
நம்மை வேகா நிலை பெறச் செய்யும் “சமைக்கும் பக்குவம்”
விறகுக் கட்டை இருக்கின்றது… அதை எரித்தால் வெளிச்சமாக ஒளியாகத் தான் மாறுகின்றது… அது நன்மை செய்கின்றது.
அதைப் போல் தீமை என்ற உணர்வுகள் வந்தாலும் அருள் ஒளியை நாம் எடுத்து அதனுடன் இணைக்க வேண்டும்.
1.ஏனென்றால் ஒளியாகத் தொக்கி உள்ளதுதான்… அதை இயக்குகின்றது.
2.அருள் ஒளியைச் சேர்க்கப்படும் பொழுது ஒளி என்ற நிலையில் மாறுகின்றது.
கட்டையை எரித்தால் கருகுகிறது… ஆனால் வெளிச்சம் கொடுக்கின்றது… ஒன்றைச் சமைக்க உதவுகின்றது. இதை போலத் தான்
1.வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் கதிரியக்கப் பொறியின் உணர்வால் தான் இயக்குகின்றது.
2.அருள் ஒளியின் உணர்வை அதற்குள் சேர்த்து நல்ல முறையில் இயக்கப்படும் பொழுது கருகிய உணர்வை நீக்கிவிடும்.
3.நமக்குச் சமைக்கும் பக்குவமும் அந்த வெப்பமும் அந்த வலிமையும் கிடைக்கும்.
இதையெல்லாம் உங்களிடம் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதைச் செய்து பழக வேண்டும்.
யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்தை உற்று பார்த்துத் தியானித்தால் அதிலிருந்து ஒளிகள் வரும்… நல்ல சிந்தனைகளைத் தூண்டும்… உங்களுக்கு வழி காட்டும்.
ஆனால் அதிலே உங்கள் ஆசையைக் கூட்டி விடாதீர்கள். உடல் ஆசையைக் கூட்ட வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையை மட்டும் கூட்டுங்கள்.
அருள் உணர்வுகள் பெற வேண்டும் என் செயல் நன்றாக இருக்க வேண்டும் எங்கள் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என் சொல் எல்லோரையும் நல்லதாக்க வேண்டும் என்று இதை மட்டும் கூட்டுங்கள். நல்ல உணர்வைக் கொண்டு வரும்.
வேதனையை எண்ணாதீர்கள்.
1.என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உயர்ந்த நிலை பெற வேண்டும் எந்த எண்ணுங்கள்.
2.என் மனைவி அருள் உணர்வுகள் பெற்றுத் தெளிந்த நிலை பெற வேண்டும்.
3.அதன் பார்வை என்னைத் தெளிவாக்க வேண்டும் என்று இப்படி இணைத்து வாருங்கள்.
4.உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும்.
5.ஆகவே உயிருடன் ஒன்றுகின்றோம் இருளை அகற்றுகின்றோம் ஒளியான உணர்வாக வளர்கின்றோம்.
6.நம்முடைய ஆயுள் காலம் என்றுமே அழியாத துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை வருகின்றது.
நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்க்கப்படும் போது எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்… அந்த அருளைப் பெறுகின்றீர்கள் எல்லோருக்கும் பாய்ச்சுகின்றீர்கள். அதே போல் நான் உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.
இந்த உணர்வு ஒன்றாகும் பொழுது ஒளியின் வலு கூடுகிறது. இருளை அகற்றும் வலிமை பெறும். என்றும் அழியா ஒளி சக்தியை நாம் பெறுகின்றோம். அந்த நிலையை நாம் அனைவரும் அடைதல் வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.