செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

செல்வம் நம்மைக் காப்பதில்லை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா…?

 

வேதனை வெறுப்பு என்ற உணர்வுகளை நாம் எண்ணினால் அதற்குத் தக்க உடலுக்குள் அணுக்கள் உருவாகின்றது. மீண்டும் எண்ணும் பொழுது அதனுடைய இனத்தைப் பெருக்குகின்றது.

அது அனைத்தும் பெருகிவிட்டால் நல்ல குணங்களை இழக்கச் செய்கின்றது.
1.வேதனை அதிகமாகும் பொழுது உடல் சுருங்குகின்றது… எண்ணங்களும் சுருங்குகின்றது.
2.இந்த உடலையே மாற்றி அமைக்கும் தன்மையும் இந்த உடலுக்குப் பின் மனிதனல்லாத உடலைத் தான் பெறச் செய்கின்றது.

கோடிச் செல்வம் இருப்பினும் நமக்குள் நாடி வருவது எதுவும் இல்லை. கோடிச் செல்வம் இருப்பினும் அதனால் நாடி வருவது எது…?
1.தீமை என்ற நிலையில் செல்வத்தைக் காத்திடும் அச்சமும் பயமும் வருகின்றது.
3.அதைக் காத்திடும் நினைவு வரப்படும் பொழுது காக்கும் உணர்வே வருகின்றது.
3.அதனால் வேதனை என்ற உணர்வும் தோன்றுகின்றது.
4.வெறுப்பை ஊட்டும் உணர்வுகள் பெருகுகின்றது.
5.நம் உடலுக்குள் அந்தச் செல்வமே நமக்கு எதிரியாகிறது.
6.செல்வம் நம்மைக் காப்பதில்லை. மனித உருவைச் சீர்குலைக்கும் ஆசையை ஊட்டுகின்றது.
7.பிறர் துன்பப்படுவதைக் கண்டு ரசிக்கச் செய்கின்றது… தனக்கு எதிரி என்ற நிலைகள் பணம் கொண்டு கொலை செய்யச் சொல்கிறது.

துன்பப்படும் பொழுது அவன் சாபமிடுகின்றான். எனக்கு இவ்வாறு செய்கின்றான் அவன் உருப்படுவானா…? என்ற சாப அலைகள் பாய்ந்தால் இந்தச் செல்வத்தினால் சாபத்தைத் தேடுகின்றான்.

அந்தச் சாபத்தினால் இவன் செல்வத்தைக் காக்கும் நிலையே அற்று விடுகின்றது.. இதைப் போன்ற கொடுமைகள் மனிதனை மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.தீமைகளை அகற்றும் உணர்வு பெற்றும் தீமைகளை வளர்த்திடும் உணர்வுகளே நமக்குள் வளர்ந்து
2.நம்மை அறியாதபடி அந்த இழி நிலை என்ற உணர்வுகளுக்கே செல்கின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நல்ல நிலை பெற வேண்டும். அதற்காகத்தான் பிறருடைய உணர்வுகள் தனக்குள் வளராது தடுக்க துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அருள் செல்வமாக அழியாச் செல்வமாகச் சேர்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வது. நமக்குள் அறியாத புகுந்த தீமைகளை அது மாற்றி அமைக்கும்.

மனிதருக்குள் மனிதர் ஒன்று சேர்ந்த உணர்வுகள் ஒன்றாக இணைத்து கூட்டுத் தியான்ங்களின் மூலம்
1.உணர்வினை ஒலியாகப் பாய்ச்சப்படும் பொழுது செவி வழி உணர்வுகள் உடலுக்குள் செல்கின்றது.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் நிலை கொண்டு கண் வழி நுகர்கின்றது.
3.நமது ஆன்மாவாக மாற்றுகின்றது அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது.
4.உணர்வின் தன்மை உடலுக்குள் அனைவரது ஆதரவும் நமக்குக் கிடைக்கின்றது
5.அறியாத வந்த பகைமைகளை மாற்றிடவும் முடிகின்றது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply