கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

கணவன் மனைவி ஒன்றிணைந்த நிலையில் விண் செல்வதே வளர்ச்சி

 

கணவன் மனைவி இல்லாது தனித்த மனிதனாக விண் சென்றால் அது வளர்ச்சி இல்லாதது. “முனி” என்ற நிலையையே அடைகின்றது.
1.அப்படி முனி என்ற நிலையில் வளர்ச்சி இல்லை என்றால் கடுகளவே இருக்கும். நாளடைவில் அது தேய்பிறை ஆகிவிடும்.
2.தேய்பிறையாகி அந்த ஒளிக்கற்றைக்குள் அது கலந்து “மற்றதற்கு உணவாக ஆகும் தன்மையே அங்கேயும் வருகின்றது…”

கணவன் மனைவி என்ற இரண்டற இணைந்தால் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி என்றும் மகிழ்ந்திடும் உணர்வுகள் வருகின்றது. இங்கே எப்படி மகிழ்ந்து வாழ்கின்றோமோ… நாம் இப்போது விண் செலுத்தும் ஆத்மாக்கள் அங்கே இரண்டறக் கலந்தாலும்
1.மனைவியுடன் கலந்தால் அது வளர்ச்சிக்கு பெறும்.
2.இணைந்து வாழும் வளர்ச்சியாகி என்றும் ஜீவனுடன் இருக்கும்.

சாமியார்கள் என்று சொல்பவர்கள் திருமணம் ஆகாத நிலையில் அவருக்குப் பின் இனவிருத்தி இல்லை. எந்த உணர்வின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் அவன் மடிவான். அவன் வளரும் தன்மை இல்லை. அவன் வார்த்தைகளைக் கேட்ட மற்றவர்களும் மனைவி இழக்கும் நிலை தான் வரும். இவனும் அதற்குமேல் வளராத நிலையைத் தான் அடைய முடியும்.

சாதுக்களாக இருந்து திருமணம் ஆகாதபடி நான் பெரிய முனிவனாக இருக்கின்றேன். குடும்பப் பந்தம் இல்லாது செல்கின்றேன் என்று சொன்னாலும் அவர்கள் யாரும் மீள முடியாது.

மடாதிபதிகள் திருமணமாகாது இருக்கலாம். அன்று அரசன் காட்டிய வழியில் அவன் இயற்றிய சட்டத்தைக் காக்கும் காவலாளிகள் தான் மடாதிபதிகள்.

காரணம் திருமணமானால் பிள்ளைகள் சொத்துக்கு உரிமை கொண்டாடுவார்கள் என்று இப்படிப் பிரித்து உருவாக்கி விட்டார்கள். அவர் வழியில்… அமர்ந்து உணவை உட்கொள்ள வேண்டும் என்றும்
1.அருள் பெறத் தவம் இருக்கின்றேன் எனக்கு மனைவி வேண்டாம் மக்கள் இருந்தால் இந்த நிலை வராது என்று இருந்தால்
2.இவரைப் போன்று மடையர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
3.நமது குருநாதர் அதைத் தான் சொல்வார்.

சொத்துக்காக சுகத்திற்காக வருகின்றார்கள். நாம் போற்றுகின்றோம்… ஆட்சி புரியும் நிலையில் அந்தந்த மதத்திற்குக் குருவாக வரும் பொழுது குருவின் அருளைப் பெறுவதற்காக தவறுகள் பல செய்கின்றார்கள்.

நமது குருநாதர் உலகில் நடந்து கொண்டிருப்பதை எல்லாம் தெளிவாக எனக்குக் காட்டினார். மனிதனால் தன் உடலின் இச்சையைத் தான் வளர்க்க முடிகின்றது.

மதத்தின் அடிப்படையில் அவன் ஆட்சி புரிய எண்ணினால் அந்தச் சட்டத்தை இயற்றும் காவலன் தான். மதத்தைக் காக்கும் காவலாளிகளாகத் தான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். மக்களை அவர்கள் வழியில் வழிப்படுத்தும் நிலைகள் தான் வருகின்றது.

ஆனால்
1.இயற்கையின் உண்மையின் இயக்கத்தின் நிலையை அறிந்து
2.மனிதனுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை மதங்கள் சிந்திப்பதில்லை.

மதங்கள் காட்டிய நிலையில் அவன் காட்டும் ஆண்டவன் தான் கடைசி முடிவு. ஈகையும் இரக்கம் கொண்டு பிறருக்கு நீ உதவி செய் என்று சொல்லும் பொழுது அவன் இரக்க பாவத்தை ஈகையுடன் கேட்டறிந்தால் அந்த உணர்வுகள் அவனுக்குள் வந்தால் இந்த விஷங்கள் அவனுக்குள் மாறி இவன் அழியும் நிலையாக மீண்டும் இந்த புவிக்குள் சுழலும் நிலை தான் வருகின்றது. பிறவியில்லா நிலை அடைவதில்லை.

மதத்தின் அடிப்படையில் வருபவர்களால் தன் மதத்தைக் காக்க உதவும்.

ஆனால்
1.ஞானிகள் காட்டிய நிலைகள் மகரிஷிகள் காட்டிய நிலைகள் அவன் வளர்ந்து ஒளியின் சரீரமாகப் பெற்ற
2.அவனின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.அந்த உணர்வின் துணை கொண்டு நஞ்சை ஒளியாக மாற்றிடும் நிலை பெற முடியும்.

அந்த நிலையை அடைவது தான் மனிதனின் கடைசி நிலை.

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

அன்றைய புலஸ்தியர்கள் நோய்களையும் வேதனைகளையும் நீக்கிய விதம்

 

அன்று புலையர்கள் என்று மலைவாழ் மக்களாக காடுகளில் விலங்குகளுடன் வாழ்ந்தவர்கள் விஷத்தன்மைகளை முறிக்கும் ஆற்றல்களையும் தான் நுகரும் வேதனை கொண்ட சக்திகளிலிருந்தும் விடுபடும் சக்தி பெற்றிருந்தார்கள்.
1.மற்ற எதிர் நிலையான உணர்வுகள் எவ்வாறு இருக்கிறது…? என்றும்
2.மூலிகைகளின் மணத்தை நுகர்ந்து அதன் இயக்கம் எவ்வாறு…? என்றும் அறிந்துணர்ந்து
3.அதை வைத்து நோய்களை மாற்றி அமைத்தார்கள்.

ஆபரேஷன் செய்வதற்கு இன்று மனிதனை நினைவிழக்கச் செய்வது போன்று ஒரு பச்சிலையை எடுத்து உடலின் அந்தப் பாகத்தில் வைத்து தடவி விட்டால் அந்த இடத்தில் உணர்ச்சிகள் இருக்காது.

அதைக் கிழித்து அவன் எலும்பை இணைத்துக் கொண்டு வரும் வரையிலும் இப்படித் தப்பிக் கொண்டார்கள்.

காடுகளின் விலங்குகளுடன் விலங்குகளாக வாழ்ந்தவர்கள் மிக விபத்தான நிலைகள் ஏற்பட்டாலும் சில பச்சிலைகளின் சாறுகளை எடுக்கின்றார்கள்.
1.பெரிய எறும்புகளை எடுத்துப் பிண்ணை (PIN) வைத்துத் தைப்பது போன்று
2.இரண்டு குடலையும் வைத்து எறும்பை வைத்துக் கடிக்க வைக்கின்றார்கள்
3.அதற்குப் பின் எறும்பின் தலையைக் கிள்ளி விடுவார்கள்.
4.இது இறுக்கிப் பிடித்த பின் சேர்ந்து விடுகின்றது.
5.இன்று தையல் போடுகின்றோம்… ஆனால் அக்காலங்களில் இந்த முறைப்படி செய்தார்கள்.
6.அந்த எறும்பின் உடலின் விஷத்தின் அமிலங்கள் இதனுடன் கலந்த பின் இரண்டறக் கலந்து விடுகின்றது.
7.இதனின் உணர்வுகள் அதனை இணைத்துக் கொண்டு பச்சிலை என்ற மூலிகைகள் ஒன்றுடன் ஒன்று தசைகளை இணைத்து விடும்.

இன்று அபூர்வமாகப் பல ஆபரேஷன்களைச் செய்கின்றேன் என்று சொல்கின்றார்கள். இதைக் காட்டிலும் அன்றே நுணுக்கமாகச் செய்துள்ளார்கள்.

கேன்சர் நோயாக இருந்தாலும் அதற்கு இதே பச்சிலைகளை எடுத்து கேன்சர் உண்டான இடங்களில் அதை நேராக பாய்ச்சப்படும் பொழுது
1.எங்கே அந்த விஷத்தின் வேர்கள் வருகின்றதோ அங்கே கறுக்கப்படுகின்றது.
2.இது சென்றபின் அந்த விஷத்தை முறித்து விடுகின்றது… கேன்சர் நோயையும் நீக்கினார்கள்.

அந்தக் காலத்தில் ராஜ வைத்தியம் செய்தவர்கள் எல்லாம் அரசர்களுக்கு மட்டும் செய்வார்கள். மற்றவர்களுக்குச் செய்ய மாட்டார்கள். இப்படித்தான் அன்று செயல்படுத்தினார்கள்.

இதை எல்லாம் கண்டுணர்ந்த புலஸ்தியர்கள் அதைச் செய்தார்கள்.
1.ஆனால் நானும் பார்த்தேன் குருநாதர் உணர்வால்…!
2.அன்றைய மலைப் பகுதி மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்…?
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் துணை கொண்டு எப்படித் தீமைகளை நீக்கினார்கள்…?
4.எப்படி நோய்களைப் போக்கினார்கள்…? என்று அறிந்து கொண்டேன்.

ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு தன் நாடு நான் அரசன் என்ற நிலை வரும் பொழுது இருப்பதை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டும் என்று போர் முறைகள் வந்தது. அரசர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்ந்தார்கள்.

தன் ஆசையின் உணர்வால் மற்றொன்றை அழித்து மிருகங்களைப் போன்று “மற்றவர்களுடைய நிலையைப் பறித்துத் தான் சுகமாக வாழ வேண்டும்” என்று செயல்படுத்தினார்கள்.

அதன் வழிப்படித் தான் இந்த உலகமே இன்றும் மாயையில் சிக்கிக் கொண்டு மனித உடலின் இச்சைக்கே வருகின்றது. அரசன் தான் வாழப் பல முறைகளைக் கையாண்டான்.

அதன் வழிகளில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

விஞ்ஞானத்தால் பூமிக்குள் பல நச்சுத்தன்மைகள் அடைந்து விட்டது. சாக்கடையின் கழிவிற்குள் பன்றி தன் உணர்வைப் பாய்ச்சி நஞ்சினைப் பிளந்து அதற்குள் மறைந்த நல்ல உணர்வினை எவ்வாறு நுகர்கின்றதோ அதைப்போல
1.நீங்களும் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நஞ்சினைப் பிளந்து தீமைகளிலிருந்து விடுபட்டு
2.நல்ல உணர்வுகளை நுகரும் சக்தி பெற்று பேரருள் என்ற உணர்வுகளை உருவாக்கி
3.எந்த நிமிடம் இந்த உடலை விட்டுச் சென்றாலும் ஒளியின் சரீரமாக வேண்டும்.

பன்றி நஞ்சினை நீக்கி நஞ்சற்ற நிலைகளைச் சுவாசித்து நல்ல உணர்வுகளான பின்… நஞ்சால் உடலான நிலைகளைப் பிளந்து விட்டு நஞ்சினைப் பிளந்திடும் உணர்வுகள் கொண்டு மனிதனாகப் பிறக்கச் செய்தது. மனிதனான பின்… உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் வரும் நஞ்சினை மலமாக மாற்றுகின்றது மனித உடல்.

அதைப்போல நமக்குள் வரும் நஞ்சினை நீக்கும் ஆற்றலை “நம் எண்ணத்தால்” எடுத்து வளர்த்துக் கொள்ள முடியும். அப்படி நீக்கிப் பழகியவர்கள் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதன் வழியைப் பெற… உங்களுக்குள் பதிவாக்கும் உபதேசத்தின் நிலை கொண்டு
1.இந்தப் பிரபஞ்சத்தில் கலந்த நஞ்சினை உங்கள் எண்ணத்தின் வலு கொண்டு பிளந்து
2.நஞ்சிற்குள் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து… உங்களுக்குள் அதைச் சேர்த்து
3.நஞ்சால் கவர்ந்த உடலை நீக்கிய பின்… உயிரான ஒளி கொண்டு ஒளியின் சரீரமாக இணைந்து வாழ்ந்திடவும் வளர்ந்திடவும் முடியும்.

கணவன் மனைவி இருவரும் இரு உயிரும் ஒன்றாக இணைந்து… யார் ஒருவர் இந்த உணர்வினை வளர்க்கின்றார்களோ… அவர்கள் முழுமையான வளர்ச்சி அடைய முடியும். அத்தகைய நிலையை நீங்கள் எல்லோருமே பெற மகரிஷிகளை வேண்டுகின்றோம்.

எனக்குப் பின்னாடி… நீங்கள் தான் சாமி ஆகின்றீர்கள்… எல்லோரையும் அருளைப் பெறச் செய்யுங்கள்

எனக்குப் பின்னாடி… நீங்கள் தான் சாமி ஆகின்றீர்கள்… எல்லோரையும் அருளைப் பெறச் செய்யுங்கள்

 

அருளைப் பெருக்க உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன். அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். அதை ஏங்கிப் பெறுங்கள்.

இதுவரையிலும் உபதேசித்த உணர்வுகள் உங்களிடம் பதிவாகி இருக்கின்றது. குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி “அவர் ஒளியான உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்…” நிச்சயம் நீங்களும் அந்த அருளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி மெய்ப்பொருளை நீங்கள் காண முடியும்.

சில பேர் என்ன நினைக்கின்றார்கள்…?
1.சாமி இருக்கின்ற வரையிலும் தபோவனம் இருக்கின்றது.
2.சாமிக்குப் பின் என்ன செய்யப் போகின்றோம்…? என்ற எண்ணங்கள் இருக்கின்றது…!
3.சாமி என்றைக்குமே நீங்கள் தான்…! நீங்கள் சாமி ஆகின்றீர்கள்…!
4.இந்த உணர்வுக்குப் பின்னாடி இந்தச் சக்தியை நீங்கள் பெருக்குகின்றீர்கள்.
5.இந்த உணர்வைப் பதிவு செய்து விடுகின்றேன்.

குருநாதர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குள் (அப்படித்தான்) பதிவு செய்தார். இப்பொழுது ஒளியின் உடலாக இருக்கின்றார். அவர் கண்ட உண்மை எல்லாம் நான் பெற முடிகின்றது.

அந்த உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.எனக்குப் பின்னாடி நீங்கள் இதையெல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல முடியும்.
2.நான் ஒருத்தன் தான் இத்தனை பேருக்கும் சொன்னேன்.
3.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தின் நிலைகளை இந்த ஸ்தாபனம் மூலம்
4.”உலகத்திற்கே எடுத்துக்காட்டாக” பெரிய ஸ்தாபனமாக இது அமையும்… அதைப் பார்க்கலாம்.

இதைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களிடம் தெரியப்படுத்தியது.

ஆகையினால்
1.எப்பொழுதுமே உங்களுக்குள் அருளைப் பெருக்குகின்றீர்கள்.
2.அதை எல்லோருக்குள்ளும் பெருகச் செய்கின்றீர்கள்.
3.எல்லோருக்கும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் யாம் பதிவு செய்வது.
4.நீங்கள் வளர்ந்தால் உலகத்தில் ஞானங்கள் பெருகுகின்றது.
5.உலகத்தில் ஞானம் பெருகினால் உலகமே அமைதி அடைகின்றது.

அப்படி அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். யாருடைய கஷ்டத்தை நீங்கள் கேட்டாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லி உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் தொழில் நன்றாக இருக்கும் குடும்பம் நன்றாக இருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கும் உடல் நலமாகும் என்று இந்த வாக்கினை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

1.உங்கள் உணர்வு அவர்களை நல்லவராக்கும்… கஷ்டம் என்ற சொல் உங்களுக்குள் வராது.
2.இப்படி நீங்கள் ஒவ்வொருவருமே என்னைப்போல வளர வேண்டும்.
3.நான் பார்த்த உடனே உங்கள் நோய் போகின்றது நீங்களும் அந்த அளவிற்கு வளர்ந்து வந்தால் தான் நல்லது.
4.சாமியைப் பார்த்த்தால் என் நோய் போனது… ஆகவே “நான் (சாமி) பெரிது” என்ற எண்ணத்திற்குச் சென்று விடாதீர்கள்… தவறான வழியில் சென்று விடாதீர்கள்.
5.நோயை நீக்கும் உணர்வுகளும் நோய் உடலுக்குள் புகாத நிலைகளையும் கொண்டு வாருங்கள்.

இனி இந்த உலகம் எப்படி இருக்கும்…? என்று சொல்ல முடியாது. இந்த 4000 ஆண்டுகளுக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றது.

ஆகவே கருவில் வளரும் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானத்தை ஊட்டுங்கள். ரோஜாப்பூ எப்படி நல்ல நறுமணத்தை எடுத்துக் கொள்கின்றதோ அதே போன்று நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் எடுத்து நம் உடலுக்குள் நல்ல அணுக்களைப் பெருக்கிப் பழக வேண்டும்.

அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குச் சக்திகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.

குழம்பு வைக்கும் போது நீங்கள் சங்கடமாக இருந்து பாருங்கள்… குழம்பு ருசியாக இருக்காது… அது கெட்டுவிடும். சந்தோஷமாக இருந்து செய்து பாருங்கள்… அது நல்ல ருசியாக இருக்கும். ஆக உங்களுடைய உணர்வு தான் அதை ருசியாக மாற்றுகின்றது. பிறருடைய தீமை உங்களுக்குள் புகாது இருக்க வேண்டும்.

உயர்ந்த ஞானம் பெற்று பிறருடைய தீமைகளைப் போக்கும் அருள் சக்தியாக நீங்கள் மாறியே ஆக வேண்டும். அந்த நிலை பெறுவதற்குத் தான் அடிக்கடி இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் குரு அருளையும் பெறப்படும் போது வசிஷ்டர்.
2.அந்தச் சக்தி உடலிலே பிரம்மம் ஆகும். பிரம்ம குருவின் மனைவி அருந்ததி.
3.நமது குருவும் துருவ நட்சத்திரமும் எதைச் செய்ததோ அந்தச் சக்தி இணைந்தே நமக்குள் வாழும்.
4.அதன் வழியே நமக்குள் குருவாக அது வந்து வழிகாட்டும்… பிறருடைய உணர்வுகளில் அதைப் பாய்ச்சப்படும் பொழுது அதுவும் அந்த நிலை ஆகும்.
5.ஆகையினால் இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நீங்கள் சொன்னால் போதுமானது.
6.உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள். “வாயில் அல்ல… செயலில்…!”

இந்த உணர்வைக் கூட்டக் கூட்ட காற்று மண்டலத்தில் எத்தகைய தீமைகள் இருப்பினும் அது நம்மைத் தாக்காது. அருள் உணர்வுகள் நமக்குள் பெருக நமது சொல் பிறரின் இருளைப் போக்கும்.

அந்த நிலைக்கு நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும். நீங்கள் பெருகப் பெருகத் தான் உலகத்தில் ஞானக் குழந்தைகள் பெருகும். உலக மக்களையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக மாறும்.

உங்களுக்குள் அற்புத நிலைகளாக…
1.நமது குரு எங்கெல்லாம் சென்றாரோ அந்த அருளை எல்லாம் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்… அதைப் பதிவாக்குகின்றேன்.
2.குருவை நீங்கள் தரிசனம் செய்யலாம்… அனேகமாக அவர் உங்களுக்குக் காட்சி தரலாம்… உங்களை அவர் துருவ நட்சத்திரத்தோடு இணைக்கலாம்.
4.உங்கள் மனதில் எந்த அளவிற்கு ஏக்கம் இருக்கின்றதோ குருவை நீங்கள் பார்க்க முடியும்.
5.அருளை நீங்கள் பெறலாம்… பேரின்பம் பெறலாம்.

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

குரு வழியில் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் சீடர்களாக” நாம் அனைவரும் ஆவோம்

 

ஒருவர் திட்டினாலும் பேசினாலும் கவலையான நிலைகளாக இருந்தால் அதை எடுத்தால் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது. வேதனை வெறுப்பு கோபம் சலிப்பு சஞ்சலம் இது எல்லாம் உடலுக்குள் வந்தபின் இந்த உடலான கோயிலில் அசுத்தமாகின்றது… நோய்கள் ஆகின்றது பல வேதனைகள் ஆகின்றது.

1.”கூட்டுத் தியானத்தின் மூலம்” நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற உணர்வினைச் செவிகளிலே பாய்ச்சப்படும் பொழுது
3.நமது கண்கள் இந்தக் காற்றிலிருக்கக்கூடிய அந்த நல்ல உணர்வின் சத்தைக் கவருகின்றது நம் உயிரிலே படுகின்றது.
4.இந்த உணர்வுகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றது.

இந்தக் கூட்டு தியானத்தின் அமைப்பிலே இந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்துப் பழகிக் கொண்டால்
1.உயிரான ஈசனுக்கும் இந்த அசுத்தம் சேர்வதில்லை.
2.இந்த உடலான கோவிலுக்குள் தீமைகள் புகாது தூய்மைப்படுத்துகின்றோம்.

ஒருவன் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் எண்ணுகின்றோம். அப்போது புரையேறுகிறது. தொழிலில் எத்தனையோ இடைஞ்சல் ஆகிறது.

ஆனால் கூட்டுத் தியானத்தின் மூலம் அத்தனை பேரும் சேர்ந்து அந்த அருள் உணர்வுகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியைக் கிடைக்கச் செய்யக்கூடிய சந்தர்ப்பம் உருவாகின்றது.

எல்லோருடைய உடல்களிலும் அருள் உணர்வுகள் வளர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்… எங்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும்… உடல் நலமாக இருக்க வேண்டும்… எங்கள் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும்… என்று
1.கூட்டு தியானங்களில் இதைப் போன்று எடுத்துக் கொண்டால்
2.உங்களுடைய வாக்கு எல்லோருக்குள்ளும் ஆழமாக இது பதிந்து நோய்களைப் போக்க முடியும்.
3.குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்களும் பெரிய மகானாக முடியும்
4.உங்களுடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க வேண்டும்.
5.நீங்கள் நுகர்ந்த உணர்வுகள் உங்களை அறியாத சேர்ந்த துன்பங்களை அகற்றும்.

இதை நாம் வலுப்பெறச் செய்தல் வேண்டும்.

நாளைக்கு வரும் விஞ்ஞான உலகத்தால் காற்று மண்டலம் நச்சுத்தன்மை அடையும் பொழுது “அந்த விஷங்கள் நமக்குள் சேர்ந்து”
1.நமது சிந்தனையை அழித்துவிடக் கூடாது.
2.அருள் உணர்வுகளை அழித்துவிடக் கூடாது.
3.அருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கும் வலிமை பெற வேண்டும்.

அதற்காகத்தான் இதைச் சொல்கின்றேன்… உங்களால் முடியும்.

நான் உங்களுக்குச் சொல்லும் பொழுது உடனே நல்லதாகின்றது. ஏன்..? நீங்கள் அடுத்தவர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கு நல்லதாக்க முடியும் அல்லவா.
1.அந்த அளவுக்கு நமக்குள் பெருக்கி விட்டால் காற்றிலிருக்கக்கூடிய தீமைகளை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.
2.நாட்டு மக்களைக் காக்கலாம் நல்லவர்களைக் காக்கலாம்.
3.நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை வளர்க்கலாம்… பகைமையற்ற வாழ்க்கை வாழலாம்.
4.உயிருடன் என்றும் ஒன்றிடலாம்… அகஸ்தியன் துருவ நட்சத்திரம் ஆனது போன்றது என்றும் நாம் வாழ முடியும்.
5.மனதை ஒன்றாக்கப்படும் பொழுது ஒளியின் சுடராக முடியும்.

குறுகிய காலமே நாம் வாழுகின்றோம். மனதை ஒன்றாகக் குவித்து நாம் வாழ வேண்டும் உடலில் அறியாது சேர்ந்த பகைமைகளை அகற்றிப் பண்பைக் காட்டி… அன்பைக் காட்டி.. அரவணைத்து… அருளைப் பெருக்க வேண்டும் என்று நமக்குள் செலுத்த வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அதைச் செயல்படுத்த வேண்டும்.

இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞானத்தினால் பரவப்பட்டுள்ள நச்சுத்தன்மைகளை நாம் அனைவரும் சேர்ந்து அகற்றுவோம். அருள் வழியில் வாழ்வோம்… அதை நாம் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை நாம் பெறுவோம். அதுதான் நம்முடைய கடைசி எல்லை. இந்த உடலுக்குப் பின் அந்த எல்லையை அடைவோம்.

அந்த எல்லை எங்கு இருக்கின்றது…?
1.நம் உயிருடன் ஒன்றி அந்த உணர்வைக் கூட்டினால் அவனே நம்மை அழைத்துச் செல்கின்றான்.
2.ஒளியின் உடலாக நம்மை உருவாக்குகின்றான்.

இல்லை… எனக்குத் தீமை செய்கிறான் என்ற உணர்வை ஊட்டினால் தீமை செய்யும் உடலுக்குள்ளே உயிர் நம்மை அழைத்துச் சென்று விடும். ஆக நாம் எண்ணிய நிலைக்கொப்பத் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.

ஆகவே நாம் அருள் வழியைப் பெறுவோம் பேரருளைக் கூட்டுவோம். யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் உடலிலே படரப்பட்டு நமது குருவின் உணர்வுகளை நீங்கள் பெற்று அகண்ட அண்டத்தையும் அறிந்துணரும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் வந்த இருண்ட நிலையை நீக்கி அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தியை நீங்கள் பெற்று அதை மகிழ்ந்து வாழும் உணர்வை உங்களுக்குள் ஊட்டி “உங்கள் பேச்சால் மூச்சால் உலக மக்களைத் தெளிந்து வாழும் மக்களாக வாழச் செய்யுங்கள்…”

1.இந்தக் காற்று மண்டலத்தில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பரவச் செய்யுங்கள்.
2.நமது குரு அருளை உலக மக்களுக்குப் பெறச் செய்யுங்கள்… நீங்களும் அதைப் பெற்று வளருங்கள்.
3.நம் குரு வழியில் அவருடைய சீடர்களாக நாம் அனைவரும் ஆவோம்.
4.அவர் ஒளியின் தன்மை பெற்றார்… அந்த உணர்வின் தன்மை நமக்குள் ஒளியைக் கூட்டுவோம்.

நம் பேச்சும் மூச்சும் பிறருடைய இருளைப் போக்கட்டும்… மெய்ப்பொருளைக் காண்போம். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடைவோம். அந்த அருள் சக்தியைப் பெறுவோம்… அனைவரையும் பெறச் செய்வோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்… மெய் வாழ்க்கை வாழ்வோம்.

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

“தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்” உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்

 

எப்பொழுது துன்பம் வருகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு நீங்கள் எல்லோருமே வர வேண்டும்.

அம்மா அப்பா அருளால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள் கண்களைத் திறந்தே ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஐந்து முறை எண்ணி ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று உடல் முழுவதற்கும் செலுத்தி உள் நினைவாகக் கொண்டு வாருங்கள். ஒரு ஐந்து முறை எண்ணுங்கள்.
1.இப்பொழுது அவரவர்கள் உடலுக்குத் தக்கவாறு அந்த உமிழ் நீர்கள் கூடி வரும்.
2.இது தான் உங்களுக்கு உயர்ந்த சத்தாக உடலுக்குள் சேருகின்றது.

இப்பொழுது கண்களைத் திறங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. கண்களைத் திறந்து ஏங்கியிருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

கண்களைத் திறந்து ஏங்கிய பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. ஒரு ஐந்து முறை இவ்வாறு எண்ண வேண்டும்.

அதற்குப்பின் கண்களை மூடி மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்

1.உதாரணமாக வயிற்று வலியாக இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
2.அந்த வலிக்கும் இடத்தில் கண்ணின் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர்ந்து
3.அந்த வயிற்று வலி நீங்கி நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று எண்ணுங்கள்
4.கண்ணின் நினைவை அந்த இடத்தில் செலுத்தப்படும் பொழுது வயிற்று வலி நீங்கும்.
5.குடல் புண்ணாக இருந்தாலும் அந்தப் புண் ஆற வேண்டும் என்றால் அதுவும் ஆறும்.

கேன்சராக இருந்தால் ஒரு 15 அல்லது 20 நிமிடம் இதைப் போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டு எங்கே வலி தோன்றுகின்றதோ
1.வலி ஏற்படக்கூடிய இடங்களில் மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடலில் உள்ள வேதனை அகல வேண்டும்.
2.நாங்கள் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று கண்களை மூடி நினைவைச் செலுத்தி அந்த இடத்திலே எண்ண வேண்டும்.

மீண்டும் கண்களைத் திறந்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த நோய் நீங்க வேண்டும் என்று வலிக்கும் இடத்திலே எண்ணி விட்டு மறுபடியும் கண்களை மூடி எங்கே வலி ஏற்படுகின்றதோ அங்கே
1.வெளியில் இருந்து அந்தச் சக்திகளை இழுத்து அந்த உணர்வுகளை அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.”அபூர்வமான சக்தி வாய்ந்த மருந்தாக” அந்த நோய் இருக்கும் இடங்களிலே பாய்ந்து அந்த நோய்கள் குணமாகும்.

நாம் எடுத்துக் கொண்ட மூச்சினால் தான் நமக்குள் இந்த நோய்கள் வருகின்றது. ஞானிகளுடைய மூச்சலைகளை உடலில் சேர்க்கப்படும் பொழுது
1.அந்தக் குறித்த இடங்களில் அதைச் செலுத்தப்படும் போது
2.அது எவ்வளவு கொடிய நிலைகள் இருந்தாலும் அது மாறி அது நலம் பெறும். ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை இவ்வாறு எண்ணலாம்

ஆஸ்த்மா நோய் இருக்கிறது என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஒரு 15 நிமிடம் எண்ண வேண்டும்.

ஆஸ்த்மா நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி மறுபடியும் சுவாசத்தை உள்ளே செலுத்தி ஐந்து தடவை சொல்லி கண்களைத் திறந்து மூடி
1.இப்படித் திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை இந்த மாதிரி சுவாசம் எடுத்தால்
2.காற்றிலிருக்கக்கூடிய நல்ல சக்திகள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு நல்ல மருந்தாக நம் உடலில் கலந்து
3.அந்த நோயை நீக்கக்கூடிய சக்தியாக வரும்.

ஏனென்றால் நமக்கு வரக்கூடிய நோய்களும் இதே போன்றுதான் அந்தந்த சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொண்ட சுவாசங்கள் அந்தந்த குணங்கள் உமிழ் நீராகச் சுரக்கப்பட்டு… ஆகாரத்துடன் கலந்து… அது நஞ்சாக மாறி… அது தான் நோயாக மாறுகின்றது.

ஆகவே அந்த நோய்களைப் போக்கக்கூடிய சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று
1.வாக்கின் தன்மையாக இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
2.மகரிஷிகளின் அருள் ஞான வித்தினை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து ஊன்றுகின்றேன்.

வயல்களை எப்படிப் பண்படுத்தி நல்ல வித்துக்களைப் போட்டு நீரை ஊற்றிய பின் தன்னிச்சையாக காற்றிலிருந்து அந்த வித்தின் சத்தை எடுத்து வளர்ந்து அதனுடைய மகசூலை நாம் அறுவடை செய்து எவ்வாறு சுவை மிக்கதாக்கிச் சாப்பிடுகின்றோமோ இதைப் போன்று தான்
1.ஞானிகளின் அருள் வித்தை ஊன்ற உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த பண்பான நிலை ஆனபின் அருள் வித்தைப் பதிவு செய்து
2.உங்களை அறியாது வரும் துன்பங்களை நீக்கி அந்த மகரிஷிகளின் அருள் வித்தால் உங்கள் நோய்களும் நீங்கி
3.உங்கள் எண்ணங்களையும் அதன்வழி நலம் பெறும் சக்தியாகப் பிரதிபலிக்கச் செய்து
4.நல்ல உணர்வின் மூச்சுலைகளாக… எண்ண அலைகளாக நீங்கள் வெளிப்படுத்தும் பொழுது மற்றவர்களுக்கும் இது நல்லதாகின்றது.

“நல்லதைப் பெற வேண்டும்” என்ற உங்கள் மூச்சும் பேச்சும் உங்கள் உடலுக்குள் எப்படி நன்மை தருகின்றதோ இதைப் போன்று “உங்களைச் சார்ந்தவர்களுக்கும்” அவர்கள் எண்ணும் பொழுது அவர்களுக்கும் நன்மை பெறும் சக்தியாக அமைகின்றது.

நாம் இடும் மூச்சலைகள் சூரியனுடைய காந்தப்புலனறிவுகள் கவரப்படும் பொழுது
1.இந்தக் காற்று மண்டலத்தில் அது பரவி
2.இந்த நாட்டு மக்களுக்கும் நல்லதை எண்ணுவோர் அனைவருக்கும் அந்த நல்ல உணர்வுகள் கிடைக்கப் பெற்று அவர்களும் நன்மை பெறுகின்றார்கள்.

மனிதனாக இருக்கக்கூடிய அனைவருமே நல்லது எண்ணுகின்றோம். ஆனால் வேதனை கலந்த உணர்வுகளைப் பரப்பப்படும் போது நல்லதைச் சிந்திக்கும் நிலையற்று இருக்கின்றது.

ஆகையினால் அதை எல்லாம் மாற்றி அமைக்க அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி… மற்ற மந்திர ஒலிகள் எதுவும் கலக்காதபடி இயற்கையினுடைய தன்மைகளில் ஞானிகள் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அருள் வித்தினை உங்களுக்குள் பதிவு செய்து
1.துன்பம் நேரும் பொழுதெல்லாம் வயல்களில் களை எடுப்பது போல
2.எப்பொழுது கஷ்டம் என்று வருகின்றதோ அந்தக் கஷ்டத்தை உள்ளுக்குள்ளே நுழைய விடாதபடி வேதனை வந்தாலும் அதை விடாதபடி
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த வேதனைகள் அகல வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நோய் நீங்க வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி எடுத்து வளர்த்துக் கொண்டால்
6.அது எப்பேர்ப்பட்ட கடுமையான நோயாக இருந்தாலும் உங்கள் உணர்வால் போக்க முடியும்.

ஏனென்றால் இதைக் கேட்போர் உள்ளங்களில் வாக்காகப் பதிவு செய்கின்றேன். இதை மீண்டும் நினைவுபடுத்தும் போது காற்றிலிருந்து அந்த அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

உங்களை மீட்டிக் கொள்ள நீங்கள் தான் எண்ணி எடுக்க வேண்டும். சாமியார் செய்து கொடுப்பார் சாமி செய்து கொடுப்பார் ஜோசியம் செய்யும் தெய்வம் செய்து கொடுக்கும் என்று எண்ணுவதற்கு மாறாக “நீங்கள் எடுக்கும் அந்த உயர்ந்த எண்ணமே தெய்வமாகின்றது…”

1.நீங்கள் எண்ணும் எண்ணம் விதையாகி அந்த உணர்வின் செயலாக அதுவே உங்களுக்குள் நின்று தெய்வமாகி
2.எந்த உயர்ந்த எண்ணங்கள் எடுக்கின்றீர்களோ… அந்தத் தெய்வமாக இந்த சக்தி உள் நின்று உங்களுக்குள் செயல்படும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதற்குப் பதில் சாமி சொன்ன வழியில் அந்த உயர்ந்த சக்தியினை… அந்த ஆற்றலை நாம் பெற்றோமேயானால் நமக்குள் வரக்கூடிய துன்பத்தை நீக்க முடியும். நம் மூச்சும் பேச்சும் நம்மைச் சார்ந்தவருக்கும் அவர்களை நலம் பெறச் செய்ய உதவும் என்ற “இந்த எண்ண அலைகளிலேயே நீங்கள் செயல்படுங்கள்…”

அப்பொழுதுதான் இந்த நாட்டின் நிலையில் மனிதனாகப் பிறந்தவர்கள் அனைவருமே தன்னிலை அடைய முடியும். உயிரோடு ஒன்றிய உணர்வுகள் ஒளி பெற்று மனிதனான நிலையில் இன்னொரு உடல் பெறாதபடி இதையே ஒளிச் சரீரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை எல்லோருமே பெற முடியும்.

இப்படித் தான் இருக்க வேண்டும் அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இல்லை. நீங்கள் நினைத்த நேரத்தில் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற முடியும்.

1.துன்பம் வரும் சமயத்தில் அது எப்படி நோயாகின்றதோ
2.துன்பம் வரும் போதெல்லாம் நோயாகும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி
3.அந்தத் துன்பத்தையும் நோயையும் உங்களால் நீக்க முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்…!
1.ஆக “நமக்குள் நல்ல சக்திகள் இருக்கின்றது” என்பதைத் தட்டி எழுப்பி உஷார் பண்ணி விட்டால்
2.உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் மிக மிகச் சக்தி வாய்ந்த அருள் வாக்காக இதை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

நம் குணங்களைச் சமப்படுத்தத் தெரியாததால் வரும் தீமைகள்

 

இந்த மனித வாழ்க்கையிலே அடிக்கடி நாம் சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் அவசரம் வெறுப்பு வேதனை தன்னை அறியாமல் இப்படிப் பல நிலைகள் நமக்குள் வந்து சேர்ந்தது
1.நாம் பலவீனமாகும் பொழுது இந்த நினைவலைகள் தான் நமக்குள் வருகின்றது.
2.அந்த நினைவலைகளைத் துரித நிலையில் கொண்டு நாம் சுவாசிக்க நேர்கின்றது.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அடிக்கடி நினைவு வரும் பொழுது நாம் உணர்வுக்குள் எடுத்து உடலில் சோர்வடையச் செய்து சேர்த்துக் கொண்ட உணர்வுகள் உமிழ் நீராகச் சேர்ந்து நாம் சாப்பிட்ட சத்தான ஆகாரத்துடன் கலந்து அந்த சத்தினைச் செயலாக்க விடாதபடி அதையும் நஞ்சாக்கி விடுகிறது.

நஞ்சாக மாறி அதற்குள் விளைந்த இந்த உணர்வின் சத்துகள் நமக்குள் (சலிப்பு சஞ்சலம் வேதனை கோபம் குரோதம் என்று) கலந்து கொண்டால் நம் உடலுக்குள் கை கால் குடைச்சல் மூட்டு வலி வாத நோய்கள் போன்று உருவாகின்றது.

இதை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்படும் பொழுது இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இரத்தத்திற்குள் கலந்து… அதீதமான நிலைகள் இரத்தத்தின் துடிப்பு வேகமாகும் பொழுது “இரத்தக் கொதிப்பாக” மாறுகின்றது.

அந்த இரத்தக் கொதிப்பினால் எரிச்சலாகி…
1.அதனால் வேதனையின் உணர்ச்சிகள் தூண்டப்படும் பொழுது
2.நாம் மகிழ்ச்சியாக இருக்கும் உணர்வை அதாவது சர்க்கரை அந்த இனிப்பான சத்துகள்
3.மற்றதுடன் இணைந்து செயல்படாது அந்தச் சர்க்கரைச் சத்து தனியாகப் பிரிந்து விடுகின்றது.
4.அந்தச் சுவையான சத்து இதனுடன் இணையாதபடி விலக்கி விடுகின்றது.

உதாரணமாக இனிப்பை அதிகமாகச் சாப்பிட்டுப் பழகிய நாம் கடைக்குச் செல்லும் பொழுது இனிப்பை நாம் வாங்கிப் புசிக்கின்றோம். அதை ரசித்துச் சாப்பிடுகின்றேன்.

அதே போல ஒருவன் காரத்தை அதிகமாகப் புசித்துப் பழகியவன் அந்தக் கடையிலே வந்து காரத்தை வாங்கி அதை ரசித்துச் சாப்பிடுகிறான்.

அவனைப் பார்த்த உடனே என் வாய் எரிவது போல் எரிச்சல் ஆகின்றது. அந்தக் காரத்தைச் சாப்பிடுபவனுக்கோ நாம் இனிப்பைச் சாப்பிடுவதைப் பார்க்கப்படும் பொழுது “இப்படிச் சாப்பிடுகின்றானே” என்று உமட்டல் வருகின்றது.

காரணம் இதற்கும் அதற்கும் எதிர் நிலை.

இதைப்போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இந்த உணர்ச்சிகள் நமக்குள் இரண்டறக் கலந்து
1.அது இரத்தத்துடன் கலக்கப்படும் பொழுது எரிச்சலின் தன்மை பிரிந்து
2.அதே சமயம் சர்க்கரை இனிப்பான நிலைகள் இதனுடன் கலந்து இயங்காத நிலைகள் ஆகின்றது.

பால் பிருத்து விட்டால் எப்படி அதன் சத்தின் தன்மைகள் கெட்டுப் போய் விடுகின்றதோ அப்பொழுது அதற்குள் இருக்கக்கூடிய வெண்ணையை நாம் காண முடிவதில்லை.
அந்த வெண்ணையின் சத்து அது செயலிழக்கப்பட்டு விடுகின்றது.
2.நீரிலே இந்தச் சத்தின் தன்மை பிரிந்து விடுகிறது.
3.பிருத்த பாலிலிருந்து நாம் வெண்ணெய் எடுக்க முடியாது.

பாலைப் பக்குவமாகக் காய்ச்சினால் தான் அதனுடன் இரண்டறக் கலந்திருக்கக்கூடிய வெண்ணையை நாம் எடுக்க முடிகின்றது.

இதைப் போன்று தான் உயர்ந்த சத்தின் தன்மையை எடுக்கும் நிலையில் ஆத்திரமும் வேதனையும் கலந்து அதிகமாக எடுக்கப்படும் பொழுது
1.இரத்தத்திற்குள் இரு முனையான இரு நிலையான நிலைகளாகச் செயல்படும் பொழுது
2.நல்ல உணர்வினைச் சேர்க்காவண்ணம் தடுத்துத் தனித்துப் பிரித்து விடுகின்றது.
3.காரணம் ஒரு பொருளுடன் ஒரு பொருள் கலந்தால் தான் அது சுவை மிக்கதாக மாறுகின்றது.

ஒரு குழம்புக்குள் காரம் புளிப்பு மற்ற பொருள்களைச் சமமாகப் போடப்படும் பொழுது அது ருசியாக அமைகின்றது.

அதில் எத்தன்மை அதிகமாகக் கூடுகின்றதோ அதற்குள் நாம் இனிப்பையோ அல்லது எதைப் போட்டாலும் அந்த இனிப்பு இயங்கா வண்ணம் அதை ஒதுக்கி விடுகின்றது.

ஆனால் அதே சமயம் காரம் எவ்வளவு இருந்தாலும் இனிப்பை அதிலே எவ்வளவு சேர்த்தாலும் இதனுடன் இணைக்கச் செய்து காரத்தின் தன்மையைத் தான் காட்டுகின்றது.

ஆக… வேதனையான எண்ணங்கள் நமக்குள் உருவாகி விட்டால் அந்த விஷம் அதை நினைக்கும் பொழுதே மயக்கமும் மற்ற சோர்வான நிலைகளும் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான்
1.காரத்துடன் இந்த வேதனையான விஷங்கள் கலக்கப்படும் பொழுது
2.இனிப்பான சத்தைப் பிரிக்கப்படும் போது நம் உடலில் அது ஊடுருவி
3.இயக்க நிலை வரும் பொழுது இரு நிலைப் போராகி
4.எண்ணங்களை எண்ணும் பொழுது மயக்க நிலை வருகின்றது.

நாம் எண்ணி ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று நடக்கும் பொழுது அந்த உணர்வின் இயக்கம் உடலை அழைத்துச் செல்லும் நிலைகள் இழந்து “மயக்க நிலை” வருகின்றது. அதே போல நம் உடலின் உறுப்புகளுக்குள் அதை இயக்கும் சக்திகளும் குறைகின்றது.

இயக்கச் சக்தி குறையப்படும் பொழுது விஷத்தின் உணர்வலைகள் அதிகமாகச் சேரும் பொழுது சுவைமிக்க நிலைகள் வரும் பொழுது
1.நாம் பேசிய உணர்வலைகள் சூரியனுடைய காந்தப்புலனுக்குள் பட்டு
2.வேதனை கொண்ட உணர்வுகள் விஷத்தின் தன்மையாக நம் ஆன்மாவிலே சேர்க்கப்பட்டு
3.நம் உடலில் இருக்கும் இனிப்பின் சத்து வெளிப்படும் பொழுது மற்ற கிருமிகள் தாக்கப்பட்டு
4.நம் உடலில் இருந்து வரக்கூடிய வாசனை அது கிருமிகளாக உருவாகின்றது.

கிருமியின் சத்து நமக்குள் உருவாகி நம் உடலில் எங்கே அது ஒட்டுகின்றதோ உடலிலே சிறு புண்ணாகி விடுகின்றது. புண்ணாகி விட்டால் அதனுடைய மலம் கழிக்கப்படும் பொழுது தசைகளைப் பூராம் அழிக்கும் தன்மைக்கு வந்து விடுகின்றது.

சர்க்கரைச் சத்து வந்தவர்களுக்கு “சிறிதளவு புண்ணானாலும் அதை ஆற்ற முடிவதில்லை…”

நாம் வேகமாக எண்ணங்களை எண்ணி… வேதனையான உணர்ச்சிகள் உந்தப்பட்டு
1.ஒரு பக்கம் நரம்பு அல்லது நம் சுவாசப்பையில் உள்ள குழாய்களோ அதீதமான நிலைகள் வேகத்தால் துடிக்க ஆரம்பித்தால் “பலூனைப் போல் உப்பி”
2.அந்த உணர்வின் தன்மை மூளை பாகம் இயக்கப்படும் பொழுது அந்த மூளையின் நரம்புகள் வீக்கமாகி
3.இரத்தக் கசிவாகி மனிதனை மாய்த்து விடுகிறது…. இருதய அடைப்பு என்றும் சொல்வார்கள் மூளைக் கசிவு என்றும் சொல்வார்கள்
4.ஆக நாம் தவறு செய்யாமலேயே நமக்குள் நல்ல உணர்வின் சத்தை இழக்கச் செய்து விடுகின்றது.

காரணம் சாதாரண மனிதர்களை எண்ணும் பொழுது இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதை யார் துடைப்பது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஊண் உடம்பு ஆலயம்

ஊண் உடம்பு ஆலயம்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய ஒவ்வொருவருமே துன்பத்தை அனுபவித்து “எனக்கு இப்படி வந்து விட்ட்தே…” என்று சொல்லி எல்லாத் தெய்வங்களையும் வணங்குகின்றோம். நான் உன்னை வணங்கினேனே எனக்கு இப்படித் துன்பம் வருகிறதே… தெய்வமே…!

எந்தெந்தத் தெய்வத்தை வணங்கினோமோ
1.அந்தத் தெய்வ குணத்தை… நல்ல குணத்தை எண்ணாதபடி நாம் வேதனைப்படுகின்றோம்
2.நல்ல பாலிலே விஷத்தை ஊற்றிக் குடித்தது போன்று…!

அதே சமயம் ஆத்திரம் வந்து விட்டால் “உன்னைத்தான் நான் வணங்கி வந்தேன் என்னைப் பரிசோதிக்கின்றாயே…” என்ற ஆத்திரம்…! அந்த நல்ல குணத்தில் காரத்தைக் கலந்து நாம் குடித்தது போல் ஆகின்றது.

ஆனால் ஆலயத்தில் காட்டப்பட்டது என்ன…?

நாம் நல்ல குணங்களைச் செயல்படுத்தினோம் என்றால் அவை நமக்குள் மறைந்திருக்கின்றது. “ஊண் உடம்பு ஆலயம்…!” நான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஊணாக மாறி உடலாக மாறி இது ஆலயமாக மாறும்.

1.நான் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்தேனோ அந்த உணர்வின் சக்தி எனக்குள் தெய்வமாக இருக்கின்றது.
2.நான் நல்லதை எண்ணி நினைவுபடுத்தும் பொழுது அதைப்போல நான் சுவாசித்து உயிரான ஈசனிடம் படும்பொழுது
3.அந்த மகரிஷிகள் எண்ண ஒலிகளைப் பரப்பி நான் நல்லதைச் செய்வேன் என்ற எண்ணம் வருகின்றது.
4.அத்தகைய குணம் எனக்குள் நல்லதை உருவாக்கும் பக்குவமாக
5.அந்த எண்ண அலைகள் உணர்வுகள் எனக்குள் வளர்ந்து தெய்வமாக இருக்கின்றது மனிதனுக்குள்.

நாம் சாப்பிடும் ஆகாரத்திற்குள் விஷம் மறைந்திருந்தாலும் அந்த விஷத்தை மாற்றி விட்டு உடலை நல்லதாக்கி… எனக்குள் வரும் மணத்தின் தன்மை சுவாசித்து… நல்லதைச் செய்யும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலாக்கும் எண்ண அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கும் “அந்த நல்ல குணங்களைத் தான்”
1.ஒவ்வொன்றையும் தனித்துத் தனித்து இன்னென்ன குணங்கள் இன்னென்னது செய்யும் என்று
2.1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 ஆலயங்களாகப் பிரிக்கப்பட்டது.

நான் நல்லதைச் செய்ய வேண்டும் என்று என் பையனை எண்ணுகின்றேன். அந்த நல்ல உணர்வுடன் போகும் பொழுது சம்பந்தமில்லாதபடி ஒரு குழந்தை உருண்டு கீழே விழுந்து விடுகின்றான்.

கீழே விழுந்தவுடனே அவன் அலறுகின்றான். தாய்ப் பாசம் கொண்டு நாம் “ஐயோ இப்படி ஆகிவிட்டதே” என்ற வேதனை கொண்டு நல்ல உணர்வுடன் எண்ணும் பொழுது நான் எந்தக் குணத்தை எண்ணினேனோ அந்த உணர்வின் சுவாசம் (நினைவு) அந்த எண்ண அலைகள் சுவாசிக்கப்பட்டுச் செயல்படும் ஆற்றலாக இங்கே வருகின்றது.

அவன் கீழே விழுந்த பின் அவன் சுவாசித்த வேதனையின் உணர்வலைகளை
1.நான் சுவாசிக்கும் போது என் உயிரிலே பட்டு எனக்கு அந்த வேதனை தெரிகின்றது.
2.அவன் வலி எனக்கு வந்ததாகக் கருதி அவனைக் காப்பாற்றுகின்றேன்.

அவனைக் காப்பாற்றி விட்டேன் ஆனால் அந்த நல்ல குணத்திற்குள் வேதனைகள் கலந்து வரும் பொழுது “யார் பெத்த பிள்ளையோ…? இப்படி ஆகிவிட்டதே…! என்ற வேதனையும் அவன் வேதனையில் பட்ட துடிப்பு நிலையும் என் நல்ல குணத்துடன் கலந்து விடுகின்றது.

இதை இப்படியே விட்டு விட்டால் என்ன செய்யும்…?

இன்று இதைச் செய்து விட்டோம். இதைப் போன்று ஏதாவது ஒரு உணர்ச்சிகள் நாம் போகும் பாதையில் ஒரு பையன் ஒரு சாமானைத் தூக்கிப் போடுகிறான் என்றால் பயத்தால் இந்த உணர்ச்சியின் வேகங்கள் எனக்குள் தூண்டிக் கொண்டே இருக்கும்.

பய உணர்வுகள் தோன்றி
1.அதைத் தடுக்கும் நிலைகளில் இருந்து கீழே விழுந்து விடுமோ விழுந்து விடுமோ என்று எண்ண எண்ண அந்தப் பொருள் கீழே விழுந்து விடும்.
2.சரியான நிலைகள் பக்குவப்படுத்த முடியாதபடி உணர்வின் இயக்க நிலைகள் மாறி விடுகின்றது.
3.நான் நல்லதை நினைத்தேன்… நல்லதைச் செய்தேன்…! :எதைத் தொட்டாலும் என் காரியம் விளங்க மாட்டேன் என்கிறது…”

நல்லதை நினைத்தேன் ஏன்று வேதனையான நிலைகளை எடுத்துக் கொண்டு அந்த உணர்வலைகள் அதிகமாகும் பொழுது என் வட்டமாகின்றது.

உதாரணமாக ஒரு குழம்பை வைக்கப்படும் பொழுது எல்லாம் சமமாக இருந்தால் ருசியாக இருக்கும். காரம் அதிகமாகி விட்டால் உசு உசு என்று எரிச்சல் ஆகின்றது அதே சமயம் காரல் அதிகமாகி விட்டால் அதற்குத் தக்க சுவை மாறுகின்றது. உப்பு அதிகமாகிவிட்டால் கரிக்கின்றது.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட மணம் அதிகமாக எடுக்கப்படும் பொழுது அது முன்னணியில் வந்து விடுகின்றது. அப்பொழுது ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்கு நான் போகிறேன் என்றால்
1.நான் வாயை திறந்து பேசினாலே போதும்
2.சங்கடமான அலைகள் முன்னாடி இருக்கும் பொழுது
3.என் சொல் மற்றவர்கள் செவிகளிலே படும் அந்த உணர்ச்சிகள் உந்தி என்னைப் பார்க்கின்றார்கள்.
4.எனக்கு முன் இருக்கும் இந்தச் சங்கட அலைகள் அவருடைய ஈர்ப்புக்குள் போகும்.
5.அதைச் சுவாசித்த உடனே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லாது வெறுப்படைவார்கள்.
6.நான் எவ்வளவு நல்லது செய்கிறேன் ஆனால் என்னைப் பார்த்து வெறுக்கின்றார்களே என்று நாம் சொல்வோம்.

ஆனால் தவறு செய்யவில்லை. அப்பொழுது இதை யார் துடைப்பது…? இதற்குத்தான் ஆலயத்தைக் கட்டி வைத்துள்ளார்கள்.

நல்ல குணத்தை எதனால் நீ போர்த்திக் கொள்ள வேண்டும்…? அந்த மலரை வைத்து நல்ல வாசனை கொண்ட பூக்களைப் போட்டு.
1.வாசனையான சந்தனத்தை சாமி மீது ஊற்றுகின்றார்கள்.
2.ஏனென்றால் நம்மிடம் இருக்கும் குணத்திலே அதை ஊற்றினால் தான் அந்தத் தீமையான வாசனை போகும்.

என் நல்ல குணத்துடன் கீழே விழுந்தவனைப் பார்த்தேன். அவன் வேதனைப்பட்ட உணர்வை எடுத்த உடனே இதை மூடிவிட்டது அதிலிருந்து
1.பாலில் விஷம் பட்டால் குடித்தால் நம்மையும் எப்படி வேதனைப்படச் செய்யுமோ
2.நல்லது எண்ணும் போதெல்லாம் வேதனை வந்து கொண்டே இருக்கின்றது.

அதைத் துடைப்பதற்குக் கோவிலைக் கட்டி வைத்து அந்தத் தெய்வ குணத்தைப் பெறும்படி செய்தார்கள்.

இருட்டறைக்குள் சாமியை வைத்திருக்கின்றார்கள் திரையை நீக்கியபின் எதைக் கொண்டு அங்கே பார்க்கின்றோம் தீபத்தைக் காட்டும் போது வெளிச்சத்தால் இருட்டுக்குள் மறைந்த அனைத்தும் தெரிய வருகின்றது.

பொருளறிந்து செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஈசனிடம் கேட்கின்றோம். அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரிலே படுகின்றது.

கீழே விழுந்தான்… கீழே விழுந்ததைச் சுவாசித்த பின் உயிரிலே பட்டு “ஆ” என்று பயமாகி அந்த வேதனைப்பட்டு அவனைக் காக்கச் செய்கின்றது. ஈசனுக்குள் படும் பொழுது தான் இது வரும்.

அதே உணர்வு உமிழ் நீராக மாறி அந்த வேதனை என் உடலுக்குள் போகும்போது என் நல்ல குணங்கள் எல்லாம் பதறுகின்றது. அந்த நல்ல குணங்களை எல்லாம் சேர்த்துத் தாங்கி உடலாக இருக்கும் சிவம் இப்படிச் செய்கின்றதே என்று பதட்டமாகின்றது. இந்த உடல் முழுவதும் பதட்டமாகின்றது நல்ல குணங்களுக்கும் பதட்டமாகின்றது. ஆனால் ஈசனுக்கோ வேதனையாகின்றது.

அதைத் துடைப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…? கோவிலில் அங்கே சென்று அங்கிருக்கும் சிலைக்கு அபிஷேகம் செய்தால் இங்கு சரி ஆகுமா…?

அபிஷேகம் எதைச் செய்ய வேண்டும்…? எங்கே செய்ய வேண்டும்…?

அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நான் பெற வேண்டும் என் பேச்சிலும் மூச்சிலும் நல்ல இனிமையான உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே நம் உயிருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
2.இதை அங்கே புறத்திலே சிலைக்கு ஊற்றிக் காண்பிக்கின்றார்கள். ஆனால் இப்படி யாரும் நினைப்பது இல்லை.

அங்கே சந்தனத்தை ஊற்றுவார்கள். அப்போது “பையன் சொன்னபடி கேட்கவில்லையே” என்று இங்கே வருத்தமாக இருக்கும். ஆக இங்கே வருத்தத்தைச் சுவாசித்து இங்கிருக்கும் ஆண்டவனுக்குக் கவலையை அபிஷேகம் செய்கின்றோம்.

நல்ல மணத்தை எடுத்து உனக்குள் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு அதைக் கொடு என்று ஆலயத்திலே காண்பித்தால் யாரும் அவ்வாறு கும்பிடுவதில்லை.

சரணாகதித் தத்துவமாக உன் கஷ்டத்தை எல்லாம் அங்கே அழுது சொல்லு. அவன் பார்த்துக் கொள்வான் போ…! தேங்காய் பழம் பலகாரத்தைச் செய்து கொடுத்து…
1.உனக்கு நல்லதை எல்லாம் கொடுத்து இருக்கின்றேன் என்னை எப்படி எல்லாம் துன்பப்படுத்துகின்றார்கள்
2.நல்லதைச் செய்கின்றேன் என்னை இப்படிப் பேசுகின்றார்கள் நல்லதைச் செய்தேன் ஏமாற்றுகின்றார்கள்
3.நீயே பார்த்துக் கொண்டிருக்கின்றாயே…! ஏன் நீ அவர்களுக்குச் சொல்லக் கூடாதா…? என்று சரணாகதித் தத்துவமாக அழுது அங்கு புலம்புகின்றோம்.

வேதனையைக் கொண்டு அபிஷேகம் செய்தால் எதைச் சம்பாதித்து வருகின்றோம்…?

எதை நீக்குவதற்காகக் கோவிலை வைத்தார்களோ
1.அந்தக் கோவிலுக்குச் சென்று சுத்தப்படுத்துவதற்குப் பதிலாக அசுத்தப்படுத்துகின்றோமே தவிர
2.கோயிலின் மரியாதையையே நாம் கெடுத்து விடுகின்றோம்.

இந்த உடலான கோவிலைச் சுத்தப்படுத்துவதற்கு நமக்குள் இருக்கும் நல்ல குணங்களைக் காப்பாற்றுவதற்கு மாறாக அவன் பட்ட வேதனையைத் தான் எண்ணுகிறோம். காரணம் என் நல்ல குணங்களை அது மூடிவிட்டது. அதைத் துடைக்க வேண்டும் அல்லவா.

ஆனால் நல்ல குணங்களைக் காப்பாற்றிய ஞானிகள் சப்தரிஷி மண்டலங்களாக அங்கே இருக்கின்றார்கள். அதனால் தான் பௌர்ணமி அன்று விண்ணை நோக்கி உற்றுப் பார்க்கும்படி சொல்வதும் காலையில் சூரியனைப் பார்க்க வேண்டும் என்றும் அன்று ஞானிகள் சொன்னார்கள்.
1.ஞானிகள் உணர்வை எண்ணி எடுப்பதை காயத்ரி என்பார்கள்.
2.இந்த காற்றிற்குள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட ஞானிகள் பேசிய உயர்ந்த சக்திகள் இருக்கின்றது.
3.அதை எண்ணி எடுத்து அந்த ஞானியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் சேமிக்க வேண்டும்.

அது பரமாத்மா பூமியில் இருப்பது. அதை எண்ணி எடுக்கப்படும் பொழுது உடலுக்குள் அணைப்பாக வருகின்றது. இரண்டாவது என் ஆத்மா. அதிலிருந்து சுவாசித்து உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது ஜீவாத்மா. இது எல்லாம் நல்ல குணங்களை விளைய வைத்துச் சுத்தப்படுத்தி உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நல்ல உணர்வாக வரப்படும் பொழுது நான்காவது உயிராத்மா. “இதற்குப் பெயர் காயத்ரி…”

அந்த உயர்ந்த உணர்வுகளை நமக்குள் எடுத்து விளைய வைத்தால் உண்மையான முழு சக்தியாக அங்கே பெறுகின்றது. இதை ஆண்கள் தான் செய்ய வேண்டும் பெண்கள் செய்யலாமா… வேண்டாமா…? என்று இப்படி ஒரு கேள்வி கேட்பார்கள்.

முதலில் தாய்மை…!
1.சக்தி தான் முதலில் சிவமாகின்றது. சிவத்தில் இருந்து தான் சக்தியும் வளர்ச்சி பெறுகின்றது
2.சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
3.சக்தியை முதலில் வைத்துத்தான் சிவமாகும் என்று அன்று சொல்லி இருக்கின்றார்கள்.

ஆனால் இன்று இருக்கக்கூடிய சாஸ்திர சட்டங்கள் பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லலாமா கூடாதா என்று சொன்னால் இது என்ன கேள்வி…? பெரும்பகுதியானவர்கள் “பெண்கள் காயத்ரி மந்திரம் சொல்லக் கூடாது… சொன்னால் தப்பு” என்கிறார்கள்… இவர்கள் சொல்லிக் கொள்ளும் காயத்ரி மந்திரம்.

மந்திரம் என்றால் என்ன…? அந்த இயற்கையின் சக்தி ஞானிகளுடைய அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஈர்க்கப்படும் பொழுது நமது ஆத்மாவாகி சிறுகச் சிறுகச் சேர்ந்து ஜீவாத்மாவாக நமக்குள் விளைந்து அதில் விளைந்த நிலைகள் உயிராத்மாவாகச் சேருகின்றது.

கோவிலிலே பார்க்கப்படும் பொழுது எந்தக் குணத்தைக் காக்க வேண்டும் என்று எண்ணினோமோ அந்தக் குணமான சக்தி எனக்குள் இருக்கின்றது. அந்தக் குணத்தை நான் எண்ணும் பொழுது தான் அவனைக் காப்பாற்றினேன் (கீழே விழுந்தவனை). ஆனால் அதே உணர்வு எனக்குள் கலந்து விடுகின்றது.

அந்த குணத்திற்குள் கலந்ததை நான் துடைக்க வேண்டும். அதற்குத் தான் அங்கே காட்டியுள்ளார்கள்.
1.அவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த உணர்வின் சத்து எனக்குள் பட்டுவிட்டது.
2.அந்த வேதனையை அகற்றிவிட்டு நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால்
3.கோவிலில் காட்டப்பட்டுள்ள அந்த தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா.
4.இதை அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் ஈஸ்வரா. வானை நோக்கி நாம் எண்ண வேண்டும்.
5.இந்தத் தெய்வ குணத்தை அவர்களுக்குள் விளைய வைத்து இது தான் உண்மை என்று அறிந்து சொன்ன வாக்கினை நாம் எடுக்க வேண்டும்.

தெய்வத்தைச் சொல்லி அந்தத் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால் நல்லது என்று சொன்ன சாதாரண மனிதன் இங்கே இருக்கின்றான். நல்லதைச் சொல்லிச் செய்பவன் எல்லாம் விண்ணிலே இருக்கின்றான். ஆனால் சாமியை நீ சொல் என்று மந்திரத்தைச் சொல்லி நீ இதைச் செய்தால் நல்லதாகும் என்று சொல்கின்றான்.

அதே மந்திரத்தைச் சொல்லி தெய்வத்தை ஜெபித்து வணங்கப்படும் போது நாம் இறந்த பின் இன்னொரு மனிதன் அதே மந்திரத்தைச் சொல்வான் என்றால் அவனுக்குள் ஆட்டிப்படைக்கும் பொம்மையாக ஆவோம்.

1.எந்தெந்த மந்திரத்தைச் சொல்லி உடலில் சேர்த்துக் கொண்டோமோ இறந்த பிற்பாடு
2.அதே மந்திரத்தை இன்னொரு மனிதன் சொன்னால் அந்த மந்திரத்திற்குள் சிக்கப்பட்டு
3.அவன் என்னென்ன வேலை செய்கின்றானோ அதற்கு அடிமையாவோம் இவர்கள் சொல்லும் மந்திரத்தில் சென்றால்…!

ஞானிகள் சொன்ன வழிப்படி.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் அந்த மகரிஷிகள் உணர்த்திய அருள் சக்தியான தெய்வ நிலைகள் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி என் உடலுக்குள் அதைச் செலுத்தி மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் இந்த வாசனை என் உடலுக்குள் பெற்று அந்த நறுமணமான நிலைகள் பெற வேண்டும். என் சொல்லுக்குள் அந்த நறுமணம் வரவேண்டும். நான் சொல்வதெல்லாம் மற்றவர்களுக்கு இனிமையாக இருத்தல் வேண்டும் என்று எண்ண வேண்டும்.

கனியைப் பார்க்கின்றோம். அதை உட்கொண்டால் எப்படி இனிமையாக இருக்கின்றதோ அது போன்று என் சொல்லுக்குள் அந்த இனிமை கலந்து பிறருடைய செவிகளிலே படும் பொழுது அங்கே நல்லதாக அமைய வேண்டும்.

ஆனால் கீழே விழுந்தவனைப் பார்த்தவுடனே ஆ…! என்று எனக்குள் அலறல் ஆகின்றது. பிறருடைய மகிழ்ச்சியான சொல்களைக் கேட்கப்படும் பொழுது எனக்குள் ஆனந்தத்தைத் தூண்டுகின்றது.
1.இதைப் போல அந்த மகிழ்ச்சியான உணர்வின் தன்மை நான் பெற வேண்டும்
2.கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எனக்குள் இந்த உணர்வினை அபிஷேகம் செய்தால்
3.இந்த உணர்வின் தன்மை கீழே விழுந்தவனைக் காப்பாற்றிய “அந்த விஷத்தை நீக்கிட” அந்த ஞானியின் அருள் வித்து உதவுகின்றது.
4.இவனைக் காப்பாற்றினேன்… அதே உணர்வின் தன்மை எனக்குள் அந்த நல்ல குணத்தை நிலை நிறுத்த முடிகின்றது.

இப்படித்தான் ஆலயத்தின் பண்புகளை நமக்குச் சொன்னார்களே தவிர சரணாகதித் தத்துவமாக துன்பத்தை எல்லாம் சொல்லி எல்லா பதார்த்தங்களையும் அங்கே வைத்துவிட்டு நான் எல்லாமே உனக்குச் செய்தேன் என் பிள்ளை மக்காக இருக்கின்றானே…! உன்னைத்தானே நான் வேண்டினேன் என்று வேதனையைத் தான் சொல்கின்றோம். எல்லோருக்கும் நான் தர்மத்தைத் தானே செய்தேன். எல்லோரும் ஏமாற்றுகின்றார்களே…!

அப்பொழுது எதை வணங்குகின்றோம்…?

ஆக நமக்குள் வந்த தீமையைத் தான் அந்தக் கோவிலுக்குள்ளும் சென்று அங்கேயும் அதே தீமையை வளர்க்கின்றோம். நாம் விடும் மூச்சுகள் நமக்குக் கெட்ட்தாவதோடு மட்டுமல்லாதபடி மற்றவர்களுக்கும் அது அங்கே கெடுதல் ஆகின்றது.

ஆலயம் நம்மைப் புனிதப்படுத்தும் நிலைக்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆகையினால் இனி எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும் ஈஸ்வரா. இதையெல்லாம் அருளிய அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. மலரைப் போல் மணம் நாங்கள் பெற வேண்டும். என் மூச்சாலும் பேச்சாலும் நல்ல மணங்கள் வெளிப்பட வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணுங்கள்.

பிறரை மகிழ வைக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும். என் சொல்லால் பிறர் மகிழ வேண்டும் என் செயலால் பிறர் ஆனந்தப்பட வேண்டும்.
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியால் எனக்குள் அது விளைய வேண்டும் ஈஸ்வரா.
2.அந்தக் கோவிலுக்கு வரும் அத்தனை பேருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமும் வளமும் பெற வேண்டும்.
3.என் சொல்லும் செயலும் இங்கு வருவோர் அனைவரையும் மகிழ வைக்கும் எண்ண அலைகளாகப் படர வேண்டும் ஈஸ்வரா என்று
4.இப்படி எல்லாம் செய்யும் போது நாம் தெய்வமாகின்றோம்.

இது தான் கோவிலின் தத்துவம்.

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

நாரதன் எனும் ஞானக் கனியை நாம் புசிக்க வேண்டும்

 

கந்த புராணத்திலே அன்று சொன்னது. பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான். ஆகவே
1.நீ வேறு உலகம் சுற்ற வேண்டியதில்லை.
2.அன்னை தந்தையினுடைய எண்ண உணர்வலைகளுக்குள் நீ சுழன்று வந்தால் அதனின் நிலைகள் நீ கனியாவாய் என்று
3.அந்தக் கனியைப் பெறும் தகுதியை யார் கொடுத்தது…?
4.நாரதன்…! அந்த நாரதன் யார்…?

ஏனென்றால் மனிதனாகித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்று சப்தரிஷி மண்டலம் ஆகி
1.அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகள் – நான் பேசும் அந்த உணர்வின் அலைகள் தான்
2.அந்த வளர்ந்து கொண்ட அணு தான் நாரதன்.

அந்தக் கனியான அருள் வித்தை “நாரதன் தான் இந்தக் கனி” என்று சுட்டிக் காட்டுவதற்கு அவர்கள் சென்ற வழியில் செல்ல வேண்டும் என்றால் அன்னை தந்தையின் சொல்லின் சுழற்சிக்குள் இன்று ஒருங்கிணைந்து அவர்கள் உயர வேண்டும் என்ற உணர்வை கொண்டு நாம் சுழன்று வந்தால் இந்த உணர்வின் தன்மை கனியின் தன்மையை நீ பெறுகின்றாய்.

இப்பொழுது நான் சொல்லும் நிலைகள் கொண்டு “விண்ணை ஏகும் முறையை” அன்று கந்த புராணத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் சரியான நிலைகள் பெறுவதற்கு அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி வாரத்தில் ஒரு நாள் மூதாதையர்களான குலதெய்வங்களை விண் செலுத்த வேண்டும்.

1.அதை பழகிக் கொள்ள வேண்டும்… பழக்கிக் கொடுக்க வேண்டும்.
2.ஒவ்வொரு நாளும் அல்லது அந்த வாரத்தில் ஒரு நாள் ஆவது கூட்டுக் குடும்ப தியானங்கள் இருந்து
3.குழந்தைகளையும் பழக்கி விண்ணின் ஆற்றலைப் வெறும் தகுதியை ஏற்படுத்தும் போது ஒரே தொடர்பாகக் கூட்டமைப்பாக வருகின்றது..

ஆனால் இப்பொழுது நாம் குழந்தைகளை வளர்க்கப்படும் பொழுது அவன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் என்ன செய்கிறோம்…? இவனுக்கு நல்ல நேரம் இருக்கின்றதா… கெட்ட நேரம் இருக்கிறதா…? என்று ஜாதகக்காரனிடம் ஓடுகின்றோம்.

கெட்ட நேரம் இருக்கின்றது என்று சொல்லி யாகத்தை வளர்த்தால் சரியாகிப் போய்விடும் என்று காசைக் கொடுத்துச் செலவழித்து அவன் சொல்வதைச் செய்வோம்.

யாகத்தைச் செய்தால் அது எப்படி சரியாகும்…?

பையன் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நாம் இப்படித்தான் ஜாதகக்காரனிடம் கேட்டு “நல்ல நேரம் இருக்கிறதா…” என்று தெரிய விரும்புகின்றோம்.

ஆனால் அங்கே அவன் கெட்டதைச் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம். கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வான். அதை ஏற்றுக் கொள்வோம்.
1.பையனுக்கு நல்ல புத்தி சொல்வதற்குப் பதிலாக
2.கெட்ட நேரம் இருக்கிறது கெட்ட நேரம் இருக்கிறது என்று அவன் சொல்வதைத் தான் நாம் ஆழமாகப் பதிவு செய்கின்றோமே தவிர
3.நல்லதை நினைத்து அதை எடுத்துச் செய்வதற்கு இல்லை.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்துத் தான் நான் இன்று எல்லாமே செய்து கொண்டிருக்கின்றோம். ஆனால் கெட்டது என்று ஜாதகக்காரன் சொல்லிவிட்டால் அந்த உணர்வு வேகமாக பதிவாகி விடுகிறது.

நல்லதாகும் என்று சொல்லி இருந்தால் அது நடப்பதில்லை.
1.காரணம் விஷம் வேகமாக வேலை செய்யும்
2.நல்லதாக வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப நல்லதை எடுத்து நல்லதையே எண்ணி வளர்க்க வேண்டும். அது எங்கே இருக்கிறது…!

ஜாதகக்காரன் சொல்லும் நல்லது நடக்காது. ஆனால் “கெட்டது அனைத்துமே… ஜாதகக்காரன் சொன்னபடி நடக்கிறது…!” என்று அப்படித்தான் நாம் எடுத்துக் கொள்கின்றோம்.

குழந்தை பிறந்த நேரத்தின்படி அவன் தாய்க்கு ஆகாது என்று அவன் ஜாதகப்படி சொல்வான். அந்த ஜாதகப்படி இத்தனாவது மாதத்தில் இத்தனாவது வருடத்தில் “தாய்க்கு இந்த மாதிரி ஆகும்” என்று அவன் சொல்லி விடுவான்.

அதைக் கேட்ட உடனே ஆரம்பத்திலிருந்து அந்த வித்தை நமக்குள் பதிவு செய்து வளர்க்க ஆரம்பித்து விடுகின்றோம்.
1.கொஞ்சம் கொஞ்சமாக அதை நினைத்து நினைத்து வளர்த்து அந்த வயது வரை
2.ஜாதகக்காரன் சொன்னான் ஜாதகக்காரன் சொன்னான் என்ற அதை நினைவைக் கொண்டு வரும்பொழுது
3.காற்றிலிருந்து அதைச் சுவாசித்து அந்த நோயை நமக்குள் வரவழைத்துக் கொள்கின்றோம்.

ஜாதகக்காரன் சொன்னான்…! சொன்னது சரியாகி விட்டது. சொன்ன நேரத்தில் சரியாக நடந்து விட்டது “ஜாதகம் பொய்யா…?” என்று தான் நாம் வாதிப்போம்.
1.அது விளைந்த பிற்பாடு ஜாதகக்காரன் சொன்னது மெய்யாகி விட்டது
2.அப்பொழுது அவன் கடவுளாகி விடுகின்றான்… நன்றாக இதை கவனித்துக் கொள்ளுங்கள்.

மனிதனுக்கு ஜாதகம் இல்லை சூரியனுக்கு பூமிக்கோ செடி கொடிகள் மற்றும் அனைத்திற்குமே ஜாதகம் உண்டு… சொல்ல முடியும்
1.காரணம் அவையெல்லாம் “நினைத்து” எதையும் மாற்ற முடியாது
2.மனிதனுக்கோ… கெட்டது என்று வந்து விட்டால் அதை நீக்கிவிட்டு நல்லதைச் செய்யக்கூடிய நிலைகள் உண்டு.

நாம் உணவாக உட்கொள்ளும் ஆகாரம் எத்தகைய சுவையாக இருந்தாலும் அதற்குள் மறைந்து இருக்கக்கூடிய விஷத்தை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றிடும் சக்தி நம்முடைய அறிவு ஆறாவது அறிவுக்கு உண்டு.

அந்த அறிவால் தான் செடிகளில் விளைந்த காய்கறிகளில் அதில் உள்ள காரலை வேக வைத்து நீக்கிவிட்டுப் பல பொருள்களை இணைத்துச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்கின்றோம்.

மனித வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை நீக்கிவிட்டு
1.தனது ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக உணர்வை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள் சப்தரிஷிகள்
2.சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்கின்றார்கள்… அதிலிருந்து வெளிப்படும் ஒளியான அணு தான் நாரதன் என்பது.

அந்தச் சக்திகளை நமக்குள் வளர்த்தால் அவர்களைப் போன்று நாமும் எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்க முடியும். அவர்களைப் போன்று நாமும் கனியின் தன்மையை (முழுமை) அடைய முடியும்.

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

அணுவின் இயக்கம்… உணர்வின் இயக்கம்…!

 

உதாரணமாக ஒரு வேப்ப மரத்தில் இருந்து வரும் கசப்பான சத்தைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. கவரப்படும் பொழுது வேப்ப இலை எந்த உருவமாக இருக்கின்றதோ அதனின் மணத்தை வெப்ப காந்தம் கவர்ந்த உடனே அந்த இலையைப் போலவே அந்த அனல் வீசும்.

1.மணத்தின் நிலைகள் இலையைப் போலவே ரூபம் இருக்கும்.
2.அந்த இலை எப்படி இருக்கின்றதோ அதைப் போன்று அந்தப் பொறிகளை வீசி இலையின் ரூபமாக இருக்கும்.

ஒரு இலுப்ப மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய இலைகள் வட்ட வடிவமாக இருக்கும். அதிலிருந்து வரக்கூடியது துவர்ப்பான சத்து.
1.அதைச் சூரியனுடைய வெப்ப காந்தம் எடுத்துக் கொண்டால்
2.அந்த அணுவைப் பார்த்தால் வட்ட வடிவமாக இருக்கும்.

இலுப்ப மரத்தின் துவர்ப்பான சக்தி அதிகமான ஆற்றல் இருப்பதால் அதற்குப் பக்கத்தில் ஒரு ரோஜாச் செடி இருந்தாலும் இது அதைக் கவர்வதில்லை. அதனுடைய ஆற்றல் இருக்கும் பொழுது நல்ல மணத்தை ஒதுக்கி விடுகின்றது.

அதே போன்று வேப்ப மரத்திற்கு அருகில் நல்ல மணங்கள் வந்தாலும் இந்தக் கசப்பின் ஆற்றல் இருக்கப்படும் பொழுது அதனுடைய வலுக் கொண்டு அதைத் தள்ளி விட்டு விடுகின்றது.

கசப்பான சத்து இருந்தாலும் ரோஜாப்பூ தன் நல்ல நறுமணத்தைத் தான் அது எடுத்துக் கொள்கின்றது.. கசப்பை உள்ளே விடுவதில்லை.

ஏனென்றால் ஒவ்வொன்றின் ஆற்றலும் அத்தகைய தன்மை வாய்ந்தது.

ஆக வலுவான சக்தியாக இருப்பதால்
1.காற்றுக்குள் இருக்கும் நுண்ணிய அலைகளைச் சிற்றலைகளாக வரும் பொழுது
2.தன் இனமான சக்தி சிறுத்திருக்கின்றது… அந்தச் சக்திகளை அது எளிதில் கவர்ந்து கொள்கின்றது.

காற்றுக்குள் இருக்கும் தன் இனமான சக்திகளைத் தன் வலுவின் ஆற்றல் கொண்டு கசப்பான சத்தைக் கவர்ந்து வேப்பமரம் வளர்கின்றது. அது வெளிவிடும் நிலையை காற்றுக்குள் எவ்வளவு இது கலந்து இருந்தாலும் அடுத்த வேப்பமரம் இந்தச் சத்தை எடுத்து அது வளர்கின்றது… தன் இனத்தை வளர்க்கின்றது.

ஆனால் இயற்கையின் மாற்றங்கள்… அணுக்களின் தன்மை தனித்துத் தனித்து வேப்ப மரத்தின் கசப்பான சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து கொண்டால் அதே போன்று இலுப்ப மரத்தின் சத்தை வெப்ப காந்தம் கவர்ந்து தனித்தனியாக அலை அலையாகச் செல்லும் பொழுது
1.அதில் எந்த உணர்ச்சியின் தன்மை வேகமாக இருக்கின்றதோ
2.அதற்குத் தக்கவாறு அந்த அணுவின் நகர்ந்து செல்லும் ஆற்றலும் இருக்கும்… வேகமாக இருக்கும்.

மனிதனைத் தேள் கொட்டி விட்டால் கடு…கடு… என்று அந்த விஷத்தின் தன்மை ஏறுகின்றதல்லவா. இதைப் போலத் தான் ஒவ்வொரு நிலையிலும் ஆற்றல்மிக்க அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறு விஷத்தின் ஆற்றல் கலந்துள்ளது. அது தான் ஆவி.

அந்த இயக்கத்தின் தன்மையில் எந்தெந்தத் தாவர இனத்தின் விஷம் அதிகமாகக் கலந்திருக்கின்றதோ கலந்த நிலைகளுக்கொப்ப அந்த உணர்வின் சக்தி பொறிகளாகக் கிளப்பக் கூடிய ஆற்றலும் அதிகமாக உண்டு.

இந்த அணுக்களின் தன்மை இரண்டும் தனித்தனியாகப் போகும் போது வேகத்தின் துடிப்பு படர்ந்து சென்றாலும் இதிலே கலந்திருக்கக்கூடிய நிலைகளுக்கொப்பத்தான் இதனுடைய இயக்கச் சக்தி.

இந்த அணுக்கள் சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதியுடனே வெப்பமும் காந்தமும் ஒன்றாக இணைந்து கொள்கின்றது. இரண்டு வெப்ப காந்த அணுக்கள் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஆற்றல் அதிகமாகும். ஆனாலும் அந்த வேப்ப மரத்தின் கசப்பின் சத்தும் இலுப்ப மரத்தின் துவர்ப்பின் சத்தும் இதுவும் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேப்ப மரத்தின் ஆற்றல் விஷம் ஜாஸ்தி அது உமட்டல்… இயக்கச் சக்தி அதிகமாக இருக்கிறது. இலுப்ப மரத்தினுடைய திகட்டல் கம்மி… உள்ளடங்கி வட்ட வடிவமான நிலைகளில் இருக்கும் பொழுது அதை வெளிப்படுத்தும் நிலைகள் கொண்டு
1.வேப்ப மரத்தின் இலை ரம்பம் போன்று இருப்பது
2.அடுத்து இலுப்ப மரத்தின் இலை வட்டமாக இருக்கும் இரண்டும் சேர்த்து புது விதமான இலையாக உருவாகின்றது

இது உணர்வின் இயக்கம்.

நாம் ஒரு காரத்தை வாயிலே போட்டால் ஆ…! என்று அலறுகின்றோம்.. ஆனால் கசப்பை வாயிலே போடும்போது உமட்டலாக “ஓய்…” என்று வெளிப்படுத்தும் சக்தியாக வருகின்றது.

இதே மாதிரி இயற்கையின் உணர்வின் அணுக்கள் அது சேர்க்கையாகும் பொழுது இந்த அணுவின் தன்மைகள் ரூபங்கள் மாறும்.

இப்படிப் பல அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒன்றுக்குள் ஒன்று அடக்கி இயக்கமாகி காந்தத்தின் ஆற்றல் அதிகமாகி இப்படி நூறு அணுக்கள் நூறு விதமான தாவர இனத்தைக் கவர்ந்து கொண்டு வந்தால் அதனுடைய கலவைக்குத் தக்கவாறு உணர்வின் நிலைகள் உருமாறி இந்த உணர்வின் சத்துக்கொப்ப இயக்கச் சக்தியாக மாறி அந்த அணுவின் ஈர்ப்பு காந்தமும் வெப்பமும் அதிகமாகி எடை கூடி புவியின் ஈர்ப்பிற்குள் அமைந்து விடுகிறது.

பூமிக்குள் அமைந்த நிலைகள் கொண்டு புவியின் ஈர்ப்பு காந்தத்தின் துணை கொண்டு வெளியில் இருந்து வரக்கூடிய வெப்பத்தின் தன்மையை ஈர்க்கும் தன்மை பெறுகிறது.
1.மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஒரு மின்னல் தாக்கப்படும் பொழுது
2.இந்த அணுவிற்குள் பட்ட உடனே அது துடித்து எழுந்து இயங்கத் தொடங்குகிறது.

அப்படி இயங்கும் பொழுது தனக்குள் எந்த உணர்வின் சக்தியை இது பெற்றுக் கொண்டதோ… காற்றிலே மிதந்து வரும் தன் இனமான சக்திகளை எத்தனை வகையான உணர்வுகளைத் தனக்குள் அது ஈர்த்ததோ… அதைப் போன்று நுண்ணிய அலைகளைப் பிரித்து இணைக்கச் செய்து… அது ஒரு புதுச் செடியாக மரமாக புது இலைகளாக உருப்பெறுகின்றது.

புது விதமான செடியாக வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனை வகையான நிலைகள் இதிலே சேர்த்து இருந்ததோ அந்தச் சத்துக்குத்தக்கவாறு மரம் வளர்கின்றது.

மரமாக வளர்ந்து அந்த நூறு விதமான நுண்ணிய அலைகளைத் தனக்குள் பிரித்துச் சேர்த்து அதற்குள் விளைந்து பூவாகி காயாகி கனியாகி வித்தை உருவாக்குகின்றது.

முதலிலே கவர்ந்த அணுவின் தன்மை அது செடியாகி மரமாகி அந்த உணர்வின் சக்தியை மீண்டும் வளர்த்து வித்தாக உருப்பெறுகின்றது.
1.வித்தின் பரிணாமம் பெரிது.
2.ஆனால் முதலில் அணுவின் சக்தி சிறிது.

இதனின்று வளர்ந்த இந்த நிலைகள் பரிணாம வளர்ச்சியில் வருவது போல ஒரு உயிரணு புழுவில் இருந்து மனிதனாக வரும் போது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளை வளர்த்து வளர்த்து வளர்த்து வளர்ச்சிக்கு வருகின்றது.

1.ஒவ்வொரு உணர்வின் சத்தாகச் சேர்க்கப்பட்டு தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பாகி… ரூபங்களாகப் பரிணாம வளர்ச்சியாகி
2.எத்தனை கோடித் தாவர இனங்களை… உயிரினங்களாக இருக்கும் பொழுது உட்கொண்டதோ
3.இந்த உணர்வுக்கொப்ப எண்ணத்தின் நிலையும்
4.அதனதன் உணர்வுக்கொப்பத் தற்காத்துக் கொள்ளும் உணர்வுகளைச் சுவாசித்து… தன்னை தற்காத்துக் கொள்ளும் வினைகளைச் சேர்த்து
4.அது கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுவின் தன்மை அதற்குள் விளைந்தது
5.ஒவ்வொரு உயிரினமும் அதைத் தன் உயிரான்மாவாக வடித்துச் சேர்த்துக் கொள்கின்றது.

தீமைகள் வரும் போது சிந்தித்துச் செயல்படுகின்றோமா…?

தீமைகள் வரும் போது சிந்தித்துச் செயல்படுகின்றோமா…?

 

தவறு செய்கின்றார் என்று ஒருவரை நாம் எண்ணும் பொழுது
1.அவர்களை அறியாமல் அது இயக்குகின்றது என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
2.அதற்குத்தான் நாம் பார்க்கும் அனைவரையும் மதிப்போம்
3.உடலைக் கோவில் என மதிப்போம்
4.அதில் வீற்றிருக்கும் உயிரைக் கடவுள் எனத் துதிப்போம் என்ற இந்த பாடலைக் கொடுப்பது.

ஈசனால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் உடல். அவர்களை அறியாமல் செய்ல்களைச் செயல்படுத்துகிறது என்று சொன்னால்… சொல் வெளிப்படுகிறது என்று சொன்னால்…
1.அந்த நேரத்திலே ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
2.ஏனென்றால் வெளியில் இருந்து தான் தூசிகள் உள்ளே செல்கின்றது.

ராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள். குகைக்குள் அவன் இருக்கின்றான். அம்பை வயது அந்த கல்லைக் போட்டு அவன் வெளியே வராதபடி ராமன் குகையை மூடி விடுகின்றான். ஆனால் “அவனைக் கொல்லவில்லை…!” அவன் வீரியத்தைத் தடைப்படுத்துகின்றான்.

இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்கு தான் இராமாயணத்தில் நம் எண்ணங்கள் கொண்டு உணர்ச்சிகள் வரும் பொழுது
1.பிறர் செய்யும் தீமைகள் நமக்குள்ளே சென்று விட்டால் என்ன செய்யும்…?
2.அதன் உணர்வாக அது வலிமையாக இயக்க ஆரம்பித்து விடும்.
3.நல்ல குணம் நமக்குள் இருக்குமோ…? அது செயலற்றுப் போய் விடுகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுகின்றார் தவறான செயல்களைச் செய்கிறார் என்றால் நாம் நுகர்ந்த உடனே அவர் மீது வெறுப்பு வரும் அந்த உணர்வு இரண்டும் சேர்த்து ஈஸ்வரலோகத்தில் உருவாக்கும்.

அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஜாடையாகப் பேச வைக்கும். யோக்கியன் மாதிரி எதை எதையோ பேசுகிறான் என்று சொல்லும்படி வரும் இவன் எல்லாம் யோக்கியனா…? என்று நம்மைப் பேச வைக்கும்.

இந்த உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகி வெறுப்பின் தன்மை உண்டாக்கிவிடும். நம்மை அறியாமலே இந்த வெறுப்பு ஈஸ்வரலோகத்தில் உருவாகி கருவின் தன்மை பெற்று இந்திரலோகமாக நம் உடலுக்குள் பிரம்மலோகமாக அணுத்தன்மை பெற்று விடுகின்றது.

அப்படி ஆகிவிட்டால் அதே உணர்வு கொண்டு அது சாப்பாட்டுக்கு ஏங்கும். அப்பொழுது அதை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா.

அப்பொழுது நம்மை நாம் சிந்திக்க வேண்டும்… நம்மை எது கோபிக்கச் செய்கிறது…? என்று. அவர்கள் செய்த தவறு நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளைத் தான் ஊட்டுகின்றது… சொல்லாக வெளிப்படுகின்றது.

அடுப்பிலே எந்தெந்தக் காய்கறிகளைப் போட்டு வேக வைக்கின்றோமா அந்த மணம் தான் வரும் இந்த மணத்தை நாம் மாற்றி அமைப்பதற்காக வேண்டித் தான் உங்களுக்கு “இந்தத் தியானத்தின் மூலமாகச் சக்தியைக் கொடுப்பது…”

நம்மை அறியாமல் நடக்கும் நிகழ்ச்சிகளில்…
1.தனக்குள் எப்படி எது இயக்குகிறது…? என்று தன்னை அறிதல் வேண்டும்.
2.நாம் ஏன் கோபிக்கின்றோம்…? எதற்காகக் கோபம் வருகின்றது…? என்ற நிலையை அறிய வேண்டும்.

அந்தக் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உங்களிடம் இருந்து ஒரு தவறு வருகிறது என்றால் அதை எப்படி நீக்க வேண்டும் என்ற வகையிலே அன்பு பரிவு அதனுடன் சேர்த்து பண்புடன் அறிவுடன் நாம் வாழப்படும் பொழுது
1.உண்மையின் உணர்வை எண்ணி நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது
2.அதைப் பயன்படுத்தும் நேரம் சரியில்லை என்றால் அது பகைமை உணர்வைத் தான் ஊட்டும். அதிலிருந்து நாம் தப்பிக்க வேண்டும்.

என் குடும்பத்தைப் பற்றிச் சொல்லப்படும் பொழுது சந்தர்ப்பம் அந்தப் பகைமை உணர்வு வரும் பொழுது சாப அலைகள் ஆகி அதன் தொடர்ச்சியில் என் பெரியப்பாவின் குடும்பமே சின்னாபின்னமானது.

அதன் வழி பின் வந்த சந்ததியினர்களும் தவறு செய்யவில்லை ஆனால் அங்கேயும் தீமைகள் விளைந்தது.

இதைப் போன்று ஒரு குறையைக் காணுகிறோம் என்றால் பிறருடைய நிலை தான் நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.

உடனே சிந்தித்துப் பார்த்தோம் என்றால் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று எண்ணிவிட்டால் அவர்கள் செய்யும் தவறு நமக்குள் வராது.

1.அந்த ஆலயத்தில் அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்.
2.அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயத்தில் மனத்தூய்மை ஏற்பட வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

நமக்குள் கோபமோ பழிச் சொல்லோ அப்பொழுது நமக்கு வராது.

ஆனால் அவர் சொல்லும் சொல்லை நாம் சொல்லும் பொழுது இப்படிச் செய்கின்றீர்களே என்று பழிச் சொல்லாக மாறும். பதிலுக்கு நீங்கள் என்ன யோக்கியமாகப் போய்விட்டது…? என்ற நிலை வந்துவிடும்.

இராமன் அம்பை தான் என்றால் கணைகளைத் திரும்பி வாங்கிக் கொள்வான். அப்பொழுது இதில் யார் தவறு செய்தது என்றே முடிவு தெரியாது.

சந்தர்ப்பம் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. இந்த உணர்வு ஊட்டப்படும் பொழுது பழிச் சொல்லாக மாறி நம்மை அதாவது இரண்டு பேருமே யார் தவறு செய்தார்கள்…? என்று இருவருக்குமே தெரியாது.

கோபப்பட்டுச் சண்டை போட்டாலும்.. நான் ஒன்றும் சொல்லவில்லை அவன் தான் செய்தான் என்று
1.இருவருமே ஒருவருக்கொருவரைத் தான் சொல்ல முடியும் தவிர
2.முடிவே காண முடியாது. காண முடியுமா…!

இதிலே நியாயம் பேசுபவரும் “சரி போங்கள்” என்று உண்மை எடுத்துச் சொன்னால் உடனே அவர்கள் மீதும் பகைமை வரும். இரண்டு பேரில் ஒருத்தரிடம் பகைமை வந்து தான் தீரும்.

சமாதானமாகிப் போனால் சரி அவருக்கென்ன அவருக்கு வேண்டியவர் போலிருக்கிறது பேசி விட்டுப் போகிறார் என்று இப்படி
1.ஒரு உணர்வின் தன்மை ஒன்றிலே மாற்றப்படும் பொழுது
2.இப்படி எல்லாம் மாறுபட்ட உணர்வுகள் நல்ல குணங்களைச் சீராக இயக்க விடாதபடி செயல்படுத்துகின்றது.

காரத்தை எதிலே கலந்தாலும் அதனுடைய ருசி கெடத்தான் செய்யும் ஆகவே நாம் வெளிப்படுத்தும் சொல்லின் நிலைகள் பக்குவப்படுத்திடும் நிலையாகி
1.நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் ஞானிகள் உணர்வுகளை எடுத்து மாற்றி அமைத்து
2.அதன் வழியில் தெளிந்து தெரிந்து நாம் செயல்படுதல் வேண்டும்.