“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!”

 

பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்றால் இந்த உடல் பற்று இருக்கக் கூடாது. ஆனால் இந்த உடல் பற்று இல்லாமலும் இருக்க முடியாது.

தன் பிள்ளை மீது பாசம் இல்லாமல் இருக்க முடியுமா…? வெளியிலே சென்று சேட்டை செய்து விட்டு வீட்டுக்குள் வருகின்றான். நீங்கள் என்ன செய்வீர்கள்…?

பாசத்தினால் “ஏண்டா இப்படிக் கெட்டுப் போகின்றாய்…?” என்று கேட்பீர்கள்.
1.பாச உணர்வு இல்லை என்றால் அவனைத் தடுக்க முடியுமா…?
2.எப்படியோ போகின்றான்…! என்ற வகையில் சேட்டை செய்கின்றவனுக்கு உணவு கொடுக்கக் கூடாது என்று சொல்ல முடியுமா…?
3.அப்படியே விட்டுவிட்டால் என்ன ஆகும்…?

வாடி வதங்கி அவனுக்குள் விளையும் வேதனை நமக்குள்ளும் புகுந்து நம்மையும் வேதனைப்படச் செய்யும். அவன் உணர்வு நமக்குள் கலந்து பாசத்தால் வெறுப்பின் உணர்வுகளை வளர்த்து அவனையும் வெறுத்துப் போகும் அளவிற்கு வந்துவிடும்.

அடிக்கடி வெறுப்பைக் கலந்து அவனிடம் பேசினால் என்ன ஆகும்…? அந்த எண்ணம் மேலும் மேலும் அவனை நல்வழிக்கு அழைத்துச் செல்வதற்கு மாறாக அவனின் வழிகளுக்கே அழைத்துச் செல்ல முடியும். அவனைத் திருத்த முடியுமா…?
1.நம்மிடம் இருந்து அவனைப் பிரிக்கத்தான் முடியுமே தவிர திருத்த முடியாது.
2.திருத்தியவர்கள் யாரையாவது சொல்லச் சொல்லுங்கள்.

திருத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு மந்திரவாதிகளிடம் சென்று தாயத்தைக் கட்டினேன் என்று ஆவி நிலைகள் கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். சிறிது நாள் நன்றாக இருப்பான்… மீண்டும் அவன் வழிக்குத் தான் அவன் செல்வான்.

அவன் மீது பட்ட வேதனை இங்கே வளரும். அதைத் துடைக்காமல் இருக்க முடியுமா…? துடைக்க வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமக்குள் வலுக் கூட்ட வேண்டும்.
2.அவனால் நாம் நன்மை பெறுகின்றோம்… அவனுக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சாக்கடை வாசனை வருகிறது என்றால் அதை நுகர்ந்தால் எரிச்சல் ஆகிறது அந்த வாசனை நமக்குள் வராது எதையாவது வைத்து அதைத் தடுக்கின்றோம் அல்லவா…!

“எண்ணெய் பிசுபிசுப்பை அகற்ற எண்ணெய் தான் ஆயுதம்…!” எண்ணெயாக இருக்கும் இடத்தில் தண்ணீரை ஊற்றித் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் தான் அதிகமாகும்.
1.அதனால் தான் சோப்பில் என்ன செய்கின்றார்கள்…?
2.”எண்ணெய்ப் பசையைக் கொடுத்து” அதைத் தேய்க்கப்படும் பொழுது
3.நுரை வருகின்ற மாதிரிச் செய்து… அது ஊடுருவி எண்ணெயை அகற்றுகின்றது… இடம் தூய்மை அடைகிறது.

எண்ணெயை வைத்துத் தான் எண்ணெயை அப்புறப்படுத்த முடியும்.

இதே மாதிரித் தான் நமது வாழ்க்கையில் நஞ்சின் தன்மை கலக்கிறது. ஆனால் நஞ்சினை நீக்கிடும் ஆற்றலை அகஸ்தியன் பெற்றான். அந்த உணர்வை நமக்குள் எடுத்தால் வாழ்க்கையில் வந்த நஞ்சினை நாம் நீக்க முடியும்.

இந்த நஞ்சினை நீக்கிடும் உணர்வு கொண்டு நல்ல உணர்வுகளை எடுத்துப் பையனிடம் இப்படி வர வேண்டும் என்று நாம் சொன்னோமென்றால் அவனைத் திருத்தவும் முடியும்.
1.அவனால் இந்த அருள் உணர்வை பெற்று நாம் நன்மை பெறுகின்றோம்…!
2.அவனை நல்ல வழிக்கும் கொண்டு வரவும் முடியும்.

ஆனால் முதலிலே சொன்னபடி அவனிடம் குறையைச் சொல்லும் பொழுது வெறுப்பு தான் வளரும். நம்மைப் பார்க்கும் பொழுது அவனுக்கும் வெறுப்பு தான் வரும்.

ஆக… தவறு செய்கின்றான் என்றால் “நல்ல வழியைச் சுட்டிக் காட்டாமல்” இருக்க முடியுமா…? ஒருவருக்கு நோய் வந்துவிட்டது என்று தெரிந்த பின்பு நாம் டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே வருகின்றது.

ஆனால் ஒரு சிலருக்கு அந்த நோயாளி ஆகாதவர் என்றால் “அவனுக்கு அப்படித்தான் வேண்டும்” என்பார்கள். அந்த உணர்வு அவனுக்குள் விளைகின்றது. அவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வு அங்கு இல்லை. அப்படித்தான் அவனுக்கு வேண்டும் என்று நினைக்கும் பொழுது அதைக் கண்டு அவன் ரசிக்கின்றான்.

ஆனால் பண்பு கொண்ட மனிதன் பாசத்தால் தன் உடலுக்குள் எடுத்துக் கொள்கின்றான். காத்து அவனுக்கு உதவி செய்கின்றான், அந்த உணர்வு இங்கே வளர்கின்றது.

“மகராசன்” என்னைக் காப்பாற்றினான் என்று அவன் சொல்கிறான்.

காத்திடும் உணர்வும் நோயான உணர்வும் ரெண்டும் செயல்படுகின்றது. இந்த உணர்வு வளர்ந்த பின் உடலை விட்டு அவன் பிரிந்தால் ஆன்மா இங்கே வருகின்றது. நம்முடைய வலு அவன்பால் இருக்கப்படும் பொழுது அது இங்கே வந்துவிடுகிறது.
1.அதே நோய் இங்கே உருவாகி நம்மை வீழ்த்துகிறது.
2.உதவி செய்கிறோம்… ஆனால் நம்மை வீழ்த்துகிறது… இதற்கு என்ன செய்வீர்கள்…?

உதாரணமாக உணவு அதிகமாக இருக்கின்றது… சாப்பிடுகின்றோம். ஆனாலும் வழக்கத்திற்கு அதிகமாகச் சாப்பிட்டால் நம் உடலுக்கு அது நல்லது செய்கின்றதா…? இல்லை. ஏனென்றால் இது இயற்கையின் நியதி. ஜீரணிக்கும் சக்தி வேண்டும்.

ஆகவே தீமைகளை அடக்க வேண்டும் என்றால்
1.தீமைகளை அகற்றிய நஞ்சை வென்ற அருள் ஞானிகள் உணர்வை எடுத்துப் பழக வேண்டும்.
2.எடுக்கப் பழக வேண்டும் என்றால் அந்தச் சக்தியை யார் பெற்றார்களோ
3.எடுத்தவர்களிடம் விளைந்த சொல் ஞானம்… அது நமக்குள் வித்தாக வேண்டும்.
4.பதிந்த வித்தினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது அந்த ஞானம் நமக்குள் விளையும்.

அப்போது… கஷ்டம் வரும் பொழுது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் அந்தச் சக்தியால் நாம் நலம் பெறுகின்றோம்.

இதை எடுக்கவில்லை என்றால் அவனால் நஷ்டம் அடைகின்றீர்கள். அவனையும் நஷ்ட,மடைய வைக்கின்றீர்கள். பையனைக் காக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் அந்த விஷம் நமக்குள் வளர்ந்து நம்மை நாம் காக்க முடியாது போகிறது.

காரணம் அந்த விஷத்தின் அளவுகோல்…!
1.எப்படி ஒரு சோப்பைத் தேய்த்தவுடன் அது எண்ணைப் பிசுபிசுப்பை அகற்றுகின்றதோ
2.இதைப் போல விஷத்தை ஒடுக்கிய அருள் ஞானிகள் உணர்வைக் கலந்த பின்
3.அது விஷத்தை ஒளியாக மாற்றுவது போல் நமக்குள் இருளை அகற்றுகிறது.

பையனைக் கூப்பிட்டு மகரிஷிகளின் அருள் சக்தி உன் உடலில் படர வேண்டும். தீமைகள் நீங்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். அவன் இந்த உணர்வை எடுத்துக் கொள்ளும் போது… “கேட்டான்” என்றால் அவன் நல்லவனாகின்றான்.

இருந்தாலும்… எப்படியும் அவன் இதை எடுத்து மாற வேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும்போது என்ன ஆகிறது…?

முதலிலே உங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்
1.இப்பொழுது இந்த உணர்வை எடுத்து “நாம் மாற வேண்டும்” என்று எண்ணினால் இந்த உணர்வு என்ன செய்யும்…?
2.அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும்.
3.அதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற அவ்வளவு பெரிய ஆயுதத்தை உங்களுக்கு கொடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியை இந்த உபதேசங்கள் வாயிலாகத் தருகின்றோம்.
நீங்கள் அதை எண்ணி எடுத்து வளர்த்தீர்கள் என்றால் உங்கள் உயிர் அதை உருவாக்கும். ஒளியின் சுடராக மாற்றும்.

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”

விதி இயக்கினாலும்… செய்த பாவத்திற்கு அனுபவித்தாலும்… “அருள் பற்றை மட்டும் தான் நாம் வளர்க்க வேண்டும்”

 

சிலர் “கஷ்டம் கஷ்டம் கஷ்டம்” என்று வந்து என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதிகமாகச் சொல்லப்படும் பொழுது இந்த உணர்வை யாம் எடுத்தவுடனே அது ஜீவன் பெறுகின்றது.

1.அபயக் குரலை இடுகின்றார்கள்… அது இங்கே வரப்படும் போது நன்மை செய்ய எண்ணுகின்றோம்.
2.அந்த விதி…! உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது… சந்தர்ப்பங்கள் அதை உணர்த்தும்… உருபெற்றபடி என்ன செய்கிறோம்…?

வரபோகும் போது மேடான பாதையிலிருந்து காலை வைக்கப்படும் போது அங்கே சரியாக என்னால் போக முடியவில்லை.
1.அங்கே விபத்தாவதைத் தப்பிக்க (அபயம் கேட்டவர்களை) வைக்கின்றோம்.
2.ஆனால் இங்கே என் உடலைக் காக்க முடியவில்லை… விதி இங்கே வேலை செய்கின்றது (ஞானகுரு தனக்கு எலும்பு முறிந்ததைச் சொல்கிறார்)

மீண்டும் அதையே எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

1.அதனுடைய எதிர் அலைகள் ஏராளமாக வரும்… அப்பொழுது உடல் பற்று வருகின்றது
2.விதிப்படி நாம் மீண்டும் பிறவிக்கு வருகின்றோம்… பல துன்பங்களை அனுபவிக்க நேரும்.

அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து விட்டால் இதைப் போன்று பல இம்சைகளை உருவாக்கக்கூடிய ஒரு உயிரினமாக உயிர் மாற்றிவிடும். “நம் உடலில் இப்படி எத்தனையோ விதிகள் உண்டு…”

அதனதன் நிலைகள் வரப்படும் பொழுது
1.நாம் செய்த நிலைகளுக்கு இது கழிகின்றது…
2.இனி நாம் அருள் வழியை கூட்ட வேண்டும் என்ற நினைவில்
3.”போய்க் கொண்டே இருக்க வேண்டும்…”

எது எப்படி இருந்தாலும்… தெரிந்தோ தெரியாமலோ… நுகர்ந்தால் உயிர் இயக்கிவிடும்.

பாத்திரத்தை அடுப்பில் வைக்கின்றோம்… சமையல் செய்கின்றோம்.
1.நான் தானே சமையல் செய்கிறேன்… நான் போடாமல் அதிலே வேறு ஒரு பொருள் விழுந்தால் என்ன ஆகும்…?
2.அதற்கு நான் என்ன செய்ய முடியும்…? நான் போடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்…!

ஏனென்றால்
1.காற்றிலிருந்து ஒரு விஷப் பூச்சி பறந்து வந்து பாத்திரத்திற்குள் விழுகிறது.
2.பூச்சியை நான் போடவில்லை…! நான் போட்டால் தானே அது வரும் என்று சொன்னால் என்ன ஆகும்…?

இதைப் போன்று தான் நம் உயிரின் வேலை. அது நெருப்புக்குச் சமம்…!

பாத்திரத்தை வைத்து அதில் எந்தச் சரக்கைப் போடுகின்றோமோ அதை அந்த நெருப்பு சமைக்கும். உயிருடைய வேலை அது தான்.

ஆனால் இதையெல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி யாரிடம் இருக்கின்றது…? நம் ஆறாவது அறிவிடம் இருக்கின்றது.
1.ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறைக்குச் சென்று விடுகின்றோம்.

இதற்கு முன் எத்தனையோ சரீரங்களில் நாம் வேதனைப்பட்டு இருக்கின்றோம்… எத்தனையோ இம்சைப் பட்டிருக்கின்றோம்.

இப்பொழுது நாம் பார்க்கின்றோம் அல்லவா…! ஒரு விட்டில் பூச்சி பறக்கிறது என்றால் காகம் அதைக் கொத்திக் குதறுகின்றது… விழுங்குகின்றது. தன்னுடைய குஞ்சுகளுக்கு உனவாகக் கொண்டு போய்க் கொடுக்கின்றது அந்த வீட்டில் பூச்சியின் உயிர்… அடுத்து காகமாகப் பிறக்கின்றது.

பத்து எறும்புகள் சேர்த்து ஒரு வீட்டில் பூச்சியைக் கடித்துக் கொண்டு செல்கின்றது. அந்த உணர்வை நுகரப்படும் பொழுது… எறும்பின் நினைவே வீட்டில் பூச்சிக்கு வந்து அடுத்து அது எறும்பாகப் பிறக்கின்றது.

இப்பொழுது நாம் பல கோடிச் சரீரங்கள் தாண்டி மனிதனாக வந்திருக்கின்றோம். ஒரு பாம்பு நம்மைத் தாக்க வருகிறது. நம்மைக் காப்பாற்ற நாம் அதை அடிக்கின்றோம். அந்தப் பாம்பின் உயிர் அடித்தவரின் உடலுக்குள் சென்று விடுகின்றது. மனித உணர்வைக் கருவாக்கி அந்தப் பாம்பு அடுத்து மனிதனாகப் பிறக்கும் தகுதிக்கு வருகின்றது.

ஆனால் பாம்பு மனிதனைக் கடித்தால் நினைவுகள் இழக்கப்படுகின்றது “ஐயோ… பாம்பு கடித்து விட்டது… பாம்பு கடித்து விட்டது…” என்றே நினைவு வருகின்றது. இந்த உணர்வின் தன்மை ஆன பின் மனிதனின் உயிர் அந்தப் பாம்பின் ஈர்ப்புக்குள் சென்று பாம்பாகப் பிறக்கும்.
1.பரிணாம வளர்ச்சியில் முதலில் மனிதனாக வந்தோம்
2.மீண்டும் விஷத்தன்மையான பின் நினைவாற்றலை இழந்து விஷத்துக்குள் தான் சென்று அடங்குகின்றோம்.

இது ஒரு விதியாக மாறுகின்றது. விதியைப் பற்றி ஏன் சொல்கிறோம் என்றால்……!

என் வாழ்க்கையில் சிறுபிள்ளையிலிருந்து நடந்த சம்பவங்களை எல்லாம் குருநாதர் என்னிடம் சொல்லிக் கொண்டு வருகின்றார். எறும்பை நசுக்கினாய்… ஒடக்கானைப் பிடித்து அதன் கண்ணிலே பொடியைப் போட்டாய்…! அது தலை ஆட்டுவதைக் கண்டு ரசித்தாய். அதற்குப் பின் நீ எத்தனை நாள் தலையாட்டினாய்…? என்று கேட்கிறார்.

நான் கல்யாணம் முடித்த புதிதிலே வீட்டிலிருந்து நடந்து டவுனுக்குப் போய்க் கொண்டிருக்கின்றேன். தன்னை அறியாது கிறு கிறு என்று தலை சுற்றலானது நடக்க முடியவில்லை… கீழே விழுந்து விட்டேன்…!

அதை ஞாபகப்படுத்திச் சொல்கின்றார் நீ இந்த இடத்தில் நினைவிழந்து விழுந்தாய்… உனக்குத் தெரியுமல்லவா…! என்றார்.

ஓரு சமயம் நானும் என் மனைவியும் ஒரு சிறிய பாலம் அருகே ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே சென்று கொண்டிருந்தோம். வண்டி வந்து கொண்டிருந்தது. சிறிது கவனம் இழந்திருந்தால் இரண்டு பேருமே அடிபட்டிருப்போம். ஆனால் தப்பிவிட்டோம்.

குருநாதர் அதைச் சொல்லி…
1.இது எல்லாம் நீ சிறு வயதில் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து உனக்குள் இருக்கப்படும் போது விதியாக அது அமைகிறது.
2.“டேய்…! அன்று நான் தான்டா அப்போது உன்னைக் காப்பாற்றினேன்” என்று குரு சொல்கின்றார்…!
3.முன் ஒரு சமயம் வேறு ஒரு பிறவியிலிருக்கப்படும் பொழுது நீ எனக்கு ஒரு உதவி செய்தாய்.
4.அருள் சக்திகளை நான் பெற்றிருக்கின்றேன்… இப்பொழுது (இந்தப் பிறவியில்) நான் உன்னைக் காப்பாற்றினேன்.
5.மறைந்த உணர்வுகளை வரிசைப்படுத்தி குருநாதர் எடுத்துக் காட்டுகின்றார்.

இப்படி என் வாழ்க்கையில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று எல்லாவற்றையுமே குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

நீ உன் இளமையில் செய்த தவறுகள் நீ அறியாது செய்த நிலைகள் நீ எண்ணியதை எல்லாம் உன் உயிர் ஜீவ அணுவாக மாற்றி அதன் வழிப்படி ஒவ்வொரு தவறாகச் செய்யச் சொல்லி அது பெருகிக் கொண்டே வந்தது. உன்னைத் தவறான நிலைக்கு அந்த உணர்ச்சிகள் எப்படிக் கொண்டு செல்லும்…? என்று சொல்கிறார்.

தப்பித் தவறி நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பூச்சியைக் கொல்லும்படி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் நாம் எதைச் செய்கின்றோமோ உயிர் நுகர்ந்ததை இயக்கிவிடும்.

மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்பதை குருநாதர் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார். அதைத்தான் இப்பொழுது உங்களையும் செய்யச் சொல்கின்றோம்.

1.எது எப்படி இருந்தாலும் அவ்வப்போது இது (வினை – விதி) கழியும்.
2.நான் எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன். நான் ஏன் கீழே விழுவானேன்…? என் எலும்பு ஏன் முறிந்தது…?

எல்லோருக்கும் நன்மை செய்தேன் இவ்வளவு பெரிய சக்தி பெற்றிருக்கின்றேன். குருநாதரைப் பார்த்து “என்னை இப்படி எல்லாம் சோதிக்கின்றாயே…! என்று சொன்னால் என்ன ஆகும்…?”
1.நான் செய்த பாவத்திற்கு நான் தானே அதை அனுபவித்தாக வேண்டும்.
2.ஆனால் அனுபவித்தாலும் மீண்டும் அந்த உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்று
3.மேலே பட்ட தூசியைத் தட்டி விடுவது போன்று துடைத்துக் கொள்ள வேண்டும்.
4.உடல் பற்று இல்லாதபடி அருள் பற்றுடன் நாம் சென்றால் இந்த உடல் பற்று நம்மை இயக்காது.

என் உடலிலே எத்தனையோ முறை எரிச்சல் வந்திருக்கின்றது. ஒரு சந்தர்ப்பம் நான் சுற்றுப்பயணம் செய்து வரும் பொழுது குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

தீயில் எரிந்த ஒரு ஆன்மா ஒரு அம்மாவின் உடலுக்குள் சென்று விட்டது. அந்த அம்மாவிற்கு 45 வயது. உடல் எல்லாம் “எரியுதே எரியுதே” என்று குதிக்கும். மேலே சேலையைப் போட்டாலே குதிக்கும்… “ஐய்யய்யோ எரிகின்றதே… என்னைக் கொல்கின்றீர்களே…!” என்று சொல்லிக் கொண்டு ஓடும். அதனால் பொறுக்க முடியாது.

எம்மிடம் அழைத்து வர வேண்டும் என்று துணியைப் போட முயற்சித்தார்கள். ஆனால் துணியை போட முடிந்தால் தானே…! மேலே பட்டாலே “என்னைக் கொல்கிறார்கள்” என்று ஓடுகின்றது.

எங்களால் அந்தப் பெண்ணை அழைத்து வர முடியவில்லை என்று என்னிடம் சொன்னார்கள். நாலாபுறமும் சுற்றித் துணியைக் கட்டி மறைத்து அழைத்துக் கொண்டு வாருங்கள்… மேலே துணியைப் போட வேண்டாம் என்றேன்.

அதன்படி செய்தார்கள். இங்கே கூட்டுத் தியானம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.தியானத்தில் எடுக்கக்கூடிய அலைகள் அந்தப் பெண்ணின் உடலில் எப்படிப் பாய்கின்றது…? என்று
2.சிறு குழந்தைகளை வைத்து நேரடியாகப் பார்க்கும்படி சொன்னேன்.

அந்த உடலில் இருக்கும் ஆவி வெளியே செல்கின்றது. அது போய்விட்டது என்று தெரிந்த உடனே இந்த அம்மா எழுந்து உட்காரும். துணியைக் கொடுப்பார்கள்.

ஆவி மறுபடியும் வந்து விட்டது என்று சொல்லி “எரியுதே” என்று அந்த அம்மா மீண்டும் சொல்லும். இப்படிப் பல நிலைகள் ஆனபின் ஒரு வழியாக அது விலகியது. இந்த அம்மாவுக்குச் சரியானது.

ஆனால் “அந்த அம்மா உடலில் பட்ட எரிச்சல்” அது எப்படி இருக்கிறது…? என்பதை நீ பார் என்று குருநாதர் சொன்னார். நான் எடுத்தவுடனே கப… கப… என்று என் உடல் எல்லாம் எரிகின்றது.

அந்த உடலிலே இருந்த அந்த ஆவியின் தன்மை அடங்கினாலும் அதனுடைய எரிச்சலான உணர்வுகளை நான் கவரப்படும் பொழுது நுகர்ந்தறிந்த உணர்வுகள் எனக்குள் பதிவாகின்றது.

அது உடலில் இருந்த ஆவி…
1.அது எரிந்த உணர்வலைகள் அதிலிருந்து வந்ததை நான் சுவாசிக்கப்படும் பொழுது எனக்கு அந்த நேரத்தில் எரிகின்றது
2.இப்பொழுது எரிவதற்குக் காரணம் உன் உடலுக்குள் ஏற்கனவே விளைந்தது… “அது எரிந்தது…” இப்படி இயங்குகின்றது (குரு சொல்கிறார்)

உன் சிறு வயதில் நீ குருவியைச் சுட்டு எப்படியடா தின்றாய்…? கயிறை வைத்துக் கட்டி தலை கீழாக உயிருடன் குருவியை வாட்டினாய் அல்லவா.
1.ஆனால் இப்பொழுது நீ உயிருடன் இருக்கும் போது (அந்த அம்மாவிற்கு) நன்மை செய்யப் போனாய்.
2.தீயிலே வெந்த ஆவி அந்த உடலில் இருக்கின்றது. அதை நீ அடக்க எண்ணும் போது அந்த வேதனையைச் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.
3.அப்பொழுது அந்த உணர்வு என்ன செய்கின்றது…? நீ எண்ணி எடுத்தாய் உனக்குள் வந்துவிட்டது.
4.காரணம் அந்தக் குருவி எப்படி எரிந்ததோ அந்த அணுக்கள் உன் உடலில் இருப்பதற்குச் சாப்பாடு தேவை.
5.இதை எடுக்கின்றது அந்த எரிச்சல் உனக்குத் தெரிகின்றது…!

நடந்த நிகழ்ச்சி…! அனுபவித்துத் தான் இதைச் சொல்கின்றேன்.

நான் செய்த தவறு… அது ஒரு விதி ஆகிறது. அந்த நேரத்திலே அங்கே எரிச்சல் ஆகிறது.
1.ஆனால் அவரைக் காப்பாற்றுகின்றேன்.
2.எனக்குள் கொஞ்சம் அந்த ஊழ்வினை மறைகின்றது.

இப்படி நமக்குள் எத்தனையோ விதிகள் உண்டு. இதையெல்லாம் மாற்ற வேண்டும்.

நான் தினமும் தியானம் செய்கின்றேன். எனக்கு ஏன் கஷ்டம் வருகிறது…? எனக்கு ஏன் நோய் வருகிறது…? என்று சொல்லிக் கொண்டிருந்தால் நாம் இங்கேதான் இருப்போம். அங்கே விண்ணுலகம் செல்ல முடியாது,

ஆகையினால் எந்தக் (எத்தகைய) கஷ்டம் வந்தாலும்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்
3.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இதை எண்ணி வளர்த்தோம் என்றால் நம் உணர்வுகள் அங்கே செல்கின்றது… அடுத்து நாம் சப்தரிஷி மண்டலம் செல்கின்றோம்.

ஆனால் என்னை இப்படி எல்லாம் பேசினார்கள் பாவிகள் உருப்படுவார்களா…? அவர்களால் தான் இப்படி ஆனேன்…! என்று சொன்னால் இந்த உடலுக்குப் பின் யாரை எண்ணிச் சொன்னோமோ அங்கே சென்று மீண்டும் நோயால் வாடும். மீண்டும் பிறவிக்குத் தான் வர வேண்டும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும்.
1.அதற்குத்தான் குருநாதர் எனக்குக் காட்டியதை
2.உங்களுக்கு ஞாபகப்படுத்தித் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன்.

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

“எம்முடைய உபதேசங்களை எல்லோரையும் கேட்கச் செய்து” உண்மைகளை உணரக்கூடிய நிலையை நீங்கள் உருவாக்குங்கள்

 

நீங்கள் எல்லோரும் “அருள் வழியில் தயாரானால்தான்” மிகவும் நல்லது. ஒரு விதையைப் போட்டால் உயர்ந்த நிலைக்கு அதை விளைய வைத்து வளர்த்துக் காட்ட வேண்டும்.

ஒருவர் வேதனை நோய் என்று சொன்னால் அதைக் கேட்பவர்களுக்கு எல்லாம் அந்த நோய் வரும். அருள் ஒளியைப் பெற்று இருளை நீக்கக் கூடிய சக்தி பெற்று உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நோய்களைப் போக்க வேண்டும்.
1.சாமியாக நீங்கள் இருக்க வேண்டும்…! சாமிக்கு மட்டும் அந்தச் சக்தி அல்ல.
2.அந்த உயர்ந்த நிலைகளில் நீங்கள் செயல்பட வேண்டும்.

அதை நீங்கள் சீராகச் செயல்படுத்த வேண்டும் என்றால் யாம் வெளிப்படுத்திய உபதேச கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் படிக்க வேண்டும். உங்களுக்குள்ளும் பாடமாகும்… மற்றவர்களுக்குள்ளும் பதிவாகும்.

தனித்துச் செல்லும் பொழுது தவறு என்று வந்தால்… பார்…! சாமி சொன்னதை இவர் தவறாகச் சொல்கின்றார் என்று ஆரம்ப நிலைகளில் வரும்.
1.ஆனால் எல்லோரும் உபதேசங்களைக் கேட்டுப் படிக்கப்படும் பொழுது “எல்லோருமே அந்த உண்மைகளை உணரக்கூடிய சக்தி வரும்…”
2.அப்படிப்பட்ட நிலையை உருவாக்க வேண்டும்.

காரணம்… போர் என்ற நிலையில் அணுகுண்டுகளையோ மற்ற கெமிக்கல் குண்டுகளையோ உயிரியல் குண்டுகளையோ பயன்படுத்தினால் அதை எல்லாம் “நாம் ரிமோட் செய்யக்கூடிய (தடுக்கும்) சக்தியாக வரவேண்டும்…”

ரோட்டிலே நாம் நடந்து சென்று கொண்டிருக்கின்றோம்… ஒருவன் தவறான எண்ணத்துடன் செல்கின்றான் என்றால் அவனுடைய நடை மாறும். அவன் மீது அறியாமலே நமக்கு ஒரு வெறுப்பு வரும்.

ஒருவன் சைக்கிளை ஓட்டிச் செல்கின்றான் கண்ணிலே உற்றுப் பார்த்த உடனே உயிரிலே மோதச் செய்கின்றது. அவன் மீது வெறுப்பு வருகின்றது. நாம் சும்மா ரோட்டில் நடந்தாலும்
1.இந்தக் கண் இப்படி அளந்து பார்க்கிறது… காண்பிக்கின்றது.
2.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பதிவாக்கி
3.அந்த உணர்வுகளைக் கவர்ந்து உயிரிலே மோதும் பொழுது தான் உணர முடிகின்றது.

ஜோசியம் பார்ப்பவர்கள் எல்லாம் அதே பழக்கத்தில் இருப்பார்கள். வந்தவுடன் தெரிந்து கொள்வார்கள். நீங்கள் கஷ்டத்துடன் வந்திருக்கிறீர்கள் என்று சொல்வார்கள். பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் அதைச் சொல்லுகின்றார்கள்.

ஆனால் அதே பழக்கத்தில் எடுக்கப்படும் பொழுது மற்றவர்களுடைய கஷ்டத்தை நுகர்ந்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் பல விதமான நோய்கள் வரும். எல்லோருக்கும் ஜோசியம் செல்வார்கள்.. கடைசியில் அவர்களுக்கு நோய்கள் தான் வரும்.

உங்களுக்கு நான் கொடுத்த “பவரை” (சக்திகளை) வைத்துப் பார்க்கப்படும் போது கஷ்டங்கள் தெரிய வரும். அல்லது மற்றவர்கள் தவறு செய்தால் தெரியும்… தவறான ஆள் என்றும் உணர்த்தும்.

அதைத் தெரிந்து கொண்ட பின் அவன் மோசமான ஆள்… ஏமாற்றுவான் என்று சொல்லிப் பழகினால் என்ன ஆகும்…?
1.இந்த உணர்வு தான் நம்மை இயக்கும்… அவன் உணர்வு தான் நம்மை இயக்குகின்றது…
2.நம் நல்ல உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை… அதை மாற்ற வேண்டும் அல்லவா.

இந்த மாதிரித் தவறான உணர்வு வந்தால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செல்லாதபடி தடுக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் வலுவாக்க வேண்டும். வலுவான பின் நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அந்தத் தீமைகள் அகன்று செல்கின்றது.

ஆகவே… உயர்ந்த சக்தியைக் கூட்டப்படும் பொழுது தீமைகளை நீக்குகின்றது. உள்ளே சென்று இயக்காதபடி தடைப்படுத்துகின்றோம். வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

குழந்தை படிக்கவில்லை சேட்டை செய்கிறான் என்று நினைத்தாலே அது உடனே வேலை செய்யும். ஆகவே இது போன்ற சமயங்களில் எல்லாம் ஆத்ம சுத்தியை உடனே கடைப்பிடித்தாக வேண்டும்.

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி உடலுக்குள் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

மனிதர்களுடன் நாம் பேசுகின்றோம். ஒருவருக்கொருவர் கோபமாகப் பேசிப் பதிவு செய்யப்படும் பொழுது நமக்குள்ளும் அது வந்து விடுகிறது. சந்தர்ப்பத்திலே நாம் சோர்வடையப்படும் போது இவனால் தான் எனக்கு எத்தனை கஷ்டம் வந்தது… இவனெல்லாம் உருப்படுவானா…! என்று சும்மா இருக்கும் பொழுது எண்ணங்கள் தோன்றும்.

இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும்பொழுது மற்ற வேலைகளை நாம் சரியாகச் செய்ய முடியாது… தவறுகள் வந்துவிடும்…! பெண்கள் சமையலிலே காரத்தை அதிகமாகப் போட்டு விடுவார்கள். குழம்பைச் சரியாக வைக்க மாட்டார்கள். காய்கறிகளை வித்தியாசமாகச் சமைப்பார்கள்.

எது இயக்குகின்றது…? நுகர்ந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. ஏனென்றால் இது எல்லாம் நான் கண்ட உண்மைகள்.

அதே சமயத்தில் உங்களைக் கண்ட மாத்திரத்திலே உங்களுக்குள் இருக்கக்கூடிய அனைத்தையும் நான் சொல்லலாம்.
1.ஆனால் அதைச் சொல்வதை விடுத்து
2.உங்களுக்கெல்லாம் நல்லதாக ஆக வேண்டும் என்று தான் நான் மாற்ற வேண்டும்.

இதைப் போல நீங்களும் ஈஸ்வரா என்று துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று மற்றவர்கள் உணர்வுகள் வந்தால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்து அவர்களுக்கு நல்ல மனதும் நல்ல எண்ணங்களும் நல்லது செய்யக்கூடிய எண்ணங்களும் வர வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.அவரைப் பற்றி இவ்வாறு நாம் எண்ணினால் நாம் அந்த நல்லதைப் பெறுகின்றோம்.
2.அவருடைய தீமையின் உணர்வைக் குறைத்து இதை வளர்த்து அருளுணர்வைப் பெற்றால்
3.உயிர் நம் இரத்தங்களிலே படரச் செய்கின்றது… இரத்தத்தில் கலந்த அருள் உணர்வுகள் தீமைகளைத் தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதனுடைய இயக்கத்தைக் குறைக்கின்றது… நல்ல அணுக்கள் பெருகுகின்றது.
5.நல்ல உணர்வும் நல்ல உடலும் நல்ல வளர்ச்சியும் நமக்குள் வருகின்றது.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… உங்களால் தானே முடியும். ஆனால் “சாமி ஒன்றும் செய்யவில்லை” என்ற எண்ணத்தில் பலர் இருக்கின்றார்கள்.

தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்தியால் பிறருடைய தவறைத் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அந்தத் தீமைகள் நம் உடலுக்குள் புகாதபடி தடுத்துக் கொள்ள “அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்…” இந்த உண்மைகளை எல்லாம் வெளிப்படுத்துகின்றேன்… பதிவு செய்து கொள்ளுங்கள்.

இயற்கையின் உண்மைகளை எல்லோரும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்கே இதை உணர்த்தி அந்தத் தன்னம்பிக்கையைக் கொண்டு வருகின்றேன்.

1.அந்த அருள் ஒளியை என்றுமே நம் உயிருடன் சேர்த்துச் சொந்தமாக்கி நாம் பழகுதல் வேண்டும்.
2.நான் யாரை நினைக்கின்றேன்…? உங்களைத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
3.உங்களுக்கு ஃபுல் பவர் (FULL POWER) சதா கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

உங்கள் உயிரை ஈசனாக மதிக்கின்றேன் அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் புனிதத் தன்மைகள் ஏற்பட வேண்டும் ஈசன் வீற்றிருக்கக் கூடிய உடலான சிவம் உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் அதனால் உயர்ந்த நிலை ஏற்பட வேண்டும்.

உங்களிடமிருந்து வெளிப்படும் சொல் பிறருடைய தீமைகளைப் போக்கக்கூடிய நிலை வர வேண்டும். “என்னுடைய தியானமே இது தான்…” நீங்களும் அதே போன்று செய்து பாருங்கள்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற அழுக்குத் தண்ணீர் குறைந்து கொண்டே வரும். ஆகவே… எங்கே குறைகளைக் கண்டாலும் அந்தக் குறை நமக்குள் இயக்காதபடி அருள் ஒளியைக் கூட்டி அன்பையும் பண்பையும் பேணிக் காக்கும் அருள் ஞானம் அவருக்குள் பெருக வேண்டும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள் என்றால் அது ஒவ்வொரு நொடியிலும் நம்மைக் காக்கும்… அவர்களையும் காக்கும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணினால் விஷ்ணு தனுசாக மாறுகின்றது. அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் இரத்தத்திலே கலக்கப்படும் பொழுது சிவ தனுசை அடக்குகின்றது.

பிறிதொருவர் தீமைகள் சிவ தனுசு… அதைப் போய் இது அடக்குகிறது. ஏனென்றால்
1.அதைக் காட்டிலும் வலுவானது “விஷ்ணு தனுசு…”
2.இது செய்யப்பட்டது இனி நாம் செய்ய வேண்டியது.

அருள் மணங்களை நாம் எப்படி எடுக்க வேண்டும்…? என்று இராமாயணத்தில் இப்படித் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சிவ சக்தி என்ற நிலையில் செயல்பட வேண்டும் சக்தி தான் சிவமாகின்றது பெண்கள் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும்… அருள் ஞானம் பெற வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்தச் சக்தி என்ற நிலையை உருவாக்கித் தன் கணவனுடன் சேர்க்கப்படும் போது சிவமாகின்றது.

சக்தி என்ற உணர்வுகள் கணவன் தனக்குள் நுகர்ந்து
1.மனைவியின் ஆற்றல் எனக்குக் கிடைக்க வேண்டும்
2.என் மனைவி உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வை எடுத்து
3.இருவருமே உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி எண்ணி எடுத்து இதை வளர்த்துப் பாருங்கள்.
4.இரு உணர்வும் ஒன்றாகின்றது அதனுடைய நல்ல பலன்களை அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விஞ்ஞான அறிவில் வளர்ந்து கொண்டே தான் செல்கின்றார்கள். எத்தனையோ விதமான நிலைகளைப் பரவ விட்டுள்ளார்கள். அதிலே தப்பும் வழி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது முதலில் தாய் தந்தையை நினையுங்கள். அவர்தான் நம்மை மனிதனாக உருப்பெறச் செய்தார்கள்.

அந்த அரும் பெரும் சக்தியின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்திகளையும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்த எண்ணத்தோடு படுங்கள்.
1.இரண்டு நிமிடம் மூன்று நிமிடம் சொல்லுங்கள்.
2.உங்கள் உடலுக்குள் இந்த அருளைப் பாய்ச்சுங்கள்… திரும்பத் திரும்ப எண்ணுங்கள்.

எங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வர வேண்டும் கல்வியில் ஞானம் வர வேண்டும். நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எல்லோருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும். பகைமைகள் அகல வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.

என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் எல்லோருக்கும் உயர்ந்த எண்ணம் வர வேண்டும் என்று இரவில் இப்படி எண்ணி வளர்த்துப் பழகுங்கள் இதை வளர்க்க வளர்க்க அந்தப் பகைமைகள் நிச்சயம் மாறும்.

இப்படி நம் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழக வேண்டும்…!

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றியமைக்கும் திறன் “சாதாரண மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்”

 

1.காலையில்… மாலையில்… படுக்கப் போகும் முன்… தொழிலுக்குப் போகும் முன்… மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துப் பழக வேண்டும்.
2.பிறருடைய தீமைகளைப் பார்க்க நேர்ந்தது என்றால் அதையெல்லாம் தனக்குள் பதிவாகாதபடி அழித்துப் பழகுதல் வேண்டும்… பதிவாக்கக் கூடாது.
3.ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்திப் பழகுதல் வேண்டும்.
4.இந்தப் பழக்கத்திற்கு வந்தால் வளர்ச்சி பெறுகின்றீர்கள். உங்கள் மூச்சு உலகைக் காக்க உதவும்.

எங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்கள் நன்மை பெறச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்கின்றோம் அல்லவா…! அதைப் போல மூச்சு ஒரு நூறு பேர் தெருவில் விட்டாலே அங்கே தீமைகள் வராதபடி பாதுகாக்கலாம். உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்… தீமை புகாது உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள்.

இதைச் செய்யச் செய்ய… அறியாமலே பல அற்புதங்கள் உங்களுடைய பேச்சால் மூச்சால் வரும்… பல நிலைகளைச் செய்ய நாம் பழக வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஞானத்தைப் பெற வேண்டும்… அருள் வாழ்க்கை வாழ வேண்டும்… தெளிந்த மனம் பெற வேண்டும்.

1.தபோவனம் என்று சொன்னால் நீங்கள் தான் தபோவனம்…! நான் அல்ல…!
2.நாம் எல்லோரும் சேர்ந்தால் தான் தபோவனம்.

உயர்ந்த குணங்களை எடுத்து எல்லோருக்கும் உயர்ந்த சக்தியைக் கொடுக்க வேண்டும். உயர்ந்த நிலைகள் நாம் பெற வேண்டும். “எல்லோரும் உயர்வான நிலைகள் வர வேண்டும்” என்று இதை நாம் முன்னணியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் மட்டுமல்ல… வீட்டிற்குள்ளும் எந்தக் குறையாக இருந்தாலும் உடனே நிவர்த்தி செய்ய வேண்டும். சாந்தத்தையும் ஞானத்தையும் வளர்த்து நம்முடைய நிலைகளை “மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும்…”

யாம் வெளிப்படுத்தியுள்ள உபதேச நூல்களை ஒரு நாளைக்கு “ஒரு அரை மணி நேரமாவது” படிக்க வேண்டும்.
1.அதில் இருக்கக்கூடிய “முக்கியமான கருத்துகளை” வெளிப்படுத்த வேண்டும்.
2.எல்லோருக்கும் அதைப் படித்துச் சொல்லும் ஆர்வம் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.
3.எல்லோருக்கும் கேட்கும்படியாக அந்த “அருள் உணர்வோடு” வாசிக்க வேண்டும்.

இப்படிச் செய்தோம் என்றால் அனைவரும் ஒன்றாகின்றோம்.

1.என் சொல்லே உங்களுக்குள் வருகின்றது.
2.குருவின் அருள் எனக்குள் இருக்கின்றது
3.அந்த குருவின் அருளே உங்களுக்குள் பாய்கின்றது
4.அந்த உணர்வே நம் அனைவரையும் ஒன்று சேர்க்கின்றது.

மனப்பாடம் செய்து புத்தகங்களைப் படித்தால் ஏற்றத்தாழ்வுகள் கூட வரலாம். சிறிது நாளைக்கு இந்த மாதிரி எடுத்து ஒரு இடத்தில் உபதேசம் செய்கிறோம் என்றால்… கேட்டார்கள் என்றால்…
1.எம்முடைய புத்தகத்தை எடுத்து அந்த உணர்வை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தால் ஒன்று போல குரு அருளை நாம் எல்லோரும் எடுத்துப் பேசலாம்
2.குரு அருளால் நாம் அனைவரும் ஒன்றாக இயங்கும் தன்மை வந்துவிடும்.

நம் உணர்வுகள் அதிலே பற்று வளர்ந்து விட்டால் எந்தக் கலக்கமும் வராது… உணர்வுகள் தெளிவாகும். ஆகையினால் ஒவ்வொருவரும் எம்முடைய உபதேசங்களை அடிக்கடி படியுங்கள்… கேட்டுப் பதிவாக்குங்கள்.

ஒரு விசேஷத்துக்குச் சென்றாலும் உபதேசக் கருத்துக்களை எடுத்துக் கணவன் மனைவி வசிஷ்டரும் அருந்த்தியாக எப்படி வாழ வேண்டும்…? என்ற தத்துவத்தை வாழ்த்தாகச் சொல்லி நம்முடைய புத்தகங்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.

ஒருங்கிணைந்த நிலையில் நாம் செயல்படும் பொழுது நாம் விடும் மூச்சலைகள் இந்த காற்றிலே தான் பரவுகின்றது… இது பெருகிக் கொண்டே வரும்.

ஆனால் சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் தான் இந்தக் காற்றில் அதிகமாக உள்ளது. இதிலிருந்து மாறுபட்ட உணர்வுகளாக
1.இந்த உலகத்திலே நாம் உயர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி
2.அதை வளர்த்துக் கொண்டு வர வேண்டும்.

எத்தனையோ கெமிக்கல் கலந்த விஷங்களை விஞ்ஞான முறையிலே பிரிக்கின்றார்கள்… நியூட்ரானைப் பிரித்து அணு உலைகளாகவும் உருவாக்கியுள்ளார்கள். ஆகையினால் விஷத் தன்மைகள் வெப்பத்தால் பிரிந்து பலவாறு பூமி முழுவதும் பரவிக் கொண்டுள்ளது.

சூரியனுடைய காந்த சக்தி அனைத்தையும் கவர்ந்து வைத்துள்ளது. இந்த விஷங்கள் ஒரு பக்கம் அடர்த்தியாகி இன்னொரு பக்கத்திலிருந்து எதிர்நிலையான அலைகள் வந்தால் “மோதிச் சூறாவளியாக மாறி அதிவேகமாகச் சுழல ஆரம்பிக்கின்றது…”

உலகம் முழுவதற்கும் “எந்த நிமிடத்தில் என்ன நடக்கும்…?” என்று இப்பொழுது சொல்ல முடியாது. செல்வம் நம்முடன் வரப் போவதில்லை. விஞ்ஞானிகள் இருக்கக்கூடிய இடங்களிலும் விஷத் தன்மைகள் அதிகமாகப் பரவி பரிதாப நிலைகளில் தான் அவர்களும் உள்ளார்கள்.

1.எந்த இடத்திலே பார்த்தாலும் மனிதன் தன்னம்பிக்கை இழந்து வாழக்கூடிய நிலைகளாக இருக்கின்றது.
2.தன்னம்பிக்கை வர வேண்டும் என்றால் நம்மைப் போல் இந்த அருள் ஞான வழியினைச் செயல்படுத்துபவர்கள் தான் அதை வழி நடத்த முடியும்.
3.நாம் செய்யும் தியானத்தைச் சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து வெளிப்படுத்துங்கள். எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தியானியுங்கள். இந்த உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நாளடைவில் “உங்களுடைய சக்தியை” நீங்கள் பார்க்கலாம்.

குரு அருளால் அரும் பெரும் சக்தியை நீங்கள் நுகர்கின்றீர்கள். அந்த உணர்வுகளை மூச்சலைகளாக வெளிப்படுத்துகின்றீர்கள். இதை நீங்கள் செய்ய முடியும்.
1.சூறாவளிகள் வருகிறது என்றால் ரிமோட் செய்கின்ற மாதிரி
2.நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

உதாரணமாக அன்று போபாலில் விஷ வாயு கசிவு ஆனது. நம்முடைய தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அந்தக் குடும்பமே தியானத்தில் இருந்தது. அதன் வழியிலேயே தான் எல்லோரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றுமே தெரியாதபடி “யாரோ ஒருவர் திடீரென்று அங்கிருந்து உடனே கிளம்பி வாருங்கள்” என்று சொல்கின்றார்.

குடும்பத்துடன் அங்கிருந்து பூனாவிற்குக் கிளம்பி விட்டார்கள். இவர்கள் சென்ற சிறிது நேரத்தில் போபாலில் வெடிச் சத்தம் கேட்கின்றது அதற்குப்பின் டிவியில் ஒளிபரப்பு செய்கின்றார்கள் “விஷவாயு டேங்க் வெடித்தது… என்று…!”

இந்தக் குடும்பம் இருந்த வீட்டிற்கு அருகில் தான் அந்த டேங்க் இருந்தது. எல்லாம் பாதிப்படைந்து விட்டது. இவர்களுடைய உறவினர்கள் என்ன ஆனதோ…? என்று எண்ணுகின்றார்கள்.

ஆனால் இவர்கள் நாங்கள் வெளியிலே வந்து விட்டோம்… பூனாவில் பாதுகாப்பாக இருக்கின்றோம். நாங்கள் வசித்த தெருவில் இருப்பவர்களுக்குக் கண் போய்விட்டது மாடெல்லாம் இறந்துவிட்டது ஏராளமானோர் இறந்து கொண்டிருக்கின்றார்கள் என்று ஃபோனிலே சொல்கிறார்கள்.

இதைப் போன்று இன்னொரு பையன் திருநெல்வேலியில் இருந்து வந்து அங்கே தங்கி இருந்தான். அவனுடைய தாயார் எம்முடைய உபதேசப் புஸ்தகத்தைக் கொடுத்து “இதைப் படித்துக் கொண்டே வா…” என்று சொல்லி இருக்கின்றார்கள்.

அதைப் படித்துக் கொண்டிருக்கும் போது என்ன ஆனது…? அவரும் விஷக் கசிவிலிருந்து தப்பிவிட்டார்.

திடீரென்று என்னவென்றே தெரியவில்லை…!
1.வித்தியாசமான நெடி தெரிந்தவுடன் கம்பளித் துணி போட்டு அந்த நெடி பாதிக்காதபடி மூடிக்கொண்டு
2.ஈஸ்வரா குருதேவா ஈஸ்வரா குருதேவா என்று சொல்லி தன்னுடைய தாயை நினைத்துக் கொண்டே இருந்திருக்கின்றார்.

அடுத்து பார்த்தால் அருகிலே மற்ற இடங்களில் உள்ளவர்கள் எல்லாம் இறந்து கிடக்கின்றார்கள்.

அதற்குப் பின்னாடி அவர் மாற்றலாகி டெல்லி சென்றார். அங்கே எம்மைச் சந்தித்து இந்த விவரங்களை எல்லாம் என்னிடம் சொன்னார்.
1.என் தாய் சொல்லித் தான் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். இந்தப் புத்தகம் தான் கடவுள்…
2.என் தாய் தான் எனக்குக் கடவுளாக இருந்து காப்பாற்றியது.
3.இதைப் படிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நானும் அந்த விபத்தில் சிக்கியிருப்பேன்.

என் அருகில் இருந்தவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள் நான் தப்பிவிட்டேன் என்று என்னிடம் சொல்கின்றார்.

இதெல்லாம் காரணம் என்ன…? என்று கேட்டால் “நமக்கு நாமே… நாம் எதை எண்ணுகின்றோமோ… அதுவே நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வருகின்றது…!”

வேதனை என்ற உணர்வு வந்தால் பாதுகாப்பு இல்லை… போகும் இடங்களில் எல்லாம் சண்டை வருகின்றது… தொழிலில் நிம்மதி இல்லை. ஆனால் அருள் உணர்வுகளை நாம் வளர்த்துக் கொண்டால் போகும் இடங்களில் எல்லாம் அனுசரணையாகி பாதுகாக்கக்கூடிய நிலையாக வருகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்றால் நமக்கு அது பெரிய பாதுகாப்பாக அமைகின்றது.
2.ஒரு எதிர்பாராத நிலைகள் வருகிறது என்றால் ஓரளவுக்குத் தாங்கி நம்மைப் பாதுகாக்கக் கூடிய நிலையும்
3.அதற்குண்டான சந்தர்ப்பத்தில் ஏதாவது ரிமோட் செய்து “வேறு பக்கம் அழைத்துச் செல்லக்கூடிய நிலைகள் இருக்கின்றது…”

இந்த உணர்வுகள் ஒளியாக மாற்றக்கூடிய சக்தியாகக் கிடைக்கும் ஆகையினால் உங்களை நீங்கள் நம்புங்கள். நீங்கள் ஒவ்வொருவரும்…
1.சாமி தான் என்று நினைக்கிற மாதிரி…
2.சாமி மாதிரி நானும் பெரிய சக்திக்கு வர வேண்டும்.
3.என் பேச்சால் மூச்சால் பிறருடைய நோய்கள் போக வேண்டும்
4.என் மூச்சால் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக் கொண்டு வாருங்கள்.

இது உலகம் முழுவதற்கும் பரவ வேண்டும்.

உங்கள் எல்லோருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் சதா என்னுடைய தியானமே. நீங்கள் எல்லாம் தயாராக வேண்டும்.

இந்த உடல் தான்… தொழில் தான்… சம்பாத்தியம் தான்… அது தான் மிச்சம் என்று எண்ணாதபடி
1.அருள் தான் நமக்கு வேண்டும்… அது தான் நிலையானது என்று உணர்வோடு வளருங்கள்.
2.துருவ நட்சத்திரத்தை மறந்து விடாதீர்கள்… எந்த நிமிடமும் அதை எடுத்துப் பழகுங்கள்.
3.இந்த உணர்வை உங்களுக்குள் சேருங்கள்… எந்த இருளும் உங்களை நாடாது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

எதை நீங்கள் எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் இயக்குகின்றது. அதன் வழி உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…! என்று சொன்னது போல்.

எல்லோருக்கும் நான் நன்மை செய்தேனே…! “எனக்கு ஏன் இப்படி வந்தது…?” என்று வேதனைப்பட்டால் அதுவாக நாம் மாறி விடுகின்றோம். ஆகவே அருள் ஒளி பெற வேண்டும். எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும். எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் “நாம் அதுவாகின்றோம்…”

எல்லோருடைய அந்த உயர்ந்த உணர்வுகளும் நமக்குள் வரும் பொழுது உலகைக் காக்கும் எண்ணங்கள் நமக்குள் வளருகின்றது ஆகையினால் நாம் அனைவரும் அதைச் செயல்படுத்துவோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம்… உலகத்தைக் காப்போம்.

1.உங்கள் உணர்வுகள் நீங்கள் வாழும் பகுதியிலோ அல்லது மற்ற இடங்களிலோ உண்மையில் நல்லதைச் செய்யும்.
2.உங்களையும் காக்கும் மற்றவர்களையும் காக்கும்
3.உலகையே காக்கக்கூடிய திறன் உங்களிடமிருந்து அது வெளிப்பட வேண்டும்.

சாதாரண மனிதனாக உங்களை நீங்கள் எண்ண வேண்டாம்…! எல்லோருக்கும் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துச் செயல்படுத்துங்கள்.

ஒவ்வொருவரும் அன்பை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அரவணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இருளை அகற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்.
1.தனக்குள் வரும் தீமைகளை அகற்றும் அந்த வலிமை பெற வேண்டும்.
2.அந்த நிலையை வளர்த்துக் காட்டி உலகிற்கு எடுத்துக்காட்டாக நம்முடைய செயல்கள் இருக்க வேண்டும்.
3.நமது குருநாதர் துருவ நட்சத்திரத்துடன் தான் இயங்கிக் கொண்டுள்ளார்.
4.அவருடைய அருளை நாம் எளிதில் பெறலாம். இருளை அகற்றலாம் மெய்ப்பொருளைக் காணலாம் பிறவி இல்லாத நிலை அடையலாம்.
5.அந்த நிலைக்குத் தான் இந்த உபதேசம்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை என்று தெரிகின்றது… சொத்து நம்முடன் வருவதில்லை என்றும் தெரிகின்றது. தெரிந்தும் நாம் அதில் சிக்கிவிடக் கூடாது.

நாம் அந்த அருள் பெற வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் அருள் வழியில் வாழ வேண்டும் இருளை அகற்றி மெய்ப் பொருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற இந்த உணர்வே நமக்குள் உருவாக வேண்டும்.

அருள் ஞானம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் இருளை அகற்றும் சக்தி ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும்.
1.விஞ்ஞான அறிவால் வரும் அழிவினை மாற்றி அமைக்கும் திறன்
2.சாதாரண மனிதனுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வேண்டினோம் என்றால்
3.இந்த உண்மைகள் உலகம் முழுவதும் பரவும்.

இதை எடுத்து நுகர்வோர் எவரோ… காக்கும் சக்தியை அவரே பெறுகின்றார்கள்.

ஒரு நூலால் ஒன்றும் செய்ய முடியாது. நான் ஒருவன் என்ன செய்ய முடியும்…?
1.உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் பிராத்திக்கின்றேன்.
2.எண்ணுகின்றவர்களுக்கு இது கிடைக்கின்றது… பெற வேண்டும் என்று ஏங்கினால் உங்களுக்குள் வருகின்றது
3.அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஒருவருக்கு நோய் வந்துவிட்டது அல்லது குடும்பத்தில் கஷ்டம் என்று கேள்விப்பட்டால் அதைக் கேட்போர் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கின்றது.

அப்போது இந்த உயர்ந்த உணர்வுகளை எடுத்து உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் தொழில் நன்றாக இருக்க வேண்டும். நோய் இல்லை என்று இந்தச் சொல்லை அவர்களிடம் நீங்கள் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வுகள் அவர்களுடைய நோயை நீக்கும்
2.அவர்கள் கஷ்டத்தைப் போக்கக்கூடிய சக்தியாக வர வேண்டும்.
3.அவருடைய உணர்வு நமக்குள் வராது தடுத்துக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவருடைய அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும். எல்லோரும் பேரின்பம் பெறக்கூடிய தகுதி அந்தச் சக்தி பெற வேண்டும் எல்லோரும் அதைப் பெறக் கூடிய அந்த நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
1.உலகம் நலம் பெறத் தியானிப்போம்.
2.உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் விளைய வைப்போம்
3.நம்மையும் காப்போம்..,. உலக மக்களையும் காப்போம்.
4.விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளை அகற்றும் சக்தியைப் பெறுவோம்.
5.எல்லா மக்களுக்குள்ளும் இதைப் பதிவு செய்வோம்..!

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

இனி நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை

 

இன்று கோடிச் செல்வம் தேடினாலும் இந்த உடலை விட்டு உயிர் போகத்தான் செய்யும். இதிலே எந்த உணர்வை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த உணர்வுடன் தான் வெளியே செல்லும். விஷத்தன்மைகள் நாட்டிலே பரவப்படும் பொழுது பல மாற்றங்கள் ஆகும்.

ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே சொல்லி உள்ளேன். அணுகுண்டு ஹைட்ரஜன் குண்டு இதையெல்லாம் செய்கிறார்கள்.
1.அதில் வெளிப்பட்ட கசிவுகளை எல்லாம் சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது. இந்த அலைகள் பரவிக்கொண்டே இருக்கும்.
2.எதிர்நிலையான அலைகள் வரப்படும் பொழுது அது சூறாவளியாக மாறும்.

சனிக்கோள் என்ன செய்கின்றது…? ஆவியின் தன்மையைத் தனக்குள் கவர்ந்து நீர் என்ற நிலையில் வருகிறது. நீர் வரும் பக்கம் எல்லாம் சுழற்சியால் அதைக் கவர்ந்து மேலே கொண்டு செல்கின்றது… மேகங்களாக மாற்றுகின்றது. அதிலே சிக்கிய கரு முட்டைகள் நிலத்திற்கு வருகின்றது. இது சனிக்கோளின் வேலை.

அதே சமயத்தில் நம் பூமியில் வேப்ப மரத்திலிருந்து வரக்கூடிய கசப்பான மணத்தைக் கண்டபின் ரோஜாப் பூவின் நறுமணம் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த அலைகள் இதைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
1.அது ஓடும் பாதையிலே விஷச் செடியினுடைய மணத்திலே மோதினால் அழுத்தம் தாங்காது உடனே சுழற்சியாகின்றது.
2.சிறு சிறு சுழல் காற்றுகளை பார்க்கலாம்.

இந்த விஷத்தன்மையினால் சுழிவாக ஏற்படக்கூடிய அந்த இடத்திலே ஒரு கர்ப்பிணி நின்றிருந்தால் அந்த உணர்வைச் சுவாசித்து கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இணைந்தால் “மூளை வளர்ச்சி அற்று சிந்தனையில்லாது போகும்… சிந்தனை இருக்காது…” செவிகள் கேட்காது… ஊமையாகவும் மாறும்.

குடும்பத்தில் எல்லோரும் நன்றாக இருப்பார்கள்… ஆனால் எனக்கு ஏன் ஊமைக் குழந்தை பிறந்தது…? என்று கேட்கலாம்.

ஒரு பொருளுடன் ஒரு பொருள் இணையப்படும் பொழுது விஷத்தன்மையான உணர்வின் சுழற்சி நம் வட்டத்திலே கண்டால் அந்தக் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் மூளை வளர்ச்சி குறைகின்றது.

குருநாதர் இதையெல்லாம் எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

நாம் தவறு செய்தோமா இல்லை…! இதைப்போல இது எப்படி சுழற்சி ஆகின்றதோ அதைப் போல் தான் விஞ்ஞானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நிலைகளும் சுழன்று வரும்.

ஹைட்ரஜன் குண்டோ அணுகுண்டோ அதனுடைய கழிவுகளோ அதையெல்லாம் சூரியன் எடுத்து அலைகளாகப் பரப்பி வைத்திருக்கின்றது.
1.அதிலே இந்த அழுத்தங்கள் வரப்படும் பொழுது விஷத்தன்மைகள் அதிகமாக இருக்கப்படும் பொழுது
2.ஒன்றோடு ஒன்று மோதும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அந்த இடத்திலே “சூறாவளி” ஏற்படும்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர்களை வைத்து இதை எல்லாம் கண்டுபிடிக்கின்றார்கள். எதிலிருந்து வந்தது என்று அவர்களுக்குத் தெரியாது.

அழுத்தங்கள் ஏற்பட்டு மோதலால் ஏற்படும் சந்தர்ப்பங்களினால் காற்றின் சுழற்சி (TORNADO) வேகம் இவ்வாறு இருக்கும் என்று கம்ப்யூட்டரில் எலக்ட்ரானிக் மூலமாக அறிவிப்பு கொடுக்கின்றார்கள்.

அமெரிக்காவில் இந்த நகரத்தின் பக்கம் இது போன்று வரும் என்று அனுமானம் செய்து எச்சரிக்கை செய்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வெளியேற்றுகின்றார்கள்.

சேட்டிலைட் மூலமாக இந்த ஒளிக் கதிர்களின் உணர்வுகளை ஈர்த்து “எதிலே மோதுகின்றது…?” என்பதைக் கண்டுணர்கின்றார்கள். புயல் எதிலே வருகிறது என்றும் பார்க்கின்றார்கள்.
1.ஆனால் கடலில் உருவாகும் புயல் வேறு
2.இங்கே நகரத்திற்குள் ஏற்படும் சூறாவளி வேறு.

விஷத்தின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அப்படியே மோதி அலேக்காகக் கட்டிடங்களைத் தூக்கிச் செல்கின்றது. மூன்று மாடிக் கட்டிடமாக இருந்தாலும் தூக்கி எறிகின்றது.

இதை எத்தனையோ வருடங்களுக்கு முன்பே யாம் சொன்னோம். ஆனால் யாம் சொன்னால் யார் ஏற்பார்கள்…? சொன்னாலும் எதையோ ஒட்ட வைத்து இணைத்துச் சொல்கிறார் என்று புதிதாகத் தான் பார்ப்பார்கள்.

ஆனால் என்னுடைய உபதேசங்களை முன்னாடி கேட்டவர்களுக்கு இது புரியும். இது இப்படித்தான் வரும்… அது எந்தப் பக்கம் மோதுகின்றதோ அதனுடைய செயலாக்கங்கள் இப்படித்தான் இருக்கும்…! என்று பல முறை எடுத்துக் கூறியுள்ளோம்.

ஒரு சமயம் டெல்லியிலிருந்து பத்ரிநாத்துக்குச் செல்வதற்காக ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கின்றேன். அங்கே ஒரு சூறாவளி வருகின்றது. எனக்கு முன்னாடி கார் பஸ் லாரி எல்லாம் சென்று கொண்டிருக்கின்றது.

வந்த வேகத்தில் “டப்…” என்று திசை திரும்பி பஸ் லாரி கார் அவைகளைத் தூக்கி எறிந்தது. பஸ்சைப் பக்கத்தில் இருந்த காம்பவுண்டுக்குள் மாடியில் தூக்கி எறிந்தது… அது தலைகீழாக நிற்கின்றது. உள்ளே இருப்பவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லாரியிலிருந்து மூட்டைகள் சரிந்து உள்ளே இருந்தவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு வினாடிகளுக்குள் நடந்த நிகழ்ச்சி இது. சித்தான பிற்பாடு நான் பார்த்தது இது.

ஆனால் சித்தாவதற்கு முன்னாடி அகமதாபாத்தில் நான் இருக்கும் பொழுது இது போன்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சூறாவளி எப்படி உருவாகிறது…? என்று சொன்னால் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்களை தொழிற்சாலைகளில் இருந்து வடிகட்டுகின்றார்கள்.
1.மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி விஷத்தை வடிகட்ட வேண்டும் என்று இவர்கள் செய்கின்றார்கள்.
2.இப்படி இதையெல்லாம் வடிகட்டினாலும் தண்ணீரில் கலக்கின்றது.
3.நீரெல்லாம் காய்ந்த பின் அதில் இருக்கக்கூடிய மணங்களைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.
4.மீதிக் கழிவுகள் களிமண் போன்று படித்திருக்கின்றது… அதிலிருக்கக்கூடிய விஷத்தின் ஆற்றலையும் சூரியனுடைய காந்த சக்தி எடுக்கின்றது.

ஏனென்றால் இது எல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள்.

1.இது போன்ற தொழிற்சாலைகள் எங்கெல்லாம் வைத்திருக்கிறார்களோ அது பரவலாகப் பரவிச் செல்லும் பொழுது
2.சந்தர்ப்பத்தில் இந்த அலைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையாக மோதப்படும் பொழுது சூறாவளியாக மாறுகின்றது.

மணி சாயங்காலம் 4 மணி இருக்கும். அந்த நேரத்தில் நான் ஒரு தையல் கடையிலே உட்கார்ந்து இருந்தேன். தற்செயலாக நான் பார்க்கின்றேன்… துணிமணிகள்… எத்தனையோ பொருள்கள்… தகரம்… எல்லாம் மேலே போய்க் கொண்டிருக்கின்றது. நூறு ரூபாய் நோட்டுகள் கூட பறந்து வந்து கொண்டிருந்தது.

பக்கத்திலேயே சூறாவளி வந்துவிட்டது.

அங்கே கட்டிலிலே ஒருவர் படுத்திருந்தார். அந்தச் சூறாவளி கட்டிலுடன் சேர்த்து அலேக்காக பனை மர உயரத்திற்குத் தூக்கிப் பறந்து செல்கின்றது அவர் அலறிக் கொண்டிருக்கின்றார். ஆனால் கட்டிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதை மற்றவர்கள் கவனிக்கவில்லை ரூபாய் நோட்டை எடுக்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கின்றார்கள்.

நானும் ஒரு 200 ரூபாய் பணம் எடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் காசு இல்லை… இது நடந்த நிகழ்ச்சி. ஒரு நாயை அப்படியே தூக்கிச் சுழற்றுகின்றது அது வள் வள் என்று கத்திக் கொண்டிருக்கின்றது.

வீடுகளில் சில இடங்களில் மேலே ஒட்டுத் தகரங்களைப் போட்டு வைத்திருந்தார்கள். அதை எல்லாம் பிய்த்துத் தூக்கிக் கொண்டு மேலே செல்கின்றது. பார்த்தால் அடுத்து இங்கே வீட்டிற்கு மேல் ஒன்றையும் காணோம். உள்ளே இருக்கக்கூடிய சாமான்களை எல்லாம் தூக்கிக் கொண்டு செல்கின்றது.

இதை எல்லாம் கண்ட பின் ஒவ்வொருவரும் அரண்டு வீட்டிற்குள் சென்று ஒடுங்கத் தொடங்கினார்கள். தகரம் பறந்து வருகின்றது அல்லவா… வெட்டிவிடும் என்று சொல்லி வீட்டிற்குள் சென்றார்கள். நானும் வீட்டிற்குள் வந்து விட்டேன்.

இது எல்லாம் எதிர்நிலையான உணர்வின் இயக்கங்கள். நடந்த இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குருநாதர் என்னிடம் பின்னாடி சொல்கின்றார். கண்ட அனுபவங்களைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

காற்றிலே இருக்கக்கூடிய நிலைகள் ஒரு செடியில் இருக்கக்கூடிய மணம் மற்ற மணங்களோடு கலந்து புது விதமாகத் தாவரங்கள் மாறுகின்றது அல்லவா. இது இயற்கை.

ஆனால் விஞ்ஞான அறிவு கொண்டு தாவர இனங்களின் வித்தின் அணு செல்களை மாற்றிப் புது விதமான செடிகளைக் கொண்டு வருகின்றார்கள். உயிரினங்களிலும் அதனுடைய அணுக்கருக்களை எடுத்துக் கருப்பைக்கு வெளியிலே வைத்துப் புது உயிரினங்களாக உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். விஞ்ஞானம் இன்று இவ்வளவு முன்னேறி இருக்கின்றது.

ஆக இத்தனை இருந்தாலும்
1.நாம் எங்கே செல்ல வேண்டும்…?
2.எங்கே போகின்றோம்…? எங்கே போக வேண்டும்…? என்று சிந்தனை செய்யுங்கள்.

இன்னும் தலைவலி போகவில்லை மேல் வலி போகவில்லை என்று தான் என்னிடம் கேட்டுக் கொண்டு வருகின்றார்கள். “என்னுடைய வலி… வேதனை… போக வேண்டும் அதற்கு அருள் சக்தி வேண்டும்…” என்று கேளுங்கள் என்று சொன்னால் அதைக் கேட்பதற்கு யாரும் இல்லை.

காரணம்…
1.உங்களுக்கெல்லாம் முழு சக்தி கொடுத்திருக்கின்றேன் அல்லவா.
2.நமக்கு நாமே பாதுகாப்புத் தேவை…! துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் எடுக்கப் பழக வேண்டும்.
3.சாமி காப்பாற்றுவார் சாமியார் காப்பாற்றுவார் என்பதை எல்லாம் முதலில் விடுத்துப் பழகுதல் வேண்டும்.

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

நல்லவர் கெட்டவராக மாறுவதற்குக் காரணம் என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் நல்லவர் கெட்டவராவதும் கெட்டவர் நல்லவராவதும் “சந்தர்ப்பங்களில் தான்…” கெட்டவர் நல்லவர் என்றாலும்…
1.”அந்தக் கெட்டவர்” நல்லவரின் நல்ல போதனைகளைக் கேட்கப்படும் பொழுது கெட்டதின் பலனைச் சிந்திக்கின்றார்.
2.நாம் கெடுதல் செய்தோம் நாம் அதிலிருந்து இப்பொழுது மகிழ்ச்சி என்ற நிலைகள் வரப்படும் பொழுது சிந்திக்கத் தொடங்குகின்றார்.
3.நல்லவரின் உபதேசத்தை ஏற்றுக் கொண்ட பின் தன்னை அறிந்து எப்படிப் பக்குவமாக நடந்து கொள்வது…? என்று அவருக்குள் சிந்தனை தோன்றுகின்றது.
4.சிந்தனை தோன்றும்போது அதன் வழி தனக்குள் தீமையிலிருந்து விடுபடும் உணர்வுகளும் (தீமையால் பட்ட அனுபவத்தால்)
5.பிறருக்குத் தீமை செய்து அவர்கள் தொல்லைப்பட்ட உணர்வுகள் நுகர்தறிந்ததால் ஞானங்களும் அங்கே அவருக்கு வருகின்றது.

இதைப் போன்று அவன் வாழ்க்கையில் நல்லவன் செயலை அதிகமாகக் கூர்மையாகக் கவனித்தால் அந்த உணர்வின் வளர்ச்சியாகி தன் வாழ்க்கையில் வியாபாரத்தை எப்படிப் பெருக்க வேண்டும்…? உயர்ந்த ஞானங்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்ற உணர்வுகள் அங்கே விளைகின்றது. “அவன் வாழ்க்கையிலே செல்வந்தன் ஆகின்றான்…”

அதே சமயத்தில் நல்லதைச் செய்து அதனால் எதிர்பார்த்த நிலைகள் வரும் பொழுது இரக்கம் ஈகை கொண்ட உணர்வுகளை நுகர்ந்து… நல்லவர் பிறர்படும் கஷ்டத்தினை நுகர்ந்து விட்டால்… அந்த உணர்வுகள் அவருக்குள் வலிமை பெற்ற பின் “பதட்டமும் பயமும்” வந்து விடுகின்றது.

ஏனென்றால் பிறிதொரு உணர்வின் தன்மை அச்சுறுத்தும் உணர்வுகளை இவர் பார்த்தாலும்
1.பரிவு மனம் கொண்டு இதனை நுகரப்படும் பொழுது
2.தன் உடலில் உள்ள நல்ல குணங்களில் இது பட்டபின் உணர்வுகள் எதிர்நிலையாகின்றது.

எவ்வாறு…?

நாம் நுகரும் உணர்வுகள் நம் உடலில் உள்ள நிலையும் அந்த அணுக்கள் இணைந்து “புது விதமான அணுக்களாக மாறுகின்றது…” அவ்வாறு உருமாறி விட்டால் அதனால் அடிக்கடி பயப்படுவதும்… சிந்திக்கும் திறன் இழப்பதும்… கவனக் குறைவுகள் ஆவதும்… பயத்தின் உணர்வு கொண்டு தன் வாழ்க்கையைச் சீராகப் பயன்படுத்த முடியாத நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகவே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளால்
1.நல்லவர் கெட்டவராவதும் சந்தர்ப்பத்தால் கடும் நோயாக ஆவதும்
2.இதைப்போல பண்பும் அன்பும் கொண்டோர் உணர்வுகள் இவ்வாறு இயங்குகின்றது.

கண் கொண்டு பிறருடைய துயர்களை உற்றுப் பார்த்துக் கேட்டறிந்த பின் “ஓ…ம் நமச்சிவாய…” என்று இந்த உடலுக்குள் அணுக்களாக உருப்பெற்று விடுகின்றது.

இப்படி இருக்கும் இந்த நிலையில் நல்லவரை காக்க வேண்டும் அல்லவா. காரணம்… இந்த விஞ்ஞான உலகில் அனைத்தையுமே நிரூபித்துக் காட்டுகின்றார்கள்.

மனிதன் கல்வியில் கற்றுக் கொண்ட உணர்வு கொண்டு “இதன் இதன் உணர்வுகள் இவ்வாறு இயக்கும்” என்று பதிவு செய்து கொண்டால் பதிவினை நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது சிக்கலை நீக்கும் தன்மை வருகின்றது… வாழ்க்கையின் சிக்கலை நீக்க உதவுகின்றது.

ஆனால் வாழ்க்கையில் சிக்கல் கொஞ்சம் கடினமாகி விட்டால் வேதனையாகி அந்த வேதனை வளர்ந்து விட்டால்… சிக்கலை நிவர்த்திக்கும் உணர்வுகள் வந்தாலும்
1.வேதனைப்பட்டபின் தன்னையே சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.
2.அப்போது சோர்வடைகின்றது… அந்தச் சோர்வடைந்த நிலையில் ஒருவர் நல்லதைச் சொன்னால்
3.அந்த உணர்வுகள் தாங்காது கோபம் வருகின்றது… உணர்ச்சிவசப்படுகின்றார்.

இவ்வாறு நம் உடலுக்குள் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் “ஒவ்வொரு நொடிகளிலும் உணர்வு மாறிக் கொண்டே உள்ளது…!”

இன்றைய நிலை நாளை இல்லை…!

அதனால் தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று தெளிவாகக் கூறுகின்றார்கள். அதே சமயத்தில் விநாயகருக்கு முன் எலியைப் போட்டு மூஷிகவாகனா என்று காட்டுகின்றார்கள்.

1.நாம் நல்லவர்களைப் பார்த்து அந்த உணர்வை அதிகமாக நேசித்தால்
2.நமக்குள் இருக்கும் கெட்ட குணங்களை அந்த நல்லது அடக்குகின்றது. அது தான் மூஷிகவாகனா…!

சுவாசித்த உணர்வுகள் இயக்கினாலும் வேதனையும் துன்பமும் படும் உணர்வினை ஒரு நல்லவர் பண்புள்ளவர் அந்த நல்ல சொல்லைக் கேட்டு நடந்தால் (சாதாரண நிலைகளில்) அதை நுகரப்படும் பொழுது கேட்டறியும் தன்மை வந்தால் இது பெருகுகின்றது ஓம் நமச்சிவாய என்று…!

கெட்ட குணங்களுக்குள் அந்த நல்ல உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அது குறைகின்றது. ஆகவே
1.இயற்கையின் நியதிகளை… சந்தர்ப்பத்தில் நாம் சுவாசித்தது…
2.அந்தந்த உணர்வின் இயக்கங்களாக நம்மை எப்படித் திசை மாற்றுகிறது…? என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து தெளிந்து ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளை… அந்த ஒளியான உணர்வுகளை நமக்குள் சேமித்து… இருள் சூழச் செய்யும் நிலையிலிருந்து நாம் விடுபடுதல் வேண்டும். நம் நல்ல குணங்களைக் காக்க வேண்டும்.

ஞானிகள் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ வேண்டும்.

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

நன்மை செய்ய வேண்டும் என்றால் “மன உறுதி” வேண்டும்

 

இன்றைய உலகத்தில் நாம் செய்யக்கூடிய நன்மைகளுக்கு எவ்வளவு தூரம் அதனுடைய பலன் நமக்குக் கிடைக்கும்…? என்று பார்த்துக் கொள்ளலாம்.

நீங்கள் நன்மை செய்தீர்கள் என்றால்
1.அதற்காக வேண்டித் தவறுகளை எல்லாம் ஒத்துக் கொள்ள வேண்டும்…
2.இந்தக் காலத்தில் சாட்சியங்கள் எல்லாம் அப்படித்தான் வரும்.

ஏனென்றால் “நன்மைகள் பல செய்யத் துணிவு வேண்டும்…!” இது குருநாதர் நமக்கு உணர்த்தியது.
1.நன்மை செய்ய வேண்டும் என்றால் மன உறுதி வேண்டும்.
2.பின் விளைவுகள் வராதபடி பாதுகாக்கக்கூடிய அந்தத் திறனும் ஞானமும் வேண்டும்.
3.நன்மை செய்பவர்களுக்குக் கெடுதல்கள் நிறைய வரும்
4.அதையெல்லாம் சமாளிக்கக் கூடிய வலிமை வேண்டும்.

இது எல்லாம் சாதாரண அனுபவத்தில் நான் (ஞானகுரு) தெரிந்து கொண்டது.

ஆகவே இந்த வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாகவும் சிந்தனையுடனும் இருத்தல் வேண்டும். எதையுமே பரிசீலனை செய்து “வழி நடத்துதல் வேண்டும்”
1.அன்பை மட்டும் செலுத்தினால்… அந்த அன்பைக் காக்கக்கூடிய சக்தி வேண்டும்.
2.ஆகவே பண்பை நமக்குள் எப்படி உயர்த்த வேண்டும் என்ற நிலையைச் சிந்திக்க வேண்டும்.
3.அவசரப்பட்டோ ஆத்திரப்பட்டோ உணர்வுகள் வெளிப்பட்டால் அது பகைமை உணர்வுகளையே தூண்டும்.
4.பகைமை என்ற உணர்வு தோன்றி விட்டால் வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றும்.
5.வெறுப்பு என்ற உணர்வுகள் தோன்றி விட்டால் நமக்குள் வெறுக்கும் உணர்வே வளரும்.

ஓம் நமச்சிவாய என்று இந்த உணர்வுகள் வேலை செய்யும். பகைமை என்ற உணர்வுகள் வரும் பொழுது ஓம் நமச்சிவாய என்று உடலுக்குள் உருவாகும். அந்த அணுக்கள் நமக்குள் பெருக எந்த வகையில் அந்த அணுக்கள் உருவானதோ அதுவாகவே நம்மை இயக்கும்.

உதாரணமாக ஒரு விஷச் செடியின் அணுக்கள் உருவாகிவிட்டால் நல்ல செடிக்கு வரக்கூடிய சத்தினை அது கெடுத்து விடுகின்றது. அது போல் நாம் நுகரும் வேதனை உணர்வுகள் அணுக்களாக உருப்பெற்று விட்டால் அந்த உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது அதனுடைய வலிமை ஜாஸ்தி.
1.நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களுக்கு அதற்குண்டான சத்து கிடைக்காதபடி தடைப்படுத்தும்.
2.நல்ல குணங்கள் வாடும். நல்ல குணத்தை உருவாக்கிய அணுக்கள் அது சுருங்கத் தொடங்கும்… நோயாக மாறும்.
3.இந்த விஷத்தன்மை அதிகமாக மாறி நம்மை அறியாமலே நல்ல பண்புள்ளவர்களை மாற்றி அமைத்துவிடும்.

பக்தியில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று எல்லோருக்கும் நன்மை தானே செய்தேன்… என்னைச் சோதிக்கின்றாயே…? என்று இந்த வேதனையைத் தான் நுகர முடிகின்றது. வேதனையிலிருந்து மீளும் நிலை இல்லாது போய் விடுகின்றது.

இயற்கையிலே ஒன்றை ஒன்று பார்த்து… உணர்வின் தன்மை நுகர்ந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிர் தான். மனிதனாக ஆன பின் நல்ல உணர்வுகளை… அருள் உணர்வுகளை… சீராக நுகரவில்லை என்றால்
1.நுகர்ந்த உணர்வுகள் இந்த உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தி நோயாகி
2.மனிதனல்லாத உருவையும் அடுத்து உருவாக்கி விடுகின்றது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை

 

உதாரணமாக…
1.யாகம் நடக்கும் இடங்களில் மந்திரத்தை ஓதுகிறார்கள்… நாம் அதை உற்றுக் கேட்டோம் என்றால் அந்த மந்திரங்கள் நமக்குள் பதிவாகி விடுகின்றது.
2.சோமபானம் என்ற நிலையை இணைத்தால் நம் சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.

எதனை எண்ணினோமோ அதன் வழி செல்கின்றது இதன் வழி நாம் செல்லும் இந்த உடலின் உணர்வுகள் பதிந்த பின் கேட்டறிந்த நிலைகள் பிறிதொரு உணர்வின் இயக்கமாகவே வருகிறது.

ஆலயங்களில் இந்தத் தெய்வம் தான் எல்லாவற்றையும் காக்கும் என்று சொல்லும் பொழுது யாகத் தீயிலே பல பொருள்களைப் போட்டு மணத்துடன் அந்த எண்ணத்தைப் பரப்புகின்றனர்.

நாம் நுகர்ந்தறிந்த நிலையில் தெய்வம் நல்லது செய்யும் நம்பிக்கையில் அதை நுகர்கின்றோம். நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் பட்டபின் இதன் வழி அந்தத் தெய்வத்தைக் கண் கொண்டு உற்றுப் பார்க்கின்றோம்.

அங்கே வைத்திருக்கும் சிலையின் உருவமும் அங்கே அலங்கரித்த நிலைகளும் பதிவாகி நமக்குள் வருகின்றது அதிலிருந்து வரக்கூடிய மணத்தையும் மற்றதையும் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தது அலைகளாக வருகின்றது.

அந்த அலையை நுகரப்படும் பொழுது உருவத்தைக் காண முடிகின்றது… அங்கே இருக்கக்கூடிய நிறங்களையும் காண முடிகின்றது. அதனின் மணத்தையும் உணர முடிகின்றது.

இப்படி நாம் உணர்ந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்தபின் மடிந்தோம் என்றால் என்ன நடக்கிறது…?

இந்த மந்திரத்தை ஜெபித்தால் நீ முருகனைக் காணலாம் என்று சொல்லியிருப்பார்கள். எந்தெந்த குணங்களின் தன்மையோ அதற்குண்டான பதார்த்தங்களை வைத்து அவர்கள் ஜெபிக்கின்றனரோ
1.மனித உடலுக்குள் இந்த உணர்வுகள் கலந்த பின் இறந்தான் என்றால்
2.சூட்சும சரீரத்தில் முருகனைப் போன்று காட்சி தரும்… காளியைப் போன்று காட்சி தரும்.
3.காளியைப் போன்று அசுர உணர்வு கொண்டு செயல்பட்டால் இவன் குணமும் அதே நிலைகள் மாறும்… அசுர செயல்களையே செயல்படுத்துவான்.
4.கருப்பண்ணசாமியோ மாடசாமியோ போன்ற கொடூர உணர்வுகளை நுகர்ந்தால் அதனுடைய செயல்களே நமக்குள் வரும்… பார்க்கலாம்.
5.அருளாடும் போது அசுரத்தனமாக உணர்வுகள் பாய்ச்சப்பட்டு இயக்கும்.

ஆனால் அந்த உணர்வுகள் அவனுக்குத் தெரியாது. அது வேதனை என்ற நிலையாகி பல துன்புறுத்தும் நிலைகளையும் பார்க்கலாம். அவன் அறிய முடியாது. அவன் உடலுக்குள் இருக்கும் உணர்வுகள் அதைத் தாங்கிக் கொள்ளும்.

1.தீமிதி என்ற நிலை வரும் பொழுது அந்த அக்கினியைத் தனக்குள் நுகர்ந்தால்
2.யாகத் தீயைப் போட்டு அதன் வழி இன்னொரு மனிதன் மடிந்திருந்தால் அந்த உணர்வை நுகர்ந்தால்
3.தீயைப் போட்டு மிதித்து இருப்பான் (இறந்தவன்) என்றால்… இவன் அந்தத் தீமிதியைத் தாங்கும் நிலை வருகின்றது.

தீமிதி விழா என்று நாம் கொண்டாடும் பொழுது இதன் வழி விளைந்து அந்தத் தாய் மீது பற்று கொண்டோர் உணர்வுகளும் அதன் வழி மடிந்தால் இந்த உணர்வை மற்றவர்கள் நுகர்ந்தால்
1.தீமிதி விழா என்று வரும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு அவனுக்குத் தீயைத் தாங்கும் வல்லமை உண்டு.
2.இது எல்லாம் மனிதனுக்குள் விளைந்த உணர்வின் தன்மை இங்கே வருகின்றது.

ஒரு ஆவியின் தன்மை உடலில் இணைந்து இயக்கப்பட்டால் நெருப்பிலே மிளகாயைப் போட்டோம் என்றால் அந்த நெடியைச் சுவாசித்து நாம் தான் எழுந்து வர வேண்டுமே தவிர “ஆவி பிடித்த அந்த உடலுக்குத் தும்மலும் வராது எதுவும் செய்யாது…”

இதைப் போன்ற இயற்கையின் நிலைகள் மாறி வரும் இந்நிலையில் நாம் இதையெல்லாம் உணர்ந்தால் நாம் எதனைப் பெற வேண்டும்…? எந்த வழியில் வாழ வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் என்ன…? என்ற நிலையை நாம் சிந்தித்துச் செயல்படுவது மிகவும் நலம்.

குரு காட்டிய அருள் நெறி கொண்டு அவரிடம் 20 வருடம் பெற்ற அனுபவத்த
1.ஒரு உயிர் தோன்றி மனிதன் வரை எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்தது…?
2.சூரியன் தோன்றிய பின் உயிரணுக்கள் எவ்வாறு உருவானது…? என்று குரு காட்டிய அருள் வழியில்
3.அவர் கண்ட நிலையில் உயிரணுக்களின் தோற்றங்களும் மாற்றங்களும் என்ற நிலையைத் தெளிவாகக் கூறியதைக் கண்டுணர்ந்த பின்பு தான்
4.நீங்களும் இதைப் பெற முடியும்… அறிய முடியும் என்று உணர்த்துகின்றேன்.

இந்த வாழ்க்கையில் இனி எது வேண்டும்…? பிறவி இல்லா நிலை வேண்டும் பிறவா நிலை வேண்டும். அந்த அருள் பெறுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் எடுத்துப் பழக வேண்டும் என்று சொல்வது.

அந்தச் சக்திகளை நாம் ஏங்கிப் பெறுவோம். அதை நமக்குள் கூட்டுவோம். வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் நஞ்சுகளை மாற்றுவோம்.
1.தீமை வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அதை இடைமறித்து
2.இருள் சூழச் செய்யும் உணர்வினை மாற்றி நமது வாழ்க்கையில் பேரருளை உருவாக்கும் அழியா ஒளிச் சரீரம் பெறுவோம்.

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகளின் பின் விளைவுகள்

 

சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்குகின்றது. மற்ற நட்சத்திரத்தின் அளவுகோல் வரும் பொழுது அதன் வழி மோதி எலக்ட்ரிக் என்ற நிலையும் மோதலின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் முழுவதும் பரவுகின்றது… மற்ற கோள்களையும் இயக்கும் தன்மை பெறுகின்றது.

பிரபஞ்சத்தில் இந்தக் காந்தப்புலனறிவு தான் உருவாகின்றது. பிரபஞ்சமே அதன் வழி தான் இயங்குகின்றது.

இருப்பினும் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் வானிலே வீசப்படும் பொழுது அது சூரியனில் மோதும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு மேக்னட் (டைனமோ) அதிகமாகச் சுழன்றால் காந்த சக்தி அதிகமாக உருவாக்கப்பட்டு அந்தக் காந்தத்தின் பவர் அதிகமாகி அதில் இணைக்கப்பட்ட சிறு பல்பின் தன்மை ஃபியூஸ் ஆகி விடுகிறது.

இதைப் போல தான் நமது உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது சூரியன் எலக்ட்ரிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொழுது
1.அதிலே வரக்கூடிய உணர்வினை அணுகுண்டின் கதிரியக்கப் பொறிகள் சூரியனில் தாக்கப்படும் பொழுது
2.ஒரு நொடிக்குள் இரு மடங்கு எலெக்ட்ரிக் அதிகமாகிவிடும்.
3.அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்திலும் அந்த இயக்கச் சக்தி பாய்கின்றது.

ஒரு அணுவின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது எப்படி மின்னலாக மாறுகின்றதோ… இதைப் போல சூரியனில் மனிதனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் அதிகமாக மோதும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது.
1.அதனால் நம் உயிரில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் வேகமாகச் சுழன்று
2.அந்த உணர்வு வரும் பொழுது நம் உடலில் உருவாக்கப்பட்ட அணுக்களின் தன்மை அனைத்தும் ஃப்யூசாகிவிடும்… நினைவுகள் இழந்து விடும்.
3.அசுர குணங்களே வரும்… உயிர் மடியாது… உணர்வுகள் மடிகின்றது… உணர்வுகள் மாறுகின்றது.
4.மனிதனாக உடலில் இருப்பினும் உணர்வுகள் சிதைந்து விட்டால் சிந்தனையற்ற நிலை ஆகிவிடும்.

இன்றும் சிலரை நாம் பார்க்கின்றோம். பித்துப் பிடித்தது போல் இருக்கின்றார்கள். மற்றவர் தாக்கினால் அவனுக்குத் தெரிவதில்லை. உடலில் பல காயங்கள் இருப்பினும் ஈ எறும்பு அதைக் கடித்தாலும் அதை அவன் உணர்வதில்லை.

இதைப் போன்ற நிலைகளில் உடல்கள் சிதைந்து மடிந்து மனிதனல்லாத உருவைப் பெரும் தகுதி தான் உருவாகும். உணர்வின் இயக்கத்திற்கொப்ப உணர்வினை உடலாக மாற்றும் தன்மையே வருகின்றது.

இதைப் போன்ற கொடுமையிலிருந்து நாம் மீள நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்தல் வேண்டும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த ஞானத்தின் தன்மை பெற்றோமோ அந்த அருள் ஒளியாகப் பெருகுகின்றது.
1.“எண்ணத்தால் தான்” இதை எடுக்கின்றோம்.
2.சூரியன் தனக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து வரும் பொழுது நாம் நுகர்ந்தால்
3.அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் வருகின்றது.

எண்ணத்தின் தன்மை வரப்படும் பொழுது எதை எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் கருவாகிறது. துருவ நட்சத்திரத்திலிருந்து வருவதைப் பெற வேண்டும் என்று ஏங்கும்போது அதன் உணர்வின் தன்மை நமக்குள் கருவாகி அது உருவாகின்றது. “அது எப்படித் தீமைகளை வென்றதோ அந்த ஞானம் நமக்குள் வருகின்றது…”

அந்த உணர்வின் தன்மை உடலாகும் பொழுது சிவமாகின்றது.
1.அகஸ்தியன் எப்படி ஒளியாக மாறினானோ… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்தால்
2.மின் கதிர்கள் பாய்ந்தாலும் அதனை எளிதில் பாய்ச்சி நம் உடலுக்குள் அந்தச் சக்தியைப் பெருக்குகின்றது… “மின் அணுக்களாக” மாற்றுகின்றது.

எப்படி மின்னட்டாம் பூச்சி தனக்குள் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனுடைய துடிப்பில் மோதும் பொழுது “அதன் உடலின் பின் பகுதியில் வெளிச்சம் வருகின்றதோ” இதைப் போல
1.நம் உயிரின் துடிப்பின் தன்மை மின் கதிர்களாக மாற்றுகின்றது.
2.இந்த நிலையில் மனிதனான நாம் அருள் ஒளியின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால்
3.இந்த உடலுக்குப் பின் இனி உடல் இல்லை… மனித உடலின் ரூபம் மாறி ஒளியின் நிலையைப் பெறுகின்றோம்.

கணவன் மனைவி இருவருமே இதை ஏங்கிப் பெற்று இந்த உணர்வின் தன்மை அறிவாக மாற்றி அருள் ஒளியாக மாற்றிப் பேரொளியாக மாறும் நிலை வருகின்றது.

அந்த வழியினைப் பெற்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளார்கள். “நாமும் அவர்களுடன் இணைய முடியும்…”