
இயக்கச் சக்தியின் ஒட்டத்தை அதிகமாகக் கூட்டி “எண்ணிய சக்தியைப் பெறும் வழி
இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.களிலோ ஒலி/ஒளிப்பரப்புச் செய்யும் உணர்வின் அலைகளை (மின் காந்த அலைகளை) ஒரு இயந்திரத்தில் அதே அலை வரிசையில் வைத்துப் பட நிலைகளையும் ஒலி அலைகளையும் நாம் பார்க்கின்றோம் கேட்கின்றோம்.
இதைப் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் பேசும் சாதாரணப் பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது.
ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளும் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய உணர்வலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் நமக்கு முன் சுழன்று கொண்டிருகின்றது.
அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும் என்றால் நமது உயிரின் ஆற்றலையும் அது நமக்குள் இயக்கக்கூடிய சக்தியையும் உணர்ந்தறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மேக்னட்டில் காந்தத்தை அதிகமாகக் கூட்டச் செய்யும்போது அந்தச் சுழற்சியின் வேகத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.
அதைப் போல நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்ட நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டினால் அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியை பெருக்கச் செய்ய முடியும்.
குற்றம் செய்தவரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் கோப உணர்ச்சிகள் மிகவும் துரிதமாக இயக்குகின்றது.
இதைப் போன்றுதான் நம் உயிரின் நினைவலைகளை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தி மெய் ஒளி பெற வேண்டும் என்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போது
1.இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாக கூட்டி
2.நாம் “எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி…” பெறுகின்றோம்.
ஆகவே இதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும். எட்டாத தூரத்தில் விண்ணிலே மகரிஷிகள் இருந்தாலும் இந்த முறையைக் கையாண்டால் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்.
ரேடியோ டி.வி. போல்
1.(LIVE) நேரடியாக அந்த அலையின் தொடரிலே உணர முடியும்.
2.அவர்கள் துணை கொண்டு இயக்கவும் இயங்கவும் நம்மால் முடியும்…!
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.