விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகள்

 

குருநாதர் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார். கொசுக்கள் கடிக்கும் பொழுது அதிலிருந்து மீட்டிக் கொள்வதற்காக ஒரு பச்சிலையை என் மேல் பூசினார். அது எனக்குத் தெரியாது.
1.பூசியபின் அந்த மணத்தைக் கண்டால் கொசுக்கள் மயங்கி விடுகின்றது… அல்லது மடிந்து விடுகின்றது.
2.இதனின் வேகத் துடிப்பு அதன் மேல் மோதப்படும் பொழுது அது மடிந்து விடுகின்றது.
3.இந்த மணத்தைக் கண்டால் அஞ்சி ஓடுகிறது. இந்த மூன்று நிலையில் அதன் நகர்ந்து செல்கின்றது.

அதே போல விஷப் பூச்சிகளும் எத்தனையோ வகைகளில் அங்கே உண்டு. உடல் மீது ஊர்ந்து சென்றால் சூடு போட்டது போன்று ஆகிவிடும்.

அத்தகைய விஷத்தை ஒடுக்கும் பச்சிலைகளை உடலில் பூசி அக்காலத்தில் வாழ்ந்த அகஸ்தியனுடைய தாய் தந்தைகள் தங்களை எப்படித் தற்காத்துக் கொண்டார்கள்…? என்பதை என்னிடம் உணர்த்துகின்றார்.

விஷத்தினை ஒடுக்கும் பச்சிலைகளை உன் மீது பூசுகின்றேன். இதை நுகரப்படும் பொழுது
1.மனித உடலை உருவாக்கிய அணுக்கள் விஷத்தின் தன்மை பெருகப்படும் பொழுது
2.விஷம் அதிகமாகி உனக்குள் இது நோயாகி உன்னை மடியச் செய்யுமே தவிர உன்னைக் காக்காது.
3.கொசுக்களிடமிருந்து பூச்சிகளிடமிருந்து உன்னைக் காக்க இது உதவும்.

அதே சமயத்தில் நீயும் உன் மனைவியும் இதைப் பூசிக்கொண்டு கருத்தன்மை அடைந்து விட்டால் இந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது அணுக்களில் சிறுகச் சிறுக இணைந்து “விஷத்தை ஒடுக்கும் அணுவாக…” வளர்ச்சி பெறுகின்றது.

நீ பூசிக் கொண்டால் சிறிது காலத்திற்கு அதைப் பழக்கமாகக் கொண்டு வரப்படும் பொழுது
1.உன் உடலில் உள்ள அணுக்கள் விஷத்தன்மை வாய்ந்ததாக மாறி நல்ல அணுக்களைக் கொன்றிடும் நிலை வந்துவிடும்…
2.துடிப்பின் இயக்கத்தை மாற்றிவிடும் என்று தெளிவாக்குகின்றார்.

பல பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது சில சில எதிர் நிலையான உணர்வுகளை நுகரும்படிச் செய்கின்றார். அப்பொழுது மயக்கமே வருகின்றது.

இத்தகைய மணங்களை நுகரப்படும் பொழுது பூச்சிகளும் மயங்கி விழுகின்றது. அனுபவரீதியாக இயற்கையினுடைய நிலைகளைத் தெரிந்து கொள்வதற்காக எமக்கு இதைக் காட்டுகின்றார் குருநாதர்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply