எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

எவ்வளவு தைரியசாலியாக உடல் வலுவுள்ளவராக இருந்தாலும்… சோர்வு வந்து விட்டால் எந்தக் காரியத்தையும் செய்ய விடாது

 

இன்று ஒன்றுமே செய்ய வேண்டாம்…! பத்திரிக்கையைப் படித்தாலே போதும்… அல்லது டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த வீட்டில் கொள்ளை அடித்தார்கள்… அந்த வீட்டில் திருடினார்கள்… இப்படி ஏமாற்றினார்கள்… பல கொடுமைகள் நடக்கிறது… என்ற செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. நமக்குள் அது எல்லாம் பதிவாகிக் கொண்டே வரும்.

இன்றைய உலகில் வலு உள்ளவன் என்ன செய்கிறான்…?

காட்டில் உள்ள மிருகங்கள் தன் வலுவைக் கொண்டு தான் மற்றதை அடித்துப் புசிக்கின்றது. அதைப் போன்றுதான் இன்று பத்து நூறு பேர் சேர்ந்து வலுவாகி விட்டால் அவர்கள் தான் ராஜா.

அடுத்தவர்களிடம் ஒரு இடத்தை நான் கேட்கிறேன் கொடு…! என்பார்கள். கொடுக்கவில்லை என்றால்… “பார்க்கலாம்…!” என்பார்கள்.

பின் தன்னுடைய அதிகாரத்தில் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துவிட்டு “எனக்குத் தான் அது சொந்தம்…” என்பான். எந்த வகையில் நீ வருவாய்…? பார்ப்போம்…! என்பார்கள்.

இன்று இந்த அளவிற்கு மனிதனுடைய ஆக்கிரமிப்பு உணர்வுகள் அதிகமாகி விட்டது. நாம் தவறு செய்யவில்லை விஞ்ஞான அறிவால் இதையெல்லாம் இன்று பத்திரிகையிலே பார்க்கின்றோம்… படிக்கின்றோம்.

இப்படி எல்லாம் நடந்தது…! என்று உடனுக்குடன் நாம் அறிகின்றோம் ஆனால் அதை என்ன… ஏது…? என்று எண்ணும் போது இந்த அறிவின் தன்மை நமக்குள் பதிவாகி அங்கே உருவான உணர்வின் ஒலியை நாம் நுகர்ந்து அதையே உடலில் அணுவாக உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.
1.முதலில் படிக்கும் போது ஒன்றும் தெரியாது
2.அணுக்கள் விளைந்து விட்டால் அடிக்கடி இந்த நினைவு வரும்.

பத்திரிக்கையைப் படித்தோம் டி.வியில் பார்த்தோம் என்று அடுத்தவரிடம் பேசுகிறோம் அல்லவா.
1.இங்கே இப்படி நடந்தது அங்கே இப்படி நடந்தது என்று (இரண்டாவது தரம்) சொல்லும் பொழுது
2.இந்த உணர்வுகள் உடலில் உருவான அணுவிற்கு மீண்டும் சாப்பாடாகப் போய்க் கொண்டே இருக்கின்றது.
3.தன் இனத்தை அது பெருக்க ஆரம்பித்து விடுகின்றது.

நம் உடலில் நல்ல உணர்வுகளைப் பெருக்குவதற்கு… நல்லதைக் கொஞ்ச நேரமாவது பேசுகிறோமா என்றால் இல்லை. பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்க மாட்டேன் என்கிறது.
1.என்னதான் நல்லது செய்தாலும்
2.இப்படி ஆகிவிட்டதே…! என்ற நிலையில் தான் இருக்கின்றோம்.

இதைத்தான் “விழித்திரு…” என்ற நிலைகளில் அந்தத் தீமை வரப்படும் போதெல்லாம் அதை இடைமறித்தல் வேண்டும்… விழித்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும்… என்ற உணர்வினை எடுத்துவிட்டு
1.எந்தக் காரியம் நடைபெற வேண்டுமோ…
2.என் பார்வை அவர்களை நல்லவராக்க வேண்டும்
3.என்னை நினைக்கும் போதெல்லாம் அவர் நல்லவராகும் நிலைகள் வர வேண்டும் என்று
4.இந்த உணர்வினைக் கலந்து வெளிப்படுத்த வேண்டும்.

இத்தகைய நிலைகளை இந்த வாழ்க்கையில் நாம் அதை விழித்திருந்து செயல்படுதல் வேண்டும்.

தொழிலில் முதலில் லாபம் வரும் பொழுது… எல்லாம் சந்தோசமாக இருப்போம். சிறிதளவு நஷ்டம் ஆகி விட்டால் போதும். அங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இங்கே கொடுத்தேன் காசு வரவில்லை… இப்படி ஏமாந்து போய்விட்டேன்…! என்று என்ற எண்ணங்கள் தான் வரும்.

அத்தகைய எண்ணங்கள் உருவாகி விட்டால் அதனால் உருவான அணுக்கள் அதே நினைவினைச் சுவாசிக்கும்போது பலவீனமான எண்ணங்களை நமக்குள் உருவாக்கிக் கொண்டுதான் இருக்கும்.

அதே உணர்வுகள் இதற்கு உணவாகப்படும் பொழுது இந்த நல்ல உடலில் அந்தத் தீமையின் செயலாக நம்மைச் சோர்வடையச் செய்துவிடும். சோர்வான எண்ணங்கள் அது உணவாக ஆனபின் என்ன ஆகும்…?

நாம் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் கூட…
1.உடல் வலுவாக இருக்கும்
2.சோர்வின் தன்மை வரும் பொழுது எந்த வேலையையும் செய்ய முடியாது
3.சிந்திக்கும் தன்மையைyum இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் நீ விழித்திரு…!

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவில் தீமை புகாது தடுக்க வேண்டும்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதன் அடிப்படைக் காரணமாக வருகின்றதோ… உடனடியாக விழித்து… அதைத் தனக்குள் அடக்க வேண்டும்

ஆகவே…
1.தீமையின் உணர்வுகள் உருவாக்கப்படும்போதெல்லாம்
2.அருள் ஞானியின் உணர்வை நாம் எடுத்து உடலுக்குள் இணைத்து
3.அந்தத் தீமைகளை அடக்குதல் வேண்டும்.

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

ஆயிரம் நன்மைகள் செய்திருந்தாலும்… ஒருவன் நம்மை அவமதிக்கின்றான் என்றால் அதிலிருந்து விலகத் தெரிய வேண்டும்

 

விண்ணிலே உருவான உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின்… ஆரம்பத்திலே (உதாரணமாக) அந்த உயிர் ஒரு பருத்திச் செடியின் மீது விழுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த உணர்வை நுகரும் பொழுது அது ஊழ்… ஆகி அது வினைக்கு நாயகனாக இயக்கத் தொடங்கி விடுகின்றது… புழுவாக உருப்பெறுகிறது
2.உயிருடன் அது முதலிலே ஒன்றுகின்றது… அந்த உணர்வின் சத்தை நுகர்கின்றது
3.நகர்ந்து சென்று மீண்டும் அது தன் இரையைத் தேடுகின்றது.

முதலில் பரிணாம வளர்ச்சியில் வரும் பொழுது இந்த நிலை…!

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சி ஆகி இன்று மனிதனாக வளர்ந்தபின் ஒருவர் நம்மைக் கோபிக்கின்றார்… தன் வாழ்க்கைக்காக பல தவறுகளைச் செய்து நாம் தவறு செய்யாமலேயே நம் மீது அபாண்டமான நிலைகளில் பொய்யைச் சொல்கிறார்… வேதனைப்படும் செயலைச் செயல்படுத்துகின்றார்.

1.நமது கண் அந்த மனிதனைப் படம் எடுக்கின்றது…
2.எலும்புக்குள் ஊனாகப் பதிவாக்கி விடுகின்றது. அதுதான் ஊழ்வினை என்பது.

பின் அவன் எத்தகைய தீமைகளை நமக்குச் செய்தானோ அந்த மனித உடலில் இருந்து வந்த உணர்வின் அலையை நம் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனறிவு கவர்ந்து நம் ஆன்மாவாக முதலில் மாற்றுகின்றது.

உயிர் அவ்வாறு தன் ஆன்மாவாக மாறியதை இழுத்து நம் உயிருடன் ஒன்றி நமக்குள் உணரச் செய்கின்றது. உணர்ந்தாலும் அது ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி நம் உடலாக மாற்றி விடுகின்றது.

1.முதலில் நாம் எதை எண்ணுகின்றோமோ… அது ஊழ்வினை என்ற வித்தாக ஆன பின்
2.அந்த உணர்வின் சத்து கருவாகி உடலுக்குள் உருவாகத் தொடங்கி விடுகின்றது.

அவன் எத்தகைய வேதனையை உருவாக்கினானோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் அணுவாக உருவாக்கி விட்டால் அது தான் அதற்கு உணவு.

காரணம்… அணுவாக உருவாகிய பின் அது மீண்டும் தன் உணவுக்காக உணர்ச்சிகளைத் தூண்டும். இதை உருவாக்கியது யார்…?

உயிர்.

அந்த உயிரின் தன்மை கொண்டு நாம் நுகர்ந்தபின்… அது தாயல்லவா…!
1.எந்த மனிதன் நம்மை வேதனைப்படும்படி சொன்னானோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது
2.அவனின் நினைவாற்றல் நமக்குள் மீண்டும் மீண்டும் வருகிறது.
3.நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணிய அந்த உணர்வலைகளை அனுப்புகின்றான்.
4.அதே உணர்வின் சத்தை நம் உடலில் உருவான அணுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது.

இதை நன்றாகக் கவனமாகத் தெரிந்து கொள்ளுங்கள்…!

நாம் ஆயிரம் நன்மைகள் செய்தாலும் ஒருவன் நம்மை கெட்டுப் போக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னான் என்றால் ஆழமாக அதை பதிவு செய்து விட்டால் அந்த எண்ணம் அந்த எண்ணம் உங்களைக் கெட்டுப் போகவே வைக்கும்.

அதிலிருந்து தப்புவதற்கு வழி வேண்டும் அல்லவா… அதுதான் விழித்திரு…!

1.“விழித்திரு…” என்றால் ஒருவர் நமக்குத் தீமை செய்கிறார் என்று உற்று நோக்கினால்
2.அந்த உணர்வுகள் தனக்குள் வராதபடித் தடுத்து நிறுத்த… அப்பொழுதே நாம் விழித்திருத்தல் வேண்டும்.

தாய் தந்தையரை எண்ணி ஓ…ம் ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடம் கண்ணின் நினைவைக் கொண்டு செல்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அந்த உணர்வுகளை ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உணவாகக் கொடுத்துப் பழக வேண்டும்.

அடுத்து… நாங்கள் பார்ப்பவர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும். யார் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குடும்பங்களில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.மெய் ஞானிகளால் நமக்குக் காட்டப் பெற்ற அந்த அரும் பெரும் சக்திகளை எடுத்து…
2.நம்மைக் காத்திடும் உணர்வாக என்றும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உணர்வை நம் நல்ல குணங்களுடனும்… சோர்வடைந்த மற்ற உணர்வுகளுடனும் இணைத்து அதை நாம் தியானித்து வருவோம் என்றால் நம்மிடமிருக்கும் இருள்கள் அகல்கின்றது.
1.பொருளறிந்து செயல்படும் உணர்வாக
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வுகள் நம்மிடத்தில் இயக்கம் பெறுகின்றன.

நாம் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகிறோம்.

பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்…!

பொங்கும் மங்கலம் பெறுவீர்கள்…!

 

கலி…! நாம் தீமையின் உணர்வை வளர்த்தால் தீமையின் செயலாகவே நம்மை மாற்றும். ஒளியின் உடலாகப் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்தால் தீமையை நீக்கி ஒளி என்று உருவாக்கும் பொழுது கல்கி…!
1.உயிர் ஒளியாக இருக்கின்றது…
2.உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் அருள் சக்தியை நாம் பெறுகின்றோம்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் அருள் உணர்வை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உடலில் எப்படி உருமாறுகிறது…? என்பதை அனுபவரீதியாக எனக்குக் கொடுத்தார்.

1.நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த உணர்ச்சிகள் வேறு
2.அதே சமயத்தில் உடலில் உள்ள எதிர் அணுக்கள் மாற்றப்படும் போது அது எப்படி ஆகின்றது
3.அப்படி அது தன்னுடைய வலுவாக இயக்கினாலும் அதைக் குறைக்க…
4.நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் வலுவான உணர்வுகளை நீ அதிகமாகச் சுவாசிக்கும் பொழுது அது எப்படி அடங்குகின்றது
5.ஆக… சுவாசிக்கும் பொழுது முதலில் எதிர்க்கின்றது. அதிகமாகி விட்டால் ஒடுங்கி விடுகின்றது என்று தெளிவாக்கினார்.

உதாரணமாக… தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்து விட்டால் அந்த நிறமே முழுமையாக ஆகிறது.
1.அதில் சிறிதளவு நல்ல நீரை விட்டால் அதுவும் அதே நிறமாகத் தான் தெரியும்.
2.ஆனால் நல்ல நீரை ஊற்ற… ஊற்ற… ஊற்ற… அந்த நிறம் மாறத் தொடங்குகிறது.

அதே போல் அழுக்குத் தண்ணீர் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்
1.அதில் நன்னீரை விட… விட… அழுக்குத் தண்ணீர் பொங்கி வெளியே வருகின்றது
2.நல்ல நீர் சேரச் சேரச் சேர அழுக்கின் தன்மை குறைந்து நன்மையின் உணர்வுகள் வருகின்றது

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பொங்கச் செய்ய வேண்டியது எது…? என்ற நிலையில் அருளைப் பொங்கச் செய்து இருளைத் தணியச் செய்ய வேண்டும்… அது தான் தைப் பொங்கல்…!

ஆகவே… பொருளைக் காணும் உணர்வின் அறிவைக் கூட்டுங்கள். வெகு தொலைவிலிருந்து வரும் இருளை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கின்றது.

அகஸ்தியன் துருவனாகித் துருவ நட்சத்திரமாக ஆனது. வெகு தொலைவிலிருந்து வரும் எத்தகைய உணர்வையும் அது பலவீனப்படுத்தி ஒளியாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தை எண்ணி… பேரருள் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த உணர்வினை நாம் அதிகாலையில் கவரப் பழக வேண்டும்.

1.பொங்கும் மங்கலமாக அதை நினைவுபடுத்தி
2.உங்கள் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
3.நானும் (ஞானகுரு) பிரார்த்தனை செய்கின்றேன்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று தினமும் அதிகாலையில் நீங்கள் விரும்பினால் “அந்த நறுமணங்கள்…” நிச்சயம் உங்களுக்குள் வரும். பேரானந்த நிலை பெறுவீர்கள்.

தோஷம்

தோஷம்

 

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும்.
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கின்றது…
தலை வலிக்கின்றது…
சர்க்கரைச் சத்து வந்து விட்டது…
இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்துவிடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் பட…படா.. பட…படா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு பட…படா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்.

அவர் தவறு செய்யவில்லை.
1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

நாம் சுவாசித்த பிறருடைய உணர்வுகள் இவ்வாறு தோஷமாக வந்து விடுகின்றது. அதைத் தான் நந்தீஸ்வரா…! என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நந்தீஸ்வரன் (சுவாசிப்பது)) என்றால்
1.நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும்.
2.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி… உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். நோயாக மாற்றாது… பகைமையை உருவாக்காது… ஏகாந்தமான உணர்ச்சிகள் வரும்.

இதுதான் தோஷத்தைக் கழிக்கும் முறை…!

நம்முடைய நண்பன் யார்… எதிரி யார்…?

நம்முடைய நண்பன் யார்… எதிரி யார்…?

 

கடை வைத்து நாம் வியாபாரம் செய்கின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஆத்ம சுத்தி செய்து விட்டுக் கடையில் உள்ள சரக்குகளைப் பார்க்க வேண்டும்.
1.இந்தப் பொருளைப் பயன்படுத்துபவர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும்.
2.அவருடைய உள்ளங்களில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்…. எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்.
5.பிறர் எங்களைப் பார்க்கும் பொழுது நல் உணர்வின் தன்மை கொண்டு பார்க்க வேண்டும் என்று
6.இத்தகைய உணர்வலைகளைக் கடையில் முதலில் பரப்பிவிட்டு வியாபாரத்தைத் தொடங்க வேண்டும்.

ஒரு தடவைக்கு இரண்டு தடவை மூன்று தடவை மாற்றி மாற்றி அதைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் உணர்வின் தன்மை வலுப்பெறும்… தொழில் சீராகும்… வியாபாரத்தில் நஷ்டம் என்பது வராது.

ஒவ்வொரு நிமிடமும்…
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உயர்ந்த உணர்வுகள் ஒலிபரப்பாகி
2.அது மீண்டும் நமக்குள் கவரப்பட்டு ஒரு பாதுகாப்புக் கவசமாக
3.சக்தி வாய்ந்த உணர்வின் அலையாக அங்கே தேங்கி நிற்கும்.

அப்போது நாம் யாரைச் சந்தித்தாலும் நாம் பேசும் உணர்வுகள் இது முன்னணியில் சென்று அங்கே நல்ல உணர்வுகளை ஊட்டும். யானை வரும் பின்னே… மணி ஓசை வரும் முன்னே…!

உதாரணமாக சங்கடமான அல்லது வேதனையான உணர்வுகளை ஒரு பதினைந்து நிமிடம் நாம் எடுத்து விட்டால் அடுத்து நாம் எந்த நல்ல காரியத்திற்குச் சென்றாலும் அல்லது நல்லதையே செய்தாலும் நாம் பேசும்போது
1.இந்த உணர்வுகள் முன்னணியில் சென்று
2.நாம் எந்த வேதனைப்பட்டோமோ அந்த உணர்ச்சிகளை அடுத்தவருக்குத் தூண்டி
3.அந்த உணர்வின் எண்ணத்திலேயே நம்மைப் பார்க்க வைக்கும்.

எந்த வேதனையினால் துடித்துக் கொண்டிருக்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே செயல்பட்டு நாம் எடுத்துக் கொண்ட அந்த காரியத்திற்குத் தடை விதிக்கும் நிலையாக உருவாகிவிடும்.

இதைத்தான் “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே…” என்று சொல்வது.

ஆகவே நாம் வெளிப்படுத்தும் உணர்வின் நிலைகள் உடனே அங்கே காட்டிக் கொடுத்து நம்முடைய உணர்வே அங்கே நம்மை எதிர்க்கச் செய்யும்… மற்றவர்கள் அல்ல.

1.நேற்று நல்லதைச் சொன்னார்கள்… இன்று என்னமோ கெட்டதாகச் சொல்கிறார்கள் என்று நாம் எண்ணினாலும்
2.நாம் அன்று எடுத்துக் கொண்ட உணர்வின் நிலை அவர்களுக்குள் பாய்ந்து அவ்வாறு அவர்களைப் பேசச் செய்கின்றது.
3.அவர்கள் நம்மை அவ்வாறு பேசவில்லை… நம் உணர்வே நமக்கு எதிரியாக மாறி விடுகின்றது.

ஆனால் நம்முடைய உணர்வே நமக்கு நண்பனாக வேண்டுமென்றால் அடிக்கடி அவசியம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். ஆத்ம சுத்தி மூலம் நல்ல உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கச் சுவாசிக்க நம் உயிர் அது அனைத்தையும் படைக்கின்றது.

இதைத் தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்று சொல்வது.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் ஒளியை உயிரின் துணை கொண்டு நமக்குள் படைத்து
1.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்திலே சுழல வேண்டும் என்ற நினைவைக் கூட்டி வளர்த்தால்
2.மீண்டும் ஒரு உடல் பெறாத நிலையில் நாம் அங்கே விண் செல்கிறோம்.

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றெல்லாம் சொல்கிறோம்.

இந்த உணர்வின் தன்மை திரும்பத் திரும்ப ஜெபிக்கப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்தப் புலன்கள் சும்மா இருப்பதில்லை
2.நாம் பேசுவதை எல்லாம் எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

என்னைப் பேசினார்கள்… பேசினார்கள்… என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் யார் திட்டினாரோ அவர்கள் காதிலும் இது விழுந்தால் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும்… இந்த உணர்வின் சத்து காந்த அலைகளை இழுத்து நமக்குள் அதை விளைய வைத்துக் கொண்டிருக்கும்.
1.அந்த உணர்வினை எண்ண… எண்ண… எண்ண…
2.விளைய வைத்ததை உடல் இழுத்து வைத்துக் கொண்டே இருக்கும்.
3.நமக்குப் பின்னாடியும் முன்னாடியும் (ஆன்மாவிலே) அது தான் நிற்கும்.

அதனின் இயக்கமாக என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்… என்று சொல்லி நாம் பாட்டுக்குப் பேசினாலும் “வேறு என்னென்னமோ… நம்மிடமிருந்து கிளம்பும்…”

பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாகவே வரும். அப்படிப் வெறுப்பாகப் பேசுவது அனைத்தையும் இந்தக் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடலின் முன் பக்கமாகவே நிறுத்திவிடும்.
1.முன்னாடி நின்றவுடன் மீண்டும் அந்த நினைவுகள் வரும் பொழுது
2.எங்கே பார்த்தாலும் இந்த நினைவுதான் வரும்.
3.ஏதாவது ஒரு நல்ல பொருளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அது சீராக நடக்காது.

வெறுப்பான நிலையில் நாம் வேலை செய்யும் போது பார்க்கலாம். எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ நீங்கள் எரிச்சலாக இருந்தால் குழம்பு வைக்கும்போது மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

என்னை இப்படியே பேசிக் கொண்டிருந்தான் என்ற வேதனை அதிகமாகி விட்டால் உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். உங்களை அறியாமலே உப்பை அதிகமாகக் கையில் அள்ளிப் போட வைக்கும்.

வேண்டும் என்றால் சங்கடமாக இருக்கும் போது பார்க்கலாம். குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். குழ்ம்பிலே உப்பு அதிகமாக இருக்கிறது…! என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் குறைந்தது இரண்டு மிளகாயாவது சேர்த்து அதிகமாகப் போட்டு விடுவீர்கள்… அப்புறம் எரிச்சலாகும். சலிப்பு சங்கடம் அதிகமாயிருந்தால் சீரகம் அதிகமாகிவிடும். சீரக வாசனை அதிகமாகி விட்டால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத் தக்கவாறு தான் குழம்பு வைக்கச் சொல்லும்.
1,சலிப்பான எண்ணத்துடன் அதிகமாகப் பேசியிருந்தால் புளிக்குழம்பைத் தான் வைக்க வேண்டும் என்று சாதிப்போம்.
2.புளியை அதிகமாகக் கரைத்து விட்டு விடுவோம்… உப்பைக் குறைத்து விடுவோம்.
3.குழம்பிலே புளிப்பு அதிகமாகிவிடும்.

அனுபவத்தில் நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

அதே மாதிரி இட்லிக்காக மாவை அரைத்து உப்பைப் போட்டுக் கரைத்து வைத்தால் மறு நாள் காலையில் இட்லியைச் சுட்டால் அதிகமாகப் புளித்துவிடும். இட்லி கல் மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ… நான் நன்றாகத் தானே செய்தேன்…! என்று சொல்லலாம். ஆனால் அந்தக் குணத்திற்குத் தக்கவாறு உணர்வின் தன்மை இயக்கிவிடும். மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு இருக்கின்றது.

வாழ்க்கையிலே ஒவ்வொன்றும் இவ்வாறு நம்மை இயக்குகிறது. திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்ப… பிறரின் குறைகளைப் பேசும்போது இத்தகைய உணர்வெல்லாம் வந்துவிடுகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடனுக்குடன் எடுத்து உடலுக்குள் சேர்த்து தீமைகள் உருவாகாதபடி மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிக்கடி யாம் (ஞானகுரு) சொல்கிறோம்.

எது வந்தாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லச் சொல்வதன் காரணம் என்ன…?

எது வந்தாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லச் சொல்வதன் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா…! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.

“ஈஸ்வரா…’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன…?

மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது…” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.

அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி… அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற… வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)

ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா… என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா…” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.

அதைப் போல் தான் எத்தனை பேர்… எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.

என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.

என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்… மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.

உங்கள் வியாபாரம் நன்றாக ஆகிக்கொண்டே இருக்கும்.

ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.

இன்று ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.

ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன…?

 

ஒவ்வொரு நொடியிலேயும் எப்பொழுது நமக்குத் தீமை என்று தெரிகிறதோ அது நமக்குள் வராது தடுக்க
1.தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்றே ஆக வேண்டும்.
2.அந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்ந்தோம் என்றால் அதை அடக்கிவிடும்.

பருப்பை வேக வைத்தால் முளைக்காது… சதுர்த்தி…! தீவினையின் உணர்வுகள் நமக்குள் வளராதபடி அப்போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

எதைக் (தீமைகளை) கண்ணிலே பார்த்தோமோ அடுத்த நொடியே அதனுடன் சேர்க்கப்படும் பொழுது அதை அடக்கி துருவ நட்சத்திரத்தின் சக்தி முன்னாடி வரும்.

1.கண் பார்வை ஒன்று தான் (தீமையை நுகர்ந்ததும்… தீமையை நீக்க நுகர்வதும்)
2.ஆனால் அடுத்த கணம் கொண்டு வரும் பொழுது அடுத்த வரிசையில் வருகின்றது
3.அடுத்த வரிசையில் வரப்படும்போது எதிலே பதிவானதோ அதிலேயே சேர்த்துப் பதிவாகின்றது.

அதைத்தான் என்று இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி மறைவுக்குப் பின்… இராமன் காட்டிற்குச் சென்ற பின்… பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” எங்கள் சாம்ராஜ்யத்தில் இத்தகைய தீமை வந்திருக்காது…! என்று சொல்கின்றார்.

ஆகவே அந்த அருள் உணர்வை நமக்குள் பதிவாக்கி தீமைகள் வளராதபடி உடனே செயல்படுத்த வேண்டும்.

ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்று கேள்விப்படுகின்றோம். இன்ன நோய் என்றும் தெரிந்து கொள்கின்றோம். அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்… அந்த நிமிடமே…!

இல்லை என்றால் முன் பகுதி போவது (வேதனையும் நோயும்) முன்னாடி போகும்.
1.உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்… அந்த உணர்ச்சிகள் அதிகமாகும்.
2.நல்லதை எண்ண விடாது நம்மைத் தடுத்துக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் அடுத்த கணமே அப்போதே அன்றே கொன்றிருந்தால் என்று பரதன் சொல்வதாக இராமாயணம் காட்டுகின்றது.

சங்கடமோ சலிப்போ வெறுப்போ வேதனையோ கோபமோ ஆத்திரமோ வந்தால்
1.அடுத்த கணமே பிரேக் போட்ட மாதிரி
2.அவைகளை நிறுத்த வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவி எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும. அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நோயுற்றவரின் உடலில் படர வேண்டும். அவர்கள் உடல் நோய் நீங்க வேண்டும். அவர் உடல் நலம் பெற வேண்டும். அவர் நல்லவராக வேண்டும். குடும்பத்தில் உயர்ந்த நிலை பெற வேண்டும். மலரைப் போன்ற மணம் பெற வேண்டும். மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எத்தனை வேண்டுமென்றாலும் அடுத்து நல்லதுகளைச் சொல்லலாம்.

உதாரணமாக ரோட்டில் செல்கிறறோம். இரண்டு பேர் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்… சண்டை போடுகிறார்கள்…!

பார்த்தவுடனே நமக்கும் அந்த ஆத்திரம் வருகிறது… இப்படிப் பேசுகிறார்களே என்று கொதிப்பு வருகிறது.

அதை உடனே அப்போதே நிறுத்த வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று அதை எண்ணி எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் அந்த இரண்டு பேரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் அந்த சக்தி அருள் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்
1.அவரிடம் சொல்லக் கூடாது
2.உங்கள் மனதிலே உடலிலே அந்தத் தீமை உருவாகதபடி தடுத்துப் பழக வேண்டும்.

ஆனால் இப்படிச் செய்யவில்லை என்றால் அவர்களை நினைக்கும் போதெல்லாம் இந்த ஆத்திரம் வரும்.
1.அந்த உணர்வு கருவாகி விட்டது என்றால் அணுவாகிவிடும்
2.அணுவின் தன்மை அடைந்தால் மலமாகிறது… மலம் நம் உடலாக மாறிவிடும்.
3.அதனின் வளர்ச்சி அதிகமானால் இரத்தக் கொதிப்பாக உடலில் மாறும்.

இதை எல்லாம் தடுத்துப் பழக வேண்டும் என்பதற்காகத் தான் உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

மகரிஷிகளின் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வுகள்

 

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் உற்றுப் பார்த்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் ஒரு துளி விஷம் பட்டால் பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால் நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர். ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதைப் போன்று நம் மனதையும் அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் தூய்மைப்படுத்தும் அருள் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

நம் உடலுடன் ஒட்டி இருக்கக்கூடிய தீய வினைகளைக் கரைக்கும் வழி

 

நம் பூமியினுடைய காற்றழுத்த மண்டலத்தில் மோதியபின் நெருப்பாகப் புகையாக மாறுகிறது. அது எந்தப் பக்கம் அதிகமாகப் படர்கிறதோ அந்த இடத்தில் வித்தியாசமான நிலைகள் வரும். அதைத் தான் “வால் நட்சத்திரம்” (COMET) என்று சொல்வது.

இதே மாதிரி நாம் பேசக்கூடிய பேச்சு வெளிப்படுத்தும் மூச்சலைகள் எல்லாமே இங்கே இருக்கிறது. நம் உடலிலும் இருக்கிறது… சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தக் காற்றிலும் இருக்கின்றது.

உதாரணமாக டி.வி. ரேடியாவில் ஒலி/ஒளிபரப்பு செய்தவுடன் எந்த ஸ்டேஷனை நாம் திருப்பி வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுக்கின்றது… ஒலியையும் ஒளியையும் காட்டுகின்றது.

அது போல் மனிதன் உயிருடன் வாழும் நிலையில் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.
1.இரவிலே நாம் புலனடங்கித் தூங்கினாலும் கூட
2.நாம் பகலில் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அந்த உணர்வுகள் ஆன்மாவில் வந்து சேருகின்றது.

எந்த வேதனையையோ கோபத்தையோ ஆத்திரத்தையோ படுகின்றோமோ அந்த உணர்வெல்லாம் உயிரிலே பட்டுக் கனவுகளாக வருகின்றது.

அந்த உணர்ச்சிகள் திடீரென்று நம்மைத் தூக்கத்திலிருந்து எழும்படி செய்து “என்னை அடிக்க வருகின்றான்…” என்று கத்த வைக்கின்றது. இதையெல்லாம் நாம் பார்க்கின்றோம் அல்லவா.

நமக்குள் இருப்பது பரமாத்மாவிலிருந்து தான் இதையெல்லாம் இழுக்கின்றது. எதன் வலுவோ அதன் வழி கூடி நம்மை இயக்குகின்றது.

ஆகவே
1.காற்றிலே இது போன்ற நிலைகளை எல்லாம் இல்லாமல் செய்ய வேண்டுமா இல்லையா.
2.அதுதான் விநாயகர் சதுர்த்தி…! தீமை செய்யும் உணர்வுகளை நாம் வராதபடி நிறுத்த வேண்டும்.

நம்முடைய சாஸ்திரங்களில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நாம் யாராவது சிந்தித்திறோமா…? இல்லை.

நாம் பேசியது இன்னொருவர் உடலிலே ஊழ்வினை என்ற வித்ததாக இருக்கிறது. நாம் பேசியது… நாம் சண்டை போட்டது… அடுத்தவர் சொன்னது… அடுத்தவர் சங்கடப்பட்டது… நோய்வாய்ப்பட்டது எல்லாமே சூரியன் எடுத்து அலைகளாக வைத்திருக்கின்றது.

நம் உடலிலிருக்கும் உணர்ச்சிகள் உந்தியவுடன் அந்த அணுக்களுக்குப் பசிக்கும்போது உயிருக்கு வருகின்றது.. கண் வழி கவர்கின்றோம்… நுகர்கின்றோம்.
1.அதே எண்ணம் வருகின்றது..
2.தீய வினைகளை நம் உடலாக மாற்றுகின்றது… நல்ல உணர்வின் அணுக்கள் ஒடுங்குகின்றது.
3.இதை எல்லாம் கரைக்க வேண்டுமா இல்லையா…?

அதற்காகத்தான் விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணில் பொம்மையைச் செய்து தீயவினைகளைக் கரைக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. ஆனால் இன்று நாம் வெறும் களிமண்ணில் பொம்மையைச் செய்து நீரிலே கரைக்கின்றோம்.

ஆனால் நம்மை அறியாது உடலிலே சேர்ந்த… நம் உடலுடன் ஒட்டி இருக்கக் கூடிய அந்தத் தீய வினைகளைக் கரைக்க வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது.

1.சாப்பாடு இல்லாமல் செய்து விட்டாலே எதுவுமே கரைந்துவிடும்.
2.அது போல் தான் நம் உடலில் உள்ள தீய அணுக்களுக்குச் சாப்பாடு இல்லை என்றால் தன்னாலே கரைகின்றது.

அதற்குச் சாப்பாடு எங்கிருந்து எடுக்கின்றது…?

நம் பூமி ஒரு பரம். இந்தப் பரமாத்மாவில் தான் எல்லாமே இருக்கின்றது. அதிலிருந்து எடுத்துத் தான் உடலில் இருப்பது வளர்கிறது.

எந்தச் செடியில் வித்து விளைந்ததோ அதை மீண்டும் பூமியில் ஊன்றினோம் என்றால் பரமாத்மாவில் இருக்கும் தாய்ச் செடி வெளியிட்ட அதனின் சத்தைக் கவர்ந்து விளைகிறது.

இது எல்லாம் செடி கொடிகளுக்குச் தெரியாது.. மிருகங்களுக்கும் தெரியாது. எதனின் உணர்வை நுகர்ந்ததோ அந்த உணர்வின் இயக்கமாகத்தான் அவை இருக்கும்.

ஆனால் மனிதன் இதை எல்லாம் அறியும் ஆற்றல் பெற்றவன். மாற்றி அமைக்கும் சக்தியும் பெற்றவன்.

ஆகையினால் எத்தகைய தீமைகளாக இருந்தாலும் அதை எல்லாம் ஞானிகள் உணர்வு கொண்டு வேக வைக்க வேண்டும். ஒரு பருப்பை வேக வைத்த பின் மீண்டும் அதை மண்ணிலே விதைத்தால் அது முளைக்காது.

ஆகவே அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா… என்று எண்ணி
3.உள்முகமாக உடலுக்குள் செலுத்தித் தீய வினைகளை வேக வைத்து நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்