நமக்கு வேண்டிய சுதந்திரம்

independence day

நமக்கு வேண்டிய சுதந்திரம்

உதாரணமாக… வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு தாவரத்தின் வேரினை நாம் அறுத்து விட்டால் இதற்கு நீர் கொடுக்கும் ஜீவ சக்தி இழந்த பின் அந்த மரம் தன் இனத்தைக் கவரும் தன்மையை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் நண்பர் என்ற நிலையில் ஒருவருடன் பழகி அவரின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து கொண்டாலும் சந்தர்ப்பத்தால் ஒருவருக்கொருவர் பகைமையாகிவிட்டால்
1.அதனின் நினைவாற்றல் வராதபடி தடுக்கும் நிலையாக
2.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைக்கப்படும் பொழுது அதனுடைய விழுதுகளும் தடைப்படுகின்றது.
3.அவரைப் பற்றிய பகைமையான நினைவுகள் மீண்டும் நமக்குள் எழுவதில்லை.

இப்படி இந்தப் புவியில் வாழும் அனைவரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுடன் வளரப்படும் பொழுது
1.ஒருவருக்கொருவர் வெளியிட்ட பகைமை (தீமை செய்யும்) உணர்வுகள் இந்தக் காற்று மண்டலத்திலே நிலைக்காது
2.அது நகர்ந்து சென்று கடலின் ஈர்ப்புக்குள் அது சென்று மறைந்து விடுகின்றது
3.நம்முடைய ஆன்மாவும் இந்தப் பரமான்மாவும் (காற்று மண்டலமும்) தூய்மையாகின்றது.

இவ்வாறு பூமியின் நிலைகளில் பரிசுத்தப்படுத்தும் உணர்வலைகள் பெருகும் பொழுது பேரன்பு கொண்ட நல்ல சிந்தனைகள் மக்களின் மத்தியிலும் தூண்டப்படுகின்றது.

ஞானிகளால் காட்டப்பட்ட நெறிகளை அவர்கள் உணர்த்திய பேருண்மைகளை நாம் இவ்வாறு பயன்படுத்துதல் வேண்டும்.

மதத்தின் பெயராலேயோ அரசியலின் பேராலேயோ இனத்தின் பேரால் நமக்குள் பதிவு செய்த தீமையின் உணர்வுகளை அகற்றிவிட்டு
1.உலகில் உள்ள அனைத்து மக்களும் நாம் ஓர் இனம்.
2.நாம் அனைவருமே கடவுளின் பிள்ளைகள்
3.அவனின் இயக்கத்தால் தான் இயங்குகிறது ஒவ்வொரு உடலும்…! என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.

உயிராக நின்று ஆண்டு கொண்டிருக்கும் அந்த ஈசனுக்கு வெறுப்பின் தன்மையோ வேதனையான உணர்வுகளையோ கொடுக்காது நாம் அதைத் தடைப்படுத்துதல் வேண்டும்.

நம் உயிரான ஈசனுக்கு நாம் செய்யக் கூடிய கடமைகள் எது…? என்று உணர்ந்து
1.நமது வாழ்க்கையிலும் சரி… நம் உடலுக்குள்ளும் சரி…
2.நம் நல்ல குணங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும்.

அப்படி நம் நல்ல குணங்கள் சுதந்திரமாக இயங்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பாதுகாப்புக் கவசமாக நாம் மாற்றிடல் வேண்டும்.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் கவர்ந்து தீமையான உணர்வின் இயக்கங்களிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட்டு இந்த மனித வாழ்க்கையில் சுதந்திரமாக அனைவரும் வாழ வேண்டும் என்று தியானிப்போம் தவமிருப்போம்…!

இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

sages patience

இன்றைய அவசர உலகில் பொறுமை வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அன்றாட வாழ்க்கையில் நமக்குத் தேவையான ஒரு பொருளை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்றால் அவசர உணர்வுகள் தலை தூக்கி நம் சிந்தனைகளைக் குறைத்து விடுகிறது.

வரிசையில் நமக்கு முன்னாடி நிற்பவர்களை முந்திக் கொண்டு பொருளை வாங்க நாம் ஆசைப்படுகின்றோம். அத்தகைய சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது பொறுமையிழந்து நம்மை அறியாது கோபித்துப் பேசும் நிலையோ வெறுப்பின் நிலையோ அல்லது ஆத்திரப்படும் நிலைகளோ வந்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளைத் தடைப்படுத்தவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி எதிலேயும் இந்த அவசர உணர்வே முன்னாடி வரும்.

ஏனென்றால் இன்று இருக்கக்கூடிய உலக நிலைகளில் நச்சுத் தன்மைகள் அதிகமாகப் படர்ந்திருப்பதால் சிறிதளவு நாம் இடம் கொடுத்தாலே போதும்.
1.சங்கடமோ சலிப்போ வெறுப்போ போன்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால்
2.அவைகள் எல்லாம் உடனடியாக நமக்குள் புகுந்து
3.நம் நல்ல குணங்கள் அனைத்தையும் அழித்துவிடும்.

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் பெருகி நல்லதைச் செயல்பட விடாத நிலையில் நோயாக உருவாக்கி இந்த உடலை விஷத் தன்மையாக மாற்றி விடுகின்றது. இதைப் போன்ற தீமைகளிலிருந்து மீட்டுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே எந்தக் கூட்டமைப்பிலும் நாம் பொருளை வாங்காது வரிசையில் நிற்கும் அந்த நேரத்தில் பொறுத்திருந்து…..
1.நமக்கு முன்னாடி இருப்போருக்குப் பொருள்கள் சீக்கிரம் கிடைக்க வேண்டும்.
2.அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற வேண்டும் என்ற எண்ணங்களை நாம் எண்ண வேண்டியது அவசியம்.

அத்தகைய பக்குவ நிலைகளைப் பெறுவதற்காகத்தான் அகஸ்திய மாமகரிஷி வெளிப்படுத்திய அருள் உணர்வை குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்கு உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளர்த்துக் கொண்டால் ஒவ்வொருவரிடத்திலும் வரும் வெறுப்பை நாம் நீக்க முடியும். பொது நலத்துடன் கூடிய இத்தகைய உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரப்படும் பொழுது
1.வெறுப்பை ஊட்டும் உணர்ச்சிகள் நீங்கி
2.மெய் ஞானியின் அருள் ஒளிகள் ஒவ்வொரு சமயத்திலும் நமக்குள் அது ஓங்கி வளர்கின்றது.
3.ஏனென்றால் இதை அடிக்கடி பதிவு செய்து கொண்டால்தான் அந்த எண்ணங்கள் வரும்.

புதிதாக ஒரு தையல் வேலை செய்யும் பொழுதோ அல்லது புதிதாகக் கோலங்கள் போடும் பொழுதோ முதலிலே போட்டவுடனே எதுவும் சரியாக வருவதில்லை.

கோலம் சரியாக வரவில்லை எனும் பொழுது மீண்டும் மீண்டும் அதைச் சீர்படுத்துவதற்கு இந்த உணர்வைச் செலுத்தும் போது பின்னாடி நேராக வருகின்றது.

ஆகவே அந்தப் பொறுமை நமக்குள் வருவதற்குத்தான் கோலங்களை இடச் செய்தனர். கோலங்களின் கட்டங்களை நாம் சரிவரப் போட்டிருக்கின்றோம் என்று அதைக் கண்டுணர்ந்து நல்ல நிலைகளைப் பெறுவதற்காக அன்றைய மெய் ஞானிகள் கொடுத்தது தான் இவை எல்லாம்.

அதே போல் தையல் மிஷினில் தைத்துப் பழகிய பின் தன்னிச்சையாகவே நேராகத் தைக்கும் நிலை வருவது போல அருள் உணர்வுகளை நமக்குள் செருகேற்றிக் கொண்டால் எந்த ஒரு துன்பமும் நம்மை அணுகாது தடுக்க முடியும்.

1.பேரின்பத்தைப் பெற்ற அந்த மகரிஷிகளின் நினைவுகள் ஒவ்வொரு நிமிடமும் வரும் போது
2.அந்த உணர்வுகள் தன்னிச்சையாக நமக்குள் (நேராக) இயங்கி
3.நம்மைச் சீராக்கும் நிலையை உருபெறச் செய்யும்.

ஆக நாம் சுவாசிக்கும் அந்த உணர்வை நம் உயிர் அதைச் செயல்படுத்தவும் அந்த உணர்வுகள் நம்மை இயக்கச் செய்வதற்கும் இது உதவும்.

பொது வாழ்வில் பொறுமை என்ற உணர்வுகளை எடுத்து வளர்க்க வளர்க்க
1.வரக்கூடிய எதிர்ப்புகளை எல்லாம் மறந்து
2.நமக்குள் மெய் ஒளியைப் பெறும் நிலையும்
3.மற்றவர்களின் எதிர்ப்பான உணர்வும் வெறுப்பான உணர்வுகளும் நமக்குள் புகாதபடி தடுக்க இது உதவும்.

இதை எல்லாம் அனுதினமும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள்…!

குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தை ஒருவருக்கொருவர் சங்கடங்கள் எப்படி உருவாகிறது…?

Yelling in family and work

குடும்பத்தில் கணவன் மனைவி குழந்தை ஒருவருக்கொருவர் சங்கடங்கள் எப்படி உருவாகிறது…? 

வீட்டில் கணவன் மனைவி குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் தாய் வேதனைப்படுவார்கள்.

தன் கணவனைப் பார்த்து பையன் சேட்டை செய்கிறான். ஆனால் நீங்கள் ஒன்றுமே அவனைச் சொல்ல மாட்டேன்… என்கிறீர்கள். அவனைக் கண்டித்தால் என்ன…! என்பார்கள். இதை எப்பொழுது சொல்வார்கள்…?

வேலைக்குப் போவதற்கு முன்னாடி இப்படிச் “சுருக்…!” என்று சொல்லி விட்டால் என்ன ஆகும்…? ஏனென்றால் வீட்டில் இருக்கும் மனைவிக்கோ தான் நியாயத்தைத் தான் சொல்கிறோம் என்ற நிலைகள் வருகிறது.

பையன் இப்படித் தப்பு செய்கிறான். அவனை எப்படியும் நல்ல வழி ஆக்குவதற்கு நீங்கள் பார்த்து மனது வையுங்கள்…! என்று சொன்னால் உடனே இது சாந்தமாகும்.

ஆனால் அவன் இப்படியே செய்து கொண்டே இருக்கிறான் நீங்கள் கேட்காமலே போய்க் கொண்டே இருக்கிறீர்கள் என்று சொன்னால்
1.இந்த உணர்வு தனக்கும் கெடுதல்
2.இதைக் கேட்டறிந்த உடனே கணவரின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.அவர் சுவாசிக்கிறார் அவர் உயிரிலே படுகிறது.
4.கணவன் உடலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த அந்த வெறுப்பான அலைகள் எழுந்து
5.காற்றிலிருந்து இழுத்துச் சுவாசித்து முன்னாடி வைத்துக் கொள்கிறது.

தப்பு ஒன்றும் பண்ணவில்லை. ஆனால் குடும்பத்தில் எவ்வளவு நிம்மதி இருந்தாலும்… பொருள் இருந்தாலும்… இந்த மாதிரிச் சொல்லி விட்டால் குடும்பத்திற்குள்ளே வெறுப்பு வளரும்.

வீட்டுக்கு வெளியே யாராவது ஒருவரை ஒருவர் திட்டிப் பேசுவார்கள். அதைக் காதிலே கேட்போம்.
1.திட்டுபவன் போக்கிரியாக இருந்தால் என்ன செய்வோம்…!
2.நாம் ஏதாவது சொன்னால் நம்மைத் திருப்பி ஏதாவது பேசிவிடுவான் என்று அப்படியே மடக்கிக் கொள்வோம். (கண்டு கொள்ள மாட்டோம்)
3.அப்படி அல்லாதபடி தனக்குப் பக்கபலம் இல்லாதவர்களாக இருந்தால் “இவனுக்கெல்லாம் என்ன திமிர்…!
4.இவனை எல்லாம் இரண்டு தட்டியே தட்டி ஆக வேண்டும்…! என்று நினைத்து அந்த எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொள்வோம்.

ஏனென்றால் அந்த எதிர் உணர்வுகளின் நிலைகளை நாம் எண்ணிப் பார்க்கும் போது நம்மிடம் உள்ள உணர்வே “வித்தியாசமாக வரும்….!” நாம் தப்புப் பண்ணவில்லை. இருந்தாலும் எந்த உணர்வின் குணத்தை எடுத்து வளர்த்தோமோ அது அங்கே வந்துவிடும்.

அதே சமயம் வீட்டில் ஏதாவது கொஞ்சம் குறையாகச் சொன்னால் வேகமாக நமக்குக் கோபம் வரும். பொறுமையாகச் சொல்லி இந்த நல்ல வழியைச் சொல்லலாம் என்று இருக்காது.

தன் மனைவி பையனைக் கண்டிக்கவில்லை என்று சொன்னவுடனே… என்ன சொன்னாலும் இந்த அறிவு கெட்டவன் இப்படித்தான் செய்வான்…! என்று தன் பையனைச் சொல்வார்.

அதாவது வேலைக்குப் போகும் போதே மனைவியிடம் ஏதாவது சொல்லச் சொல்கிறாயா…! என்கிற அந்த உணர்ச்சி வேகத்தில் இப்படி வந்துவிடும். அப்போது நாம் தவறு செய்யவில்லை.

ஆனால் சந்தர்ப்பம் இப்படி உருவாக்கப்படும் போது இதே நிலை வெளியிலே தொழிலுக்குப் போனவுடனே நம் உணர்வுகளின் மணம் நம் மேலதிகாரியை நம்மையும் வெறுக்கச் செய்கிறது.

எப்படி…?

நாம் தொழில் செய்யப்போகும் போது அங்கே இந்த இருள் சூழ்ந்த நிலைகள் நம் உடலில் மணமாகும். நாம் சுவாசிக்கும் போது நம் எண்ணம் அதுவாகும். ஒரு வேலையைச் சொல்லப்போகும் போது நாம் தவறு செய்கிறோம்.

மேலதிகாரி வந்தவுடன்… ஏனப்பா இந்த மாதிரி…? என்று கேட்கும்போது நம்முடைய உணர்வும் தவறு செய்த உணர்வும் வேதனை கொண்ட உணர்வும் வாசனையாக வருகிறது.

அப்போது மேலதிகாரி வந்து நம்மைக் கூர்ந்து கவனிக்கும் போது நம் உடலிலிருந்து வரக்கூடிய மணம் வீட்டிலிருந்து வரும் பொழுது எப்படி வெறுப்பும் வேதனையும் நாம் பட்டோமோ இந்த உணர்வை அவரும் சுவாசிக்க நேர்கின்றது.

சுவாசித்தவுடன் இனம் புரியாமல் அவர் நற்குணம் கெட்டு “நீ அறிவு கெட்டதனமாகப் பேசுகிறாய்…!” என்று சொல்வார்.
(இது எங்கிருந்து வருகிறது…? வீட்டில் உற்பத்தியாகிறது. வீட்டில் உற்பத்தியானது அங்கே போகிறது)

தெரியாமல் தவறு செய்து விட்டேன்…! ஆனால் நான் அறிவு கெட்டதனமாகப் பேசுகிறேன்…! என்று என்னை மேலதிகாரி சொல்கிறார் என்று எல்லாரிடமும் சொல்லிச் சொல்லிச் சொல்லித் தன்னை அறியாமலேயே இப்படி வேதனைப்படும் நிலை வந்துவிடுகிறது.

1.ஆனால் அதிகாரி நம்மிடம் மேற் கொண்டு நோகவில்லை… நொந்து பேசவில்லை.
2.நம்முடைய உணர்வே அந்த நிலையைச் செய்கிறது.

நம்மிடம் இரண்டு பேரிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள் என்றால் மேலதிகாரி என்னை அறிவு கெட்டவன் என்று திட்டுகிறார் என்று சொன்னவுடனே அவர்களும் அக்கறையாக நம்மைக் கவனிப்பார்கள்.

அப்போது நாம் சொல்லும் போது நம் உடலில் உள்ள அதே வாசனை முன்னாடி போகும். நாம் எந்த வெறுப்போடு இருக்கிறோமோ அவர்களுடைய முகமும் மாறும்.

அவர்கள் நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்தாலும் கூட இந்தச் சங்கடமான உணர்வு கலந்தவுடன் நல்லதாக வராது.

அதே போல தையல் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், வீட்டில் மட்டும் கொஞ்சம் சங்கடமாக வந்து விடட்டும்.
1.இந்தச் சங்கடமான அலைகள் பட்டவுடனே நேராக தைப்பதற்குப் பதில் கோணல் மாணலாகப் போகும்.
2.துணியைக் கத்திரிக்கும் பொழுதே அறியாமலேயே ரூட் மாறிப் போகும்.

முதலில் தைக்கத் தெரிந்து கொள்வதற்கு முன்னாடி எப்படி நெளிந்து போகுமோ இதே மாதிரி சுவாசிக்கும் உணர்வலைகள் கொஞ்சம் மாறுபட்டுவிட்டது என்றால் தன்னிச்சையாக மடக்கக் கூடிய இந்தக் கையையும் அது இயங்க விடாதபடி தையல் சரியில்லாமல் போகும்,

இங்கே மடக்கி இருப்பார். ஆனால் அது பாட்டுக்கு வெளியில் தைத்துக் கொண்டு போகும். வெளியில் தைத்த உடனே என்ன செய்வார்…? சீ…! என்று சொல்லி விட்டு இரண்டாம் முறை பிரித்துத் தைப்பார். செய்த வேலை வீணாகின்றது.

செ…! எப்போது பார்த்தாலும் இப்படித்தான்…!
1.வீட்டில் இருந்தாலும் சனியன்…! ஒரே தொல்லையாக இருக்கின்றது.
2.இங்கே வேலைக்கு வந்தாலும் இப்படி இருக்கின்றதே…! என்ற இந்த எண்ணம் வரும்
3.அப்புறம் வீட்டின் மேல் வெறுப்பு வளர்ந்து கொண்டே இருக்கும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் தான் நம்மை இப்படி இயக்குகின்றது. எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அதே உணர்வின் மணத்தை மற்றவர்கள் நுகரும்போது அந்த உணர்வே அங்குள்ளவர்களையும் இயக்குகின்றது. நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் அது இப்படித்தான் செயல்படுகின்றது…!

இதைப் போன்ற நிலைகள் வரும்போது இதையெல்லாம் நாம் எப்படிச் சரி கட்டுவது..? வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எமக்கு அனுபவரீதியாகக் கொடுத்த நிலைகளைத்தான் இங்கே உபதேச வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

வாழ்க்கையில் வரும் தீமைகளை மாற்றியமைக்க அந்த மெய் ஞானிகளின் உணர்வை எப்படி எடுக்க வேண்டும் என்றும் உணர்த்துகின்றோம். அதன் வழியில் நீங்கள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டே வந்தால் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்ககொப்ப ஞானங்கள் உங்களுக்குள் தோன்றும்.

உங்களால் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் நிச்சயம் விடுபட முடியும்…!

எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள்

ultimate-destination

எல்லோருக்கும் நல்லது செய்தேன்… ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்று வேதனைப்படுவார்கள் 

வாழ்க்கையில் நீ நல்லதைச் செய்ய விரும்புகின்றாய். அப்பொழுது பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் போது
1.அவர்களுக்காக இரக்கப்பட்டோ அல்லது பரிவுபட்டோ அதை ஏங்கிச் சுவாசித்து
2.பல ஆயிரம் பணத்தையும் பொருள்களையும் கொடுத்து அவர்கள் உடலைக் காத்திட நீ உதவி செய்தாலும்
3.அவர்கள் கஷ்டங்களை எல்லாம் கேட்டுணர்ந்த அந்த விஷத்தின் உணர்வின் தன்மையை
4.நீ துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…? என்று என்னிடம் (ஞானகுரு) வினா எழுப்பினார் குருநாதர்.

நீ செய்த உதவிகளுக்கு இந்த மனித வாழ்க்கையில் உனக்குப் புகழ் கிடைக்கும்… பேர் கிடைக்கும்… இரக்கத்துடன் இருப்பதால் “நல்லவர்…!” என்று எல்லோரும் உன்னைப் போற்றுவர்.

ஆனால் அதே சமயத்தில் நீ நலிந்து போகும்போது உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்தில் நீ வேதனையான நிலைகள் கொண்டு
1.நான் எல்லோருக்கும் நல்லதைச் செய்தேன்…!
2.என்னைக் கவனிக்க யாரும் இல்லை…! என்ற அந்தக் குறையான எண்ணத்தை எடுத்து
3.உன்னை இழிநிலைப்படுத்திக் கொண்டு இருப்பாயே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.

இந்த உணர்வின் தன்மை வளர்த்துக் கொண்ட பின் மனிதர்களையே வெறுக்கும் நிலை வந்துவிடுகின்றது. பின் உடலை விட்டுப் பிரிந்து சென்று இன்னொரு மனிதக் கூட்டுக்குள் சென்றாலும் அந்த உடலையும் அழித்துவிட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக் கூட்டும் நிலை தான் வரும்.

பின் அந்த உடலிலிருந்து வெளியில் சென்றால் அதிகமான விஷத்தை ஏற்றுக் கொண்ட உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று மனிதனல்லாத நிலையைத்தான் அடைய முடியும் என்ற இந்த இயற்கையின் நிலையை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக்கினார்.

ஆகவே நாம் நல்லது செய்த நிலைகளைக் காத்திட வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள எல்லா உறுப்புகளிலும் படர்ந்து உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்போர் அனைவரையும் எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவர்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
3.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் இன்னல்கள் நீங்க வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் உடல் நலம் பெற வேண்டும்
5..அவர்கள் வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ வேண்டும்
6.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வை
7.உங்களுக்குள் செலுத்துவீர்கள் என்றால் இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் ஆற்றல் மிக்கதாகச் சேர்கின்றது.
8.உடலுக்குள் உயர்ந்த சக்திகளாக இது விளைகின்றது.
9.அதே சமயத்தில் உங்கள் பேச்சும் மூச்சும் மற்றவரை நலம் பெறச் செய்கின்றது.

உதாரணமாக வயலிலே விளையும் காய்கறிகளைப் பறித்து உடனே சமைத்து விடுவது இல்லை.
1.அந்தக் காய்கறிகளைப் பறிப்பவர் ஒருவர்
2.அதைக் கடையில் கொண்டு சென்ற வியாபாரம் செய்பவர் ஒருவர்
3.கடைக்குச் சென்று நாம் அதை வாங்கிக் கொண்டு வந்து
4.பக்குவமாகச் சமைத்து ருசியாகச் சாப்பிடும் நிலைகள் வேறு.

இதை போன்று தான் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகள் நல்லது கெட்டது என்ற நிலையில் வெளியிலிருந்து வந்தாலும் அதை எல்லாம் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு பக்குவமாகச் சமைத்து மகிழ்ச்சியாக வாழச் செய்யும் நிலைக்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியை வழங்குகின்றோம்.

ஆகவே மெய் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் பெற்று அந்த உணர்வின் ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நம் தொழிலும் வேலையும் குறைபாடு இல்லாமல் நடக்க என்ன செய்ய வேண்டும்…?

Power of Soul

நம் தொழிலும் வேலையும் குறைபாடு இல்லாமல் நடக்க என்ன செய்ய வேண்டும்…? 

ஞானிகளைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். படிக்கின்றோம். ஆனால் அடுத்து மற்ற குறையான உணர்வைத்தான் அதிகமாகப் பேசுகின்றோம்.

உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே வரக்கூடிய குறைகளை நிவர்த்திப்பதற்கும் உற்பத்தியோ மற்ற வேலைகள் எல்லாவற்றையும் சீராக்குவதற்காகத்தான் தொழில்களில் நாம் அமர்த்துகின்றோம்.

ஆனால் தொழிலில் குறை வந்துவிட்டதென்றால் குறை வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி அப்படியே விட்டு விட்டால் குறை அப்படியே தான் இருக்குமே தவிர அதைத் தெளிவாக்கி மறுபடியும் சீர்படுத்த முடியாது.

ஒரு நெசவுத் தொழிலை செய்கிறோம் என்றால் சந்தர்ப்பத்தில் நூல் அறுந்து போகும். அப்பொழுது நூல் இல்லாமல் வரும். அதை மீண்டும் இணைத்துச் சரிபடுத்த வேண்டும் அல்லவா. ஆனால்
1.நூல் அறுந்து கொண்டே தான் இருக்கிறது…
2.சரி…! அப்படியே இந்தத் துணியை நெய்வோம் என்று விட்டு விட்டால்
3.அது தரமான துணியாக அது வருமா…?
4.இந்தத் தரத்தைப் பார்ப்போர் நம்மிடம் துணியை வாங்குவார்களா…?

அதை போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் குறை வந்து கொண்டே இருக்கிறது என்ற நிலைகளில் அதை அப்படியே விட்டு விட்டால் நம் எண்ணத்தின் நிலைகள் எங்கேயும் செல்லுபடி ஆகாது.

நாம் எங்கு சென்றாலும் நம் மீது வெறுப்பின் தன்மையும் மற்ற நிலைகளும் வந்துவிடுகிறது. ஆகவே யார் எந்தத் தீமை செய்தாலும் அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.

தீமை செய்கிறான்… தீமை செய்கிறான்… என்று எண்ணிக் கொண்டு அல்லது சொல்லிக் கொண்டே இருந்தால் அது நம்மையும் தீமை செய்ய வைக்கும்.
1.அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும்.
2.குறைகளைக் கூறுவதற்குப் பதில் நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குப் பழக்கம் வர வேண்டும்
3.இதை வழிப்படுத்தி நாம் எல்லோரும் ஒரு குடும்பமான நிலைகளில் இயங்கிப்
4.பிறருக்கு வழிகாட்டியான நிலைகளில் வர வேண்டும்.

அது அல்லாதபடி நாம் மற்றவர்களைப் பற்றியும்… நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும்… உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் பற்றியும்… மீண்டும் மீண்டும் குறைகளையே பேசிக் கொண்டு இருந்தோமேயானால் விஷமான உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகி விஷமான சரீரத்தைத்தான் பெறுவோமே தவிர ஒளிச் சரீரத்தைப் பெறும் தகுதி இல்லை.

இவ்வளவு பெரிய சக்தியைப் பரப்பியும் அதைப் பயனற்ற நிலைகள் ஆக்காதபடி குறைகளை நிவர்த்திப்பதற்குண்டான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அதற்குகந்த வார்த்தைகளையும் சொல்களையும் பயன்படுத்திப் பழக வேண்டும்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் எங்கே சென்றாலும் எந்த நிமிடம் ஆனாலும்
1.“எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்…” என்று அவர்களைக் குறையாக எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது…!” என்று குறையாக எண்ணாதபடி இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.மெய் ஞானியின் உணர்வலைகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். (இது முக்கியம்)

புற வாழ்க்கையில் “போதும்…!” என்ற உணர்வை எடுத்தால் நம்மைத் தேடி வரும் மகிழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

Image

Treasure wisdom

புற வாழ்க்கையில் “போதும்…!” என்ற உணர்வை எடுத்தால் நம்மைத் தேடி வரும் மகிழ்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

இந்த மனித வாழ்க்கையில் நாம் “பணமே பிரதானம்…!” பணம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது…! என்று இருந்தாலும் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் மனதில் நிம்மதி இருகிறதா என்றால் இல்லை.

பணமிருந்தாலும் நம் உடலுக்குள் நோயைத்தான் அனுபவிக்க முடிகின்றது. மனக் கவலையையும் சஞ்சலத்தையும் அனுபவிக்க முடிகின்றது. பொருள் நமக்கு ஒன்றும் உதவுவதில்லை.

அதே சமயத்தில் நீங்கள் பொருளைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. யாம் உபதேசிக்கும் இந்த முறைப்படி தியானத்தை எடுத்துக் கொண்டால்
1.உங்கள் மன வலு கிடைக்கும் பொழுது
2.தொழிலில் உங்களை அறியாமலே உங்களைத் தேடிப் பொருள்கள் வரும்.
3.வியாபாரமும் நன்றாக இருக்கும்.
4.உங்களுக்குள் “போதும்…! என்ற எண்ணமும் தோன்றும்.

இன்று ஐநூறு ரூபாய் வந்ததென்றால் மேற்கொண்டு ஐயாயிரம் வந்தால் வாங்கி வைப்பதற்குக் கூட முடியவில்லை… “போதும்…போதும்…!” என்று சொல்லும் நிலை தான் வரும். “போதும்…!” என்ற எண்ணம் வரும் பொழுது தன்னாலே இது நடக்கும்.

ஆனால் நீங்கள் ஒரு பொருளை எப்படியும் கவ்விப் பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தால்
1.அது ஓடிக் கொண்டயிருக்கும்.
2.நம் கையில் சிக்குவது மிகவும் கடினம்.
3.பொருளைப் பற்றிச் சிந்திக்காது இரண்டையும் காக்கும் சக்தி இந்தத் தியானத்தில் உண்டு.

நல்ல ஒழுக்கத்தைத்தான் எல்லோரும் எண்ணுகின்றோம். ஆனாலும் அந்த நல்ல ஒழுக்கத்தைக் காப்பதற்கு இந்தத் தியானத்தின் மூலம் சக்தியை அவசியம் நாம் கூட்டிக் கொள்ள வேண்டும். அதைக் கூட்டவில்லை என்றால் நம் நல்ல குணங்களையே நாம் காக்கும் நிலை இழந்துவிடுகின்றோம்.

நல்லதை எண்ணுவோம்…! ஆனால் பிறர் ஒரு துன்புறுத்தும் ஒரு வேதனையான சொல்லை நம்மிடம் சொல்லிவிட்டால் “இப்படிச் சொல்லிவிட்டார்களே…!” என்று பாலுக்குள் விஷம் பட்டால் எப்படி அதைக் குடித்தவுடன் மயங்குகின்றோமோ அந்த மாதிரி மயங்கிவிடுவோம்.

அந்த வேதனையால் நம் நல்ல குணங்கள் அனைத்தும் அடங்கி நம்மை அறியாமலே ஏசவும் பேசவும் துடிக்கவும் செய்து அதே உணர்வுகளை வளர்த்துக் கொண்டு அதன் வழியிலே நம் உடலில் வியாதிகளை வரவழைத்து நாம் நிம்மதி இழந்துவிடுவோம்.

நம்மிடம் பணம் பொருள் ஏராளம் இருக்கும். ஆனால் நிம்மதி இழ்ந்த நிலையில் இதைப் போன்ற எண்ணங்களை எண்ணும் பொழுது சுவைகள் மாறிவிடுகின்றது,

மாறிய சுவை கொண்டு சமைத்த ஆகாரத்தைக் கூடச் சுவைத்துச் சாப்பிட முடிவதில்லை. பணம் நிறைய இருக்கின்றது என்று பணத்தைப் பார்த்தாலும் நமக்கு ஒன்றும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை,

கௌரவமும் மற்ற நிலையும் இந்த உடலில் உயிரான ஈசன் இருக்கும் வரையில் தான் நாம் பார்க்கின்றோம்.
1.இந்த ஈசன் உடலை விட்டுச் சென்றால்
2.நீசனான இந்த உடம்புக்கு எந்த மரியாதையும் இல்லை…!
3.ஆனாலும் இந்த உடல் என்ற நீசத்தை வைத்துத்தான் ஈசனை நாம் வேண்ட முடிகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் அருள் ஒன்றையே பிரதானமாக வைத்து வாழும் பழக்கம் வந்தால் நாம் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் என்றுமே இருப்போம்.

மகரிஷிகள் அருள் ஒளி நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமைகின்றது. மன அமைதியும் சாந்தமும் விவேகமும் நமக்குள் வளரும். தெய்வீக குணங்கள் வளரும். தெய்வீகத் தன்மை பெறுவோம்.

நமக்குள் அழியாச் சொத்து அந்தத் தெய்வ குணங்கள் தான்…! ஆகவே இந்த மனித உடலிலிருந்து மெய் ஒளியைத்தான் நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

சுட்டித்தனமான குழந்தைகளை நம் வழிக்கு எப்படிக் கொண்டு வருவது…?

Image

mother-and-child-care

சுட்டித்தனமான குழந்தைகளை நம் வழிக்கு எப்படிக் கொண்டு வருவது…?

ஒன்றிலிருந்து தொண்ணூறு நாளுக்குள் சண்டை போடுவது வேதனைப்படுவது போன்ற உணர்வுகளை ஒரு கர்ப்பிணியான தாய் உற்றுப் பார்த்து அதைக் கேட்டறிந்து நுகர்ந்தால்
1.கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு அதே உணர்வுகள் விளைகின்றது
2.அவன் பிறந்ததிலிருந்து தாய் தந்தையை எதிர்க்கக்கூடிய நிலைதான் இருக்கும்.
3.ஆயிரம் பேர் புத்திமதி சொன்னாலும் கேட்க மாட்டான்.

ஆனால் கர்ப்பமுற்ற தாயோ சண்டை போட்டவர்களை வேடிக்கையாகத்தான் பார்த்தது.

அதாவது அந்தக் குடும்பத்தில் தவறு செய்பவனைப் பார்த்து நல்லவர்களுக்கு இப்படிக் கெடுதல் செய்கின்றானே என்று எண்ணும்போது அந்தக் கெடுதல் செய்த உணர்வைத் தாய் நுகரப்படும் போது கருவிலிருக்கும் குழந்தைக்கு அது பூர்வ புண்ணியமாகின்றது.

இதைப் பூர்வத்திலே குழந்தை வளர்த்துக் கொண்ட பின் பிறந்து வளர்ந்த பின் அதைத் தான் செய்வான்.

அவனை மாற்ற வேண்டும் என்றால் எந்தச் சாமியாரிடம் போனாலும் ஒன்றும் நடக்காது. எந்தச் சாமியும் எந்த மநதிரமும் ஒன்றும் அவனை மாற்ற முடியாது.

எந்தத் தாய் எதை எடுத்து நீங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்குக் கொடுத்தீர்களோ அதே தாய் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கொஞ்ச நேரம் எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்புறம் பையனை நினைக்கும் போதெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவன் உடல் முழுவதும் படர வேண்டும்
2.அவன் பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்.
3.அவன் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெற வேண்டும் என்று
4.இந்த உணர்வுகளை அவனுக்குப் பாய்ச்சிக் கொண்டேயிருக்க வேண்டும்.
5.அப்பொழுது அவன் உணர்வு உங்களிடம் விளையாது.

அவனுக்குச் சாப்பாடு போடும் போதெல்லாம் இதே மாதிரி துருவ நட்சத்திரத்தை எண்ணிப் பரிமாற வேண்டும். அதே உணர்வுடன் அவனிடம் ஒரு அன்பான வார்த்தையைச் சொல்லி
1.படிப்பில் இந்த மாதிரிச் செய்யப்பா…
2.உன் காரியங்களை எல்லாம் இப்படிப் பக்குவமாகச் செய்யப்பா..!
3.உனக்கு எல்லாம் நல்லதாக வரும் என்று
4.அவன் கண்களைப் பார்த்துச் சொல்லிச் சந்தோஷமாகப் பதிவாக்கிப் பாருங்கள்.
5.இந்த உணர்வுகள் பதிவாகி அவனைச் சரியாக்கும்

டாக்டராகப் படித்து விட்டு வருகின்றவர்கள் ஒரு பைத்தியக்காரன் சரியான நிலைகளில் பேசவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்…?

அவன் உணர்வுடன் சேர்த்து அவன் மனதிற்குத் தகுந்த மாதிரிச் சொல்லி மனோதத்துவ ரீதியில் அவனை மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

ரொம்பவும் சுட்டித்தனமாக இருக்கக்கூடிய குழந்தைகளை நீங்கள் மாற்ற இந்த மாதிரி முறைகளைக் கையாண்டு அவர்களை நம் வழிக்குக் கொண்டு வரலாம்.

ஆனால் இதை விட்டு விட்டு பையன் செய்யும் தவறுகளைப் பார்த்து
1.நீ எப்பொழுது பார்த்தாலும் இப்படியே செய்து கொண்டிருக்கின்றாய்
2.தினமும் நான் சாமியைக் கும்பிட்டுக் கொண்டு தான் இருக்கின்றேன்.
3.தினமும் தியானம் செய்து கொண்டு தான் இருக்கின்றேன் என்று இதை எடுத்தால் எப்படி இருக்கும்…?

பற்றாக் குறைக்குக் காசு வைத்திருப்பவர்கள் சம்பாரித்த பணத்தைக் கொண்டு போய் மந்திரக்காரனிடமோ ஜோசியக்காரனிடமோ கொடுத்து விட்டு் கஷ்டத்தையெல்லாம் அவன் போக்குவான் என்றால் அவன் எப்படிப் போக்குவான்.
1.அவன் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வான்…!
2.நம்மிடம் இருக்கும் காசை எல்லாம் வாங்கிக் கொண்டு போவான்…! இது தான் நடக்கும்..!

ஆகவே “கஷ்டம்…!” என்ற வார்த்தையை நீங்கள் விட்டுவிட்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெருக்கி பையன் நன்றாக வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உடலும் நிம்மதியாகின்றது.
2.உங்கள் சொல் அவனைத் திருத்தவும் செய்யும்.

ஏனென்றால் நண்பர்களுக்குள் ஒருவருக்கொருவர் “நன்மை செய்தோம்…!” என்று எண்ணினால் விக்கலாகின்றது. அதே நண்பனுக்குள் பகைமையானால் “துரோகம் செய்தான் பார்..!” என்று சொன்னால் புரை ஓடுகின்றது.

இது எல்லாருக்கும் தெரிந்தது தான்…!

அதே மாதிரிப் பையன் மேல ரொம்பப் பாசமாக இருக்கின்றோம். அவன் சொன்னபடி கேட்கவே மாட்டேன் என்கிறான் என்ற நிலையில் அந்த வேதனையோடு “ஏன்டா இப்படிச் செய்தாய்…?” என்று தான் பதிவு செய்கிறோம்.

இது அவனை இயக்கி இன்னும் தவறு செய்பவனாகவே ஆக்கும். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே பையனைப் பார்த்து மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய்
1.நீ நல்லவனாக ஆக வேண்டும்.. நல்லவனாக வருவாய்..!
2.உன் எதிர் காலம் நன்றாக இருக்கும்
3.எல்லோரும் போற்றும் தன்மைக்கு வருவாய் என்று
4.அவன் காதில் படும்படியாக ஒரு நான்கு நாளைக்குச் சொல்லுங்கள்.

பையன் மேல் சங்கடம் வரும் நேரத்தில் எல்லாம் இந்த மாதிரி எண்ணுங்கள். நிச்சயம் அவனை மாற்றும். செய்து பாருங்கள்…!

நம் மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து மனதை அமைதிப்படுத்தி “மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழி முறை”

Inner peace

நம் மனதிற்குள் ஏற்படும் போராட்டத்திலிருந்து மனதை அமைதிப்படுத்தி “மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வழி முறை”

ஒரு நெருப்பை வைத்து அதற்குள் ஒரு காரமான பொருளைப் போட்டால் என்ன செய்யும்…? அதிலிருந்து கிளம்பும் நெடி தாக்கி நம்மை அங்கே இருக்கவிடாது செய்யும்.

அந்த உணர்ச்சியின் தன்மை நம்மை என்ன செய்கின்றது?
1.இருமச் செய்கின்றது.
2.தொல்லை கொடுக்கச் செய்கின்றது.

இதைப்போல தான் நாம் நுகரும் ஒவ்வொரு குணங்களின் உணர்வுகளும் அது எதுவோ
1.அந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலந்து
2.நம் உடலில் நல்ல குணங்களை இயக்கும் அந்த அணுக்களில் பட்டபின்
3.அது ஏற்றுக் கொள்ள மறுக்கும் போது போர் முறை வருகின்றது.

நம்மை இரும வைக்கின்றது… அல்லது தும்மலாகின்றது…! ஆக நம்மை அறியாமலே அது இயக்கப்படுகின்றது.

இவ்வாறு இய்க்கும் இத்தகைய வலிமை மிக்க நிலைகளை வாலி என்று பெயரை வைத்து இராமாயணத்துல் தெளிவாகக் கூறுகின்றார்கள்.

நன்மை செய்ய எண்ணினாலும் பிறரின் வலிமையை நுகரப்படும் போது அதன் செயலாக நம்முடைய நல்ல குணங்களின் வலுவை அது எடுத்துக் கொள்கின்றது.

இதிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்றும் இராமாயணத்தில் வான்மீகி மகரிஷி தெளிவாக்கியுள்ளார்.

குகையிலிருந்து இந்த வாலியின் தன்மை வெளிவராதபடி குகை மேல் இருக்கும் பாறையைத் தன் அம்பால் ஏவி அந்தக் குகையை மூடி விடுகின்றான்.

1.வாலி வெளியே வந்தால் அவனுடைய வலிமை கொண்டு
2.(நம்மை) நம்முடைய வலுவை இழக்கச் செய்வான் என்று
3.அவனை அடைத்துவிட்டான் இராமன் என்று காட்டுகின்றார்கள்.

எப்பொழுது வலிமை மிக்க நிலைகளைப் பார்க்கின்றமோ… நம் கண்ணின் நினைவு கொண்டு எதை நுகர்கின்றோமோ உயிரான ஈசன்
1.அந்த உணர்வைத்தான் உருவாக்குகின்றது
2.அந்த உணர்ச்சியின் தன்மை தான் நம்மைச் செயலாக்குகின்றது.
3.அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு தான் நம் உடல் எண்ணம் சொல் செயல் எல்லாம் இயங்குகின்றது.

அப்போது அதைத் தடைபடுத்த வேண்டுமா… இல்லையா…?

அதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெற்றுப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும். உடல் முழுவதும் அந்தச் சக்திகளைப் பரப்ப வேண்டும்.

திட்டியவனை எண்ணும் போது கோபம் வருகிறது. வேதனைப்படுவோரை நாம் எண்ணும் போது நமக்கும் வேதனையாகின்றது.

கோபமோ வேதனையோ அத்தகைய உணர்ச்சியானால் நாம் ஒரு கணக்கைச் சீராகப் பார்க்க முடியுமா…? சரியாக ஒரு தொழிலில் வேலை செய்ய முடியுமா…? முடியாது….!

ஒரு சமயம் பதிவானால் அந்த நினைவு வந்தால் நமக்குள் நல்லதைச் செயலாக்க முடியவில்லை. சலிப்போ சஞ்சலமோ வெறுப்போ போன்ற உணர்வுகள் வந்தாலும் உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அதைப் போன்று தான் அடுத்த நிமிடமே “ஈஸ்வரா….!” என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அவனிடம் வேண்டி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.அது எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று
4.இந்தச் சக்தியை நமக்குள் கூட்டப்படும் போது தீமைகள் உட்புகாது தடைபடுத்துகின்றோம்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் இயக்கச் சக்தியாக மாற்றிக் கொள்கிறோம்
6.அந்த அருள் சக்திகளை நம் உடலிலே பெருக்குகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் பெருக்கிக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வலுவாகி நம் ஆன்மாவில் முன்னாடி இருக்கின்ற தீமைகள் அனைத்தையும் விலகிச் செல்லச் செய்கின்றது.

தீமைகள் அனைத்தும் அனாதையாகின்றது. அருள் ஒளி பெருகி நம் ஆன்மா பேரொளியாக மாறுகின்றது.

தொழிற்சாலையில் வரும் பிரச்சனைகளைச் சதுர்த்தி செய்யுங்கள்…!

Ganesh sathurthy

தொழிற்சாலையில் வரும் பிரச்சனைகளைச் சதுர்த்தி செய்யுங்கள்

ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு சிலர் வெளியிலே விளையாடுவது போல வேலை செய்யும் இடத்திலும் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள்.

கம்பெனிக்குள் இருவர் விளையாடுவதை நாம் கண் கொண்டு  பார்க்கப்படும் பொழுது நம் உணர்வுக்கும் அவர் செயலுக்கும் மாறுபட்ட நிலைகள் நடக்கப்படும் பொழுது அவர் உடலில் விளைந்த அந்தப் பொறுப்பற்ற செயல்களின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அவர்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலிருந்து வரக்கூடிதை நம் கண் கவர்ந்து நம்மைச் சுவாசிக்க வைக்கிறது. சுவாசிக்கும் பொழுது
1.பொறுப்புடன் வேலை பார்க்கும் நிலைக்கும்
2.பொறுப்பற்ற நிலையில் அவர்கள் செயல்படுவதற்கும்
3.இரண்டு நிலைகளாக நம் உயிருக்குள் கலந்து
4.”பொறுப்பற்ற செயல்களைச் செய்கின்றார்களே…!” என்று
5.ஊழ்வினையாக “வித்தாக” நமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் பொறுப்புடன் இருக்கும் நமக்கு அவர்கள் செயல்களைப் பொறுக்க முடியாது “இப்படிச் செய்கின்றார்களே.,.!” என்ற வேதனை நம்மை அறியாமலே வருகின்றது.

இப்படி வேதனைப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வுடன் இந்த வேதனை உணர்வுகள் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேதனை நம் நல்ல குணத்துடன் கலந்த பின் அடுத்து நாம் முகத்தைச் சுளித்து “வேலை பார்க்கும் இடத்தில்… இப்படி விளையாடுகிறீர்களே…?” என்று கேட்கின்றோம்.

பதிலுக்கு அவர்… “நீ என்ன பெரிய ஆளா…! என்னைக் குறை கூறுவதற்கு…?” என்று சொல்வார்.

எதிர் நிலையான உணர்வுகள் இப்படி இயக்கப்படும் பொழுது சிந்தித்துப் பதில் சொல்ல முடியாத நிலையில் இந்தச் சந்தர்ப்பம் ஒருவருக்கொருவர் வெறுப்பாகி “பழி தீர்க்கும் உணர்வுகளாக” இருவர் உடலிலும் பதிவாகிவிடுன்றது.

அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டும் நிலைகள் வந்தவுடன்
1.அவர்கள் கண்ணின் பார்வையே
2.வேறு தினுசாக மாறுபட்டு விடுகின்றது.

“என்ன…! இவன் இப்படிப் பார்க்கிறான்…!” என்று பொறுப்புடன் உள்ளவர் கவனிக்கும் பொழுது மீண்டும் இவருடைய கொதிப்பு அதிகமாகி சுவாசித்த உணர்வுகள் சிந்திக்கும் திறன் அற்றுக் கோபத்தின் எல்லை கடந்த நிலை ஆகிவிடுகின்றது.

கோபமான உணர்வுகள் தோன்றியவுடனே கார உணர்ச்சியாகி நம்மிடமிருந்து வெளிப்படும் சொல் அதைக் கேட்பவருக்கும் எரிச்சலூட்டும் நிலையாக வந்து விடுகின்றது.

ஒரு மிளகாயை நம் உடல் மீது தேய்த்தால் அது எப்படி எரிச்சலூட்டுகின்றதோ அது போல் அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நம் கோப உணர்ச்சிகளைத் தூண்டி காரமான உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து எரிச்சலூட்டும் உணர்வுகள் விளைந்து விடுகின்றது.

ஒரு பலகாரம் சுடும் பொழுது ஏதாவது கை தவறி காரம் அதிகமாகப் பட்டுவிட்டால் பலகாரத்தில் காரம் அதிகமாகி “உஷ்… உஷ்…” என்று ஊதிச் சாப்பிடுவோம். பலகாரத்தை வெறுக்கும் நிலைகள் வரும்.

அதைப் போல் அவர்களுடைய பொறுப்பற்ற செயல்கள் நமக்குள் வந்து
1.அவனைக் கவனித்துப் பார்க்கும் பார்வையால்
2.இவன் ஏன் நம்மை இப்படிப் பார்க்கிறான் என்ற நிலைகள் அங்கே விளைந்து
3.அவர்கள் சொல்லிலும் சில தடுமாற்றமான சொல்கள் வருகின்றது.

அதனால் பொறுப்புடன் உள்ளவருக்கு எரிச்சலூட்டும் உணர்வுகளைத் தனக்குள் படைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரத்தில் “ஏம்ப்பா…, இப்படிப் பொறுப்பில்லாமல் வேலை செய்கிறீர்கள்…?” என்று தான் சொல்ல முடியுமே தவிர “தன்னுடன் இணைத்துச் சொல்லும்… சொற்கள் வராது…!”

இப்படிக் கேட்டவுடனே ஏற்கனவே பொறுப்பற்ற செயலைச் செய்தவர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் எரிச்சலான பதில் வரும்.

மேலதிகாரிகள் வரும் பொழுது அவர்களிடமும் நம்மை இந்த விஷயத்தைச் சொல்லத் தூண்டும்.

அப்போது எரிச்சலூட்டும் சொற்களைக் கேட்டவுடன் அந்த மேலதிகாரியும் எரிச்சல் பட்டு எரிச்சலான உணர்வுகள் அவர் உடலிலும் விளைகின்றது.

நல்ல உணர்வுக்குள் எரிச்சல் பட்டதனால் ரிப்பொர்ட் சொன்னதை வைத்து மேலதிகாரி நேராக அந்தப் பொறுப்பற்ற செயல் செய்தவரைக் கேட்கப்படும் பொழுது எரிச்சலான பதிலைச் சொல்கின்றனர்.

அதற்குப் பின் “யார் சொன்னது…? எவர் சொன்னது…?  நான் செய்ய வில்லையே…!” என்று வெறுப்புடன் பழி தீர்க்கும் உணர்வாக விளைந்து விடுகின்றது அந்த சந்தர்ப்பம்.

“நீ இவ்வளவு தூரம் மேலதிகாரியிடம் சொல்லும் அளவிற்கு வந்து விட்டாயா…?” என்ற நிலைகளில் எரிச்சல்பட்டு இவர் வெறுக்கும்படியாக அவர்களும் சில செயல்களைச் செய்யத் தொடங்குவார்கள்.

அப்பொழுது இந்தத் தொழில் செய்யும் இடத்திலே நிம்மதியற்ற நிலைகள் ஆகி பொறுப்புடன் வேலை செய்பவர் வேதனையுடனும் வெறுப்புடனும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்,

அதை அதிகமாக அவர் சுவாசிக்கும் பொழுது கை கால் எரிச்சல் கண் எரிச்சல் எரிவாதம் போன்ற நோய்கள் உருவாகி விடுகின்றது.

வேலை செய்யும் இடத்தில் இவ்வாறு நடக்கும் இந்தச் சம்பவங்களை மற்றவருடன் பேசும் பொழுது “இப்படிச் செய்கிறான் அப்படிச் செய்கிறான்…” என்று எரிச்சலாகச் சொன்னவுடனே இதைக் கேட்டு அவர்களும் “ஏம்ப்பா நீ இப்படி எரிஞ்சி எரிஞ்சி பேசுகிறாய்…?” என்பார்கள்.

அப்புறம் அந்த பொறுப்பான உணர்வு கொண்டவர்கள்
1.“யாரிடத்தில் போய் நியாயத்தைச் சொல்வது…!
2.எவரிடத்தில் நியாயத்தைச் சொல்வது…!
3.எல்லோருமே பித்தலாட்டக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்ற உணர்வுக்கு வந்துவிடுவார்.

இது கடைசியில் கடும் நோயாகி விடுகின்றது. வேலை செய்யும் தொழில்கள் அனைத்திலுமே இது போன்ற நிலை உள்ளது.

கூட்டமைப்பாக வேலை செய்யும் பொழுது மேலதிகாரி என்ற நிலையில் கண்கானிக்க வரும் பொழுது ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலை ஏற்படுகின்றது.

அப்பொழுது குறை இல்லாததை அதே குறை உணர்வை இவர் மேல் சுமத்தப்படும் பொழுது பொறுப்புள்ளவர் தவறே செய்யவில்லை என்றாலும் தவறு செய்யாததைத் தவறு என்று சொல்லும் பொழுது பொறுப்பாக உள்ளவருக்கு மிகவும் கொடூரமாக ஆத்திரம் வந்து விடுகின்றது.

இதனால் பெரும் வேதனைகளை அனுபவித்து அந்த உணர்வின் செயல்கள் அவர் உடல்களிலே பரவத் தொடங்கி விடுகின்றது.

அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகி வினைக்கு நாயகனாக அவர் எண்ணிய மணங்கள் அவர் ஆன்மாவாக மாறிவிடுகின்றது.

நாம் மனித உடல் பெறும் பொழுதே இளமையிலிருந்தே நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை உடலாகச் சேர்த்து உடலிலிருந்து வரக்கூடிய நறுமணங்களை கெட்டதை நீக்கும் உணர்வின் ஆற்றலாக ஆறாவது அறிவாக ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும் நமது மனதில் பிறர் செய்யும் அந்த நிலையால் நமக்குள் விளைந்த உணர்வுகள் கார உணர்வுகளாக மாறி அந்த ஆறாவது அறிவைச் சரியாகச் செயல்படுத்தாது வேதனையும் வெறுப்பும் எரிச்சலும் விளைந்து கொடூரமான நோயாகி உடலை நலியச் செய்து நல்ல எண்ணத்தையே சீர்குலைத்து விடுகின்றது. அதே போல
1.ஒரு விஷச் செடி எவ்வாறு அதன் விஷத்தின் தன்மையைக்
2.காற்றிலிருந்து கவர்ந்து அது செழித்து ஓங்கி வளருகின்றதோ
3.அந்தப் பொறுப்பற்றவருடைய உடலிலே வீரியத் துடிப்பாக
4.வேகத்தின் நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையாக வளரும்.

ஒரு பாம்பின் தன்மை அது சீறிப் பாயும் பொழுது அது உடலில் உள்ள நஞ்சினைப் பாய்ச்சி மற்றவர்களுடைய பலத்தைக் குறைக்கச் செய்யும்.

ஒரு பாம்பு சீறி பாயும் பொழுது கண்ணால் பார்த்தவுடனே அந்த நஞ்சின் தன்மை ஊடுருவி நம் பலங்கள் குறைகின்றது.

அதைப் போல பொறுப்பற்றவர்களுடைய செயல்கள் பிறர் துன்பப்படுவார்கள் என்ற சிந்தனையில்லாது அவர்களுடைய செயல்களும் சொற்களும் அது வெளிப்பட்டு நாளுக்கு நாள் நஞ்சு அதிகமாகி சிந்தனையற்றவராக ஆக்கி விடுகின்றது.

அவர் உடலிலுள்ள ஆறாவது அறிவு நஞ்சினை நீக்கிடும் அறிவாக இருந்தாலும் அது மாசுபட்டுவிடுகின்றது. பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்.

மனிதனான பின் நஞ்சு கலந்ததை வினையாகச் சேர்த்து நல் வினைகள் அனைத்தையுமே சிறுகச் சிறுகக் குறைத்து தீய வினைகளுக்கு நாயகனாக உடலில் உறுப்புகள் மாற்றமடைந்துவிடுகின்றது.

மனிதனின் சொற் தொடர்கள் அனைத்தும் பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்லாகவும் வெறுக்கும் நிலையாக அடைந்து விடுகின்றது.

இவ்வாறு வரும் வேதனைகளிலிருந்து மீள்வதற்குத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை உங்கள் உடலில் சக்தி வாய்ந்ததாக உபதேசித்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் அருளை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்,  மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துப் பிறருடைய உணர்வின் தன்மை நமக்குள் ஆட்டி படைக்காத நிலையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் சக்திகளை மனிதர்கள் நான் வளர்த்துக் கொள்ளும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

Happiness

நிம்மதியும் மகிழ்ச்சியும் நமக்குள் எப்பொழுதும் இருக்க என்ன செய்ய வேண்டும்..? 

 

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வேண்டி அடுத்தவர்களிடம் நமக்குத் தெரிந்த அந்தப் பக்குவங்களை நாம் சொல்வோம். திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டேயிருப்போம்.

கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது?

இவ்வளவு நல்லது சொல்கிறோம்… எத்தனை தடவை சொல்கிறோம்… “ஆனால் கொஞ்சமாவாது ஏற்றுக் கொள்கின்றார்களா…,?” இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் தானா..? என்று நாம் கேட்கின்றோம்.

1.சகஜ வாழ்க்கையில் அடிக்கடி அதைத்தான் பேசுவோம்
2.இப்படித்தான் கேட்போம். இல்லையா…!
3.நல்லது சொன்னால் யார் கேட்கிறார்கள்…? அதைக் கேட்பதே இல்லை…! என்று இப்படித்தான் சொல்வோம்.

ஆனால் அவர்கள் சங்கடமாக இருக்கும் பொழுது “நல்லது சொன்னால்…” எப்படி எடுத்துக் கொள்வார்கள்…!

“அட போய்யா…,” தொழில் போய்விட்டது எல்லாம் போய்விட்டது காசெல்லாம் போய்விட்டது. ஏதோ இருந்தோம்… சாப்பிட்டோம்… போனோம்… நாளைக்கு என்னமோ ஆகிறது “எல்லாம் போய்விட்டது… விடு போ…,!” என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள்.

அப்படி வெறுப்பாக இருப்பவரிடம் போய் நீங்கள் என்ன பக்குவம் சொன்னாலும் அது என்ன செய்யும்?

காது கேட்காதவர்களிடம் போய்ப் பேசினால் எப்படி இருக்கும்? என்ன செய்வார்கள்? ஒரு உணர்வைக் கிரகிப்பதற்காக வேண்டி அந்த விஷயத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள்?

அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தச் சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். “அந்தப் பயிற்சியை” எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல்கள் வரும்போது அதற்குக் காரணமாவர்களைப் பார்த்ததும் பெரும்பகுதியானவர்களுக்குக் கோபம் அதிகமாக வரும். அந்த மாதிரிக் கோபம் வரப்படும் பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று வலுவான நிலைகள் கொண்டு ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி அவர்களும் பெற்று சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும். உண்மையை உணர்ந்து தெளிவான நிலைகளில் அவர்கள் செயல்பட வேண்டும் என்று உங்கள் உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.நம்மைப் பார்த்தவுடன் அவர்களுக்கு உணர்வு மாறும்.
2.அந்த நல்ல எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும்.

அதே மாதிரித் தொழிலில் செயல்படுத்தும் பொழுது இதே போல் செய்து நல்ல எண்ணங்களை வர வைக்க வேண்டும். அப்பொழுது அந்தப் பக்குவ நிலைகளை நாம் சொல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும்.
1.உனக்கு ஆன்ம ஞானம் கிடைக்கும்.
2.உன் வாழ்க்கையில் எதிர்காலம் சிறந்திருக்கும் என்று
3.கட்டாயமாக இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள்.

அருள் ஞானிகளைப் பற்றி யாம் உபதேசத்தைக் கொடுக்கின்றோம். எல்லாம் கேட்கின்றார்கள். இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பம் இப்படி ஆகிவிட்டது.

அப்பொழுது நாம் அதை எண்ணத்தில் எண்ணாது சரி அடுத்து நல்லதாக வேண்டும் என்று எண்ணக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும்.

வாழ்க்கையில் எதைத் தேடி வருகின்றோம்? நிம்மதியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

நிம்மதியும் மகிழ்ச்சியும் வேண்டும் என்றால் அதற்குண்டான பொறுமையும் பக்குவமும் நமக்கு வேண்டும். அத்தகையை பரிபக்குவ நிலைகளைப் பெறவேண்டும் என்றால்
1.அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.அவர்கள் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.

சில நேரங்களில் தோல்வி அடைந்தாலும் அதைக் கண்டு துவண்டு விடாது “எது நம்மை மாற்றியது…?” என்று சிறிது நேரம் புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி மகரிஷிகளின் பால் நினைவினைச் செலுத்தினால் அதற்குத்தக்க உபயாம வரும்.

எப்படிச் செயல்பட வேண்டும்…? எப்படிச் சொல்ல வேண்டும்…? என்று உங்களுக்குள் அந்தப் பரிபக்குவ நிலை தெரியும்.

இதைப் பழகிக் கொண்டால் நாம் போக வேண்டிய பாதை “தன்னாலே” தெரியும்.