ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்

ஞானம் பெறும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றேன்

 

அன்று சில உண்மை நிலைகளைக் காவியங்களாக்கி உணர்த்திய நிலையிலிருந்துதான் (சித்தர்களின் நிலை) இன்று விஞ்ஞானம் காண்கின்றோம்.

இப்பூமியின் ஈர்ப்பிற்கு மூலகாரணமாய் ஆணிவேராய் உள்ள ஓ…ம் என்ற நாதத்தினால் ஈர்க்கப்பட்ட அமில குணங்கள் தான் இவ்வுலகனைத்துமே. ஒன்றுடன் ஒன்று கலக்கச் செய்து அதன் ஒளி அமிலத்தை இப் பூமியே பல நிலைகளில் வளர்த்துக் கொண்டது.

1.இப்பூமியின் அமில சக்தியான ஈர்ப்பின் அலை கொண்டு தான் அனைத்து நிலைகளும் நடக்கின்றன.
2.எதுவுமே ஒதுக்கப்பட்ட சக்தியற்ற ஜீவனில்லா நிலை இப்பூமியில் இல்லை.
3.ஒவ்வொன்றிற்கும் அதன் ஈர்ப்பிற்கு ஏற்ப அதன் குணநிலையுண்டு.
4.அதன் வளர்ச்சியில் மாற்ற நிலைகளும் உண்டு.

இயற்கையுடன் வளர்ந்திட்ட சக்திதனிலேயே உயர்ந்த ஞானம் கொண்ட மனித ஆத்மாவின் உடலைக் கொண்ட நாம் இவ்வுலகின் உண்மை நிலையை உணர்ந்திடாமல் இருந்திடலாகாது என்பதனை அன்று உணர்ந்த சித்தர்கள்… அந்தந்தக் கால நிலைகளுக்கொப்பக் கவிதைகளாக்கி காவியங்களாக்கி பல அபூர்வ நிலைகளை எல்லாம் புரியும் நிலையில் வடித்துச் சென்றார்கள். சென்றார்கள் என்ன…? வடிவாக்கி நின்றார்கள்.

ஆனால் இக்கலியின் கதையின் ரூபமாய்க் கண்டுணர்ந்து விரயப்படுத்தி விடுகின்றோம். ஒவ்வொரு நிலைக்கும் ஒவ்வொரு தத்துவக் கோளங்கள் உண்டு. நம் முன்னோர்கள் உணர்த்தி ஏற்படுத்திய அரும் பெரும் பொக்கிஷத்தை நாம் கண்டுணர வேண்டும்.

இவ்வுடல் என்ற மாய பிம்பத்தின் அற்ப ஆசைக்காக ஆத்மாண்டவனின் அறிவு ஞான பொக்கிஷத்தைச் சிதறவிட்டே வாழ்கின்றோம்.

அன்று பல சித்தர்களினால் ஆண்டவனாய்ப் பல ரூபப்படுத்தி அவரவர்கள் எண்ணத்திற்குகந்தபடி எல்லாம் ஆண்டவனின் ரூபத்தைக் கண்டுணர்ந்து அவர்களின் ஞானப்பாலை வெளிப்படுத்தினார்கள்.

1.எங்கும் நிறைந்துள்ள ஆண்டவனை எந்த ரூபத்தில் கண்டால் என்ன…? என்ற தத்துவ நிலையை
2.அவரவர்கள் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாவாகவும் வடிவமைத்துத் தந்தார்கள்

அன்பு நற்பண்பு சத்திய ஜெபம் இவற்றை நாம் மேற்கொண்டால்… அன்றைய சித்தர்களினால் சிவனாகவும் விஷ்ணுவாகவும் பிரம்மாகவும் படைக்கப்பட்ட “ஆத்மாண்டவனை…” இயற்கையின் எல்லாமில் எல்லாமாய் உள்ள ஒளியுடன் கலக்கச் செய்யலாம்.

1.அன்றைய சித்தர்களிலேயே ஒவ்வொரு சித்தனும் பல நிலைகளில் விளக்கியுள்ளான்.
2.பல பாடல்களை இயற்றி இன்றைய கால நிலைக்கும் பொருந்தும் நிலை ஏற்படுத்தியுள்ளான்.
3.ஆனால் இந்த ஞானத்தின் பொக்கிஷத்தை மனித ஆத்மாக்கள் பயன்படுத்தாமல் செயல் கொண்டு வருகின்றன.

கருவூராரின் கருவூலத்தைக் காண்பாரும் இன்றில்லை. கருவூலத்தின் கருவையே கரியூலமாக்கிக் களிப்படையும் காலமப்பா இது.

ஒவ்வோர் ஆத்மாவும் தான் பிறந்த கருவூலத்தின் மகிமையை உணர்ந்து வாழ்ந்திடுங்கள். கனவூலத்தில் களிப்பெய்திக் காணும் சுகம் என்னவோ என்பதனை உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.

பக்தியையும் ஞானத்தையும் வளரவிட்டு முக்தி என்னும் பக்தி பெறலாம். பக்தியில் வழி எடுத்து முக்தி என்னும் பக்திக்கே செல்லும் மார்க்கத்தை அடையலாம்.

சிற்றின்பம் பேரின்பம் என்றிட்டே ஞான இன்பத்தை நாசப்படுத்திட்ட நிலை ஏனப்பா…?

1.உண்டாலும் உண்ணாவிட்டாலும் இரவும் பகலும் மாறிக்கொண்டு தான் உள்ளன.
2.நாம் பெறப் போகும் ஞானத்திற்காக நாம் பெறப்படும் வரை எதுவுமே நமக்காக நிறுத்தி வைப்பதில்லை.
3.கருவூலத்தின் கருவாகிய நாம் நம் ஞானத்தை பெறும் சக்தியை அடையும் பக்குவத்தைத் திரும்பவும் திரும்பவும் செப்புகின்றேன்
4.நீங்கள் செயல்படுத்திட வேண்டும்.

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்

 

உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ்வுயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கும் உயிரணுவிற்குச் செயல் கருவியாய் ஆகிறது.

அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.

மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்பகட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.

சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில்
1.எக்குண அமில சக்தியை அதிகப்படி ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றன.
2.வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.

ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன் தன் நிலை உணர்ந்து சமநிலை பெற்று இன்று நாங்கள் உணர்த்தும் இந்த ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
1.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
2.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.

ஒருவரைக் காணும் பொழுதே அவரது குணநிலையையும் அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.

மற்றும் இஞ்ஞானத் தொடர் வழி பெற்ற பின்…
1.தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம் என்ற ஞான மார்க்கம்
2.கொடிய விஷத்தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
3.நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி…
4.தான் மட்டும் ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.

நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து நாம் பிறந்ததின் நலனை நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து… பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?

1.நாம் அறிந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து வாழும் இக்குறுகிய வாழ்நாட்களை அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
2.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால் பல ஜீவன்களை வாழ வைக்கும் முறையுணர்ந்தும் செயல்படல் வேண்டும்.

நமக்கு உள்ள பொருளை எடுத்து அவர்களுக்கு தானமளித்துச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்துதான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள்.

அங்ககீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம். பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.

பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மா தான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.

நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு ஞானத்தொடரின் ஒளியை ஈர்க்கம் குண நிலை கொண்ட பிறகு ஞானத்தின் வட்டத்தில் உள்ள பல ஒளி ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்.

ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை என்ற வினா எழும்பலாம்.
1.நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் நம் செயல் சென்ற பிறகுதான்
2.அச்செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமேயன்றி
3.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்து விடும்.
4.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டு விடும்.

இதனை உணர்ந்துதான் சில கால கட்டடங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படியெல்லாம் பரப்பிடலாம் என்ற “ஆர்வத் துடிப்புடன்” இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.

1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது.
2.ஒளியுடன் நல் ஒளியாய்க் கலக்கத் தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி “உயிரான ஈசனிடம் அதை விட்டு விடுவோம்”

 

இன்றுள்ள நம் பூமியின் தன்மையிலும் நம் பூமியைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் தன்மையிலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளிலும் ஒரு நொடியைப் போல் ஒரு நொடி இல்லாமல் மாறிக் கொண்டே உள்ள நிலையில்
1.நம் பூமியின் தன்மையில் சமீபத்தில் நடந்த இச் சூரிய கிரகண நிலையிலிருந்து
2.நம் பூமிக்குக் கிடைக்கப் பெறும் சூரியனின் ஒளி அலையில் சிறுகச் சிறுக மாற்றத் தன்மையின் நிலையினால்
3.நம் பூமி ஈர்த்தெடுத்த அமிலத்தன்மையில் மாற்றம் கொண்டு
4.பூமிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஜீவ ஆத்மாவிற்கும் இம் மாறுகொண்ட நிலையினால் சில மாற்ற நிலைகள் சிறுகச் சிறுக ஏற்படும்.

நம் உடலிலுள்ள காந்த அமில சக்தி நாமெடுக்கும் சுவாசத்தின் ஈர்ப்பில் நம் செவி வழியில் மோதுண்டு அமிலமாய் அக்காந்த ஈர்ப்பு நிலை உடல் முழுவதற்கும் பரவிய நிலையில்… சிறுகச் சிறுக உடல் தன்மையும் அனைத்து ஜீவ ஆத்மாக்களுக்கும் மாற்றம் கொள்ளும் நாள் இக் குறுகிய கால வட்டத்திற்குள்ளே “மிகச் சமீப எதிர்காலத்தில்” இந்நிலையின் தொடரெல்லாம் நடந்திடும்.

எண்ணத்தைப் பரிசுத்தப்படுத்தி… ஒரு நிலை கொண்ட ஜெப நிலையில் நம் எண்ணம் முழுவதும் படரும் நிலை நாம் ஏற்படுத்திக் கொண்டால்
1.அவ்வொளியுடன் ஐக்கியப்பட்டுள்ள சப்தரிஷிகளின் ஒளியின் ஈர்ப்பு சக்தியில் நம் ஒரு நிலைகொண்ட எண்ண நிலையும் மோதுண்டு
2.அவர்கள் ஈர்ப்பில் அவர்களின் வட்டத்திற்குள் நம் எண்ணச் சக்தி ஐக்கியப்பட்டு நாம் இருக்குங்கால்
3.அவர்களே நம்மைப் பார்த்துக் கொள்வார்கள்.

காற்றிலுள்ள விஷத்தன்மையும் நம்மைச் சார்ந்தவர்களின் மாறு கொண்ட எண்ண நிலையும் நம் ஆத்மாவை வந்து மோதி விலகித்தான் செல்லுமே ஒழிய
1.நாம் ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள அம்மகான்களின் வட்ட சக்தியில் (ஒளி சக்தி)
2.நம்மை அவர்களே ஐக்கியப்படுத்திக் கொண்டு வழி நடத்திடுவர்.

இப்பாட நிலையை உணர்ந்து கொண்டு “எண்ணத்தை ஜெபப்படுத்திய ஆத்மாக்களுக்கு” இதன் தொடர் நிலையின் வழி நிலை புரிந்திடும்.

ஒவ்வொரு மகானும் தான் பெற்ற அந் நல் அமுதை ஆசைப்பட்டுத்
1.தன் வட்டத்திற்குள் பல ஆத்மாக்களை நல்லுணர்வாக்கிட இன்றளவும் அவர்களின் செயல்நிலை செயல்பட்டுக் கொண்டேதான் உள்ளது.
2.அவ்வட்டத்தின் ஈர்ப்பில் நம் நிலை செல்லும் வழி முறையை நாமேதான் பெறல் வேண்டும் என்பதனை உணர்ந்தீரா…?

இன்று வாழும் இவ்வாழ்க்கை தான் நம் காலம் என்பதை மறந்துவிடுங்கள். நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும்… நல் சொத்தை அடையும் பக்குவத்திற்காக நாம் பெற்ற சந்தர்ப்பக் காலம் தான் இது.

இக்குறுகிய காலத்தை தர்க்கவாதத்திலும் பிடிவாத நெறியிலும் “ஆண்டவன் உண்டு… இல்லை…” என்ற ஆராய்ச்சி நிலையெல்லாம் அறிந்திடாமல் நம் முன்னோர்கள் உணர்த்திய நெறியில் உள்ள உன்னத சக்தியை ஈர்த்து நம் சக்தியை நாம் உணரல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவுக்குள்ளும் அவரவர் சேமித்து வைத்தது இவ்வுடலில் உயிரணுவாய் உதித்த காலத்திலேயே சேமித்தது. அதன் தொடரில் வழி வந்த சக்தி நிலையெல்லாம் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் உண்டு.

ஒன்றைப்போல் ஒன்றில்லை… ஆனால் அனைவருக்கும் சக்தியுண்டு. அதை வெளிப்படுத்திட
1.நம்மிடம் உள்ள பல தீய சக்திகளை நமக்கே அடிமைப்படும் நிலைப்படுத்தி
2.நம் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்களும் நம் நிலையில் செயல்படும் நிலையில்
3.நாம் எடுக்கும் எண்ண சுவாசம் இருந்திடல் வேண்டும்.

நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொண்டால் பிறரின் நிலையைக் கண்டு நம் எண்ணத்தில் கலக்கம் தோன்றாது. பிற எதிர்ப்பிற்கும் புகழுக்கும் சமமான நிலை கொள்ளும் பக்குவம் கொண்டு அவ்வாண்டவனின் மந்திரமுடன் ஐக்கியபட்டு அவ்வட்டத்தில் நாம் உள்ள பொழுது… “நம்மைச் சுற்றியுள்ள நிலையையும்… நம்மைக் காக்கும் அவ்வாண்டவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான்…”

அதற்காக நம் எண்ணத்தை நாம் மாற்றலாகாது. அனைத்தையும் சமமாக்கி… அனைத்தையும் என்பது
1.நம் எண்ணத்தில் மோதும் அனைத்தையும் நாம் சமமாக்கி அவனிடம் விட்டு விடுவோம்
2.”அவ்வாண்டவனே பார்த்துக் கொள்வான்” என்ற ஒரு நிலை கொண்ட சம நிலை நாம் பெறல் வேண்டும்.

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன

 

ஒரு நொடியில் ஜீவிதம் பெற்றுச் சில நிமிடங்கள் வாழ்ந்து மறையும் விட்டில் பூச்சிகளும் உயிராத்மாதான். பல கோடி ஆண்டுகளாய் வாழும் மண்டலமும் (சூரியனும்) ஜீவன் பெற்ற ஜீவ ஆத்மாதான்.

அதனதன் வளர்ச்சியில் அது அது எடுக்கும் சுவாச நிலை கொண்டுதான் நீடித்து வாழும் பக்குவம் கொள்கின்றது.

பல நாட்களாய் நம் உலகம் கலியின் பிடியில் சிக்குண்டிருக்க சத்தியத்தின் சக்தியை உணர்த்தி இன்றைய நிலையில் மீளச்சொல்வதின் பொருளென்ன…? என்ற வினாவும் எழும்பலாம்.

இவ்வுலகிற்காக இப்பூமி நிலைத்துச் செயல் கொண்டிட நல் ஆத்மாக்களின் சக்தி நிலை இருந்தால்தான் இப்பூமி வாழ முடியும்.

இப்பூமியிலேயே உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாய் நற்சக்தியை ஈர்த்து ஞானம் பெற்று
1.இன்று சூட்சுமத்தில் உள்ள அனைத்துச் சித்தர்களுமே
2.இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் அவர்களின் சக்தி நிலையை உயிராத்மாக்களின் நிலையில் உணர்த்தி…
3.நம் பூமியைக் கல்கியில் செழிக்கச் செய்யத்தான் இன்றைய சித்தர்களின் நிலையும் சப்தரிஷியின் நிலையும் உள்ளன.

இக்கலி முடிவதற்குள் இங்குள்ள உயிராத்மாக்களைப் பக்தி என்னும் ஞானப்படுத்தத்தான் இன்று உலகெங்கும் எழுப்பப்படும் கோயில்கள் எல்லாம்.

எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி
1.ஓ…ம் என்ற நாதத்தை உயிரணுவில் கலக்கவிடும் சத்திய நிலையை
2.பக்தி நெறியில் உயிராத்மாக்களுக்கு உணர்த்திடல் வேண்டும்.

தன் ஆத்மாவுக்கு நற்பயன் தேட எவ்வாத்மாவும் செயல் கொண்டிடவில்லை. கொண்டிடவில்லை என்பதன் பொருள் புரியாமல் உள்ளதின் நிலை… பக்தியையே ஜாதகத்தின் வழியில் காணுகின்றனர்.

எதிர்காலம் என்பதனையே இவ்வுலகில் வாழும் இக்குறுகிய கால நிலைக்காகத் தாமடைந்த இவ்வுடல் கொண்ட ஜீவ நிலையைச் சிதறவிட்டு பொருளுக்கும் பதவிக்கும் போற்றலுக்கும் சிக்கித் தனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பினை நழுவ விட்டே வாழ்கின்றனர்.

நமக்குக் கிடைத்துள்ள இக்கால சந்தர்ப்பம் நம் ஆத்மாவை நற்கதியுடன் கலக்கவிடும் பக்குவ நிலைக்காகத்தான். இன்று நம் உலகினில் பல அரசியலின் தலைவர்கள் தோன்றித் தோன்றிப் பெரும் புகழும் அழிவும் கொண்டெல்லாம் வளர்ந்து வாழ்ந்தனர்.

உலகையே அடிமைப்படுத்தும் அதிகாரப் பதவியில் இருந்து வாழ்ந்தாலும் அவ்வாத்மாவிற்குப் பேராசை நிலையின் அதி பற்றிருந்ததினால்… உடலை விட்டு அவா் அவ்வாத்மா பிரிந்தும் மீண்டும் மீண்டும் பல பிறவிக்குத் தன் ஆசையைப் பூர்த்தி செய்யப் பிறந்து கொண்டே உள்ளது.

திருவள்ளுவர் அரசனாகவும் வாழவில்லை. தன் ஆத்மாவையே கவியாக்கி ஞானசக்திச் சொற்களை உலகிற்கு உணர்த்த ஆசைப்பட்டுச் செயல் கொண்டார்.
1.அவர் ஆத்மா இன்றளவும் அவரின் மனையாளின் ஆத்மாவுடன் ஒன்றியே சூட்சுமம் கொண்டு
2.இன்றும் உலகமே போற்றும் அத் திருக்குறளில் உள்ளார்.
3.அவரின் குறட்பாக்களைப் படிக்கும் ஆத்மாக்களின் எண்ணமுடனே அவரின் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.

காற்றேதான் கடவுள். காற்றையே தெய்வமாக்கி நாம் எடுக்கும் சுவாசத்தில் கலக்கவிடுங்கள் என்றெல்லாம் இப்பாடநிலை உணர்த்திய நாள் தொட்டே செப்பி வருகின்றோம்.
1.ஆனால் மனித ஆத்மாக்களுக்கு மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதையும்
2.சர்க்கஸில் ஆடும் கோமாளியின் லீலையில் மகிழவும் தான் பேராவல் உள்ளது.

மந்திரத்தில் மாங்காய் காய்ப்பதை மந்திரக்காரன் செய்கிறானே, அதில் உள்ள உண்மை என்ன…? என்று அறியும் நிலை கொண்ட எண்ணமுடையோர் மிகச் சிலர் தான்.

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவர் அவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழி பெற்று வந்தார்கள்… இன்றும் வருகின்றார்கள்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்று நடத்துகின்றனர். அவரின் நிலை என்ன..?

1.இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்.
2.அவர் உடலில் செயல் கொண்டவர் அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி
3.அவ்விசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் “அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி”

அத் தியாகராஜரின் உயிரான்மாவே இசையுடன் கலந்து அவ்விசைஞானம் பொழிந்திடும் இசை உள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையைப் பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அந்த இசையுடனே ஒன்றிவிடுகின்றார்கள். இசைஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

இசைஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையில் எல்லாம் அவர்கள் இசைக்கும் இசையே
1.அவர்களின் உயிர் ஆத்மாவையே இசை அமுதின் அமில சக்தியை அவ்ஆத்மாவுடன் ஒன்றச் செய்து
2.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்.
3.இசைக்கும் இசை எல்லாம் ஈசனின் இசையாக்கித் தன் உயிராத்மாவையே ஈசனாக்கி
4.இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ்விசையமுதம் பெரும் சொத்தப்பா.

இசைக்கும் இசையிலேயே ஒவ்வொரு உடலிலும் உள்ள உயிரணுக்கள் அனைத்தையும் அவ்விசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில் தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவும் இல்லை.

வாழ்க்கையையே அமுதிசையாக்கி அப்பக்திச் சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாக இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. பக்தி மனம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்நிலை உணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழிநடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால்
2.அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டு நிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது.

இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படி தான் வளர்நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில் தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு இன்றளவும் ஒவ்வொரு ஆத்மாவும் வழிவந்த நிலையிலேயே ‘நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…”

சப்தரிஷிகளின் செயல் நிலை

சப்தரிஷிகளின் செயல் நிலை

 

ஆதி சக்தியின் ஜீவ சக்தி தான் அனத்துமே. அஜ்ஜீவ சக்தியை அவ் ஆதி சக்தி வளர விடுகின்றாள். அவ்வளரும் பக்குவத்தில் அவை அவை எடுக்கும் சுவாச நிலை கொண்டு தான் பலவும் உருப்பெறுகின்றன. ஆதி சக்தியின் அருள் சக்தியின் அச்சக்தியுடனே ஐக்கியப்படும் நிலை பெற வேண்டும்.

இன்று நம் உலகினில் மனித ஆத்மாக்களின் எண்ண நிலை ஒருவருக்கொருவர் மாறு கொண்டுள்ளது.
1.நல்லவர் தீயவர் என்பதெல்லாம் ஆண்டவன் படைப்பு அல்ல,
2.அவரவர் எடுத்து சுவாச நிலை ஒன்று அமையப்பெற்றது.

நல்லவரின் எண்ணத்தை அச்சக்தியின் நிலையுடன் சக்தியை ஈர்த்து அந்நிலையில் மென்மேலும் நற்பயனைச் செயல்படுத்தி அதன் வழித் தொடரிலேயே ஆத்மாவிற்கு நற்சக்தி கூடி பரம்பொருளான ஆதி சக்தியுடன் ஐக்கியப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்றவனாய் ஆண்டவனாய் இன்று சப்தரிஷி நிலை பெற்ற பக்குவம் பெற்ற மகான்கள்.

இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களையும் நல் உணர்வு பெற்று நல் ஆத்மாக்களாக தன் வட்டத்திற்குள் அச்சக்தியை ஈர்ப்பதற்காக மனித ஆத்மாக்களின் அவ்ஈர்ப்பு நிலை கொண்ட எண்ணங்களுடன் கலந்து மற்ற மனித ஆன்மாக்களை நற்பயன் பெறச் செய்யும் பக்குவ சக்தியை ஊட்டி நல் உணர்வுகளைப் பக்தி என்னும் நிலையில் வளர விடுகின்றனர்.

அந்நிலை பெற்று வழி வந்த பல மனித ஆன்மாக்கள் எந்நிலை கொண்டு பிறகு செயல்படுகின்றன…?

முந்தைய பாடங்களில்
1.இயேசுநாதரும் முகமது நபியும் ஐயப்பனும் இந்நிலையில் பக்தி கொண்டு வெளி வந்தவர்களின் நிலை எல்லாம் உணர்ச்சி வந்தேன்.
2.இவர்களின் உடலை ஒரு சப்தரிஷி கொண்ட முனிவரின் ஆத்மாவின் செயலினால் வழி நடத்தப்பட்டவர்கள் என்று.

பிற உடலில் அவ்ஆதி சக்தியின் அருள் பெற்ற சப்தரிஷியின் நிலையினால் இவ்வுலகிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடல் கொண்ட ஆத்மாவை அச்சப்தரிஷி வழி நடத்தி அருள் புரிந்த பிறகு அந்த உடலின் ஆத்மாவின் நிலை என்ன…?

ஒவ்வொரு உடலுக்கும் உகந்த உயிரணுவும் உயிராத்மாவும் உள்ள நிலையில் ஒரு சில உடல்களை அவ்உடலில் இருந்து அந்த உயிராத்மா பிரிந்த பிறகு கட்டையான ஜீவனற்ற உடலுக்கு அந்த ரிஷிகளின் ஆத்மா செயல் கொண்டு சில நிலைகள் நடக்க வைக்கின்றனர்.

உயிராத்மாவுடன் உள்ள உடலில் அந்த ரிஷிகளின் நிலை செயல்படும் நிலையில் அந்த உடலில் உள்ள ஆத்மாவின் நிலை எந்நிலை கொள்கின்றது…?

இராமகிருஷ்ண பரமஹம்சர் உயிருடன் உள்ள நிலையிலேயே அவரைத் தன் செயலுக்கு உகந்த ஆத்மாவாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியில் இவ்வுலகிற்குப் பல வழிகளைப் புகட்டிய அந்த ரிஷியின் அருள் இவருக்கு எப்படிச் செயல்பட்டது…?

அதற்குப் பிறகு இவரின் உயிர் ஆத்மாவின் நிலை என்ன…?

இவரின் உடலில் இருந்து அந்த உடல்நிலை கெட்ட பிறகு அந்த உடலில் இருந்து கொண்டு அவர் உயிராத்மா செயல்படாது என்ற நிலையில்
1.அவர் உயிருடன் உடல் பெற்று வாழ்ந்த காலத்தில் அவர் நிலையிலிருந்து செயல்படுத்திய அந்த ரிஷியின் சக்தி
2.அவர் உடலில் உள்ள அனைத்து அமிலத்தையும் புனிதமாக்கும் பக்குவத்தை அவர் சுவாசமுடனும் எண்ணமுடனும் கலக்கச் செய்து
3.அவ்ஆத்மாவுக்கும் அந்த ரிஷியின் ஆத்மாவுடன் கலக்கும் பக்குவத்தை அந்த உயிராத்மாவே ஏற்படுத்திக் கொண்டு
4.அந்த ரிஷியின் சக்தி வட்டத்திற்குள் இவரின் சக்தியும் ஒன்றி விடுகின்றது.
5.இவர் வேறல்ல அந்த ரிஷி வேற இல்லை என்ற நிலையில் ஐக்கியப்பட்டுச் செயல்நிலை கொள்கின்றது.

இப்படித்தான் இச்சப்தரிஷி நிலை பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தன் வட்டத்திற்குள் சேமிக்கும் சக்தியாய்ப் பலரை ஈர்த்துச் செயல்படுத்துகின்றனர்

போகருக்குக் குருவாக அருள் பெற்ற காளிங்கராயச் சித்தரின் நிலையும் இன்று அவரின் வட்டத்திற்குள் அவரின் ஒளியுடனே ஒளியாகக் கலக்க போகருக்கு தீட்சை தந்து அவர் நிலையில் முருகா என்ற மந்திரத்துடன் அவருடன் ஐக்கியப்படும் ஆத்மாக்களை ஒளிவட்டமாகத் தனதாகப் பல சக்தியை ஈர்த்து “இன்று ஒரு மண்டலமாகும் நிலையுடன் ஒளிக்கதிர்களைச் சேமித்து செயல் கொண்டு வருகின்றார்…”

மனித ஆத்மாக்களில் மட்டும் எண்ண நிலை மாறு கொண்டு செயல்படவில்லை.
1.சப்தரிஷியின் நிலையிலும் மாறு கொண்ட நிலை உண்டு.
2.ஆனால் அவர்களின் நிலையில் நற்பயனைப் போதிக்கும் நற்சக்தி நிலைதான் கூடிச் செயல்படுகின்றது.

மனித ஆத்மாக்களுக்குத் தான் இப்பேராசையின் நிலையிலிருந்து விடுபடத் தெரியவில்லை. நல் உணர்வை ஊட்டினாலும் ஏற்பதற்கு எண்ணத்தில் ஆசை இல்லை. அன்பென்னும் நிலையைச் சிதற விட்டு வாழுகின்றனர்.

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”

அருள் ஞான வித்து என்ற “மதுரம்”

 

நாம் ஒரு செடியை வைத்து விட்டால் அது செழித்து வளர்ந்து அதிலே மலர்கள் உருவாகின்றது.
1.மலருக்குப் பின் அதிலே மதுவான இனிமை கொண்ட தேன் இணைந்து
2.அதற்குள் மதுரத்தைத் தனக்குள் நுகர்ந்து… அதனின் நிலை கொண்டு கருவுற்று
3.கருவுற்ற நிலைகள் கொண்டு அது தன் வித்துக்களை உருவாக்குகின்றது.

இதைப் போல
1.நாம் எடுத்து வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளின் தன்மை மலர்ந்து
2.அதனின் மணத்தைத் தனக்குள் நுகர்ந்தறியும் உணர்வின் தன்மை “மதுரம்”
3.மகிழ்ச்சியான அலைகளாக… நம் ஆன்மாவாக அது மாறுகின்றது.
4.அப்படி மாறும் உணர்வுகளை நாம் சுவாசித்து “அந்த அருள் ஞான ஒளியின் வித்தாக”
5.முழுமை பெறும் தன்மையை நாம் அவசியம் அடைதல் வேண்டும்… அடைய முடியும்.

ஆகவே ஏனோ தானோ என்று “எமது உபதேசங்களை” அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… என் குருவின் அருளை “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை” நீங்கள் பெற வேண்டும். அவரின் அருளால் நீங்கள் தெளிந்திடும் நிலை பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியுடன் உங்களுக்குள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று தான் உங்களை எண்ணி நான் பிரார்த்திக்கிறேன்.

என் குருவை உங்களிடம் நான் பார்க்க விரும்புகின்றேன்.

ஆகவே உங்களை அறியாது வந்த இருளை நீங்கள் போக்கிடல் வேண்டும் அதிலே மகிழ்ந்து பேரானந்த நிலை பெற வேண்டும்.
1.உங்களில் வரும் அந்த உணர்ச்சிகள் எனக்குள் மதுரமாகி அதை நுகரும் பொழுது
2.உயிரான ஒளியுடன் ஒன்றி என்றும் நிலைத்திருக்கும் நிலையாக நான் பெறுகின்றேன்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தனக்குள் வரும் நஞ்சினைப் பிரித்து உணர்வின் ஒளியாக எப்படி மாற்றுகின்றதோ இதைப் போன்று தான் நமது குருநாதர் ஆற்றலைப் பெருக்கினார்.
1.அவர் வழிகளிலே நானும் பெற முடிகின்றது,
2.அதன் வழிகளில் நீங்கள் அனைவரும் பெற முடியும்… இதில் கடினம் எதுவும் இல்லை.
3.உங்களைப் பார்க்கும் அனைவரும் இந்த நிலை பெறுதல் வேண்டும்… அந்த நிலைக்கு நீங்கள் வளர வேண்டும்.

துயர்படுவோரைக் கண்டாலோ அல்லது அதைக் கேட்டறிந்தாலோ அடுத்த கணம் ஒரு 50 முறையாவது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள். அவர் உடலில் பட்ட இருள் உங்களை மறைத்திடாது துடைத்துப் பழகுங்கள்.

பின் அவரிடம்… மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவீர்கள் உங்கள் பிணிகள் அகலும் மகரிஷியின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்வீர்கள் உங்கள் நோய்கள் நீங்கும் உங்கள் குடும்பம் நலமாக இருக்கும் உங்கள் தொழில்கள் வளமாக இருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளரும் என்று
1.இது போன்ற அருள் ஞான வித்தாக வாக்காக அவருக்குள் பதிவு செய்யுங்கள்.
2.இதைப் போன்று வழி தொடர்ந்து வழி தொடர்ந்து நீங்கள் செய்து வாருங்கள்
3.தீமைகள் அகன்று தீமை அகற்றும் உணர்வுகள் நமக்குள் விளைந்து அலைகளாகப் படரும்.
4.அதை எல்லாம் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாகப் படரச் செய்யும்.

அப்பொழுது அந்த தீமைகளை அகற்றும் அலையின் தொடர்கள் நாம் எண்ணியவுடன் உடனடியாகக் கிடைக்கப் பெற்றுத் “தீமைகளை அகற்றும் அந்தக் கடவுளாக… அந்த மகரிஷியின் உணர்வுகள்” நமக்குள் சிருஷ்டிக்கும் தன்மையாக வரும்.

ஆனால் இன்றைய மக்கள் பரமாத்மாவிலே எதைப் பரவச் செய்து கொண்டிருக்கின்றார்கள்…? பயத்தையும் வேதனையையும் தான்…!

பஸ்ஸிலே சென்றால் பயம் வீட்டில் இருந்தால் பயம் காசைக் கொண்டு சென்றால் பயம் எதையாவது சத்தமாகப் பேசினால் பயம் என்று அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உணர்வுகள் இந்த காற்றிலே அலைகளாகப் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த உணர்வுகள் மகரிஷிகள் உணர்வலைகளைப் பெறாது தடைப்படுத்துகின்ற நிலையாகவே வளர்ந்து கொண்டுள்ளது.

சூரியனின் காந்த சக்தி அதையெல்லாம் கவர்ந்து பரவச் செய்யும் பொழுது நமக்குள் அச்சுறுத்தும் நிலையே வருகின்றது. அத்தகைய கடவுளாகத்தான் இன்று மாற்றி வைத்திருக்கின்றோம்… பரமாத்மாவாக அதைத் தான் மாற்றுகின்றோம்.

அதிலிருந்து நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் சென்ற பின் நம்முள் நின்று அதுவே இயக்கச் செய்கின்றது

இதைப் போன்ற நிலைகளை அகற்ற
1.உலகம் உயர்ந்த நிலைகள் பெற அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நாம் நுகர்ந்து
2.இனி வரக்கூடிய காலங்களில் பூரண பௌர்ணமி போன்று உலக மக்கள் அனைவரும் ஒளியின் சுடராக மாறி
3.தெளிந்த நிலைகள் கொண்டு எல்லோரும் மனிதன் என்ற முழுமை அடைந்து
4.இந்த உடலை விட்டு அகன்றால் நிலை கொண்ட ஒளியான சரீரம் பெற வேண்டும் என்று
5.ஏகோபித்த நிலையில் எண்ணி நாம் வாழ்வோம்… வளர்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன் (ஞானகுரு).

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

மெய் ஞானிகளின் அறிவை நாம் பெறுதல் வேண்டும்

 

டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட வகையில் இன்ஜினியராகப் போக வேண்டும் என்றால் அதனைப் படித்தவுடன் “இஞ்சினை எப்படி ஓட்டுவது…?” என்று நீங்கள் படித்துக் கொள்கின்றீர்கள்.

விஞ்ஞானி ஒவ்வொரு பொருளின் உணர்வையும்…
1.அதனதன் இயக்கத்திற்கு எதை எதை இணைக்க வேண்டும்…? என்று அவர் கண்டுபிடித்துச் சொல்கின்றார்.
2.இன்ஜினியரோ அதற்குத் தகுந்த சாதனங்களை உருவாக்கி அதனதனைச் செய்கின்றான்.
3.மெக்கானிக்கலோ இதனை இந்த வலுவில் செய்தால் இதனுடைய எடை கூட இப்படி இருக்கும் என்று.

இப்படி அவரவர்கள் உணர்வுக்கொப்பதான் அதைச் செய்கின்றோம்.

அதைப் போல் தான் “மெய் ஞானிகள் அன்று சொன்னதை” உங்களுக்குப் பாட நிலையாக இப்போது கொடுக்கின்றோம்.

பள்ளியில் சென்று நீங்கள் எதனெதன் வழிகளில் பாடங்களைப் பதிவு செய்கின்றீர்களோ அது நினைவு வரப்படும் பொழுது இப்படி வருகின்றது.

இதைப்போல விஞ்ஞான அறிவுப்படி… தான் கற்றுணர்ந்த உணர்வின் தன்மை எதிலே எண்ணங்கள் செல்கின்றதோ அது பதிவாகின்றது.

வக்கீல் என்று வைத்துக் கொண்டால் “பதிந்த பின்” சட்ட நுணுக்கங்களை அறிந்து கொள்கின்றோம். இதிலே சட்டத்தின் நுணுக்கங்களை அறிந்து கொண்டாலும் “பிழைகள் எது…?” என்ற நிலைகளை அறிந்து நீக்கக் கற்றுக் கொள்ளுகிறோம்.

ஆனால் கற்றுக் கொண்டாலும்
1.தனது நிலைகளில் “தன் நண்பன்” என்று வந்து விட்டால், அவன் தவறு செய்தால் கூட
2.சட்டத்தில் எங்கே குறை இருக்கின்றது…? என்று நண்பனைக் காக்கத் “தவறும் செய்கின்றோம்…”
3.(கோபித்துக் கொள்ளாதீர்கள்… இப்படிச் சொல்கின்றேன் என்று…!) சட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது என்ற நிலைகளில் இப்படி…!

அதே மாதிரி ஆடிட் (AUDIT) அதன் வழியிலே கற்றுணர்ந்தாலும் அவர் கற்றுணர்ந்த நிலைகள் “தன் வாடிக்கையாளரை” எப்படிக் காப்பாற்றுவது…? என்பது தான் அவர்களுடைய தத்துவம்.

ஆக தனக்குள் பற்றிக் கொண்ட… சர்க்கார் நிலைகளில் இருந்து தன்னை மாற்றிக் கொள்ளும் நிலை தான் இங்கு வருகின்றதே தவிர
1.பொது விதியான நிலைகள் நம் தவறும் இங்கே வரக்கூடாது.
2.இங்கேயும் நாம் தவறான நிலைகள் செய்யக்கூடாது என்ற நிலைகளில்
3.அதிலே எது மையமாக இருக்கின்றதோ அதை உணர்ந்து அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் இந்த நிலையும் இல்லை,

அப்படிப் போனால் “அவர்களுக்குப் பிழைக்கத் தெரியாது” என்று பட்டமே வந்துவிடும்.

இந்த ஆறாவது அறிவால் வரக்கூடிய நிலைகள். இவர் எதற்கும் லாயக்கே இல்லை இவர் எதற்கு இங்கே வந்தார்…? என்று சொல்வார்கள். நியாயத்திற்காகப் போராடினால் அவரைப் பைத்தியக்கார வக்கீல் என்று சொல்வார்கள். நியாயத்திற்காக வேண்டி ஆடிட்டர் சொன்னால் “இவர் பிழைக்கத் தெரியாதவர்” என்று சொல்வார்கள்.

தவறு செய்தவரின் நிலைகள் “நான் தவறு செய்து விட்டேன்” என்றால் அந்தத் தவறைச் சாதகமாக வைத்து… சட்டத்தில் எங்கே ஓட்டை இருக்கிறது என்று அதைப் பிடித்துக் கெட்டிக்காரராகும் நிலை தான். அப்பொழுது “எங்கள் வக்கீல் கெட்டிக்காரர்” என்று சொல்வார்கள்.

குற்றவாளி ஆக்குவதில் முதன்மையாக வந்து விடுகின்றான்.
1.இவர் செய்யக்கூடிய தப்பை வக்கீல் ஏற்றுக் கொண்டு அவர் குற்றவாளியாக ஆக வேண்டும்.
2.இவர் குற்றத்தைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நிலைகளில் வாதிடுகின்றார்.

இன்றைய கல்வியின் ஞானங்கள் வரப்படும் பொழுது இதுதான் வருகின்றது. இந்த விஞ்ஞான அறிவால் மனிதனால் கற்றுணர்ந்த நிலைகள்.

ஆனால் மெய்ஞானியின் உணர்வுகளை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு சமயமும் நமக்குச் சரியான பாதையை அது காட்டும். ஏனென்றால் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

1.இயற்கை உணர்வுகள் எவ்வாறு இயங்குகின்றது…?
2.அந்த உணர்வின் ஆற்றல் மனிதனை எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை மெய் ஞானிகள் அறிந்து காலத்தால்
3.சந்தர்ப்பத்தால் இணைந்த அந்த நிலைகளை இதை எவ்வாறு முறியடிப்பது…? என்று செயலாக்கியவர்கள்.
4.மெய் ஞானிகள் யாரையும் குற்றவாளி ஆக்குவதில்லை. (ஆனால் இண்றைய கல்வியறிவு மற்றவர்களைக் குற்றவாளியாக்கும்)

சந்தர்ப்பத்தால் தான் குற்றங்கள் ஏற்படுகின்றது. அதை மாற்றும் வழிக்குத் தான் மெய் ஞானிகள் உணர்வை உங்களுக்குத் தொடர்ந்து போதித்துக் கொண்ட வருகின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை

மகரிஷிகளை… “எண்ணத்தால்” நாம் எண்ணி எடுக்க வேண்டிய சரியான முறை

 

இயற்கையின் உண்மை நிலைகளை எல்லாம் உணர்த்தியது யார்…? அந்த மகரிஷிகள் தான். அவர்கள் அறிந்துணர்ந்த அறிவின் ஆற்றலை அவரில் விளைந்ததை தங்களுக்குள் உருவாக்கி அதை வெளிப்படுத்துகின்றார்கள் இந்த உண்மைகளை.

அவருக்குள் விளைந்த உணர்வின் எண்ண அலைகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நம் பூமியில் படர வைத்துள்ளது
1.எதையெல்லாம் அவர்கள் உணர்த்தினார்களோ
2.அந்த மகரிஷிகளை நாம் எண்ணி அவரிலிருந்து விளைந்த உணர்வை நுகர வேண்டும் என்றால்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று நம் உயிரிடம் வேண்டுதல் வேண்டும்.

ஏன் அவனிடம் வேண்ட வேண்டும்…? எப்படி வேண்ட வேண்டும்…?

கண்ணின் நினைவு கொண்டு அந்த சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தை நம் கண்ணிலே கொண்டு வருகின்றோம்.
1.முதலில் கண்ணிலே பார்த்து… பின் சொல்வதை எல்லாம் காதிலே கேட்டாலும்
2.நினைவை… கண்ணின் நினைவுக்குக் கொண்டு வருகின்றோம்… அப்போது அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகின்றது.

பதிவானதை மீண்டும் நாம் எண்ணி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உள்முகமாக நினைவினைச் செலுத்தி நம் உயிரிடம் வேண்டிடல் வேண்டும்.

உயிர் தான் ஈசன்… அவனை நாம் மதித்தல் வேண்டும். நாம் எண்ணியது எதுவோ அதை இயக்குகின்றான்

ஆகவே நாம் உயிரை “ஈஸ்வரா…!” என்று வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு இந்த நினைவினை உயிருடன் ஒன்ற வேண்டும் ஈஸ்வரா என்று…!
2.இப்படி இணைத்துப் பழகுதல் வேண்டும்.

உதாரணமாக மேக்னட் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த சுழற்சி ஆகும் பொழுது மோட்டார் ஓடுகின்றது ஆனால் மோட்டாருக்கு ஓடக்கூடிய கரண்டை வீட்டில் உபயோகிக்கும் ஃபேனுக்கு செலுத்தினோம் என்றால் ஃபேனில் உள்ள காயில் எரிந்து விடும். இதைப் போல
1.மிக சக்தி வாய்ந்த அந்த மகரிஷிகளை நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டும் என்றால்
2.அதற்குத் தகுந்த காந்த புலனறிவு தேவை… ஈர்க்கும் சக்தி,

அப்பொழுது… முதலிலே நாம் எதைப் பதிவு செய்து உள்ளடக்கமாக வைத்திருக்கின்றோமோ அதனை நினைவு கொண்டு வந்து உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.நினைவினை அவனிடம் ஒன்றி… அவன் மூலமாக நாம் அறிய வேண்டும்.
2.அப்படி நாம் எடுக்கப்படும் பொழுது இந்த உணர்வின் இயக்கங்கள் வேகமாக இயக்கப்பட்டு
3.நம் உடலுக்குள் மீண்டும் அது சுழல்கின்றது.

உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கிறது…?

தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பு வெள்ளி இவைகளைப் பிரிக்க திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அதைப் பிரித்து விடுகின்றதோ இதைப் போல நமது வாழ்க்கையில் தீமைகளைக் கண்டு உணர்ந்தாலும் அந்த ஞானியின் உணர்வின் தன்மையை நாம் எண்ணும் பொழுது உடலுக்குள் சென்று நம் நல்ல எண்ணங்களில் கலந்த அந்தத் தீமைகளை அகற்றுகின்றது.

ஆகவே… எந்தக் கோவிலுக்குச் சென்று வணங்கினாலும் இதை முறைப்படி நீங்கள் எண்ணினால்தான் நல்லது நடக்கும்.

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகள் “அவர்கள் யார்…?” என்று தெரியவில்லை என்றாலும் மகரிஷிகள் என்பவர்கள் சிருஷ்டிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தங்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள். அவர்கள் அறிந்தது தான் இந்த உண்மைகள்.

அதை எண்ணாமல் எந்த ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தாலும் நல்லதாகும் நிலைகள் இல்லை.

அங்கிருக்கக்கூடிய பூசாரியோ அல்லது வழிகாட்டுவர்கள் யாரோ அவர்களை எண்ணினால் “அந்த மந்திரம் தான்” நினைவுக்கு வரும்.

கோவிலில் யாகம் செய்து இன்னார் சக்தி ஏற்றுகிறார் என்று அவர்களை எண்ணினால்
1.அவர்கள் என்னென்ன மந்திரம் செய்து பதிவு செய்து வைத்திருக்கின்றார்களோ
2.அந்த மந்திரங்களைக் கேட்டு யார் யாரெல்லாம் இறந்தார்களோ
3.அந்த மந்திர உணர்வு கொண்டு அதை மீண்டும் எண்ணப்படும் பொழுது
4.அந்த மந்திரத்தை அதிகமாக ஜெபித்தவரின் உயிரான்மா தான் இங்கே (நமக்குள்) வரும்.
5.பின் அவருடைய ஆசை எதுவோ அதைத்தான் நமக்குள் இயக்கும்

இதெல்லாம் இயற்கையின் உண்மை நிலைகள். இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே
1.இயற்கையின் உண்மைகளை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.தெய்வீக நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இவ்வளவு விளக்கமாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

மகரிஷிகளுக்கும் ஆசை உண்டு

 

ஒன்றின் துணையுடன் ஒன்றியே மற்றொன்றின் செயல் உள்ளது‌. தொடர் நிலை இல்லாத செயல் எதுவுமே இல்லை. பால்வெளி மண்டலத்திற்கும் மற்ற சக்தியை ஈர்த்துச் செயலாக்கும் சக்தி உண்டு.

வானமும் பூமியும் எதுவுமே ஒன்றின் தொடரில்லாமல் ஒன்றில்லை. வியாழனின் நிலையை அன்று கேள்விக்குறியாக்கி… வியாழனில் இருந்து நம் பூமிக்கு எப்படி அணுக்கள் வந்து தோன்றின…? என்பதனை உணர்த்தத் தொடர் கொண்டு நிறுத்தியுள்ளேன்.

1.நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் வாழ்ந்த பூமிதான் வியாழன் மண்டலம்.
2.ஆனால் இன்று மனித உடல் கொண்ட அறிவு நிலையும் செயல் திறமையும்
3.எண்ணத்தின் வளர்ச்சி சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள் அங்கில்லை.
4.ஆனால் அங்கிருந்து வந்தவர்கள்தான் நாம் எல்லோரும்.

இம்மனித உடல் எய்தி வாழ்ந்திடும் ஆத்மாக்களில் முதலில் தோன்றிய உயிரணுக்களின் தொடர் சக்தி வியாழனிலிருந்து வந்ததுதான்.

நம்மை ஒத்த மனித ஆத்மாக்கள் அங்கு வாழ்ந்த காலத்திலேயே… தன் அறிவினால் எண்ணத்தில் ஜெயம் கொண்டு சூட்சுமம் கொண்டோரின் சக்தியினால் வியாழனின் சக்தித் திறனை நம் பூமி ஈர்த்து வாழப் பழகிக் கொண்டவுடன்
1.சூட்சுமத்தில் உள்ளோரால் (வியாழனிலிருந்து சூட்சுமம் கொண்டவர்கள்) நம் பூமியின் இயற்கையின் வியாழனின் சக்தித் தன்மை கூடி
2.நீர்நிலைகள் பெருக்கம் கொண்டு மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் பக்குவ நிலை வந்தடைந்த பிறகு
3.இச் சூட்சுமத்தில் அங்கிருந்து வாழ்ந்து வந்தவர்களால் அவர்களின் தொடர் சக்தியை இப் பூமியில் வளர விட்டு
4.அதன் தொடர் நிலையிலிருந்து வந்ததுதான் இக் கலிகாலம் வரை.

இச்சூட்சுமம் கொண்டு செயல்படுபவர்களிலும் தன் இனப் பெருக்கத்தைச் செயலாக்கும் ஆசை நிலையுண்டு.

எப்படி இன்று நம் பூமியில் வந்து வாழ்ந்து சூட்சுமம் கொண்ட முருக ஜெபத்துடன் ஒன்றிய போகரினால் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது செயலைக் கொண்டு பல மருத்துவ நிலைகளையும் பக்தி நூலையும் ஏடுகளையும் இப் பூமியில் பதியச் செய்தார்.

தன் நிலை உணரவும் தன் சக்தியின் சக்தியைப் பலருக்கும் பரப்பும் ஆசையுடன் செய்திட்ட நிலை போகரின் நிலை.

முருகரின் பக்தி கொண்டு முருகருடன் ஒன்றிய எண்ணம் கொண்டோருக்கெல்லாம் போகரின் சக்தியில் ஈர்த்து செயல்படுத்தி அவ்வட்டத்தின் வளர்ச்சியையே ஓங்கச் செய்கின்றார்.
1.மனித ஆத்மாக்களுக்கு மட்டுமல்ல ஆசை நிலை… ரிஷிகளுக்கும் அவ் ஆசை உண்டு… ஆசையில்லா விட்டால் எதுவுமே இல்லை
2.பேராசைப் பிடியில் சிக்குண்டு அடிமைப்படாமல் அன்பான ஆசையில் தான் அனைத்துமே செயல் கொள்கின்றது
3.வியாழனில் வாழ்ந்தவரின் ஆசையினால் நம் பூமி சக்தி பெற்றது.
4.நம் பூமியில் வாழ்ந்து செயல் கொண்டு சூட்சுமம் கொண்டோரினால் சந்திரனில் சக்தி நிலை கூடப் போகின்றது
5.சந்திரனுக்கு நம்மை ஒத்த உயிராத்மாக்கள் சென்று வாழ்வதற்கே இச் சூட்சுமம் கொள்வோரின் சக்தியினால் தான் செயல்படுத்திட முடிந்திடும்.

இப்பொழுது செப்பிடும் சந்திரனில் மனித ஆத்மாக்கள் வாழப்போகும் நாட்களின் நிலை, ஒரு வருடம் அல்ல… இரண்டு வருடம் அல்ல… ஆயிரம் ஆண்டு காலம் ஆனாலும் ஆகலாம்.

பல கோடி ஆண்டுகளாய் பல நற் சக்திகளை ஈர்த்து இயற்கையிலே பல பொக்கிஷங்களைப் பெற்றிட்ட நம் பூமியே… இக்கலியினால் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்களினால் மாற்றம் கொள்ளப் போகின்றது.

நம் பூமியின் மாற்றத்தினால் இக்கலியினால் வந்த மனித ஆத்மாவினால் நிகழப் போகும் இயற்கையின் கொடுமையான மாற்றத்தினால் நம் பூமி மட்டுமல்ல… இதன் தொடர்பினால்
1.ஒவ்வொரு மண்டலத்திற்கும் இம்மாற்ற நிலை ஏற்பட்டு
2.பால்வெளி மண்டலமும் நம் சூரியனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களும்
3.எழுத்திலும் எண்ணத்திலும் எண்ணத்தகா மாற்ற நிலை இக்குறுகிய காலத்தில் நிகழத்தான் போகின்றது.