கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக… குருநாதர் எம்மை ஓங்கி அடிப்பார். நினைவுகள் எல்லாம் அவர் பால் செல்லும்.

உதாரணமாக… பாசத்தால் நம்மை அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. அதாவது நீங்கள் தமாஷாக ஒருவரை அடித்துப் பாருங்கள்… கோபம் வருகிறதா என்று…? வராது.

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும் போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஆக குரு எனக்குக் காட்டும் நிலைகள் அவர் என்னை அடிக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை “எது…?”
2.அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்.

எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்து
1.உன்னை நான் அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை
2.என் (குருதேவர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும் அந்த நினைவால் கலந்த உணர்வும்
3.உன்னுடன் அது எப்படிச் சேர்ந்து அண்டத்தை அறிகின்றாய் என்று நீ பார் என்று குரு காட்டுகின்றார்.

நீ அண்டத்தை அறிந்துவிடு… ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு. அங்கே கிளரும் உணர்வின் தன்மையை நுகர்ந்தறி. நுகர்ந்து அறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும். ஆனால் அவனை நீ மாற்ற முடியாது.

ஒரு செடியின் தன்மை காரத்தின் தன்மை கொண்டதோ அல்லது கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது. அதைப் போல அவரின் உணர்வின் தன்மை மாறாது.

1.நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்.
2.ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப் போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுக்கிறார்.

விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்று அவரின் கோடி உணர்வுகள் சேர்த்து
1.“கோடி கோடி… கோடி கோடி… “கோடி கோடி…” என்ற நிலையில்
2.நான் “தேடித் தேடி… தேடித் தேடி…” சென்று இதைப் பெற்றேன்
3.உன்னை அது “நாடி… நாடி… நாடி…” வருகின்றது
4.நீ “தேடித் தேடி…” அதைப் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோம் என்றால் உட்பொருள்கள் எவ்வளவோ இருக்கும்.
1.என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.
2.ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை… கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்பதைத்தான் இந்தக் கோடியின் நிலையைப் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாகக் குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

1.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
2.அவர் பிறவா நிலைகள் பெற்றதை… நாமும் பிறவா நிலை அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

விண்ணுலக ஆற்றலைக் “கோடி கோடி…” என்று சொல்லும் பொழுது “இந்தக் கோடியைச் சாப்பிட்டால்… நீ எதை எதையெல்லாம் போய்ச் சாப்பிடலாம்…? போய் சாப்பிடுடா பாருடா…!” என்று குருநாதர் சொல்வார்.

அதனால் தான் இப்பொழுது உங்களுக்கு விளக்கமாகச் சொல்லி…
1.எது எது, எதை எதை விழுங்குகிறது…? என்பதை
2.அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை
3.அந்தத் தீமைக்குள் ஞானிகள் உணர்வுகளைக் கலந்தவுடன் அதை விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.
4.அப்படி அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அதற்கு அமைகிறது.

ஒரு மரக்கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து “எண்ணெய்ப் பசை…” அதிலே இருந்தால் தான் எரியும். எண்ணெய்ப் பசை இல்லையென்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான்… உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும் ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல நமக்குள் எத்தகைய தீய குணங்கள் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை விழுங்கிடல் வேண்டும்.
1.ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் தீமைகளை இது விழுங்கும்.
2.ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது கேட்டறிந்த உணர்வுகள்… உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் அவை அனைத்திலும் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது.

இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள்
1.அதாவது அருள் உணர்வுகளை நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.
2.எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது உங்களுக்குள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது.

அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்கிறோம். இதன் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்.

1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணி
2.அதை நீங்கள் நுகர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply