
துருவ நட்சத்திரத்தின் சக்தி என்பது எம அக்னி (கடும் நெருப்பு)
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கின்றது…?
1.உதாரணமாக நெருப்பு எரிகிறது என்றால் பக்கத்திலே செல்வோமா…?
2.அதனுடைய காற்றழுத்த்தில் நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டேயிருக்கும்.
3.இதைப் போன்று அருள் ஞானிகள் உணர்வை உடலுக்குள் வலு சேர்த்தால் அந்த வெப்பத் தணல் என்ன செய்யும்…?
4.நமக்கு முன் அதனின் வலுவாக நிற்கும்.
அதே போல் எரியும் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நெடி வரும். அப்போது அருகில் செல்ல முடியுமா…? நல்ல குணங்கள் கொண்டு இருந்தாலும் அங்கே நாம் அமைதியாக இருக்க முடியுமா…? வேறு எதையும் சிந்திக்க முடியுமா…? இல்லையே…!
நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்… கேட்டிருப்போம்.
சண்டையிட்டவர்களைப் பற்றி வேதனைப்பட்டவர்களைப் பற்றி திட்டியவர்களைப் பற்றி வெறுப்படைந்தவர்களைப் பற்றியெல்லாம் பாசத்துடன் பரிவுடன் கேட்டிருப்போம்.
1.இது எல்லாம் நமக்குள் பதிவாகி இருக்கும்… நம் ஆன்மாவிலே முன்னாடி இருக்கும்.
2.இந்த உணர்வலைகள் நம் ரத்தத்துடன் கலந்து போய்க் கொண்டிருக்கும்.
3.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்கள் அதை உணவாக எடுத்துக் கொண்டிருக்கும்.
ஆனால் நல்ல உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்கள் அதற்கு நல்ல உணவு இல்லாதபடி சோர்வடையும்… அதனுடைய செயலாக்கங்கள் குறையும்.
அதை நாம் தூய்மைப் படுத்த வேண்டும் அல்லவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்திய பின்
1.கெட்ட அணுக்கள் அதனுடைய உணர்வைக் கவர்வதில்லை… அதைத் தள்ளி விட்டுவிடும்.
2.அந்தத் தீமையான உணர்வுகள் நம் ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து சென்று விட்டால்
3.காலையில் 6:00 மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அவ்வாறு சூரியன் அதை எடுத்துக் கொண்டால் நமது ஆன்மா சுத்தமடைகின்றது.
5.நம் உடலுக்குள் சென்ற தீமைகளை உயிர் வேக வைக்கின்றது.
சமையல் செய்யும் போது வேக வைத்துத் தான் நாம் எல்லாவற்றையுமே ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக ஆக்க முடியும். வேக வைக்காமல் ஒன்று சேர்க்க முடியாது.
ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலுக்குள் சேர்த்து எல்லா அணுக்களிலும் அதை இணைத்து வேக வைத்து “நான்கையும் ஒன்றாக்கப்படும் பொழுது…” வேதனையோ மற்ற குறைகளோ எல்லமே அகல்கிறது.
நம் ஆன்மா சுத்தமாகின்றது…!
அதற்குப் பின்… நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழும் சக்தி பெற வேண்டும். அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.
1.வரிசையாக எந்த அளவிற்கு இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமோ
2.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் பதிவாகாது… அதைத் தள்ளி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.