“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்…

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்…

 

ஒரு பயிற்சி:-

1.நீங்கள் கண்களைத் திறந்து பார்த்துக் கொண்டே இருங்கள்.
2.கண் பார்த்துக் கொண்டு இருப்பதை (எண்ணாமல்) உயிரான நிலைகள் இழுக்காமல் நினைவை வேறு பக்கம் செலுத்திக் கொண்டு இருங்கள்.

அப்போது
1.நம் கண் பார்வையில் படும் உணர்வுகள் நம்மை இயக்க முடியாது
2.நம் நினைவு எங்கே செல்கிறதோ அது தான் இயக்கும்

செய்து பாருங்கள்.

இதைப் போன்று தான் ஒருவர் சாபமிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நேரத்தில்… அந்த இடத்தில்… உங்களை வேறு யாராவது (நண்பர்கள்) “அங்கே வரச்சொன்னார்களே… நேரம் ஆகிப் போயிற்றே… இன்னும் காணோமே…!” என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

சாபமிட்ட அலைகள்… அந்த நினைவுகள்.. உங்களுக்குள் வராது. ஏனென்றால் நீங்கள் எண்ணிய எண்ணம் அங்கே அது முதலில் வந்து விடுகின்றது.

நண்பர் நம்மை பார்ப்பதற்காக அங்கே வரச் சொல்லி முதலில் சொன்னார் இல்லையா. அவர் சொன்ன அந்தப் பதிவை நமக்குள் வைத்தவுடனே..,
1.ஐயோ.. நேரமாகிப் போய்விட்டதே…! என்று எண்ணிப் பாருங்கள்.
2.அந்த நேரத்தில் “நின்று…”
3.அந்தச் சாபமிடுபவன் சொல்வதைக் கேட்க முடியாது.
4.அப்பொழுது அந்தச் சாபம் இட்டது உங்களுக்குச் சுத்தமாகவே தெரியாது.

“எவனோ… என்னமோ பேசுகிறான்…!” என்று எண்ணிவிட்டு நீங்கள் போவீர்கள்.

இந்த மாதிரி உங்கள் வேலைக்கு அவசரமாகப் போவதை இங்கே பதிவாகிக் கொண்டு போகும் போது அந்தச் சாப உணர்வுகள் உள்ளுக்குள் வருவதில்லை.

அதே மாதிரித்தான் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அதற்குத்தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

அவன் உணர்வு நம்மிடம் பட்டது. சாபமிடுகின்றான் என்று தெரிந்து கொள்கின்றோம். அடுத்தது என்ன எண்ண வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நினைவுக்குக் கொண்டு வந்து
2.ஈஸ்வரா…! என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் வேலைக்குப் போகும் போது அதைப் பார்க்காமல் போவது வேறு. ஆனால் நாம் சாபமிடும் உணர்வைக் கேட்டுப் பதிவாக்கிக் கொண்டு… அதிலிருந்து போன பிற்பாடு நமக்குள் சுத்தப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலைச் சுத்தப்படுத்திவிட்டு அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் ஒன்றுபட்டு வாழக்கூடிய அந்த சக்தி வரவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.நல்ல குணங்களை இப்படி நாம் காக்க வேண்டும்
2.இப்படிச் சுவாசித்துக் கொண்டோம் என்றால் நம் உடல் என்ன செய்கிறது…?
3.சாப அலைகள் உடலுக்குள் விளையவிடாமல் தடுக்கச் செய்கிறது.

அப்பொழுது நமக்குள் ஒரு சந்தோஷ உணர்வு வருகின்றது. நாம் அந்த நல்லதை… “சொல்லால் சொல்லிவிட்டுப் போய்விடுகிறோம்…!”

சாபமிட்டவர்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று சொன்னோம் அல்லவா. அவர்கள் இரண்டு பேர் உணர்வு இங்கே பதிவாகி இருப்பதால் நாம் இங்கே சமைத்து அனுப்பிய உணர்வுகள் என்ன செய்யும்…?

1.நம் உடலைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.
2.இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3.அவர்கள் ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நம்மை நினைக்க வைக்கின்றது.

இப்படிச் செய்யாமல் போனால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் என்ன செய்யும்..?

நடு ரோட்டில் சாபமிட்டார்கள்…! என்று நினைக்கும் போதெல்லாம்
1.இவர்கள் விட்ட சாபத்தையெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி
2.அவர்களிடம் இந்த வித்தை எடுத்துக் கொடுத்து
3.நமக்குள்ளும் இதை வளர்த்துக் கொள்கிறோம்.

“இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் இப்படியெல்லாம் நடக்கின்றது…” இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எடுத்து ஒவ்வொருவரும் மாற்றிக் கொண்டால் சாபமிட்ட உணர்வுகளும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளும் தீமையான உணர்வுகளும் அனாதையாகிவிடுகின்றது.

நாம் யாரும் ஈர்க்கவில்லை என்கிற பொழுது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி இழுத்துக் கவர்ந்து கொள்கின்றது.

1.எது எது பிடிப்பில் இல்லையோ
2.அதையெல்லாம் சூரியன் எடுத்துக் கொண்டு போய் மறுபடியும் அதை மாற்றி
3.நல்ல கதிர்களாக உருவாக்கி வெப்பமும் காந்தமுமாக அனுப்புகின்றது.
4.இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் “ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தும் பயிற்சி…” இது தான். செய்து பாருங்கள்…!

தீமையை மாற்றியமைக்கும் “இந்தப் பயிற்சிகள் உங்கள் அனுபவத்திற்கு வர வேண்டும்…”

தீமையை மாற்றியமைக்கும் “இந்தப் பயிற்சிகள் உங்கள் அனுபவத்திற்கு வர வேண்டும்…”

 

இன்று மனிதனின் வாழ்க்கையில் தீமைகள் எப்படி எல்லாம் வருகின்றது…? என்று தெரிந்து கொள்தல் வேண்டும்.
1.இதை மாற்றுவதற்கு உங்களுக்குச் சக்தி வேண்டும்.
2.உங்களுக்குத் தெரியாது… தெரிய வைக்கின்றோம்.
4.அந்தச் சக்தி பெறுவதற்குண்டான ஊக்கத்தையும் கொடுக்கின்றோம்.
5.தெரியக்கூடிய அளவிற்கு அருள் ஞானிகளின் அருள் வித்துக்களைப் பதிய வைக்கின்றோம்.

(1) ஞானம் கிடைக்கும் சந்தர்ப்பம் எது…?
திட்டியவனை நினைத்தவுடன் உடனே நமக்கு ஆத்திரம் வருகின்றது. நம்முடைய காரியங்கள் எல்லாம் தடைப்படுகின்றது.

அப்பொழுது அந்தச் சங்கடம் வரும்போது நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவாக்கியதை எண்ணினால் உங்களுக்குள் ஞானம் வரும். தீமையை விலக்கக்கூடிய யுக்தி வரும்.

உங்கள் சொல் என்ன செய்யும்…?

அந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் நாம் பேசும் இந்த உணர்வலைகள் திட்டியவர்கள் மனதிற்குள் போய்… நம் மீது உள்ள கடுப்பைக் கொஞ்சம் குறைக்கச் செய்யும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

(2) நம் உணர்வு அடுத்தவருக்குள் புகுந்து மீண்டும் நமக்கே திரும்ப வந்து இயக்கும் நிலை
1.“என்ன்னிடம் இப்படிப் பேசினான்” ஆகவே… என்னை இப்படித்தான் எப்போதும் பேசுவான்…! என்ற உணர்வு வந்து
2.நாம் அந்த அச்ச உணர்வோடு பேசும் பொழுது ஏதாவது ஒன்று பதில் சொன்னோம் என்றால்
3.அவர்களுடைய செவியில் பட்டு “நம்முடைய அந்தப் பயப்படும் உணர்வே…” அவர்கள் உடலுக்குள் போய்
4.நம்மை அவர்கள் மிரட்டும் நிலையை உருவாக்கிவிடும்.

ஒருவரிடம் கடன் வாங்கி இருக்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம் திருப்பிச் செலுத்தச் சிறிது கால தாமதம் ஆகின்றது. நாம் எப்படியும் வாங்கிய பணத்தைக் கட்டவேண்டும் என்று விரும்புவோம்.

அப்பொழுது அதை எப்படி எண்ண வேண்டும்…?

ஏனென்றால்… அவன் சரியான நேரத்தில் கொடுத்து உதவினான். அது நியாயம் தான். ஆனால்… நாம் வாங்கினோம் அவனுக்குக் கொடுக்க முடியவில்லை. இருந்தாலும்
1.சரியான முறையில் எப்படியும் கொடுக்கக்கூடிய சக்தி எனக்கு வர வேண்டும்.
2.நான் சொல்வதைக் கொஞ்சம் கேட்டு அமைதியாக இருந்து
3.எனக்கு அந்த வழி கொடுக்க வேண்டும்… அந்த நிலை பெற வேண்டும்… என்று நாம் எண்ணினோம் என்றால்
4.அந்த வலுவான உணர்வுகள் நாம் எண்ணும்போது மூச்சலைகள் வெளிப்படுகின்றது.

கடன் கொடுத்தவர் நம்மை எண்ணி வரும்போது அதை அவர் சுவாசித்தால் அவர் உடலில் இது இணைந்து நம் மேல் இருக்கக்கூடிய வெறுப்பின் தன்மையை “நிச்சயம் குறைக்கும்…”

இதே மாதிரி தொழிலே ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்துவிட்டு… இந்தப் பொருளை வாங்குவோர் நன்றாக இருக்க வேண்டும். அதற்குண்டான மன பலம் பெற வேண்டும்.

நம்மிடம் பழகும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்கக்கூடிய தன்மை வரவேண்டும். நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நம்முடன் ஒத்துழைக்கும் தன்மை வரவேண்டும் என்று இப்படித்தான் இணைத்துக் கொண்டு போக வேண்டும்.

(3) சங்கடத்தை நீக்குங்கள்
வேலை செய்பவர்களிடம் போய்… சங்கடத்துடன் எண்ணி நீங்கள் ஒரு வேலையைச் சொன்னால் இதே சங்கடம் அவனை இயக்கி அவனைத் தவறு செய்ய வைத்துவிடும்.

நீங்கள் சங்கடத்துடன் ஒரு செடிக்குத் தண்ணீர் ஊற்றினால் வாடிப் போகும். நம்மை அறியாமல் இயக்கும் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு வலுவான சக்தி வேண்டும். அந்த வழி அறிந்து செயல்படும் நிலைகள் பெற வேண்டும்.

1.ஒரு பள்ளிக்குச் சென்றால் விஞ்ஞானியாக வேண்டும் என்றால் அது எப்படி…? என்ற நிலைகளைச் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.
2.ஒரு இஞ்சினியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும்
3.ஒரு ஆசிரியராக வேண்டும் என்றால் எப்படி…? என்றும் சொல்லிக் கொடுக்கின்றார்கள்…
4.அதற்குண்டான பாடங்களைப் படிக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் குருநாதர் எனக்குக் கற்றுக் கொடுத்த அந்த உணர்வை நினைவுபடுத்தி உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவானது மீண்டும் உங்கள் நினைவுக்கு வரும் பொழுது
1.சங்கடங்களைச் சமாளிக்கும் ஞானம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
2.அந்த ஞானத்திற்குண்டான யுக்தி கிடைக்கச் செய்வதற்குதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் பெற வேண்டும் என்று
3.அடிக்கடி சொல்லி அதை உங்களுக்குள் ரிக்கார்டு செய்து வைத்து விடுகின்றேன்.

அப்பொழுது “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப்படும் பொழுது தீமையை நீக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் பெருகத் தொடங்குகின்றது.

(4) தீமையை நல்லதாக மாற்றும் முறை
உதாரணமாக… பாலில் சர்க்கரையைப் போட்டால் இனிப்பாக இருக்கின்றது. அந்தச் சர்க்கரையுடன் சேர்த்துக் காபித் தூளைப் போட்டால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

சர்க்கரையுடன் கொஞ்சம் புளிப்பைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது. அந்தப் புளிப்புடன் இலேசான காரத்தைச் சேர்த்தால் அது ஒரு ருசியாக இருக்கின்றது.

மிளகைப் போட்டுப் பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும். மிளகாயைப் போட்டுப் பாருங்கள். அந்தப் புளிப்பு காரம் எல்லாம் சேர்த்து “பானக்கம் கரைத்தால்” அது ஒரு ருசியாக இருக்கும்.

இதைப் போலத்தான் உங்களுக்குள் எத்தகைய தீமையான நிலைகள் வந்தாலும் அதை நல்ல சுவை மிக்கதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதற்குத்தான் இந்த வழிமுறைகளைச் சொல்கின்றோம்.

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி – சேனாதிபதி”

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி – சேனாதிபதி”

 

1.நம்முடைய ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று காட்டி
2.அதை இந்த உடலுக்குக் காவல்காரன்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

உதாரணமாக போர்முறை என்று வரும் பொழுது தன் நாட்டைக் காக்க இந்தச் சேனாதிபதி கட்டளையிட்டு… சிப்பாய்களை எல்லாம் தயார் செய்து வரும் எதிரிகளை வீழ்த்தும் தன்மை பெற்றது.

இது போன்றுதான் ஓர் உயிரணு பூமிக்குள் விஜயம் செய்து… அது பல கோடி உடல்களைக் கடந்து… அதிலே பல கோடித் தீமைகளை நீக்கிடும் அறிவாக… மனிதனாக ஆனபின் இந்த ஆறாவது அறிவாக உருவானது.

1.ஆதியிலே அப்படி வளர்ச்சி பெற்று விண்ணுலகம் சென்றவன் தான் அகஸ்தியன்.
2.அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி… இன்றும் ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான்.

அவன் தீமைகளை வென்று வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் துருவத்தின் வழியாக நம் பூமி அதைக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது.

ஆறாவது அறிவு கொண்டு அதை நாம் கவர்ந்து உயிரிலே மோதச் செய்து… கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எல்லா அணுக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில்…
1.எந்தத் தீமையை நாம் பார்த்தாலும் அது நமக்குள் ஊடுருவி
2.வாயிலே உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து விஷமாகப் போவதற்கு முன்
3.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தியில் வைத்துத் தடுத்து விட்டால் “அது சேனாதிபதி…!”
4.தீமை என்று தெரிந்து கொண்டபின் அதைத் தடுத்து நிறுத்த இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினைச் செலுத்தப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு “வீரிய சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக… ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்றால்… அந்த உணர்வின் தன்மையை நம் கண்களில் உள்ள கருவிழி ருக்மணி தான் விலா எலும்புகளில் வித்தாகப் பதிவாக்குகின்றது.

எனக்குத் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்… என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள்… தீங்கு செய்தவன் அமெரிக்காவில் இருந்தாலும்… அவன் உணவை உட்கொள்ளும் போது நினைத்தால் அவனுக்குள் புரையோடி… சாப்பிட முடியாது தடுக்கின்றது.

அல்லது அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் “எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா…?” என்ற உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவன் சிந்தனை குறைந்து அங்கே விபத்துக்கள் உண்டாகிறது.

அதே சமயத்தில் “அவன் இப்படிச் செய்தானே…” என்று வீரிய உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது நம்முடைய சிந்தனைகளும் குறைந்து மேடு பள்ளம் தெரியாதபடி… அல்லது எதிரிலே இருக்கும் பொருள் தெரியாது நாமும் மோதிக் கீழே விழுகும் நிலை வருகின்றது.

எது இதைச் செய்கிறது…? நாம் நுகர்ந்த உணர்வைத் தான் நம் உயிர் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது. ஆகவே… இதைப் போன்று
1.“இதன் வழி இப்படி வரும் – கார்த்திகேயா…!” என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலையாக
2.ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத் தெளிவாக
3.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை எண்ணும் பொழுது இங்கே நமக்கு விபத்து ஆகின்றது… அங்கே அவனுக்கும் விபத்துக்களை உருவாக்கும் சக்தி ஆகிறது. உணர்வுகள் தடுமாறி உடலுக்குள் சென்ற பின் தீய விளைவின் உணர்வுகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கி இந்த உடலுக்குள் நோயாக மாற்றுகிறது.

இதைப் போன்ற தீமையிலிருந்து விடுபடுவதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகிறோம்.

தீமை எப்பொழுது வருகின்றதோ பதிவாக்கியதை நினைவாக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினால் உள் புகாது தடுக்கின்றது.

அதற்குப் பின் என்ன செய்ய வேண்டும்…?

எந்த மனிதன்… “அவன் தீங்கு செய்தான்…” என்ற உணர்வினை நம் கண் கருவிழி ருக்மணி பதிவாக்கியதோ அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
1.நாம் ஏங்கிப் பெற்றால் இதே கருவிழி ருக்மணி
2.அவன் செய்த தீங்கின் தொடர் கொண்டு பதிவானதன்… நம் உடலுக்குள் அதன் அருகிலேயே பதிவாக்கி விடுகின்றது.

இரண்டும் உயிரிலே மோதப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் வலுவான நிலைகள் வரப்படும் பொழுது வேதனையைத் தடுக்கும் சக்தி வருகின்றது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாகின்றது.

அதே சமயத்தில்…
1.அந்தத் தொக்கிய விஷத்தின் தன்மை உள்ளே போகாதபடி கவர்ந்து இழுக்காதபடி
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை உள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அணுக்கள் எல்லாம் வீரிய உணர்வுகள் பெறுகின்றது… இங்கே தடுக்கின்றோம்.

அதாவது நாம் கவர்ந்த தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகரத்தின் வழி சென்று… ஜீரணித்து… இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் பரவுவதற்கு முன்… “ஆறாவது அறிவால்…” முன் கூட்டியே அதைத் தடுத்து விடுகின்றோம்.

இப்படிப் பழகிக் கொண்ட பின் மிளகாயைக் குழம்பிலே போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போன்று
1.தீமை என்றோ வேதனை என்றோ உணர்வுகள் செயல்பட்டாலும் அல்லது அவைகளை அறிந்து கொண்டாலும்
2.அறிந்து கொண்ட அந்த விஷத்தின் தன்மையை நமக்குள் வளராது தடுக்க இது உதவும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியாக இதைக் கொடுக்கின்றோம்.

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் “உள் உணர்வு (ஞானிகள்)” சரியான பாதையில் உங்களை வழி நடத்தும்

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் “உள் உணர்வு (ஞானிகள்)” சரியான பாதையில் உங்களை வழி நடத்தும்

 

நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.

ஆமாங்க… என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.

நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா…?

அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இட்ட்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.

“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.

இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”

தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.

இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.

சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.

கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது – என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.

ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தி விடும்.

அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

புலி வருகிறது துப்பாக்கியால் சுடுங்கள் என்று சொல்கிறோம்…! பயன்படுத்த வேண்டுமா இல்லையா…?

புலி வருகிறது துப்பாக்கியால் சுடுங்கள் என்று சொல்கிறோம்…! பயன்படுத்த வேண்டுமா இல்லையா…?

 

செல்ஃபோன் எல்லோருமே வைத்திருக்கின்றோம். காந்தப் புலனால் இயக்கும் செல்ஃபோன்… அதற்குள் தொடர்பு என்ன இருக்கின்றது…?

வயர் (WIRE CONNECTION) இல்லை…
1.ஆனால் காந்தப் புலனால் கவரப்பட்ட உணர்வுகள் அது ஈர்க்கும் சக்தி… விஞ்ஞான அறிவால் வைத்த நிலைகள்
2.அதனுடன் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் நாம் இயக்க முடிகின்றது.
3.குறித்த எல்லைகள் வரையும் கொண்டு செல்ல முடிகின்றது.

வெகு தொலைவில் இருந்தால் சேட்டிலைட் மூலமாக அமெரிக்கா மற்ற ஏனைய நாடுகளுக்கும் தொடர்பு கொள்ள முடிகின்றது… பேசவும் முடிகின்றது… பார்க்கவும் முடிகின்றது.

இப்படி எப்போது வேண்டும் என்றாலும்… எங்கே வேண்டுமானாலும் நம்பரைத் தெரிந்து அழுத்தினால் உடனடியாக மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றது. அவர்களுக்கும் :இன்னார் தான் பேசுகிறார்…” என்று அந்த நம்பரை வைத்து அறிய முடிகிறது.
1.அடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றால் அதை அணைத்துக் கொள்ளவும் (SWITCH OFF)
2.தொடர்பே வேண்டாம் (BLOCK) என்று நிறுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இதைப் போன்று தான் சிலருடைய உணர்வுகளை உங்களுக்குள் அது இயக்காமல் தடைப்படுத்த… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

இது எல்லாம் உணர்வின் இயக்கங்கள் தான்…!

உங்களுக்குள் பதிவான தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்த “மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையைத் தான்…” இந்தத் தியானத்தின் மூலம் கொடுப்பது. ஆகவே இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துப்பாக்கியைக் கையிலே கொடுத்துப் “புலி வருகிறது… சுட்டு விடுங்கள்…!” என்று சொன்னால்
1.புலி வருகிறது… புலி வருகிறது… என்று சொல்லிக் கொண்டு
2.நீங்கள் சுடாமல் இருந்தால் என்ன ஆகும்…? புலி தாக்கத்தான் செய்யும்…!

அது உங்களைத் தாக்காது பாதுகாப்பதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் “அதை நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் தான் இருக்கின்றது…” (ஞானகுரு)

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஆசையின் உணர்வுகள் எங்கே அழைத்துச் செல்கின்றது…?

1.நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
2.அந்த வேதனை வந்த பின் சிந்தனை தவறினால் உடனே கோபம் வருகிறது.
3.கோபம் வந்தபின் அதைக் காட்டிலும் வெறுப்பான செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய செயல்கள்… நாம் செயல்படுத்தவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டுத் தான் அவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஆனால் அதை எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா இல்லையா…!

கருணைக்கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை வேக வைத்துப் புளியைக் கரைத்துவிட்டு… காரம் உப்பு என்று பல சுவையான சரக்குகளைப் போட்டு ருசியாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்
2.இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயன் இல்லாது தேய்பிறையாகப் போய்
3.இன்று மனிதன்… நாளைக்கு மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களாக உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் தப்புவதற்குத் தான் மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

யாம் சொன்னதைப் பயன்படுத்தும் போது “தக்க சமயத்தில்” உங்களுக்கு அந்தத் தீமையை நீக்கக்கூடிய உபாயங்களும் உயர்ந்த ஞானங்களும் உதயமாகும். அந்த ஞானத்தை வளர்த்தால் தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

சாமி தீர்ப்பார் சாமியார் தீர்ப்பார் என்ற எண்ணத்திற்கு மாறாக “யாம் சொன்ன முறைகளைக் கடைப்பிடித்தாலே…”
1.உங்களுக்குள் இருக்கும் சக்திகளை நீங்கள் பயன்படுத்தித் தீமைகள் புகாது தடுத்து
2.உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து அனைவரையும் காக்கும் சக்தியாக
3.பண்பை வளர்த்து அன்பை வளர்த்து மற்றவர்களுக்கும் பண்பினை ஊட்டி
4.நீங்கள் இடும் மூச்சுலைகள் காற்றிலே படர்ந்து தீமைகளை அகற்றும் சக்தியாக வரும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனை மதித்து அவனால் அமைக்கப்பட்ட உடலை ஆலயமாக மதித்து நடத்தல் வேண்டும்.

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…”

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…”

 

உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.

சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது… “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது…”

எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்…
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.

அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.

ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. ஆதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.

உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இட்த்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).

அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

இப்படிச் செய்யும் போது அந்த்த் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.

ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 – மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.

கெட்டுப் போவதற்காக அடுத்தவரைத் திட்டுகிறோமா…! அல்லது அவருக்குள் இருக்கும் கெட்டது போக வேண்டும் என்று திட்டுகிறோமா…?

கெட்டுப் போவதற்காக அடுத்தவரைத் திட்டுகிறோமா…! அல்லது அவருக்குள் இருக்கும் கெட்டது போக வேண்டும் என்று திட்டுகிறோமா…?

நாம் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அது மற்றவர்களால் கிடைக்காமல் தடைப்படும் பொழுது அவன் வேண்டுமென்றே செய்கிறான் அவனைத் தடைப்படுத்தவேண்டும் என்ற உணர்வை எடுத்தவுடன்,
1.“அவன் பகைவன்…” என்ற உணர்வை எடுக்கிறோம்.
2.அப்பொழுது நாம் நல்ல பாதையில் போவதற்கு மாறாக
3.அவனைப் பழி தீர்க்கும் உணர்வுடன் தாக்கும் நிலை வருகின்றது.

அப்படி எதிர்த்துத் தாக்கும் உணர்வுகள் வீரியம் அடையும் பொழுது அவன் நம்மை எப்படிக் கெட்டுப் போகவேண்டும் என்று எண்ணுகின்றானோ அந்த உணர்வுகளெல்லாம் நம் உடலுக்குள் எடுத்து நம் உடலும் கெடுகிறது.

இப்படி அவரின் குறையான உணர்வை நமக்குள் வலு சேர்த்து விட்டால் அது நமக்குள் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது. நமக்கு நாமே நல்ல குணங்களை மாற்றியமைத்து அந்த உணர்வின் வழி ஏற்று நடந்துவிடுகிறோம்.

அடிக்கடி கோபம் கொள்வோர்களை நாம் பார்க்கலாம். “என்னை இப்படிச் சொன்னார்கள்… எப்படிச் சொல்லலாம்…? அவர்களை விடலாமா..?” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது நம் இரத்த நாளங்களில் அது கலந்து நம் நல்ல அணுக்களையெல்லாம் மாற்றி அமைத்துவிடுகிறது.

நான் (ஞானகுரு) திட்டினேன் என்றால்
1.அவர்களிடம் உள்ள “கெட்டது போவதற்காகத்தான்..” திட்டுவேன்.
2.அவர்கள் “கெட்டுப் போக…” நான் திட்ட மாட்டேன்.

ஏனென்றால் நான் திட்டுவது உடலில் இன்னொரு ஆவி இருந்தது என்றால் “அதைத்தான் சாடுவனே தவிர…” அவரைத் திட்டுவதில்லை. அதனால் அந்த உணர்வின் தன்மை ஆவி ஒடுங்கும். அந்த மனிதனை நல்லதைப் பேசவிடும்… நல்லதைச் செய்யவிடும்.

நீங்கள் திட்டினீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்…?
1.நேரடியாகத் திட்டுவீர்கள்…
2.அந்த ஆள் தான் செய்கிறார்… என்று நினைத்து அந்த ஆளைத் தான் திட்டுவீர்கள்.

“உள் நின்று இயக்கும் உணர்வை அறிந்ததனால்..” நான் அதைச் செய்கின்றேன்.

ஆகவே ஈஸ்வரா.., என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று அவர்கள் உணர்வை நமக்குள் வராதபடி தடுத்துவிட வேண்டும்.

அவ்வாறு தடுத்துவிட்டு சரி…
1.அவர்கள் செய்தார்கள் அவர்களாகவே உணர்வார்கள் என்று விட்டுவிட்டால்
2.இந்த உணர்வு அவர்களுக்குள் சென்று தீயதை மாற்றி நல்லதாக அவர்களுக்குள் விளையும்.

ஏனென்றால் நம் உயிர்… நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உருவாக்கும்.

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

உயிரை ஈசனாக மதித்து வாழ்ந்தால் தான் பிறவி இல்லா நிலை அடைய முடியும்

 

கைகளில் அழுக்குப் பட்டால் எப்படித் துடைக்கின்றோமோ இதைப் போல் வாழ்க்கையில் பிறருடைய கஷ்டங்களையும் கோபங்களையும் குரோதங்களையும் பார்க்க நேர்ந்தால் நம் ஆன்மாவில் படும் அந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வரவேண்டும்.

சிவன் ஆலயத்தில் “நந்தீஸ்வரன்… சிவனுக்குக் கணக்குப்பிள்ளை…” என்று காட்டுகின்றார்கள்.
1.நாம் சுவாசிக்கும் குணங்கள் எவை அதிகமோ அந்தக் கணக்கின் பிரகாரம் தான் அடுத்த உடலைப் பெறுகின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அதிகமாகச் சேர்த்தால் உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாகப் பெறுகின்றோம்.
3.இது மனிதனின் கடைசி நிலை.

ஆகவே அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் அருள் சக்தி பெற்றது தான்… “நாம் இன்று இருக்கும் இந்த மனித உடல்…” என்பதை மறந்திடலாகாது.

எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து மனிதனாகப் பிறந்த நிலையில் கார்த்திகேயா என்ற ஆறாவது அறிவைப் பெற்றிருக்கின்றோம்.

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை எப்படி ஒளிச் சுடராக ஆக்குகின்றதோ இதைப் போல் நாமும்
1.இந்த உடலான பிரபஞ்சத்திலிருந்து நன்மை தீமைகளை அறிந்து
3.தீமைகளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதி பெற்றவர்கள்.

நம் உடலுக்குள்ளே… இது ஒரு உலகம் தான். நமக்குள் சேரும் வெறுப்பு விருப்பு இத்தகைய உணர்வுகளை இந்த உடலான உலகில் இருளை நீக்கி அருளைப் பெருக்கி ஒளி என்ற உணர்வை நாம் பெறுவதே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

யாம் சொல்லும் இந்தத் தியானத்தின் மூலம்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இரத்தத்தில் கலக்கச் செய்து இரத்தத்தில் உள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உறுப்புகளில் படரச் செய்து அதிலுள்ள ஆன்மாக்களைச் சுத்தப்படுத்துவதும் தான் ஆத்ம சுத்தி என்பது.

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் பட்ட மாசுகளைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கண்ணில் கருமணிகளில் உள்ள விஷத்தன்மைகளைத் துடைக்க வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து நாம் பார்த்ததை உடலுக்கெல்லாம் எடுத்துப் பாய்ச்சும் கண்ணின் நரம்பு மண்டலங்களிலும் அதை உருவாக்கிய அணுக்களிலும் பாய்ச்சி அதிலே தோய்ந்த விஷத் தன்மைகளைத் துடைக்க வேண்டும்.
3.அதைப் போன்றே நரம்பு மண்டலம் எலும்பு மண்டலம் தசை மண்டலம் தோல் மண்டலம் எலும்புக்குள் இருக்கும் ஊன்… அந்த ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து எடுத்து உள்ளே செலுத்திக் கொண்டே வர வேண்டும்.

இவ்வாறு நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டே வந்தால் இந்த உடலுக்குப் பின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இந்த மனித வாழ்க்கையில் அதிகமாகச் சேர்க்கின்றோமோ பிறவி இல்லாத நிலையை நாம் அடைகின்றோம்.

இப்பொழுது உள்ள நிலைகளில் சிறிது நேரம் நன்மை செய்தாலும்… சிறிது நேரம் நாம் தியானம் செய்தாலும்… அதற்கடுத்து வரும் கவலைகள் சங்கடங்கள் வெறுப்புகள் சஞ்சலங்கள் கோபங்கள் இதைப் போன்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது “தியானத்தின் பலனைக் கூட அது மாற்றிவிடும்…”
1.காரணம் அது அதிகரித்து விட்டால் விஷத்தின் இயக்கமே அதிகரித்து விடுகின்றது.
2.இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட “வாழ்க்கையே தியானம்…” என்ற நிலைக்கு வளர வேண்டும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் தீமையைப் பார்க்கின்றோமோ அப்போதெல்லாம் அந்தத் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்து நம் ஆன்மாவைத் தூய்மையாக்கும் ஒரு பழக்கம் வர வேண்டும்.

மனிதனான நிலையில்
1.உயிரை ஈசனாக மதித்து எவர் எவர் அந்த உணர்வுகளை வளர்க்கின்றனரோ
2.அவர்களுக்கெல்லாம் பிறவி இல்லை என்பதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

நாம் எதனால் இயங்குகின்றோம்… இயக்கப்படுகின்றோம்…? என்பதை அறிய வேண்டியது மிக மிக அவசியம்

 

வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். இருந்தாலும் பிறர் தவறு செய்வதையும் பார்த்து தவறு என்று உணர்கின்றோம்.
1.அதற்குத் தக்க விலகிச் செல்கின்றோம் அல்லது
2.அந்த உணர்வுக்கொப்ப நாமும் போருக்குச் (எதிர்நிலையாகி) செல்கின்றோம்.

போர்முறையாகிறது (வெளியில்) என்று வைத்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் நம் உயிரிலே பட்டுத் தான் இயக்கமாகிறது. உயிர் தான் உடலுக்குள் குருவாக இருக்கிறது.

அப்போது நாம் நுகர்ந்த உணர்வுகள் (தவறு என்று நுகர்ந்தது) உயிரிலே படும் பொழுது “குருக்ஷேத்திரப் போராகிறது…”
1.என்னை இப்படிப் பேசி விட்டான் என்றோ அல்லது
2.எனக்கு இப்படி இடைஞ்சல் செய்துவிட்டான் என்றோ நாம் எண்ணும்போது
3.அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகள் உடலுக்குள் பரவிய உடனே
4.இந்த உடலைக் காக்க உடலுக்குள் இருக்கும் அணுக்கள் அனைத்தும் போர்முறைக்கு (அதிகமாக) வருகின்றது – “மகாபாரதப்போர்…”
5.அவனை உதைக்க வேண்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் அவனைத் தாக்கும் நிலைக்கு அழைத்துச் செல்கின்றது
6.அதே சமயத்தில் அவன் நம்மைத் தாக்கி விடுவான் வலுவானவன் என்று சொன்னால் நம்மை விலகிச் செல்லும்படி செய்கின்றது.

உதாரணமாக நாம் ரோட்டிலே செல்கின்றோம். ஒருவன் போக்கிரி என்று தெரிகின்றது வருபவரை எல்லாம் அவன் மிரட்டுகின்றான். நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக… வீட்டில் கணவன் மனைவிக்குள் சிறு குறை (எதிர்நிலை) வந்தால் போதும்…! கணவர் என்னை இப்படிப் பேசி விட்டாரே என்று மனைவி சொல்லும்.

ஆனால் ரோட்டிலே செல்லும் பொழுது போக்கிரி நம்மைக் கண்டபடி பேசுகின்றான்… அடிக்க வருகின்றான்.

ஐய்யய்யோ… என்று சொல்லித்தானே ஓடுகின்றோம் அவனைத் திருப்பி அடிக்கும் நிலையோ அல்லது அசிங்கமாகப் பேசுகின்றான் என்று சொல்ல முடிகின்றதா…?

இல்லை.

அடுத்தாற்போல் மற்றவர்கள் விசாரிக்கின்றார்கள். அவன் உன்னை என்ன செய்தான்…? என்று…!

போக்கிரி என்னை அடித்தான்… திட்டினான்… என்று அங்கே அவனுக்கு முன்னாடி சாட்சி சொல்ல முடிகிறதா…! அடித்தாரா…? என்று கேட்டால் நாம் “இல்லை…” என்று தான் சொல்வோம்.

காரணம்… “அடித்தான்” என்று சொன்னால் நம்மை மீண்டும் உதைப்பான். இது தான் நடக்கின்றது.

ஆனால்
1.வீட்டில் “ஏன் இப்படிச் செய்தாய்…?” என்று கணவன் மனைவியிடம் கேட்டால் கணவன் மீது மனைவிக்குக் கோபம் வருகிறது சண்டை வருகிறது அல்லது
2.மனைவி கணவனைக் குறையாகச் சொன்னால் கணவனுக்குக் கோபம் வருகிறது.

ரோட்டிலே நாம் வேடிக்கையாகத் தான் பார்த்தோம். அந்தப் போக்கிரி என்னடா வேடிக்கை பார்க்கின்றாய்…? என்று நம்மை அதட்டிக் கேட்கின்றான். அவன் தவறு செய்தே பழக்கப்பட்டவன்.

வேடிக்கை பார்ப்பதற்கு “என்னடா…” என்று கேட்கின்றான். சும்மா…! என்று சொன்னால் “என்னடா சும்மா…?” என்று அடிக்க வருகின்றார். அடித்தவுடன் என்ன செய்கின்றோம்…? நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை… பேசாமல் இருக்கின்றோம்.

இது போன்றுதான்…
1.நமக்குள் எத்தனையோ நல்ல குணங்கள் இருப்பினும்
2.நாம் பார்த்து நுகர்ந்த தீய உணர்வுகள்… எந்த நல்ல குணத்தோடு நாம் பார்த்தோமோ
3.அந்த உணர்வுகள் நம் நல்ல குணத்தை (போக்கிரியைப் போன்று) அடக்கி விடுகின்றது

அதாவது தீமை செய்யும் உணர்வுகளை நாம் சுவாசித்தால்… சுவாசித்த உணர்வுகள் நம் நல்ல குணங்களை அடக்கி விடுகின்றது. கணங்களுக்கு அதிபதி கணபதி என்று அது அதிபதியாக இருந்து நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

போக்கிரியின் உணர்வுகள் நமக்குள் கூடி… பயம் அதிகரித்து விட்டால் வீட்டில் நமக்கு அமைதியே இருக்காது. சிந்தனை இழந்து… சிந்தனையற்றவர்களாகி விடுகின்றோம்.
1.அடுத்து யார் எதைச் சொன்னாலும் நம்முடைய சொல்லும் கடுமையாகி விடுகின்றது
2.குடும்பத்திற்குள் ஒற்றுமை இழக்கப்படுகின்றது… குடும்பத்திற்குள் மட்டுமல்ல.
3.உயிரிலே குருக்ஷேத்திரப் போராக நடக்கப்பட்டு உடலுக்குள் பார்த்தால் மகாபாரதப் போரே நடக்கின்றது.

நாம் எத்தனையோ நல்லதை எடுத்திருக்கின்றோம். நமக்குள் நல்ல அணுக்கள் உண்டு.. பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய உணர்வுகள் நமக்குள் இருப்பினும்… இத்தகைய தீமையின் உணர்வு நமக்குள் சென்றால் குருக்ஷேத்திரப்போர் இங்கே போகாது தடுக்கின்றது… உடலை இயக்குகிறது

இருந்தாலும் இந்த உணர்வுகள் உடலுக்குள் போய்விட்டால் அந்த உணர்வுகள் உமிழ்நீருடன் சேர்த்து நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறுகின்றது. இரத்தமாக மாறிவிட்டால் பயமான எண்ணங்களே வருகின்றது.

இப்படி…
1.நமது வாழ்க்கையில் நல்லது என்று நினைத்து வந்தாலும் நல்லது செய்ய முற்பட்டாலும்
2.கேட்ட உணர்வுகள் நமக்குள் நம்மை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

இதைத் தான் சீதாவை இராவணன் சிறை பிடித்தான் என்று நம் காவியங்கள் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் உணர்ந்தோமா…?

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலுக்குள் துரிதமாகச் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

 

எத்தனையோ பேருக்கு நாம் பல நன்மைகளைச் செய்திருந்தாலும் அதிலே தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி அவ்வப்பொழுது சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

உதாரணமாக… ஊசி மூலம் நம் உடல் இரத்தத்திலே மருந்தை கலக்கச் செய்ய்யும் போது அந்த மருந்து செல்லும் இடங்களில் எல்லாம் தீமைகளை (நோய்களை) நீக்குகிறது.

இந்த மருந்தைக் கண்டவுடன் அந்த அணுக்கள் ஏற்க மறுக்கிறது. மருந்து அணுக்களுக்குள் சேரச் சேர அது பலவீனம் அடைகின்றது.

இதைப் போன்று தான்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நீங்கள் எடுத்துப் புருவ மத்தியில் எண்ணி உங்கள் இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்
2.உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவைச் செலுத்தி விட்டால் இது துரிதமாக அந்த அணுக்களிலே போய்ச் சேருகின்றது.
4.மேலே சொந்னது போன்று அறியாது உட்புகும் தீமைகளைப் பலவீனப்படுத்துகிறது.

உதாரணமாக… நண்பர்களுக்குள் பழகப்படும் பொழுது “நன்மை செய்தான்…” என்று எண்ணும் பொழுது அமெரிக்காவில் இருந்தாலும் விக்கல் ஆகிறது.. நன்மை செய்யும் சக்தியாக இயக்குகிறது.

ஆனால் பகைமை என்று ஆகி “துரோகம் செய்தான் பாவி…” என்று வேதனையுடன் எண்ணினால் நண்பன் உணவு உட்கொண்டிருந்தாலும் அங்கே புரை ஓடுகின்றது.

யார் இப்படி எண்ணுகிறாரோ அவருக்கும் இருள் சூழச் செய்து சிந்தனை இழந்து அடுத்து விபத்தாகின்றது. அதே சமயத்தில் யாரை எண்ணினாரோ அங்கேயும் விபத்தாகிறது. ஆக… நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின் உணர்வின் வழி தான் இயக்கச் சக்தியாக மாறி இயக்குகிறது.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்கள் இருண்டு விடுகின்றது.
1.அந்த நேரத்தில் நேரடியாகப் பார்த்தாலும் மேடு பள்ளம் இருப்பதை நம்மால் பார்க்க முடியாது போகின்றது.
2.கரு விழிகளில் அடுத்தடுத்து இந்த வேதனைகள் படப்படும் போது விஷத்தன்மை என்ற மாசுகள் பெருகத் தொடங்கி விடுகின்றது.
3.இப்படிப் பெருகத் தொடங்கினால் கண் கருவிழிக்குள் இருக்கும் கண்மணியும் பலவீனம் அடைகின்றது
4.அது பலவீனம் அடைந்தால் விஷத்தின் தன்மையை அதிகமாகக் கவர்ந்து
5.கண் நரம்பு மண்டலம் முழுவதும் விஷத்தன்மைகள் பரவி விடுகின்றது.
6.விஷத்தன்மை பரவினால் உடல் முழுவதற்கும் அது எளிதில் பரவும் தன்மை வருகிறது.

இது போன்று “ஒன்றுடன் ஒன்று தொடர் கொண்டு” அதன் தொடர் வரிசையில் இயற்கையின் நியதிகள் நம்மை மாற்றிக் கொண்டிருக்கின்றது..

ஆனால் இதையெல்லாம் மனிதன் ஒருவன் தான் மாற்றி அமைக்க முடியும்.

மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று இங்கே கூர்ந்து கவனிக்க வைத்து
2.ஊழ்வினை என்ற வித்தாக உங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் பதிவாக்கச் செய்கிறோம் (ஞானகுரு).

பதிவானதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து தீமை என்று வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெருக்கப் பெருக்க இந்த உடலுக்கு பின் பிறவி இல்லாத நிலை அடையும் தகுதி பெறுகின்றீர்கள்.

முந்தைய நிலைகள் இதை எல்லாம் செய்யத் தவறி இருந்தாலும் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை நினைவுக்குக் கொண்டு வந்து உயிருடன் ஒன்றி… துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் வழி கவர வேண்டும்.

நமக்கு முன் இருக்கும் ஆன்மாவிலே பலவிதமான உணர்வுகள் உண்டு. அதிலே தீமைகள் நமக்குள் புகாது தடுக்கும் நிலையாக
1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இரத்தத்திலே கலக்கச் செய்து
2.இரத்தத்தின் வழி உடலில் உள்ள அணுக்களில் அதைப் பரவச் செய்யப்படும் பொழுது
3.துரிதமாக நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தச் சக்தி கிடைக்கின்றது.

நம்மை அறியாது கோபப்படும் அல்லது வேதனைப்படும் செயல்களையும்… ஏன்… எதற்கு…? என்று அறியாதபடி செயல்படுத்தும் சில தவறுகளிலிருந்து மீட்பதற்குத் தான் இதை எல்லாம் மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை அடிக்கடி இரத்தங்களில் கலக்கச் செய்யப்படும் போது தீமைகளை அது ஏற்றுக் கொள்ளாது தடுக்கப்படுகின்றது.

1.நம்முடைய சிறுநீரகங்களும் (KIDNEY) துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெற்று
2.இரத்தங்களில் கலந்து வரக்கூடிய மாசுகளைத் தூய்மைப்படுத்தும் சக்தி பெறுகின்றது.
3.அப்போது நல்ல இரத்தம் இருதயத்திற்கும் செல்கின்றது… சிந்திக்கும் ஆற்றலும் வலுப்பெறுகின்றது.

வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறக்கூடிய உறுதி உங்களுக்குக் கிடைக்கின்றது.