வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

 

எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் “வாலியைக்” காட்டுகின்றனர்.

வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார் “நேரடியாகப் போர்” செய்தாலும் அவர்களிடமிருந்து பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான்…! என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக… ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவர்களை நேரடியாகப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டறிந்தால்
1.அந்த வேதனை உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து நமக்குள்ளும் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.
2.நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
3.”பாதி நல்ல குணம்” வலு இழக்கப்படுகின்றது.

வாலி என்ற நஞ்சான செயல்களை நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று இன்றும் ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பிறகு… மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனைப்பட்டவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் மறைமுகமாக நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான்
1.சீதாராமன் வாலியை நேரடியாகப் பார்க்காதபடி
2.அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கணையை “மறைந்திருந்து ஏவினான்…”
3.வாலியின் செயலைத் தடுத்தான்…! என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.

பிறர் நம்மைத் திட்டும் போது என்ன செய்ய வேண்டும்…?

பிறர் நம்மைத் திட்டும் போது என்ன செய்ய வேண்டும்…?

 

உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்…! சாமியார் காப்பாற்றுவார்…! ஜோசியம் காப்பாற்றும்…! எந்திரம் காப்பாற்றும்…! என்று நினைக்க வேண்டாம். ஆக ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி… இந்த உடலை விட்டுப் போனாலும் சரி… உயிருடன் ஒன்றிய நிலையில் உணர்வைச் சேர்த்து உயிர் வெளியிலே போனால் அவனுடன் ஒன்றி அங்கே போக வேண்டும். அதற்கு நீங்கள் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்.

எமது குருநாதர் என்னைக் கஷ்டப்படச் சொன்னார். சரி என்று யாம் எமது நிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் போய்க் கொள்ளலாம்.

ஆனால் அவர் எனக்கு இட்ட கட்டளை…!
1.அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லியிருக்கிறார்
2.உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லி இருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் நன்றாக ஆக வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும்… அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

1.உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
2.அவர்கள் சங்கடத்தைப் பற்றி எண்ண வேண்டாம்… விலகி நில்லுங்கள்
3.அவர்களுக்கு நல்ல நேரம் வரட்டும் என்று சொல்லிவிடுங்கள்.
4.எனக்கு இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்…! என்று எண்ண வேண்டாம்…!

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்து விட்டு நன்றாக ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிக் கொண்டே இருந்தால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள். அவர் திட்டுவது உங்களுக்கு வராது… நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால்… இப்படித் திட்டுகிறானே…! இருக்கட்டும் பார்க்கிறேன்…! என்று சொன்னால்
1.ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து
2.இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்து விடும்.

ஆகவே அத்தகைய நிலைகள் நமக்குள் வராதபடி ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்துத் தீமைகளை அகற்றுவோம். இதைச் சீராகக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்

 

பக்தி என்பதை எதிலும் பொருதலாம். நான் கறி (மட்டன்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் கறி மேல் பக்தி இருக்கின்றது. ஆனால் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன் என்றால் அதன் மேல் பக்தி வருகின்றது. எதை விரும்பிச் சாப்பிடுகிறோமோ அதன் வழி அந்த பக்தி வருகிறது.

இதைப் போன்று தான்
1.ஞானிகளால் காட்டப்பட்டது தான் பக்தி என்பது.
2.அதாவது மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலை ஞானிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

அரசன் மதங்களாக உருவாக்கினாலும் அதில் பக்தி நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்கச் செய்கின்றது.

பெண்கள் கோலமிடுகின்றார்கள் என்றால் தன் உணர்வைச் செலுத்தி… தவறு இல்லாதபடி எத்தனையோ அழகாக அதைப் போடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கிறார்கள் என்று ஆண்கள் நாம் செய்ய முடியுமா…?

ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொன்றையும் இணைத்து எப்படி அதை அழகுபடுத்துகின்றோமோ அதைப் போல்
1.மனிதனின் வாழ்க்கையில் ஒரு புள்ளி…! ஒரு கோபம் ஒரு வெறுப்பு ஒரு சாந்தம் என்ற நிலையில் எத்தனையோ புள்ளிகள் உண்டு.
2.இதை அனைத்தையும் இணைத்து அலங்காரமாக எடுத்துப் போடுவதற்கு…
3.அதாவது மனதைச் சாந்தப்படுத்திப் பொறுமைப்படுத்தி பக்தி கொண்டு கோலமிடுவது என்ற அந்த நிலை.

அதே போல்… பொதுவாக மார்கழி மாதம் எடுத்துக் கொண்டால் அதிகாலையில் சூரிய ஒளிக்கு முன் எழுந்து உடலைத் தூய்மைப்படுத்தி
1.வீட்டு வாசலை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம்.
2.ஆக… வீட்டையும் அதன் வாசலையும் மட்டும் தூய்மை செய்வதல்ல
3.நமது வீடு உடல்… நமது வாசல் என்பது ஆன்மா…!
4.இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்… இது பக்தி…!

உடலைத் தூய்மைப்படுத்துவது போல நம் உணர்வுகளை எண்ணங்களை மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

வீட்டு வாசலைத் தூய்மைப்படுத்துவது போன்று
1.மற்றவர்கள் தீமையான செயல்களை நமக்குச் செய்தாலும்
2.அந்தத் தீமை தனக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.நம் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4.பக்தி என்பது இது தான்…!

ஏனென்றால் இதை எல்லாம் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இது தான்.

அதனால் தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி (ஆன்மாவைச் சுத்தம்) செய்யச் சொல்கிறோம்.

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

ஒருவர் மிகவும் கடினமாக வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்க்க நேருகின்றது. அப்போது நன்மை செய்யும் பருவத்தில் அவருக்கு உபகாரம் செய்கின்றோம்.
1.இப்படிப் பதிவான உணர்வுகள் சித்திர புத்திரன். அதாவது…
2.அவருடைய எண்ணம் நமக்குள் பதிவாகின்றது… நம்முடைய எண்ணம் அவர்கள் உடலில் விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் அந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் அவர் உடலில் விளைந்த உணர்வுடன் நம் உடலுக்குள் அது வந்து விடுகின்றது.

உடலுக்குள் வந்தபின் அவர் உடலில் விளைந்தது நமக்குள் ஊன்றிப் பதிவாகி விடுகின்றது. ஒன்றிய குணங்கள் இருப்பதனால் நம்மை அறியாமலே இப்படி ஆகின்றது.

மனித வாழ்க்கையில்… இதைப் போன்று இன்னொரு ஆன்மா மனிதனுக்குள் வந்து தான் அடுத்து அது மனிதனாகப் பிறக்க வேண்டும்.

பரிவால் பண்பால் இரக்கத்தால் ஈகையால் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்தாலும் அவர்களிடம் விளைந்த நஞ்சின் தன்மை…
1.நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகள் பதிவான பின்… தன் இனத்தால்
2.நம் உடலில் இருப்பது அந்த நினைவாற்றல் வெளி வரும் பொழுது
3.இந்த உணர்வின் துணை கொண்டு நம் உடலுக்குள் வந்தே தீருகின்றது.

எவ்வளவு பழகினாலும் சரி… இந்த உணர்வின் துணை கொண்டு இங்கே வந்து விடுகிறது. வந்து விட்டால் கோடாங்கியோ ஜோதிடமோ மற்ற மந்திரங்களாலோ அதை வெளியேற்ற முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணத்தை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்தி
1.அதனின்று வெளிப்படும் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
3.எனக்குள் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஜீவான்மா என்பது இன்னொரு உயிரில் விளைய வைத்த அது நமக்குள் சுவாசம் செய்யும் நிலை. ஜீவ அணு என்பது எந்தக் குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் ஜீவித்து அந்த அணுவின் மலமாக நம் சரீரம் ஆகிறது.

எந்த உடலில் இருந்து ஜீவான்மா வந்ததோ அந்த நோயின் தன்மை கொண்டு நமக்குள் பரப்பி… அந்த உணர்வின் நினைவாற்றல் ஆக நம் ஜீவணுக்களையும் அதுவாக மாற்றிவிடும்.

அதைப் பெருக்க விடாது தடுக்க வேண்டும்.
1.நம் உடலில் எத்தகைய ஆன்மாக்கள் புகுந்திருந்தாலும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் வேண்டும்…
2.எனக்குள் இருக்கும் ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று “அடிக்கடி…” எண்ணுதல் வேண்டும்.

ஜீவான்மா என்கிற பொழுது உயிருடன் ஒன்றிய அந்த நிலைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் நிலை. மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

எனக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த ஆன்மாக்களுக்கு “அந்தச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்…”

ஒருவர் சாபமிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்… அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
1.எந்த மனித உடலில் இருந்து அந்தச் சாப அலைகள் தொடர்ந்ததோ அதை அந்த அணு உணவாக எடுக்கும்.
2.அந்த உடல் இல்லை என்றாலும் அலைகள் இங்கே இருக்கும்… அதை எடுக்கும்.

ஒரு மரம் பட்டுப் போய்விட்டாலும் அதில் விளைந்த சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருப்பது போல மனிதன் வெளிவிட்ட அந்த சாப அலைகள் இந்தக் காற்றில் பரவியே இருக்கும்.

அதில் விளைந்த வித்து… மீண்டும் அந்தச் சத்தை எடுத்து அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

நம் மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காது சாபம் இட்டிருப்பார்கள். அதை நாம் கேட்டறிந்தால் வம்சத்தில் அது வரும். பின் தொடர்ந்து இங்கே வம்ச வழியில் வந்து கொண்டே இருக்கும். அது வளர வளர அதனுடைய தீமைகளைச் செய்து கொண்டிருக்கும்.

மரம் அழிந்தாலும் அதிலே விளைந்த வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து வளர்வது போல மனித உடலில் விளைந்த சாப அலைகள் வித்துக்களாகப் பெருகிக் குடும்பத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதையெல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

 

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணரும்போது உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். உணர்ந்தபின் அதை நீக்கிடல் வேண்டும்.

அதாவது
1.தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
2.ஆனால் தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது… அதை நீக்கிடல் வேண்டும்.
3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால் காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் “சுவையற்றதாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது “சுவை மிக்கதாக…” மாற்றுகின்றது.

இதே போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள்படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தால் உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

1.நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து அதிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ இதைப்போல
2.நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின் அடுத்தகணம்
3.நமக்கு முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து
4.நமக்குள் தீமையை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக… நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல்… சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக… ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் அதைக் கவர்ந்து
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் “தங்கத்தின் முலாமாக ஆகி…”அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.

அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.

இது நாளாக நாளாக… நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம்… அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா…?

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து “அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”

இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி

 

நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்” செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து “அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”

ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.

பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.

1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.

எமது அருளாசிகள்.

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

தீமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிதல்ல… தெரிந்த பின் உடனே அதை நீக்க வேண்டும்

 

நாம் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருப்பினும்… ஒருவர் வேதனைப்படுவதைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர் சொல்லைக் கேட்காமல் இருக்க முடியாது.

ஒருவன் குற்றம் செய்கிறான் என்றால் அதைப் பார்க்காமல் இருக்க முடியாது. குற்றம் செய்தவர்களால் நேர்முகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனைப்படுவதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

1.அதையெல்லாம் அறிவால் அறிகின்றோம். அறிந்த உணர்வு நமக்குள் பதிவாகின்றது.
2.எத்தகைய உணர்வுகளைப் பார்த்தாலும் அறிந்து தெரிந்து கொண்டாலும்
3.கார்த்திகேயா என்று தெரிந்திடும் அறிவு இருந்தாலும் “அதை நீக்கிடும் அறிவு வேண்டும்…”

நம் உடல் ண்ஹாம் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் இருக்கும் நஞ்சினை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வினை உடலாகச் சேர்க்கின்றது. அந்த நல்ல உணர்வால் நாம் இடும் மணத்தால் நல்ல எண்ணங்கள் கொண்டு தீமையை அகற்றிடும் நிலைகளை உருவாக்குதல் வேண்டும்.

1.நல்லவைகள் எதுவாக இருப்பினும்
2.தீமைகளைப் பற்றித் தெரிந்திடும் அறிவு இருந்தாலும்
3.தெரிந்த பின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் அல்லவா.

வேலை செய்கின்றோம்… கை அழுக்காகின்றது. அதை நாம் கழுவாதபடி அடுத்து உணவை உட்கொள்வோமா…? அப்படி உட்கொண்டால் அழுக்கின் சுவையே தான் வரும்… உணவு சுவையற்றதாக மாறி உடலுக்கும் தீங்கு விளைவிக்கின்றது.

இதைப் போன்று தான் மகிழ்ச்சி கொண்டு மற்றவர்கள் கஷ்டத்தைக் கேட்டறிந்தாலும்… அதைத் தெரிந்து கொள்ளும் அறிவு இருந்தாலும்…
1.அவருடைய தீங்கு நம் நல்ல அறிவுடன் இணையும் பொழுது
2.அதைத் துடைக்கவில்லை என்றால் அவரின் தீமையின் உணர்வே நமக்குள் விளையும்.

துடைக்கா விட்டால் உடலில் நோயின் தன்மையாகிவிடும். மீண்டும் நல்ல உணர்வை எடுக்க முடியாதபடி தவிக்கும். அப்பொழுது சிந்தனைகள் சிதறும். சிதறும் பொழுது உடலில் நடுக்கமும் நடுக்கத்தால் வரும் கோபமும் சிந்தனையற்ற செயல்களாக நம்மை இயக்கி விடுகின்றது.

இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் மீள்தல் வேண்டும்.

ஆகவே… சந்தர்ப்பத்தால் எத்தகைய தீமைகள் புகுந்தாலும் அந்தத் தீய வினைகளை உடனுக்குடன் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குத் தியானமும் ஆத்ம சுத்தி பயிற்சியும் கொடுக்கின்றோம்.

எந்த நேரம் ஆனாலும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து
2.உடனுக்குடன் தீமை செய்யும் உணர்வுகளை நீங்கள் அகற்றிட முடியும்.
3.உங்கள் நல்ல எண்ணங்களை உணர்வுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

அந்த ஞானிகள் பெற்ற அறிவின் ஞானத்தையும் நாம் நமக்குள் வளர்த்து இந்த வாழ்க்கையில் என்றுமே பொருளறிந்து செயல்படும் திறனாக அருள் வழியில் வாழ முடியும்.

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

“ஒரேடியாக தியானமிருந்து அருளைப் பெறுவேன்…” என்று சொன்னால் அது நடக்காது

 

உதாரணமாக சில வருடங்களுக்கு முன் ஒருவன் நமக்குக் கெடுதல் செய்திருப்பான். அதனால் நம் குடும்பமே நஷ்டம் அடைந்திருக்கும். இல்லாததைச் சொல்லி இருப்பான்.

மீண்டும் அவனைப் பார்த்தவுடன் கஷ்டமான நிலைகள் நமக்குள் ஏற்கனவே பதிவானது இழுத்து நம் ஆன்மாவில் வந்துவிடும். அப்பொழுது அவனை வெறுக்கும் நிலைகள் நமக்குள் உருவாக ஆரம்பித்துவிடும்.
1.சிறிது நாள் அதற்குச் சாப்பாடு இல்லாமல் இருந்தது.
2.சாப்பாடு கிடைத்ததும் வீரியம் அடைய ஆரம்பித்துவிடும்.

மண்ணுக்குள் எத்தனையோ வித்துகள் மறைந்து இருக்கின்றது. சிறிது காலம் மழை இல்லையென்றால் வறண்டு போய்விடுகின்றது. ஒரு நாள் மழை பெய்து விட்டால் தள… தள…என்று வெளியில் வரத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்றுதான் பகைமை கொண்டு அவன் செய்த தவறான நிலைகள் நமக்குள் பதிவானாலும்
1.அவனைப் பார்த்தவுடனே அந்த இனத்தைத் தனக்குள் கவர்ந்து
2.அதனின் செயலாகத் தனக்குள் ஆகாரம் தேட ஆரம்பித்துவிடும்.

அப்பொழுது நாம் இவ்வளவு தியானம் எடுக்கின்றோம்… “அவனைப் பார்த்தவுடனே கோபம் வருகின்றதே…!” என்று நினைப்போம்.

இந்த உணர்வு இங்கு வந்தபின் இரவு தூங்கினால் கெட்ட கனவாக வரும். அந்த வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது எப்படியெல்லாம் இருந்தோமோ நம் எண்ணத்திற்கு அவன் நினைவு வராது.

கெடுதல் செய்தவனைப் பார்த்து அந்த உணர்ச்சி நமக்குள் தூண்டப்பட்டாலும் அவன் உரு நமக்குள் நினைவிற்கு வராது. அந்த நேரத்தில்… மற்ற மனிதர்களிடத்தில் உருவான கெடுதல் செய்த உணர்வின் தன்மை நமக்கு எதிரில் இருந்தால் அது வந்துவிடும்.

1.இரவில் தூங்கும் பொழுது யாரோ கெடுதல் செய்கின்ற மாதிரி இன்னொரு உரு நமக்குள் தெரியும்.
2.நாம் முன்பின் பார்த்திருக்க மாட்டோம்… அந்த மனிதனின் உருவம் நமக்குள் தெரியும்.
3.அப்பொழுது நம்மை அறியாமலே இரவு வேளைகளில் தீமையின் உணர்வுகள் நம் தூக்கத்தைக் கெடுக்கும்.

நாம் இரவில் தூங்கும் பொழுது அத்தகைய உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி நம் நினைவைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அதைப் பெற வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் “பல முறை செலுத்த வேண்டும்…”

அதைச் செலுத்தியவுடன் தன்னை அறியாமலே தூக்கம் வரும்.

எந்தெந்த வகையில் தீமைகள் வந்தாலும் இப்படி நாம் எடுத்துக் கொண்டால்தான் நமக்குள் தூய்மைப்படுத்த முடியுமே தவிர
1.ஒரேடியாக ஜெபமிருந்து அருளைப் பெறுவேன் என்று சொன்னால் நடக்காது.
2.ஒவ்வொரு நிமிடத்திலும் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.
3.அவ்வப்பொழுது அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை நமக்குள் இணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
4.அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
5.இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை அடக்கிக் கொண்டே வரவேண்டும்.
6.அப்படி அடக்கிக் கொண்டே வந்தோம் என்றால் அது அப்படியே உறைந்துவிடும்.
7.எல்லா உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படித் தான் இந்தப் பூமியில் எத்தனையோ விதமான விஷங்கள் கோபங்கள் வெறுப்புகள் இவைகளை எல்லாம் மனிதன் அடக்கினான். அவ்வாறு அடக்கி அந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது “பேரானந்தப் பெரும் செல்வம்” கிடைக்கின்றது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் இணைத்துப் பழக வேண்டும். இல்லையென்றால்
1.நான் எல்லாம் செய்கின்றேன்… ஆனால் உலகில் எங்கு திரும்பிப் பார்த்தாலும் இப்படித்தான் இருக்கிறது என்று
2.மற்ற உணர்வுகளுக்கு இதற்கு வலு கொடுத்து விடுகின்றோம்.
3.அப்பொழுது நாம் புவியின் ஈர்ப்பிற்கு வந்து விடுகின்றோம்.

எது எப்படி இருந்தாலும் எவ்வளவு கடுமையான நிலைகளை நாம் பார்த்துணர்ந்தாலும்… ஒவ்வொரு நொடியிலும் நம் ஆன்மாவில் கலக்கும் நிலையை அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்து தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதை முறைப்படி நம் வாழ்க்கையில் செய்து கொண்டே இருக்க வேண்டும். காற்று பலமாக அடிக்கும் பொழுது தூசி வருகின்றது. அதிகமாகத் தூசி வரும்போது ஒதுங்கிக் கொள்கின்றோம்.

இதே மாதிரி
1.தீமையான உணர்வு வரும் பொழுது அந்த எண்ணத்தில் இருந்து விலகி நிற்க
2.அந்த மகரிஷிகளின்\ உணர்வை ஆதாரமாக வைத்து அதிலிருந்து சிறிது நேரமாவது விலகி நிற்க வேண்டும்.

நாம் எப்படியும் ஒரு இடத்திற்குப் போக வேண்டும் என்று நினைக்கின்றோம். அங்கு வெயில் குறைவாக இருந்தது. போகப் போக வெயில் சூடு அதிகமாகின்றது. அதிகமான அந்த நேரத்தில் விலகி நிற்கின்றோம்.

இதைப் போன்று
1.நம் வாழ்க்கையில் கடுமையான நிலைகள் வரும் நேரத்தில்
2.மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்து
3.அந்த எண்ணத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆத்ம சுத்தியின் மூலக்கூறு இது தான்.

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சந்திக்கும் நேரத்தை “நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்தக் குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது. இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய்யுணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளில்…
1.எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ
2.அதையெல்லாம் “உங்களுக்கு நன்மை பயக்கும் நேரம்” என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

‘’இப்படி என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’’ என்றால் துன்பத்தைக் கொடுக்கும் நாள். அல்லது நம் பையனே “இப்படிப் பேசிவிட்டானே…” என்ற உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் தீர்க்கப்படும்போது அது நமக்குக் ‘’கெட்ட நாள்…” நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

நம்மை யாராவது திட்டினால் இந்த உணர்வின் தன்மை கொண்டு, உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்
1.‘’ஓம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்.
2.“மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்…’’ என்று ஏங்குங்கள்
3.”எங்கள் ஜீவாத்மா அந்த சக்தி பெற வேண்டும்…’’ என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

அப்பொழுதே இது அடங்கும்.

அதாவது ஒருவர் உணர்ச்சிவசப்படும்படியாக நம்மைத் தூண்டும் நேரத்திலும் நாம் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால்
1.அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்காதபடி
2.அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்… “அப்போது உயர்ந்த சக்தியையும் நமக்குள் பெறுகின்றோம்…”

அடுத்து யார் நமக்கு தவறு செய்தார்களோ… “மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வது நல்லதாக வேண்டும்…” என்று ஆணையிடுங்கள். உங்களுக்குள் இந்த உணர்வுகளைத் தடுக்கச் செய்யுங்கள்.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடமென்று சொல்ல முடியாது. மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் குறைகள் கண்டு கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் சேர்க்கும் “அந்த புனிதப் பயணமாக இருக்க வேண்டும்…”

உங்களிடம் யாம் கேட்பது என்ன…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… நீங்கள் மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு… யாராவது துன்புற்று வந்தாலும்… “அவர்களுக்கு நன்றாகிப் போகும்” என்று நீங்கள் சொல்லுங்கள். அவர்களுக்கு உடல் நலமாகிவிடும். அந்த மகிழ்ச்சியான எண்ணங்களை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

இப்பொழுது நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டுமென்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்த ‘’ஆத்ம சுத்தி’’ செய்து கொண்டு இந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

1.நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும்.
2.துன்பமான உணர்வுகளை காதிலே கேட்டு நம் உடலுக்குள் அந்தத் துன்பங்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

ஏனென்றால் நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் பிற துன்ப அலைகள் எல்லாம் விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு நமக்குள் மெய் ஞானிகளின் அருள் ஒளி இருந்தால்தான் முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு… அந்த நிலையினை நாம் பெற வேண்டும்.
2.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு அதைப் பின்பற்றி நடப்போர் அந்தச் சக்தியைப் பெற முடியும்.

ஆகவே… உங்களை அறியாமலே உங்களைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான் தக்க ஆயுதமாக ”மிஷின் கண்” (MACHINE GUN) போன்று ‘’ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதத்தைக் கையில் கொடுக்கிறோம்.

நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து இந்த வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்,. எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும் உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

எமது அருளாசிகள்.