வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்

இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.

இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.

ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.

வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.

நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.

அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)

மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.

அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”

கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.

தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.

அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.

கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.

அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்கு தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது

1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.

இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

 

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்து கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்… உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்…! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்…
2.உங்களால் நிச்சயம் முடியும்.

நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்… மன வலிமையும் பெறுகின்றீர்கள்… அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.

ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்… அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீக எப்படி கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாக சென்று விட்டது தான்.

அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்… சிந்தனைகளை இழக்கச் செய்வதும்… மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டி அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் – காற்றிலே அது உள்ளது.

டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்… அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.

அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.

திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

விவேகமும் கிடைக்கும்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

 

இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.

1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.

துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்றுகண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

 

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது… நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ…!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்… கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்…” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்… நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக… நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்… கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்… பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்… நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்…
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்… மன உறுதி இழக்க நேரும்.

அதனால்… சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே…” என்று வேதனைப்படும் பொழுது – வேதனை என்பது விஷம்…! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து… இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ… சண்டையிட்டோர் உணர்வுகளையோ… அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது… உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்… என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்…!

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?

 

முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது

உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?

நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.

அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.

இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.

இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.

நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”

எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.

இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.

சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்… கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

 

உதாரணமாக பாம்பினை நாம் கொன்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவும் போது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. விஷம் அதனின் நினைவுக்கே அழைத்துச் செல்கின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதனின் உணர்வு நம்முடைய நினைவாற்றல் அனைத்தையும் மடியச் செய்து விடுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் அதனின் ஈர்ப்புக்குள் சென்று நாம் பாம்பாகத் தான் பிறக்க நேரிடும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதராக உடல் பெற்றாலும் இத்தகைய தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.விஷத்தை வென்ற விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.பாம்பின் நினைவு மறைந்து நஞ்சினை வென்ற நினைவு வரும்.
4.அந்தப் பாம்பினத்திற்குள் போகாது தடைப்படுத்த முடியும்.

நம் உணர்வின் நினைவலைகள்
1.கண் கொண்டு கடைசியில்… எது நினைவுக்கு வந்ததோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு கண்ணன் பார்த்தசாரதியாக
3.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலிமை பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும் நம் கண்கள்.

ஆனால் அதற்கு மாறாகப் பாம்பினத்தின் நினைவுகள் வரும் போது அது வலுவாகி விட்டால் நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் “இந்தப் பாம்பு தான் தன்னைத் தீண்டியது…” என்ற உணர்வுடன் அந்த விஷத்தின் தன்மை வலுவானால் இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று சொல்வது. பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்…! அப்போது அந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க கண்கள் எத்தனையோ உபாயங்களைச் சொல்கின்றது.

இருப்பினும் இந்தக் கண் அதனின் உணர்வை வலுவாக்கிவிட்டால் அர்ஜுனன் ஆகின்றது. அர்ஜுனன் ஆன பின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இந்த உடலைத் தீண்டினாலும் அதன் உடலுக்குள் நாம் (உயிரான்மா) சென்ற பின் அது பாதுகாப்பு தருகிறது.

கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ… அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று… அதன் வழியில் நம்மைப் பாதுகாக்கச் செய்கிறது.

ஒரு பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் நம் நினைவுகள் அதனை வலு கொண்டு எண்ணும் பொழுது இந்த உடலில் அந்த நஞ்சு பாய்ந்தாலும் நஞ்சு கலந்த உணர்வு பாய்ந்தாலும்
1.பாதுகாப்பான இடங்களை அந்தத் துருவ நட்சத்திரத்தினை நாம் எண்ணும் பொழுது அது வலிமை பெற்று
2.இந்த உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் சென்று நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது
3.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது அதன் அருகில் செல்கின்றோம்
4.நஞ்சை வென்ற உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது.
5.மனிதர் என்ற அறிவின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகிறது.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

ஆகவே நம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நம் உயிரான்மா வெளியில் சென்றால்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அதனின் வலுவை இழக்கச் செய்து
3.அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியை நாம் பெற வேண்டும்.

காலை துருவ தியானத்தில் நாம் அதை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் இந்த உடலிலே எடுத்தாலும்
1.ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் அந்த ஒளி பட்டு இது கரையத் தான் செய்யும்
2.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக மாற முடியும்.

உடலுடனே நான் இருப்பேன் என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை. எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

அத்தகைய நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்… கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்

 

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் வாழ்க்கையே தியானமாக்க வேண்டும்.

1.உட்கார்ந்து தியானம் செய்து கொண்டே இருப்பது தியானமல்ல.
2.அது தியானம் ஆகாது.

காரணம்… தியானத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். அடுத்தாற்போல் திடீரென்று ஒரு விபத்து ஆகிறது என்றோ உங்களை நோக்கி ஒரு மாடு மிரண்டு ஓடி வந்தால் ஆ…! என்று அலறினால் போதும். இது வந்து உள்ளே உருவாகிவிடும்.

இந்த உணர்வு அதிகமானால் தியானத்தில் அடுத்து உட்கார முடியாது.
1.அதிர்ச்சியான செய்தியைக் கேட்டால் அது தான் முன்னாடி நிற்கும்.
2.அப்புறம் நீங்கள் எப்படித் தியானம் எடுப்பது…?

ஆகவே அப்போதைக்கப்போதே துடைத்துப் பழகினால் தான் அடுத்து உங்களைத் தியானத்திற்கே விடும். அப்படிப் பழகவில்லை என்றால் தியானத்திற்கே வர முடியாது.

மனதை ஒரு நிலைப்படுத்துவது (CONCENTRATION) என்றெல்லாம் சொல்வார்கள். அதெல்லாம் முடியாது.
1.நீங்கள் எவ்வளவு செய்தாலும்… பல காலம் நான் தியானமிருந்தேன் என்று சொன்னாலும்
2.முதலில் நன்றாக இருந்தது… இப்போது தியானம் செய்ய முடியவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.

காரணம் எதிர்பாராதபடி அதிர்ச்சியோ மற்றதோ வந்த பின் அது நமக்குள் வலுப் பெற்று விடுகிறது. நம் ஆன்மாவில் கலந்து விடுகிறது. அது வலிமை பெறுகிறது… அதனால் முடியாது போகிறது.

அந்தச் சமயத்தில்… நன்றாகத் தியானம் செய்தேனே… போய்விட்டதே…! தியானம் செய்தேனே… போய்விட்டதே…! என்று வேதனைப்பட்டு அந்த விஷத்தைத் தான் உங்களால் வளர்க்க முடியுமே தவிர அதைப் போக்க முடியாது.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் கையில் அழுக்குப்பட்டதைத் துடைப்பது போல் யாம் (ஞானகுரு) கொடுத்த அருளை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்.

1.எப்போது தீமையைக் காணுகின்றீர்களோ அப்போதெல்லாம் ஈஸ்வரா… என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று
3.புருவ மத்தியில் இணைத்து உள்ளே புகாது தடுத்துவிடுங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் அது வளர வளர…
1.எந்தத் தீமையை நுகர்ந்தோமோ அதை உங்கள் ஆன்மாவிலிருந்து தள்ளிக் கொண்டே போகும்
2.நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டுக் கடந்து சென்றால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கூடக் கொஞ்ச நேரம் சேர்த்து எடுத்தீர்கள் என்றால் யாம் சொல்வதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

எந்தக் கவலை வந்தாலும்… எந்தத் தொல்லை வந்தாலும்… எந்தச் சங்கடம் வந்தாலும்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்களைத் திறந்தே எடுங்கள்… அந்தச் சக்தி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.கண்களை மூடுங்கள்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உடலில் இருக்கும் எல்லா அணுக்களும் பெற வேண்டும் என்று உள்ளே செலுத்துங்கள்.
3.இப்படி எண்ணி உங்கள் நினைவைக் கூட்டிப் பாருங்கள்.

உங்களால் சாத்தியமாகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆகவே… வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

அப்போதைக்கப்போது துடைக்கவில்லை என்றால் உள்ளுக்குள் சென்று அது வலுவாகிவிடும். உங்கள் ஆன்மாவில் அது வலுவாகிவிடும்.

அடுத்து… தியானத்தில் உட்கார்ந்தவுடனே அவன் அப்படிச் சொன்னான்… அதிர்ச்சியாகிவிட்டது என்று அந்த நிலை தான் வரும். அந்த மாதிரி அதிர்ச்சி வந்தாலும் மீண்டும் மேலே சொன்ன முறைப்படி எண்ணி எடுத்து அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

இது தான் உண்மையான தியானம். ஒவ்வொரு நொடியிலும் உங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.

எதை எதையோ ஒவ்வொரு நிமிடமும் நம் வாழ்க்கையில் பதிவு செய்கின்றோம். திருப்பி எண்ணும் போது அதனின் உணர்வே நம்மை இயக்குகிறது… நம்மைத் திசை திருப்புகிறது.

ரேடியோ டி.வி.யில் எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ காற்றிலிருந்து இழுத்து அதைப் பேசுகின்றது. அது போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

அதை நினைவுக்குக் கொண்டு வரும் போது
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உடனடியாகப் பெற முடியும்.
2.மன பலம் பெற முடியும்… மகிழ்ந்து வாழும் சக்தி நிச்சயம் பெற முடியும்.

ஆகவே நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளைப் பெறுவோம். துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே நாம் வாழ்வோம்.

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

தீமைகள் நமக்குள் புகும் வழியும்… அதைத் தடைப்படுத்தும் வழியும்…

 

ஒரு மனிதன் வேதனைப்படுகிறான் என்றால் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… சொல்வதைக் கேட்காமல் இருக்க முடியாது… அதை நுகராமல் இருக்க முடியாது… எல்லாம் தெரிந்த பின் உதவி செய்யாமலும் இருக்க முடியாது.

ஆனால் அப்படிக் கேட்டு உணர்ந்தாலும் இந்த உணர்வுகள் நம் உடலிலே இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

முதலிலே உணர்ந்தோம்… மேலும் அதிகமாகப் போகாதபடி தடுத்தல் வேண்டும். தடுக்க வேண்டும் என்றால் எப்படிச் செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று நமது கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தப்படும் பொழுது
1.நமது கரு விழி அங்கிருந்து வரும் சக்தியைக் கவர்கின்றது.
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் உடனே அந்த வீரிய சக்தியை உண்டாக்குகிறது.
3.கரு விழியுடன் சேர்ந்த காந்தப் புலன் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவர்ந்து
4.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.

டி.வி.க்கு எப்படி ஆண்டனா முக்கியமோ இதே மாதிரி நம் உடலுக்கு கண் ஆண்டனாவாக இருக்கிறது. அதிலே (கருமணிகளில்) ரெக்கார்ட் செய்தாலும் அதை ஆண்டெனா வழி அறியக்கூடிய சக்தியும் கிடைக்கிறது.

நமக்கு நமது கண் ஆண்டெனா. அதிலே எந்த உணர்வினை நினைவினைச் செலுத்துகின்றோமோ நம் உடல் உறுப்புகள் அனைத்திலும் வீரிய உணர்வைச் செலுத்தியபின் இந்தக் காற்றிலிருந்து இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை நாம் உள் முகமாக உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் அது வலுப்பெறத் தொடங்குகிறது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணப்படும் பொழுது நமக்குள் தீமைகள் புகாது தடுக்கபப்டுகின்றது.

காரணம்… இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட முந்திய தீய வினைகளுக்கு இந்த மூக்கு வழிதான் அந்த உயிர் வழி தான் உணர்ச்சிகள் சென்று ஆகாரமாகப் போகிறது.

ஏற்கனவே எடுத்த உணர்வு அதிலே சென்ற இயக்க அணு அதை வளர்ப்பதற்கு உதவும். அதைப் போன்ற தீமைகளை உட்புகாது முதலிலே தடைப்படுத்த வேண்டும்.
1.அதாவது அந்த இயக்க அணுக்கள் நம் இரத்தத்திலே ஜீவ அணுவாகப் போவதற்கு முன்
2.அதைத் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும் (இது முக்கியம்).
3.அதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
4.உடலுக்குள் புகாது முகப்பிலே தடைப்படுத்துகின்றோம் (உயிர் வழி எடுக்கும் போது முக்கு வழி தடைப்படுத்தப்படுகிறது).

விஷத்தை அகற்றி… அந்த விஷத்தையே ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுவோம் என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி… என்றும் பிறவியில்லா நிலை என்ற… ஒளி உடலைப் பெற முடியும்.

காது – அதிர்வு… கண் – ஆண்டெனா… இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

காது – அதிர்வு… கண் – ஆண்டெனா… இழுத்து உயிரிலே பட்டபின் அந்த உணர்வே நம்மை இயக்குகிறது

 

இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக இருக்கப்படும் போது பிறருடைய செயலையும் உலகம் இயக்கும் இயக்கங்களையும் உற்று நோக்கும் போது நம்மை அறியாமலே தீமைகள் வரத் தொடங்குகிறது.

காரணம்… அரக்கத்தனமாகத் தானும் தற்கொலை செய்து பல ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும் என்ற இந்த உணர்வு வரப்படும் போது அதே உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உணர்வின் இயக்கமும் மாறிவிடும்.

இன்றைய உலகம் போகும் போக்கிலே…
1,எத்தகைய அசம்பாவிதங்களைக் காதில் கேட்டாலும்
2.அதற்கு அடுத்த கணம் நம் கண்ணிற்கே தான் வருகின்றது – ஆண்டனா.
3.காதிலே “உணர்வின் அதிர்வுகள்… பட்டதும் எலக்ட்ரானிக்…!”
4.கண் அந்த அதிர்வுகளை நுகர்ந்து உயிரிலே பட்டு உணரச் செய்கின்றது
5.அந்தத் தீமை செய்யும் உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தங்களில் கலந்து விடுகின்றது.
6.அங்கே அந்த இயக்க அணுவாக நமக்குள் மாறி நம்மையும் அதனின் நிலைக்கே மாற்றி விடுகின்றது… விஷத்தின் தன்மை அதிகரித்து விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற கொடுமைகளைக் காதில் கேட்டாலும் உடனே ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றி அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற வேண்டும்.

1.கண்ணின் கருமணிகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படும்பொழுது
2.அதைச் சுத்திகரிக்க இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களை கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று வலு ஏற்றிக் கொள்ளுங்கள்.

அப்போது கேட்டறிந்த தீமையான உணர்வை இது தள்ளி விடுகின்றது.

அதற்குப்பின் நாளை நடப்பதெல்லாம்… நல்லதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இங்கே படர வேண்டும்
2.உலகம் அறியாத இருளிலிருந்து விடுபட்டு
3.தன்னைத் தான் அறிந்து அருள் உணர்வு பெறும் அந்த அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

உலக மக்கள் அனைவரது உணர்வுகளும் நமக்குள் உண்டு. பத்திரிகையோ டிவியோ பார்க்கப்படும் பொழுது அதனின் உணர்வின் இயக்கம் நமக்குள் உண்டு. அதை மாற்றி இதனுடைய நிலைகளைச் சீராக்க வேண்டும்.

ஆக மொத்தம்… பிறருடைய பகைமை உணர்வை நமக்குள் வராதபடி அந்த உணர்வு நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்களுக்கு ஆகாரமாகப் போகாதபடி தடுப்பதும்… நமது நல்ல அணுக்களுக்கு அருள் சக்தியைக் கொடுப்பதும் தான் “விரதம்…” என்று சொல்வது.

அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து வளர்ப்பது தான் ஏகாதசி விரதம் என்று சொல்வது.
1.இதை ஒவ்வொரு நாளும் காலை துருவ தியான நேரத்தில் செய்து பழகுதல் வேண்டும்.
2.நம் ஆத்மாவைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
3.ஒரு பதினைந்து நிமிடமாவது அதை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று செய்யும் ஒரு பழக்கம் வந்து விட்டால் வாழ்க்கையில் குறைபாடுகள் வரும் போது அதை ஈர்க்காதபடி சிந்தித்து செயல்படும் வலிமையும் வரும்… ஞானமும் பெருகும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.