைப் புகழ வேண்டும் என்று என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்கள் என்றால் எல்லாம் போய்விட்டது.

தொழில் செய்தேன். நல்லதாக இருந்தது. சந்தோஷமாக இருக்கின்றேன். அந்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்குச் சொன்னேன். அவர்களுக்கும் நல்லதாக ஆனது என்ற இந்தச் சந்தோஷத்தைத் தான் யாம் விரும்புகின்றோம்.

சாமி…! உங்களை அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்… இப்படிப் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்… ஒரு நான்கு ஐந்து பேர் உங்களைக் குறையாகப் பேசுகிறார்கள். அதில் ஒருவன் அயோக்கியத்தனம் செய்து கொண்டே இருக்கின்றான்… நீங்களும் பாருங்களேன்…! என்பார்கள்.

அதாவது என்னைப் போற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு எம்மைப் பற்றி (ஞானகுரு) “சுருக்…!” என்று யாராவது குறையாகச் சொன்னால் போதும்.

உடனே இவர்கள் சண்டைக்குப் போய்விடுவார்கள். அவர்கள் சொல்வதற்கு ஏற்ற மாதிரி இவர்கள் திருப்பிப் பேசுவார்கள். அடுத்து பார்த்தால் அங்கிருந்து நான்கு பதில் இங்கே வரும்.

ஏனென்றால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அவனைத் திருத்துவதற்கு அதை அடக்கத் தெரியாது. என்னை இங்கே போற்றும் பொழுது மற்றவர் குறை சொன்னால் உடனே ஆத்திரம் தான் வரும். “என்னய்யா சொன்னாய்…? இரு நான் உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…!” என்பார்.

என்னத்தை நீ பேத்துக்கிறாய்…? உங்கள் சாமி என்ன பெரிய ஆளா…? அவரால் என்ன செய்ய முடியும்…? என்று அவர் சொல்வார்.

கடைசியில் சாமி…! உங்களை இப்படியெல்லாம் அவர் திட்டியதால் என் மனது தாங்க முடியவில்லை. அதனால் நான் அவரை “உதைத்தேன்” என்று சொல்லிக் கொண்டு வருவார்கள்.

யாம் விரும்புவது அதுவல்ல…! தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனென்றால் மற்றவர்கள் அறியாமல் அதைப் பேசுகிறார்கள். அந்த உணர்வு இங்கே வந்து அறியாமலே நம்மை அவர்கள் வழிக்கு இட்டுச் சென்று விடக்கூடாது. அவர்கள் வழிக்கு நாம் போகக்கூடாது. (இது முக்கியம்)

யார் எத்தகைய குறைகளைச் சொன்னாலும் யாம் உபதேச வாயிலாகச் சொன்னபடி ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

மற்றவர்கள் சொல்லும் குறையான உணர்வு உங்களை ஆட்டிப் படைக்காத நிலைக்காக இதைச் செய்யுங்கள்.

ரொம்ப மோசமான ஆளாக இருந்தால் “அவன் செய்வது அவனுக்கே போகட்டும்…! நல்லது செய்யக்கூடிய எண்ணம் அவனுக்குள் வளர்ந்து நிச்சயம் நல்லதைப் பேசக் கூடிய நிலை உனககு வரும்…!” என்று சொல்லிவிடுங்கள்.

உங்களை யாராவது சதா திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்… இடக்காகப் பேசுகிறார்கள்… உங்களால் தாங்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். சுருக்கமாக ஒரு வேலையைச் செய்யுங்கள்.

அவர்கள் திட்டுவதை எல்லாம் கேட்டு கொண்டே இருங்கள். சிரித்துக் கொண்டே இருங்கள்.
1.எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
2.எனக்கு ஒன்றும் வேண்டாம். மொத்தமாக நீயே வைத்துக் கொள்.
3.எதை எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் நீங்களே வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.
4.அது தான் உங்களுக்கு ரொம்ப நல்லது. அதை நீங்களை வைத்துக் கொண்டு போங்கள்…! என்று சொல்லுங்கள்.

அத்தனையும் என்ன ஆகிப் போகும் தெரியுமா…? அவர்கள் உணர்வு அவர்களிடம் திருப்பினவுடனே எப்படி இருக்கும்…! உங்களுக்கு ஆத்திரம் வருமோ…? இந்த மருந்தை மட்டும் சுத்தமாக வைததுக் கொள்ளுங்கள்.

அதாவது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றால் அவர்கள் சொல்லை அவர்கள் பக்கமே திருப்பியவுடனே அவர்களைப் பார்த்தவுடனே எக்கச்சக்கமாக வரும்.

ஆனால் அவர்கள் நம்மை இப்படிச் சொல்லி விட்டார்களே என்று இந்த எண்ணத்திற்கு வந்தால் நம்மை அது விட்டு வாங்கு வாங்கு என்று வாங்கிவிடும். இரு நான் பார்க்கிறேன் உன்னைச் சும்மா விடமாட்டேன் என்ற ஆத்திரம் தான் வரும்.

ஏனென்றால் நமக்கு எதுவுமே சொந்தமில்லை. நமக்குச் சொந்தமாக்க வேண்டியது என்ன…?
1.இது வரையிலும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்காகச் பல நிலைகளைச் சொந்தமாக்கி
2.அதாவது தெரியாமலேயே அவைகளைச் சொந்தமாக்கி நாம் மனிதனாக வந்து விட்டோம்.
3.ஆனால் எல்லாவற்றையுமே தெரிந்து கொள்ள வந்த பிற்பாடு
4.எல்லாவற்றையும் தெரியாமல் ஆக்கிக் கொண்டு போவதற்கு என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்றால் என்ன ஆவது…?

கோபம் ஆத்திரம் வேதனை வெறுப்பு பயம் இதுகளெல்லாம் அதிகமாக நமக்குள் வந்து விட்டால் அந்த விஷம் பூராத்தையும் நம்மைத் தெரியாமலே ஆக்கிவிடுகின்றது.

ஆகவே இதைப் போன்ற நிலைகள் உங்களுக்குள் வராதபடிக் கொஞ்சம் கொஞ்சமாக ஆத்ம சுத்தியைப் பயிற்சி செய்து கொள்ளுங்கள்.
1.நீங்களும் உயர்ந்த நிலைகள் பெறுவீர்கள்.
2.உங்கள் சொல் பார்வை மற்றவரையும் உயர்த்தச் செய்யும்.

அதற்குத்தான் இதைச் சொல்கிறோம்.

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

curse-quarrel

நாம் பார்ப்பதோ வேடிக்கை…! ஆனால் சாப அலைகள் நமக்குள் வந்து என்னென்ன வேலைகள் செய்கிறது… என்று தெரிந்து கொள்ளுங்கள்…!

காலையில் எழுந்து நல்ல காரியங்களைச் செய்திருப்பினும் நாம் ரோட்டில் போகும் பொழுது சந்தர்ப்பம் ஒருவன் சாபமிடுவதைப் பார்க்க நேருகின்றது.

ஒருவன் இன்னொருவரை ஏசிப் பேசுகின்றான். உன் குடும்பம் நாசமாகப் போகும்… உன் வியாபாரம் எல்லாம் நஷ்டமாகும்…! என்று சாபமிடுகின்றான். அவன் பேசிய உணர்வலைகள் அனைத்தையும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாக மாற்றிப் படரச் செய்கின்றது.

ஏசுவோனுடைய பேச்சைக் கேட்டதும் அடுத்தவனும் எதிர் பதிலைக் கொடுப்பான். ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் பொழுது அதற்கு ஈடாக அடுத்தவர் பேசும் பொழுது அதனின் வலு அங்கே பெறுகின்றது.

ஆனால் சாதாரணமாக நாம் வேடிக்கை பார்த்தாலும்
1.அப்பொழுது அந்த இரண்டு பேர் ஏசுவதையும் சாபமிடுவதையும் நாம் நுகர்ந்து கொள்கின்றோம்
2.அது கடும் தீமைகளை விளைய வைக்கும் சாப அலைகளாக நமக்குள் படர்ந்து விடுகின்றது.
3.நம்மை அறியாமலே இந்தச் சாப அலைகள் நமக்குள் வந்த பின்
4.அவர்கள் சாபமிட்ட உணர்வலைகள் நம் ஆன்மாவில் (நம்மைத்) தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
5.சாபமிட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் விளையத் தொடங்கும்.

விளைந்த பின் அவர்கள் எப்படிச் சாபமிட்டார்களோ அதைப் போன்று ஒரு சிறு குறையைக் கண்டாலும்… “தொலைந்து போகிறவனே…! ஏண்டா… இப்படிச் செய்து கொண்டிருக்கின்றாய்…?” என்று தான் சொல்ல வேண்டி வரும்.

சாபமிடும் உணர்வுகள் நமக்குள்ளும் வளரத் தொடங்கி நல்ல குணங்கள் நமக்குள் சீர் கெடும் நிலைகள் ஆகி அது தொலைந்து போகும் நிலைக்கே வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் நமக்குள் அழுக்காகச் சேர்கின்றது.

சாதாரண மனிதன் கேட்கும் பொழுதே இப்படி என்றால் கர்ப்பிணிப் பெண்கள் இத்தகைய சாபமிடும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் அந்தக் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குள் அந்த உணர்வின் தன்மை ஆழமாகப் பதிந்து விடுகின்றது.

விஞ்ஞான ரீதியாக ஒரு செடியின் வித்துக்குள் மற்ற தாவர இனச் சத்தை இணைத்து இரண்டறச் சேர்த்து வீரிய வித்தாக உருவாக்குகின்றார்கள். அது போல கருவுற்றிருக்கும் தாய் எதை உற்று நோக்குகின்றதோ அது கருவுக்குள் இணைந்து உருவாகத் தொடங்கி விடுகின்றது.

யாம் ஞானிகளைப் பற்றி உபதேசிக்கின்றோம். அந்த உயர்ந்த ஞானியின் சொல்லை ஒரு கர்ப்பிணி உற்றுக் கேட்டால் அந்தத் தத்துவத்தின் உணர்வுகள் கருவிற்குள் விளையும் பருவம் பெறுகின்றது. பின் அந்தக் குழந்தை பிறந்த பின் தத்துவ ஞானியாகவே வளரத் தொடங்கி விடுகின்றான்.

ஆனால் அதே சமயத்தில் வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் மற்றவர்கள் சாபமிடும் உணர்வுகளைத் கர்ப்பிணித் தாய் உற்றுப் பார்த்தால் தாய்க்கு ஊழ்வினையாகச் சேர்கின்றது. கருவிலிருக்கும் குழந்தைக்கோ பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

கண் தெரியாது குருடாக கை கால் முடமாகிவிடும் என்று ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் அவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகளைக் கர்ப்பமாக இருக்கும் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்ததென்றால் அந்தக் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவாகி விடுகின்றது.

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு ஒலி நாடாவில் பதிவு செய்கின்றார்கள். அதைக் கம்ப்யூட்டரில் இணைத்துக் கொண்ட பின் எலெக்ட்ரானிக் முறையில் மற்ற இயந்திரங்களை இயக்கத் தொடங்கி விடுகின்றார்கள்.

எதை ஆணையிடுகின்றானோ அந்த உணர்வின் தன்மைகள் அந்த ஒலிப் பேழைக்குள் (CHIP) கொண்டு அதனதன் தருணத்தில் அந்த இயந்திரங்களை ஓட்டுகின்றது.

இதைப் போன்று தான் மனிதன் தனக்குள் விளைய வைத்த உணர்வின் சத்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இந்தச் சொல்லின் உணர்வுகள் அங்கே பதிந்துவிடுகின்றது.

கடுமையாகச் சொல்லும் உணர்வுகளைக் கேட்கும் பொழுது நம்மைக் கோப நிலைகளுக்கு ஆளாக்கி நல்ல குணங்களுக்கு எதிர்மறையாக நாம் இயங்கத் தொடங்குகின்றோம்.

இதைப் போல சாபமிடும் பொழுது உன் கை கால்கள் முடமாகிவிடும் என்று சொன்னால் “நீயும் அதுவாகத்தான் ஆகின்றாய்…! என்று அதே உணர்வின் தன்மையை நாமும் திருப்பிப் பேசுகின்றோம்.

இப்படி எதிர்மறையாகப் பேசும் பொழுது சிறுகச் சிறுக விளைந்து இது கொடூர நிலைகளாக வாத நோய்களாகக விளையும்.

அதே சமயம் இப்படிப்பட்ட சாப உணர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பதிவானால்
1.குழந்தையாகக் கருவுற்றுக் கண்களும் உடலும் உருவாகும் பொழுது
2.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உறுப்புகளை மாற்றியமைத்து விடுகின்றது.
3.கண்கள் குருடாகவும் முடமான குழந்தையாகவும் அது விளைந்து விடுகின்றது.

ஆனால் குழந்தை தவறு செய்யவில்லை. தாயும் தவறு செய்யவில்லை. உலகில் இயக்கும் உணர்வுகளை உற்றுப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் சத்து உடலுக்குள் பதிவாகி விடுகின்றது.

இதைப் போல கருவிலே இருக்கப்படும் பொழுது கடுமையான நோயுற்றவரை அந்தத் தாய் உற்றுப் பார்க்குமே என்றால் அது தாய்க்கு வினையாகச் சேர்கின்றது. ஆனால்
1.கருவிலே இருக்கும் குழந்தைக்கு இது பதிவாகி
2.எந்த வயதில் நோயுற்ற நிலைகளை இங்கே உற்றுப் பார்த்ததோ
3.அதே வயதின் பருவம் குழந்தைக்கு வரும்போது அதே நோய் வந்துவிடும்.
4.குழந்தை எந்தத் தவறும் செய்யவில்லை.

ஆக இவை எல்லாம் மனிதனாக வாழும் நாம் மனிதனான பின் வந்து சேர்ந்ததுமல்ல. ஆனால் கருவிலே விளையும் பொழுது சேர்ந்த உணர்வுகள் அதன் தொடர் வரிசையிலே பூர்வ புண்ணியத்தில் அமைந்தது தான் இந்த வாழ்க்கையில் அழைத்துச் செல்லும்.

பூர்வ புண்ணியமாக அமைந்ததை அது நாம் நுகரும் அனைத்துமே வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக உருவாக்கி இந்த உணர்வின் செயலாக உருவாக்குகிறது என்பதனை மகரிஷிகளால் விநாயகர் தத்துவத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

நல்ல மனிதனாகவும் பண்பு கொண்ட மனிதனாகவும் நாம் இருப்பினும் இந்த நிலைகள் தொடர் வரிசையிலே தான் நம்மை இயக்குகிறது.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களில் தீமைகளிலிருந்து மீட்டிடும் உணர்வைச் சேர்த்துச் சேர்த்துத் தீமையை அகற்றிடும் சக்தியாக மனிதனாக வந்தாலும் நம் வாழ்க்கையின் சந்தர்ப்ப பேதத்தால் மற்ற தீமைகளைக் கேட்டுணர்ந்து பார்த்துணர்ந்த பின் இந்த உணர்வுகளே நமக்குள் அதிகமாக விளைந்து விடுகின்றது.

ஆக நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் தீமைகளைத்தான் பார்க்க முடிகின்றது. நாம் உற்றுப் பார்த்த உணர்வுகள் வினையாகச் சேர்கின்றது. நம் உடலிலே அழுக்குகள் சேர்ந்து கொண்டே வருகின்றது.

இதிலிருந்து எவ்வாறு மீள்வது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…!

Image

hold the truth

வாபஸ் நீ வாங்கிக்கோ…! என் உடலிலிருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்…! – விளக்கம்

திடீரென்று யாராவது உங்களைக் கோபித்தால் உங்கள் உடலில் என்ன செய்கின்றது…? ஜிலு…ஜிலு…ஜிலு…! என்று கோபம் அப்படியே “சுர்ர்ர்….ர்ர்…!” என்று ஏறும். ஏறுகிறதா இல்லையா…?

சண்டை போடுபவர்களையும் திட்டுபவர்களையும் பார்த்தவுடனே “சுர்ர்…ர்ர்..” என்று ஏறி உடலெல்லாம் நடுக்கமாகின்றது பதட்டம் வருகின்றது…!

உங்கள் பையன் அந்தப் பக்கம் போய்க் கொண்டிருந்தான். அவனை இரண்டு பேர் சேர்ந்து உதைத்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டவுடனே “ஆ…! அப்படியா…? என்று சொல்லி உடம்பெல்லாம் கிடு…கிடு… என்று ஆடுகிறதல்லவா…!

அதைப் போல நீங்கள் துன்பம் என்று எம்மிடம் (ஞானகுரு) சொல்லும் பொழுது
1.மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் என்று
2.என்னுடைய கூர்மையான எண்ணங்கள் கொண்டு உங்களை ஆசீர்வதித்து
3.அதை உங்களைச் சுவாசிக்க வைக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் மகரிஷிகள் அருள் சக்தி போனவுடனே கெட்டதெல்லாம் மாறி அந்த நரம்புகளுக்குள் இருக்கும் சிக்கல் உடலில் இருக்கும் பிடித்தங்கள் எல்லாமே விட்டு விலகுகின்றது.

அப்படி விலகும் பொழுது சில பேர் “ஐய்யய்யோ…!” எனக்கு ஏதும் அருள் வந்து விட்டதோ…! பேய் பிடித்துவிட்டதோ…! என்று இப்படி நினைப்பவர்கள் சில பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் பாய்ந்த பின் உடலிலிருக்கும் விஷமான தன்மை அது அடங்கிப் போகும்.
1.அப்பொழுது அந்த உணர்வின் தன்மையாகும் பொழுது
2.”நடுங்குவது போல” உங்கள் உணர்வுக்குள் இருக்கக்கூடிய வலி குறைந்து அது இறங்கும்.
(தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் உடலுக்குள் அந்த நடுக்கத்தை உணரலாம்)

அது எப்படி இறங்குகிறது..? இறங்குகிறதா இல்லையா..? என்று யாம் அவர்களிடம் கேட்டோம் என்றால் தொட்டுப் பார்ப்பார்கள்… இறங்குகிறது…. வலி இல்லை…! என்று சொல்வதற்கு மிகவும் திகைப்பாக இருக்கும்.

1.உங்கள் துன்பங்கள் அனைத்தும் அகலும்…!
2.தீமைகள் நீங்கி எல்லாம் சரியாகப் போகும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று தான்
4.யாம் சொல்லி வாக்காகக் (சக்தியை) கொடுக்கின்றோம்

நீங்கள் சொல்கிறீர்கள்… என்னை விட்டு இந்தத் துன்பம் எங்கெங்கே போகின்றது…! நான் நன்றாகத் தூங்கி ஒரு மாதமாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

உங்கள் வலியும் வேதனையும் போய்விடும் என்று உள்ளுக்குள் சொல்லி அந்தச் சக்தியை யாம் அவர்களுக்குள் பாய்ச்சிய பிற்பாடு
1.வாபஸ் நீ வாங்கிக்கோ…!
2.என் உடலில் இருந்து வேதனை மட்டும் போகாதே…! என்று சொல்லி அதை இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றார்கள்.
3.திருப்பி அதையே சொல்கிறார்கள்.

அவர்கள் தான் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் கூட வந்தவர்கள் சும்மாவா இருக்கின்றார்கள்…? உங்கள் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்று யாம் சொன்னால் கேட்கிறார்களா…?

அப்படி இல்லைங்க…! இது… மூன்று மாதமாக விடாத “பெரிய சனியன்…! பெரிய தொல்லையாக இருக்கிறது…!” என்கிறார்கள்.

அதனால் தான் உங்களுக்குப் பல முறை சொல்கிறேன். மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன். உங்களை அறியாது வந்த துன்பங்கள் அனைத்தும் போக வேண்டும் என்று தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உபதேசித்த உணர்வுகளை நீங்கள் அப்படியே பதிவாக்கி ஏற்றுக் கொண்டால் இது குருவாக நின்று உங்களைக் காக்கும்…!

குரு வாக்கு என்பது சாதாரணமானதல்ல…!

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (TENSION) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

tension-stress-relief

அடிக்கடி உணர்ச்சி வசப்படுகின்றோம்… (“TENSION”) – அதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்…?

என் பிள்ளையை எப்படியெல்லாம் வளர்த்தேன்…. எல்லாம் நல்லது செய்தேன்….! “தொலைந்து போகின்றவன்… இப்படியெல்லாம் செய்கின்றானே…! என்று நாம் திட்டுகின்றோம்.

அப்போது இந்தப் பக்குவம் கெடப்படும் போது நாமும் பக்குவம் கெட்டுவிடுகின்றோம். அவனையும் பக்குவ நிலையிலிருந்து கெட வைத்து விடுகின்றோம்.

வியாபாரம் செய்கின்றோம். ஒருவர் ஒரு தடவை கேட்டவுடனேயே கடனைக் கொடுத்து விடுகின்றோம். ஆனால் சந்தர்ப்பம் கடன் கொடுத்தவரால் திரும்பக் கொடுக்க முடியாமல் போய்விடுகின்றது.

கடன் கொடுத்தவனால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்று சொன்னால் நமக்குள் என்ன ஆகின்றது…? “நான் கொடுத்தேன்… என்னை ஏமாற்றி விட்டான்…!” என்றால் இந்தப் பக்குவம் கெட்டுப் போய்விடுகின்றது.

கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்… கொடுத்தேன் ஏமாற்றி விட்டான்…! என்று இப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் போது நம் நல்ல குணங்கள் எல்லாம் மாறுகின்றது. பக்குவ நிலைகள் கெடுகின்றது.

1.நான் இதைச் செய்தேன்.., அதைச் செய்தேன்…! என்று சொல்கின்றோம்
2.அந்தப் பாட்டைப் பாடுகின்றோம்
3.ஆனால் (நல்ல) பக்குவத்தைக் கெடுத்து விடுகின்றோம்.
4பல நினைவுக்குச் சென்றுவிடுகின்றோம்

தோசையைச் சுட வேண்டும் என்றால் மாவை எல்லாம் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வைத்து விடுகின்றோம். ஆனால் தீயை நிறைய எரிய விட்டுத் தோசையை ஊற்றினால் என்ன செய்யும்…? கருகிப் போய்விடும்.

குழிப் பணியாரம் சுடும் போது நெருப்பை அதிகமாக வைத்துவிட்டு மாவை ஊற்றினால் என்ன செய்யும்…? கீழே அடியில் பிடித்துவிடும். கருகிவிட்டால் சுவை இருக்காது.

ஆகவே அது அதற்கு என்ன பக்குவம் செய்ய வேண்டுமோ அந்த நிலை இல்லையென்றால் ருசி கெட்டுப் போய்விடுகின்றது.

அதைப் போன்று தான் கோபம் ஆத்திரம் வேதனை என்ற உணர்ச்சிகள் நமக்குள் அதிகமான பின் நம் பக்குவம் தவறிப் போய்விடுகின்றது. நம் சொல்லும் நயம் கெடுகின்றது.

1.பக்குவம் தவறுவதால் கார உணர்ச்சிகள் நம் உடலுக்குள் வந்து
2.நம் உடலிலுள்ள உறுப்புகளில் அதே கார உணர்ச்சியைத் தூண்டும் இரத்தமாக மாறுகின்றது.
3.இரத்தத்தில் கார உணர்ச்சிகள் வந்தவுடனே எல்லா அணுக்களும் கெடும். பக்குவம் தவறிப் போகும்.

எல்லோருக்கும் நல்லதைச் செய்கின்றோம்… பின்னாடி நான் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கின்றோம்.

செய்த பிற்பாடு நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் பக்குவம் கெட்டுத்
1.திட்ட ஆரம்பித்து விடுகின்றோம்.
2.அல்லது குறை கூற ஆரம்பித்து விடுகின்றோம்
3.இந்தக் குறையைத்தான் வளர்க்கின்றோம்.

அதே சமயத்தில் நோயாளியைக் காப்பாற்ற எண்ணுகின்றோம். அந்த நோயின் தன்மையோ வேகம் அதிகமாக இருக்கின்றது.

அதைக் கேட்டுக் கொண்ட பின் தவறிப் போய் பாசத்தால் “உனக்கு இப்படி ஆகிவிட்டதே…!” என்று நமக்குள் அவரின் நோயின் உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் அந்தப் பக்குவம் தவறிவிடுகின்றது. அதே நோய் நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மற்றவரைக் காப்பாற்ற வேண்டும், அப்படியே நம்மையும் காப்பாற்ற வேண்டும். அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் இரத்த நாளங்களில் படர வேண்டும். எங்கள் உடலிலே உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று பக்குவப்படுத்தி அந்த வலுவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் நோயாளியின் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்து அவர் நோயிலிருந்து நீங்கி நன்றாக வேண்டும் என்று அந்த நல்ல வாக்கினை அவரிடம் பதிவு செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவரால் முடியவில்லை. அப்பொழுது நமக்குள் அருள் உணர்வுகளை விளைய வைக்கின்றோம், சொல்லை உணர்வாக்குகின்றோம். அருள் ஒளியாகப் பாய்ச்சுகின்றோம். அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றோம். நோயாளி அதைப் பெறுகின்றார்.

உதாரணமாக நம்முடைய நண்பன் சந்தர்ப்பத்தால் வேதனைப்படுகின்றான். என் பையன் இந்த மாதிரிச் செய்து விட்டான். அந்த மாதிரிச் செய்து விட்டான் என்று சொல்லும் போது அந்தச் சந்தர்ப்பம் நண்பருக்குள் வேதனை உருவாகின்றது.

ஆனால் அந்த நண்பனை நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் நமக்கு என்ன செய்கின்றது..? அவர் வேதனையைக் கேட்டவுடனே அதே சந்தர்ப்பம் நமக்குள்ளும் வேதனையை உருவாக்குகின்றது.

நாம் சந்திக்கும் சந்தர்ப்பத்தில் தான் இவ்வாறெல்லாம் நடக்கின்றது. பல பல நன்மைகளை நாம் செய்தாலும் பரிபக்குவ நிலையை நாம் பெறத் தவறினால் இந்த வாழ்க்கையில் தேய் பிறையாகி மீண்டும் கீழே தான் போவோம்.

சர்க்கஸில் வேலை செய்பவர்கள் பல விதமான விளையாட்டுகளைச் செய்வார்கள். பார் (BAR) விளையாட்டில் இத்தனாவது நூலில் வருகின்றார்கள் என்று தெரிந்து அதைத் தாவிப் பிடித்துவிடுகின்றார்கள்.

தன்னுடைய வேகத்தில் என்ன செய்கிறார்கள்..? நிற்பவர்களையும் அந்தச் சமப்படுத்தும் நிலை கொண்டு (BALANCE செய்து) தூக்கி மேலே கொண்டு போய்விடுகின்றார்கள்.
1.அதிலே சிறிது பக்குவம் தவறி விட்டால் கீழே தள்ளி விட்டு விடும்.
2.சர்க்கஸில் விளையாடுகின்ற மாதிரிதான் நம்முடைய வாழ்க்கை.

எதனுடைய உணர்வை எடுத்தாலும் இந்தப் பக்குவம் தவறினால் நம் நல்ல குணங்கள் வீழ்ந்து போகும். வீழ்ந்த பிற்பாடு நாம் நல்லது செய்வது என்பது முடியாது போய் விடுகின்றது.

அடுத்து நல்ல செயலை வளர்க்க முடிவதில்லை. எல்லாம் நல்லது செய்தேனே… எனக்கு இப்படியெல்லாம் வந்து விட்டதே…! என்று இப்படித்தான் சொல்கின்றோம்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் பிறர்படும் துயரங்களையோ அல்லது பிறர் செய்யும் தவறுகளையோ பார்த்தால் “ஈஸ்வரா…!” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அந்த வேகத்தைத் தணித்து விடுகின்றோம். நல்ல சிந்தனை வருகின்றது.

1.கோபமோ வேதனையோ எதனால் நமக்கு வருகின்றது என்று சிந்தித்து
2.அதைத் தடுத்து நிறுத்தியவுடனே
3.நல்ல உணர்வுகள் நமக்குள் வருகின்றது.
4.சாந்தம் வருகிறது, விவேகம் வருகின்றது. அது நல்லதாகின்றது.

ஆக கோபப்படுவோரின் உணர்வுகளையும் வேதனைப்படுவோரின் உணர்வுகளையும் நமக்குள் சேராது விவேகத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் மாற்றும் சக்தியாக வருகின்றது. அப்பொழுது மற்றவர்கள் கஷ்டம் நமக்குள் வராது.

அதற்காகத்தான் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரி பக்குவ நிலை பெற எனக்கு அருள்வாய் ஈஸ்வரா…!” என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டும்படிச் சொல்கிறோம்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் நம் மனதில் எப்பொழுதும் அமைதியும் சாந்தமும் குடிகொள்ளும்…!

துன்பத்தைப் போக்கும் முறை

Image

மகரிஷிகளின் அருள் ஒளி

துன்பத்தைப் போக்கும் முறை

ஒரு தேள் கொட்டினால் நாம் என்ன செய்வோம்…! நினைவை இழந்து விடுவோம். அப்பொழுது யார் எதைச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறோம்.

அதைப் போல ஒருவர் “சுருக்…”கென்று சொல்லி விட்டால் அந்த உணர்ச்சிகள் தூண்டி நம்மை வேதனைப்படச் செய்கின்றது.
1.அந்த வேதனையான உணர்வுகளுடன் நாம் இருக்கும் போது
2.மற்றவர்கள் என்னதான் நல்லதைச் சொன்னாலும்
3.அந்த நல்ல சொல்லை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதைப் போல சாதாரணமான மனிதர்களுடன் நாம் பேசும் போது வாழ்க்கையின் முறைகளில் விருப்பு வெறுப்பு நமக்குள் தோன்றி அதனாலே நாம் எண்ணிய எண்ணங்களுக்குத் தகுந்த மாதிரி உமிழ் நீராகி நம் இரத்தத்தில் (கருவாகி) வித்தாக மாறி உடலில் வியாதியாக மாறுகிறது.

நாம் ஒரு தடவை சஞ்சலப்படுகிறோம் என்று சொன்னால் அந்தச் சஞ்சலப்படும் எண்ணங்கள் நமக்குள் பதிவாகி இப்படிப் பலவும் சேர்த்து வந்துவிடுகின்றது.

குழம்பை ருசியாகச் செய்ய வேண்டுமென்றால் காரம் புளிப்பு இனிப்பு துவர்ப்பு இவைகளை எல்லாம் கலந்துதான் வைக்கிறோம். அப்பொழுது எல்லாம் சமமாக இருந்தால் குழம்பு ருசியாக இருக்கின்றது.

காரமோ மிளகோ சீரகமோ உப்போ கசப்போ நாம் சேர்க்கும் பொருள்களில் எது அதிகமானாலும் அது தான் முன்னணியில் நிற்கும். அப்பொழுது அது சுவையைக் கெடுத்து விடுகிறது.

வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் பயம் வேதனை இதைப் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கும் போது அதிலே நீங்கள் நினைவைச் செலுத்தியவுடன் வேதனையான எண்ணங்கள் வந்துவிடுகின்றது.

குடும்பத்தில் கஷ்டப்படுகிறோம் என்றால் அந்தக் கஷ்டமான எண்ணத்தை எண்ணி எம்முடைய உபதேசங்களைப் படிக்க நினைத்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள் நீங்கள் எண்ணியவுடன் உங்கள் உடலைச் சுற்றி அந்த வாசனை இருக்கும்.

உங்கள் கஷ்டத்தைப் போக்குவதற்கு யாம் அந்த நல்ல வாக்குகளை அந்தச் சக்தியை உங்களைக் கேட்கச் செய்து அந்த உணர்ச்சிகளை உங்கள் உடலிலே படரச் செய்து அந்த ஞானிகளின் சக்தி உங்கள் உடலுக்குள்ளும் உமிழ் நீராகச் சேர்க்கச் செய்வதற்கு யாம் முயற்சி எடுக்கின்றோம்.

அப்படி எடுத்தாலும் கூட நீங்கள் வேதனையாக இருக்கக்கூடிய எண்ணம் யாம் சொல்லக்கூடிய வாக்கை உங்களால் ஈர்க்க முடிவதில்லை.

நீங்கள் நல்லதைப் பெற வேண்டும் என்று வந்தாலும் கூட முடிவதில்லை. சிலபேர் அந்த வேதனை கலந்து இப்படியெல்லாம் இருக்கிறதே என்று வேதனையைத்தான் முன்னாடி கொண்டு வருகிறார்கள்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
2.இனி நமக்குக் கஷ்டமில்லை.
3.என் துன்பத்தைப் போக்கி நான் நன்றாக இருப்பேன் என்ற நினைவுடன் நீங்கள் இருந்தீர்களானால்
யாம் கொடுக்கக்கூடிய வாக்கு உங்கள் உடலிலே நல்ல முறையில் பதிவாகி உங்கள் துன்பத்தைப் போக்க உதவும்.

இது பழக்கத்திற்கு வர வேண்டும். பெரும் பகுதியானவர்கள் அவர்கள் கஷ்ட நஷ்டங்களைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.
1.இதையெல்லாம் செய்தேன் இந்த மாதிரி நஷ்டமாகிவிட்டது
2.நான் எதைச் செய்தாலும் எனக்கு நஷ்டமாகவே ஆகிக் கொண்டிருக்கிறது.
3.எங்கே பார்த்தாலும் தொல்லை தீரவே மாட்டேன் என்கிறது என்று
4.இந்த முடிவிலேயே நின்று கொண்டு
5.அதையே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.

அந்த மாதிரிச் சொல்லாதபடி கஷ்ட நஷ்டங்கள் எது வந்தாலும் அதை நீங்கள் அனுபவித்து வந்தாலும் கூட இங்கே வந்தவுடன்…
1.இந்த மாதிரி ஆகிவிட்டது…!
2.இனிமேல் இதிலிருந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளாலே மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் செயல் எல்லோருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
4.எங்கள் உடலில் இருக்கக்கூடிய பிணி நீங்க வேண்டும்.
5.நாங்கள் வியாபாரம் செய்யும் போது என்னிடம் சரக்கு வாங்கிச் செல்பவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
6.அவர்கள் அனைவரும் வளமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த முறைப்படி செய்தால் உங்கள் துன்பங்கள் அகலும் என்று உறுதியாகச் சொல்கிறோம்…!

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

spiritual-bodies

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

எனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் செய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.

1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு
2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது
3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.
4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.

நம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு
1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது
3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

அந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.

அதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்
2.பொறுப்பற்ற உணர்வுகள் கலந்து
3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.
4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்று எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.

அந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க
1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.
2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…?

Mother and child care

குழந்தைகள் “மாறு கண்ணுடன்” பிறப்பது… பிறந்த பின் வீட்டிலே “சண்டையும் சச்சரவும்” வருவது… தொழிலில் “மந்தம்” ஏற்படுவது… இதற்கெல்லாம் காரணம் என்ன…? 

ரோட்டிலே இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள். ஒருவருக்கொருவர் சாபமிட்டுக் கடுமையாகப் பேசுகின்றார்கள்.

இந்த மாதிரிச் சாபவிடுவதைக் கர்ப்பமான தாய் மூன்று மாதத்திற்குள்ளே பார்த்து விட்டார்கள் என்றால் பார்த்த உணர்வுகள் கருவிலே ஆழமாகப் பதிந்து விடும்.

மூன்று மாதங்களுக்கு மேலே போனால் உருவமாகிவிடும்.

ஆனால் கருவுற்றது உரு பெறும் நிலைகளாக இந்த மூன்று மாதங்களுக்குள் இது பதிவு செய்து கொள்ளும்.

இந்த மூன்று மாதத்திற்குள் எதையெல்லாம் அந்தத் தாய் கூர்மையாகப் பதிவாக்குகின்றதோ அது குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிடும்.

இன்று புதிதாக ஒரு செடியை எப்படி உருவாக்குகின்றார்கள்?

1.ஒரு செடியின் வித்துக்களை வைத்து முளை வரும் போது
2.மற்ற செடியோட இரண்டறச் சேர்த்து இழுக்க வைத்து
3.ஒரு புதிய செடியாக – இரண்டு செடியின் சத்தும் சேர்ந்ததாக உருவாக்குகின்றார்கள்.

இதே மாதிரி ஒருவன் சாபமிடுகின்றான் என்றால் போதும்.

அந்தச் சாப வினைகள் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு என்ன செய்கின்றது என்று சொன்னால்
1.தாய் கண்ணுற்றுப் பார்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை நுகருகின்றது.

சாபமிடுபவர்களைப் பார்த்து “இப்படிப் பேசுகின்றார்களே…! என்று அந்தத் தாய் தனக்குத் தெரிந்த நியாயத்திற்குப் பேசுகிறது. ஆனால் நல்ல குணங்களுக்கு இது எதிர் மாறானது.

அப்போது அதைப் பார்த்தவுடனே தாய் என்ன செய்கிறது?

இப்படிப் பேசுகிறதே என்று ஏங்குகின்றது. இந்த உணர்வின் தன்மை கேட்கும் பொழுது “ஸ்..ஸ்ஸ்…, அப்பா…! என்று களைப்பு வருகிறது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கப்படும்போது அந்த ஆரம்பக் காலங்களில் உமட்டலாக அந்தச் சோர்வான நிலைகள் இருக்கும். அப்போது இதைத் தாங்காதபடி… “அப்பா…!” என்று எண்ணும்போது
1.இந்தச் சாபமிட்ட உணர்வுகள் நேராகக் குழந்தைக்குள் இணைந்து
2.நல்ல உணர்வைக் கொன்று
3.இந்த வித்தாக அது இணைத்து விடும்.

உனக்கு கண் தெரியாது… உன் கால் முடமாகும்… உன் குடும்பம் நாசமாகப் போகும்…! என்று சொல்லிச் சாபமிடுவார்கள்.

இதைக் கேட்டவுடனே இந்த உணர்வு அதில் விளைந்த வித்து இந்தக் குழந்தையுடன் இணைந்து விடுகின்றது.

குழந்தையுடன் விளைந்த பிற்பாடு என்னவாகின்றது?

குழந்தை பிறக்கப் போகும் போது இவர்கள் தன்னை அறியாமலே  உலகம் கெட்டுப் போய்விட்டது….! அங்கே இப்படிப் போய்விட்டது…! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

சாபமிட்டவர்கள் “உனக்குக் கண் தெரியாது…!” என்று ஒரு நான்கு தரம் பேசியிருந்தால் அந்தத் தாய் அதை நுகர்ந்திருந்தால் கருவில் உருவாகிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையின்
1.கருவிழிக்கு வரும் நல்ல உணர்வின் தன்மையை இது தடுக்கும்.
2.குழந்தை பிறந்த பின்னாடி பார்த்தோம் என்றால் குழந்தைக்கு “மாறு கண்ணாக…” இருக்கும்.

சாபமிட்டவர்கள் “உன் குடும்பம் தொலைந்து போகும்…!” என்று பேசியிருந்தார்கள் என்றால் கருவில் பதிவாகி அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து “இப்படி ஆகிப் போய்விட்டதே… இப்படி ஆகிப் போய்விட்டதே…” என்று நினைத்தார்கள் என்றால்
1.இந்தச் சோர்வின் தன்மையால் தொழில் கெடும்
2.சோர்வடையும் போது வீட்டில் சண்டை வரும்.
3.சம்பாதித்து வைத்த காசு இது தன்னாலே ஓடும்.
4.சாபத்தை – சும்மா வேடிக்கையாகப் பார்த்த கர்ப்பிணிக்கு இத்தனை நிலை ஆகிறது.

இதுவெல்லாம் நாம் தவறு செய்யவில்லை. ஆனால் சந்தர்ப்பத்தால் இப்படிப் பதிவாகி நமக்குள் விளைந்துவிடுகிறது.

இதை எல்லாம் நாம் எப்படித் துடைப்பது? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய ஞானிகள் எதைச் சொன்னார்கள்?
1.நமக்குள் கெட்டது எப்படிச் சூழுகின்றது?
2.அறியாமலே தீமை நமக்குள் எப்படி விளைகிறது?
3.தீமைகளை எப்படி விலக்குவது…? என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை அமைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒரு ஊர் இருந்தாலும் ஒரு கிராமம் இருந்தாலும் பத்து வீடு இருந்தாலும் கோவில் கட்டி வைத்திருக்கின்றோம். விநாயகரைப் பார்க்கிறோம். தினசரி எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

தேங்காய் பழம் வைத்து வணங்குகிறோம். பிள்ளையாரைச் சுற்றி வந்தால் பிள்ளை வரம் வேண்டும் என்று கேட்டால் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு அர்ச்சனை செய்து அந்தக் கோவிலைச் சுற்றுகின்றோம்.

ஆனால் நம் வாழ்க்கையில் எதை வினையாகச் சேர்க்க வேண்டும் என்று அறிந்திருக்கின்றோமா…! ஞானிகள் சொன்ன அந்த நிலையைப் பற்றி ஏதாவது நினைக்கின்றோமா?

ஞானிகள் சொன்ன நிலையை நாம் உணர்வால் எண்ணத்தால் எடுத்துத் தீமையை நீக்க வேண்டும். ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீய வினைகள் அகற்றிடும் சக்தியாக… தீமைகளைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக “சரஹணபவா.. குகா..”
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றி
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக விண்ணிலே இருக்கின்றான்.

மண்ணுலகில் தீமைகளை வென்று விண்ணுலகில் இருக்கும் அந்த அகஸ்தியன் காட்டியது தான் “விநாயகர் தத்துவம்”.

விநாயகரைப் பார்க்கும்போதெல்லாம் விண்ணிலிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நுகர்ந்தால் வாழ்க்கையில் வரும் தீய வினைகள் சாப வினைகள் அனைத்தையும் அகற்ற முடியும். கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த அகஸ்தியனின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் கருவிலேயே ஞானியாவான்.

நம்மை அறியாமல் வரும் தீய வினைகளை அகற்றி நல் வினைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் விநாயகரை எங்கே பார்த்தாலும் வைத்திருக்கின்றார்கள்.

ஒரு நல்ல வித்தின் தன்மையை நாம் மாற்றி விட்டால் கனியின் தன்மை பலன் கொடுக்குமோ? கொடுக்காது.

ஆகவே நம் நல்ல குணங்களை மறைத்துக் கொண்டிருக்கும்
1.தீமைகளிலிருந்து மனிதர்கள் அகல வேண்டும் என்பதற்காகத் தான்
2.குருநாதர் சொன்ன அருள் வழிகளை இங்கே உணர்த்துகின்றோம்.

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

Image

arali

நஞ்சை ஒடுக்கும் அரளிப்பூவைப் பற்றியும் எருமை மாட்டுச் சாணத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

எருமை மாட்டுச் சாணத்தின் குணங்கள்:-

மாடு பல தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது. அதிலுள்ள விஷங்கள் அனைத்தையும் தன் உடலாக மாற்றுகின்றது. அதே சமயத்தில் அதிலுள்ள நல்லதைக் கழிவாகச் சாணமாக மாற்றுகின்றது.

மாடு அந்த விஷத்தைக் கரைத்துத்தான் தன் உடலாக அதை மாற்றுகின்றது. ஆகவே மாடு
1.தனக்குள் ஈர்த்துக் கொள்வது நஞ்சு (அதை வலுவாக்கிக் கொள்கின்றது)
2.தன்னிடமிருந்து வெளியேற்றுவது நல்லது. (அதைக் கழிவாக்குகின்றது)

விஷத்தை குடித்தவர்களுக்கு அந்த மாட்டின் (குறிப்பாக எருமை) சாணத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்து லேசாக அதைச் சுட வைத்து அதன் மேல் இரண்டு பாதங்களையும் வைத்தால் உடலிலுள்ள விஷங்களை எல்லாம் ஈர்த்துவிடும்.

ஏனென்றால் மாடு அந்த விஷத்தை எப்படிக் கரைத்ததோ உணவாக உட்கொண்டதோ அது வெளிப்படுத்தும் சாணத்தில் நல்லது அதிகமாக இருப்பதால் நம் உடலில் விஷம் இருந்தால் அதைக் கரைத்துப் புவியின் ஈர்ப்பில் இழுத்து விடுகின்றது.

அரளிப்பூவின் குணங்கள்:-

அரளியை நாம் உட்கொண்டால் நம்மை அது மாய்த்துவிடும். ஆனால் அரளிப் பூவின் மணத்தை நுகர்ந்தால் நம் உடலிலுள்ள சில நஞ்சான நோய்களை அகற்றிவிடும்.

அரளிப் பூவை நாம் ஏன் தெய்வத்திற்குப் போடுகின்றோம்…! வீட்டிலும் சரி… கோவிலிலும் சரி…! தெரிந்தோ தெரியாமலோ நம் வீட்டில் சில விஷத் தன்மைகள் இருந்தால் அந்த மணத்தால் அது அகற்றப்படுகின்றது.

சிலர் கால் வலி மூட்டு வலி இவைகளால் துன்பப்படுவார்கள்.

அவர்கள் இந்த இலையை 4-5 எடுத்து இரவு படுக்கையில் கால்களுக்கு அடியில் வைத்துப் படுத்தால் கால்களில் மூட்டுகளில் சேர்ந்த விஷமான நீரை எல்லாம் எடுத்துவிடும். வலி குறைவதைப் பார்க்கலாம்.

ஏனென்றால் இந்த நஞ்சுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு. ஒரு அணுவிற்குள் இருக்கும் நஞ்சின் அளவுக்குத் தக்கவாறு தான் அதனின் இயக்கத்தின் ஆற்றல் இருக்கும்.

நஞ்சை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். நஞ்சை உணவாக எடுத்து ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொண்டால் வாழ்க்கையில் சந்திக்கும் எத்தகையை நஞ்சான நிலைகளக இருந்தாலும் அதை அடக்கி ஒளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இன்னல்களிலிருந்தும் விடுபட முடியும்

“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

Wisdom light

“நான் படுகிற அவஸ்தை எனக்குத் தான் தெரியும்…!” என்கிறார்கள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.

உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.

நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்

சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும் என்று யாம் சொல்கிறோம்.

“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!

ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது?

நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது என்று சொல்கிறது.

வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.

அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள் இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள் என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.

ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.

1.சாமிக்கு என்ன தெரியும்?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.

ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால் இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.

சில வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.

நீ அப்படிப் போவாய் இப்படிப் போவாய் இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும் என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.

சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா.
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.

இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.

ஆனால் நல்லவர்கள் தான்.

இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது?

1.எனக்கு எப்படியோ வருகிறது என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.

தெய்வம் எங்கே இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.

நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்?

இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.

அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.

திட்டியவனை எண்ணும் பொழுது மீண்டும் மீண்டும் அவனை எண்ணி இரு நான் பார்க்கிறேன் என்று எண்ணுவது போல்
1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.அதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால்
3.அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் இயங்கி
4.இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மெய்யை உணர்த்தும்.
5.மெய் ஒளி மெய் ஞானம் பெறமுடியும்

இதில் ஒன்றும் சிரமமில்லை.