வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான “முன் சிந்தனை (PLAN) வேண்டும்…”

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான “முன் சிந்தனை (PLAN) வேண்டும்…”

 

புதிதாக ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்றால் ஒரு இன்ஜினியரை வைத்து அதற்குத் தேவையான பிளானைப் போடுகின்றோம். தேவையான பொருள்களை வாங்கிக் கொத்தனாரையும் மற்ற ஆட்களையும் வைத்து அந்த வீட்டைக் கட்டுகிறோம்.

ஆக… வீட்டைக் கட்டுவதற்கு முன்னாடியே எப்படி…? என்ன…? ஏது…? என்று எல்லைகளை வகுத்து விட்டுத் தான் வேலைகளை நாம் செய்யத் தொடங்குகின்றோம்.

அதே போல் ஒரு பலகாரத்தை செய்ய வேண்டும் என்றால் முன்கூட்டியே அரிசியை ஊறவைக்கின்றோம். ஊறிய பின் அதை அரைத்து மற்ற பொருள்களை அதனுடன் சேர்த்து அதைப் புளிக்க வைக்கின்றோம்.

ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து மாவினை எடுத்து வடையாகச் சுடும் போது அதற்குத் தக்க ருசியும் சுவையும் பலகாரத்தில் வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளை எவ்வாறு நாம் தெளிந்து செயல்படுத்துகின்றோமோ அதைப் போல் நமது வாழ்க்கையிலும்… எதை… எக்காலத்தில்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற பக்குவ முறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாவை அரைத்து வைத்துவிட்டுப் பத்து நாளைக்குச் சேமித்து வைத்தால் அது அதிகமாகப் புளித்துப் போய் விடுகின்றது. ஆனால் பத்து நாள் சேமித்து வைக்க வேண்டும் என்றால் அதை ஒரு ஐஸ் பெட்டியில் பத்திரமாக வைத்தால் கெடாமல் இருக்கின்றது.

விஞ்ஞான அறிவில் வாழும் நாம் இப்படிப் பக்குவப்படுத்துவது போன்று
1.அந்த மெய் ஞானிகளுடைய உணர்வு கொண்டு நமக்குள் அருள் ஒளியைப் வளர்த்து
2.அதை வைத்துப் பக்குவப்படுத்தி… நம்மை நாம் பாதுகாத்தல் வேண்டும்.
3.சமயம் வரும் பொழுதெல்லாம் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

பொருள்கள் கெட்டுப் போகாது அதை பாதுகாக்க எப்படிச் செயல்படுத்துகின்றோமோ அதைப் போன்று நமக்குள் தீமையான உணர்வு வந்தால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் கொண்டு அந்தத் தீமை நமக்குள் வளராதபடி பாதுகாத்தல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் ஒளியை நுகர்ந்து நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பாதுகாத்து என்றும் வேகா நிலை பெறும் தன்மையை உறுதிப்படுத்தி இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து பழகுதல் வேண்டும்.

ஆகவே குரு காட்டிய அருள் வழியில்…
1.அருள் ஒளி பெறுவோம்
2.இருளை அகற்றுவோம்
3.ஒளியான உணர்வை வளர்ப்போம்
4.ஒளியின் சரீரமாக நிலைப்போம்
5.நிலையான ஒளி சரீரத்தைப் பெற இந்த வாழ்க்கையினை அருள் வாழ்க்கையாக மாற்றி அமைப்போம்.

நமக்கு லாபகரமானது எது…?

நமக்கு லாபகரமானது எது…?

 

வீட்டில் கஷ்டமோ சங்கடமோ மற்றதோ வந்தாலும்… “அட போ…!” என்று இந்த உணர்வைப் பெருக்கிப் பாருங்கள்
1.இந்த உணர்வுகள் வலுக்க… வலுக்க… வலுக்க…
2.செய்வினையோ தோஷங்களோ மற்ற எதுவாக இருந்தாலும் நமக்கு அது ஒரு லாபகரமானதாக மாறிவிடும்.

பொருளையோ இந்த உடலையோ சொத்தையோ எண்ணிவிட்டால் பற்று இங்கே வந்து விடுகின்றது… புவியின் ஈர்ப்புக்கே வருகின்றது.

இந்த மாதிரி ஆகிவிட்டதே…! நான் எப்படி வாழப் போகின்றேன்…? என்று எண்ண வேண்டியது இல்லை. இந்த உடல் எப்பொழுதுமே மடியக்கூடியது தான்…! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும்… இந்த உடலில் இருந்து தான் உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும். வாழ்க்கையில்
1.துன்பத்தைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வருகின்றதோ அப்போது தான்
2.”அதிலிருந்து விடுபட வேண்டும்…” என்று உணர்வு வருகின்றது.

வீட்டில் இருக்கக்கூடிய எலிக்கு… பூனையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. சந்தித்த பின் பூனை எலியைப் பிடித்து விட்டால் பூனையின் நினைவு தான் எலிக்கு வருகின்றது.

எலியோ பூனையின் உடலுக்கு அது இரையாகின்றது. இரையாகும் போது நரக வேதனைப்படுகிறது. ஆனால் எலியினுடைய அந்தச் சந்தர்ப்பம் தீமையில் இருந்து விடுபட வேண்டும்… வேதனையில் இருந்து விடுபட வேண்டும்… என்று எண்ணுகிறது.

பூனை எலியைப் பிடித்த பின் எலியின் உயிரான்மா அதனுடைய வலுவைப் பெற்று அதனின் சந்தர்ப்பம் எலி பூனையாகப் பிறக்கக்கூடிய நிலை வருகின்றது

அதே போல இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டம்… தொல்லை… என்று வரப்படும் பொழுது
2.அதை எல்லாம் “அருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் என்று நினைத்து விட்டால்”
3.வேதனை என்ற நிலையே வராது.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

எப்படித்தான் இருக்கட்டும்…! இந்த உடலோ சொத்தோ சுகமோ நம் கூட வருகின்றதா…? இல்லை.

இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிய அருள் உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது அதன் வழி உயிர் வெளியேறிய பின் இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகிறது.

“எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…” என்று அவருடைய நினைவை கூட்டிக் கொண்டே வந்தால் இந்த உணர்வுகள் வலுப்பெற்று இந்த உடலுக்குப் பின் யாரை நினைவுக்குக் கொண்டு வந்தோமோ… உயிரான்மா அங்கே தான் செல்லும்.

அவர்கள் உடலில் சேர்ந்த பின் மீண்டும் அங்கேயும் இதே தொல்லைகளைத்தான் கொடுக்கும்… பழி தீர்க்கும் நிலையாக வரும். விஷத்தின் தன்மை உருவான பிற்பாடு பிறவி இல்லா நிலை அடைவதற்கு மாறாக சாகாக் கலையாக மாறி… இந்த வேதனை உணர்வு எதுவோ அதன் உணர்வின் தன்மைக்கொப்ப இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை பெற்றால்
1.எத்தகைய விஷத் தன்மையும் அதனைக் கொல்வதில்லை
2.இதுதான் வேகாநிலை என்று சொல்வது.

அந்த நிலையை நாம் அடைதல் வேண்டும்.

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது…?

மகாபாரதப் போர் எங்கே நடந்து கொண்டிருக்கிறது…?

 

நம் உடலில் இருக்கும் 1008 குணங்கள் அது மனிதனாக நம்மை எப்படி உருவாக்கியது…? ஒவ்வொரு குணமும் அது எப்படி உருவானது…? என்றும் ஆலயங்களிலே காட்டப்பட்டுள்ளது.

பத்து உணர்வுகள் சேர்த்து ஒரு தெய்வ குணத்தைப் பெறுகின்றது. கோவில்களில் “10 நாள் விழா…” என்று கொண்டாடுவார்கள்… மாடு வாகனம் காளை வாகனம் சர்ப்ப வாகனம் அன்ன வாகனம் என்றெல்லாம் சொல்வார்கள்.

இந்த உடலிலே ஒன்றுக்குள் ஒன்று விழுங்கித் தான் ஒரு குணத்தின் தன்மை உருவானது… அந்தத் தெய்வ குணமாக ஆனது. மனிதனாகும் பொழுது தீமையிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வைத் தனக்குள் உருவாக்கும் சக்தி பெற்றது என்று தான் இங்கே வருகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் 100 பேர்கள் என்றும் பஞ்ச பாண்டவர் ஐந்து என்று வந்தாலும்…
1.அரச நிலைகள் கொண்டு கௌரவர்கள் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த வலிமை கொண்டு
2.நல்லதை எண்ணினால் அதை விடாதபடி செய்கிறார்கள்.

எல்லாம் கெட்டவர்களாக இருக்கின்றார்கள்.. ஆசைப்பட்டுத் தனக்குள் வளர்த்திருக்கின்றோம்.

நமது உயிர் திரௌபதையாக இருக்கின்றது. ஐந்து புலனறிவு கொண்டு நாம் நுகர்கின்றோம்.
1.தீமைகளை நீக்கிடும் உணர்வை எண்ணி எடுத்து அதை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.கௌரவர்கள் தனக்கு இடைஞ்சலாகிவிடும் என்று உள்ளே புகாதபடி தடுக்கும் போது இந்தப் போர் முறைகள் வருகிறது என்று
3.மகாபாரதத்தில் இப்படித் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்… நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா…?

மகாபாரதப் போர் என்றால் அதை எப்படி எப்படியோ காட்டி விட்டார்கள்…!

கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் அதாவது
1.ஐந்து புலனறிவு கொண்டு ஒரு உணர்வை நுகரப்படும் பொழுது அதற்கும்
2.இந்த உடலில் உள்ளுக்குள் (ஏற்கனவே) வளர்த்ததற்கும் இதற்கும் எதிர்மறையாகின்றது.

கோபமான குணங்களை எடுத்துக் கொண்ட பின் அடுத்து ஒரு சாந்தமான நிலைகளை நாம் எண்ணினால் அது விடுகின்றதா…? இல்லை. அந்த உணர்வை விடாதபடி எதிர்த்து நின்று போர் செய்து அதைத் தொலைத்து விடுகின்றது.

ஆகவே நாம் எதனின் உணர்வை எடுத்தோமோ இந்தக் கண்கள் அதற்கு உதவி செய்தாலும் அடுத்து இந்தக் கண்கள் அதை எப்படி மாற்றி அமைக்கின்றது…? என்ற நிலையைக் இங்கே காட்டுகின்றார்கள்.

மகாபாரதப் போரைப் பற்றி இன்று எழுதி வைத்திருக்கும் வித்தியாசங்களைப் பார்த்தோம் என்றால் அதிலே திசை திருப்பிய நிலைகளைப் பார்க்கலாம்.

அகஸ்தியன் கண்ட உணர்வைத் தான் வியாசகன் அறிந்து இத்தனை நிலைகளையும் அவன் வெளிப்படுத்தி உள்ளான்.

மனிதனின் வாழ்க்கையில் நீங்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனப் போர் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது.

ஆகவே… நமது குரு காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்கி நல் உணர்வுகளை உயர்வாக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
3.அதற்கேதான் இந்தத் தியானமே தவிர சொத்து வேண்டும்… சுகம் வேண்டும் என்பதற்காக அல்ல.

அருள் ஞானச் சொத்து என்ற அந்தப் பேரின்ப சொத்தைத்தான் நாம் தேட வேண்டும். அதைத் தேடிக் கொண்டால் அமைதியும் நிறைவும் மகிழ்ச்சியும் நம்மைத் தேடி வரும்.

தாக்கும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்க்க வேண்டும்

தாக்கும் உணர்வை விடுத்துவிட்டுக் காக்கும் உணர்வை வளர்க்க வேண்டும்

 

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான் அவனை நேரடியாகத் தாக்கவில்லை என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். காரணம் என்ன…?

அதாவது குகை மீது இருக்கும் பாறையைத் தன் காண்டீபத்தால் தாக்கி வாசலை மூடிவிடுகின்றான்.
1.குகையில் கல்லைப் போட்டு மூடியவுடனே அதற்குள் வாலி அடைபட்டுவிடுகின்றான்… அவன் வளர்ச்சி குன்றுகிறது.
2.அவனைக் கொல்லவில்லை… அவன் செயலாக்கத்தைக் குறைக்கின்றான் என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

உதாரணமாக… வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இங்கே வாலியாகின்றது. அதே சமயத்தில் நாம் நுகர்ந்த அந்த வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் முன்னாடி நிற்கின்றது.
1.ஆன்மாவில் இருப்பதைத் தான் நாம் சுவாசிக்க முடியும்.
2.சுவாசித்ததைத்தான் உயிர் இயக்கி அதனதன் உணர்ச்சிகளாக நமக்குள் தூண்டும்.
3.அதன் வழியிலே தான் நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே இருக்கும்.

அப்போது அந்த வேதனையான உணர்வலைகள் உள்ளே புகாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

பல கோடித் தீமைகளை வென்றவன் தான் அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக உருவானது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் அதைச் செலுத்தினோம் என்றால் அதற்கப்புறம் மற்ற தீமைகள் உள்ளே செல்லாது.

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவுகளைக் கூட்டப்படும் போது
3.இங்கே வலிமை பெறுகின்றது… மற்றதை ஈர்க்கும் சக்தி குறைகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துக் கொண்ட பின் அந்தச் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதன் வழி நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் சேர்க்க வேண்டும்.

அப்படி நினைவைச் செலுத்தினால் நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி வலிமை பெறுகின்றது.
1.இந்த வலிமை பெறப் பெற இதனின் அழுத்தம் ஆக ஆக
2.வேதனை என்ற உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சென்றுவிடுகிறது.

காலையிலிருந்து இரவு வரை நாம் கவர்ந்ததெல்லாம் (சுவாசித்தது)
1.சாதாரணமாக ஒரு சாண் நீளம் உடலைச் சுற்றி நமக்குள் ஆன்மாவாக இருக்கின்றது.
2.அதிலிருக்கும் வேதனை என்ற உணர்வின் தன்மையை மாற்றத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கச் சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் எடுத்து நம் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற வலுவைக் கூட்டக் கூட்ட
1.ஆன்மாவில் இருக்கும் தீமையான உணர்வுகள் நகர்ந்து நகர்ந்து சூரியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விடுகிறது.
2.நம் பிடிப்பில் இல்லாததால் சூரியன் அதைக் கவர்ந்து சென்றுவிடுகிறது
3.நம் ஆன்மா தூய்மை அடைகிறது.

நம் ஆன்மாவை எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என்று இராமாயணத்தில் வான்மீகி தெளிவாகக் காட்டியுள்ளார். அதாவது வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான்… அவனை நேரடியாகத் தாக்கவில்லை.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து… சுவாசத்தில் வரும் தீமை புகாதபடி இங்கே அடைக்கப்பட்டு… அந்தச் சக்தி உடலுக்குள் வலிமையான பின் நம் ஆன்மாவிலிருந்து தீமைகளைப் பிரித்துவிடுகிறது… பிளந்து வெளியே தள்ளிவிடுகிறது.

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

செல்வம் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தினாலும் தனக்குள் வரும் பகைமைகளை நிர்வகிக்கும் திறன் இருக்கின்றதா…?

 

வாழ்க்கை என்ற நிலைகளில் செயல்படும் போது “ஒரு எஞ்சினியர்” அவர் கண்டுபிடித்த கருவியை உருவாக்குவதில் கால தாமதமானால் வேதனை என்ற உணர்வு அவருக்குள் அதிகமாகிறது.

இப்படி வேதனையை உருவாக்கி விட்டால் பின் அதனுடைய நிலைகள் ஆன பின் அந்த இயந்திரத்தைச் சீராகப் பயன்படுத்த முடியாது.

காரணம்… வேதனை என்று வரப்படும் பொழுது சிந்திக்கும் தன்மை இழந்தால் அருகில் இருக்கும் தன்னுடைய சிஷ்யனை (தன்னிடம் வேலை செய்பவனை) கோபித்துப் பேசுவான்.

அவன் சொன்னபடி சரிவர செய்யவில்லை என்றால்… சரியான பதில் சொல்லவில்லை என்றால் “போடா அறிவு கெட்டவனே… ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…?” என்று சீறிப்பாயும் தன்மை தான் வரும்.

ஏனென்றால்…
1.மனிதன் தான் நுகர்ந்த உணர்வின் இயக்கங்கள் – உயிருடன் ஒன்றி உணர்வின் பொறிகள் இயக்கி
2.அந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? என்பதனை நமது குருநாதர் தெளிவாக எடுத்து என்னிடம் கூறினார்.

மனிதனின் வாழ்க்கையில் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். அந்த ஆசை நிராசையாக எப்படி மாறுகின்றது…? நிராசையாக மாறும் பொழுது மனித உணர்வுகள் எப்படி மாறுகின்றது…?

வேதனை என்ற உணர்வு வரப்படும் பொழுது நோய் என்ற நிலைகள் வருகின்றது. பல துறைகளைக் கற்றுணர்ந்த டாக்டர்களும் இந்த உடலை விட்டு அதனால் தான் மடிகின்றார்கள். வேதனை என்ற உணர்வு கொண்டு மீண்டும் மனிதன் அல்லாத நிலையைத் தான் பெறுகின்றார்கள்.

1.செல்வத்தைத் தேடக் கோடிக்கணக்கான சிந்தனைகளைச் செலுத்தி நிர்வாகத்தை நடத்தும் திறன் வந்தாலும்
2.இந்த உடலுக்குள் இருக்கும் பகைமையான உணர்வுகளை நிர்வகிக்கும் தன்மை எவருக்கும் இல்லை.

அப்படி நிர்வகிக்கும் அந்தத் திறனைப் பெற
1.அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் அந்த மெய் ஞானியின் உணர்வை
2.எவர் ஒருவர் இங்கே தேடிக் கொள்கின்றனரோ அவரே அதனைப் பெற முடியும்.

ஆகவே… அந்த அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையை நாம் நமக்குள் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

விஞ்ஞானத்தின் அறிவு வந்தால் அது இந்த உடலின் இச்சைக்கே வருகின்றது. ஆனால் மெய் ஞானத்தினுடைய அறிவால் ஒவ்வொரு அணுவின் இயக்கங்களையும் அறிய முடிகின்றது.

அருள் உணர்வின் தன்மை கொண்டு மெய் ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கி விட்டால் தீமைகளை அகற்றிடும் அரும் பெரும் சக்தியாக நமக்குள் வருகின்றது.

உதாரணமாக குறும்புத்தனம் செய்வோரை உற்றுப் பார்த்த பின் அந்த குறும்புத்தனத்தை உருவாக்கும் அணுவாக நம் உடலில் விளைய ஆரம்பிக்கிறது.
1.அவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்ச்சிகள் தூண்டும்
2.நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நாமும் குறும்புத்தனம் செய்வோம்… பார்க்கலாம்…!

அது நமக்குள் உருப் பெறாதபடி தடுக்க வேண்டுமல்லவா…!

ஏனென்றால் தவறு செய்கின்றான் என்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அது கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் ஆறாவது அறிவு… நம்மைக் காத்திடும் சேனாதிபதி.

ஆகவே… தீமையான உணர்வு நமக்குள் வராதபடி தடுக்க வேண்டும் என்றால் சேனாதிபதிக்கு வலு எப்படி கொடுக்க வேண்டும்…?

நஞ்சினை வென்ற அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாக உள்ளான்.
1.அவனின் உணர்வை அடுத்த கணமே இணைத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்குதல் வேண்டும்.
2.அந்தத் தீமைகள் உள்புகாதபடி நம் வழிக்கு அது வசப்படும்படி செய்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் ஞானத்தின் வழிகளில் அருள் ஒளியின் உணர்வைத் தன்னுடன் இணைத்து தீமைகளை அடங்கச் செய்ய வேண்டும். அது தான் அங்குசபாசவா…!

தீமையான உணர்வை நாம் நுகர்ந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து… இதை வைத்து அதை அடக்கி நமக்குள் செயலாற்றும் தன்மை பெற வேண்டும் என்பதற்காக
1.சிறு கல்லைக் காட்டி (ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள தெய்வச் சிலை)
2.அடுத்து உன் வாழ்க்கையை நீ எப்படி அமைக்க வேண்டும்…?
3.இந்த உடலை விட்டுச் சென்றால் நீ என்ன ஆவாய்…? என்ற நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளான் அருள் ஞானி.

இயற்கையின் உண்மை நிலைகள் எப்படி மாறுகின்றது…? என்பதை உணர்ந்த மெய் ஞானிகள்… உருவாக்கும் திறன் பெற்ற ஆறாவது அறிவால் நாம் எப்படிச் சீராகச் செயல்பட வேண்டும் என்று காட்டியுள்ளார்கள்.

சொல்வது நன்றாக அர்த்தம் ஆகிறது அல்லவா.

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

குரு கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் பலன்

 

எத்தகைய குறைகளைக் கண்டாலும் நமக்குள் உட்சென்று நம்மை வேதனைப்படச் செய்யும் செயல்களைத் தடுத்து நிறுத்த “ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

அதை நீங்கள் பயன்படுத்துவதற்கு யாம் பனிரெண்டு வருட காலம் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி காடு மேடெல்லாம் அலைந்து அந்த ஆற்றலைப் பெற்றோம்.

ஒரு மருந்தைத் தயார் செய்து “நோய் போய்விடும்…” என்று வைத்தியர்கள் சொல்கின்றார்கள்.

வைத்தியத்தின் முறைகளில் நோய் நீங்கினால் அவருக்குப் பொருள் கிடைக்கும் என்ற நிலைகளில் வைத்தியர்கள் செய்கின்றார்கள்.

நமது குருநாதர் கொடுத்த நிலைகளோ துன்பங்கள் விளைய வைக்கும் நிலைகளிலிருந்து மீள்வதற்கு என்னைப் பனிரெண்டு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார்.

அவர் சொன்ன முறைப்படி அங்கே அலைந்தோம்.

1.தாவர இனத்தின் உணர்வின் சத்து எவ்வாறு வேலை செய்கின்றது…? என்ற நிலையும்
2.மனித சஞ்சாரமே இல்லாத நிலைகள் அங்கே அமைதி கொண்டிருக்கப்படும் பொழுது
3..மனித உணர்வின் எண்ணங்கள் எவ்வாறு செயலபடுகின்றது…? என்ற எண்ணத்தை எடுத்து
4.அதைப் மனித உடலில் விளைய வைத்துத் துன்பத்தை நீக்கிடும் ஆற்றலை ஞானியர்கள் எவ்வாறு பெற்றார்கள்…? என்ற நிலையை
5.எம்மைப் பெறச் செய்தார் குருநாதர்.

அதைப் பெறச் செய்தபின் எனக்கு அடிக்கடி துன்பங்களை விளைய வைத்து அந்தத் துன்பத்தை நீக்க… “நீ எப்படி எடுக்க வேண்டும்…” என்றும் உணர்த்தினார்.

அவர் காட்டிய வழிப்படி யாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றலால்தான் எமக்குள் வரக்கூடிய துன்பத்தையும் எமக்குள் வரக்கூடிய வியாதியையும் நிவர்த்தி செய்ய முடிந்தது.

நமது குருநாதர் காட்டிய வழியின் தன்மையை எமக்குள் பதியச் செய்து கொண்டேன். அதை ஒவ்வொரு நேரத்திலும் எடுத்து அதிலே வளர்த்துக் கொண்ட “அந்த உணர்வின் எண்ண அலைகளைத்தான்” உபதேச முறைப்படி
1.ஒவ்வொரு உணர்வின் அலைகளுக்கும் (நன்மை தீமைகளை உருவாக்கும்)
2.நன்மையை உருவாக்கும் உணர்வுடன் கலந்து உபதேசிக்கப்பட்டு
3.இந்த உணர்வுகளை உங்களுக்குள் திணிக்கின்றேன்.
4.உங்கள் துன்பத்தைப் போக்க உங்களுக்குள் அந்த நல்ல உணர்வினைப் பதியச் செய்கின்றேன்.

துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் உங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளைத் தூண்டச் செய்கின்றது.

நீங்கள் அந்த மனதின் நிலைகளை அடக்கி உங்களைக் காக்கக்கூடிய அந்தச் சக்தியை நீங்கள் பெறுவற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

அந்தப் பனிரெண்டு வருட கால அனுபவத்தின் நிலையை யாம் சொல்லும் பொழுது அந்தத் துன்பத்தினுடைய நிலைகளை மெய்ஞானியின் அருள் ஒளியுடன் கலந்து திரும்ப உபதேசத்தின் வாயிலாக “வாக்கின் நிலைகள் கொண்டு… உங்கள் உடலிலே பதியச் செய்கின்றோம்…”

அவ்வாறு பதியச் செய்த அந்த வித்தின் நிலைகளுக்கு மெய் ஞானிகளின் சக்தியைப் பெறுவதற்கு நீங்கள் எந்த நிமிடமானாலும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணி எடுக்க முடியும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் நினைத்துச் செயல்படுவீர்கள் என்றால் துன்பத்தைப் போக்கக் கூடிய மெய்ஞானியின் அருள் சக்தி உங்களுக்குள் ஊடுருவச் செய்கின்றது.

1.உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் மனக்குழப்பத்தை மனக்குடைச்சலை இது நிவர்த்தி செய்கின்றது
2.உங்கள் எண்ணத்திற்குள் தெளிவாக்கி உங்கள் வாழ்க்கையில் உங்கள் செயலையும் தெளிவுபடச் செய்ய இது உதவுகின்றது.
3.வியாபாரத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
4.குடும்பத்திலும் உங்களைத் தெளிவாக்கச் செய்கின்றது.
5.குடும்பத்திலும் ஒற்றுமையாக்கச் செய்கின்றது.

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

சுக்ரீவனும்… அவனுடைய மந்திரியான ஆஞ்சநேயனும்…

 

இராமனின் பக்தன் ஆஞ்சநேயன்…! தீமையை நீக்கியவன் சீதாராமன்…! சந்தோஷப்படும் உணர்வின் தன்மையைச் சுக்ரீவன்…! என்று காவியங்கள் கூறுகிறது. ஆனால் இவ்வாறு காரணப் பெயர்களாக வைத்ததை நாம் புரிந்து விடக்கூடாது என்பதற்காகத் திரித்து விட்டார்கள்… மாற்றி விட்டார்கள்.

ஒரு நோயாளியிடம் இருந்து வேதனையான உணர்வுகள் வெளி வரும் பொழுது அது வாலி. அதனுடைய வலிமை மற்றவர்களையும் வேதனைப்படச் செய்யும்.

ஆனால் சீதாராமன் என்ற நிலையில்
1.அவர் உடல் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து உயிரிலே சேர்க்கப்படும் பொழுது “அஞ்சனை…”

அதாவது… தீமையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் (சுக்ரீவன்) உணர்வை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதைச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அந்தச் சொல் அடுத்தவர் (துன்பப்படுவோர்) செவிகளில் படுகின்றது
2.உணர்ச்சியைத் தூண்டும் பொழுது அவரின் கண்கள் நாம் சொன்ன சொல்லைக் கவர்கின்றது.
3.உற்று நோக்கிப் பதிவாக்கப்படும் போது அவர் உயிருக்குள் சேருகின்றது.
4.உயிரில் பட்டபின் வாயுவாக மாறுகின்றது.
5.அது இரத்தங்களில் கலந்தபின் உடல் முழுவதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
6.இராமனின் பக்தன் ஆஞ்சநேயன் வாயு புத்திரன்… அவன் சுக்ரீவனின் மந்திரி
7.துருவ நட்சத்திரம் எதைச் செய்யுமோ அந்த உடலுக்குள் அதைச் செய்யும்…! என்று தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இராமாயணத்தில் உணர்வின் மனம் எதுவோ அதற்குத் தக்க எண்ணங்கள் எப்படி வருகின்றது…? என்று இப்படித் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் என்று சொல்கிற பொழுது மனிதன் தன்னையும் பாதுகாத்துக் கொள்கின்றான்.
1.அவனால் முடியாமல் இருக்கும் பொழுது உணர்ச்சியைத் தூண்டி அவன் உயிரிலே மோதச் செய்கின்றான்
2.இந்த உணர்ச்சிகள் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் பரப்பப்படும் போது வேதனையை நீக்கிச் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உடலுக்குள் புகும் போது கலியை மாற்றிக் கல்கியாக மாறுகின்றது.

உயிரைப் போன்ற உணர்வின் தன்மையைச் சிறுகச் சிறுக எண்ணப்படும் போது அந்த உடலில் ஒளியின் உணர்வாக மாறுகிறது. உயிரின் நிலைகளில் இது ஏற்படும் பொழுது “முழுமையான கனியாக மாறி…” அதனின் இனத்தின் வித்தை உருவாக்கிக் கல்கி… கடைசி நிலை.

மனிதனான பின் தான் ஒளியின் உணர்வாக உருவாக்கும் தன்மை பெறுகின்றான்.

கஷ்டமோ நஷ்டமோ மற்ற உணர்வின் தன்மை வலிமையாக்கப்படும் போது அது வாலியாகி விடுகிறது.

அதை மாற்ற… கொடுத்த சக்தியைச் சீராகப் பயன்படுத்தி நன்மை செய்யக் கூடிய சக்தியாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆகவே ஒவ்வொரு நொடியிலும் ஆத்ம சுத்தி செய்ய மறந்து விடாதீர்கள்…!

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

 

சித்திரை…! என்றால் ஒவ்வொரு நிலைகளிலும் (சந்தர்ப்பத்தால்) நம் எண்ணத்தால் வரும் பிறிதொரு தீமையின் நிலைகள் நாம் உண்மையை உணர முடியாத நிலைகள் கொண்டு மறைத்துவிடுகிறது… அதனால்தான் சித்திரை.

பங்குனி கடைசியில் உத்தராயணம் பிறக்கின்றது. “உத்தராயணம்…” என்கிற பொழுது புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை மாற்றியமைத்து
2.இயற்கையின் நிலைகளை மாற்றி ஒளியின் சுடராக அறிவின் தன்மையாக
3.தனக்கு வேண்டியதைத் தனக்குள் சேமிக்கும் நிலை

உத்தராயணம் வரப்படும் பொழுது தான் வெயிலின் தன்மையும் அதிகமாகிறது. இந்த பூமியில் விளைந்த உணர்வின் சத்துகள் அது எதுவானாலும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் சேமிக்கின்றது,

அந்தத் தருணத்தில் ஒவ்வொரு தாவர இனத்திற்கும்.. மரங்களுக்கெல்லாம் இலை உதிர் காலமாகிறது. ஆனால் செடிகளுக்கோ… வளர்ந்த நிலைகள் கொண்டு அதனுடைய சத்தைக் கவர்ந்து கொள்கின்றது

அதில் விளைந்த வித்துக்களை மறுபடியும் அந்த நேரம்… பருவம்… பார்த்து விதைக்கும் பொழுது
1.மாரிக்காலத்தில் தட்சிணாயணம் என்ற நிலைக்கு வரும் பொழுது
2.மழை நீரும் நீர் மற்ற நிலைகளும் வரும் பொழுது
3.அந்த வெப்பத்தின் தன்மை துடிப்பு கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

உத்தராயணம் தட்சிணாயணம் என்று இப்படி வரும் போது அந்தக் காலப் பருவத்தில் ஆக… மனிதனான பின் உத்தராயணம் “ஒவ்வொன்றையும் வேக வைத்து மாற்றி அமைக்கின்றோம்….!”

அதாவது மனிதனான பின் ஒரு பொருளை வேக வைத்துத் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்துப் புது விதமாக நாம் சமைக்கின்றோம்… உணவாக உட்கொள்கிறோம் அல்லவா…!

உத்தராயண நேரங்களில் அந்த வெப்ப காலங்களில் தாவர இனங்களிலிருந்து கவர்ந்து கொண்ட இந்த உணர்வின் சத்து… அந்த அலைகள் அதிகமாகும் பொழுது பார்த்தால் பெரும் புயல்கள் வரும்… பெரும் அலைகளும் வரும்.

இந்தக் காற்றலைகள் எங்கிருந்து வருகின்றது…? எங்கிருந்து உருவாகின்றது…?

ஒவ்வொரு தாவரமும் தன் உணர்வின் வலுவால் வளர்ந்தாலும்… அதனின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரும் பொழுது
1.ஒரு விஷத்தன்மை கொண்ட நிலையோ
2.ஒரு உணர்வின் உந்து விசை கொண்ட உணர்வுகளையோ எடுத்து அலைகளாக வரப்படும் பொழுது
3.தாழ்ந்த உணர்வு கொண்ட சாந்தமான உணர்வு கொண்ட அலைகள் இதைக் கண்ட பின் அஞ்சி ஓடி வருகின்றது

அஞ்சி ஓடி வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் எதிர்ப்படும் நிலைகள் மோதித்தான் சுழல் காற்றுகளும்… பின் மற்றொன்றைச் சுழலச் செய்வதும்… அதன் உணர்வின் தன்மை அணுக்களின் தன்மைகளை உருமாற்றுவதும்… எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் போது புதுப் புது வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் ஆறறிவு கொண்ட மனிதன்… “வாழ்க்கை…” என்ற சுழற்சியின் நிலைகளில் வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மோதி நமக்குள் புயலாக மாறுகின்றது

மாறினாலும் அந்த ஆறாவது அறிவை வைத்துப் அந்தப் புயலை அடக்க முடியும்.

எப்படி…?

1.வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கித் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் என்றால்
3.அந்தப் புயல்களை நாம் அடக்க முடியும்.

அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

நம் ஆறாவது அறிவை வைத்து ஒளியாக உருவாக்கும் நிலையை நமக்குள் எவ்வாறு வளர்ப்பது…? என்ற உண்மைகளைத் தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

“குரு வழியில்” நன்மைகள் செய்ய வேண்டிய முறை

“குரு வழியில்” நன்மைகள் செய்ய வேண்டிய முறை

 

கேள்வி:
நண்பர் ஒருவர் வயிற்று வலி என்று என்னிடம் வந்தார். வலி நீங்கிவிடும் என்று சொன்னேன். அவருக்கு நன்றாகி விட்டது… ஆனால் எனக்கு வயிற்று வலி வந்துவிட்டது. இதற்கு என்ன காரணம்…!

பதில்:
தியான வழியில் பொதுவாக என்ன செய்கிறார்கள்…? நமக்கு இந்த உயர்ந்த சக்தி கிடைத்தது என்று எல்லாம் செய்கின்றார்கள். ஆனால் பிறருடைய தீமையான உணர்வுகள் தனக்குள் வராதபடி முதலில் ஆத்ம சுத்தி செய்வதில்லை.

நாம் ஆத்ம சுத்தி செய்து விட்டால் அந்த நோய் நமக்கு வராது தடுக்கப்படும். அதற்குப்பின் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று சொன்னால் அவர்கள் உடலும் நலமாகும்.

அப்படி இல்லாதபடி…
1.எடுத்த உடனே அவர் உடல் எல்லாம் நலமாக வேண்டும் என்று பாசத்தால் எண்ணினால்
2.உடனே ஜிர்ர்ர்ர்ர்… என்று உங்கள் உடலுக்குள் அவர் உணர்வு வந்துவிடும்
3.அவர் நன்றாகி விடுவார் உங்களுக்கு வயிற்று வலி வரத் தான் செய்யும்.

உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆத்ம சுத்தி என்ற வலுவான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். நாம் எடுக்கக்கூடிய உணர்வுகள் அந்தப் பக்தி மார்க்கத்தின் வழி வந்ததால் அத்தகைய பாச உணர்வின் செயலே வருகின்றது.

குருநாதரின் உடலிலே எல்லாமே உண்டு. அவரும் பக்தியின் நிலைகளில் செயல்பட்டவர் தான். அவர் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் எத்தனையோ இருக்கிறது.

ஆனால் அவர் உடலிலிருந்து
1.அருள் ஞானத்தைப் பெற்ற உணர்வுகளும் உண்டு
2.இருளை அகற்றிய உணர்வுகளும் உண்டு
3.விஷத்தை நீக்கிய உணர்வுகளும் உண்டு
4.ஒளியான உணர்வுகளும் அவரிடம் உண்டு

இப்பொழுது யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இருளை நீக்கும்… நஞ்சை வெல்லும்… உணர்வுகளைத் தான் உங்களிடம் கொடுக்கின்றோம் இதை எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொண்டு மற்ற தீமைகள் வராது தடுக்கலாம்.

நான் தியானம் செய்தேன். பாருங்கள்… எண்ணியபடி நடக்கின்றது என்று சொன்னாலும் உங்களுக்கு வயிற்று வலி ஏன் வருகிறது…?

அதற்குத் தான் இதைச் சொல்வது. எப்போதுமே முதலில் அந்த ஞானத்தின் வழியில் அருள் சக்திகளை எடுத்து நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்டு அதற்குப் பின் “உங்களுக்கு நோய் நீங்கிவிடும்” என்று சொன்னால் சரியாகும்.

இல்லாமல் போனால் அவர்கள் உடலில் இருப்பதை இழுத்து உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அவர் நன்றாக ஆகிவிடுவார்.

ஆகவே எப்போதுமே ஆத்ம சுத்தி செய்து கொண்டே இருந்தால் நன்றாக இருக்கும்.
1.சந்தர்ப்பத்திற்குத் தக்க அந்த உணர்வின் ஞானங்களும் வரும்.
2.அந்த ஞானத்தை அருள் வழியில் பயன்படுத்த வேண்டும்
3.நடக்கின்றது என்ற ஆர்வத்தில் பக்குவமில்லாது செய்தால் அதில் சில தீமைகளும் வந்துவிடும்.

குருநாதர் சொன்ன முறைப்படி காட்டிற்குள் நானும் செல்லப்படும்போது ஒவ்வொரு மிருகங்களுக்குத் தக்கவாறும் சில உணர்வுகளை எடுத்து அந்த ஒலி அலைகளை எழுப்பினால் எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.

யானைக் கூட்டம் இருந்தால் அதற்கென்று ஒரு ஒலி அலைகளை எடுத்துப் பரவச் செய்தால் யானைகள் அமைதியாக இருக்கும்.

இத்தகைய உபாயங்களைக் காட்டிற்குள் செய்தாலும் நாட்டிற்குள் மோசமான கரடி புலி எல்லாமே இருக்கின்றது. இதில் இருந்து எப்படித் தப்பிப்பது…?

காட்டிலே தப்பித்தாலும் நாட்டிற்குள் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்றால் முடியாது. உடனே அது நம் மீது பாயும். ஒருவருக்கு நன்மை செய்தால் உடனே பதிலுக்கு எப்படி இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று திரும்ப வரும்.
1.நீங்கள் ஒருவருக்கு உதவி செய்து பாருங்கள்
2.அவர்கள் அடுத்து நிமிர்ந்த உடனே நீங்கள் தாழ்ந்து விடுவீர்கள்

அதனால் நாம் எந்தச் சந்தர்ப்பமாக இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.

மற்றவர்களைத் தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யத் தூண்ட வேண்டும்.
1.நீங்கள் இதைச் செய்யுங்கள் உடல் நலமாகும் என்று சொல்லி இந்த வாக்கினை பதிவு செய்ய வேண்டும்
2.ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதை எடுக்கச் சொல்ல வேண்டும்.

நானும் (ஞானகுரு) எத்த்னையோ பேருக்கு ஆசீர்வாதம் செய்கிறேன். இந்த உணர்வுகள் அங்கே சென்று வேலை செய்கின்றது… நோய் கீழே இறங்குகிறது. நான் அதை இழுத்துக் கொள்வதில்லை.
1.ஆனால் நீங்கள் இழுத்துக் கொள்கின்றீர்கள்.
2.அப்படி இழுப்பதால் தான் அந்த வயிற்று வலி உங்களுக்கு வந்தது.

என்னிடம் எத்தனையோ மோசமான நிலையில் வருகின்றார்கள். அதை எல்லாம் என் உடலில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…? எனக்கு ஒர் பாதுகாப்பு கட்டிக் கொண்டு வரவேண்டும் அல்லவா.

அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

வால் நட்சத்திரம்

வால் நட்சத்திரம்

 

இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களில் ஒதுங்கிய (கழிவு) தூசி மண்டலங்களை “வால் நட்சத்திரம்…” (COMET) என்று சொல்வார்கள். வால் நட்சத்திரம் என்பது கடும் விஷத் தன்மை கொண்டது.

அது போகும் பாதைக்கு நேராக எந்தச் சூரியக் குடும்பம் வருகின்றதோ அதற்குள் அது கவரப்படுகின்றது. சூரியன் அதைக் கவர்ந்தால் பரிசுத்தப்படுத்தி பிரபஞ்சத்திற்குக் கொடுக்கின்றது.

ஆனால் பிரபஞ்சத்தில் அதைப் பரிசுத்தப்படுத்துவதற்கு முன் கோள்கள் ஊடுருவினால் பூமிக்குள் வந்து விடுகின்றது.

மற்ற கோள்களில் ஊடுருவினால் அந்தக் கோள்களில் திசை மாற்றம் ஆகின்றது. கோள்களுக்குள்ளும் மாற்றங்கள் ஆகின்றது. விஷத் தன்மைகள் பரவி விட்டால் அதன் ஓட்டத்தின் திசையும் மாறுகின்றது.

உதாரணமாக செவ்வாய்க் கோள் நாதகாரகன் என்றால் அதிலே இந்த விஷத் தன்மைகள் கவரப்பட்டால் அதே விஷத் தன்மைகளை அதுவும் கலந்து வெளிப்படுத்துகின்றது.

செவ்வாய்க் கோளிலிருந்து வருவதைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்டும் பொழுது அதனின் உணர்வு நம் பூமியின் ஈர்ப்பிற்குள்ளும் வருகிறது.

1.செவ்வாய்க் கோளில் உருவான விஷத்தன்மை கலந்த அந்த நாதம் நம் பூமிக்குள் கவரப்படும் பொழுது
2.தீமையின் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையாகப் பரவுகிறது.
3.செவ்வாய்க் கோளில் மாற்றம் ஆவதைத் தாவர இனங்கள் எடுத்துக் கொண்ட பின் எதிர் நிலையான உணர்வின் நாதங்களாக மாறி
4.தாவர இனங்கள் கடும் நோயாகி அது விளையும் தன்மையும் மாறுகிறது.

இதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார். சாப்பாடு ஞாபகத்திற்குப் போகாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை முழுமையாக யாம் தெரிந்து கொள்ளும் வரையில் பட்டினியாக இருக்கச் செய்தார்.

எதை…?

பட்டினி என்றால்
1.இந்த உடலில் இருக்கக்கூடிய மனித உணர்வு கொண்ட நிலைகளைப் பட்டினியாகப் போட்டு
2.அந்த அருள் ஞானி அகஸ்தியன் கண்ட உணர்வினை நீ பெறு என்றார்.
3.அகஸ்தியன் தெரிந்து கொண்ட உணர்வினை நீ உணவாக உட்கொண்டால்
4.இருளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வந்தார்.

சிவன் இராத்திரி என்று விரதம் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் “நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுப்பதில்லை…!”

கஷ்டம் துன்பம் துயரம் என்ற தீமையான உணர்வுகளை உனக்குள் எடுக்காதபடி அந்த ஞானி கண்ட அருள் உணர்வை உனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்…! என்று குருநாதர் தெளிவாக்கினார்.

ஒரு கம்ப்யூட்டரை எலக்ட்ரிக் வைத்து இயக்கப்படும் போது உணர்வின் அதிர்வுகளை வைத்து நமக்கு வேண்டியதை எல்லாம் அதிலே பதிவாக்கித் தெரிந்து கொள்கிறோம்.

அதே போல நமது உயிரும் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டுள்ளது.
1.இங்கே யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால் உங்கள் கண்…
2.எலும்புக்குள் உள்ள ஊன்களில் அதைப் பதிவாக்கி அதன் உணர்வை இணைத்துக் கொண்டே உள்ளது.

உங்கள் கவனங்கள் யாம் உபதேசிப்பதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இருந்தால் அது பதிவாகின்றது. மீண்டும் நீங்கள் நினைவாக்கப்படும் பொழுது அந்த மாமகரிஷி அகஸ்தியன் கண்டறிந்த உண்மையின் உணர்வுகளை… காற்றிலிருப்பதைக் கவரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது குருநாதர் எனக்கு (ஞானகுரு) எப்படிப் பதிவு செய்தாரோ அதைப் போல உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றேன். மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் போது நீங்கள் எளிதில் அதைப் பெற முடியும்… நிச்சயம் பெறுவீர்கள்.

இன்று… இந்தக் காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மைகள் பரவி மனிதனின் சிந்தனை இழந்து… மனிதனுக்கு மனிதனே கொன்று குவித்து அதை ரசிக்கும் தன்மையாக வந்து விட்டது.
1.ஆனால்… நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டவர்கள் தான்
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கும் அந்தச் சிந்தனை இழந்த உணர்வுகள்
3.நம்மைத் தாக்காது இருக்க வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது.