மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் அணுக்களாக உருவாக்கி ஞான சக்தியாக மாற்ற வேண்டும்

 

கல்வியில் சிறந்தவன் ஆனாலும் ஞானம் இல்லை என்றால் கல்விக்காக நாம் கொடுத்த செல்வம் பாழாகிவிடும்.

ஏனென்றால் கற்றவன் மற்றவர்களை ஏமாற்றும் நிலைகள் கொண்டு சாதுர்யமாகத் தன் தாய் தந்தையரையும் ஏமாற்றுவார்கள். மற்றவரை ஏமாற்றத்தான் இந்தக் கல்வி பயன்படுகின்றது.

மற்றவரை வாழ வைக்க வேண்டும் என்ற ஞானங்கள் இந்தக் கல்வியில் வரவில்லை.
1.இன்றைய கல்வியின் நிலைகள் பார்த்தோம் என்றால்
2.தன் தாய் தந்தையரை ஏமாற்றிக் காசை வாங்கி
3.ஞானத்தை பேசும் நிலைகள் கொண்ட குழந்தைகளும் நிறைய உண்டு.

குழந்தை நன்றாகப் படித்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தாய் தந்தை நினைக்கின்றனர். ஆனால் காசை வாங்கிவிட்டு அங்கே தவறான வழிகளில் செலவழித்துவிட்டு
1.நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன் என்று பொய் பேசி
2.இங்கே கல்வி கற்கும்போதே தவறான உணர்வுகள் வளர்த்துக் கொள்கின்றனர்.

அது மட்டுமல்லாது.. கல்வியில் மேற்படிப்புக்குச் செல்பவர்களை
1.முதல் நாள் உள் புகும் மாணவனை முகப்பிலேயே ஆண்பால் ஆனாலும் பெண்பால் ஆனாலும்
2.எவ்வளவு அசிங்கத்தை உருவாக்க முடியுமோ (ragging) அதைச் செய்து
3.படிக்க வருபவர்களைத் தீமையின் உணர்வோடு ஒன்றி வரத் தான் செய்கின்றனர்.

இதையும் அனுமதிக்கின்றது அரசு. பல ஆசிரியர்களும் அனுமதிக்கின்றனர். ஆனால் நாட்டைக் காக்கவும் மனித பண்பைக் காக்கவும் தான் கல்வி…! என்பதை மறந்து விட்டனர்

கல்வியில் மேற்படிப்பிற்குச் செல்லும்போது இப்படி அநாகரீக நிலைகளைச் செயல்படுத்துகிறார் என்றால் கல்வி கற்ற ஜட்ஜுகளோ கல்வி கற்ற வக்கீல்களோ இதற்கென்ற சட்டங்களை வைத்து நியாயத்தையும் தர்மத்தையும் வளர்க்கக்கூடிய நிலையில் இதை ஏன் ஒன்றுப்பட்டு நிறுத்த முடியவில்லை…?

எதிர்கால மாணவ மாணவிகளை அசுத்த வழியில் செலுத்தினால் அவன் நாட்டைக் காப்பானா…? அல்லது குடும்பத்தைக் காப்பானா…?
1.அவன் சுதந்திரத்திற்கு நல்ல குணங்களை அழிப்பான்
2.அவன் சுகத்திற்குத் தீய வழிகளிலே தான் செல்வான்
3.தீய மார்க்கங்களில் தான் செல்வார்கள்.

தீய மணத்தை நுகரும்போது நல்ல மணத்தை நுகர முடியாதபடி அந்த உணர்வுகள் மடியத்தான் செய்யும். வாழ்க்கையில் இழி நிலை கொண்டு பேயாகவும் பூதமாகவும் இந்த நிலைகள் உருவாக்கப்பட்டு மனிதனைச் சிதறச் செய்யும் உணர்வே பரவும்.

இது போன்ற நிலைகள் நாட்டில் இருந்து விடுபட வேண்டுமென்று மக்கள் எவராக இருப்பினும் கல்விச் சாலைகளுக்குச் சென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ர அருள் ஞானத்தினைப் போதியுங்கள்.

நீ என் வழியில்தான் வர வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவதும் அப்படி அவன் கேட்கவில்லை என்றால் தனித்துக் கூப்பிட்டு உதைக்கும் நிலைகள் வருகின்றது.

அப்படிப்பட்ட அசுர உணர்விலிருந்து மீட்கப் பழக வேண்டும். கல்விச் சாலைகளுக்குள்ளே அது போன்று செய்பவர்களை நுழைய விடாமல் செயல்படுத்த வேண்டும்.

ராகிங்… என்ற நிலைகளில் அசுர உணர்வு கொண்டு உதைப்பதும் தவறான நிலையில் செயல்படுவோரையும் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருக்கலாம்.

தன்னுடன் இணைந்து ஒன்றி வரவில்லை என்கிற போது டாக்டர் படிப்புக்காகக் கற்றுக் கொண்ட மாணவன் ஒருவன் எவருக்கும் தெரியாமல் அவனுக்கு ஆபரேஷன் செய்து அங்கங்களைத் தனித்தனியாக பெட்டிக்குள் போட்டு நான்கு மூலையில் தூக்கி வீசி எறிந்துவிட்டான்.

ஏனென்றால் அவன் கற்ற கல்வியின் ஞானம் பிறரைக் கொலை செய்து தான் தப்பும் நிலைகளுக்கே வருகிறது. பெரும்பாலான நிலைகளில் கலாச்சாரம் எல்லாம் அநாகரீகக் கலாச்சாரங்களாகத் தான் மாறுகின்றது.

கல்வி எதற்கு…?

1.ஞானம் இல்லை என்றால் கல்வியைக் காக்கும் நிலை இல்லை.
2.கல்வியால் ஞானம் வர முடியாது
3.ஞானத்தால் கல்வியின் நிலைகள் வளர்க்க முடியும்.

ஆகவே இதைப்போல நாட்டில் வரும் தீய பண்புகளில் இருந்து நாம் மாற்றி அமைத்து மக்களைக் காக்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துத் தனக்குள் உருவாகும் அணுக்களை அருள் ஞானமாக மாற்றிடும் அந்தச் சக்தி பெற வேண்டும்.

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

நுண்ணிய வேலைகளைச் செய்யும் கம்ப்யூட்டரின் செயல்பாடு (INTELLIGENCE) எப்படிப்பட்டது…?

 

எதிர்நிலையான நட்சத்திரங்களின் மோதலினால் மின்னல்கள் உருவாகின்றது. மின்னல் பாயும் பொழுது மரத்தின் மேல் பட்டால் மரத்திற்குள் ஊடுருவி அது தன் இனத்தை எடுத்துக் கருகி விடுகின்றது.

மின்னல்கள் நிலத்தில் பட்டால் பூமியின் நடு மையமான நிலைகள் சென்றடைகின்றது. இப்படி அதீதமான நிலைகள் உள் சென்று எதிர்மறையான உணர்வுகள் பூமியின் நடு மையமானால் “எந்தப் பகுதியில் ஆகின்றதோ… அங்கு கொதிகலனாக மாறி… பாறைகள் எல்லாம் இளகுகின்றது…”

உள்ளே இருக்கும் பாறைகள் இளகும் போது பூமி வெடிக்கின்றது. மேலிருக்கும் பாறைகள் கீழே இறங்குகின்றது. “நில நடுக்கம்” என்று அடிபாகத்திற்குள் போகின்றது. அதற்குள் அடக்கி விடுகின்றது.

அதே சமயத்தில் மின்னல்கள் கடலில் பாய்ந்தால் அந்த மின் அணுக்களின் கதிர்கள் கடலுக்குள் படியப்படும்போது மணலாக மாறுகின்றது.

கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜன்… அந்த உப்பின் சத்து மின்னலின் வீரியத்தைத் தணிக்கின்றது.

கடலிலே பாயும் இத்தகைய நிலைகள் எல்லாம் மணலாக மாறி அந்த மின் அணுக்களின் துகள்களாக வரப்படும்போது கடலில் வரக்கூடிய மணல் அத்தகைய ஆற்றல்கள் பெறுகிறது.

இதைத்தான் யுரேனியம் என்று பிரித்தெடுக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எந்தெந்த நட்சத்திரத்தின் நிலைகள் இது கலவைகளாகின்றதோ அதற்குத் தக்க கனிமங்களாக உருவாகிறது.

இந்த மணலின் தன்மையை எடுத்துப் பிரித்து அதை வைத்துத் தான் அணுவைப் பிளக்கின்றனர் விஞ்ஞானிகள்.
1.இந்த அணுவின் தன்மை மற்றொன்றை அடக்கும் போது
2.வரும் அணுவின் தன்மையைப் பிளந்து உணர்வை எடுக்கின்றான்.
3.இதில் சிதைந்த உணர்வின் தன்மையைத் தான் இன்றைக்கு கம்ப்யூட்டரிலும் ஃபோனிலும் (SMART PHONE) உபயோகப்படுத்துகின்றனர்.

அதாவது அந்த உணர்வைப் பாய்ச்சி… ஒளி அதிர்வுகளைக் கண்டு… உணர்வின் செயலாக்கங்களுக்கு (COMMAND)
1.அந்த நுண்ணிய “கதிரியக்கப் பொறிகளை” மாற்றும் போதுதான் கம்ப்யூட்டர் என்னும் நிலைகள் வருகின்றது
2.இப்படி மின் அணுவின் கதிரியக்கங்களுடைய நிலைகள் ஒரு காந்தப் புலனறிவில் கவரப்பட்டு
3.கம்ப்யூட்டரில் – ஒரு காந்தத்தை கவரும் ஒரு உணர்வின் தன்மையைப் பதிவு செய்து… அந்த உணர்வின் அறிவாக ஆன பின்
4.எதிர் ஒலியின் தன்மை மின் அணு போன்ற இந்த உணர்வின் தன்மை தோன்றும்.
5.அந்த உணர்வின் தன்மை எதுவாகின்றதோ மோதும் ஒவ்வொரு உணர்வுக்கொப்ப அதனின் உருவத்தையும் காட்ட முடியும்.

ஆக… ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை இயற்கையின் நிலைகள் எப்படி வருகின்றது…? என்ற நிலையும்… ஒரு மனிதன் நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்றால் அவர்கள் வம்ச வழியில் வந்தவனின் ரூபங்கள் எப்படி இருக்கின்றது…? என்றும் காணலாம்.

ஒரு உணர்வின் தன்மையைப் பதிவாக்கி அந்தக் கம்ப்யூட்டர் எதிர் நிலைகளை (0 1) எடுத்துக் கொண்டால் ஒலியின் அதிர்வுகளை எடுத்துக் கொள்கின்றது.

“ஆயிரம் மடங்கு” அதைக் கூட்டுகின்றான். மீண்டும் அந்த உணர்வின் எதிர் ஒலிகள் வரப்படும்போது… வாழ்ந்த உணர்வை… பூமியில் பதிந்ததை எடுத்து… மனித ரூபத்தைக் கொடுக்கின்றது.

இன்று விஞ்ஞானி அதைக் காட்டுகின்றான்.

அதைப் போலத் தான் அன்று வாழ்ந்த மெய் ஞானியின் உணர்வை நாம் காண முடியும்.
1.அவனில் விளைந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாக்கப்படும் போது
2.இந்த உணர்வினைத் தொடர்ந்து எடுத்தால் அவன் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து (நுகரப்பட்டு)
3.அவன் ஒளியான உணர்வின் தன்மை கொண்டு நீங்கள் ஒளியாக முடியும்.

சில பேர் என்ன சொல்வார்கள்…? விஞ்ஞஞான அறிவு எங்கேயோ போகின்றது… சாமி (ஞானகுரு) எங்கேயோ மூலையில் இருக்கிறார் என்று…!

ஏனென்றால் விஞ்ஞானத்தின் அறிவு எப்படி இருக்கின்றது…? மெய் ஞான அறிவு எப்படி இருக்கின்றது…? என்று குருநாதர் எல்லாவற்றையும் காட்டினார்.

1.இயற்கையின் நிலைகளை அதனின் இயக்கத்தை எப்படி…? என்று
2.கற்றுணர்ந்த பின் தான் அதை உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.

காலம் வரும் போதெல்லாம் உங்கள் உணர்வுக்கொப்ப… காலத்தின் மாற்றத்திற்கொப்ப இதை நுகரும் போது… அந்தந்த உணர்ச்சிகள் அது கவரப்பட்டு உங்களுக்குள் பதிவு செய்யும் நிலையாக இது வரும்.

1.ஏனென்றால் முந்திச் சொன்னது எல்லாம் வேறு விதமாக இருக்கும்.
2.அந்த உணர்வின் வளர்ச்சிக்கு நீங்கள் வரப்படும்போது
3.இந்த இயற்கையின் தன்மை… உங்களை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

இந்த உடலிலே எத்தனை காலம் நாம் வாழப் போகின்றோம்…? நம் உடல் சதமற்றது…!
1.ஆனால் என்றைக்கும் நிலையானது உயிர்
2.அந்த உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக்கப்பட வேண்டும்.

இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைய வேண்டும். பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்த அருள் ஒளியை உங்களுக்குள் சேர்ப்பிப்பதற்குத் தான் இது போன்ற உபதேசங்கள்.

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…?

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்…?

 

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.

இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற… சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட…
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி… வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.

அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி…!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.

தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது… எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்… அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம்.

ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.

ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.

அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த… கேட்டுணர்ந்த… அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது… விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.

இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று… அந்த வினைகளுக்கு ஆளாக்கி… அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.

இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.

சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்… அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்… என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.

எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.

அதற்கு… நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.

அப்படி நிலைக்கச் செய்து… அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது…
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

நல்ல மக்களை வீட்டிலிருந்தே உருவாக்க ஞானிகள் அன்று காட்டிய நெறி

நல்ல மக்களை வீட்டிலிருந்தே உருவாக்க ஞானிகள் அன்று காட்டிய நெறி

 

ஒரு குழந்தை அழகாகப் பிறக்க வேண்டுமென்றால்… அருள் ஞானியாகப் பிறக்க வேண்டுமென்றால்… அதற்குண்டான உவமையும் அழகுபடுத்த தெய்வாம்சம் கொண்ட படங்களை வீட்டிலே வைத்து மெய் ஞான அறிவுப்படி கருவுற்ற பெண்களை அதை உற்றுப் பார்க்கும்படி செய்தார்கள் ஞானிகள்.

சரஸ்வதி படத்தை உற்று நோக்கி… “கல்வியில் சிறந்தவர் கருத்தறியும் உணர்வுகள் கொண்டவர் இசையில் வல்லவர்” என்ற இந்த உணர்வின் தன்மையை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இலட்சுமி படத்தை உற்று நோக்கி… “அழகையும் செல்வத்தையும் செழிப்பையும்” எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

பராசக்தி படத்தை உற்றுப் பார்க்கும் பொழுது “சர்வத்தையும் தனக்குள் உருவாக்கும் உணர்வுகள் உண்டு” என்று அந்த ஆற்றல்களை எண்ணி எடுக்கும்படி செய்தனர்.

இந்த மூன்று படங்களை ஒன்றாக இணைத்து… ஒன்று இசை இன்னொன்று அழகு செல்வம் மற்றொன்று சக்தி என்று எண்ணி எடுக்கும் நிலையில்… எந்த குணத்தின் தன்மையோ அதை இலட்சுமி தனக்குள் அதை வளர்த்துக் கொள்ளும் என்று காட்டுகின்றார்கள்.

1.அதாவது உயிரிலே ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும்…
2.உணர்வின் தன்மை எதை இசையோடு இணைக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மையைக் கருவாக்கும் என்றும்
3.ஈர்க்கும் உணர்வுகள் உயிரிலே மோதும் போது அதிலிருக்கும் வெப்பத்தின் தணல் கொண்டு ஒன்றென இணைந்து
4.”அந்த உணர்வின் தன்மைகள் கருவாகும்…” என்பதை நினைவுபடுத்தி
5.சாதாரண மக்களுக்கும் தன் குடும்பத்தில் தன் கருவிலே விளையும் சிசுக்களை
6.அருள் ஞானக் குழந்தைகளாக வளர்த்திட ஞானிகள் தெளிவாக்கினார்கள்.

வீட்டிலே இத்தகைய தெய்வப் படங்களை வைத்து அதிலே சூரிய ஒளிக்கதிர்கள் படும்போது அந்த நிலைகள் அலைகளாகப் படர்கிறது.

அதை உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த அலைகளை நாம் நுகர நேர்கின்றது. நுகர்ந்தது நம் உயிரிலே படும்போதுதான் அந்த படத்தையே… அந்த அழகையே… ரசிக்கும் தன்மை நமக்குள் வருகின்றது.

இத்தகைய நிலைகளை கருவுற்ற தாய்மார்கள் நுகர்ந்து கருவிலே வளரும் சிசுக்களை அழகாகவும் அருள் ஞானியாகவும் உயர்ந்த குணங்களை வளர்ப்போராகவும்… இப்படிப்பட்ட உயர்ந்த நிலைகளைத் தனக்குள் உருவாக்கும் சக்தியாகப் பெறுவதற்காக இந்த மூன்று படங்களையும் வைத்தனர் ஞானிகள்.

அந்தப் படங்களைப் பார்க்கும் போது அதில் உள்ள கருத்தை எண்ணத்தால் தனக்குள் கருவாக்கி… கர்ப்பமுற்ற அந்தத் தாயை எண்ணும்படி செய்கின்றனர்.

அதே போல் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோரும் கருவில் வளரும் சிசுவிற்கு அந்த ஆற்றல் பெற வேண்டுமென்று இந்த உணர்வின் தன்மையை உருவாக்கப்படும்போது கருவிலே வளரும் அந்த சிசு அழகாகவும் அருள் ஞானியாகவும் கருத்தறிந்து செயல்படும் சக்தியாகவும் வளர்கின்றது.

1.நல்லதை உருவாக்கும் அணுக்கதிர்களை எடுத்து…
2.கருவில் வளரும் சிசுக்களை மெய் ஞானிகளாக வளர்க்க முடியும் என்று தான்
3.வீட்டிலே இததகைய படங்களை வைக்கச் சொன்னார்கள் ஞானிகள்.

ஆனால் அழகான படத்தைப் பார்த்து… அருள் ஞானத்தை எண்ணி எடுப்பதற்குப் பதில்… குடும்பத்தில் இருக்கும் சங்கடங்களையும் வேதனை கொண்ட இசைகளையும் இணைத்து… இந்த உணர்வுகளைக் கருவுற்றிருக்கும் தாய் நுகர்ந்தால் என்ன ஆகிறது…?

கருவிலிருக்கும் அந்த சிசுவிற்கும் இதே சங்கட அலைகள் இணைந்து அதனுடைய அழகான ரூபங்கள் தொலைந்து… சிந்திக்கும் உணர்வுகளும் இழக்கப்பட்டு
1.குழந்தை பிறந்த பின் வெறுப்பும் வேற்றுமையும் கொண்டு
2.மேனியில் அழகு குறைந்த நிலைகளாகவும் சில குடும்பங்களில் இப்படி வளர்கின்றது.

ஆக.. இது போன்று ஆகாதபடி நல்லொழுக்கப்படுத்த அன்று தத்துவ ஞானிகள் இப்படி எத்தனையோ வழிகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

நம் வீடுகளில் சாமி படங்கள் பலவும் உண்டு. அதனை வைத்துப் பூஜிக்கும் அனைவரும் எப்படிப் பூஜிக்கின்றோம்…?

குடும்பத்தில் கஷ்டமாக இருந்தது என்றால் அந்தக் கஷ்டத்தையே சொல்லி வழிபடுவர். நான் உன்னையே எண்ணி நாள் முழுவதும் வழிபடுகின்றேன்… எனக்கு ஏன் இந்தச் சோதனை…? என்ற உணர்வுகளைத் தான் நாம் எண்ணுகின்றோம்.

இந்த நிலையில் நாம் எண்ணிய வேதனை உணர்வுகளை நமது உயிர் “ஓ…” என்று அணுவாக மாற்றுகின்றது. “ம்…” என்று உடலாக மாற்றுகின்றது.

1.நாம் வளர்த்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் ஆண்டவனாக ஆண்டு கொண்டு இருக்கின்றது
2.மீண்டும் அதை எண்ணும்போது அந்த உணர்வை இயக்கி நமக்கே உணர்த்துகின்றது நமது உயிர்.
3.உயிரின் வேலை அதுதான்…!

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு ஞானிகள் நமக்குக் கொடுத்த நல்வழிகளை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

everything is for good

சந்தர்ப்பத்தால் நம்மை இயக்கும் தீமைகளை… நம் எண்ணத்தால் எண்ணி அதை நல்லதாக மாற்ற முடியும்

 

யாம் உபதேச வாயிலாகச் சொல்லும் ஞானிகளின் உணர்வுகள் உங்கள் உயிரிலே பட்டு… விஷ்ணு சங்கு சக்கரதாரி…! அந்த ஒலியை எழுப்புகின்றது…. ஞானத்தின் உணர்ச்சிகள் உடலிலே படருகின்றது. எந்த உணர்வோ அதன் வழி வழி நடத்துகின்றது உயிர்.

ஆகவே உயிர் வழி நடத்தும் உணர்வின் தன்மை கொண்டு எவர் இதை நுகர்கின்றனரோ அவர் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி ஒளி என்ற உணர்வாக மாற்றும் தன்மை வருகின்றது.

ஏனென்றால் இருண்ட உலகமாக (உடலுக்குள்) விஷத்தின் தன்மை கலந்த… விஷத்தில் கலந்தது தான் மற்ற உணர்வுகள்.

ஆதியிலே… ஆங்காங்கு விஷத்தின் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று உராயும் வலுக்கள் வரப்படும்போது தான் வெப்பம் என்ற உணர்வாகி அங்கே ஆவி என்ற நிலைகள் உருவாகிறது.

ஆவி என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த வெப்பத்தால் தாக்கப்பட்டு உணர்வின் வேகத் துடிப்பாகி நெருப்பாகும் போது நகர்ந்து செல்லும்…! நகரும் போது காந்தமாகிறது. அந்தக் காந்தத்தால் கவர்ந்து ஒன்றை உருவாக்குகிறது.

1.விஷம் இயக்கச் சக்தியாகவும்
2.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
3.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும் பெற்று
4.காந்தம் அரவணைத்து உணர்வைத் தன்னுடன் மோதப்படும் உணர்வின் சக்தி எதுவோ
5.அதன் வழி பிரம்மம் உருவாக்கும் சக்தி பெறுகின்றது.

பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…! எதன் உணர்வு பட்டதோ அதன் உணர்ச்சிகளுக்கொப்ப அது உருவாக்கும் அதனின் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை நம் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றது.

ஆகவே மனிதனானபின் இந்த இருளை அகற்றி எதனையுமே எண்ணத்தால் உருவாக்கும் நிலை பெற்றது தான்…! மற்றது அனைத்தும் சந்தர்ப்பத்தால் மோதும் தன்மை வருகின்றது.

1.சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வுகள் வாழ்க்கையை அமைக்கின்றது.
2.ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அருளுணர்வு என்ற நிலையை அகஸ்தியன் உருவாக்கி
3.அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்

அவன் மாற்றிய உணர்வு கொண்டு… நாமும் சந்தர்ப்பத்தில் தீமை என்ற உணர்வை நுகரும் போது… அதன் வழியில் அழைத்துச் செல்லாதபடி தீமைகளை அடக்கி ஒளியாக மாற்றும் உணர்வைப் பெற முடியும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்வதில் மறைந்துள்ள நஞ்சை உடல் மலமாக மாற்றுகிறது. நஞ்சை நீக்கிடும் வலிமைமிக்க உணர்வு கொண்டு கார்த்திகேயா… தெரிந்த உணர்வு கொண்டு வலிமை கொண்டு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்முள் செல்த்தி அதை நாம் அடக்கிப் பழகுதல் வேண்டும்.

நம் வாழ்க்கையில் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக்குதல் வேண்டும் என்பதற்குத்தான் இப்பொழுது உங்களுக்குள் இதைத் தெளிவாக்கியது

ஆகவே அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் ஒளியாக மாற்றுவோம்.

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்

Auspicious time

“நல்ல நேரம்…” என்று ஒன்றை ஞானிகள் வைத்ததன் நோக்கம்

 

எத்தனையோ பேருடன் எத்தனை விதமாக நாம் பழகுகின்றோம்.

வியாபாரத்திற்கோ மற்றதுக்கோ போகும்போது அந்த நேரத்திலே நமக்கு வேண்டாதவன் வந்து விட்டான் என்றால் அவனைப் பார்த்துவிட்டுப் போனால் அந்த காரியமே தோல்வியாகும்…! என்று எண்ணுவோம்.

அதே சமயத்தில் வீட்டை விட்டுப் போகும்போது சாங்கிய சாஸ்திரத்தை எல்லாம் பார்ப்போம்.

உதாரணமாக இரண்டு மணிக்கு நல்ல நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நல்ல காரியத்தை ஜெயித்து விட்டு வரலாம் என்று செயல்படுத்துவோம்.

1.ஏனென்றால் நம் மனதை நல்ல வழியில் மாற்றுவதற்கு இப்படி ஒரு சாஸ்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள்.
2.அதன்படி நல்லதை முழுமையாக நினைக்கின்றோமா என்றால் இல்லை…?

கல்யாணத்திற்குப் பொண்ணு பார்க்கின்ற காரியத்திற்கோ அல்லது புதிதாக ஒரு தொழில் தொடங்கப் போகும் போதோ நல்ல நேரத்தைப் பார்ப்போம்.

அந்த நல்ல நேரத்தில் மற்றவர்களையும் வாருங்கள் போகலாம்…! என்று அழைத்துச் செல்வோம்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி ஏதேதோ சங்கடங்கள் சலிப்புகள் எல்லாம் பேசிக் கொண்டிருப்போம். அவன் அப்படிச் செய்தான் இவன் இப்படிச் செய்தான்…! என்ற உணர்வுகள் எல்லாம் நமக்குள் இருக்கும்.

1.இதை மாற்றுவதற்காக வேண்டி அந்த இரண்டு மணிக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று
2.நம் தீமைகளை எல்லாம் மறந்து நல்லதை எடுக்கும்படி செய்கிறார்கள்.
3.ஆக… தத்துவ ரீதியில் மனிதனை இப்படியெல்லாம் நல்ல வழிக்கு மாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை
4.அங்கே நமக்குக் கொடுக்கின்றார்கள் ஞானிகள்.

ஆனால் போகும் பொழுது அந்தப் பாதையில் எதிர்த்தாற்போல் ஒரு விதவை முக்காடு போட்டு வந்தால் போதும்… “தொலைந்தது போ…!” என்று சொல்வோம்.

இந்த உணர்வை வைத்துக் கொண்டு போனால் நல்லதைச் செயல்படுத்தும் எண்ண வருகிறதா…? முதல் முதலில் கடை திறப்பதற்காகப் போனால் இத்தனை சாங்கியம் பார்த்துவிட்டுத் தான் போகின்றார்கள்.

இப்படி ஒரு விதவை முன்னாடி வந்துவிட்டால் நம்மை அறியாதபடி தொலையும் உணர்வை எடுத்துக் கொள்கிறோம். பின் கடைக்குப் போனவுடன் என்ன செய்கின்றது…?

கடையைப் போய்த் திறப்பார்கள். அந்த மனதோடு கடை வைத்து நடத்தினால் என்ன ஆகும்…?

அடுத்தாற்படி ஒன்று எதிர்பாராதது ஆகிவிட்டது என்றால் “நான் நினைத்தேன் இப்படி ஆகிவிட்டது…! என்ற இந்த எண்ணம் தான் வரும்.

நம்முடன் கூட வந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நான் அன்றைக்கே சொல்லலாம் என்று பார்த்தேன். சகுனம் மாறிவிட்டது என்று சொல்லி அப்பொழுது அவர் கெட்டிக்காரர் ஆகிவிடுன்றார்.

லேசாகச் சொல்வார்கள்… முழுவதும் சொல்ல மாட்டார்கள். ஏதோ குறுக்கே போனது பார்த்துச் செய்யலாம்…! என்ற இந்த நினைவை ஊட்டி விட்டுவிடுவார்கள்.

அவர் சொன்னதும் இந்த உணர்வுடன் கடை வைத்தால் என்னாகுமோ ஏதாகுமோ..? என்று அதே ஞாபகம் தான் வரும். கடை திறக்கும் போதே இப்படித் தான் இருந்தது… அதனால் இன்றைக்கும் இப்படி விரயம் ஆகின்றது என்று தொடர்ந்து வரும்.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணுகின்றோமோ “அது தான் நம்மை இப்படி எல்லாம் ஆட்சி புரிகின்றது…!” என்பதை மறந்து விட்டோம்.

1.ஆட்சி புரியச் செய்வது யார்…? இதே உயிர் தான்.
2.உணர்த்துவதும் அவன் தான்… இயக்குவதும் அவன் தான்.
3.நம்மை வளர்ப்பதும் அவன் தான்… நம்மை உருவாக்குவதும் அவனே தான்.

நம் உயிரான ஈசன் தான்….!

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?

Agastyan blissful state

செல்வம் இருந்தாலும் செல்வம் இல்லை என்றாலும் மனப் போராட்டம் இல்லாதவர்கள் உண்டா….?

 

செல்வங்களை எவ்வளவு தேடி வைத்திருப்பினும் செல்வம் வைத்திருப்போர் குடும்பங்களில் பார்த்தோம் என்றால் எத்தனை துயரங்கள்…? எத்தனை தொல்லைகள்…? எத்தனை வெறுப்புகள்…? அடைகின்றார்கள் என்று பார்க்கலாம்..

செல்வம் இல்லாதவர்கள்… அது கிடைக்கவில்லையே… அது கிடைக்கவில்லையே… என்று அவர்களும் வேதனை அடைவதைப் பார்க்கின்றோம். ஆனால்
1.செல்வம் இல்லாத போது உடலில் வேதனைப்பட்டாவது
2.செல்வத்தைத் தேட வேண்டும் என்ற வலிமை வருகின்றது.

செல்வம் வந்த பின் செல்வத்தைக் காக்க உணர்வுகள் வலிமை பெறுகின்றது. இருந்தாலும் வேதனையை வளர்க்க நேருகின்றது. அப்பொழுது தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் உணர்வுகள் இழக்கப்படுகின்றது.

செல்வம் உள்ளோருக்குத் தன்னிடம் தேடிய செல்வம் இருப்பினும் வேதனை என்ற உணர்வை நீக்க முடியவில்லை.

செல்வம் இல்லாதவருக்கு எப்படியும் செல்வம் தேட வேண்டுமென்ற ஆர்வம் வருகின்றது. அந்த ஆர்வத்தின் நிலைகள் கொண்டு உடல் உழைப்புகளைச் செய்து… தனது கஷ்டங்களை எண்ணாது… எப்படியும் தான் இந்த வாழ்க்கையை உயர்த்த வேண்டுமென்று மன உறுதி கொண்டு வளர்கின்றது.

நாளைக்குச் சாப்பாட்டுக்கு இல்லை என்று சொன்னால் எப்படியும் சாப்பாட்டைத் தேட வேண்டுமென்ற நிலையில் அந்த மன உறுதி வருகின்றது.

அடுத்தாற்போல் பார்த்தால்…
1.கூட நான்கு நாட்களுக்கு சாப்பாடு இருந்தால்… “சரி விடு போ… பார்க்கலாம்…!” என்று
2.அந்த தேடிச் சேமிக்கும் நிலையும் குறைந்துவிடுகின்றது.

இப்படி மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும் சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்

baterfly

உயிரினங்கள் ரூபம் பெறுவதை குருநாதர் நேரடியாகக் காணும்படி செய்தார்

 

உதாரணமாக ஒரு தட்டாண் பூச்சி ஒரு செடியில் உள்ள மலரில் அதனுடைய முட்டையை இட்டு விட்டால் அந்த மலரில் வரும் சத்தினைக் கவர்ந்து அது ஒரு பூச்சியாக வளர்ந்து பட்டாம் பூச்சியாக வளர்கின்றது.

அந்தப் பூ என்னென்ன கலரில் இருந்ததோ பட்டாம் பூச்சி அந்த பூவில் இருந்து வரக்கூடிய நிலைகளைக் கவர்ந்து (XEROX) அதனுடைய இறக்கைகள் பூவின் ரூபமாக இருப்பதையும் காணலாம்.

ஏனென்றால் இதை உங்களுக்கு நான் (ஞானகுரு) லேசாக சொல்கின்றேன். அந்தப் பட்டாம் பூச்சிகள் அது எவ்வாறு உருவாகிறது…? என்று குருநாதர் காடும் மேடும் அலையச் செய்து அது உருப்பெறும் விதங்களை அறியும்படி செய்தார்.

இப்பொழுது நான் அறிந்த நிலைகளை நீங்களும் அறிய வேண்டும் என்றால் உங்கள் தொழிலை விட்டுவிட்டு அறியச் சென்றால் சோறு யார் போடுவது…?

எனக்குச் சோறு இல்லை என்றாலும் காட்டிற்குள் இரண்டு பச்சிலையைக் கையில் கொடுத்து அதை மென்று தின்ற பிற்பாடு வெறும் தண்ணீரைக் குடித்தோமென்றால் பசி தெரியாது.

அந்தப் பசி தெரியாத நிலைகள் கொண்டு பசி என்ற உணர்வு வரப்படும்போது இன்ன பச்சிலையை நீ உணவாக உட்கொள் என்று குருநாதர் காட்டியிருந்தார்.

1.அந்த ஒரு பச்சிலையை அதிலே ஒரு துண்டு தான்…!
2.அதை ஒரு நிமிடத்தில் உட்கொண்டுவிட்டு
3.மீண்டும் அவர் எதைச் சொன்னாரோ அது குறி தவறாது அந்த நினைவாற்றலைச் செலுத்தும்படி சொல்வார்.

அப்படிச் செலுத்தினால் தான் எனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படி உருமாறுகின்றது…? அந்த உணர்வின் தன்மை ஒன்றோடு ஒன்று மோதும் போது எப்படி அதனுடைய உணர்வலைகள் அது இயங்குகின்றது என்ற நிலையை உணர முடியும். இப்படித்தான் குருநாதர் தெளிவாகக் காணும்படி செய்தார்.

இதை எல்லாம் நீங்கள் இங்கே அமர்ந்து கேட்கின்றீர்கள். நான் அங்கே இயற்கையின் நிலைகள் எப்படி உருப்பெறுகின்றது…? என்று
1.குரு அருள் அவருடைய வலுத் துணை கொண்டு
2.அதனை அறியும் வாய்ப்புகளை எனக்குக் கொடுத்தார்.

அவர் எனக்குக் காட்டிய அதே வழிப்படி உங்களுக்குள் இதை உபதேசிக்கும் போது இதன் உணர்வை நினைவாற்றலாக நீங்கள் வரும்போது
1.இயற்கையின் நிலைகளை நீங்களும் உணர முடியும்
2.உங்களை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்… அதை மாற்றியமைக்கவும் முடியும்.

அந்தப் பட்டாம்பூச்சிகள் அதனுடைய இறக்கைகளில் இந்த பூவிலிருந்து அது இழுக்கும் துகள்களில் பல வர்ணங்களில் வேஷமாகப் போடும்.

நீங்கள் பார்த்திருப்பீர்கள்…! எத்தனையோ வண்ணத்தில் பட்டாம் பூச்சிகளை. அதிலே எத்தனையோ வகையான பூச்சிகள் உண்டு இதெல்லாம் முதலில் புழு இனங்களாக வந்து பின் பூச்சி இனங்களாக மாறி பின்பு பறவை இனங்களாக மாறுகின்றது அது கவர்ந்த உணர்வுக்கொப்ப என்ற இந்த நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

அதே சமயத்தில்… ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உணர்வுகளும் இரண்டும் ஆண் பெண் என்ற நிலைகளில் ஒன்றாக இயங்கி… உணர்வின் சத்தைக் கவர்ந்து… தான் கவர்ந்த உணர்வுகளை அந்தந்த குணங்களுக்கொப்ப அணுவின் தன்மை உருவாக்கி… அதனின் மணம் அது உடலாக்கி… அந்த உடலின் ரூபங்கள் எப்படி உருவாகின்றது…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

இதை நாம் அறிவதற்காக…
1.இந்த உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்
2.உயிரின் இயக்கத்திற்குள் ஏற்படும் ஈர்ப்பை (காந்தம்) லட்சுமி என்றும்
3.அந்த ஈர்ப்பால் அதனுடன் இணைந்து உருப்பெறும் சக்தியை பிரம்மம் என்றும்
4.நமது உயிரின் இயக்கங்களை குரு தெளிவாக்குகின்றார்.

இந்த உயிர் எதனைக் கலவையாக உருவாக்குகின்றதோ அதன் உணர்வின் தன்மை கொண்டு அதனதன் உணவாக எடுத்து அந்த உணர்வின் தன்மை விளையும்.

அந்த உணர்வின் தன்மை உணவு எதுவோ அக்குணத்தின் தன்மை எண்ணங்கள் கொண்டு இயங்கும் என்ற நிலையை தெளிவாகக்கிக் கொடுக்கின்றார்கள்.

இவ்வாறு வளர்ந்த அந்த நிலைதான் முதலிலே ஒரு புழுவாக உருவாக்குகின்றது. அங்கே உயிர் ஈசனாகவும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் அதே சமயத்தில் ஈர்க்கும் காந்தம் லட்சுமி என்றும் இங்கே உருப்பெறுகின்றது

இதை எல்லாம் உயிரினங்களில் ரூப மாற்றம் எப்படி…? என்பதை ஆதியிலிருந்து குருநாதர் வரிசைப்படுத்திக் காட்டினார்.

“சப்தரிஷி மண்டலம்” கேள்விக் குறி போல் தெரிவதன் காரணம் என்ன…?

big dipper - sapdharishi mandalams

“சப்தரிஷி மண்டலம்” கேள்விக் குறி போல் தெரிவதன் காரணம் என்ன…?

 

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுத் தான் இன்று மனிதனாக வந்திருக்கின்றோம்

இதிலிருந்தெல்லாம் மீண்டு இன்னொரு மனிதனுடைய ஈர்ப்புக்குச் சிக்காமல் முதல் முதலில் நம் பூமியிலே வாழ்ந்த அகஸ்தியர் என்ன செய்தார்…?

நம் பூமியின் சக்திகளை எல்லாம் அறிந்தார். சூரியக் குடும்பத்திலிருந்து வரும் சக்திகளை எல்லாம் நம் பூமி வட துருவத்தின் வழியாக எப்படிக் கவர்கின்றது…? என்பதையும் உணர்ந்தார்.

அந்தத் துருவத்தையே எண்ணி ஏங்கி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக விண்ணிலே இன்றும் இருக்கின்றார்.

அதிலிருந்து ஒளிச் சரீரமாகப் போனவர்களிடமிருந்து பல பல ஒளி அலைகள் வந்து கொண்டிருக்கின்றது. அகஸ்தியனைப் பின்பற்றிப் போனவர்கள் தான் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

1.வானிலே நாம் பார்த்தால் அந்த ஏழு நட்சத்திரங்கள் தனியாகத் தெரியும்
2.கேள்விக் குறி போல் அது தெரியும்.

நாளை நீ எதுவாகப் போகின்றாய்…? இந்தப் பிள்ளை யார் (பிள்ளையார்) என்று கேள்விக் குறி போட்டிருக்கின்ற மாதிரி இதிலிருந்து தப்பிப் போனவர்கள் அனைவரும் எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அந்தக் கேள்விக் குறி மாதிரி… அந்த நட்சத்திரங்கள் இங்கிருந்து பார்க்கும் போது
1.நாம் எங்கே போக வேண்டும்
2.மனிதன் எப்படி இருக்க வேண்டும்…? என்று
3.கேள்விக் குறியாகப் போட்ட மனிதன் அங்கே இருக்கின்றான்.

இப்பொழுது உடலை விட்டுப் பிரிந்து போன உயிரணுக்கள் நம் கண்ணுக்குப் பார்த்தால் தெரிகின்றதோ…?

ஒரு சிலர் இந்தத் தியானத்தில் இருப்போருக்கு உடலை விட்டு உயிராத்மா செல்லும் போது கொஞ்சமாவது தெரியும். பாக்கிப் பேருக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் இதே எண்ணத்தில் இருப்பதனால் காண முடிகிறது.

இந்த உயிராத்மா அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்தவுடனே முதலில் சிறியதாக இருக்கும். சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய சக்தியை உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தச் சப்தரிஷிகள் விண்ணிலிருந்து வரும் விஷத்தை வடிகட்டி வெளியில் அனுப்புவதனால் அந்த வட்டத்திற்குள் இருப்பதை ஆகாரமாக எடுத்து இந்த உயிராத்மாக்கள் ஒளியின் சரீரமாக ஆகும்.

நாம் பூமியில் விளைய வைத்த இந்தச் சத்தை எடுத்து உடலாக மாற்றுகின்றது புழுவிலிருந்து மனிதன் வரையிலும். ஆனால்
1.இதிலே இந்த உணர்வை ஒளியாக மாற்றி
2.விண்ணிலிருந்து வரக்கூடிய சக்திகளை எல்லாம்
3.தன்னிச்சையாக விஷத்தை முறித்து ஒளியாக மாற்றிடும் சக்தி இந்த ரிஷிகளுக்கு உண்டு.

அந்த அலைகள் விண்ணிலேயும் இருக்கின்றது. நம் பூமியிலும் படர்ந்திருக்கின்றது. அதை எடுப்பதற்காக வேண்டித் தான் இங்கே உபதேசமாகக் கொடுக்கின்றோம்.

இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் நாமும் அந்தச் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

கெட்டதை நீக்கி நல்லதை (ஒளியான உணர்வுகளை) எடுக்கக்கூடிய இந்த ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

Soul lights

நஞ்சு சாகாக்கலை கொண்டது என்று சொல்வதன் பொருள் என்ன…?

 

பாம்பு ஒரு தவளையைக் கொத்தி அதிலே தன் விஷத்தைப் பாய்ச்சி விழுங்கி அதனை உணவாக உட்கொள்கின்றது.

இதே போன்று தான் வலுக்கொண்ட நிலைகள் கொண்டோர் பிறர் துன்பப்படுவதைக் கண்டு சிலர் ரசிப்பார்கள். யாரொருவர் பிறர் வேதனைப்படுவதைக் கண்டு ரசிக்கின்றார்களோ அது எல்லாம் பாம்பு நஞ்சைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை விழுங்குவது போன்றது தான்.

ஏனென்றால் நஞ்சின் தன்மை கொண்டு அதை விழுங்கி இருந்தாலும் நஞ்சு என்பது சாகாக்கலை கொண்டது.
1.அதாவது எதிலே எப்படிச் சென்றாலும் அந்த நஞ்சை வீழ்த்திட உங்களால் ஆகாது
2.எதனுடன் கலந்தாலும் நஞ்சின் தன்மை அது அடக்கும் சக்தியாகத் தான் வரும்.

உதாரணமாக ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டால் அதைப் பிரித்திட முடியாது. அந்த ஒரு குடம் பாலையும் தன் இனத்தால் நஞ்சாக மாற்றி அதைச் சாகாக்கலையாக ஆக்கிவிடும். ஆனால் அதே சமயம்
1.நஞ்சு கலந்த அந்த ஒரு குடம் பாலுக்குள் பல ஆயிரம் குடம் பாலை விடும்போது
2.இதனின் சக்தி ஓங்கி நஞ்சின் தன்மை சிறுத்து அது ஆக்கச் சக்தியான வலுவை ஊட்டும்.

நோய்களை நீக்க மருந்தை உட்கொண்டாலும் அதற்குள் வீரியத் துடிப்பான நஞ்சைக் கலக்கித் தான் உங்களுக்குள் நோயினை நீக்கக் கொடுப்பார்கள்.

ஓர் உணர்வின் சக்தி கொண்டு நமக்குள் நோயாக ஆனாலும் அந்த நோயினை நீக்கிட அந்த மருந்துக்குள் நஞ்சினைப் பாய்ச்சி
1.நோயை எதிர்த்திடும் இந்த உணர்வின் மணத்தால்
2.நஞ்சு வீரிய உணர்வு கொண்டு செல்லும்போது “அது ஊடுருவி”
3.எங்கே வேதனை உணர்வு இருக்கின்றதோ அதனின் செயலை இந்த மணம் ஊடுருவி வேகமாகச் சென்று அதை அடக்கும்.

வைத்திய ரீதியிலே விஞ்ஞான அறிவு கொண்டாலும் இப்படித்தான் செயல்படுத்துகின்றார்கள்.

உதாரணமாக சர்க்கரை வியாதி அதிகமாக இருக்கின்றது என்றால் இன்சுலினை இஞ்செக்ஷன் செய்து அந்தச் சர்க்கரைச் சத்தை அடக்கிடும் உணர்வாகச் செய்வார்கள்.

சிறுகச் சிறுக இது ஒரு பழக்கமாக்கி விட்டால் இந்த இன்சுலின் இல்லையென்றால் அடுத்து நீங்கள் எந்த மருந்து போட்டாலும் அது ஆகாது.

பின்… நமக்குள் அது மாற்ற முடியாத நிலைகளும் ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் நமக்கு நாமே குத்திக் கொண்டு அதைக் குறைத்திடும் நிலைகள் வரும்.

முதலில் சிறுகச் சர்க்கரைச் சத்தாகத் தான் வரும். அதை அடக்க சிறிதளவு மருந்தைக் கொடுப்பார்கள். இதை உட்கொண்டாலும் சிறுகச் சிறுகச் சேர்க்க சர்க்கரை மருந்தின் அளவு கூடும்.

கடைசியில் முடியாத நிலைகளில் எல்லாம் சேர்ந்து நரம்புகள் தளர்ச்சி ஆகும். நாம் எடுக்கும் உணர்வின் நிலையில் சர்க்கரையை ஜீரணிக்க முடியாத நிலைகள் ஆகும்.

தளர்ச்சியானபின் இதனுடைய நிலைகள் துவண்டு விடும். இந்த நிலை வரும் போது தான் இன்சுலினை இஞ்செக்சனாகக் கொடுப்பார்கள்.

அதுவும் நாளடைவில் கூடிக் கூடி வீரிய உணர்வு கொண்டு நம் உடலில் இரத்தத்தில் வரும் அசுத்தங்களை வடிகட்டும் கிட்னி… கல்லீரல் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் தன்மை வருகின்றது

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

மனிதனாக நல்ல முறையில் வாழ வேண்டுமென்று தான் எல்லாம் செய்கின்றோம். இத்தகைய நோய் வந்த பின் நம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு நோயின் வீரியத்தை மாற்றிக் கொள்கின்றோம்.

இருந்தாலும் உடலில் சேர்த்துக் கொண்ட நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து விடுகின்றது.
1.நான் நல்லதைச் செய்தேன்… எனக்கு இப்படி வந்துவிட்டதே
2.இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்… இப்படி ஆகிவிட்டதே என்ற நிலை வருகின்றது.

அதுமட்டுமல்ல.. உடல் மிகவும் நலிவடைந்து வரப்படும்போது நம்மிடம் கடன் வாங்கியன் பணத்தைச் சரியாகத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால்… அடப்பாவி…! என்று அவன் மேல் எண்ணத்தை பதிவு செய்து
1.நான் இவ்வளவு சிரமப்பட்டு கொண்டிருக்கின்றேன்..
2.எனக்குப் பணம் தரமாட்டேன் என்கின்றானே என்ற நிலையில் அவன் உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலைவிட்டு சென்றபின் அவன் உடலுக்குள் நாம் செல்வதற்குத் தயாராகி விடுகின்றோம்.

இதே வேதனை உணர்வுகள் வீரியமாகி இந்த உடலை விட்டு நாம் அங்கே சென்றபின் அந்த உடலுக்குள் போனபின் இதே இன்சுலினை அங்கே குத்தும்படியாக அங்கேயும் இதே சர்க்கரை நோயாகி விடும்.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இந்த உடலுக்குப் பின் நம் நிலை என்ன…? என்று சிந்தித்து அதன் வழி மெய் ஞானிகள் காட்டிய அருள் வழி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.