அபிராமிபட்டர்

அபிராமிபட்டர்

இவ்வுலக நியதியே இக்கலியின் இக்காலத்தில் மாற்றம் கொள்ளப் போகும் உண்மை நிலையை நம் தியான முறைப்படி உணர்த்துகின்றோம்.
1.ஒளியாய் ஒவ்வோர் ஆத்மாவும் எந்நிலையில் ஒளிர்ந்திடலாம்…? என்பதனை
2.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படும் வழிமுறைகளை நாம் அறிந்த வழியில் உணர்த்துகின்றோம்.

இப்பூமியிலே உயிரணுவாய்த் தோன்றி உயிராத்மாவான இன்றும் தன் உடலை அழியா வண்ணம் ஒளியுடனே நினைத்த நேரத்தில் கலந்து செயல் கொள்ளும் கொங்கணவரும் போகரும் இவ்வழி தொடரை எந்நிலையில் பெற்றார்கள்…?

இப்பூமியில் அபிராமிப்பட்டராய் அபிராமி அந்தாதி இயற்றிய அவ் அபிராமிபட்டர் அம்மாவாசை நாளில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று உணர்த்தி பூரணச் சந்திரனைக் காணச் செய்தது எந்நிலையில்…?

சந்திர நிலவா அன்று காட்சி அளித்தது…?

அபிராமிப்பட்டராய் வாழ்ந்த அவ்வாத்மா
1.தன் எண்ணத்தைத் தன் உடலில் உள்ள ஒவ்வோர் அணுவையும் அச்சக்தி மாதாவின் செயல் சக்தியின் உண்மைக்கே அடிபணியச் செய்து
2.அவ்வுண்மையின் சக்தியையே அன்பு கொண்டு பூஜித்து,
3.தன் எண்ணத்திலும் உணர்விலும் எவ்வணுவின் சக்திக்கும் அடிபணிய வைத்திடாமல் ஒரே சக்தி ஜெபத்தை ஈர்த்து வழி வந்த நிலையில்
4.அமாவாசையில் பௌர்ணமி நிலவைக் காண முடியும் என்று அவ்வரசரின் எண்ண நிலையில்
5.தெய்வ சக்தியை ஓங்கிக் காட்டிடல் வேண்டும் என்று ஒரு நிலை கொண்ட தீவிர ஜெப சக்தியினால்
6.அவ்அபிராமியின் மேல் அவர் துதித்துப் பாடிய அவரின் ஒரு நிலை கொண்ட எண்ண சக்தியே
7.அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களும் பிரிந்து ஒளியாகிக் கூடி “பௌர்ணமி நிலவாய் அனைவரும் காணும் சந்திர பிம்பமாய்க் காட்சி தந்தது…”

அபிராமிப்பட்டரின் ஆத்மா பெற்ற சக்திதான் அவ்வாத்மாவே நிலவாய் ஒளிர்ந்தது. அவரின் கூடுதான் அங்கு பிம்ப நிலையில் இருந்தது.

சக்தியின் தேவியையே தன் ஆத்மாவில் ஐக்கியப்படுத்தி செயல்படுத்திக் காட்டினார்.

1.போகரின் நிலை ஒளியுடன் முருகா என்ற உள்ளமுருக ஒலிக்கும் நிலைக்கெல்லாம் ஒளியாய் நல்லருளைச் செலுத்தும் நிலையும் இதுவே.
2.கொங்கணவரின் நிலையும் இந்நிலைக்குகந்ததே…!
3.தன் ஆத்மாவின் சக்தியையே ஒளியுடன் கலந்து ஒளிரும் சக்தி இவர்களுக்கு எல்லாம் உண்டு.

ரிஷிகளும் முனிவர்களும் மந்திரம் செய்யவும் தந்திரம் செய்யவும் தன் நிலையில் சக்தி கொண்டு செயலின் பயனைப் பெறுவதாகவும் மக்களின் எண்ணத்தில் உள்ளது.

ஆனால்… அச்சப்தரிஷிகளின் நிலையினால்தான் இப்பூமியின் சக்தி நிலையே பெருகி வருகிறது.
1.இன்றளவும் மனித ஆத்மாக்கள் இந்நிலை கொண்டு வாழ்வதற்கே நம் சப்தரிஷிகளின் செயலினால் தான் இப்பூமியின் நிலையே இன்றுள்ளது.
2.அவர்களும் நம்மைப் போல் வாழ்ந்தவர்கள் தான்.
3.நாமும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தொடர்பு கொண்டு வாழ்ந்தவர்கள் தான்.
4.நம் நிலையில் வழி வந்த நிலைதான் இன்று வாழ்ந்திடும் நிலை… அவர்களின் தொடர்பை ஏற்றே இனி வழி வந்திடுவோம்.

ஐயப்பன்

ஐயப்பன்

 

சப்தரிஷிகள் சகலமும் அறிந்த முனிவர்கள் ஞானநிலை பெற்ற சித்தர்கள் இப்படி நம்மில் கலந்துள்ள பல பெரியவர்களின் நிலையெல்லாம் தாயின் வயிற்றில் கர்ப்பத்திலேயே வந்து பிறப்பதில்லை.

நிலையறிந்து புனிதத்தைப் போற்றும் தன்மையில் புனிதமாக்கும் எண்ணம் கொண்ட இப்பெரியவர்கள்
1.“எவ்வுடலையும் தன் உடலாக ஏற்றுத் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட முடிந்திடும்….”
2.நாம் அனைவரும் சரணம் கொண்டே வணங்கிடும் “ஐயப்ப சாமியின்” நிலையும் இந்நிலை போன்றதே.

ஒவ்வொரு முனிவரும் இம்மனித உடல் பெற்று முதல் பிறவியிலேயே சப்தரிஷி நிலைக்குத் தன் நிலையை உயர்த்தி வராத நிலையில் தான் தன் எண்ணத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு உடலுக்கும் வந்து புனிதத்தை நிலை நிறுத்தி வைக்கின்றார்கள்.

புனிதத் தன்மையின் ஜெபத்தைக் கொண்டு அவர்கள் எடுக்கும் ஜெப நிலைக்கும் அவர்கள் சக்தி நிலையும் பெரும் நிலையை அடைகிறது.

சப்தரிஷியும் முனிவர்களும் வந்த நிலையெல்லாம் பிறவியிலேயே அந்நிலை பெற்று வரவில்லை. பிறவி எடுத்து பிறவிப் பயனை அறிந்து வாழ்ந்து சிறுகச் சிறுக வந்ததுதான் அவர்கள் நிலையும்.

இம்மனித ஆத்மாவை நாம் பெறுவதற்கே புண்ணியம் கொண்ட நிலையில் தான் இப்பூவுலகுக்கே வந்துள்ளோம்.
1.இப்பூவுலகின் பல பிறவிகளைக் கடத்தியுள்ள நாம்
2.நாமெடுத்த இந்தப் பிறவியிலாவது உண்மை நிலைகளை அறிந்து நம் பிறவிப் பயனைக் காத்து வாழ்ந்திடலாம்.

காத்து வாழ்வதற்கே இந்நிலையில் உள்ள பல பெரியவர்களையும் சப்தரிஷிகள் ஞானிகள் ஞான சித்தர்கள் இப்படி ஒவ்வொருவரின் நிலையையும் இம்மனித ஆத்மா எடுத்த ஒவ்வொருவருக்கும் போதிக்கின்றேன்.

இன்று நாம் எல்லோரும் வணங்கிடும் ஐயப்பனின் நிலையும் இதுதான். அவர் பிறவி எடுத்துப் பிறக்கவில்லை.

பிறந்த ஒரு சிசுவை அது இறந்த பிறகு அதன் தாய் தந்தை அதை ஒரு பேழையிலே வைத்து அடக்கம் செய்து புதைத்த நிலையில் அந்நிலையில் ஆற்றுப் படுகையில் அது இருந்ததினால் அன்று வந்த பெரும் மழையும் காற்றும் பெரும் வெள்ளமும் அந்த ஆற்றுப்படுகையில் இருந்த மரப்பேழையை அடித்து வந்ததில் குழந்தைப் பாக்கியம் பெறாத அன்று ஆண்ட ஒரு அரசனின் கையில் அப்பேழை கிடைக்கும் தருவாயில் அவ்வரசன் அப்பேழையைத் திறக்கும் பொழுது உயிரற்ற நிலையில் இருந்த சிசுவின் உடலில் ஒரு முனிவரின் நிலை உடலுக்கு வந்ததினால் அவ் உடல் உயிர் பெற்றது.

அந்நிலையில் இருந்து அவ்வரசன் வளர்த்த நிலை கொண்டு நடந்தவை தான் பலவும். சிறு குழந்தையின் உடலில் சகலமும் அறிந்த முனிவரின் ஆத்மா குடி கொண்டவுடன் குழந்தை மழலையா பேசிற்று…?

சகலமும் அறிந்த ஞான முனிவரே அவ்வுடலில் குடிவந்த பிறகு அக்குழந்தையின் தன்மையில் இருந்தே அன்று வாழ்ந்த பல மக்களின் எண்ணத்தை புனிதமாக்கிடப் பல வழிகளைச் செய்தாரப்பா.

ஐயப்பன் என்ற நாமம் சூட்டிக்கொண்ட சகல நிலையும் அறிந்த அம்மாமுனிவர். அவர் இன்றும் உள்ளார் அன்றும் இருந்தார்.

வரும் இன்னல்களைப் போக்கி மனிதர்களின் மனதில் பக்தி நிலையை வளர விட்டால்தான் புனிதத் தன்மை பெற்று புனித ஆத்மாக்கள் ஆக முடியும் என்ற நல்ல ஆசீர்வாதம் தந்தே நடத்திச் செல்கின்றார்.

அவர் ஈர்க்கும் நிலையில் தான் பல பக்தர்களின் நிலை எல்லாம் புனிதம் பெற்று புண்ணியம் எய்தும் நிலையில் உள்ளதப்பா.

கடும் ஜெப நிலையில் உள்ளவரப்பா ஐயப்ப சுவாமிகள்…! இவர்கள் வணங்கும் படியிலும் கல் என்று வைத்து ஐயப்பன் என்று வணங்கும் நிலையிலும் பக்தி கொண்ட நிலையில் வணங்கிடும் இதயத்திலும் நல்வழியில் செல்வோரைத் தன் வழியில் ஜெபம் கொண்டே நல்லாசி வழங்குகின்றார் ஐயப்ப சுவாமிகள்.

எந்த நிலைகொண்டெல்லாம் அவரை எண்ணி வணங்குகின்றார்களோ அந்நிலையின் புனிதத்திற்கு என்றுமே அவர் அருளும் ஆசியும் உண்டப்பா.

ஆண்டவன் என்று நாம் வணங்கிடும் ஆண்டவர்கள் எல்லாம் இந்நிலை பெற்று… தன் ஜெபத்தினால் அருள்வதுதான் நாம் ஆண்டவனாக வணங்கிடும் ஆண்டவன்களின் நிலை எல்லாம்.

ஆண்டவன் என்று யார் உள்ளார் என்று கேட்டேன். ஆண்டவன் தான் நாமெல்லாம்.
1.ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனாக உதித்த நாம்
2.நம்மைப் பேயாக்கி ஆவி உலகில் அல்லல் பட்டு அலைந்து திரியும் நிலைக்கு வந்திடாமல் “நம்மை நாம் காக்க வேண்டும்…”

அந்நிலையில் இருந்து நாம் தப்புவதற்குத் தான் இப்படிப் பல நிலைகளை உணர்த்துகின்றேன். இப்பொழுது மனிதப் பிறவியில் உள்ள நமக்கு மட்டுமல்ல இஜ்ஜெப நிலை.

நம்மைச் சுற்றிக் கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே நல் ஜெபம் பெற வேண்டும்.
1.ஆவி உலகில் உள்ள தன்னைத்தானே துஷ்டன் ஆக்கி பேயாக அலைந்து கொண்டுள்ள எல்லா ஆத்மாக்களுமே
2.தன் எண்ணத்தையும் குரோதத்தையும் நல் நிலை ஆக்கி ஜெபம் பெற்று
3.நல்ல தாய் தந்தையரின் கர்ப்பத்தில் பிறந்து இப்பிறவியின் பயனை முடித்திட வேண்டும்.
4.உங்கள் ஜெப நிலையில் இருந்து அவர்களுக்கும் நல்ல நிலை தா…! என்றே வணங்கிடுங்களப்பா.

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

சித்தர்கள் கடும் தவமிருந்த “மண்டலக் கணக்கு”

 

நம் முன்னோர்கள் ஜெபித்த நிலை பூஜை முறை எல்லாமே அன்று இருந்த சித்தர்களின் ஜெப நிலையில் இருந்து அறிந்து வெளியிட்ட சக்தி நிலைகளை வைத்துத் தான்… நம் முன்னோர்கள் ஆண்டவனை நாம் ஜெபிப்பதற்குக் கோவில்கள்… பூஜை முறை என்று பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.
1.48 மண்டலங்களின் தொடர்புடைய இப்பூமியின் ஈர்ப்பு நிலையை உணர்ந்து
2.48 மண்டலங்களில் இருந்து நாம் பெறும் சக்தி நிலையை வைத்துத்தான் இப்பூமியின் நிலை உள்ளது.

இப்பூமியில் தோன்றியுள்ள உயிரினங்களும் மனித உடல் பெற்ற இவ்வாத்மாக்களும் இப்பூமியில் உள்ளதைப் போல் இப்பூமியைச் சுற்றியுள்ள மண்டலங்களின் தன்மையில் மாறுபட்டுள்ளது.

இம்மனித ஜீவாத்மாக்கள் இந்த 48 மண்டலங்களிலும் இல்லை. இந்த 48 மண்டலங்களின் சக்தி கொண்டு தான் பூமியில் உள்ள மனிதர்களின் நிலை எல்லாம் உள்ளன.

இப் பூமியின் நிலையே இக்கலி முடிந்து கல்கி வந்த பிறகு பெறக்கூடிய உயிர் நிலைகளின் உருவ அமைப்புகள் மாறுபட்ட தன்மையில் தான் புதிய உயிரணுக்கள் எல்லாம் தோன்றும் நிலையில் உள்ளது.

1.மனிதன் பெண் ஆண் என்ற இன வேறுபாட்டுடன் வாழும் தன்மையில் இன்றுள்ள நிலை
2.அடுத்து வரும் கல்கி நிலையில் மாறுபட்ட நிலையில் தான் வருகின்றது.
3.வரும் உண்மைகளை இன்றே நாம் பகர்ந்து விட்டால் பல சித்தர்களின் கோபத்திற்கு ஆளாகும் நிலை நமக்கு எதற்கு…?

இந்நூலில் நாம் அறிந்த பல உண்மைகளை சிறுக சிறுகத்தான் அருளி உள்ளோம். இந்நிலையில் இன்னும் “பல உண்மை நிலைகள்” உள்ளன. அவரவர் எடுக்கும் ஜெப நிலையை கொண்டு அறிந்திடலாம்.

அனைத்தையுமே. ஒரு மண்டலம் – 48 நாள் என்ற ஜெப நிலையை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியதும்…
1.நமக்கு முதலில் இருந்த சித்தர்கள் கடும் தவம் இருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டலத்தின் சக்தியை ஈர்த்தெடுத்து
2.ஒரு மண்டலம் என்ற 48 நாளை ஜெபத்திற்கு உகந்ததாக எடுத்து ஜெபம் பெற்று அறிந்தனர் பல உண்மைகளை.
4.அதன் வழியில் வந்தது தான்… இன்று ஒரு மண்டலம் 48 நாள் என்னும் முறையயெல்லாம்.

நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்திய பல முறைகளை நாம் ஊன்றிப் பார்த்தால் ஒவ்வொன்றின் உண்மை நிலையும் நமக்கு புரிந்துவிடும்

நம் கண்ணிற்கு நாம் சாதாரணமாகப் பார்க்கும் பொழுது கணக்கில் அடங்க நட்சத்திரங்களைக் காணுகின்றோம். புள்ளி போல் நாம் காணும் நட்சத்திரங்கள் எல்லாம் நாம் வாழும் பூமியை காட்டிலும் பல மடங்கு பெரிய மண்டலமாகச் சுற்றி வாழ்கின்றன.

1.இம் மண்டலங்களில் பல மண்டலங்களில் நம்மை ஒத்த இம்ம மனித உடலை பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன.
2.நம்மைக் காட்டிலும் திறம் பெற்ற ஜீவாத்மாக்களும் உள்ளன பல மண்டலங்களில்.

ஆனால் நம் பூமியைச் சுற்றியுள்ள நாம் காணும் சூரியனிலிருந்து இந்த 48 மண்டலங்களிலுமே நம்மை ஒத்த மனித உடல் கொண்ட ஜீவாத்மாக்கள் இல்லை.

நம் சூரியனைக் காட்டிலும் இன்னும் வேகமாகச் சுழலும் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. இவ்வுலகிலே நாம் இப்பிறவி எடுத்து வாழும் பாக்கியத்தை ஜெபம் பெற்று எண்ணத்தையும் நினைவையும் என்றும் நாம் பெற்ற சக்தியை அழியாச் சக்தி ஆக்கி
1.இக்கலி எனும் காலத்தில் மீண்டும் கல்கியுடன் கலந்து வாழும் பக்குவ நிலைக்கு
2.நம்மை நாம் பக்குவப்படுத்தும் நிலைக்கு வந்திடவே
3.இப்பாட நிலைக்கு ஈஸ்வரபட்டனாகிய நான் ஆசை என்னும் நிலை கொண்டே இந்நிலையில் வந்து அருளியுள்ளேன்.
4.ஒவ்வொருவரும் கால நிலையை கடத்திடாமல் அருள் பெறுங்கள்

இவ்வுலகில் பல நிலைகளை இன்னும் உங்களுக்கு விளக்குவேன்.

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

 

ஒரு இயேசுநாதரும் வால்மீகி முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம் அறிகின்றோம்.

அவர்கள் பிறவி எடுத்து பல உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று… மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள் எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நம் உயிராத்மாவிற்கு நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின் அருளைப் பெற்று வாழ்வதுவே.

பிறரின் எண்ணமும் பிறரின் தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப் பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.

பால் புகட்டத் தாய் பாடம் புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று… ஒன்றுடன் ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்… நான் என்ற தனி நிலையில் இல்லாத நாம்… “அப்பெரியோர்களின் அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும் பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச் செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”

 

நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும்,
1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு
2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை
3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்
4.எந்த நிலைக்கும் அவ்வாத்மா நம் எண்ணத்திற்கு உகந்தபடி செயல்படும் தன்மை பெறும்.

நமக்கு இயேசு மகான் எப்படிக் கிடைத்தார்…? ஆழ்வார்கள் பலர் நமக்கு எப்படிக் கிடைத்தார்கள்…? சூட்சும நிலை கொண்ட இவ்வாத்மா பெரியோர்கள் எல்லோரும் தன் நிலைக்கு உகந்த உடல்களை எப்படி எப்படி எடுத்துப் பிறவி எடுக்காமலேயே இவ்வுலகில் வாழ்கின்றார்கள்…? என்ற நிலை புரிந்து நாம் வாழ வேண்டும்.

பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாம் பிறவியிலிருந்து அந்நிலை பெற்று வரவில்லை சில உடல்கள் அவ்வுடலில் இருந்து ஆவி பிரிந்து சென்ற பிறகு “அவ்வுடல்களை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்…”

ஏன் அந்த உடலில் இருந்து சென்ற ஆவிக்கு அவ்வுடலில் திரும்பவும் வந்து செயல்பட முடிந்திடாதா…? என்ற எண்ணம் கொள்ளலாம்.

அவ்வுடலுடன் இருக்கும் பொழுது அவ்வாவிக்கு எந்த நிலையில் சக்தி பெற்றதோ அந்த நிலையில் தான் அது செயல்பட முடிந்திடும்.
1.பயத்துடனும் இவ் உடலில் உள்ள வலியின் கொடுமையினாலும்
2.உடலை விட்டுப் பிரியும் ஆவியினால் திரும்பவும் அந்த உடலை ஏற்றுச் செயல்படுத்திட முடிந்திடாது.

அந்த நிலையில் வருவது தான்… பல ஞானங்கள் பெற்ற “இவ்வுலகுக்கு இன்னும் தொண்டு செய்ய வேண்டும்…” என்ற நிலையில் உள்ள “பெரியோர்களின் ஆவி” இவ் உடலில் வந்து செயல்படுகிறது.

சாதாரண ஆட்டு இடையனாக இருந்த இயேசு பிரான் ஆடு மேய்க்கும் நிலையில் அவர் உடலை ஒரு கருநாகம் தீண்டியதால் அவர் ஆவி பிரிந்தது.

அந்த நிலையில் உடல் கெடாத நிலையில் இருந்ததால் அவர் சிறுவனாக அன்பு கொண்டிருந்த அவரின் தாய், தந்தையின் நிலை அறிந்து அந்த உடலை “ஒரு மாபெரும் ரிஷி” ஏற்றுக் கொண்டார்.

மக்களுக்கு நல் வழி புகட்ட அந்த உடலில் இருந்து கொண்டே அந்த ரிஷி தன் நிலையில் தன் வழியில் மக்களுக்குப் புகட்டிச் சென்றார்.

அவ்வேசுபிரான் இன்னும் எங்கும் செல்லவில்லை. எவ்வுடலை ஏற்று எந்த நாட்டில் வாழ்ந்தாரோ அந்த நிலைக்கு எல்லாம் வந்து செல்கின்றார். எண்ணி ஏற்று ஈர்க்கும் நிலை இல்லை அங்கு இன்று.

ஜெபம் பெற்று அறிந்திட்டால் “அவரின் நிலையை” அறிந்திடலாம்.
1.பல ரிஷிகளும் தவ முனிவர்களும் ஆதி நாளிலேயே தோன்றிய நாடப்பா இந்நாடு.
2.அதனால் தான் இன்றும் இங்கு இன்னும் தெய்வ நம்பிக்கை என்று ஒரு பயமாவது உள்ளதப்பா.

அவ்வாண்டவனின் சக்தியை ஈர்த்து ஏற்கும் நிலையை இவ்வுடலுடன் நாம் உள்ள நிலை கொண்டே ஒவ்வொருவரும் அறிந்து வாழ்ந்தால் பல ஜென்மங்கள் எடுத்து ஆவி உலகில் அல்லல்பட வேண்டியது இல்லை.

இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டு நம்முள் உள்ள இறைவனின் சக்தியால் ஊட்டம் பெற்று நம் உயிராத்மாவை உன்னத நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

இவ்வுடலை எந்த அணுவும் ஏற்கும் நிலையில் உள்ளதால்…
1.நாம் நம் உடலைத் தீய அணுக்களின் ஏவலுக்கு ஆளாக்காமல் நல்லோரின் ஆசி பெறத்தான்
2.நாம் நம் ஜெபத்தையும் நம் எண்ணத்தையும் செயல்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

நமக்கு நல்லது செய்யப் “பல பெரியோர்கள் உள்ளனரப்பா…!”

 

இவ்வுலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி நிற்பது எதுவப்பா…? இவ்வுலகம் என்ற மாயையையே எண்ணி “மயங்கி வாழும் வாழ்க்கை தான் வாழ்கின்றோம்…”

1.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…? சொத்தும் சுகமும் ஆளுவது யாரப்பா…?
2.இவ்வுலகில் பிறந்தால் நிலைத்திருப்பது பொருளல்ல. நாம் விட்டுச் செல்லும் நம்முடைய மக்கள் தான் (குழந்தைகள்) என்ற எண்ணம் பலருக்குண்டு.
3.நம் பெயர் சொல்ல மக்களின் நிலை எத்தனை காலங்களுக்கு…?
4.அக்குழந்தைக்குக் குழந்தை என்று இப்படி சுற்றிக் கொண்டு வரும் நிலையினிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…?

“பிறவிப் பயன்… பிறவிப் பயன்…” என்பதைப் புரிந்து வாழ எண்ணிடாமல் இப்புவியில் பிறந்த நாம் எல்லாம் புரிந்து நாம் வாழும் நாட்கள் எங்குள்ளது…? என்று புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

பூமியில் தோன்றிய “பல புண்ணியவான்கள்”
1.இன்றும் அவர்களுடைய பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை
2.நாமும் புரிந்து வாழ்ந்திட வேண்டும்.

இச் சுவாச நிலையில் இருந்து நாம் பெறும் பாக்கியங்களை நாம் பெறும் செல்வங்களை அழியாப் பொக்கிஷமான அச்செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திடப் “பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றார்கள் பல சித்தர்கள்…”

ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல சித்து நிலைகளைப் பெற்று இன்றும் நிலைத்திருக்கவில்லையா…? அவர்கள் பிறந்த பூமியில் பிறந்த நாம் நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றார்கள்.
1.அன்று சித்து பெற்றவர்கள் இவ்வுடலை ஒரு கூடாக வைத்துத் தான்
2.தன் ஆன்மாவை உலகமெங்கும் இம்மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்நிலையில் வந்தவர் தான் பைரவர் என்னும் ராஜாவும். அவ் அரசர் தான் ஆளும் காலத்தில் தன் உடலை ஒரு கூடாக இருக்கும் நிலையை… தன் சித்து நிலையில் பெற்று அந்நிலையிலேயே பல உடல்களுக்குத் தன் ஆத்மாவைச் செலுத்தி அந்நிலை கொண்டு பல நன்மைகளைத் தன் நாட்டு மக்களுக்காகச் செய்து வந்தார்.

அந்த நிலை கொண்டு அவர் செய்த சித்து நிலை தான் அவர் உடலில் இருந்த ஆத்மா ஒரு நாயின் நிலைக்குச் சென்று அந்நாட்டைக் காவல் காக்கும் நிலையில் செயல்பட்டார்.

இருந்தாலும் அவர் இருந்த நிலையை அறிந்து அவர் உடல் என்னும் கூட்டை அன்று நயவஞ்சகம் படைத்தவர்கள் அழித்த நிலை கொண்டே நாயின் உருவிற்கு ஆத்மா வந்த அப்பைரவ மகாராஜா… இன்றும் அந்நிலை கொண்டே தன் ஆத்மாவை அழியா நிலை பெற்றுப் பிற ஜென்மம் எடுத்திடாமல் “சூட்சும உலகம் சென்று இன்றும் நிலைத்துள்ளாரப்பா…”

அவ் உடல் என்னும் மாயக் கூடு மறைந்தாலும் அவ்உயிர் ஆத்மாவைப் பிற ஜென்மம் எடுத்திடாத நிலை கொண்டு இன்றும் உலகினிலே பல உருவில் வந்து பல நிலையில் மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகின்றார்.

நாம் இவ்வுலகினில் கலந்துள்ள பல சித்தர்களின் நிலையை அறிந்து… நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்துதவி… நம் எண்ணத்திற்கும் செயலுக்கும் நல்லணுவாக “நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் பல பெரியோர்கள் உள்ள பொழுது” நம் எண்ணமும் செயலும் பல ஆசை நிலை கொண்ட சுகபோகங்களுக்குத்தான் அடிமைப்பட்டு வாழும் நிலையில் உள்ளது இன்று இவ்வுலகமே.

1.அன்பென்னும் ஆசை வேண்டும்
2.அழியாச் செல்வமான இவ்வாத்மாவை அழித்தே நாம் வாழ்ந்திடாமல்
3.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி அடிபணிந்து வாழ்வதற்கு
4.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தியைக் கொண்டு
5.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே நம் வாழ்க்கை.

ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்… அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்.

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“பறக்கும் நிலை” அடைவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

ஆண்டவன் என்பவன் யார்…?

ஆண்டவன் என்பவன் யார்…?

 

1.நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத
2.இப்புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலும் கலந்துள்ள சக்தியை
3.யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் நிலைப்படுத்திச் சொல்லிடும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?
4.ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து “அவரவர்கள் வழிக்கு வணங்குகிறார்கள்…”

இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து… பொருள் உள்ளவர்கள் மட்டும்தான் ஆண்டவனின் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி…
1.ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை
2.சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகிறார்கள்.

ஏசுபிரானை வணங்கும் நாட்டிலே இயேசு பிறந்தார். பிறக்கும் பொழுதே வானமண்டலத்தில் பல கோடி நட்சத்திரங்கள் தோன்றின. அவ் ஆண்டவனே தான் வந்து அவதரித்தார் என்ற நிலையில் ஆண்டவனே வந்து பிறந்ததாகப் போதிக்கின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா உயிரணுக்களும் ஆண்டவன் தான். அவ் ஆண்டவனின் சக்தியில் இருந்து பிறந்தவர்தான் அவ் இயேசு பிரானும். நம்மைப் போல் ஒருவராகத் தான் வந்து பிறந்து வளர்ந்தார்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம்.
1.எல்லோருமே ஆண்டவன் தான்…!
2.எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

இயேசுபிரான் எப்படி ஆண்டவன் அருள் பெற்றார்…? என்ற உண்மையினை நாம் எண்ணிப் போற்றி வணங்கிடல் வேண்டும்.

சாதாரண ஆட்டிடையனாகத் தான் அவரும் வளரும் காலத்தில் வளர்ந்தார். குழந்தை நிலையிலேயே அவரது நிலை எல்லா உயிரினங்களிடத்திலும் அன்பைப் பூண்டு அகிம்சையைக் கொண்டு அன்புடனே பழகி வந்தார்.

அன்பையே தெய்வமாக எண்ணி வாழ்ந்தார். அந்த நிலையில் எப்படி அவர் அன்பு காட்டி வாழ்ந்தாரோ அந்த நிலை கொண்டு அச்சக்தியின் நிலையினால் அவரின் நிலையில் அவருக்கு முன் தோன்றிய “ஒரு மாபெரும் முனிவர்” அவரின் நிலையில் தோன்றி… அவரின் நிலையில் தோன்றி என்பது ரிஷிகள் முனிவர்களின் நிலையைத்தான் முதலிலேயே பாடத்தில் சொல்லி உள்ளேன்.

அந்நிலை கொண்டு இவர் சிறு வயது முதற்கொண்டே அன்பு கொண்டு வாழ்ந்த நிலையில்…
1.அம் முனிவரின் சக்தி இவர் உடலில் செயல்பட வந்து இவர் உடலில் சேர்ந்து இவர் உடலிலேயே இருந்து கொண்டு
2.இவ்வுலக மக்களுக்கு இயேசுவின் வாயிலாக பல உன்னதக் கருத்துக்களை மக்களுக்குப் போதித்தும்
3.பல வைத்திய முறைகளை அளித்தும் மக்களுக்கு பல நன்மைகளை எல்லாம் செய்தும் காட்டினார்.

இயேசு பிரானின் ஒரே எண்ணம் அவ்அன்பே தெய்வம் என்ற எண்ணம் தான். மக்களுக்கு நல்வழி புகட்டி… செய்த பாவங்களை மறந்து நல்ல நிலைக்கு வருவதற்காகப் பாவங்களை மறந்து விட்டு “இனி வாழும் நாட்களில் நன்மையுடன் வாழ வேண்டும்” என்பதற்காகப் பல நல்ல உபதேசங்களை எடுத்துரைத்தார்.

இப்படி அவர் நல்வழி நடத்திச் செல்லும் பொழுது மக்களின் நிலை எல்லாம் அவர் நிலையை உணர்ந்து அவரையே ஆண்டவனாக வணங்கி அவர் நிலைக்கு வரும் நிலை வந்தது.

அப்பொழுது அன்று அங்கு ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களின் நிலையில் தன் நிலைக்குப் பணியாமல் “ஆண்டவன் ரூபத்தில் மக்கள் அங்கு செல்வதைப் பார்த்து” அவ் இயேசு பிரானுக்குப் பல இன்னல்களையும் பல கஷ்டங்களையும் தந்து… பல கொடுமைகளை எல்லாம்படுத்தி அவரை அழிக்கின்றேன் என்று அவர் உடலை அழித்தார்கள்.

இவர்கள் மூன்று நாட்கள் கல்லறையில் உடலை வைத்துப் பார்த்ததின் நிலை என்ன…?

இயேசுபிரான் தான் அம் மாபெரும் முனிவரின் அருளைப் பெற்று அழியாச் செல்வமுடன் அனைத்து உலகத்திலும் என்றும் வாழும் சூட்சும நிலையில் வாழும் பாக்கியம் பெற்றவர் ஆயிற்றே.

அவர் உடலை இவர்கள் அழித்தால் மூன்று நாட்கள் என்ன 3000 ஆண்டுகள் என்ன…? இம்மூவுலகத்திலுமே கலந்துள்ள உத்தம நிலை பெற்றவரை அவர் உடலை அழித்தால் அவரையே அழித்த நிலையாக எண்ணி… அன்று ஆண்ட ஆட்சியாளர்கள் பல நிலைகளைச் செய்தார்கள்.

அவர் உடலை அழித்த பிறகு தன் நிலைக்குச் சாதகமாக அவரின் நிலையை வைத்தே பிறகு பல ஆண்டுகள் ஆண்டார்கள்.

செய்த பாவங்களுக்கெல்லாம் அவர்கள் சாமியார்கள் என்ற நிலையில் வைத்திருப்பவர்களிடம் பொருள் தந்து… நம் பாவங்களை எல்லாம் அவர்களிடம் சொல்லிவிட்டால் அவர்கள் ஆண்டவனிடம் நமக்குப் பாவ விமோசனம் வாங்கி பாவத்தை நாம் கழித்திட நமக்கு நல்லாசி வாங்கித் தருகிறார்களாம்.

தினசரி நாம் செய்யும் பாவங்களைக் கழித்திட நமக்கு ஒரு தூதுவனாம். எப்படி இருக்கிறது ஆண்டவனின் நிலை…?
1.”ஒவ்வொருவருக்குள்ளும் ஆண்டவன் உள்ளான்” என்ற உண்மை நிலையைப் போதிக்கவோ
2.அவ் இயேசுபிரானின் உண்மை அறிந்து செயல்படவோ இன்றைய மனிதர்களுக்குக் காலமும் நேரமும் இல்லை.

செயற்கையுடன் கலந்துவிட்ட செயற்கையான மனிதர்கள் இயற்கையின் சக்தியை எண்ணுவதற்கே நேரமில்லை. இவர்கள் எண்ணி வாழ்வதற்குள் இவர்களுக்குக் காலமும் இல்லை. காலத்தையே விரயம் பண்ணாமல் செயற்கையுடன் செயல்படுகின்றார்களாம்.

இவ் இயற்கையின் சக்தியை ஒவ்வொருவரும் புரிந்து அன்றைய உலகில் எப்படிப் பல சித்தர்கள் ஞானிகள் ஆண்டவன் நிலை பெற்றுச் சூட்சும உலகத்தில் செயல்படுகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவருமே ஆண்டவனின் நிலை கொண்டு வாழலாம் என்ற நிலையில் வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.எல்லாமே ஆண்டவனின் சக்தி தான்
2.அந்த ஆண்டவனின் சக்தியைத்தான் நாம் இன்று சிதறவிட்டு வாழுகின்றோம்.

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ளும் வழி

 

உணர்வின் எண்ணத்தை நல் வழி அமிலமாக நமக்குள் வளர்க்கச் செய்து தன் ஞானத்தை மெய் ஞானிகளின் தொடர்பலையில் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
1.இவ்வுலகில் எந்தப் பாகத்திலும் உடல் உள்ளவர்களுடனும் சரி
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களுடனும் சரி
3.சூட்சம நிலை கொண்ட சப்தரிஷிகளின் நிலையுடனும் சரி
4.இவ்வுணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.

இது… ஆண்டவனாக வந்து நமக்கு அருள் புரிவதல்ல…!

“ஆண்டவன்” என்று நாம் உணரும் சக்திகளுடன் நம் எண்ண அலைகளைச் செலுத்தினோமானால் அவர்களின் தொடர் அலையின்
1.ஒலியையும் கேட்கலாம்…
2.உருவையும் காணலாம்.

எனவே ஞானத்தை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையுடன்… உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு உடலின் அமிலக் கூட்டை நற்சக்தியின் உணர்வலையின் செயலாக்கி
1.”நம் எண்ணத்தை”
2.அந்த ஞானிகளின் சித்தர்களின் சப்தரிஷிகளின் உணர்வு எண்ணமுடன் மோதவிட வேண்டும்.

அவர்களின் ஈர்ப்பலையின் சுழற்சி வட்டத்திற்குள்… அவர்களின் ஒளி ஞான ஈர்ப்பின் சக்தியுடன் சுழலவிட்டுச் செயல் கொள்ளும் ஜெப முறையை நாம் அவசியம் மேற்கொள்ள வேண்டும்.

அப்பொழுது உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் அந்தச் சுவாசத்தின் மூலம் சகல சித்தர்களின்… சப்தரிஷிகளின் ஒளி அலையுடன் நம் உணர்வலைகள் கலந்து அவர்கள் பெற்ற சக்தி அலையின் தொடரை நாமும் நிச்சயம் பெற முடியும்.

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

பூமியைக் காக்கும் சந்திர சூரியர்கள் (மகரிஷிகள்)

 

இவ்வுலகத்திலே கலந்துள்ள பல விஞ்ஞானிகளும் பல ஜோதிடர்களும் எண்ணத்தாலும் எழுத்தாலும் எண்ணிப் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து வான மண்டலத்தின் தன்மையை வழிக்குக் கொண்டு வரச் செய்யும் வேலையையே நாமும் செய்யலாம் இன்றைய பாடத்தில்.

இவ்வுலகத் தன்மைக்கு ஒலி ஒளி நீர் இந்நிலைகளை எப்படி அவசியமோ அந்நிலையில் இருந்து எப்படி உலகம் சுழல்கிறதோ அச்சுழலும் தன்மைக்கு இம்மூன்றின் தன்மையுடன் “மற்றொரு தன்மையும் உள்ளதப்பா…”

இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட சூரிய மண்டலத்தில் இருந்து வந்திடும் ஒளிக்கதிர்களினால் இப்பூமியின் தன்மை ஈர்க்கும் நிலையில் உலகம் சுற்றுகிறது என்று சொன்னேன் அல்லவா.

இச்சூரிய மண்டலத்தினைச் சுற்றியுள்ள கிரக நிலைகள் 9 என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளார்கள். ஒன்பது மண்டலங்களுமே இந்நிலையில் தான் சுற்றுகிறது என்கின்றனர்.

அப்படி என்றால் இப்பூமியின் நிலையில் உள்ளது போலவே தான் எல்லா மண்டலங்களிலும் ஜீவராசிகள் உள்ளனவா…? ஜீவராசிகளில் மனிதரின் நிலை உள்ளதுவா…?

பூமியின் நிலை போல் அந்நிலைகளும் சுற்றிக்கொண்டு இருந்தால் அந்நிலையில் ஏனப்பா மனித இனம் இல்லை…?
1.நம் பூமியை தவிர வேறு எந்த மண்டலத்திலும் இந்த மனித இனம் இல்லையப்பா.
2.அந்நிலையில் எந்த ஜீவராசிகளும் இருந்திட முடியாதப்பா.

பூமியின் தன்மையில் பெரும் பொக்கிஷம் என்ன என்றால் பூமிக்கு இரண்டு பக்கங்களில்
1.பூமிக்கு மேல் தந்தையை போன்று சூரியனும்
2.மறு பக்கத்தில் தாயைப் போல் சந்திரனும் உள்ளதால்
3.இப்பூமியின் தன்மை குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது.

சூரியன் — பூமி — சந்திரன்

சூரியனைச் சுற்றி இந்த உலகம் உருளும் பொழுது இவ்வுலகத்திற்கு எதிர் நிலையில் உள்ள சந்திரனின் ஒளியும் ஈர்ப்பு நிலையும் இப்பூமிக்குப் பாய்கின்றது.

பூமி எப்படித் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளதோ அந்நிலையில் தான் சந்திரனும் தன்னைத்தானே சுற்றிக் கொண்டுள்ளது. சூரியனின் நிலை ஒரு நிலையில் தான் உள்ளது.

பூமி தன்னைத்தானே சுற்றும் பொழுது பகலும் இரவும் வருகிறது அல்லவா சூரிய ஒளி படும்போது பகலாகவும் சூரிய ஒளி படாத பொழுது இரவாகவும் உள்ளதல்லவா.

இந்நிலையில் மாறுதல் இல்லாமல் ஒன்று போலவே உள்ளது. ஆனால் சந்திரனை நாம் மாதத்திற்கு ஒரு தடவை தான் முழு நிலவாகக் காண்கின்றோம் மற்ற நாட்களில் வளர்பிறையாகவும் தேய்பிறையாகவும் அமாவாசையாகவும் இருக்கின்றது.

இந்நிலை எப்படியப்பா வந்தது…?

உலகைப் போலவே இச்சந்திரனும் சுற்றுவதால் உலகச் சுற்றை விட சந்திரனின் சுற்றல் துரிதமாக உள்ளது. அந்நிலையில் தான் உலகின் மறு பக்கத்தில் அது சுற்றும் பொழுது அதன் நிலையை மாறி மாறிக் காண்கின்றோம்.

இந்த உலகிற்குச் சூரியனின் ஒளி மட்டும் இருந்து விட்டால் ஜீவராசிகள் உயிர் வாழ்ந்திட முடியுமா…? இவ்வுலக நிலையில் உள்ள பல பல வண்ணங்களும் பல கோடி வாசனைகளும் எப்படியப்பா வந்திடும்…?

1.இவ்வுலகில் உள்ள ஜீவராசிகளின் நிலைக்கு
2.”சூரியனின் தன்மையும்… சந்திரனின் தன்மையும்…” கலந்து தான் இருக்கின்றது

சுவாச நிலையில் இருந்து தான் இவ்வுலகமே… இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாமே உள்ளது என்று செப்பிட்டேன் பல முறை.

இவ்வுலக நிலையில் இருந்து பார்க்கும் பொழுது நம் கண்ணுக்குச் சூரியனும் சந்திரனும் பல கோடி நட்சத்திர மண்டலங்களையும் தான் பார்த்திட முடிகின்றது.

விஞ்ஞானிகள் சொன்ன வியாழன் புதன் சனி செவ்வாய் ராகு கேது சுக்கிரன் என்ற மற்ற கிரகங்களை நம்மால் பார்த்திட முடிகின்றதா…?

ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உள்ளது.
1.நம் பூமிக்கு நேர் பார்வை சந்திரன்
2.அந்நிலையைப் போலத்தான் சந்திரனுக்கு நேர் பார்வை செவ்வாய்.
3.எல்லா மண்டலத்துக்கும் சூரியனின் பார்வை ஒன்றே தான். சூரியப் பார்வை என்பது சூரிய சக்தி ஒன்றே தான்.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் இச்சக்கி நிலை மாறுபடுகின்றது. சூரிய சக்தி ஒன்றே போல் எல்லா மண்டலத்திற்கும் படிந்தாலும்
1.அம்மண்டலத்தின் எதிர் நிலையில் உள்ள மண்டலத்தின் தன்மை மாறுபடுவதால்
2.அந்நிலையில் நடக்கும் நிலைகள் வேறாக உள்ளன.

சந்திரனுக்கு எதிர் நிலை பூமி தான். சூரிய சக்தியையும் பூமியின் சக்தியையும் சந்திரன் பெறுவதனால் சந்திர மண்டலத்தில் சில உயிரினங்கள் உள்ளன. ஆனாலும் அவைகள் “உருளும்” நிலையில்தான் உள்ளன.

சந்திரனில் பூரண சந்திரனில் “தியானத்தில்… பல ரிஷிகளின் உருவங்கள் தெரிவதெல்லாம்”
1.இப் பூமிக்கு நேர் எதிரில் இருக்கும் சந்திரனின் ஒளிக்கதிர்கள் பூமியில் படுவதால்
2.பல ரிஷிகளும் பல ஞானிகளும் அவர்களுடைய தவப்பயனை வைத்துப் பூரண சந்திரனிலிருந்து அவர்கள் பிறந்து வளர்ந்த பூமிக்கு
3.அந்நிலையில் இருந்து அந்தப் பூரண சந்திரனின் ஒளியில் “பல கோடி நறுமணங்களையும்… நல்ல எண்ணங்களையும் பாய்ச்சுகின்றார்கள்…”

அந்நிலையில் இருந்து வந்து தாக்கும் அணுக் கதிர்கள்
1.இம்மானிட உலகில் உள்ள மனிதர்களுக்குப் பெரும் பொக்கிஷம் போன்ற
2.உயிர் காக்கும் அணுக்களப்பா.

சூரியனின் ஒளி மட்டும் இருந்தால் பூமிக்கு உயிர் தன்மைக்கு வாழ்ந்திட முடியாதப்பா… மற்ற மண்டலங்களைப் போலத்தான் இப் பூமியின் நிலையும் இருந்திருக்கும்.

பூமியின் தன்மையை சூரிய ஒளி மட்டும் இருந்திருந்தால் பல பல பாளங்களாக வெடித்து பூமியின் நிலையே சிதறி இருக்கும்.

இப்பூமியின் நிலையைக் காக்கத்தான் எதிர் நிலையில் சந்திர மண்டலம் உள்ளது. சந்திர மண்டலத்தின் நிலை மட்டும் இருந்திருந்தாலும் சூரியனின் நிலை இல்லாமல் இயங்கிட முடியாதப்பா.

இந்நிலையை வைத்துத்தான் தாய் தந்தையரைப் போல என்று பகர்ந்திட்டேன் “சந்திரனையும் சூரியனையும்…”