
நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானிகளாக அருள் மகரிஷிகளாக உருவாகுங்கள்
நமது வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்ற நிலைகள் படுவோரைப் பார்த்து நம் நல்ல குணங்கள் கொண்டு அவர்களுக்கு உதவி செய்தாலும் நம் நல்ல குணங்களை அந்த விஷம் என்ற குணங்கள் திரை மறைவாக்கி விடுகின்றது. பின் வேதனை என்ற உணர்வு தான் நமக்குள் வருகின்றது
உதாரணமாக நல்ல பலகாரத்தைச் செய்து வைத்திருக்கின்றோம் என்றால்
1.அதன் மேலே மிளகாய்ப் பொடியைத் தூவி விட்டால் அந்த வாசனை தான் வரும்.
2.அதிலே விஷத்தைத் தூவி விட்டால் அது தான் இயக்கம் ஆகும்.
3.ஆனால் பலகாரத்தின் மீது நல்ல நறுமணங்களைப் போட்டால் நறுமணத்தின் தன்மை தான் வரும்
ஆனால் சுவைக்கும் போது தான் வித்தியாசங்கள் தெரிய வரும்.
அதைப் போன்று தான் மேலெழும் மணங்கள் நம் உடலின் அணுக்களில் படும் பொழுது
1.அந்த மேலெழுந்த உணர்வுகளே நம்மை இயக்குகின்றது
2.அது சிறு திரையாக மறைத்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் இயங்காதபடி தடைப்படுத்தி விடுகின்றது.
இதைத்தான் சித்திரை என்று சொல்வது.
சந்தர்ப்பத்தால் இப்படி மூடி மறைக்கும் அத்தகைய சிறு திரைகளை நீக்கி
1.நம் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் தூய்மையாக்கிப் பொருளை அறியும் ஞானங்கள் பெற்று
2,எல்லாவற்றையும் அறிந்திடும் அறிவின் ஒளியாக நாம் மாற்ற வேண்டும்.
நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பேரின்பமும்… பெரு வாழ்வு பெறும் அழியா ஒளிச் சரீரத்தை உருவாக்கும் நிலையாக… ஒவ்வொரு நிமிடத்திலும் மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்று
1.நமக்குள் தீய குணங்கள் தூண்டப்படும் போது நல்ல குணங்களை மறைக்கச் செய்யும் அந்தச் சிறு திரைகளை நீக்கி
2.அருள் மகரிஷிகளின் துணை கொண்டு அருள் ஒளிச் சுடராகப் பெருக்கி
3.என்றும் பேரின்பப் பெருவாழ்வு பெறும் அந்தத் தகுதியை நாம் பெறுவோம்.
அதற்காக வேண்டி… ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் அருள் சக்திகளைப் பெருக்கி
1.ஒவ்வொருவரும் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக மாறுதல் வேண்டும்.
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை உருவாக்கும் ரிஷிகளாக மாற வேண்டும்.
3.நமது குருநாதர் அனைத்து அண்டங்களையும் அறியும் தகுதிகளை நமக்கு ஏற்படுத்துகின்றார்.
4.அவர் காட்டும் வழியில் அதனை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.
ஆகவே… பிறவியில்லா நிலைபெறும் எல்லையைக் குறியாக வைத்து இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அதை அகற்றிவிட்டு அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கிப் பேரின்பம் பெறும் அருள் ஞானிகளாக வளருங்கள் வாழுங்கள்.
உங்களுடைய பார்வையில் பிறருடைய தீமைகளை அகற்றும் அருள் சக்திகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்
1.உங்கள் பார்வையில் தீமை உங்களை நாடாது அருள் பாதுகாப்பு என்ற உணர்வின் வலிமையைப் பெறுங்கள்.
2.வலிமை பெற்ற அருள் ஞானிகள் உணர்வை உங்கள் உடலுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
அருள் வழி வாழ்வோம்… மெய் வழி வாழ்வோம்… மெய் ஞானிகள் அருள் வட்டத்தில் வாழ்வோம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உங்களுக்கு “ஒன்றாம் வகுப்பில் பாட நிலை போதிப்பது போல்” அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தொடர்ந்து பதியச் செய்கின்றோம்.
உணர்வின் இயக்கச் சக்திகளை மனிதனான நாம் உணரும் தன்மை பெற்றவர்கள். பதிந்து கொண்டபின் நினைவு கொண்டு அதைக் கவர்ந்து செயலாக்க முடியும்.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களில்
1.தாயின் கருவில் வளர்ந்த அந்தச் சிசு (அகஸ்தியன்) அவர் கற்றுணரவில்லை.
2.தாய் நஞ்சினிடமிருந்து தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது
3.அது கருவில் விளையும் அகஸ்தியருக்கு இணைந்தது
4.உணர்வின் தன்மை நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் அங்கே பெறுகின்றது.
நஞ்சினை வென்றிடும் உணர்ச்சி வரப்படும் பொழுது பிறந்தபின் அந்தச் சிசு (அகஸ்தியன்) மல்லாக்கப் படுத்திருக்கும்போது அறிவில்லாத நிலைகளில்…
1.அறியும் அறிவே இல்லையென்றாலும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது
2.இவன் உடலுக்குள் இருக்கும் விஷங்கள் இந்தக் கருவிழியின் நிலையாக ஊடுருவுகின்றது.
3.சூரியனின் மோதலை உற்றுப் பார்க்கின்றான்.
4.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை இவனுக்குள் இது மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது…
5.சூரியனின் இயக்கத்தைக் காணும் சக்தி பெறுகின்றான்.
6.இதெல்லாம் இயற்கை… சந்தர்ப்பத்தால் உருவான நிலைகள் தான்.
பல நஞ்சினைக் கொண்டு மனிதனாக உருவானாலும் நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் அவரின் தாய் தந்தையர் நுகர்ந்த இந்த விஷத் தன்மைகள் கருவிலே வளரப்படும் பொழுது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுவாக விளைகின்றது.
இதைப் போன்றுதான் உங்களுக்குள் அது உருவாகும் உணர்வின் தன்மையாக
1.அருள் ஒளியின் தன்மை ஒவ்வொரு குணத்திலும் இணைக்கப்படும் பொழுது
2.நஞ்சினை வென்றிடும் (அத்தகைய) அகஸ்தியன் பெற்ற ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்ற நோக்குடன் தான் உபதேசிக்கின்றோம்.
உபதேசிக்கும்போது உங்களை உற்று நோக்கும்படி செய்து
1.அந்த உணர்வின் தன்மையை நீங்கள் நுகரும்படியாக
2.நுகர்ந்த உணர்வின் தன்மையை ஜீவ அணுவாக மாற்றும்படிச் செய்வதற்கே
3.நமது குருநாதர் கட்டளைப்படி உங்களை இதைச் செயலாக்குகின்றேன்.
இதைத் தெளிந்து கொள்ளுங்கள்.
இதன் வழி அகஸ்தியன் கற்றுணர்ந்தது… சூரியன் அது எவ்வாறு தனக்குள் கவர்கிறது…? என்ற நிலையும் அண்டங்கள் எப்படி உருவானது…? என்ற நிலையும் இதன் தொடர் வரிசையை இவன் காணுகின்றான்.
இன்று விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கும் தன்மையை அறியப்படும் பொழுது அது எங்கிருந்து விளைந்தது…? இதன் உணர்வின் தொடர் எது…? என்று விஞ்ஞானி காணுகின்றான்.
எப்படி விஞ்ஞானி காணுகின்றானோ அதைப் போல் அன்று மெய்யை உணரும் ஆற்றலாக…
1.விஷத்தை ஒடுக்கும் ஆற்றல் தாய் கருவில் இவனுக்குள் உருவானதால்
2.தனக்குள் விளைந்த நிலைகளில் மோதப்படும் பொழுது
3.ஒவ்வொன்றும் எப்படி உருவாகின்றது…? என்ற அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது.
ஏனென்றால் இதையெல்லாம் சொல்வதன் நோக்கமே…
1.எதிர்காலத்தில் வரும் நஞ்சிலிருந்து நீங்கள் வென்று… நஞ்சற்ற உணர்வை உங்களுக்குள் வளர்த்து…
2.இந்த உடலிலிருந்து பிரிந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி…
3.இனி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற… அழியா ஒளிச் சரீரம் பெறும் நிலைக்குத்தான்
4.திரும்பத் திரும்ப அகஸ்தியன் பெற்ற நிலைகளைப் பதிவாக்குகின்றோம்.
இன்றும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும் போல ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட உலகில் உண்டு.
அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை நமக்குள் இணை சேர்த்து… உணர்வின் தன்மை ஒளியாக்கி ஒளியின் சரீரமாக… அழியாத வல்லமை பெறும் சக்தியாக உருவாக்கும் உயிரை நாம் கடவுளாக மதித்து… அந்தச் சக்திகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
ஏனென்றால்… கருவிலே வளரும் இந்தச் சிசு (அகஸ்தியன்)
1.தாய் நுகர்ந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் (தாயின்) உடலுக்குள் சென்றபின்
2.அதிலே விளைந்த இந்த உயிர் தான் அந்த உணர்வின் ஆற்றலாக அணுவாக மாற்றுகின்றது.
ஆகையினால் அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை.
தனக்குள் வரும் உணர்வினை தாயின் கருவின் உணர்வாக எடுத்து வளரும் இந்தச் சிசு அதன் உணர்வின் தன்மை வரப்படும் பொழுது அதுவாக ஆகின்றது… ஈசனாகின்றது…!
ஆகவே அது உணர்த்திய உணர்வுகள் அணுத்தன்மையாக அந்தச் சிசுவின் உடலில் வரும் பொழுது “அதுவே” உற்பத்தியாகும் கடவுளாகவும் காத்திடும் நிலையாகவும் அதை மாற்றிடும் நிலையாகவும் வருகின்றது.
1.உயிரே கடவுள்
2.எண்ணும் எண்ணமே இறைவன்
3.இறையின் செயலே நமக்குள் தெய்வமாக உள் நின்று இயக்குகின்றது.
நம் உயிரைக் கடவுளாக மதித்து அவன் துணையுடன்
1.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்
2.அகஸ்தியன் கண்ட அகண்ட அண்டத்தையும் நாம் அறிவோம்.
3.மரணமில்லா பெரு வாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.
4.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து வாழ்ந்திடுவோம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…!


தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான்… மனிதன்…!
கல்கியில் வந்த உலகம் சுற்றும் நிலையில் கல்கிக்கே மீண்டும் வருகின்றது. இந்நிலையில் வடிகட்டி வந்தவர்கள் தான் கல்கியில் அவதரிக்கின்றார்கள்.
இந்நிலையில் கல்கியில் அவர்கள் நிலையை வைத்துத்தான் பிறிதொரு உலகம் வந்திடுமப்பா. அந்நிலையில் மண்டலங்களின் தன்மை மாறுபடுகின்றன. இவ்வுலகிற்கும் கல்கியில் வரும் உலகத்திற்கும் மாறுபடுகின்றது. மனிதனின் எண்ணமும் செயலும் மாறுபடுகின்றன.
அந்நிலையில் வாழ்பவர்கள் உயர்ந்த எண்ணத்தில் அந்நிலையை எய்திடத்தான் இப்பாடங்கள் எல்லாம்.
1.இந்நிலையில் உள்ள அற்ப ஆசைகளை மறந்து பெருநிலை ஏய்திடப்பார்.
2.வாழ்ந்து என்ன பயன்…? வாழ்ந்து என்ன பயன்…? என்கின்றார்கள்… வாழ்ந்த பயனை எல்லாம் கல்கியில் கண்டிடலாம்.
பெருநிலையை எய்திடவே பெருநிலையை எய்திடவே என்ற எண்ணம் புரியாத மனிதர்கள் வாழும் வாழ்க்கை இது.
பெருநிலை எய்திடு என்பது இவ்வுலக வாழ்க்கையில் சுற்றி வந்தவர்கள் எல்லோரும் பெருநிலை எய்திk கலகிக்கு வருபவர்களே.
1.எல்லாச் சித்தர்களும் ஞானிகளும் காலம் காலமாகத் தவம் இருந்த தவசிகளும்
2.பெருநிலையை எண்ணித்தான் கல்கிக்கு வருகின்றார்கள்… அவர்களுடன் கலந்துவிடலாம்.
இக்கலியில் இப்பொழுது வாழும் மனிதர்களில் முதல் ஜென்மத்தில் விட்ட குறையை இந்த ஜென்மத்தில் எய்தி விட்டால் அப்பெருநிலையான கல்கியில் நாமும் கலந்திடலாம்… பல கோடித் தேவாதி தேவர்களுடன். பாட நிலை புரிந்ததா…?
விடிய விடியக் கேட்டுவிட்டு விக்கல் நிற்க என்ன மருந்து…? என்று கேட்டால்
1.நினைவின் எண்ணத்தினால் வருவது தான் அவ்விக்கல். அவ்விக்கலுக்கே மருந்து தேடினால் விக்கலுக்கு ஏதப்பா மருந்து…?
2.விக்கலுக்கு மருந்து இல்லை… எண்ணும் எண்ணத்திற்கும் மருந்து இல்லை… விடியும் விடிவிற்கும் மாற்றில்லை.
3.ஈசனின் சக்தியில் உதித்ததப்பா உனக்குள்ளே அவ்வண்ணம்.
4.ஜெபநிலையில் மனநிலையைக் கலந்திடப்பா உன் நிலைக்கே புரிந்துவிடும் உன் நிலை என்ன…? என்று.
இன்றுள்ள மனிதர்களுக்கு ஆயுள் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் அறிவு நிலையும் ஆயுள் நிலையும் ஆண்டவன் அளித்த பொக்கிஷங்கள். அறிவினால் ஆயுளை வளர்க்கின்றான் இக்கலியில் மனிதன்.
அவன் எண்ணம் அவன் வைத்தியத்தில் வந்தது என்று… இல்லையப்பா எண்ணத்தில் வந்ததப்பா ஆயுள் நிலை. ஜீவ எண்ணத்தில் வந்ததப்பா அவ்வாயுள் நிலை.
மனித உடலில் ஆசை உள்ளவன்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையுடன் எண்ணுகின்றான் அவ்வீசனை. அவன் எண்ணத்தின் வடிவினிலே அவனுள் இருக்கும் ஈசனே அவனைச் சுற்றுகின்றான். அவ்வெண்ணத்தின் தன்மையினால் அவனின் ஜீவனும் வாழ்கின்றது
1.எண்ணத்தைக் குறுக்கிட்டு… வாழ்ந்து என்ன பயன்…? இருந்து என்ன புண்ணியம் வரும்…? என்று
2.வரும் வியாதியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் அவ்வெண்ணத்திலே சுருங்கி விடுகின்றான்
3.அவன் உடலில் உள்ள உறுப்புகளும் உணர்வுகளும் இவ்வெண்ணத்தினுள்ளே சுருங்கி விடுகின்றன.
ஆயுள் முடிந்து இறக்கின்றான் என்பது அல்ல. அவனின் “எண்ணம் சுருங்கி… மனம் சுருங்கி… பெரும் பயத்தில் உள்ளவனிடம்… “சோர்வு நிலையில் பிரிந்து செல்வதுதான் ஆவியின் நிலை…”
வாழ்ந்திட வேண்டும் என்று ஆசை உள்ளவன் வாழுகின்றான் பல நாட்கள்.
1.உயிர் பிரிவது எல்லாம் காலன் (எமன்) பிரித்துச் செல்வதல்ல
2.இவனின் எண்ணத்தாலும் சோர்வாலும் சோகையினாலும் வருவதே அவ்வியாதிகள்.
3.அவ்வியாதியில் உள்ளவன் எண்ணும் எண்ணத்திலேயே… “தன் உயிர் பிரிந்து விடும்” என்ற பயத்திலேயே பிரிந்து செல்வது தான் அவ்வாவி.
எந்நிலையில் உள்ளவனும்… “வாழ வேண்டும்” என்று ஆசை இருந்தால் தன்னுள் இருக்கும் ஈசனின் சக்தியை ஒருநிலைப்படுத்தி வேண்டுபவனெல்லாம் வாழ்கின்றான். மருந்தும் மாயமும் அல்ல பல நாட்கள் வாழ்வதெல்லாம்.
பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஆண்டவன் இட்ட பிச்சை என்கின்றோம். இயற்கை என்கின்றோம். எதுவப்பா பிச்சை எதுவப்பா இயற்கை…?
அணுவின் பாடத்தையும் ஆவியின் பாடத்தையும் எண்ணிப் பார்த்தால் பிறப்பு இறப்பு எல்லா இரகசியங்களும் புரிந்துவிடும். இன்றைய ஜீவாதாரத்தின் பாடங்கள் புரிந்ததா…?
பிறப்பு இறப்பு என்பதைப் புரிந்து கொண்டீர்களா…? தன் மனநிலையில் இருந்து தான் மடிகின்றான்… வாழ்கின்றான் மனிதன்.
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபமெல்லாம் ஜெபித்திடவே
ஜெப அருளைத் தந்திடுவாய்
ஜெபித்திடுவேன் ஈஸ்வரனை
ஜெபித்திடுவேன் அவன் சக்தியை
ஜெபித்திடுவேன் ஓம் என்ற நாதத்தில்
ஜெபித்திடுவேன் ஜெபித்திடுவேன் ஓம் ஈஸ்வரா
ஜெபித்த நிலையில் நீ வந்து ஜெபமாக்கித் தந்திடுவாய்
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.நாம் கவர்வது (சுவாசிப்பது) எல்லாம் மணமாக மாறுகின்றது.
2.அந்த மணத்தை நுகரும் பொழுது அது உணர்வாக ஆகின்றது
3.அந்த உணர்வின் தன்மை தான் இயக்கம் ஆகின்றது
4.அந்த உணர்வின் தன்மை தான் செயலாகின்றது
5.அந்த உணர்வின் தன்மை தான் உடலாகின்றது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான்
6.ஆலயத்திலிலுள்ள தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களையும் வைரக் கிரீடத்தையும் வைத்து
7.மலர் மாலைகளையும் பல ஔஷதங்களையும் வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.
தெய்வத்திற்குத் தங்க ஆபரணங்களை மார்பில் அணிந்து காட்டி உள்ளார்கள் என்றால் அந்தத் தங்கம் எப்படி மங்காது இருக்கின்றதோ
1.அந்தத் தங்கத்தை போல என் மனம் மங்காது இருக்க வேண்டும்
2.இந்த ஆலயம் வருவோருக்கெல்லாம் அவர்கள் மனம் மங்காத நிலை பெற வேண்டும்
3.நாம் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் மனம் மங்காத நிலையில் வரவேண்டும்…
4.தங்கத்தைப் போல அவர்கள் மனங்கள் வளர வேண்டும் என்று எல்லோரையும் எண்ணும்படி செய்கிறார்கள்.
ரோட்டில் செல்லும் பொழுது ஒருவன் அடிபட்டுக் கீழே விழுகின்றான். அடப் பாவமே… யார் பெற்ற பிள்ளயோ…? என்று உற்றுப் பார்க்கின்றோம். வேதனையான உணர்வை நுகர்கின்றோம்.
ஆனால் அவன் அடிபட்டிருந்தாலும் அவனை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே “அவன் உடல் நலம் பெற வேண்டும்” என்று எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்க வேண்டும்…
1.உடனடியாக நல்ல உணர்வை எடுக்க வேண்டும் என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர்…
2.உயர்ந்த பண்புகளையும் எண்ணி எடுக்கும்படி செய்தனர் ஞானிகள்.
ஆலயத்தில் கனிகளை வைத்துக் காட்டியிருக்கின்றார்கள். கனிகளைப் பார்த்த பின் அதனின் சுவையை எண்ணி… அதை உட்கொள்ள வேண்டும் என்று எப்படி விரும்புகிறோமோ அதே போன்று அந்தக் கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
ஆண்டவனுக்குச் சுவை கொண்ட பொங்கலையும் படைத்து வைத்திருக்கின்றார்கள். பலவற்றையும் சேர்த்துச் சமைத்துச் சுவைமிக்க நிலையாக அந்தப் பொங்கலை உருவாக்கியது போன்று
1.வாழ்க்கையில் வரும் அனைத்து உணர்வுகளும் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக நமக்குள் விளைய வேண்டும்
2.எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் சுவை கொண்ட வாழ்க்கையாக வாழ வேண்டும் என்றும்.
3,இப்படி உயர்ந்த பண்புகளை எண்ணி எடுப்பதற்குத் தான் அங்கே பொங்கலை வைக்கும்படி காட்டுகின்றார்கள்.
4.பல பல சுவை கொண்ட பதார்த்தங்களையும் அங்கே வைக்கின்றார்கள்.
இது எல்லாம் துவைதம்… கண்ணுக்குப் புலப்படக் கூடியது. இதை வைத்துக் கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த சக்திகளை எண்ணி எடுக்கும்படி செய்கிறார்கள் ஞானிகள்.
சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…! (ஞானகுரு).

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அகத்திற்குள் அறிந்த உணர்வை முதலில் பெற்றவன் அகஸ்தியன். அவன் அறிந்திட்ட அறிவு அவனில் விளைந்த உணர்வுகள் இன்றும் இங்கே பரவிக் கொண்டுள்ளது.
அந்த அகஸ்தியனின் அருள் உணர்வுகளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தியானியுங்கள்.
நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருளை ஏங்கிச் சுவாசித்து நம் உயிருடன் இணைத்து அந்த உணர்வின் உணர்ச்சிகளை உடலுக்குள் பரவச் செய்ய வேண்டும்.
1.அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளை நம் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கப்படும் பொழுது
2.அவனறிந்த உணர்வும் அவன் ஒளியாக மாற்றிய உணர்வும் நாம் பெற முடியும்.
3.இவ்வாறு நம் உடலில் உள்ள அணுக்களை மாற்றினால் அவை அதனுடைய வேலைகளை அதைச் செய்யும்.
கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாற்றி விண்ணின் உணர்வின் உணர்வினைத் தனக்குள் ஒளியாக்கி எந்த விண்ணின் நிலை அகஸ்தியன் பெற்றானோ… அவன் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.
இன்று நட்சத்திரங்கள் பல வகை செய்தாலும் இந்தப் பிரபஞ்சத்தில் வரும் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்றது துருவ நட்சத்திரம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அவர்கள் பெற்ற அருள் ஒளியின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று
1.உயிரான ஈசனிடம் வேண்டித் தியானிக்க வேண்டும்.
2.உங்கள் நினைவு துருவத்தை நோக்கிச் செல்லட்டும்.
3.துருவ நட்சத்திரத்துடன் உங்கள் நினைவாற்றல் இணையட்டும்.
சூரியனின் கதிரியக்கங்கள் கவர்ந்து பரப்பும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து…
1.உங்கள் உயிருடன் இணைத்து உங்கள் உடலிலே பரவச் செய்யுங்கள்.
2.உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்
3.உங்கள் உடலிலுள்ள அணுக்களை அவ்வழியில் பெறும்படிச் செய்யுங்கள்.
4.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வை உங்கள் உடலுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள்.. ஒவ்வொரு அணுக்களிலும் ஒன்றிடச் செய்யுங்கள்.
5.துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிட வேண்டும் என்று உயிரான ஈசனிடம் உணர்வைச் செலுத்தி ஏங்கிப் பெறச் செய்யுங்கள்.
உங்கள் உடல் அணுக்கள் அனைத்தும் ஏகாந்த நிலை என்னும் உணர்வின் தன்மை கொண்டு மகிழ்ந்திடும் உணர்வுகள் பெற்று பேரின்பப் பெரு நிலை என்ற உணர்வின் உணர்ச்சிகளை ஊட்டும்.
இப்பொழுது உங்கள் உடலில் மகிழ்ச்சியும்
1.“மகதம்” என்ற அருள் மகத்தான அருள் அணுக்களாக
2.அருள் சுவையின் உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெறும்.
நஞ்சு மோதி ஈர்க்கும் சக்தி பெற்றது. இதைப் போன்று நமது துருவப் பகுதி வழியாக பூமிக்குள் வரும் உணர்வினைத் துருவ நட்சத்திரம் “அந்த நஞ்சுடன் மோதி அதை ஒளியாக்குகின்றது…”
1.தனக்குள் மோதும் நஞ்சினை அந்தத் துருவ நட்சத்திரம் ஒளியாக்குவது போன்று
2.உங்கள் உணர்வின் தன்மையும் இன்று உங்களில் மோதும் நஞ்சினை…
3.ஒளியின் உணர்வாக ஒளியின் சிகரமாக மாற்றும் நிலைக்கு வரும்.
4.அதைத் தான் இப்போது உங்களுக்குப் பழக்கப்படுத்துகின்றோம்
அந்த உணர்வினை உங்களுக்குள் பிரம்மமாக்குங்கள். உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். ஒளியாக மாற்றும் அந்த உணர்வுகள் உருப்பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
நஞ்சின் மோதலில் ஒளியின் உணர்வாக உருவாக்கிய உணர்வினை உங்கள் உடலில் உள்ள அணுக்களை அவ்வழியில் அதனை… அந்தப் பிரம்மத்தை உருவாக்குங்கள்.


அகஸ்தியனைப் (துருவன்) பற்றிய உண்மைகள் பலவாறு திரிபுகள் ஆகிவிட்டது
அகஸ்தியன் என்று கூறும் அந்தச் சிசு தாய் கருவிலே இருக்கப்படும் போது… தாய் தந்தையர் அவர் உடலில் அரைத்துப் பூசிய நஞ்சினை வென்றிடும் பச்சிலை மூலிகைகள் தாவரங்கள் மணங்களின் அந்த முலாம்களை நுகர நேர்கின்றது.
1.நுகர்ந்த உணர்வுகள் அது கருவிலே இணைகின்றது
2.இணைந்து நஞ்சினை வென்றிடும் அணுக்களாகப் பெருகுகின்றது
இப்படிப் பத்து மாதங்களும் பெற்றுப் பிறந்த குழந்தைதான் பிறந்த பின் சூரியனை நேரடியாக உற்றுப் பார்க்கின்றது. சூரியனைப் பார்த்தால் நமக்கெல்லாம் கண் கூசுகின்றது
1.ஆனால் மோதலில் ஒளிப் பிளம்புகள் வெளி வருவதை இவன் உற்றுப் பார்த்து
2.அந்த உணர்வின் தன்மையைக் கண்டு சிரிக்கின்றான்… மகிழ்கின்றான்.
இந்தப் பிரபஞ்சத்தையும்… அதன் தொடர் அலைவரிசைகள் எங்கே செல்கின்றது என்பதை இளமைப் பருவத்தில் அவன் உணர்கின்றான் மகிழ்கின்றான்…! இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் நிலை இல்லை.
27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதும்… அதன் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு இன்னொரு நட்சத்திரம் மோதுண்டு மத்தாப்பைப் போல் பொறியலைகள் மாறுவதும்… ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வு மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதும்… இதைப் போன்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான்.
1.விஷத்தை அடக்கி அந்த உணர்வின் இயக்கமாக வரும் பொழுது
2.அவன் நுகரும் உணர்வுகள் அவனது உயிர் இதற்குள் அந்த ஞானத்தின் வழித் தொடராக உருவாக்குகிறது
3.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்திற்குள் விளைகின்றது… வெளிப்படுத்தும் உணர்வு இல்லை.
4.ஆனால் நுகர்ந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது.
இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காடுகளுக்குள் சென்றால் மற்ற உயிரினங்கள் மிருகங்கள் விஷ ஜந்துக்கள் எவையும் இவர்கள் அருகில் வருவதில்லை.
ஐந்து வயது வரப்படும் பொழுது தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதும்பி வருவதும்… இவனுக்குப் பின் வருவதும்… இப்படி காட்டுக்கே இவன் ஒரு அரசன் ஆகின்றான்.
அதே சமயத்தில் இவனைப் பின் தொடர்ந்து சென்றால் அங்கே மக்கள் அனைவரும் மற்ற கொடூர மிருகங்களிடமிருந்து காக்கும் பண்பும் பெறுகின்றனர்.
பிற்காலங்களில் துருவனை அரசன் என்று வைத்தார்கள் அதற்குப்பின் அவனுடைய சரித்திரம் வராது. அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று இருக்கும்
1.ஆனால் அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர
2.அந்தத் துருவன் எவ்வழியில் விண்ணுலகம் சென்றான்…? என்ற நிலைகள் இல்லை.
ஆகவே புலஸ்தியர் சொன்னார் என்ற காவியங்களில் எடுத்திக் கொண்டால்… ஓர் அரசனுக்கு இரண்டு மனைவிகள்… அவரவர்களுக்குக் குழந்தைகள் உண்டு. அரசனுடன் பழகி இருக்கும் குழந்தையை தன் மடி மீது வைத்து அந்தத் தாய் கொஞ்சுகின்றது. இன்னொரு தாயின் மகன் (துருவன்) தன் தந்தையிடம் வந்து அமர்ந்து கொஞ்ச வேண்டும் என்று வரப்படும் பொழுது இந்த்த் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.
ஆகையினால் அவன் வெறுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றான்… தவம் இருந்தான் என்று உண்மைக்கு மாறாக உண்மையின் இயக்கங்களை அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.
துருவனின் உண்மை நிலைகளை நாம் அறிந்திடாது அரசர்களுக்கு உகந்த நிலைகள் கொண்டு பல நிலைகளைச் சொல்லி காவியங்களைப் படைக்கச் செய்து அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் பல பல காவியங்களாக மாற்றி மகாபாரதம் இராமாயணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றார்கள்.
கந்தபுராணம் சிவபுராணம் என்று வந்தாலும் விநாயகன் என்ற நிலைகள் அகஸ்தியன் வணங்கினான் அதனால் அவனுக்குச் சக்தி ஏற்பட்டது அவனிடம் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியாது என்று இப்படி அகஸ்தியன் கதைகளைச் சாற்றி அதனுடைய முழுமையைக் காட்டாதபடி விட்டுவிட்டார்கள்.
1.காவியத் தொகுப்புகளை ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு தக்கவாறு வெளிப்படுத்தி
2.நூல்களை படித்தவர்கள் உண்மை நிலைகளை அறியாது தான் படித்ததை தனக்குத் தெரிந்ததைப் பெரிது என்று வாதித்துக் கொண்டிருப்பதும்
3.உண்மை நிலைகள் உணராதபடி இதனைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாக ஜெபிக்கப்பட்டு
4.அதைக் கேட்டுப் பதிவான நிலைகள் கொண்டு அவர்கள் இறந்தால்… இறந்த பின் அதே மந்திர ஒலிகள் கொண்டு
5.அந்த ஆன்மாக்களைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகத் தான் வருகின்றது.
அகஸ்தியனைப் பற்றிய உண்மைகள் காலத்தால் இப்படித் தான் திரிபுகள் ஆகிவிட்டது.

ஜீவாதாரம் – பிழைக்கும் வழிக்குத் தேவையான சொத்து
ஜீவன் பிறந்து அந்த ஜீவன் வளர்வதற்கு இந்த ஜீவனுக்கு ஆகாரம் தேவை. எல்லா ஜீவராசிகளுக்குமே ஆகாரம் தேவை. மற்ற ஜீவராசிகள் எண்ணமெல்லாம் தன் ஆகாரத்தை எந்த நிலையில் பெறுவது…? என்ற ஒரே குறிதான்.
ஜீவன் எடுத்து முடியும் வரை அதன் எண்ணமெல்லாம் அதன் ஆகாரத்தை எடுத்துப் புசித்து… உண்டு வாழ்ந்து மடிவதுவே.
ஆறறிவு படைத்த ஜீவன் உள்ள மனிதனுக்கு அவ்வாகாரத்தை அடைவதற்குத் தன் அடுத்த அறிவைப் பயன்படுத்துகின்றான். அடுத்த அறிவு என்பது ஜீவராசிகளுக்கு உள்ள அறிவை விட மனித அறிவு உயர்ந்தது.
ஐந்தறிவு ஆறறிவு என்கின்றார்கள். எண்ணப்படி அல்ல. அவ்வறிவு ஆவி உலகத்தின் பாடத்தில் பகர்ந்துள்ளேன்… மற்ற மிருக ஜீவராசிகள் எப்படிப் பிறக்கின்றன…? என்று.
எறும்புக்கும் ஐந்து அறிவு தானா…? யானைக்கும் ஐந்து அறிவு தானா…? இவர்கள் சொல்வது போல் ஜந்துகளுக்கு ஐந்து அறிவு அல்ல… மனிதனுக்கு ஆறு அறிவும் அல்ல.
1.அவனவன் செய்த பாவம் புண்ணியங்களில் எடுத்திட்ட பிறப்பிற்கு இவன் மனிதனாகின்றான்
2.அது செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப மிருகமாகின்றது மற்ற ஜீவராசியாகிறது.
மனித உடலில் உள்ள எல்லோருமே அவர்களுக்கு அளித்த ஆறு அறிவைப் பயன்படுத்துகிறார்களா…? ஆறு அறிவு தான் எல்லா மனிதர்களுக்கும் அளித்துள்ளானா அந்த இறைவன்…?
ஆறு அறிவு அல்லப்பா அவ்வறிவு. ஆறுமுகா என்று சொல்கின்றோம் ஆறுமுகனுக்கு ஆறுமுகங்கள் இருந்தனவா…? எண்ணி வந்தானா இம்மனிதன்…?
ஆறுமுகா என்பதன் பொருளே…
1.ஆறு வகைக் குணங்கள் படைத்த மனித மனத்திற்கு ஒத்துத் தான்…
2.கடவுளுக்குப் பெயர் வைத்து விட்டான் ஆறுமுகன் என்று.
இறைவன் சக்தியில் மனிதனுக்கு அளித்துள்ள குணங்கள் ஆறு. நற்குணங்கள் ஆறு. அவன் உடலில் உள்ள பல கோடிக் குணங்களைப் பகர்ந்திட்டால் அவன் எண்ணி வைத்த மனிதர்களின் ஆறு குணங்கள் என்னப்பா…?
ஆறு அறிவு படைத்த மனிதன் என்பதெல்லாம் மனிதனில் இருந்து மாறுபடும் ஜீவராசிகளுக்கு மனிதனின் நிலை மாறுபடுகின்றதல்லவா…! மற்ற ஜீவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிலையைப் பிரித்துக் காட்டிடப் பகர்ந்திட்டேன் இவையெல்லாம்.
மனிதன் ஜீவிப்பதற்கு அவனுடைய “ஜீவாதாரம்” மிக முக்கியம். மனிதன் நிலையும் மிருகத்தின் நிலையும் மாறுபடுகின்றது என்றேன். மனிதனின் நிலையில் இருந்து அவன் வாழ்வதற்கு ஜீவனுள்ள ஜீவாதாரத்திற்குப் பொருள் முக்கியம்.
இன்றுள்ள மனிதர்களுக்குப் பொருள் முக்கியம். ஆனால் ஆதியில் மனிதன் அன்னம் புசித்திடவில்லை. தன் இனத்தைத் தன்னைத்தானே அடித்து உண்டிட்டான்.
இராமாவதாரத்திற்கு முன்பு மனிதர்கள் எல்லாம் மிருக நிலையில் இருந்தவர்கள் தான். ஒன்றை ஒன்று அடித்துத் தன் பசியைப் போக்கிக் கொண்டவர்கள்.
பிறகு ஒரு நிலையில்… மிருகத்தின் தன் இனத்தைத் தவிர மற்ற இனத்தை அடித்துப் புசித்தார்கள். அதற்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் தன்னிச்சையில் வளர்ந்த காய்கறி இலைகளைப் பறித்துப் புசித்தார்கள்.
அந்நிலையில் ஒரு உலகம் சுழன்று கொண்டிருந்தது. அவ்வுலக நிலை மாறி… அந்நிலையில் இருந்து மீண்டவர்கள் இராமாவதாரத்தில் வந்து தேவர்கள் என்ற பெயருடன் புதிய உலகம் கண்டார்கள்.
இராமாவதாரத்தின் சுழற்சியில் வந்த கடைசிக் கலி இது. இக்கலியின் தன்மை மாறி கல்கி சுழலப் போகின்றது.
இராமாவதாரத்தில் இருந்து தான் இந்த ஜீவாதாரத்திற்கு பொருள் தேடி தன் வழியில் அப்பொருளைத் தேடிப் பக்குவம் செய்து புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த நிலை பெரும் நிலையப்பா.
காலப் போக்கில் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததப்பா பெரும் கஷ்டங்கள் எல்லாம். ஆதியில் மனிதன் மனிதனையே அடித்துப் புசித்திட்டான். இராமாவதாரத்தில் இருந்த உலகத்தில் தப்பி வந்தவன் தான் கிருஷ்ணாவதாரத்தில் உதித்திட்டான்.
அந்நிலையில் ஜென்மங்கள் மாறி கிருஷ்ணாவதாரத்தில் வந்தவர்கள் அனைவரும் ஒருவனை ஒருவன் வஞ்சனையாலும் பெரும் சூழ்ச்சினாலும் சிக்க வைத்துத் தன் பொருளைச் சம்பாதித்து மகிழ்ந்தான்.
அடுத்த அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் தன் நிலையை உயர்த்திட… உயர்த்திட என்பது அவர்கள் வழியில் பொருளைச் சேர்த்து வைத்திடப் பெரும் புதையல்… பொக்கிஷம் என்றதெல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு மறு அவதாரத்தில் வந்தவர்கள் எல்லோரும் “புதைத்து வைக்கும் நிலையை” உண்டு பண்ணினார்கள்.
அந்நிலையில் இருந்து வந்த இக்கலி மனிதர்கள் தான் செயற்கை யுகத்தைக் கலந்து விட்டார்கள் காலப்போக்கில் செயற்கையின் தன்மைக்குப் பொருளைத் தேட… “மிக முக்கியமான ஜீவாதாரத்தின் வழியையே” மாற்றி விட்டார்கள்.
ஜீவன் தோன்றி வளர்வதற்கு அப்பொருள் முக்கியம் அப்பா.
1.தன் ஜீவனை வளர்த்திடத் “தன் வாழ்க்கைக்கு வேண்டியதை” எண்ணுவதில்லை இம்மனிதர்கள்.
2.பெரும் செயற்கையின் காலத்தில் தள்ளுகின்றார்கள் இம்மனிதர்கள்.
3.இச்செயற்கை ஆசையின் உந்தலினால் தான் ஜீவாதாரத்தின் தன்மையை மாற்றித் “தான் மகிழ” என்ற நிலையையும் எடுக்கின்றார்கள்.
ஜீவாதாரத்தை மறந்து மதம் மதம் என்று செயற்கையுடன் கலக்கி விட்டார்கள். தான் பிழைக்கும் வழிக்கு என்கின்றார்கள்… தான் பிழைக்கும் வழிக்குப் பெரும் சொத்தைச் சேர்க்கின்றார்கள்.
பிழைக்கும் வழிக்குச் சொத்து எதற்கப்பா…? சொத்து என்று சேர்ப்பது என்னப்பா…? அவர்கள் வழியில் “பணம் காசு தான் சொத்து” என்கிறார்கள். பெரும் சொத்து அதுவல்லப்பா.
தான் பிறந்து வளரும் நிலையில்
1.தன் ஜீவாதாரத்தில் “போதும்…” என்ற நிலையில் பெற்ற பயனை எடுத்து
2.பெற்ற மக்களுக்கும் நல் போதனையில் நல்லறிவு புகட்டி தர்ம நியாயம் அளித்து
3.தான் பெற்ற மக்களை நல் உணர்வுடன் வளர்ப்பவனும்
4.தான் என்றால் யார்…? என்று புரிந்து நடப்பவனும் அடைந்த சொத்து தானப்பா பெரும் சொத்து.
இக்கலியில் அந்நிலையில் வாழ்வது பெரும் அரிது… அரிதப்பா அரிது. இக்கலியிலிருந்து தப்புவது அரிது. கலியில் உள்ள மனநிலை எல்லாம் மற்றவனைப் பார்த்துத் தான் தன் நிலையில் வாழ்கின்றான்.
இது புரிந்ததா…?
1.அவன் அந்நிலையில் வாழ்கின்றானே – தன் நிலை அப்படி இல்லையே…!
2.தானும் அவனைப் (மற்றவனை) போல் வாழ்ந்திட முடியாவிட்டால்
3.அவனைப் பார்த்துத் துவேஷ எண்ணமும் தன் நிலையில் பெரும் சோர்வும் அடைகின்றான்.
இந்நிலையில் உள்ளவனின் நிலைதானப்பா இக்கலியில் உள்ளவர்கள் நிலையெல்லாம். பெரும் பேராசைக்காரனப்பா இக்கலியின் மனிதன். இவன் விட்ட சுவாசத்தினால் இக்காற்று மண்டலமே கரியாகிவிட்டதப்பா. இந்நிலையில் வளரும் பயிர்களை உண்டவன் அவன் எப்படியப்பா இருப்பான்…?
காலம் எப்படிச் சுழலுகின்றதோ நற்காற்றுடன்… அந்நிலையில் வரும் தன்மை வேறப்பா…! இவன் விட்டிடும் நஞ்சு… காற்றுடன் சுற்றிடும் உலகம் வேறு எப்படிப்பா இருந்திடும்…?
ஜீவாதாரத்தை மாற்றி விட்டான் ஜீவனுக்கே பெயர் வைத்திட்டான் ஆறறிவு ஐந்தறிவு என்று…! பாடநிலை புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அடிக்கடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து நம் உடலுக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். அதைத் தான் “பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன்…” என்று சொல்வது.
சந்தர்ப்பத்தால் இணைவது எதுவாக இருந்தாலும் அது பிரம்மம் தான். ஆனால் அந்த மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து அதை உருவாக்கத் தெரிந்து கொண்டால் கார்த்திகேயா…!
அதாவது புறத்திலே பார்க்கும் போது
1.தீமை என்று ஒன்றைத் தெரிந்து கொள்கின்றோம்…
2.அந்தத் தீமையை அகற்றத் தெரிந்து கொள்கின்றோம்…
3.ஆனால் தீமையை அகற்றும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் உருவாக்க வேண்டும்…
4.அது நம்மால் முடியும் என்ற நிலைக்கு வரவேண்டும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்து இணைத்து… தீமையை அகற்றும் சக்தியாக நமக்குள் உருவாக்கிக் கொண்டே வர வேண்டும். இது மிகவும் முக்கியமானது.
அதனால்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.
சந்தர்ப்பத்தால் தீமைகளைக் கேட்க நேர்ந்தாலும்… அது நம் ஆன்மாவில் மோதி இயக்கினாலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று இதை இணைத்து உருவாக்க வேண்டும்.
1.பரிணாம வளர்ச்சியில் மற்ற உயிரினங்கள் எல்லாம் தன்னைக் காட்டிலும் வலுக்கொண்ட நிலைகளை எண்ணிப் பார்க்கின்றது.
2.அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தான் தனக்குள் உருப் பெறச் செய்கின்றது.
அதனுடைய சந்தர்ப்பம் இப்படி உருப்பெறும் பொழுது அது வளர்ச்சியாகி அந்த உடலை விட்டு அகன்ற பின் அந்த வலிமையான உடலுக்குள் சென்று பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
ஆனால் நாம் தீமை செய்வோரின் உணர்வை எடுத்துக் கொண்ட பின்… தீமை செய்வோரையே எண்ணி… அந்தத் தீமை நமக்குள் வலிமையாக வளர்ந்து விட்டால் அது நம்மைத் தேய்பிறையாக மாறுகின்றது.
அப்படித் தேய்பிறையாக மாறாதடி நாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை மாற்றி நமக்குள் உருவாக்க வேண்டும்.
ஏனென்றால்…
1.நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதன் வழி தான் நம் உயிர் அதை உருவாக்குகின்றது…
2.அணுவாக உருவாக்குகின்றது உணர்வின் சத்தைப் பதியச் செய்கின்றது.
3.அதையே மீண்டும் எண்ணும் பொழுது கடவுளாக நின்று அந்த வழியிலேயே நமக்குள் உருவாக்குகின்றது.
ஆகவே நாம் எண்ணியது எதுவோ உயிர் அதை உருவாக்குகின்றது. உருவாக்கியதை… மீண்டும் அந்த எண்ணத்தை வலு சேர்க்கும் போது அந்த வளர்ச்சி நமக்குள் பெறுகின்றது. இது எல்லாவற்றுக்கும் பொதுவானது தான்.
அதே போல் தான் யாம் கொடுக்கும் அருள் உபதேசங்களை ஒரு தடவை பதிவாக்கி விட்டு அதற்குப் பின் அப்படியே விட்டு விட்டால் மீண்டும் அதற்கு உணவு கிடைக்க வேண்டுமல்லவா…!
1.நேற்று சாப்பிட்டால் இன்று ஏன் சாப்பிட வேண்டும் இன்று விட்டு விட்டால் என்ன ஆகும்…?
2.அது போல் தான் தியானம் இருந்தோம்… ஆத்ம சுத்தியும் செய்தோம்…
3.மீண்டும் மீண்டும் அதை எல்லாம் எதற்குச் செய்ய வேண்டும்…? என்று விட்டுவிட்டால்
4.சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் தீமை நமக்குள் வலுவாகி விடும்.
5.கொடுத்த சக்தியை வளர்ப்பது தடையாகிவிடும்.
இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்குத்தான் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) அனுபவமாகக் கொடுத்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
1.நரசிம்மன் என்றால் உயிர்…
2.வாசல்படி என்பது நம் மூக்கு..
3.மடி என்பது ஆன்மா…
4.இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு…!
நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.
இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள். (அதாவது நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும்).
ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.
முன் வழி கூடி நீக்க முடியுமா…? என்றால் முடியாது. அதாவது…
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.
எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால்… எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்…
2.உட்கார முடியாது… ஆட்டம் கட்டும்… எப்படியோ வரும்…
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.
தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்…! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்…! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.
கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.
அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.
அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.
அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு வருகின்றோம்.
ஆகவே கார்த்திகேயா…! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).


முக்காலத்தையும் அறியும் சக்தி கொடுக்கின்றோம்
காட்டுப் பகுதிகளுக்குள் குருநாதர் அழைத்துச் செல்லப்படும் பொழுது அங்கே மனிதனும் மிருகங்களும் சந்தர்ப்பத்தால் மடிந்த நிலையில் அந்தச் சடலங்கள் மண்ணிலே பதிந்து கிடக்கும் போது
1.அந்த அழுகிய உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியன் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
2.மற்ற தாவர இனங்களில் வெளிப்பட்ட உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்வதும்
3.இன்னொரு விஷச் செடியின் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்வதும்
4.அதே சமயத்தில் முதலில் சொன்ன தாவர இனத்தின் மணம் அழுகிய மணத்தைக் கண்டு அஞ்சி ஓடி வரப்படும் பொழுது
5.மனித உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள் விஷச் செடியின் மணத்திலே தாக்கிய பின் கிறு கிறு என்று சுழன்று
6.இது அனைத்தும் ஒன்றாக சேர்த்து மனித உடலில் உருவான உணர்ச்சிகளும் கலந்து “புது விதமான செடியாக” உருவாகின்றது.
அந்தச் செடிகளை மனிதன் தொட்டால் “கரண்ட் இழுப்பது போன்று” சில செயல்களைச் செயல்படுத்துகின்றது. இதையே மருந்தாக அரைத்துக் கொடுத்தால் பல பகைமை உணர்வுகளை நீக்கும் சக்தியும் வருகிறது.
1.அதனுடன் எந்தெந்த மருந்துகளைச் சேர்த்தால் எந்தெந்தத் தாவரங்களைச் சேர்த்தால்
2.மனித உடலில் விளைந்த தீமைகளை ஊடுருவி அந்த உணர்ச்சிகளை எப்படி மாற்றுகின்றது…? என்பதை குருநாதர் காட்டுகின்றார்.
சில பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றார். ஆனால் அந்த இடத்திலே மிதித்த பின் கீழே ஒரு கொடி படர்ந்துள்ளது. கொடி மேல் என் கால் பட்ட பின் எனக்கு நினைவு இழந்து விட்டது. மறதிப் பூடு என்று சொல்வார்கள்…!
இந்த செடியினுடைய தன்மை என்ன…? ஏன் இப்படி வளர்ந்தது…? என்ற நிலைகளை குரு விளக்குகிறார்.
1.பல மனிதர்கள் உணர்வு கொண்டு ஒருவருக்கொருவர் இரக்கமற்றுத் தாக்கி இரத்தக்கசிவுகளாகி இருந்தால்
2.இதைப் போன்ற சில பூடுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அங்கே உருவானதால்
3.அங்கே தாக்கும் போது “அவர்கள் எப்படி நினைவிழந்தார்களோ” இதைப் போன்று
4.இந்தக் கொடியை மிதிப்பவர்களையும் நினைவிழக்கச் செய்கின்றது…?
ஆனால் மற்ற உயிரினங்களை நினைவிழக்கச் செய்வதில்லை.
மனிதர்கள் வரப்படும் பொழுது அவனுடைய உதிரம் அந்த உணர்வுகள் படர்ந்து இருப்பதனால் இந்த பூடுகள் எப்படி விளைகின்றது…? என்று தெளிவாக எனக்கு உணர்த்திக் காட்டுகின்றார்.
மனிதனாக நாம் வாழும் நிலையில் தாவர இனச் சத்தை நாம் நுகர்ந்த பின் அந்த உணர்வின் இயக்கங்கள் அது அணுக்களாக விளைவதும் அதன் வழி தான் பல கோடிச் சரீரங்களை மாற்றி வந்திருக்கின்றோம்.
ஒன்றுடன் ஒன்று… ஒன்றுடன் ஒன்று கலந்து… கலந்து… “வெங்காயச் சருகு போன்று அது தோடாக” (மேல் தோல்) எப்படி இருக்கின்றதோ நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொன்றும் மற்ற மிருகங்களிலிருந்து நுகர்ந்த உணர்வுகள்
1.அணுக்களில் அடுக்கடுக்காக மாறி அது ஒரு முழுமை அடைந்து
2.அந்த உணர்வைப் போல எத்தனையோ கோடி அணுக்கள் சேர்த்துத் தான் மனிதனாக உருவாகக் காரணமானது.
மிருகத்திலிருந்து மனிதனாகத் தோன்றிய நிலையில் அந்த உணர்வு கொண்டு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தியும் பெற முடியும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
1.நம்முடைய முப்பிறவிகளின் நிலையும் பார்க்கலாம்
2.இப்பிறவியின் வாழ்க்கையின் நிலையை அறியலாம்
3.அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையினையும் அறியலாம் என்பதை குருநாதர் காட்டுகின்றார்.
மனிதனாகப் பிறந்த நிலையில் இன்று இருக்கும் இந்த உடலில் இருந்தே நாம் பிறவியில்லா நிலை எப்படி அடைய வேண்டும்…? என்பதற்காகத்தான் இதை எல்லாம் குரு எனக்குக் (ஞானகுரு) காட்டினார்.

ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்
உலகத்தன்மையிலே ஈர்ப்பு நிலை இருந்து விட்டால் ஈசன் அருள் வந்ததப்பா. ஈர்ப்பு நிலையில் தான் இவ்வுலக நிலையே உள்ளதப்பா. மூச்சின் பாடத்தைப் பகர்ந்துள்ளேன்.
1.எந்நிலைக்கும் ஈர்ப்பு நிலை வேண்டுமப்பா…!
2.மனித மனத்திற்கு ஈர்ப்பு நிலை இருந்தால் தான் அவ்வீசனையும் வணங்கிடுவான்
ஈர்ப்பு நிலை ஈர்ப்பு நிலை என்பதெல்லாம் காற்றை இந்த பூமி தன்னுள் ஈர்ப்பதனால் தான் இப்பூமியே சுற்றுகிறது என்றேன். ஈர்ப்பு நிலையின் பாடங்கள் பல உள்ளன.
1.ஈர்க்கும் தன்மையை எடுத்துக் கொள்…!
2.எந்நிலைக்கும்… ஒருவர் சொல்வதையும் “நம் மனதில் ஈர்ப்பு நிலை இருந்தால் தான்” எடுத்துக் கொள்ள முடியும்.
3.அவ்வீர்ப்பு நிலையில் தான் ஈசன் அருளையும் பெற்றிட முடியும்.
அவ்வீர்ப்பு நிலையினால் தான் ஒரு தாயின் வயிற்றில் அக்கருவும் தரிக்கிறது மலரின் மணத்தை ஈர்க்கின்றது அவ்வண்டு என்ற வழிமுறை தெரிந்து இருக்கும்.
அதைப் போல் தான் தாயின் வயிற்றில் வந்து உதிக்கும் கருவின் நிலையும். மணங்களின் பாடம் பகர்ந்திட்டேன். ஒவ்வொரு உடலுக்கும் ஒவ்வொரு மணம் உள்ளது. பூவிற்கு மணங்கள் உள்ளது போல் மனித உடல்களுக்கும் அந்த மணங்கள் உள்ளன.
ஜென்மப் பலனைப் பகர்ந்திட்டேன் மணத்தையும் முதல் பாடத்தில் பகிர்ந்துள்ளேன் அக்கரு எப்படி வந்து உதிக்கிறது…? என்று.
இவ்வுலகத்தில் பல தேசங்கள் உள்ளன. எத் தேசத்தில் பிறந்தவனும் முதல் ஜென்மத்தில் விட்ட குறையினால் மறுஜென்மம் எடுக்கின்றான் என்பதைப் பகர்ந்து உள்ளேன்.
அண்டகோடியில் உள்ளவன் தன் ஆவி ரூபத்தில் தன் எண்ணத்தின் செயலை “எப்பிறவி எடுத்தால் முடித்திடலாம்…?” என்று எண்ணுகின்றான்.
அதனுடைய ஈர்ப்புத் தன்மையினால் தாயின் எண்ணத்தின் மணத்தை அறிந்து அத்தாயின் வயிற்றில் உதிக்கின்றான்.
பிறவி எடுப்பதற்கு முன் அவ்வாவிகளின் நிலை எல்லாம் ஈர்ப்புத் தன்மை தான். “ஈர்ப்புத் தன்மையே சுவாச நிலைதான்…” ஒருவர் எடுக்கும் மூச்சிலிருந்து அவர்களுடைய மணத்தையும் மனத்தையும் ஈர்க்கின்றது அவ்வாவிகள்.
அதிலிருந்து தான் அவ்வாவிகள் பிறக்கின்றன கருவில்… இப்பாட நிலை புரிந்ததா…?
1.மனித மனத்திற்கு வேண்டுமப்பா ஈர்ப்புத் தன்மை.
2.இவ்வுலகம் ஈர்ப்பதினால் தான் உன் நிலை நடக்கின்றது… நிற்கின்றது.
இவ்வுலக மண்டலத்திற்கு “பல மைல்களுக்கு அப்பால்… ஈர்ப்பு நிலை இல்லையப்பா…”
உலக மண்டலத்தில் உள்ளவர்கள் எல்லோருமே கலியில் வந்துள்ளார்கள் என்ற பாடத்தைப் பகர்ந்துள்ளேன். இவ்வுலகத்தில் உள்ளவர்கள் பிற மண்டலத்தில் பிறக்கின்றார்களா…? என்று சாமியிடம் கேட்டாய் எங்கும் பிறக்கின்றார்கள்… ஆனால் அந்த வழிகள் வேறு.
மனித ஜீவராசிகள் இவ்வுலகத்தில் உள்ளது போல் வேறு எந்த உலகத்திலும் இல்லையப்பா. வேறு உலகத்தில் ஜீவராசிகள் நிலை எல்லாம் உருளும் தன்மையில் தான் ஊரும் தன்மையில் தான் உள்ளதப்பா.
இவ்வுலகில் உள்ள ஈர்ப்பு தன்மை பிற மண்டலத்தில் இல்லையப்பா…! பிற மண்டலத்தின் தன்மை எல்லாம் மாறுபடுகின்றது.
இன்று விஞ்ஞானத்தில் பிற மண்டலத்திற்குச் சென்று உயிர் வாழப் போகின்றானாம்… நடந்து பார்க்கின்றானாம்… பயிர் செய்து பிழைப்பானாம்…! கால நிலையைக் கடத்துகின்றார்கள் பெரும் கஷ்டத்திற்குள்ளே.
ஜெப நிலையில் இருந்தவனுக்குத் தெரிந்துவிடும் பிற மண்டலத்தின் நிலை. இவ்வுலகம் ஈர்ப்புத் தன்மையில் நடப்பது போல் அந்நிலையில் அவன் நடந்துவிடுவானா…?
செயற்கையுடன் சென்று நடந்தேன் என்று செப்புகின்றானாம். எப்படி அப்பா நடந்திருப்பான்…? “உருண்டல்லவா சென்றிருப்பான்…!” இவ்வுலக நிலை எவ்வுலகிலும் இல்லையப்பா.
இவ்வுலகில் பிறந்த பயனைப் பெற்றிடுங்கள் என்பதெல்லாம் இதுவே தான்.
1.ஈர்ப்புத் தன்மைக்கும் மனநிலைக்கும் ஒத்திருந்தால் எல்லா நிலையும் ஈசனே பார்த்துக் கொள்வானப்பா
2.நம் நிலை வேறு நினைத்தாலும் அவ்வீர்ப்பு நிலையைத் தான் ஈசன் முடித்திடுவான்.
இதைப் போல்தான் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு சொல்லும்
1.அவ்வீசனின் நிலையில் ஈர்ப்பு இருந்தால் நடந்திடுமப்பா… ஈர்ப்பு நிலைப்பாடத்தை இதற்காகத்தான் பகர்ந்திட்டேன்.
2.மனதில் உள்ள எந்நிலையையும் அவ் ஈசனின் ஈர்ப்புக்கு விட்டு விட்டால் அவ்வீசன் பார்த்துக் கொள்வான் எல்லாமே… புரிந்ததா…?
ஈர்ப்பு நிலை வைத்திடம்மா… உன் நிலைக்கு மிகத் துரிதமாக எல்லா நிலையும் கிட்டிவிடும்… ஜெப நிலையும் தான்…!
ஒவ்வொரு மனதிற்கும் ஈர்ப்புத் தன்மை எப்படி அறிவு வளர்ச்சி என்று சொல்கின்றோமோ அதைப்போல ஈர்ப்புத் தன்மையும் மாறுபடுகின்றதம்மா.
ஒரே முறையில் பலர் சமைத்தாலும் சமையல் ருசியும் மணமும் மாறுபடுகின்றது கை வாக்கு என்கின்றார்கள்… அது “மனவாக்குத் தான்…”
அது ஒரு நாள் செய்த முறையிலேயே மறுநாள் சமைத்தால் அந்தச் சுவை இருப்பதில்லை. இது எல்லாம் மன வாக்குத் தான் அது. மனதின் ஈர்ப்பு நிலை எப்படி உள்ளதோ இதைப் பொறுத்துதான் எல்லாமே.
உன் மனதின் ஈர்ப்பை இன்று ஈசனிடம் செலுத்தி விடு நோயைப் பற்றி எண்ணிவிடாதே கலசம் வைத்ததின் பயனை நீ பெறுவாய்.
காட்சி:- நிறைய சித்தர்கள் ரிஷிகள் சுற்றி நின்று ஆசீர்வாதம் செய்தல்.
1.ஒரு சித்தர் அல்ல… பல சித்தர்கள் இங்கே வந்துள்ளோம்
2.சித்தாதி சித்தர்களின் ஆசிகளை அருளியுள்ளோம். பல கொழுந்துகளை ஆசீர்வாதம் செய்துள்ளோம்
3.வாரி இறைப்பேன் ஞானச் செல்வங்களை உனக்கு…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு உடலுக்குள் இந்த மாதிரி ஆவி இருந்தாலே நாம் தியானம் செய்கிறோம் என்று சொன்னாலே போதும். நம்மைப் பார்த்ததும்…
1.என்னை ஏதோ செய்கின்றான்… இதைச் செய்கின்றான்.. அதைச் செய்கின்றான்…! என்று சொல்ல ஆரம்பிக்கும்
2.நாம் ஒன்றுமே செய்யவில்லையே… இப்படிச் சொல்கிறதே…! என்று நினைப்பீர்கள்.
அந்த உணர்வை நுகர்ந்தாலே “நான் ஒன்றுமே சொல்லவில்லை இந்த மாதிரித் தவறாகச் சொல்கிறான்… பாவிப்பயல்…!” என்ற இந்த அலைகளில் சிக்கிவிடுவோம்.
அந்த மாதிரி நேரத்தில் எல்லாம்…
1.உடனே மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் எடுத்து வலுவாக்கிக் கொண்டு
2.அவருக்குள் இருக்கும் அந்த ஆவி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.அவருக்குள் இருந்து நன்மை செய்யும் செயல்கள் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
இதிலே நமக்கு அந்தத் துணிவு அவசியம் வேண்டும். அதனால் தான் நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும் என்று சொல்வது. அந்த இடத்திலே துணிவு இருந்தால் தான் அதைச் செய்ய முடியும்.
1.நமது குருநாதர் கொடுத்த நிலைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் வரிசைப்படுத்திப் பாருங்கள்
2.நன்மை செய்ய வேண்டும்… நமக்குள் அது வளர வேண்டும்… என்றால் அதற்குத் துணிவு வேண்டும்.
உடலில் ஆவி உள்ளவருக்கு அவர் கஷ்டப்படுகிறார் உதவி செய்ய வேண்டும் என்று நாம் சொன்னால் போதும்…!
ஐய்யய்யோ பாவிப் பயல்…! எனக்கு ஏதோ செய்கின்றான்… விஷம் வைக்கின்றான்… மருந்து வைக்கின்றான்…! என்று சொல்லும்… பார்க்கலாம் இதை எல்லாம்…!
அவர்கள் உடலில் இருக்கும் அந்த ஜீவான்மா (ஆவி) மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உடலிலிருந்து நன்மை செய்யும் நிலைக்கு வர வேண்டும் என்று நாம் எண்ணி எடுக்க வேண்டும்.
ஏனென்றால் இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் நல்லது செய்கின்றோம் என்றாலும் கூட அடுத்த வீட்டுக்காரர் நம்மைப் பற்றி இல்லாததை எல்லாம் சும்மா சொல்லிக் கொண்டே இருப்பார். காரணம் அவர் உடலில் ஒரு ஆன்மா இருக்கும்.
ஆக… ஆன்மா இல்லாதவர்களே இல்லை.
ஆனால் நம்மைக் கண்டவுடனே அதற்கு வெறுப்பாக இருக்கும்… உடலில் எரிச்சல் ஆகும்…! அப்படி நம்மை எரிச்சலுடன் பார்க்கும்போது நம் ஆன்மாவில் முன்னாடி அது அதிகமாகப் பெருகிவிடும். இது பெருகி விட்டால் அதைத்தான் நாம் சுவாசிப்போம். அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்கும்.
ஆனாலும் உயிரிலே பட்டபின் இந்த உணர்வை வெளிப்படுத்துவது நம் உயிரே தான். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் வந்தாலும்
1.உடனே இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.இங்கே புருவ மத்திக்கு நினைவைக் கொண்டு வர வேண்டும்.
3.இப்படிப் பல முறை கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி உணர்வின் சக்தியை தனக்குள் எடுக்க வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் எந்த உடலில் எப்படிப்பட்ட ஆன்மா இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த நன்மை செய்யும் சக்தியாக வளர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
இதைச் செய்தால் அவர்கள் உணர்வு நம்மை எதிர்மறையான உணர்வுடன் இயக்காது. அதே சமயத்தில் அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வுகள் சென்று ஊடுருவி இயக்கும். விலகிச் சென்றாலும் சென்று விடுவார்கள். நமக்குத் தொல்லை தர மாட்டார்கள்.
1.துணிவுடன் செய்து நமக்குள் இருக்கும் நல்ல குணத்தைக் காக்க வேண்டும்.
2.அவர்களுக்குள்ளும் இந்த அருள் உணர்வை நாம் பாய்ச்சும் போது
3.அங்கேயும் உண்மையை உணர்த்தும் சக்தியாக அவர்களை இயக்கும்.

ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
தியானத்தில் உள்ளோர் ஒரு சிலர் எனக்குக் காட்சி கிடைத்தது… நல்லதானது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
1.காட்சி கொடுத்து நல்லதாகும் என்ற நிலை வந்தாலும்
2.அது சில நாளைக்குத் தான் இருக்கும்.
நானும் (ஞானகுரு) ஆரம்பத்தில் நிறைய இது போன்று காட்சி கொடுத்துக் கொண்டுதான் இருந்தேன். பிற்பாடு இதையெல்லாம் கூடாது என்பதற்காக வேண்டி நிறுத்தி விட்டேன்.
தியானத்தின் மூலம்..
1.அந்த மெய் ஒளியை நீங்கள் பெற வேண்டுமே தவிர
2.இந்த உடலில் விளைந்த உணர்வினை யாரும் தேடாதீர்கள்… நாடாதீர்கள்…!
நம் குருநாதர் காட்டிய வழிகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து இங்கே வளர்க்க வேண்டுமே தவிர அதைப் பார்க்க வேண்டும்… இதைப் பார்க்க வேண்டும்… என்று ஆசைப்படக் கூடாது.
இந்த உடல் மடியக் கூடியது தான். உடலில் உருவான நிலைகளில் அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்க்தில் அந்த மெய் ஞானிகள் பெற்ற ஒளி உணர்வுகளைப் பெற ஆசைப்பட வேண்டும்.
குருநாதர் வந்தார்… தெய்வங்களின் காட்சி கிடைத்தது என்ற நிலைக்குப் போய் விட்டோம் என்றால் மீண்டும் மீண்டும் இந்த உடலில் விளைந்த உணர்வுகள் தான் நமக்குள் வளரும். அதே தொடருக்குத் தான் நம்மையும் இழுக்கும். கடைசியில் இந்தப் புவியின் ஆசை தான் வரும்.
ஆகவே உருவங்களாகக் காட்சி கிடைத்தாலும்…
1.குருநாதர் காட்டிய வழியில் உடனே அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.அந்த ஒளியான உணர்வுகள் உடலிலே விளைய வேண்டும் என்று
3.மெய் வழியில் சென்று அந்த வலுவைத் தான் கூட்ட வேண்டும்.
அப்படி இல்லாதபடி சாமி (ஞானகுரு) வந்தார்… காட்சி கொடுத்தார் எனக்கு நல்லதானது… காட்சி கொடுத்தார் உடல் நல்லாதனது…! என்று சொல்வதெல்லாம் உடல் இச்சைக்குத் தான் மாறும்.
அதைத்தான் யாம் வன்மையாக கண்டிப்பது. இந்த நிலையிலிருந்து எல்லாம் நாம் மாறுபட வேண்டும்.
1.மெய் ஒளியை நமக்குள் பெற வேண்டும்
2.நம்முடைய பார்வையால் பிறருடைய தீமைகள் நீங்க வேண்டும்
ஆகவே மாய ரூபங்கள் வேண்டாம்… ஒளியான உணர்வுகளுக்கு மட்டும் ஆசைப்படுங்கள்.


துருவ நட்சத்திரம்
அகஸ்தியன் குழந்தைப் பருவமாக இருக்கப்படும் பொழுது நடந்த நிகழ்ச்சிகள் இது.
1.வானை நோக்கித் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் பொழுது சூரியனைப் பார்ப்பதும்
2.அதைக் கண்டு சிரிப்பதும் அதில் நடக்கும் மோதல்களைக் காணுவதும் மற்ற பிரபஞ்சங்கள் தெரிவதையும்
3.அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் உற்றுப் பார்க்கின்றான்
நமது குருநாதர் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது அகஸ்தியன் வாழ்ந்த காலங்களில் அவன் இருந்த இடங்களில் இந்த உணர்வலைகள் எப்படிப் பதிந்துள்ளது…? என்று எமக்குக் (ஞானகுரு) காட்டினார்.
அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
1.அவன் கண்டதை நாமும் பார்க்கலாம் என்ற நிலைக்காக அந்த உணர்வை நுகரும்படி செய்கின்றார்.
2.வான்வீதியில் நடக்கும் அதிசயங்களை நீ பார்…! என்கின்றார்.
ஏனென்றால் அகஸ்தியன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்… அவன் உணர்வுகள் பூமியில் படர்ந்துள்ளது. சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துள்ளது.
அதை நுகர்ந்து காவியமாகச் சொல்லி கதையாகச் சொல்லி நடந்த நிகழ்ச்சிகளை
1.இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லச் சொல்ல அதைக் கேட்கக் கேட்க இந்த உணர்வுகள் எனக்குள் வருகின்றது.
2.குருவின் வலு கொண்டு அவர் நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் வரப்படும் பொழுது அதை நான் அறியும் பருவமும் வருகின்றது.
அக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை குருநாதர் இப்படித்தான் எனக்குத் தெளிவாகக் கூறினார்.
நாளடைவில்… குழந்தையாக இருக்கும் அகஸ்தியனைக் கையிலே தூக்கிச் சென்றால் கொடூர மிருகங்களிடமிருந்து தாய் தந்தையைக் காக்கும் நிலை வருகின்றது… மற்ற உயிரினங்களும் இவர்களைத் தாக்குவதில்லை.
ஐந்தாவது வயது ஆகும் பொழுது அந்தக் காட்டிற்கே அரசன் ஆகின்றான் புலி சிங்கம் மற்ற மிருகங்கள் ஒடுங்கி விடுகின்றது விஷத்தன்மைகளை ஒடுக்கும் சக்தி வரும் பொழுது
1.அவன் சொல்லைக் கேட்போர் உணர்வுகளிலும்
2.கோபம் கொண்டோர் கொதித்தெழும் உணர்வு கொண்டோர் நிலைகளும் அங்கே ஒடுங்கி விடுகின்றது.
3.போர் முறை என்ற நிலையே மாறி விடுகின்றது.
ஏனென்றால் அன்று வாழ்ந்தவர்கள் ஒரு எல்லைக்கு எல்லை மாறி வரும் போது மனிதனுக்கு மனிதன் தாக்கிடும் நிலையே வருகின்றது. அந்த நிலையில் அகஸ்தியன் அதைத் தடுத்து அங்கு இருப்போரைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.
இளமைப் பருவத்தில் அவன் அறிந்த உணர்வின் தன்மை வானை நோக்கி உற்றுப் பார்த்து துருவத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ட பின் அந்த்த் துருவத்தின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றான்.
அதனால் தான் அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் வந்தது. அவனுக்குள் மேலும் மேலும் வலுகொண்ட நிலையாகி எதையுமே அறியும் ஆற்றலாக அறிவின் தன்மை அதிகரிக்கின்றது.
அவன் வானை நோக்கிப் பார்க்கும் பொழுது நமது சூரியநுக்கு 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் விஷத்தன்மையை எப்படி கவர்கின்றது என்று அறிகின்றான்.
அதிலே சூரியன் வெளிப்படுத்தும் உணர்வுகள் கவர்ந்து வரும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது அது மின்னல்களாக மாறுவதும்… இந்தப் பொறிகள் பல பாகங்கள் பரவி ஒளி அலைகளாக மாறுவதும்… மற்ற கோள்களில் இருந்து வரக்கூடியது இதற்குள் கலந்த பின் அணுக்கள் மாற்றப்பட்டு… ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு அது எப்படி மாறுகின்றது…? என்பதையும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகின்றது…? என்பதையும் அவன் காணுகின்றான்.
பிரபஞ்சத்திற்குள் சூரியனின் இயக்கத்தன்மை ஏற்பட்டு பூமிக்குள் உருப்பெற்ற மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்…? என்ற உணர்வினை அவன் அறிகின்றான்.
இப்படி அறிந்தவன் தனது 16வது வயதில் திருமணமான பின்… தான் இளமைப் பருவத்தில் இருந்து எதை எதையெல்லாம் அறிந்தானோ அவை அனைத்தையும் மனைவிக்குப் போதிக்கின்றான்.
1.மனைவி அதைச் செவி வழி கேட்டுப் பதிவாக்கி அந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு
2.அதையெல்லாம் காண வேண்டும் என்று விரும்பி அந்த உணர்வுகளைத் தனக்குள் நுகர்கின்றது.
3.இப்படி இருவருமே ஒருவருக்கொருவர் விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்கின்றனர்.
இரு உணர்வும் சேர்த்து நுகரப்படும்போது உயிரிலே அந்த உணர்வின் அணுவாக உருவாக்கும் தன்மையும்… “ஒளியின் சிகரமாக” உருப்பெறும் அணுவாக ஆகின்றது.
நட்சத்திரங்களிலிருந்து வரும் நஞ்சின் தன்மையை அவர்கள் கண்டாலும்
1.இருவரும் அதைப் பெற வேண்டும் என்று தங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.மின்னல் வரும் பொழுது எப்படி ஒளிக்கதிர்களாகப் படர்கின்றதோ
3.இந்த உணர்வின் தன்மையைச் சேர்த்து அந்த ஒளிக்கதிர்களை உருவாக்கும் நிலையும்
4.அது எப்படி மின்னும் பொழுது இருளை மறைக்கின்றதோ நஞ்சினை அடக்குகின்றதோ
5.அதைப்போல ஒளியின் உணர்வாக இருவரது உணர்வுகளிலும் இந்த அணுவின் தன்மை உருவாகின்றது.
அப்படி உருப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்
அதிலிருந்து வந்து கொண்டிருக்கும் சக்திகளைத் தான் உங்களைப் பெறச் செய்து கொண்டே வருகின்றேன் குருநாதர் காட்டிய வழியில்.

நோய் நீக்கும் தாவர இனங்கள் காடுகளில் எப்படி உருவாகிறது…?
காட்டிற்குள் “அட்டை” என்று சொல்வார்கள். மனிதன் இறந்திருந்தால் மனித உடலில் இருந்து அந்த அணுக்கள் பெற்றிருந்தால் மனிதன் சும்மா நடந்து சென்றாலே போதும்.
அந்த மணத்தின் தன்மை கொண்டு வில்லைப் போல பாய்ந்து மனித உடலில் அந்த அட்டைகள் ஒட்டிக் கொள்ளும். ஆனால் ஒட்டுவது நமக்குத் தெரிவதில்லை.
இரத்தத்தை உறிஞ்சும். அது எவ்வளவு உறிய முடியுமோ அதற்குப் பின் கீழே விழுந்து விடும்… நமக்குத் தெரியாது.
1.மனிதன் மடிந்த பின் இறந்த உடலிலிருந்து அந்த அணுக்களின் தன்மை அடைந்த பின்
2.மனிதனுக்குள்ளேயே இந்த இரத்தத்தைக் குடித்துச் செயல்படும் தன்மை வருகின்றது.
அட்டைகள் மடிந்த பின் இதே உணர்வின் தன்மை மற்ற தாவர இனங்களுக்குள் கலக்கப்பட்டு புதிதாக உருபெற்றால் அதை உணவாக உட்கொண்டால் ஒரு இரத்தத்திற்குள் சென்றால் இரத்தத்தை உருமாற்றும் நிலையாக அடைகின்றது “அந்தத் தாவர இனங்களுக்கு…”
காட்டிற்குள் குருநாதர் எம்மை அழைத்துச் செல்லப்படும் பொழுது
1.அங்கே உருவாகும் அணுக்களும் அது மடிந்த பின் மற்ற தாவர இனங்களுக்குச் செல்வதும்
2.அவைகள் மனிதனுக்கு நல்ல நிலைகளை உருவாக்கும் நிலையும் காட்டுகின்றார்.
அதாவது மனிதன் மடிந்த பின் அந்த மனித உடலிலிருந்த அணுக்கள் வெளிப்பட்டு… தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு அது மடிந்து அதன் உணர்வுகளில் வரப்படும் பொழுது அந்தத் தாவரங்கள் மனித உடலுக்குள் ஆனபின்
1.அப்படின் உருவான அந்த தாவர இனத்தை உணவாக உட்கொண்டால்
2.மனிதனுக்குள் இருக்கும் சர்க்கரை நோயை முறிக்கும் தன்மை வருகின்றது
3.இரத்தக் கொதிப்பையும் முறிக்கும் தன்மை வருகின்றது.
ஒவ்வொரு நிலைகளிலும் மனிதனுக்குள் விளைந்து உணவாக உட்கொண்டு அணுவின் தன்மை அடைந்த பின் மீண்டும் அது படர்ந்த பின் தாவர இனங்களை உணவாக உட்கொண்டு “அது மடிந்தால்”
1.அதனின் உரங்கள் மற்ற தாவர இனங்களில் சேர்க்கப்பட்டு
2.அது உயர்ந்த மருத்துவ குணம் கொண்ட (மருந்து) தாவர இனங்களாக விளைகின்றது.
காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் பொழுது இத்தனை வித்தியாசங்களையும்… இயற்கையின் நிலைகள் மனிதனான பின் உணர்வு மற்றதுடன் சேர்ந்து “அது எந்தெந்த நிலைகள் அடைகிறது…?” என்று காட்டுகின்றார் குருநாதர்.
ஒரு சமயம் என்னை ஒரு பக்கம் உட்காரும்படி சொன்னார். அவர் வேறு ஒரு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். உட்கார்ந்த பின் அந்தத் தரையில் இனம் புரியாத “ஒரு ஈர்ப்பு” வருகின்றது.
காரணம்…
1.மண்ணிற்குள் மறைந்த அந்தத் தாவர இன வித்துகள்
2.மனிதனின் உடல் பட்ட பின் அந்த உணர்வை நுகர்ந்து அது செடியாக வளரத் தொடங்குகிறது.
3.அரிப்பின் தன்மை வரப்படும் பொழுது ஈர்ப்புடன் ஏங்கி வருகின்றது.
இப்படிப் பல நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.
தொட்டால் வாடி என்றும் தொட்டால் சிணுங்கி என்றும் நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது சில செடிகளைத் தொட்டால் அதிலிருந்து கண்ணீர் (நீர்) வடியும். சில செடிகளைத் தொட்டவுடன் அப்படியே சுருங்கி… வாடிவிடும். மனிதனின் உணர்வின் நிலை பெற்று உருவான செடிகள் தான் அவைகள்.
மனிதன் இறந்த பின் அவன் உடலில் இருந்து எந்தெந்த குணங்கள் பெற்றுச் சென்றானோ… அதாவது சோர்வடைந்து இருப்பான் பல விஷத்தன்மை கொண்டு…!
1.இது போன்ற உணர்வுகள் செடிகளில் சேர்க்கப்பட்ட பின்
2.மனிதனுக்குண்டான ஜீவனைப் போல அது வாடுகின்றது… சிணுங்குகிறது.
சிலருக்கு மூட்டு வாதங்கள் இருக்கும். இரத்தத்தில் உப்புத் தன்மைகள் அடைந்து உறையும் தன்மையாக வரும்… சீழாகவும் மாற்றும். அதனால் அத்தகைய நோய் உருவாகும்.
மிளகையும் தொட்டால் வாடி என்ற செடியையும் பதப்படுத்தி அரைத்து மூட்டு வாதம் உள்ள இட்த்தில் சேர்த்தால்
1.அந்தக் கார உணர்ச்சிகள் ஊடுருவிச் செல்லும் பொழுது
2.மூட்டு வாதத்திற்கு உண்டான அணுக்களை வாடச் செய்யும் வாத்த்தை அகற்றிவிடும்.
இயற்கையின் நிலைகளில் மனிதனுக்குகந்த சில நிலைகள் எப்படி வருகின்றது…? என்று காட்டிற்குள் அழைத்துச் சென்று குருநாதர் எனக்குக் காட்டிய நிலைகள் தான் மேலே சொன்ன தாவர இனங்கள் அனைத்தும்.

“விழிப்புடன்” கூடிய தியானமே மிகவும் சிறந்தது
பல கோடி ஆண்டுகளாகச் சேமித்துப் பழக்கப்படுத்தி நம் உடலுடன் கூட்டிக் கொண்டுள்ள இம் மூன்று வகை உணர்வலையையும்… பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும்… இந்தப் பல கோடி எண்ணத்தின் சுவாசத்தால் நம் சப்த அலையுடன் பல ஜென்மங்களாக எடுத்துப் பழக்கப்படுத்திய நிலைகளை எல்லாம்.. “தாவரங்களைப் போன்று”
1.இக்காற்றினில் கலந்துள்ள ஒலி அலையான காந்த மின் அலையைத்
2.தனக்கு வேண்டிய உயர்ந்த ஞான சக்தியைக் கூட்டிப் பலன் பெருக்கிக் கொள்ள முடியும்.
தாவரம் தனக்கு வேண்டிய பிரித்த அமிலத்தை எடுத்துப் பலனைத் தரவல்ல காலங்கள் முடிந்தவுடன் குறுகிய கால வளர்ச்சியினால் பட்டுப் போகின்றது.
ஆனால் அதிலிருந்து வெளிப்பட்ட அமில குண கூட்டுப் பெருக்கில் ஜீவன் கொண்ட ஜீவ ஆத்மாக்களான நம் ஜீவித சக்தியில்… இப்பெருக்கத்தின் பெருக்க நிலை வளர்வதற்கு… இந்த எண்ணத்தில் எடுக்கும் ஞானத்தின் ஒளி ஈர்ப்பின்… காந்த மின் அலையின் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதனின் ஞான ஒளியாக… இந்த உயிரணு மட்டுமல்லாமல் பல கோடி அணுக்களும் செயல் கொண்டு… இம்மனித ஞானத்தின் வளர்ச்சி நிலை கூடும் சக்தியை என்றுமே வளர்த்திட முடியும்.
இருந்தாலும் அத்தகைய நிலை எய்திட… தியானப் பயிற்சி முறையைப் பலரால் பல காலங்களாக வழிப்படுத்தி வாழ்க்கையில் பலரினால் செயல்படுத்தி வருகின்றனர் என்றாலும் “அதில் அவர்கள் அடைந்த நிலை என்ன…?”
1.நல்ல வாழ்க்கையின் பல ஞான உபதேசங்களும் பெற்றவர்கள் அதே சுழற்சியில் தான் சுழல்கின்றார்கள்
2.“ஆழ்நிலை தியானத்தை…!” அறியத் துடிக்கின்றனர்.
3.இந்த உணர்வையும் எண்ணத்தையும் உறங்கும் நிலைப்படுத்தும் ஞானத்தால்
4.இந்த உடலுக்கோ இந்த உடலை வளர்க்க குடி வந்த பல கோடி உயிரணுக்களுக்கோ வளரும் சக்தி குன்றி
5.இதே சுழற்சியில் தான் சுழன்று கொண்டே இருக்கும்.
மாறாக ஒவ்வொரு அணுவுமே மண்டலமாக உருப்பெறும் நல் ஒளி பெறும் சூரிய ஒளியுடனோ… பல கோடிச் சக்தி ஒளியான சர்வமும் படைக்கவல்ல அவ்வாதி சக்தியின் அருள் ஒளியுடன் கலக்கும் நிலை பெற… ஆழ் நிலைத் தியானத்தால் வளர்ச்சி கொள்ள முடியாது,
உணர்வுடன் கூடிய எண்ணத்தை…
1.இவ்வுணர்வின் உந்தலுக்குகந்த ஒவ்வொரு உடலிலும் உள்ள அமில குணங்களையும்
2.இவ்வெண்ண ஞானத்தால் எடுக்கும் சுவாசம் கொண்டு உயர்வாக்கும் பக்குவ முறையைச் செயல்படுத்தினால் தான்..
3.சக்தியின் சக்தியான சகலத்துடன் செயல்படுத்தும் “ஆதி சக்தியின்” ஒளி சக்தியைப் பெற முடியும்.
ஆதி சக்தியின் ஒளி சக்தியின் சிறு அணுவாக உதித்த நாம் அச்சக்தியின் அருளின் ஒளியைப் பெருக்கிச் சமர்ப்பிப்பது தான் நமக்கு ஆண்டவனின் சக்தி பெற்ற நிலையின் பொருள்…!
புரிந்ததா…!
இது நாள் வரை உணர்த்தி வந்த பாட முறையின் தியானம் கொண்டு
போற்றலுக்குகந்த போற்றலாய்
யான்… போற்றி மகிழவே
நேசத்திற்குகந்த நேர்மையாய்
நினைவால்… வழி நிற்பேனே
பாசத்திற்குகந்த படைப்பிலே…
பலவாகக் கலந்து பெறுவேனே…!
ஆசைக்குகந்த ஆசையாய்
அளவாய்.. மகிழ்ந்து அடைவேனே..!
ஆற்றலுக்குகந்த ஆண்டவனே…
ஆற்றலின் எதிர்பிம்பமானவனே…
தாலாட்டும் தாய் தந்தை தலைமையிலே
தலை வணங்கி… பணிவேனே…!
ஏற்றத்திற்குகந்த எண்ணத்திலே… …
ஏறும் படியில்… ஏறுவேனே…!
வாசத்திற்குகந்த வாசனையாக
உள்ளத்தின் வாசனையை… வளர்ப்பேனே…!
போற்றித் துதிக்கும் நிலையில் உள்ளேன்…
போற்றலுக்குகந்த… “தெய்வ நிலை பெறுவேனே…!”
என்ற இந்தப் பாடலில் உள்ளதன் கருத்தின் நிலையே உணர்ந்து ஒவ்வொரு மனிதனின் செயலும் செழிப்பாகிடல் வேண்டும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுது
1.நம் நினைவுகளை அவசியம் புருவ மத்திக்குக் கொண்டு போய்ப் பழக வேண்டும்.
2.அப்படிச் செய்தோம் என்றால் நம் உயிரே நமக்குக் குருவாக இருப்பதையும்
3.நாம் எண்ணியதை எல்லாம் உருவாக்கக் கூடிய ஈசனாக நம் உயிரே இருப்பதையும் உணர முடியும்.
இந்த அடிப்படையில் நாம் எண்ணும் பொழுது எதை எண்ணுகின்றோமோ நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் ஊடுருவுவதும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.
சாதாரணமாக இந்த வாழ்க்கையின் நிலையில் மூக்கின் வழி வருவதைச் சுவாசிக்கின்றோம்… நம் கண்கள் உற்றுப் பார்க்கின்றது… அதன் வழி தான் வெளியிலிருந்து மற்ற உணர்வுகளை எல்லாம் எடுக்கின்றோம். அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆன்மாவிலிருந்து மூக்கின் வழியாகச் சுவாசிக்கும் போது உயிரில் பட்டு அந்த உணர்வுகளைப் பின் (பின்னாடி தான்) அறிகின்றோம்.
அதற்காக வேண்டித் தான் ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று அடிக்கடி புருவ மத்தியில் எண்ணச் சொல்கிறோம்.
1.அப்படிச் சொல்லும் பொழுது உயிரை எண்ணி அவனுடன் ஒன்றிடும் நிலையாக ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.
2.அடிக்கடி அதன் வழி கூடி அருள் உணர்வுகளை உள்ளே செலுத்த வேண்டும்.
வாழ்க்கையில் பயன்படுத்துவது கண் வழி கூடி எடுத்து அதை அறிந்து கொண்டாலும் கூட தீமையான உணர்வுகள் நமக்குள் வராதபடி
1.அடுத்த நிமிடம் ஈஸ்வரா… என்று இதை இடைமறித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அந்த அருள் உணர்வோடு நாம் ஒன்றும் போது தீமைகளை அது பிளக்கிறது.
நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்து எவ்வளவோ நல்லதைப் பேசினாலும் கூட அடுத்தவர்களிடம் பழகும் போது அவர்களிடம் ஒரு சில குறைபாடுகளோ… குடும்பக் கஷ்டங்களோ இருக்கும் அல்லது நோயோ இருக்கும்.
அவர்கள் நம்மிடம் பேசும் போது சொல்லிலே அது எல்லாம் கலந்து வரும். அவரை நாம் கண்ணிலே பார்க்கும் போது அது எல்லாம் நம் ஆன்மாவில் வரும். அப்பொழுது நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின் அதை உணர முடிகின்றது.
அந்தக் கஷ்டத்துடன் அவர்கள் வரும்போது “எனக்கு இந்த மாதிரி இருக்கின்றது…” என்று சொல்லும் பொழுது இந்த உணர்வுகள் நம்முடன் கலக்கின்றது.
இருந்தாலும்… அந்த நேரத்தில் சுதாரித்து
1.ஈஸ்வரா… என்று இந்த உணர்வை வைத்து இடைமறித்து அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.
2.இந்த உணர்வை வலுப் பெறச் செய்யும் பொழுது அவரிடம் கேட்டறிந்த தீமைகளை மாற்றுகின்றது.
நம்மிடம் அவர் பலவீனமாகச் சொல்லும்போது மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலிலே படர வேண்டும்… அவர் உடல் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுவாகப் பாய்ச்ச வேண்டும்
ஏனென்றால் ஒரு பாத்திரத்தில் பொருள்களை எடுத்துப் போட்டு அதைச் சமைத்து… அதற்கப்புறம் எடுத்துக் கொடுத்தால் அது ருசியாக இருக்கும். சமைக்காமல் கொடுத்தால் ருசி வராது.
அதைப் போன்று தான் அவர் கஷ்டம்…! என்று சொன்னபின்… அடடா கஷ்டமாக இருக்கின்றதா…! என்று நாம் சொன்னோம் என்றால்
1.அதைத் தான் திரும்பவும் நமக்குள் சமைத்து
2.அதையே தான் (கஷ்டம்) அவருக்கும் கொடுக்கின்றோம்.
இதிலே ரொம்பவும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


“தன்னுள்ளேயே” ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு
விட்ட குறையினால் வந்து பிறந்தவர்கள் தானப்பா எல்லோரும். இன்று உள்ள கலியுகத்தில் விட்ட குறைகள் உள்ள மக்கள் எல்லோருமே ஜீவித்துள்ளார்கள்.
ஜனப்பெருக்கம் ஜனப்பெருக்கம் என்கிறார்கள் ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றார்களாம்… அவர்கள் ஆயுளை வளர்க்கின்றார்களாம்
1.இருப்பவன் இருந்து கொண்டே இருக்க வேண்டுமாம்…
2.ஜனப்பெருக்கத்தைக் குறைக்கின்றானாம்… ஆளுகின்றானாம் நாட்டை
3.அவன் ஜனப்பெருக்கத்தைக் காக்கின்றானாம் உளவறிந்து.
எப்படி இருக்கிறதப்பா இக்கதை எல்லாம்…?
கலியில் வந்து விட்டார்கள் விட்ட குறை உள்ளவர்கள் எல்லோருமே மனிதர்களாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இனி பிறப்பவர்களும் இப்பொழுது கலியில் மடிபவர்கள் தான் பிறக்கிறார்கள்.
கலியின் கடைசி நிலையில் எல்லோருமே எல்லா ஜீவ ஜெந்துகளும் அவரவர்கள் செய்த பாவ புண்ணிய நிலையில் வந்து விடுகின்றார்கள். விட்ட குறை என்றதும் இதனால் தான்.
மனிதன் ஆடு மாடு பூச்சி புழு எல்லாமே வந்து விடுகின்றன இக்கலியின் கடைசியில். இக்கலியிலிருந்து தப்பி வடிகட்டி எடுப்பவன் தான் கல்கிக்கு வருகின்றான்.
கல்கியில் வருபவன் எல்லாம் யாரப்பா…?
1.இக்கலியில் விட்ட குறை உள்ளவர்கள் அல்ல.
2.இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு எடுத்த பிறப்பில் இருந்தெல்லாம்
3.எவன் ஒருவன் இக்கலியின் கடைசியில் தன் நிலை உணர்ந்து தன் மனத்தை மனம் என்னும் கோவிலாக்கி
4.மற்ற எல்லா நிலையையும் கடந்து முக்தி எனும் நிலை எய்தி
5.தன் நிலையை உயர்த்தி… தான் என்ற அகந்தையை விட்டுத்
6.தன்னுள்ளேயே ஈசனின் சொரூபத்தைக் கண்டவர் எல்லோருமே வருகின்றார்கள் கல்கிக்கு.
7.கல்கியில் வருகின்றார்கள் ஞான நிலை பெற்ற தீபங்கள் எல்லோருமே.
நீ நினைக்கின்றாய் ஆயிரம் ஜெபங்கள் இருந்து அடுக்கடுக்காக மந்திரங்கள் ஓதித் தான் பிறந்த நிலையை மறந்து விட்டு ஈசனுக்கு பூஜை செய்து… பல மந்திரங்கள் சொல்பவன் எல்லாம் வந்திடுவான் கல்கிக்கு என்று.
வருபவன் யாரெல்லாம் என்று ஜெப நிலையில் உணர்ந்திடலாம். தான் செய்த பாவ புண்ணியங்களைப் பொறுத்துத் தான் “வடிகட்டப்பட்டு வருகின்றான்” கல்கிக்கே.
1.கலியின் பாதையில் பகர்கின்றேன் தோட்டியும் வருவான் தொண்டனும் வருவான் என்று
2.கல்கிக்கு வருபவன் எல்லாம் கால வெள்ளத்தில் சிக்குண்டு பல கஷ்ட நஷ்டங்களையும் தன்னுள்ளே எண்ணிடாமல் பிறந்த பயனை எண்ணி
3.அந்நிலையின் உயர்வை ஊன்றி பிறந்த பயனை எல்லாம் எடுத்தவனே வருகின்றான் கல்கிக்கு.
என்னப்பா…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!
கலியின் கடைசியில் வந்துள்ளோம் பிறந்த பயனை… விட்ட குறையை இக்கலியின் கடைசிக்குள் உன் ஜெபநிலையின் உதயத்தில் முடித்திடப்பா.
முதல் பாடத்தில் பகர்ந்த நீ விட்ட குறை என்ன…? என்று உனக்குள்ளே உணர்த்தி உள்ளேன். ஊன்றிப் பார்த்தால் இன்று உனக்குள்ள நிலை எல்லாம் சிறு தூசிதானப்பா… தூசியை ஊதிவிடு…!
உன் நிலையை… நீ விட்ட குறையை இக்கலியின் கடைசியில் நிலைக்கச் செய்வாய். பெரும் செயற்கை யுகத்தைக் கண்ட இம்மாமனிதர்கள் எல்லோருமே மூச்சிருக்கும் நிலையில் உன் சுவாச நிலையால் விட்ட குறையை முடித்திடப்பா.
உன் ஜெப நிலையின் தன்மையில் தான் ஐவர் மலையின் அந்தரங்கம் வந்துவிடுமப்பா. அந்நிலையில் வந்த பயனை எடுத்துத்தான் அங்கு நீ பதித்திடப்பா.
1.அவ்வார்வ எண்ணத்திலே உன் ஜெப நிலையை மாற்றிடாமல்
2.”ஒன்றே செய்வேன்… நன்றே செய்வேன்…” என்றுள்ள செய்யுளின்படி செய்திடப்பா நற்காரியத்தை.
இக்கலியின் கடைசியில் நிலைப்பவன் யார் என்பதெல்லாம் புரிந்திருக்கும் ஜெப நிலையும் புரிந்திருக்கும்
பல பாடங்களைப் பதித்துள்ளார் உன் மனதினிலே என் சிஷ்யன் (ஞானகுரு). படித்த பாடத்தை விட்டிடாமல் பாடம் மட்டும் கேட்டு விட்டால் உன் நிலைக்கு என்றப்பா வருவது…?
பள்ளிக்குச் சென்று படிப்பதெல்லாம் அறிவை வளர்க்கத் தான்.
1.வளர்ந்த பின் அறிவின் பயனைப் பெற வேண்டாமா…?
2.என்றப்பா அந்நிலைக்கு உன் நிலையை உயர்த்திடுவாய்…?
கால நிலையில் விஷத்தன்மை கலக்கின்றதப்பா மிகத் துரிதமாக… விஷத்தன்மையையும் வான மண்டலத்தையும் வென்றிடவே உன் ஜெப நிலையைக் கூட்டிக் கொள்ளப் பார்.
விட்ட குறையை முடித்திடப்பா வீண் விஷமிகளை எண்ணிவிடாதே, பாடத்தின் நிலை புரிந்ததா…?
48 நாள் என்ற பாடம் அன்றொரு நாள் உன் ஜெப நிலைக்கு முடிவு வைத்தேன். அந்த 48 நாளில் நடந்ததெல்லாம் என்னப்பா…? பார்த்திட்டாயா அவன் நிலையும் உன் நிலையும்.
48 நாளில் தேவனின் நினைப்பால் ஊன்றி வைத்தாய் கலசத்தை உன் நினைவில். அந்த 48 நாளில் உன் எண்ணமெல்லாம் அவன் தருவான் என்ற நிலையும் மறக்கச் செய்தேன். தந்தாலும்… உன் நிலைக்கு வேண்டாம் என்று நீயே உன் எண்ணத்தில் ஊன்றிக் கொண்டாய்.
பகைவன் என்பவனின் கஷ்டத்தையும் பார்த்திட்டாய் பாலகரின் நிலையையும் உயர்த்திட்டாய். உன் மனத்தையே ஒரு நிலை ஆக்கியுள்ளாய். இந்நிலையில் உனக்கு இந்த 48 நாட்களில் பகர்ந்துள்ள பல பாடங்களை மனநிலையில் ஒருநிலைப்படுத்தி உணர்ந்துள்ளாய்.
வாழ்க்கையில் வாழ்வு என்ன…? என்ற அர்த்தங்களும் அறிந்திருப்பாய், தியான முறையின் வழிகளையும் புரிந்திருப்பாய். சொல்வாக்கை அருளி இருப்பேன்.
இந்த 48 நாளில் சிறு குறையும் உள்ளதப்பா.
1.உன் நிலையை உயர்த்திக் கொள்… மனச் சஞ்சலத்திற்கு அடிமையாகாதே
2.ஆசை மனதினை அடக்கிடப்பா அந்நிலையில் வருவது தான் சுவையும் மற்ற எல்லாமே.
கலசத்தின் பயனைப் பெற்றவர் இங்கு உள்ளவரில் ஒருவன் தானப்பா. பகர்ந்தவரும் கலசத்தின் பயனைப் பெறவில்லை… கலசம் வைத்தவனும் நிலை நிறுத்த முடியவில்லை மனநிலையை.
அருளெல்லாம் அளித்துள்ளேன் இக்கலசத்தில். நாளை தியானத்தில் நல்ல அமுதை விட்டிடுவேன்… கலசத்தின் மகிமையைக் கண்டிடுவாய். இனி எல்லாமே உன் வழியில் நல்லாசிகள் தான் நடந்திடுமப்பா.
தேங்காயின் பலனைத் தெரு பூராம் தெரிவது வேண்டாம். மஞ்சள் துணியில் முடிந்து வைத்து… மாற்றான் பார்த்திடாமல் வைத்திடப்பா சில நாட்கள்.
உன் இல்லத்தினிலே உன் ஜெப நிலைக்கு அமரும் இடம் அமைத்தவுடன் நிலையில் (கதவு நிலை) கட்டிடலாம் “என் அங்கத்தின் அங்கத்தை…” அந்நாள் வரையில் உன் இல்லத்தில் பூஜிக்க முடிந்திட்டால் வைத்துக்கொள்.
பூஜை அறை வரும் வரையில் இங்கு இருக்கட்டும் என்ற எண்ணம் இருந்திட்டால் இங்கேயே விட்டுவிடு.
பூஜை அறையில் தேங்காய் உடைக்க வேண்டாம். தேங்காய் பழம் உடைத்து என்ற சொல் வருவது வேண்டாம். அவ்வோட்டில் “என்ன வாசனை வருகிறது….?” பழம் புஷ்பம் மட்டும் போதும்.
தேங்காய் உடைப்பதனால் தேவர்கள் அருளைப் பெறுகின்றார்களாம்… உடைக்கும் சத்தத்தில் தான் தேவர்கள் வருகின்றார்களாம் அத்தேங்காயின் தீர்த்தத்தைப் புசிக்கின்றார்களாம்
இவன் புசிக்க எடுத்து வருகின்றான்…! தேங்காயைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்பதில்லை. வந்த இடத்தில் தன் பசியை ஆற்றிக் கொள்ளத்தான் அதைக் கொண்டு வருகின்றான்.
வழி முறையில் வந்த சில மாற்றங்கள் இவைகள். சில வழியில் ஊருடன் ஒத்துச் செல்லுங்கள். “நமக்கு வேண்டாம் தேங்காய் உடைக்கும் தன்மை…” உடைத்த தேங்காயை எடுத்து வந்து விடாதீர்கள் இல்லத்திற்கு. பிறருக்கு அளித்து விடுங்கள் அல்லது பூசாரிக்கே அளித்து விடுங்கள்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் உணர்வுகளை நீங்கள் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் வரிசைப்படுத்தி
1.எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் எது வருகிறது என்ற வகையிலும்
2,குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதியச் செய்கின்றேன் (ஞானகுரு).
சண்டை போட்டவர்கள் கஷ்டப்படுபவர்களை எல்லாம் பதிவு செய்து கொண்டால் அவர்களின் எண்ணங்கள் வந்து உங்களைத் துயரப்படச் செய்கிறது… சங்கடப்படச் செய்கிறது… சோர்வடையச் செய்கிறது… வேதனை அடையச் செய்கிறது.
இதைப் போல் தான்…
1.குருநாதர் கொடுத்த உணர்வின் சத்து எனக்குள் பதிவானதை
2.அந்தந்தச் சந்தர்ப்பம் இணைக்கப்பட்டதையும் மாற்றப்பட்ட உணர்வுகளையும்
3.உங்களுக்குள் இணைத்துக் கொண்டே வருகின்றேன்.
சங்கடமான உணர்வு உங்களுக்கு வரும் பொழுதெல்லாம் நான் (ஞானகுரு) இணைக்கும் நல்லதாக மாற்றும் உணர்வுகள வைத்து மாற்றினீர்கள் என்றால் அவ்வப்பொழுது உங்களால் எந்தத் தீமையும் மாற்றிக் கொள்ள முடியும்.
அந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் இந்த உபதேச வாயிலாக அருள் உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சுவது.
ஆனால் வாழ்க்கையில் சங்கடமும் சலிப்பும் ஆகி யார் யார் மீது வெறுப்புடன் இருந்தீர்களோ அந்த நினைவுகள் சுற்றிக் கொண்டிருந்தால் இரவில் திடீரென்று முழிப்பு வரும்… எழுந்து உட்கார்வீர்கள்.
பகலிலே இந்த உணர்வு அதிகமாக வந்து விட்டால் நம் உணர்வுகள் இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்… அதையும் பார்க்கலாம்.
அதே சமயத்தில் சில நேரங்களில் நாம் வலுவான எண்ணங்கள் எடுக்கும் பொழுது இந்த வலுவின் தன்மை கொண்டு பிறருடைய கஷ்டங்களையும் அறியச் செய்யும்.
ஆனால் நாம் போகும் பாதையில் அதை அறியச் செய்தாலும் அடுத்த நிமிடமே அந்த கனவு வந்து முழித்தவுடன்
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்தத் தீமையிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை மாற்ற வேண்டும்
3.கனவு தான் என்று மட்டும் நினைத்து விடக்கூடாது
காரணம்… பகலிலே கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வந்து இதை இயக்குகின்றது
1.நமக்குள் பதிவானால் தான் அது கவரும்
2.நாம் நுகர்ந்தால் தான் உயிர் அதை இயக்கும்.
இப்படிக் கண்ட அனுபவங்கள் உங்களுக்குள் வந்தால் தான் உங்களைக் காத்துக் கொள்ள அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் நினைவுக்கு வரும்.
உதாரணமாக ஒரு இயந்திரத்தை ஓட்டுகிறோம். சில நேரங்களில் அதில் பழுது வந்துவிடுகிறது.
அந்தப் பழுது எதனால்…? என்றும் எந்த இடத்திலே…? என்றும் அதை விபரம் தெரிந்தவர்கள் (TECHNICIAN) சீராக்கினால் அது மீண்டும் சரியாக ஓடும். ஆக தெரிந்தவர்கள் அதைச் செயல்படுத்துவார்கள்,
அப்படித் தெரிந்து கற்றுக் கொண்டவர்களிடம் நாமும் கற்றுக் கொண்டால் நாமும் அந்தப் பழுதைச் சீராக்க முடியும்.
அதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றும் அரும் பெரும் சக்தியாக
2.தெரிந்து செயல்படக்கூடிய அந்த அருள் ஞானத்தைக் உங்களுக்குக் கொடுக்கின்றோம்..!
எமது அருளாசிகள்.


அன்றைய பச்சிலை வைத்திய முறைகள்
குருநாதர் காடு மேடல்லாம் அழைத்துச் சென்று மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருவாகின்றது என்பதனை எனக்குக் (ஞானகுரு) காட்டுகின்றார்.
சரியான உணவு எல்லாம் கிடையாது… அவருடன் சென்று கொண்டே இருக்க வேண்டும்… அவர் காண்பிக்கும் நிலை எல்லாம் அறிந்து கொண்டு அதனுடைய செயலாக்கங்களை பார்த்துக் கொண்டே வர வேண்டும். மலைப்பாங்குகளில் ஆரம்ப காலத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கின்றார்.
ஏனென்றால் அங்கே மற்ற மிருகங்களோ மற்ற உயிரினங்களும் மடிந்தால் யாரும் புதைப்பதும் இல்லை… அப்படி அப்படியே தான் கிடக்கின்றது.
1.அந்த இறந்த உடலின் சத்துக்கள் தாவர இனங்களுடன் கலக்கப்பட்டு சில தாவரங்களுக்கு அது வீரிய சக்தியாகின்றது.
2.அந்த தாவர இனங்களுடன் சில உணவுர்கள் கலந்த பின் அது ஒரு புது வித்தாக மாறுகின்றது.
மறதிப் பூடு என்று ஒரு செடி உண்டு. அந்தச் செடியை வீட்டில் வளர்த்தால் அதில் மிதித்து விட்டால் உங்களுக்கு நினைவே இருக்காது.
மலைப் பகுதிகளில் வாழும் புலையர்கள் இதைத் தோண்டி எடுத்து சில மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வும் மனிதன் மடிந்து இருந்தால் அத்தகைய செடிகளில் இந்த உணர்வின் நிலைகளும் வரும்.
1.அந்தக் காலங்களில் மலைப்பகுதிகளில் எப்படி எல்லாம் தாவர இனங்கள் உருமாறியது…?
2.மனிதனோ உயிரினங்களோ மடிந்த பின் தசைகள் மண்ணுடன் கலக்கப்படும்போது அதனுடைய இன சேர்க்கை தாவர இனங்களிலே எப்படி வருகின்றது…?
3.அதற்கு வீரியத்தன்மை எப்படி வந்தது…? என்று காட்டினார் குரு.
அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்தினால் மனித உடலில் வந்த தீமைகளைப் போக்கக்கூடிய சக்தியும் அத்தகைய தாவரங்களுக்கு உண்டு.
அதாவது மனிதன் மடியப்பட்டு…
1.அந்த மடிந்த நிலையில் கொண்டு அதன் உணர்வு தாவர இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தால்
2.அந்த்த் தாவர இனங்களில் இருந்து மணங்கள் வெளிப்பட்டு
3.இன்னொரு பக்கம் புலியோ அல்லது விஷத்தன்மை கொண்ட செடிகள் பதிந்திருந்து
4.அதிலிருந்து உறிஞ்சப்பட்ட உணர்வுகள் கலந்து வெளிப்படும் காற்றினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
5.இந்த இரண்டும் மோதலாகி ஒரு வித்தாகி பூமிக்குள் பதிந்து விளைந்தால்
6.அந்தச் செடியில் இருந்து வரக்கூடிய மணத்தை மனிதன் நுகர்ந்தால் அல்லது உடலின் மேல் பாகத்தில் பூசினால்
7.உடலில் கேன்சர் நோய் இருந்தாலும் அந்த விஷத்தை இந்தச் செடி கரைத்து விடுகின்றது.
அன்று மனிதனுக்கு வந்த புற்று நோயை நீக்க இதைப் பயன்படுத்தினார்கள்.
இன்று மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்கின்றார்கள் அல்லவா/ சில தாவர இனங்களின் அந்த பச்சிலையை மேலே பூசி விட்டால் அறுவை சிகிச்சை செய்தாலும் அந்த உணர்ச்சிகள் இவர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை.
1.அன்று கண்ணுக்கு முன்னாடியே இப்படி அறுவை சிகிச்சை செய்வார்கள்… அறுத்த பாகங்களை இணைப்பதற்காக ஒரு பச்சிலை உண்டு.
2.இரண்டையும் சேர்த்து இணைத்து விட்டால் தசைகள் ஒட்டிக் கொள்ளும்.
3.உடலுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை எடுத்த பின் அந்தப் பச்சிலைகளை இணைத்தால் இரண்டு தசைகளும் ஒட்டிக் கொள்கின்றது.
அக்காலங்களில் மலைப் பகுதியில் உள்ள புலையர்கள் என்று சொல்பவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தார்கள்… இன்றும் உண்டு.
1.அன்று இருந்த நிலைகள் காலத்தால் அந்தச் சக்தி இல்லை.
2.இருந்தாலும் அந்தத் தாவர இனங்கள் பூராம் மடிந்து விட்டது.
இதை வைத்துச் சில உணர்வுகளைச் சொல்லால் சொல்லப்பட்டு அந்த உணர்வை ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் அந்த உணர்வைத் தனக்குள் கவர்ந்து சில நிலைகளைப் புதிதாக அன்று உருவாக்கினார்கள்.
1.சிலவற்றை மறைத்தே சொல்ல வேண்டி இருக்கின்றது…
2.சும்மா தொட்டுத் தான் காட்டுகின்றேன்.
காரணம் இதைத் தெரிந்து கொண்ட பின் பலர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கு நாம் போக வேண்டியது இல்லை. குருநாதர் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்.
இப்படித்தான் மலைப்பகுதிகளில் பல பல தாவரங்கள் உருமாறியது. அத்தையை தாவர இனங்கள் இன்று இல்லை. விழுதுடன் பறித்து அதனின் இன விருத்தியே மடியச் செய்து விட்டார்கள்.
அன்று ராஜ வைத்தியம் செய்வதற்காக்க் காட்டு விலங்குகளில் சில எடுத்துக் கொண்டு அதனுடன் இணை சேர்த்து சில தாவரங்களை அன்று உருவாக்கினார்கள் அரசர்கள்.
அந்தத் தாவரங்களை வைத்து அரசர்களுக்கு ராஜ வைத்தியம் செய்வதும் அறுவை சிகிச்சை செய்ததும் இன்று விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் அன்று தாவரங்களின் உணர்வை அறிந்து அப்படிச் செயல்படுத்தினார்கள். சில பகுதிகளில் இது உண்டு
அவர்கள் எடுத்துக் கொண்ட ஒலி பாஷை ஒன்றுடன் ஒன்று மோதிய உணர்வுகளும்… ஒரு செடிக்குள் ஓதி அந்த உணர்வுகளை மோதி மோதி அந்த சொல்களை ரெக்கார்ட் செய்வார்கள். அதாவது…
1.காட்டுவாசிகள் செடியை வளர்ப்பதற்காக தனக்குள் அதைக் கொண்டு வருவதற்காக
2.செடிக்குள் மனிதனின் சொல்களைச் சொல்லிச் சொல்லிப் பதிவு செய்வார்கள்.
அது பதிவாகி வளர்ந்த பின் பல பல மருந்து வேலைகளுக்கு ஆகின்றது அக்காலங்களில் இன்னொரு பச்சிலையும் வாய்க்குள் வைத்து அதை மென்று அந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலியை எழுப்பி இன்னொரு செடிக்குள் பதியச் செய்வான்.
இன்று விஞ்ஞான அறிவியல் எப்படிப் புதுப் புது தாவரங்களை உருவாக்குகின்றார்களோ அக்காலங்களில் இப்படிச் செயல்படுத்தினார்கள்.
ஏனென்றால் குருநாதர் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டியதை உங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

பிறவிகளைப் பற்றிய உண்மைகள்
தாயைப் போல் பிள்ளை… நூலைப் போல் சேலை…! என்கிறார்கள் தாய் வழி தந்தை வழி என்பதெல்லாம் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாம் ரத்தத் தொடர்புடையது… “வம்ச வழி” வந்தது என்கிறார்கள்.
வம்ச வழி என்பதெல்லாம் என்னப்பா…?
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் குழந்தை எல்லாமே வம்ச வழியில் வந்தது தான் என்றிட்டால் ஒரு தாய்க்கு ஒரு மகன் பிறக்கின்றான். அடுத்த பிறவியில் அத்தாயே பிறவி எடுத்தாலும் பத்துக் குழந்தை பிறப்பதில்லையா…! வம்ச வழி என்றால் என்னப்பா…?
இப்பிறவியில் பிறந்த எல்லோருமே அவரவர் குடும்பத்திலேயே தான் மறுபிறவியலும் பிறக்கிறார்களா…? இல்லையப்பா…!
இப்பிறவியில் இருந்து மறுபிறவிக்குச் செல்லும் பொழுது இப்பிறவியில் உள்ள ஆசை பாசம் இவைகளை வைத்து மறுபிறவியில்
1.எந்த இடத்தில் பிறந்திட்டால் இந்தப் பிறவியில் விட்ட ஆசைகளை முடித்து விடலாம் என்று தெரிகிறதோ
2.அங்கு தான் பிறக்கின்றது அவ்வாவி மறு ஜென்மத்தில்.
தாயின் வழி என்பதெல்லாம் வளர்க்கும் முறையில் தான் வந்திருக்கின்றது
1.குழந்தைகளுக்கு வம்ச வழியும் இல்லை… வந்த வழியும் இல்லை.
2.வளர்க்கும் முறையில் தான் எண்ணத்தின் எண்ணமாக வந்திருக்கின்றான் ஒவ்வொருவனும்.
ஒரு தாயின் வயிற்றுக் குழந்தைகளும் மனநிலையிலும் குண நிலையிலும் மாறுபட்டுத் தான் இருக்கின்றன. அவரவர்களின் முற்பிறவியின் பயனால் தான் இம் மாறுபாடு நிலை எல்லாம்.
தந்தை மகனுக்கு எழுதி வைக்கும் சொத்தெல்லாம் ஒன்று போல் பகிர்ந்திட்டாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியில் தான் செல்லுகின்றது. ஒரு மனிதன் அழிக்கின்றான் பல மடங்கும் பெருக்குகின்றான். ஒருவன் அந்தப் பொருளை ஒரே நிலையில் வைத்துள்ளான்.
இதன் பொருள் எல்லாம் முற்பிறவியின் பலனாகும்…! அவன் எடுத்த மூச்சுத் தன்மையினாலும் அவன் எண்ணத்தின் தன்மையினாலும் வந்தது தானப்பா இந்நிலை எல்லாம்.
வளரும் தன்மையிலேயே வடிகால் அமைத்துத் தந்திடலாம். அவ்வண்ணத்தை ஊன்றிக் கொண்டு அவ்வழியில் சென்றிட்டால் உயர்ந்திடலாம் தன் வழியில் செல்பவனுக்கு.
1.அவனவன் எண்ணத்தைப் பொருத்துத் தான் அமைகிறது வாழ்க்கை எல்லாம்
2.தாய் தந்தையரின் வளர்ப்பினிலே வருகின்றது “மனநிலையின்” மாற்றம் எல்லாம்.
பூர்வ புண்ணியப் பலன் உள்ள குழந்தைகளையும் மன நிலையில் மாற்றிடலாம்… எண்ணத்தின் வழியினிலே. தாய் தந்தையரின் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!
வளரும் சூழ்நிலையைப் பார்த்திருப்பாய், மண் வாடை நீர் வாடை என்கிறார்கள் அதுவும் உண்மைதானப்பா.
ஒவ்வொரு இடத்திற்குத் தகுந்த மனநிலையும் நம் மனநிலையைப் பொறுத்து வரும் மூச்சினால் அவ்வழியில் வளரும் குழந்தைகளின் தன்மை எல்லாம் ஒன்று போல் இருக்குமப்பா.
மண் வாடை எல்லாமே அந்நிலையில் உள்ள நிலையைப் பொறுத்துதானப்பா வருகின்றது. அங்கு வளரும் குழந்தைகளின் எண்ணமும் செயலும் ஊரின் தன்மையும் ஊன்றிப் பார்த்தால் புரிந்திடும் மன நிலைகள்.
பெரும் நகரத்தில் அந்தந்தப் பகுதிகளிலும்… சிறு ஊர்களில் அந்தந்த ஊர்களின் தன்மையிலும்… ஊன்றிப் பார்த்தால் உனக்குள்ளே தெரிந்துவிடும் எல்லாமே.
அவ்விடத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்துதான் மண்வாடையும் வருகின்றது… நீரின் சுவையும் தெரிகின்றது.
ஒரு வீடு ஒரு வீதி ஒரு ஊர் என்று சொல்கின்றோம். ஒரு வீடு என்னும் பொழுது அவ்வீட்டின் தன்மையும் வீதியின் தன்மையும் கலந்திருக்கும். வீதியின் தன்மையிலே ஊரின் தன்மையும் கலந்து விடுகின்றது.
அவ்வூரில் உள்ளவரின் மனநிலையைப் பொறுத்துத்தான் அந்த ஊரில் உள்ள மண்வாடையும் வருகின்றது. அம்மண் வாடையின் ஈர்ப்புத் தன்மையை ஈர்த்துத் தான் அவ்விடத்தில் உள்ள மழையும் காற்றும் வருகின்றது.
அக்காலத்தில் பெரியவர்கள் மழைக்கும் நல்லோருக்கும் தொடர்புபடுத்திச் சொன்னதெல்லாம் இந்த வழியில் தான்… புரிகிறதா…?
மண்வாடையின் தன்மையினால் தான் அங்குள்ள பயிர்களும் வளர்கின்றன பாலகர்களும் வளர்கின்றார்கள். பாலகர்கள் வளர்வது என்பது உருவ அமைப்பைச் சொல்கின்றேன்.
ஒரு ஊரில் பிறக்கும் பிறவி எல்லாம் அந்த ஊரின் தன்மையில் தான் பிறந்திருக்கும்.
1.மன வாடையிலிருந்து மண் வாடை வந்து
2.பெரும் மழையில் செழித்திடும் காய்கனிகளில் இருந்தும் வளரும் பயிரிலிருந்தும்
3.உண்டு வளரும் பாலகர்கள் எல்லாம் ஒன்று போல் தான் இருந்திடுவார்கள்.
இப்பொழுது இக்கலியின் செயற்கை யுகமும் வாழும் வாழ்க்கைக்காக இடம் பெயரும் நிலையும் இந்நிலையில் வளர்ந்த பயிர்களை மறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நிலையும் வந்ததனால் “மாறுபட்டு இருக்கின்றது உலகமே இக்கலியில்…”
இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் மச்சாவதாரம் என்ற காலத்தில் எல்லாம் ஒரு நிலையில் உள்ளவர்களின் தன்மை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுக்கு ஒன்று ஒத்த அமைப்புகள் இருந்தாலும் “இக்கலியில் தானப்பா… பெரும் செயற்கை யுகம் வந்தது…”
இடத்திற்கு இடம் தேசத்திற்குத் தேசம் மாறுபட்ட உருவ ஒற்றுமைகளைப் பார்த்திருக்கின்றாய். இந்நிலை எல்லாம் மண்ணிலும் மழையிலும் உள்ள ஈர்ப்புத் தன்மையினால் வந்ததப்பா.
ஒரு குடும்பத்தில் பிறந்த குழந்தை எல்லாம் ஒன்றைப் பார்த்து ஒன்றைப் போல ஒன்று இருப்பது எல்லாம் இவ் ஈர்ப்புத்தன்மையினால்… அத்தாயின் அந்த வீட்டின் சுவாச நிலையினால் தான்.
இந்த ஜென்மத்தில் பிறந்த உடல் அடுத்த ஜென்மத்தில் வருவதில்லை. இந்த ஜென்மத்தில் இங்குள்ள மனநிலை மண் நிலை மழை நிலைகளைப் பொறுத்து அத்தாயின் சுவாச நிலை வருகின்றது உடல் அமைப்பு.
1.அவ்வுடலின் ஆவி மட்டும்தான்… முன் ஜென்ம ஆவி.
2.இவ் உடலை விட்டு ஆவி பிரிந்து சென்றால் இந்த ஜென்மத்தில் இருந்த உடல் இந்த ஜென்மத்திலேயே அழிகின்றது.
மறு ஜென்மம் எடுக்கும் பொழுது எந்த இடத்தில் பிறக்கின்றோமோ அங்குள்ள சூழ்நிலையை மனநிலை மண் நிலை மழை நிலையைப் பொறுத்துத் தான் “அவ்வுடல் வருகின்றது…” புரிந்ததா பாட நிலை…?
வீட்டில் பூச்சி வருவதெல்லாம் எந்நிலையில்…? அணுவின் அணுக்கள் எல்லாம் வருவது எந்நிநிலையில்…? விட்டில் பூச்சி வருவதெல்லாம் ஊன்றிப் பார்த்தால் தெரிந்துவிடும்.
சோர்வுடன் இந்த மண்ணில் உள்ள அணுக்கள் எல்லாம் காற்றுடன் கலந்து வரும் ஈரப்பசையில் இருந்து… அக்காற்று அம்மண்ணில் மோதும் பொழுது அந்த அணுக்கள் எந்த ஆகாரத்தை எடுத்துச் சுவாசிக்கும் நிலையில் உள்ளதோ… அந்தக் காற்று அதன் மேல் படும் பொழுது அதற்கு உயிர் தன்மை வருகின்றது.
1.அக்காற்றின் அழுத்தம் அந்நிலையில் உள்ளவரை தான் அதன் உயிரும் சுற்றுகின்றது
2.அதன் சுவாச நிலைக்கு அதன் ஈர்ப்புத் தன்மை குறைந்து விட்டால் மடிகின்றது.
ஈசல் வருவதும் இதைப் போலவே…! எறும்புப் புற்றுகள் தோன்றுவதும் இதைப் போலவே. சில நொடிகளில் தோன்றி மறைவதைப் பார்த்திருப்பாய்… சில நாட்களில் வந்து மறைவதைப் பார்த்திருப்பாய்.
அதனுடைய ஆகாரம் கிடைக்கும் வரை தான் அதன் ஜீவன் எல்லாம்.
1.சுவாச நிலையில் தான் அதனுடைய ஆகாரங்கள் கலந்திருக்கும்…
2.சுவாச நிலை மாறுபட்டால் மடிகின்றது.
3.சுவாச நிலை சுவாச நிலை என்கின்றேன்… இவ்வுலகமே சுவாச நிலைதானப்பா.
4.செயற்கை நிலைக்கு நான் எதிரியப்பா
5.கலியுகத்தில் வந்ததெல்லாம் இச்செயற்கை வினையினால் தான்.
இன்றைய பாடங்கள் புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.
நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.
அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.
காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்
அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.
கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.
இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
ஒருவர் கெடுதல் செய்கிறார்… என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.
1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.
அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.
உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.
நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.
அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.
நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.
நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.
சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.
ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.
அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.
இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.
இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.


நான் நானாக வேண்டும்
நல்ல குணம் கொண்டு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அது சமயம் ஒரு வேதனைப்படும் உணர்வை நுகர்ந்து விட்டால்
2.அது நல்ல அறிவை… அந்த மகிழ்ச்சியை… மேலே மூடி விடுகின்றது.
ஏனென்றால் எந்தக் குணத்தைக் கொண்டு எண்ணுகின்றோமோ அது இங்கே ஊடுருவும். அந்த உணர்வின் தன்மை கண்ணுக்குள் வரப்படும் பொழுது முதலில் கண்ணால் தான் அது நமக்குள் பதிவாகின்றது.
ஒருவன் தவறு செய்கின்றான் அதை நுகரும் பொழுது எண்ணம் ஆகின்றது. ஆனால் இங்கே பதிவானது உயிரிலே பட்ட பின் அந்த எண்ணங்கள் தோன்றுகின்றது.
ஆனால் பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது கண்ணுக்கு வருகின்றது எனக்கு நன்மை செய்தான் என்று அந்த மனிதனை எண்ணும் பொழுது கண்ணுக்கு வந்து அந்த மகிழ்ச்சியாக இயக்கச் செய்கின்றது.
அதே சமயத்தில் ஒருவன் தவறு செய்திருக்கின்றான் என்று எண்ணினால் கண்ணிலே பார்த்தவுடனே நமக்குள் பதிவான எண்ணங்கள் இவன் எனக்குத் துரோகம் செய்தான் பாவி என்று வெறுப்பான உணர்வுகளை ஊட்டுகின்றது.
1.இதுதான் கண்ணால் பதிவு செய்வதும்
2.பதிவானதை மீண்டும் எண்ணும் பொழுது எண்ணத்தால் மீண்டும் இயக்குவது
3.எண்ணம் என்பது உணர்வுகள்… உணர்ச்சிகள்… “தூண்டுவது…”
ஆக… புறத்தில் இருப்பதை நாம் நுகரப்படும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்குகின்றது
இதைப் போன்ற நிலைகள் நமக்குள் உருவாகாதபடி காலை துருவ தியானத்தில் கொடுக்கும் சக்தியை ஒவ்வொரு நிமிடமும் சீராகப் பயன்படுத்திட வேண்டும்.
உடலில் அழுக்குப்பட்டால் குளித்து விடுகின்றோம் துணியில் அழுக்குப்பட்டால் துவைத்து விடுகின்றோம்… அது போல் ஆன்மாவில் படும் அழுக்கினைத் துடைத்துப் பழகுதல் வேண்டும்.
ஆன்மாவில் அழுக்கு சேர்ந்து விட்டால் என்ன ஆகும்…?
முழு நிலாவாக பௌர்ணமியாக இருப்பது மற்ற கோள்கள் மறைப்பு ஆக ஆக அது சுருங்கிச் சுருங்கி மிகவும் சிறிதாகி விடுகின்றது. மீண்டும் அந்த நிலை மாறிய பின் தான் வெளிச்சம் வருகின்றது.
இதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் வெறுப்பு பழி தீர்த்தல் பழி வாங்குதல் போன்ற இத்தகைய உணர்வுகள் வந்துவிட்டால் “நல்ல குணங்கள் அனைத்தும் தேய்பிறையாகி முழுமையாகத் தேய்ந்து விடுகின்றது…”
உயிரின் உணர்வுகளில் “கடைசித் தொக்குகள்” உண்டு (முக்கியம்).
ஆரம்பத்தில் எப்படி உயிர் முதலில் புழுவாக உருவானதோ இதைப்போல இந்த உயிரிலே முழுமையாக இருள் சூழ்ந்து விட்டால் விஷம் முழுமையாகி இந்த விஷத்தின் உணர்வின் துணை கொண்டு… அடுத்து அத்தகைய உடலாகப் பெறும் தன்மை அடைந்து விடுகின்றது.
பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக வளர்ச்சி பெற்றுத் தான் மனிதன் ஆனோம்… மீண்டும் தேய்பிறை ஆகிவிடக்கூடாது.
கார்த்திகேயா…! ஒளியின் உணர்வை அறிந்து கொண்ட பின் அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் வளர்த்து என்றுமே ஏகாந்த நிலை… என்ற பிறவி இல்லா நிலை அடைவதே மனித உடலில் முழுமை பெறுவது.
உயிரால் வளர்க்கப்பட்டது தான்…
1.நான் யார்…? – உயிரால் வளர்க்கப்பட்ட மனித உடல்
2.ஆகவே உயிருடன் ஒன்றி இருக்கும் போது நான் என்று வருகின்றது.
3.நான் நானாக வேண்டும்
4.உயிரின் உணர்வுகள் நம்முடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மை இணைந்து வாழ்ந்தால் தான் “நான் நானாகின்றேன்…”
உயிர் நம்மை இயக்கும் போது நான் ஆகின்றது நான் என்ற சொல்லுக்கு உயிரே மூலமாகின்றது.
இதற்குள் அந்த உணர்வின் ஒளி எவ்வாறோ அதன் ஒளியின் தன்மையாக
1.நமக்குள் ஒளியான உணர்வை வளர்த்தல் வேண்டும்
2.உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக ஒளிச் சரீரமாக வேண்டும்.

செயற்கை யுகம் வந்ததன் காரணம்
பதம் என்பது எப்பதமும் இரண்டு வகை உண்டு…
1.நல்லது கெட்டது
2.நல்ல அணு தீய அணு
3.நல் மணம் தீய மணம் என்பதைப் போல்
4.எல்லா வழியிலும் உள்ளதப்பா இரண்டு பதம்.
மாற்று இல்லாமல் எதுவும் இல்லை…!
உலக இயற்கையே மாற்றுடன் தான் கலந்துள்ளது. உயிரைப் பிழைக்க வைக்கவும் மருந்துள்ளது… உயிரை அழிக்கவும் மருந்துள்ளது…! அணுவையும் செய்கின்றான் அழிக்கவும் செய்கின்றான் ஆக்கபூர்வமான உலகத்தில் “ஆக்கலும் அழித்தலும்” தான் இவ்வுலகமே.
நல்லெண்ணம் படைத்து நல் சுவாசம் எடுத்து நல்லதையே செய்கின்றான் நாடு போற்ற. சிறு துளி எண்ணத்தின் கலப்பினால் வருகின்றதப்பா துவேஷிக்கும் தன்மை எல்லாம்.
நுகரும் தன்மையைப் பகர்ந்துள்ளேன் சுவாச நிலை என்று. நுகரும் தன்மை மனிதனுக்கு மேல் மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கின்றதப்பா.
ஒரு நிலையில் அணுவான ஆத்மாவிலும் ஆவியின் தன்மையிலும் நுகரும் தன்மை உள்ளதப்பா. நல் மணம் உள்ள இடத்தில் நல் சுவாசம் இருக்கின்ற போதினிலே நல்ல அணு வந்தடைகின்றது என்று பகர்ந்துள்ளேன்.
1.நல்லணு என்பதெல்லாம் நல்லோரின் ஆசிகள் தானப்பா
2.தீய அணு என்பதெல்லாம் காற்றுடனே கலந்திருக்கும் ஆவிகளின் அணுக்கள் தான்.
நல்லணுவில் வருபவன் எல்லாம் இவ் உடலை விட்டுச் செல்லும் பொழுது மறு ஜென்மம் எடுத்திடாமல்… சூட்சும உலகத்தில் கலந்துவிட்ட தேவர்கள் என்னும் தேவாதி தேவர்கள்தான்.
1.அதில் உள்ளவர்கள் தான் சித்தர்களும் ஞானிகளும் பல கோடி நற்பயனை அடைந்து விட்ட
2.நல் இதயம் உள்ள நம் போகரின் நிலையில் உள்ளவர்கள் அப்பா.
நல் உணர்வை எடுத்திடு… நல் உணர்வை எடுத்திடு… சுவாச நிலையை மாற்றி விடாதே…! என்ற பொருள் இப்பொழுது புரிந்ததா…? நல் உணர்வை நல் சுவாசத்தை எடுக்கும் பொழுது…
1.நீ எண்ணுபவர்கள் எல்லாம் அணுவின் அணுவாக உன்னுள்ளே வந்து
2.உன் நிலையை உயர்த்துவார்கள்.
மறு பாதியில் தீய அணு என்று செப்பினேன். தீய அணுக்களின் வேலையெல்லாம் பெரும் பேராசைக்காரர்களும் ஆணவக்காரர்களும்… தான் பிறந்த பயனை பாதியிலே முடித்துக் கொண்டவர்களும் (தற்கொலை)… அடித்துக் கொலை செய்யப்பட்டவர்களும் கொலைகாரப் பாவிகளும் (கொலையுண்டவர்கள் – கொலை செய்தவர்கள்) விபத்தினால் ஐயோ என்று அவன் நிலையில் சென்றவர்களும்… இப்படி உலகில் உள்ள ஆவிகள் எல்லாம் இக்காற்றுடன் தான் கலந்துள்ளன அணுக்களாக.
நல்லுணர்வில் உள்ளவர்கள் ஆவிகளை எப்படிப் பார்க்கின்றோமோ அதே நிலையில் இந்த ஆவிகளும் தெரிந்திடும். இவ்வாவிகளின் வேலையெல்லாம் மிகத் துரிதமாகச் செயல்படுவதே…! தன் எண்ணத்தை எவன் உருவில் வந்து முடித்திடலாம் என்ற எண்ணத்துடனே சுற்றுகின்றது.
உன் நிலையில் கோபதாபங்களோ அதிக ஆசைகளோ மனச்சோர்வோ உள்ள பொழுது உன் எண்ணத்தைக் குறுக்கி விடுகின்றாய். அந்நிலையில் உள்ள பொழுது…
1.உன் சுவாச நிலை எடுத்திடும் மூச்செல்லாம் நல் மணம் கலந்திடாமல் பெரும் பாரத்துடனே உள் செல்கின்றது.
2.அந்நிலையில் அத்தீய ஆவிகளுக்கு அண்டிக் கொள்ளும் தன்மை உடனே வந்து விடுகின்றது
3.அதற்காகத்தான் பூஜை அறையில் நல் மணங்கள் உள்ள புஷ்பங்களை சாம்பிராணி கற்பூர வாசனைகளைப் போடுவது.
4.தீய அணுக்கள் வந்திதிடாது… அந்த இடத்திற்கும் அதன் நிலை வர முடியாது.
அதன் நிலை எல்லாம் கெட்ட வாசனை உள்ள இடம் துர்நாற்றம்… துர் மனது உள்ளவர்களையே தான் வந்து அண்டுகின்றது.
“வியாதியஸ்தர்கள் உள்ள வீட்டில் புகை போட்டிடுங்கள்…” என்பதெல்லாம் இதற்காகவே.
அத்தீய அணுக்கள் என்பவை நான் பகர்ந்த துர் ஆவியின் நிலையே… தீய அணுக்கள் எல்லாமே துர் ஆவிகள் நிலை தான்.
1.நம் பெரியோர்கள் வழி வழியாக பல வழிகளை வாழ்க்கையுடன் வடிவமைத்து ஒன்றச் செய்தார்கள்
2.ஆனால் உள் அர்த்தங்களையும் உள்ள நிலைகளையும் மக்களுக்கு புரிந்திடாமல் செய்துவிட்டார்கள்
3.அதனால் வந்தது தானப்பா இச்செயற்கை யுகம் எல்லாம்.
புகை மண்டலம் எழுப்பி… அக்காலத்தில் யாகங்கள் என்ற பெயரால் பெரும் தவசு முனிவர்களும் யோகிகளும் எதற்காகச் செய்தார்களப்பா…?
யாகங்கள் வளர்ப்பதுவே அதில் செலுத்தும் சந்தன மரங்களும் பசுவின் நெய்யும் யாகத்துடன் கலந்து நல் வாசனை பரப்பும் பொழுது
1.அந்த வாசனையை நுகர்ந்திட தீய அணுக்களினால் முடியாது
2.அந்த இடங்களிலே அதனால் இருக்கவும் முடியாது.
இக்காற்று மண்டலம் உள்ள இடத்தில் தான் இவ்வணுக்களின் வேலையெல்லாம். இப் புகை மண்டலம் செல்லும் பொழுது இக்காற்றிலிருந்து அணுக்கள் மேல் நோக்கிச் சென்றுவிடும். அந்நிலையில் அத்தீய அணு இந்நிலைக்குத் திரும்பிடாது. (இவ்வுலகத்திற்கு)
மண்டலம் மாறுபடுகின்றது அத்தீய அணுக்களின் வேலைகளில் யாகம் வளர்த்து அமர்வதன் பொருள் இச்சுவாச நிலைக்குத் தானப்பா. நம் உடலில் நல்ல அணுக்களாக வந்து அண்டிடவே நாம் செய்யும் யாகமெல்லாம்.
யாகத்தின் பொருள் புரிந்ததா…?
உன் வீட்டிலும் தினமும் சாம்பிராணிப் புகை போட்டு அந்த நெருப்பிலேயே மஞ்சள் பசு நெய்யும் கலந்து புகை போட வேண்டும். இதனால் தீய அணுக்கள் அண்டாது.
நல்லதை எண்ணிடும் பொழுது நல்லெண்ணம் உயர்ந்து நிற்க உன் மனதை ஒருநிலைப்படுத்திடு. உன் மனதில் எந்த நிலையிலும் கோபதாபங்கள் வேண்டாம் என்றதும்… பெரும் அவசரத்தை விட்டு விடப்பா என்றதும் இதற்காகவே.
கோபமும் அவசரமும் வந்தவுடன் நீ இழுக்கும் மூச்சினிலே சுவாச நிலை மாறுபடுகின்றது. சுவாச நிலையை மாற்றி விட்டால் தீய அணு வந்து அண்டுகின்றது.
1.நல்லெண்ணத்தை நீ பெற்ற நல்ல ஜெபத்தை எல்லாம் நாசப்படுத்துகிறது இத் தீய அணு.
2.பிற்கு மறு முறையும் ஜெப நிலைக்கு வந்திட நாள் செல்லுகிறது.
பாட நிலைகளை மனதில் ஊற்றிக்கொள் எண்ணத்தினுள்ளே மறு எண்ணத்தைக் கலக்க விடாதே. ஒன்றை நினைத்திருக்கும் பொழுது மறு எண்ணம் வருவதெல்லாம் இவ்வணுக்களின் வேலை தான்.
1.அவ்வணுக்களை அண்ட விடாதே
2.நல்ல அணுக்களைப் பெற்று விடப்பா…!
இன்றையப் பாடம் மிகவும் முக்கியம். இந்நிலையைப் புரிந்து கொண்டால் ஜெப நிலையைக் கூட்டிவிடுவாய்… புரிந்ததா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
டி.வி. ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அந்தந்த ஸ்டேஷன்களிலிருந்து வருவதைத் திருப்பி வைத்து நாம் கேட்கின்றோம்.
அதே போல் தான் ஒரு வியாபாரமே செய்கின்றோம் என்றால் அதிலே நிறையப் பேரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்
1.அந்த ஸ்டேஷனைத் திறந்தால் நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களின் நினைவு தான் அதிகமாக வரும்.
3.பாவிப் பயல்… இந்த மாதிரிச் செய்தான்… அதைச் செய்தான்… இதைச் செய்தான் என்ற ஸ்டேஷனைத் தான் நாம் அடிக்கடி திறந்து வைப்போம்.
அதற்குத் தகுந்தாற்போல் பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது செய்திருந்தால் அவர்கள் மீது அந்த நினைவுகள் வரும்.
அடுத்து நம் சொந்த பந்தங்களில் யாராவது ஒரு வித்தியாசமாகச் செயல்பட்டிருந்தால்… குறைபாடுகள் இருந்தால் “நல்லது செய்தாலும் நமக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்…” என்று அதைப் பற்றிய சிந்தனைகள் வரும்.
இப்படிக் குறைகளைப் பேச ஆரம்பித்தால் அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறைகளும் வரிசையில் வந்து கொண்டே இருக்கும். நல்லதை நினைக்கவே வராது…!
கடைசியில் குறையைப் பேசிப் பேசி… என்ன உலகம்… போ…! என்ற இந்த எண்ணம்தான் வரும். இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இருந்தால் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே
1.பாருங்கள்… இந்தப் பையன் மோசமானவன்…! என்று சொல்வோம்.
2.நாம் சொன்னதும் அடுத்து இன்னொருவர் ஆரம்பிப்பார்.
3.கடைசி எல்லாவற்றையும் மோசம்… மோசம்… என்ற சொல்லாக வரிசையில் வரும்.
4.இந்த உணவின் தொடர் வரிசை இப்படித்தான் வரும்.
ஏனென்றால் நம்மை உருவாக்கியது நமது உயிர் தான்.
1.தவறு செய்கிறார்கள் என்றால் நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது
2.கண்ணின் கருவிழி ருக்மணி பதிவாக்குகின்றது.
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அந்த மனித உடலில் விளைந்த உணர்வினை இழுத்து நம்மிடம் கொடுக்கின்றது.
4..உயிரிலே பட்ட பின் தவறு செய்கின்றான் என்பதை உணர்த்துகின்றது.
உயிரான காந்தம் என்ன செய்கின்றது…?
ஒரு நாடாவில் விஞ்ஞான அறிவு கொண்டு இன்று பதிவு செய்கிறோம். பின் அந்த ஊசியின் பக்கம் சென்ற பின் அதை இழுத்துப் பேசுகின்றது.
முன்பெல்லாம் ஊசியில் உராய்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது லேசரை வைத்து முன்னாடி ஓட ஓட அதில் இருக்கும் உணர்வுகளை எடுத்து வெளிப்படுத்துகின்றது. உராய்வதில்லை… நாடாக்கள் தேய்வதில்லை. அந்த லேசர் தான் அந்த ஒலி/ஒளி அலைகளை எடுத்துக் கொடுக்கிறது.
இதைப் போன்றுதான் நாம் சுவாசித்த பின்…
1.நம் உயிர் லேசரைப் போன்று இயக்கி அந்த அலைகள் பாய்ந்த பின் உணர்வின் ஒலிகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதும் சர்க்குலேஷன் ஆகின்றது,
அப்பொழுது அதனதன் குணத்திற்கொப்ப உணர்வின் தன்மை வீரியம் அடைகின்றது. அது அது அந்த உணர்வுகளை எடுத்துத் தீமையான அணுக்கள் சாப்பிடுகிறது. அந்த வழிகளில் (உடலில்) அது தெம்பாகின்றது.
சொல்வது அர்த்தமாகிறதா…?
அந்த நேரத்தில் எந்த நல்லதை எடுத்தாலும் கிடைப்பதில்லை. நல்லது மடங்கப்படும் போது இங்கிருந்து ஈர்க்கும் சக்தி குறைந்து விடுகின்றது.
உடலுக்குள் நல்ல அணுக்கள் இருக்கின்றது. இது அடைபட்ட பின் நல்லது இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகின்றது. இப்படி இருந்தால் அதற்குச் சாப்பாடு எப்படிக் கொடுப்பது…?
ஆகவே தான் அதைப் பிளந்து உங்களுக்கு உயர்ந்த சக்தியாகக் கொடுப்பதற்காக ஞானிகள் உணர்வை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு). சதா அந்த அலைகள் பாய்கிறது. அதை எடுத்து உங்களுக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.
செய்து பாருங்கள்.


மனிதன் விண் செல்லும் வழியைத் தான் காட்டுகிறது “வேதங்களும் உபநிஷத்துக்களும்”
1.உருவம். அது ரிக்
2.ஒரு பொருளிலிருந்து மணங்கள் வரும்போது சாம.
3.ஒரு பொருளுடன் இணைந்து அதை மாற்று நிலைகள் உருமாற்றும்போது இரண்டு செயலும் தன் உணர்வின் சத்தை மாற்றுகின்றது அதர்வண.
4.இரண்டும் மாறி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும்போது யஜூர்.
ரிக் சாம அதர்வண யஜூர் மீண்டும் சாம…! வேதங்கள் கூறியபடித் தான் நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன். புதிதாக ஒன்றும் சொல்லவில்லை.
ஒருவர் உடலை விட்டுப் பிரிந்து விட்டால் அதர்வண வேதத்தில் உருவாக்கப்பட்ட சாங்கிய சாஸ்திரங்களைத் தான் நாம் கையாளுகின்றோமே தவிர… ஞானிகள் காட்டியதை நாம் கடைப்பிடிக்கவில்லை.
ஒரு மனிதன் கோபமாகப் பேசுகிறான் என்றால்
1.அதிலிருந்து வெளிப்படக்கூடியது சாம இசையாக மாறுகின்றது… மணங்களாக மாறுகின்றது… குணங்களாக மாறுகின்றது.
2.எந்த மனிதன் அதை நுகர்கின்றானோ அந்த இசையின் தன்மை சாந்த குணம் கொண்டவனை…
3.கோப குணங்கள் அடக்கி விடுகின்றது அதர்வண.
4.நல்ல குணங்களை அடக்கிய பின் யஜுர் கோபத்தை உருவாக்கும் வித்தாகிறது.
அதாவது நல்ல குணத்துடன் ஒரு கோபக்காரரின் உணர்வு சேர்ந்து விட்டால் யஜுர்… நம்முடன் கலந்து அந்த உணர்வின் தன்மை எனக்கு எவன் தீங்கு செய்தானோ அவனை எண்ணச் செய்கின்றது… மீண்டும் அதனுடைய நிலைக்கு…!
எந்த மனித உடலில் இருந்து இந்தத் தீங்கின் தன்மை விளைவித்ததோ அதனின் உணர்வின் வலுவாக அதே எண்ணங்கள் கொண்டால் அடுத்து அந்த உடலுக்குள் சென்று அதை வளர்க்கும்.
ஆனால்
1.இதையெல்லாம் வென்ற அருள் மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அது சாம
2.அதை நமக்குள் நுகர்ந்து வளர்த்துக் கொண்டால் தீமையை அடக்கும் அதர்வண.
3.தீமைகள் அடக்கும் உணர்வுகள் ஒன்றி தனக்குள் முழுமை அடையும் பொழுது யஜுர் (வித்தாகிறது)
மீண்டும் அந்த அருள் மகரிஷிகளை நினைவு கொண்டால் அருள் ஞான உணர்வுகள் விளைந்து… மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் நிலைகளும் பெற்று இந்த உடலை விட்டு நாம் சென்ற பின் அருள் மகரிஷிகளின் வட்டத்தில் இணைகின்றோம்.
1.அவரின் சார்புடையோர் விண்ணின் ஆற்றலைப் பெருக்கி
2.அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலம் சென்றடைய வேண்டும்
3.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும்
4.உயிருடன் ஒன்றிய அறிவின் ஞானம் நிலைத்திருக்க வேண்டும் என்று
5.எண்ணத்தால் எவர் ஒருவர் செய்கின்றனரோ “உபநிஷத்துக்களில் கூறப்பட்ட வழிப்படி அவர்கள் செய்கிறார்” என்று பொருள்.
வேதங்களில் காட்டப்பட்டுள்ள சாரங்களும் இது தான்.
அந்த உயிரான்மா முதலில் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றது… அடுத்து அதன் வழியிலேயே அவரை பின்பற்றிக் அந்த குடும்பத்தாரும் விண் செல்ல ஏதுவாகின்றது.

நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…!
உண்ணும் உணவில் வருவதல்ல உடலின் ஆரோக்கிய நிலை. எல்லாமே மனநிலையில் இருந்து வருவது தான்.
1.கழிவுப் பொருளை வைத்து வேலை செய்பவனுக்கு… அவன் உடம்பு “ஆரோக்கியமாக இருந்திடப் பார்த்திருப்பாய்…”
2.ஆனால் பரிபக்குவமான உணவை உண்பவனுக்கோ ஆயிரம் வியாதிகள் அவனுக்குள்ளே கலந்திருக்குமப்பா.
நல்லதை மறந்துவிட்டுப் பல நினைவுகள் அவனுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதனால் நெஞ்செல்லாம் வேதனை வளர விட்டு இருப்பவன் சுவாச நிலையில் எல்லாமே அண்டிக் கொள்கின்றது.
கழிவு பொருளைக் கையில் எடுப்பவன்
1.அவனைச் சுற்றி இருக்கும் அழுக்கைப் பற்றி எண்ணாதபடி தான் வேலை செய்ததற்குண்டான கூலி பெறுவதையே எண்ணி
2.அந்த நிலையிலேயே உணவை உட்கொள்கின்றான்… தீமையான அந்தப் பொருளைப் பற்றி அவன் எண்ணுவதில்லை.
3.அவனுடைய சம்பாத்தியத்தில் அவன் நினைவு மாறாமல் இருப்பதால் அந்தத் தீது அவனைப் பாதிப்பதில்லை.
4.அவனுடைய எண்ணம் தான் அவனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
மனிதன் எண்ணி எடுக்கும் எண்ணங்களுக்குண்டான பாதிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டாய் அல்லவா..! எண்ணத்தை உயர்த்தி விட்டால் நல் வாழ்க்கை வாழ்ந்திடலாம்.
ஆகவே அவனவன் சுவாச நிலையில் உள்ளது தான் வாழ்க்கை நிலையும் எண்ணமும் எல்லாம்.
சுவாச நிலைக்கும் எண்ணத்திற்கும் பாடங்கள் பல நாள் பகர்ந்து விட்டேன் இனியும் உன் நிலையை ஒரு நிலைப்படுத்திடப் பார்த்திடப்பா.
தியான நிலை… சுவாச நிலை மன நிலைகளைப் பொறுத்தே உள்ளது எந்த நிலை வந்தாலும் மன நிலையை சந்தோஷமாகவே வைத்துக் கொள்.
1.அது எப்படி வரும் அந்நிலை…? என்று கேட்பாய்.
2.கலக்கம் வரும் பொழுது நானாகவா அதைச் செய்து கொண்டேன்…! அதற்கு என்ன செய்வது…? என்று கேட்டிடுவாய்.
கதையில் படித்திருப்பாய் ஊரெல்லாம் பற்றி எரிந்தாலும் பிடில் வாசித்தான் ஒரு மன்னன் என்று.
எரியும் ஊர் எரிந்து விட்டது அதனுடன் அழுது அவன் என்ன செய்திடுவான்…?
1.மனநிலை ஒரு நிலையில் இருந்திட்டால் ஊர் எரிவதும் தெரியாது.
2.உலகளவு துவேஷம் வந்தாலும் தாங்கிடுமப்பா அந்த மனநிலை.
வரும் துவேஷத்தை எண்ணிக் கொண்டிருந்தால் எதிர் துவேஷம்தான் எழும்பி நிற்கும். துவேஷிப்பவனை துவேஷத்தன்மையில் துவேஷிப்பது அல்ல அந்நிலை என்று முதலிலேயே பகர்ந்துள்ளேன்.
நாரதரின் கதையையும் புகட்டி உள்ளேன்..! உன் மனநிலையை மாற்றிடாமல் துவேஷிக்கும் தன்மையை ஏற்றிடாமல் தியான நிலையில் ஒரு நிலைப்படுத்திடப்பா உன் மன நிலையை.
1.அந்நிலையில் உதித்திடும் பல உதயங்கள் உனக்குள்ளே.
2.நாரதரின் வழியில் சென்று தான் நசுக்கிட வேண்டும் மூட்டைப் பூச்சிகளை…! புரிகிறதா…!
பெரும் குடிகாரனின் எண்ணமெல்லாம் குடியிலும்… அதை அடைவதற்கான வழியிலும் வந்து கொண்டே இருக்கும். அவ்வெண்ணத்தின் வழியிலே அவனுக்குள் இருக்கும் ஈசனின் சக்தியையே அவனுள்ளேயே அவ்வெண்ணத்திலேயே கொண்டு செல்கின்றான்… அவன் நினைப்பதும் நடக்கின்றது.
அதே வழியில் தான் பெரும் திருடனும் நடக்கின்றான். திருடனின் எண்ணமெல்லாம் எந்நிலையில் பொருளைக் களவாடலாம்…? என்றே எண்ணுகின்றான். அவனுள் இருக்கும் ஈசனும் அவன் வழிக்கே வருகின்றான். ஒவ்வொருவரின் தொழிலிலும் இதே முறைதான்.
1.எல்லோரிடத்திலும் உயிரிலும் கலந்திருக்கின்றான். அவ்வீசன்.
2.அவனவன் எண்ணத்திற்கு அவனவன் வழி செல்கின்றான்…
3.நல்லவனுக்கும் வழி செல்கின்றான் தீயவனுக்கும் வழி செல்கின்றான்.
ஈசன் என்பவர் யார் என்கிறாய்…?
ஈசன் என்பவன் கல்லும் மண்ணும் அல்ல. காலமுடன் கலந்துள்ளான்… காற்றிலும் ஒளியிலும் கலந்துள்ளான். எண்ணும் எண்ணத்தில் கலந்திடுவான் அவ்வீசன்.
1.ஜெப நிலையை எண்ணுபவனுக்கும் ஜெபத்துடன் கலந்திடுவான்.
2.உலகமெல்லாம் சுற்றியுள்ளான்… எடுக்கும் பிறப்பை முடிக்கும் வரை எல்லா எண்ணத்திலும் எல்லா உயிரிலும் கலந்திருப்பான் ஈசன்.
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பதன் பொருள் இதுவே…!
ஜெப நிலையில் பாடம் புரிந்து கொண்டு எடுத்த பயனை நல்வழியில் முடித்துக் கொண்டு பிறகு ஏழு ஜென்மங்களின் பாடம் பற்றி முதலிலேயே சொல்லி உள்ளேன்.
அந்நிலையைப் புரிந்து கொண்டு வாழ்க்கை முறையைப் பயனுள்ளதாக்கி நல்லெண்ணம் எண்ணிக் கொண்டு சுவாச நிலையை மாற்றிடாமல் வடிகட்டி வருபவன் தான் பெருநிலை அடைகின்றான்.
1.இவ்வுலக வாழ்க்கையின் கலியின் கடைசிக் காலம் இது.
2.மனித ஜீவனின் கடைசிக் காலமப்பா இது.
3.இப்பயனைப் புரிந்து கொண்டு நடந்திட வேண்டுமப்பா.
இருந்தென்ன பயன்…? இருக்கும் வரை சம்பாதிக்கலாம்…! நம் இஷ்டத்திற்கு வாழாத வாழ்க்கை நமக்கு எதற்கு…? என்ற வாதங்கள் தான் பலர் மனதில் உள்ளது.
பல ஆண்டுகளாகச் சம்பாதித்து பல நிலையில் இருப்பவர்களுக்கும் ஒரு குண்டைப் போட்டு விட்டால் உலகமே அழிந்திடும் தன்மையில் உள்ளதப்பா.
இருக்கும் வரை சந்தோஷமாக இருங்கள்…
1.நல் சுவாசத்தை எடுங்கள்… நல் உணர்வுடன் இருங்கள்…
2.அணுவென்ன…? அணுகுண்டென்ன…? உலக நிலை மாறினாலும்
3.உன் நிலையை ஒரு நிலைப்படுத்தினால் வந்துவிடலாம் “போகரின் நிலைக்கே…”
பாடங்கள் பகிர்ந்திட்டால் பல கோடி பகர்ந்திடலாம். உலகத்தன்மையில் இருளடையும் தன்மை தான் இனி சில காலத்திற்குள் நடந்திடுமப்பா. ஒளி என்பதும் இல்லை பெரும் காற்றும் இல்லை ஒளியும் காற்றும் இல்லாவிட்டால் நீரும் இல்லை. உலக ஜீவராசிகளும் இல்லை. இந்நிலை வருவதற்கே கலியுகம் என்ற கடைசிக் காலத்தை குறிக்கிறார்கள்.
ஒரு நிலைப்படுத்திடப்பா உன் நிலையை…! புரிகிறதா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அந்த மகரிஷிகளின் சக்திகளை எடுத்து நமக்குள் வலுவாக வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் அந்த உயர்ந்த சக்திகளின் இயக்கங்களை “அனுபவபூர்வமாக நமக்குள் பார்க்கலாம்…”
தீமை செய்யக் கூடியவர்கள் யாராவது… நமக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் கூட…
1.அது அவர்கள் உடலில்தான் வளரும்… அவர்கள் உணர்வுகள் நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… தீமை செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால்
3.அந்த எண்ணம் அவர்களைப் பாதிக்கும்… பாதிக்கும் போது தான் நினைப்பார்கள்.
இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம்… என்று நினைப்பார்கள். இதை நிச்சயம் அங்கே உணர்த்தும்…!
ஏனென்றால் இந்த உணர்வுகள் போனவுடன் நினைவலைகள் முன்னுக்குப் போகும்… நம்மைப் பற்றிய நினைவுகள் வரும்.
1.இந்த மனிதனை நாம் தொந்திரவு செய்து விட்டோம் என்ற எண்ணம் வரும்.
2.நிச்சயம் இந்தத் திருப்பம் வரும்.
இதே போன்று குடும்பங்களில் அடிக்கடி சில குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகளுக்குக் காரணம் நாம் அல்ல. அந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.
அந்த நேரங்களில் எல்லாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.
காரணம் இன்றைக்கு மட்டும் வந்ததல்ல இது. தாய் கருவில் இருக்கும் போதே இந்த வினைகள் தொடர்ந்து வந்தது.
அதே போல் ரோட்டிலே சாதாரணமாகச் சென்றாலும் கூட அங்கே இரண்டு பேர் சண்டையிடுவார்கள்.. ஒருவருக்கொருவர் சாபமிட்டுப் பேசியிருப்பார்கள். சும்மா வேடிக்கையாக நாம் காதிலே கேட்டாலும் கூட அதுவும் நமக்குள் அந்தச் சாபம் பதிவாகி விடுகிறது.
ஆனால் நாம் தவறு செய்து அது நமக்குள் வரவில்லை.
1.இந்த மாதிரிச் சாப அலைகள் நம் உடலில் எத்தனையோ விதமாக எத்தனையோ வகைகளில் பதிவாகியிருக்கும்.
2.அது எல்லாம் மிக சக்தி வாய்ந்தது.
எப்படி இருந்தாலும் உதாரணமாக ஒரு கேமராவில் படம் பிடிக்கிறோம் என்றால் குறுக்கே யாராவது வந்தால் படத்தில் அதுவும் அதில் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும். எடுத்த படமும் ஆடி இருக்கும் (BLURRED).
கேசட்டில் ஒரு இசையைப் பதிவு செய்கிறோம் என்றாலும் இடையில் யாராவது சத்தம் போட்டால் அதுவும் சேர்ந்து பதிவாகத் தான் செய்யும்.
இதே மாதிரித் தான் நம் உடலில் ஊழ்வினை என்ற நிலைகள் கொண்டு எத்தனையோ எண்ணங்கள் அதனுடன் சேர்ந்து சேர்ந்து பதிவாகிக் கொண்டே தான் இருக்கிறது.
அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது குறுக்கே பதிவான எண்ணங்களும் ஊடுருவி நமக்குத் தெரிய வரும். அதே சமயத்தில் அது நம் காரியங்களைத் தடைபடுத்தும் உணர்வாகவும் வந்து சேரும்.
ஒரு நல்ல காரியத்திற்காகச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று வைத்துக் கொண்டால் அவர்கள் சாபமிட்டுப் பேசியதும் இதிலே சேர்த்து (JOINED) இரண்டும் இணைந்து விடும்.
எப்படி எல்லாம் கெட்டுப் போக வேண்டும் நினைத்துச் சாபமிட்டார்களோ அந்த வேலையெல்லாம் நமக்குள்ளும் நடக்கும்.
1.இது எல்லாம் ஒரு உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது
2.அந்த மணம் வந்து உயிரில் பட்டு அதற்குத் தக்க மணமாகி “நமக்கே எதிரியாக வரும்…!”
இதை எல்லாம் துடைப்பது யார்…?
காரணம் இயற்கையின் நிலைகள் வளர்ச்சி அடைந்தது பலராம். பலருடைய எண்ணங்களை அறியும் சக்தியாக அந்த எண்ணங்கள் இயக்குவதை நமக்கு உணர்த்துகின்றது.
அதிலே வரும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றால் நரசிம்மா…! எப்பொழுது தீமை என்று அங்கே உணர்கிறோமோ… அது நம்து உடலுக்குள் போகாதபடி அங்கேயே பிளக்க வேண்டும்.
பிளக்க வேண்டுமென்றால் உயிர் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும். தீமையான உணர்வுகள் புகாதபடி பிளந்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தான் ஆத்ம சுத்தி என்று சொல்வது.
காவியத் தொகுப்புகள் இதை எல்லாம் தெளிவாக்குகின்றது. அதன் வழி நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்தாலே போதும். பின் தன்னிச்சையாக வேலை செய்யும்.
முந்திய பழக்கத்தில் எல்லாம்… யாராவது சொன்னால் அதிலேயே தான் நம் எண்ணத்தைச் செலுத்துவோம். ஆனால் இப்பொழுது
1.ஆத்ம சுத்தி செய்து வலுவாக்கிக் கொண்ட பின்
2.ஏதாவது இடைவெளியில் வந்து தடை செய்தாலும் கூட அதைக் கவனித்து மாற்ற முடியும்.
தீமை செய்யும் உணர்வுகள் குறுக்கிட்டால்…
1.உடனே அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும்
2.ஆத்ம சுத்தி செய்ய வேண்டும் என்ற இந்த உணர்வுகள் எல்லாம்
3.நமக்குள் தன்னிச்சையாகத் தோன்றும்.


விஷக் கதிரியக்கங்கள் பரவினால் “நம் உயிரின் துடிப்பு அதிகரித்துவிடும்”
இன்று விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். “எந்த நிலையிலும் எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம்….” காரணம்… தன் நாட்டைக் காக்கக் கடும் விஷமான குண்டுகளைச் சேமிப்புக் கிடங்குகளில் வைத்துள்ளனர்.
உலகம் முழுவதற்கும் சரி… நம் நாட்டிலும் சரி… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு அதைப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். அந்த அணுக்கதிரியக்கங்களைப் பரிசோதனை என்ற பெயரில் வெடித்துப் பார்த்து விண்ணுலகிலும் பரவச் செய்து விட்டார்கள்.
நம் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற கோள்கள் அதைக் கவர்ந்து எடுத்து அதிலேயும் கலவையாகி வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. அவை அனைத்தும் சூரியன் அருகிலே சென்ற பின் மோதி விஷத்தைப் பிரிக்கும்… இருந்தாலும் அந்த வலுவை சூரியன் சிறுகச் சிறுக இழந்து கொண்டுள்ளது.
ஒரு அணுகுண்டை வெடிக்கப்படும் பொழுது எப்படி அதனின் வேகத் துடிப்பு கொண்டு மற்றவைகளைக் கருக்குகின்றதோ இதைப் போல வான் வீதியில் பெரும் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது.
1.அப்படிப்பட்ட மாற்றங்கள் ஆனால் நம் உயிரின் துடிப்புகள் அனைத்தும் துரித கதியாகி உடல்கள் அனைத்துமே கருகும் நிலையாகிவிடும்…
2.விஷத் தன்மைகள் அதிகரித்து ஜீவனற்ற (பல்புகள் பியூசாவது போல்) நிலையாகிவிடும்
உதாரணமாக ஒரு டைனமோவை (DYNAMO–GENERATOR) சுழலச் செய்யும் பொழுது… அது வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகச் சுற்றினால் மின் உற்பத்தி அதிகமாக ஆகின்றது.
ஆனால் முதலில் சீராக அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விளக்குகளோ அல்லது மற்ற சாதனங்களோ… “மின் உற்பத்தி அதிகமாகும் பொழுது அவைகள் பியூஸ் ஆகி விடுகின்றது…!”
அதைப் போல தான் சூரியனும் தனக்குள் கவருவதைத் தனக்குள் உருப்பெற்ற பாதரசத்தால் மோதும் நிலைகள் கொண்டு சீரான கரண்டை உற்பத்தி செய்கின்றது.
ஆனால் அதே சமயம்
1.விஞ்ஞானத்தால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் தாக்கப்படும் பொழுது
2.பளீர்…ர்ர்… என்று மின்னணுவின் சக்திகள் (FLARE) அதிகமாகத் தோன்றும்.
3அதாவது மேலே முதலில் சொன்ன மற்ற நிலைகள் சூரியனுக்குள் மோதப்படும் பொழுது
4.விஷக் கதிரியக்கங்களை வடிகட்ட முடியாதபடி நெருப்பின் குழம்புகளாக அவை விரிவடைவதைப் பார்க்கலாம்.
இப்படித் தோன்றியது நம் பூமியின் ஈர்ப்புக்குள் வரப்படும் பொழுது பல பல மாற்றங்கள் ஆகிவிடும். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதாரணமாக இப்போது நமது உயிரின் துடிப்பு சீராக இருக்கின்றது அந்தத் துடிப்பின் நிலைகள் கொண்டு உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் அதன் அதன் உணர்வுகளைச் சேர்க்கின்றது.
ஒரு மோட்டாரில் காயில்களைச் (COPPER COIL) சுற்றப்பட்டு அதற்கொப்ப மின்சாரத்தைப் பாய்ச்சினால் அந்தந்த சக்திக்குகந்தபடி மோட்டார்கள் சுழற்சி அடைகின்றது.
அதற்குண்டான காந்த சக்தியும் (MAGNET) அதற்குண்டான வயரும் (WIRE) அதனுடன் இணைக்கப்படும் பொழுது அவை அதனதன் சுழற்சியாக சீராக இயக்குகின்றது.
இதைப் போன்று
1.நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும்
2.தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் உணர்வு கொண்டு மீட்டிடும் உணர்வுகளை எடுத்து எடுத்து
3.அந்த உணர்வுகள் ஒவ்வொன்றும் வெங்காயச் சருகு போன்று ஒன்றுடன் ஒன்று கலந்து… ஒன்றுடன் ஒன்று கலந்து
4.இவை அனைத்தும் உடலில் அணுக்களின் தன்மை பெருகி பரிணாம வளர்ச்சியில்
5.வீரியத்தன்மை கொள்ளும் அணுவின் அடைந்து… உறுப்புகள் உருவாகி மனிதனாக வந்துள்ளோம்.
ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் உற்றுப் பார்க்கும் வேதனையான உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகி விட்டால்… மீண்டும் மீண்டும் இந்த உணர்வின் தன்மை நுகரும் தன்மை வந்தால்… அந்த நுகரும் ஆற்றல் நமக்குள் சென்று மனித உடலை உருவாக்கிய அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடுகின்றது.
இதிலிருந்து நாம் மீள்தல் வேண்டும்.
நமக்குள் சிறு சிறு திரைகளாக (சித்திரை) குறைகள் வரினும் அந்தத் திரைகளை நீக்கி விட்டு
1.அருள் ஒளிச் சுடராக அடைந்த அருள் ஞானிகள் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.
2.அந்த இருளை மாய்த்தல் வேண்டும்.
நாம் அனைவரும் நல்லவர்களே…! ஆனால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை மூடி மறைத்து விட்டால் சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.
அந்த உணர்வின் தன்மை கூடிவிட்டால் நம்மை அறியாமலே அது நம்மைத் தவறு செய்ய வைத்து விடுகின்றது. அதன் வழி நமக்கு நாமே தண்டனை கொடுத்தது போன்றும் ஆகிவிடுகிறது.
தற்கொலை போன்ற உணர்வின் இயக்கங்களுக்கு அழைத்துச் சென்று விடுகிறது. நாம் நுகர்ந்தது எதுவோ உயிர் அதை இயக்கி விடுகின்றது. இதைப் போன்று நம்மை அறியாது சூழும் தீமைகளிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
எத்தனையோ கோடிச் சரீரங்களில் நாம் பல இன்னல்கள் பட்டு ஒன்றுக்கொன்று இரையாகி… அந்த உணர்வின் தன்மை தனக்குள் இரையாக்கி…
1.வலிமையான உடலுக்குள் புகுந்து அதனின் வலுவை எடுத்து
2.அடுத்த உடலாக மாற்றிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.
இருந்தாலும்… இந்த உடலில் நாம் வாழும் காலம் மிக மிகக் குறுகிய காலம்.
1.அந்தக் குறுகிய காலத்திற்குள் அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் பெருக்குதல் வேண்டும்
2.மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை அடைதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றி… வேகா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்.

கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…?
சுவாச நிலையின் பாடத்தைப் பல நாளாகப் பகர்ந்து கொண்டே வருகின்றேன். சுவாச நிலை என்ற பொருள் உன் நிலைக்குக் கடுகளவு தான் வந்துள்ளது… உன் வழியிலும் கடுகளவு தான் ஏற்றுக் கொண்டுள்ளாய்.
சுவாச நிலை என்பதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை தானப்பா. கஷ்ட நஷ்டங்கள் கலந்ததுவே வாழ்க்கை.
காலமெல்லாம் தவமிருந்தாலும்…
1.கஷ்டம் வரும் பொழுது தன் மனநிலையை அதனுள் ஐக்கியப்படுத்துபவனுக்கு அதே எண்ணம் தான் எச்சுவாசத்திலும் கலந்துவிடும்.
2.அவ்வெண்ணத்தையே சுவாசிப்பதால் சுற்றிச் சுற்றி அவ்வெண்ணமே தான் மனதில் ஒரு நிலைப்படுகின்றது
3.அந்நிலைக்கு வருபவன் எவ்வெண்ணத்தையும் மறக்கின்றான்… தன் நிலை உணர்வதில்லை.
4.முதலில் வந்த அந்த நிலையையே எண்ணிக் கொண்டுள்ளான்.
5.அதனால் வருவது தான் சோர்வும் சோகையும் எல்லாமே…!
சோர்வான மனமுள்ளவனுக்குக் கோப நிலையும் அதிகரிக்கும். இப்படி ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டால் உடல் நிலையும் மாறிவிடுகிறதப்பா.
இந்நிலையை மாற்ற…
1.கஷ்டம் வரும் பொழுது நல் நிலையை மனதில் எண்ணி
2.அந்தக் கஷ்டத்தை போக்கிட என்ன செய்யலாம்…? என்ற “உதயம்” வருவதற்குச் சிறிது நேரம் தியானத்தில் இருந்திடப்பா.
3.அந்நிலையில் அவன் அருள்வான் பல வழி முறைகளை.
மனதிற்குள் கஷ்டத்தை அடக்கிவிடாதே… ஒதுக்கிடப்பா மனதில் இருந்து கஷ்டங்களை எல்லாம். இது எப்படி சாத்தியமாகும்…? என்று நியாயம் பேசிடுவாய்…! சத்திய நியாயத்தையும் சகலத்தையும் பார்த்திடப்பா.
1.அந்தந்த நேரத்தில் எல்லாம் அவன் வருவான் உன்னுள்ளே… வந்து உன்னை வழி நடத்துவான்.
2.அவன் வழி நடத்திவிட்டால் உன் சுவாச நிலையும் உடல் நிலையும் மாறாதப்பா… நல் சுவாசத்தை எடுப்பதுதான் சரியான வாழ்க்கை முறை.
கலங்கும் நெஞ்சம் இருந்திட்டால் எல்லாமே கலக்கம் தான். அதனால் உடல் நிலையும் மனநிலையும் பாதிப்படையுமப்பா.
கலக்கம் வந்துவிட்டால் “அதுவும் நன்மைக்கே தான்” என்ற எண்ணம் ஏனப்பா உனக்கு வரவில்லை…? கலங்குகின்றாய்…! தடங்கல்களை எண்ணி என்றும் வருத்தப்படலாகாதப்பா. அதுவும் நன்மைக்கே என்ற எண்ணம் தான் வளர்ந்திட வேண்டுமப்பா உன் மனதில்.
1.வாழும் வாழ்க்கை உனதல்ல…!
2.அவன் இட்ட பிச்சை தான் உன்னுடைய வாழ்க்கை. அவன் அருள்வான் எல்லாமே.
3.மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இதற்குத்தானப்பா… எல்லாம் நன்மைக்கே…!
(இரு நிலையான) ஒளியும் இருளும் ஒன்று போல் தான் மாறி மாறி சுழன்று வருகிறது ஆனால் இருளான நிலைகளை உனக்குள் மாற்றிடாமல் உன்னுள்ளே ஜோதி நிலை பெற வேண்டுமப்பா.
நீ விட்ட கடனை முடிக்கத்தான் வந்துள்ளேன். வழி அமைத்ததெல்லாம் அவன் செயல்…! “ஆண்டிடுவான் அவனே உன்னையும்…” என்று எண்ணிவிடப்பா.
இந்த மனநிலையை மாற்றிடாமல்… அமைதி கொண்டு நல் சுவாசங்களை எடுத்து… நல் எண்ணங்களை உனக்குள் வளர்த்து உயர்ந்த உணர்வைப் பெற்றிடுவாய்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இந்த மனித வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் சோர்வு வந்து விடுகின்றது. அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது… மாற்றங்கள் ஆகின்றது.
சிந்திக்கும் தன்மை குறைந்தால் அடுத்து நாம் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது. சோர்வு… சிந்தனை குறைவு… வேதனை என்ற இது மூன்றும் சேர்த்து ஒரு கருவின் தன்மையாகிறது. உயிர் அந்த அணுவாக உடலுக்குள் உருவாக்குகின்றது.
நான் நினைத்தேன் வரவில்லையே… என்ற எண்ணத்தில்
1.“சாமி (ஞானகுரு) சொன்னாரே…
2.கிடைக்கவில்லையே… கிடைக்கவில்லையே…! என்ற உணர்வைத் தான் மீண்டும் வளர்க்க முடியும்.
3.ஆக.. கீழான நிலைக்குத் தான் போக முடியும்.
3.வலு கொண்ட நிலையிலே சாமியை எண்ணுவீர்கள்
4.ஆனால் சாமி சொன்னதை (உபதேசம்) விட்டு விடுவீர்கள்.
வயலில் விவசாயம் செய்யும்போது களைகளைப் பிடுங்க வேண்டும் என்று சொன்னால் களையைப் பிடுங்குவதற்குப் பதில் முளைத்த நல்ல செடிகளைத் தட்டி விட்டால் என்ன செய்யும்…!
விவசாயத் துறையில் நல்ல வித்தைத் தான் கொடுக்கின்றார்கள்… பயிரிடுகின்றோம். ஆனாலும் வளர்ந்த பின் களைகளை எடுப்பதற்குப் பதில் களையுடன் சேர்த்து பயிரையும் பிடுங்கி விட்டால் பலனற்றுப் போகும்.
அதைப் போன்று தான்
1.நான் (ஞானகுரு) கொடுத்த அருள் ஞான வித்தை விளையை வைத்துத் தீமைகளை (களைகளை) நீக்குவதற்குப் பதில்
2.நான் கொடுத்த சக்தியையே வீழ்த்தி விடுகின்றார்கள்.
கொடுத்த சக்தியை இழக்கப்படும் பொழுது ஒரு காரியத்தை எண்ணிச் செய்தால் சோர்வடைந்து வேதனை என்ற நிலை உருவாகின்றது.
ஆனால் இதற்கு முன்… பல பிறவிகளிலும் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் எப்படி வளர்ச்சியடைந்தோமோ தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வு கொண்டு மீள வேண்டும்… மீள வேண்டும்… என்ற உணர்வுகளைச் சேர்த்துத் தான் வளர்ந்து வந்துள்ளோம்.
பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து அதன் வழி இத்தனையும் கடந்து வந்த மனிதன் நாம்
1.மீண்டும் தன் இச்சையின் உணர்வு கொண்டு அது நிறைவேறவில்லை என்றால்
2.சோர்வும் வேதனையும் அடைந்து அத்தகைய அணுவின் தன்மையாக வரப்படும் பொழுது
3.நம் நல்ல குணங்களை அடக்கிவிடுகிறது… அதர்வண…!
நல்ல குணங்களை அடக்கியபின் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் விளைந்து (யஜூர்) விட்டால் மீண்டும் சாம…!
அதே தீமையான எண்ணம் இயக்கத் தொடங்குகிறது. அதை மாற்றுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன்.
தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒரு இரண்டு நிமிடம் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரிடமே வேண்டுங்கள். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்து வாழ்க்கையில் வந்த வேதனைகளை அடக்கப்படும் பொழுது அதர்வண. தீமைகள் செயலற்றதாகின்றது.
1.துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருள் ஒளியின் அணுக்களைப் பெருக்கினால் அப்பொழுது யஜுர்… (வித்து)
2.ஒளியான அணுக்களாக நமக்குள் ஒவ்வொரு நாளும் வளர்க்க வேண்டும்.


“துருவன் பெற்ற” மகா சக்திகளை நாம் பெற வேண்டும்
சில காடுகளில் யானை வருகிறது என்றால் தங்களைக் காத்துக் கொள்ள “புலையர்கள்” என்று சொல்பவர்கள் வாயிலே பச்சிலைகளை மென்று ஊதுவார்கள்.
குருநாதர் என்னைப் (ஞானகுரு) பண்ணாரிக்குச் சென்று அங்கே ஆறு மாதம் இருக்கும்படி சொன்னார். அந்தக் காட்டுப் பகுதிகளில் செல்லப்படும் பொழுது யானைகள் வரும்.
நான் சென்று கொண்டிருக்கும் பொழுது என் மணத்தை நுகர்ந்தறிந்து யானை அங்கே வருகின்றது. அப்போது அங்கே என் அருகிலிருந்தவர் “யானை வருகிறது… விலகிச் சென்று விடுங்கள்…! என்று சொன்னார்.
அட… நீ இங்கே தானே இருக்கின்றாய் அப்பா…! என்று கேட்டேன்.
இங்கே பாருங்கள்…! பச்சிலைகளை வாயில் வைத்திருக்கின்றேன் மென்று ஊதுகின்றேன்…! இந்த வாசனையைக் கண்டபின்
1.யானைகள் வெகு தூரத்திலிருக்கும் போதே அதை நுகர்ந்து பார்த்து
2.இந்தப் பக்கம் வராது வேறு ஒரு பக்கம் சென்றுவிடும் என்று சொல்கிறார்..
இப்போது நாங்கள் இங்கே இருப்பதால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள் இல்லையென்றால் யானை இந்தப் பக்கமாகத் தான் வரும். யானை அந்த பக்கம் செல்கிறது பாருங்கள்…! என்றார். இது நடந்த நிகழ்ச்சி…!
இதை அறியக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்குத் தான் குருநாதர் பண்ணாரி காட்டிற்குள் செல்ல வேண்டும் என்று அனுப்பினார்.
இதற்கு முன்னாடி… மச்சம் எடுப்பதற்காக குருநாதர் காட்டிற்குள் என்னை அனுப்பும் பொழுது
1.யானையிடமிருந்து தப்பிக் கொள்ள
2.யானையின் மணத்தை நீ எவ்வாறு நுகர வேண்டும்…? என்று கற்றுக் கொடுத்தார்.
ஆனால் பண்ணாரி பக்கம் செல்லும் பொழுது பச்சிலைகளை அந்த புலையர்கள் நுகர்ந்து அந்த மணத்தை வெளிவிடும் பொழுது யானைகள் ஒதுங்கிச் செல்வதைக் காண முடிந்தது.
ஏனென்றால் அந்தப் பக்கம் இருக்கும் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக யானைகள் வரும்.
இது தெரியாதபடி நான் சென்று விட்டேன். தெரியாது என்றாலும் பொழுது குருநாதர் போகச் சொல்லும் போது அந்தப் பாதையில் நான் போய்த் தானே ஆக வேண்டும்.
இதைப் போன்று தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில்… அவன் குழந்தையாகப் பிறந்த பின்பு
1.அவனைக் காட்டுப்பகுதியில் கையிலே தூக்கிச் சென்றால்
2.மற்ற காட்டு விலங்குகள் இவனைக் கண்டு அஞ்சுகின்றது.
சிறு குழந்தையாக இருக்கும் போதே அவன் வளர வளர அவன் உடலில் இருந்து அத்தகைய ஆற்றல் வெளிப்படுகின்றது. இவன் போகும் பக்கம் எல்லாம் மிருகங்கள் விலகுகின்றது.
இவன் பின்னாடி மக்கள் சென்றால் அவர்களுக்கு அது பாதுகாப்பாகின்றது. ஐந்து வயது ஆகும் பொழுது காட்டு அரசன் என்று பெயர் வைக்கின்றார்கள்.
அவன் மற்ற மணங்களை நுகர்ந்தறியும் பொழுது பல பல பொருள்களை அறிந்து இயக்கத்தின் தன்மையை… “தாவர இனத்தின் சக்திகளை” அறிகின்றான்.
இப்படி அறிந்துணரும் அவன் நாளடைவில் அந்தத் தாவர இனங்களுக்கு “எங்கிருந்து சக்தி கிடைக்கின்றது…?” என்று
1.வானை நோக்கி உற்றுப் பார்க்கின்றான்.
2.அப்போது துருவப் பகுதியிலிருந்து வரும் ஆற்றலை அவன் நுகர்கின்றான் அறிகின்றான்.
3.விஷத்தை வெல்லும் சக்தியாக அவனுக்குள் வருகிறது.
4.அந்தச் சக்தியால் விஷம் கொண்ட பல நட்சத்திரங்கள் உமிழ்த்தும் உணர்வுகளையும் அந்த நட்சத்திரங்களையும் இவன் காணுகின்றான்.
ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதும் பொழுது தான் பொறிகள் கிளம்பி மின்னலாகப் பாய்கின்றது…! மின்னல் தாக்கிப் பல வகைகளிலும் பூமிக்கு அடியில் கலவை ஆகிறது.
இதையெல்லாம் அறிகின்றான் அகஸ்தியன் துருவனாகும் போது.
துருவப் பகுதி வழியாக வருவதை அவன் நுகர்ந்து விஷத்தன்மைகளை அடக்கும் நிலையும்
1.மின்னல் எப்படி ஒளிக் கற்றைகளாக மாறுகின்றதோ அதைப் போன்று
2.இவன் உடலில் அந்த மின்னலையே (அது தாக்கிடாதபடி) “ஒளிக் கதிராக மாற்றும் அணுக்களாக” இவன் உடலுக்குள் அது மாறுகின்றது.
அதனால் தான் ஐந்து வயதில் மகா சக்தி பெற்றான் என்று சொல்வார்கள்.
காட்டுக்குள் எல்லா மிருகங்களையும் அவன் ஆட்சி புரிந்தவன் என்றும்… அதனால் அன்று காடுகளில் வாழ்ந்த மக்கள் இவன் செயலைக் கண்டு “அரசன்” என்று இவனை மதிக்கத் தொடங்கினார்கள்.
துருவன் அவனுடைய ஐந்து வயதில் பெற்ற
1.அந்தச் சக்திகள் அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான்
2.இதை உங்களுக்குள் ஆழமாக பதிவு செய்கின்றேன்… என் குரு காட்டிய அருள் வழிப்படி…!

மனதை அடக்க… முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்…!
விரதம் என்ற எண்ணம் உனக்கு வேண்டாம்… நீ விரதமிருந்து என்னையும் உபவாசம் இருக்க வைத்து விட்டாயப்பா.
மற்றெல்லா ஜீவராசிகளுக்கும் மனித உடலுக்கும் பெரும் மாற்றங்கள்… வித்தியாசம் உண்டப்பா.
1.மனித உடலை… மனித மனதை அடக்கிடலாம்…! மனிதனின் ஆசையையும் அடக்கிடலாம்
2.மிருகத்தன்மைக்கு அந்த நிலை இல்லையப்பா..!
மற்ற ஜீவராசிகளுக்கு அதனுடைய ஆகாரத்தை எந்நிலையிலும்… அதைப் புசித்திடத் தான் அதன் மனம் உள்ளது… ஒரு போதும் தன் பசியை அவைகளால் அடக்க முடியாதப்பா…!
மிருகங்கள் பறவைகள் ஊரும் ஜெந்துக்கள் மரம் செடி கொடி எல்லாவற்றுக்கும் “ஒரே குறி” தன் ஆகாரத்தை எண்ணித்தான் எண்ணமுண்டப்பா. எல்லா ஜீவராசிகளுக்கும் அவ்வெண்ணத்தில் தான்… மனித எண்ணமும் மற்ற ஜீவராசிகளின் எண்ணமும் மாறுபடுகின்றது.
1.மனித எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி ஓங்கச் செய்ய முடியும்
2.மற்ற ஜீவராசிகளின் எண்ணத்தில் அந்நிலை இல்லையப்பா.
ஜனனம் எடுப்பதுவே மனித உடலில் உள்ள ஆசைகள் முடியாமல் (நிறைவேறாது) வருவதால் தான். மற்ற ஜீவராசிகளின் நிலை என்ன…? என்று முதல் பாடத்திலேயே சொல்லி விட்டேன்.
காட்சி:- ஆகாரம் சாப்பிடுதல்…! உன் பூஜையில் ஆகாரம் வைக்காவிட்டாலும் நான் புசிக்கும் ஆகாரத்தைப் பார்த்தாய் அல்லவா… எப்படிப் புசித்தேன்…! என்ற எண்ணம் உனக்குள்ளே.
தேவர்களின் நிலை எல்லாம் இப்படித்தான். தேவனுக்குப் பிறகு பிறந்தவன் தான் மனிதன். மனிதனும் தேவனாகலாம்.
1.மனித மனத்தை அடக்க…
2.முதல் படி நாவின் சுவையை அடக்குவதுதான்.
பிறந்தேன் வளர்ந்தேன் புசிப்பதில் என்ன தவறு…? எனக்கு வேண்டியதை நான் புசிக்கிறேன்… இருக்கும் வரை அனுபவிக்கலாம்… எதற்கு இந்த உணவுக் கட்டுப்பாடு…? என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே.
இருக்கும் வரை தான் பசிக்க வேண்டும் என்பதல்ல. உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும் ஆகாரத்தைப் புசித்து விடலாம். ஆகாரம் உட்கொள்ளாமல் ஆண்டவனாலும் இருக்க முடியாதப்பா.
உன் ஆகாரம் எங்கிருந்தப்பா வருகின்றது…?
அது ஈசன் அருளால் வந்ததுதானப்பா…! மழையும் ஒளியும் கலந்தது தானப்பா அது. ஆகாரத்தை ஒளியிலிருந்தும் பெறலாம்… காற்றிலிருந்தும் தண்ணீரில் இருந்தும் பெறலாம்…!
ஒளியும் காற்றும் தண்ணீரும் இல்லாவிட்டால் “எவையும் ஒரு நொடி கூட உயிர் வாழ முடியாது…!” ஆகாரம் இல்லாவிட்டால் இந்த உடல் அழிந்துவிடும்.
ஆனால் ஆகாரம் புசித்திடாமல் வாழ்ந்திடலாம் பல காலங்கள்…! எப்படி…?
1.மனநிலையை ஒருநிலைப்படுத்தித் தியான நிலையில் அமர்ந்தவனுக்கு
2.அவ் ஈசனே அருள்வான் காற்றிலும் ஒளியிலும் உள்ள ஆகாரத்தைக் கொடுத்து.
காற்றிலே கலந்துள்ளதப்பா தண்ணீரும்… நீ நினைக்கின்றாய் அது வெறும் காற்று என்று…!
1.காற்றுடன் தண்ணீரும் கலந்தே இருக்கின்றதப்பா
2.காற்றுடன் ஈரப்பசை இல்லாவிட்டால் ஈர்ப்பு சக்தியே இல்லையப்பா.
ஜெப நிலையில் உள்ளவனுக்குக் காற்றுடனே கலந்து வருமப்பா அந்த ஆகாரங்கள். காற்றுடன் கலந்துள்ள பல கோடி அணுக்களில் பிரித்து எடுத்திடுவானப்பா தனக்கு வேண்டிய ஆகாரத்தை “ஜெப நிலை உள்ளவன்…”
அமுது என்பதையும் எடுத்து விடலாம் அமுது இசையும் எடுத்திடலாம்… அந்தக் காற்றிலிருந்து.
நாவின் சுவையை அடக்கிடப்பா என்பதல்ல என் கருத்து.
ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளவருக்குப் பகர்கின்றேன். பசி தாகம் எல்லாம் பரந்தாமனை எண்ணிவிட்டால் பறந்துவிடும் என்போர் முதியோர். அந்நிலை புரிந்ததாப்பா…?
நாவின் சுவையை அடக்கி விட்டால் எண்ணத்தின் தன்மையும் அடக்கிடலாம். உடல் பசி என்பதெல்லாம் அந்த எண்ணப் பசி தான்…
1.எண்ணப் பசியை அடக்கிட… நாவின் பசியை அடக்கிடு.
2.நாவின் பசியை அடக்கிட… எண்ணத்தை ஒருநிலைப்படுத்திடு.
3.எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி விட்டால் எல்லாப் பசியையும் அடக்கி விடலாம்.
4.எண்ணப் பசியில் “எண்ணமெல்லாம் ஈசனின் எண்ணமாகத்தான்” இருந்திட வேண்டுமப்பா.
ஆகவே விரதம் என்பதெல்லாம் ஜெப நிலைக்கு வந்தவனுக்கு வேண்டாமப்பா…!
விருந்தோம்பலையும் உண்டிடலாம் வடிகஞ்சியையும் குடித்திடலாம்…! சொல்வது புரிந்ததா…? ஜெப நிலையிலிருந்து ஜெப அருளைப் பெற்றவனுக்குத் தான் இந்நிலையப்பா.
அன்ன ஆகாரமெல்லாம் ஆண்டவனே அளித்திடுவான். காற்றுடன் எடுத்துவிடலாம் வேண்டிய ஆகாரத்தை… புரிந்து கொண்டாயா…?
பூரிக்கிழங்கைப் புசித்த எண்ணம் வந்துவிட்டால் புளித்த ஏப்பம் வந்துவிடும். புசிக்கவில்லை என்ற எண்ணம் இருந்திட்டால் பசி பசி என்ற எண்ணம் தான் எண்ணமெல்லாம் சுற்றுமப்பா…!
காட்சி:- காபியை ஆற்றுதல். இப்போது உண்ட எண்ணம் (வாசனை) வருகிறதா…? காற்றிலிருந்தே சகலத்தையும் பெற்றிடலாம்.
ஜீவ ஜெந்துகளின் நிலை எல்லாம் இக்காற்றுடன் உள்ளதப்பா. காற்றில் உள்ள அணுக்கள் தான் கால வெள்ளத்தைச் சுற்றுகிறது.
காற்றில் உள்ள அணுவைத் தான் சுவாச நிலையில் எடுக்கின்றாய். நல் அணுவை எடுத்திட்டால் சுவாச நிலைகள் மாறாதப்பா. “சுவாச நிலை சுவாச நிலை” என்பதெல்லாம் என்ன…? என்று புரிந்து விட்டாய் அல்லவா.
மனித எண்ணத்தில் வாழ்க்கையில் நடப்பவற்றை
1.நல்லுணர்வில் ஊன்றிப் பார்த்து
2.உன் நிலையை மாற்றிடாமல் நல் உணர்வை எடுத்திட வேண்டும்.
ஒருவர் செய்யும் தீங்கை நாம் பார்த்துக் கொண்டே எப்படிச் சும்மா இருப்பது…? என்ற எண்ணம் வந்திடுமப்பா. அவனைப் பார்த்துக் கொள்வான் “ஆண்டவன்” என்ற எண்ணம் வந்து விட்டால் உன் சுவாச நிலை மாறாதப்பா…!
அவனை எப்படி விடுவது…? அவனை ஒரு கை பார்க்கின்றேன்.
1.ஆண்டவா…! பார்த்தாயா… அவன் இப்படியெல்லாம் செய்கின்றான் அவனை அழித்துவிடு…!
2.அவனுக்கு என்ன இடைஞ்சல் செய்யலாம்…? என்று என்று எண்ணுவதல்ல ஆண்டவனே பார்த்துக்கொள்வான் என்பது.
அவன் செய்த நிலையை மனதிலே நிலை நிறுத்தி
1.எவ்வழியிலும் நம் மனநிலையை மாற்றிடாமல்
2.அவன் செயலை எப்படி அடக்கிடலாம் என்ற எண்ணம் உதயம் வேண்டும்.
எண்ணும் பொழுது அவ்வாண்டவன் எண்ணத்தில் நிலை நிறுத்தி மனநிலையை ஒருநிலைப்படுத்திக் கோபதாபங்களை மனதினிலே ஊன்றிடாமல் பரிபக்குவ நிலையில் மனதினில் நிலை நிறுத்திக் களைந்திட வேண்டுமப்பா – அந்நிலையை.
சொல்லும் பாடம் புரிந்ததா…?
துவேஷத்தன்மை உள்ளவன் எல்லாம் துவேஷிக்கட்டும்… நமக்கென்ன…? என்ற எண்ணம் உள்ளவனுக்கும்… துவேஷக்காரனின் எண்ணத்திற்கும் ஒரு நிலைதானப்பா…!
துவேஷிப்பவனை நல்நிலையில் புரிய வைத்து நல்வழிக்கு நடத்திட வேண்டுமப்பா…! பிறப்பிலே பிறப்பதல்ல இக்குணங்கள்.. “வளரும் வளர்ப்பிலும்… முன் ஜென்மப் பயனிலும்” வருவதப்பா இந்நிலைகள் எல்லாம்.
இந்நிலையில் இருந்து மீள்பவனுக்கு ஒரே நிலை “சுவாச நிலைதானப்பா…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஆரம்பத்தில் குருநாதர் காட்டிய வழியில் பாதரசத்தையும் பச்சிலை மூலிகைகளையும் வைத்துச் சில மணிகளைத் தயார் செய்தேன் (ஞானகுரு). அதை வைத்துச் சில சக்திகளை எடுக்கும்படியும் சொல்லியிருந்தேன்.
ஏனென்றால்… அந்த அருள் சக்திகளை எடுத்து உடலிலே ஒவ்வொரு மணியாக எடுத்து இறுக்கிக் கொண்டு வரவேண்டும்.
1.அப்படி வளர்த்துக் கொண்டால் நட்சத்திரமாக முழுமையடையும்.
2.ஆண் பெண் என்ற நிலையில் (கணவன் மனைவி) அருள் உணர்வுகளைச் சேர்க்க வேண்டும்.
இதை எல்லாம் தெளிவாக அறிவதற்குத் தான் என்னைக் காடுகளுக்குள் அழைத்துச் சென்றார் குருநாதர்.
தாவரங்களின் இலைகளைப் பார்த்தோமென்றால் ஒரே செடியாகத் தான் தெரியும். ஆனாலும் அதிலே ஆண் செடி பெண் செடி என்று இருக்கும்
1.அதிலிருந்து ரசத்தை எடுக்க வேண்டும்… அதைச் சேர்த்தால்தான் இணையும்
2.இல்லாமல் போனால் அதைச் சேர்க்க முடியாது.
3.மருந்து வகைகளை எடுத்துக் கொண்டால் ஆண் செடி பெண் செடி என்று சேர்த்தால் தான் அந்தக் கரு உருவாகும்.
4.அப்படி உருவானால் தான் அது மருந்துக்கு (மருத்துவத்திற்கு) உதவும்.
அதைத்தான் சித்தர்கள் காப்பு கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள்… பல பொய்களைச் சொல்லி வைத்திருப்பார்.
மூகாம்பிகையில் நான் இருக்கும் பொழுது சில மணிகளைச் செய்து அங்கே கொடுத்துவிட்டு வந்தேன். இது எல்லாம் சூட்சும நிலைகள் கொண்டு அன்று செயல்படுத்தியது.
பல இடங்களுக்கும் சென்று குருநாதர் கொடுத்த சக்தியைச் சரியா… தவறா…? என்று அவர் சொன்ன முறைப்படுத்தித்தான் செயல்படுத்தியது.
1.இந்த உண்மைகளை எல்லாம் நீ தெரிந்து கொள்ள வேண்டும்.
2.இதைத் தெரிந்து கொள்ளாதபடி எங்கேயும் வெளி விடாதே…! என்று சொல்லி விட்டார்.
அதை எடுத்து எல்லா இடங்களும் சுற்றி அறிந்த பிற்பாடு அந்த ஞானிகளின் சக்திகளை ஒவ்வொருவருக்கும் எப்படிக் கிடைக்கச் செய்ய வேண்டும்…? என்று தெரிந்து கொண்டு அதன் வழிகளிலே இப்போது கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.
என்னை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்றால் நான் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பார்த்தீர்கள் என்றால் அடேயப்பா… சாமி எவ்வளவு பெரியவர்…! என்று கூட்டங்கள் அதிகமாக வரும்.
ஆனால் அந்தக் கூட்டம் எதற்கு வரும்…?
இப்பொழுதும் சில கூட்டங்கள் வரத்தான் செய்கிறது அந்த கூட்டங்களை நான் கழித்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.
1.உண்மையான நிலைகள் ஞானத்தின் வழித்தொடரைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் வருபவர்கள் தங்கியிருப்பார்கள்
2.இந்த “உடல் இச்சைக்கு…” என்று கேட்டு வருபவர்கள் கொஞ்சம் குறைத்தே தான் இருக்கும்
ஆனால் இந்த அருள் ஞான வழியில் வருபவர்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஞானிகளின் உரச்சத்தை ஏற்றி வளர்த்துக் கொண்டே இருப்பேன்
முழுமையாக உடலுக்கு வேண்டும் என்றும் இந்த வாழ்க்கைக்குத் தான் வேண்டும் என்று வருபவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் கழித்து விடுவேன்.
ஆனால் உடலை வைத்துத் தான் நாம் அந்த அருள் சக்திகளை எடுக்க வேண்டும். அருள் ஞானத்தைப் பெற வேண்டும்.
நீங்கள் வளர்ந்தீர்கள் என்றால் மற்றவர்களும் அதைப் பெறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றது நீங்கள் வளர்ந்தால் தானே…!
1.நான் ஒருவன் வளர்ந்து என்ன செய்ய முடியும்…?
2.என் ஒருவனால் ஒன்றும் செய்ய முடியாது…!
நான் நினைக்கலாம் யானையைச் செய்வேன்… பூனையைச் செய்வேன்… என்று. அப்படி எல்லாம் சொன்னால் அது வெறும் திமிர் தான். அப்படி ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு நெல்லை எடுத்து விதைத்துப் பல நெல்களாக உருவாக்கி அந்த அருள் உணர்வின் தன்மையை எடுத்துச் சமப்படுத்த வேண்டும். அந்த உணர்வின் வலுவைக் கொடுத்து எல்லோரையும் பெறச் செய்ய முடியும்.
1.குரு கொடுத்து அது தான்…!
2.அதைத்தான் உங்களையும் செய்யச் சொல்கின்றேன்.
நான் அதைச் செய்தேன்… என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டால் பிறகு நானும் அந்த வளர்ச்சிக்குப் போக முடியாது… தீர்ந்துவிடும். ஆகையினால் நான் வளர வேண்டும் என்றால் நீங்கள் வளர வேண்டும் என்று நான் நினைக்க வேண்டும்.
அதையே தான் நீங்களும் எண்ண வேண்டும்…!


“நமது பற்று” என்றுமே மகரிஷிகளின் பால் இருத்தல் வேண்டும்
எந்தச் சந்தர்ப்பத்தில் எத்தகைய தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
கஷ்டம் என்று கேட்டாலும் அல்லது பார்த்தாலும் அவர்களுக்கு மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்மை நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அப்போது நமக்குள் தீமை விளைவிக்கும் அணுக்கள் வளர்ச்சி பெறாது தடுக்க முடிகின்றது
2.நமக்குள்ளும் அந்தக் கஷ்டங்களைக் குறைத்திட முடியும்.
அடிக்கடி அடிக்கடி துருவ நட்சத்திரத்தினை எண்ணி
1.அதைப் பற்றுடன் பற்றி
2.இந்த வாழ்க்கையில் வரும் மற்றதை எல்லாம் பற்றற்றதாக மாற்றிடும் ஒரு பழக்கம் வந்து விட்டால்
3.உடலை விட்டு அகலும் நமது உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்துவிடும்
4.மரணமில்லா பெரு வாழ்வு அடைய முடியும்.
அந்த நிலை பெற ஒவ்வொருவரும் மறவாது அவரவர் தாய் தந்தை உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும்… நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிக்க வேண்டும்… நல் வழியினை நமக்கு முதலில் போதித்த குருவாகவும் மதித்தல் வேண்டும்.
மனிதனாகப் பிறந்த நாம் இதை மறந்து விடக்கூடாது.
நமது உயிரும் கடவுளாகின்றது நமது எண்ணங்களும் தெய்வமாகின்றது நமது நல்ல சொல்களும் குருவாகின்றது.
ஆனால் தீமை என்று சொன்னால் அது தீமை விளைவிக்கும் குருவாகவே மாறி விடுகின்றது. தீமையை எண்ணும் போது தீமை செய்யும் தெய்வமாக நமக்குள் உள் நின்றே இயக்கும்.
நாம் எண்ணியதை உருவாக்கும் நிலைபெற்றது நமது உயிர்
1.ஆகவே நாம் எண்ண வேண்டியது எது…?
2.நமக்குள் உருவாக்க வேண்டியது எது…? என்று
3.மனிதன் ஆன பின் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கார்ணம்… பல கோடிச் சரீரங்களில் துன்பங்களையும் கஷ்டங்களையும் அனுபவித்துத் தன்னைக் காத்திடும் வலுக் கொண்ட உணர்வை… அந்த்த் தப்பித்துச் செல்லும் உணர்வை எடுக்கும் பொழுது அதனின் வலிமை பெற்றுத் தான் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்துள்ளோம்.
அப்படி நம்மை வளர்ச்சியின் பாதையில் கொண்டு வந்த “உயிரை” நாம் மதித்தல் வேண்டும். உயிரைக் கடவுளாக மதித்து அந்த உணர்வால் ரூபம் பெற்ற உடலையும் சிவமாக மதித்தல் வேண்டும்.
நாம் எண்ணிய குணங்கள் அனைத்தும் நன்மை பயக்கும் சக்தியாக தீமைகள் சேராத வண்ணம் தடுக்கும் அந்த ஆறாவது ஆறறிவின் தன்மையை நாம் போற்றித் துதித்தல் வேண்டும்.
இதை இழந்துவிட்டால் மனிதன் அல்லாத உருவாகத்தான் செல்ல வேண்டி வரும். ஆகவே நாம் ஆறாவது அறிவைப் போற்றிக் காத்தல் வேண்டும்.
1.ஆறாவது அறிவு எத்தகைய தீமைகளையும் அகற்றும் வல்லமை பெற்றது… நல்ல சிந்தனையும் ஞானமும் கொடுக்கின்றது.
2.நல் சிந்தனையும் ஞானத்தையும் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்றால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுவோம்…
3.அடுத்து இன்னொரு பிறவிக்குச் செல்லாதபடி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து விடும்
4.பேரின்ப பெருவாழ்வு என்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்ற நிலை அடைய முடியும்.
ஆக இந்தப் பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி மனிதனாக உருப்பெற்ற பின் நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் ஒளியைப் பெற்று அருள் ஞானம் பெற்று பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்.
அகண்ட உலகில்… அகண்ட பேரண்டத்தில்… இன்று நாம் இருக்கும் இந்தப் பிரபஞ்சம் அழிந்தாலும்… அகண்ட பேரண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.
மனிதனான பின் தான் இந்த நிலையைப் பெற முடியும்.
அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்ளக் காலை துருவ தியானத்தில் அந்த அருள் சக்தியைப் பெறுவோம். அறியாது வரும் தீமைகளை அகற்றுவோம்.
நம்மைப் பார்க்கும் அனைத்துக் குடும்பங்களிலும் மகரிஷிகளின் அருள் சக்தியைப் படரச் செய்வோம் அவர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெறச் செய்வோம்.
ஆக… இந்த மனித வாழ்க்கையில்
1.அருள் ஒளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் வளர்த்துக் கொள்வதே நல்லது
2.அதை நாம் பற்றுடன் பற்றினால் இன்றைய செயல் நாளைய ஒளிச் சரீரமாக ஆகின்றோம்.

தியான நிலையும் சுவாச நிலையும்
இதை உன் எண்ணத்தில் ஊன்றிடப்பா…!
1.எண்ணும் எண்ணத்தை ஜெபத்துடன் கலந்திட்டு ஓங்கார ரூபத்தில்
2.“ஓம் ஈஸ்வரா…” என்ற நாமத்தை உன்னுள்ளே இழுத்திடப்பா அவ்வீஸ்வரனை.
3.”ஓம் ஈஸ்வரா…” என்னும் நாமத்தை வெளியிடப்பா…
4.மறுபடியும் இழுத்திடப்பா உன்னுள்ளே…!
5.ஓம் ஈஸ்வரா நம… ஓம் ஈஸ்வரா நம…! உன்னுள்ளே சுற்றும் தன்மையில் வந்திட வேண்டுமப்பா.
இப்பொழுது நீ இருக்கும் ஜெப நிலையில் ஓம் ஈஸ்வரா என்னும் நாமத்தை இழுக்கும் பொழுது தடைப்படுகின்றது… நாமம் வெளியிடும் பொழுதும் தடையுடன் வெளி வருகின்றது.
ஓம் ஈஸ்வரா… என்ற நாமம் உன் உடலுக்குள்ளேயும் உன் உயிரிலும் உன் அங்கங்களிலும் உன் அங்கத்தின் அங்கமான எல்லா அணுக்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் தன்மையில் “உன் ஜெப நிலை வரவேண்டுமப்பா…”
ஜெபம் செய்பவர் எல்லாமே சித்தனாக யோகியாகவும் இருக்க வேண்டும் என்பதல்ல. எல்லோரின் எல்லா அருளையும் பெற்றிடலாம் ஈஸ்வரன் என்ற நாமத்தை இழுத்திட்டால்.
ஈசனின் நாமத்தைப் பகிர்ந்திட்டாலே உன் சுவாச நிலையின் தன்மைகள் மாறிவிடுமப்பா.
தியானத்தில் அமர்ந்தால்… உன் நிலை எல்லாம் பெரும் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் குறையுடனும் பெரும் ஆவேசத்துடனும் ஏனப்பா அழுகின்றாய்…?
நற்சுவாச நிலை எடுத்திடப்பா… அழுகும் நாற்றம் அண்டிடாது… பூவின் மணமும் வந்திடுமப்பா உன் சுவாச நிலைக்கு…!
தியானத்திற்கு உன் கையால் வாங்கிடப்பா தினமும் புஷ்பத்தை… அளித்திடப்பா அவ்வீஸ்வரனின் நாமத்தைச் சொல்லி அர்ச்சனையாக. பிற நிலை எல்லாம் மாற்றிடப்பா.
1.ஜோதி நிலையானவன் (ஈசன்) வந்து
2.ஜெகஜ்ஜோதியாக உன் வாழ்க்கையில் அருள் புரிவான்.
அவசர நிலை உனக்கு… அதற்குள்ளே விழித்திட்டாய். ஏன்…? நான் பகர்ந்த தியான நிலையிலேயே இருந்திடப்பா.
துவேஷ எண்ணத்தை விட்டிடப்பா. உன் வழியில் உன்னைத் துவேஷிப்பவர்கள் துவேஷிக்கும் சொல்லெல்லாம் திரும்பிவிடும் “அவர்கள் நிலைக்கே…”
விதை விதைப்பவன் விதை அறுப்பான் வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற சொல்லைக் கேட்டிருப்பாய். துவேஷ நிலை இனி உனக்கு வேண்டாம்.
பேரானந்தப் பெருநிலை எய்திடவே இத்தியான நிலை. பெரு நிலை என்பது மாட மாளிகை கட்டி… பெரும் சொத்துக்களுடன் வாழும் வாழ்க்கை அல்ல.
1.பெரும் பேறு என்பது அவ்வாத்ம ஜோதியுடன் நீ ஐக்கியமாவது தான்
2.பகர்ந்த வழியில் சென்றிடுவாய்… வந்திடுவேன் நானும் உனக்குள்ளே…
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்… சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்… பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.
அதே போன்று பலராம்…! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்…. கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.
மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.
1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்… அது தன்னாலே வரும்… சொல்ல வைக்கும்…!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது “ஈஸ்வரா…” என்ற சொல் வரும்… உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக உருவாகிறது.
உதாரணமாக… துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்…!
யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.
ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.
வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.
கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.
ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.
ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.
1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.


“துர்மரணம் அடைந்தவரின் உணர்வு…” அவர் மீது பாசம் கொண்டவரை எப்படி எல்லாம் பாதிக்கும்…?
சந்தர்ப்பத்தால் ஒருவர் வேதனைப்படுகிறார்… துடிதுடிக்கின்றார்… என்று நாம் உற்றுப் பார்க்கின்றோம். வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருப்போம்… ஆனாலும்…
1.ஐயோ இப்படி ஆகிவிட்டதே…! என்று கூர்மையாக அதைப் பதிவு செய்து விட்டால்
2.அந்த உணர்வினை ஈர்க்கும் தன்மை அங்கே வந்து விடுகின்றது.
3.கூர்மையாகப் பார்த்தது நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
ஆகா…! நல்லவராக இருந்தார் இப்படிப் போய்விட்டாரே…! என்ற உணர்வினைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த உடலை விட்டு வெளி வந்த பின் யார் இவர் மீது பற்றாக இருந்தார்களோ அந்த ஆன்மா அவருக்குள் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.
அந்த உணர்வு இங்கே அதிகரித்து இருந்தால் இந்த உடலுக்குள் வந்து அதே வேலையைச் செய்யும். நான் பார்த்தேன் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று.
அதாவது… பக்கத்து வீட்டில் உள்ள நமக்கு வேண்டியவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துவிட்டால்… அவர் மீது பாசமான நிலைகள் கொண்டு… அந்தத் தூக்குப் போட்ட அதே உணர்வின் நினைவலைகள் நமக்குள் வரும்.
ஆக… எந்த அளவுக்குப் பற்றுடன் இருந்தாரோ அவர்களுக்குத் தான் இந்த நினைவாற்றல் வரும்.
அவர் மடிந்த பின்… இதே உணர்வுகள் இங்கே தூண்டப்பட்டு அஞ்சிடும் உணர்வுகள் இங்கே உந்தி தன்னை அறியாமலே கயிற்றில் கோர்த்துக் கொள்ளும் நிலை வருகின்றது. இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.
இதைப் போன்ற நிலையிலிருந்து நான் தப்ப வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்…? விநாயகர் தத்துவத்தில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது
அதிகாலையில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இந்த உணர்வை வலுவேற்றிக் கொள்ள வேண்டும். துர்மரணம் அடைந்து விட்டால் “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் நம் உயிருடன் ஒன்றி அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இதை நமக்குள் பல முறை செலுத்த வேண்டும்.
பின்..
1.உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…
2.அந்த ஆன்மா அருள் ஒளி பெற வேண்டும் இருள் சூழா நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
3.இறந்து விட்டார் என்று கேள்விப்பட்ட அடுத்த கணமே அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைய வேண்டும்
4.உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் ஒளிச் சரீரம் பெற வேண்டும்.
5.அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது… “உந்தித் தள்ளிவிடும்…”
அந்த குடும்பத்தைச் சார்ந்தவரும் இதன் வழிகளில் எண்ணினால் அவர்களும் அதை உந்தித் தள்ளிவிடலாம்.
இல்லை… “இப்படி ஆகிவிட்டதே” என்று சோகமும் வேதனையும் கொண்டு ஏங்கி விட்டால் விஷத் தன்மை கொண்ட உணர்வுகள் படர்ந்து தன்னை அறியாமலே சோக நிலையினை அடையச் செய்து இந்த உணர்வுகள் அந்தக் குடும்பத்திற்குள் இது கலக்கமாகி பல தீமையின் உணர்வுகளாக விளையும்.
1.விவசாயத்தில் பயிரினங்களை வளர்த்தாலும் அல்லது தொழில் செய்தாலும் அதே விஷத்தன்மைகள் படர்ந்து
2.அது நஷ்டமடையும் நிலையாகத் தான் செயல்படும் பயிரினங்களும் கருகிவிடும்.
3.குடும்பங்களிலும் பகைமைகள் உருவாகிவிடும்… பழி தீர்க்கும் உணர்வுகள் பரவிவிடும்.
4.அவர் தன் உடலை அழித்துக் கொண்டது போல ஒவ்வொரு செயலையும் அழித்திடும் நிலையாக அந்தக் குடும்பத்தில் வரும்.
5.குடும்பம் மிகவும் நசிந்து சாப அலைகளாக மாறி ஒருவரை ஒருவர் பாவ வினைகளில் சிக்க நேரும்.
இது போன்ற நிலை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் தத்துவ ஞானிகள் அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை… துருவப் பகுதி வழியாக வருவதைக் கவரும்படி செய்து அதை பெறக்கூடிய தகுதி ஏற்படுத்தினார்கள்.
அதற்குத்தான் விநாயகரை நீர் நிலை இருக்கும் பக்கம் வைத்தார்கள் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அந்த அருள் உணர்வின் தன்மை நம் மீது பட்டு விடுகின்றது.
உதாரணமாக… நாம் நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும் ஒரு நெருப்பு பாய்ந்து வந்தால் நல்லது செய்கிறேன் என்றால் நெருப்பு நம்மை விட்டு விலகிச் செல்கின்றதா…?
அல்லது ஒரு திரவகம் தவறிக் கீழே விழுந்த பின்… நான் நன்மை செய்தேன் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நம்மைப் பாதிக்காமல் இருக்கின்றதா…? நெருப்பாக இருந்தாலும் திரவகமாக இருந்தாலும் உடலில் பட்ட இடத்தினைச் சுட்டுப் பொசுக்கி விடும்.
ஆக
1.பகைமையற்ற நிலைகள் நாம் வாழ்ந்தாலும் பல நன்மைகள் செய்திருந்தாலும்
2.சந்தர்ப்பம் இது போன்ற அசம்பாவிதங்கள் அருகிலே நாம் இருக்கப்படும் பொழுது அந்தத் தீமைகள் வந்து விடுகின்றது.
இதெல்லாம் வந்துவிட்டால்… நான் நன்மை செய்தேனே என்னை ஆண்டவன் சோதிக்கின்றானே…! என்றால் அந்த உணர்வினை நம் உயிர் தான் (நம்மை) ஆண்டு கொண்டிருக்கின்றது.
வேதனையை நமக்குள் உருவாக்கிக் கொண்டால் உயிர் வேதனை அணுக்களை உடலுக்குள் உருவாக்கி அதைத்தான் இந்த உயிர் ஆளும். வேதனை அணுக்களைத்தான் வளர்க்கச் செய்யும் அந்த உணர்ச்சிகளை தான் ஊட்டும்.
காரணம் நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது உருவாக்கி உடலுக்குள் இருப்பதை ஆண்டு கொண்டும் இருக்கின்றது.
இதை நாம் தெரிந்து கொண்டோம்.
1.நாம் எதை நமக்குள் உருவாக்க வேண்டும்…?
2.எதை நமக்குள் ஆளக்கூடிய சக்தியாக உருவாக்க வேண்டும்…? என்பதை நாம் சற்று சிந்தித்தல் வேண்டும்.
அவ்வப்போது வாழ்க்கையில் வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிடும் சக்தியாக
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் உருவாக்கி
2.அந்த அருள் ஞானிகள் உணர்வே நம்மை ஆளும் சக்தியாக நாம் அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

எந்நிலையிலும் வந்திடுவேன்… “உன்னுடனே”
விநாயகரை “ஞான முதல்வனே” என்று சொல்கிறோம். ஞான முதல்வனே என்பதன் பொருள்
1.ஞானத்திற்கும் ஞானோதயத்திற்கும்
2.நம்முள்ளே வரும் எண்ணத்திற்கும் முதல்வன் விநாயகனே.
விநாயகனின் குணம் எல்லாம் அச்சக்தியின் முதல் குணமாக மனிதன் எண்ணத்தில் உதிப்பதற்கே பகர்ந்தப்பா…! விநாயகனின் குணங்களில் மிக நிதானத்தன்மையும்… எண்ணி ஆற்றல் படும் சித்தமும் உள்ள குணம் தான் விநாயகனின் குணம்.
விநாயகரை முதல் தெய்வமாக வணங்குவதும் உன் சித்தத்தை நிதானப்படுத்திப் பணிவுடன் பணியவே விநாயகனை முதலில் பணிவது.
ஈஸ்வர சக்தியின் முதல் அருளே விநாயகனை நினைத்து வணங்கவே தான் விநாயகனின் தன்மையில் உன் மனதை அமைதிப்படுத்திடவே அருள் செய்கின்றார் சிவ சக்தியின் முதல் சக்தி.
முதல் சக்திதானப்பா விநாயகர்…! ஆண்டவனைப் பணிவதற்கு முதலில் அடக்கமும் அமைதியும் வேண்டுமப்பா. அவ்வருளைப் பெற்றிடவே “முதலில் விநாயகனை வணங்குவதெல்லாம்…”
இப்பொருள் தெரியாதவர்களுக்குத் தான் “எல்லாமே கல்… இக்கல்லைக் கும்பிட்டால் என்ன…? அக்கல்லைக் கும்பிட்டால் என்ன…?” என்ற எண்ணம் வருகிறது.
முதலில் விநாயகரை வணங்குவதற்குப் பொருள் புரிந்த்தா…?
விநாயகரை நினக்கும் போது உன் நினைவில் பெரும் அமைதி குடி கொள்ளுமப்பா. சக்தியின் சொரூபத்தில். “துதிப்போர்க்கு வல்வினை போம்,,, துன்பம் போம்,,,” என்னும் பொருள் விளங்கிடுமப்பா.
பகர்ந்திட்டேன் சக்தியின் முதல் சொரூபத்தை…!
1.சூட்சுமத்தில் உள்ள நான்… “வந்திடுவேன் உன்னுடனே…”
2.இனி ஒரு போதும் மாற்றிடாதே உன் வழியை.
உன் வழியில் முன் இரவில் வந்த எண்ணமெல்லாம் ஊன்றிவிடுமப்பா.
உன் நினைவில் ஜெயித்து விடுவாய்…!
1.வந்திடுவேன் உன்னுடனே… வந்திடுவேன் உன்னுடனே
2.எந்நிலையிலும் வந்திடுவேன் உன்னுடனே.
உன் இசையில் இசைத்திடப்பா… வந்துள்ள அனைத்து சிஷ்யர்களுக்கும் காட்சி அருளுகின்றேன்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
வான் வீதியில் உருவானது தான் “உயிரணு…” பூமிக்குள் விஜயம் செய்து பல கோடி பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக ஆன பின் என்னென்ன குணங்களை நாம் எண்ணுகின்றோமோ அந்த “அணுக்களை…” நம் உடலில் சேர்த்துக் கொள்கிறோம்.
அது நம்முடன் சேர்ந்து வளர்ச்சி ஆகி அதனுடைய இனத்தைப் பெருக்கும் பொழுது அது “ஜீவ அணுவாக…” மாறுகின்றது.
வான் வீதியில் சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்தங்கள் கோள்களின் சத்தினை எடுத்துக் கொண்டால் அது வெறும் அணு தான்.
1.அந்த அணுவை நாம் சுவாசித்து நுகர்ந்த பின் உயிர் ஜீவ அணுவாக மாற்றுகின்றது.
2.ஜீவ அணுவாக மாறிய பின் ஜீவ ஆன்மாவாக ஆகின்றது.
ஒரு மனித உடலில் நோய்வாய்ப்பட்டது என்றால் அந்த உடலில் அது ஆன்மாவாக மாறுகின்றது. அந்த உடலில் விளைந்ததை நாம் கூர்மையாக உற்றுப் பார்த்தால் நோய்க்குக் காரணமான அணுக்களை நமக்குள் எடுத்துக் கொள்கின்றோம்… நம் உடலில் விஷத் தன்மையாக மாறுகின்றது.
அதே சமயத்தில் அந்த நோய்வாய்ப்பட்டவர் உடலை விட்டுப் பிரிய நேர்ந்தால் அந்த உடலில் விளைந்த சக்தி நமக்குள் வந்து அந்த ஆன்மாவும் நமக்குள் வந்து விடுகின்றது.
நம் உடலுக்குள் வந்தவுடனே ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது. நமக்குள் வட்டமிடுகின்றது. நம் இரத்தத்தில் தான் அது சுழன்று கொண்டிருக்கும்.
ஆவி பிடித்தவர்களைப் பார்த்தோமென்றால் ஒரு வித வேகமான துடிப்புடன் இருப்பதைப் பார்க்கலாம். அந்த இரத்த ஓட்டங்களில் சுற்றிக் கொண்டு வருவதைப் பார்க்கலாம்.
1.இரத்தத்தில் சுற்றி வரும் பொழுது சிறு மூளை பாகம் வந்தால்
2.அந்த இறந்தவருடைய எண்ணங்களை வைத்து நம்மை இயக்கும்.
3.அங்கிருந்து (சிறு மூளை) விலகிச் சென்றால் மறுபடியும் சாந்தமாகி விடும்.
ஆனால் அது சிறு மூளையில் பட்டு இயக்கத் தொடங்கும் போது எண்ணங்கள் அது என்னென்ன எடுத்திருக்கின்றதோ அதை எல்லாம் பேசும். அதனுடைய உணர்வுக்குத் தகுந்த மாதிரி வேண்டாததை எல்லாம் கேட்கும்… வேண்டாததை எல்லாம் பேசும்.
ஆக இரத்த நாளங்களில் செயல்படுவது ஜீவான்மா. நமக்குள் இருந்து அதற்கு வேண்டியதை உற்பத்தி செய்து அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். அதனுடைய எண்ணங்கள் தோற்றுவிக்கப்படும் பொழுது தான் அதை நாம் சுவாசிக்கின்றோம்… உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
ஆனால் ஜீவ அணுக்கள் என்பது நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மை நம் தசைகளில் ஒரு சேர்கின்றது. அப்பொழுது ஒவ்வொன்றும் அடங்கி எந்தெந்த குணங்களை எடுத்தோமோ அந்த உணர்வை உடலில் இருந்து எடுக்கும்… வெளியிலிருந்து…!
செடிகளிலே வித்து விளைகின்றது. அதே மாதிரித் தான் மனித உடலில் அந்த எண்ணங்கள் உருவானால்… பதிவாகும் போது ஊழ்வினை என்ற வித்தாக உருவாகின்றது. பின் இந்த மனித உடலிலிருந்து அலைகளாகப் பாய்கின்றது.
நான் உபதேசிக்கிறேன் என்றால் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அணுக்களாக மாற்றுகின்றது. அதை நீங்கள் சுவாசித்து உங்களுக்குள் வரும் பொழுது விளைந்து ஜீவ அணுக்களாகிறது.
என்னுடைய ஜீவ அணுக்கள் அதிகமான பிற்பாடு நான் இறந்து விட்டால் உடலுக்குள் வந்தால் ஜீவாத்மாவாக வருகின்றது. அது இரத்தத்தில் தான் இருக்கும். இரத்தத்தில் சில மாற்றங்கள் எடுத்துத் தன் உணர்வுகளை எடுத்துச் செயல்படுத்தும்.
இது போல் வருவதைத் தான் பேய் பிடித்தது… ஆவி பிடித்தது… ராட்சஸ உணர்வு போல் வருகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்.
சில கொடூரமான தெய்வங்களை உருவாக்கிப் கொடூரமான பல்லுடன் காட்டியிருப்பார்கள். அது போன்ற தெய்வத்தையே வாழ் நாள் முழுவதும் வணங்கி அந்த அந்த அலைகளைப் பதிவாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் அடுத்த உடலுக்குள் சென்றால் அதே நினைவுடன் தான் வரும்.
அடுத்த உடலை அடக்கி ஆட்சி புரியும் தன்மை வரும். வாய் பேச விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அது போன்று எத்தனையோ உண்டு.
ஆனால் அந்த ஆன்மா அது நம் இரத்தத்தில் தான் இருக்கும். அணுக்கள் நம் உடலோடு ஒட்டி வரும். தீமையின் உணர்வுகளுக்கு வரப்படும் பொழுது இரத்தத்தில் தான் இந்த அணுக்கள் பெருகும்.
1.இரத்தத்தில் இத்தகைய அணுக்கள் பரவும் பொழுது தான்
2.சில நேரம் இருதயத்திற்கு வரும்பொழுது இருதயத் துடிப்பு குறைகிறது… அதை அடைக்கும் (ஹார்ட் அட்டாக்)
3.அதே சமயத்தில் இரத்தத்தின் வழி அந்த அணுக்கள் கிட்னிக்கு வந்தால் விஷத் தன்மை பாய்ந்து கிட்னி பழுதாகி விடும்.
பார்க்கலாம் சிலருக்குத் திடீரென்று அட்டாக் வந்தது… சிறுநீரகம் செயலிழந்து விட்டது மரணம் அடைந்தார் என்று…! அது எல்லாம் இத்தகைய ஆன்மாக்களின் நிலைகளால் தான்.


நோய் நீக்கும் மருந்து
நோய்வாய்ப்பட்டவர்கள் அவரவர்கள் உடலில் உள்ள நோய்கள் நீங்க வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து… எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
இடுப்பு வலியோ கண் வலியோ பிடரி வலியோ வயிற்று வலியோ இருதய வலியோ சிறுநீரகக் கோளாறோ… இதைப் போன்ற எந்தக் குறைபாடுகள் இருந்தாலும் அது எல்லாம் அகல வேண்டும்… வலி குறைய வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்..
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு இப்பொழுது உங்கள் உடல் முழுவதும் படரும்
2.எல்லா உறுப்புகளிலும் அந்த சக்திகள் படரும்
3.அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் உற்சாகமடையும்…
4.அதற்குள் இருக்கக்கூடிய குறைபாடுகளை நீக்க மகரிஷிகள் உணர்வுகள் “மருந்தாக” அமையும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா.
இப்பொழுது…
1.உங்கள் உடலில் ஒரு மின்சாரம் பாய்வது போன்று இந்த உணர்வுகள் ஊடுருவிப் பாய்ந்து…
2.நோய்களை நீக்கும் ஒரு இயக்கச் சக்தியாக வரும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய சகல நோய்களும் நீங்க வேண்டும் என்று… அவரவர்கள் உடலில் உள்ள நோயை நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
“பொதுவான விதிப்படி” எங்கள் உடலில் உள்ள சர்வ நோய்களும் நீங்கி உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அந்தச் சக்திகளைப் பெறுங்கள்.
கை கால் குடைச்சலோ பிடரி வலியோ மூட்டு வாதமோ அந்த வலிகள் நீங்க வேண்டும் என்று ஏங்கி ஒரு ஐந்து நிமிடம் தியானியுங்கள்.
ருவ நட்சத்திரத்தினுடைய உணர்வுகள் உங்கள் உடலில் பரவுவதை உணரலாம் இருதய வலி இருந்தால் அது நீங்குவதையும் ஆஸ்த்மா தொந்தரவு இருந்தால் நுரையீரலில் இருந்து அந்தச் சளிகள் அகல்வதையும் காணலாம்… மூட்டு வலி நீங்குவதையும் உணர முடியும்.
இராமாயணத்தில் காட்டியபடி ஜனக சக்கரவர்த்தி நற்குணங்களை பேணிக் காக்க நீ என்ன செய்ய வேண்டும்…? என்று அங்கே சுயம்வரத்தை (பந்தயத்தை) வைக்கின்றார்.
மற்றவர்கள் அந்த ஆயுதத்தை வைத்து அவரவர் திறமையைக் காட்டுகின்றார்கள்.
1.இராமனோ தீமை செய்யும் (எண்ணங்களை) அந்த ஆயுதத்தை ஒடித்து விடுகிறான்.
2.அதாவது பகைமை இல்லாது தன்னுடன் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்று இராமன் எண்ணுகின்றான்.
வேதனை என்ற உணர்வை நமக்குள் வளர்த்து விட்டால் அதை எண்ணும் பொழுது பிறரை வேதனைப்படுத்தும் நிலையே வருகின்றது.
அதற்குப் பதிலாக…
1.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தீமை செய்யும் எண்ணங்களை ஒடித்து விட்டு…
2.அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானிகள் உணர்வைப் பாய்ச்சப்படும் போது நாமும் மகிழ்ந்து வாழ முடியும்.
அத்தகைய மகிழ்ச்சி தரும் அந்த உணர்வைத் தான் கல்யாணராமா…! என்று சொல்வது
1.ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் கல்யாணராமன் ஆகின்றோம்…”
பகைமையை உருவாக்கும்… அதனால் உடலில் உருவாகும் நோய்கள் அனைத்தும் அகற்றப்படும்…. நமது நினைவின் ஆற்றல் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையும்.
வாழ்க்கையில் வரும் பகைமை உணர்வைப் பற்றற்றதாக மாற்றி… மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பற்றுடன் பற்றி… பேரின்பப் பெரு வாழ்வாக அருள் மகரிஷிகளுடன் நாம் இணைந்து வாழ்வோம்.
அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ வேண்டும் என்று நாம் தவமிருப்போம்.

ஆண்டவன் எங்குள்ளான்…?
நடக்கின்றது பங்குனி உத்திரக் காவடி ஆட்டம்… ஆட்ட்த்தில் கலந்திட்டேன் நானும் அதிலே காவடி ஆடிட…! செப்பிடுவான் என் சிஷ்யனும் (ஞானகுரு) வந்து.
நீ பிறந்த ஊரிலும் பிறந்த ஊர் என்பது உன் முதல் ஜென்மத்தைச் சொல்கின்றேன்… மிகவும் முக்கியம்…! நீ பிறந்த ஊரிலும் உன்னால் ஸ்தாபகம் செய்த கோவிலிலும் நடக்கின்றதப்பா பங்குனி உத்திரம் பெரும் விமரிசையாக.
ஊரின் பெயரைச் சொல்லிவிட்டால் உன் கவனம் எல்லாம் அதனுள்ளேதான். உன் தியானத்திற்கு விடுகின்றேன்… கண்டிடுவாய்… அந்நிலையில் காவடியையும் கண்டிடுவாய்.
அழகான துறையினிலே உன் அருளால் அமைந்ததப்பா… அத்திருஸ்தலமே…! உனது புகழ் உலகமெங்கும் ஓங்கிடும் நிலையில் இருந்திட்டாய் போன ஜென்மத்திலும்.
1.உன் பெயருக்கும்… உன் உடலின் பெயருக்கும்… போன ஜென்மத்திற்கும் தொடர்பு உள்ளதப்பா.
2.இந்நிலையை எந்த ஜோசியனும் சொன்னானா…?
உலகெங்கும் தெரிந்த கோயில் இந்த ஜென்மத்திலும் உன்னுடன் தொடர்புடைய கோவில்… இப்பொழுது இருக்கும் நிலையில் தொடர்பில்லை.
உன் நினைவில் போகரின் ஸ்தாபகத்தால் வந்த ஸ்தலம் என்ற எண்ணம் தான் நிலை புரிந்ததா…! போகரின் எண்ணம் எல்லாம் உன் நினைவில் வந்திடுவதும் போன ஜென்மத் தொடர்பினால் தான்.
போகர் தான் பெற்ற பயனால் இன்றும் உள்ளார்… என்றும் இருப்பார் முருகனாகவே…! பெரும் முருகர் ஸ்தலமைத்தாய்…! முதல் ஜென்மத்தில் விட்ட சிறு குறையினால் வந்ததப்பா இந்த ஜென்மம்.
விட்ட குறையை இந்த ஜென்ம நிலையில் ஸ்தாபிதம் செய்து விடப்பா…! போகரின் நிலையில் வந்திடவே ஸ்தாபிதம் செய்திடப்பா…! செய்த பலனினால் தான் உன் துடிப்பும் ஆர்வமும் அதிவேகமும் போகரும் பகர்ந்திடுவார் அவசரக்காரன் என்று.
நான் சொன்ன நிலையைப் பார்த்தாயா…! உன் நிலையை எண்ணிப்பார்… உன் துடிப்பும் வேகமும் தான் உன் நிலையை உயர்த்தி விட்டது.
விட்ட குறையை முடித்திடப்பா…!
1.உன் துடிப்பினாலும் துரிதத்தினாலும் எந்நிலையிலும் துரிதமுள்ள நீ…
2.என் வழியில் உன் நிலை அமைதியில் வருகின்றதப்பா (தியான நிலை).
3.அந்நிலையிலேயே தொடரட்டும் ஜெப நிலை. வடிகால் அமைத்து விட்டேன்… பாய்ந்திடட்டும்… பரிபக்குவமாக வளர்ந்திடுவாய்.
பங்குனி உத்திரத்தில் பகர்ந்துரைத்தேன் உத்திரத்தின் தன்மை எல்லாம் ஒரு நிலையில் உள்ள மனிதர்கள் ஒன்று சேர்ந்து மகிழ்ந்திடவே உத்திர நாட்கள் அமைந்ததப்பா.
அன்புடனே அன்னதானம் பகிர்ந்துண்டு ஆண்டவனை நினைத்திடத் தான் “பண்டிகை நாட்கள்” எல்லாம் பாரினில் வந்ததப்பா…!
இன்றுள்ள நிலை எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வருடம் முழுவதும் வேண்டும் வேண்டுதலை… தன் நிலை உயர்த்திட எடுக்கின்றார்கள் காவடியை. வெறும் களியாட்டம் நடக்கின்றது.
காவடியில்…. “தெய்வ அருள் வந்திடும்… அந்நாளில் பகர்ந்திடும் சொற்கள்” எல்லாம் பாமரர்களுக்கு நல்ல உணர்வுகளை அளித்திடுவார்கள் அச்சித்தர்கள்.
அருள் வரும் தன்மை எல்லாம் இன்றைய நிலையில் யார் வருகிறார்களப்பா…? (தன் நிலையைக் கேட்பதற்கு ஆவி நிலையை அழைக்கின்றார்கள்).
1.அவர்கள் உடலில் முருகனும் விநாயகரும் வருவதல்ல அருள் நிலையில்.
2.ஆவி உலகத் தன்மை தான் சிலரின் உடலில் வந்து ஆடுகிறது… சில அம்மன் கோவில்களில் வருவதெல்லாம் ஆவி நிலைகள் தான்.
சித்தர்களின் நிலை எல்லாம் சில அபூர்வத் தன்மைகளிலே தான் தோன்றிவிடும்.
1.சித்தர் நிலை வருவதெல்லாம் சீருடனும் சிறப்புடனும் சொல் ஆற்றலுடனும் மிக அவசியமான நிலையில் வந்திடுமப்பா.
2.ஒரு நொடி தான் பகர்ந்திடுவர் பரிபக்குவ நிலையில்…!
3.உலக ஆசைகள் உள்ள சித்தர்கள் தான் வருவார்கள் (அதுவும் என்னைப் போல்).
ஆவியின் தன்மை வைத்துத் தான் அழைக்கின்றார்கள் பெரும் ஜாதகக்காரர்களும் சாமியார்களும் சில வைத்தியர்களும் கூட…! தன் நிலையில் ஆவியின் நிலையை நிறுத்திக் கொண்டு அவ்வாவிகளின் உதவியுடன் செய்கின்றார்கள் இந்நிலையெல்லாம்.
செய்யட்டும் செய்யட்டும்… நன்மைகளை செய்யட்டும்… ஆண்டவர் ரூபத்தில் வந்தாலும் ஆவிகள் செய்தாலும் நன்மைக்கே செய்யட்டும்…!
ஆவியின் தன்மையை வைத்து ஆண்டவனையே இழுக்கின்றார்கள் பெரும் ஆணவக்காரர்கள். குட்டிச்சாத்தானை வைத்துக்கொண்டு குடிகளைக் கெடுக்கிறார்கள்
ஆவியின் பசிக்கு அளிக்கின்றான் பல உணவுகளை. ஆண்டவனின் பெயரால் ஆண்டவனின் பெயரையே சக்கி மாதாவின் ஜோதியையே மாற்றி விட்டார்கள் குட்டிச்சாத்தான்கள்.
உலக நிலையையே மாற்றுகின்றது இந்தக் குட்டிச்சாத்தான்கள். “ஒற்றன் வடிவிலும்” உள்ளான் இக்குட்டிச்சாத்தான். ஆட்சி நடத்துகின்ற பெரும் ஆணவக்காரனிடமும் உள்ளான் இக்குட்டிச்சாத்தான்… செய்யும் வேலையெல்லாம் அந்தக் குட்டிச்சாத்தானால் தான்…! குட்டிச்சாத்தானின் பசிக்கும் தான் தன் கழிவைத் தானே பருகுகின்றான்
உலக நிலையைப் பார்த்தாயா…!
குட்டிச்சாத்தானின் வேலைகளை எல்லாம்… அந்த ஆவிகளை அடக்க ஆண்டவன் இல்லையா…? என்றிடுவாய்.
ஆண்டவர் எங்கப்பா உள்ளார்…? அவனவன் மனமே தான் ஆண்டவன் என்று பகர்ந்திட்டேன்.
1.அவன் மனமே குட்டிச்சாத்தானிடம் சிக்கியுள்ள பொழுது
2.ஆண்டவன் எப்படிக் காப்பாற்றுவான்…?
பெரும் திருடனும் அழைக்கின்றான் ஆண்டவனை… அன்புடன் மழலையும் அழைக்கின்றது ஆண்டவனை…! எந்நிலைக்கும் அவன் ஜோதி நிலைதான்.
அவன் நிலையில் இருந்துதான்… அவன் ஆசி பெற்ற சித்தர்கள் ஆளுகின்றார்கள் மனிதர்களை…!
1.அவரவரின் மனநிலைக்கேற்ப அவர்கள் அழைக்கும் தன்மைக்கு
2.அவரவர் புரிந்திடும் நிலையிலும் சித்தர்கள் அருள்கின்றார்கள்.
முருகா என்று அழைத்திட்டவர்களுக்கு… அவன் அழைக்கும் நிலையில் அன்புடன் அழைப்பவர்களுக்கு அவன் கஷ்டத்தையும் அவன் நிலையையும் உணர்ந்து அருளுகின்றார்கள்… “போகரும் பல சித்தர்களும்…”
அவரவர்களின் இஷ்ட தெய்வத்தை அழைப்பவர்களுக்கும்… அழிவின் நிலையை நாடுகின்றவனுக்கும்… அழைக்கும் தன்மையில் அவ்வழுகிய அணுவின் வழியில் தான் வந்து அவனிடம் அண்டிக் கொள்கின்றது அவன் நிலையில் உள்ள ஆவிகள். ஆனால் இவன் நினைக்கின்றான் ஆண்டவனே இவனுக்குள் அருள் புரிந்தான் என்று.
நல் உணர்வில் நல் நிலையில் நல் நினைவில் உள்ளவர்களுக்கெல்லாம் நல்லோரின் ஆசி பூ மழையாகப் பொழிகின்றது.
தீய நினைவில் உள்ளவரின் நிலையில் எல்லாம் தீய நிலையில் உள்ள ஆவிகள் அண்டிக் கொள்கின்றன. இப்போது புரிகின்றதா ஆண்டவன் எங்குள்ளான்…? என்று.
ஆண்டவன் என்பவன் யாரப்பா…?
இயற்கையில் ஒன்றிட்ட…
1.இயற்கையே தான் ஆண்டவன் காற்றே தான் ஆண்டவன்
2.சூரியனே தான் (வெளிச்சம் ஒளி) ஆண்டவன்.
3.தண்ணீர் தான் ஆண்டவன்
4.ஒளியும் காற்றும் தண்ணீர் இந்த மூன்றும் தான் ஆண்டவன்.
5.இயற்கை அன்னை இயற்கை சக்தி என்பதெல்லாம் இந்த மூன்றும் தான்.
ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்ற நிலை புரிந்ததா…?
இப்பாட நிலையை எந்நிலையிலும் பகர்ந்திடவில்லை நானும். என் சிஷ்யனையும் வாயடக்கி விட்டேன் பல நாட்களாக. உன் நிலைக்குப் புரிய வைத்தேன் சில துளிகள்.
உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள். கலியுகம் மாறுகின்றது கல்கியுகம் வருகிறது என்பதெல்லாம் இக்கால நிலையைக் கொண்டுதான்.
ஆண்டவன் எங்குள்ளான் என்பவனைக் கேள்… ஆற்று வெள்ள வந்திடும் பொழுது அடித்துச் செல்கின்றானே அனைத்தையும்… “அவன் தானப்பா ஆண்டவன்…” ஒவ்வொரு வழியையும் பிரித்துச் சொல்ல வேண்டுமாப்பா…?
ஆண்டவன் எங்குள்ளான்…? என்பதை… “இந்தப் பாடத்தை” எந்த நூலிலும் படித்திருக்கின்றாயா…?
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.
இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.
நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படி…?
என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.
அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.
ஆகவே யாராவது திட்டினாலும்.. உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.
அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.
இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.
உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?
நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.
நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.
நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.
பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.
1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.
குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.
உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.
1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.


நாம் பழக வேண்டிய முக்கியமான பயிற்சி
இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகிய அனைத்திலும் உள்ள நஞ்சினை அடக்கி ஆட்சி புரிந்து ஒளியாக இருக்கின்றது துருவ நட்சத்திரம். இதை உணர்த்துவதற்குத் தான் விநாயகர் அருகே “அரச மரத்தை” வைத்தார்கள் ஞானிகள்.
1.இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை வைத்து எப்படி உயர்ந்த சக்திகளை எடுக்க வேண்டும்…? என்பதை
2.அங்கே அரச மரத்தை வைத்துக் காட்டுகின்றார்கள்.
அதிகாலையில் நாம் குளித்து உடல் அழுக்கை நீக்கிய பின் விநாயகர் சிலையை உற்று நோக்கி… இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று நஞ்சினை ஒடுக்கி ஒளியின் கதிராக மாற்றி… ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உணர்வின் எண்ணங்களை தனக்குள் கவரும்படி செய்தார்கள் ஞானிகள். இது துவைதம்…!
பிறப்பின் உண்மையின் தன்மையை நமக்குள் தெளிவாக்குவதற்காகச் சிலையாக வடித்து வைத்தார்கள் ஞானிகள். நாம் பிறப்பில் மனிதனாக எப்படி வந்தோம் என்று அறிவதற்காக…!
அங்கே சிலையில் ஒன்றுமில்லை…!
கண் கொண்டு சிலையை உற்றுப் பார்க்கும்படி செய்து காவியத்தின் தன்மை கருத்துடன் நமக்குள் கூட்டப்பட்டு
1.அந்தக் கருத்தினை எண்ணித் “தன்னை அறிதல்” என்ற நிலையும்
2.எந்த உணர்வினை தனக்குள் அகஸ்தியன் எடுத்துத் துருவனாகி துருவ மகரிஷி ஆகி துருவ நட்சத்திரம் ஆனானோ
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அப்போது பதிவாக்குதல் வேண்டும்.
பதிவான எண்ணம் கொண்டு தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுக்க முடியும். அதன் வழியில் எண்ணும் பொழுது நம் கண்ணின் நினைவாற்றல் விண்ணுக்குச் செல்லுகின்றது.
1.அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கி
2.இந்த எண்ணங்கள் கொண்டு மீண்டும் கண்ணுக்கே நினைவைச் செலுத்தி
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து விண்ணிலிருந்து வரும்
4.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நம்மைப் பெறும்படி செய்திருக்கின்றார்கள் விநாயகர் தத்துவத்தில்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! அது எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி இந்த அலைகளை “உடலுக்குள் நாம் பரப்புதல் வேண்டும்…”
காலையிலிருந்து இரவு வரையிலும் சந்தர்ப்பவசத்தால் எத்தனையோ துன்பங்களைக் கேட்டறிந்துள்ளோம்… துயரப்படுபவரைப் பார்த்துள்ளோம். இந்த உணர்வுகள் அனைத்தும் ஆன்மாவிலே இருக்கின்றது.
அந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது ஆன்மாவாகச் சேமித்து வைக்கின்றது. சேமித்த உணர்வுக்கொப்ப
1.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்த அளவிற்கு உந்துகின்றதோ அந்த அளவிற்கு நாம் சுவாசிக்கின்றோம்.
2.சுவாசிக்கும் போது உணர்வுக்குத் தக்க “அந்த எண்ணங்கள்” வரும்.
இன்று ஒரு மனிதன் ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் என்றால் முடியவே முடியாது.
நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எந்தெந்தக் குணத்தால் அது உருவானதோ அதற்கு இரை தேட…
1.எந்த மனித உடலிலிருந்து வந்ததோ…
2.சூரியனின் காந்த சக்தி அதை அலையாக மாற்றி வைத்திருப்பதை நுகரப்படும் பொழுது
3.உயிரிலே மோதி உணர்ச்சிகள் தூண்டும்… அப்போது உணர்ச்சிக்கொப்ப அந்த அணுக்கள் அதை இரையாக எடுக்கின்றது
4.எடுத்து நமக்குள் உள் செல்லும் உணர்வினை அது உணவாக எடுத்து வளர்கின்றது.
ஆகவே அத்தகைய அணுக்கள் இப்படி உணவாக எடுக்கும் நிலையிலிருந்து… நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு
1.“எதை உணவாகக் கொடுக்க வேண்டும்…?” என்று தெளிவாக்கப்பட்டுள்ளது.
2.அந்த அருள் ஞானியால் கொடுக்கப்பட்ட விநாயகர் தத்துவத்தில்.
அதாவது… புறத்திலிருந்து ஆன்மாவாக எத்தனையோ நிலைகள் மாறி வருவதை… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நாம் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி உயிருடன் ஒன்றி நினைவினை அடிக்கடி அடிக்கடி உடலுக்குள் பாய்ச்சுதல் வேண்டும்.
இந்த உணர்வுகள் வலுப்பெறும் போது
1.தீய அணுக்களுக்கு வரும் அந்த நிலை அது அடைபட்டு… இழுக்கும் சக்தி குறைகின்றது… தீமையான எண்ணங்கள் வராதபடி விலக்கி விடுகின்றது.
2.அவசியம் இந்தப் பயிற்சியை நாம் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
சாதாரண பாமர மக்களும் இதை பழக்கப்படுத்துவதற்குத் தான் திரும்பும் பக்கமெல்லாம் விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.
நாம் உணர்ந்து கொண்டோமா…?

ஆவி நிலையில் வாழ்வது எல்லாம் “பெரும் அல்லல் படும் நிலை தான்”
“ஆவிகளைப் பற்றி” எல்லாமே தெரியும் தன்மை நாய்க்கு மட்டும் தான் உண்டு. அதற்காகத்தான் என்னுடன் நாயை நிறுத்திக் காட்சி தந்தேன்.
நாயாகப் பிறப்பவர்கள் எல்லாம் ஆவி உலகில் உள்ள பெரும் ஆத்திரக்கார ஆவிகள் என்றேனல்லவா முதல் பாடத்தில். உடலில் இருக்கும் பொழுது எந்த விரோதத்தில் அவர்களின் ஆவி பிரிந்து சென்றதோ
1.அவ்வாவி தான் முடிக்கும் காரியத்தை முடித்தவுடன் வருவது “நாயின் உடலில் தான்…”
2.மனித உடலை எடுக்கும் சந்தர்ப்பமும் பாக்கியமும் அந்த ஆவிகளுக்குக் கிட்டுவதில்லை.
இவ்வழியில் வந்த நாய்கள் எல்லாத் தன்மையையும் ஆவி உலகில் உள்ள ஆவிகள் எப்படி எந்நிலையும் தெரிந்திருக்கின்றனவோ… எந்நிலை என்பது மற்ற ஆவிகளின் நிலையும் முன் ஜென்ம விரோதத்தின் நிலையும் தெரிந்து வைத்திருக்கின்றதோ… அதே போலத்தான் நாயின் உடலிலும் இருக்கும்,.
நாய்க்கு எல்லா சக்திகளும் தெரிந்திடும். நாயின் தன்மையை ஊன்றிப் பார் நாயில் உள்ள வெறித்தன்மைதான் உணர்ந்திட்டாய். நாய்க்கும் ஜென்மத் தொடர் உண்டப்பா.
நாயின் நிலை எல்லாம் பெரும் பூகம்பத்தையும் அறிந்திடும்… வரும் வெள்ளத்தையும் அறிந்திடும்…! அதன் தன்மையில் சிறு அணுவும் ஆவி உலகத்தின் தன்மையும் ஆண்டவனின் தன்மையும் தெரிந்து விடும்.
ஆனால் ஆவியையும் ஆண்டவனையும் பிரித்துப் பார்க்கும் தன்மை அதற்கு இல்லை. அதன் வெறி உணர்விலே அத்தன்மை மறைந்து விடுகிறது.
நாய் கடித்து இறப்பவர்கள் எல்லாம் நாயுடன் முன் ஜென்மத்தில் தொடர்பு உடையவர்களே. முன் ஜென்மத்தில் விட்ட குறையை அந்த நாய் தீர்த்துக் கொள்கின்றது.
நாய் கடித்துத் தப்புபவர்கள் எல்லாம் அவர்கள் முன் ஜென்ம “பூஜா பலனினால்தான்…”
1.பூஜா பலன் என்பது கற்பூரம் காட்டி விடுவது மட்டுமல்ல…
2.அதன் பலனை அடைந்தவன் என்பது அவனின் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களை வைத்துத்தான் பூஜா பலன் என்று சொல்கின்றேன்.
கடவுள் சிலைக்கு முன்னால் நிற்பவர் எல்லோருமே பூஜா பலன் எய்தியவனா…? இல்லை…!
கோயிலுக்குச் செல்லாதவனும்… கடவுளே இல்லை என்பவனும்… தன் நிலை உணர்ந்து நியாயத்தைக் கடைப்பிடித்து நல்லொழுக்கம் பெற்றவரும்… நாடு போற்றும் தன்மை உள்ள எல்லோருமே… பூஜை பலன் பெற்றவர்கள்.
ஆயிரம் தவறுகள் செய்தாலும் தான் தர்மம் செய்கின்றேன்… கோயில் கட்டி வழிபடுகின்றேன் என்பவன் எல்லாம் பூஜா பலன் பெறுகின்றானா…? இல்லை… பெரும் பூஜ்யம் தான் அவன் நிலை.
கோயில் என்பதையே தான் செய்யும் பாவத்தைக் கொட்டித்தான் பாவ மன்னிப்புக் கேட்கின்றான். அவன் நினைக்கின்றான்…
1.செய்த பாவத்தைச் செய்து விட்டுக் கோவில் கட்டி கும்பிட்டால்
2.கூப்பிட்ட குரலுக்கு “கும்பேஸ்வரன் வந்திடுவான்” என்ற எண்ணம் அவனுக்குள்ளே.
மறு ஜென்மம் என்பது உள்ளதப்பா அவனைப் பார்த்துக் கொள்ள…!
ஆவி உலகில் ஊடுருவி அதன் தன்மையில் பார்த்து விட்டால் உலக நிலை எல்லாமே உன்னுள்ளே தெரிந்திடும்.
1.மனித உடலில் உள்ளவரை தான் அமைதியும் சந்தோஷத்தையும் காண முடியும்.
2.ஆவி நிலை எல்லாம் பெரும் அல்லல் படும் நிலை தான்.
மனித உடலின் நிலையிலேயே மூன்றில் ஒரு பாகம் (1/3) அமைதியான ஆனந்தமான நித்திரை அருளியுள்ளான் அவ்வாண்டவன். எந்த நிலையிலும் அந்த ஆனந்தமான நித்திரை இல்லை அப்பா “ஆவிகளுக்கு…”
மனித உடலில் பெற்ற பேற்றை வழி வழியாகச் சொல்கின்றேன் இப்பேறு பெற்றதற்கு பல கோடித் தவம் வேண்டும். தவமிருந்து பெற்ற உடலைத் தான் தன்னிச்சையாக அழிக்கின்றார்கள் மானிடர்கள்.
1.மனித உடலின் தன்மை எல்லாம் பெரும் பேரின்ப நிலையப்பா
2.மனித உடலில் இருந்து கொண்டே வாழும் வாழ்க்கை அழகுடனும் அர்த்தமுடனும்… ஆனந்தத்திலும்… களித்திட வேண்டுமப்பா.
மனித உடலை எய்தியவன் எல்லாம் தன் நிலையை உணர்ந்திடாமல் பிறந்த உடனே ஆத்திரத்துடனும் பேராசையுடனும் பழிவாங்கும் நிலையிலும் கோப தாபத்துடன் வளர்க்கப்படுகின்றான். எப்படி அப்பா இருக்கும் வாழ்க்கை நிலை…?
பிறந்தவுடனே நல்லறிவை ஊட்டும் குடும்பத்தில் வளரும் குழந்தை நல்ல நிலைக்கு வந்து விடுவான். வளரும் தன்மையிலே வாழ்க்கை அமைகின்றது.
இப்பாடம் புரிவதற்கு புதியவனல்ல நீ…! எல்லா பாடத்தின் தன்மையும் தெரிந்திடவே புகுத்திட்டேன் இதை.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
கணவன் மனைவி இணையாது… தனித்த நிலையில் தவத்தின் மூலம் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெற்றாலும் முனித் தன்மை என்பதே விஷத் தன்மை கொண்டது. ஒன்றை ஊடுருவிக் கொல்லும் சக்தி பெற்றது.
1.பெண் பால் என்ற நிலையில் இணைந்து வரப்படும் போது தான்
2.விஷத்தின் தன்மை ஒடுக்கி
3.ஒரு துடிப்பின் நிலையாக இயங்கி
4.அணுவின் சக்தி பெறக்கூடிய தகுதி பெறும்.
இதையெல்லாம் வாழ்க்கையில் சிந்தித்துப் பார்த்தால் தெரியும்.
ஏனென்றால் கணவன் மனைவி இரண்டு பேரும் அன்பாகப் பேசி… ஒரே எண்ணத்துடன் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் எண்ணங்கள் கை கூடி அந்தக் காரியங்கள் சித்தியாகும்.
ஆனால் கணவன் ஒரு வேலையைச் செய்யப் போனால் இதை எதற்குச் செய்து கொண்டிருக்கிறார்…? என்று மனைவி இடைமறித்து அழுத்தமாகச் சொன்னால் போதும்.
அதற்கு அடுத்து கணவன் என்ன வேலை செய்தாலும் கூட இந்தக் குறை உணர்வுகளே அங்கே வளரும்.
ஆகவே குடும்பத்தில் வாழும் பெண்கள் சர்வ ஜாக்கிரதையாக ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1.பெண்பால் என்ற உணர்வு எதனில் கலக்கின்றதோ அதனின் உணர்வின் கலவை கொண்டு
2.அடுத்து கருத்தன்மை பெறக்கூடிய தகுதி பெற்று விடுகின்றது. (ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்).
இதைப் போன்ற நிலைகள் இந்த வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உண்டு. ஏனென்றால்…
1.பல கோடி உணர்வுகள்
2.பல குடும்பங்களில் பல நிலைகள்
3.பல வித்தியாசமான நிலைகள் உண்டு.
கணவன் நல்லவனாக இருக்கலாம். இருந்தாலும் சந்தர்ப்பத்தில் அறியாமையினால் ஒரு வேதனைப்படும் செயலைச் செயல்படுத்தும்போது சங்கடமான உணர்வுகளைக் குடும்பத்தில் உருவாக்குகின்றது.
வேதனை என்ற விஷத்தன்மை வரும் பொழுது மனைவியை நினைக்கும் போதெல்லாம் அடிக்கடி வெறுப்பின் தன்மையும் வேதனைப்படும் தன்மையும் கணவனுக்கு வரும்.
பின் அடுத்து மனைவி நல்லதைச் சொன்னாலும் கணவன் அதை ஏற்றுக் கொள்ளும் பண்பு வருவதில்லை. அதே சமயத்தில் மனைவிக்கும் இந்த விஷத்தின் தன்மை கூடுகின்றது,
இப்படி விளைந்த உணர்வு பரவியபின் அந்தத் தவறின் உணர்வு அங்கேயும் விளைகின்றது.
1.இருவருமே இதே உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இருவருக்குமே நோய் வருகின்றது.
2.கை கால் குடைச்சல் மேல் வலி தலை வலி என்று வரிசைப்படுத்தி வரும்.
இருவரும் ஒன்று சேர்த்து ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு சரி… இதை வாங்கலாம்…! என்று எண்ணினாலும் வேதனை கலந்த உணர்வுடன் இருவருமே செல்லப்படும் பொழுது அந்தப் பொருளை வாங்கினாலும்… வாங்கிய பின் இரண்டு பேருக்கும் பகைமை வரும்.
1.அப்போது அந்தப் பொருளைப் பாதுகாக்கும் சக்தியை இருவருமே இழந்து விடுகின்றனர்.
2.இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உணர்வுகளின் இயக்கம் தான்.
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்காக வேண்டித் தான் அதிகாலை துருவ தியானத்தில் இருவருமே ஒன்று போல் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் அவசியம் எண்ணித் தியானிக்க வேண்டும் என்று உங்களிடம் யாம் சொல்வது.
இந்தப் பழக்கத்திற்கு இருவருமே வந்து விட்டால் குடும்பத்தில் மன மகிழ்ச்சியும் செல்வமும் செல்வாக்கும் சொல்வாக்கும் தன்னாலே பெருகும்.


நம் உயிர் “தாயாக” இருக்கின்றது
சந்தர்ப்பத்தில்… ஒருவர் கோபிக்கும் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி விட்டால்… உயிரியலின் மாற்றங்களில் அதை ஜீவ அணுவாக நம் உயிர் உடலுக்குள் மாற்றிவிடுகின்றது.
அதாவது…
1.எதனின் நினைவை எடுத்து உயிர் நமக்குள் அதை அணுவாக ஆக்கியதோ
2.எந்த நிலைகள் கொண்டு அந்த மனிதனின் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவந்து வைத்திருக்கின்றதோ
3.அதை உயிர்… அதனின் துடிப்பின் ஈர்ப்பு கொண்டு அந்த உணர்வைக் கிளர்ந்து எடுக்கப்படும் பொழுது
4.நுகர்ந்து தன் ஆன்மாவாக மாற்றி உயிரிலே படும் பொழுது மீண்டும் அந்த நினைவாற்றல் வரும்.
ஆக… கோபம் கொண்ட அணுவின் தன்மையாக நமக்குள் விளைந்திருந்தால்… அதற்கு இரை வேண்டும் போது அது கத்தும்… அதனின் உணர்ச்சியைத் தூண்டும்.
உதாரணமாக… காக்கைகளோ குருவிகளோ கொக்கோ… தன் குஞ்சுகளுக்கு அது இரை தேடிக் கொண்டு வந்து கொடுக்கின்றது. குஞ்சுகள் கத்தும் பொழுது மீனையோ வீட்டில் பூச்சிகளையோ மற்ற பூச்சிகளையோ உணவாகக் கொடுக்கின்றது.
இதைப் போன்று தான் எந்த குணத்தின் தன்மை நாம் நுகர்ந்தோமோ நமது உயிர் அந்த குணத்தின் உணர்வின் அணுவாக விளையச் செய்து விடுகின்றது.
1.அந்த அணுக்கள் தன் பசிக்காக ஏங்கும்போது அதை உருவாக்கிய தாயான உயிர்
2.அதற்கு வேண்டிய நிலைகளை நுகர்கின்றது… ஆன்மாவாக மாறுகின்றது… சுவாசித்த பின் நமக்குள் எண்ணம் ஆகின்றது
3.அந்த மனிதன் கோபித்திருந்தால் நமக்கும் அப்பொழுது கோபம் வரும்… அறியாமலே திடீரென்று கோபம் வரும்.
என்னவென்றே தெரியவில்லை திடீரென்று எனக்குக் கோபம் வந்துவிட்டது என்று சிலர் சொல்வார்கள்.
ஏனென்றால் அந்தக் கார உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டால் அது பசிக்கு ஏங்கினால் போதும்.
1.உயிருடைய வேலை… எந்த மனித உடலிலிருந்து அந்தக் கார உணர்வு வந்ததோ
2.அதை எடுத்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து விளைந்த அணுக்களுக்கு உணவாகக் கொடுக்கும்.
அத்தகைய கோபம் வந்த பின்… வீட்டிலே மனைவியை அடித்து விடுவார், தன் நண்பனைப் பகைமை ஆக்கி விடுவார்… கடை வியாபாரம் இருந்தால் வியாபாரத்தில் வரும் வாடிக்கையாளரிடம் எதிர்த்துப் பேசி சண்டை வரும்.. சர் தான் போயா…! என்பார்.
அறியாமலே இத்தகைய செயல்கள் நடக்கும்…!
ஏனென்றால் உருவான அணுக்கள் அது தன் இனத்தின் தன்மையைப் பெருக்க… அதற்கு உயிர் இப்படி இரைகளைக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கும்
இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் அடிக்கடி அடிக்கடி மகரிஷிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்து
1.ஒளியான அணுக்களைத் தியானத்தின் மூலமாகவும் ஆத்ம சக்தி மூலமாகவும் உங்களுக்குள் பெருக்கும்படி செய்கிறோம்.
2.அதாவது தீமையின் விளைவுளை மாற்றி அமைக்கும் பயிற்சியாக உங்களுக்கு இதைக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
ஆகவே மகரிஷிகள் அருள் சக்திகளை அவ்வப்போது எடுத்து உங்களுக்குள் வலுவாகச் சேர்த்துக் கொண்டே வாருங்கள். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள்.
இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலையை அடையுங்கள் (ஞானகுரு).

சித்தர்கள் வெளிப்படும் காலம் இது…!
ஏழு ஜென்மங்கள் என்றேன் அல்லவா… உலகம் தோன்றிய நாட்கள் எந்தக் கணக்கிலும் வரவில்லையப்பா. உலகம் தோன்றி நிலையில் வந்தவர்கள் எல்லாம் இன்றும் உள்ளார்கள் என்றால் எப்படி…? என்று எண்ணி இருப்பாய்…!
1.”மனித உடலில் உள்ள காலம்” ஆயிரத்தில் ஒரு மடங்கு இல்லை அப்பா இந்த ஏழு ஜென்மத்திலும்.
2.காலமெல்லாம் சுற்றுவதெல்லாம் அவ்வாவிகள் ஆவி உலகத்தினூடே தான்…!
என்னப்பா…? புரிகின்றதா பாட நிலை…!
இந்நிலையில் இருந்தெல்லாம் ஜெயிப்பவனுக்கு வருகிறது பெரும் சூட்சும உலகம். அவ்வுலகத்திற்குச் சென்றால் எவ்வுலகையும் காணலாம் என்று சொன்னேன். பெரும் பொக்கிஷம் பெற்றவர்கள் தான் அவ்வுலகத்திற்குச் சென்றவர்கள்.
இவ்வுடலில் உள்ள பொழுது சேர்க்கும் பணமும் சொத்துமல்ல பொக்கிஷம் ஞானப் பொக்கிஷத்தைப் பெற்றிடுங்கள் கல்கிக்குச் செல்வதற்கு…!
1.கல்கியில் வந்திடுவான் சித்தனெல்லாம் என்று பகர்ந்திட்டான் உன்னிடம் இச்சித்தன் (சாமி – ஞானகுரு).
2.எப்படி வந்திடுவான்…? என்று சொன்னானா…!
கல்கியில் வந்து பிறந்திடுவானா…?
இல்லையப்பா…!
கல்கியில் இன்று வாழும் நிலையில் இக்கலி யுகத்தில் கடைசியில் நல் நிலை பெற்றோர் உணர்வில் வந்துவிடும். பிறந்து விடும் பூக்களிலும்…! பூக்கள் என்பது பிறக்கும் மழலைகளைத்தான் சொல்கின்றேன். அந்நிலையில் வருகின்றார் ஒவ்வொரு சித்தனாக…!
சித்தன் வெளிப்படுவான் என்று சொன்ன சிததனைக் கேட்டாயா…! என்ன நிலையில் வெளிப்படுவார் என்று…?
எவ்வுடலையும் ஏற்றுக்கொள்வார் அச்சித்தனெல்லாம்.
1.எவ்வுடலையும் என்று சொல்வதெல்லாம்
2.பெரும் பூர்வ புண்ணியப் பலனடைந்த உடலைத்தான் அச்சித்தன் ஏற்றுக் கொள்கின்றான்.
பிறக்கும் மழலைகளைப் பரிந்துரைத்தேன். கலியியில் பார்த்திருப்பாய் சில மழலைகளின் சொல்லையும் செயலையும்..!
வந்திடுவார்… வந்திடுவார் பெரும் சித்தனும் யோகியும் எல்லாமே கல்கிக்கு வந்திடுவார்கள். வரும் நிலையைப் புகட்டி உள்ளேன்.
முதன் முதலில் இந்நிலையில் தான் என் சிஷ்யனுக்கே வாயடைத்தேன். பகர்ந்து விட்டேன் நான் உனக்கு.
பரிபக்குவமான நிலையில் மன அடக்கத்துடன் இருங்கள்…!
எண்ணிக் கொள் எண்ணிக்கொள்… எண்ணின் வடிவத்தில் எண்ணிக்கொள்… எண்ணத்தில் எண்ணிக்கொள்…! காலங்கள் குறுகியது… குறுகியது… என்று பகர்கின்றேன்.
2000 ஆண்டுகள் என்று சொல்கின்றார்கள். 2000வது ஆண்டில் இவ்வுலக மக்கள் எல்லோருக்கும் ஆரம்பமாகி விட்டது “அழிவின் நிலை எல்லாம்…”
1.அவன் செய்யும் அணுவும் அணு அணுவாக அழியும் தன்மை வந்து விட்டது
2.அவனே வியக்கும் வண்ணம் சக்தியைப் பார்த்திடுவான் சக்தியையே…!
சக்தி நிலையைத் தெரிந்து கொள்ளாமல் அணு ஆராய்ச்சி செய்கின்றானாம்…! சக்தி நிலையில் ஊதி விட்டால் அவன் செய்யும் அழிவின் தன்மை எல்லாம் என்னவாகும்…?
கொதிக்கும் நிலையில் உள்ளதப்பா இவ்வுலக நிலை…! எல்லாம் பார்த்திடுங்கள் பார்த்திடுங்கள்… நான் பகர்ந்ததையெல்லாம் பார்த்திடுங்கள் வெடிக்கும் நிலையையும் பார்த்திடுங்கள்.
என் நிலையில் நீ இருந்தால் உலகத் தன்மையையே பார்த்திடலாம். குறுகிய காலம் தான் உள்ளதப்பா…! கூட்டி விடு உன் நிலையினை சமமான நிலையைத் தெரிந்து கொண்டாய்…
1.படர விடு இந்தப் பாட நிலையை நிலை நிறுத்திப் படரவிடு ஒரு நிலையில்
2.கல்கி என்ற விடிவிளக்கின் ஆரம்பத்தில் வந்துள்ளாய்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்…! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்…” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.
எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.
ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.
முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு…திடு… என்று ஓடிக் கொண்டிருக்கும்.
அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது” என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.
கடைசியில்… சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா…? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது…? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.
காரணம்…
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.
நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.
உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று சப்தமிடும்.
அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.
1.ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு
2.உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து
3.அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.
1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்… சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.
அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து… அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.
ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்…?
நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.
1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.
அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு…! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.
அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.
அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.


நம் கண்களை ஞானக் கண்களாக மாற்ற வேண்டும்
உதாரணமாக புழுவிற்குக் கண்ணில்லாத போது… அது தன் எண்ணங்கள் கொண்டு ஊர்ந்து சென்றாலும்… உணவுக்காக ஆசைப்பட்டுத் தேடிச் சென்றாலும்… ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் சிக்கும் பொழுதெல்லாம்…
1.தான் படும் வேதனைகளைத் தாங்காது
2.எது தன்னைத் தாக்குகின்றதோ அதைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றுகின்றது.
இப்படிப் பல சரீரங்களில் பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றித் தோன்றித் தோன்றி… அடுத்த உடல் பெறும் பொழுது “பல நிலைகளைக் குவித்துக் கண்களாக உருப்பெறுகின்றது…”
முதலிலே எண்ணங்கள் தான் உருவானது. எண்ணத்தின் துணை கொண்டு பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை ஒவ்வொரு உயிரினமும் (தன் எதிரிகள்) தன்னைத் தாக்கப்படும் பொழுது அந்தச் சரீரத்தைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகளை உந்தி உந்தி… பல சரீரங்களில் அதை எடுக்கின்றது.
1.அதாவது இரண்டு நாட்களுக்கு அந்த உடலில் உயிர் இருக்கும் அடுத்த நாள் மடிந்துவிடும் ஆரம்ப நிலைகளில்
2.இப்படி நூறு சரீரங்களைக் கடந்து “பார்க்க வேண்டும்… பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு வளர்ந்து வளர்ந்து
3.கண்களாக உடலில் உருப்பெறும் தன்மை வருகின்றது,
ஆதே சமயத்தில் ஒளி வீசி (வெயில்) மற்ற பொருளைக் காட்டும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இங்கே இருக்கின்றது. புழுவின் உயிரின் துடிப்போ… தான் பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் வரும் பொழுது
1.மணத்தால் அறிந்தாலும் தன் உணர்வால் அறிய வேண்டும்
2.பார்வையால் பார்க்க வேண்டும் என்று உணர்வுகள் தோன்றுகின்றது (தோற்றுவிக்கின்றது).
இப்படித் தோன்றிய நிலைகள் தான் கண்களாக உருவாகிறது. இதைத் தான் துவாரகா யுகத்தில் நாரயணன்… “சூரியன் கண்ணனாகத் தோன்றுகின்றான்…” என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.
சூரியனின் ஒளிக்கதிர்கள் நம் உடலுக்குள் ஒளிக் கதிராகக் கண்கள் காணும் நிலை வருகிறது. அதாவது
1.சூரியனிலிருந்து பாதரசங்கள் வீசப்படும் பொழுது
2.அது மற்றொன்றுடன் மோதி ஒலியின் ஒளிக் கதிர்களாக எப்படி ஆகின்றதோ
3.இதைப் போன்ற நிலைகள் அங்கே பெறுகின்றது.
இந்த உணர்வை நுகர்ந்து கொண்ட பின் தன் உடலில் பெற்ற பார்க்க வேண்டும் என்ற உணர்வுகள் கண்களாக உருவாகி
1.இந்த உணர்வின் நினைவாற்றல் அங்கே தாக்கப்படும் பொழுது
2.எதனின் உணர்வோ அந்த ரூபத்தினை அறியும் வல்லமை பெறுகின்றது – “கண்களுக்கு அந்த ஆற்றல்…”
உதாரணமாக ஒருவர் கோபமாக இருக்கிறார்… நாம் அவரைப் பார்க்கிறோம் என்றால் அதைப் பார்த்த பின் உணர்வுகள் மோதுண்டு உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது
1.அப்போது நமக்கு கோபம் வருகிறது…
2.கோபம் வந்த பின் இருள் சூழ்கிறது… சிந்திக்கும் திறனும் இழக்கப்படுகிறது.
ஆனால் ஆடு மாடுகளோ மற்ற காட்டில் வாழும் மிருகங்களோ தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மையைப் பாய்ச்சி அந்த உணர்வுகள் கண்ணின் வழி வெளிப்படும் பொழுது
1.அதிலே வரும் அலைகள் மோதி குறித்த தூரத்தில்
2.கண்ணின் உணர்வலைகள் விசை உந்துதலின் தன்மை எவ்வளவு ஏற்படுகிறதோ
3.அந்த வட்டத்திற்கு ஒளியாகத் தெரியும்.
4.(மனிதனுக்கு இது போன்று தெரிவதில்லை)
இரவிலே பாம்பு பூச்சிகள் தேள் மற்ற மிருகங்களுக்கும் கண் பார்வையால் மோதுண்டு அதன் ஒளிகள் அதற்குத் தெரியும் மனிதனுக்குத் தெரிவதில்லை காரணம்…
1.மனித உடலில் விஷத்தின் தன்மை வடிகட்டப்பட்டுக் குறைத்து விட்டதனால்
2.மோதலால் ஏற்படும் ஒளித்தன்மை நமக்குள் இழக்கப்படுகிறது.
அதே சமயத்தில்… பிறர் படும் உணர்வின் தன்மை நமக்குள் மோதப்படும் பொழுது… உணர்ச்சிகள் எழுந்து அறியும் தன்மையாக… அறியும் ஆற்றல் நமக்குள் பெறுகின்றது.
ஒரு எண்ணம் நமக்குள் மோதினால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு
1.அவன் என்ன செய்கின்றான்…?
2.குற்றம் செய்கின்றான்… அல்லது குற்றமற்றதாக இருக்கின்றது… என்ற உணர்வின் செயலாக்கங்களை நாம் உணர முடிகிறது.
ஆகவே மனிதன் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றவன்…!
பல கோடிச் சரீரங்களில் தான் கூர்மையாகப் பார்த்துத் தன் எதிரிடமிருந்து தப்பித்துக் கொள்ள… எத்தனையோ உணர்வுகளைச் சுவாசித்து… சுவாசித்து… தான் எதை எதை எல்லாம் கூர்மையாகப் பார்த்ததோ அதனின் வலிமையைச் சேர்த்துச் சேர்த்து… இப்படித் தீமைகளை அகற்றிடும் உடல அமைப்பினை உயிர் உருவாக்குகிறது.
அதாவது தீமைகளைப் பிளந்திடும் அணுக்கள் உருபெற்று அதற்குண்டான உறுப்புகள் உருவாகி மனிதனாக உருவாக்குகிறது… பரசுராம்…! இயற்கை நிலைகள் எது விளைந்தாலும் அதனைச் சமப்படுத்தி உணவாக உட்கொள்ளும் நிலை பெறுகின்றோம்.
இப்படிப் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரை இந்த உயிர்…
1.ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்துக் கொள்ள மரண பயங்களை ஏகி
2.அந்த மரண பயத்தால் நான் நுகர்ந்த உணர்வுகள் வலுவாகி
3.இந்த உணர்வின் தன்மை கொண்டு உடல் மடிந்தாலும்
4.வலுவான உணர்வுகளைச் சேர்த்து… பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக இன்று வந்துள்ளோம்.
மனிதனான பின் பல தீமைகளை அறிந்தாலும் பலராம்…! எல்லாவற்றையும் அறியக்கூடிய ஆற்றல் பெறுகின்றோம்.
அதாவது சமப்படுத்தும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது தீங்கு செய்கிறான் என்றால் அதை நுகர்ந்த பின்
1.அந்த தீங்கு தனக்குள் வராதபடி சமப்படுத்த முடிகின்றது…
2.கண்டிப்பாகச் சமப்படுத்த வேண்டும்… அதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.

நல் நிலை வருவதெல்லாம் “நிதானமாகத்தான்…!” ஆனால் என்றுமே நிலைத்து நிற்கும்
நல் நினைவையும் நல் பாட்டையும் நல் சொல்லையும் மிஞ்சிவிடும் தீயோரின் எண்ணமும் செயலும் சொல்லும்.
1.நல் வழியில் வருவதெல்லாம் மிக நிதானத்தில் தன் உணர்வில்
2.தன்னுள்ளேயே அமைதியுடன் தான் வந்திருக்கும் “நிலை நிற்கும்…”
தீய எண்ணங்களும் தீய சொல்லும் செயலும் உலக நிலையையே மிஞ்சிவிடும். நல்லவருக்குக் காலமில்லை… அவன் எப்படி வாழ்கின்றான் பார்…! என்ற எண்ணம் தான் மனிதனுக்குள்ளே…!
1.நல் நினைவின் தன்மை எல்லாம் நமதுள்ளே இருக்கட்டும்…
2.பிறரின் புகழ் உரைகளுக்காகவோ பிறரின் போற்றுதலுக்காகவோ அல்ல நல் நினைவு.
எந்த இடத்திலும் நல்லதையும் அடக்கி விடும் தீயது. அதற்காக மனம் கலங்கவோ மன அடக்கம் இல்லாமல் (உணர்ச்சிகளை) வெளியிட வேண்டியதோ இல்லை.
தீயது வளரத்தான் செய்யும்…
1.வளர வளர அதன் நிலை அழிந்துவிடும். பெரும் அழிவாக அழிந்துவிடும்.
2.பெரும் நிலையை அடைந்தவன் உலக நிலையைக் கண்டவன் உலகை ஆள்பவன் எல்லாமே பெரும் அழிவு நிலையில் தான் அழிகின்றான்.
3.நல் நிலையில் உள்ளவனின் நிலை தான் நிலைத்திருக்கும் காலம் காலமாக…!
பார்ப்பவரின் பார்வைக்குப் பிறர் பார்ப்பதற்கல்ல இவை எல்லாம். சொல்லும் பாடம் புரிகின்றதா…?
சொல்வாக்கு செல்வாக்கு ஆசை மனம் செயல் எல்லாப் பாடங்களையும் சிறுகச் சிறுக தந்து அருளியுள்ளேன். ஒவ்வொரு பாடத்தின் தன்மையையும் நீ புரிந்து விட்டால் உன் வழியில் அப்பாடத்தின் தொடர் நிலைகள் எல்லாம் புரிந்துவிடும்.
மனிதன் எண்ணம் உலகத்தில் உள்ள எல்லா சக்திகளையும் விட மிகவும் துரிதமானது என்று சொன்னேன்.
காற்று மழை ஒலி ஒளி மனிதனாக செய்த விஞ்ஞானம் எல்லாவற்றையும் மிஞ்சக் கூடிய எண்ணத்தையே உன்னுள் அடக்கி உள்ளாய்.
1.இவ்வெண்ணத்தின் தன்மையில் இருந்து தான் பாய்கின்றது உலகத்தன்மை எல்லாம்.
2.எண்ணத்தின் பாடத்தைப் பகர்ந்து விட்டால் உன் எண்ணமெல்லாம் பாட நிலையிலே இருந்துவிடும்.
உன் எண்ணத்தை வைத்து வந்து விடப்பா… பெரும் ஞான நிலைக்கே என்று பகர்கின்றேன். பாடத்தின் வழியை எப்படிச் சொன்னாலும் “உன் நிலையை உயர்த்திடவே பகர்கின்றேன் பல நாட்களாக…!”
என்னப்பா…! புரிகின்றதா இந்த நிலை…?
சிவன் சக்தி வடிவத்தை அர்த்தநாரீஸ்வரர் என்று சொல்லி சரி பாதி சிவனையும் மறு பாதி சக்தியையும் உருவத்தைச் சித்தரித்தார்கள் சித்தர்கள். இந்நிலை எதற்கப்பா…?
உன் நினைவில் வந்ததா…? கடவுளின் ரூபத்தைக் கருத்துடன் புகுத்தி விட்டேன் உன் எண்ணத்தில். பெண் ஆண் என்பதெல்லாம் பிரிந்திடாமல் வருவதற்காக அளித்த சொல்லப்பா சிவசக்தி வடிவம்.
சிவ சக்தியின் வடிவத்தை உன் எண்ணத்தில் இட்டுள்ளேன். உன் எண்ணத்தின் வேகத்தில் பல பல உண்மைகளை அறிந்திடப் பாடம் மட்டும் புகட்டிவிட்டால் பாட நிலையிலேயே இருந்திடுவாய்.
பெரும் பரீட்சை ஒன்று உனக்குள்ளே வைத்துள்ளேன்…!
1.உன் எண்ணத்தின் மையத்தில் வைத்திடுவாய் சிவ சக்தியின் பிம்பத்தை
2.வைத்துள்ளேன் இன்று உனக்கு அந்நிலையில் உன்னுள்ளே.
இன்றைய தியானத்தை உன் நிலையை ஒருநிலைப்படுத்தி சக்தி சிவன் சொரூபத்தை உன்னுள்ளே கண்டு அந்நிலையின் தத்துவத்தை எனக்கு அருள்வாயா…?.
1.உன் நிலையை… தியான நிலையில் கண்டு பார்த்தால் கண்டிடுவாய்.
2.சிவ சக்தியின் வடிவத்தை நீ பெற்ற மக்களின் தன்மையில் கொண்டு வந்தால்… அந்நிலை புரியும்.
சிவன் தனியாக உள்ளாரா…? சக்தி தனியாக உள்ளாரா…? என்பதெல்லாம்… ஒன்றுடன் ஒன்று கலக்கவில்லை என்றாய் அல்லவா…! நான் பகர்ந்து விட்டால் புரிந்து கொள்வாய் சில நொடியில்… பெற்ற “தியானத்தின் தன்மையிலே கண்டிடப்பா…!”
அணுவின் தன்மையில் பல கோடி நிலைகளை… கோடி கோடி நிலைகளைப் பகர்ந்துள்ளேன்.
1.ஆவியின் நிலையிலே பெண் இல்லை ஆண் இல்லை.
2.இறந்த பின்னால் ஆவியின் நிலை எல்லாம் பெண்ணல்ல ஆண் அல்ல
சஞ்சலம் உள்ள ஆவிகள்… தன் நிலையை முடித்து விட எண்ணுகின்றது உடலில் இருந்த பொழுது செய்த பலனை ஏற்றுக் கொண்டு சில ஆவிகள் இருக்கின்றன… சில ஆவிகள் பழி தீர்க்கும் நிலையிலும் இருக்கின்றன.
1.மனித உடலில் நல்லவர் கெட்டவர் என்பதைப் போல் என்பதைப் போல்
2.ஆவியின் உலகிலும் இரு நிலை ஆவிகளும் சுற்றுகின்றன.
3.அவ்வாவிகளின் செயல்களினால் நடக்கின்றன பெரும் விபத்துகளும் கொலைகளும் தற்கொலைகளும் எல்லாமே.
நல்ல நிலையில் உள்ள ஆவி… தான் பிரிந்து சென்ற குடும்பத்தின் பற்றை எல்லாம் மறந்திடாமல் அந்நிலையில் இருந்து கொண்டே நடத்திவிடும் குடும்ப நிலைகளை எல்லாம்.
பிறந்தவுடன் இறக்கின்றான்… இறந்தவுடன் பிறக்கின்றான்… என்றால் சில ஆவிகளின் நிலை மட்டும்தான் இந்நிலை.
சில ஆவிகள் உடலை விட்டுப் பிரிந்தும் எங்கும் செல்வதில்லை. அக்குடும்பத்தில் உள்ள பற்றையும் பாசத்தையும் ஒரு நிலை நிறுத்தித் தன் செயலில் நிறைவு கண்ட பிறகே மறு ஜென்மம் எடுக்கிறது.
சில ஆவிகள் உடலில் இருந்து பிரியும் பொழுது தனக்குண்டான ஆசைகளையும்… தான் வாழ்ந்த காலத்தில் அடைய முடியாத நிலையில் விட்டுச் சென்ற ஆசைகளையும் அடைவதற்காக… அவ்வாவி எந்த இடத்தில் அதை எல்லாம் அடைய முடியுமோ அந்நிலைக்குச் சென்று பிறக்கின்றது.
சில ஆவிகள் நிலை தான் பெரும் மோசக்கார ஆவிகளாக நிலைத்து நிற்கின்றது. அவ்வாவிகள் எல்லாம் கொலையாகவோ தற்கொலையாகவோ… இவ்விரண்டில் வரும் ஆவிகள் தான் மறு ஜென்மம் எடுக்காமல் அழிகின்றன அழிக்கின்றன.
1.ஆண்டவனின் தன்மையையே அழிக்கப் பார்க்கின்றன
2.அதனால் தான் ஆவியின் நிலையில் நடக்கின்றது பல வீடுகளில் நன்மை தீமை எல்லாமே…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.
அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.
இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.
எப்படி…?
ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்து விடுகின்றோம்.
வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!
ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.
அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.
அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.
தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!
ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!


நட்சத்திரங்களுக்குண்டான “ஜொலிப்பு”
வானவியல் இயக்கத்தின் அடிப்படையில் நமது சூரிய குடும்பத்திற்குப் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடியதை எல்லாம் 27 நட்சத்திரங்கள் கவர்கிறது.
அதைக் கவர்வதற்காகப் பால்வெளி மண்டலமாக அமைத்து நூலாம்படை போல வலையை விரித்து விடுகின்றது.
1.பிற மண்டலங்களின் உருவான அணுக்கள் இதிலே பட்டபின்
2.அதனுடைய உணர்வைத் தனக்குள் எடுக்கும் பொழுது ஒளியின் மின்கதிர்களாக மாறுகின்றது
3.அதனால் தான் நட்சத்திரங்களுக்கு அவ்வளவு ஜொலிப்பு…!
அணு விசைகள் (அணு ஆயுதங்கள்) வெடித்த பின் அதனுடைய ஓளிக் கதிர்கள் நம் கண்ணை எப்படிப் பறிக்கின்றதோ… ஊடுருவிப் பாய்கின்றதோ… அதே போல் நட்சத்திரங்களிலிருந்து வரும் மின்னல்… அதாவது
1.ஒரு பொருளுடன் ஒரு பொருள் நட்சத்திரங்களின் அணுக்கள் (ஒன்றுடன் ஒன்று) மோதப்படும்போது
2.பளீர்… என்று மின்னலாக மிகக் கடுமையாக ஊடுருவிப் பாய்கின்றது.
அந்த மின்னலின் கதிரியக்கங்கள் புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமியின் நடு மையத்திற்கே வேகமாக ஊடுருவிச் செல்கின்றது. பூமியைப் பார்த்தால் கல் (பூமியின் நிலப்பகுதி) மூடி இருப்பது போன்று இருக்கும். ஆனால்
1.ஒவ்வொரு கல்லுக்குள்ளும் பாறைக்குள்ளும் அந்த நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் உண்டு
2.அதன் வழி பட்டபின் அதனுடைய தொடர் வரிசையில் நம் பூமியின் நடுவிட்டம் சென்றடைந்து
3.பூமியின் சுழற்சியில் தேங்கும் இடமான மையத்தில் தேங்கி விடுகின்றது.
இது அனைத்தும் சேமிக்கப்பட்டு கொதிகலனாக மாறி வெளியே இருப்பது அனைத்தையும் கூழாகக் கரைத்து விடுகின்றது. அதிகமான அமிலங்களாக மாறி விட்டால் அப்போது பூமியிலே நில நடுக்கம் தோன்றும். நிலங்கள் அப்படியே கீழே சரிந்து உள்ளே போவதை நாம் பார்க்கலாம்
நட்சத்திரங்கள் இது போன்று வெளிப்படுத்தும் கதிரியக்கப் பொறிகள் நம் பூமிக்குள் ஊடுருவி பூமியின் ஈர்ப்புக்குள்ளே சென்று விட்டால் சிறுகச் சிறுகச் சேமிக்கப்பட்டுத் தன் அருகில் உள்ள அனைத்தையும் கரைக்கப்படும் பொழுது மேல் பாகம் அப்படியே அமிழ்ந்து விடும் (பூகம்பம்).
எந்தப் பகுதியில் இதனுடைய அமிலங்களாக உருகப்படுகின்றதோ மேல் பாகம் எடை தாங்காது அப்படியே கீழே இறங்கும்.
1.விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் கண்டு கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல
2.எப்பொழுது எதைச் செய்யும்…? எப்படி ஆகும் என்று…!
இதைப் போன்ற எம்முடைய (ஞானகுரு) உபதேசங்கள் சில நேரங்களில் மிகவும் நுட்பமாக வெளி வரும். மற்றவர்கள் அதைத் தவறான வழிகளில் எடுத்துச் செல்வதும் உண்டு.
அத்தகையவர் கைகளில் சிக்கக் கூடாது என்பதற்காகத் தான் சில நேரங்களில் அதிவேகமாக யாம் சொல்வது. ஆனால் அதே சமயத்தில்
1.உணர்வின் ஈர்ப்புடன் பதிவு செய்ய வேண்டும்…
2/நல்ல வழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பவர்களுக்கு உரமாக ஏற்றி
3.மீண்டும் நினைவு கொள்ளும் போது அந்த மெய் வழியினைப் பெறும் தகுதியும் அவர்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.
இதிலே எத்தனையோ வழிகள் உண்டு…!
தீமையை விளைவிப்போர் நன்மையைத் தீமையாக மாற்றி விடுவார்கள்… அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அதிலே சிக்கிவிடக் கூடாது.
யார் உண்மையிலேயே இந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றர்களோ அவர்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான் ஒவ்வொரு நிலைகள் உபதேசிக்கப்பட்டு
1.சில உண்மைகளை ஆழமாக உங்களுக்குள் பதிவு செய்வதும்
2.மெய் உணர்வின் உணர்வுகளை உங்களுக்குள் சில நேரங்களில் சிறிது வேகமாகப் பேசுவது உண்டு.
சாமி இலேசாகப் பேசிக் கொண்டிருந்தார் திடீரென்று இப்போது வேகமாகப் பேசுகிறார் என்று நீங்கள் எண்ண வேண்டியதில்லை.
உங்கள் ஈர்ப்புக்குள்… உங்கள் உணர்வின் குணங்களுக்குள் அதைச் சீராக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் இப்படி எல்லாம் செய்வது.

மாய ரூபத்தைக் காண விரும்ப வேண்டாம்… அதைக் கண்டு ஏமாறவும் வேண்டாம்…!
இயேசுவே நம… புத்தா நம… முகமது நபியே நம… ஐயப்பனே நம…! என்னும் போதெல்லாம்…
1.உன் மனதை ஒருநிலைப்படுத்தும் போது
2.நீ சொன்ன நாமத்தில் உள்ள “சித்தர்களை” நீ காண முடியும்.
அவ்வழியில் வந்தவர்கள் தான் போக மாமகரிஷியும் அகஸ்திய மாமகரிஷியும் கொங்கணவ மாமகரிஷியும். அதே சமயத்தில் உன் நினைவில் “உன் அறிவிற்கு எட்டாத பல ரிஷிகளும்” உருவமுடன் வருகின்றார்கள்.
உன் தியானத்தில் தெரியும் விநாயகரும் லட்சுமி சரஸ்வதி இராமர் கிருஷ்ணர் முருகர் எல்லாமே ஈஸ்வர சக்தியில் வரும் “மாய ரூபங்கள் தான்…”
1.முதலில் சொன்ன சித்தர்கள் எல்லாம் தன் உருவில் வந்து… தான் பெற்ற சக்தியினால் ஆசீர்வாதம் செய்வார்கள்.
2.பின் சொன்னவர்கள் எல்லாம் ஈஸ்வர சக்தியில் வரும் மாயாஜால ரூபங்கள் தான்.
ஈஸ்வரனை எண்ணும் பொழுது… ஈஸ்வரா…! முருகா…! விநாயகா…! என்று யாரை அழைத்தாலும் வருவது அச்சக்தியின் மாய ரூபமே…!
1.அவனுக்கு உள்ள பெயர் ஆயிரம்.
2.இந்த உலகமே அவனது…
3.எந்த ரூபமும் எந்தச் செயலும் செய்பவனும் அவனே.
4.உன்னுள் இருப்பவனும் அவனே என்னுள் இருப்பவனும் அவனே.
5.அவன் சக்தியைப் பெற்ற பயனால் வந்தவர்கள் தான் பல கோடிச் சித்தர்களும் ஞானிகளும் ரிஷிகளும்.
அவனின் சக்தியை உணராமல் தன்னிலையை மறந்து வெறும் வெறியாட்டங்களில் வாழ்ந்தவர்கள் எல்லோரின் நிலையும் வெறியுடனே… அத்தகைய அணுவின் தன்மையாக இவ்வுலகைச் சுற்றிக் கொண்டுள்ளது.
இப்பூவுலகில் பிறந்த நீங்கள் அவரவர்களுடைய பூர்வ புண்ணிய பலனை வைத்து… அச்சக்தியின் அருளைப் பெற்று நல்வழிக்குச் சென்றால்… போகனையும் கொங்கணவனையும் அகஸ்தியனையும் மிஞ்சலாம்.
ஆனால் இப்பூமியில் பிறந்து… அவனுடைய சக்தியை உணராமல் தன் வழியில் தன் சுகத்தை நாடி; உடல் சுகத்தை நாடி; பல அற்ப ஆசைகளில் தன் மனதைச் சிதறடித்து; பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் இருப்பவனை எல்லாம்…
1.இரண்டாம் நிலையில் சொன்ன இவ்வுலகைச் சுற்றியுள்ள தீய அணுக்கள் வெறியுடன் உள்ள அணுக்கள்
2.தன் விரோதத்தை முன் ஜென்ம விரோதத்தை எந்த நிலையிலும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று இருப்பது.
மறு ஜென்மம் எடுத்தாலும்… பிறந்து வளர்ந்து நினைத்ததை முடிக்க வேண்டும் என்பதனால் மறு ஜென்மம் எடுக்கும் முதலிலேயே… அவ்வணுவான ஆவி “இச்சஞ்சலமான புத்தி உள்ளவனின் உடலில்” அண்டிக் கொள்கின்றது.
அதன் விரோதத்தைத் தன் கோபத்தை எந்நிலையிலும் பழிபாவத்தைத் தீர்த்துக் கொண்டுதான் மறு ஜென்மம் எடுக்கிறது (அந்தக் கெட்ட ஆவி).
அதனால் தான் மனிதர்களை
1.நல் நிலையில் இருங்கள்… தெய்வப் பற்றுடன் இருங்கள் தேவனை நம்புங்கள் என்றெல்லாம்
2.அன்றுள்ள சித்தர்கள் பல கோடிக் கோவில்களையும் பல தெய்வங்களையும் தானாகவே கற்பனை செய்து
3.முருகனையும் விநாயகரையும் லட்சுமி சரஸ்வதி என்று பல நாமங்கள் உள்ள தெய்வத்தின் சிலைகளை எல்லாம் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள்.
4.ஆகவே மனிதனின் நிலையை ஒருநிலைப்படுத்தத்தான் கோவில்கள் எல்லாம்.
இவர்கள் நினைத்துக் கொண்டார்கள் முருகனும் விநாயகனும் பிறந்தார்கள். முருகனுக்கு மனைவிமார்கள் குடும்பமெல்லாம் மனிதர்களால் சொன்ன கதைதான்… மனிதர்களுக்குச் சொன்ன கதைகள் தான் இவைகள் எல்லாம்.
நல்வழியில் புகட்டிய எல்லாவற்றையும் நாசமாக்கி விட்டார்கள் பெரும் நாசக்காரர்கள்.
கடவுள் என்றாலே வெறுக்கும் தன்மையில் அவரவர்களின் பிழைப்பிற்காகவும் பொழுது போக்கிற்காகவும் “கடவுளை ஒரு கருவியாக்கி… விளையாட்டுப் பொம்மையாக்கி விட்டார்கள்…!”
முருகன் படம் எழுதுபவனுக்குக் காசு… படத்தைத் தீட்டுபவனுக்கும் காசு… பட்த்தை விற்பவனுக்கும் காசு… முருகனைப் பற்றிய பாடலைப் பல கோணத்தில் திரித்துத் திரித்து எழுதுபவனுக்கும் காசு… அதை விற்பவனுக்கும் காசு.
ஆனால் முருகனின் நிலையை ஒருநிலைப்படுத்துபவன் எவனும் இல்லை.
1.முருகனையும் தெய்வத்தையும் அவ்ஈஸ்வர சக்தியையும் பிழைக்கும் வழிக்குத் தான் ஒவ்வொருவனும் அழைக்கின்றான்.
2.கோவிலுக்குச் செல்பவன் எல்லாம் தன் குறையெல்லாம் அத்தெய்வம் போக்கித் தனக்கு அருள வேண்டும் பெரும் செல்வத்தைத் தர வேண்டும்
3.எந்தச் செல்வத்தை…? பொருட்செல்வத்தினை நாடித்தான் செல்கின்றான் தேவனையும் நாடி.
எவனப்பா வருகின்றான் தன்னிலை உணர…?
தன் நிலை உணர வேண்டும் என்றால் என்ன…? என்பதே இந்த மானிடர்களுக்குப் புரியாமல் இருக்கும் பொழுதே இவர்களுக்கு எப்படி வந்திடும் தியான நிலை…!
அத் தெய்வமான ஈஸ்வர சக்தியின் நிலையினைக் கேட்டவர்கள் கேட்டு நல்லாசி பெற்றிடட்டும்.
ஆவி நிலையைப் பற்றிச் சிறு அளவு உங்களுக்குள் புகுத்தி உள்ளேன். நீ வணங்கும் உன் குலதெய்வம் என்பது யாரப்பா…? சௌண்டம்மன் அங்காளம்மன் காளியம்மன் எல்லோரும் யாரப்பா…?
மாரியம்மன் என்பவளும் அம்மன் தான். அந்த அம்மன்கள் எல்லாம் யாரப்பா…? இந்நிலை உனக்கு புரிந்திட்டதா…? இவ் அம்மன்கள் நிலை எல்லாம் பெரும் தெய்வீக நிலையில் உள்ள ஆக்ரோஷமாக உள்ள ஆண்டவனின் சக்தியைப் பெற்ற பெரும் ஆவிகள் தான்.
அவ்வாவியின் நிலையிலிருந்தே சக்தியின் ரூபத்தில் அருளைப் பெற்று நீ நினைக்கும் நேரத்தில் உன் நினைப்பினுள்ளே வந்து ஆசீர்வாதம் தருகின்றார்கள்.
ஆனால் அம்மன்களின் சக்தி எல்லாம் பெரும் ஆக்ரோஷமான நிலையில் உள்ளது தான். அதனால்தான் இவ்வம்மன்களின் ஆவிகள் சிறு வேண்டுதலைக் கூட நாம் அளிக்கா விட்டால்… தன் நிலையில் வந்து ஆவி நிலையில் வந்து எப்படியும் உணர்த்திப் பிடுங்கிக் கொள்ளும்… செய்யாதவர்களைப் பழி தீர்த்துக் கொள்ளும்.
அதனால் தான் பெரும் ஆக்ரோஷ நிலையிலுள்ள சக்திகள் என்று சொன்னேன். ஈஸ்வர சக்தியை பெற்ற இவ்வம்மன்களுக்கே பார்த்தாயா ஆக்ரோஷத்தை.
1.பெரும் சாந்த நிலை எய்திவிட்டால் இன்றுள்ள போகனின் நிலை… அது இவ் உலகை ஆளும் ஈஸ்வரனுக்கே ஆனந்தமூட்டும் நிலை.
2.அந்நிலை பெற்ற போகனை முருகா என்று அழைத்திட்டால் எந்நிலையிலும் அருளுடன் அன்புடன் அருள் புரிகின்றான்.
3.அவனின் நிலையை எண்ணிவிட்டால் பெரும் ஆனந்தமும் பெரும் செல்வமும் கிடைக்குமப்பா…!
(என் நிலையே எனக்குத் தெரிவதில்லை – ஈஸ்வரபட்டர்) இந்நிலையில் உன் நெஞ்சமெல்லாம் பூரிக்கின்ற தன்மையைப் பார்த்தாயா.
1.நீ உணர்ந்திட்டாய் இந்நிலையில் உள்ள உன் நிலையை…
2.இன்று உனக்கு உள்ள நிலை… சுவாச நிலை… பெரும் பொக்கிஷமான நிலை.
3.அவன் அருளைப் பெற்றிட்டால் எந்நிலையும் கைகூடும்.
4.அவன் அளிக்கின்றான் இப்பொழுது உன் நிலையை எண்ணிப் பெரும் சந்தோஷமும் பூரிப்பும் கொண்டு…!
இந்நிலையில் அவனை (போகரை) எண்ணி நீ தியானத்தில் இருந்திடப்பா.
அவன் வருவான்…! உன் நினைவிலும்; உணர்விலும்; உடலிலும்; அணு அணுவாக; ஆனந்தமயமாக உன்னை வந்து அண்டிடுவான்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையாக வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.
இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… இன்றைய உலகில் விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் அதிகமாக நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அது நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.
பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.
1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.
ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?
பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.
அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.
இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.


இயற்கையைப் பயன்படுத்துபவன் மனிதன்… ஆனால் இயற்கையை வளப்படுத்துபவன் சித்தன்
உணர்வலையின் ஜீவ பிம்ப ஞானத்தால் தான் “நுண்ணிய காந்த ஈர்ப்பலையை…” நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.
1.இந்த மனித உடலுக்குள் உள்ள பன்னிரெண்டு வகை குண அமிலத்தையும் இவ்வுணர்வலையின் செயலையும்
2.இவ்வெண்ண சுவாசத்தால் “ஒரு நிலைப்படுத்தும்” பக்குவ மேம்பாட்டினால்
3.ஞான ஈர்ப்பின் நுண்ணிய காந்த அலையின் வளர்ச்சி ஒளியை
4.இவ்வுடல் முழுமைக்கும் ஈர்க்கவல்ல சக்தி முறையை வழிப்படுத்தும் செயல் உணர்ந்து
4.நம் ஜெப நிலை இருக்கும் பக்குவம் தான் “ஓ…ம் என்ற நாதமுடன் ஈர்த்து வழி பெறுங்கள்…!” என்னும் யான் சொல்லி வரும் நிலை.
இந்த உடலுக்கு உணர்வும்… உணர்வுடன் கூடிய குண அமிலங்களும்… குண அமிலங்களுடன் வழி நடத்தும் எண்ண சுவாசமும்… இருந்தால் தான் ஜீவ சக்தியான நுண்ணிய காந்த அலையின் சக்தியை நாம் எடுக்க முடியும்.
நம் உயிராத்மாவிற்கு சேமிக்கும் சொத்து எது…? என்று பல தடவை வினாக்களை ஏற்கனவே எழுப்பியுள்ளேன்.
உயிராத்மாவிற்குத் தேவையான சொத்தைச் சேமிக்க வேண்டும் என்றால்… பலவான எண்ணத்தில் உணர்வின் உணர்ச்சி அலையின் வாழும் மனிதனின் ஞானம் எத்தகையதைப் போல் இருந்திடல் வேண்டும்…?
இன்றும் பல காலமாகவும் பல மேதைகள் புதிய புதிய செயல் முறைகளைக் கண்டுபிடித்து விஞ்ஞானச் செயலும் கல்வி ஞானமும் இன்னும் சிலர் கவிதை ஞானமும் பெற்றுத்தான் வாழ்கின்றனர்.
இந்த ஞானம் எத்தகையதைப் போன்றது..?
சித்தனின் ஞானத்திற்கும் இந்த ஞானத்திற்கும் மாறுபாடு என்ன…? சித்தனின் வளர்ச்சியும் ஞானம் தான்…! இவையும் ஞானம் தான்…!
சூரியனின் ஒளி சக்தியினால் இந்தப் பூமியின் வளர்ச்சி பூமி எடுத்து வளர்ந்து பலவாக உள்ளது. வளர்ந்துள்ள இயற்கையில் இருந்து அதிலுள்ள சத்தான நமக்குகந்தது எது..? என்று அறிந்து அதன் பெருக்கத்தை உற்பத்தியாக்கி அதன் சுழற்சி செயலில் இருந்தே மேன்மேலும் புதிய புதிய படைப்புகளை ஒன்றுடன் ஒன்று கலந்து அதன் பலனைப் பெறுவது போன்ற ஞானம் தான் விஞ்ஞானமும்.. இன்றைய கல்வி ஞானமும்… கவி ஞானமும்…! எல்லாமே.
ஆனால் சித்தனின் ஞானம் எப்படிப்பட்டது…?
இயற்கையில் பலவான நிலையில் இப்பலவற்றையும் கண்டு இவற்றிற்கு மேல் இவற்றையே வாழ வைக்கும் நிலை எவை..? என்பதனை உணர்ந்து இந்நிலையின் வளர்ச்சியின் “மூலம் அறிந்திட…” இந்த மூலத்துடன் சென்றடையும் நிலையில் கலந்தால் தான் இன்றைய படைப்பைப் போன்று பலவான புதிய படைப்புகளை இயற்கையில் படைக்கவல்ல ஆற்றலுக்கு வழி பெறச் செல்லுகின்றான் சித்தன்.
1.இயற்கையில் விஞ்ஞானம் காணுகின்றான் மனிதன்.
2.அந்த இயற்கையையே வளரச் செய்கின்றான் சித்தன்…!
காற்றிலும் நீரிலும் ஒளியிலும் உள்ள அமிலங்களைக் கொண்டு விஞ்ஞானச் சாதனையான அணு குண்டையும் விஷ வாயுக் குண்டையும் பலவாகப் படைக்கும் இன்றைய மனிதன்
1.நீரையும் காற்றையும் ஒளியையும் படைக்க முடியுமா…?
2.இயற்கையில் விளைந்த நாணல் புல்லைக் காற்றும் நீரும் ஒளியும் இல்லாமல் விஞ்ஞானத்தால் படைக்க முடியுமா…?
ஆனால் காற்றையும் நீரையும் ஒளியையும் படைத்தவனும் மனிதனே.. சித்தனாகவும் ஆனான்.. சப்தரிஷியாகவும் ஆனான்… சகலத்தையும் படைக்கும் ஆற்றலின் ஒளி காந்த சக்தியாகவும் ஆனான்…!
அத்தகைய ஞானத்தின் படைப்பு தானப்பா நீயும் நானும்…!
அந்த ஞானத்தையே பெறவல்ல சக்திக்கு ஜீவத் துடிப்புக் கொண்ட எண்ண சுவாசம் இருந்தால் தான் “எந்த ஞானமும் பெற முடியும்…!”

ஒரு அணு என்று இருந்தால் உணர்ச்சியைத் தான் ஊட்டும்… பல அணுக்களாக விளைந்தால் உடலையே அது இயக்கிவிடும்
ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.
நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.
உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.
ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையபபடும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.
ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.
ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.
இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று காட்டுகின்றார்கள்.
நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.
எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.
ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.
ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது
இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை
யார்..?
சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.
உடல் சிவம்… சுவாசிப்பது நஸ்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
பாடலை உச்சரிக்கும் தன்மையில் உன் சுவாச நிலை புரிகின்றதா…? பகர்ந்திட்டேன் பகர்ந்திட்டேன் பல நாட்களாக…!
சுவாச நிலை என்பது “ஓம் ஈஸ்வராய நம… ஓம் ஈஸ்வராய நம… என்று உன் மூச்சை வெளி விடுவது அல்ல…”
மூச்சை உள்ளிழுத்து வெளிவிடும் பொழுது
1.உன் கலக்கத்தை எல்லாம் அடக்கி விட்டு அந்நிலையை மறந்து விட்டு
2.ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா… என்று
3.உன் மூச்சை உள்ள இழுக்கவும் வெளிவிடவும் பழகவும்.
சோர்வுடன் விட்ட மூச்செல்லாம் சோர்வுடனே தான்…! பகர்ந்துள்ளேன் பகர்ந்துள்ளேன் பல நாட்கள் ஜெப நிலையில் இருந்திடுங்கள் என்று.
எண்ணம் செயல் இன்பம் துன்பம் சோர்வு அனைத்தும் கலந்தது தான் மனிதன்.
1.மனிதனின் வாழ்க்கையில் இவை அனைத்தும் இல்லாவிட்டால்
2.சுவையும் இல்லை வளமுள்ள வாழ்க்கையுமில்லை.
சோர்வும் வருவதால் தான் மனக்கவலை தன்னை விட்டு அகல்வதில்லை மனதில் உள்ள சோர்வை அகற்றிடாமல் சோர்வின் நிலையிலேயே இருந்திட்டால்…
1.உன்னைச் சுற்றியுள்ள இவ்வுலகில் உள்ள சோர்வின் அணுக்களை எல்லாம்
2.உடலில் அணுவாக மாற்றிடச் செய்யும்.
நல்நிலையில் உள்ள பொழுது நல்ல நிலையில் உள்ளவனுக்கு சந்தோஷம் இன்பமும் “ஈஸ்வரனே” (உயிர்) தருவான். சோர்விற்கும் கலக்கத்திற்கும் எவர் ஒருவர் அடிமையாகின்றாரோ அவர் நிலையெல்லாம் துன்பத்துடனே…!
சோர்வும் கலக்கமும் வந்திட்ட பொழுது அந்நிலையையே எண்ணிடாமல்
1.அவன் (ஈசன்) எனக்குள் உள்ளான் என்ற எண்ணம் மனதினுள்ளே வந்து
2.சோர்வின் நிலையை வளர்த்திடாமல் அவனிடம் அதை விட்டு விடும் தன்மை வேண்டும்.
எண்ணும் சோர்வமும் கலக்கமும் மனிதன் நிலையினையே மாற்றிவிடும்… உடல் நிலையையும் மாற்றிவிடும்… மன நிலையையும் மாற்றிவிடும். மன நிலை மாறிவிட்டால் உன்னை அண்டிக் கொள்ளும்… அந்த அணுவெல்லாம்.
அணுவின் தன்மையிலே நல்ல அணுவும் உள்ளதுவே தீயணுவும் உள்ளதுவே. சோர்வின் தன்மையிலே தீய அணுவை அணுகிடுவாய்… தீயணுவின் வேலையெல்லாம் உடல் நிலையையே மாற்றிவிடும். கோபம் சலிப்பு வருவதெல்லாம் இந்நிலையில் தான்.
1.எந்நிலை வந்தாலும் ஈஸ்வரன் (உயிரிடம் – என்னிடம்) என்பவனிடம் விட்டுவிடுங்கள்.
2.அவன் பார்த்துக் கொள்வான்.
நம்மை ஒருவர் துவேஷிக்கும் பொழுதும் நம்மைப் பார்த்து ஒருவர் பொறாமையாக எண்ணும் எண்ணமும்…
1.சோர்வின் நிலையில் உள்ளவனுக்கு உடனே வந்து தாக்கும்
2.காரணம் எல்லா நிலையிலும் எண்ண நிலைதான் மிகவும் துரிதமானது.
3.அவர்கள் எண்ணும் எண்ணம் செல்லும் வேகத்தில் உன் உடலை வந்து தாக்கிவிடும்.
4.உனக்குள் சோர்வும் கலக்கமும் இருக்கும் பொழுது உன் எதிரியின் எண்ணம் உடனே வந்து உன்னைத் தாக்கும்.
இந்நிலையில் வருவது தான் உடல் நிலையில் வரும் மாற்றங்களும் வியாதிகளும் எல்லாமே.
அதற்குத் தான் பிறரின் கண் படும்… சுற்றிப்போடு…! என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பாய்.
அந்நிலை வருவதெல்லாம் உன் சோர்வினால் தான்.
1.சோர்வுடையவனுக்கு எல்லாத் தீய குணங்களும்
2.எண்ணும் எண்ணத்தை விடத் துரிதமாக வந்தடையும்.
பெரும் காற்றும் மழையும் மின்சாரமும் செயற்கை மின்சாரங்கள் எல்லாமே செல்லும் வேகத்தை விட “எண்ணத்தின் வேகம்” உலகிலேயே உயர்ந்த வேகம்…!
எண்ணத்தின் வேகத்தைப் புரிந்திட்டாயா நீ…!
1.இருக்கும் நிலையில் இருந்து நீ செய்யும் தியானத்தில் உன் எண்ணம் எம் மண்டலத்தைச் சுற்றியும் பாயும்.
2.மனிதனின் சக்தி உலக சக்திக்கெல்லாம் அப்பாற்பட்ட பெரிய சக்தி
3.அச்சக்தியின் தன்மையை யாரப்பா உணர்ந்துள்ளார்கள்…?
4.எண்ணத்தின் தன்மையை எண்ணிப்பார்…! உன் உணர்வை எண்ணிப்பார்.
5.நாட்டமெல்லாம் அவன் அருள்வான் நலிங்கிடாதே… எந்நிலை வந்தாலும் மாற்றிடும் தன்மை வேண்டும்.
சோர்வு சோகம், கோபம் குரோதம் நலிவு வருவதெல்லாம் மனிதனுக்குச் சரிபாதி உள்ளது அதை எல்லாம் வென்று… அந்நிலைக்கு நம் மனதை இடம் கொடாது
1.நம் நிலையை ஒருநிலைப்படுத்தி
2.மின்னல் வந்தாலும்… பூகம்பம் வந்தாலும்… நம் நிலையை மாற்றிடாமல் இருந்திடுவதே இத்தியானத்தின் முறை.
தியானத்தில் அமர்ந்து தான் இந்நிலை வர வேண்டும் என்பதல்ல…!
உன் உடலில் உள்ள கோடான கோடி அணுக்களையும் உன்னைச் சுற்றி உள்ள பல கோடி அணுக்களையும் ஒருநிலைப்படுத்தத்தான் “இந்தத் தியான முறை எல்லாம்…!”
மனிதனின் நிலையில் ஒரு பாதி இது என்று சொன்னேன். மறு பாதி என்ன என்றால் ஆசை பேராசை பற்று உல்லாசம் நிறைந்துள்ளது.
1.ஆசையை வளர்த்து விடுகின்றான்
2.பாசத்தைப் பகிர்ந்து விடுகின்றான்.
3.உள்ள நிலையை மறந்து விட்டுப் பெரும் உல்லாசத்தை நாடி விடுகின்றான்.
அத்தகைய நிலையில் மனம் எடுக்கும் சுவாசத்தில் நன்மை தீமை ஒன்றுமே தெரிவதில்லை.
தன் நிலையில் உள்ள ஆசையை வளர்த்திட மென்மேலும் ஆசைப்பட்டு அந்த ஆசை அணுவுக்கே அடிமையாகின்றான். பாசம் என்பதும் இப்படியே…! பெரும் பாசத்திற்கு அடிமையாகி விடுகின்றான்.
உல்லாசத்திற்கு அடிமையாகின்றான் இந்நிலையில் உள்ளவனுக்கு எந்நிநிலையும் அவன் கண்ணிற்குத் தெரியாது.
1.இந்த நிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு
2.தன் நிலையில் எது வந்தாலும் அடக்கி ஒருநிலைப்படுத்துபவனுக்கே
3.”தியான நிலை” என்பது கூடி வரும்.
தர்மம் நியாயம் என்பதெல்லாம் உன் அளவில் கஷ்டப்பட்டு உன்னை நீ வருத்தி உன் வழியில் பொருள் திரட்டிப் பிறருக்கு அளிப்பது தான் தானம் அல்ல.
எந்த நிலையிலும் நம் நிலையில் ஒருவரின் பொருளுக்கோ ஒருவரின் துவேஷத்திற்கோ ஆளாகாமல் ஒருவரை ஏமாற்றியோ பிறரின் சொத்தை அபகரிக்கக் குறுக்கு வழியில் சென்றிட்டோ… தன்னிலையை மறந்து பிறருக்கு உபதேசம் செய்வதோ… இதுவல்ல தர்மம்.
தர்மம் நியாயம் என்கிறோம்… தர்மம் என்பது தன் வழியில் உள்ள நியாயத்தை என்றும் கடைப்பிடித்து மற்றவரின் கஷ்டத்தைப் பார்த்து உன் உள்ளத்தால் வார்த்தையால் அன்பைப் பொழியும் பொழுது நீ தரும் பொருளினாலோ நீ இடும் பிச்சையினாலோ வருவதல்ல தர்மம்.
ஒருவரின் கஷ்டத்தைப் பார்த்த பின்
1.உள்ள நிலையில் உன்னால் முடிந்த அளவு அவருக்கு அன்பையும் உன் ஆறுதலையும் பகிர்ந்து
2.அக்கஷ்டப்படும் மனிதருக்கு “உன் அருளை” எப்படிப் பாய்ச்சுகின்றாயோ
3.அதிலே உள்ளதப்பா தர்மமும் நியாயமும்.
அவன் நிலையைப் பார்த்து பழித்துப் பேசிடவோ துவேஷித்திடவோ வேண்டாம். பொருளினால் மற்ற உதவிகள் அளிப்பதனால் மட்டும் வருவதில்லை தர்மமும் நியாயமும்…! (இது முக்கியம்)
உன் ஜென்ம நிலையை உணர்ந்து கொண்டால் எல்லாமே விளங்கிவிடும்… உன் வழிக்கு எல்லாமே.
1.தியான வழியில் அமர்ந்தால் உன் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம்
2.நான் பாடத்தில் சொன்ன எல்லா அணுக்கள் எல்லாமே “உன்னை வந்து தாக்கப் பார்க்கும்.
உன் எண்ணத்தின் வழியிலேயே அந்நிலையில் நீ செய்யும் தியானம் எல்லாம் அவன் (ஈஸ்வரன்) நிலையில் ஐக்கியப்படுத்து
1.உன் மனதைப் பெரும் நிதானப்படுத்திச் சாந்தமுடன்
2.எந்நிலையும் உன்னைத் தாக்கிடாமல் எந்த அணுவும் உன்னை அடைந்திடாமல்
3.உன் மனதை ஒருநிலைப்படுத்தி நீ விட்டிடும் மூச்சிலே தான் தியானமே கை கூடும்.
அந்நிலையில்… தியான நிலை கைகூடும் அந்த நிலையில்
1.அவன் பாதத்தை வணங்கிடப்பா.
2.அவர் பாதம் என்பதெல்லாம் உன் சக்திக்குள்ளே தான் உள்ளதப்பா.
3.அந்நிலையில் உள்ளவனுக்கு எண்ணும் எண்ணமெல்லாம் அவனருள்வான் உன் வழிக்கே.
உங்களுக்கு எண்ணத்தின் வேகத்தைச் சொன்னேன் அந்நிலையில் தியான நிலையில் உள்ளவனின் எண்ணத்தின் வேகம் உலகை மட்டுமல்ல உலகைச் சுற்றியுள்ள பல கோடி… பல கோடி… கோடி மண்டலங்களையும் அறிந்திடலாம்.
எந்நிலையில் உள்ள நிலையும் உன் தியான நிலையில் எண்ணத்திலேயே கண்டிடலாம்… பல கோடி கண்டிடலாம். தியான நிலையைப் பகிர்ந்திட்டவன் எல்லாம்… இந்நிலையை யாரும் பகிர்ந்திடவில்லை.
“தியானம் தியானம்” என்கிறார்கள். எந்த நிலைக்குத் தியானம் என்கிறார்கள்…?
தியான நிலையில் இருந்து உலக நிலையையும் வேறு பல நிலைகளையும் அறிந்து விட்டு என்ன பயன்…? என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் சுழல்கின்றது.
1.தியான நிலைக்கு வருவதெல்லாம் அவன் அவன் செய்த பூர்வ புண்ணியப் பலனே.
2.பழிப்பவர்கள் பழிக்கட்டும்… வருபவர்கள் வந்திடட்டும் தியான நிலைக்கே.
3.முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன் கல்கியின் நிலையை.
4.அந்நிலைக்கு வருபவனுக்குத் தான் இந்தத் தியான நிலையும் கைகூடுமப்பா…!
தியான நிலையைப் புரிந்திட்டாயா உன் பாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வாயா…!
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திருமகன்(ள்) பணிகின்றேன்
திருவருள் தந்திடுவீர் தாயே தந்தையே
திரு குருவின் அருள் பெறவே
திருமானின் அருள் பெறவே
திருவருள் தந்திடுங்கள் தாயே தந்தையே.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).
அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்…! என்றார் குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்… சாதாரணமாக நடக்கின்றார்…!
அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
அங்கே போனவுடன்… “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா…” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்… வந்து தூக்குடா…! என்கிறார்.
இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது…? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.
அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா… என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில்… பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)
நான் எப்படி சாமி வர முடியும்…? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு… வேஷ்டி எல்லாம்… என்னைக் காப்பாற்றாது…! என்கிறார் குருநாதர்.
சாமி… வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..
குருநாதர் “என்னை காப்பாற்றுடா…” என்கிறார்.
சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.
இது நடந்த நிகழ்ச்சி.
அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்… இறங்கு சிங்… என்று நீ பார்த்திருக்கிறாயாடா…?” என்றார்.
1.சாமி… இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு… உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.
ஏன்டா நான் சொல்கிறேன்… நீ எதிர்த்துப் பேசுகின்றாயா…? என்றார், குருநாதர்.
பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.
அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா…! என்கிறார்.
எங்கே சாமி பார்ப்பது…? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது…! என்றேன் நான்.
நீ உலகத்தைப் பாருடா என்றால்… என்னடா நீ அடங்கிவிடும்…! என்று சொல்கின்றாய்…? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.
அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.
நீ இதைப் பார்… உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்…! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.
சாமி… இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்…! என்றேன்.
அதற்குப்பின்…
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
3.ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.
அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்…?
1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு…கிறு…கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.
நீ பல உண்மைகளை அறிவாய்… பல நிலைகளைப் பெறுவாய்…! என்று இந்த இடத்தில் வைத்து… மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.
இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்…? என்று காட்டுகின்றார்.
யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.
இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து… அதை எல்லாம் சொல்வதற்கில்லை…! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.
நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது…? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.
நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது…? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்…!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.
பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்… இறங்கு சிங்… என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.
அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.
மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.
1.குருநாதர் ரசமணி செய்வார்… தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.
ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்தது இந்த ஐவர் மலையில் தான்.
ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்…?
என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.
அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது…?
1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.
ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.
ஆகவே… எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.
1.இந்த உலகம் எப்படி இருக்கிறது…? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்…? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.
அப்பொழுது அந்த நிலையில்…
1.எது எது உன்னைச் சந்திக்கும்…?
2.அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்…!
3.அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.
அப்பொழுது… இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களை அது கொல்லும்… மற்றவரையும் காக்க முடியாது.
இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர்.
நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது…? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.
இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.
நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால்
1.இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும்
2.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.தியானம்….!”
நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.
ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.
இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது…?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்…
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.
அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே…!
ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்…
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.


உங்கள் நல்ல அறிவைக் காக்கச் செய்யும் எம்முடைய அருள் உபதேசம்
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலேயும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற நினைவை நீங்கள் அடிக்கடி உடலுக்குள் செலுத்தினால் போதும்.
1.நீங்கள் அப்படி எண்ணும் பொழுதெல்லாம் அதை பெறச் செய்வதற்கும்
2.உங்கள் உடலுக்குள் ஊடுருவிச் சென்று அது சக்தி வாய்ந்ததாக மாறும்படியும் செய்கின்றோம்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உள்ளே சென்ற பின் உங்கள் நல்ல அறிவை மறைத்துக் கொண்டிருக்கும்… நஞ்சான இருள்களை நீக்கிவிடும்.
அதற்குத் தான் இதை இப்பொழுது யாம் உபதேசிப்பது. ஏனென்றால் இந்த உபதேசத்தின் உணர்வுகள் உங்கள் நல்ல அறிவைக் காக்கப் பயன்படும்.
பிறர் வேதனைப்படுவதை உற்றுப் பார்த்த பின் மீண்டும் மீண்டும் அந்த உணர்வுகள் எப்படித் தோன்றுகின்றதோ… தூண்டுகின்றதோ… நினைவு வருகின்றதோ… அதைப் போன்று தான்
1.உங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பச் சொல்வது
2.அப்படிச் சொன்னால்தான் அந்த உணர்ச்சிகள் தூண்டும்… உங்களுக்கு புரிய வரும்.
சந்தர்ப்பத்தில் வேதனையைப் பார்த்த பின் இருண்டு விடுகின்றது உங்களுடைய செயலாக்கங்கள் மாறுகின்றது. இது வளர்ந்து விட்டால் அந்த நல்ல அறிவின் செயல் முழுமையாக இழந்து விடுகின்றது.
அதை மாற்றுவதற்குத்தான்… மகரிஷிகளின் அருள் சக்தியையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியைம் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களை நுகரும்படி செய்து… உங்கள் கண்ணின் கருவிழிக்குள் பதிவு செய்து… இந்த உணர்வின் ஆற்றலை உங்கள் நல்லறிவினை… எதனையுமே அறிந்து தெளிவாக்கிடும் அந்த ஞானத்தின் நிலையைக் காத்திட இதை உபதேசிப்பது.
1.உங்களை அறியாமலேதான் இதைப் பதிவு செய்கின்றேன்
2.மீண்டும் நீங்கள் நினைவு கொண்டால் உங்களை அறியாமலே பல அற்புதங்கள் நடக்கும்
3.தீமைகளை நீக்கிடும் ஆற்றலும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
அதைப் பெறச் செய்வதற்குத் தான் எனது குருநாதர் காட்டிய வழியில் அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்து அதே உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து உங்களை அறியாது நல்லறிவை மறைத்துக் கொண்டிருக்கும் சிறு சிறு திரைகளை நீக்கும்படி செய்கிறோம்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நல்ல அறிவுக்குள் இணைக்கச் செய்யும் பொழுது ஒவ்வொரு நொடியிலும் உங்கள் நல்ல அறிவைத் தெளிவாக்கிக் கொண்டு வர முடியும்.
அப்படி நீங்கள் தெளிவாக்கிக் கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையில் அது முழுமை பெற்றால் சந்திரன் எப்படிப் பூரண பௌர்ணமியாகப் பிரகாசிக்கின்றதோ அதே போல உங்கள் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் “ஒளியின் சிகரமாக மாறுகின்றது…”
இந்த உடலை விட்டு எப்பொழுது சென்றாலும் உங்கள் உயிரான்மா பிறவி இல்லாப் பெரு நிலைகள் அடையும்.
இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே வரும் தீமைகளை அடக்கி… நம் எண்ணத்தால் தீமையற்ற செயல்கள் வராதபடி செயலாக்காதபடி நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.

புதிய உலகை நான்(ம்) படைப்பேன்(போம்)
“நானேதான் நான்…” என்னும் நிலை எல்லோருக்கும் வேண்டும். நான் என்னும் “அகந்தை” தான் வேண்டாம்.
நான் என்பதை அகற்றிடுங்கள்… நான் என்னும் சொல்லை விட்டுவிடுங்கள்…! என்று சொல்கின்றார்கள். ஆனால்
1.குழந்தையின் பருவத்திலேயே ஊட்டி விடுவதெல்லாம் “நான்” என்னும் சொல்லைத்தான்.
2.வளர்ந்த பிறகு “நான் என்பதை அகற்றிவிடு” என்று சொல்கின்றார்கள்.
ஆக… தன் நிலை உயர்ந்தால் தான் பிறரை உயரச் செய்ய முடியும்.
தன் நிலை என்னும் பொழுது நான் என்னும் நிலை தான் வரும்… நம் நிலை என்று எப்படி வரும்…? ஆகவே நான் என்பதை அகற்றிடுங்கள் என்பதன் பொருளைப் புரிந்து கொள்ளுங்கள்.
“நான்” என்பதையே புரியாமல் செய்வது தான் நான் என்பதெல்லாம்
குயவன் ஒரு மண் பானையைச் செய்துவிட்டு “நாம் செய்தோம்” என்று சொல்ல முடியுமா…? நான் தான் செய்தேன்…! என்று சொல்வான்.
தான் செய்யும் செயலுக்கு… செயல் என்பது தொழிலுக்கோ பிழைப்பிற்கோ உண்ணுவதற்கோ “அந்த நான்” வேண்டும். அந்நிலையில் நான் இருந்தால்தான் தன் நிலையையே பார்த்திட முடியும்.
1.நான்…! என்ற அகந்தை ஆணவம் பொறாமை பழிச்சொல்…
2.என்னைத் தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது என்னும் நிலையில் இருந்து கொண்டு பிறரைப் பழிக்கும் நிலை
3.அந்த நிலையில் உள்ள நான் தான் வேண்டாம் என்பது.
நான் என்பதற்கு நான் எதிரி அல்ல…! குழந்தை தன் படிப்பில் ஒரு ஓவியத்தை வரைகிறது. அதை யார் செய்தார்கள்…? என்றால் கேட்டால் “நான் செய்தேன்…” என்று சொல்லக் கேட்டால் அது எவ்வளவு பெருமை…?
அதில் உள்ள அழகு வளர்ந்த பின்னும் இருந்து விட்டால்… அந்த நான் இருந்தால்தான் உலகமே அழகுபடும். அந்த நானில் இருந்திடுங்கள்.
1.நான் செய்திடுவேன் நல்ல காரியத்தை
2.நான் செய்திடுவேன் நல் தியானத்தை
3.நான் தியானம் செய்து நல் அலைகளைப் பரப்பிடுவேன்
இந்த நானை அகற்றாதீர்கள்.
1.மனத்தில் நல் மனமும் உள்ளது தீய மனமும் உள்ளது
2.நானிலும் நல் நானும் உள்ளது தீய நானும் உள்ளது.
3.மனம் எல்லாம் ஒன்றுதான்… நானும் ஒன்று தான்…!
அதைப் பிரிக்கும் வழி தான் நமக்கு வேண்டும்.
ஒரு இயந்திரமோ சமயலோ எதுவாக இருந்தாலும் ஒருவர் செய்வதைப் பார்த்துவிட்டு அவன் செய்து விட்டான்… ஏன் நான் செய்ய முடியாதா…? என்ற நான் வேண்டும்.
மனிதனுக்கு எப்படி ஆசை வேண்டும் என்று சொன்னேனோ அது போலவே “நானும்” வேண்டும். நானுக்கு நான் எதிரி அல்ல…!
ஒரு நல் வழியை நிலைநாட்டிட… “நான் அதைச் சொல்கிறேன்” என்னும் சொல்லில் தவறில்லை.
1.தீய வழிக்குத் தான் நான் என்பதை அகற்றிட வேண்டும்.
2.நான் என்பது நான் என்ற அந்த அகந்தையை அகற்ற வேண்டும்.
ஒரு நிலையில் இருந்திடுங்கள் ஒற்றுமையுடன் இருந்திடுங்கள்.
இன்றைய உலக நிலையில் எல்லாம் ஒரு நிலையும் ஒற்றுமையையும் பறந்திட்டது… கால நிலையைக் கருத்துரைத்தேன்.
குறுகிய காலம் என்றேன் பார்த்தாயா பதட்ட நிலையை…! பரஞ்ஜோதி வடிவானவனே பார்க்கின்றான் இப்பாருலகில் உள்ள நிலை எல்லாம். பகர்வதற்கு என்ன உள்ளது…? இப்பாரின் நிலையை…!
ஆகர்ஷண சக்தி எல்லாம் அழன்று உள்ளது அழிவின் நிலையில்.
கால நிலை மறந்து விடாதே கால நிலையை மறந்து விடாதே காத்திடுவாய் கல்கியுடன் கலந்திடத் தான்…!
1.அழிவு நிலையில் எல்லாம் அழியும் போது நான் இருந்து என்ன பயன்…? என்ற எண்ணம் நமக்கு வேண்டாம்.
2.நம் உயிரின் ஆசைக்காக “நாம் மட்டும் வாழ வேண்டும்” என்ற எண்ணத்திற்காக இருக்கச் சொல்லவில்லை.
உலக நிலையே அழிந்து விட்டால் நாம் வாழ்ந்த நிலைக்கு என்ன பயன்…?
பிறந்த பயனைப் போற்றிடச் செய்யுங்கள் போற்றிடச் செய்யுங்கள் என்பது பிறர் போற்றுவதற்காக அல்ல. புதிய எண்ணம் புதிய செயல் அதைப்போல் புதிய உலகத்தையும் கண்டிடுங்கள்.
சித்திரம் தீட்டிடுவேன் சித்திரம் தீட்டிடுவேன்
சிந்தை உள்ள சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிவனின் சக்தியெல்லாம் சிந்தையில் வந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன்
சிவனாரின் ஆசி பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ சிவா என்னும் நாமத்தில் சிந்தை எல்லாம்
கலங்கிடாமல் இருந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவ பாக்கியம் பெற்றிடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் அருளைப் பகர்ந்திடவே சித்திரம் தீட்டிடுவேன்
சிவன் சித்திரம் தீட்டிடுவேன்
(சிவன் சக்தி நடனக்காட்சி)
சிவ நடனம் கண்டிடவே
சீற்றமெல்லாம் குறைந்திடவே
சிவ பாதம் பணிந்து நின்றே சித்திரம் தீட்டிடுவேன்
சிங்கார மழலையிலே
சிரிக்கும் சிரிப்பில் எல்லாமே
சிந்தையுள்ளே மகிழ்ந்திடவே
சித்திரம் தீட்டிடுவேன் சிவனின் சித்திரம் தீட்டிடுவேன்
சிறு சிறு பூவின் மணத்தில் எல்லாம்
சிந்தையில் மனதை ஏற்று
சிவாய நம ஓம் சிவாய நம ஓம்
சிவ சிவாய நம ஓம் சிவ சக்தி நம ஓம்
சிவனின் நாமத்தை ஓதிடவே சித்திரம் தீட்டிடுவேன்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.
நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது… குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது…? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.
பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.
ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புது விதமான நோயாக மாறுகின்றது.
மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.
ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.
அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,
பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.
இதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு இதை உபதேசிக்கின்றோம்… துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று அடிக்கடி ஞாபகப்படுத்திகின்றோம்.
ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்… மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.
அதாவது…
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
6.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.


தனக்குள் வந்த தீமைகள் அனைத்தையும் ஒடுக்கி ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் தான் “மகரிஷிகள்”
கோழி… விஷமான உணவுகளை உட்கொண்டாலும் அந்த விஷத்தினை ஒடுக்கித் தன் உடலின் தசைகளாக மாற்றித் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றது. மயில் போன்ற பெரும்பகுதியான பறவை இனங்களும் விஷத்தை ஜீரணிக்கக் கூடிய சக்தி பெற்றவைகள் தான்
இதைப் போன்று தான்
1.மனிதனின் வாழ்க்கையில் தனக்குள் வந்த கடும் தீமைகளை… அதனின் செயலாக்கங்களை ஒடுக்கி
2.தன் இணைப்பின் நிலையாகச் செயல்படுகின்றார்கள் மகரிஷிகள்.
அப்படிச் செயல்பட்டவர்கள் தான் தன் உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
அதற்குப் பின் வந்த மனிதர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கற்றைகளைச் சந்தர்ப்பத்தால் கவர்ந்து
2.தன் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் இணைக்கப்படும் பொழுது
3.உடல் பெறும் நிலைகளை மாற்றி விட்டு உயிருடன் ஒன்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி விண் சென்றார்கள்
அது தான் சப்தரிஷி மண்டலம் என்பது. ஏழாவது நிலை என்றால் சப்தரிஷிகள் என்பது.
ஆகவே நம்முடைய ஆறாவது அறிவால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைத் தனக்குள் செயல்படாதபடி தடுத்து… ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அடக்கி… அருள் உணர்வுகளைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் உடலை விட்டுச் சென்ற பின்…
1.எந்த மகரிஷியின் உணர்வை நாம் நுகர்ந்தோமோ அவரின் உணர்வுகள் நமக்குள் வலுப்பெற்று
2.துருவ மகரிஷி எப்படித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளாரோ
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்கு அது நம்மை அழைத்துச் சென்று விடும்.
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்றால் அடுத்து உடல் பெறும் விஷத்தன்மைகளை ஒடுக்கிவிடும். பின் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற்றி விடும்… அதற்குப்பின் நமக்குப் பிறவி இல்லை.
விண்ணுலகில் உருவாகும் உணர்வின் சத்தை ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது துருவ நட்சத்திரம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் பெரும் கூட்டமைப்பாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.
அந்தக் கூட்டமைப்புக்குள் “சாதாரண கண்களுக்குப் புலப்படாத அளவுகளில்” விண் சென்றவர்கள் அனைத்தும் ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்…!
நாம் சென்றடைய வேண்டிய எல்லை அதுதான்…!

நான் வருவேன்… “எப்போதும் உன்னுடன்…!”
மனமே தான் நீ…! மனத்திற்கும் குரங்கிற்கும் ஒப்பிடுகின்றார்கள்… மனம் ஒரு குரங்கு என்கிறார்கள்…! ஆனால்
1.குரங்கின் நிலை வேறு மனிதன் நிலை வேறு
2.குரங்கின் நிலை ஒரு நிலையிலே தான் உள்ளது.
ஒரு பொருளையோ ஒரு செயலையோ குரங்கின் மனம் எண்ணிவிட்டால் “அதன் நாட்டம் எல்லாம் ஒரு நிலையில் தான் உள்ளது…” குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதை வைத்து மனநிலையும் குரங்கையும் ஒப்பிட்டார்கள்.
1.மனம் அல்ல குரங்கு… குரங்கல்ல மனம்…
2.குரங்கைப் பற்றி மனிதர்கள் கொண்டிருக்கும் அர்த்தம் வேறு… குரங்கிற்கும் மனிதருக்கும் உள்ள நிலை வேறு.
3.குரங்கின் எண்ணம் மாறாது… குரங்கின் செயலும் மாறாது… தன் எண்ணத்திலேயே தான் அது என்றும் உள்ளது.
மனம் – எண்ணம்… எண்ணம் – மனம் எல்லாம் ஒன்றுதான்.
உன் எண்ணம் எங்குள்ளது…? துரிதமான நிலையில் சொல்வதெல்லாம் உன் எண்ணத்திற்கு “உதயம்” வரத்தான்.
பாடத்தில் தடங்கல் வந்தால் பாடத்தின் தன்மையும் மாறி விடுகின்றது. எண்ணமும் செயலும் மாறி விட்டால் உன் நிலையும் மாறி விடுகின்றது.
நம் பிறப்பிலிருந்து ஒவ்வொருவருக்கும்… “அவருடைய வளரும் சூழ்நிலை… பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள்… சுற்றத்தாரின் பழக்கங்கள்…” எல்லாமே கலந்து விடுகின்றது.
இந்த நிலையில்
1.உன்னை நீ உணர வேண்டும்
2.உன் நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும்
3.தன் எண்ணம்… தன் மனம்… தன் செயல்… எல்லாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையைப் புரிந்து கொண்டால் எந்நிலையும் கிட்டிவிடும் என்று பகர்ந்துள்ளேன் பலமுறை. குழப்பமுடன் உள்ளாய் இரு தினத்தில் இந்நிலையில் ஏன் குழப்பம்…? உன்னையே நீ காணும் பொழுது…!
எடுத்ததை முடிப்பாய்…! எண்ணியதைச் செய்வாய்…! செயலெல்லாம் அவன் செயல்…! அவன் செயல் என்று வந்த பிறகு மனநிலையை மாற்றி விடாதே…!
உலக நிலை மாறப் போகிறது உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும் தியான நிலையில். கருவின் நிலை வளர்வதற்குள் கருகிவிடும் உலகம் முழுவதுமே உருண்டு விடும்.
இந்நிலையில் உன் நிலையில் வெகு துரிதம் வேண்டும். தியான வழியினைப் பயன்படுத்தித் தப்புங்கள். பாவ புண்ணியம் என்ற அணுவின் அணுக்கள் எல்லாம் அணுவுடன் மோதும் நிலையில் உள்ளது.
இவன் வெடிப்பான் அவன் வெடிப்பான் என்று உள்ள பொழுதே இவன் வினை எல்லாம் வெடித்துவிடும் அணுகுண்டாக…! கூடி விட்டான் கூட்டாளியாக… கூட்டத்தினிலே புகுந்து விட்டான். இந்நிலையும் சரி இல்லை… பெரும் அழிவிற்கே இந்நிலை எல்லாம்…!
ஒன்றை ஒன்று ஊடுருபவன…! ஒருவன் நிலையில் நிலையல்ல… தன் நிலையை நிலைநாட்டப் பிறர் நிலையில் ஊடுருவுகின்றான்…. காசு பணம் தேடிடவே கடல் கடலாக அலைகின்றான்.
உன் நிலையை எண்ணிடாமல் அவர் நிலையினை எண்ணுபவன் ஒரு சிலரே… உன் நிலைக்குப் புரிந்திடாது.
இயற்கையின் தாக்கலே பெரும் விஷமாகத் தாக்கிவிடும் (அம்பு எய்து விழும் காட்சி)
1.வருடம் அல்ல நாளல்ல… வருவதெல்லாம் பேரழிவு தான்
2.பூமித் தாயும் தாங்க மாட்டாள்.
அந்த அணுவின் நிலையை. அணுவின் பாடத்திலேயே புரிந்திருக்கும் இவன் விட்ட அணுவெல்லாம் இவனையே தாக்குகின்றது. நல்லெண்ணம் எங்குள்ளது…? தர்ம நியாயம் மறைந்து விட்டது.
செயற்கையுடன் வாழ்பவனுக்கு இயற்கை நிலை எதற்கப்பா…? சீறிடுவாள் இயற்கை அன்னை… இவனின் செயற்கை இவனையே அழித்துவிடும்.
விஞ்ஞானத்தைக் கண்டவன் எல்லாம் மெய்ஞானத்தைக் கண்டானா…?
1.விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்திருந்தால் நல்ல நிலை பெற்றிருக்கலாம்
2.மெய்ஞானத்தையே மறந்திட்டான்.
விஞ்ஞானத்தில் உயிரணுவைச் செய்திடச் சொல் பார்க்கலாம்…!
இயற்கை அன்னை தந்த உயிரணுவை வைத்துத் தான் இவன் விஞ்ஞானம் எல்லாம். விஞ்ஞானம் எல்லாம் அழிவிற்குத் தான்…!
1.இராக்கெட்டின் நிலையிலேயே மறந்திட்டான்
2.பறந்து என்ன பயன் கண்டான்…?
3.தன் நிலையை உணராதவன் செய்திட்டான் இராக்கெட்டை.
தேய்வ ஞானம் மறைந்ததப்பா தெய்வீகமும் மறைந்ததப்பா தேவனையே மறைத்திட்டான் தேவலோகம் சென்று பார்க்கின்றானா…? பார்த்து என்ன பயன் கண்டான்…? பாரில் உள்ளவர்க்குப் பகர்ந்திட்டானா…?
1.அவன் (ஈஸ்வரன்) அருளைப் பெற்றிடப்பா…!
2.அவன் இல்லாமல் யாரும் இல்லை
3.அவனே தான் உலகமப்பா
4.அவனே தான் நீயுமப்பா நானுமப்பா
5.அவனையேதான் நினைத்திட வேண்டுமப்பா
6.கலியின் தன்மையை மாற்றிடப்பா
7.காவியத்தில் வந்திடப்பா
8.கல்கியாக நிலைத்திடப்பா…!
மனிதன் மனதை மாற்றிடுங்கள்…! வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பாதை எதற்கு…? என்னும் நிலை வேண்டாம். புகட்டிடுங்கள் குழந்தைகளின் மனதிற்கு எல்லாம்.
எல்லோருக்கும் தான்… இதைச் செய்யச் சொல்கின்றேன்…!
இன்றைய கால நிலையைப் பற்றிச் சொல்… மனிதனின் நிலையைப் பற்றி புரிந்திடச் சொல். சிறு குழந்தைக்கும் புரியும் நிலையில் பகர்ந்துவிடு.
1.சிறுவர் சிறுமியருக்கெல்லாம் புரியும் தன்மையிலே அவர் நிலைக்கு நீ சென்று சொல்லி
2.அவரின் அன்பை எல்லாம் பெற்றுக் கொண்டு இன் அன்பைத் தந்துவிடு.
3.நான் வருவேன் உன்னுடன்…!
எந்த நிலைக்குச் சென்றாலும் எவ்விடத்திற்குச் சென்றாலும் புகட்டிடுவாய் பாலரின் மனதிற்குள்ளே. பாலரின் மனதை ஈர்க்கப் பகர்ந்துள்ளேன் இந்தப் பாடம் எல்லாம்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.
அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.
அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி… தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.
நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும்… தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்… இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,
இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.
1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.
27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.
ஏனென்றால்…
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்… என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.
ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.


உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் சீக்கிரம் கிடைக்கும்
நாம் மனிதர்கள் சந்தோஷமான உணர்வுகளைப் பதிவு செய்து கொண்ட பின் சந்தோஷமாக வாழ்ந்த நிலையை எண்ணும் பொழுது நம்மை அறியாமலே அன்று நமக்குச் சந்தோஷம் வருகின்றது.
அதே சமயத்தில் கோபமாகப் பேசியருடைய நினைவுகளை நாம் எண்ணினோம் என்றால் நம்மை அறியாமலே வெறுப்பும் கோபமும் அன்று உருவாகின்றது.
அப்பொழுது நம் உடலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்படுகின்றது.
ஒரு மனிதன் வேதனையுடன் பேசினால் அதைப் பதிவு செய்து கொண்டால் அந்த மனிதனை மீண்டும் நினைக்கும் பொழுது நம்மை அறியாமலே வேதனை வருகின்றது… மனம் சோர்வடைகின்றது…!
ஒரு தொழிலில் செய்ய வேண்டும் என்று பதிவு செய்து கொண்டால் அந்த நினைவு வருகின்றது ஆனால் தொழில் சரியாகக் கிடைக்கவில்லை என்றால் அந்த நேரம் சோர்வடைந்து விடுகின்றோம்.
இதைப் போன்று
1.இந்த உடலில் “எதை எதை” நாம் பதிவு செய்து கொள்கின்றோமா
2.அது மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது நம் கண்ணுக்கே வருகின்றது.
3.கண்ணுக்கு வரும் பொழுது இந்தக் காற்று மண்டலத்தில் நாம் பழகியவர்களின் உணர்வுகள் பரவி உள்ளதை நாம் சுவாசித்து
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நம் உடலின் மாற்றங்களும் எண்ணங்களும் சொல்களும் வருகின்றது… நம் செயல்களும் அமைகின்றது.
உதாரணமாக நம்மிடம் கோபமாகப் பேசியவர் நினைவு வரும் பொழுது பெண்களாக இருப்பின்… குழம்பு வைக்கும் பொழுது அதில் “காரத்தை” அதிகமாகப் போட்டு விடுவார்கள்.
சலிப்பு கொண்டோரின் நினைவுடன் சமைத்தால் அதிலே “உப்பை” அதிகமாகப் போட்டு விடுவார்கள். ஏனென்றால் நுகர்ந்த உணர்வுகள் அந்த வேலையைச் செய்யும்.
ஆண்களாக இருப்பின்… ஒரு வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் அந்த நேரம் குறுக்கே யாராவது வந்தார்கள் என்றால்
1.உடனே சலிப்பு வந்துவிடும்… அப்பொழுது கோபம் அதிகரிக்கும்.
2.கோபத்தின் தன்மை வரும் பொழுது வாகனத்தைச் சீராக ஓட்டுவது மிகவும் கடினமாகி விடுகின்றது.
3.கோபம் வந்தபின் அடுத்து நிதானமாக வண்டியையும் ஓட்ட முடியாது… ஓட்டினாலும் சிரமம் தான்.
இதைப் போன்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் நமக்குள் பதிவு செய்த நிலைகள் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது
1.காற்றிலே கலந்துள்ள அந்தந்த உணர்வுகளைச் சுவாசிக்க நேர்ந்து
2.அந்தந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செல்வதும்… பின் அதைச் செயலாக்கியும் விடுகின்றது.
இப்படி நம் வாழ்க்கையில் எத்தனையோ உணர்வுகளைப் பதிவு செய்கின்றோம் நினைவு கொள்ளும் பொழுது அது வருகின்றது.
கல்விச்சாலையில் படிக்கும் போது பாடங்களைப் பதிவு செய்து கொண்டால் அதாவது…
1.எந்தப் பாடத்தை பதிவு செய்தோமோ அதை நினைவால் வெளிப்படுத்தும் போது
2.சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்து விடுகின்றது.
3.அந்தப் பாடங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அதனுடைய தொடர் வரிசையும்
4.பாட நிலையில் எதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று குறித்த உணர்வுகள் நமக்குள் தெளிவாக வருகிறது.
உதாரணமாக உயர் படிப்பு படிப்பவர்களுக்குப் படிப்பில் பாடங்கள் அதிகமாக இருக்கப்படும் பொழுது அதன் தொடர் வரிசையில்… படிக்கும் பொழுதே சோர்வோ சோம்பேறித்தனமோ வந்து விட்டால்… குடும்பம் அல்லது தொழில் அல்லது கொடுக்கல் வாங்கல்களில் பாதிப்பு வந்துவிட்டால்…
1.பாடங்கள் சீராகப் பதிவாகாது… பரீட்சையில் தேர்வதும் மிகக் கடினமாகின்றது.
2.அத்தகையவர் படித்து வருவார் என்றால் மிகவும் கடினம் தான்
உதாரணமாக… குடும்பத்தில் கணவன் மனைவிக்குப் புத்திர பாக்கியம் வேண்டுமென்றால் “குழந்தை வேண்டும்” என்று பதிவு செய்தால் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
அதற்கு மாறாக… “குழந்தை இல்லையே… குழந்தை இல்லையே… இல்லையே…!” என்று இதைப் பதிவு செய்து கொண்ட பின் இந்த உணர்வுகளே அதிகரித்து “புத்திர பாக்கியம் கிடைப்பது” காலதாமதம் ஆகிவிடும். காரணம்…
1.சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது
2.அந்த அணுக்கள் வீரியத்தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது அல்லது பலவீனம் அடைகின்றது.
இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொண்ட நிலைகள் எல்லாம் மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது இப்படிப்பட்ட இயக்கத்திற்கு வருகின்றது இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.
“தன் பெண்ணுக்குத் திருமணமாக வேண்டும்…” என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” பிள்ளையைப் பார்க்க வந்து வந்து செல்கின்றனர்…! என்று பதிவு செய்தால்
1.அந்தப் பதிவே மீண்டும் நினைவுக்கு வரும் பொழுது ஆன்மாவில் அது கலந்து
2.பெண் பார்க்க வரும் பொழுது அவர்கள் நம்முடைய சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
3.நம் சொல்லைக் கேட்கப்படும் பொழுது அவர்களும் சோர்வடைகின்றார்கள்.
4.அப்போது நம்முடைய எண்ணமே பார்க்க வந்தவர்கள் உணர்வினை இயக்கி…
5.பேச்சுத் தொடரில் சோர்வின் தன்மை அடையச் செய்து திருமணம் நடைபெறாது தடையாகி விடுகின்றது.
6.நல்லது எண்ணுவதை அந்த இடத்தில் நாம் விட்டு விடுகின்றோம்.
அதை எல்லாம் மாற்றி அமைக்க நாம் என்ன செய்ய வேண்டும்…? என்றால்… நம் பெண் எங்கே திருமணம் ஆகிச் சென்றாலும் அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்… அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்…
1.அந்தச் சக்தி என் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்ற அடிக்கடி எண்ணினால்…
2.அந்தத் திருமணமாக வேண்டிய பெண்ணும் இப்படி எண்ணினால்…
3.துரிதமாக அதற்கு நல்ல வரன் கிடைக்கும்.
4.எதிர்காலம் நல்ல வாழ்க்கையாகவும் அமையும்
5.அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும்… மகிழ்ச்சியை உண்டாக்கச் செய்யும்.
ஆகவே மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின் வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களையும் செயல்படுத்தப் பழகிக் கொள்ளுங்கள்.
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி… ஒரு ஐந்து நிமிடம் உடலுக்குள் செலுத்திய பின்… எந்தக் காரியத்திற்குச் செல்கின்றீர்களோ அவை அனைத்தும் காரிய சித்தி ஆக வேண்டும்… எங்கள் சொல் அவர்களை நல்லதாக்க வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும்… என்று “இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்…”
வாழ்க்கையில் வரக்கூடிய எந்த நிலையாக இருந்தாலும் நல்லதாக வேண்டும் என்று இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து செயல்படுத்த வேண்டும்.
ஆகையினால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றீர்கள்… அப்போதெல்லாம் அதை வலுக் கூட்டிக் கொண்டே வரவேண்டும்.
அதிகாலையில் எப்பொழுது விழிப்பு வருகின்றதோ அப்பொழுதெல்லாம் மகரிஷிகளை எண்ணி விட்டு இந்த முறைப்படி அந்தந்த காரியங்கள் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி எத்தனையோ மகரிஷிகள் விண் சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரும் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றிச் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் உள்ளார்கள்
ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் அந்த அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்.
1.உடலுக்குள் சோர்வடைந்த நிலையில் எதுவாக இருந்தாலும் நல்ல மன பலம் பெற்று மன வளம் பெறுவீர்கள்.
2.சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தியாக வரும்…
3.உங்கள் காரியங்கள் “அனைத்தும் வெற்றியாகும்…”
செய்து பாருங்கள்…! (ஞானகுரு)

உண்மைச் சக்தியான காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்லவன் “நிச்சயம் ஒளி நிலை பெறுவான்”
உணர்வின் வழித் தொடர் இச்சைக்கு நம் எண்ணம் செயல்பட்டு அவ்வுணர்வின் தன்மைக்கே எண்ணச் செயலை வழிப்படுத்தும் மனிதனால் எண்ண மேம்பாட்டிற்குண்டான வழிப்பாதையை அறிய முடியாது.
காட்சி:
அம்பெடுத்துக் குறி பார்த்து அம்பு விடுகின்றான் ஒரு மனிதன். அவன் உடலில் “ஒரு பெரிய கட்டெறும்பு” வந்து ஊர்ந்து கொண்டுள்ளது. அவன் எண்ணம் எல்லாம் அம்பின் குறி தவறாத ஒரே நிலையில் அம்பெய்தி தன் எண்ணத்தின் மேம்பாட்டைக் காண்கின்றான்.
அவ்வம்பு எய்தப்பட்ட பிறகு இந்த உடலில் ஓடும் “எறும்பின் குறு குறுப்பு உணர்வை அறிந்து…!” அதைத் தட்டி விடுகின்றான்.
இது எதனைக் குறிக்கின்றது…?
விளக்கம்:
உணர்வின் நிலையையே இவ்வெண்ணக் குறியினால் மாற்றியமைக்க முடியும்.
1.ஆனால் இவ்வுணர்வின் செயலே
2.நம் எண்ணத்தையும் விழிப்படையைச் செய்திடும்.
இவ்வுணர்வின் செயலே… எண்ணத்தை விழிப்படையைச் செய்யும் நிலை எப்பொழுது ஏற்படும்…?
இவ்வுணர்வின் எண்ணத்தை
1.எந்த ஒரு மனிதன் தன் எண்ணத்தின் வழித் தொடரில் பழக்கப்படுத்தி
2.அந்த உணர்வையே எண்ணத்தின் செயலில் செயல் புரிய வைக்கும் மனிதனுக்கு
3.இவ்வுணர்வின் அலையே எண்ணத்தின் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு
4.”அதி துணையாகச் செயல்படும்…!”
சில மிருகங்களுக்கு இவ்வுணர்வில் செயல் திறமை அதிகமாக உரு வளர்ச்சியிலேயே ஜீவன் கொண்டு வாழ்ந்து வருகின்றது.
நாம் உறங்கும் சில நேரங்களில் நம்மை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் நம் எண்ண அலை உறங்கிடும் தன்மையில் இவ்வுணர்வின் அலையின் விழிப்பினால் நம் உடலில் ஏறும் சில ஜெந்துக்களையும் அதே சமயம் நம் உடலில் உள்ள நரம்புப் பிடிப்புகளையும் நீக்க இவ்வுணர்வலைகள் செயல் புரிகின்றன.
இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணச் சுவாச அலைக்கு உறக்கம் தந்தாலும் உடலில் உணர்வலை இயங்கிக் கொண்டே தான் உள்ளது. இந்த உணர்வலைகளிலேயே…
1.மனிதனின் எண்ண மேம்பாட்டைக் கொண்டு
2.அபரிதமான சக்தி அமில குணங்கள் வளர்ந்துள்ளன.
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுது சுற்றியுள்ள சப்த ஒலிகள் தனக்கு வேண்டப்படாத ஒலி அலையை இவ்வுணர்வலையும் எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் அதே சமயம் கைக் குழந்தை தன் சிறு சிறு அசைவு கொண்டு அழுதாலும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள தாயின் உணர்வறிந்து “விழிப்பு நிலை” ஏற்பட்டு விடுகின்றது.
சில கள்ளர்களின் கள்ளத்தனம் இல்லங்களுக்கு வந்து எடுத்துச் செல்லும் நோக்கமுடன் செயல்பட்டாலும்
1.இவ்வுணர்வின் அலை விழிப்படைந்து செயல்புரிந்து…
2.ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொழுதும் விழிப்படையச் செய்துவிடும்.
இந்த உடலில் உள்ள பல கோடி அணுக்களும் “நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தி அலையை ஈர்க்கவல்ல தன்மை கொண்ட மனிதனின்…” உணர்வலை எண்ண அலை உறங்கிடும் நிலையிலும் இவற்றில் விழிப்பு நிலை உறங்குவதில்லை.
ஒவ்வொரு மனிதனும் தன் எண்ணத்தின் நிலை கொண்டு இவ்வுடலில் உள்ள உணர்வின் சக்தி அலையைத் தன் இச்சையிலிருந்து அதன் வழியில் ஓட விடாமல் ஒரு நிலைப்படுத்தும் சம நிலை வழித் தொடர்படுத்திடல் வேண்டும்.
அப்படிச் செய்து விட்டால் இவ்வுணர்வலையின் சக்தி மேம்பாட்டினால் இவ்வுடலில் உள்ள அனைத்து அணுக்கதிர்களும் தன் ஈர்ப்பில் நுண்ணிய காந்த அலையின் சக்தி அலையைக் கூட்டிக் கொள்ளும்.
பிறகு எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தால் உயரிய ஒளி அலையின் ஈர்ப்பிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த நுண்ணிய காந்த அலையின் ஈர்ப்பை இச்சுவாசம் முழுவதுமே ஒவ்வொரு தசை நார்களும் ஈர்க்கவல்ல சக்தி பெற்றிடலாம்.
1.அப்படிப்பட்ட மனிதனின் செயல் தான்
2.சப்தரிஷிகளின் செயல் வட்டத்துடன் சென்றடையும் ஈர்ப்பு பெற்ற ஜோதி காணும் நிலையே அன்றி
3.ஆறு கால ஜெபம் செய்து ஆண்டவன் நமக்கு அருள்வான் என்று ஏங்கி தவமிருப்பதால்
4.எந்தச் சக்தி அலையும் எந்த மனிதனாலும் பெற முடியாது.
உண்மைச் சக்தியை காந்த ஈர்ப்பு மின் அலையை எடுக்கவல்ல மனித ஆத்மா நிச்சயம் ஒளி அலை பெறுவான்.
உணர்வலையை எண்ணத்தைக் கொண்டு ஒரு நிலைப்படுத்தும் மனிதனுக்கு
1.அந்த உணர்வலையின் திசை திருப்பலிலிருந்து
2.அதி சக்தி ஈர்ப்பைப் பெற முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்றும்… பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்…!
1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று… முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.
பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து… அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.
அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் “எண்ணிலடங்காதோர்” இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.
ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்…!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது
அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.
இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.
திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்…” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.
இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.
1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்… தனது குரு…! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.
உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.
சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை…” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.
சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.
ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்… இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.
ஆகவே சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது…”


செய்யத் தவறியதை… செய்ய மறந்ததை… நாம் அனுதினமும் இப்போது செய்ய வேண்டும்
துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று “புருவ மத்தியில் எண்ணி” ஏங்கித் தியானித்து… அந்த வலுவைக் கூட்டுங்கள்.
அதை வைத்து நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்த வேண்டும். காரணம்… நம் மூதாதையர்களுக்கு குலதெய்வங்களுக்கு இதற்கு முன்னாடி நாம் அதைச் செய்ய மறந்து விட்டோம்.
இப்போது
1.சப்தரிஷி மண்டலத்தின் பேர்ருள் பேரொளியை வலுப்பெறச் செய்து
2.மகரிஷிகள் காட்டிய அருள் வழியை உங்களுக்குள் அந்த உணர்வைத் தூண்டி
3.நினைவைத் தன்னிச்சையாக விண்ணை நோக்கிச் செலுத்தும்படி பயிற்சி கொடுக்கின்றோம்.
4.அதை நீங்கள் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
இதே ஏக்கத்தோடு நாம் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வைப் பெற்று அதனின் வலுவின் துணை கொண்டு அவரவர்கள் குலதெய்வங்களான உயிரான்மாக்களை அந்த சப்தரிஷி மண்டலத்துடன் எளிதில் இணைக்க முடியும்.
ஏனென்றால் அந்த வலுவின் தன்மை கொண்டு
1.குலதெய்வங்களின் உயிரான்மாக்களை உந்தித் தள்ளப்படும் பொழுது அந்த சப்தரிஷி ஈர்ப்பு மண்டலத்தில் செல்கின்றது
2.உடல் பெறும் உணர்வுகள் கரைகின்றது… உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைக்கின்றது
3.அப்பொழுது அந்த சப்தரிஷி மண்டலத்துடன் அது சுழல்கின்றது.
உதாரணமாக நாம் பூமியின் நிலைகளைக் கடந்து ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றோம். அப்பொழுது பூமியின் ஓடுபாதையில் அது சுழலச் செய்யும் பொழுது அதன் வரிசையில் சுழலுகின்றது.
அதே சமயத்தில் பூமியின் நிலைகள் தென் வடக்கில் சுழலும் போது
1.அந்த சுழலும் தன்மைக்கு இதனுடைய ஈர்ப்பின் வேகத்தைக் கூட்டும் போது அதே ராக்கெட் சுழலுகின்றது.
2.ஆனால் அதனுடைய வேகத்தை குறைத்து பூமியின் சுழல் வட்டத்தில் அதனுடைய சமமான நிலைகள் இருக்கும்போது
3.எந்த ஊரின் நிலையோ அதனின் நிலை கொண்டு அங்கே நிலை கொண்டு அதனைச் செயல்படுத்துகின்றது.
இதை போன்று தான் நாம் எந்த மனித உடலில் இருந்து உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் ஒளியின் சரீரமாக சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றனரோ
1.அவர்கள் உணர்வுகளை நம் உடலுக்குள் செலுத்தி இதனின் வலு துணை கொண்டு
2.நம் மூதாதையர்களுடைய உடலை விட்டு பிரிந்து சென்ற ஆன்மாக்களை
3.நாம் இந்த முறைப்படி ஆயிரக்கணக்கானோர் வலு கொண்டு விண் செலுத்துதல் வேண்டும்.
அவ்வாறு விண் செலுத்தினால் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் செல்கின்றது பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்த பின் அந்த ஈர்ப்பு வட்டத்திலே சுழலத் தொடங்கி விடுகின்றது.
விண் செலுத்திய பின் அந்தந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேர்ருள் பேரொளி பெற வேண்டும்… துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஏங்கினால்…
1.அந்த உணர்வைப் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் கடும் தீமைகளை கூட மாற்றி
2.அந்த மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் இதற்கு முன் நாம் செய்யத் தவறிய அந்த உணர்வு கொண்டு நாம் ஒவ்வொருவரும் இந்த பௌர்ணமி நாளில் இது மாதிரி தொடர்ந்து உந்தித் தள்ளினால்… இன்னொரு உடலுக்குள் பேயாக நின்று அதனை ஆட்டிப் படைத்து அதற்குப் பின் வெளியில் வந்தாலும்… அவர்களுடைய உணர்வுடன் நம் நினைவினை ஆற்றலை பரப்பப்படும் பொழுது (இன்னொரு உடலுக்குள்) இந்த நஞ்சினைக் கரைத்து விட்டு… “விண் செல்லும் உணர்வினைத் தனக்குள் பெரும் தகுதியை ஏற்படுத்துகின்றது…”
ஆகவே மனிதனாக நம்மை உருவாக்கி நம்மை சீராட்டி தாலாட்டி வளர்த்த குலதெய்வங்களை “இன்னொரு பிறவியின் நிலை அடையாமல் செய்வதே… நம்முடைய தலையாயக் கடமையாகும்…”
அவரவர் வீடுகளில் இருந்தே இதைப்போல இந்த உணர்வினை எடுத்துச் செயல்படுத்த முடியும். ஒரு கூட்டமைப்பாக ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து எடுத்தோம் என்றால்
1.அவர்களை நாம் துரித நிலைகள் கொண்டு எந்த உடலை விட்டு வெளியில் வந்தாலும்
2.அவர்களுடைய உணர்வு தான் நம் உடலாக இருப்பதனால் நாம் அவர்களை எளிதில் அனுப்ப உதவும்.
ஏனென்றால் இப்பொழுது நாம் சாங்கியத்தில் சுட்ட சாம்பலைக் கங்கையில் அல்லது ஓடும் நீரில் கரைத்தால் பாவம் போய்விடும்… மோட்ச தீபம் ஏற்றினால் அவர் சொர்க்கம் போவார்…! என்று தான் நம்மைச் செய்ய வைத்துள்ளார்கள்.
ஆகவே… காலத்தால் மறைந்த இந்த நிலையை மகரிஷிகளின் அருளால் இதைப் போன்ற மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து அவர்களை பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.
அவர்கள் அங்கு ஒளி நிலை பெற்றால் இந்த உணர்வு கொண்டு நாம் இந்த பூமியில் வரும் தீமைகளை அகற்றிவிட்டு நாம் இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழவும் மகரிஷிகள் அருள் வட்டத்தில் வாழ்ந்து… இங்கு வரும் தீமைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ந்து வாழ முடியும்.
1.இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல… உயிரே நமக்குச் சொந்தம்
2.ஆனால் இப்பொழுது உயிருக்கும் நமக்கும் சொந்தம் இல்லாத நிலைகளில் இருக்கின்றோம்.
3.ஆகவே உயிரின் தன்மையை நாம் சொந்தமாக்க வேண்டும்
ஆக நாம் எதை எண்ணுகின்றோமோ அதனை வைத்து இந்த உயிர் உடலை இயக்குகின்றது. ஆகையினால் “உயிர் தான் நமக்குச் சொந்தம்” என்று யாரும் நாம் எண்ணவே இல்லை.
அவனால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல் என்ற நிலையில் நாம் அவனை வேண்டி நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ அதை உருவாக்குகின்றது.
ஒருவருக்கு நாம் கடுமையாகத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதை உயிர் உருவாக்குகின்றது… அந்த உணர்வை உடலுக்குள் பரப்புகின்றது. அதையே (தீமையை) செய்யும்படி செய்கின்றது.
ஒருத்தருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம்… அந்த உணர்வின் தன்மை இந்த உடலை இயக்கிக் காட்டுகின்றது.
ஆனால் தீமையின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
1.அந்தத் தீமையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து
2.நம் உடலை அழுகச் செய்து நம்மை வேதனைப்படச் செய்கின்றது.
யார் வேதனைப்பட வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அந்த வேதனையின் உணர்வின் அணுக்கள் நமக்குள் விளைந்து அந்த வேதனையையே நமக்குள் உருவாக்கி விடுகின்றது.
இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. ஆகவே நாம் எதுவாக ஆக வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

குடும்ப நிலையில் இருந்து சித்தனாகிக் காட்டு… அது தான் பெரிது…!
அணுவின் தன்மையை அணு அணுவாக ஆரம்ப நிலையிலிருந்து உணர்த்தி உள்ளேன். மனிதன் பிறவி எடுத்த நிலையில் இருந்து உணர்த்தி உள்ளேன். மனிதனின் நிலையில் “ஏழு ஜென்மம்” நமக்கு அளித்த ஆண்டவனின் தீர்ப்பு.
அந்த ஏழு ஜென்மத்தில் நமக்கு அளித்த அருளைப் பெற்றவன் பெரும் முக்தி நிலையைப் பெற்று விடுகின்றான்.
அந்த ஏழு ஜென்மத்திலும் தன் நிலையை உணராமல் தன் ஆசையை அடக்கிடாமல்
1.நான் என்ற இந்த நிலையில் அவன் எடுக்கும் பிறவி எல்லாம் சீரும் சிங்கமாகவும் விஷம் கொண்ட பாம்பாகவும் அணிலாகவும்
2.அவரவர்களுக்குக் கிடைத்த ஏழு சந்தர்ப்பத்தையும் முடிக்காமல் உள்ளவன்..
3.இன்று மிருகத்திற்கு எந்தக் குண நிலை உள்ளதோ அவ்வழியில் பிறக்கின்றான்… அதிலும் ஜென்மங்கள் மாறுபடுகின்றன.
மிருகமாக மாறுபடும் ஜென்மங்களைத் தான் மனிதனும் புசிக்கின்றான். இவன் அணுவே தான் அதற்கும்… அதன் அணுவே தான் இவனுக்கும்…!
ஆயிரம் ஆடுகள் மந்தையில் இருந்தாலும்… அச்சிறுத்தையின் எண்ணம் “ஒரு ஆட்டின் மேலே தான்” உள்ளது. அதன் நிலை என்ன…?
1.அச்சிறுத்தையின் முதல் எதிரி அந்த ஆடு
2.அந்த ஆட்டையே புசிக்கின்றது.
ஒவ்வொரு தன்மையும் இதைப் போல் தான் சுற்றிக் கொண்டே வருகிறது சிறுத்தை அவ்வாட்டை அடித்ததனால்
1.அந்த ஆட்டிற்குத் தான் சாப நிலை தீர்ந்தது.
2.சிறுத்தையின் நிலை சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றது.
அணுவே தான் எல்லாம். மரமும் அணு தான். மரத்தின் கனியும் அணு தான். அந்த அணுவைப் புசிக்கிறோம்… இந்த அணுவைப் புசிக்கக்கூடாதா…? என்ற எண்ணம் உனக்குள்ளே…! “அந்த அணுவின் தன்மை வேறு… இந்த அணுவின் தன்மை வேறு…”
ஏழு ஜென்மத்தில் முக்தி அடையாத மனிதன் மிருகமாகி.. பறக்கும் பறவையாகி… புழுவாகி… மரமாகி… கனியாகி கனியின் தன்மையிலேயே பாவ விமோசனம் பெறுகின்றது.
கனியாகவும் ஆகின்றது பூவாகவும் ஆகின்றது கனியைப் புசிப்பதின் தன்மை புரிகிறதா…? ஆசை மணத்தை அணு அணுவாக அடக்கிடத்தான் இந்த தியான முறை எல்லாம்.
சுவை எல்லாம் அவன் தருவான் சுவைத்திடப்பா சுவையை. முதல் பாட்டிலேயே தந்துள்ளேன்… ஆசை அணுவை அழித்திடுவாய் என்னும் வரியை. அதன் பொருளும் இதுவே தான்.
1.அணு அணுவாக எந்நிலையிலும் அடக்கிட வேண்டும்
2.பெரும் அவசரமும் பதட்டமும் அடைந்து விட்டால் பற்றற்ற நிலை வந்துவிடாது.
3.நம் மனதை உயர்த்திக் கொண்டு நம் நிலைக்கே வந்த நிலையில் வைத்து இருப்பதும் ஒதுக்குவதும்.
4.அவசரம் வேண்டாம் சொன்னதன் பொருள் புரிந்ததா…?
பூவின் மணம் தான் உன் சுவாச நிலைக்கே வருகின்றது தெரியவில்லையா…? எல்லாச் சுவையின் தன்மையையும் தந்தருளினேன்.
1.மூலிகையையின் வாசனைகள் வந்திருக்கும்
2.ஜோதியின் வடிவமும் தந்தருளினேன். அந்நிலையில் உதயத்தைப் புரிந்திட்டாயா… புரியவில்லை… போகர் பற்றி.
காயகல்பம் சாப்பிட்டவர்… அந்தக் காயகல்பம் எதிலிருந்து வந்தது போகர் உடலை அழியாமல் வைத்துள்ளார்.
காட்சி:- மருந்தை எடுத்து இடித்துக் காட்டி இப்படித்தான் வந்ததா…? என்று குருதேவர் கேட்கின்றார்.
காயகல்பம் என்பதெல்லாம் கருணையான மனதினிலே தியான நிலையில் பல மணங்களை எடுத்து உலோகத்தன்மையில் கலந்து அவர் அரைத்தார்.
கடுகளவு காண்பதற்குத் தவம் இருந்தார் பல நாட்கள்…!
மும்மூர்த்தியின் வடிவையே சிலை செய்தார். சிலையின் தன்மையிலே கலந்து செய்தார் இக்காயகல்பத்தினை.
1.சிலையின் உருவிலும் உள்ளது காயகல்பம்
2.போகரின் உடலிலும் உள்ளது காயகல்பம்.
அணுகுண்டு செய்வது பெரிதல்ல. காலங்கள் அழிந்தாலும் தன் நிலையையும் தன் உடலையும் தன் உணர்வையும் அழிந்திடாமல் வைத்துள்ளார்.
1.அந்நிலை உயர்ந்ததா…?
2.வெறும் அணுகுண்டு செய்திடத் தன் சக்தியெல்லாம் அழித்துச் செய்யும் அணுகுண்டி நிலை பெரிதா…?
மனிதனாகப் பிறந்தவருக்கு எல்லோர் உடலிலும் சக்தி நிலை உள்ளது. பிறவிப் பயனும் உள்ளது… அவனவன் எடுக்கும் நிலையில் தான் எல்லாமே உள்ளது.
இனி எந்த நிலைக்குச் சென்றாலும் இந்நிலையை மாற்றி விடாதே… காலத்துடன் மறைந்திடாதே… கல்கியுடன் கலந்துவிடு…! பகர்ந்திடுவேன் பகர்ந்திடுவேன் பல நிலைகளைப் பகர்ந்திடுவேன்….!
உன் நிலையில் உள்ளவர் தான் போகன். அதனால் தான் அந்த வழி காட்டினேன்…. வழியெல்லாம் வகுத்திடுவார் அந்த வழிக்கு வந்துவிடு சீக்கிரம்.
உள்ள நிலையை மாற்றி விடாமல் இந்த வழிக்கு வந்துவிடு. காலம் கனிந்து வரும்… காலம் குறுகியது குறுகியது…! சீக்கிரம் சுவாச நிலைக்கு வா.
பல கோடி நாட்கள் தூங்கிடலாம்… தூங்கும் தூக்கம் தனி அல்ல என்ற நிலைக்கு வந்துவிடு.
1.தியான நிலையில் இருந்திட்டால் அதுவே தான் தூக்கம்
2.அந்நிலையில் காத்திடுவான் உன் உடலையும் அவனே.
இன்றுள்ள பல சித்தர்கள் ஞானிகள் எல்லாமே தன் நிலையை மாற்றிக் கொண்டு அவன் நிலைக்கு வந்தார்கள். உனக்குச் சொல்வது புரிகிறதா…!
1.குடும்ப நிலையில் இருந்து சித்தனாக்கிக் காட்டு…. இந்நிலை தான் பெரிது
2.இதுவும் அவன் அருளே…. மாற்றிடாமல் அவனிடம் வா… போகரே போற்றிடுவார். உன் நிலையை என்று அடித்துக் காட்டுகின்றார் குருதேவர்.
உன் நிலையை முந்துவதற்கும் ஆள் உண்டு. நீ முந்துவாயா? அவர் முந்துவாரா…? பார்க்கலாம்
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து… விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று… அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.
உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட… குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.
மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.
உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.


கல்கியுகம் பிறந்து விட்டது
அனுதினமும் மகரிஷிகள் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அந்த உணர்வின் துணையால் கருவில் வளரும் சிசுக்களை ஞானக் குழந்தைகளை வளர்த்திட வேண்டும்.
இந்தத் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்வோர் குடும்பங்களில் கருவில் உருவாகும் குழந்தைகள் அவர்களுக்கு
1.ஒவ்வொரு நொடியிலும் அந்த அருள் ஞானத்தை நாம் கிடைக்கச் செய்ய வேண்டும்
2.உலக ஞானம் பெற வேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்
அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி “உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர வேண்டும்” என்று குழந்தைக்கு உணவு கொடுக்கும் பொழுதும்… பால் ஊட்டும் பொழுதும்… தாலாட்டும் பொழுதும்… இதை நாம் செய்து பழக வேண்டும்.
செய்தால்
1.இதன் தொடர் வரிசையில் எதிர்காலச் சந்ததியினர் இந்த வழியிலே வளர்ந்து
2.இந்த நாட்டை உலகத்தைக் காக்கும் சக்திகளாக வருவார்கள்.
இன்று உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை பரவிக் கொண்டிருந்தாலும் உலகை மீட்டிடும் அந்தத் தகுதி “தென்னாட்டில் தோன்றியவர்களுக்குத் தான் வரும்…”
உலகப் பேரழிவின் தன்மையை… விஷத்தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் இந்த நிலைகளை மாற்றிட இது உதவும்.
மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனுக்கு மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றது. அதை ரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது ஏனைய நாடுகளில்…!
நம் நாட்டில் அவ்வாறு இல்லை… இப்போது தான் தலை காட்டுகின்றது. உறங்கிக் கொண்டிருக்கும் மக்கள் மீது குண்டுகளை வீசுவதும் மற்றவர்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு ரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது.
மற்ற நாடுகளில் துரித நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது நீர் நிலைகளையும் காற்று மண்டலத்தையும் விஷத்தன்மைகளை பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதைக் கண்டு ரசித்து அதை சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையே உள்ளது… அத்தகைய அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.
1.ஆனால் தென்னாட்டில் தோன்றிய “அகஸ்தியன் உணர்வால்” அந்தப் பிழைகள் இங்கே வராது தடுத்து நிற்கின்றது.
2.அவருடைய உணர்வே தான் இங்கே பேசுகின்றது… உபதேசம் கொடுக்கின்றது
3.நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.
4.ஏனென்றால் எனக்கு அந்தப் பேசும் தகுதியோ அந்த உணர்வைக் கவரும் தகுதியோ பெற்றவன் அல்ல நான்.
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அத்தகைய உணர்வின் தன்மை… உலகை மீட்ட…
2.அந்த உணர்வுகளே இயங்குகிறது… அதுவே இயக்கிக் கொண்டுள்ளது.
3.அந்த உணர்வலைகளே பரவிக் கொண்டுள்ளது.
உங்களுடைய நிலைகளுக்கு எண்ணும்பொழுது எனக்கும் லாபம் கிடைக்கின்றது நீங்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்து மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும் போது அந்த உணர்வின் தன்மையால் அந்தப் பேரானந்த உணர்வு இந்தக் காற்று மண்டலத்தில் நானும் சுவாசிக்க நேருகின்றது.
நீங்கள் வளர நான் வளர முடியும்…!
ஆனால் “நான் வளர” நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால் உங்களை எல்லாம் நான் அடிமையாக்கத் தான் முடியும். ஆகவே நான் வளர்வதற்காக உங்களை அடிமை ஆக்குவது இல்லை.
குருநாதர் காட்டிய வழியில் நீங்கள் வளர வேண்டும்…!
1.நீங்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று உணர்வினை நான் பெற்று வளர்த்தேன் என்றால்
2.நீங்கள் உயரும் போது அதைக் கண்டு நான் ஆனந்தப்படுகின்றேன்
3.உங்களில் விளைந்த அந்த உணர்வின் சத்து எனக்குள் அதை உயர்ந்ததாக மாற்றும்.
இங்கு விளைந்த (அகஸ்தியர்) வித்து ஒன்றுதான். ஆனால் அது உங்களுக்குள் அது விளைந்து பல பல வித்துக்களாக வளருகின்றது… தீமைகளை அகற்றும் சக்தியாக மாறுகின்றது.
1.அதைக் கண்டு நான் பேரானந்தப் பெரு மகிழ்ச்சி நான் பெறுகின்றேன்
2.அப்பொழுதுதான் பேரின்ப்ப் பெருவாழ்வை எனக்குள் அதை வளர்க்க முடியும்.
ஆகவே நீங்கள் வளர வேண்டும் அதைக் கண்டு நான் மகிழ வேண்டும் இதைப் போல் நீங்கள் ஒவ்வொருவரும்
1.நீங்கள் பார்ப்பவர் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெற வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் நிலையில் வளர வேண்டும் என்று இதை எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.
4.இதனுடைய வரிசைச் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் இங்கே வாழ முடியும் வளர முடியும்.
இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையிலிருந்து மீளவும் முடியும்.
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.
பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.
இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.
நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம் வரும்.
உதாரணமாக… ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.
அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது… இடைஞ்சல் தான் வருகின்றது.
ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்கு வன்மை தான்…!
ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).
கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.
இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.
ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.
அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.
ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.
அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.
இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.
ஆகவே நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”


தாய்க்குச் செய்ய வேண்டிய சேவை
பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.
அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி… மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.
இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.
மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்… அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது…!”
பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.
இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.
எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.
ஒவ்வொரு உயிரும் (கடவுள்) ஈசன் என்றும்… அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்… மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்… நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது…
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.
எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.
நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.
தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்… தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.
மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.
அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்… பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக… முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்… தவமிருப்போம்.

“ஒவ்வொரு ஸ்டேஜாகத் தான்” உங்களை வளர்ச்சி பெறச் செய்து கொண்டிருக்கின்றோம்
1.நட்சத்திரங்கள் பிற மண்டலத்தில் இருந்து வருவதை தனது உணர்வின் தன்மையாக எடுத்து
2.மற்றதோடு கலக்கப்படும் பொழுது “மின்னணுவாக” மாறுகின்றது.
3.அதாவது ஒரு கல்லுடன் கல் தட்டினால் “நெருப்பு” (பொறி) வருவது போன்று.
அதிலே முதல் நிலைகள் எடுத்துக் கொண்ட கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மற்றதுடன் கலக்கப்படும் பொழுது “மின் காந்த ஒளிகளை” உருவாக்குகின்றது. அத்தையை அணுக்களாக மாறும் பொழுது தான் பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.
அதனின் துகள்கள் பரவிக் கொண்டே வருகின்றது.
இதற்கு அடுத்து இருக்கக்கூடிய மற்ற நட்சத்திரங்கள் அதனின் வட்டப்பாதை மாறினாலும் உமிழ்த்திய உணர்வுகள் இங்கே பரவி இருப்பதும் அதுவும் மற்ற மண்டலங்களிலிருந்து கவர்வதை இதுவும் கவர்ந்து இதே கலவையாக்குகின்றது.
இப்படி அடுக்கடுக்காக 27 நட்சத்திரங்களின் கலவைகள் ஒவ்வொன்றும் கார்த்திகை நட்சத்திரத்தைப் போன்ற விஷத்தின் தன்மைகள் “கூடுவதும் உண்டு… குறைவதும் உண்டு…!”
இதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது/. வானியலில் கடும் விஷத் தன்மைகள் பிரபஞ்சத்தில் இவ்வாறு பரவி வரும் போது
1.ஒவ்வொரு கோளும் துருவப் பகுதியின் வழியாகக் கவர்கின்றது.
2.அலைகளாக தன் உடல் (மண்டலம்) முழுவதும் அது பரவச் செய்வதும் சுழற்சியால் வெப்பம் ஏற்படுவதும்
3.இவை இரண்டும் கலந்தாலும் வெப்பத்தின் தன்மை சுழற்சி ஆகும் போது நடு மையம் அடைந்து விடுகின்றது.
ஆக… வெப்பத்தின் தணல் அதிகமாகி கொதிகலன்கள் கூடி நடு மையம் செல்லப்படும் பொழுது அந்தந்த மண்டலத்தில் “ஈர்க்கப்பட்ட உயிரணுக்கள்” அதனுடன் குவிக்கப்பட்டு உறையப்படும் போது பாறைகளுக்கு இடையில் சிக்கி பாறைகளுக்குள் அணுக்களாக மாறுகின்றது.
1.நமது பூமியிலும் ஆதியில் இவ்வாறு ஏற்பட்ட இந்த அணுவின் தன்மைகள்
2.பாறைக்குள் தேரைகளாகவும் வண்டுகளாகவும் விஷத்தன்மை கொண்ட சில உயிரினங்களாகவும் உண்டு.
இதே போன்று எல்லாக் கோள்களிலும் அது அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உயிரணுக்கள் அதிலே சிக்குண்டு வளர்ச்சியற்ற நிலையில் வளர்ந்து கொண்டு தான் உள்ளது.
1.நட்சத்திரங்களில் இவை இல்லை… ஆனால் சூரியனில் உண்டு
2.விஷ அணுக்களை உருவாக்கி இருந்தாலும் அதனுடைய கதிரியக்கப் பொறிகள் பெரும் மாற்றங்களை உருவாக்கும் தன்மைகளும் உண்டு.
ஏனென்றால் இதை எல்லாம் யாம் சொல்லிக் கொண்டு வந்தாலும் சிலவைகளைத் தொட்டுத்தான் காட்டலாம். ஏன் முழுமையாகச் சொல்லவில்லை…? என்று நீங்கள் எண்ணலாம்.
பொதுவாக கல்வியில் பாட நிலைகள் கொடுக்கும் பொழுது அது விஞ்ஞானியாக வரப்படும் பொழுது தான் அந்த முழுமை வரும்.
1.முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பார்த்து இணை சேர்த்து உணர்வினைப் பதிவு செய்து
2.பின் ஒவ்வொரு பாட நிலையும் ஒவ்வொரு ஸ்டேஜுக்குக் கூட்டமைப்புகள் வரப்படும் பொழுது தான்
3.கல்வி அறிவையே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதைப் போன்று தான் அந்த மெய் ஞானிகளின் அணுக்களை உங்களுக்குள் யாம் துணுக்குத் துணுக்காகப் பதிவு செய்யப்படும் பொழுது
1.அந்த ஞானிகள் உணர்வுடன் ஒன்றி வளரலாம்…
2.இந்தப் புவியில் வரும் விஷத்தன்மைகளை மாற்றிடும் சக்திகளை நீங்கள் பெறலாம்
3.நீங்கள் அதைப் பெற முடியும்… பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வாறு உபதேசிப்பது.
குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதே போன்றுதான் உங்களுக்குள்ளும் கொடுக்கின்றேன் நீங்கள் இங்கே சமமாக உட்கார்ந்து கேட்கின்றீர்கள் நான் காட்டிலும் மேட்டிலும் அவதிப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன் பெற்றேன்.
அதை வளர்க்கும் முறைக்கு…
1.பல எத்தனையோ இன்னல்களை உருவாக்கப்பட்டு
2.அந்த இன்னல்களில் இருந்து அது எவ்வாறு மீள வேண்டும்…? என்ற நிலையில்
3.இன்னலான உணர்வுகள் என் உடலுக்குள் ஊடுருவி… அதனால்
4.உடலில் உருப்பெற்ற அணுக்கள் எவ்வாறு எல்லாம் மாற்றமடைகின்றது என்பதை தன்னில் தானே உணரும்படி செய்தார் குருநாதர்,
உங்களுக்கு யாம் அதையெல்லாம் செய்யவில்லை. உயர்ந்த ஞானத்தின் சக்தியே உங்களுக்குள் இப்போது பாய்ச்சப்படுகின்றது.
தாவர இனங்களுக்கு உரம் கொடுத்து அதைச் செழித்து வளரச் செய்வது போன்று உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும்… ஒவ்வொரு ஜீவ அணுக்களிலும் அந்த அருள் மகரிஷிகள் உணர்வை உரமாக்குகின்றோம். அதை நுகரும் ஆற்றலையும் பெறச் செய்கின்றோம்.
அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் நீங்கள் செல்லப்படும் பொழுது “பேரண்டத்தின் பேருண்மைகளை நீங்கள் அறிந்திடும் ஆற்றல் பெறுகின்றீர்கள்…”
இப்பொழுது இல்லை என்றாலும்…
1.இதனுடைய வரிசையில்… “யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ… அவர்கள்”
2.இந்த அண்டத்தின் நிலைகள் உங்கள் பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது…? என்பதை நிச்சயம் உணர முடியும்.

சுவாசம் எனும் அச்சாணி
காட்சி:-
வண்டியில் சக்கரம் சுழன்று… வண்டி ஓட அது உதவியாக வருகின்றது. ஆகவே வண்டி ஓட அந்தச் சக்கரம் தேவை தான். ஓடும் பொழுது அவ்வாச்சாணி முறிந்து சக்கரம் சுழன்று ஒரு பக்கம் உருண்டோடி விடுகின்றது… வண்டியின் குடை சாய்ந்து விடுகின்றது.
வண்டி ஓட அச்சாணி எப்படி முக்கியமோ அதைப் போன்று இந்த வாழ்க்கை என்ற வண்டி ஓடவும்… உடல் என்ற வண்டி ஓடவும்… அச்சாணி தேவை.
விளக்கம்:-
1.வாழ்க்கை வண்டிக்குப் “பொருளான அச்சாணி” வேண்டும்.
2.இந்த உடல் என்ற வண்டிக்கு இவ்வெண்ண “சுவாச அச்சாணி” வேண்டும்.
3.எண்ணத்தின் ஈர்ப்பில் நாம் எடுக்கும் செயலைக் கொண்டு தான் இப்பிம்ப உடலின் ஆரோக்கியத் தன்மையே உள்ளது.
“எண்ணத்தால் தான் அனைத்தும் நடக்கின்றது…” என்று உணர்த்துகின்றேன். ஆனால் இந்த உடலின் உணர்வு நிலை எதன் தன்மை கொண்டது…? என்று கேட்பீர்கள்.
உடலின் உணர்வினால் உணவையும் பசியையும் தாகத்தையும் உறக்கத்தையும் உடல் இச்சையையும் நாம் எண்ணத்தில் எடுப்பதற்கு முதலிலேயே “உணர்வின் உந்தலினால்…” நம் எண்ணத்தால் கொண்ட சுவாசத்தில் உணர்கின்றோம்.
இந்த உணர்வின் நிலை எப்படி ஏற்பட்டது…? எண்ணத்தால் இந்த உணர்வின் அலையை மாற்றி அமைக்க முடியும்.
ஆரம்பக் காலத்தில் இரண்டு வகை குண அமிலச் சேர்க்கையின் ஈர்ப்பில் ஜீவ சக்தி தோன்றியவுடன் அவ்வமில குணம் திடப்பட்டு வளர்ச்சியின் ஜீவ சக்தி உயிர் சக்தி ஏற்படுகிறது.
ஏற்பட்டவுடன் அதன் வளர்ச்சிக்குகந்த ஈர்ப்பின் உணர்வுக்கு மேன்மேலும் தன் உணவைச் சேமித்து… அதன் வட்ட வளர்ச்சி கூடக் கூட உணர்வின் தன்மையும்… உணர்வுக்குகந்த ஈர்ப்பு ஆகாரத்தையும்… சேமித்த இந்த உணர்விலிருந்து தான்… “உருவின் நிலையும் பெறுகின்றது ஜீவ ஆத்மாக்கள்…”
ஆரம்பக் காலத்தின் அமில குணச் சேர்க்கை என்று உணர்த்தியது இந்த உடல் பிம்பத்தைப் பெறத் தக்க அமில குணச் சேர்க்கைக் காலத்தைத்தான் குறிப்பிட்டேன்.
இப்படி இதன் வளர்ச்சி நிலை கூடிக் கூடிப் பல காலமாகச் சேமித்த இந்த உணர்வலையின் வழி சக்தியினால்தான் “எண்ண சக்தியே வலுப் பெற்று” ஜீவ ஆத்மாக்கள் வளர்ந்துள்ளன.
பல பல கோடி ஆண்டுகள் இந்த உணர்வின் அடிப்படை குண அமில ஈர்ப்பை வளர்த்துக் கொண்டு எண்ணியதைச் செயலாக்கும் மனித உரு பிம்ப ஜீவன்களுக்குத் தன் உணர்வின் அலையின் சக்தியும் இந்த எண்ண வளர்ச்சி ஏற்பட்ட ஜீவ உடல் கொண்ட பிறகு…
1.இயற்கையில் உடலில் தன் உணர்வை வெளிப்படுத்தும் செயல் அமிலங்களின் நிலை உள்ளன.
2.எண்ண வளர்ச்சி நிலை கொண்ட மனிதனால் மட்டும்
3.தன் எண்ணத்தால் உடலில் ஏற்படும் இயற்கை உணர்வு தன்மையையும் மாற்றி அமைக்க முடியும்.
4.இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் நிலைக்குகந்த செயலினால்
5.இவ்வுணர்வலையையும் மாற்றி அமைக்க முடியும்.
6.இவ்வுடலுக்கு உணவும் தூக்கமும் இச்சையும் தேவையில்லையா…?
7.இதனை மாற்றியமைப்பதனால் உடல் பிம்ப நிலை எப்படி நிலைத்திருக்கும்..?
உடலுக்குத் தேவையான உணவும் உறக்கமும் வேண்டியது தான்.
ஆனால் இவ்வெண்ணத்தின் செயலினால் அதன் பால் அந்த உணர்வின் தன்மைக்குகந்த வழித் தொடரிலேயே நம் எண்ணத்தைச் செலுத்தி அதன் செயலுக்கே நாம் சென்றுவிட்டோம் என்றால் அதே உணர்வின் எண்ண ஈர்ப்பின் லயிப்பில் தான் நம் ஜீவித காலம் அனைத்தும் சென்றுவிடும்.
பலதரப்பட்ட குணமும் பலதரப்பட்ட சுவையும் விரும்பக்கூடிய ஆத்மாக்கள் உள்ளன. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு வகை சுவையும் உறங்கும் தன்மையும் இருந்திடும்.
அவனது குண நிலையும் சுவை நிலையும் அவனால் இந்த வாழ்க்கையில் மட்டும் எடுத்ததல்ல. ஆரம்ப அமில குண வளர்ச்சி காலத்திலேயே அவன் ஈர்த்து உணர்ந்த எண்ணத்தின் தொடர்பு தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்று வரை உள்ளது. உணர்ச்சியிலும் அவனது உடலின் இச்சையின் நிலையும் இவ்வாரம்பக் காலத்தின் வளர்ச்சியில் வந்தது தான்.
பசியும் தூக்கமும் ஆரம்பக் காலத்தில் குழந்தைப் பிராயத்திலிருந்தே அறிந்து உணர முடிகின்றது. ஆனால் வளர்ந்த பிறகு தான் உடல் இச்சையின் உணர்வு ஏற்படுகின்றது.
தாவரங்கள் அதன் வளர்ச்சியின் அமில குண சேர்க்கையின் சக்தி படிவத்தினால் அதன் பலனை வளர்ந்த பிறகு பூவாகி காயாகிக் கனியாகித் தருகின்றன.
அதைப் போன்று மனித வளர்ச்சியிலும் இவ்வளர்ச்சி முற்றலின் அமிலச் சேர்க்கையின் உணர்வின் நிலை குறிப்பிட்ட வயது வரம்பு சேர்க்கைக்குப் பிறகு வெளிப்படுகின்றது.
இந்த உணர்வின் வழித் தொடரினால் ஏற்படும் இந்நிலைகளை எண்ணத்தின் நிலைக்கொப்ப எப்படி ஒவ்வொரு மனிதனும் வழிப்படுத்தி வாழுகின்றான்…?
1.இந்த உடலின் தேவையான பசிக்கும் தூக்கத்திற்கும் இச்சைக்கும்
2.இவ்வெண்ணப் பழக்கத்தைச் செலுத்திய முறைப்படி அதன் தேவைகளை எல்லாம்
3.இவ்வெண்ணத்தின் பிடியில் அளவுடன் ஒரு நிலைப்படுத்த முடியும்.
தன் எண்ணத்தைக் கொண்டு இவ்வுணர்வின் இச்சைகளை எல்லாம் ஒரு நிலையில்… இவ்வுடலின் பிம்பத்திற்குத் தேவையான அளவுடன் செயல்படுத்தி வாழ்ந்து வரும் மனிதனின் வாழ்க்கை… அழகுடனும்… அமைதியுடனும்… மனிதன் மனிதனாக இருக்கவல்ல தன்மையுடனும் இருக்கும்.

தலைப்பென்ன தலைப்பு…! தலைவனையே தலைப்பாக்கு…! தந்திடுவான் சகலத்தையுமே…!
“உரைக்கும் உரை எல்லாம் உனதாக இருந்திடவே” என்பது யாரைப் பார்த்துப் பாடுகின்றார்…?
“உரைத்து விடு ஈஸ்வரா… உரைக்கும் உரை எல்லாம் உரைத்து விடு ஈஸ்வரா…!” எப்பாடளைப் பாடினாலும்
1.முதல் அடியை அவனுக்கு அருளிவிடு
2.தந்திடுவான் அப்பாடலின் தத்துவத்தையே.
உண்ணும் உணவெல்லாம் உனதாகும்
உறங்கும் உறக்கம் எல்லாம் உனதாகும்
உணர்வில் உணர்வாக ஊன்றி விடு…
உலகாண்ட ஈஸ்வரனே…!
உலகை என்னும் பொழுது இந்த ஒரு உலகை மட்டும்தான் குறிக்கும். “உலகாண்ட ஈஸ்வரனே” என்னும் பொழுது அதன் அர்த்தமே வேறு.
இப்பாட்டின் தன்மையில் தான் உலகத்தன்மை எல்லாம் உள்ளது. பாடலை ஆடிக் கொண்டே பாடிவிட்டார்… உணர்வையும் மாற்றிவிட்டார்… தனதாக எண்ணிவிட்டார்… “தந்தேனா என் பாடலை…?”
உனதல்ல எனதல்ல இவ்வுலகம் என்பதன் பொருளும் இதுவே தான். தன் உதயத்துக்கு வந்தது என்று எண்ணிப் பாட்டை பாடி வந்தான்.
1.தலைப்பென்ன தலைப்பு…!
2.தலைவனையே தலைப்பாக்கு…!
3.தந்திடுவான் தனிக்கவிதைகளை.
உன் சஞ்சலத்திற்கு விடையளிக்கின்றேன்…!
மனமான சஞ்சலத்தை வளர விடாமல் மனதில் உள்ள எண்ணத்தைப் பெரும் சஞ்சலம் ஆக்கி விடாமல் “அவனிடம் (ஈசனிடம்) சமர்ப்பித்தால் அவன் அளிப்பான் அதன் விடையை…!”
சித்தர் என்பவர் யார்…? எந்த நிலையில் அவர்கள் உள்ளார்கள்…? என்னும் சஞ்சலம் ஏன் உள்ளது…? சித்தரும் ஞானியும் எப்படி உள்ளார்கள்…? என்ற எண்ணச் சஞ்சலத்தின் உள்ளே தவிக்கின்றாய்.
மனிதனால்… மனிதனால் என்னும் பொழுதெல்லாம் எண்ணுகின்றாய். ஆண் வர்க்கத்தையே. “ஆண்… பெண்” என்னும் மாற்று நிலை எனக்கில்லை (ஈஸ்வரபட்டர்).
உன் சஞ்சலம்…
1.உடலுடன் உள்ள போகர் எப்படி உள்ளார்…?
2.அவரின் உறக்க நிலை என்ன…?
3.உண்ணும் நிலை என்ன…? உடலின் நிலை என்ன…?
4.உடலுடன் உள்ள போகர் அந்நிலையில் என்ன செய்வார்…? என்று எண்ணுகின்றாய்.
“ஈஸ்வரபட்டரான… என் நிலையை எண்ணிப்பார்…” உடலை விட்டு நான் பிரிந்து சென்று விட்டேன் என்ற உண்மையைச் சாமி (ஞானகுரு) சொன்னதை எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.
போகரின் நிலையில் அவர் எந்த நிலையில் உள்ளார் என்று ஒருவரும் சொல்லாததினால் நீங்களாக அறிந்திட்ட நிலையில் மனச்சஞ்சலம் கொண்டுள்ளீர்கள்.
எந்நிலையில் தெரிந்து கொண்டீர்கள் அவர் நிலையை…? அந்நிலையிலேயே தெரிந்து கொள்ளுங்கள்.
1.அவர் உயிருடன்… உடலுடன்… உலகமுடன் உள்ளார்.
2.அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா எந்நிலைக்குச் சென்றாலும் அந்த ஆத்மா திரும்பவும் அவர் உடலுக்கே வருகின்றது.
3.அவர் ஆத்மாவுக்கு எடுக்கும் உணவையே அவர் உடலுக்கும் அளிக்கின்றார்.
4.அவர் உடலுக்கு உணவு வேண்டாம் உணர்வும் வேண்டாம்
5.அந்த உடல் எந்நிலையிலும் எந்த நேரத்திலும் அது அமர்ந்த நிலையிலேயே தான் உள்ளது
6.உடலில் உள்ள ஆத்மா தான் எந்த நிலைக்கும் வருகிறது.
அவர் உடலைப் பாதுகாக்கும் தன்மை எல்லாம் “அவரின் தியான நிலையிலேயே” உள்ளது.
1.உடலில் உள்ள ஆத்மாவை எங்கும் பறக்க விடுகிறார். பழனியில் மட்டும் அவரின் ஆத்மா சுற்றவில்லை.
2.பழமுதிர்சோலையிலும் சுற்றுகிறது. பழனியப்பன் எங்கெல்லாம் உள்ளானோ அங்கெல்லாம் செல்கிறது.
3.முருகா…! என்னும் நாமம் எந்த உள்ளத்தில் இருந்து அபயமாக அழைக்கின்றதோ அங்கெல்லாம் செல்கிறது.
“சித்தர்கள் எல்லாம் சோம்பேறி… ஞானிகள் வேலை இல்லாதவர்கள்… என்ற எண்ணம் தான் மனிதருக்குள்ளே…” போகர் அவர் இருந்த நிலையிலேயே அவ்ஆன்மா அழைக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று அருள் பாலிக்கின்றார்.
உலகையே சுற்றுகின்றார்… முருகா…! என்னும் இடமெல்லாம் சுற்றுகின்றார்… இன்றும் உள்ளார்… உலகுடனே கலந்துள்ளார்.
நான் பிறந்த பயனையும் தான் பெற்ற உடலையும் தன் ஆத்மாவையும் உலகுடனே ஒன்றச் செய்துள்ளார். உலகம் அழிந்தாலும் அவர் நிலை அழியாது.
இந்நிலையைப் புகட்டவே உன் நினைவில் கனவைத் தந்தேன் உலகெல்லாம் அழியும் நிலை உள்ள போது மலை மீதுள்ள கோவில் மட்டுமே சிலர் அங்கே இருந்து காட்டியதன் பொருள் இதுதான்.
1.போகரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
2.ஒவ்வொரு ஞானியின் நிலையும் எண்ணத்தில் வரும்.
ஒவ்வொரு ஞானிக்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது. அவரவர் பூஜித்த முறையிலும் அவரவர் தியானத்தின் தன்மையிலும் அருளியுள்ளார்கள். அப்பரமேஸ்வரனின் அருள் எல்லாம்… “உங்கள் நிலை என்ன…?” என்பதை நீங்களே எண்ணிக் கொண்டு உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளுங்கள்.
அவர் அருள்வார் நல் ஆசிகளை. இன்றைய பாட நிலை புரிந்ததா…?
இரத்தினகிரி பிறந்திடுவார் பெரும் புலவனாகப் பாடிடுவார் அவர் புகழை…! அவன் அருளில் பிறந்தவன் நீ.
பகர்ந்திடுவாய் பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பாரெல்லாம் பாடிடவே பகர்ந்திடுவாய் பரமேஸ்வரனே
பஞ்சம் பஞ்சம் என்கிறார்கள் பாமரர்கள்
பாற்கடல் அளவு தந்தாலும் பஞ்சம் தான்
பஞ்சம் என்னும் பசியைப் போக்கிவிட்டு
பரஞ்சோதியானவனை வணங்கிடவே
பகர்ந்துவிடு பரமேஸ்வரா…!

என்னப்பா சிவக்கொழுந்தே…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…!
பூஜை (தியானம்) புனஸ்காரம் செய்து தான் தொழில் செய்ய வேண்டும். உன் தொழிலில் “என்றும் அவன் அருள் இருக்க” எத்தொழில் செய்தாலும்… “அவனை முதலில் நினைப்பதற்கே” இந்தப் பூஜை செய்வது எல்லாம்…!
1.பூஜை செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும் என்பதில்லை.
2.பூஜை செய்பவனுக்கும் பலன் உண்டு
3.பூஜை முறை தெரியாதவனுக்கும் பலன் உண்டு.
நீ செய்யும் எத்தொழிலிலும் அதைச் செய்வதற்கு முன் உன் மனதை ஒரு நிமிடம் அமைதிப்படுத்து.
1.மனச் சஞ்சலம் நீங்கி ஆரம்பிக்கவே தியானம் செய்வது
2.என்றென்றும் என் அருளும் ஆசியும் உனக்கு உண்டு.
உன் எண்ணத்தில் யார் இருக்கின்றார் என்று எண்ணிப்பார்
1.எண்ணும் எண்ணமே தான் மனிதன்.
2.எண்ணமே தான் மனிதன்… மனிதன் தான் எண்ணம்…!
3.எண்ணமும் மனிதனும் ஒன்று தான். தேவனும் மனிதனும் ஒன்று தான்.
4.எண்ணம் என்பது மனிதனின் பூர்வ புண்ணியப் பலன்.
5.ஒரு மனிதனை உயர்த்துவதும் அவன் எண்ணம் தான்… மனிதனை இறக்குவதும் அவன் எண்ணம் தான்.
6.எண்ணத்தால் உலகையும் ஆளலாம்.
7.எண்ணத்திலிருந்து உறங்கவும் செய்யலாம்… ஆனால் உறங்கிவிட்ட எண்ணத்திற்கு உலகமே இல்லை.
8.மனிதனின் எண்ணம் எல்லாம் பெரும் மலை போல் உயர்ந்திட வேண்டும்.
9.மடு போலக் குறுகியிருக்காமல் மலை போல் உள்ளவனுக்கே வாழ்க்கை எல்லாம் கிடைக்கும்.
10.எண்ணத்தைக் குறுக்கியவனுக்குக் குறுகிய வாழ்க்கையே அமையும்.
11.எண்ணத்தில் உயர்ந்தவனுக்கு முடிவேது…?
12.எண்ணத்தை உயர்த்தி உயிரான ஈசனை நினைத்து விட்டால் அவன் வந்து வழி நடத்திடுவான்.
ஆகவே எண்ணும் எண்ணம் எல்லாம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்….! என்று சொல்லும் பொழுது எண்ணும் எண்ணம்… எனும் பொழுது
1.அதை நம்மால் செயல்படுத்த முடியுமா…? என்று எண்ணக் கூடாது.
2.எண்ணும் பொழுதே “அதைச் செய்திடுவோம்…!” என்றே எண்ண வேண்டும்.
3.எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஆசையுடனே செய்ய வேண்டும்.
4.ஆசையுடன் செய்திடும் பொழுது தான் அந்த எண்ணம் உயர்ந்து நிற்கும்.
மனிதனாகப் பிறந்தவன் எந்தக் காரியத்தையும் செய்யும் வலிமையான அருளைப் பெற்றுத்தான் பிறந்திருக்கின்றான். மனிதனாகப் பிறந்த அந்தப் பாக்கியத்தை மாற்றிடாமல் தன் எண்ணத்தைக் குறுக்கிவிடாமல் மலை போல் உயர்த்தி விட்டால் மாமனிதனாக வாழ்ந்திடுவான்.
எண்ணும் எண்ணமே இறைவன்… இறையின் செயலே தெய்வம்…! நாம் எண்ணுவதே தெய்வமாக உள் நின்று இயக்குகிறது. நல்ல எண்ணங்களை எண்ணி நல்ல சொல்களைப் பேசினால் நாவெல்லாம் இனித்திடும்… மனமெல்லாம் மணக்கச் செய்யும்.
1.நல்ல எண்ணங்களை எண்ணும் பொழுது மெய் ஞானிகளின் அருளை எளிதில் பெறலாம்
2.பெற்றுவிட்டால் அவர்களே நம்மை மெய் வழியில் நடத்திச் செல்வார்கள்.
3.அத்தகைய பேரின்ப நிலை பெற்றுவிட்டால் “மனிதனே தான் தெய்வம்…!”
என்னப்பா சிவக்கொழுந்தே…? சொல்லும் பாடம் உனக்குத்தான்…! சிவக்கொழுந்தாய் இருக்கின்றாய்… சிவனாக வருவதற்கே “எண்ணம்” என்னும் பாடத்தைத் தந்தருளியுள்ளேன் உனக்கு.
இந்தப் பாடமுறை எல்லாம் உன் மனதையே வட்டமிட்டு கொண்டுள்ளது. வட்டமெல்லாம் சுற்றிவிட்டால் உன் மனமே சுற்றிக் கொள்ளும். உன் மனமான எண்ணத்தில் மாசிலா இன்பத்தைக் காண்பாய்.
1.மனம் கலங்கிடாதே
2.இக்கலக்கம் எல்லாம் இனி உனக்கு இல்லை.

நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… விண் சென்ற முதல் மனிதன் துருவ நட்சத்திரமானான்
பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வின் தன்மையை முதல் மனிதன் அகஸ்தியன்
1.அவனுடைய சந்தர்ப்பம் தன் உடலிலே அது பெருகச் செய்தான்
2.அவனுக்குள் விளைந்த உணர்வுகளை இதே சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து நம் பூமியில் பரவச் செய்து கொண்டுள்ளது.
அதையெல்லாம் நீங்கள் பருகுவதற்குத் தான் “அடிக்கடி அடிக்கடி” அதை ஞாபகப்படுத்துவது.
துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷிகளின் அருள் சக்தியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற இந்த உணர்வினை நீங்கள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.
அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களும்… அதனின் இயக்கத் தொடர்களில்
1.ஒவ்வொரு நட்சத்திரத்தின் எதிர்மறையான… அதாவது…
2.இரண்டு இரண்டு நட்சத்திரங்கள் (+/-) நெகட்டிவ் பாசிட்டிவ்…
3.ஒன்று வலிமையானது ஒன்று வலிமை இழந்தது…
4.இந்த உணர்வின் தன்மை மோதல் வரும் பொழுது தான்… ”வெல்டிங்”
5.மின்னல் போன்று தன்மை வரப்படும் பொழுது உயிரணுவாகத் தோன்றுகின்றது.
இந்த உணர்வின் இயக்கத்தில்… உயிரணுவின் நட்சத்திர இயக்க ஓட்டத்தை… அதிலே எதனின் வலிமை இருக்கின்றதோ அதைப் போன்று
1.“இந்த 27 நட்சத்திரங்களின் சக்தியை பெற வேண்டும்” என்று
2.அன்று துருவன் நுகர்ந்து கொண்டான்.
ஏனென்றால் பல நட்சத்திரங்கள் இருப்பினும் ஒவ்வொன்றிலும் 27 நட்சத்திரங்களில் “ஒன்று முன்னணியில் இருந்து” மற்றதை அது அடக்கும்.
ஆனாலும் மனித உடல் அல்லாது மற்ற உயிரினங்களில் இந்த நட்சத்திரங்கள் பொருந்தி வராது. காரணம்… நஞ்சு கொண்ட உணர்வின் எதிர் நிலைகள் வருவதனால்…! ஆனால் மனிதனுக்குள்ளோ
1.நட்சத்திர அணுக்களின் தன்மையைத் தனக்குள் சமப்படுத்தி
2.தான் ஒளியின் சுடராக மாற்றும் அறிவின் தன்மை பெற்றது.
ஆகவே அவ்வகையில் ஒவ்வொரு மனித உயிரான்மாவிலும் அந்த நட்சத்திர இயக்கத்தின் தன்மை கொண்டு
1.27 நட்சத்திரங்களின் சக்தியையும் கவர்ந்து மற்ற உணர்வுடன் கலந்து
2.அந்த உணர்வின் தசைகளாக நவக்கோள்கள் என்று நம் உடலின் தன்மையும்
3.அதே சமயத்தில் சப்தரிஷி மண்டலம் – மனித உடல் பெற்ற பின் இந்த உணர்வின் ஒளியாக – ஆறாவது அறிவாக நமக்குள் மண்டலங்களாக அமைத்து
4.ஆறாவது அறிவின் தன்மையைத் தனக்குள் அந்தச் சப்தரிஷி மண்டல உணர்வின் தன்மையை வளர்க்க வேண்டும்… வளர்க்க முடியும்.
(சப்தரிஷி மண்டலம் என்பது நமக்குள் இருக்கும் அனைத்து அணுக்களின் தன்மையும் மண்டலங்களாக அமைகின்றது).
மனிதனின் ஆறாவது அறிவை… சப்தரிஷிகள்… ஏழாவது ஒளியாகப் பெற்றதை நாம் கவர்ந்து
1.நமக்குள் இருக்கும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் உணர்வை வலிமை பெறச் செய்வதற்கும்
2.இவை அனைத்திற்கும் மூலமாக இருந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியின் தன்மையைப் பெறுவதற்கும்
3.இப்படி “நான்கு ஐந்து கட்டங்களில்” இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் அணுக்களாகப் படரச் செய்து கொண்டுள்ளது.
4.இவை அனைத்தும் ஒருக்கிணைந்து எடுக்கப்படும் போது உங்களுக்குள் அனைத்தையும் சமப்படுத்தும் நிலை பெற்றது.
துருவ மகரிஷி அந்த 27 நட்சத்திரங்களின் சக்திகளையும்… நவக்கோள்கள் உமிழ்த்தும் சக்திகளையும்… தனக்குள் கவர்ந்து ஆதியிலே அதனின் உணர்வை விளைய வைத்தவர்.
ஆனால் அவை அனைத்தும் விளைந்து வந்ததைச் சூரியன் தனக்குள் படைத்து ஒளிக் கதிர்களாகப் பரப்புவதை (பாதரசம் – வெயில்)
1.துருவன் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்த்து
2.அந்த ஒளிக் கதிரின் அணுக்களை தன் உயிருடன் ஒன்றிய ஒளிக்கதிர்களாக மாற்றிக் கொண்டவன் – முதல் மனிதன் அவன்.
1.வானஇயலில் தோன்றிய சக்திகள் புவிஇயலுக்குள் வந்து
2.உயிரியல் மாற்றங்களாகி மனிதனாக வளர்ச்சி ஆகி
3.புவியின் மாற்றத்திலிருந்து விடுபட்டு மீண்டும் வானியில் உணர்வுகளைத் தனக்குள் நுகர்ந்து
4.ஒளியின் சுடராக இன்றும் சுழன்று கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளான்
5.நம் பிரபஞ்சத்திலேயே… நம் சூரியக் குடும்பத்திலேயே… முதல் மனிதன் துருவன் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானான்.
அதனின்றி வெளி வரும் உணர்வினை நாம் பெற்றோமென்றால் அவனைப் போன்றே ஒளியின் தன்மையைப் பெற முடியும். அவன் சென்ற எல்லையை நாமும் அடைய முடியும்.
அதற்கே குரு வழியில் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).
![]()
“தர்மயுத்தம்” என்ற பெயரில் ஞானிகள் கொடுத்த உண்மையையே தலைகீழாக மாற்றி விட்டார்கள்
ஒவ்வொரு காலத்திற்குள்ளேயும்…
1.ஆதியில் இருந்து இன்று வரையில்
2.காலத்துடன் ஒன்றி கடவுள் என்பவர் பிறக்கின்றார்… அவதாரம் எடுக்கின்றார்
நீ அறிந்த காலம் வரை சொல்கின்றேன்.
சிவனாகப் பிறந்ததும் அவனே; சிவனின் மகனாக வந்ததும் அவனே; இராமனின் காலமும் அவனே; கிருஷ்ணனும் அவனே; நபியும் அவனே; இயேசுவும் அவனே; புத்தனும் அவனே…!
புத்தரின் காலத்திற்குப் பின் கடவுளின் சக்தியைக் கொண்டு அவதாரம் யாரும் எடுக்கவில்லை. இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நபி புத்தர் இயேசு ஆகியோர் ஞான அருள் பெற்ற “ஞான தீபங்கள்” ஆவர்.
சிவனும் சித்தர் தான்…! அன்றும் அவதாரம் எடுத்தார் “இன்றும் அவதாரம் எடுத்திருக்கின்றார்…!” அன்றுள்ள காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. இக்காலத்தில் மக்களின் மனமே மாறிவிட்டது.
கலியின் தன்மையைப் பார்த்தாயா…?
கலியின் தன்மை எல்லாம் மாற்றிடத் தான் மானிடருக்குத் தியானத்தைப் பற்றி சொல்கின்றேன் கல்கியின் தன்மையில் வந்து விட்டால் காவியத்தில் வந்துவிடும்… கருத்துடன் எல்லாம் நடந்து விடும் கர்ம பயனைப் பெற்றுவிடலாம் காவியத்தன்மையில் இடம் பெற்றிடலாம்.
இக்கலியுகத்தின் எண்ணமெல்லாம் காவியத்தில் நிலைத்திடாது காலப்போக்கில் அழிந்துவிடும்.
1.பறக்கும் மனிதனை இனி நீ காண்பாய்
2.பாரினில் உள்ள நிலை எல்லாம் பார்த்திடலாம்
பழிக்கும் எண்ணம் தான் இன்று உள்ளது பழிவாங்கிடும் நிலையே தான் இருக்கின்றது. நல்லதை எண்ணும் நிலை இல்லை… தூற்றிடும் உள்ளங்கள் தான் உண்டு.
கலியில் பிறந்த மனிதன் எல்லாம் காவியத்தில் வந்திடுவானா…? உன் அறிவுக்கு எட்டும் விஷயங்களை எல்லாம் சிறுகச் சிறுகப் பகிர்ந்திடுவேன்.
இராமாவதாரத்தைப் பற்றி விளக்கங்கள் சொன்னேன்… சிறு புள்ளிதான் அது…! கிருஷ்ணாவதாரத்தின் நிலையைப் பார். கிருஷ்ணனின் கதையிலேயே “கிருஷ்ணரின் பிறப்பின் ஜாதகத்தைக் கணித்து விட்டார்கள்…”
கிருஷ்ணனின் அவதாரம் என்ற நாளில் தான் ஜாதக நிலையும் வந்தது
1.பெரும் குறை (குழப்பம்) நிலையும் வந்தது.
2.மனிதனின் நிலையையே மாற்றியது கிருஷ்ணாவதாரக் காலத்தில் தான்.
இராமாவதாரம் முடிந்து கிருஷ்ணாவதாரம் ஆரம்பிப்பதற்குள் மனிதரின் நிலை எல்லாம் சிறிது சிறிதாக மாறிவிட்டது. கிருஷ்ணாவதாரத்தில் தோன்றிய சித்தன் தான் கிருஷ்ணாவதாரம் என்ற நூலையும் எழுதியவன்.
கிருஷ்ணன் என்பவன் பிறந்தானா…? பிறந்து வெண்ணையை அவன் உண்டானா…? வாயைத் திறந்து உலகத்தன்மையே காட்டினானா…? கிருஷ்ணன் என்பவன் யாரப்பா…?
மனிதர்கள் தங்களுடைய நிலைக்காக இராமாவதார நூலில் உள்ள “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலையையே மாற்றி கிருஷ்ணாவதாரம் என்ற நூலில் கிருஷ்ணனுக்குப் பல மனைவிகளை அமைத்தார்கள்.
இராமாவதாரத்தில் உள்ள நிலையிலும் கிருஷ்ணாவதாரத்தில் உள்ள நிலையிலும் உள்ள மாற்றங்களைப் பார்த்தாயா…? இராமாவதாரத்தில் தந்தை சொல் தட்டாத தனயனும் சகோதரப் பற்றுமுள்ள தமயனையும் காணலாம்.
தர்மம் நியாயம் என்பதெல்லாம்
1.கிருஷ்ணாவதாரத்தில் தர்மயுத்தம் என்ற நிலையிலேயே அழிந்து விட்டது.
2.பெரும் சூதும் சூதாட்டமும் கிருஷ்ணாவதாரத்தில் அமைந்ததுவே.
3.தன் நிலை உயர்ந்திட எந்த நிலையிலும் இருக்கலாம் என்னும் பழக்கமே கிருஷ்ணாவதாரத்தில் தான் வந்தது.
4.சொல்லும் செயலும் மாறியதும் கிருஷ்ணாவதாரத்தில் தான்.
சித்தன் எழுதிய கீதையையே மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்தில் கீதையின் உபதேசங்கள் எல்லாம் படித்தவுடன் புரிகின்றதா…?
1.பாமரனுக்கும் புரிந்திடும் கீதையைப் பழிக்கும் நிலையில் விட்டு விட்டார்கள்.
2.குருவும் சிஷ்யனும் என்ற நிலையைக் குருடாக்கி விட்டார்கள்.
3.தான் கற்றதைப் பிறருக்குச் சொல்லும் நிலையில் இல்லாமல் மாற்றி விட்டார்கள்.
கோவில் குளங்கள் என்பதையே ஜாதி மதம் என்னும் தன்மையில் ஏற்றி விட்டார்கள். ஜாதியும் மதமும் கிருஷ்ணாவதாரத்தில் வந்ததுதான். உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் கிருஷ்ணாவதாரத்தில் வந்தது.
ஏழை பெருத்தவன் சிறுத்தவன் பெரும் செல்வந்தன் என்னும் நிலையில் கிருஷ்ணரைச் செல்வந்தனாகவும் குசேலரைப் பரம ஏழையாகவும் காட்டியது கிருஷ்ணாவதாரத்தில் தான்.
நூலின் தன்மையையே அவரவர் இஷ்டத்துக்கு மாற்றி விட்டார்கள். கிருஷ்ணாவதாரத்திற்குள்ளே கிருஷ்ணன் என்பவன் இல்லை அப்பா. “கிருஷ்ணா…” என்னும் ஜெபம் ஓங்கிடவே கிருஷ்ணனின் கதையும் வந்ததப்பா.
சக்தியின் சக்தியே அக்கிருஷ்ணன் அப்பா. கிருஷ்ணனின் கதை எல்லாம் மனிதர்கள் (அவர்கள்) சொன்ன கதையப்பா. ஆகவே கிருஷ்ணனின் கதையைப் படித்துக் கிருஷ்ணனே இப்படித்தான் இருந்தான்…! என்னும் நிலை வேண்டாம்
கிருஷ்ணாவதாரக் காலத்தில் மனிதர்கள் இருந்த நிலையை வைத்துத்தான் கதையெல்லாம் உள்ளது. “தர்மயுத்தம்” என்பதும் மனிதர்கள் வைத்த கதை தான்
கிருஷ்ணாதாரத்தில் வந்த கிருஷ்ணனைப் பார்த்தவர் யாரப்பா…? இராமனும் வாழ்கின்றான்… கிருஷ்ணனும் வாழ்கின்றான்… கலியும் வாழுகின்றது கல்கியும் வருகிறது… “எல்லாமே ஈஸ்வர சக்தியின் ஆசியால்…!”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்… நினைவுபடுத்துகிறோம்.
அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்…!
ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம்… ஆனால் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே…! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது.
அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம். எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.
1.அத்தனை தியானம் செய்தேன்… என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது…!
2.எவ்வளவு தியானம் செய்தேன்…? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே…! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்… நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.
ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.
ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்…” என்று உற்றுப் பார்க்கின்றோம்… அது தான் அழுத்தமாகப் பதிவாகிறது.
பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ… அடுத்த கணமே அதை மாற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.
ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்… நலம் பெறுவார்கள்…! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.
ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து… சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது…! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்
உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்… ஏமாற்றினான்…” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.
இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.


விண்ணின் ஆற்றலைப் பெற… அகஸ்தியன் மனைவி “அவனுக்கு(ள்) உறுதுணையாக இருந்த நிலை”
“வான இயல்” தத்துவம் தான் கோள்கள் நட்சத்திரங்கள் சூரியன் உருவாவதற்கே காரணம் ஆகின்றது. ஆக… வான இயல் தத்துவத்தின் பிரகாரம் பிரபஞ்சத்திற்குள் மாற்றமாகும் போது ஒன்றுடன் ஒன்று கலவையாகி கோள்களின் ரூபங்களும் மாறுகிறது.
அதே போன்று தான் “புவிஇயலின்” வாழ்க்கையும்…
1.ஒன்றுடன் ஒன்று பல கலவையாகி தாவர இனங்கள் உருமாறுவதும்
2.இதை உணவாக உட்கொள்ளும் உயிரணுக்கள் அது நுகர்ந்தறிந்த உணர்வுகளும் உணவாக உட்கொண்ட உணர்வுகளும்
3.இதனின் உணர்வணுக்கள் இணை சேர்த்து “உயிரியல்” மாற்றங்கள் வருகின்றது
உயிரியல் மாற்றங்கள் வந்த நிலைகள் கொண்டு நம் பூமியில் வளர்ச்சி பெற்று வந்தவன் தான் அகஸ்தியன்.
ஏனென்றால் வான இயல் தத்துவம் அனைத்தும் புவியியலாக மாறி… புவியில் விளைந்த தாவர இனங்கள் அதனின் குணம் உணர்வு சுவை இவை எல்லாம் கலவைகளாகி…
1.மணங்களும் ஞானங்களும் வளரப்பட்டு
2.உயிரினங்களில் ரூபங்கள் மாற்றப்பட்டு
3.இவை அனைத்தும் கடந்து மனிதனாக வந்தோம் என்பதை அறிந்து கொண்ட முதல் மெய் ஞானி அகஸ்தியன்…!
அக்காலங்களில் அகஸ்தியனும் அவன் மனைவியும் இணை சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால் காவியங்களில் இவர்கள் தனித்து பிரித்துக் காட்டுகின்றார்கள். இது முறையல்ல… முறையற்ற நிலை…!
கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்த உணர்வுகள் கருவுற்று…
1.கருவின் நிலையில் கொண்டு விண்ணுலக ஆற்றலை இவர் கவர்ந்து
2.தன் மனைவிக்கு கிடைக்க வேண்டும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட இருவரின் உணர்வும்
3.இதனுடைய உணர்வின் சேர்க்கைகள் வளரப்படும் பொழுது தான்
4.விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அகஸ்தியன் பெறுகின்றான்.
அதே சமயத்தில் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெறும் பொழுது இடைமறித்து “அகஸ்தியனின் மனைவி மடிந்து விடுகின்றது…”
1.உயிரான்மா பிரிந்தாலும் எதனின் நோக்கத்தில் கணவன் மேல் பற்று கொண்டதோ
2.அந்த ஆன்மா அகஸ்தியன் உடலுக்குள் சென்ற பின் அகஸ்தியனுக்கு உறுதுணையாக
3.உள் நின்றே உணர்வின் தன்மை பெறும் நிலையும்
4.கருவின் நிலைகள் இணை சேர்த்து… இரு கருக்களும் (உயிரும்) ஒன்றாக்கும் நிலையும்
5.விண்ணின் ஆற்றலைத் தன் அணுக்களில் மாற்றும் தன்மையும் அங்கே உருப்பெறச் செய்தது.
இது இயற்கையின் உண்மை…! குருநாதர் இதை எனக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.
அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் அவனின் உணர்வுகளை கணவனும் மனைவியும் ஒன்றிய நிலையில் கவர்ந்தவர்கள் அனைவரும்
1.வசிஷ்டரும் அருந்ததி போன்ற வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்து
2.சாவித்திரி போன்று இணை சேர்த்த உணர்வுகள் கொண்டு வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்து
3.தீமைகளைத் தன்னுள் நாடாது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி
4.ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக சப்தரிஷி…! சிருஷ்டித்துக் கொண்ட நிலையாக
5.இன்றும் விண்ணுலகில் வாழ்த்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.
மனிதனாகப் பிறந்த நாம் அனைவரும் சென்றடைய வேண்டிய எல்லை அது தான்…!

எல்லாமே முதல் படி தான்… முடிவு என்பதற்கு இடமே இல்லை
பரஞ்சோதி வடிவானவனே
பரம பிதாவாகி நின்றாய்
பரம்பொருளை எல்லாம்
பகர்ந்திடுவாய் இம்மானிடர்க்கே
பாட்டின் ஆரம்பத்தைப் பார்த்தாயா…! இதை வைத்துப் பாட்டு எழுது. ஜாதி மதம் இனம் வேண்டாம் என்பதற்குத்தான் இந்தப் பாடலின் முதல் அடியைத் தந்துள்ளேன்.
இப்பாடலின் தொடரை இன்னும் ஒரு முறை உன் வழிக்கே விடுகின்றேன். பாடலின் வரிசை எல்லாம் நான் சொன்ன பிறகு பகர்ந்திடலாம் எல்லோருக்கும்.
1.எந்தச் சொல்லையும் எந்தச் செயலையும் எப்பொழுதும் முழுமையுறாமல் வெளியிடுவது நன்றல்ல… பிறரின் புகழ் நமக்கு வேண்டாம்.
2.பரம் பொருளின் பரம பிதாவாகிய எல்லாமே பரம இரகசியமாகத் தான் இருக்க வேண்டும்.
3.பெரும் சித்தர்களின் நிலை எல்லாச் சொல்லும் வெளியிடாமல் சென்றதன் இரகசியமும் இதுதான்.
முற்றும் அறிந்து விட்டேன் என்பவனின் நிலை எல்லாம் பார்த்தாயா…?
1.எல்லாமே முதல் படி என்பதன் பொருளும் இதுதான்….!
2.எப்படியும் முடிவு பெறுவது வேண்டாம்…
3.நம் உயிரே முடிவு பெறாமல் இருக்கும் பொழுது “எல்லாமே முடிவு பெறாமல் இருக்கட்டும்…” என்றதன் பொருளும் இதுதான்.
பூமியின் நிலையை அறிந்து விட்டாயா…! பெரும் பாற்கடலில் உள்ளே என்ன என்று எண்ணினாயா…? பாற்கடலைக் கடைந்தான் ஈஸ்வரன் என்கின்றீர்… உலகம் உருளுகின்றது என்கின்றீர்…!
உலகம் உருளுகின்றதன் மனம் (MIND) என்ன என்று தெரியுமா…? கடலும் உள்ளது; மலையும் உள்ளது; மடுவும் உள்ளது; மரமும் செடிகளும் உள்ளது; மனிதனோடு மிருகமும் உள்ளது; இயற்கை தந்த பொருளுடன் மனிதனால் சமைக்கப்பட்ட செயற்கையும் உள்ளது. இவற்றுடன் கலந்த ஓரினமும் உள்ளது…!
உலகத்தில் கலந்துள்ள செயற்கையைத் தான் காண்கின்றீர்கள். சாமியிடம் கேட்டீர்களா அவன் வழி சொன்னானா…? அதன் நிலை என்னப்பா…?
1.உன்னுள்ளே இருக்கும் ஈஸ்வரனையே அறிந்து கொள்ள முடியவில்லை
2.பூமியின் உள் நிலையை எப்படி அறிவாய்.
பூமித் தாய் என்னும் “என் தாய்” அங்குள்ளாள். ஒளியின் தன்மையையும் ஒளியின் ஒளியையும் ஒலியின் ஒளியையும் இழுத்துக் கவர்ந்து கொண்டிருக்கின்றாள்… அதிலே தான் நீ நிற்பதும் நடப்பதும்…!
பூமித்தாயின் ஈர்ப்பினால் ஒலியெல்லாம் ஒளியாகி அத்தன்மையை தன்னுள் ஈர்த்து மண்ணில் உள்ள காந்த சக்தியால் உலகை ஆட்டுவிக்கின்றாள்.
உன் எண்ணத்தினால் “எட்டாத பொக்கிஷங்கள்” எல்லாம் இப்பூமிக்குள் குவிந்திருக்கின்றது. பொக்கிஷம் என்றால் காசு பணம் அல்ல…!
உலோகத்தைத் தருகின்றாள்; உருவத்தையும் தருகின்றாள்; உலகத்தையே ஆட்டுவிக்கும் ஊட்டம் எல்லாம் தருகின்றாள்…!
பந்தைப் போன்று உலகம் உள்ளது என்கின்றார்கள். உலக உருண்டை செய்கின்றார்கள் பந்தின் உள்ளேயும் காற்று தான் உலக உருண்டை செய்வதிலும் உள்ளே காற்று தான் உள்ளது. அது போல் உலகின் உள் நிலையிலும் காற்று தான் உள்ளது (விஞ்ஞானிகளால் இன்னும் இதைக் காண முடியவில்லை).
நீ நினைக்கின்றாய் எடுக்க எடுக்க மண்ணும் உலோகமும் தண்ணீரும் தான் உள்ளது என்று.
1.உலகின் வெளி நிலையில் உள்ள காற்றை அறிந்தாயா…?
2.உலகில் வெளி நிலையில் வான் மண்டலம் எப்படி உள்ளதோ அந்நிலை தான் உள் நிலையும்.
உள் நிலையில் உள்ள காற்றெல்லாம் எங்கிருந்து வருகின்றது…? என்று எண்ணுகின்றீர்கள். உள் நிலை காற்று எல்லாம் உலகைச் சுற்றி உள்ள ஒளி ஒலி கலந்த காற்றே…!
நீ விடும் மூச்செல்லாம் பூமித்தாய் ஈர்க்கின்றாள்…! ஈர்க்கும் இம்மூச்சால் தான் இவ்வுலகம் சுற்றுகின்றது என்று முதல் பாடத்திலேயே சொல்லி இருந்தேன்.
ஒலி ஒளி எல்லாம் பூமியில் தாக்கும் பொழுது பூமி அச்சக்தியை தன்னுள் இழுத்துப் பாற்கடலையும் மனிதனையும் பெரும் மலைகளையும் தாண்டித்தான் ஈர்க்கின்றது.
இந்தப் பூமி ஒலியையும் ஒளியையும் காற்றையும் தன்னுள் இழுத்துச் சுற்றுவது தான் “இந்த உலகச் சுற்றே…” உலகின் உள்நிலையும் காற்றுத் தான் உலகின் வெளிநிலையும் காற்றுத் தான்.
இந்தப் பாடத்தின் விளக்கம் புரிந்ததா
நான் சொல்லும் நிலையில் சொன்னால் ஏன் கலக்கம்…? சாமி சொன்னால் தான் ஏற்பாயா…? எல்லாம் அவனே. அவன் சக்தியே… என்பதன் பொருளைப் பார்த்தாயா…?
1.வானுலகில் உள்ள ஒளியும்
2.தன் நிலையில் சுற்றும் ஒளியும் மண்ணுலகை வந்தடையும் தன்மையும் படிப்படியாக விளங்கும்.
படிப்படியாக என்பது நீங்கள் சொல்லும் ஒன்று, இரண்டு, மூன்று என்பது அல்ல சிறுகச் சிறுக என்பதுமல்ல. படி… படி… என்பதன் அர்த்தமே வேறப்பா கீழிருந்து மேல் செல்வது அல்ல படி.
1.ஒவ்வொன்றாக உள்ளதுவே
2.ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தன்மையில் உள்ளது.
3.ஒவ்வொன்றாக விளக்கம் தருகின்றேன்… தியான நிலைக்குச் செல்
தாயே தந்தையே வணங்கிடுவேன் என் முதல் தெய்வமாக
பெற்ற பயனைப் பெற்றிடவே அருள் செய்யுங்கள்
பெற்ற பயனை எல்லாமே பெற்றவுடன் முடிவுறாமல்
பெற்ற பெயரை எடுத்துத் தருகின்றேன்
“எனக்கு அருள் செய்வீர்களாக…”
நல் மனதைப் பெற்றிடவே நாட்டமெல்லாம் தந்திடுவாய்
“நான்… நான்…” என்று சொல்லை நம்மிடம் விட்டகற்றிடுவாய்
நன் மனதைப் பெற்றிடவே நமக்கருள்வாய்
நம்முள்ளே நீ வந்திடவே நாமெல்லாம் ஜெபித்திடவே
“நாமெல்லாம் போற்றிடுவோம் ஓம் ஈஸ்வரா”
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி ஏங்கித் தியானியுங்கள்.
புருவ மத்தி வழியாகத் தியானித்து நினைவுகள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பாலும் சப்தரிஷி மண்டலங்களின் பாலும் செலுத்தினால் அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நுகர்ந்து அறிய இது உதவும்.
இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் நினைவுகள் எல்லாம் வான மண்டலம் சென்றிருக்கும்.
1.ஒரு மத்தாப்பைக் கொளுத்திய பின் அதிலே பொறிகள் எப்படிக் கிளம்புகின்றதோ
2.இதே போல வான மண்டலத்தில் பல நிறங்கள் கொண்ட உணர்வலைகள் பரவிக் கொண்டிருப்பது
3.உங்கள் உணர்வுகளில் தோற்றமடைந்திருக்கும்… இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலுக்குள் படர்கிறது.
துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படுவது அனைத்தும் வைரத்தைப் போல இளம் நீல நிறமாக இருக்கும். சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வருவது அனைத்தும் பல வித வர்ணங்களில் இருக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல வண்ணங்களில் இருக்கும். அந்த மத்தாப்பூ போல சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் உணர்வுகள் உங்களுக்குள் தெரிந்திருக்கும்.
தெரியவில்லை என்றாலும் கூட…
1.அந்த உணர்வின் அலைகள் சுழன்று கொண்டு வந்து உடலுக்குள் பாய்ந்து
2.உடலில் ஒரு சக்கரம் போல சுழன்று கொண்டு வந்திருப்பதையும் உணர்ந்திருக்கலாம்
3.ஏனென்றால் சுவாசித்தது உடல் முழுவதும் “ஒரு ரவுண்டு” அப்படி வரும்.
இந்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் உரம் போட்டது போல் ஆகிறது.
உதாரணமாக நாம் செடிகளுக்கு எப்படி உரம் போட்டு அதைச் செழித்து வளரச் செய்கிறோமோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.உடலில் உள்ள “அணுக்களின் முகப்புகளில்” பூராவும் போய்ச் சேரும்.
நமது வாழ்க்கையில் எத்தனை வகையான குணங்களை எடுத்துக் கொண்டோமோ அத்தனை வகையான அணுக்களும் உண்டு.
அதிலே நல்ல குணங்கள் கொண்ட அணுக்கள் இருப்பினும் பிறருடைய தீமைகளை உற்றுப் பார்த்து அதைக் கேள்விப்பட்டு என்ன… ஏது…? என்று அதை நுகர்ந்திருந்தோம் என்றால்
1.அந்த நல்ல குணங்களின் முகப்பில் இது அடைபட்டிருக்கும்
2.அப்பொழுது அந்த நல்ல குணங்கள் சீராகச் செயல்படாது.
3.அந்த நல்ல அணுக்கள் நலிந்து கொண்டே இருக்கும்.
4.அதே சமயத்தில் நல்ல குணங்கள் வளர்வதற்குண்டான அந்த ஈர்ப்பு சக்தியும் குறைந்தே இருக்கும்.
நல்ல அணுக்களின் வளர்ச்சி குன்றும் பொழுது நல்ல குணங்களால் வளர்க்கப்பட்ட நம் உடலில் சோர்வுத் தன்மை உண்டாகும்.
ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் நல்லதை எண்ணி அதைச் செய்ய முற்படும் பொழுது பிறருடைய தீமைகளைக் கேட்டு அறிகின்றோம்.
நம் உயிரில் பட்ட பின் தீமை என்று அதை உணர்ந்தாலும்… அந்த உணர்வுகள் உடலுக்குள் பரவப்படும் பொழுது எந்த நல்ல குணங்கள் கொண்டோமோ…
1.அதிலே முன்னோட்டமாக அடைபட்டு விடும்.
2.பின் அது நமக்குத் தீமை என்று அறிவித்தாலும் நல்லதை அடைத்துக் கொள்கிறது.
உதாரணமாக நாம் சமையல் செய்யும் போது மாவை எடுத்துப் பிசைகின்றோம். அது சுவை உள்ளது தான்.
இருந்தாலும் அதிலே மற்ற ஒரு பொருளைப் போட்டால்… காரமோ இனிப்போ… அதில் எதைக் கலக்கின்றோமோ அதன் சுவை தான் முன்னணியில் இருக்கும்.
அதைப் போலத் தான் நம்முடைய நல்ல குணங்கள் கொண்ட அணுக்களில் தீமை செய்யும் உணர்வுகள் இணைந்து விட்டால் அது செயலற்றதாகிறது… நல்லதை எண்ண முடிவதில்லை.
அவ்வாறு ஆகாதபடி மாற்றுவதற்குத்தான்…
1.தீமைகளை அகற்றிய அருள் ஞானியின் உணர்வை
2.உங்கள் உடலுக்குள் சுழலச் செய்ய வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.தியானிக்க வேண்டிய முறையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உணர்த்துகின்றோம்.


கார்த்திகை நட்சத்திரத்தின் சிறப்பு
27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரும் சக்திகளைக் கவர்ந்து துகள்களாக மாற்றுகின்றது. அவை அனைத்தும் அடுக்கு வரிசையில் இருக்கும் ஒன்று மேலே ஒன்று கீழே என்ற நிலையில் 27 நட்சத்திரங்களும் 27 விதமான பாதைகளில் சுழன்று வருகின்றது.
அதிலே முன்னணியில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் பிற மண்டலங்களில் இருந்து தனக்குள் எடுக்கும் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றினாலும் அது தனது பால்வெளி மண்டலங்களாக அதை மாற்றுகின்றது.
1.ஒரு இருண்ட பொருளுக்குள் பல பேட்டரியைச் (CELLS) சேர்த்து எர்த்தை (EARTH) வைக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை அதிலே எப்படி வருகின்றதோ
2.இதைப் போன்று கார்த்திகை நட்சத்திரத்தில் விளையும் உணர்வுகள் மற்ற கோள்களின் நிலையில் சேர்க்கப்படும் பொழுது
3.அது ஒவ்வொன்றிலும் ஒளி அலைகளாக மின்னும் நிலைகளுக்கு மாற்றுகின்றது.
இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்…!
நான் (ஞானகுரு) கல்வி அறிவில்லாதவன் தான். இருந்தாலும் குருநாதர் காட்டிய வழியில் அதை நான் கண்டுணர்ந்து
1.அதனுடைய செயலாக்கங்களைக் காணும் பொழுது விஞ்ஞான அறிவிற்கும் இதற்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு.
2.அந்த உணர்வுகளை உங்களுக்குள் பாய்ச்சப்படும் பொழுது எதிர்காலத்தில் உங்கள் உடலில் உள்ள அணுக்களில் அது வளர்ந்து
3.27 நட்சத்திரங்களின் இயக்க ஓட்டங்களையும் நீங்கள் காணலாம்
4.அதன் உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களிலும் தெளிந்திடும் நிலையாக
5.நற்சக்திகளாக மாற்றிடும் தன்மையும் ஏற்படும்.
அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது. இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள்
ஆனால் இனத்திற்குள்ளும் ஒன்றுக்கொன்று இரைக்காக மோதுவதும் உண்டு. தன் இனத்தை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
மகா ஞானிகள் இத்தகைய (27) நட்சத்திரங்களின் ஆற்றலை ஒவ்வொரு அணுக்களிலும் செலுத்தப்பட்டுச் செருகேற்றி… உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்துக் கொண்டனர்.
1.அப்படி அந்த விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்
2.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக மாற்றினான்
3.அவனில் விளைந்த உணர்வலைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது… நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சுழலச் செய்கின்றது. அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசம்.
அதே போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும் பொழுது… சூரியன் தனக்குள் அதைக் கவர்ந்து உணவாக உட்கொண்டு அந்த அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.
சிலருக்கு இதைக் கேட்கப்படும் பொழுது சில வித்தியாசங்கள் ஏற்படலாம்
1.இதெல்லாம் நமக்கு எதற்கு…? விடிந்தால் சாப்பாடு கிடைத்தால் போதும்
2.குருடனுக்குத் தேவை கண் தானே…! நாளைக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோ…?
3.சாமி ஆசீர்வாதம் இருந்தால் போதும்
4.தொழிலிலே பணம் சம்பாதித்தால் போதும்… அது நல்ல முறையில் நடந்தால் போதும்
5.எங்கள் நோய் நீங்கினால் போதும்…! என்ற இந்த உணர்வில் தான் இருக்கின்றார்கள்.
ஆஅனால் இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலில் சேர்க்கப்பட்டு வேதனையை உருவாக்கி நல்லவைகளை எண்ண விடாதபடி தடுத்துக் கொண்டுள்ளது.
அதை மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அதிகமாகிவிடும்… ஆரம்ப நிலைகளுக்கே உயிர் இந்த மனித உடலை மாற்றிவிடும். விஷ அணுக்களாக மாற்றிப் புழுவாக… பூச்சியாக… பாம்பாகத்தான் பிறக்க வேண்டி வரும்
காரணம்… இயற்கையின் மாற்றங்கள் எதனின் கலவை எதிலே ஆகின்றதோ அதற்குத் தக்க தான் உருக்கள் மாறுகின்றது.
குருநாதர் வான இயல் தத்துவத்தை என்னை அறியும்படி செய்வதற்காக
1.எத்தனையோ காடு மேடெல்லாம் அலையும்படி செய்தார்… அனுபவபூர்வமாகத் தெரியும்படி செய்தார்.
2.கடும் வேதனைகளால் அவதிப்படும் போது அதிலிருந்து மீள குருவை நான் நினைப்பேன்
3.அதே சமயத்தில் குருவை நினைத்து “என்னை இப்படி எல்லாம் அழைத்துச் செல்கின்றாரே…” என்று வேதனையும் படுவேன்.
ஏனென்றால் ஒரு சில தாவர இனங்களில் விஷத்தன்மை கொண்ட இலைகள் உண்டு. அது மேலே பட்டபின் உடல் சோர்வடையும் மயக்கமும் வரும்.
1.மலைப்பாதைகளிலே செல்லும் பொழுது உடல் சோர்வடைவது மட்டுமல்லாதபடி
2.இந்தத் தாவர இனங்களின் மூச்சலைகளும் அதை உணவாக உட்கொண்ட நஞ்சு கொண்ட உயிரினங்கள் அங்கே பரவி இருப்பதும்
3.அவைகள் மேலே பட்டால் அரிப்பு எடுப்பதும்
4.நான் இதைப் பார்ப்பதா…? அல்லது சோர்வைப் பார்ப்பதா…? என்று எத்தனையோ நிலைகள் இப்படி வருகின்றது.
இத்தனையும் எனக்குள் குருநாதர் உருவாக்கினார். இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீள வேண்டும் என்ற வினாவையும் எழுப்புகின்றார்.
நான் அதிலே மீண்டிடும் நிலையாக
1.ஞானிகள் இது போன்ற தீமையிலிருந்து எப்படி விடுபட்டார்கள் என்பதை உணர்த்தி
2.அந்தச் சக்திகளைப் பெறும்படி செய்தார்…. அதை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டேன்.
அதையே தான் உங்களுக்குள்ளும் இப்போது பதிவு செய்கின்றேன்.
காட்டில் நான் சிரமப்பட்டுப் பெற்றதை… நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த இடத்திலிருந்தே “சிரமங்கள் வரும் போதெல்லாம்… அந்தச் சக்திகளைப் பெற முடியும்…” என்று உறுதியாகச் சொல்கிறோம் (ஞானகுரு).

உன் எண்ணத்திற்குள்ளே நான் இருப்பேன்… சொல்லாக வருவேன்… உன் செயல் பூர்ணமடையும்
பாட்டின் தொடரைத் தந்தேன் உன் எண்ணத்தில் உதித்ததா…? உதித்தவுடன் காவியத்தில் கொண்டு வரவில்லையே…! பாட்டைத் தொடர்ந்துவிடு பகர்ந்திடுவேன் உனக்குள்ளே.
ஞானாம்பிகையின் அருள் பெறவே
ஞானம் எல்லாம் தந்திடுவேன்…!
தன் மனதை அடக்கிடவே
தாங்கும் நிலை எனக்கு அருள்வாய்…!
ஞானோதயத்துக்கு விட்டுள்ளேன்
அவ்வழியே எடுத்துப் பகிர்ந்திடுவாய்…!
மாற்றமில்லாச் சொல்லைத் தந்திடுவாய்
மனம் எனும் கோவிலிலே…!
எல்லாவற்றையும் (பாடலில்) நானே பகர்ந்து விட்டால் உனக்கு அருளியதன் பயன் என்னப்பா…? சிலவற்றை உன்னிடமே விட்டுவிட்டேன்… சிந்தையுடன் சொல்லைத் தந்திடுவாய்.
1/உன்னுள்ளே நான் வந்திடுவேன் வந்து “எல்லாம் தந்து விடுவேன்…” என்று எண்ண வேண்டாம்
2.உன் நிலைக்கே விட்டுவிட்டேன்.
3.பாட்டெல்லாம் நான் பகர்ந்து விட்ட பிறகு “ஈஸ்வரனை” மட்டும் அழைக்கத் தெரிகிறதா…?
உன் சக்தியின் தன்மை கொண்டு இந்தப் பூவுலகையே ஆட்டி விடலாம். அந்தப் புன்னகையை வைத்துப் பூத்திட்டால்… பூவுலக வரிசையிலே பூத்திடுவாய் அடுத்த கவிதையை…!
ஓங்கார இசையினிலே
ஓங்கி நிற்பாள் ஓம் சக்தி…!
பூ மழையாகப் பொழிந்திடுவாய்
சக்தியே ஓம் சக்தியே…!
நீ பொழிந்த பூவையே
பூஜை செய்வேன் சக்தியே…!
பூவில் பூஜை செய்வேன்
சக்தி பூஜை செய்வேன்…!
பூர்ண சந்திரனின் வடிவினிலே
பூர்ண கும்பமாய் என் மனதில்
பூவின் மணத்தை யெல்லாமே
தந்திடுவாய் சக்தியே…!
பூவின் மணத்துடனே என் மனதில்
பூர்ணமாய்க் கலந்திடுவாய் சக்தியே
பரிபூர்ணமாய் நீ வந்து
கலந்திடுவாய் சக்தியே…!
மணம் எல்லாம் மணக்கச் செய்வாய்
சக்தியே ஓம் சக்தியே…!
பூக்கின்ற பூவிலெல்லாம் புகட்டி விட்டேன்… சொன்னது புரிந்ததா…? அடுத்த பாடல் ஒலியில் உள்ள ஒலியெல்லாம் உனதாக்கி உன் ஒளியை ஒளிரச் செய்.
ஓ… என்ற வரிசையிலே உன் கவிதையை ஓங்கச் செய். சொன்ன சொல் புரிந்ததா…? ஒவ்வொன்றும் புகன்றிடுவேன். எல்லாப் பாடலுமே சொந்த பாடலாக இருந்திடல் வேண்டும்.
1.நான் என்ற நிலை என்றும் உனக்கு வர வேண்டாம்
2.நான் தான் என்பதற்குப் பதில் நாம் என்ற சொல்லைச் சொல்.
உன்னைப் பாடல் எழுதச் சொல்லிவிட்டு உனக்கு ஒவ்வொன்றும் பகர்ந்திடுவதும் இதற்காகவே.
1.இப்பாடல் எல்லாம் நானும் தரவில்லை
2.நமது ஈஸ்வரனின் சொல்லப்பா இதுவெல்லாம்.
மனம் தளர வேண்டாம். உனக்கருளும் பாடல் எல்லாம் “உன்” மூலமாக வரும் என்று எண்ண வேண்டாம். அதற்காகத்தான் உனக்கு இந்தத் தயக்க௷ல்லாம் தந்து விட்டேன். எண்ணியதையெல்லாம் எழுதினாயா…? எதற்காக அந்த நிலை…? என்று பார்த்தாயா…!
நம் செயலை ஆழம் பார்க்கிறார் என்று எண்ண வேண்டாம் உன் ஆழத்தைப் பார்த்துத் தான் மக்களுக்கு பகர்ந்தது. இன்னும் இருக்கின்றது உனக்குப் பாடல்கள்.
முதலில் இருந்து பாடலை நீ பாடு. உன் ஓங்கார இனிமை…
1.என்றும் இல்லாத இனிமையை நான் அருள்கின்றேன்
3.நான் என்றால் நான் இல்லை… “அவனப்பா…”
பாடத்தை மறந்து கவிதை ரசிக்கின்றாயா…?
மனம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும்.
1.எண்ணும் எண்ணம்
2.சொல்லும் சொல்
3.செய்யும் செயல் எல்லாமே ஒன்றுடன் ஒன்று சுற்றும் நிலையில் தான் இருக்க வேண்டும் (காட்சி:- வட்டம் ஆறு)
ஏனென்றால் சொல்லும் சொல்லைக் காப்பவனே “பெரும் நாணயஸ்தன்…!”
மனித நிலையில் சொல்லும் சொல்லைக் காப்பாற்றி விட்டால்…! அவன் நிலை என்றுமே உயர்ந்து நிற்கும்.
நீ வேறல்ல… உன் எண்ணம் வேறல்ல… உன் சொல் வேறல்ல… உன் செயல் வேறல்ல… எல்லாம் கலந்துதான் மனிதன் என்பவன்…!
1.வெறும் ஆத்மாவும் உடலும் மட்டுமல்ல மனிதன்
2.உயிரும் உடலும் மட்டும் தான் மனிதனல்ல
3.”எண்ணமும் சொல்லும் செயலும் தான் மனிதன்,..”
உடலும் அழிகின்றது ஆத்மாவும் பிரிகின்றது. எண்ணிய எண்ணமும் சொல்லிய சொல்லும் செய்த செயலும் நிலைக்கின்றது. ஆகவே
1.எண்ணும் எண்ணத்தை நல் எண்ணமாக எண்ண வேண்டும்.
2.நல்ல சொல்லும் நல்ல செயலும் தானாக வரும்.
எண்ணம் என்பது எங்கிருந்து வருகின்றது…? உன் உடலில் எந்த உறுப்பப்பா எண்ணம்…? எண்ணும் எண்ணம் எல்லாம் உன் நிலையைச் சுற்றித்தான் உள்ளது… சுற்றி வரும்.
காற்றிலே நல்ல பூவின் மணமும் கொடிய நஞ்சுத் தன்மையும் உண்டு. நீ எடுக்கும் தன்மையிலே தான் அது உன்னுள்ளே வந்து சேரும்.
எண்ணங்களைக் காவியத்தில் வடித்திடலாம். காலங்கள் மாறினாலும் காவியங்கள் அழிவதில்லை. பெரும் ஞானிகளின் நிலையும் அது தான்.
பெரும் பட்சிகள் வானிலே பறந்தாலும் அதன் எண்ணமெல்லாம் ஒன்றிலேயே நிலைத்திருக்கும். நிலைத்த எண்ணத்திலேயே தன் உணவை எடுத்துச் சென்றுவிடும். பறவையின் பார்வையின் தன்மையில் தான் சொல் உள்ளது.
நான் முதலில் சொல்லிய கருத்தின்படி எண்ணத்தையும் செயலையும் காட்டியது… பறவையின் நிலை எல்லாம் இதுவே தான்.
எண்ணம் சொல் செயல் எல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் இது தான். எண்ணம் சொல் செயல் என்பது புரிந்ததா…?
1.உன் எண்ணத்திற்குள்ளே நான் (ஈஸ்வரபட்டர்) இருப்பேன்.
2.சொல்லும் சொல்லாக நான் வந்திடுவேன்
3.செய்யும் செயல் தானாகவே வந்துவிடும்.
4.எண்ணத்தை உயர்த்திவிட்டால் சொல்லும் உயர்ந்துவிடும்… செயலும் ஓங்கிவிடும்.
எண்ணம் என்பது தியானத்திற்கு மட்டுமல்ல. நீ எடுக்கும் எந்த எண்ணத்திற்கும் எந்த நிலைக்கும் இதுவே தான்.
நாளெல்லாம் நல்ல நாள் தான்
நாளெல்லாம் நடத்திடலாம்
நாளைக் கடத்திட வேண்டாம்
நாளை நாளை என்று…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
மந்திரம் செய்வோரையோ தந்திரம் செய்வோரையோ மற்ற மார்க்கங்களையோ எண்ணிக் கொண்டு… அவர் என்ன செய்கின்றார்…? இவர் என்ன செய்கின்றார்…? என்ற நிலைகளுக்கு ஆராய்ச்சிக்குச் செல்ல வேண்டாம்.
1.மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே தேடி வருவோர்
2.அவர்களின் ஏக்கம் எதுவோ அது பதிவாகின்றது…
3.அவர்களுக்குள் அந்த அருள் சக்தி ஓங்கி வளரவும் செய்யும்.
ஆனால் மற்றதைப் பற்றி அறிய வேண்டும் என்று எண்ணினால் அந்த நோக்கம் அதிலே தான் இருக்கும். மற்றவரின் செயலைப் பற்றித் தெரிய வேண்டும் என்று விரும்பினால் அது தான் ஆழமாக அவர்களுக்குள் பதிவாகி இருக்கிறது என்று பொருள்.
அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தி அந்த விபரத்தைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும்.
ஆகவே இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டமாக இருக்கிறது… கஷ்டமாக இருக்கிறது…! என்று சொல்லி அதையே கேட்டால் அந்தக் கஷ்டத்தைத் தான் வளர்க்க உதவும்.
2.ஆனால் கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டால் கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
கேட்டுணர்வோர் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்பத்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சி அடையும்.
1.கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தால் “அது வந்துவிடும்…”
2.இந்த மனித வாழ்க்கையில் வரும் சிக்கல்களிலிருந்து… நான் மீள முடியுமா…? என்றால் “இது சந்தேகம்…”
3.மீள முடியாது…! என்று அந்த வலுவை இழந்து விட்டால் “மீள முடியும்” என்ற உணர்வுகள் உங்களுக்குள் வராது.
ஆகவே மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு யாம் கொடுக்கும் இந்த ஞானிகளின் வாக்கின் தன்மையை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்தால் எத்தகைய துன்பத்திலிருந்தும் நீங்களே விடுபட முடியும்.
அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றோமோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது.
ஆனால் பெரும்பகுதியானோர் அவர்கள் தங்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையுமே எண்ணி… இது எப்படி வந்தது…? எதனால் வந்தது…? என்று கேள்வி எழுப்பிக் கொண்டே உள்ளார்கள்
அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாதபடியே துன்பங்களும் கஷ்டங்களும் எப்படி வருகின்றது…? என்பதை பல முறை உபதேசித்திருக்கின்றேன் (ஞானகுரு).
உபதேசங்களை எல்லாம் கேட்ட பின்னாடியும் மீண்டும் கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் யாம் சொல்வது அவர்களுக்குள் பதிவாகவில்லை…! என்று தான் பொருள் ஆகின்றது.
ஆனால் மேற் கொண்டு நாம் செல்ல வேண்டிய சரியான மார்க்கங்களை எண்ணி அதைக் கேட்டால் அது பதிவாகும்… நல்லதாகும்.
அதே சமயத்தில் இந்த அருள் உணர்வு எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எண்ணுதல் வேண்டும். அதனின் உணர்வின் துணை கொண்டு தான் உங்கள் உடலுக்குள் ஞானிகளின் உணர்வு விளையும் பருவமும் வரும்.


இறந்தவர்களுக்கு நாம் நல்லதைச் செய்கின்றோமா… அல்லது கெடுதல் செய்து கொண்டிருக்கின்றோமா…?
இறந்த உங்கள் தாய் தந்தையின் நினைவாக ஒவ்வொரு அமாவாசையிலும் அல்லது வருடத்தில் ஒரு நாள் அமாவாசை அன்று படையல் வைத்துக் கும்பிடுகின்றீர்கள்.
அன்று விரதம் இருந்து… அவர்கள் எதை எல்லாம் உணவாக உட்கொண்டார்களோ அந்த உணவைப் படைத்து வணங்கி பின் நீங்கள் அதை உணவாக உட்கொள்கின்றீர்கள்.
அமாவாசை அன்று அந்த இருள் சூழ்ந்த காலங்களில் தான் மந்திரவாதிகள் சில வேலைகளைச் செய்வார்கள்.
1.சாங்கிய சாஸ்திரப்படி செய்பவர் குடும்பங்களின் வீட்டு வாசல்படியில் இருக்கும்
2.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் காலடி மண்ணை எடுத்துச் செல்வார்கள்.
இருண்ட நேரங்களில் அவர்கள் கற்றுணர்ந்த அதர்வண வேதத்தின்படி மந்திரத்தைச் சொல்வார்கள்.
குடும்பத்தில் யார் யார் எந்த தெய்வத்தைப் பக்தியில் எண்ணி அந்த்த் தெய்வத்தின் மந்திரத்தை ஆழமாகப் பதிவு செய்து அதைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தார்களோ அதன் துணை கொண்டு
1.அவருடைய நாமத்தையும் சொல்லி குடும்பத்தையும் சொல்லி மந்திரவாதிகள் ஜெபிப்பார்கள் என்றால்
2.இறந்த ஆன்மா அவருடைய கைகளிலே கைவல்யமாகி விடுகின்றது.
ஒவ்வொரு குணங்களுக்கும் ஒவ்வொரு மந்திர ஒலி ஒன்று உண்டு. அதை வைத்து அந்த ஆன்மாவில் இருக்கக்கூடியதைக் கைவல்யப்படுத்துவார்கள்.
அதே சமயத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அதாவது… கருக் கலைக்கப்பட்டு வெளிவந்த ஒரு பிண்டத்தைக் கையில் எடுத்து அதை ஜெபிப்பார்கள்.
ஜெபிக்கும் பொழுது அந்தப் பிண்டத்திலிருந்து அகன்று சென்ற அந்த உயிரான்மா அந்தப் பிண்டத்திற்கே மீண்டும் வரும்.
1.மனிதனாக வளர்ந்த மந்திர ஒலியினை அதிலே பாய்ச்சி…
2.இவர்கள் நினைவு எதுவோ அதை எல்லாம் செயல்படுத்தப்பட்டு
3.பிறருக்குத் தீமைகளை விளைய வைக்கவும்… செய்வினை தோஷம் என்று செய்வதும்
4.ஒரு பொருள் மீது இந்த ஒலி அலைகளைப் பரப்பி மந்திரத்தைச் சொன்னால் அந்தப் பொருள் கரைவதும்
5.இன்னொரு இடத்தில் அந்தப் பொருள் உருவாவதும் போன்ற மாயாஜால வேலைகளைச் செய்வார்கள்.
மந்திரத்தை ஜெபித்து காளியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; மாரியைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; முனியப்பனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்; கருப்பணனைக் கைவல்யம் செய்து வைத்திருக்கின்றேன்… என்றெல்லாம் அவர்கள் சொல்வார்கள்.
தீமையின் விளைவுகளுக்கு ஒப்ப அதற்கென்று ஒவ்வொரு மந்திரச் சொல்லைச் சொல்லிப் பரப்பிவிட்டால் இந்த ஆன்மாவின் துணை கொண்டு எதிலேயுமே ஊடுருவிச் செயல்படும் சக்தியாகச் செயல்படுவார்கள்.
1.சாங்கிய சாஸ்திரத்தில் சிக்கியுள்ளோர்கள் அனைத்தும்
2.ஆன்மாக்களைப் பிறருக்கு கைவல்யப்படுத்துவதற்குத் தான் உதவ முடியும்
உதாரணமாக குடுகுடுப்பாண்டிகள் காலையில் வருவார்கள். அதற்கு முன் இரவிலே ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று எத்தனையோ ஒலிகளை ஒலிப்பார்கள். ஒவ்வொரு வீட்டில் உள்ள உணர்வின் அலைகளை (சில நிகழ்ச்சிகளை) எதிரொலிக்கச் செய்வார்கள்.
காலையில் இங்கே வந்த பின் நீங்கள் அரிசியோ பருப்போ மற்றதோ கொடுத்தாலும்
1.உங்கள் வீட்டில் இருக்கும் பழைய துணி வேண்டும் என்று… அதைத்தான் விரும்பிக் கேட்பார்கள்.
2.நம் தலையிலிருந்து உதிர்ந்த முடி எதுவாக இருப்பினும் அவர்கள் கண்ணுக்கு அது சிக்கும்… அதையும் எடுத்துக் கொள்வார்கள்.
சிரசில் விளைந்த ரோமம் ஒன்று கிடைத்தால் போதும்…! அதை வைத்து
1.உங்கள் குடும்பத்தில் என்னென்ன நடந்தது என்று பழைய நிகழ்ச்சிகளைச் சொல்வார்கள்
2.நம்மை நம்பச் செய்வதற்காகப் பல வித்தைகளையும் செய்வார்கள்.
இது தான் “கடவுளை தனக்குள் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன்…” என்று சொல்லி அற்புதங்கள் செய்பவருடைய நிலைகள்.
உலக ரீதியில் எடுத்துக் கொண்டாலும்… எந்த மதத்தின் அடிப்படையில் இத்தகைய நிலைகள் செய்கின்றாரோ பிறிதொரு மனித உடலில் விளைந்த… அதாவது இறந்தவரின் ஆன்மாக்களைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திச் செயல்படுத்துகின்றார்கள்.
1.மந்திரம் இல்லாத மதம் எதுவும் இல்லை
2.அந்தந்த மதங்களுக்கு உண்டான சாங்கியங்கள் உண்டு
3.அதன் அடிப்படையில் தான் பல நிலைகள் இவ்வாறு இயக்கப்படுகின்றது.
மனிதன் இறந்த பின் மனித உடலில் உருவான இந்த உணர்வலைகள் பூமியில் உண்டு. உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களும் காற்றிலே தான் சுழன்று கொண்டுள்ளது. அதைத் தான் அவர்கள் கைவல்யப்படுத்திக் கொள்கின்றார்கள்.
1.நம்முடைய ஆன்மா மந்திரக்காரர்கள் கையிலே இப்படிச் சிக்குவது சரியா…?
2.சாங்கிய சாஸ்திரப்படி அமாவசையன்று படையல் செய்து முன்னோர்களைக் கூப்பிடுவது சரியா…? என்று சிந்தித்துப் பாருங்கள்
ஆகவே… மகரிஷிகள் காட்டிய வழிப்படி உடலை விட்டு பிரிந்த ஆன்மாக்கள் யாராக இருந்தாலும் அவர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைப்பதே மேலானது.
(விண் செல்லும் ஆற்றலும்… விண் செலுத்தும் ஆற்றலும்…! – https://wp.me/p3UBkg-1DK)

தீப விளக்கை ஏற்றிவிடு… உன்னுள்ளே நான் வந்து பேசுகின்றேன்
ஒலியெல்லாம் ஒளியாக்கி ஒளியையே உனதாக்கு…!
1.நான் தந்த மனத்துடன் உன் மனத்தைக் கலக்க விடு.
2.பூமித்தாய் பூரிப்பாள்… பூவுலகமும் பூத்து விடும்
3.வான மண்டலம் செல்வாய் வானுலகம் கண்டிடுவாய்
4.வானுலகம் செல்லும் நிலை தான் சூட்சும நிலை என்பதெல்லாம்.
இன்றைய கருத்துக்கள் எல்லாம் புரிந்ததா…? இந்நிலையில் இருந்து நீ மாறுபடாதே.
அங்கொருவர் அவஸ்தைப்படும் நிலையைத் தான் தினம் தினம் பத்திரிக்கையில் படிக்கின்றாய். அவன் (அன்றைய முதல்வர்) நிலையைச் சொல்கின்றேன். ஆசை என்ற நிலையைப் பார்த்தாயா. பெரும் ஆணவம் பிடித்து ஆடினான்… ஆணவ நிலையை அனுபவிக்கின்றான்… அனுபவித்த பின் அவன் நிலை என்னப்பா…?
இவ்வுலகின் ஆசை எல்லாம் இன்னும் அவன் உடலில் இருப்பதால் எப்படிப் போகும் அவன் உயிர்…? எமன் என்பது யாருமில்லை… அவனே தான் அவனுக்கு எமன்.
எமனையே எமன் வெல்கிறான்… இப்பொழுது. பாவக் கடலில் கலந்திடுவான்… பாவியாகி நின்றிடுவான்… பெரும் பாவம் செய்த பலனை எல்லாம் பதம் பதமாகப் பார்த்திடுவான்.
இப்போது அவன் விடும் மூச்செல்லாம் அவன் விட்ட மூச்சும் தான் அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்தியாவில் எங்கு இருக்கிறது அணுகுண்டு…? என்று நினைக்கின்றாய்.
அவ்வணு தான் அணுகுண்டு… அவனே தான் அணுகுண்டு… பெரும் அணுகுண்டு எல்லாமே அவன் போல் உள்ள அணுகுண்டுகளால் வந்த அணுகுண்டு தான்.
உலகை அழிப்பதற்கே பிறந்திட்டான்… அணுவை எல்லாம் அணுகுண்டாக்கி விட்டான்.
1.அணுவைப் (ஆவனை) பிழைக்கச் செய்ய ஜெபிக்கின்றார்களாம்
2.கோவில்களில் எல்லாம். அவன் ஜெப நிலையைப் பார்த்தாயா அவனுக்காக இவர்கள் எல்லாம் ஜெபிக்கின்றார்களாம்.
3.அவன் விட்டு அணுகுண்டுகள் எல்லாம் இவர்கள் உடலில் ஏறிவிடும்.
4.ஜெபிக்கட்டும்… ஜெபிக்கட்டும்… கலியுகம் மாற வேண்டாமா…? அதற்காகத்தான் இந்த ஜெபம் எல்லாம்.
நல் மணத்தை எடுத்து நல் மூச்சை நீ விட்டு ஜெபித்திடப்பா அழகாக. உன் நிலையில் சாந்தம் வேண்டும் என்பதன் பொருள் எல்லாம் இதுவே தான்.
ஆவி உலகத்தன்மைகளைப் பற்றி அடுத்தது சொல்கின்றேன். ஒரு நிலையில் நீ இருக்க உன் கண்ணை அடைத்திட்டேன். சொன்னவுடன் திறந்திடுவாய்… சொன்னதெல்லாம் மறந்திடுவாய்… அதற்காகத்தான் இந்நிலையைத் தந்திட்டேன்.
பசியின் நிலையும் ஒன்றுதான் பெரும் பணத்தின் நிலையும் ஒன்று தான் பசி வந்ததும் சாப்பிட்டுவிட்டுப் போதும் என்றான பிறகும் அந்தப் பசி வந்து விட்டால் மீண்டும் புசித்திடுவான் உணவையே.
பணத்தின் நிலையும் இதுவே தான். பணம் பணம் என்கிறது இவ்வுலகம் பசியும் பணமும் ஒன்றேதான் இன்ப வாழ்வைத் தந்து விட்டேன் என்று சொன்னால் இன்பமெல்லாம் என்னவென்று எண்ணுகின்றாய்…?
1.பணம்தான் இன்பம் அல்ல.
2.இன்று இருக்கும் உன் தியான நிலை தான் இன்பமப்பா.
பசியின் தன்மை அடக்கி விட்டால் பாடலின் தன்மையும் புரிந்துவிடும் (உன் நிலையை மாற்றிக் கொண்டாய்… இதை ஏற்கும் நிலை உனக்கு இல்லை). பெரும் பசியைப் பற்றிச் சொல்வதற்கு ஒரு நாள் போதாது. இன்னொரு நாள் சொல்கின்றேன்.
1.எங்கு சென்றாலும் உன் நிலையை மறந்திடாதே
2.தியான நிலைக்கு வந்து விட்டாய் தினம் தினம் தியானம் செய்.
3.உன் மொழியிலேயே நானும் வந்து பேசுகின்றேன்
தீப விளக்கை ஏற்றி விடு…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
உதாரணமாக எனக்கு இப்படிச் செய்தான்… செய்தான்…! என்று நமக்கு இடைஞ்சல் செய்தவன் மீது சிந்தனை வரும் பொழுது அந்த உணர்வுகள் கோபமோ வேதனையோ ஆத்திரமோ உடலுக்குள் வந்துவிடுகின்றது. அந்த இடத்தை நாம் வலுவாக்கிக் கொள்கின்றோம். தீய வினைகளாக அது வளர்கிறது.
ஆனால் நம் உடலில் வந்த அந்தத் தீமைகளை நீக்க…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
3.அதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த மனித உடலையே ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.
4.இந்த உடலிலிருந்து தான் நாம் ஒளியாக மாற்ற முடியும்.
ஆனால் மாற்றத் தவறினால் அந்த உடலில் விளைந்த தீமையான உணர்வின் தன்மை இங்கே இழுத்து விட்டால் மனித ரூபத்தை மாற்றிவிடும்… மனிதனல்லாத உருவாகத் தான் பெற நேரும்.
ஆனால் அந்த அருள் மகரிஷிகளின் அருளை நமக்குள் பெறும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.
உதாரணமாக நான் கோபமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். மற்றவரும் என் கோபத்திற்குச் சாதகமாக இருந்தால் எனக்கு நல்லது.
அதே சமயத்தில் தவறு செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அருகில் இருக்கும் என் நண்பனும் அந்தத் தவறுக்காக என்னுடன் ஒத்துழைத்தால் எனக்கு நல்லது.
1.அதுவே தவறு என்று என்னைச் சுட்டிக்காட்ட வந்தால் எனக்கு எதிரி ஆகின்றது…!
2..ஆகவே நல்லது என்பதை நல்லதாக எண்ண முடியாது
3.கெட்டது என்பதைக் கெட்டதாகவும் எண்ண முடியாது
4.நமக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்
5.நமக்கு ஒத்து வரவில்லை என்றால் கெட்டது என்று எண்ணுகிறோம்.
மிளகாய் காரமாகத்தான் இருக்கின்றது. அந்தக் காரத்தை அளவுடன் குழம்பிலோ மற்ற பொருள்களிலோ இணைத்தால் அது நல்லதாகின்றது.
1.காரத்தை அதிகமாகப் போட்டால் கெட்டதாகிறது
2.காரத்தைக் குறைத்தால் “சப்” என்றாகி விடுகிறது.
ஆகவே நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல…!
இதைப் போன்ற உணமைகளை உணர்ந்து கொண்ட பின் நமக்குள் எந்த உணர்வின் தன்மையை எடுக்க வேண்டும்…?
நம்மை அழியா ஒளியின் சரீரம் பெறச் செய்யும் அந்த நிலையான உணர்வுகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
நம் உயிரின் தன்மை ஒளியாக நின்று எதை எல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ அந்த உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது.
விண்ணின் ஆற்றல் என்று சொல்கிறோம். பொதுவாக விண்ணின் ஆற்றலும் மகரிஷிகள் ஆற்றலும் வேறு.
1.விண்ணின் ஆற்றல் என்பது மற்ற கோள்களின் மண்டலங்களின் சக்தி பெற்றது
2.அந்த விண்ணின் ஆற்றலால் தான் மனித உடல் வருகின்றது
அதாவது நட்சத்திரங்களை வைத்துத் தான் ஒரு பிரபஞ்சத்தில் கோள்கள் சூரியன் எல்லாமே வளர்ச்சிக்கு வருகின்றது. அந்த விண்ணின் ஆற்றலைப் பெற்றுத் தான் மனிதனாக வளர்ந்து வந்திருக்கின்றோம்.
ஆனால் விண்ணின் ஆற்றலால் மனிதனான பின் சிருஷ்டித்துக் கொண்டதுதான் மகரிஷிகள். மனித உடல் பெற்ற பின் சிருஷ்டிக்கும் சக்தி பெற்ற அந்த மகரிஷிகளின் ஆற்றலால் தான் மனிதன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக உருவாக்க முடியும்.
விண்ணில் இருக்கக்கூடிய மகரிஷிகள் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு நாம் எதை உணர்த்தினோமோ “விண்…” என்று வரப்படும்போது சொல் விண்… என்று வரும்.
இங்கே மண்ணுலகிலிருந்து சென்று இன்றும் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மகரிஷிகள். ஆகவே அந்த விண்ணுலகத்திற்குத் தான் நாம் செல்ல வேண்டும்.
1.சூரியப் பிரபஞ்சத்திற்குள் இருக்கும் இந்தப் பூமி இதுவும் ஒரு விண்ணுலகம் தான்
2.ஆனால் மண்ணுலகைக் கடந்து விண்ணுலகம் சென்ற அந்த மகரிஷிகள் அருள் வட்டத்தில் நாம் இணைய வேண்டும்.
அது தான் யாம் (ஞானகுரு) சொல்லும் விண்ணுலகம்…!


“அடுத்தவர்களை… அயோக்கியர்கள் என்றும் தீயவர்கள் என்றும்” எண்ணும் பழக்கத்தை நாம் மாற்ற வேண்டும்
காந்திஜி சகோதர உணர்வு கொண்டு மக்களைப் பற்றி எண்ணினார்
1.உன் எண்ணமே உனக்குக் கடவுளாக இருக்கிறது என்றும்
2.ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு உயர்வாக எண்ண வேண்டும் என்று தற்காலத்தில் தோன்றிய அந்த ஞானி சொன்னார்.
அவரைச் சந்தித்தவர்களும் உண்டு.
செல்வமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஆண்டி போலத் தான் வாழ்ந்தார். சொத்து சுகத்திற்கு அவர் ஆசைப்படவில்லை… கால் நடையாகவே நடந்து சென்றார்,
தனக்குள் தெளிந்த மனங்கள் பெற வேண்டும்… எல்லோரும் சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் வளர்ந்திட வேண்டும்… ஒன்று சேர்ந்து வாழ வேண்டும்… மன பேதம், இன பேதம் மொழி பேதம் இன்றி வாழ வேண்டும் என்று சொன்னார்.
ஆனால் கடைசியில் அவருக்குக் கிடைத்த பரிசு “இந்த உடலை விட்டு நீ போய்விடு…!” என்று சுட்டுக் கொன்றார்கள். மதத்தின் நிலை இனத்தின் நிலை கொண்டு அவருடைய நிலைகளைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.
உடலில் குண்டு பாய்ந்த போதும் அவர் இந்த உடல் பற்றில்லாதபடி “ராமா… ராமா… ராமா…!” என்றார். நாம் எதை எண்ணுகின்றோமோ அதுதான் சீதா ராமா.
1.எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற உணர்வினைத் தனக்குள் அந்தச் சுவையை எண்ணினார்
2.குண்டின் தாக்குதல் ஆன போதிலும் அதை எண்ணாதபடி ராமா… ராமா… என்றார்.
நாம் அடிபட்டால் ஐய்யய்யோ என்று தான் சொல்வோம். ஆனால் அவர் எதைக் குறிக்கோளாக வைத்தாரோ தாக்கப்பட்ட பின்னும் ராமா… என்ற சொல்லே வந்தது. அந்தச் சொல்லுடன் தான் அந்த ஆன்மா வெளி வருகின்றது.
அந்த ராமன் யார்…? மகிழ்ச்சியின் நிலைகள். அதாவது
1.எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தினை அவருக்குள் வளர்த்தார்
2.அதுதான் சீதா ராமா… அந்த எண்ணம் கொண்டே அவர் செயல்பட்டார்.
ராமன் அம்பை எய்தான் என்றால் கணைகளைத் திருப்பி வாங்கிக் கொள்வான். மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அரசியல் வாழ்க்கையிலும்
1.தெய்வீகப் பேரன்பு கொண்டு மக்கள் அனைவரது உயிரையும் கடவுளாக மதித்து
2.மத பேதமில்லாது இன பேதம் இல்லாது சகோதர உணர்வுடன் வாழ வேண்டும் என்ற உணர்வுடனே வாழ்ந்தார் காந்திஜி.
ஆனால் அவர் சொன்னபடி… “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நிலைகளைச் சொல்வோரும் கடைப்பிடிப்போரும் இன்று இல்லை.
காந்தியினுடைய பெயரைச் சொல்லி
1.தன்னுடைய கௌரவத்தைக் காத்துக் கொள்ளவும்
2.தன் வாழ்க்கையில் புகழுக்காக ஏங்க முடிகின்றதே தவிர
3.காந்திஜி செய்த உயர்ந்த நிலையை ஒரு துளி அளவு கூட யாருக்கும் செய்யும் எண்ணமில்.
காந்திஜி போன்று வினோபாஜி சில நிலைகளைச் செய்தார்… மக்களுக்கு நிலங்களை பங்கிடச் செய்தார்… எல்லோருக்கும் கொடுக்கச் செய்தார்…!
அதன் அடிப்படையில் அதற்குப் பின்… வினோபாஜியின் சீடர்கள் காந்திஜியின் சீடர்கள்…
1.நாங்கள் தர்மத்தைச் செய்கிறோம் என்ற பெயரில் வந்தவர்கள்
2.”அடுத்தவர்களை எல்லாம் அயோக்கியர்கள்” என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
காந்தியின் தத்துவத்தைப் படித்தோர் அனைவரும் நியாயத்தை தனக்குள் வைத்துக் கொண்டு
1.உலகில் உள்ள “மற்ற அனைவரும் தீயவர்கள்” என்று தான் சொல்வார்கள்
2.ஆனால் காந்திஜி சொன்னது “எவரும் தீயவர்கள் அல்ல…!” சந்தர்ப்பம் தான் தீயவர்களாக ஆக்குகின்றது.
3.அந்தத் தீமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று அவர்களுக்காக நீ தியானி
4.யார் எந்தத் தவறு செய்தாலும் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று ஆண்டவனாக நீ கருதி ஆண்டவனிடம் வேண்டு.
ஆண்டவன் யாரென்று காந்திஜி சொல்லவில்லை என்றாலும் எந்த மதத்தின் அடிப்படையில் ஆண்டவன் என்றோ கடவுள் என்றோ இறைவன் என்றோ நீ வேண்டுகின்றாயோ…
1.ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அவனை அதிலிருந்து மீட்க வேண்டும்
2.ஆண்டவா…! அவருக்குள் நல்ல உணர்வுகள் வளர வேண்டும் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நன்றாக வாழ வேண்டும்
3.அவர்கள் அனைவருக்கும் ஆண்டவனின் அருள் கிடைக்க வேண்டும்… மகிழ்ந்திருக்க வேண்டும் என்று தான் எல்லோரையும் எண்ணும்படி சொன்னார்.
ஆக ஆண்டவனுக்குச் செய்யும் சேவை இது தான்.
ஏனென்றால் நமக்குள் ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்குள் இந்த உணர்வின் தன்மை ஒருக்கிணைந்து
1.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் கெட்ட குணங்கள் அனைத்தும்
2.ஒன்று சேர்ந்து அருள் வழியில் இயக்குகின்றது.
அது தான் இராம ராஜ்யம் என்பது…!

நல் மணத்தை நான் தந்தேன்… உன் மனதை நல் மனதாக ஆக்கிக்கொள்
நல் மணம் எல்லாம் எங்கு செல்கின்றது என்று எண்ணுகின்றாய்…? இயற்கை தந்த மணம் எல்லாம் நல் மனம் தான்.
1.இயற்கையின் மணத்தை எல்லாம் மனிதர்களாகிய நீங்கள் எடுத்துச் சமைத்து
2.நல் மணமான இயற்கை மணத்தைச் சமைத்தவுடன் உடனே எனக்கு அச்சுவை வந்து பின்பு நீ சுவைக்கின்றாய்.
நீ சுவைத்தவுடன் அதன் நிலையைப் பார்த்தாயா…?
கழிவு நிலை எல்லாமே மனிதனிடமிருந்து தான் வந்ததப்பா ஒரு நிமிடம் எண்ணிப்பார்… நாற்றம் என்பது என்னவென்று புரிந்துவிடும்…!
இயற்கை தந்த வரம் எல்லாம் இன்பமயமான மணம் தான் இயற்கையுடன் ஒன்றிப் பார். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மணம் இருக்கும். கெட்ட மணம் என்பதெல்லாம் இந்தக் கெட்ட உடலிலிருந்து தான் வருகின்றது.
அசுத்தம் அசுத்தம் என்கின்றாய்…! அசுத்தம் எல்லாம் மனிதனிடம் தான் மனிதனிடம் தான் அசுத்தமா…? மிருகத்திடம் இல்லையா…? என்று நீ நினைக்கின்றாய்…! மனிதரிடம் இருந்துதான் மிருகத்திடம் வந்ததப்பா.
1.நான் தந்த இயற்கையில் இருந்து மனிதன் பிறந்தான்
2.மனிதனின் பாவ புண்ணியத்திலிருந்து மிருகம் எல்லாம் வந்ததப்பா.
3.மிருகத்திலிருந்து தான் பறவை எல்லாம் வந்ததப்பா
4.பறக்கும் பறவையிலிருந்துதான் ஊரும் ஊர்வனை எல்லாம் வந்ததப்பா
5.ஊரும் ஊர்வன எல்லாம் அன்ன ஆயிற்று…? என்று கேட்பாய்…?
6.ஊரும் ஊர்வன தான் பிறகு மனிதனாகவும் வருகிறது.
இம்மனிதனின் நிலையில் எப்படி எப்படி மாறுகின்றது என்று இப்போது புரிந்ததா…?
உலகம் மட்டும் உருள்வதில்லை மனிதன் நிலையும் உருள்கின்றது சொல்லும் விளக்கம் புரிந்ததா…?
1.உருளும் மனிதனாகப் பிறந்து விட்டாய்.
2.உருளும் தன்மை உனக்கு வேண்டாம்.
ஒரு நிலையான நிலை நீ இருக்க உன் தியானத்தைக் கூட்டிக் கொள் என்னும் பொருளும் இது தானே.
பெரும் தாதுப் பொருள் என்கின்றோம். அதன் தகதகக்கும் நிலை எல்லாம் எங்கிருக்கிறது என்கின்றாயா…?
உருளும் உலகத்தில் உள்ளே தான் பெரும் தாதுப்பொருளும் உள்ளது. அப்பொருளின் நிலைகளை எல்லாம் எண்ணிப்பார். எப்படி அதன் நிலை வந்தது…?
உலகம் உருளும் தன்மையிலே காற்றும் மழையும் பட்ட பின் சில நிலையில் நிலைத்திருக்கும் நல்லோரின் நினைவிலே அது உருவாகிறதப்பா…!
நல்லவரின் நிலை என்பது நான் சொல்லும் சுவாச நிலை…! அத்தன்மை பாய்ந்தவுடன் இப் பூமி இழுக்கிறது. தண்ணீருடனும் காற்றுடனும் நல்லோரின் சுவாச நிலைத் தாதுப் பொருள் எல்லாமே அவ்விடத்திற்கு உகந்தபடி தான் இழுக்கும்.
அவ்விடம் எப்படி வந்தது தெரிகின்றதா…? நீ விடும் மூச்செல்லாம் காற்றுடன் கலந்தவுடன் மூச்சு மட்டுமல்ல எல்லா ஓசைகளும் கலந்து தான் வருகிறது.
நீ சொல்லும் பூமித்தாய் என்பவள் யாரப்பா…? பூமித்தாயை நீ சொல்லும் வழியிலேயே நானும் சொல்கின்றேன் பூமித் தாய் எல்லாத் தன்மையும் தன்னுள்ளே அடக்கிடுவாள். அடக்கிவிட்டு அவள் தரும் நிலைகள்தான் இவை எல்லாம்.
1.வெறும் மண் என்று நீ நினைக்கின்றாய்
2.இம்மண் தான் இவ்வுலகத்தின் முதல் நிலையே.
முதல் நிலையின் தன்மையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேன். நீ விடும் மூச்சும் உலகத்தின் ஒலியைப் பற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன். மூச்சில் இருந்து தான் ஒலியும் பிறக்கின்றது. ஒலியின் தன்மையும் ஒளியாகி அவ்வொலி தரும் மழையிலே இப் பூமித்தாய் ஈர்க்கின்றாள்.
அவள் தரும் இயற்கையிலே மணம் எல்லாம் இருக்கின்றது. முதன் முதலில் மணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தேன்… அம்மணம் எங்கிருந்து வருகின்றது என்பது புரிகின்றதா…?
எல்லாமே சுழற்சி தான்… சுழலின் தன்மையை பார்த்தாயா…! இந்தப் பாடத்தின் தன்மை புரிந்ததா…?
சுழலும் தன்மையைப் புரிந்து கொண்டாயா…! சுழலுடன் சுழலாகக் கலந்து விட்டால் “கலந்தது” உனக்குத் தெரியாது.
1.இக்கலக்கங்களிலிருந்து மீள்வதற்கு ஒரே நிலை “தியான நிலை தான்…”
2.தியான நிலை பெற்றுவிட்டால் பெரும் சூட்சம உலகம் என்னும் சுழற்சியில் சிக்கி விடலாம்
3.சூட்சம உலகில் சிக்கிவிட்டால் பெரும் சூட்சுமம் எல்லாம் கண்டிடுவாய்.
4.ஈரேழு லோகம் என்பதைக் கண்டிடுவாய்… ஈன்றவன் யார் என்று கண்டிடுவாய்.
அவ்வுலகத்திற்குச் சென்றுவிட்டால் இவ்வுலகத்தின் நிலையைப் பார்த்திடுவாய் இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் உனதாக்கு. இப்பொழுது புரிகிறதா… தியான நிலையின் அவசியம் எல்லாம்…!
இச்சுழற்சி உனக்கு வேண்டுமா…? அல்லது அச்சுழற்சியில் சுழன்று விடுகின்றாயா…?
1.இருக்கும் நிலையை விட்டு ஏன் குருநாதர் பறக்கும் நிலையைச் சொல்கிறார் என்று எண்ணுகின்றாய்.
2.சக்தி தந்த இயற்கையின் தன்மையை அர்த்தமுள்ளதாகப் புரிந்து கொண்டு
3.சாமி சொன்ன சுவாச நிலையை மாற்றிடாது பிறவிப் பயனே போதும் என்ற எண்ணமுடன்
4.உன் நிலையை நிலை நிறுத்து… அதற்காகவே இந்தப் பாடம்…!
ஞானகுரு கொடுக்கும் அருள் வாக்குகள்
1.ஒருவரின் செயலைப் பார்த்து அவரின் உணர்வுகளை நுகர்ந்தோம் (சுவாசிக்கின்றோம்) என்றால்
2.அதனின் சக்தியாகத் தன்னுடன் அரவணைத்து இந்த உடல் உறுப்புகளை உருவாக்குகின்றது என்றும்
3.உணர்வுகள் எண்ணங்களாக இயக்கப்படுகின்றது என்றும் இராமாயணம் தெளிவாகக் காட்டுகின்றது.
நாம் நுகர்ந்த உணர்வுகள் எண்ணங்களாக எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை வான்மீகி அன்றே இராமாயணக் காவியங்களில் கொடுத்துள்ளார்.
உதாரணமாக ஒரு கோபப்படுவோரைப் பார்த்து விட்டால் அந்தக் கோபத்தின் உணர்வை உயிர் அந்தச் சக்தியாகத் தனக்குள் அரவணைத்துக் கொள்கின்றது.
நாம் கோபம் என்று அறிகின்றோம். இருந்தாலும் நமக்குள் அந்தச் சக்தியாக அரவணைத்துக் கொள்கின்றது.
1.அதனால் விளைந்த கோபத்தை உருவாக்கும் அந்த அணுவின் தன்மை
2.அது தன் இனத்தைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.
அப்பொழுது அந்தச் சக்தி தன் நிலைகளில் எப்படியும் (அடிக்கடி) கோப உணர்வுகளை வெளிப்படுத்திக் கோபத்துடன் பேசும் நிலையாக அதே வழியிலேயே தான் நாம் இருக்க நேரும்.
தனக்குள் வளர்ந்த அத்தகைய அணுக்கள் அந்தச் சமயத்தில் அது இயல்பாகத் அதனின் வளர்ச்சியையே நமக்குள் கூட்டும்.
இதை உணர்த்துவதற்குத் தான் இராமாயணக் காவியங்களில் நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு சக்தியும் அது அது தன் இனத்தைப் பெருக்கும் என்ற நிலையாகத் தசரதச் சக்கரவர்த்தி தினமும் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொண்டே இருந்தார் என்று காட்டுகின்றார்கள்.
நல்ல ஒழுக்கமும் குணசீலமும் கொண்டு நாம் இருந்தாலும்
1.நமக்குள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துக் கொண்ட
2.அந்தந்த குணத்தால் பதிந்த நிலைகள் வரப்படும் பொழுது
3.அதன் இனப்பெருக்கங்கள் என்று வரும் பொழுது
4.அடுத்து அடுத்து நாம் நல்லதை எண்ணினாலும்…
5.உடலுக்குள் அந்த நல்ல குணத்தை கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என்று எண்ணினாலும் நம்மால் முடிவதில்லை
அப்பொழுது நல்லதைச் செயல்படுத்த முடியவில்லையே…! என்ற எண்ணமும் அதே சமயத்தில் தனக்குள் நுகர்ந்து கொண்ட சக்தியின் வலிமையால் நாம் அடிமைப்பட்டு “இந்த உயிரின் இயக்கம் அதன் கீழ் செல்கிறது…!”
நல்ல குணங்களை இந்த உடலில் இருந்து ஆட்சி புரிய முடியாத நிலை ஏற்பட்டு விட்டதே…! என்ற
1.அந்த வேதனை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது இந்த நஞ்சு உடல் முழுவதும் பரவுகின்றது
2.இந்த நஞ்சின் தன்மை பெருகி… உடலில் உள்ள அணுக்கள் நஞ்சாக உருவான பின்
3.இதில் குடியிருக்க விரும்பாது இந்த உடலை விட்டு உயிரான்மா (உயிர்) பிரிந்து சென்று விடுகின்றது.
இப்படிச் செல்லும் உயிர் அடுத்து வேதனைப்படும் உயிரினங்களுக்குள் தான் நம்மை அழைத்துச் செல்லும்.
ஆகவே வேதனையிலிருந்து விடுபடும் ஆற்றலையும் தீமைகளிலிருந்து விடுபடும் ஆற்றலையும் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவ்வப்பொழுது எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்தச் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும். இதை வலுப்படுத்தினால் யாருடைய ஈர்ப்புக்குள்ளும் நாம் சிக்குவதில்லை… ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.