வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

வாழ்க்கைக்கு “இசையமுதம் பெரும் சொத்தப்பா”

 

இன்று நம்மில் பல மகான்கள் தோன்றி வாழ்ந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் அவர் அவர்களின் அறிவு சக்தியை உலகிற்காக உணர்த்தினார்கள். பல துறைகளில் மாமேதைகள் வழி பெற்று வந்தார்கள்… இன்றும் வருகின்றார்கள்.

திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா என்ற விழாவினை அவரின் ஞாபகமாக இன்று நடத்துகின்றனர். அவரின் நிலை என்ன..?

1.இசைக்காகவே பிறந்தார்… இசையுடனே கலந்தார்.
2.அவர் உடலில் செயல் கொண்டவர் அவரின் இசை பக்தியில் அவரையே இசையாக்கி இன்புறும் பக்குவப்படுத்தி
3.அவ்விசையுடனே அவரின் ஆத்மாவைச் செயல்பட வைத்தார் “அவர் உடலில் செயல்படுத்திய ஒரு சப்தரிஷி”

அத் தியாகராஜரின் உயிரான்மாவே இசையுடன் கலந்து அவ்விசைஞானம் பொழிந்திடும் இசை உள்ளங்களில் தன் இசை ஒளியைக் காண்கின்றார்.

பல மகான்கள் இசையைப் பக்தியாக்கி அப்பக்தியையே ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அந்த இசையுடனே ஒன்றிவிடுகின்றார்கள். இசைஞானம் பெற்று உள்ளத்தையே அமுதிசைப்படுத்தி ஆண்டவனை வணங்குவதாக எண்ணி வணங்குகிறார்கள்.

இசைஞானம் பெற்று இசையுடன் ஒன்றிய ஆத்மாக்களின் நிலையில் எல்லாம் அவர்கள் இசைக்கும் இசையே
1.அவர்களின் உயிர் ஆத்மாவையே இசை அமுதின் அமில சக்தியை அவ்ஆத்மாவுடன் ஒன்றச் செய்து
2.அவ்வுயிராத்மாவிற்குப் பேரானந்த நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றார்.
3.இசைக்கும் இசை எல்லாம் ஈசனின் இசையாக்கித் தன் உயிராத்மாவையே ஈசனாக்கி
4.இன்பமுடன் அவ்வாத்மாவிற்கு நற்சக்தி கிடைக்கப் பெறுகின்றது.

வாழ்க்கைக்கு இவ்விசையமுதம் பெரும் சொத்தப்பா.

இசைக்கும் இசையிலேயே ஒவ்வொரு உடலிலும் உள்ள உயிரணுக்கள் அனைத்தையும் அவ்விசைக்கு அடிமைப்படுகின்றது. நம் உலகமே ஓம் என்ற இசையில் தான் உருளுகின்றது. இசைக்கு மயங்காத எவ்வுயிரணுவும் இல்லை.

வாழ்க்கையையே அமுதிசையாக்கி அப்பக்திச் சுரங்களைப் பாடி நற்பயனைப் பெறத்தான் காலம் காலமாக இவ்வுலகமே இசையின் வழியில் வருகின்றது. பக்தி மனம் பெற அவ் இசையமுதம் நம் உயிராத்மாவுக்கு மிகவும் அவசியமாகின்றது.

இந்நிலை உணர்ந்த பல மகான்கள் இசையுடனே கலந்து இன்றளவும் தன் செயல் கொள்கின்றார்கள்.

1.ஒவ்வொரு ஆத்மாவும் தன் எண்ணத்தில் ஏற்படுத்தி வழிநடத்தும் செயல் நிலைக்கு உகந்த ஞான சக்தியை அந்நிலையை வளரவிட்டால்
2.அவ்வளர்ச்சிக்குகந்த சக்தி நிலை கொண்டவரின் உதவியுடன் நம் சக்தியை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குகந்த அமில சக்தியின் கூட்டு நிலை உயிர் பிறப்பிலேயே வழி பெற்று வருகின்றது. ஒவ்வொரு துறையில் ஒவ்வொருவரின் சாதனை செயல் கொள்கின்றது.

இதற்கெல்லாம் உயிரணுவிலேயே சேமித்த அமில சக்தியின் தொடர் நிலைப்படி தான் வளர்நிலை கொள்ள முடியும்.

ஒவ்வொருவரும் அவரவர்களின் நிலையில் தான் செயல் கொண்டு வருகின்றனர். ஆனால் இவ்வமில சக்தியையே உயிர் பிறப்பில் வளர்ச்சி கொண்டு இன்றளவும் ஒவ்வொரு ஆத்மாவும் வழிவந்த நிலையிலேயே ‘நம் ஜெப சக்தியினால் ஜெயம் கொண்டிட முடியும்…”


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply