சுழி முனை

சுழி முனை

 

உடலுக்கு நம் கண் ஆண்டென்னாவாக இருக்கிறது எப்படி…?

ஒருவர் ஒன்றைச் சொல்லும் பொழுது நாம் அவரை உற்று நோக்குகிறோம்… அவரைப் படமாக்குகின்றோம்… பதிவாக்குகின்றோம்.

அதே சமயம் அவர் உடலில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து இழுக்கின்றது. சுவாசித்த பின் அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகிறது.

அது எங்கே…? எப்படிப் பதிவாகின்றது…?

1.உடலில் இருப்பது – காந்தம் “எலும்பு”
2.நாம் எண்ணிய சத்துக்கள் அனைத்தும் நம் உடலில் வடித்து எதையும் கிரகிக்கக் கூடிய சக்தியாக
3.”ஊழ்வினை” – நம் எலும்புக்குள் ஊனாக இருக்கிறது… உடல் அனைத்திலுமே இந்த ஊன் இருக்கும்.

காந்தம்… உடலில் இப்படி இருக்கும் போது “எதையாவது நாம் உற்றுப் பார்க்கிறோம் என்றால்… அந்த உணர்வை எடுத்து ரெக்கார்ட் செய்து விடுகின்றது….!”
1.மற்றவர்கள் சொல்வது போன்று மூளையில் பதிவாக்குவதில்லை
2.உடலில் தான் பதிவாக்குகின்றது…!

ஒரு மைக்கை வைத்து நாம் பேசுகிறோம் என்றால் ஒரு டேப் (TAPE) அதைப் பதிவாக்குகிறது. அந்த நாடாவிலே தான் அது பதிவாகின்றது.

மைக்கில் பேசுகிறோம்… இருந்தாலும் அதற்கு முன்னாடி ட்ரான்சாக்ஷன் செய்யக்கூடிய வயர் வழியாகப் பிரித்து (AMPLIFIER)… ஒலி பெருக்கிக்குக் கொண்டு செல்கின்றது. அப்பொழுது பேச்சை நாம் கேட்க முடிகின்றது.

உதாரணமாக நீங்கள் என்னைத் திட்டுகின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால்… “உடனே” நான் உங்களைக் கூர்ந்து கவனிக்கின்றேன்.

அப்பொழுது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த எண்ணங்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது என் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி ருக்மணி… உங்களுடைய உருவத்தை எனக்குள் படமாக்குகின்றது.

உங்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட எண்ண அலைகளைச் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொள்கின்றது. அப்பொழுது பார்க்கப்படும் பொழுது எதைக் கண் படம் எடுத்ததோ அதை இழுக்கப்படும் போது சத்தியபாமா…! என்னைத் திட்டுகின்றீர்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது.

இப்படிப் படம் எடுக்கப்படும் பொழுது உடலில் இருக்கக்கூடிய செல்கள் அதைப் பதிவாக்குகின்றது. அதாவது ஒரு நாடாவிலே பதிவாக்குவது போல்
1.ஊழ்வினை என்று உடலில் உள்ள எலும்புக்குள் பதிவாக்கி விடுகிறது.
2.இப்படி ஆயிரக்கணக்கானவரை நாம் பார்த்துப் பதிவாக்குகின்றோம்.

இதிலே ஒருவர் திட்டுகிறார் என்றால் கூர்மையாக அதை உற்று நோக்கிய பின் “இரு நான் பார்க்கிறேன்…!” என்றால் அதை மறக்க முடியாது.

ஆனால் சாதாரணமாக சந்தர்ப்பத்திலே பேசிக் கொண்டிருக்கும் பொழுது “நாளைக்கு இந்த இடத்திற்கு வாருங்கள்… இன்னதைத் தருகிறேன்…” என்று சொன்னால்
1.அது நமக்குத் தேவைப்பட்ட முக்கியமான பொருளாக இருந்தால்
2.”அவரிடம் போய் வாங்க வேண்டும்” என்ற எண்ணம் இருக்கும்.

அப்படி இல்லாது இருந்தால்… நாளைக்குப் பார்க்கலாம் வாருங்கள் என்று சொன்னாலும் அது நமக்குள் சரியாகப் பதிவாகாது… நினைவும் சரியாக வராது. இரண்டு நாட்கள் கழித்து “நான் வரச் சொன்னேன்… வரவில்லையே…” என்று அவர்கள் கேட்பார்கள்.

ஆனால் இந்தப் பக்கம் வந்தால் உன்னை உதைத்து விடுவேன்…! என்று சொன்னால்
1.அது “சுருக்…” என்று பட்டு விடுகின்றது… ஆழமாகவும் பதிவாகி விடுகிறது
2.இப்படிப் பதிவான பிற்பாடு அவரை நினைத்தவுடனேயே அந்த ஆத்திரம் வருகிறது

இந்த இடத்திற்கு வா பார்க்கலாம்… என்று சொன்ன பிற்பாடு
1.அங்கே போன பின் உணர்ச்சி வேகம் திக்..திக்.. என்று அடிக்கும்.
2.ஆனால் போக்கிரியாக இருக்கிறான் என்றால் நம் மனது பட..பட..பட.. என்று அடிக்கும்.

போக்கிரி இல்லாதபடி நம்மைப் போன்று சமமானவர்களாக இருந்தால் அவர் பேசிய பேச்சுக்கு (அவரின் உணர்வு தாக்கியவுடன்) நம்முடைய வலு கொண்டு “என்ன செய்வான் அவன் பார்க்கலாம்…!” என்ற நினைவு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்… மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.

1.அவர்களை எண்ணும் பொழுது அந்த எண்ணம் நினைத்த உடனே அதைக் குவிக்கும்
2.டிவி.க்களிலே படம் எப்படித் தெரிகின்றதோ அதே மாதிரி அந்த நினைவலைகளை இழுத்து உருவமாகக் காட்டும்… உடனே அது தெரியும்
3.பரவலாக இருக்கக்கூடிய அலைகளை இழுத்துக் கண்ணுக்கு முன்னாடி புலனறிவுக்குள் “அதைக் காட்டிக் கொண்டே இருக்கும்…”

அதே உணர்வின் செயல் உயிருக்குள் பட்டு அதனுடன் தொடர் கொண்ட சிறு மூளைக்குள் சென்றவுடன்
1.ட்ரான்சாக்ஷன் ஆகி… எந்த உணர்வோ… நமக்குள் பதிவானது அந்த செல்களில் எடுத்து… அது இயங்க ஆரம்பிக்கும்.
2.அதே அலைகளை எடுத்து எடுத்து… நாம் பேசும் பொழுது தொடர்ச்சியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.

நாம் சுவாசத்தின் வழி எடுக்கக்கூடிய உணர்வுகள் உயிரிலே பட்டு
1.எடுக்கக்கூடிய காற்றை… காந்தத்தைப் பிரித்து… உணர்வின் சத்தைப் பிரித்து
2.அந்த அலைகளை ட்ரான்சாக்சன் செய்து சிறுமூளை உடலுக்குள் உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் எண்ணிய உணர்வுகளை உமிழ் நீராக மாற்றி விடுகின்றது… சாப்பிட்ட ஆகாரத்துடன் அது கலந்து விடுகிறது.
1.நம் கண்ணுக்கு “நாம் எண்ணுவது தெரிவதில்லை…!”
2.நினைவுகள் எடுக்கும் பொழுது அது உமிழ் நீராக அது மாறுகின்றது.

எப்படி…?

வெயில் காலத்தில் மாங்காயையும் உப்பையும் தொட்டுச் சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள். அந்தப் புளிப்பு அவர்களுக்கு மிகவும் ரசிப்பாக இருக்கின்றது. மாங்காய் புளிப்பு தான்… ஆனாலும் அதை ரசிக்கின்றார்கள்.

அதைப் பற்றிச் சொன்னாலும்… மாங்காயை இப்பொழுது நீங்கள் பார்க்கவில்லை… ஆனால் உமிழ் நீர் உங்களுக்குள் எப்படிச் சுரக்கின்றது…?

மாங்காய் என்று சொன்னவுடனே கப..கப.. என்று உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…! அந்தப் புளிப்பின் நிலைகள் கொண்டு உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது… நினைவலைகளைத் தூண்டுகின்றது.

மாங்காயைப் பார்க்கவில்லை ஆனால் அந்த சுவையின் தன்மை கொண்டு உமிழ் நீரைக் குவிக்கின்றது.

இதற்கு முன்னாடி உமிழ் நீர் ஊறவில்லை..! ஆனால் சொன்னவுடனே எப்படி உமிழ் நீர் ஊறுகின்றதோ இதே மாதிரித் தான் எரிச்சலாக ஒருவர் பேசுகிறார் என்றால் அதைப் பார்த்து நுகர்ந்ததும் அதே உணர்வு நமக்குள் வருகிறது. சொல்கிறது அர்த்தமாகிறதல்லவா…!

எரிச்சலான உணர்வு கொண்டு பேசுகிறார்… நாம் உற்றுப் பார்க்கின்றோம் அந்த எரிச்சலான உணர்வு நமக்குள் வருகின்றது
1.”சுழி முனை” என்பதற்கு விளக்கம் சொல்கின்றேன்
2.சுவாசித்த உடனே அதை ட்ரான்சாக்ஷன் செய்கின்றது
3.கண்ணினுடைய நினைவுகள் வரப்படும் பொழுது “மேக்னெட்… அந்த சுவிட்சைக் கிளைத்து விடுகின்றது…”
4.நம் உடல் மொத்தமாக அதை இழுக்க ஆரம்பிக்கும்
5.எந்த குணத்தி(ன்)ல் சுவிட்சைப் போடுகின்றமோ அதை இழுக்கின்றது

ரேடியோ டிவி பெட்டிக்குள் பல ஸ்டேஷன்களைப் பதிவு செய்து வைத்திருக்கின்றனர். எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசயைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலையைக் காற்றிலிருந்து பிரித்து இங்கே எடுத்துக் கொண்டு வருகிறது.

இதே மாதிரி நம் உடலில் ஆயிரக்கணக்கான அலைவரிசை உண்டு. எந்த அலையை இழுத்துப் பேசுகிறோமோ… அந்த அலைவரிசை “தன்னாலே பேசும்…”

எண்ணும்போது அந்த அலைகளை எடுத்து நம்மால் உணர முடிகின்றது… நுகர முடிகின்றது… செயல்படுத்த முடிகின்றது.
1.அந்த உணர்வின் அலைகளைச் சுழி முனை சுழற்றி
2.சிறு மூளை ட்ரான்சாக்ஷன் செய்து பிரித்து அந்த உணர்ச்சிகளை உடல் முழுவதும் சுற்ற வைக்கின்றது.

அப்போது அதே உணர்வு தான் நமக்குள் வேலை செய்யும்…!

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

கண்ணின் கருமணிகளைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

 

பிறர் நம்மைக் குறை கூறுவதோ குற்றம் சொல்வதோ அவரவர் உணர்வுக்குத் தக்க பேசுவார்கள். உடனே நாம் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களில் ஏங்கித் தியானிக்க வேண்டும்
1.ஏனென்றால் குறை உணர்வுகளைக் கண்ணின் கருமணி தான் அதைக் கவர்கிறது.
2.அதன் வழியாகத் தான் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களுக்குச் (செய்தியாக) செல்கின்றது… உடல் உறுப்புகளுக்கெல்லாம் இணைக்கிறது
3.குறை உணர்வை இழுத்து நம் முன்னாடி பரப்பப்படும் பொழுது அந்த உணர்வுகளே வலுப்பெறுகின்றது
4.அதன் இயக்கத்திற்கு நம்முடைய நிலைகள் சென்று விடுகின்றது… அது நம்மை இயக்க ஆரம்பிக்கின்றது.
5.அவர் செய்யும் தவறை நமக்குள் ஏற்று அவர் வழியிலேயே நடக்கும் நிலை வருகின்றது.

ஏனென்றால் வாலி அது வலிமையானது.. அதன் வழியே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது நம் நல்ல குணங்களை இயக்க முடியாது தடைபடுத்தி விடுகின்றது.

ஆகவே ஒருவர் குறை கூறுகிறார் என்றால் அவர் உணர்வு நம்மை இயக்கக் கூடாது. அடுத்த நிமிடமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பெற வேண்டும் என்று
1.கண்ணின் கருமணியில் இணைக்கப்படும் போது
2.நம்மை அவர் குறை கூறிய உணர்வு அதிலே இல்லாதபடி துடைக்கின்றது… சுத்தப்படுத்துகிறது.

ஏனென்றால் கண்களால் தான் அவருடைய செயலை நாம் பார்த்தோம். கருமணிகளில் அது பட்டு அந்த உணர்ச்சிகளை உள்ளே அனுப்புகிறது. அப்போது கருமணியில் அந்த அழுக்கின் தன்மை படுகிறது.

அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கருமணிகளைச் சுத்தப்படுத்தி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் இந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

இந்த வலுவைச் சேர்த்து விட்டால்
1.கண்களால் பார்த்த இந்த உணர்வுகள் உடல் உறுப்புகளை இயக்குவதற்கு மாறாக
2.துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்த்து குறையை இழுக்காதபடி முதலில் தடைப்படுத்துகின்றோம்

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

இத்தகைய வலுவான உணர்வுகள் வரப்படும் பொழுது நமக்குள் அவர் முதலிலே பேசிய அந்தக் குறையான உணர்வுகளை இது தள்ளி விட்டு விடுகின்றது. நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

பின்… அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்; அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் உணர்வுகள் அவரிடத்தில் தோன்ற வேண்டும்; பண்பும் பரிவும் பெறக்கூடிய அந்த அருள் உணர்வு அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணி விட்டால் இதன் உணர்வு நமக்குள் நல்லதை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

எப்படித் தான் இருந்தாலும் பிறர் குறை கூறாமல் இருக்க மாட்டார்கள் எவ்வளவு நல்லது செய்தாலும் காசை வாங்கிக் கொண்டு செய்கின்றார் சும்மாவா கொடுப்பார்…
1.தர்மம் செய்தால் அவர் அதைச் சும்மாவா கொடுக்கின்றார்…
2.ஏமாற்றுவதற்காகக் கொடுக்கின்றார்…! என்றெல்லாம் சொல்வார்கள்.

இதைப் போன்ற மற்றவரின் உணர்வை நாம் எடுத்தால்
1.அவர்கள் மீது நமக்கு வெறுப்பும்
2.நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மீது வெறுப்பும் ஏற்பட்டு விடுகின்றது… “நமக்குள்ளேயே…!”

இதைப் போன்ற நிலைகளை நாம் ஒவ்வொரு நொடியிலும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் பல கொடுமைகளில் இருந்து தப்ப வேண்டும் என்ற உணர்வின் வலுவைச் சேர்த்து தான் ஒவ்வொரு பரிணாம வளர்ச்சியிலும் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்.

இருந்தாலும் மனிதன் ஆன பின் இதைப் போன்ற குறைகளை நுகர்ந்தால் அதனால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்கள் கொடுமைப்படும் நிலையை வருகின்றது.

அந்த நல்ல அணுக்கள் பலவீனம் அடையாதபடி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சேர்த்துச் சேர்த்து வலிமை பெறச் செய்து உயிருடன் ஒன்றி என்றும் அழியாத… பேரின்ப நிலையான… அருள் பெற வேண்டும்.

அதைத்தான் ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

1.கண் விழித்தவுடனே காலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.எந்தப் பகைமையும் நமக்குள் வளராதபடி அருள் உணர்வுகளை எடுத்து
3.பத்தாவது நிலையான கல்கியை அடைய வேண்டும்.

இந்த உபதேசத்தின் நோக்கமே அதற்குத் தான்…!

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

கண்ணன் கீதா உபதேசம் செய்கிறான்… அதன்படி நடக்கின்றோமா…?

 

உதாரணமாக நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம் முதல் நாள் கடைகளுக்குச் சென்று சாம்பில் (SAMPLE) காண்பித்து அதை வைத்து “ஆர்டர்” எடுக்கின்றோம்.

சரக்கு நன்றாக இருக்கிறது. ஆகவே காண்பித்த சாம்பில் பிரகாரம் இத்தனை பண்டல் சரக்கைக் கொண்டு வந்து கொடுங்கள்…! என்று கேட்கின்றார்கள்.

ஆர்டர் பிரகாரம் மறு நாள் நாம் சரக்கைக் கொண்டு செல்கிறோம். ஆனால் நம் நினைவுகள் எங்கே இருக்கின்றது…?
1.ஆர்டர் கொடுத்த கடைக்காரரிடம் இருக்கின்றது.
2.இவ்வளவு விற்றால் இவ்வளவு லாபம் கிடைக்கும் என்று அந்த மகிழ்ச்சியான சிந்தனையிலே சென்று கொண்டிருக்கின்றோம்.

மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது… ரோட்டிலே நாம் கடந்து செல்லும் பாதையிலே… ஒரு கண்ணாடி பாட்டில் உடைந்து எண்ணை எல்லாம் சிதறிக் கிடக்கிறது… அதைப் பார்த்து விடுகிறோம்.

பார்த்தவுடன்… “காலில் பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்…! என்று நமக்குள் பதட்டமாகி… அறிவு கெட்ட நாய்கள்…! இப்படி நடுரோட்டில் பாட்டிலை உடைத்து போட்டுவிட்டுச் சென்று விட்டார்களே…” என்று பேச ஆரம்பிக்கின்றோம்.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

ஏனென்றால் பார்த்தவுடன் அந்த உணர்வு என்ன செய்கிறது…? காலில் குத்தி இருந்தால் என்ன ஆயிருக்கும்…! என்று அந்த வேகம் வருகிறது.

ஆனால் தாண்டி விட்டோம்… காலில் அடிபடவில்லை…! இருந்தாலும் அதைப் பார்த்த மாத்திரத்தில் “உலகமே கெட்டு விட்டது…! நடு ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்திருக்கின்றான் பார்…!” என்று சொல்ல ஆரம்பிக்கின்றோம்.

1.அந்த இடத்தில் நம் கண்கள் “இது கெட்டது…!” என்று உணர்த்துகின்றது.
2.அதைத் தான் கண்கள் (கண்ணன்) உபதேசம் செய்கிறான் என்று காட்டுகிறார்கள் (கீதா உபதேசம்).

எண்னணெய் சிந்தியிருக்கிறது… கண்ணாடி காலில் குத்திவிடும். அதனால் அதை ஒதுக்கி ஓரமாகப் போட்டுவிட்டு யார் அவ்வாறு செய்தார்களோ அவர்களுக்குப் பரிகாரமாக நல்லது வர வேண்டும் என்று எண்ணினால் “இது நல்ல சிந்தனை…”

ஆனால் அதற்குப் பதிலாக “அறிவு கெட்டதனமாகப் போட்டிருக்கின்றார்கள் பார்…!” என்று சொன்னால் என்ன ஆகும்…?
1.கெட்டதை நீக்கச் சொல்லித் தான் கண்ணன் (கண்கள்) வழிகாட்டுகிறது.
2.ஆனால் கெட்டதைத் தான் (அறிவு கெட்டதனமாகச் செய்தார்கள் என்று) நாம் எடுத்துக் கொள்கின்றோம்.
3.வியாபாரத்தை எண்ணி மகிழ்ச்சியாகச் செல்லும் பொழுது “காலில் குத்தியிருந்தால் நம் காரியம் தடைப்பட்டிருக்குமே…” என்று இதைத்தான் நினைக்கின்றோம்.

ஆனால் அந்தக் கெட்டதை நீக்குவதற்கு மனது வருகின்றதா…! கீதையிலே கண்ணன் இதை எல்லாம் தெளிவாகச் சொல்கிறான்.

எப்படி…?

அவன் (பாட்டிலைப் போட்டவன்) அயோக்கியத்தனம் செய்தான் என்ற எண்ணத்தை நாம் எடுக்கும் போது உதைக்க ஆரம்பிக்கின்றான். அரச தண்டனையாக நமக்குள் மாறுகின்றது (உடலுக்குள் நடக்கும் நிகழ்ச்சி).

பொதுவாக நாம் எடுத்துக் கொண்ட குணத்தின் தன்மை நல்ல குணமாக இருந்து ஆட்சி செய்கின்றது. இருந்தாலும்…
1.இந்தச் சந்தர்ப்பம் எடுத்துக் கொண்ட எண்ணம் நீ இப்படியா செய்கின்றாய்…? என்று
2.“அது நோயாக மாறுவதற்கு” “அரச தண்டனையாக” அமைந்து விடுகிறது.

எடுத்த எண்ணம் அரசனாக ஆனாலும் அதை இயக்கக்கூடியது குரு… “குருக்ஷேத்திரம்” என்று காட்டுகின்றார்கள். இங்கே அந்தக் கேட்டதை நினைக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை என்னை இயக்குகிறது என்றால் ஈஸ்வரா…! குருக்ஷேத்திரத்தில் உயிரை எண்ணி அவனிடம் (நல்லதை) கேட்க வேண்டும்.

கண்ணன் என்ன செய்கின்றான்…?
1.உனக்குள் அனைத்தையும் இயக்கும் உயிர் குருவாக இருக்கின்றான்
2.அவனிடத்தில் நீ முறையிடு…!

கண்ணின் உணர்வின் இயக்க நிலைகளை அன்று வியாசகர் இப்படித் தெளிவாக உணர்த்தி உள்ளான்.

குருக்ஷேத்திரப் போரில் ஈஸ்வரா என்று எண்ணும் பொழுது அந்தத் தீமை உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகின்றது. ஈசன் அதைத் தடைப்படுத்துகின்றான்.

நாளைக்கு இந்தத் தவறு நடக்காதபடி
1.அவனுக்கு (பாட்டிலை உடைத்தவன்) நல்ல சிந்தனைகள் வரவேண்டும் என்று இங்கே நிலை நிறுத்தினால்
2.குருக்ஷேத்திரப் போரில் இது அரசனாக வந்து விடுகிறது.
3.அப்போது தீமைகள் உள்ளே புகாதபடி அந்தத் தீமைக்குத் தண்டனை கொடுத்து விடுகின்றான்.

ஆனால் அதற்குப் பதிலாக நாம் இங்கிருந்து “அறிவு கெட்டதனமாகச் செய்கிறான்…!” என்று சாபமிட்டு அவனை எண்ணும் பொழுது இந்த உணர்வு அரசாட்சியாகி நல்லதைக் கெடுக்கின்றது.

1.நான் சொல்கிறேன்… நீ அயோக்கியத்தனம் செய்து விட்டாய்…! என்று
2.உடலுக்குள் அது நோயாக மாற்றி விடுகின்றது… தண்டனை ஆகிவிடுகிறது.
3.நம் நல்ல குணங்கள் என்ன ஆகிறது…? வெறுப்பின் தன்மையாக மாறும் போது “நல்லது எல்லாம் அழிகின்றது…”
3.ஆகவே அந்தத் தீமைகளை வடிகட்டுவதற்கு மெய் ஞானிகள் உணர்வைச் சேர்க்க வேண்டும் என்று தான் கீதாச்சாரத்தில் சொன்னது.

நம் கண் எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது…! என்று அதனுடைய உணர்வின் இயக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எண்ணியதை (கண்கள்) அலைகளாக மாற்றுகின்றான்… அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்க்கின்றான். இந்த உணர்வின் இயக்கமே அது.

ஆனால் எண்ணியதை உயிர் பிரம்மமாக இருக்கின்றான் உருவான ஒவ்வொன்றுக்கும் அவனே வழி காட்டுகின்றான். உணர்வின் தன்மையை அவனே பிரம்மனாக இருந்து சிருஷ்டிக்கின்றான். எடுத்துக் கொண்ட மணம் ஞானமாக இருந்து இயக்குகின்றது சரஸ்வதி…!

எடுத்துக் கொண்ட உணர்வின் நாதம்… எந்தக் குணத்தின் தன்மை உணர்வானதோ இயல்பான அந்த நாதம்…
1.அது இனிமையான நாதங்களாக இருந்தால் ஆனந்தமாகத் தலையை அசைக்கச் செய்கிறது.
2.ஆனால் படபடா…! கடபுடா…! என்று ஒரே சத்தமாக இருந்தால் என்ன ஏது என்று அதிர்வாகி எரிச்சலாகி முறைக்கின்றோம்.
3.எந்த வேகத்தின் உணர்வு நாதமானதோ அந்த உணர்வு நம்மை இயக்குகின்றது… வீணையின் நாதம்.

அதனால் தான் சரஸ்வதிக்கு இங்கே வீணையைப் போட்டுக் காண்பிக்கின்றார்கள். நாம் எந்த உணர்வின் தன்மை சுவாசித்து உராயச் செய்கின்றோமோ அந்த நாதத்தின் சுருதியே நம்மை இயக்கும்.

ஏனென்றால்
1.குருவின் ஆணைப்படி தான் இதையெல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்
2.நீங்கள் தெளிவானால் உங்களுடைய மூச்சு மற்றவர்களின் கெட்டதை எல்லாம் நீக்கும்.
3.நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சு உங்கள் நோயைப் போக்க வேண்டும். அதற்காக வேண்டித் தான் இதைப் பதிவாக்குகின்றோம்.

விஞ்ஞான உலகில் நாளை வரக்கூடிய விஷமான உணர்வுகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் உங்களைக் காக்க முடியும். “அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன்” (ஞானகுரு).

பாட்டில் உடைந்ததைப் பார்த்துத் திட்டி விட்டு அதை ஓரமாகவும் ஒதுக்கிப் போடாதபடி அப்படியே அந்த உணர்வுடன் நாம் கடைக்குச் செல்கிறோம்.

கொண்டு போன சரக்கை அவரிடம் சிரித்துக் கொண்டே காட்டுகின்றோம். ஆனால் எந்த வேகத்தை வரும் வழியில் எடுத்தேனோ எனக்கு முன்னாடி அது (ஆன்மாவிலே) இருக்கின்றது.

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…!

இங்கே பாட்டில் உடைத்தவனை “அயோக்கியன்…” என்று சொல்லித் திட்டிய உணர்வு ஆன்மாவில் முன்னணியில் இருப்பதால்… துணியை எடுத்து அந்த உணர்வுடன் சொல்லப்படும் பொழுது என்ன ஆகிறது…?

என் உணர்வு பட்டவுடனே… கடைக்காரர் துணியைப் பார்க்கின்றார் பார்க்கப்படும் பொழுது
1.இங்கே ரோட்டில் எப்படி நாம் வெறுத்து பேசினோமோ
2.அவருடைய கண் இந்த வெளிப்படும் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
3.அந்த அலைகள் இயக்கி நான் சொன்ன நல்ல உணர்வுடன் கலந்து அவரை இயக்குகின்றது.
4.என்னங்க…? நேற்று ஒரு சரக்கைக் காண்பித்தீர்கள். இன்று வேறு சரக்காகக் கொண்டு வந்திருக்கின்றீர்கள் என்று கேட்க ஆரம்பிப்பார்.

ஆனால் சாம்பிள் காண்பித்ததும் கொண்டு போன துணியும் இரண்டும் ஒரே துணி தான்…!

அது தான் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே. மணி ஓசையைக் கேட்டவுடன் யானை வருகிறது என்ற உணர்வு இயக்கி நாம் ஒதுங்கிக் கொள்கிறோம்.

அது போல்
1.நம்முடைய எண்ணம் அவருக்குள் முன்னாடியே பாய்ந்து
2.அந்தக் கெடுதலான எண்ணம் நம் சரக்கை அவருக்கு மட்டமாகக் காண்பித்து விடுகிறது… வியாபாரம் போய்விடுகிறது.

நாம் என்ன நினைப்போம்…? நேற்று சரக்கைக் கொண்டு வரச் சொன்னான்.. கொண்டு வந்த பின் இந்த மனுஷன் வேண்டாம் என்று இன்றைக்குச் சொல்கிறான்…!
1.ஆக என்னுடைய உணர்வு தான் அங்கே அவனை அவ்வாறு பேச வைக்கின்றது என்பதை
2.நாம் ஏற்றுக் கொள்வதற்கு இல்லை.

இது எல்லாம் இயற்கை…!

குருக்ஷேத்திரப் போர்…! என்ற நிலையில் இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து அதைத் துடைத்து விட்டு… “அவர்களுக்கு நாளை நல்லது நடக்கட்டும்…” என்று அங்கே சொல்லிவிட்டு தீமையை அப்புறப்படுத்தி விட்டு நாம் செல்ல வேண்டும்…!

ஆகவே… ஒன்பதாவது அவதாரத்தில் இப்போது இருக்கின்றோம். அடுத்து “கல்கி அவதாரம்…” என்றால் உயிரின் தன்மை ஒளி கொண்டு விஷத்தின் தன்மையை நீக்கி… நிலையாக நின்று ஒளியின் சரீரமாகப் பறந்து செல்வது (குதிரை மீது) கல்கி…!
1.உணர்வின் தன்மை வேகத்தின் துடிப்பு கொண்டு எதிலே இருக்கின்றதோ
2.வாளை வைத்துக் குதிரையைப் போட்டுக் காட்டியுள்ளார்கள்.
3.ஒளியின் சரீரமாகச் செல்லும் “கல்கி அவதாரத்தின் வேகங்கள் வேறு…”

பத்தாவது நிலை அடையப்படும் பொழுது ஒளியின் தன்மையாகக் கல்கி அவதாரமாகப் போகின்றோம். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

 

நாம் தியானம் இருக்கும் போது
1.சில நேரங்களில் துருவ நட்சத்திரத்தை எண்ணினாலும் கூட
2.அது திசை மாறிச் சென்று விடும்.

இது எதனால் ஏற்படுகின்றது…?

நாம் இதற்கு முன் நம் உடலில் நுகர்ந்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அது தீய அணுக்களாக மாறும் பொழுது அதற்கு அந்த உணவு தேவை.

நாம் துருவ நட்சத்திரத்தை எண்ணினால்…
1.அது தனக்காக வேண்டி… எல்லா அணுக்களும் சேர்த்து அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடியாதபடி அது தடுக்கும்.

எதனதன் வழிகளில் சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ எதன் மேல் பட்டோமோ அந்த உணர்வுகள் தான் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும். அதன் வழி நம் உடலில் உள்ள அந்தத் தீய அணுக்கள் அதனதன் உணர்வை எடுத்து வளரும்.

ஆக அதைத் தடுப்பதற்கு… உடனே கண்களைத் திறந்து நாம் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவைச் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணி எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலிலிருக்கக் கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று
1.கட்டாயப்படுத்தி உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்குச் செலுத்தி
2.சிறிது நேரம் ஆன பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

இதன் வழி புகாதபடி அடைத்து உயிர் வழி நம் இரத்த நாளங்களில் கலக்கச் செய்வது தான் இந்தப் பயிற்சி. அதாவது
1.நம் நெஞ்சுக்கு முன் இருக்கும் ஆன்மா வழியாக வராதபடி தடுத்து (மூக்கு வழி சுவாசம்)
2.புருவ மத்தி வழி கண்ணினின் நினைவு கொண்டு இழுக்கின்றோம்

ஏனென்றால் நம் உடலில் எத்தனையோ விதமான தீய அணுக்கள் இருப்பதால் அதனுடைய உணர்வுக்கு அதனுடைய வலுவைக் காட்டத்தான் செய்யும்.

அதை நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தி நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது அது வலிமை பெறுகின்றது.

இரத்தத்தின் வழி சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்களும் ஜீவணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது அதை இழுக்கும் சக்தி கிடைக்கின்றது.

ஆக கண்களைத் திறந்து தியானிக்கச் சொல்வதன் சூட்சமம் என்ன…?

உதாரணமாக…
1.நாம் தவறு செய்தவனை கண்ணின் நினைவு கொண்டுதான் எண்ணுகின்றோம்
2.எண்ணியவுடன் அந்த “நிழல் படம்” (தவறு செய்தவன் முகம்) எவ்வாறு தெரிய வருகின்றதோ
3.அந்த நேரம் அவனைப் பற்றிய உணர்ச்சிகளும் பல விதமான வெறுப்புகளும் எப்படித் தோன்றுகிறதோ அதே போன்று…
4.நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரோளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு செலுத்துதல் வேண்டும்.

ஏனென்றால் கண்களால் உற்றுப் பார்த்தது தான் நம் உடலுக்குள் அணுவின் தன்மை அடைந்தது. அதே மாதிரி
1.இந்தக் கண்ணின் வழி நம் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்களுக்கு
2.துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று உள் முகமாகச் செலுத்தினால் அதனுடைய உணர்வுகளை எடுத்து நாம் நுகர்ந்து
3.”இரத்தங்களிலே ஈர்க்கும் சக்தி பெருகி” உடலில் உள்ள தீய அணுக்களை எல்லாம் நல்லதாக மாற்றும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

தியானம் இருக்கும் பொழுது நினைவுகள் எங்கெங்கோ அலைக்கழிக்கின்றது எங்கெங்கோ இழுத்துச் செல்கின்றது என்று சொல்ல வேண்டியதில்லை.

இதன் உணர்வை மாற்றி மாற்றி மாற்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் இரத்தத்தின் வழி செலுத்திப் பழக வேண்டும்… அதனின் வலுவைக் கூட்ட வேண்டும்…!

வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

வியூகத்தைத் தகர்த்து… அதற்குள் சென்று… நீ அதுவாக ஆகு…!

உதாரணமாக செல்ஃபோன்களில் அதற்குள் இயங்கக்கூடிய நிலைகளில் மிகவும் நுண்ணியதாக சிறிதளவே கொடுத்துள்ளார்கள்.
1.ஆனால் அதிலே பல இலட்சக்கணக்கான உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர்.
2.அதை வைத்து நாம் இயக்கப்படும் பொழுது பலரிடம் நாம் தொடர்பு கொள்கின்றோம்… இயக்குகின்றோம்

இதைப் போன்று தான் நாம் கோபப்பட்டவர் உணர்வுகளைப் பதிவாக்கிய பின் அவனை எண்ணியவுடன் நமக்குக் கோபம் வருகிறது. சோர்வடைந்து வேதனைப்படும் பொழுது சிந்தனை குறைகிறது.

இது எல்லாம் நமக்குள் இயக்கும் தன்மைகள்.

ஆனால் அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது “நாம் எண்ணும் போதெல்லாம்…” உடனே அந்தச் சக்திகளைக் கவர்ந்து நம் உடலில் நல்ல இரத்தங்களாக உருவாக்க முடியும்.

நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுக்க முடியும்.

வேதனையான உணர்வுகளைச் சுவாசித்த பின் அந்த விஷத்தன்மைகள் நம் இரத்தத்தில் கலந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் பட்ட பின் அவை மயக்கம் அடைகின்றது.

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தத்தில் அதைக் கலக்கச் செய்தோம் என்றால் அது விஷத்தை எல்லாம் ஒடுக்கியது… அப்போது நமக்குள் அது உற்சாகத்தை ஊட்டுகின்றது.

நம் உயிர் எப்படி உலக உணர்வின் தன்மை அறிவிக்கின்றதோ இதைப் போன்று
1.தடையின்றித் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.உடலுக்கு பின் உயிரைப் போன்று உணர்வுகளை ஒளியாக மாறற முடியும்… பிறவி இல்லா நிலை அடைய முடியும்.
3.இப்படித்தான் அகஸ்தியன் ஒளி நிலை அடைந்தான்… அவனுக்குள் கற்றறிந்த உணர்வின் துணை கொண்டு
4.அதே போன்று நாமும் அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு) பல காடு மேடேல்லாம் அலையச் செய்தார்.
1.இயற்கையில் சூழ்நிலைகள் எப்படி மாறுகின்றது…?
2.தாவர இனங்கள் எப்படி மாறுகின்றது…?
3.வலுவான தாவரங்களின் மணத்தைக் கண்ட பின் மற்ற வலுவற்ற தாவரங்கள் எப்படி அஞ்சி ஓடுகின்றது…?
4.ஓடிய உணவுகள் மற்றொன்றுடன் மோதிக் கலந்து புதுப்புது வித்துக்களாக எப்படி உருவாகின்றது…?
5.விஷத்தன்மையும் வளர்கின்றது விஷமற்ற உணர்வுகளும் வளர்கின்றது அது எல்லாம் எப்படி…? என்று காட்டினார் குருநாதர்.

அது எப்படியோ அதே போல் தான் ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் உணர்வுகள் எத்தனை வகையான உணர்வுகளாக உடலுக்குள் சென்று அது தொடர்ந்து இயக்கி விடுகின்றது.
1.உயிரிலே பட்டால் குருக்ஷேத்திரப் போராக நடக்கின்றது
2.உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராக நடக்கின்றது.
(வேதனை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சென்றால் மகாபாரதப் போராகின்றது)

மகாபாரதப் போர் என்றால்… இந்த மனித உடலுக்குள் எத்தனையோ வகையான செய்திகளைக் கேட்கின்றோம் நமக்குள் அந்தப் பதிவுகள் உண்டு.

அதிலே நல்ல அணுக்களும் உண்டு… ஆனால் வேதனைப்படும் உணர்வுகள் அந்தக் கணக்கு அதிகரித்து விட்டால் கலக்கமும் சஞ்சலமும் வெறுப்பும் வேதனையும் கொதிப்படையும் தன்மையும் ஆகி “தன் நிலையை…” சீராக ஆக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.

உற்றுப் பார்த்து நம் கண்களால் கவரப்படும் பொழுது அது எந்த உணர்வோ உயிரிலே படும் பொழுது “கண்ணன் சங்கநாதம் ஊதிய பின் குருக்ஷேத்திரப் போர்…”

கண்கள் கவர்ந்தது உயிரிலே பட்ட பின் அந்த நாதங்கள் உடலுக்குள் உணர்ச்சிகளாக இயக்குகின்றது. நல்லது என்றால் மகிழ்ச்சி அடைகின்றது தீமை என்றால் குருக்ஷேத்திரப் போராக நல்ல உணர்வுக்கும் நாம் நுகர்ந்ததற்கும் போர் நடக்கின்றது.

தீமை என்றால் உடலுக்குள் புகுந்து விடுகிறது. உடலுக்குள் சென்றால் கண்ணன் வெண்ணையைத் திருடுகின்றான். அந்த வலுவான உணர்வுகள் அனைத்தையும் நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குள் சேர்த்து விடுகின்றது இதே கண்கள் தான்.

அந்த வெண்ணையைத் திருடிய பின்…
1.எதனுடைய உணர்வு அதிகமோ உடலை விட்டுச் சென்ற பின்
2.அதனுடைய ஈர்ப்பிற்குள் அழைத்துச் சென்று விடுகின்றது உயிர்.

கண்கள் தான் (கூர்மை) அர்ஜுனன் அதாவது அர்ஜுனன் என்பது வலிமை…! எதையும் தாக்கும் வலிமை பெற்றது.. அந்த உணர்வுடனே உடலை விட்டு வெளியிலே செல்கிறது.

அதாவது அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாக இருந்து வழி நடத்துகின்றான்…! உடலுக்குள் நாம் நுகர்ந்தவைகளின் வலிமை கொண்டு அடுத்த உடலுக்குள் அழைத்துச் செல்கிறது என்று காவியங்கள் நமக்கு தெளிவாக இந்த உண்மைகளை உணர்த்துகின்றது

1.வியூகத்தைத் தகர்த்து அதற்குள் சென்று நீ அதுவாக ஆகு…! கண்ணன் அர்ஜுனனுக்குச் சொன்னது.
2.எதன் உணர்வோ… அதனுடைய வலிமைக்கொப்ப அதனுடைய எல்லையை அடையும் நிலை வருகிறது.

இது எல்லாம் நம்மை நாம் அறிந்து கொள்வதற்காகக் காவியத் தொகுப்புகளை ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

 

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது…
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது…
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்து கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது… அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்…” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்… நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்…
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்… கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது… வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்… காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்… உணர்வுகள்… அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்…”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது… மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்… அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே…
1.என்றுமே… எங்கிருந்தும்… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே… மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

 

உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்… உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்…! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்…
2.உங்களால் நிச்சயம் முடியும்.

நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்… மன வலிமையும் பெறுகின்றீர்கள்… அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.

ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்… அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீக எப்படி கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாக சென்று விட்டது தான்.

அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்… சிந்தனைகளை இழக்கச் செய்வதும்… மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டி அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் – காற்றிலே அது உள்ளது.

டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்… அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.

அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.

திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

விவேகமும் கிடைக்கும்… உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

நம் கண்களுக்குச் செய்ய வேண்டிய சிறப்பு தியானம்

 

இன்றைய வாழ்க்கையில் நல்லதுக்காக நீங்கள் ஏங்கித் தவிக்கப்படும் பொழுது உயிரான ஈசன் அமைத்த ஆலயத்தில் (உங்கள் உடலில்) அருள் மகரிஷிகள் உணர்வுகள் படர்ந்து இருளை நீக்கிப் பொருள் காணும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் நான் (ஞானகுரு) “மௌன விரதம்” இருக்கின்றேன்.

1.உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று தியானமும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா நிலை அடைந்தானோ
3.அதே போன்று உங்கள் வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தியும்… தீமைகள் உட்புகாது தடுக்கும் ஆற்றலும்
4.அருள் ஒளி என்ற நிலைகள் கொண்டு மகிழ்ந்து வாழும் வாழ்க்கை வாழ்ந்திடவும்
5.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடையவும் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் வளருதல் வேண்டும். காரணம் உங்கள் உடலுக்குள் வெறுப்பு சலிப்பு சங்கடம் சஞ்சலம் என்ற உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்று பகைமை கொண்டு மோதும் போது தான் உறுப்புகளில் வேதனையும் உணர்ச்சிகளில் வேதனையும் வேதனைப்படுத்தும் செயல்களையும்… சொல்லாகச் சொல்லும் பொழுது கேட்போருக்கும் அந்த வேதனையை உருவாக்கிக் கொண்டுள்ளது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நீங்கள் மீள வேண்டும் என்பது தான் என்னுடைய தியானமே…! அரும்பெரும் சக்திகளைக் குருநாதர் காட்டி அருள் வழியில் உங்களுக்குள் பாய்ச்சுகின்றோம்.

யாம் பதிவு செய்த அருள் ஞானிகள் உணர்வுகளை நீங்கள் நுகரும் போது உங்கள் ஆகாரத்துடன் அது கலந்து நல்ல இரத்தமாக மாறுகிறது. உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலைப் பெருக்கி உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைய இந்தத் தியானம் உதவும்.

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்… உயிர் வழி நுகருங்கள்.
1.கண் வழி கவர்கின்றோம்
2.ஆனால் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…! தீமை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக்
1.கண்களால் ஏங்கிப் புருவ மத்தியில் பதிவு செய்யப்படும் பொழுது
2.அந்த உயிரான நிலைகள் – அதனுடைய காந்தப்புலன் அறிவு
3.நாம் எதை எண்ணுகின்றோமோ இந்த உயிர் வழி…
4.உயிர் என்ற உணர்வுடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கின்றது.
5.அதனின்று வரும் பேரருளை நாம் ஏங்கிப் பெறுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை உயிரான காந்தம் கவரும் பொழுது
1.புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகள்
2.நீல நிற ஒளிக்கற்றைகளை உயிர் கவருவதை நீங்கள் உணரலாம்.
3.உங்கள் புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை ஈர்க்கும் அந்த வலிமை கிடைக்கும்… அதை இப்பொழுது உணரலாம்.

துருவ ஒரு நட்சத்திரத்தின் பேர்ருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட அருள்வாய் ஈஸ்வரா என்றுகண்ணின் நினைவை உங்கள் இரத்தங்களில் செலுத்துங்கள். இப்பொழுது இரத்த நாளங்களில் ஒரு புது விதமான உணர்ச்சிகள் வரும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரோளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி… கணையங்கள் கல்லீரல் மண்ணீரல் நுரையீரல் சிறுநீரகங்கள் இருதயம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குள் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் உருவாகிறது. உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றது

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
1.கண்களில் கவரும் நரம்பு மண்டலங்கள் முழுவதும் படர்ந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவரும் வலிமை மிக்க நரம்பு மண்டலங்களாக மாறி கண் ஒளி சீராக அமைந்து
3.அனைத்தையும் அறிந்திடும் அருள் ஞானக் கண்ணாக கண் நரம்பு மண்டலம் உருப் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணுக்குள் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் கண்களை இயக்கிக் கொண்டிருக்கும் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து
1.அகண்ட அண்டத்தில் வரும் அருள் உணர்வுகளை அறிந்திடும் அருள் சக்தியும்
2.அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமான உணர்வைப் பெறும் தகுதியும்
3.கண்ணின் நரம்பு மண்டலம் பெற வேண்டும்… அதைப் பெறக்கூடிய தகுதி பெற வேண்டும் என்றும் ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய அனைத்து நரம்பு மண்டலங்களும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவை இவ்வாறு செலுத்தும் போது நரம்பு மண்டலங்களில் இருக்கக்கூடிய விஷத்தன்மைகள் அனைத்தும் இப்பொழுது அகல்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக மாற்றும் தகுதி பெறுகின்றோம்.

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

திடுக்… திடுக்… என்று பயமும் பதட்டமும் நமக்கு வரக் காரணம் என்ன…?

 

1.கண்ணின் கருவிழிக்குப் பேர் “ருக்மணி (படமாக்குவது)” என்றும்
2.கண்ணின் காந்தப் புலனறிவுக்குப் பேர் “சத்தியபாமா (உண்மையை உணர்த்துவது)” என்றும் ஞானிகள் வைத்துள்ளார்கள்.
3.அந்த இரு சக்திகளையும் சேர்த்துத் தான் “கண்ணன்” என்றும் காரணப் பெயர் வைத்தனர்.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். எதிரிலே ஒரு பஸ் வேகமாக வருகின்றது… நம் கண்களின் கருவிழி அதை நம் உடலில் பதிவாக்குகின்றது.

நம் மீது மோதும் நிலைகள் கொண்டு வருவதை அந்த உணர்வலைகளைக் கவர்ந்து உயிருடன் இயக்குகின்றது. அப்போது “பஸ் நம் மீது மோதி விடுமோ…!” என்ற அச்சத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
1.அதனின்று விலகிச் செல்ல கண்கள் நமக்குப் பயன்படுகின்றது.
2.விபத்து ஏற்படாமல் அந்த நேரத்தில் காப்பது நமது கண்களே.

ஆகவே கண்ணன்… கண்கள் நம்மை வழி நடத்துகின்றது. தீமையான உணர்வுகளைக் கண்டபின் அந்தத் தீமையிலிருந்து விடுபட விபத்துகள் வரும் என்று கண்ணின் காந்தப் புலனறிவு கவர்ந்து விபத்திலிருந்து நம்மைக் காக்கின்றது.

அப்படி விபத்திலிருந்து காத்தாலும் பஸ்ஸின் வேகத்தைக் கண்டு அந்த அச்ச உணர்வு உயிரிலே பட்டு வேகமாகப் படும் பொழுது “பயத்தை ஊட்டும் அதிர்வுகள்…” ஏற்படுகின்றது.

1.கண்கள் அந்த உண்மையை உணர்த்தினாலும்… நம்மைக் காத்தாலும்
2.நாம் நுகர்ந்த பயமான உணர்வை உயிர் இயக்கி உடலைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றாலும்
3.நுகர்ந்த பயமுறுத்தும் உணர்வை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக… நம் உடலாக மாற்றி விடுகின்றது.

ஒரு இடத்தில் இருவர் சண்டை இடுகின்றனர்… கடுமையாக மோதுகின்றனர். பயங்கரச் சொல்களையும் விபரீதப் பேச்சுகளையும் பேசுகின்றனர்.

நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் கண்ணின் கருவிழி அதைப் பதிவாக்குகின்றது. அவர்கள் செயல்களை உற்றுப் பார்த்துச் சண்டையிடும் உணர்வின் தன்மை நுகரச் செய்கின்றது.

அவர்கள் தவறு செய்கின்றனர்… பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
1.நாம் நுகர்ந்ததைக் கண் உயிருடன் இணையச் செய்கின்றது
2.உயிரோ அந்த உணர்வினை ஓ…ம் நமச்சிவாய… என்று ஜீவ அணுவாக உடலாக மாற்றி விடுகின்றது.

இது எல்லாம்… நாம் தவறு செய்யவில்லை என்று இருந்தாலும்
1.தவறு செய்பவருடைய நிலைகளை நம் கண்கள் உணர்த்துகின்றது.
2.ஆனால் பதிவாக்கிய பின் உயிரோ அதை உடலாக மாற்றி விடுகின்றது.

அச்சுறுத்தும் உணர்வு உடலுக்குள் அணுக்களாக மாறிவிட்டால் அந்த பயமுறுத்தும் உணர்வைச் சுவாசிக்கும்போது “உயிரிலே படும்போதெல்லாம்” நாமும் பயந்து அதற்குத் தக்கவாறு வாழ்க்கை அங்கே நடக்க நேர்கின்றது

பயமுறுத்தும் உணர்வுகள் அதிகமாகி அந்த அணுக்கள் பெருகத் தொடங்கினால்…
1.நம்மை அறியாமலே அடிக்கடி பதட்டமடையும் அல்லது நடுக்கம் அடையும் உணர்ச்சிகளைத் தோற்றுவிக்கும்.
2.ஒரு காரியத்தையோ தொழிலையோ செய்ய வேண்டும் என்று வலுவாக எண்ணினாலே பதட்டமும் பயமும் வரும்… மன உறுதி இழக்க நேரும்.

அதனால்… சோர்வும் சஞ்சலமும் அடைந்து “என்னால் முடியவில்லையே…” என்று வேதனைப்படும் பொழுது – வேதனை என்பது விஷம்…! நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தையும் உயிர் இந்த உடலில் விஷமான அணுவாக மாற்றி விடுகின்றது.

அதனால் தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை” என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நாம் எதையெல்லாம் எண்ணிச் சுவாசிக்கின்றோமோ அதனின் உணர்வினை உணர்த்தினாலும் அதனதன் அணுவாக உருவாகித் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் இப்படி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் பல கோடிச் சரீரரங்களில் தன்னைக் காட்டிலும் வலுவான மிருகங்களின் உணர்வுகளை எடுத்து ஒவ்வொன்றில் இருந்தும் பாதுகாப்பான உணர்வுகளை எடுத்துத் தப்பிடும் உணர்வுகளை எடுத்துத் தான் மனிதனாக வந்துள்ளோம்.

அதாவது வலுவான உணர்வை நுகர்ந்து நுகர்ந்து தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து… இன்று வந்துள்ளோம்..

முதலிலே சொன்ன மாதிரி இன்றைய மனித வாழ்க்கையில் பயமான உணர்வுகளையோ… சண்டையிட்டோர் உணர்வுகளையோ… அல்லது நோயாளியின் உணர்வுகளையோ எடுக்க நேரும் போதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் கண்ணின் நினைவைச் செலுத்தி
2.அதிலிருந்து வரும் உணர்வுகளை உயிர் வழியாக நுகர்ந்து
3.நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.

காரணம் அந்தத் துருவ நட்சத்திரம் நஞ்சினை வென்றது… உணர்வினை ஒளியாக மாற்றியது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை உடலுக்குள் செலுத்திப் பழக வேண்டும்.

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் அதிலே இரண்டறக் கலந்த செம்பு பித்தளையும் ஆவியாக மாறித் தங்கம் பரிசுத்தமாவது போன்று
1.துன்பப்படுத்தும் உணர்வுகளை நம் கண் கவர்ந்தாலும்
2.அந்த உண்மைகளை உணர்த்தினாலும்
3.அதிலிருந்து விலகிச் சென்றாலும்
4.நுகர்ந்த உணர்வு நம் உடலுக்குள் ஜீவ அணுவாக மாறுவதற்கு முன்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு நாம் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்துக்களோ அல்லது அது போன்ற அதிர்ச்சியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலோ அந்தக் காலங்களில் எல்லாம் ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று பல முறை எண்ணி ஏங்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திரத்தின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும். பயமான உணர்வலைகள் நீங்க வேண்டும்… என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… நாங்கள் மன பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினால் நம் எண்ணத்தை வலுவாக்கும். அனுபவத்தில் பார்க்கலாம்…!

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?

உடலில் வரும் வலிகளை எப்படித் தணிப்பது…?

 

முந்தைய நிலைகளில் உருவானது இனம் புரியாத நிலையில் வேதனையான உணர்வுகள் வெளிப்பட்டாலும் அந்த நிமிடம் என்ன செய்கிறது…? உடலில் இருந்து தான் அந்த வேதனை தோன்றுகின்றது. அந்த வேதனை உணர்ச்சிகள் ஆன பின் நம் உயிருக்கு வருகின்றது

உதாரணமாக
1.முள் குத்திவிட்டால் உடனே உயிருக்குத் தான் வருகின்றது… அப்பொழுது கண் என்ன செய்கின்றது…?
2.எங்கே முள் இருக்கின்றது…? என்று தேடுகின்றது
3.அதைக் கூர்ந்து கவனித்து நுகர்கின்றோம்.
4.ஆ… காலிலே முள் ஏறி விட்டதா… என்ன…? என்கிற அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இப்படித் தான் நம் உடலுக்குள் முந்தைய நிலைகள் பெற்ற உணர்வுகள் அந்த அணுக்கள் தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது என்றால் நாம் சந்தோஷமாக இருக்க முடியுமா…?

நம் உடலிலே ஏற்கனவே உருவான அணுக்கள் (முன்னாடி வேதனைப்பட்ட்து) தன் பசிக்கு வேதனையான உணர்வுகளை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த வேதனையை நாம் அறிய முடிகின்றது.

அந்தச் சமயங்களில் நமக்குள் அந்த நினைவு வந்தாலும் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளியும் பெற வேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

அதாவது…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போய்ச் சேராதபடி தடைப்படுத்துதல் வேண்டும்.

பின் கண்களை மூடி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் இருக்கும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ
2.அங்கே உங்கள் நினைவினைச் செலுத்த வேண்டும்.

உடலில் “வேதனையை உருவாக்கும் அணுவிற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

இப்படி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வாருங்கள்.
1.இதை இவ்வாறு செய்ய
2.இந்த உணர்வுகள் அந்த அணுக்களில் படர
3.விஷத்தன்மைகள் குறைந்து வலியைக் குறைக்க உதவும்.

இதைப்போல எடுத்து அந்த உணர்வின் தன்மையை நம் உடலில் செலுத்த செலுத்தச் சிறுகச் சிறுக அதனுடைய வீரிய சக்தி இழந்து நல்ல அணுக்கள் வலுப்பெறத் தொடங்கி விடுகின்றது.

இதைத் தான் “கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வார்கள்.

நம் உடலில் வளர்ந்து கொண்டிருக்கும் நிலைகள் எத்தனையோ விதமான அணுக்கள் இருக்கின்றது. அந்த அருள் ஒளியை நம் கண்ணிலே கவர்ந்து… அதே கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது அங்கே “ஊடுருவிப் பாய்கின்றது…”

எங்கே வலி எடுக்கிறதோ அங்கே நேராகக் கண்ணின் நினைவைச் செலுத்தினோம் என்றால் சிறுகச் சிறுக வலிகள் தணியத் தொடங்கும்.

இதே போலத் தான் நம் நரம்பு மண்டலங்களில் கை கால் குடைச்சலோ மற்ற நிலைகள் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எங்கள் தசைகளில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளில் படர வேண்டும் என்று உள்முகமாகச் செலுத்த வேண்டும்.

உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்தி எங்கள் உறுப்புகள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்வுகளை படரச் செய்யும் பொழுது “மின்சாரம்…” பாய்வது போல உடலுக்குள் பரவும்.

சிறுகச் சிறுக எடுத்தோம் என்றால் உடலில் வரக்கூடிய வலிகள் தணிய நேரும்.