குறுகிய கால ஆசைக்காக… “தன் ஆத்மாவையே அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்”

குறுகிய கால ஆசைக்காக… “தன் ஆத்மாவையே அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்”

 

நம் பாட நிலையில் உடலில்லாத ஆத்மாவுடன் கூடிய ஆவிகளின் நற்செயல்கள் தீமைகள் இவற்றையே பல நிலைகளில் சொல்லி வருகின்றேன்.

1.வாழ்பவரின் நிலையைக் காட்டிலும்… அவர்களின் எண்ண சக்தியை
2.இவ்வாவிகளின் செயல்தான் இவ்வுலக நிலையையே நடத்திச் செல்லும் தன்மை கொண்டதாக உள்ளது.

இன்று புனித கங்கை என்ற நிலையில் காசிக்குச் சென்று நம் பாவங்களைக் கழிக்கப் பல மைல்களுக்கப்பால் இருந்தும் அப்புண்ணிய நதியில் நீராடி வந்தால் பாவங்கள் குறையும் என்ற எண்ணத்தில் பக்தி கொண்டு பல கஷ்டங்களுடன் பாவத்தைப் போக்க காசிக்குச் செல்கிறார்கள். அதே போல் இராமேஸ்வரம் என்று புண்ணிய ஸ்தலத்தையும் நாடி மக்கள் செல்கிறார்கள்.

அக்காசி கோவிலில் உள்ள அத் தபசு ரிஷியான காசி விஸ்வநாதரின் அருளைப் பெற்றிட அப்புண்ணிய ஸ்தலத்திற்குச் செல்கின்றார்கள்.

ஆனால் அங்கும் நடக்கும் நிலை என்ன…?

அப்புண்ணிய ஸ்தலத்தில் வாழும் மக்களின் எண்ணமெல்லாம் புண்ணியாத்மாக்களாக புண்ணிய பூமியாக்கிடவா செயல்கள் நடக்கின்றன…?

பாவத்தைக் கழிக்கும் இடமாக எண்ணிச் சென்று புண்ணியத்தை வாங்கியா வருகின்றார்கள்…? கொலையும் கொள்ளையும் மலிந்து அப்புனித கங்கையில் புனித நீரைக் குருதி நீராக்கிக் கலக்க விட்டுள்ளார்கள்.

பல மைல்களுக்கப்பால் இறந்தோரை எல்லாம் அவ்வுடல்களை இக்கங்கையில் செலுத்தினால் இறந்தவருக்குப் புண்ணியம் என்ற நிலையில் இந்நிலையில் கொண்டு வந்து விடுகின்றார்கள்.

பாவத்தின் பிறப்பிடமாக இன்று உள்ளது புனித கங்கையும் காசியின் திருத்தலமும். அங்கு செயற்கொண்டு இருக்கும் ஆண்டவனின் அஜ்ஜோதி மகான் இன்றும் அங்கு தான் உள்ளார்.

அனைத்துப் பாவங்களையும் அவரும் பார்த்துக் கொண்டே தான் உள்ளார். எண்ணத்திற்குகந்த அருளைத்தான் அவர் அளிக்கின்றார். பாவத்திற்கு அவர் என்ன செய்ய முடியும்…?

1.பாவத்தின் எண்ணம் கொண்டவன் அவன் செய்யும் பாவங்களின் அணுவையே மீண்டும் மீண்டும் தன்னுள் ஏற்றிக்கொண்டு
2.எப்பாவத்திற்கும் துணிந்தவனாகப் பல பாவங்களுக்கு உகந்தவனாகத் தன்னை ஏற்படுத்திக் கொண்டு
3.அப்புண்ணியக் கரையிலேயே பலர் இன்று வாழ்கிறார்கள்.

ஏன் அவ்வாண்டவன் இவர்களுக்கு நல்வழி புகட்டக் கூடாதா…? என்று கேட்பவர் பலர். ஆண்டவன் நிலையையும் ஆவியின் நிலையையும்தான் நாம் பிரித்துப் பிரித்துப் பல நிலைகளில் சொல்லியுள்ளோம்.

1.எண்ணத்தின் பேய்க்கு அடிமைப்பட்டவனை எவ்வாண்டவனும் வந்து நல்வழியில் செலுத்திட முடியாது
2.அவன் உடலைவிட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
3.அவ்வாத்மாவின் நிலை அடையும் அதிகாட்டத்திலிருந்துதான் அவன் உணர்ந்திட முடியும்.

அந்நிலையில் வாழ்ந்தவனுக்கு உணரும் தன்மையும் உடலைவிட்டு ஆத்மா பிரிந்த பிறகும் அறிந்திட முடியாது. நரகலோகம் என்னும் அதி அவஸ்தை கொண்ட அழுகும் ஆவியாகத்தான் மிகவும் அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

அவ்வாவி பிறப்பெடுத்தாலும் நாயாகவும் அதற்கும் ஈன நிலையில் உள்ள மற்ற ஜெந்துக்களின் நிலைக்குத்தான் வந்திட முடியும்.

வாழும் காலத்தில் வாழ்க்கையின் சுகம் என்ற நிலையில் பல சுமைகளை ஏற்றிக் கொண்டு வஞ்சகம் குரோதம் ஆத்திரம் வெறி காமம் இப்படி பல வெறி கொண்ட நிலையை வாழ்க்கையின் சுகமாக எண்ணி வாழ்ந்து என்ன பயன்…?

வாழும் காலம் ஒரு மனிதனுக்கு 60, 70 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதில்லை. இக் குறுகிய காலத்தின் ஆசைக்குத் தன் ஆத்மாவை அடிபணிய வைத்து வாழ்கின்றான் இன்றைய மனிதன்.

அழிவில்லா இவ்வாத்மா மனித வாழ்க்கையில் வாழும் காலம் மிகவும் குறுகிய காலம். என்றுமே அழியாத ஆத்மாவை இம்மனித உடலில் உள்ள பொழுதினில் மட்டும் தான் கரை சேர்த்து என்றும் அல்லல் இல்லா வாழ்க்கை பெறும் சூட்சுமம் கொண்ட வாழ்க்கைக்குச் செல்லும் பொக்கிஷம் இம்மனித வாழ்க்கையில்தான் உண்டு.

1.அறியாமல் செய்திடும் பிழைதான் இன்று வாழும் வாழ்க்கை நிலை
2.கரை சேர்ந்திடும் நிலைக்கு நம்மைப் பக்குவப்படுத்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் பல மனிதர்களுக்கு இல்லை.

அன்று நம் முன்னோர் புண்ணிய ஸ்தலமாக்கி ஆண்டவன் சக்தி பெற்றுப் பல கோவில்களை அமைத்து நமக்கு வழிகாட்டிட ஏற்படுத்திய நிலையை எல்லாம் இன்று நாம் நம் வேடிக்கைக்காகவும் உல்லாசப் பயணங்களுக்காகவும் பொழுது போக்கும் நிலைக்காகவும் நமக்கு உகந்த ஆசைப்படி எல்லாம் ஏற்படுத்தி விட்டோம்.

அதனால் இன்று அந்தப் புண்ணிய ஸ்தலங்களும் பல புண்ணிய நதிகளும்
1.ஆவிகளின் அட்டுழியங்கள் நடக்கும் நிலையாக மாறி
2.இன்று புண்ணியம் வாங்கச் செல்பவர்களின் உடல்களில் எல்லாம் பல உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
3.அடங்கா ஆசையுடன் உள்ள ஆவிகள்தான் உடல்களில் ஏறிக்கொள்கின்றன.
4.தன் ஆசைக்குகந்த செயல்களையும் நடத்துகின்றன.

தன் செயலின் நிலை ஈடுபடுத்தாவிட்டாலும் அவ்வுடலில் இருந்து வெளிவர முடியாத நிலையில் பல உடல்களை இவ்வாவிகளினால் அவ்வாவிகளின் உந்தலுக்கு உட்படுத்திவிட்டன.

1.நாம் செல்வது புண்ணியம் வாங்க…
2.அப்புண்ணிய ஸ்தலத்தில் உள்ள இவ்வெண்ண மூச்சுக்கள் எல்லாம் நாம் சென்றதும் நம் எண்ணத்தில் கலந்து (நம் சுவாசத்தில்)
3.நம்மையே நம் செயலில் செயல்படாத நிலை ஏற்டுத்தி விடுகின்றன.

புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று “பாவ மூட்டையைத்தான் சுமந்து வருகின்றோம்…!” இன்றைய நிலை இது தான்…!

துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்

துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்

 

மனித வாழ்க்கையில் பிறர் செய்யும் தீமைகளை நாம் பார்க்க நேர்கிறது. அவருடைய குறைகளை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறை தான் நம்மை இயக்குகின்றது.
1.பிறருடைய தவறு தான் நம்மை இயக்குகின்றது என்பதும் அப்போது நமக்குத் தெரிகின்றது
2.அதாவது அவர் மீது நாம் கொள்ளும் கோபமோ ஆத்திரமோ அது வெளியில் இருந்து வந்து தான் நம்மை இயக்குகிறது.

அத்தகைய நேரத்தில் எல்லாம் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணி அதைத் தடுக்க வேண்டும்.

பின் அந்தக் குறை எங்கிருந்து யாரால் வந்ததோ அவர்களை எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும்; அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும்; பிறருக்கு நன்மை செய்யும் பக்குவமும் அந்த நல்ல உணர்வுகளும் வளர வேண்டும்; நல்லது செய்யும் அந்த உணர்வுகள் வளர வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்து “நமக்குள் அதை விளைய வைக்க வேண்டும்…”

இத்தகைய உணர்வுகளுடன் கலந்து நம் சொல் மூச்சுஅலைகள் வெளிப்படும் போது அவரையும் அது மாற்றுகிறது. இப்படி ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால்
1.பிறருடைய தீமைகள் நம் வீட்டுக்குள் வருவதில்லை
2.நம் தெருவிற்குள் தீமை செய்யும் உணர்வலைகள் படர்வதில்லை
3.பகைமைகளை மாற்றி நல்ல உணர்வாக இங்கே படரச் செய்கின்றது… ஊருக்குள் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

ஆகவே நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் கிளைகளாக வளர்வோம். அனைவரையும் பொருளறியச் செய்வோம். இருளைப் போக்கும் அருள் சக்தியைப் பெறுவோம்.

கணவன் மனைவி குழந்தைகள் குடும்பம் என்று… அருள் வழியில் ஒன்றுபட்டு வாழ்ந்து மக்களுக்கு எடுத்துக்காட்டாக நாம் வளருவோம் குறைகளை எண்ணாதபடி குடும்பத்தை உயர்த்திடும் நிலையாக நாம் செயல்படுவோம்.

யாம் உங்களுக்குக் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன்னாடி நின்று… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இதை எடுத்து வளர்த்துக் கொண்டே வாருங்கள்.

அதற்குத்தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்
1.அது உங்களைத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து கொண்டே வரும்
2.ஆறாவது அறிவை “ஏழாவது நிலை ஒளியாக…” உருவாக்கிக் கொண்டே வரும்.

அதை வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம். துருவ நட்சத்திரத்தின் சக்தியை வலுவாக எடுப்பதற்கு “உங்களுக்கு ஏதாவது வேண்டும்” என்பதற்குத் தான் அருள் உணர்வைப் பதிவு செய்து அதைக் கொடுத்தது.

அருள் செல்வம் உங்களுக்குள் வளரும்… அருள் ஞானம் பெருகும்; இருளை அகற்றும்; மெய்ப்பொருளை காணச் செய்யும். அனைவருக்கும் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வாக அமையும்.
1.நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்
2.அந்த ஒளியின் உணர்வாக மாற வேண்டும்
3.நம் பார்வையால் பேச்சால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகல வேண்டும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… எல்லாவற்றையும் உருவாக்கிய அவருடைய அருளால் இதை நான் (ஞானகுரு) அறிந்து கொண்டேன்.

குருதேவரை நினைத்து துருவ நட்சத்திரத்தை நினைத்து அந்த அடிப்படையில் இந்த வாழ்க்கையை நாம் கொண்டு சென்றால் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழ்கின்றோம். இருளை அகற்றும் சக்தி பெறுகின்றோம்.

நாம் இருக்கும் இடங்களில் நல்ல மழை பெய்யச் செய்ய முடியும். விஷத்தன்மைகளால் உருவாகும் நோய்க் கிருமிகளால் புதிய நோய்கள் நம்மைத் தாக்காது காத்துக் கொள்ள முடியும்.

எல்லா உயிரும் கடவுள்;
எல்லா உடலும் கோவில்
எல்லா உடலும் சிவம்;
எல்லோருடைய கண்களும் கண்ணன்;
எண்ணும் எண்ணங்கள் இராமன்;
கல்யாணராமா – மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தும் உணர்வுகளாக நமக்குள் வளர்ப்போம். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற இந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்.

குரு காட்டிய வழியில் நாம் இதைச் செயல்படுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கி
2.எல்லாமே ஒளி என்ற உணர்வுடன் ஒன்றி வாழ்வோம்… மற்றவர்களையும் அதிலே ஒன்றச் செய்வோம்.
3.துருவ நட்சத்திரமாக நாம் ஆவோம்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் இணைந்து ஒன்றுடன் ஒன்று துணையாக வாழ்ந்து வளர்வது போன்று அந்த அருள் வழியை நாமும் பெற்று பேரானந்த நிலை பெறுவோம்.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு… அவற்றின் நிலையை அறிந்து… அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு… அவற்றின் நிலையை அறிந்து… அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்

 

அச்சு ஒன்று பதித்து உருவம் ஒன்று ஆவதில்லை. எந்த விதையைப் போடுகின்றோமோ அந்தச் செடிதான் வளரும்.

நம் எண்ணத்தை எந்த நிலையில் செயல்படுத்துகின்றோமோ அந்த நிலையின் தொடரின் வழி நிலையின் வாழ்க்கைதான் வந்தமையும் நமக்கெல்லாம்.
1.எண்ணப்படிதான் வாழ்க்கை…
2.உன் எண்ணம் போல் வாழ்ந்திடு…! என்ற பெரியோரின் வாழ்த்தைத்தான் நாம் பெறுகின்றோம்.

ஒரே தாயின் வயிற்றில் பிறக்கும் பல குழந்தைகளின் குண நிலை ஒன்று போல் இருப்பதில்லை. குண நிலை மட்டுமல்ல மன நிலையும் ஒவ்வோர் உடலுக்கும் ஒவ்வொரு வித மணம் உண்டு.

இப்பூமியில் உதித்த ஜீவன் பெற்ற அனைத்திற்குமே ஒவ்வொரு மணம் உண்டு. மணத்தைப் போலவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சக்தி நிலை உண்டு.

ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் அவரவர்கள் எந்நிலை கொண்ட குண நிலையையும் சக்தி நிலையையும் வளர்த்துக் கொள்கின்றார்களோ அந்நிலையின் வளர்ச்சிக்கு அந்நிலைக்கு ஒத்த குண நிலைகளில் உள்ள ஆவி உலகிலுள்ள ஆத்மாக்களின் தொடர்பு நிலையும் இவர்களுக்கு வந்தடைகின்றது.

இன்று இந்நிலத்தில் நீர் எங்குள்ளது..? எந்நிலையில் ஊற்று நிலை உண்டு…? என்பதனையறிய சிலரின் உடல் நிலையிலேயே அச்சக்தி நிலையுண்டு.

அவர் உடலிலேயே அச்சக்தி நிலையும் அந்நிலைக்கு ஒத்த அவர் நிலையில் உள்ள மற்ற ஆத்மாவின் தொடர்பும் அவர் உடலில் இருந்தால் தான் நீர் உள்ள நிலைகளைக் கண்டறிந்திட முடிந்திடும்.

நம் முன்னோரின் வழியில் வந்தது தான் இந்நிலையின் வழி. இவை போலவே இப்பூமியில் உள்ள உலோக நிலையையும் கண்டறியலாம்.

இவ்வுடலில் இப்பூமி எச்சக்தியெல்லாம் எடுத்து வெளிப்படுத்துகின்றதோ அந்நிலைக்குகந்த சக்தி நம் உடல்களிலும் உள்ளது. இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் கலந்துள்ளன.

எப்படி இப்பூமியில் பல நிலை கொண்ட உலோகங்கள் வளர்கின்றனவோ அந்நிலைபோல் ஒவ்வொரு ஜீவ உடலுக்கும் பல நிலைகள் கொண்ட சக்தி நிலைகள் உண்டு.

நமக்குகந்த சக்தி நிலையை வளர விட்டு… அவற்றின் நிலையை அறிந்து… அதன் வழிக்குச் செல்லும் பக்குவ நிலை புரியாமல் வாழ்கின்றோம்.

இன்று பல இடங்களில் மனோவசிய நிலை (மெஸ்மரிஸம்) என்னும் நிலையைச் சிலர் அறிந்து ஒருவரது நிலை அனைத்தையும் கட்டுப்படுத்தி இவர்கள் எச்சக்தியைப் பாய்ச்சுகின்றார்களோ அச்சக்தியின் நிலை கொண்டெல்லாம் மனோவசியத்திற்கு உட்பட்டவர் நடப்பதாகப் பார்த்தும் கேட்டும் இருப்பீர்.

இவற்றின் நிலையென்ன…?

1.அறிந்து… கல்வி அறிவில் வந்த நிலை என்பர் பலரும். கல்வி அறிவில் மட்டும் வந்த நிலையல்ல அந்நிலை.
2.அவர்கள் நிலையும் இன்று பல நிலை கொண்ட சாமியார்கள் மந்திரம் செய்து விபூதி புஷ்பம் என்ற பல பொருட்களை வரவழைக்கச் செய்யும் நிலைக்கும்
3.இம்மனோவசியம் செய்யும் நிலைக்கும் ஒத்த நிலைதான்.

ஆவியின் தொடர்பு கொண்டு மனோவசியத்தால் யாரை அந்நிலைக்கு வசியப்படுத்துகிறார்களோ அவர்களின் எண்ணத்துடன் இவ்வாவியின் எண்ண அலையும் சப்த அலையும் கலக்கவிட்டு வசியப்பட்டவரின் நிலையை அடக்கி இவர்கள் ஏவிய ஆவியின் நிலைப்படியெல்லாம் அவ்வசியப்பட்டவர்கள் நடக்கும் நிலைதான் இம்மனோவசிய நிலை.

யார் இம்மனோவசியம் செய்கிறாரோ அவரது சொல்லும் அவரது எண்ணமும் இவ்வசியப்பட்டவரின் நினைவில் கலந்துள்ள ஆவியின் நிலைக்கும் தொடர்பு கொண்டு இவ்வசியப்படுத்தியவர் சொற்படியெல்லாம் அவ்வாவி அவ்வசியப்பட்டவரின் உடலில் இருந்து செயல்படுத்துகிறது.

1.அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழை இது
2.வசியப்பட்டவரின் சக்தியும் பாதிக்கப்படுகிறது
3.வசியம் செய்தவரின் சக்தியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

இதன் நிலையில் அடையும் நல் நிலை என்ன..? கால நிலையும் விரயமாகிறது.

ஆண்டவன் அருளிய சக்திதனை அன்பென்னும் பொக்கிஷமாக்கி அச்சக்தியான ஜெபத்தைக் கொண்டு பல உன்னத அறிவுச் செல்வத்தை நாம் பெற்று இவ்வுலகினைச் செழிப்பான உலகமாக்கி செழித்து வாழ்ந்திடும் இயற்கையின் செழிப்பிற்கு நம் சக்திதனை ஒன்றச் செய்தல் வேண்டும்.

அப்படிச் செய்தால் இவ்வுலகமே செழித்து…
1.இன்று இக்காற்றே கடும் விஷமாகச் சுற்றியுள்ள நிலையை மாற்றி
2.ஆனந்தமான மண நிலையைப் பரவச் செய்யத் தாவரங்களின் நிலையைத் துரிதப்படுத்தி தாவரங்களை வளரச் செய்து
3.நற்கனிகளையும் நல் தானியங்களையும் நாம் பெற்றே
4.நற்சுவையுடன் நாம் உண்டே நல் மணத்துடன் நாம் வாழும் நிலை ஏற்படுத்திட முடியும்.

அதற்கு நாமெல்லாம் ஒன்றுபட்டு நம் சக்தியின் ஜெபத்தால் அந்த இயற்கைக்கே அடிபணிவோம்.

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

உலகெங்கிலும் உருவாகிக் கொண்டிருக்கும் சுழிக் காற்றுகள்

 

முந்தி எல்லாம் தியானத்தில் சூரியனைப் பார்க்கும்படி சொல்லி இருந்தேன். ஆனால் இப்பொழுது சூரியனுக்குள் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவி விட்டது. அதைப் பார்த்தோம் என்றால் நம் கண்களுக்கும் மனதுக்கும் விஷத் தன்மைகள் தான் பரவும்…!

விஷத்தன்மையான நிலைகள் அதிலிருந்து நம் பூமிக்குள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது. அதனால் சிந்தனையற்ற நிலைகளும் புதிய நோய்களும்… ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் உணர்வுகளும் வளர்ந்து கொண்டுள்ளது.

1.மற்றவரைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வு தான் மனிதர்களுக்கு வருகின்றதே தவிர காக்க வேண்டும்… என்ற உணர்வு உலகெங்கிலும் இல்லை
2.எந்தக் கோவிலுக்கு யார் சென்றாலும் இவன் உருப்படுவானா…? என்று சாபம் விடும் நிலை தான் வளர்ந்து கொண்டிருக்கின்றது

எந்த மதமானாலும் அவர்கள் ஆலயங்களுக்குள் சென்று தெய்வத்தை வணங்கினாலும் தன் குடும்பங்களைப் பற்றிய சிந்தனைகள் வரப்படும் பொழுது ஒருவருக்கு ஒருவர் சாபம் விட்டு… அவர் கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வுகளைத் தான் வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.

ஆனால் வெளியிலே சொல்லும் பொழுது… “நான் எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன்… எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் அவர்கள் உருப்படுவார்களா…?” என்று குறைகளை வளர்த்துக் கொள்ளும் நிலை தான் வருகிறது.

அப்படி எல்லாம் இல்லாதபடி
1.எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் பார்வையில் தீமைகள் அகல வேண்டும்
3.எங்கள் குழந்தைகள் அருள் ஞானம் பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானிகளாக வளர வேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர்கள் எல்லோரும் நலம் பெற வேண்டும்
5.நாங்கள் பார்க்கும் அனைவருக்கும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

காரணம் விஞ்ஞான அறிவில் விஷத்தன்மைகள் அதிகமாகப் பரவிக் கொண்டுள்ளது. பல வகையான வெடி குண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ளார்கள்.

கடலிலிருந்து யுரேனியத்தைப் பிரித்து எடுத்து அணுவைப் பிளந்து மற்றொன்றுடன் அதாவது நியூட்ரான் புரோட்டான் என்ற நிலைகள் சில இதுகளைக் கலந்து வைத்துள்ளார்கள்.

சாதாரணமாக… நட்சத்திரத்தின் துகள்கள் வெளி வரப்படும் பொழுது சூரியன் இழுத்து அதைக் கவர்ந்து விட்டால் “நியூட்ரான்…” அது அழுத்தமாகச் செல்லும் பொழுது இந்த விஷத்தன்மையைக் கண்டபின் மற்ற அனைத்துமே பயந்து ஓடுகின்றது.
1.அப்போது ஒன்றோடு ஒன்று மோதி பல கலவைகளாக மாறிச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.
2.அதை எடுத்து இராக்கெட்டில் இணைத்து விண்ணிலே செலுத்துகின்றான் விஞ்ஞானி.
3.அதை வைத்து நியுட்ரான் குண்டு என்று தயார் செய்துள்ளார்கள்.

அந்த நியூட்ரான் குண்டுகளை வெடிக்கச் செய்தால்… மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் சிந்தனை இழந்து பைத்தியம் பிடித்த மாதிரி மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.

கட்டடங்கள் மற்றும் எல்லாம் அப்படியே இருக்கும். ஆனால் இங்கு மனிதர்கள் வாழ முடியாது. அத்தகைய புத்தி பேதமாக்கும் உணர்வலைகள் காற்றிலே பரவுகின்றது.

நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் கதிரியக்கச் சக்திகள் தான் பூமிக்குள் உருவான கல் மண் உலோகங்கள் அனைத்திற்குமே மூல காரணம். அனைத்திலுமே அந்தச் சக்தி உண்டு.

அதே சமயத்தில் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள்… அணு மின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் போது அந்தக் கதிரியக்கங்களின் கசிவுகள் அனைத்தையுமே சூரியன் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ளது.

இது காற்றலையில் பரவிப் போகும் போது ஆரம்ப நிலையில் “நியூட்ரான்” என்று அழுத்தம் ஆன பின் தன் அருகிலிருப்பதை எப்படி அது விரட்டிச் சென்றதோ அதே மாதிரி
1.அதுவும் இதுவும் (இயற்கையில் உருவானதும் செயற்கையின் கசிவுகளும்) மோதிய பின் பெரும் சுழிக்காற்றாக மாறுகின்றது
2.கல்லுக்குள் மண்ணுக்குள் கட்டடத்திற்குள் இது பாய்ந்து அதனுடைய அழுத்தம் வீரியமடைந்து
3.பெரிய காற்றாடி போல போகும் பாதையில் உள்ள அனைத்தையும் பிய்த்து எறிந்து கொண்டு செல்கிறது.

அமெரிக்காவில் இது அதிகமாக நடக்கிறது… பத்திரிகையில் நீங்கள் படித்திருப்பீர்கள் மற்ற நாடுகளிலும் இப்பொழுது சிறுகச் சிறுக வந்து கொண்டிருக்கின்றது.

எங்கெங்கே செயற்கையில் அணுக்கதிரியக்கங்களை உற்பத்தி செய்து பரவச் செய்துள்ளார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய பெரிய கட்டிடங்களும் சுக்கு நூறாகித் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கின்றது.

அதே சமயத்தில் அத்தகைய சுழிக் காற்று
1.கடல் பக்கம் செல்லும் போது அங்கிருக்கும் நீரைக் கவர்ந்து பெரும் பெரும் மேகங்களாகக் குவித்து
2.நகரத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்து பெரும் மழை நீராக… ஒரு வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை
3.சில மணி நேரங்களிலேயே கொட்டு கொட்டு என்று கொட்டி ஊர்களையே நாசம் பண்ணுகின்றது.

எதிர்பாராதபடி அழிக்கக்கூடிய சக்தியாக உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. நீங்கள் டிவியில் பத்திரிகைகளும் பார்த்திருப்பீர்கள்.

இன்று…
எந்த நிமிடம்…
எந்த இடத்தில்…
என்ன நடக்கும்…? என்று தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

இது போன்ற சூழ்நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றியே வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி இருந்தால்
1.நாம் இருக்கும் பக்கம் அத்தகைய சுழிக் காற்றுகள் வராது தடுக்கும்
2.அல்லது நம்மை ஒதுக்குப் புறமான இடத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.

நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது

நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடக் கூடாது

நமக்கு வழி காட்டிய நம் முன்னோரும்… நம்மில் கலந்து வாழ்ந்த சப்தரிஷி நிலை பெற்றவர்கள் முதற்கொண்டு இயற்கையின் நிலையைத்தான் போற்றி வழி நடந்து வந்தார்கள்.

இன்றும் அவர்களின் செயல் பல ரூபத்தில் செயல் கொண்டு வழி நடத்தியும் வருகின்றார்கள். எந்நிலையில்;..?

இன்று நீங்கள் பல இடங்களில் அகஸ்தியர் நாடி போகர் நாடி பிருகு மகரிஷியின் நாடி இன்னும் இப்படிப் பல நிலை கொண்ட நாடிகள் சில இடங்களில் உள்ளதாக அந்நிலைக்குச் சென்று அதை ஒதுபவர்களின் வாயிலாக அறிந்து வருகிறீர்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய அந்நாடிக்கும் இன்றைய நிலைக்கும் பெயர் நாமம் முதற்கொண்டு ஒத்து வரும் தன்மை என்ன…?

அந்நாடியை ஓதுபவரின் ஜெபமும் எண்ணமும்… எப்பெரியோரின் நாடியைத் தெய்வ நிலை கொண்டு ஜெபம் கொண்டு அவர் ஏற்கும் பக்தி நெறியின் நிலைக்கு… அந்நாடியை எழுதிய பெரியோரை… அதை வணங்கி ஓதுபவரின் சப்த அலையுடன் வந்து கலந்து… ஓதச் செய்வதுதான் அந்நாடியில் உள்ள நிலை.

இன்று படிப்பவரின் அறிவுக்கு எட்டாத இன்றைய கல்வித் திறனும் அதை எழுதி வைத்த காலத்தின் கல்வித் திறனும் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும் நிலை கொண்டு இன்று ஓதுபவருக்கு அச்சொல்லின் நயமும் அழகும் அவரால் ஈர்த்துப் படித்திடவும் முடியாது.

சில குறிப்புகள் மட்டும் இவரால் அறிந்திட முடியும். அந்நிலையில் வந்து சொல்வதெல்லாம் அந்நாடிகளை எழுதியவர்களே தான் வந்து உணர்த்துகிறார்கள்.

காமாட்சி நாடி மீனாட்சி நாடி என்றெல்லாம் சொல்லும் நிலையிலும் அந்நிலையிலுள்ள சித்து நிலை கொண்ட காமாட்சி அம்மனும் மீனாட்சி அம்மனுமே வந்து இவர்கள் நிலையில் உணர்த்துவதுதான்.

சிலருக்கு நாடியில் வந்ததை அதன் சொல்லிய வாக்குப்படி எந்நிலையில் நம்புகின்றார்களோ அந்நிலையின் பரிபூரண அருளாசி பெறுகின்றார்கள்.

நம்பிக்கையில் நடப்பதுதான் இவ்வுலகமே…!

நாடியில் கேட்டதையே மனச் சஞ்சலத்துடன் வளர விடுபவனுக்கு அனைத்து நிலைகளுமே தவறாகத்தான் நடந்திடும்.

ஆண்டவனே… ஆண்டவனே…! என்பது நாம் ஆண்டவனாக வணங்கும் பெரியோரின் நிலையையே சஞ்சலப்படுத்தும் நிலைதான் இவையெல்லாம்.

நம் பாட நிலையில் தான் ஆண்டவன் என்றால் யார்…? என்பதனைப் பல நிலைதனில் விளக்கியுள்ளோம். ஞான வழியின் பக்குவ நிலைக்கு நாம் பெறும் சொத்து தான் ஆண்டவனின் அருள் சொத்து.

ஆவி உலகின் சூழ்ச்சியினால் இவ்வுலக நிலையே தத்தளித்த நிலையில் உள்ளது. ஆவி உலகில் அல்லல்பட்டு…
1.பல செயல்களை அதி கஷ்டத்துடன் செயலாற்றும் பல நிலை கொண்ட ஆவிகளுடன் நாம் கலந்து வாழ்வதினால்
2.நம்மில் தியான நிலை கொண்ட செயலை வளரவிடுவது ஒன்றுதான்
3.இன்று இவ்வுலகினில் உள்ள நிலையிலிருந்து நாம் தப்பும் வழி.

ஏனென்றால்
1.இப்படர்ந்த உலகினில் நம் எண்ணத்தில் சிறு சலிப்புக்கும் கோபதாப குரோதத்திற்கும் இடம் அளித்திட்டாலும்
2.இவ்வாவியின் நிலையிலிருந்து தப்புவது கடினம்.

நம்முள் உள்ள இறை சக்தியை உணர்ந்தே அவ் ஈஸ்வர ஜெபத்தை எந்நிலையிலும் நம் நினைவில் கொண்டிடல் வேண்டும்.

1.நம்முள் அவ் ஈஸ்வரனே உள்ளான் என்ற சத்தியத்தை மறந்திடாமல்
2.ஒவ்வொருவரும் இதன் வழி பெற்று வாழ்ந்தால்தான்
3.இவ்வாவி உலகிலுள்ள ஜீவ ஆத்மாக்கள் அனைத்தின் செயலிலிருந்தும் நாம் தப்ப முடியும்.

யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

யாம் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தவில்லை என்றால் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயனில்லை

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் “எதிரியிடமிருந்து தப்ப வேண்டும்…” என்ற நிலையில் தன்னைக் காட்டிலும் வலுவான உணர்வுகளை நுகர்ந்து நுகர்ந்து மான் புலியைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; எலி பாம்பைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பாம்பு கருடனைப் பார்த்து அதனின் வலுவை நுகர்ந்து; பரிணாம வளர்ச்சியாக அணுக்களில் மாற்றமாகி இப்படித்தான் நாம் மனிதனாக இன்று வந்திருக்கின்றோம்.

ஆனால் மனிதனாக வந்த பின் இந்த வாழ்க்கையில் தீமையான செயல்களைப் பார்த்த பின் அதை நுகர்ந்து உடலுக்குள் தீமையின் அணுக்களாக உருவாகாதபடி தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி அதைப் பெறச் செய்து கொண்டே இருக்கின்றேன் (ஞானகுரு).

அவ்வாறு
1.அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி… துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைக் கொடுத்தும்
2.அதை நீங்கள் சீராகப் பயன்படுத்தவில்லை என்றால் இந்தத் திருச்சபையில் அங்கத்தினராகச் சேர்ந்தும் பயன் இல்லை

ஒவ்வொரு நொடியிலும் யாம் கொடுக்கும் சக்தியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். எத்தகைய நிலைகள் வந்தாலும் புருவ மத்தியிலே “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “முதலில் அங்கே நிலை நிறுத்தப் பழக வேண்டும்…”

1.எப்படி… எவ்வளவு பெரிய நிலை இருந்தாலும்… அல்லது வந்தாலும் சரி…
2.அது வந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணிவிட்டு
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஒரு நிமிடமாவது எண்ணி அதை அங்கே தடைபடுத்திப் பழகுதல் வேண்டும்

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் தாராளமாக வரும். இது போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து… அடுத்து எந்த நல்லது நடக்க வேண்டுமோ அதை எண்ண வேண்டும்.

கோபப்பட்டவரைப் பார்த்திருந்தோம் என்றால் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் ஆற்றல் பெற வேண்டும் என்று இந்த உணர்வைச் சேர்க்க வேண்டும்.

ஆக… அவன் வெளிப்படுத்திய கோப உணர்வுடன் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இணைத்து நல்ல உணர்வாக மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்து அது இரத்த நாளங்களில் பரவப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இது நல்ல உணர்ச்சிகளை ஊட்டி நல்ல அணுக்களாக மாற்ற உதவும்.

இதைப் போன்ற பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தாக வேண்டும்.

1.நம் குடும்பத்திலும் எந்தக் குறை வந்தாலும்… குறையாக நாம் எடுத்துக் கொள்ளாதபடி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலில் இதை எடுத்து மாற்றிக் கொண்டே வர வேண்டும்.

குடும்பத்தில் கணவன் மனைவியோ… குழந்தைகளோ… நம்முடன் பிறந்தவர்களோ… அல்லது யாராக இருந்தாலும் குறையாக எண்ணாதபடி… அந்த உயர்ந்த சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் எல்லோரும் போற்றும் நிலைக்கு அவர்கள் வளர வேண்டும் என்று இப்படி நாம் எடுத்துக் கொண்டே வந்தால் இந்த உணர்வு எல்லோருக்கும் கிடைக்கின்றது.

இப்படி நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு குணத்திலும் ஒவ்வொரு உணர்விலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் இந்த அருள் வழி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களிலே சேர்க்கப்படுகின்றது.

இப்படிப் பெருக்கினால் இது தனுசுக்கோடி கடைசி நிலைகள் யாருடைய பகைமையும் இல்லாதபடி அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்து “எல்லோருக்கும் நல்லதாக வேண்டும்” என்ற இந்த மூச்சுகளை நாம் வெளியிடுகின்றோம்.

யாருடைய தீமையும் நமக்குள் வராதபடி தடுத்து நம்மை நாம் காத்துக் கொள்கின்றோம். ஆகவே திருச்சபை அங்கத்தினர்கள் தலையாய கடமையாக இதைச் செயல்பட வேண்டும்

1.எந்த நிமிடத்தில் எந்த நேரத்தில் எவ்வளவு பெரிய நிலை வந்தாலும்
2.குடும்பத்தில் எதிர்பாராத கோபமோ வேதனையோ வந்தாலும்
3.எத்தகைய கடுமையான சிக்கல்கள் வந்தாலும்… அந்த மாதிரி நேரங்களில் எல்லாம்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பயன்படுத்தி அந்தத் தீமை நமக்குள் வ(ள)ராதபடி தடுத்து
5.நம் குடும்பத்திலும் சரி அல்லது புறநிலைகளிலும் சரி ஒன்று சேர்ந்து வாழும் நிலையாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் நுகரப்படும் போது அது நமக்குள் வளர்ந்து கொண்டே வரும். அதனின் பெருக்கம் எல்லா அணுக்களிலும் சேர்ந்து கொண்டே வரும். பேரொளியாக நாம் மாறலாம்.

பெரியோர்களின் ஆசி

பெரியோர்களின் ஆசி

 

நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய ஒவ்வொரு வழியிலும் உள்ள உண்மையினை அறியாமல் நாம் அவற்றைக் குடும்பங்களில் வந்த குடும்பச் சடங்கு… சாங்கியம்… என்று வழிப்படுத்தி விட்டோம்.

1.அதன் நிலையில் மாறுபடும் பொழுது மனச் சஞ்சலம் கொண்டு
2.நாம் தெய்வக் குற்றம் செய்து விட்டோம்… பாவத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற பயந்த நிலையில்
3.இன்றும் பல குடும்பங்களில் பல நிலைகள் நடக்கின்றன.

பக்தி நிலை வளர்வதற்காக நம் முன்னோர்கள் பல வழிகளில் அவர்களின் சந்ததியார் வர வேண்டுமென்பதற்காகக் காட்டிச் சென்ற வழிதான் அந்தப் பல வழிகளும்.

1.அமாவாசை அன்று அவரவர்களின் முன்னோர்களை நினைத்து வணங்குவது
2.அமாவாசையில் வைத்தியம் செய்து கொண்டால் நற்பயன் அடையலாம்
3.அமாவாசையன்று எந்த நற்காரியங்களுக்கும் நல்ல நாள்
4.அமாவாசையன்று சேமித்து வைத்த தானியத்தைச் சூரியனின் ஒளி படும்படி வைத்தால் பல நாட்கள் அவற்றில் பூச்சி புழுக்கள் அண்டாது
5.அமாவாசையன்று தொழில்களுக்குச் செல்லலாகாது என்றெல்லாம்
6.பல நிலைகளை நமக்கு உணர்த்திச் சென்றார்கள் நம் முன்னோர்கள்..

அமாவாசையின் நிலையென்ன…?

அன்று நமக்கு இப்பூமியின் மேல் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்கள் அனைத்தும் அப்படியே வந்து தாக்குகின்றன. தாக்கும் நிலை கொண்டு இப்பூமியும் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

அமாவாசையன்று கடல் பொங்குகின்றது என்கின்றோம். கடலும் பொங்குகிறது. அமாவாசையன்று மட்டும் கடல் நீர் அதிகரிப்பதன் நிலையென்ன…?

இப்பூமித்தாய் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலையில் அதிசக்தி வெளிப்படுத்துகிறது. கடல் நீர் எப்படிப் பொங்குகிறதோ அதைப் போலத்தான் ஜீவராசிகளின் நிலையும் தாவரங்களின் நிலையும் பனிமலையின் நிலையும் எரிமலையின் நிலையும் மற்றுமுள்ள பல இவ்வுலகில் இப்பூமியிலிருந்து இப்பூமித்தாய் வளர்க்கும் அனைத்து ஜீவ நிலை கொண்ட யாவுமே அமாவாசை அன்று சூரியனிலிருந்து கிடைக்கும் சக்தியின் மாற்றத்தினால் இந்நிலை பெறுகின்றது.

மனிதர்களுக்கு அமாவாசையன்று உடல் கனம் தெரியும். ஒரு வித சோர்வும் என்றும் இல்லாத நிலையில் சிறு தளர்ச்சியும் ஏற்படும்.

நாம் அன்று சுவாசிக்கும் காற்றில் கனமான அணு நிலை கொண்ட சூரியனிலிருந்து வெளிப்படும் சக்தியின் துரிதத்தினால் அக்காற்றை நாம் சுவாசிப்பதினால் நம் உடல் நிலையில் மாற்றம் தெரிந்திடும்.

1.ஆரோக்கியமுடன் வாழ்பவர்க்கே இந்நிலை ஏற்படும் பொழுது
2.நலிவுற்றோரின் நிலைக்கு அவர்கள் எடுக்கும் சுவாசம் கனம் பெறுவதால்
3.அவர்களின் உடல் நிலைக்கு முதலில் இருந்த நிலைக்கும் அவ்வமாவாசை நாளுக்கும் முன்னேற்றத்தை விட நலிவுத் தன்மை கூடிவிடுகின்றது.

நம் முன்னோர்கள் அதிக நலிவுற்றோர்களைக் காணும் பொழுது அமாவாசை தாண்ட வேண்டும் என்பதின் நிலையும் இதுதான்.

நலிவுற்ற நிலையில்… இக்கனமான சுவாச நிலையை நலிவுற்றோர் ஈர்த்து சுவாசிப்பது கடினமாவதினால்தான் இந்நிலை நடக்கின்றது. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் இவ்வமாவாசையன்று அவர்கள் மன நிலை அதிகமாக மாறுபடும் நிலைக்கு வருகின்றது.

அமாவாசையன்று சந்திரனில் இருந்து நாம் பெறும் பல நிலைகள் நமக்குக் கிடைக்காமல் போகின்றது. நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு போல் உள்ள சந்திரனின் அன்பான அரவணைப்பு இல்லாததினால் இந்நிலை ஏற்படுகின்றது.

விண் சென்ற முன்னோரை பக்தி கொண்டு நாம் வணங்கும் பொழுது நம் எண்ணம் அனைத்தும் அவர்களின்பால் பக்தி கொண்டு செல்வதினால் அவர்கள் காக்கும் நிலைக்கு நம்மை நாம் நிலைப்படுத்துகின்றோம்.

அப்பொழுது நமக்கு அமாவாசையன்று கனமான சுவாசத்தை ஈர்த்துச் சுவாசித்தாலும் அந்நிலையில் அவர்களின் ஆசி பெறுவதினால் இந்நிலையில் சோர்வு நமக்குத் தெரிவதில்லை.

அமாவாசையன்று நம் முன்னோர் விரதம் இருக்கும் நிலை ஏற்படுத்தியது எந்த நிலையில்…?

நாம் எடுக்கும் சுவாசத்திலேயே அமாவாசை தினத்தில் பல சக்திகள் அதிகரித்து ஏற்பதினால் இவ்வுடல் நிலைக்கு அன்று பசியின் நிலையும் குறைவு.
1.அதன் நிலையை அறிந்துதான் நம் முன்னோர்கள் “விரதம்” என்னும் பக்தி நிலையை
2.அந்நிலையில் காட்டி நமக்கு வழிப்படுத்தித் தந்தார்கள்.

எந்த ஒரு சிறிய நிலையையும் நம் முன்னோர்கள் நமக்குப் பக்தி நிலையிலேயேதான் உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

ஆண்டவன் என்ற பக்தி நிலை ஒன்றினால் மட்டும்தான்… என்றும் இவ்வுலக மக்களின் நிலையை நல்வழிப்படுத்திட முடியும் என்ற உண்மை நிலையில் தான்… பல நிலைகள் கொண்ட செயல்களையெல்லாம் நமக்கு உணர்த்திச் சென்றார்கள். பல ஏடு நிலைகளில் எழுதி வைத்தும் சென்றுள்ளார்கள்.

எந்நிலையிலும் நம்பிக்கை என்ற ஆண்டவனை நம்பினால் அனைத்து சக்திகளின் ஆண்டவனையே ஆண்டவனின் அருளையே அந்நம்பிக்கையில் நாம் பெறலாம்.

நல்லோரின் வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாமே ஆண்டவனின் நாமச் சொற்கள் என்ற நம்பிக்கையுடன்
1.நாம் நம் முன்னோரையும் நம் பெரியோர்களின் வாழ்த்தையும்
2.நம்பிக்கையுடன் ஆண்டவனின் சொற்களாக நம்பி வரம் பெற்றால் நடப்பவை யாவும் நல் நிலைகளாக நடந்திடும்.

நம் முன்னோரையும்.. நம்மில் பெரியோரையும்… அவர்கள் ஆசி பெற நாம் வணங்குவது ஆண்டவனின் அருள் சொற்களை அவர்களின் நிலையில் இருந்து பெறுகின்றோம் என்ற நம்பிக்கையில் நலம் பெறப் “பெரியோர்களின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்கள்…!”

ஞானப் பொக்கிஷம்

ஞானப் பொக்கிஷம்

 

இவ்வுலக மக்களின் எண்ணங்களையும் செயல்களையும் அவர்கள் அறியாமலே அவர்களை இப்பேராசை என்னும் செயற்கைப் பேய் ஆட்டிப் படைத்துக் கொண்டுள்ளது.

1.அன்றாண்ட அரசர்களின் ஆவேச உணர்ச்சிகள் அன்றைய மக்களின் எண்ணங்களிலெல்லாம் கலக்கவிட்டு
2.இன்றும் அதே வழி வழியாய் வந்த அவ்வாவேச நிலை கொண்ட உணர்ச்சியினால்
3.இவ்வுலக நிலையே செயற்கைக்கு அடிபணிந்து வாழும் நிலையில் உள்ளது.

இன்றுள்ள மனிதர்களில் பெரும்பாலோரின் எண்ணங்கள் பெரும் பேராசை கொண்ட பணத்திற்கு அடிமைப்பட்டு வாழும் நிலை தான்…! செல்வத்தை ஈட்ட எவ்வழியையும் நாடலாம் என்று தான் உள்ளார்கள்.

இவ்வுலகில் வாழப் பணச் செல்வம் ஒன்றைத்தான் பொக்கிஷத்தின் பொக்கிஷமாகக் கருதி அதற்கே அடிமையாகி இவ்வுலகத்தையே செயற்கையின் கோளமாக்க இந்நூற்றாண்டில் அறிவு வளர்ச்சி பெற்ற மனிதர்கள் இவ்வுலக நிலையை நடத்திச் செல்கின்றார்கள்.

ஆண்டவனையே பல ஜாதி நிலை கொண்டு பிரித்து வைத்துள்ளார்கள். ஜாதி என்னும் வழியை உண்டு பண்ணியவர்களும் அதன் வெறி நிலையில் இன்று தன்னைத் தானே தன் ஜாதிக்குத்தானே அடிமைப்பட்டு உழன்று வாழ்கின்றார்கள் என்று எண்ணுவதில்லை.

தன் ஜாதிக்குத் தான் மதிப்பளிப்பதாக எண்ணுகிறார்கள் அச் ஜாதிக்கு அடிமைப்பட்டவர்களெல்லாம்…!

இவ்வுலக நிலையை இவ்வரசர்கள் ஆண்ட காலம் முதல் இப்பொழுது அரசாட்சி நிலை கொண்டும் ஆட்சியில் உள்ளவர்கள் நடத்திடும் நாடகத்தினால் வந்த வினைச் செயல்தான் இன்று இவ்வுலக நிலையில் உள்ளன.

சூழ்ச்சியான நிலையில் பேராசையின் பேயை வளர விட்டுத்தான் இன்று இவ்வுலக நிலையே உள்ளது.

அனைவரின் எண்ணமும் ஒன்றுபட்டுச் செயல்படும் நிலையாகக் கூடி வரும் நிலையை ஏற்படுத்திட
1.இன்றுள்ள பல மத வழிகளில் உள்ள பெரியோர்கள் எல்லாம் ஒரு நிலைப்பட்டு
2.இவ்வுலக நிலையை இவ்வுலக மக்களின் எண்ண நிலையை ஒன்றுபடுத்திட
3.பக்தி என்னும் நிலையை வளரவிட்டு அன்பு பாசம் என்ற பிணைப்பு நிலையை மக்களின் எண்ணத்தில் சுழல விட்டு
4.இப்பேராசையிலிருந்து விடுபட்டு ஆசையான அமுதை ஊட்டி தெய்வீக நிலையில் ஈர்த்து
5.இன்றுள்ள மக்களின் ஜன நெருக்கத்தை மிகத் துரித நிலையில் பெருகும் நிலையைச் சமப்படுத்தி
6.தாவர வர்க்கங்களை ஓங்கச் செய்து இவ்வுலகை நிலைப்படுத்தும் தன்மைக்கு
7.பல நூறு வருடங்களுக்கு முன் நம்மைப் போல் இவ்வுலகினில் பிறந்து நமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருந்த
8.இவ்வுலகின் ஞானச்சுடரான மகரிஷி ஒருவர் எழுதி வைத்த பெரும் பொக்கிஷம் ஒன்று
9.அவரால் பாதுகாக்கப்பட்டு அந்நிலையிலேயே ஜெபம் கொண்டும் காத்துள்ளார்.

அவருக்கு ஜாதி மதம் ஒன்றுமில்லை. இன்று இவ்வுலகிலுள்ள சக்தியின் செல்வங்களான சக்தி பெற்ற நம் மக்களில் யாவரும் அறிந்திடலாம் அதை.

அவரவர்களின் நிலையில் நடக்கும் நிலைகொண்டு ஜெபத்தின் அருளைப் பெற்றால் அந்த ஞானச் சுடரின்… அம்மகரிஷியின் அருளைப் பெற்று… அவ்வுலகப் பொக்கிஷத்தை எடுத்து அனைவருக்கும் அதிலுள்ள உண்மையை உணரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்திடலாம்.

இம்மதம் என்ற நிலையை மாறுபடுத்தி இன்று இவ்வுலக நிலையைக் காத்து ஆண்டவன் அருள் பெற்று ஆண்டவனின் ஜோதிகளை…
1.பல ஞான நிலைகளை மக்களுக்கு உணர்த்திடும் நல் பெரியோர்கள் அனைவரும் ஒன்றுபட்டால்
2.இவ்வுலகில் உதித்த சக்தியின் செல்வக் குழந்தைகளை
3.இச்செயற்கையின் பேராசைப் பேயிலிருந்து விடுபடும் நிலைக்கு அழைத்திடலாம்.

இஜ்ஜாதி மதப் பேயின் வழி நடந்திடாமல் ஒன்றுபட்டுச் செயல் கொண்டு தன்னைத்தானே அடிமைப்பட்டு வாழும் நிலையிலிருந்து மீண்டு அருள் வழி நடந்திடுங்கள்.

ஒளியின் காட்சிகளைத் தான் தியானத்தில் நாம் காண முயற்சிக்க வேண்டும்

ஒளியின் காட்சிகளைத் தான் தியானத்தில் நாம் காண முயற்சிக்க வேண்டும்

 

தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் துணை கொண்டு ஒளியான உணர்வுகளைக் காணுவதற்குத்தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
1.அதை எடுக்க எடுக்க இந்த வாழ்க்கையில் பொருள் காணும் நிலைகள் வரும்… சிந்திக்கும் ஆற்றல் வரும்
2.நமக்குள் சுதாரித்து… ஒவ்வொன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும்…? என்ற அதற்குண்டான ஞானங்கள் வரும்
3.அந்த உணர்வு உண்டு எதையுமே சீர்படுத்திக் கொள்ளலாம்.

விஞஞான அறிவுப்படி… எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இன்று ஏவுகணைகளை இராக்கெட்டின் மூலம் இயக்குகின்றார்கள்.

அதாவது ஆள் இல்லாதபடி கம்ப்யூட்டர் என்ற இயந்திரத்தின் துணை கொண்டு தன்னிச்சையாக இங்கிருந்து (தரையிலிருந்து) இயங்கும்படி செய்து வைத்திருக்கின்றார்கள்.

உதாரணமாக எதிரி விமானங்களில் இருந்து குண்டு வீசினால்
1.அந்த நுண்ணிய ஒலி அலைகளை ஈர்த்து… முகப்பிலேயே காணும் நிலைகளாக வைத்து இது விலகிச் செல்லும்படியாக வைத்திருக்கின்றார்கள்.
2.வெகு தூரத்திலிருந்தாலும் இது தன்னுடைய மோப்பத்தால் வானிலே இவ்வளவு மைல் வேகத்தில் இத்தனை டிகிரியில் வருகிறது என்று உணர்ந்து
3.அதை எதிர்த்துத் தாக்கும் நிலைகளை இது செயல்படுத்துகின்றது.

இப்படி எத்தனையோ நுண்ணிய நிலைகளை இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

இதே மாதிரித் தான் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்கப் பெருக்க
1.தீமை நம்மைத் தாக்குவதற்கு முன் அதை நாம் விலக்கி தள்ளும் நிலையாக
2.அது நமக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அத்தகைய சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.

ஆகவே ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெறுவதற்கு… நமது குரு அருளும்; அவரின் துணை கொண்டு அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும்; அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளையும் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் குறைகளை நினைக்கவே கூடாது… நிறைவு பெற வேண்டும்… நல்லது நடக்க வேண்டும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்றே எண்ணிப் பழக வேண்டும்.

எங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும் குடும்பத்தினர் அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும் சிந்தித்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்

இதைக் குழந்தைகளுக்கும் ஞாபகப்படுத்தி அவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.

யாம் கொடுத்த அருள் ஞான்ச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து இதை எல்லாம் எண்ணும் ஒரு பழக்கமாக நீங்கள் வளர்த்துக் கொண்டே வந்தால்
1.அதிலிருந்து ஒளிக் கற்றைகள் வரும்.
2.இரவில் படுத்திருக்கும் போது உங்கள் உடலிலிருந்து வெளிச்சத்தையும் காண முடியும் – அது தீமைகளை நீக்கும்.

ஆனால் காண முடியும் என்று சொன்னதைக் கேட்டு “எனக்கு வெளிச்சம் வரவில்லையே… வரவில்லையே…!” என்று எண்ண வேண்டியதில்லை.

ஏனென்றால் இப்படிச் சில பேர் தவறான நிலைகளில் கொண்டு சென்று விடுகின்றனர். ஐயோ… எனக்கு அந்தச் சக்தி இல்லை போலிருக்கிறது…! என்று எண்ணிவிடுகிறார்கள்.

ஆனால் அத்தகைய எண்ணமே வரக்கூடாது.

உங்கள் உடலில் “அந்தச் சக்திகள் பாய்ந்து கொண்டிருக்கின்றது…” அதை வளர்ப்பதற்குத் தான் இப்பொழுது வாக்காகக் கொடுத்துப் யாம் பதிவு செய்கின்றோம்.

வளர்ந்தால் தானே தெரியும். ஆகவே
1.காணாத உணர்வுகளை நாம் வளர்க்க கூடாது
2.காண வேண்டும் என்ற உணர்வைத் தான் வளர்க்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்துடனும் சப்தரிஷி மண்டலத்துடனும் இணையும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

யாம் பாய்ச்சும் விஷ்ணு தனுசு 

யாம் பாய்ச்சும் விஷ்ணு தனுசு 

 

துருவ நட்சத்திரத்திலிருந்து பூமி அதிகமான சக்திகளைக் கவரக்கூடிய நேரம் தான் அதிகாலை நேரம்.
1.அந்த நேரத்திலே… அது பெற்ற… அந்த உணர்வு வழிப்படி யாம் உபதேசிக்கப்படும் பொழுது
2.எதைச் சொல்கிறோமோ அந்த உணர்வுகள் உங்கள் உடலுக்குள் ஒவ்வொன்றிலும் கலக்கின்றது.
3.அப்படிக் கலந்தது என்றால் எல்லாக் குணங்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைக்கும் ஒரு வித்தாக இப்போது உருப்பெறுகின்றது.

விவசாயப் பண்ணைகளில் வீரிய வித்துகளை உருவாக்குவது போன்று உங்களுக்குள் ஞான வித்தாக இணைத்துக் கொண்டு வருகின்றோம்.

அதே சமயத்தில் அந்த விவசாயப் பண்ணையில் வீரிய வித்துக்களை உருவாக்கிய பின் அதை வைத்து எவ்வாறு நல்ல மகசூலாக எடுக்க வேண்டும் என்று அதற்குண்டான பக்குவ முறைகளையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

அதை போன்றுதான் உங்களுக்கு ஞான வித்தை வளர்க்கும் விதமாக ஆத்ம சுத்தி என்ற பயிற்சியும் கொடுக்கின்றோம். அந்த ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப்பொழுதும் செய்து வந்தால் உங்களுக்குள் பேரருளை உருவாக்க முடியும்.

1.துருவ நட்சத்திரம் அழியாத நிலையாக… ஒளியின் சுடராக எப்படி இயங்கிக் கொண்டுள்ளதோ
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரக்கூடிய எத்தகைய விஷத்தையும் ஒளியாக எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ
3.அதை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்து “ஞான வித்துக்களாக” உருவாக்கிக் கொண்டு வர வேண்டும்.

அப்படி உருவாக்கி விட்டால்
1.இந்த வாழ்க்கையில் வரக்கூடியதை “நீங்களே மாற்றக்கூடிய பக்குவமும்…”
2.வரும் தீமைகளை விலக்கக்கூடிய நிலையும் சமப்படுத்த கூடிய நிலையும்
3.சர்வத்தையும் ஒளியாக ஆக்கக்கூடிய நிலையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.

அதைத்தான் உபதேச வாயிலாக அருள் ஞான வித்துக்களாக உங்களுக்குத் தினமும் கொடுத்துக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் தனுசுக்கோடி என்று சொல்வார்கள் ஒவ்வொன்றாக உபதேச வாயிலாக யாம் சொன்ன சொல்கள் உணர்ச்சிகளாகும் போது “தனுசு…”

ஒரு வில்லிலே அம்பை ஏற்றிப் பாய்ச்சினால் அது இலக்கைத் தாக்கி… அங்கே எப்படி ஊடுருவிக் காயத்தை ஏற்படுத்துகின்றதோ அது போன்று
1.உங்கள் உடலில் உள்ள எல்லாம் அணுக்களிலும் இது ஊடுருவிப் பாயும்.
2.உபதேசத்தைக் கேட்போர் உணர்வுகளிலே இது தைத்து அந்த ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது
3.உங்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வளருகின்றது.

இதுதான் விஷ்ணு தனுசு…!