இயக்கச் சக்தியின் ஒட்டத்தை அதிகமாகக் கூட்டி “எண்ணிய சக்தியைப் பெறும் வழி

prayer (2)

இயக்கச் சக்தியின் ஒட்டத்தை அதிகமாகக் கூட்டி “எண்ணிய சக்தியைப் பெறும் வழி 

 

இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.களிலோ ஒலி/ஒளிப்பரப்புச் செய்யும் உணர்வின் அலைகளை (மின் காந்த அலைகளை) ஒரு இயந்திரத்தில் அதே அலை வரிசையில் வைத்துப் பட நிலைகளையும் ஒலி அலைகளையும் நாம் பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் பேசும் சாதாரணப் பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளும் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய உணர்வலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் நமக்கு முன் சுழன்று கொண்டிருகின்றது.

அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும் என்றால் நமது உயிரின் ஆற்றலையும் அது நமக்குள் இயக்கக்கூடிய சக்தியையும் உணர்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மேக்னட்டில் காந்தத்தை அதிகமாகக் கூட்டச் செய்யும்போது அந்தச் சுழற்சியின் வேகத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.

அதைப் போல நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்ட நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டினால் அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியை பெருக்கச் செய்ய முடியும்.

குற்றம் செய்தவரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் கோப உணர்ச்சிகள் மிகவும் துரிதமாக இயக்குகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் நினைவலைகளை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தி மெய் ஒளி பெற வேண்டும் என்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போது
1.இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாக கூட்டி
2.நாம் “எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி…” பெறுகின்றோம்.

ஆகவே இதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும். எட்டாத தூரத்தில் விண்ணிலே மகரிஷிகள் இருந்தாலும் இந்த முறையைக் கையாண்டால் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்.

ரேடியோ டி.வி. போல்
1.(LIVE) நேரடியாக அந்த அலையின் தொடரிலே உணர முடியும்.
2.அவர்கள் துணை கொண்டு இயக்கவும் இயங்கவும் நம்மால் முடியும்…!

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொன்னாலே “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

lord-eswarar

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொன்னாலே… “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரிடம் வேண்டுகின்றோம். நம் குருநாதர் பெயரும் அதுவாகும்.

அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி குருவின் நினைவைக் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெற்றார். ஆகையினால்

1.ஈஸ்வரா குருதேவா என்றால் அவர் பெயரும் “ஈஸ்வரா…” என்று வருகின்றது.
2.எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
3.”ஈஸ்வரா குருதேவா…” என்று என் உயிரை எண்ணினாலும்
4.குருவை எண்ணியது போன்று தான்.

எனக்குள் (அவர்) இருந்து குருவாக இருந்தும் அந்த உணர்வின் தன்மை படைக்கப்படும் போது அந்த (உயிர்) குருவாகின்றது.

“ஈஸ்வரா குருதேவா” என்பது உயிர் ஈசனாக இருந்து இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

1.உருவாக்கும் அந்த ஈசனுடன் ஒன்றி
2.இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று
3.நாம் குருவாக… உலகத்திற்கு வழிகாட்டியாக… வளர வேண்டும்.

நாம் இடும் மூச்சலைகள் பிறருடைய துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாக வரவேண்டும்.

நாம் சொல்லும் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி இன்பமான நிலைகளை உருவாக்கி மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.

1.அவருக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
2.உணர்வின் ஒளிச் சுடராகப் பெறும் அந்த தகுதியை
3.நாம் பெறச் செய்ய வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் எனக்குள் பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அது எனக்குள் சேராதவண்ணம் தடுக்க மெய் ஒளியின் தன்மையை உனக்குள் எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

அந்த உணர்வின் எண்ண அலைகளை எனக்குள் ஆழமாகப் பதியச் செய்தார். அவரைப் பின் தொடர்ந்து பதிவான உணர்வுகளை நான் நினைக்கப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைகின்றது.

அவர் எனக்குள் படைத்த அந்த அருள் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் வித்தாகப் பதிவாக்கவே இதை உபதேசிக்கின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் இனமான சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல யாம் பதிவாக்கும் ஞான வித்துக்களை வளர்த்து அந்த மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த அருள் ஞான வித்தால் நாம் எல்லோரும் அந்த நிலைகள் பெறுவோமேயானால் விஞ்ஞான அறிவின் அழிவிலிருந்து நாம் மீண்டு மெய் ஞானியின் நிலைகளுக்கு நாம் செல்வோம்.

எதுவாக இருந்தாலும் இயற்கையினுடைய நிலைகள் இனம் இனத்துடன் தான் சேரும்.

1.மெய்ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும்போது
2.அந்த இனத்துடன் இணைந்து அந்த ஆற்றலைப் பெற்று வளர்ந்து
3.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.
4.அந்த நிலையில் செல்வதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

குருநாதர் அருளிய ஆற்றல் மிக்க அந்த சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. “நம் அனைவருக்குமே சொந்தம்…” ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஒன்றுடன் ஒன்று ஒன்றித்தான் இணைந்து செயல்படுகின்றது.

சிறு துளியாக மழை பெய்தால் பூமிக்குள் அது ஈர்க்கப்படுகின்றது. மறைந்துவிடுகின்றது.

ஆனால் பெருந்துளியாக மழை பெய்யும்போது என்ன செய்கின்றது? அங்கு இருக்கக்கூடிய நிலைகள் பெரும் வெள்ளமாகப் பெருகி வலுக் கொண்டதாகி எல்லாவற்றையும் இழுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

இதைப் போல நாம் அனைவரும் மெய் வழியில் ஒரே உணர்வாக ஆற்றல் மிக்க மெய் ஞானியின் உணர்வை “ஓ…ம் ஈஸ்வரா…” என்று எண்ணி நமக்குள் எடுக்கும்போது பெரும் வெள்ளமாகத் திகழ்கின்றது.

நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் துன்பங்களையும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளையும் மாய்த்து மெய் ஞானியின் அருள் ஒளியில் அருள் வெள்ளமாக நாம் சென்றடைய முடியும்.

மெய் வழியில் மெய் ஒளியின் தன்மை பெறும்
1.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற முடியும்.
2.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
3.நமக்குள் அத்தகைய ஆற்றல்கள் உண்டு.

அந்தச் சக்தியின் துணை கொண்டு இந்த மனித உடலிலிருந்து தான் இந்த மகா ஞானிகள் உணர்த்திய உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

இது எல்லோருக்கும் சாத்தியமானது தான்.

“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

Eswara Guru Devar

“உங்கள் உயிருக்கு” எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று பாருங்கள்…!

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து தான் நாம் மனிதனாக வந்திருக்கின்றோம். மிருகமாக இருக்கும் பொழுது எப்படியெல்லாம் அவஸ்தைப்பட்டிருப்போம்.

அதிலிருந்தெல்லாம் தப்பிக்கும் உணர்வுகளைச் சேர்த்துத்தான் நாம் மனிதனாக வந்து இருக்கின்றோம். அது எல்லாவற்றிற்கும் வழிகாட்டியாக ஒவ்வொன்றிலிருந்தும் தப்பிக்க கண்கள் நமக்கு வழிகாட்டியது.

அதே உணர்வின் தன்மை கொண்டு மனிதனான பின் வரும் தீமைகளிலிருந்து விடுபட கண்ணன் காட்டியது நாரதனை…! (ரிஷியின் மகன் நாரதன்)

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வு தான் நாரதன். அந்த ரிஷியின் தன்மை நமக்குள் எடுக்க வேண்டும். தசமி – அதாவது நாம் பத்தாவது நிலை அடைய வேண்டும்.

இந்த உடலை விட்டுப் போனோம் என்றால் எங்கே போக வேண்டும்? சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

பல தடவை இதைச் சொல்கின்றோம். “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரை நினையுங்கள். அந்தச் சக்தி எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.

மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணித் தியானம் செய்ய வேண்டும்.

கண்களைத் திறந்து ஒரு நிமிடம் கண்களை மூடி ஒரு நிமிடம் அதை எண்ணுங்கள். மகரிஷிகளின் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கின்றது.

நீங்கள் எண்ணியவுடனே இந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் சேருகின்றது. இவ்வாறு எண்ணிய பிற்பாடு கண்களை மூடி மூடித் திறங்கள்.

கண்களைத் திறந்த பிற்பாடு என்ன செய்கின்றீர்கள்? உங்கள் வீட்டில் “கஷ்டம்…!” என்று சொல்வதை விட்டுவிடுங்கள்.

வார்த்தையில் கஷ்டம் என்பதை நீக்கி விட்டு
1.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.எங்கள் குடும்பத்தில் எல்லாம் மகரிஷிகள் அருள் சக்தி படர வேண்டும்.
3.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் குடும்பத்திலுள்ளோர் பெற வேண்டும்
5.மகரிஷிகள் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் ஒன்று சேர வேண்டும்.
6.எங்கள் குடும்பத்தில் சகோதர உணர்வுகள் வளர வேண்டும்.
7.ஒற்றுமையாக நாங்கள் வாழ வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதை இப்படி எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

சாமியார் செய்து தருகிறேன் என்று சொன்னார் என்றால் அவரை நம்புவீர்கள். நீங்கள் எண்ணி எடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும் என்று தான் நான் சொல்கிறேன்.

சாமி…! எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது. என் பிள்ளை சொன்ன படி கேட்க மாட்டேன் என்கிறது.

1.என்னிடம் வந்து கேட்கிறார்கள்.
2.உங்கள் உயிரிடம் நீங்கள் சொல்லிக் கேளுங்கள்.
3.அந்த மகரிஷிகள் உணர்வலைகள் இங்கே இருக்கின்றது என்று சொன்னால்
4.அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.
5.”உயிரிடம் எப்படிக் கேட்கிறது …!” என்கிறார்கள்.

என்னை (ஞானகுரு) நம்பத் தயாராக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். இந்த மாதிரித் தான் போகின்றார்கள்.

எதற்காக நான் இதைச் சொல்கிறேன்? மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து அவர்களிடம் அங்கே போக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை.

உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உங்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான் நான் இங்கே பெறுகின்றேன்.

அந்த மகரிஷிகளை எண்ணுகின்றேன். என்னை நினைப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.

கீதையிலே   நீ   எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.

1.மகரிஷியின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் நீங்கள் காண வேண்டும்.
4.உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
5.உங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்.
6.நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும்.
7.நீங்கள் சந்தோஷமான நிலைகள் இருக்க வேண்டும்
8.நீங்கள் விடும் மகிழ்ச்சியான மூச்செல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர வேண்டும்
9.அதை எண்ணுகின்றவர்களுக்கெல்லாம் அந்த மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று நான் எண்ணுகின்றேன்.

அதே மாதிரி நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருக்கின்றவர்களை எண்ணி ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்  என்று எண்ணிவிட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.எங்களுக்குள் சகோதர உணர்வு வளர வேண்டும்.
3.எங்கள் அம்மா அப்பா அருளாசி கிடைக்க வேண்டும்.
4.எங்கள் மூதாதையருடைய அருளாசி கிடைக்க வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லாம் நலமாக இருக்க வேண்டும்.
6.எங்களுக்கு நல்ல மனம் வர வேண்டும் என்று
7.எங்களைப் பாரக்கின்றவர்கள் எல்லோருக்கும் நல்ல மனம் வர வேண்டும் என்று
8.இதையெல்லாம் உங்கள் உயிரிடம் கேளுங்கள்
9.அவன் படைத்து உங்களுக்குக் கொடுப்பான் என்று சொல்கின்றேன்.

இந்தப் பழக்கத்திற்கு நீங்களெல்லாம் வர வேண்டும் என்பதற்காக தான் இதைச் சொல்கிறேன்.

என்னை நீங்கள் நம்புகின்றீர்கள். சாமியிடம் என்னமோ… “பெரிய சக்தி…” இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்.
1.உங்கள் உயிருக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று
2.நீங்கள் உங்கள் உயிரை எண்ணிப் பாருங்கள்.
3.உங்கள் உயிரிடம் கேட்டு அதை எண்ணி எடுப்பதற்காகத்தான் இந்த உபதேசமே.

அந்த ஞானிகள் பெற்ற நிலையை உங்களிடம் உபதேசிக்கின்றேன். இந்த மாதிரிக் கொஞ்ச நாள் செய்து பாருங்கள்.

உங்களுக்குள் வரும் தீமையைத் துடைக்க இது உதவும். உங்கள் மூச்சு நாட்டில் வரக்கூடிய தீமைகளை நீக்க உதவும்.

தீமையைத் துடைக்கக்கூடிய மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே காற்றிலே படரப்போகும் போது எல்லோருக்கும் இது கிடைக்கின்றது. இந்தப் பரமாத்வே சுத்தமாகின்றது.

உங்கள் உயிரான ஈசனிடம் கேட்டுப் பாருங்கள்…!

உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.. படைக்கின்றது…! “உங்கள் உயிரை நம்புங்கள்…”

 

Gnanaguru saamigal upadesam .

உங்கள் உயிர் தான் உருவாக்குகின்றது.. படைக்கின்றது…! “உங்கள் உயிரை நம்புங்கள்…”

இயற்கையின் உண்மை நிலைகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் (ஞானகுரு) காட்டினார். இந்த உண்மை நிலைகளை நான் எளிதில் தெரிந்து கொள்ளவில்லை.

பட்டினியாக இருந்து மிகவும் கஷ்டப்பட்டுத் தான் தெரிந்து கொண்டேன். பல வகைகளிலும் இன்னல்படச் செய்து பல அனுபவங்களைப் பெறச் செய்தார்… அனுபவங்களைக் கொடுத்தார்.

தீமைகளினுடைய உணர்வுகளை எப்படி அகற்ற வேண்டும்? அதை ஒளியாக எப்படி மாற்ற வேண்டும்? என்று குருநாதர் காட்டிய வழியில் இதைப் போதிக்கும் பொழுது அதையெல்லாம் உங்கள் அனுபவத்தின் மூலமாகத்  தெரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் வாழ்க்கையில் உங்களுடைய அனுபவம் பேசும்.

மற்றவர்கள் தவறுகள் செய்து கொண்டேயிருக்கின்றார்கள் என்று உணர்ச்சி வசப்படாமல் அந்த உணர்வுகளை எப்படித் திருத்த வேண்டும் என்ற அனுபவம் வரும்.

1.தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும்
2.அத்தகைய அனுபவங்கள் பெற வேண்டும்.

நான் கஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட சக்தியை உங்களிடம் கொடுக்கின்றேன். உங்களை மீட்டிக் கொள்ள அரும் பெரும் சக்தியைக் கொடுக்கின்றேன்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீங்கள் தியானத்தால் எடுத்துப் பெற்றுக் கொள்ள முடியும்.
1.உங்களுக்கு நீங்கள் தான் காக்க முடியுமே தவிர…
2.“நான் வந்து காப்பேன்…” என்று சொன்னால்
3.எனக்குக் கீழ் நீங்கள் அடிமையாகத் தான் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

ஏனென்றால்
1.நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் தான் இயக்குகின்றது
2.அந்த உணர்வுப்படி உங்கள் உயிர் தான் உங்களைக் காக்கின்றது;
3.உங்களை வளர்க்கின்றது.. அதன் வழி உங்களை இயக்குகின்றது.
4.இதை நீங்கள் மறந்திடாமல் செயல்படுத்துங்கள்.

என்னைச் சாமி தான் காப்பாற்றினார் அவர் தான் காரணம் என்று என்னை எண்ணக் கூடாது. சாமி செய்தார் என்று என்னை எண்ணினீர்கள் என்றால் என்னிடம் எத்தனையோ ஆசைகள் இருந்தது.

1.அப்போது சாமியினுடைய ஆசைகள் உங்களுக்குக்குள் வர வேண்டுமா?
2.இதையெல்லாம் வென்றவனின் அந்த அருள் ஆசைகள் வேண்டுமா?

அருள் ஞானிகள் பெற்ற நஞ்சினை வென்ற உணர்வுகளைச் சொன்னால் அதை நான் பெறுகின்றேன். எனக்குள் இருக்கக்கூடிய அந்த இருளை நீக்கக் கூடிய பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைக்கின்றேன். குருநாதர் எனக்குக் கொடுத்தார்.

இதே மாதிரி நீங்கள் இதைப் பெறுங்கள். இந்த உண்மையெல்லாம் உங்களுக்குத் தெரியும். நீங்கள் அதைப் பற்றுங்கள்.

என்னைச் சாமி அப்படிக் காப்பாற்றினார் இப்படிக் காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய எண்ணத்தால் தான் உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள்.

உதாரணமாக கடையில் சரக்குகளை வைத்திருக்கின்றார்கள் என்றால் அதிலே இருப்பது நல்ல சரக்குதானா…! என்று பார்க்கின்றோம். அதில் சரக்கைத் தேர்ந்தெடுத்துச் சமைத்துச் சாப்பிடும்போது அதில் ருசி வருகின்றது… இல்லையா…?

அப்படியானால்,
1.அப்பொழுது அந்தக்கடைக்காரர் உங்களைக் காப்பாற்றினாரா?
2.இல்லை…, ருசியைக் கொடுத்தாரா?

கடையில் பல பொருள்களை வைத்திருக்கின்றர்கள். அதை வாங்கி ருசியாகச் சமைப்பது உங்களிடம் தான் இருக்கின்றது.

அதனால் தான் இந்த உண்மையின் இயக்கங்களை உணர்ந்து நான் உயர்ந்த சொற்களைச் சொல்கின்றேன்.
1.இதை நீங்கள் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்.
2.அந்த உணர்வின் தன்மையை அறிந்தால் பிரம்மகுரு
3.அது அருந்ததி அதைன் நிலைகள் அந்த உணர்வின் சக்தியாக அது உங்களை இயக்கும் என்பதை
4.உணர்வின் இயக்கங்களைப் பற்றி இராமயாணத்திலே இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

நாம் இதை அறிந்து கொண்டோமா…?

சில பேர் என்ன சொல்வார்கள்? “ஒரு மந்திரத்தைச் சொல்லி… தொட்டுக் கொடுத்து விடுகின்றேன்…!” என்று சொல்கின்றார்கள். அவர்கள் எண்ணம் தான் உங்களுக்குள் பதிவாகும்.

குருநாதர் அப்படிச் சொல்லச் சொல்லவில்லை.

சாமி உபதேசித்த வழியில் நீங்கள் இதைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை எடுத்து உங்களுக்குள் பதிவாக்கினீர்கள் என்றால் இதை நுகரப்படும் போது இந்த நிலை வரும்.

சாமி சொன்னார்…! என்று ”சாமியிடம் இருந்து இந்தச் சக்திகள் பெற வேண்டும்” என்று சொல்லிவிட்டு என்னைத் தியானம் செய்தால் நிச்சயம் நான் சிறு வயதில் எத்தனையோ குறும்புத்தனம் செய்திருப்பேன் எத்தனையோ செய்திருப்பேன்.

இந்த உணர்வு கலந்து வந்தால் உங்களுக்குள் எது வரும்? இந்த மனிதனின் உணர்வு தான் அங்கே வரும். இதையெல்லாம் முதலில் மாற்றியமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்று யாரோ செய்வார்…! எவரோ செய்வார்…! என்று இந்த நிலையில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
1.உங்களை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள்.
2.உங்களை நீங்கள் நம்புங்கள்.
3.நம் உயிர் நாம் எண்ணியதை உருவாக்குகின்றது.

எதனையும் வெல்லக் கூடிய வல்லமை இந்த மனித உடலிலே உண்டு. அதே சமயத்தில் நமக்குள் பதிவாக்கும் சக்தியும் உண்டு. ஆகவே தான்
1.அருள் ஒளியை ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
2.இதை நீங்கள்  கவர்ந்து கொள்ளுங்கள்.
3.அந்த அருளை மீண்டும் மீண்டும் நினையுங்கள்.
4.அந்த அரும் சக்தியை உங்களுக்குள் உருவாக்குங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினால் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது அதே உணர்வுகள் நமக்குள் பகைமையை வளர்க்கின்றது. இதே போலத்தான் பல நிலைகள் வருகின்றது.

அருள் ஞானத்தை உங்களுக்குள் வளர்க்கப்படும் பொழுது அந்தப் பேரின்பப் பெரு வாழ்வு என்று ஞானைகள் அடைந்த அந்த உணர்வுகள் உங்களுக்குள் பேரின்பம் பெறக்கூடிய வாழ்க்கையாக அமையும்.

உடலை விட்டு வெளியே வரும் பொழுது மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையலாம்.

ஆகவே என்னை எண்ணித் தியானிப்பதற்குப் பதில் குரு உபதேசித்த வழிகளைக் கடைப்பிடித்துப் பேரின்பத்தைப் பெற முடியும் என்ற நிலைக்கு வாருங்கள்.

புருவ மத்தியின் இரகசியம் என்ன…? உயிர் – நட்சத்திரம் – வைரக்கல்

Spiritual Third eye.jpg

புருவ மத்தியின் இரகசியம் என்ன…? உயிர் – நட்சத்திரம் – வைரக்கல்

ஒவ்வொரு உடலிலும் தான் எடுத்துக் கொண்ட விஷத்திற்கொப்ப தன் உணர்வின் தன்மை “தன் உயிருடன் ஒன்றி… மலம் போன்று உண்டு”.

அதன் உணர்வே மற்றதுடன் கலந்து கலந்து செயலாக்கும்.

அது தனது சுழற்சியில் தனக்குள் வந்து பெருகி வைரமாகிவிட்டால் பாம்பிற்கு எப்படி நாகரத்தினமாகின்றதோ
1.மனிதனுக்குள்ளும் இந்த உயர்ந்த உணர்வின் தன்மை
2.“ஒளியாக மின்னும் உணர்வின் சக்தியாக… ஒன்று” உருவாகின்றது.
3.யானைக்கும் இத்தகைய நிலை உண்டு “யானை மதக்கல்” என்பார்கள்.
4.நரிக்கும் ஒன்று உண்டு. “நரிக் கொம்பு” என்று சொல்வார்கள்.

உயிரின் இயக்கம் மையத்தில் உறைந்த உணர்வுகள் எதனை நுகர்ந்ததோ அதன் ஆயுள் காலம் நீடித்திருந்ததென்றால் உணர்வின் ஒளி மிகுந்து அதற்குள் அந்த ஒளியின் உணர்வின் உறைவிடத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு மனிதனுக்கு இது உண்டு.

அக்காலங்களில் முதுமையடைந்து 100-125-200 வயது வரை வாழ்பவர்கள் அவர்களால் நடமாட முடியவில்லை என்றால் “முதுமக்கள் தாழியில்…” போட்டு வைப்பார்கள்.

அவர்கள் எடுத்து கொண்ட (சுவாசித்து உயிரிலே படும்) உணர்வின் தன்மை அவர் உயிரின் அருகில் உறைந்திருந்த உணர்வின் தன்மை எடுத்து அதிலே பார்த்தால் வைரம் போன்று… “ஜொலிக்கும்”.

இது அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உறைந்து ஒரு கல்லாகத்தான் மாறுகின்றது. அது செயலாக்கும் ஜீவனாவது இல்லை.

இதை அறிவதற்காகக் குருநாதர் என்னை மலைப்பாகங்களுக்கு அழைத்துச் சென்று கடந்த காலங்களில் நீடித்த ஆயுள் கொண்டு வாழ்ந்தவர்கள் உடல்களில் “இத்தகைய வளர்ச்சிகள் உண்டு..,” என்பதைக் காட்டினார்.

ஆனால் வைரத்தை அதில் போட்டு வைத்துள்ளார்கள் என்று நாம் நினைப்போம்.

120,130 வயதுக்கு மேல் ஆனவர்கள் எதனின் தன்மையைச் சீராக வைத்துள்ளார்களோ அதன் உணர்வின் வளர்ச்சி கொண்டு அவர் உயிர் அருகிலே ஒரு சுழற்சி வட்டம் இருக்கும்.

இந்த உணர்வின் தன்மை வெளிவிட்ட பின் மறு உடல் பெறும் இந்த உணர்வுக்கொப்ப மீண்டும் மனிதனுக்குள் சென்று இந்த உணர்ச்சியின் நற்குணங்களை உருவாக்கப்பட்டு அதனுள் கருவாகி மீண்டும் மனிதனாக உருப்பெறும் தன்மை உருவாகின்றது.

விண்ணிலிருந்து வரும் ஆற்றல்மிக்க சக்திகளை நுகர்ந்து
1.உயிர் வழி (புருவ மத்தியின் வழியாக) நாம் சுவாசித்தால்
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும்.

ஒளியின் சரீரம் பெற முடியும்.

அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு மரணமில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளுடன் ஒன்றிட முடியும். சப்தரிஷி மண்டலத்தில் நாம் இணையலாம்.

“உயிருடன் ஒன்றி..” எவ்வாறு விண்ணுலகம் செல்ல வேண்டு என்பதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

புறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் இணைத்தால்” அது தீமைகளை அகற்றும் சரியான மார்க்கம் ஆகிறது

 

Third eye opening tech

புறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் இணைத்தால்” அது தீமைகளை அகற்றும் சரியான மார்க்கம் ஆகிறது 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

வந்தபின் அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து அது ஓங்கி வளர்ந்து உடலை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்துவிடுகின்றது.
1.அதனால் உடல் நலிந்து
2.உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நாம் நம்மைக் காத்திட முடியும்.

ஆத்ம சுத்தி என்ற ஆற்றலைப் பெறுவதற்காக அருள் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் சாரத்தை
1.உங்களைக் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
2.அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் இதை உபதேசிப்பது.

வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் காட்டிய வழி – “நமது கண்களின் துணை கொண்டு இதை நினைவு கூர்ந்து எண்ணும்போது அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நுகர வேண்டும். உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும். அருள்ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் இதைச் சொல்கிறோம்.

மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்த அந்த உணர்வின் தன்மையை, மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து நலிந்ததை மீட்கச் செய்து நல்ல உணர்வாக வளர்க்கச் செய்யும்.

உயிருடன் ஒன்றும் உணர்வை அனைத்தும் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் வியாசகர் காட்டிய அந்த உணர்வின் சாரத்தை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு “அதோ வருகின்றான் நாரதன்”என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்தல் வேண்டும்.

“உயிரான கண் அகக்கண்” “நம்முடய கண் புறக்கண்”

புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது ”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்,
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
5.எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெறவேண்டும் என்று
6.உள் நினைவில் கண்களை மூடி
7.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும் என்று செய்வதே
8.கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்” அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் ஆகி வளர்ச்சியாகின்றது.

நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருகின்றது. அதைப் போன்று
1.அந்த (ஞானிகளின் அருள்சக்தி) மணத்தின் வீரியத் தன்மை
2.உள் நின்று வெளி வருவது
3.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி உடலுக்குள் சேர்க்கும்முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடிமேல் ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் உணர்வுகளை உயிருடன் ஒன்றி உள் செலுத்தப்படும்போது அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது
1.மடி மீது சுருண்டு கொண்டிருக்கும்
2.வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

இவ்வாறு தீமையைப் பிளந்து நம் ஆன்மாவிலிருந்து அகற்றும் நிலையையே “ஆத்ம சுத்தி” என்பது.

பொன்மொழிகள் – QUOTES
ஞானகுரு உபதேச வாயிலாகக் கொடுத்த நுணுக்கமான கருத்துக்கள்

நமக்கு “JUDGE” யார்…?

Om eswara Gurudev - jUDGE.JPG

நமக்கு “JUDGE” யார்…?

கோர்ட்டில் ஏறிப்போய் பொய் சாட்சி சொல்லலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.
1..உயிருடன் எதை நாம் இணைக்கின்றோமோ
2.அதற்குரிய “தீர்ப்பை (JUDGEMENT)” உயிர் கொடுத்தேவிடும்.

சிவ தத்துவத்தில் இதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரனை வைத்தது. நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று வைத்தது.

1.நந்தீஸ்வரன் என்றால்
2.சுவாசித்ததை உயிர் என்ற ஈசன் உருவாக்கும்.
3.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது கோபமான உணர்வு அதிகமாகி அந்தக் கணக்கின்படி நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால், சாப்பாடு அவர்களுக்கு யாராவது கொண்டு வந்தார்கள் என்றால் “வள்…” என்று கத்தச் சொல்லும். உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.

தீயில் குதித்தால் உடல் கருகுகின்றது, ஆனால் உயிர் வேகாது. உடலில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் சாகாக்கலை. இதிலே எந்த அளவிற்கு உணர்வு இருக்கிறதோ அந்தக் கலை பிரகாரம் உயிர் உடலை மாற்றும்.

விஷத்தை அதிகமாகச் சேர்த்தால் பாம்பாக உடலை உயிர் மாற்றும். இரக்கமற்றுத் தாக்கும் உணர்வை வளர்த்தால்,அந்தக் கலை பிரகாரம் புலியாக உடலை உயிர் மாற்றும்.

பிறரை ஏமாற்றி வாழ்ந்து வந்தால் நரியாகப் பிறக்க வைக்கும்.

நாம் ஒவ்வொரு உடல்களிலும், சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் மனிதனாக உருவாக்கியது உயிர் தான்.

இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான் நாம் இன்று மனிதனாக உள்ளோம்.

தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆனாலோ அந்தக் கணக்கு கூடினால் உயிர் என்ற ஈசன் இந்த உடலை விட்டுச் சென்றபின்
1.சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப தீர்ப்பு
2.நீ வேதனையை எடுத்ததனால் அங்கு சென்று பிறந்து பழகு,
3.கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய் கஷ்டத்தை நீ அனுபவி என்று அதற்குத்தக்க
4.அடுத்த உடலை நமது உயிர் உருவாக்கிவிடும்.

அதனால்தான் சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

சாஸ்திரங்களில் ஞானிகள் சொன்ன பேருண்மைகளை அறிந்து நாம் வாழ்வது நல்லது.

நமக்கு மூலாதாரம் எது..? காலமறிந்து… கருத்தறிந்து… செயல்படுவது என்றால் என்ன…?

 

kundalini.jpg

நமக்கு மூலாதாரம் எது..? காலமறிந்து… கருத்தறிந்து… செயல்படுவது என்றால் என்ன…?

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று அரச சபையில் அன்று கவி பாடினார்கள்.

நாம் என்ன செய்கின்றோம்?

“மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை…,” என்று சொல்லிக் கொண்டு அந்தப் பாடலைப் பாடுகின்றோம். அதனின் உட் கருத்தை அறிந்தோமா…!

மூலாதாரம் என்றால் நம் உயிர். நாம் எண்ணும் எண்ணங்கள் அது நமக்குள் மோதும் பொழுது அதாவது நம் உயிரிலே மோதுகின்றது.

அப்பொழுது
1.உயிரிலே மூண்டெழும் கனலை
2.எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வின் தன்மையை இயக்குகின்றது.

உயிரிலே பட்டதனால் தான் அது இயக்குகின்றது. படவில்லை என்றால் அது இயக்காது.

எத்தகைய நிலையாக இருந்தாலும் சரி உயிரிலே பட்டால் தான் “ஓ…, ம்…,” பிரணவமாகும்.., ஜீவன் பெறும்.

அப்பொழுது “ஓ…ம்…” அந்த வெப்பமாகி கனல் எழும்புகின்றது. நாம் நுகர்ந்த சுவாசத்தை உயிர் உணர்ச்சிகளாக எழுப்புகின்றது.

ஒரு மத்தாப்பூவை நாம் கொளுத்தினால் அது எப்படிப் பல பொறிகளைக் கிளப்புகின்றதோ அதைப் போல நம் உயிர் நுகர்ந்ததை உணர்ச்சிகளாக மாற்றுகின்றது.

1.அந்த உணர்ச்சிகள் எதுவோ
2.அது நிச்சயம் நம்மை “இயக்கும்”
3.நமக்குள் “உண்மையை உணர்த்தும்” என்று காட்டுகின்றார்கள்.

அதைத்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலத்தால் அறிந்து கருத்தறியும் நிலைக்கு வரவேண்டும் என்று ஞானிகள் உணர்த்துகின்றனர்.

அதை நாம் விட்டுவிட்டோம்.

பாடலைப் பாடுகின்றோம். கருத்தை விட்டுவிட்டோம். மூலத்தையே விட்டுவிட்டோம்.

ஆக விநாயகர் அகவலைப் பாடிவிட்டுப் போகின்றோமே தவிர கருத்தினை மனதில் எண்ணிப் பார்க்கின்றோமா…!

நாம் அதை உணர்வதில்லை.

நாம் எந்த நிலைக்குக் காலத்தால் அறிகின்றோமோ அது நம் “மூலமான உயிரில்… இதை ஆதாரமாக இணைக்கப்பட்டு” அந்த உணர்வின் தன்மை கனலாக எழும்புகின்றது.

1.அதைக் காலத்தால் ஆறாவது அறிவால் அறிந்து
2.பிறிதொரு உணர்வு இயக்கும் நிலைகளை ஞானத்தால் உணர்ந்து (கருத்தை)
3.தனக்குள் கணங்களுக்கு அதிபதியாக “மகரிஷிகளின் உணர்வை” இணைத்து
4.அதை நாம் எவ்வாறு “நன்மை செய்யும்” சக்தியாகச் செயல்படவேண்டும்…? என்பதை நாம் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தப்பில்லை.

இன்று சாங்கிய சாஸ்திரங்களில் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாத துயர்களிலேயே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

ஆக “யாரோ செய்வார் எவரோ செய்வார்” என்று தான் நமக்குள் எண்ணுகின்றோமே தவிர நாம் சுவாசித்ததை உயிர் இயக்கி, அதை உணர்த்தி, இந்த உடலைச் செயல்பட வைக்கின்றது என்று ஞானிகள் கொடுத்த நிலைகளை எண்ணவில்லை.

உயிர் “மூலம்”. நாம் நுகரும் உணர்வுகள் (சுவாசம்) “ஆதாரம்”. உயிரிலே அது மோதும்போது “வெப்பம்”. மோதும் “சந்தர்ப்பத்தை” அந்தக் காலத்தை அறிந்து அதனின் “ஞானமாக நீ செயல்பட வேண்டிய நிலை” எது? என்பதைத்தான் அங்கே ஞானிகள் காட்டினார்கள்.

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா… – விளக்கம்

om-eswara-gurudev-judge

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா… – விளக்கம்

நாம் “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்கின்றோம்.

பக்தி மார்க்கங்களில் சொல்லும் பொழுது.., “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்.., குருதேவர் எங்கேயோ இருக்கின்றார்..,” என்ற எண்ணம் இல்லாதபடி இந்தச் சொல்லின் நிலையை முதலிலே தெரிந்து கொள்வது நல்லது.

நமது சாஸ்திர விதிகளின்படி, “ஓ…ம்” என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் “ஓ”.

“ஓ” என்றால் ஜீவன் என்று பெயர். நமக்குள் உயிர் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.

இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ அவையனைத்தும் “ம்” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

நாம் எண்ணியது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் தன்மை நமது உடலானாலும் அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு “ஈஸ்வரா…” இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது “குருதேவா…”

ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

நமது உடலில் எத்தனையோ வகையான குணங்கள் இருக்கின்றது. நாம் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நம் உடலில் எத்தனையோ எண்ணங்கள் இணைந்தாலும், எண்ணினாலும், இவையனைத்திற்கும் நமது உயிரே குரு.

அதுதான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்பது.

உதாரணமாக ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். அது “ஓ” என்று இயங்கி, “ம்” என்று எனது உடலாக அமைகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்து நமது உடலாக மாறுகின்றது.

அந்த குணத்தின் தன்மை உடலாக அமையப்படும் பொழுது, நாம் எண்ணிய குணத்தின் சக்தி உடலுக்குள் இயங்குகின்றது. இதுதான் ஓம் நமச்சிவாய. உடலுக்குள் இயங்கிய குணத்தின் சக்தி சொல்லாகவோ, செயலாகவோ வெளிப்படுவது சிவாய நம ஓம்.

1.நாம் யார்? கடவுள் யார்?
2.ஆண்டவன் எங்கிருக்கின்றான்?
3,நம்மை இயக்குவது எது…? என்ற உண்மைகளை
4.அந்த மெய்ஞானிகள் கண்ட நிலைகளைத்தான் யாம் சொல்லி வருகின்றோம்.

உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

Soul is God உயிரே கடவுள்

உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.

அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,

அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும் மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும், தீமையை அகற்றும் உணர்வுகளும், தீமையை அகற்றும் சக்திகளும் தந்த.., “நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.

அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.., எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.

ஆக.., “அவனுக்குச் சொந்தமானது தான்.., இந்த உடல்”.

அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ..,” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.

ஆனால், சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.

இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய்ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல.., நான் வேறல்ல..,” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.

அந்த மெய்ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எப்படி ஒளியாக அழியாத நிலைகள் கொண்டு இருக்கின்றதோ நாமும் அத்தகைய நிலையை அடைதல் வேண்டும்.

இதுவே மனிதனாக உருவாக்கிய நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய சேவை. இதன் பலனாக நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.

அகண்ட அண்டத்திலே என்றுமே அழியாத நிலைகள் கொண்டு பேரானந்தப் பெருவாழ்க்கை வாழலாம்.