துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

துருவ நட்சத்திரமாக… அந்த ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

 

எல்லாவற்றையும் உருவாக்கிய.. நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளினால் தான் இயற்கையின் உண்மைகளை எல்லாம் நான் அறிந்து கொண்டேன்.

ஆகவே…
1.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்.
2.இந்தச் சொல் பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும். அந்த அருள் உணர்வுகளை நாம் பெறுவோம்.
3.குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து நாம் இந்த வாழ்க்கையைக் கொண்டு சென்றோம் என்றால்
4.என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கிறோம்… இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.
5.நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழையைப் பெய்யச் செய்யலாம்.
6.கொடிய நோய்களையும் நாம் வாழும் இடங்களில் வராது தடுக்க முடியும்.
7.எத்தனையோ வகையான மற்ற தீமைகளை அகற்றும் சக்தி நாம் பெறுகின்றோம்.

பகைமை வந்தால் அதை அகற்றிடும் அருள் சக்தி பெற வேண்டும். ஊரில் இருப்பவர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். பகைமையற்ற நிலைகள் வரவேண்டும்.

1.எல்லா உயிரும் கடவுள்
2.எல்லா உடலும் கோவில்
3.எல்லா உடலும் சிவம்
4.எல்லோருடைய கண்களும் கண்ணன்
5.எண்ணும் எண்ணம் இராமன்.
6.அந்த மகிழ்ச்சியான உணர்வுகள் நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் அனைத்தையும் தூய்மைப்படுத்தும் உணர்வாக வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம் வளர்வோம். இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற “இந்த உறுதியை எடுத்துக் கொள்வோம்…”

அந்த அருள் பெற வேண்டும் என்று வாழ்வோம். அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம் குரு வழி வாழ்வோம். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் பெறுவோம்.

அதன் வழி எல்லாம் ஒளி என்ற உணர்வுடன் ஒன்றுவோம். துருவ நட்சத்திரமாக ஆவோம். அதன் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலங்களாக வளர்வோம். ஒன்றுடன் ஒன்று… ஒன்று துணையாகித்தான் ஒன்றின் நிலை வளர்கின்றது.

விஜயதசமி…! விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்த உயிர் பத்தாம் நிலை அடையக்கூடிய ஒளியின் சரீரமாகும். ஆகவே அருள் ஒளியைப் பெற்று என்றுமே நாம் பிறவில்லா நிலை அடைய பிரார்த்திப்போம். பத்தாவது நிலையான கல்கி என்ற ஒளியை நாம் அடைவோம்

1.உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்திற்கே இப்பொழுது அழைத்துச் சென்றது.
2.இந்த உணர்வை நீங்கள் அனைவரும் பெருக்கிக் கொள்ளுங்கள்.

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

தீமைகளைக் கிழித்தெறியும் மெய் ஞானிகளின் அலைவரிசை

 

‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன ஓசோன் திரையையும் அணு குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால் விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

விஞ்ஞானக் கருவி கொண்டு விண்ணிலே பல அலைகளைப் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
1.விண்ணிலே பாய்ச்சினால் இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம்.
2.ஆனால் விண்ணிலே விஷத் துகள்கள் பரப்பப்படும்போது புவியின் ஈர்ப்புக்குள்
3.”சுழற்சியில் வரப்படும்போது” அந்த அலைகள் பூமிக்குள் வருகிறது.

அப்படி அலைகள் வரப்படும்போது தான் விஷத்தின் தன்மையை முறியடிக்கக் கூடிய சக்தி அதற்கு இருந்தாலும் மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்டது அந்த ஒசோன் திரையைக் கிழித்து விடுகின்றது.

விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள் துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.
1.அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு விட்டது.
2.நாம் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கு நாம் செய்ய வேண்டிய ஒரே முறை அந்த மெய் ஞானியரின் அருளை நமக்குள் பெருக்குவது தான்.

ஓசோன் திரை எப்படிக் கிழிந்து வருகிறதோ அதைப் போன்று மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை நாம் பெற வேண்டும்.

1.நாம் சாதாரண மனிதர்கள் என்று எண்ண வேண்டாம்.
2.நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான்… பணம் வசதி உள்ளவர்கள் யாருமில்லை.
3.எண்ணத்தின் வலுவை நாம் பெற்று மெய் ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும்.

அதனின் வலுக்கொண்டு தீயசக்திகள் நம்மை அணுகாது நாம் பாதுகாக்க வேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெற வேண்டும்… நமக்குள் பெருக்க வேண்டும்.

எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனரோ அதைப் போல அந்த மெய் ஞானியரின் அருள் ஒளியை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி “இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும். ..”

அப்படிப் பழகுவதற்குத்தான் ஆத்ம சுத்தியும் பயிற்சியும் கொடுத்தது.

1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மெய் ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு
2.நமக்குள்ளும் இந்த உலகிற்குள்ளும் வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

தியானிக்கும் பொழுது என் நெற்றியைப் பார்க்கச் சொன்னதன் நோக்கம்

 

குரு காட்டிய அருள் வழியில் என் உயிரான ஈசனிடம் வேண்டி என் குரு காட்டிய அருள் உணர்வை நான் ஏங்கிப் பெறுகின்றேன்.
1.அந்த அருள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் நீங்கள் உங்கள் உயிரை வேண்டும் பொழுது
2.கண்ணின் வழி குரு காட்டிய அருள் வழியில் “அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றேன்…”

குரு எனக்கு அதன் வழி தான் காட்டிக் கொண்டு வந்தார். அதன் வழியே உங்களுக்கும் குரு வழியைக் காட்டி அந்த உணர்வினை எடுக்கும்படி செய்வதற்காக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இப்பொழுது என்னுடைய நெற்றியில் புருவ மத்தியைப் பாருங்கள்…! அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி அப்படியே உற்றுப் பாருங்கள்.

குரு காட்டிய அருள் வழியில் அவர் அருள் வழி காட்டிய அகஸ்தியனுடைய அருளும் அவன் துருவனான அந்த அருள் உணர்வும் துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளும்
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று என் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்கின்றேன்.
2.அதன் வழி நீங்கள் ஏங்கும்போது அந்த உணர்வுகள் அந்த அலைகள் இங்கே வந்து
3.உங்கள் உடலில் அந்த உணர்ச்சிகள் பரவி பேரருளைப் பெறும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

நாம் அதிலே ஆயுள் கால மெம்பராக இணைகின்றோம். இதிலிருந்து உறுதி பூண்டு யாம் உபதேசித்த உணர்வின் வழிப்படி வாழ்க்கையில் வழி நடத்துகின்றேன். அந்த வழி நடத்தும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி அதே உணர்வு கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி உற்றுப் பாருங்கள்… அதை ஏங்கிப் பெறுங்கள்.

உங்களுக்கு… உங்கள் உயிரான ஈசனிடம் நான் வேண்டி…
1.ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் படர வேண்டும்
3.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
4.துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
5.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
6.உங்கள் உடலில் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்று உங்களைத் தியானிக்கின்றேன்.

நீங்களும் அதன் வழி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது அந்த அருள் உணர்வுகள் நீங்கள் பெறுவதை உணர முடியும் உங்கள் உடலில் அது ஒளியலைகளாகப் பரவுவதையும் உணரலாம்.

நம்மை வேகா நிலை பெறச் செய்யும் “சமைக்கும் பக்குவம்”

நம்மை வேகா நிலை பெறச் செய்யும் “சமைக்கும் பக்குவம்”

 

விறகுக் கட்டை இருக்கின்றது… அதை எரித்தால் வெளிச்சமாக ஒளியாகத் தான் மாறுகின்றது… அது நன்மை செய்கின்றது.

அதைப் போல் தீமை என்ற உணர்வுகள் வந்தாலும் அருள் ஒளியை நாம் எடுத்து அதனுடன் இணைக்க வேண்டும்.
1.ஏனென்றால் ஒளியாகத் தொக்கி உள்ளதுதான்… அதை இயக்குகின்றது.
2.அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது ஒளி என்ற நிலையில் மாறுகின்றது.

கட்டையை எரித்தால் கருகுகிறது… ஆனால் வெளிச்சம் கொடுக்கின்றது… ஒன்றைச் சமைக்க உதவுகின்றது. இதை போலத் தான்
1.வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் கதிரியக்கப் பொறியின் உணர்வால் தான் இயக்குகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வை அதற்குள் சேர்த்து நல்ல முறையில் இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வை நீக்கிவிடும்.
3.நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் அந்த வலிமையும் கிடைக்கும்.

இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதைச் செய்து பழக வேண்டும்.

யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்று பார்த்துத் தியானித்தால் அதிலிருந்து ஒளிகள் வரும்… நல்ல சிந்தனைகளைத் தூண்டும்… உங்களுக்கு வழி காட்டும்.

ஆனால் அதிலே உங்கள் ஆசையைக் கூட்டி விடாதீர்கள். உடல் ஆசையைக் கூட்ட வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையை மட்டும் கூட்டுங்கள்.

அருள் உணர்வுகள் பெற வேண்டும் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என் சொல் எல்லோரையும் நல்லதாக்க வேண்டும் என்று இதை மட்டும் கூட்டுங்கள். நல்ல உணர்வைக் கொண்டு வரும்.

வேதனையை எண்ணாதீர்கள்.
1.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் எந்த எண்ணுங்கள்.
2.என் மனைவி அருள் உணர்வுகள் பெற்றுத் தெளிந்த நிலை பெற வேண்டும்.
3.அதன் பார்வை என்னைத் தெளிவாக்க வேண்டும் என்று இப்படி இணைத்து வாருங்கள்.
4.உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.
5.ஆகவே உயிருடன் ஒன்றுகின்றோம் இருளை அகற்றுகின்றோம் ஒளியான உணர்வாக வளர்கின்றோம்.
6.நம்முடைய ஆயுள் காலம் என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை வருகின்றது.

நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்க்கப்படும் போது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்… அந்த அருளைப் பெறுகின்றீர்கள் எல்லோருக்கும் பாய்ச்சுகின்றீர்கள். அதே போல் நான் உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.

இந்த உணர்வு ஒன்றாகும் பொழுது ஒளியின் வலு கூடுகிறது. இருளை அகற்றும் வலிமை பெறும். என்றும் அழியா ஒளி சக்தியை நாம் பெறுகின்றோம். அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செயல்படுத்த வேண்டியது

 

எலக்ட்ரானிக் என்ற நிலைகளை வைத்திருக்கின்றார்கள்… நாம் அருகிலே சென்றவுடன் கதவு திறக்கின்றது. மனிதன் இவ்வாறு கொண்டு வருகின்றான்.

அதே போன்றுதான் வேதனை என்ற உணர்வு ஆன பிற்பாடு உடலுக்குள் சிக்கலை ஊட்டி விடுகின்றது. காரணம் நாம் நுகரும் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது… அந்த உணர்வுகள் அதிகமாகின்றது.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று விஞ்ஞானம் தெளிவாகக் கொடுக்கின்றது… நிரூபிக்கின்றது. ஆனால் மெய் ஞானிகள் காட்டியது…
1.பிறருடைய உணர்வுகளை வேகமாக எடுக்கப்படும் பொழுது
2.நம் நல்ல உணர்வுகளை உடைத்து விட்டு உள்ளே செல்வது போல் ஆகிவிடுகின்றது.

ஆகையினால் நாம் எங்கிருந்தாலும் இந்த உணர்வின் அழுத்தம்… “அந்தக் கோபம் நமக்குள் வராது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?”

மகரிஷிகளின் அருள் சக்திகளை அடிக்கடி நம் உடலுக்குள் சேர்த்து இணைக்கப் பழக வேண்டும். அப்போது மகரிஷிகள் உணர்வு சார்ஜ் அதிகமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. என் கணவருக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். அவர் வேலை செய்யும் இடங்களிலே பேரும் புகழும் பெற வேண்டும்… நல்ல முறையில் அவர் வேலை செய்ய வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்து வளர்க்க வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சார்ஜை அடிக்கடி ஏற்றிக் கொண்டே வர வேண்டும்.
2.இது பாதுகாக்கும் சக்தியாக வரும்.

ஏனென்றால் தியானம் என்பது ஒவ்வொரு நொடியிலும் தீமைகள் புகாது தடுத்துப் பழகுவது தான். துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிச் சேர்க்கும் பொழுது வாழ் நாளில் எல்லா அணுக்களுக்கும் சேர்க்கின்றோம்.

புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் போது தீமையிலிருந்து விடுபட்டுத் தான் வந்திருக்கின்றோம். மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் தீமையெல்லாம் நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அந்தச் சக்தி காற்றில் இருக்கின்றது… அதை எடுத்து பயன்படுத்தி அந்த உணர்வை வளர்த்துக் கொண்டு வந்தோம் என்றால்
1.துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைகின்றோம்.
2.மெம்பர்கள் வாழ்க்கையில் தன் குடும்பத்தில் இதைக் கடைப்பிடித்தாக வேண்டும்.

எத்தகைய தீமை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கொண்டு அதை அடக்கி பையனுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலிலே நஷ்டம் என்ற வார்த்தையை விடுத்துவிட வேண்டும். துருவ நட்சத்திரத்தை எண்ணினால் நல்ல சிந்தனை வரும்… எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்ற ஞானங்கள் வரும். அதற்குத் தக்க எண்ணங்கள் வரும்.

ஆனால் அடுத்தவரிடம் போய் என் தொழில் நஷ்டமாக இருக்கிறது…! என்று சொன்னால் அவர் ஒரு விதமாகச் சொல்வார் இன்னொருவர் இன்னொரு விதமாகச் சொல்வார்.

எல்லாவற்றையும் சேர்த்துக் குழப்பிவிட்டு “ஒன்றுமே தொழில் செய்ய முடியாது போல் இருக்கின்றது…” என்ற அந்த உணர்வு வந்து சோர்வடைந்து விடுவீர்கள். ஆக நம்மையே நாம் தாழ்த்திக் கொள்கின்றோம்.

1.கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து
2.உயர்ந்த ஞானம் கிடைக்க வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்
3.தொழிலில் வீரிய சக்தி கிடைக்கும் அந்த ஞானம் கிடைக்க வேண்டும் என்று
4.காலை துருவ தியானத்தில் எடுத்து இதைப் பாய்ச்சிப் பாருங்கள்.

கணவர் மன வலிமை பெற வேண்டும்… அவருடைய எண்ணங்கள் சீராக இருக்க வேண்டும்… அனைவரும் போற்றும் நிலை பெற வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் வாடிக்கையாளர்களும் மற்றவர்களும் நன்றாக இருக்க வேண்டும்… உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்று மனைவி எண்ணிவிட்டால் “வேறு யாரிடம் யோசனை கேட்க வேண்டியதில்லை…”

நீங்கள் தொழிலுக்குச் செல்லுங்கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்… நல்ல சரக்கைத் தேர்ந்தெடுக்கும் சக்தி கிடைக்கும் வியாபாரம் பெருகும் என்று என்று மனைவி சொல்லி அனுப்ப வேண்டும்.

1.இத்தகைய நல்ல உணர்வுகளைக் கணவன் மனைவிக்குள் உருவாக்க வேண்டும்.
2.அதைச் செயலாக்கிப் பார்க்க வேண்டும்… நாம் வாழ்ந்து காட்ட வேண்டும்… மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதையே மற்றவர்களிடம் இதன் வழி செயல்படுத்துங்கள் என்று சொல்ல வேண்டும்.
1.இந்த நல்ல உணர்வுகள் அங்கே விளைய வேண்டும்… அவர்கள் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.
2.அவர்கள் உடலில் விளையும் அந்த நல்ல மூச்சலைகள் இங்கே படர வேண்டும்.
3.நம் வீட்டில் மட்டுமல்ல… நாம் சொல்லும் உணர்வுகளை நுகர்வோர் குடும்பத்திலும் இது பரவி கஷ்டங்கள் அகல வேண்டும்.
4.நாம் வசிக்கும் தெருவிலும் நல்ல உணர்வுகள் படர வேண்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வர வேண்டும் என்று எண்ண வேண்டும்.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதைச் சீராக செயல்படுத்துங்கள்.

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

யுத்த காலங்களில் நாம் இணைக்க வேண்டிய உயர்ந்த சக்தி

 

தாவர இனங்களில் விளைந்தவற்றைத்தான் மனிதர்கள் நாம் உணவாக உட்கொண்டு வளர்ந்து வந்துள்ளோம்.
1.அதில் உருவானது தான் நம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் அணுக்களும் எல்லாமே
2.ஆகவே தாவர இனத்தின் உணர்வுகள் நம்மிடம் உண்டு…!

பல பிறவிகள் கடந்து வந்த பின் தாவர இனங்கள் அனைத்தும் செழித்து வளர வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்தினால் இந்த உணர்வு அங்கு இணைக்கப்படுகின்றது.

நல்ல உணர்வின் தன்மையாக நாம் பாய்ச்சப்படும் பொழுது தீமை என்ற உணர்ச்சிகளை மாற்றி நல்ல நிலைகள் கொண்டு தாவரங்கள் வளரும்.

1.ஆனால் நீங்கள் சங்கடமாக சலிப்பாக இருந்து உங்கள் வயலுக்குச் சென்று உற்றுப் பாருங்கள்.
2.பயிர்களின் வளர்ச்சி எப்படிக் குறைகிறது…? என்று பாருங்கள்.

வீட்டில் நல்ல செடியை வளருங்கள். அடுத்தவரிடம் சண்டை போட்டுவிட்டு அந்த உணர்வுடன் நீரை அதற்கு ஊற்றிப் பாருங்கள்… செடி கருகிப்போகும்.

ஏனென்றால் புழுவாக பூச்சியாக இருக்கும் பொழுது நாம் அதை உட்கொண்டு தான் வந்துள்ளோம்… இந்த உணர்வின் தன்மை வரும். மனிதனாக இப்போது முழுமை அடைந்திருக்கின்றோம் இந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது அது கருகும்.

அதே சமயத்தில் தியானத்திலே உயர்ந்த உணர்வுகளை உங்களுக்குள் வலுக் கூட்டி இந்த செடி நன்றாக வளர வேண்டும் நல்ல பலன் தர வேண்டும் என்று உங்கள் பார்வையில் பாருங்கள்.

1.எந்த அளவுக்கு நீங்கள் சக்தி வளர்த்துக் கொண்டீர்களோ நீரை ஊற்றியோ அல்லது கண்களிலே பார்த்தால் கூட இந்த உணர்வுகள் அங்கே பாயும்.
2.இப்படி அங்கே பரவச் செய்யும் போது செடிகளில் தீமையின் அணுக்கள் குறையத் தொடங்கும்.

இதையெல்லாம் உங்கள் மனதில் உருவான உணர்வின் தன்மை எதை நினைவுக்குக் கொண்டு வருகின்றீர்களா அதன் வழி அங்கே நடக்கும்.

அதனால்தான் தியானத்தில் உங்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்கப்படும் பொழுது… மகரிஷிகள் உணர்வுகள் மேகங்களிலே படர வேண்டும்… மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும்…! என்று இந்த உணர்வைச் செலுத்தச சொல்கின்றோம்.

அந்த மேகக் கூட்டத்திற்குள் இந்த உணர்வுகள் கலக்கின்றது. அந்த மழை நீர் பட்டுத் தான் நாம் அனைவருமே வளர்ந்து வந்திருக்கின்றோம். இந்த உணர்வின் எண்ணத்தால் அங்கே பாய்ச்சப்படும் பொழுது செடிகளும் நன்றாகச் செழித்து வளர்கின்றது.

1.காரணம் எல்லாவற்றிலுமே காந்தப்புலன் உண்டு… எல்லாவற்றிலுமே அது கலந்து கொள்கின்றது.
2.நாம் உயர்ந்த உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது கலந்து மழை நீராக நன்னீராக வரும் பொழுது தீமைகளை அகற்றும் சக்தி பெறுகின்றது.
3.மனிதனால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் மேகக் கூட்டத்துடன் கலந்து “நல்ல மழையாகப் பெய்யும்…”

ஆனால் மனிதன் விஞ்ஞானத்தினால் வெளிப்படுத்தப்படும் புகை மண்டலங்களும் பல விஷ உணர்வுகளும் மேகக் கூட்டத்திலே கலக்கின்றது. அமிலம் கலந்த நீராகத் தாவர இனங்களுக்குத் தொல்லை கொடுக்கும் சக்தியாக கலந்து விடுகின்றது.

அது மட்டுமல்ல…!
1.யுத்த காலங்களில் பார்த்தோம் என்றால் மழை பெய்தாலே செடி கொடிகள் கருகும்.
2.காரணம்… பகைமை கொண்டு ஒருவனுக்கு ஒருவன் கொன்றிடும் உணர்வுகள் அங்கே படரப் படும் பொழுது அவ்வாறு ஆகிறது.

இது போன்ற நிலைகளில் இருந்து நாம் அனைவரும் காக்கும் சக்தியாக துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் வலுவாகப் பெருக்கி இந்த உணர்வினை மேகக் கூட்டங்களிலே படரச் செய்யும் போது நல்ல மழை நீராகப் பெய்யும்.

நாம் பார்ப்போர் அனைவரையும் நம் ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் தூய்மைப்படுத்த இது உதவும். “ஒவ்வொருவரும் நாம் இதைச் செய்ய வேண்டும்…”

1.யுத்த காலங்களில் நம்மைப் பாதுகாக்கவும் உற்றார் உறவினர் நண்பர்களைப் பாதுகாக்கவும் இந்தச் சக்தி நமக்கு உதவியாக இருக்கும்.
2.எந்த நிலையில் நாம் உடலை விட்டுச் சென்றாலும் பிறவி இல்லா நிலை அடைய இது உதவும்.

ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்

ஞானிகள் உணர்வை மிக வீரியமான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றோம்

 

உதாரணமாக… பால் மாடு அது பால் குறையாகக் கறப்பினும் விஞ்ஞான அறிவு கொண்டு மற்ற மாடுகளின் அணு செல்களை எடுத்து…
1.பாலை அதிகமாக உற்பத்தி செய்யும் அந்த ஜீன்களை அதிகமாக அதனுடன் சேர்த்து அந்தக் கருவுடன் இணைக்கப்படும் பொழுது…
2.ஒரு லிட்டர் கறப்பதை 20 லிட்டர் கறக்கும் சக்தியாக அந்த அணுக்களை உருவாக்கி விடுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நோயின் தன்மையை மாற்றுவதற்காக இதைப் போல சில அணுக்களை உருவாக்கி நோயை மாற்றிடும் சக்தியையும் விஞ்ஞான அறிவு கொண்டு செயல்படுத்துகின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் ஒரு நோயாளியைப் பற்றி நாம் கேட்டறிந்தால் அதை உயிர் ஓ என்று ஜீவ அணுவாக மாற்றும் திறன் பெறுகின்றது. அணுவாக மாறும் இந்திரீயமாக கருவாக உருவாகின்றது.

அதே சமயத்தில் அது அணுவாக உருவாவதற்கு முன் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் இதனுடன் இணைத்து விட்டால் அந்த நோயை உருவாக்கும் தன்மை குறைத்துவிடும்.
1.ஆக நோயை அடக்கிடும் அருள் ஞானிகள் உணர்வை உடலில் விளைவிக்கும் பொழுது
2.நமக்குள் நோயின் தன்மை உருவாகாது அறியும் தன்மை வரும்.
3.நம் பார்வையில் அடுத்தவருக்கு நோய் நீங்க வேண்டும் என்று சொன்னால்
4.கேட்டறிந்த உணர்வுகள் அவருக்குள்ளும் சென்று “நோயை நீக்கிடும் உணர்வின் அணுக்கள்…” அங்கே உருவாகின்றது.
5.திரும்பத் திரும்ப அவர்கள் அதை எண்ணினால் நோயை நீக்கும் அருள் சக்தி அவர்கள் பெறுகின்றார்கள்.

இந்த உணர்வை நாமும் அடிக்கடி எண்ணி வளர்த்துக் கொண்டால் நோய் வராது தடுப்பதும் அருள் ஞானத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த வாழ்க்கையில் வரும் துன்பங்களை மாற்றி அமைக்கும் திறனும் நாம் பெறுகின்றோம்.

ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துச் செயல்படும் சக்தியும் நாம் பெறுகின்றோம். இந்த வாழ்க்கையில் சிரமமில்லாத வாழவும் சிரமங்கள் வரும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் நமக்குள் அது உருவாகின்றது.

ஆகவே கோபப்படுவார்களையோ வெறுப்படைவோரையோ வெறுப்புடன் பார்ப்பவர்களையோ பார்த்தால் கேட்டறிந்தால் அந்த உணர்வு நமக்குள் இந்திரீகமாக மாறிவிடுகிறது.

ஆனால் அடுத்த கணம் அதனுடன் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால் அதனுடைய வீரியத்தைத் தணித்து நமக்குகந்த நிலையில் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
1.அதற்குத் தான் மகரிஷிகள் உணர்வை இந்த உபதேசத்தின் வாயிலாக அடிக்கடி பதிவு செய்கின்றோம்… பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
2.தீமைகள் வராது பாதுகாத்துக் கொள்ள இது உதவும்.

தியானப் பயிற்சி

தியானப் பயிற்சி

 

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷி ஆகித் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்.
1.கண்ணின் நினைவை அங்கே கொண்டு செல்லுங்கள்… கண்ணால் ஈர்க்கும் சக்தி வரும்.
2.இந்த உணர்வுகள் நெஞ்சின் எலும்புக்குள் ஊழ் ஊழ்வினை என்ற வித்தாக இப்பொழுது பதிவாகின்றது.
3.உங்கள் நெஞ்சில் பதிவாகும் உணர்வுகள் தெரிய வரும்.

கண்களால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவரும் சக்தி வருகின்றது. கருமணிகளில் ஈர்க்கும் சக்தி கிடைக்கும். கண் கனமாக இருக்கும். கருமணியில் கவரப்படும் பொழுது நெஞ்சிலே ஊழ் வினை என்ற ஞானவித்து பதிவாகும்.

கண்களை மூடுங்கள். புருவ மத்தியில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் இணையுங்கள்.

இப்பொழுது உயிரால் கவரப்படும் சக்தியாக மாறுகின்றது.

முதலில் கண்களிலே கவர்ந்தோம். கவர்ந்த உணர்வு நுகரப்படும் போது உயிரில் பட்டுத் தான் அது இயங்கும்.

ஆனால் கண்ணில் கவர்ந்த நிலைகள் ஈர்க்கும் சக்தி பெறச் செய்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

1.உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும் சக்தி பெறுகின்றீர்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் கனமாக அந்த ஈர்ப்பு நிலைகள் தெரிய வரும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி உயிரில் மோதும் பொழுது சில வெளிச்சங்களும் தெரிய வரும்.

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் ரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நினைவைச் செலுத்துங்கள்.

இரத்த நாளங்களில் எத்தனையோ கோடி உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளை இயக்கும் கருத்தன்மை உண்டு. ஜீவணுக்கள் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

எறும்பை நசுக்கினாலும் அந்த ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கும் மனிதன் மேல் பண்பு கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்த ஆன்மா நமக்குள் வந்தால் அதனுடைய இயக்கத்தை உண்டாக்கும்.

எறும்பின் உயிரான்மா மனிதனாக உருப் பெறும் கருத்தன்மை அடைகின்றது.
1.ஆனால் மனிதனுடைய ஆள்மா வந்தால் அவனுக்குள் ஈர்க்கப்பட்ட துயரம் எதுவோ அந்த உணர்வை நமக்குள் இயக்கும்.
2.அத்த இயக்கம் நமக்குள் வராதபடி தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ரத்த நாளங்களில் கலந்து
3.அதில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.கண்ணின் நினைவை ரத்தத்தில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இப்பொழுது இரத்த நாளங்களிலே புது உணர்ச்சிகள் தோன்றும். உடலிலேயே உற்சாகம் ஊட்டும் உணர்வு வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் ரத்தங்களிலே கலந்து எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எல்லா உறுப்புகளிலும் நினைவைச் செலுத்துங்கள். இவ்வாறு செய்வதனால் உயிர் வழி உடலுக்குள் செல்லும் தீய உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றோம்.

அதே சமயத்தில் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் வலுவைச் சேர்க்கின்றோம்.
1.நமது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள தீய அணுக்களுக்குண்டான உணர்வுகளை
2.உடலில் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நகர்த்திச் சென்று விலக்கி விடுகின்றது… அல்லது ஒதுக்கி விடுகின்றது.
3.இப்பொழுது நல்ல அமைதி கிடைக்கும். தீய உணர்வுகள் அனைத்தும் நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து அகன்று சென்று விடுகிறது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறுகுடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

முதல் முகப்பில் உள்ள அந்தச் சிறுகுடலில் தான் முதலில் ஆகாரங்கள் செல்கின்றது. அந்த ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தி அந்த அணுக்களுக்குத் தான் உண்டு.

துருவ நட்சத்திரத்தின் வீரிய சக்தியை அந்த அணுக்களுக்குப் பெறச் செய்யுங்கள். அதன் கீழ் உள்ள பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

இப்படித் தியானித்து வந்தால் அந்த உறுப்புகள் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இதை எடுக்க எடுக்க அதை உணர முடியும் அறிய முடியும் உங்கள் உடல் உறுப்புகளில் என்ன நடக்கிறது…? என்று.

1.சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் வீரியமடையும் பொழுது குடலில் உள்ள குறைபாடுகள் நீங்கும்.
2.வயிற்று வலியோ மற்ற கோளாறுகளோ அது எல்லாம் நீங்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கணையங்கள் முழுவதும் படர்ந்து கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா.

சிறுகுடல் பெருங்குடல் ஆகாரத்தின் சத்துகளை அது உருவாக்கி அமிலமாக மாற்றி வெளி வருவதை உங்கள் உடலில் உள்ள கணையங்கள் மூன்று விதமாகப் பிரிக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே செலுத்தப்படும் பொழுது ஆகாரத்தில் கலந்து வரக்கூடிய விஷத்தன்மைகளை மாற்றி நல்ல உணர்வை உருவாக்கும் தன்மை கணையங்களுக்கு ஏற்படுகின்றது.
1.உடலை ஒட்டி இருக்கக்கூடிய கணையங்களின் உணர்ச்சிகளை…
2.அந்த உறுப்பின் இயக்கத்தை உணர முடியும்… அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் கல்லீரல் மண்ணீரல் முழுவதும் படர்ந்து கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைச் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

கல்லீரலை மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறும் பொழுது உற்சாகமடையும். அங்கிருக்கும் குறைகளை நீக்கும் அரும்பெரும் சக்தியாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நுரையீரல் முழுவதும் படர்ந்து நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை நுரையீரலில் செலுத்துங்கள்.

நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் உற்சாகம் அடையும். இந்த வீரிய சக்தியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. கண்ணின் நினைவைக் கிட்னியில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இவ்வாறு செலுத்தினோம் என்றால் உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாதநீர் போன்ற நிலைகளைச் சுத்திகரித்து நல்ல ரத்தமாக மாற்றும் சக்தி பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இருதயம் முழுவதும் படர்ந்து அதை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா. இப்போது அந்த இருதயம் சுறுசுறுப்படைவதை உங்களால் உணர முடியும்

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் இரண்டும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.கண்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்தி ஈர்க்கப்படும் பொழுது கருமணியில் வெளிச்சம் வந்து கொண்டே இருக்கும்.
2.நெஞ்சிலே உள்ள எலும்புக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வு பதிவாகிக் கொண்டே இருக்கும்.

குறைகளையோ வேதனைகளையோ மற்றவைகளைப் பார்த்தவுடனே அடுத்த நிமிடமே ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கருமணிகளில் படர வேண்டும் என்று ஏங்கித் தியானித்தால் கருமணிகளில் படும் விஷத்தன்மைகளைச் சுத்தப்படுத்தும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து நரமபினை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை நரம்பு மண்டலம் முழுவதும் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

நரம்பு மண்டலத்தில் உள்ள வாதநீர் பித்த நீர் விஷ நீர் முடக்குவாதம் போன்ற நிலைகள் வராதபடி அந்த அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது நரம்பு மண்டலம் சீராகும். வாத சம்பந்தப்பட்ட பல நோய்களைத் தவிர்க்க இது உதவும்

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் படர்ந்து அங்கிருக்கும் ஊன் முழுவதும் படர்ந்து ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.இவ்வாறு செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
2.நாம் எண்ணும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக் கூடிய சக்தியைப் பெறுகின்றோம்.
3.அந்த சக்தி அங்கே நெஞ்சின் ஊனுக்குள் படர்வதை இப்போது உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து தசைகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரழகும் எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து தோலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் செலுத்தப்படும் பொழுது உடலிலே பெரிய வெளிச்சமே தோன்றும். உடலில் இருந்து வெளிச்சங்கள் வரும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை இவ்வாறு எடுத்து ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தினால் வரும் தீமைகளிலிருந்து விடுபட்டு நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உங்களுக்கு உதவும்.

இந்தத் தியானத்தை அனுதினமும் காலையில் ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது எடுக்க முடிந்தால் எடுங்கள். முக்கியமான நேரம் அது… அந்த நேரத்திலே அருள் சக்திகளைச் சேர்த்துத் தீமைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்.

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

 

குருநாதர் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார். கொசுக்கள் கடிக்கும் பொழுது அதிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக ஒரு பச்சிலையை என் மேல் பூசினார். அது எனக்குத் தெரியாது.
1.பூசியபின் அந்த மணத்தைக் கண்டால் கொசுக்கள் மயங்கி விடுகின்றது… அல்லது மடிந்து விடுகின்றது.
2.இதனின் வேகத் துடிப்பு அதன் மேல் மோதப்படும் பொழுது அது மடிந்து விடுகின்றது.
3.இந்த மணத்தைக் கண்டால் அஞ்சி ஓடுகிறது. இந்த மூன்று நிலையில் அதன் நகர்ந்து செல்கின்றது.

அதே போல விஷப் பூச்சிகளும் எத்தனையோ வகைகளில் அங்கே உண்டு. உடல் மீது ஊர்ந்து சென்றால் சூடு போட்டது போன்று ஆகிவிடும்.

அத்தகைய விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகளை உடலில் பூசி அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொண்டார்கள்…? என்பதை என்னிடம் உணர்த்துகின்றார்.

விஷத்தினை ஒடுக்கும் பச்சிலைகளை உன் மீது பூசுகின்றேன். இதை நுகரப்படும் பொழுது
1.மனித உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மை பெருகப்படும் பொழுது
2.விஷம் அதிகமாகி உனக்குள் இது நோயாகி உன்னை மடியச் செய்யுமே தவிர உன்னைக் காக்காது.
3.கொசுக்களிடமிருந்து பூச்சிகளிடமிருந்து உன்னைக் காக்க இது உதவும்.

அதே சமயத்தில் நீயும் உன் மனைவியும் இதைப் பூசிக்கொண்டு கருத்தன்மை அடைந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுக்களில் சிறுகச் சிறுக இணைந்து “விஷத்தை ஒடுக்கும் அணுவாக…” வளர்ச்சி பெறுகின்றது.

நீ பூசிக் கொண்டால் சிறிது காலத்திற்கு அதைப் பழக்கமாகக் கொண்டு வரப்படும் பொழுது
1.உன் உடலில் உள்ள அணுக்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறி நல்ல அணுக்களைக் கொன்றிடும் நிலை வந்துவிடும்…
2.துடிப்பின் இயக்கத்தை மாற்றிவிடும் என்று தெளிவாக்குகின்றார்.

பல பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது சில சில எதிர் நிலையான உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றார். அப்பொழுது மயக்கமே வருகின்றது.

இத்தகைய மணங்களை நுகரப்படும் பொழுது பூச்சிகளும் மயங்கி விழுகின்றது. அனுபவரீதியாக இயற்கையினுடைய நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர்.

வேதனையைக் குறைக்கும் வழி

வேதனையைக் குறைக்கும் வழி

 

உடலிலே வலி வந்து விட்டால் “அம்மம்மா… மேல் வலிக்கிறதே…!” என்று அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கின்றோம். ஏதாவது தொல்லைகள் வந்து விட்டால் அதை எண்ணும் பொழுது அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

1.சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி அதை நிவர்த்தி செய்யலாமா…? என்றால் முடியாது… சந்தோஷமான வார்த்தை அங்கே எதிரி ஆகிறது.
2.வேதனைப்படும் நேரத்தில் யாராவது சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தால் அது உடனே எதிரியாக மாறுகின்றது.

ஆனால்… இந்த எதிரிகளை வென்றவர் யார்…? சந்தோஷத்தை ஊட்டியது யார்…? அந்த மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளை நாம் எண்ணும் பொழுது அதற்கு ஆகாரத்தைக் கொடுத்த பின் வலுவாகின்றது. அப்பொழுது உயிரான ஈசனிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த மகரிஷிகள் உணர்களை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

மற்றவருடைய குறைகளையோ வேதனைகளையோ கண்ணுற்றுத் தான் நாம் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசத்தின் வழி இழுத்து “அகக் கண்ணாக இருந்து…” உயிர் உணர்த்துகின்றது. அகக் கண்ணாக இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவு கொடுக்கின்றது.

அதே சமயம் நமது புறக்கண் படம் எடுத்து ஆத்மாவாகி உயிருடன் ஒன்றும் போது தான் அந்த உணர்வை அகக் கண்ணாகக் காட்டுகின்றது.
1.ஆனால் மகரிஷிகள் உணர்வைப் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வருவதைத் தடைப்படுத்துகின்றது.

வேதனை அதிகமாக இருக்கிறது என்றால் ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உயிர் வழி சிறிது நேரம் செலுத்தினால் மூச்சு திணறலோ உடலில் வலியினால் ஏற்படக்கூடிய வேதனையோ உபாதைகளோ அது குறையும்.

முதலில் எடுக்கவே விடாது.

இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று
1.அந்த உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது
2.சிறுகச் சிறுக வலிகள் தணியும்… செய்து பாருங்கள்.