நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

 

வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் வெளியிலே வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் வெறுப்புடன் இருக்கின்றார்கள். அப்போது பெண்கள் ஏதாவது கேட்டால் உடனே வெறுப்பாகப் பதில் சொல்வார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது…! கொஞ்சம் அன்பாகச் சாந்தமாகச் சொல்லலாம் அல்லவா… என்பார்கள் பெண்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்… நீ தான் எனக்குக் கோபத்தை உண்டாக்குகின்றாய்…! என்று மீண்டும் சண்டையைத்தான் ஆண்கள் போடுவார்கள்.

சண்டை போட்டவுடன்… சரி… கோபமாக இருக்கிறார்…! கொஞ்சம் பார்த்துச் செய்யலாம் என்று பெண்கள் வேலையைச் செய்தால் அடுத்து என்ன நடக்கும்…?

கணவர்… அவர் எண்ணிய வேகத்தில் அங்கே வேலை நடக்கவில்லை என்றால் “நான் சொல்வதை விட்டு விட்டு ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று பழையபடி சண்டை வரும்.

இதெல்லாம் உணர்வின் இயக்கங்கள்…! நம்மை அறியாமலே இயக்குவது.

இப்படிக் கணவர் கோபமாகப் பேசிய உணர்வுகள் என்ன செய்யும்…? அடுத்து அவர் சம்பாதிக்கப் போகும் இடங்களிலும் இதே உணர்வுகள் அங்கே தடையாக வந்து சேரும். அப்போது சம்பாதிக்கக்கூடிய நிலையைச் சரியாக வைத்துக் கொள்கிறோமா…?

காரணம்… இதெல்லாம் சந்தர்ப்பம் தான். மோதலினால் உராய்வாகி இப்படி வரப்படும்போது “இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை மாற்றி அமைக்கின்றது…?” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி ஆனபின்…
1.எனக்கு எல்லாமே மீண்டும் மீண்டும் கஷ்டமாக வருகிறது
2.என் மனதில் நிம்மதியே இல்லை என்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விடுவார்கள்.
3.சிந்தித்துச் செயல்படவில்லை என்கிற போது வேலையிலும் எதிர்ப்பு… வீட்டிற்கு வந்தாலும் எதிர்ப்பு…!

இது எல்லாம் எதனால் வருகின்றது…?

கோபத்தையும் வெறுப்பையும் விளைய வைக்கின்றேன்
1.வீட்டிற்குள் வந்து பொறுமை இல்லாதபடி சொன்ன பின்… அங்கேயும் வருகின்றது
2.அதே சமயத்தில் பொறுப்பு இழந்து தொழிலே சொல்லப்படும் போது அங்கே நாம் பார்க்கும் வேலையை மட்டமாக்குகின்றது
3.மேலதிகாரியோ அல்லது நம்மிடம் வேலை பார்ப்பவர்களோ நம்மிடம் எதிர்மறையாகச் செயல்படும் நிலை வந்து விடுகின்றது

இது எல்லாம் எங்கிருந்து எப்படி.. வருகிறது…?

குடும்பப் பற்றில் ஒருவர் இப்படி ஆகிவிட்டால் இந்த உணர்வுகள் குடும்பம் முழுவதும் பரவுகிறது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அப்பொழுது அந்த இடத்திலே சுதாரித்து… நமக்குக் கோபம் வருகின்றது… அது எதனால் வருகின்றது…? என்று அறிதல் வேண்டும். தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

1.நம்முடைய உணர்ச்சிகள் ஏன் மாறுகின்றது…? என்று அதை மடக்கித் திருப்பி
2.அடுத்த கணமே அதை மாற்றி அமைக்க… ஆத்ம சுத்தியும் செய்யச் சொல்லும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம்

ஆனால் அந்தப் பழக்கம் இல்லை என்றால் மீண்டும் சண்டைக்குத் தான் செல்வோம். அதற்குப் பின் வீட்டில் சண்டை வருகின்றது… எங்கே போனாலும் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது… நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்…! என்று அப்படித்தான் போகும்

அதே சமயத்தில் முழுமையாகத் தெரியாதபடி “இந்தத் தியானத்தைத் தான் கடைபிடிக்கிறேன்” என்று ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் எனக்குத் தொல்லையே வருகிறது… தொல்லை விடமாட்டேன் என்கிறது…! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

காரணம்… இது எல்லாம் தாய் கருவிலே பூர்வ புண்ணியத்தால் வருவது. அப்படிப் பூர்வ புண்ணியத்தில் வந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த உணர்வைக் கூட்டி நாம் அதையும் மாற்ற முடியும்

நம்மை அறியாமல் இயக்கக்கூடிய அத்தகைய நிலைகளை அடக்குவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியே கொடுக்கப்படுகின்றது. செய்து பார்த்தேன் முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது.

அடுப்பில் சமையல் செய்கின்றோம் என்று அவசரத்துக்கு வேக வைத்தால் எப்படி ஆகும்…?

நெருப்பைக் கூட்டியவுடன் அடியில் உள்ளது கருகிவிடும். நடுப்பகுதியில் உள்ளது ஒரு மாதிரி இருக்கும் மேலிருப்பது வேகாமலே போய்விடும். இப்படி மூன்று நிலை ஆகிவிடும். நெருப்பை வைப்பதில் இத்தனை நிலைகளும் இருக்கிறது.

அதாவது கனமாக இருக்க கூடிய பொருள்கள் கீழே சென்று விடுகின்றது.. கருகிவிடுகிறது. அதற்கு மேல் இருப்பது குழைந்து விடுகின்றது அதற்கு மேல் அப்படியே அரிசியாக இருக்கின்றது. சூட்டினுடைய இயக்கங்கள் இப்படி மூன்று விதமாக வருகின்றது. சமையலில் பக்குவம் இல்லை என்கிற பொழுது சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள்… அடுப்பிலே சூட்டை அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது (வேகமாக) கொதித்து வரும் பொழுது கோபத்துடனே மூடியை வெடுக் என்று எடுப்பார்கள்.
1.துணியை வைத்து எடுப்பதற்கு மாறாக அப்படியே கையில் எடுப்பார்கள்
2.சூடு கையில் தாக்கியவுடன் சனியன்…! எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன்
3.கடைசியில் என் கையில் சுட்டு விட்டது…! என்று யாரால் இவர்கள் கோபமானார்களோ அவர்களைத்தான் குற்றமாகச் சொல்வார்கள்.

காரணம்… இது எதைச் செய்கிறது என்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான். இயக்கச் சக்தியாக மாறி நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா

இந்த மாதிரி உணர்வுகள் வந்தாலும் நம்மை அது ஆட்சி புரியக்கூடாது. ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.எதனால் அந்தக் கோபம் வந்ததோ அந்த நிலையை மாற்ற
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும் என்று
5.இதை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் சொல் அடங்கி அடுத்து மற்றவர்களுக்கு நாம் தெளிவான ஆலோசனைகளைச் சொல்லக்கூடிய… பக்குவமான நிலையாக அது வெளிப்படும்.

ஆண்கள் கோபமாகப் பேசினாலும் பெண்கள் இந்த முறைப்படி செய்து தன்னையும் சாந்தப்படுத்தி… கணவரையும் சாந்தப்படுத்த முடியும்

இல்லையென்றால் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது அவர்கள் உணர்வு இங்கே இயக்கி “என் கணவர் என்னைப் பார்த்துக் கோபமாகவே பேசுகின்றார்… என்னை பார்த்தாலே அவருக்கு ஆக மாட்டேன் என்கிறது…! என்று இப்படி வந்துவிடும்

அதற்குப்பின் கணவரிடம் என்னதான் திருப்பிச் சொன்னாலும் அந்தச் சொல் அங்கு எடுபடாது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று இந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்
1.என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
2.இதை நாம் ஒரு கவசமாக ஆக்கி… நம் ஆன்மாவிலே அதை அதிகமாக்கி… முன் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும்.

மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)

மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)

 

கேள்வி:-
சாப அலைகள் பாவ அலைகளின் இயக்கம் என்பது முற்பிறவியில் நாம் செய்ததா…? எத்தனையோ கோடிப் பிறவிகளில் நாம் எடுத்தது நம் ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் இயக்கமாக எதிர்பாராது விபத்துகள் ஏற்படுகின்றதா…? அல்லது விபத்து நடக்கும் இடத்தில் அங்கே பதிவான உணர்வின் செயலா…? ஒரே இடத்தில் எனக்கு ஏன் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது…? அந்த இடத்திலே சாப அலைகள் இருக்கிறதா…? விபத்து ஏற்பட்ட அதே பாதை வழியாக மீண்டும் செல்லலாமா…? அல்லது வேறு பாதையில் மாற்றிச் செல்ல வேண்டுமா…?

குரு இதற்குண்டான விளக்கத்தைக் கொடுத்து உணர்த்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பதில்:-
அதாவது “இன்ன இடத்தில் விபத்து ஏற்படும்” என்று மற்றவர்கள் சொன்ன உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது.
1.”அந்தக் குறிப்பிட்ட இடம்” வந்தவுடன் அது உங்களுக்குள் நினைவுக்கு வருகின்றது
2.அது தான் அந்த இடத்தில் இயங்கியது (விபத்தாகிறது)
3.அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கின்றது… அதை இழுத்துக் கொண்டு வருகின்றது.

மற்றவர்கள் “இங்கே விபத்தாகும்…” என்று சொன்னாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை மறைத்து விட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.

ஏனென்றால்… பிறர் சொல்லும் உணர்வுகள் ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த இடத்திற்கு வந்தவுடன் “டக்…” என்று நினைவுக்கு வரும் அந்த சமயத்தில்
1.நீங்கள் வாகனத்தில் சென்றால்….பிரேக் இடாதபடி உங்களை அந்த வண்டிப் பக்கமே அழைத்துச் செல்லும்.
2.மற்றவர்கள் வந்து உங்களை இடிப்பது அல்ல
3.இதிலே தான் இந்த விஷயம் இருக்கின்றது… அதாவது நீங்கள் தான் அதிலே போய் விழுகின்றீர்கள்
4.காரணம் சந்தர்ப்பங்கள் நம்முடைய நினைவாற்றல்கள் அந்த மாதிரி இயக்குகின்றது
(5.ஒரு மனிதனுடைய உணர்வுகள்… சந்தர்ப்பம் இப்படியெல்லாம் இயக்கிவிடும்)

உதாரணமாக வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருக்கின்றது என்று சொல்வார்கள். சொன்னதற்குப் பிற்பாடு என்னதான் வீட்டின் சுவரை இடித்து அதை நீங்கள் மாற்றி வைத்தாலும் “அவன் சொன்ன இடி தான் இங்கே வரும்… குடும்பத்தில் குறைகளும் சங்கடங்களும் தான் வரும்…!”

இது எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வுகள் அதே இடம் வந்தவுடன் மீண்டும் அந்த ஞாபகத்திற்கு வரும்.

ஒரு பனை மரத்தில் அருகிலே நாங்கள் சென்றோம்… அதைப் பார்த்தோம்… அதில் ஒரு பூதம் பார்த்தேன்…! என்று வெறுமனே சொன்னால் கூட போதும்

எங்கெங்கே…? என்று கேட்பார்கள்.

அங்கே… அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறது அல்லவா என்று சொன்னால் போதும்…! ஆ… அப்படியா… என்பார்கள்…!
1.அங்கே பேயும் இல்லை பூதமும் இல்லை…!
2.ஆனால் அந்தப் பக்கம் நாம் செல்லும் பொழுது அன்றைக்கு அவர் சொன்னாரே…! பூதம் இருக்கிறது என்று.
3.இந்த ஒற்றைப் பனை மரத்தில் தானே… என்று எண்ணினால் போதும்.
4.உடனே அந்த இடத்திலே பேயாக அது காட்சி கொடுக்கும்.

இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

ஏனென்றால் அத்தகைய மனிதனுடைய உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் போது “நம்முடைய எண்ணம்… அது இழுத்துக் குவித்துக் கொடுக்கும்…”

ரேடியோ டிவி அலைகள் இயங்குவது போன்று தான் மனிதனுடைய எண்ண உணர்வின் இயக்கங்களும்.

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வலுவாக்கி
1.நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று
2.நாம் கட்டாயப்படுத்தி இந்த எண்ணத்தை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோதிடம் ஜாதகம் பார்த்தாலும் அதிலே கஷ்ட நஷ்டங்களைத் தான் முதலிலே சொல்கிறார்கள். நல்லதை ஏதாவது முதலில் சொல்கிறார்களா…?
1.அந்த கஷ்டத்தைத் தான் நாம் பதிவு செய்கின்றோம்… ஏற்றுக் கொள்கிறோம்.
2.அப்புறம் அதிலே மீளக்கூடிய உணர்வு எங்கிருந்து வரும்…?

காசுக்காக வேண்டி சாங்கியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்வான். காசைச் செலவழித்துத்தான் போக்க வேண்டும் என்று சொல்வான்.

இது எல்லாமே மனிதனின் பதிவின் இயக்கம் தான். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து… குருநாதர் காட்டிய வழியில் அதை மாற்றி அமைக்கக்கூடிய வழி முறையைத் தான் மீண்டும் மீண்டும் உணர்வுபூர்வமாகச் சொல்லி “உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவாக்குகின்றோம்…”

1.தீமையை நீக்கும் அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தால்
2.வாழ்க்கையில் அறியாமல் வரும் எத்தனையோ கொடுமைகளிலிருந்து
2.எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்ப முடியும்..!

கண்ணுக்குத் தெரியாமல் இயக்கும் எண்ணங்களும்… உணர்வின் இயக்கங்களும்

கண்ணுக்குத் தெரியாமல் இயக்கும் எண்ணங்களும்… உணர்வின் இயக்கங்களும்

 

ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
1.நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது… உயிரிலே படுகின்றது… தவறு செய்கின்றான் என்று சொல்கின்றது.
2.கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது (படமாக)
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த மனித உடலில் இருந்து வருவதை இழுத்து ஆன்மாவாக்குகிறது (நம்மிடம் கொண்டு வருகிறது)
4.உயிரான காந்தம் இழுக்கின்றது.

உதாரணமாக நாடாவிலே (கேசட்) ஒலிகளைப் பதிவு செய்கின்றோம். நாடாவை இயக்கி “ஊசி” பக்கம் போனவுடனே நாடாவில் எது பதிவானதோ அதை இழுத்துப் பேசுகிறது (ஒலி எழுப்புகின்றது).

ஆரம்பத்தில் எல்லாம் இப்படி ஊசியை வைத்து உராய்ந்து தான் பதிவானதை மீண்டும் ஒலியாகக் கொண்டு வந்தார்கள்
1.இப்பொழுது லேசரை வைத்து அது (DRIVE) ஓட ஓட அதில் இருக்கக்கூடிய உணர்வுகளை அதை இழுத்து வெளிப்படுத்துகின்றது.
2.ஆனால் உராய்வதில்லை… நாடா தேய்வதில்லை.

லேசரை வைத்துத் தான் இப்பொழுது இயக்குகின்றார்கள் அந்த ஒலிகள் எதிலே இருக்கிறதோ அதை எடுத்துக் கொடுக்கின்றது

அதே மாதிரித் தான்
1.நாம் சுவாசிப்பதை எல்லாம் நமது உயிர் லேசராக இருந்து அதிலே பாய்ச்சிய உடனே இந்த உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதற்கும் சர்குலேஷன் ஆகின்றது
3.அதனதன் குணத்திற்குப் போன உடனே அவை அவை வீரியமடைகின்றது
4.சுவாசித்ததை (அந்த உணவுகளை) எடுத்து அது நன்றாகச் சாப்பிடுகின்றது.
5.அந்த வழியிலே அது (அந்தந்த அணுக்கள்) தெம்பாக இருக்கின்றது

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

தவறு செய்கின்றான் என்று பார்த்த பின் அடுத்து நல்லவை எதை எடுத்தாலும் நம் உடலில் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இது மடங்கப்படும் பொழுது இங்கிருந்து இழுக்கும் சக்தி குறைகின்றது

தவறு செய்தவனின் உணர்வுகளை நுகர்ந்து இது அடைப்பட்ட உடனே
1.நல்லதை இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகிறது.
2.பின் அதற்கு எப்படிச் சாப்பாடு கொடுப்பது…?

அதனால் தான்
1.அதைப் பிளந்து நீங்கள் கொடுக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்
2.யாம் (ஞானகுரு) வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சதா அந்த அலைகள் உங்களுக்குள் பாய்கின்றது.

கொஞ்சம் உங்கள் நினைவை “மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று விண்ணிலே செலுத்தினீர்கள்…” என்றால்
1.”டக்… என்று இதைப் பிளந்து… அந்த ஞானிகள் உணர்வுகளை அது ஓபன் பண்ணிவிடும்.
2.இது சர்குலேஷன் வரும்பொழுது அந்தத் தீமையான இயக்கங்கள் குறையத் தொடங்கும்
3.உங்களுக்குள் நல்ல நினைவாற்றல் வரும்

நீங்கள் வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.

யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி காணாமல் போன பணத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்… எங்கே வைத்தீர்கள் என்ற சரியான நினைவு வரும்.
1.அந்த இடத்திற்கே உங்களை அழைத்துச் செல்லும்… இங்கே இருக்கின்றது பார் என்று
2.முதலில் தெரியவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் ஆட்டோமேட்டிக்காக அங்கு இழுத்துச் செல்லும்

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒரு நண்பரை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் போதும் இந்த நண்பரை இழுத்துக் கொண்டு வரும்.

ஏனென்றால் அவர் செல்லும் பாதையில் இருந்து இந்த உணர்வுகள் அவரை இயக்கி நாம் செல்லும் பாதைக்கு இழுத்துக் கொண்டு வரும்.

இயற்கையிலேயே நண்பர் மீது பற்று அதிகமாக இருந்தால் அடுத்த தெரு பக்கம் அவர் சென்று கொண்டிருந்தாலும் “நண்பரைப் பார்க்க வேண்டும்” என்று திடீரென்று எண்ணம் வந்தது என்றால் அவர் சென்று கொண்டிருக்கும் பாதையில் குறுக்காட்டி நாம் இருக்கும் பக்கம் இழுத்து வரும்

அட.. இப்பொழுதுதான் நான் உன்னை நினைத்தேன்.. நீ வந்து விட்டாயே…! என்று சொல்வோம். நண்பர் மீது இருக்கும் பற்றின் உணர்வுகள் இப்படி இயக்கும்.

இயற்கையிலேயே இந்த நிலை வரும். இதையெல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சில இயக்கங்கள்.

நாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை நாம் பார்க்க முடியும். இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

தீமை செய்யக்கூடியவர்கள் யாராவது நமக்கு அவ்வாறு எண்ணினால் அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் அது வரும்
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும்… தீங்கு செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள் என்றால்
3.அவர் உடலைப் பாதிக்கும்.

பாதிக்கும் பொழுது தான் நினைப்பார்கள். இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம் என்று நிச்சயம் இதை உணர்த்தும்.

1.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் நினைவலைகள் இங்கிருந்து அங்கே செல்லும்
2.அப்போது நம் நினைவு அவர்களுக்கு வரும்
3.நாம் தொந்தரவு கொடுத்தோம் அல்லவா என்று. இந்தத் திருப்பம் நிச்சயம் அங்கே வரும்.
4.தீங்கு செய்யும் நிலைகளைத் தடைப்படுத்தும் சக்தியாக வரும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும் அருள் வழியில் சீராகச் செல்லக்கூடியதாக நாம் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

 

வாழ்க்கையில் எத்தனையோ அழுக்குகளை (தீமைகளையும் கஷ்டங்களையும்) பார்க்கின்றோம்… வருகிறது. “அது வந்து கொண்டே இருக்கும்…”

வீட்டையும் உடலையும் உடையையும் சமையல் செய்வதையும் மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. அது போல் அதை நாம் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத் தான் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க எடுக்க உங்கள் பற்று துருவ நட்சத்திரத்துடனே இணைகின்றது… சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது
3.பற்று துருவ நட்சத்திரத்தின் மீது வரப்படும் பொழுது பூமியில் பற்றற்றுப் போகின்றது.

இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலை வைத்து நாம் நிரந்தரமான சொந்தத்தை உருவாக்க வேண்டும். பிறவி இல்லா நிலை என்னும் அந்தச் சொந்தத்தை நாம் கொண்டாட வேண்டும்.

பகைமை அகற்றும் அருள் உணர்வுகளைச் சேர்த்து விட்டால் என்றென்றும் நமக்கு அது உறுதுணையாக இருக்கும்.

1.விண்ணிலிருந்து வரும் நஞ்சினை அகற்றி அதை ஒளியாக மாற்றிடும் திறன்
2.இந்த உடலை வைத்துத் தான் நாம் அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இன்றைய செயல் நாளைய சரீரம்… நேற்றைய செயல் இன்றைய சரீரம். ஒவ்வொன்றும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் தீமைகள் அகற்றிடும் உணர்வாக… நல்லதையே வளர்த்து நல்லதையே எண்ணிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இதை எதற்காகச் சொல்கிறொம் என்றால்
1,இந்தக் காற்று மண்டலம் ஒரு சாக்கடையாக இருக்கின்றது
2.இதற்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கின்றது
3.அதை வலு கொண்டு நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வரும் தீமையைப் பிளக்க வேண்டும்
4.தீமையான உடலைப் பிளக்கும் சக்தி பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரிந்து சென்றால் தீமையைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் அருள் சக்தி கொண்டு பிறவி இல்லா நிலை அடைய உதவும். ஒவ்வொருவரும் இதைப் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியை விரயமாக்காதபடி செயல்படுத்த வேண்டும் டிவி ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள்.

அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைத்தால் அது வேலை செய்கிறது. இது போன்று நாம் தொழில் வியாபாரத்தில் எத்தனையோ பதிவுகளை நமக்குள் வளர்த்து வைத்திருக்கின்றோம்

அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் கொடுக்கல் வாங்கலில்…
1.சரியானபடி நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்தவருடைய நினைவு தான் அதிகம் வரும்
3.பாவிப் பயல் இந்த மாதிரிச் செய்தான்… என்னை ஏமாற்றுகின்றான்… என்ற “அந்த ஸ்டேஷனைத்தான் நாம் அடிக்கடி திருப்பி வைப்போம்…”

இதற்கு தகுந்தாற் போல் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதாவது செய்தால் அவர்கள் மீது நினைவு வரும். சொந்த பந்தங்கள் மீது ஏதாவது குறைபாடுகள் இருந்தால்… அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட குறைபாடுகளைத் தான் எண்ணிக் கொண்டிருப்போம்.

இதுவே வரிசையில் வந்து கொண்டிருக்கும்.

உதாரணமாக ஏதாவது குறைகளைப் பற்றி மட்டும் சிறிது பேசிப் பாருங்கள்…
1.அந்தக் குறை… இந்தக் குறை… என்று எல்லாக் குறையும் வரிசையில் வரும்… நல்லது நினைக்கவே வராது
2.குறையைப் பேசிப் பேசி… “என்ன உலகம் போ…!” என்று கடைசியில் இப்படித்தான் பேசுவோம்
3.இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இப்படித்தான் வரும்.

நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது பாருங்கள். ஒருவரை மோசமானவன்… மிகவும் மோசமானவன்…! என்று சொல்லிப் பாருங்கள். யாரிடம் சொன்னோமோ நம் சொன்னதைக் கேட்ட பின் அடுத்து அவரும் இதே போன்று மோசம் என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லாவற்றையுமே மோசம்…” என்று சொல்ல ஆரம்பிப்போம். இது வரிசையில் வரும்… இந்த உணர்வுகளின் தொடர்வரிசை இப்படித்தான் வரும்.

இப்படி வரும் போது
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் உயிரிடம் வேண்டி அவனிடம் சொல்லி அந்தத் தீமைகளை நீக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது… உருவாக்கிக் கொண்டிருப்பது அவன் தான். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

 

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்த0 படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரியவரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” – பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

 

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்

எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தி பெற வேண்டும்

 

சாதாரண நிலையில் இன்று உடலை விட்டுப் பிரிந்தவர்கள் அடுத்தவர்கள் உடலில் பேயாக ஆடுவதைப் பார்க்கலாம்… அருளாடுவதையும் பார்க்கலாம்… துன்பத்தை விளைவிப்பதையும் காணலாம்.

இந்த உடலில் எதை விளைய வைத்தோமோ இறந்தபின் இன்னொரு உடலுக்குள் சென்று அதைத் தான் அங்கே விளைவிக்கச் செய்ய முடியுமே தவிர குழந்தையாகப் பிறக்க முடியாது.
1.இன்றைய சூழ்நிலையில் இறந்தவர்கள் மீண்டும் மனிதனாகப் பிறப்பதற்குண்டான வழி இல்லை.
2.காரணம் காற்று மண்டலமே நஞ்சாக மாறி விட்டது.

மீண்டும் மனிதனாக வரவேண்டும் என்றால் ஆடாகவோ மாடாகவோ சென்று… இன்னொரு மனிதனின் உடலுக்குள் சென்று வந்தால் தான் முடியும்.

ஆடு மாடு நாய் என்று எத்தனையோ செல்லப் பிராணிகளை வளர்க்கின்றோம். “என் கண்ணுக்குட்டி” என்று அன்புடன் பழகுகின்றோம்.

ஆனால் அது திடீரென்று இறந்து விட்டால் “ஐய்யய்யோ… நான் ஆசையாக வளர்த்த கன்று இறந்துவிட்டதே…!” என்ற இந்த ஏக்கம் நமக்குள் வரும் பொழுது அதனுடைய உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடும். வந்த பின் நாம் உடலில் மனித உணர்வை ஈர்த்து வளர்த்து… கருவாகி குழந்தையாக உருவாகி அப்படித்தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

நாயை அன்புடன் வளர்க்கின்றோம்… நான் சொன்னதை எல்லாம் கேட்கின்றது… செல்லமாக நான் வளர்க்கிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் இறந்தபின் செல்லமாக வளர்த்த நாய் இறந்து விட்டதே…! என்று ஏங்கினால் அந்த ஆன்மா நம் உடலின் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நாம் சோறு போட்டு வளர்த்த நாயெல்லாம் அதே ஏக்கமாக இருக்கும்.

யார் உணவை அன்புடன் கொடுத்தார்களோ அதே ஏக்கத்திலே தான் இருக்கும் போட்டவர்கள் இல்லை என்றால் அது இறந்துவிடும்.
1.வேறு எங்கேயாவது சென்று உடலை விட்டுப் பிரிந்தாலும்
2.யார் சோறு போட்டார்களோ அந்த உடலுக்குள் வந்து மீண்டும் மனிதனாகப் பிறக்கும்.

ஆனால் நாம் மனிதர்கள் என்ன் செய்கிறோம்…? எத்தனையோ சந்தர்ப்பங்கள் எத்தனையோ காலகட்டங்களில் நம்மை அறியாது உடலை விட்டு உயிர் பிரிகின்றது.

பிரிந்தாலும் பாசத்துடன் வாழ்ந்த நிலையில் நம்முடைய நினைவுகள் கடைசியில் எங்கே செல்கின்றது…?

எட்டுப் பிள்ளைகள் இருக்கின்றது… ஏழு பேர் அதிலே பிழைத்துக் கொள்வார்கள் ஒரு பையன் சிரமப்படுகின்றான்… கஷ்டப்படுகின்றான்… அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று வேதனையை எடுத்து அந்தப் பையன் மீது நினைவு அதிகமாக இருந்தால் இறந்தபின் அவன் உடலுக்குள் தான் செல்லும்.

அங்கே சென்று இன்னும் கொஞ்சம் வேதனையை வளர்த்து அவனையும் மண்ணுடன் மண்ணாக்கி அவனை வீழ்த்தத்தான் இந்த ஆன்மா உதவும்.

இன்னும் கொஞ்சம் அதிகமான விஷத்தன்மையைத் தானும் பெற்று தன் குழந்தையும் பெறச் செய்ய முடியும்.
1.அங்கே சென்று வேதனையை விளைவிக்கத்தான் முடியும்…
2.அவனைக் காக்கவே முடியாது… மனித உடலுக்குள் விளைய வைத்த இந்த உணர்வுகள் இப்படித்தான் இயக்கும்.

இதை எல்லாம் நாம் வடிகட்ட வேண்டும்…!

ஒவ்வொரு குணத்திற்குள்ளும் வேதனையான உணர்வுகள் அடைபட்டுக் கிடைக்கின்றது. அந்த வேதனையை நீக்கும் உணர்வின் சக்தியாக ஞானிகளின் அருள் சக்திகள் உங்களுக்குள் இப்பொழுது நிரப்பப்பட்டுக் கொண்டுள்ளது.

நான் கொடுக்கக்கூடிய ஞான வித்தை வளர்க்கும் விதமாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடவாவது எடுத்துப் பழகுங்கள்.
1.எப்பொழுது சிரமங்கள் வருகின்றதா வேதனை வருகின்றதோ துன்பங்கள் வருகின்றதோ அந்த நேரத்தில் எல்லாம்
2.மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்த்துக் கொண்டே இருந்தால் வேதனைகளை ஒடுக்கக்கூடிய சக்தியாக “வாழ்க்கையே தியானமாகின்றது…”.

இப்படித்தான் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டு வர முடியும்…!

நீங்கள் நினைக்கும் போதெல்லாம் அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… மகிழ்ச்சி உங்களுக்குள் தோன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த உபதேசமே அமைகின்றது.

ஆகவே நீங்கள் அதே பிரகாரம் எண்ணினால் உங்களுக்குள் இது ஓங்கி வளர்ந்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் செயல் அனைத்தும் புனிதமும் பெறும் உங்கள் பார்வையும் நல்லதாகும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி நீங்கள் எண்ணி எடுத்தாலே போதுமானது.
2.உங்களுக்குள் அது தெளிவை ஊட்டிக் கொண்டே இருக்கும்.

குருநாதர் எனக்குள் இன்னல்களை ஏற்படுத்தி அதிலிருந்து மீண்டிட ஆற்றல்களைக் கொடுத்தார். ஆக…
1.ஆற்றல் மிக்க சக்தியாக இருந்தாலும் அதை ஆக்க ரீதியிலே எப்படி நீ பயன்படுத்த வேண்டும்
2.ஆற்றல் மிக்க சக்தியை நீ பெற்றாலும் அந்தச் சக்தியின் வழித் துணை கொண்டு
3.தனக்குள் ஆற்றல்மிக்க எண்ணத்தின் ஒளி கொண்டு வரும் பொழுது
4.”எண்ணத்தை மாற்றக்கூடிய சக்தியாக நீ எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று
5.காட்டிற்குள் அழைத்துச் சென்று தான் எனக்குக் காட்டினார்.

அதைப் போன்று தான் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தனையோ துன்பங்கள் துயரங்கள் எல்லாமே துஷ்ட மிருகங்கள் போன்று தான் உடலுக்குள் இயங்கிக் கொண்டுள்ளது. “அதை எல்லாம் மாற்றுவதற்குண்டான சக்தியாகத்தான்” இப்பொழுது ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

இந்த உடலை விட்டு நாம் சென்றால் நிலையான ஒளிச் சரீரமாக நாம் மாற வேண்டும்… அது தான் நிலையானது…!

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

 

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

 

ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்… நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்… சொன்னபடி கேட்கவில்லை.

அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ…? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ…? என்ன ஆவானோ…? என்ற நினைப்பாக இருக்கும்.

இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்…
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே…! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்… இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.

இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.

காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்… ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.

அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்… நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது…!

அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது

இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.

சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா…? கெட்ட நேரம் வருகின்றதா…? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.

அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது…!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.

உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து… இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.

அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் – விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.

அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்…! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி…! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்

மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

 

யாராவது அதிகமாகத் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களை என்ன… ஏது…? என்று பதிலுக்குக் கேட்டோம் என்றால் அந்த நிலைக்குத் தான் நாம் போகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அதற்கும் மீறி சிலர் விஷத்தன்மையாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள்
2.ஏனென்றால் அவர்கள் உடலில் ஆவிகள் இருக்கும்
3.காரணம்… ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதத்தில் ஆவிகள் புகுந்து தான் இருக்கின்றது.

மனிதப் பிறவிக்கு வருவது என்றாலே… மனிதனை ஒத்த நிலைகள் எந்த ஏக்கத்தில் ஏங்கி இருக்கின்றோமோ… அதற்குத் தகுந்த மாதிரி ஆத்மா உடலில் வந்துவிடும்.

வந்த பின் எனக்குள் என் குணத்தோடு ஒட்டியே இருக்கும். கெட்ட குணமாக இருந்தாலும் நல்ல குணமாக இருந்தாலும் அதைச் சேர்த்து ஓங்கி வளரும். இரண்டு நிலைகள் கொண்டு அதிலேயே நிரந்தரமாக நான் இருப்பேன்.

சந்தர்ப்பத்தில் நாம் தாழ்ந்து… விலகி அல்லது ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றாலும் அது விடாது.
1.கோபத்தை நாம் அதிகமாக எண்ணுகின்றோம் என்றால் கோபமான ஆன்மா எனக்குள் வந்த பின்
2.அந்த இடத்தில் சமாதானமாகப் போக வேண்டும் என்றால் இது விடாது.
3.ஏனென்றால் அந்த எரிச்சலின் தன்மை அது கூட்டி இன்னும் கொஞ்சம் வளர்க்கத் தான் அந்த ஆன்மா பார்க்கும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி செய்யும் போதெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடலிலிருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என் உடலில் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும்படி சொல்கிறோம்.

ஒரு ஐந்து நிமிடம் அவ்வாறு எண்ணினால் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் புனிதம் பெறுகின்றது.

தாய் தந்தையரின் ஆன்மாக்கள் நம் உடலில் இருந்தாலும் கூட சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைக்கின்றது தாய் தந்தையரின் ஆன்மாக்கள் அதுவும் புனிதம் பெறுகிறது.

நீ பேயாய்ப் போ என்று ரிஷி சாபமிடுவதாக்க் குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள். பேயாகப் போ என்று சாபமிட்டவுடன் “எனக்கு ஒரு விமோசனம் இல்லையா…?” என்று கேட்கின்றான்.
1.நீ நல்லவனைத் தீண்டுவாய் அவன் நிழல் படும்
2.அவன் நிழல் பட்டவுடன் நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்..!
3.ரிஷி சொன்னார் என்று இப்படியும் நமக்குக் காட்டி இருக்கின்றார்கள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று தியானம் செய்து கொண்டே இருந்தால் நம் உடலில் இருந்தே அவைகளும் புனிதம் பெறும்.

உதாரணமாக கிணற்றில் விழுந்து இறந்த ஆன்மாவாக இருந்தால் நம்மையும் கிணற்றுப் பக்கம் இழுத்துக் கொண்டு போகும். வீட்டை விட்டு ஓடிப் போன ஆன்மா வந்திருந்தால் நம்மையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விடும்.

சண்டை போடக்கூடிய ஆவியாக இருந்திருந்தால் நம்மைச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்படி செய்யும். அப்பொழுதுதான் அவைகளுக்கு ரசிப்பாக இருக்கும்.

வெறுப்பாவே பேசிப் பழகிய ஆன்மாவாக இருந்தால் யாரைப் பார்த்தாலும் எதை எடுத்தாலும் வெறுப்பாகவே பேசச் சொல்லும். இது போன்று எத்தனையோ ஆன்மாக்கள் இருக்கும்… `நமக்குத் தெரியாமலே…!
1.நாம் தான் அப்படிப் பேசுகிறோம் என்று நினைப்போம்…
2.ஆனால் நம்முடன் இணைந்து அந்த ஆன்மாக்கள் அது இயக்கப்படும் பொழுது நாம் பேசுவதாகவே நாம் எண்ணிக் கொள்வோம்.
3.இதை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி அவசியம் செய்தே ஆக வேண்டும்.

எங்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.அவர்களுக்கும் ஒரு பாவ விமர்சனம் கிடைத்து
2.நமக்கு ஒத்துழைக்கும் நிலையாக நல்லது செய்யக்கூடிய ஆன்மாக்களாக இயங்கும்
3.அதே சமயத்தில் நமக்குள் கெட்டது வராதபடி நாம் தடுக்கவும் முடிகின்றது.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் இவ்வாறு செய்து பழக வேண்டும்.

ஆனால் மந்திரவாதியிடமோ… மந்திரிப்போரிடமோ சென்று தாயத்தைக் கட்டினால் அவன் ஒரு போக்கிரி ஆவியை நமக்குள் திணித்து விடுவான். மூன்று மாதம் நன்றாக இருக்கும். நான்காவது மாதம் பார்த்தோம் என்றால் “இருடா நானும் பார்க்கிறேன்…!” என்று அதுவும் சேர்ந்து வலுவாக இயக்க ஆரம்பிக்கும்.

அதை மீண்டும் மாற்ற இப்படியே அவரிடம் செல்லச் செல்ல மூன்று ஆவி நாலு ஆவி ஐந்து ஆவி ஆறு ஆவி என்று வரிசையிலே ஒவ்வொரு குணத்திற்குத் தகுந்த மாதிரி அதைக் கட்டிக் கொண்டே வருவான்.

கடைசியிலே என்ன ஆகும்…?

தாயத்தைக் கட்டினாலும் கூட உடலிலே கை கால் குடைச்சல் நம்மை விடாது… மேல் வலியும் விடாது. ஏனென்றால்
1.இந்த உணர்வுகள் உள்ளே புகுந்த நிலையில்
2.ஒன்றுக்கொன்று ஏற்றுக் கொள்ளாதபடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
3.ஆனால் ஒன்றுக்கொன்று அடக்கும். மன நிலை வேண்டும் என்றால் ஒத்து இருக்கும்
4.உடலில் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

தாயத்தைக் கட்டிக் கொண்டு வருவோரெல்லாம் மீண்டும் மீண்டும் அதனுடைய வழிக்கே தான் இழுத்துச் செல்லும்.

ஆத்ம சுத்தி செய்து பழகினோம் என்றால் நம் ஆன்மாவும் புனிதம் ஆகின்றது நம் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்களும் புனிதம் பெறுகின்றது.

இதே போன்று கணவன் மனைவிக்குள்ளும் ஆன்மாக்கள் இருக்கும்.
1.அது இரண்டு பேரையும் சேர விடாது
2.பிரியமாக இருப்பார்கள் ஆனால் நெருங்க விடாதபடி இந்த உணர்ச்சியினுடைய நிலைகள் இயக்கி விலக்கி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.இதை நினைத்து இரண்டு பேருமே வேதனைப்படுவார்கள்.

இவ்வாறு இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் நாள் சக்தி என் கணவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி பெற வேண்டும் என்று இருவருமே இப்படித் தூண்டி எங்கே சென்றாலும் இருவருமே இப்படி இந்த உயர்ந்த உணர்வுகளை சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

மனைவி வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் கணவன் வெளியிலே வேலைக்குச் சென்று இருந்தாலும் அங்கிருந்து மனைவியை எண்ணி… என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படி இருவருமே செய்து கொண்டே வர வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் எல்லாம் அனைவரும் மகிழ்ந்திடும் சக்தியாக வர வேண்டும் எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி இருவருமே எண்ண வேண்டும்.

1.இது “சாதாரண சொல்…” என்று நினைக்க வேண்டாம்
2.இருவரையுமே ஒன்றி வாழச் செய்ய மகிழ்ந்து வாழச் செய்ய இது பேருதவியாக அமையும்.