
“என்றும் மாறாத நிலையில்” வாழ்பவர்களே மகரிஷிகள்
மனிதனாக வாழும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அருள் ஞானப் பற்றுடன் வாழ வேண்டும். மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளை ஒருவருக்கொருவர் நுகர வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரும் பெற வேண்டும்.
2.அனைவரது வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும்.
4.அவர்கள் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்… அருள் ஞான வாழ்க்கை வாழ வேண்டும்.
5.இருளை அகற்றி மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி இந்தப் பூமியில் வாழும் அனைவரும் பெற வேண்டும் என்று
6.நானும் நினைக்கின்றேன்… நீங்களும் அது போன்று நினையுங்கள்.
இது அனைத்தும் ஒன்றாகச் சேர்த்தால் என்ன ஆகும்…?
சூரியனுடைய காந்த சக்தியால் வளர்க்கப்பட்ட தீமையான உணர்வுகளை பூமியில் வாழும் மனிதர்கள் அதை ஈர்க்கும் சக்தி இழக்கப்பட்டால் காலை 6 மணிக்கெல்லாம் அந்தத் தீமைகளைச் சூரியன் கவர்ந்து சென்று அங்கே கரைத்து விடும்… கருக்கி ஒளியாக மாற்றிவிடும்.
விறகை அடுப்பிலே வைத்து எரிக்கின்றோம். அது எரிந்து நெருப்பாகின்றது ஒளியாக. அதனுடைய உணர்வின் சத்துக்கள் பிரிகின்றது. ஆனால் விறகு கருகி விடுகின்றது.
சூரியன் கவர்ந்து ஆவியாக மாற்றுகின்றது.
1.ஆவியின் தன்மை எதன் உணர்வு பெற்றதோ செடி புவியின் ஈர்ப்பின் தன்மை கொண்டு
2.எந்த வித்து இங்கே படுகின்றதோ அதே மரத்தின் அதே வித்தாக அந்தச் சத்தை எடுத்து விளைகின்றது.
3.எதனெதன் உணர்வின் தன்மை எது எது எடுத்து வளர்கின்றதோ.. இப்படி இயற்கையில் (மறுசுழற்சியாக) மாற்றிக் கொண்டே வருகின்றது.
ஆனால் நாம் மாறாத நிலைகள் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?
ஆறாவது அறிவு பெற்றவன்… என்றும் நிலையான …என்றும் 16 என்ற நிலை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று நுகர்ந்து பழக வேண்டும்.
1.நம் உடலுக்குள் அதைப் பெருக்க வேண்டும்.
2.இதை அழியாச் சொத்தாக அழியாச் செல்வமாக நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.